Showing posts with label சந்தேகங்கள். Show all posts
Showing posts with label சந்தேகங்கள். Show all posts

Monday, April 23, 2012

அட்ரா சக்க சி பி எக்ஸ்க்ளூசிவ் பேட்டி பாகம் 7

ஃபிலாசபி பிரபாகரன் 2011 ஆம் ஆண்டில் அவரது தளத்தில் பகிர்ந்த பதிவு.
பதிவுலகில்  சக பதிவராக அவரிடம் சில கேள்விகள் கேட்க விரும்பி அவரை தொடர்பு கொண்டேன். அப்போது நான் கேட்ட கேள்விகளும் அவர் அளித்த பதில்களும் இங்கே:-
(பி.கு: இது நேர்காணல் அல்ல தொலைபேசி உரையாடல்)

1.ஒரேயடியாக பொங்கல் படங்கள் நான்கையும் பார்த்திருக்கிறீர்களே...? ஏன் இந்த கொலவெறி...?
பொதுவாகவே எனக்கு சினிமாத்துறையில் இயக்குனராக வேண்டும் என்று விருப்பம். அதனால் என்னால் முடிந்த வரைக்கும் எல்லாப் படங்களையும் பார்த்துவிடுவேன்.

2. நான்கு படங்களையும் பார்ப்பதற்கு உங்களுக்கு எப்படி நேரம் கிடைக்கிறது...?
(பலத்த சிரிப்புடன்) பீல்ட் வொர்க் என்ற பெயரில் அலுவலகத்தை கட் அடித்துவிட்டு சினிமா பார்க்கவும் பிரவுசிங் செண்டர் போவதற்கும் பயன்படுத்திக் கொள்வேன்.

3. மொக்கை படங்களை எல்லாம் எப்படி உங்களால் பார்க்க முடிகிறது...?
ஒவ்வொரு படத்திலும் ஒவ்வொரு பாடம் இருக்கிறது. நல்ல படங்களைப் பார்த்து ஒரு படத்தை எப்படி எடுக்க வேண்டுமென்று கற்றுக்கொள்கிறேன். அதேபோல மொக்கைப் படங்களைப் பார்த்து ஒரு படத்தை எப்படி எடுக்கக் கூடாதென்று கற்றுக்கொள்கிறேன்.

4. ஒரு படத்தை மொக்கை என்று விமர்சனம் எழுதும் போது எதிர்க்குரல்கள் கிளம்புமே...?
கிளம்பத்தான் செய்கிறது. அவ்வப்போது படத்தின் துணை, இணை இயக்குனர்கள் போன் செய்தும் மெயில் அனுப்பியும் திட்டுகிறார்கள். இருப்பினும் நான் என்னுடைய பார்வையில் தானே படங்களைப் பற்றி எழுதுகிறேன். நான் மொக்கை என்று எழுதிய காரணத்தினால் எந்தப்படமும் தோல்வி அடையப்போவதில்லை.

5. சமீபத்தில் சிரிப்பு போலீஸ் ரமேஷை சந்தித்தபோது அவர் சொன்ன ஒரு சீரியசான விஷயம், நீங்கள் நீண்ட காலமாக வார இதழ்களில் ஜோக்ஸ், கதைகள் என்று படைப்புகள் எழுதி வருகிறீர்களாமே...?
உண்மைதான். இதுப்பற்றி ஏற்கனவே எனது பதிவொன்றில் குறிப்பிட்டிருந்தேனே. கடந்த 18 வருடங்களில் நான் எழுதி பிரசுரம் ஆனவை 9867 ஜோக்ஸ், 64 கவிதைகள், 8 சிறுகதைகள்,19 ஒரு பக்கக் கதைகள், 87 சினிமா விமர்சனங்கள், 145 கட்டுரைகள். பாக்யா இதழின் மூலமாக இயக்குனர் பாக்யராஜுடன் நெருங்கிய பழக்கம் உண்டு.

நான் பதிவெழுத ஆரம்பித்த சமயத்தில் என்னை பெரிதும் ஊக்குவித்தவர் சிரிப்பு போலீஸ் ரமேஷ். அவர் என்னைப்பற்றி உயர்வாக சொன்னது மகிழ்ச்சி அளிக்கிறது.

6. அப்படி என்றால் சித்து +2 பட விமர்சனத்தில் சொம்படித்திருப்பீர்களே...?
அதுதான் இல்லை. எப்போதும் போல எனது நடையிலேயே எழுதினேன். ஆனால் அதைப் படித்தபின்பு இயக்குனர் பாக்யராஜ் வருத்தப்பட்டார். பின்னர் என்னுடைய விமர்சனம் சரிதான் என்று நேர்மையாக ஏற்றுக்கொண்டார்.

