இடம் இருந்து வலமாக முதல் நபர் புது பதிவர்,பெயர் சொல்ல விரும்பவில்லை (PVS),சி.பி ,கோமாளி செல்வா,கூலிங்க் க்ளாஸ் மணி வண்ணன் (வம்பை விலைக்கு வாங்குவோம்ல), வலைச்சரம் சீனா,தாதா தமிழ்வாசி பிரகாஷ்,அவரால் மிரட்டப்படுவது ரசிகன் ஷர்புதீன்
ஜாலியாகபோய்க்கொண்டிருந்த பதிவர் சந்திப்பு நான் பேச எழுந்த போது ஒரு மவுன அலை அரங்கில் நிலவியது.. வீட்டில் மாப்பிள்ளை பார்த்துட்டாங்க.. இனி நம்ம காதல் அவ்வளவு தான் என்று காதலி சொன்னதும் காதலனிடம் ஏற்படும் இறுக்கம் போலவும்,வேலையை விட்டு டெர்மினேட் செய்யப்பட்ட ஊழியரின் கடைசி நாள் பணி நடக்கும்போது ஏற்படும் சங்கடம் போலவும்,சாப்பிட்டுக்கொண்டிருக்கும்போது யாராவது பசியுடன் நம்மை கை ஏந்தும்போது நம் வயிற்றுக்குள் தோன்றும் அழுகை போலவும் அரங்கில் ஒரு அசாதாரணமான அச்சுறுத்தும் அமைதி பரவியது..
பதிவுலகில் நான் வந்ததிலிருந்து இன்று வரை எனக்கு ஏற்பட்ட எதிர்ப்புகள்,அப்போது நான் அவற்றால் பாதிக்கப்படாதது போல் வெளியே காட்டுக்கொண்டு உள்ளுக்குள் அழுது கொண்ட சம்பவங்களை நினைவு கூற முடிவு செய்தேன்..
மன பாரங்களை உள்ளுக்குள் இருத்தி வைக்கும் வரை அவை நனைந்த பஞ்சு மூட்டை போல கனமாகவும்,யாரிடமாவது கொட்டித்தீர்த்தால் அது காற்றில் பறக்கும் தூசி போலவும் எளிதாகிவிடும் என்பதால் நான் எல்லாவற்றையும் ஓப்பனாக பேசி விட துணிந்தேன்..
1. என் மேல் வைக்கப்பட்ட முதல் குற்றச்சாட்டு - நான் ஹிட்சுக்காக எழுதுகிறேன் என்பது..
ஒரு பையன் ஸ்கூ;ல்லயோ,காலேஜ்லயோ படிக்கறான்னா அவனும்,அவனோட பெற்றோர்களும் அவன் முதல் ரேங்க் வாங்கனும்னு நினைப்பாங்களா? ஏதோ படிச்சா போதும்னு நினைப்பாங்களா?
எல்லாருக்கும் தான் முன்னணில இருக்கனும், தான் பாராட்டுப்பெற வேண்டும் என எண்ணம் இருக்கும்.அது தான் எனக்கும் இருக்கு.. நீ எந்த வேலை செஞ்சாலும் அதுல பெஸ்ட்டா இரு.. என்பதே எனது கொள்கை.. இதுல என்ன தப்பு இருக்கு..?
நான் பொழுது போக்குக்குத்தான் எழுதறேன்.. எனக்கு எந்த வெறியும் இல்லைன்னு சொல்றவங்க தாராளமா அப்படி இருந்துக்கலாம்.. நான் கேட்கலையே.. எனக்கு எது சரின்னு படுதோ அதை நான் செய்யறேன்.. உங்களுக்கு எது சரின்னு படுதோ அதை நீங்க செய்ங்க.. அடுத்தவனை குறை சொல்லாதீங்க..
பதிவுலகுல என்ன பதிவு போட்டா மக்களுக்கு யூஸ் ஆகும்னு பார்த்து பதிவு போடுங்க.. அவன் என்ன பண்றான், இவன் என்ன சொல்றான், இவனை போட்டு தாக்குவோம்னு ஏன் நினைக்கறீங்க.. அவங்கவங்க வேலையை அவங்கவங்க பாருங்க..
2. நான் ஆனந்த விகடன் குரூப் பத்திரிக்கைகளிடம் இருந்து பதிவுகளை காப்பி பேஸ்ட் பண்றேன் என்பது..
அமரர் சுஜாதா கற்றதும் ,பெற்றதும்ல அவருக்குப்பிடிச்ச ,அவர் படிச்ச நல்ல படைப்புகளை பகிர்ந்துக்கிட்டாரு.. எழுத்தாளர் சாவி என்னைக்கவர்ந்த படைப்புகள்னு ஒரு தொடர் எழுதுனாரு..
அவங்களோட கம்ப்பேர் பண்ண எனக்கு தகுதி இல்லை.. ஆனா அதே மாதிரி நான் எனக்குப்பிடிச்ச ,மக்களுக்குப்பயன் அளிக்கும் என நான் நினைக்கும் படைப்புகளை காப்பி பேஸ்ட் பண்றேன்.. இதுல என்ன தப்பு?
