Showing posts with label விஜய். Show all posts
Showing posts with label விஜய். Show all posts

Thursday, August 20, 2015

துருவ நட்சத்திரம்', 'யோஹான்' ஆகிய படங்களில் சூர்யா, விஜய் விலகியதில் யார் மேல் தப்பு ?-கவுதம் மேனன் உடைத்த ரகசியம்

'துருவ நட்சத்திரம்', 'யோஹான்' ஆகிய படங்களில் சூர்யா, விஜய் இருவருடன் நடந்த விஷயங்கள் என்ன என்று விவரித்துள்ளார் இயக்குநர் கெளதம் மேனன்.
பிரேம் சாய் இயக்கத்தில் நிதின் நடித்திருக்கும் 'கொரியர் பாய் கல்யாண்' படத்தை தயாரித்திருக்கிறார் இயக்குநர் கெளதம் மேனன். இப்படம் தமிழில் ஜெய் நடிக்க 'தமிழ்செல்வனும் தனியார் அஞ்சலும்' படம் தயாராகி வருகிறது.
'கொரியர் பாய் கல்யாண்' படத்தை விளம்பரப்படுத்தும் பணிகள் ஈடுபட்டு வந்த கெளதம் மேனன் அளித்த வீடியோ பேட்டியில் 'துருவ நட்சத்திரம்', 'யோஹான்' ஆகிய படங்கள் கைவிடப்பட்டது ஏன் என்று கூறியிருக்கிறார்.
'துருவ நட்சத்திரம்', 'யோஹான்' குறித்து இயக்குநர் கெளதம் மேனன் கூறியிருப்பது "ஒருவர் என்னிடம் வந்து நாம் நண்பர்களாக இருக்க முடியாது. தொழில்முறையாக மட்டும் பேசிக்கொள்ளலாம் என்று சொன்னால் அதில் எனக்கு எந்த பிரச்சினையும் இல்லை. ஆனால் என்னை நண்பர் என்று சொல்லிவிட்டு என்னை புரிந்துகொள்ளமுடியவில்லை என்றால் அது எனக்கு கஷ்டமாக இருக்கும். அதனால் தான் சூர்யாவிடம் மனக்கசப்பு ஏற்பட்டது.
அவர் என்னிடமிருந்து 50-60 சதவீத கதையைக் கேட்டார். என்னுடன் ஏற்கெனவே 2 படங்கள் பணியாற்றியுள்ளார். நீ எப்படி செய்வாய் என எனக்கு தெரியும், நம்பிக்கை உள்ளது எனக் கூறியிருந்தால் சந்தோஷப்பட்டிருப்பேன். நிறைய கலந்து ஆலோசித்திருக்கலாம், என்ன செய்யலாம் எனப் பேசியிருக்கலாம். அது மகிழ்ச்சியாக இருந்திருக்கும். ஆனால் நண்பர் என்று சொன்னவர் சட்டென புரிந்து கொள்ள முடியாமல் போனது வருத்தமாக இருந்தது.
'யோஹான்' கைவிடப்பட்டது இப்படியல்ல. தனிப்பட்ட முறையில் விஜய்யுடன் எனக்கு பழக்கமில்லை. அவருக்கு என்னைப் பற்றி தெரிந்திருக்க வேண்டும் என்ற அவசியமில்லை. படப்பிடிப்புக்கு 10 நாட்கள் முன்பு நான் கூறிய கதையைக் கேட்டு அவர் உறைந்து விட்டார். இந்தக் கதை நம்மூருக்கு அந்நியமாக இருக்கிறது என நினைத்தார். நம் மக்களுக்கான பிணைப்பு இல்லையென்று நினைத்தார். ஆனால் எனக்கு அந்த பிணைப்பு தேவைப்படவில்லை. அப்படித்தான் நான் எழுதியிருந்தேன். சர்வதேச தரத்தில் சண்டைக் காட்சிகளுடன், ஜேம்ஸ் பாண்ட் படத்தை போல ஒரு துப்பறியும் படம் எடுக்கதான் நினைத்தேன்.
கண்டிப்பாக உணர்வுப்பூர்வமான பிணைப்பு ரசிகர்களுக்கு வந்திருக்கும். இப்போது 'பாகுபலி'யை எல்லா மாநிலங்களிலும் பார்க்கிறார்கள். அது ஒரு வரலாற்றுப் படம், அது அந்நியமான களம் தான். ஆனால் உணர்வுப்பூர்வமாக மக்கள் அதை ரசிக்கிறார்கள். அப்படித்தான் யோஹானும் இருந்திருக்கும்.
கதைப்படி விஜய் வெளிநாட்டில் வாழ்பவர். அவரது அப்பா, தாத்தா எல்லோரும் இந்தியர்களாக இருந்தாலும் அயல்நாட்டுக்கு குடி பெயர்ந்தவர்கள். விஜய் சிஐஏ-வில் சேருகிறார். லாக்ராஸ் விளையாட்டு விளையாடுகிறார். ஃபாரீன் நாயகிகள் என அனைத்தும் முடிவு செய்யப்பட்டிருந்தது. ஆனால் அவர் விலகியதில் எனக்கு எந்தப் பிரச்சினையும் இல்லை. அவருக்கு நான் வேலை செய்யும் விதம் பற்றி தெரியாது. என் படங்கள் அனைத்தையும் அவர் பாத்திருக்கிறாரா என்று கூட தெரியாது. எனவே அது புரிந்துகொள்ள முடிகிறது. அதையே சூர்யா செய்யும்போது அது என்னை பாதித்தது. ஏனென்றால் அவருக்கு நான் வேலை செய்யும் விதம் தெரியும்."