7. விமர்சனம் எழுதி சர்ச்சையானது போல ஜோக்ஸ் எழுதி ஏதாவது சர்ச்சை ஏற்பட்டது உண்டா...?
சமீபத்தில் ஸ்பெக்ட்ரம் விவகாரம் தலைவிரித்து ஆடியபோது கனிமொழி ஆ.ராசா பற்றி ஜோக் ஒன்றை எழுதி தி.மு.க தரப்பில் இருந்து அந்த ஜோக்கை நீக்கும்படி மிரட்டல் வந்தது. அலுவலகத்தில் இருப்பதால் வீட்டுக்கு போனதும் டெலீட் செய்துவிடுவதாக கூறினேன். ஆனால் அவர்கள் ஏற்றுக்கொள்ளாமல் அவசரப்படுத்த உடனடியாக பிரவுசிங் செண்டருக்குப் போய் அந்த ஜோக்கை நீக்கினேன்.

8. சரி, இது ஒரு ஜாலி பேட்டி என்பதால் அரசியல் பக்கம் போக வேண்டாம். பொங்கலில் வெளிவந்த நான்கு படங்களில் எது பெஸ்ட் என்பது பற்றி உங்கள் கருத்து...?
கமர்ஷியலாக பார்த்தால் சிறுத்தைக்குத் தான் முதலிடம். அடுத்ததாக ஒரு குடும்பப் படம் என்ற முறையில் காவலன் படத்தை சொல்லலாம். ஆடுகளம் அனைத்து தரப்பினருக்கும் பிடிக்காது என்பது எனது கருத்து. இளைஞன் டப்பா.

9. ஆடுகளம் தான் பொங்கல் படங்களில் டாப் என்று சொல்கிறார்களே...?
ஆடுகளம் நல்ல படம்தான். ஆனால் B,C சென்டர்களில் பெறும் வரவேற்ப்பை A செண்டரில் பெறாது என்பதே எனது கணிப்பு.

10. எதிர்ப்பார்க்கப்படும் ஆனந்த விகடன் மார்க்....?
காவலன் 45, சிறுத்தை 44, ஆடுகளம் 43

11. அப்படின்னா கலைஞரின் இளைஞன்....?
இளைஞன் விமர்சனத்தை ஆனந்த விகடனில் போட மாட்டார்கள் என்று நினைக்கிறேன்.

12. கேபிள் சங்கரின் விமர்சனமும் உங்கள் விமர்சனமும் முரண்படுகிறதே...? குறிப்பாக காவலன் படம் பற்றிய கருத்து....? (இதுவும் ஒரு ஜாலி கேள்வியே)
சினிமாவைப் பொறுத்தவரையில் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு ரசனை இருக்கலாம். கேபிள் சங்கர் அனுபவஸ்தர். அதைவிட முக்கியமானது, அவர் திரையுலகில் இருப்பவர். காவலன் படம் பற்றி சொல்லும்போது, கேபிள் மலையாள பாடிகார்ட் படத்தை பார்த்து அதையும் இதையும் கம்பேர் செய்திருக்கக் கூடும். 
மேலும் அவர் மேல்தட்டு மக்கள் பார்க்கும் திரையரங்கில் படம் பார்த்திருக்கலாம். திரையுலகத்திற்கு உள்ளே இருந்து பார்த்ததால் அவர் கண்களுக்கு அதிக குறைகள் தெரிந்திருக்கலாம். நான் ரசிகர்களோடு அமார்ந்து ரசிகனாகவே படம் பார்த்தேன். நான் பார்த்தவரைக்கும் பொதுமக்கள் படத்தை ரசித்தார்கள், கேட்டவர்கள் நன்றாக இருப்பதாக கூறினார்கள்.

கேபிளின் அரிய புகைப்படம்... உங்கள் பார்வைக்காக...

13. மில்லியன் டாலர் கேள்வி: ஒவ்வொரு பட விமர்சனத்திலும் இருபது முப்பது வசனங்களை தொகுத்து வெளியிடுகிறீர்கள்...? அது எப்படி சாத்தியமாகிறது...?
சில பேர் நான் படத்தின் ஆடியோவை பதிவு செய்வதாகவும், பேப்பர் பேனா வைத்து குறித்துக்கொள்வதாகவும் கருதுகின்றனர். ஆனால் அவை உண்மையல்ல. வசனங்களை முடிந்த வரைக்கும் மனதில் பதியவைத்தே எழுதுகிறேன்.

இதை சோதனை செய்வதற்காக ஒருமுறை பதிவர் நண்டு@நொரண்டு என்னோடு திரையரங்கம் வந்திருந்தார். மேலும் சந்தேகம் இருந்தால் அவரிடம் கேட்டுப் பாருங்கள்.