ஆனந்த விகடனின் சேல்ஸ் 8 லட்சம், நம் வலை உலகை ஆக்ரமித்திருக்கும் படைப்பாளிகள் 1789 பேர்.. படிப்பாளிகள் சுமார் 10,000 பேர்.. அதில் என் தளத்திற்கு வந்து படிப்பவர்கள் சுமார் 1000 டூ 2000 பேர் மட்டுமே.. அப்படி இருக்கும்போது நான் காப்பி பேஸ்ட் செய்து பதிவு போட்டால் அதனால் பத்திரிக்கை சேல்ஸே குறைஞ்சிடும் என்பதும்,அதனால் விகடனில் படிக்க சுவராஸ்யம் இல்லாமல் போய் விடும் என்பதும் கேலிக்கூத்து.. எத்தனை பேர் அவள் விகடன், சக்தி விகடன்,நாணயம் விகடன் வாங்கறாங்க? அப்படி வாங்காதவங்க வந்து படிக்கறாங்க.. பயன் உள்ளதா சொல்றாங்க.. உங்களுக்கு ஏன் கஷ்டமா இருக்கு..?
3. கில்மா படங்களின் விமர்சனம் போடறார் என்ற குற்றச்சாட்டு..
சீன் படம் என்று அழைக்கப்படும் கில்மா பட விமர்சனங்கள் போடறாதல சமூகமே சீரழிஞ்சிடுச்சு.. சி.பி சமுதாயத்தையே கெடுத்துட்டாரு என்பவர்களே..
a
பேசுவது ஸ்ரீவில்லிப்புத்தூர் ரத்னவேல்,உணவு உலகம்,வலைச்சரம் சீனா,பலா பட்டறை சங்கர்
என் கில்மா பட விமர்சங்களில் ஆபாசமான வர்ணனையோ,உணர்ச்சியை தூண்டும் எழுத்துக்களோ இருந்ததுண்டா..?சீன் படம் பார்க்கப்போகும் ஆண் எப்படி சங்கடப்பட்டுக்கிட்டே தியேட்டருக்குப்போறான் என்பதை காமெடியாகத்தான் சொல்வேன்..
சரி , நான் கலாச்சாரக்காவலர்களை ஒன்று கேட்கிறேன்.. நான் அந்த மாதிரி பட விமர்சனங்கள் இதுவரை 19 போஸ்ட் போட்டிருக்கிறேன்.. அந்த பட விமர்சனங்கள் 1500 பேர் படித்தார்கள்.. பல பதிவர்கள் என் பிளாக் லிங்க் குடுத்து இங்கே போய்ப்பார்.. எவ்வளவு மொக்கையா பதிவு போடறான் என சொல்லி மேலும் 2000 பேர் படிக்க காரணம் ஆகிறீர்களே.. உங்களிடம் ஒரு கேள்வி..
நான் எத்தனையோ நல்ல போஸ்ட் போட்டேன்.. புது வருட பிறப்பன்று புத்தாண்டில் நாம் எடுக்க வேண்டிய சபதங்கள் என்னும் விழிப்புணர்வு பதிவு போட்டேன்.. அது 180 பேர் மட்டும் தான் படிச்சாங்க.. அதுக்கு லிங்க் கொடுக்க வேண்டியது தானே..? சி .பி நல்ல பதிவு போட்டிருக்கான் இதை போய் படிச்சுப்பாருங்கன்னு ஏன் சொல்லலை..?
இந்த சமுதாயம் நல்லாருக்கனும்னு நீங்க உண்மையிலேயே நினைச்சா நான் போட்ட 500 நல்ல பதிவுகளை பாராட்டி லிங்க் குடுங்க.. அப்போ நான் தப்பான பதிவு போட்டா தட்டி கேட்டா அதுல ஒரு நியாயம் இருக்கு.. உண்மையான நண்பன்னா என்ன செய்யனும்?நல்ல பதிவு போடறப்ப பாராட்டனும், மோசமான பதிவு போடறப்ப தட்டிக்கேட்கனும்.. நீங்க என்ன பண்றீங்க.. அண்ணன் எப்போ சறுக்குவான், எப்போ திண்ணையை விட்டு துரத்தலாம்னு பார்க்கறீங்க..?
இப்படி குறை சொல்றவங்களை தனி மெயில்ல நீங்க அந்த மாதிரி படங்கள் பார்ப்பீங்களா?ன்னு கேட்டா ஹி ஹி பார்ப்பேன் , ஆனா பப்ளிக்கா வெளில சொல்ல மாட்டேன்.. அப்டீங்கறார்.
4. நடிகைகளின் கிளாமர் ஸ்டில்களை போட்டு ஹிட்ஸ் ஏற்றிக்கிறார்.. குடும்பப்பொண்ணுங்களை,காலேஜ் பொண்ணுங்களை ஸ்டில்ஸ் ஸா போடறார்..