நன்றி - த இந்து

Friday, August 14, 2015

விஜய், மகேஷ்பாபு ஒப்பிடுக - செல்வந்தன் ஸ்ருதி கமல் ஓப்பன் டாக் பேட்டி

செல்வந்தன் படம் வெளியாகி வெற்றிபெற்றதையடுத்து ஸ்ருதி ஹாசன் ட்விட்டரில் ரசிகர்கள் கேள்விகளுக்கு பதில் அளித்துள்ளார்.
செல்வந்தன் படக் கதையைக் கேட்டவுடன் உங்கள் முதல் ரியாக்‌ஷன் என்ன?
கேட்ட உடனேயே தெரிஞ்சிடுச்சு இது சென்சிபிள் கதைன்னு.
மகேஷ் பாபு குறித்து உங்கள் பதில், மீண்டும் அவருடன் நடிப்பீர்களா?
கண்டிப்பாக, பெர்ஃபாமன்ஸ் படி அவர் திறமைசாலி. மீண்டும் ஒரு படம் பண்ணுவேன் என நம்புகிறேன். மிகவும் பணிவான குணமுடையவர்.
ஒரு விஷயம் நீங்கள் எப்போதும் மறக்காமல் வீட்டிலிருந்து எடுத்துச் செல்வது?
செல்போன்.. நீங்கள் எல்லாம் ட்விட்டர்ல இருக்கீங்களே
உங்களை பொருத்தமட்டில் ’நடிப்பு’?
உணர்வு..
கமல் சார் படத்தை பார்த்துவிட்டாரா? உங்கள் அப்பா உங்களுக்கு நடிப்புக் குறித்து கொடுத்த ஸ்பெஷல் டிப்ஸ்?
அவர் நாளைக்குத் தான் பார்க்கப்போகிறார். அப்பா எப்போதும் அட்வைஸ் செய்ய மாட்டார்.
கமலும் நீங்களும் அப்பா மகளாக எப்போது  நடிக்கப் போகிறீர்கள்?அப்பா இயக்கத்தில் படம் எப்போது?
கேரக்டர் பொறுத்து கண்டிப்பாக ஒரு நாள் நடக்கும். அப்பா இயக்கத்தில் நடிப்பது என் கனவு..
விஜய் அண்ணாவுடன் பாடிய அனுபவம் குறித்து சொல்லுங்களேன்?
ஆஸம் சிங்கர் விஜய்..
எத்தனை மொழிகளை நீங்கள் சரளமாக பேசுவீர்கள்?
எதுவுமில்லை :(
விஷால் கேள்வி: எப்போது மியூசிக் ஆல்பம் ரிலீஸ் செய்யப்போகிறீர்கள் ஸ்ருதி?
விரைவில்..விரைவில் ..விரைவில் ... வேலைகள் நடக்கின்றன. உங்களுக்கும் அதில் ஒரு வேலை இருக்கிறது
படம் இயக்குவதில் உங்களுக்கு விருப்பம் இருக்கிறதா?
நான் அதை நேசிக்கிறேன். ஆனால் அதில் பொறுப்புகள் அதிகம்.
உங்கள் அப்பா படங்களில் எந்தப் படத்தை நீங்கள் ரீமேக் செய்ய விரும்புகிறீர்கள்?
புஷ்பக் (பேசும் படம்)
ஒரு கிராமத்தை தத்தெடுக்கும் சந்தர்ப்பம் உங்களுக்கு கிடைத்தால் நீங்கள் செய்வீர்களா?
கண்டிப்பாக
சல்மானுடன் இணைந்து பணியாற்ற விரும்புகிறீர்களா?
நான் அதை நேசிப்பேன்.
உங்கள் வாழ்க்கையின் குறிக்கோள் என்ன?
சந்தோஷமாக இருப்பது.
லவ்வா அல்லது அரேஞ்ச் மேரேஜா, தமிழ் பையனா அல்லது தெலுங்கு பையனா, உங்களை விட வயதில் சிறியவரை திருமணம் செய்வது குறித்து?
அய்யோ...
தெலுங்கு சினிமா உலகில் சமகால நடிகைகளில் உங்கள் மனம் கவர்ந்தவர் யார்?
தமன்னா...
உலகம் அழிய ஒரே ஒரு நாள் தான் இருக்கிறது என்றால் என்ன செய்வீர்கள்?
தூக்கம்...
நீங்கள் வருந்தும் வேளையில் உங்களை வழிநடத்தும் விஷயம்?
நம்பிக்கை...
நீங்கள் ஓய்வு நேரங்களில் செய்வது?
தூக்கம், டிவி, அல்லது சினிமா
உங்கள் முதல் ஆட்டோகிராப்பை எந்த வயதில் போட்டீர்கள் என நினைவிருக்கிறதா?
ஆம் , இருக்கிறது.. எனக்கு அப்போது 6 வயது
உங்கள் அப்பாவிற்கு நீங்கள் கொடுத்த முதல் கிஃப்ட்? உங்கள் அப்பாவால் அழைக்கப்படும் செல்லப்பெயர் என்ன?
போயம் மற்றும் பெயிண்டிங்.. செல்லப்பெயர் அது ரொம்ப சீக்ரெட்..
தொகுப்பாளினி டிடி குறித்து சில வார்த்தைகள்?
எனர்ஜிடிக்..
கமல் சார் பொண்ணா இல்லாமல் இருந்தால் நீங்கள் நடிகையாக ஆகியிருபீர்களா?
தெரியலை (சிரிப்பு)
மேலும் பிடித்த விஷயங்களாக
கலர் : பிங்க்
ஊறுகாய்: வெள்ளைப்பூண்டு ஊறுகாய்
பிடித்த ஹாலிவுட் படம் : பேட்மேன் சூப்பர் மேன்
காத்திருக்கும் ஹாலிவுட் படம் : பேட்மேன் Vs சூப்பர் மேன்
என பகிர்ந்துகொண்டுள்ளார் ஸ்ருதிஹாசன். இன்னும் பல கேள்விகள் #AskCharuseela என்ற டேக் இட்ட வார்த்தையில் கேட்கப்பட சிறிது நேரத்தில் ட்ரெண்டானது. சாருசீலா என்பது சமீபத்தில் செல்வந்தன் (தெலுங்கில் ஸ்ரீமந்துடு) படத்தில் ஸ்ருதி ஹாசன் ஏற்று நடித்த பாத்திரம்.
கேள்விகள் கேட்ட அனைவருக்கும் நன்றிகள், மன்னிக்கவும்! எல்லோரது கேள்விகளுக்கும் பதிலளிக்க முடியவில்லை. என விடைபெற்றவர். மதிய உணவு ஹைதராபாத்தில் என அந்த புகைப்படத்தையும் வெளியிட்டுள்ளார்.
தொகுப்பு : ஷாலினி நியூட்டன் 