சூப்பர்ப் சிபி, உங்களுடைய மொக்கைப் படங்கள் பார்க்கும் பிஸி ஷெட்யூலில் எனக்காக நேரம் ஒதுக்கி இந்த பேட்டியை கொடுத்ததற்கு மிக்க நன்றி. உங்கள் பதிவுலக, திரையுலக எதிர்காலம் வெற்றிகரமாக அமைய எனது வாழ்த்துக்கள்.

சிபியுடன் வகுப்பறைத்தோழனை போல நெருங்கிப் பழகிவரும் நான் அவரைப் பற்றி சில வரிகள் சொல்ல விரும்புகிறேன். சிலர் அவர் ஹிட்சுக்காக எழுதுவதாகவும் பதிவெழுதுவதில் addict ஆகிவிட்டதாகவும் குறிப்பிடுகின்றனர். ஹிட்சுக்காக எழுதுவது தவறா என்ன...?
 ஒவ்வொருவரும் ஏதோவொரு அங்கீகாரத்திற்காகவே எழுதுகிறோம். அப்படி இருக்கும்போது உங்களுக்கு அற்பமாக தெரியும் ஹிட்ஸ் அவருக்கு அற்புதமாக தெரிந்திருக்கலாம். அதிலென்ன தவறு இருக்கிறது...? மேலும், addiction, dedication இவை இரண்டிற்கும் உள்ள வேறுப்பாட்டினை புரிந்துக்கொள்ள வேண்டும். அவர் எழுத்துலகிற்கு அடிமையாகி விட்டார் என்று சொல்வதைக் காட்டிலும் அவர் எழுத்துலகிற்காக தன்னை அர்பணித்துக் கொண்டார் என்று சொன்னால் சிறப்பாக இருக்கும்.
நன்றி - ஃபிலாசபி பிரபாகரன் 





டிஸ்கி -1 கேள்வி கேட்கறவங்க பின்னூட்டத்துலயும் கேட்கலாம்,ஆனாநான் பதிலை பின்னூட்டத்துல சொல்ல மாட்டேன் ( அப்புறம் எப்படிபதிவு தேத்த?)
[email protected]  இந்த மெயில்லயுமகேட்கலாம்..முதல் 3 பாகங்கள் தக்‌ஷினாமூர்த்தி வலைப்பதிவிலும், 4 ம் பாகம் தமிழ் வாசி தளத்திலும் வந்தவை

டிஸ்கி 2 - மெயில் அனுப்ப முடியாதவங்க செல் ஃபோன்ல எஸ் எம் எஸ் அனுப்பியோ, கால் பண்ணியோ கேட்கலாம்..( நைட் 8 டூ 9)  அதுக்காக மிஸ்டு கால் விடக்கூடாது ஹி ஹி - 9842713441 ( வெள்ளிக்கிழமை மட்டும் கால் பண்ணாதிங்க  கோயில்லயோ, தியேட்டர்லயோ இருப்பேன் :) 

டிஸ்கி 3  -  இதன் முதல் பாகம் படிக்காதவங்களுக்காக- http://adrasaka.blogspot.com/2012/01/1_31.html


டிஸ்கி 4 -  இதன் 2ம் பாகம் படிக்காதவங்களுக்காக http://adrasaka.blogspot.in/2012/02/2.html


டிஸ்கி 5 - இதன் 3 ம் பாகம் படிக்காதவங்களூக்காக -http://www.adrasaka.com/2012/02/3_29.html


 டிஸ்கி 6 -  இதன் 4 ம் பாகம் படிக்காதவங்களூக்காக http://www.adrasaka.com/2012/04/4.html



டிஸ்கி 7 - இதன்  5 ம் பாகம் படிக்காதவங்களூக்காக  -http://www.adrasaka.com/2012/04/5.html


டிஸ்கி 8.  இதன்  5 ம் பாகம் படிக்காதவங்களூக்காக http://www.adrasaka.com/2012/04/6.html

Tuesday, April 17, 2012

அட்ரா சக்க சி பி எக்ஸ்க்ளூசிவ் பேட்டி பாகம் 6

கவிதை வீதி சௌந்தர்:

1.வலைப்பூவில் தாங்கள் அடைய விரும்பும் எல்லை எது?

  அப்படி எந்த விதமான துரத்தல்களும் எனக்கு இல்லை.. வலை உலகைப் பொறுத்தவரை ஜாக்கிசேகரும், கேபிள் சங்கரும் கமல் ரஜினி போல களத்தில் இருக்கிறார்கள்.. இருவருக்கும் 4 வருடங்களூக்கும் அதிகமான அனுபவம்.. 3 வது இடத்தில் உண்மைத்தமிழன் உள்ளார்.. தமிழ்மண ரேங்க்கை வைத்து சிலர் நான் தான் நெம்பர் ஒன் என தவறாக நினைக்கிறார்கள்.. நான் நெம்பர் 4 தான்.. போதும்.. இதே நிலைமை..