ஆரம்பத்தில் ஒரு கவர்ச்சிக்காக நடிகைகளின் கிளாமர் ஸ்டில்ஸ் போட்டேன்.. அதற்கு எதிர்ப்பு வந்ததும் காலேஜ்,ஸ்கூல் விழாக்களில் பெண்கள் படம் இடம் பெற்றதை கூகுள்-ல் இருந்து எடுத்துப்போட்டேன் . இப்போ அதற்கும் எதிர்ப்பு வருகிறது.. இவற்றில் நியாயம் இருப்பதாக நான் நினைப்பதால் இனி என் தளத்தில் ஓவர் கிளாமரான நடிகைகள் ஸ்டில்ஸோ, குடும்பப்பெண்களின் ஸ்டில்ஸோ இடம் பெறாது என்று சொல்லிக்கொள்கிறேன்.. அதற்குப்பதிலாக இயற்கை காட்சிகள், வித்தியாசமான ரசனை தூண்டும் படங்கள் போடலாம்னு இருக்கேன்..
5. பதிவுக்கும் ,உள்ளடக்கத்துக்கும் சம்பந்தமே இல்லாமல் டைட்டில் வைக்கிறாரே..?
ஒரு சினிமாவுக்கு போஸ்டர் எப்படி முக்கியமோ, ஒரு நாவல் அல்லது கவிதைத்தொகுப்புக்கு அட்டைப்படம் எப்படியோ அப்படித்தான் ஒரு பதிவுக்கு டைட்டில் முக்கியம்.. ஒரு வாசகனை நம் தளத்திற்கு அழைத்து வர அது ஒரு கீ வோர்டு.. அது கிளாமராக வைப்பதில் தப்பு இல்லை.. ஒவ்வொரு முறை ஆட்சியாளர்கள் வாக்குறுதி அளிக்கும்போது கவர்ச்சிகரமாக,பொய்யான வாக்குறுதி கொடுத்து நம்மை ஏமாற்ற வில்லையா?அதை நாம் சகித்துக்கொண்டு மீண்டும் மீண்டும் அவர்களை அரியணையில் மாற்றி மாற்றி உட்கார வைப்பதில்லையா?
6. இவரிடம் சரக்கு தீர்ந்து விட்டது.... அதனால் தான் காப்பி பேஸ்ட் பதிவு போடறார்..
நான் பத்திரிக்கை உலகில் 18 வருடங்களாக படைப்புகள் எழுதி வருகிறேன்.. இதுவரை நான் எழுதிய ஜோக்குகள் மட்டும் ஒரு லட்சத்து எட்டாயிரத்து அறுநூறு.. அவற்றில் பத்திரிக்கைகளில் பிரசுரமான படைப்புகள் மட்டும் 9780... தினமும் 10 ஜோக் என்று போட்டாலே நான் 3 வருடங்களுக்கு பதிவு போடுவேன்.. சரக்கு இல்லாமல் அல்ல.. தொடர்ந்து ஜோக்காக போட்டால் போர் அடித்து விடும் என்பதால் தான் வெவ்வேறு சப்ஜெக்ட்ஸ் போடறேன்..
7. சினிமா விமர்சனம் எழுதினால் கேவலமா?
சினிமா விமர்சனம் எழுதினால் கேவலம் என சிலர் சொல்றாங்க.. ரொம்ப சீப்பா பார்க்கறாங்க.. சினிமா விமர்சனம் எழுதுவது தான் பதிவு போடறதுலயே ரொம்ப சிரமம்.ஒரு மொக்கைப்படத்தை ரெண்டரை மணி நேரம் உட்கார்ந்து பார்க்கனும்,அதை நினைவு வெச்சுக்கிட்டு ஒரு மணி நேரம் டைப் பண்ணனும்..
அந்தப்படம் கம்ர்ஷியல் ஹிட்டா? இல்லையா? என்பதை கணிக்கனும்,விகடன் மார்க் எவ்வளவு போடுவாங்க என போடனும்..
சினிமா விமர்சனத்தில் எதற்கு வசனங்களை ப்போடறீங்கன்னு கேட்டாங்க..
பதிவுலகில் ஏற்கனவே சினிமா விமர்சனம் எழுதுவதில் வல்லவர்களான கேபிள் சங்கர்,ஜாக்கிசேகர்,உண்மைத்தமிழன், அதிஷா மற்றும் பலரது விமர்சன நடையில் இருந்து மாறவும், தனித்திருக்கவும், எனக்கென ஒரு அடையாளத்தினை ஏற்படுத்தவும் அந்த வசனங்கள் எழுதும் உத்தியை கொண்டு வந்தேன்..
இதற்கு மேல் ஏதாவது கேள்விகள் என்னை கேட்க வேண்டுமானால் கேளுங்கள் பதில் சொல்கிறேன்..
- தொடரும்..
டிஸ்கி - பாகம் 4 -ல் பெண் பதிவர்கள் 6 பேர் என்ன பேசினார்கள் என்பதும், பாகம் 5 இல் மீதி உள்ள பதிவர்களின் பேச்சும் இடம் பெறும்