நன்றி - விகடன்

Saturday, July 04, 2015

புலி- கலக்குமா? - இயக்குநர் சிம்புதேவன் சிறப்பு பேட்டி

  • ‘புலி’ படப்பிடிப்பில் சிம்புதேவன், விஜய்
    ‘புலி’ படப்பிடிப்பில் சிம்புதேவன், விஜய்
ஒரு இயக்குநருக்கு, என்ன தேவையோ, அது கிடைத்துவிட்டாலே படத்தின் வெற்றி உறுதியாகிவிடும். வலிந்து பிரம்மாண்டமாகக் காட்ட வேண்டும் என்று முயற்சித்தால் தப்பாகத் தெரியும். இந்தக் கதைக்கு என்ன தேவையோ அது படத்தில் இருக்கும் என்று வார்த்தைகளில் நம்பிக்கையை உரித்தார் விஜய் நடித்துவரும் புலி படத்தின் இயக்குநர் சிம்புதேவன். படத்தின் இறுதிக் கட்டப் பணிகளில் மூழ்கியிருந்தவருடன் உரையாடியதிலிருந்து…
‘புலி' படத்தின் தொடக்கம் எப்படி அமைந்தது?
‘ஒரு கன்னியும் மூணு களவாணிகளும்' படம் வெளியான சமயத்தில் விஜயைச் சந்தித்து இக்கதையைக் கூறினேன். கதையைக் கேட்ட உடனே பிடித்திருக்கிறது, உடனே தொடங்கலாம் என்றார்.
படத்தின் நாயகன் விஜயைத் தவிர ஸ்ரீ தேவி, ஹன்சிகா, ஸ்ருதி ஹாசன், சுதீப், தம்பி ராமையா, சத்யன், பிரபு, விஜயகுமார் என ஒரு பெரிய நடிகர்கள் பட்டாளம் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறார்கள்.
அதே போல படப்பிடிப்புக்குக் கிளம்பும் முன்பாகக் கற்பனை எப்படிக் காட்சியாக வர வேண்டும் என்பதை வடிவமைத்துவிட்டேன். இதுபோன்ற படங்களில் இயக்குநருக்குப் போதிய ஒத்துழைப்பு இருக்க வேண்டும். எனது கற்பனையை சரியாகத் திரையில் கொண்டுவருவதற்கு அனைவருமே கடுமையாக உழைத்திருக்கிறார்கள். இந்த மாதிரியான படங்களின் படப்பிடிப்புக்குக் காலவரையின்றி அதிக நாட்கள் எடுத்துக்கொள்வார்கள். ஆனால், நான் அனைத்தையுமே சரியாக முன்பே திட்டமிட்டுவிட்டதால், தொடர் படப்பிடிப்பு மூலமாகக் குறைவான நாட்களில் படப்பிடிப்பை முடித்திருக்கிறோம்.
‘புலி' படத்தின் முன்னோட்டத்தைப் பார்த்தால் வரலாறுப் படம்போல் தெரிகிறதே?
இப்படத்தை ஒரு ஃபாண்டஸி ஆக்ஷன் அட்வெஞ்சர் என்று கூறுவேன். போரும் காதலும் கலந்த கதை. விஜய் ரசிகர்களுக்கு மட்டுமல்ல, குடும்பத்தில் உள்ள சிறியவர் முதல் பெரியவர் வரை அனைவருக்குமே பிடிக்கும் வகையில்தான் இப்படத்தின் கதையை நான் வடிவமைத்திருக்கிறேன். இக்கதை ஒரு கற்பனைதான். எந்த ஒரு படத்தின் சாயலும் இல்லாமலும், புதிதான ஒரு உலகம் ரசிகர்களுக்கு விருந்தாக அமையும் என்பது உறுதி. இது ஒரு புதுமையான களம், அதில் புகுந்து விளையாடியிருக்கிறார் விஜய்.
படப்பிடிப்பு தொடங்குவதற்கு முன்பாக உங்களின் திட்டமிடல் என்ன?
இப்படத்தை இடைவெளியின்றி முடித்திருக்கிறோம். கடந்த ஒரு வருடமாக, ‘புலி' படத்திற்கான கிராஃஃபிக்ஸ் பணிகள் நடந்துகொண்டே இருக்கின்றன. இப்படத்தின் கதைக்களத்தைக் காட்டுவதற்கு கலை இயக்குநர் முத்துராஜ், ‘மகதீரா', ‘நான் ஈ' உள்பட பல படங்களில் பணியாற்றிய கிராபிக்ஸ் மேற்பார்வையாளர் கமலக்கண்ணன் ஆகிய இருவரது பணிகள் முக்கிய பங்கு வகிக்கும்.