2. காபி டூ பேஸ்ட் பதிவர் என்பதில் தங்களுக்கு ஏதாவது சங்கடம் உண்டா?

     ஹா ஹா ஹா உண்மையை, ஆமா உண்மைன்னு ஒத்துக்க எதுக்கு சங்கடம்?


3. தங்களை அதிகம் கலாய்க்கும் மனோவை என்ன செய்யலாம்?

    கலாய்ப்பதால் தான் அவர் நெருங்கிய நண்பர்.. ஆமாம் சாமி ஜால்ரா அடிச்சா 10 ஓடு 11..


4. பதிவுலகில் ஏதவாது ஒரு பிளாக்கில் பதிவிடச் சொன்னால் யாருடைய பிளாக்கை தேர்ந்தெடுப்பீர்?

      என்னால் யாருக்கும் கெட்ட பெயர் வர வேணாம்னு நானே இன்னொரு பிளாக் ஓப்பன் பண்ணி அதுல பதிவு போடுவேன்.. ஹி ஹி 


5. குடும்பம்-பதிவுலகம்-அலுவலகம்-சென்னிமலை-உறவினர்-பள்ளி நண்பர்கள்-பிள்ளைகள்-சினிமா-விளையாட்டு: இவைகளை வரிசைப்படுத்துங்கள்...

1. அலுவலகம்
2. பதிவுலகம்
3. குடும்பம்

4. சினிமா
5. சென்னிமலை
6. பிள்ளைகள்
7. பள்ளி நண்பர்கள்
8. உறவினர்
9. விளையாட்டு


 ட்வீட் உலகின் கமல்ஹாசன் ரவியுடன் (மன்மதன் அம்பு கமல் ஸ்டில் போல் இருப்பாரே அவர் தான் )


உணவுலகம் - சங்கரலிங்கம்:

அய்யா சின்ன பிள்ள, ஆப்பரேசன் முடிஞ்சு இத்தனை நாள் ஆச்சே, இன்னும் ஏன் கறுப்பு கண்ணாடியைக் கழட்டல?

 அண்ணே. கண்ணாடியை கழட்டிட்டா கூட்டத்துல யாரைப் பார்க்கறோம், எங்கே பார்க்கறோம்னு கரெக்ட்டா தெரிஞ்சிடுது ஹி ஹி - சின்ன வயசுப்புள்ள.


செங்கோவி:

1. போஸ்டரை வைத்தே பிட்டுப் படத்தில் சீன் உண்டா, இல்லையா என்று கண்டுபிடிக்க முடியுமா? அல்லது அதற்கு வேறு ஏதேனும் நல்ல வழிகள் உள்ளனவா?

    அது ரொம்ப சிரமம்னே, ஆனா ஒண்ணு செய்யலாம், தியேட்டர் பைக் பாஸ் போடறவன் கிட்டே கேட்டா தெரிஞ்சுடும், அல்லது படம் விட்டு வெளில வர்ற ரசிகர்கள் கிட்டே ரிசல்ட் கேட்டா தெரிஞ்சிடும். உங்களூக்குத் தெரியாததில்லை.


2. ஷகீலா படப் போஸ்டரை மாடுகள் தின்பதனால் சமூகத்திற்கு விளையும் நன்மை-தீமைகள் என்ன?

   சாரி.. அண்ணே. நாங்க எப்பாவோ ஹன்சிகா மோத்வானி ரசிகர் ஆகிட்டோம். யூத்துய்யா .. நீங்க இன்னும் ஷ்கீலா ஆண்ட்டியையே கட்டிட்டு அழுதா..?


3. விகடனை மட்டும் பதிவிடும் நீங்கள், உங்களது படைப்புகளாக விருந்து/மருதம்/பாக்யாவில் வெளிவந்தவற்றை பதிவிட மறுப்பது ஏன்?

    விகடன்ல தான் ஆன்லைன் ல மேட்டர் வருது. டைப் பண்ற வேலை இல்லை. மற்ற புக் மேட்டர்னா டைப் பண்ணனும்.. - பை நோகாம நோம்பி கும்பிடும் தமிழன்.


4. அருமையாக அரசியல் பதிவுகள் எழுதும் ஆற்றல் இருந்தும் பதிவுலக பாக்கியராஜாக மட்டுமே இருக்க நீங்கள் ஆசைப்படுவது ஏன்?

