Monday, September 26, 2011

பசங்க ஃபிகரை டீ போட்டு கூப்பிடறதும், ஃபிகருங்க பசங்களை டா போட்டு கூப்பிடறதும் ஏன்?

1.குழந்தைகளுடன் செலவழிக்கும் நேரம் சொர்க்க நிமிஷங்கள் என்பதால் அந்த வாய்ப்பை நம் பெற்றோருக்கு நாம் கொடுப்போம்

-----------------------------

2. குழந்தைகள் செய்யும் குறும்புகளை ரசிக்கத்தெரியாதவன் தான் இந்த உலகின் மிகச்சிறந்த ரசனை கெட்டவன் ஆவான்

--------------------------------

3. நெருக்கமான தோழமையின் கறுப்புப்பக்கங்கள் தெரிய வரும்போது மனதில் வெறுப்புத்தோன்றி ஏன் தான் தெரிய வந்ததோ என எண்ணத்தோன்றுகிறது

-----------------------------

4. என்னிடம் நீ நிறைய எதிர்பார்க்கிறாய், உன்னிடம் நான் உன்னை மட்டுமே எதிர்பார்க்கிறேன்

------------------------------

5. பசங்க ஃபிகரை டீ போட்டு கூப்பிடறதும், ஃபிகருங்க பசங்களை டா போட்டு கூப்பிடறதும் தப்பில்லை # டி = டியர், டா = டார்லிங்க்

--------------------------




6. விடாமல் பேசிக்கொண்டே இருந்தால் ஆரம்ப நிலைக்காதலர்கள்,  ஒருவரை ஒருவர் விட்டுகொடுக்காமல் பேசினால் அது பக்குவம் பெற்ற காதல்

---------------------



7. உனக்காக வாழ்கிறேன் என்று ஒரு உயிர் சொன்னால் அது காதல், உன்னால் வாழ்கிறேன் என பல உயிர்கள் சொன்னால் அது தியாகம்

---------------------

8. தன்னிடம் பேசவில்லை என்றால் கண்டுக்காமல் விடுவது பெண்களின் பழக்கம், தன்னிடம் பேசவில்லை என்றால் அவதூறு சொல்வது ஆண்களின் பழக்கம் # சைக்காலஜி

---------------------------
9. உன் கண்களில் கண்ணீர் சுரக்கும்போது உன் கைகளை விட என் கைகள் 10 மடங்கு வேகத்துடன் செயல்படுகின்றன

----------------------------

10. தோல்வி என்பது முடிவல்ல, வெற்றி என்பது எளிதல்ல

-----------------------------




11. நேர்மறை சிந்தனையாளனை எந்த விஷமும் கொன்று விட முடியாது, எதிர்மறை சிந்தனையாளனை எந்த  மருந்தும் குணப்படுத்தி விட முடியாது

---------------------

12. உன் கண்ணீரை கொடுத்து வாங்கும் காதல் பின் ஒரு நாளில் கண்ணீர் சிந்த வைக்கும் மோதல் ஆகும்

----------------------------------

13. அழகு ஒரு உண்மையான காதலை ஏற்படுத்தி விட முடியாது, ஆனால் உண்மையான காதல்  அழகானது

----------------------------

14. மேடம்,இந்தப்படத்துல உங்களுக்கு ரொம்ப நீளமான ரோல்.

நிஜமாவா? தாங்க்ஸ். ஆமா, பழநி மலை உச்சில இருந்து படிக்கட்டு வழியா உருண்டு வர்றீங்க

------------------------

15. ஆண்களை விட பெண்களுக்கு உள்ளுணர்வு அதிகம்,ஒருவர் கூட பழகாமலேயே அவர்களால் ஒருவர் கேரக்டரை கணிக்க முடிகிறது # லேடீஸாலஜி

----------------------



16. ஒரு பெண்ணால் நேசிக்கப்படும்போது கண்கள் இல்லாதவன் கூட கவிதை எழுதுகிறான்

----------------------------------

17.எப்போதும் மறக்காமல் இருப்பது அன்பு அல்ல, எது நடந்தாலும் வெறுக்காமல் இருப்பதே உண்மையான அன்பு..

--------------------------
18. வாழ்க்கை ஒரு கண்ணாடி போல,நாம் புன்னகைக்கும்போது  அதற்கான பலன்களை உடனே பிரதிபலிக்க காணலாம்

--------------------------------

19. நேசித்த பெண் தன்னை வெறுக்கும்போதுதான் கண்கள் உள்ளவன் கூட விழி இழந்தவன் நிலை அடைகிறான்

--------------------------------
20. வாழ்வில் யாரையும் சார்ந்து இருக்காதே. ஏன் எனில் உன் நிழல் கூட நீ வெளிச்சத்தில் இருக்கும் வரை தான் துணைக்கு வரும்..

------------------------------


21. உன் தோளில் சாய்ந்து கை கோர்த்து நடக்கும்போது உணர்ந்தேன் “ ஓவரா சரக்கு அடிச்சுட்டேனா?”

-----------------------------

22. ஒரு வைரம் உருவாக பல வருடங்கள் ஆகும் என அறிவியல் சொல்கிறது, நீ மட்டும் எப்படி 10 மாதங்களில்? # மொக்க கவித ஃபார் எ சக்க ஃபிகர்

-------------------------

23. மழைச்சாரலில் உன் கைகளைப்பிடித்து நடந்த நாட்களை விட உன் நினைவுகளுடன் கண்களை நனைத்த நாட்களே அதிகம்

--------------------------

24. இந்திராவால் கூட தி.மு.க.,வை வீழ்த்த முடியவில்லை: கருணாநிதி # என்ன தலைவரே? நீங்களும் அம்மா புகழ் பாட ஆரம்பிச்சுட்டீங்க?

-------------------------------


25. அரசு அதிகாரிகள் ஊழல் செய்தால் ஓய்வூதியத்தில் 10 சதவீதம் "கட்' # பிசாத்து 10% க்கு ஆசைப்பட்டு 200% வருமானத்தை விடச்சொல்றீங்களா?

---------------------------------------




-