செட் தவிர காடு, மலை போன்ற இடங்களில் படப்பிடிப்பு நடத்த வேண்டியிருந்தது. அதற்காக கேரளம், ஆந்திரம், தாய்லாந்து ஆகிய இடங்களில் படப்பிடிப்பு நடத்தி முடித்தோம்.
2014 நவம்பரில் படப்பிடிப்பு தொடங்கினோம். ஆனால், அதற்கு முன்பே ஒவ்வொரு காட்சியும் எப்படி வர வேண்டும் முன்னதாகத் தீர்மானித்துவிட்டதால், படப்பிடிப்புத் தளத்துக்குச் சென்றவுடன் மிகவும் எளிதாக வேலை நடந்தது.
முதல் முறையாக விஜயுடன் பணியாற்றிய அனுபவம்..
முதல் முறையாக ஒரு முன்னணி நாயகன், ஒரே படத்தில் நிறைய நடிகர், நடிகைகள் என்ற சூழ்நிலையை எதிர்கொண்டபோது பொறுப்பு அதிகம் என்பதை ஒப்புக்கொள்கிறேன். அதேபோல் விஜயும் தனது கதாபாத்திரத்தின் கனம் உணர்ந்து செயல்பட்டார்.
சண்டைக் காட்சிகள், உடைகள் என இப்படத்தில் விஜய் நிறைய காட்சிகளுக்கு அதிக உழைப்பைத் தந்திருக்கிறார். இப்படத்தின் சண்டைக் காட்சிக்காக வாள் சண்டை கற்றுக்கொண்டார். காட்டுக்குள் படப்பிடிப்பு நடத்தியபோது மாலை படப்பிடிப்பு முடிந்ததும் அங்கிருந்து ஊருக்குள் சென்று தங்கி, திரும்பி வர தாமதமாகும் என்பதால் பக்கத்து கிராமத்தில் வீடு எடுத்துத் தங்கினோம். விஜய் சாருக்கு தனியாக ரூம் போடப்பட்டது. ஆனால், வேண்டாம் என்று மறுத்து அவரும் எங்களுடனேயே 40 நாட்கள் தங்கிவிட்டார். பெரிய நடிகர் இவ்வளவு எளிமையாக இருக்கிறாரே என்று எனக்கே ஆச்சர்யமாக இருந்தது.
நீண்ட இடைவெளிக்குப் பிறகு ஒரு தமிழ்ப் படத்தில் ஸ்ரீதேவி நடித்திருக்கிறார். கதையைக் கேட்டவுடன் என்ன சொன்னார்?
இக்கதையை நான் எழுதும்போதே, அவரை மனதில் வைத்துதான் எழுதினேன். மும்பையில் போய் கதை கூறும்போது, மிகவும் தயக்கத்துடன்தான் கதையைக் கேட்க ஆரம்பித்தார். கதையைக் கேட்ட உடனே ‘ரொம்ப நல்லாயிருக்கு, கண்டிப்பாக பண்ணுகிறேன்’ என்று தெரிவித்தார்.
‘இங்கிலீஷ் விங்கிலீஷ்' படத்துக்குப் பிறகு நிறைய கதைகள் வந்தன, இந்தக் கதை எனக்கு மிகவும் பிடித்திருக்கிறது என்று ஸ்ரீ தேவி என்னிடம் கூறினார். ஸ்ரீ தேவியைத் தமிழ்த் திரையில் எதிர்பார்க்கும் அனைவருக்குமே இப்படம் உற்சாகம் தரும்.
‘புலி' படத்தின் புகைப்படங்கள், வீடியோ முன்னோட்டம் என அறிவித்த நாளுக்கு முன்பே இணையத்தில் வெளியானது பரபரப்பைக் கிளப்பியதே?
தொழில்நுட்ப வளர்ச்சி என்பது நமக்கு எப்படி நண்மையாக அமைகிறதோ அதேபோலப் பல பின்னடைவுகளுக்கும் வழிகோலுகிறது. அப்படித்தான் இதுபோன்ற நிகழ்வுகளையும் எடுத்துக்கொள்ள வேண்டும்.
இப்போதுகூட இது தொடர்பான விஷயங்களில் மேலும் கவனமாக இருக்க வேண்டும் என நிறைய மாற்றங்களைப் படக் குழுவில் கொண்டுவந்திருக்கிறோம். இனிமேல் இது தொடர்பாக எதுவும் நடக்காது, எங்களுக்கு மட்டுமல்ல, தமிழ்த் திரையுலகிலும் நடக்காது.