    முருங்கைக்காய் சாம்பார் வாரம் ஒரு தடவை சாப்பிடுவேன்கறதுக்காக ஏன் அண்ணே அவர் பேரை கெடுக்கறீங்க? அரசியல் பதிவு எழுத தான் 1000 பேர் இருக்காங்களே.. என் நோக்கம் சிரிக்க வைப்பது சிந்திக்க வைப்பது அல்ல. ஹி ஹி.

கோவை ஷேக்கு - கோவை ட்விட்டப்பில் ஃபிகர்கள் இல்லா ஒரு நாயர் ஷாப்பில்

வம்பை வெலைக்கு வாங்குவோம்ல - நா. மணிவண்ணன்


1 . செருப்படி அல்லது வெளக்கமாத்து பூசை வாங்கிய அனுபவம் பற்றி விளக்குக ?( இல்லை அப்படியெல்லாம் இதுவரைக்கும் நடந்ததில்லை என்று பூசி மொளுகினால் அது போன்ற சம்பவம் பல முறை நடந்ததாகவே எடுத்து கொள்ளப்படும் ) 

    யோவ் மணி, உனக்கு ரொம்ப லொள்ளுய்யா.. நெல்லைல கூட பார்த்தே இல்லை.. 37 பேர் கும்முனாங்க.. யாராவது செருப்பால அடிச்சாங்களா? டீசண்ட்டா இருக்கறவன் டீசண்ட்டாத்தான் உதை வாங்குவான். ஹி ஹி 



2 . முதலிரவில் முதலில் என்ன செய்ய வேண்டும் ?( விளக்கை அணைக்க வேண்டுமென்று சினிமா முதலிரவில் காட்சியில் காட்டுவதை கூறக்கூடாது )


      முதல்ல கொஞ்ச நேரம் பேசனும். வேற எதுவும் "செய்யக் கூடாது"


M. காதர்அலி:

1.அண்ணே, நீங்க ஏன்? உயிர் வாழ்றிங்க? 

       இயற்கை படைப்பினில் நான் ஒரு மனிதனாகப் பிறந்ததால்.. வாழும் வரை இந்த சமூகத்திற்கு என்னால் ஏதாவது பயன் தர முடியும் என்ற நம்பிக்கையால்.. 


2 .கில்மா விமர்சனம் எழுத ஷகிலா அக்காட்ட எவ்வளவு வாங்குவிங்க?

     சாரி. 19 வயசு தாண்டுனா அந்த ஃபிகர் அத்தை மகளே ஆனாலும் நான் கண்டுக்கறதில்லை.. அதுக்காக எனக்கு என்ன வயசுன்னு கேட்கக்கூடாது,, விதி விலக்குகள் எனக்கு மட்டும் ஹி ஹி 


3 .ஒரு வாரத்துக்கு எத்தனை copy -paste பண்ணுவீங்க?

     சனி, ஞாயிறு தலா 3 வீதம் 6 போஸ்ட் , அது போக சூடான அரசியல் நியூஸ் வாரம் 1 அல்லது 2 .. 

 பரிசல், ராஜன் உடன் ( ராஜன் நோக்கும் ஃபிகர் மாடி வீட்டு மாளவிகா)



கவி அழகன்:

எனது கேள்வி என்ன்னவென்றால் சி.பி தனியே வலை தளம் எழுதுகிறாரா அல்லது அவரது குடும்ம்பமே எழுதுகின்றதா ( ஆன்மிகம் சமையல் எண்டேல்லாம் படைப்புகள் வரும் போது இவரது பாட்டி மனைவி எல்லாரும் வலைபதிவில் எழுதுகிறார்களோ என்ற சந்தேகம் வருகிறது ) 


       ஹா ஹா .. ஹா நான் என்ன கலைஞரா? குடும்ப அரசியலோ, குடும்ப பதிவோ நடத்த? ஒன் மேன் ஆர்மி தான், ஆனால் குடும்பத்தில் உள்ள அனைவருக்கும் தேவையான மேட்டர்ஸை ஒரு தேனி போல சேகரித்து கொடுக்கும் கமர்ஷியல் கலைஞன்.


நேசன்:

1. அதிகமாகவும் அசத்தலாகவும் பதிவு போடுவது உங்களின் தனித்தன்மை எப்படி உங்களால் பதிவு எழுதும் போது இப்படித்தான் வார்த்தைகளை கையாளனும் என்று தீர்மானிக்கிறீர்கள்?


     ஹா ஹா வார்த்தைகளை நான் கையாளுவதில்லை.. அவை தான் என்னை கையாளுகிறது.. ஒரு சினிமா பார்க்கும்போதே என்னால் முழுமையாக படத்தை ரசிக்க முடிவதில்லை.. படம் திரையில் ஓடும்போதே விமர்சனம் என் மனத்திரையில் ஓடுகிறது எல்லாம் பயிற்சி தான் காரணம்.. 


