Showing posts with label திகில். Show all posts
Showing posts with label திகில். Show all posts

Wednesday, May 18, 2011

நாளைய இயக்குநர் - திகில் கதைகள் - விமர்சனம்

நாளைய இயக்குநர் நிகழ்ச்சிக்கான விளம்பரங்கள்ல அந்த வாரம் என்ன டாப்பிக் கதைங்கறது சொல்லிடறாங்க. இது தெரியாம ஹாய் மதன் இந்த வாரம் என்ன டாபிக்னு தெரியுமா? என்று  சஸ்பென்ஸ் வைக்கும்போது சிரிப்பு தான் வருது. ஆனா அவரை சொல்லி தப்பில்லை.. நிர்வாகம் விளம்பர க்ளிப்பிங்க்ஸ் போடும்போது கவனமா இருக்கனும்.. 

அப்புறம் தொகுப்பாளினி போட்டுட்டு வர்ற டிரஸ் பற்றி எப்பவும் போல சொல்லியே ஆகனும். அஞ்சரைக்குள்ள வண்டி படத்துல ஹீரோயின் பாத்ரூம்ல இருந்து வெளில வர்றப்ப எப்படி இருப்பாரோ அப்படி இருக்கார். ஒரு மஞ்சள் கலர்  பெட்டிகோட் மட்டும் போட்டுக்கிட்டு பொண்ணு ஜாலியா வருது.. பார்க்கற நமக்கே கூச்சமா இருக்கே..... ஹி ஹி 

சரி.. சதையை பற்றி எதுக்கு நமக்கு கவலை ?கதைக்குள்ள போவோம்.



1. அருண் பிரகாஷ் - பிடாரன்

ஒரு பர்த்டே பார்ட்டிக்கு வீட்ல மேஜிக் மேன் வர வைக்கப்படறான்.அது கணவனுக்கு பிடிக்கலை. மனைவியை குறை சொல்றான்.( பொதுவா மனைவிங்க எது தன்னிச்சையா செஞ்சாலும் நாங்க குறை சொல்லுவோம் இல்ல.. ?)ஹால்ல மேஜிக்மேனை உட்கார வெச்சு உள்ளே கணவன் மனைவி 2 பேரும் அவனைப்பற்றி வாக்குவாதம் பண்ணிக்கறாங்க.. ( இப்போ எல்லாம் இது ஒரு டெக்னிக்காவே ஃபாலோ பண்றாங்க போல)

தன்னோட மேஜிக் கலையை அவமானப்படுத்தறது பிடிக்காம அவன் அவங்களுக்கு பாடம் கற்றுத்தர நினைக்கிறான். கண் கட்டு வித்தையால அவங்களை பயமுறுத்திட்டு , ஆனா எந்த கெடுதலும் பண்ணாம அவன் காசும் வாங்காம ரிட்டர்ன் போயிடறான்.இதான் கதை.

ஒரு படைப்பாளியின் கோபம், ஒரு கிரியேட்டிவ் திங்க்கர்க்கு சமூகம் கொடுக்கற மரியாதை ஆகியன  பற்றி நல்ல முறையில் அலசப்பட்ட கதை.

ஹாய் மதன் ஒரு குறை சொன்னாரு. மேஜிக் மேன் எப்பவும் சுறு சுறுப்பா இருப்பாங்க,, டாமினேஷன் பண்ணுவாங்க.. ஆனா இவர் ஏன் டல்லடிச்ச மாதிரி இருக்காரு?ன்னு கேட்டாரு.


ஆனா கதையோட சஸ்பென்ஸூக்கு அப்படி காட்றது தேவைதான். சைக்கோ மாதிரி காட்டி அப்புறம் சஸ்பென்ஸை உடைக்க படத்தோட டைரக்டர் முயற்சி பண்ணி இருக்கார். ஆனா இந்த படம் எல்லா தரப்பு மக்களையும் கவரும்னு சொல்ல முடியாது.. ஆனா வெல் டேக்கன் ஃபிலிம்னு சொல்லலாம்.

 ஒரு உபரி தகவல். இது எஸ் ராமகிருஷ்ணன் எழுதுன கதை

2. ராஜ்குமார் - பிழை

வித்தியாசமான சஸ்பென்ஸ் கதை. ஒரு அபார்ட்மெண்ட்ல நர்த்தகியா வாழும் ஒரு ஆண்.. அவன் பெண் வேஷத்தில் ரூம்ல இருக்கறதை வாட்ச் மேன் பார்த்துடறார்.அதை வெளில சொல்லாம இருக்க அப்பப்ப மிரட்டி பணம் வாங்கிக்கறார்.மிரட்டல் எல்லை மீறவே (அதாவது வாட்ச் மேன் ஹோமோ ட்ரை பண்றப்ப)கொலை பண்ணிடறான். இதான் கதை

ஆரம்பத்துல ரூம்ல இருக்கும் ஆண் ஏதோ ஒரு பெண்ணுடன் தகாத உறவு வெச்சிருப்பது போல் சஸ்பென்ஸ் காட்சி வெச்சது நல்லாருக்கு.கேமரா கோணங்கள் செம.. 