நன்றி -த இந்து

Wednesday, February 25, 2015

ரஜினி-யின் லிங்கா பிரச்சனையில் விஜய்க்கு தொடர்பா?வாசகர்கள் அலசல்

  • நடிகர் விஜய்யை சந்தித்து பேசியது தொடர்பாக 'லிங்கா' படத்தின் திருச்சி, தஞ்சாவூர் விநியோகஸ்தர் சிங்காரவேலன் விளக்கம் அளித்துள்ளார்.
    'லிங்கா' பட நஷ்ட ஈடு தொடர்பான சர்ச்சைகளில் இரண்டு நடிகர்கள்தான் ரஜினியை நஷ்ட ஈடு கொடுக்க கூடாது என்று தடுக்கிறார்கள் என்று பத்திரிகையாளர் சந்திப்பில் விநியோகஸ்தர்கள் தெரிவித்தார்கள்.
    ரஜினியை விஜய் தான் தடுக்கிறார் என்று செய்திகள் வெளியானது. மேலும், விஜய் தரப்பினர் இச்செய்திக்கு "விஜய்க்கும் 'லிங்கா' பிரச்சினைக்கும் சம்பந்தமில்லை" என்று மறுத்தார்கள்.
    திடீரென்று சிங்காரவேலன் விஜய்யை சந்தித்த புகைப்படம் ஒன்று இணையத்தில் வெளியானது. இதனைத் தொடர்ந்து விஜய் தான் விநியோகஸ்தர்கள் பின்னணியில் இருக்கிறார் என்று தகவல் வெளியானது.
    இந்நிலையில், விஜய்யை சந்தித்தது ஏன் என்று சிங்காரவேலனை தொடர்பு கொண்டு கேட்டபோது, "நான் விஜய் சாரை சந்தித்து உண்மை தான். ஏனென்றால் நாங்கள் எந்தொரு இடத்திலும் விஜய் சாரின் பெயரை உபயோகிக்கவில்லை. ஆனால், விஜய்யை லிங்கா பிரச்சினையில் முன்னிறுத்தி செய்திகளை வெளியிட்டார்கள். இதனால் விஜய் மிகுந்த மனவருத்தத்தில் இருக்கிறார் என்று அவரது செய்தி தொடர்பாளர் என்னிடம் தெரிவித்தார்.
    உடனே, அவரை நேரில் சந்தித்து இதனை விளக்குவதாகவும் தெரிவித்தேன். அதற்கு 'புலி' படப்பிடிப்பு தளத்துக்கு வருமாறு கூறினார்கள், சென்றேன். அன்று தான் விஜய் 'புலி' குழுவினருக்கு விருந்தளித்தார்.
    விஜய்யிடம் நாங்கள் எந்தொரு இடத்திலும் உங்களுக்கு பெயரை உபயோகப்படுத்தவில்லை. ஆனால், தவறான செய்திகளை வெளிவந்துவிட்டது என்று அவரிடம் கூறினேன். அவரும் சரி... பரவாயில்லை என்று கூறினார்.
    விநியோகஸ்தர்களுக்கு மினிமம் கேரன்டி நடிகராக திகழ்பவர் நடிகர் விஜய் மட்டுமே. அவரை முதன்முதலாக சந்தித்ததால் புகைப்படம் எடுத்துக் கொண்டேன். அப்படத்தை என்னுடைய வாட்ஸ்-அப் படமாக வைத்தது தவறு. அதை வைத்துக் கொண்டு மீண்டும் தவறாக எழுதுகிறார்கள்" என்றார் சிங்காரவேலன்.Joseph Raja  
    சமூக வலைத்தளங்கள் உண்மையும் பரப்பும் ஆனால் பொய்யை உண்மையை விட வேகமாய் பரப்பும் . யோசிக்காம்மல் அனைவரும் பரப்பி விட்டு விளையாடுவது எல்லாம் ஒரு பிழைப்பா. எல்லாரும் சும்மா இருந்தாலும் குத்தம் சொல்றீங்க பேசுனாலும் குத்தம் சொல்றீங்க போட்டோ எடுத்தா குத்தம் சொல்றீங்க நடிச்சா குத்தம் சொல்றீங்க படத்துக்கு பேர் வச்சா குத்தம் சொல்றீங்க. நீங்கள் பகிருவதும் பதிப்பதும் கருத்து அல்ல வெறுப்பு மட்டுமே. லிங்கா பட டைரக்டர் எதுக்கு விஜய பன்cடினுக்கு கூப்பிடனும் , பொது ஜனங்களுக்கு தெரியறது பாதிக்க பட்டவருக்கு தெரியாம இருக்குமா ? சும்மா பிரச்சனைய ஊதி பெருசக்குறது மீடியா . பிடிக்காத நடிகர குற சொலரதுக்கும் அவருக்கு எதிரா நியூஸ் பரபரதுக்குனு ஒரு கூட்டம் . அதுக்கு ஏமாளி அஹுரதுக்குனு ஒரு கூட்டம் . நான் எகப்பட்ட் பெய்க் போடோஷப் வேலைகள பாத்துருக்கேன் விஜய் ரசிகர்கள் ரஜினிய ஒட்டுர மாதிரி . விஜய் ரசிகர்களுக்கும் ரஜினி ரசிகர்களுக்கும் சண்டை எற்படுதுரதுக்காக சில பேர் உருவாக்கினது. அது தான் இப்ப இப்படி வளைந்து நிக்குதுங்குரதுதான் நான் சொல்லுவேன் .
    about 10 hours ago ·   (0) ·   (0) ·  reply (0) · 
       