2. என் போன்றவர்களின் (புதியவர்களின்) பதிவுகளை எப்படி முயன்றும் ஒரு குறிப்பிட்ட நண்பர்களைத் தாண்டி பலரிடம் சேர்க்க முடியாமல் இருக்கிறது இதனை எவ்வாறு தீர்க்கலாம்?

        நல்ல படைப்புகள் கண்டிப்பாக அனைவரையும் சென்றடையும்.. காலம் தீர்மானிக்கும். ஆனால் குறுக்கு வழி ஒன்று உள்ளது.. நீங்கள் 50 பேர் பிளாக் போய் கமெண்ட், ஓட்டு போட்டால் பாதிப்பேராவது வருவாங்க, உங்க பதிவு ஹிட் ஆகிடும்.. ஆனால் இது நிலைக்காது. 


"கற்றது தமிழ்" துஷ்யந்தன்-பிரான்ஸ் :

கொஞ்சம் கஸ்டமான கேள்விதான், இருந்தாலும் பதில் சொல்லுங்களேன்
உங்களுக்கு பிடித்த மிக சிறப்பாக எழுதுகிறார் என்று நினைக்கும் சக பதிவர் யார் ???

       கேள்வி கஷ்டம் தான், ஆனா பதில் ஈசி. இலங்கை அலப்பரை மன்னன் நிரூபன். 




டிஸ்கி -1 கேள்வி கேட்கறவங்க பின்னூட்டத்துலயும் கேட்கலாம்,ஆனாநான் பதிலை பின்னூட்டத்துல சொல்ல மாட்டேன் ( அப்புறம் எப்படிபதிவு தேத்த?)
[email protected]  இந்த மெயில்லயுமகேட்கலாம்..முதல் 3 பாகங்கள் தக்‌ஷினாமூர்த்தி வலைப்பதிவிலும், 4 ம் பாகம் தமிழ் வாசி தளத்திலும் வந்தவை

டிஸ்கி 2 - மெயில் அனுப்ப முடியாதவங்க செல் ஃபோன்ல எஸ் எம் எஸ் அனுப்பியோ, கால் பண்ணியோ கேட்கலாம்..( நைட் 8 டூ 9)  அதுக்காக மிஸ்டு கால் விடக்கூடாது ஹி ஹி - 9842713441 ( வெள்ளிக்கிழமை மட்டும் கால் பண்ணாதிங்க  கோயில்லயோ, தியேட்டர்லயோ இருப்பேன் :) 

டிஸ்கி 3  -  இதன் முதல் பாகம் படிக்காதவங்களுக்காக- http://adrasaka.blogspot.com/2012/01/1_31.html


டிஸ்கி 4 -  இதன் 2ம் பாகம் படிக்காதவங்களுக்காக http://adrasaka.blogspot.in/2012/02/2.html


டிஸ்கி 5 - இதன் 3 ம் பாகம் படிக்காதவங்களூக்காக -http://www.adrasaka.com/2012/02/3_29.html


 டிஸ்கி 6 -  இதன் 4 ம் பாகம் படிக்காதவங்களூக்காக http://www.adrasaka.com/2012/04/4.html



டிஸ்கி 7 - இதன்  5 ம் பாகம் படிக்காதவங்களூக்காக  -http://www.adrasaka.com/2012/04/5.html

Monday, April 09, 2012

அட்ரா சக்க சி பி எக்ஸ்க்ளூசிவ் பேட்டி பாகம் 5


பண்ணிக்குட்டி ராமசாமி:
1. உங்க பாசுக்கு (ஆபீஸ்) நீங்க பண்ணிட்டு இருக்கறது தெரியுமா? தெரிஞ்சா என்ன செய்வீங்க?

ஹி ஹி யோவ் ராஸ்கல் ராம்சாமி.. நான் என்ன கொள்ளை கொலையா பண்றேன்.. ரவுசு..?!கட் அடிச்சுட்டு சினிமாவுக்கு போறதுதானே?ஃபீல்டு ஒர்க்கர்ஸ் செய்யாததையா நான் செஞ்சுட்டேன்?ஆனாலும் தெரிஞ்சா சங்குதான் ஹி ஹி ஆஃபீஸ் மேனேஜர் ஃபோன் நெம்பர் கேட்ட்ராதேயும் அடுத்த கேள்வியா.. ஹி ஹி 





2. உங்க ஸ்கூல் டைம் கேர்ள்பிரண்டை [அதான் முன்னாள் (இப்பவும் முன்னாள்தானே?) காதலி] இப்போ திடீர்னு பார்க்கும் போது, ஏன்டா சிபி இன்னும் நீ திருந்தலியான்னு கேட்டா என்ன பதில் சொல்லுவீங்க?