இயக்குநருக்கு சில கேள்விகள்

1. வாட்ச் மேன் டூப்ளிகேட் சாவி போடறப்ப சாவியை தன் ப்ளேஸ்க்கு எடுத்துட்டு  போய் அப்புறம் சோப்ல தடம் பதிச்சு மறுபடி சாவியை பழைய இடத்துல வெக்கற மாதிரி காட்டி இருக்கீங்க.ஆனா சோப்பை கையோட எடுத்துட்டு போய் அதுல தடம் படிச்சு சாவியை வைக்கறதுதான் ஈஸி & சேஃப்டி

2. நர்த்தகியா (திருநங்கை) வர்ற ஹீரோ ரூம்ல புடவை மாத்தறதை எப்படி ரூம் ஜன்னல் சாத்தாம இருப்பார். இந்த மாதிரி நேரத்துல ஜாக்கிரதை உணர்வு ஜாஸ்தியா வெலை செய்யுமே?

3.வாட்ச்மேன்  ஒரு ஹோமோ என்பதை இன்னும் தெளிவா காட்டி இருக்கலாம்.

ஹாய் மதன் ஐடியா ஓக்கே என பாராட்டிட்டு டைரக்டரோட ஐடியாவை சொன்னேன்,. வாட்ச் மேன் ஐடியாவை சொன்னேன்னு யாரும் தப்பா நினைக்காதீங்க அப்படின்னு டைமிங்க் ஜோக் அடித்தார். ஹாய் மதனிடம் எல்லோரும் இந்த மாதிரி விட்களை எதிர்பார்க்கறாங்க. ஆனா அவர் ஏன் அடக்கி வாசிக்கிறார்னு தெரில.. ( பிரதாப் போத்தன் கூட சேர்ந்து கெட்டுட்டார் போல).

 பிரதாப் போத்தன் டைரக்டர் ராஜ்குமாரைபாராட்றப்ப நல்லா மெயிண்டெயின் (maintain)பண்ணுனீங்க என பாராட்டுவதற்குப்பதிலாக நல்லா மெண்டென் பண்றீங்க என்றார். ஸ்டைல் உச்சரிப்புன்னு நினைச்சுட்டார் போல.. ஹா ஹா
show details 21:35 (1 hour ago)

http://movies.vinkas.in/files/2011/05/poonam-bajwa-cute-stills-1.jpg


3. மணிவண்னன் - நியதி

பேங்க்கை கொள்ளை அடிக்கும் ஒரு கூட்டம் எதேச்சையா அவங்க தங்கி இருக்கற ஹோட்டல் பாம் வெச்சிருக்கறது தெரியாம பலி ஆகிடறாங்க.. சாதாரண ஒன்லைன் ஸ்டோரி தான். ஆனா மேக்கிங்க் நீட். 

நல்ல வசனம்

1. பணத்துக்காக விஷமா மாறும் ஒரே இனம் மனுஷன் தான்.

நல்ல காட்சி

பேங்க்கில் கொள்ளை அடிக்கப்பட்ட பணம் பேங்க்கிலேயே மற்றவர் முன் தீயால் எரிப்பதைப்போல் காட்டி பணத்தை சாமார்த்தியமாக அபேஸ் பண்ணுவது

இயக்குநருக்கு சில கேள்விகள்

1. ரத்தம் வர்ற மாதிரி காட்சில ஒரிஜினல் ரத்தம் யூஸ் பண்ணாட்டியும் பரவால்லை. சிவப்பு கலர் திரவமாவது யூஸ் பண்ணி இருக்கலாம். ஆனா ஆரஞ்ச் கலர் திரவம் ஏன் யூஸ் பண்ணி காட்சியின் டெப்த்தை (depth)குறைக்கனும்.?

(டாக்டர் ராஜசேகர் மன்னிக்க வேண்டுகிறேன் படத்துல ஒரிஜினல் ரத்தத்தை யூஸ் பண்ணினார்)

2. பேங்க் கொள்ளை நடக்கறப்ப பொதுவா ஆண்கள், பெண்கள் தனித்தனியா தனிமைப்படுத்தி மிரட்டுவாங்க.. இப்படி க்ரூப்பா ஒரே செட்டா போட்டு வைக்க மாட்டாங்க..

கே பாலச்சந்தர் இந்தப்படம் செம ஸ்க்ரீன்ப்ளே க்ளாரிட்டி எக்ஸ்ஸிக்யூஷன்மட்டும் கன்ஃபியூஷன்னு சொன்னார்


http://movies.vinkas.in/files/2011/05/poonam-bajwa-cute-stills-3.jpg