    • Gogulaa  
      லாட்டரி சீட் வாங்கி பரிசு விலலன்ன காச திரும்ப கேட்பார்களா?
      Points
      190
      about 10 hours ago ·   (0) ·   (0) ·  reply (0) · 
      • Vikram  
        ரஜினிகாந்தை அசிங்க அசிங்கமாய் பேசி விட்டு அவரை நம்பினால் பிச்சை தான் எடுக்க வேண்டும் என அவரை காயப்படுத்தி விட்டு நடிகர் விஜயை ஆறுதல் படுத்த செல்கிறார். அப்படி விஜய்க்கு என்ன நேர்ந்ததென்று ஆறுதல் சொல்ல கிளம்பி விட்டார். இவர் செய்தது தவறு என்று ஏன் எடுத்து கூறவில்லை? அப்படியெனில் விஜய்க்கு இதற்கு மறைமுக அதரவு உண்டா? அவருக்கு பிரியாணி வேறு சமைத்து போட்டுள்ளார். தன்னை விட மூத்தவர்(ரஜினிகாந்த்) ஒருவரை ஒருவன் தரக்குறைவாக பேசியுள்ளான் என்பதை கண்டிக்க முடியாத ஒரு நபர் எப்படி ஒரு சக நடிகனாக இருக்க முடியும்?. இந்த லட்சணத்தில் இவருக்கு ஒரு பிரச்சனை என்றால் எப்படி பிறர் இவரை நம்பி வருவார்கள்? சினிமா என்றால் லாப நஷ்டம் உண்டு என இவருக்கு தெரியாத? அதை எடுத்து கூறமால் விட காரணம்?? என்னை போன்ற ரஜினி ரசிகர்களுக்கு விஜயின் செயல் மிக வருத்தமாக உள்ளது.
        Points
        1650
        about 10 hours ago ·   (0) ·   (0) ·  reply (0) · 
        • சிங்காரவேலன் போன்றவர்களிடம் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும் அவரிடம் படம் கொடுக்காமல் தடை விதிக்க வேண்டும் இவர்களால் சினிமா துறைக்கு மட்டும் அல்ல ஒட்டு மொத்த தமிழ் இனத்திற்கும் அவப்பெயர்
          Points
          16805
          about 10 hours ago ·   (0) ·   (0) ·  reply (0) · 
          • Vikram  
            // அவரை முதன்முதலாக சந்தித்ததால் புகைப்படம் எடுத்துக் கொண்டேன். அப்படத்தை என்னுடைய வாட்ஸ்-அப் படமாக வைத்தது தவறு. // தவறு என சொல்ல காரணம்?? பயமில்லை என்றால் ஏன் வைத்தது தவறு என கூற வேண்டும்?? சந்திப்பை ஏன் மறைக்க முயல்கிறார். நடிகர் விஜய்க்கு ஆதரவு கூறுபவர்கள் இதற்கு மழுப்பாமல் சரியான பதில் கூறவும்.
            Points
            1650
            about 11 hours ago ·   (0) ·   (0) ·  reply (0) · 
            • PRASATH  
              ஒரு பிரியாணிக்காக கட்சி மாறிட்டியே
              Points
              510
              about 12 hours ago ·   (0) ·   (0) ·  reply (0) · 
              • படம் சமராக இருந்தாலும் ரஜினி , விஜய் , சிவகர்த்திகேயன் , விஜய் சேதுபதி , தனுஷ்,சூர்யா pondror உடைய படம் வணிக reethiyil laabathai eettum , இவர்களை அணைத்து தரப்பு மக்களும் விரும்பி ரசிப்பது உண்டு . ரஜினி யின் படம் ரம்பமாக இருந்தாலும் வசூலில் வெற்றி பெற்றிருக்கும் . இந்த லிங்கவும் ஸ்மரண படம் தன , வசூலில் ப்ரோடுசெர் கு வெற்றி தன , ஆனால் அதை வாங்கிய விநியோகிச்தர்களுக்கு அது லாபத்தை கொடுத்த என்றால் சந்தேகமே , ஏன் என்றால் அப்படம் miga குறிகிய காலத்திலேயே நெகடிவ் ரெவிஎவ்ச் பெற்று , naraya திரியரங்கை விட்டு வெளியேற்றப்பட்டது . விஜய் இன் படம் வரிசையாக கதை அம்சம் சரியானதாக இல்லை என்றாலும் வசூல் ரீதியாக வெற்றி padangale , சூரிய விற்கு அவ்வபொழுது sarukalgal அதிகம் தன , வசூல் ரீதியில் திருப்திகரமாக இருக்கும் .
                about 12 hours ago ·   (0) ·   (0) ·  reply (0) · 
                • Dilip  
                  உலகமகா நடிப்புடா சாமி........ சிங்கு நானும் திருச்சி தாண்ட உன்னை விட மாட்டேன்......
                  Points
                  290