ஹி ஹி ஹி ஹி அப்டீம்பேன்.....(இதான் சாக்குன்னு டேய்!!! ம் ம் )  


3. பிட்டுப்படம் பார்த்துட்டு இருக்கும் போது பார்க்கக் கூடாத ஆளை எதிரும் புதிருமா சந்திச்சு வழிஞ்ச அனுபவம் இருக்கா? அப்போ எப்படி சமாளிச்சீங்க?

10ஆம் கிளாஸ் படிக்கறப்ப எங்க கிளாஸ் கணக்கு வாத்தியார் அந்த படத்துக்கு வந்துட்டார்.. அவர் பால்கனில நான் பெஞ்ச்ல... என்னை பார்த்துட்டார்னு தான் நினைக்கறேன் ஹி ஹி சமாளீக்க தெரியலை.. 


4. நீங்க இப்படி வாராவாரம் வெள்ளிக்கெழமைன்னா பிட்டுப்படம் பார்க்கறது வீட்ல தெரியுமா?


ஹி ஹி ஹி தெரியாது.. (யோவ்,.. நானும் பொறுமையா பதில் சொல்லிட்டே இருக்கேன், எகனை மொகனை கேள்வியா கேட்டா எப்படி?)


5. திடீர்னு நமீதாவை சந்திக்க நேர்ந்தால் என்ன பேசுவீங்க?

எதுக்கு பேசனும்? ஹி ஹி (அதாவது நடிகைங்க கூட எல்லாம் பேச்சு எதுக்கு? ந்னு அர்த்தம்)


6. நீங்க கிழி கிழின்னு விமர்சனத்துல கிழிச்ச படத்தோட டைரக்டரை சந்திக்க நேர்ந்தால் உங்கள் ரியாக்சன்?

சித்து + 2 பட விமர்சனத்துல கே பாக்யராஜ் சாரை நக்கல் அடிச்சிருந்தேன்.. 18 வருஷமா அவர் பத்திரிக்கைல ஜோக் எழுதிட்டு இப்படி கவுத்துட்டானே என உதவி ஆசிரியரிடம் வருத்தப்பட்டதா எனக்கு தகவல் வந்தது.. ஆனா நேரடியா என் கிட்டே எதுவும் கேட்கல.. 


7.ஹிட்ஸ், ரேங் எல்லாத்தையும் திடீர்னு தூக்கிட்டா உங்களிடம் என்ன மாற்றங்கள் இருக்கும்?

பெரிசா ஒண்ணூம் மாற்றம் வராது.ஹிட்ஸூக்காக நான் அலையறதில்லை.பத்திரிக்கைகளூக்கு ஜோக் எழுதும்போதே மற்றவர்களை விட நாம் தனிச்சு தெரியனும்னு நினைப்பேன்.. எல்லாரும் வாரம் 5 ஜோக் அனுப்பும்போதே நான் 100 ஜோக் அனுப்புனவன்.. அதனால ஹிட்ஸ்,ரேங்க் அதுக்கும், என் பதிவுக்கும் சம்பந்தம் இல்லை.. தமிழ்மணம் மக்கர் பண்ணுன நாட்கள்ள, இண்ட்லி ரிப்பேர் ஆன நேரத்துல கூட என் பதிவு எப்பவும் போல வந்துட்டே தான் இருந்தது.  இருக்கும்..


8. என்னைப் போன்றவர்கள் உங்களை கலாய்க்கும் போது சமய்ங்களில் ஓவராகவும் போய்விடுகின்றது. எப்பொழுதாவது வருத்தப்படும்படி நேர்ந்ததுண்டா?

ஹா ஹா குட் கேள்வி.. நான் செம ஜாலி டைப்.. எதையும் ஜாலியா எடுத்துக்குவேன்.. இருந்தாலும் சில சமயங்களில் நண்பர்களே இப்படி கலாய்க்கறாங்களேன்னு மனம் வருத்தப்படுவேன்.. அவங்களூக்கு பதிலடி குடுக்கலாம்னு நினைப்பேன்.. அப்போ என் மனசாட்சி வந்து தடுத்துடும்.. உன் சுயநலம் முக்கியமா? நட்பு முக்கியமா?ன்னு கேட்கும்.. அதனால நம்ம மனசு புண்பட்டாலும் அடுத்தவங்க மனசு புண்படக்கூடாதுன்னு நினைச்சுக்குவேன்.. 

9. நெல்லை பதிவர் சந்திப்புக்கப்புறம் ஏன் திருந்திட்டீங்க.. இல்ல இல்ல திருந்திட்டேன்னு சொல்றீங்க? இதுக்கு முன்னாடி யாருமே இதுவரை உங்களை திருந்தச் சொல்லலியா?