                  about 13 hours ago ·   (0) ·   (0) ·  reply (0) · 
                  • Hari  
                    விஜய் இப்படியொரு கில்தரமானவன் என்பது இப்போதான் தெரியுது .
                    Points
                    210
                    about 13 hours ago ·   (0) ·   (0) ·  reply (0) · 
                    • Vikram  
                      இவர் எப்படி எல்லாம் சமாளிக்கிறார் என்று பாருங்கள். அன்று பத்திரிகையாளர்கள் கேட்ட கேள்விகளுக்கு பதில் சொல்ல தெரியாமல் எப்படி சமாளிப்பதென விஜயிடம் ஆலோசித்து விட்டு இப்போது மாற்றி பேசுகிறார். இவர் விஜயின் கையால் என்பதற்கு இந்த ஒரு வரியே போதும். //விநியோகஸ்தர்களுக்கு மினிமம் கேரன்டி நடிகராக திகழ்பவர் நடிகர் விஜய் மட்டுமே. // நடிகர் விஜய் நடித்த முந்தய படங்கள் (ஜில்லா, தலைவா) தோல்வி படங்கள் என தெரிந்தும் எப்படி பேசுகிறார் பாருங்கள். 2007 இல் இருந்து 2010 பத்து வரை தொடர் தோல்விகளை கொடுத்தவரை இப்படி புகழ்வதில்ருந்தே தெரிகிறது விஜய் தான் இவரை பின்னிருந்து இயக்குகிறார் என்று. அத்துடன் திரைத்துறைக்கு சம்பந்தமே இல்லாத வேல்முருகன் மற்றும் சீமான்.
                      Points
                      1650
                      about 13 hours ago ·   (0) ·   (0) ·  reply (3) · 
                      • Seenu  
                        பத்திரிக்கையளர்களை நான்கு முறை சந்தித்துள்ளார் சிங்காரவேலன். கேள்விகளுக்கு பதில் சொல்ல தெரியவில்லை என்று நீங்கள் தான் கூறுகிறீர்கள். விஜய்க்கு தொடர் தோல்விகள்? 2007-போக்கிரி 2008-குருவி 2009-வேட்டைக்காரன் 2010-சுறா. இவைகளில் சுறா ஒன்று தான் வர்த்தக ரீதியாக தோல்வி. ஒரு வெறுப்புடன் கமெண்ட் செய்யாதீர்கள். உண்மை எனில் கூறுங்கள்.
                        about 12 hours ago ·   (0) ·   (0) ·  reply (3) · 
                        • Vikram  
                          குருவி, வேட்டைக்காரன் - இவை எல்லாம் ஹிட்??உங்களுக்கும் கருத்துரிமை உண்டு. மறுப்பதற்கில்லை. அழகிய தமிழ் மகன், வில்லு??இவை எல்லாம் சூப்பர் டுபெர் ஹிட்?? ரஜினியை தரக்குறைவாக பேசி விட்டு விஜயை சமாதனாம் செய்ய போவதா சொல்ல காரணம்? // அவரை முதன்முதலாக சந்தித்ததால் புகைப்படம் எடுத்துக் கொண்டேன். அப்படத்தை என்னுடைய வாட்ஸ்-அப் படமாக வைத்தது தவறு. // தவறு என சொல்ல காரணம்?? பயமில்லை என்றால் ஏன் வைத்தது தவறு என கூற வேண்டும்??
                          about 11 hours ago ·   (0) ·   (0) ·  reply (0) · 
                          • Raghul  
                            அப்போ குருவியும் வேட்டைகாரனும் ஹிட்டா
                            about 11 hours ago ·   (0) ·   (0) ·  reply (0) · 
                            • சீனு சார் , நம்பிட்டோம்
                              about 11 hours ago ·   (0) ·   (0) ·  reply (0) · 
                            • Linga படம் producer ku laabam than , aanal viniyogasthargaluku ? உண்மை என்னவென்று தெரியவில்லை . தமிழ் naatil சினிமா துறையில் எந்த பிரச்சனை yendraalum அதில் விஜய் இன் பெயரை sameeba காலமாக அடிகடி காண முடிகிறது , அதற்கு கரணம் அவருடைய வளர்ச்சி . விஜய் ஐ யாராவது புகழ்ந்தால் உடனே அஜித் , மற்றும் சூர்யா rasigargal அதற்கு பதில் அடி குடுக்கும் விதவமாக நேரெதிர் விமர்சனத்தை பரப்புகிறார்கள். உண்மை என்ன வென்று தெரியாமல் ஒருவன் மீதி பலி போடா கூடாது . நன் நடுநிலையாக படங்களை ரசிப்பவன். ஜில்லா படம் ஒரு பொழுது போக்கு படம் , நல்ல வசூலை குவித்த படம் , அதனை படுதோல்வி என்று கூறினால் அது தவறான ஒரு கருத்தை பரப்புவர்த்து போல் ullathu , ivaru than rasigargal மாறி மாறி ஒரு படத்தை பற்றியும் , ஒரு நடிகனை பற்றியும் வதந்திகளை கூறுகின்றனர் . படங்களை பொழுது போக்காக எண்ணி , அதனை பார்போம் . ஒருவன் மீது அவதூறு பரப்பி கொண்டு , மற்ற நடிகனுக்காக ஒருவனை ஒருவன் அடித்து கொண்டு , தஹாத வார்த்தைகளால் பேசிக்கொண்டு நாம் மனித இனம் என்பதை மறந்து விடவேண்டாம் அன்பு நண்பர்களே
                              about 13 hours ago ·   (0) ·   (0) ·  reply (2) · 
                              • Vikram  
                                ரஜினிகாந்தை அசிங்க அசிங்கமாய் பேசி விட்டு அவரை நம்பினால் பிச்சை தான் எடுக்க வேண்டும் என அவரை காயப்படுத்தி விட்டு நடிகர் விஜயை ஆறுதல் படுத்த செல்கிறார். நான் கேட்ட கேள்விக்கு உங்களிடம் பதில் இல்லை. அதை விடுத்து என்னை அஜித் அல்லது சூரிய ரசிகன் என பேச்சை திசை திருப்புகிறீர்கள் நீங்கள். நான் ரஜினி ரசிகன். மதுரையில் ஜில்லா படம் 23 லட்சம் நஷ்டம் என்பதற்கு ஒரு பிரபல தொலைகாட்சியில் உள்ள வீடியோ ஆதராம் உண்டு. நீங்கள் சிங்காரவேலன் செய்வதை நியயாபடுதுகிரீர்கள ? உங்கள் நடிகர் விஜய் அவர்கள் அவருக்கு புத்தி சொல்லாமல் புகைப்படம் எடுக்க காரணம்? மிநிமும் கியாரண்டி என்றால் என்னவென்று தெரியுமா உங்களுக்கு? கேள்வியை நன்றாக புரிந்து கொள்ளுங்கள் அன்பரே.
                                about 12 hours ago ·   (0) ·   (0) ·  reply (0) · 
                                • parthi  
                                  அட நண்பரே விஜயை இழுக்க காரணமே இந்த சிங்கார வேலன் தான் அதை விடுத்து மற்றவைகளை குறை கூறுவது நீங்கள் எந்த அளவிற்கு நடு நிலை ரசிகர் என்பதை காட்டுகிறது . அடுத்து விஜயை மட்டும் சமுகதலங்கள் விமர்சிக்க வில்லை .அஞ்சான் தோல்விக்கு காரணமே சமுகதலங்கள் என்று லிங்குசாமி சொல்லு அளவிற்கு அவர்களை பற்றிய விமர்சனம் எழுந்தது .இந்த செய்திகள் தெரிந்தும் நீங்கள் பேசிவதிலேயே உங்கள் நடு (?) நிலைமை என்ன என்று புரிகிறது .
                                  about 12 hours ago ·   (0) ·   (0) ·  reply (0) · 
                                • நல்ல படங்கள் என்றால் மக்களிடம் நல்ல வரவேற்ப்பு கிடைக்கும் . நல்ல படங்கள் aendru தெரிந்து kolvatharku munnar athil நடித்திருக்கும் நடிகர்களை பார்த்து ரசிகர்கள் படம் பார்க்க வருவார்கள் . அப்படி அதிகமாக வரும் ரசிகர்கள் . ரஜினி , கமல்,விஜய்,அஜித் ,vikram,surya,dhanush,சிவகர்த்திகேயன்,விஜய் சேதுபதி,சிம்பு ithupondra நடிகர்களுக்க ரசிகர்கள் 1 டு 2 வாரம் தேற்றி நிரப்புவார்கள் . பிறகு நல்ல padamaga இருந்தால் மக்களின் வரவேற்பால் படம் 3 டு 6 வீக்ஸ் நல்ல படியாக ஓடும் . அதை வைத்து படத்தில் லாபம் நட்டத்தை கணக்கிட முடியும் . athe மாதிரி விநியோகச்தர்ஹளும் படத்தை அதிக விலைக்கு வந்கிஹிரார்கள் , atharku mukkia karanam athil நடித்திருக்கும் hero . anaivarum arintha ondru , ரஜினி , விஜய் , அஜித் ஆகிய 3 perum top list il ullanar . yeno ரசிகர்களின் பொறாமை அடுத்த nadiganai avamana படுத்தும் நோக்கு , தாழ்த்தி பேச வேண்டும் என்ற நோக்கு . நல்ல படத்தை குட நல்ல ilai என்றும் . laabagaramaaga ஓடிய படத்தை பலாப் என்றும் koorukindraargal