யோவ்.. விளையாடறீங்களா/ மொத்தம் 37 பேரு.. ஹாலை சாத்திட்டாங்க.. மாத்தி மாத்தி.. 4 மணி நேரம்.. திணறத்த்திணற.. ஹி ஹி அந்த எஃபக்ட் கொஞ்ச நாளாவது இருக்காதா?


10. பதிவு எழுதி அதுனால அடிவாங்கி இருக்கீங்களா? இல்ல வேற தொந்தரவுகள் ஏதாவது வந்திருக்கா?

கனிமொழி - ராசா கிண்டல் அடிச்சு ஒரு ஜோக் போட்டிருந்தேன்.. ஈரோடு தாதா என் கே கே பி ராஜா வோட அடிப்பொடி ஒருவர் ஃபோன் பண்ணி அந்த ஜோக்கை எடுத்துடுன்னாரு,... சரிங்க.. நான் ஆஃபீஸ்ல இருக்கேன்,.. மாலைல வந்து எடுத்துடறேன்னேன்.. ஆனா அவங்க 10 அடியாளுங்களை வீட்டுக்கு அனுப்பி அதை எரேஸ் பண்னாத்தான் போவோம்னாங்க.. அப்புறம் வேற வழி இல்லாம நெட் செண்ட்டர் போய் அந்த ஜோக்கை எரேஸ் பண்ணேன்.. 

11. திரைத்துறையில் நுழைவதற்கு முயற்சி செஞ்சிருக்கீங்களா? இல்ல இனிமே செய்வீங்களா? என்ன பண்ண போறீங்க?

சினிமாத்துறை லட்சியம்.. சின்னத்திரை நிச்சயம்./.... நாளைய இயக்குநர் நிகழ்ச்சில கலந்துக்க ஆசை.. ஆனா அதுல கலந்துக்க 10 படம் எடுக்கனும்.. ஒரு படம் எடுக்க 30,000 செலவு ஆகும், மொத்தம் 3 லட்சம் ஆகும்.. அதுக்கு ஸ்பான்சர் கிடைக்காது கைக்காசு தான் போடனும்.. அதான் திங்க்கிங்க்.. அது போக.. ஏற்கனவே காமெடி ஸ்கிரிப்ட் 3 புது இயக்குநர்களுக்கு எழுதிக்கொடுத்து இருக்கேன்.. ஏமாந்தும் இருக்கேன்.. லெட் சீ.. நாளைய தினம் நமக்காக விடியும் என்று ஏங்கிக்கிடப்பதுதானே படைப்பாளனின் கடமை?



நாற்று - நிரூபன்: 

சிபி அவர்களிடம் இரு வேறுபட்ட கேள்விகளை முன் வைக்கலாம் என நினைக்கிறேன். 



1. நாடறிந்த, சிறந்த ஒரு நகைச்சுவைப் படைப்பாளியாக பத்திரிகை, சஞ்சிகைகள் வாயிலாக இந்தியாவில் மட்டு மன்றி, ஈழத்தின் தமிழக சஞ்சிகை வாசிப்பு வட்ட்டாரத்திற்கும் அறிமுகமான நீங்கள், அப் பத்திரிக்கைத் துறையினை விட்டு, வலைப் பதிவிற்குள் நுழைந்தமைக்கான காரணம் என்ன? ஏன் வலைப் பதிவு எழுத வேண்டும் என்ற எண்ணம் உங்கள் உள்ளத்தில் கருக் கொண்டது? இதனைப் பகிர முடியுமா?


       அடுத்த கட்டம் என்ற ஒரு சுவராஸ்யம் தான்.. இதற்கு அடுத்த கட்டம் என்று ஒன்று இருந்தே தீரும்.. காலத்தின் கைகளில் அந்த மாற்றம் நடந்தே தீரும்.. 





2. முது பெரும் நகைச்சுவைப் படைப்பாளி என்ற அடிப்படையிலும், உங்களின் அனுபவத்தினை அடிப்படையாக வைத்தும் நான் உங்களிடன் எழுப்பும் வினா,
வலைப் பதிவினூடாக ஆக்க இலக்கியங்கள் அல்லது படைப்பிலக்கியங்களின் வளர்ச்சி இன்னும் சில ஆண்டுகளில் எப்படி இருக்கும்? தமிழக இலக்கிய சஞ்சிகைகளுக்கு நிகரான வளர்ச்சியினை இவ் வலைப் பதிவுகளும் எட்டக் கூடிய அல்லது பரந்து பட்ட அளவில் வாசகர்களிடம் சென்று சேரக் கூடிய வழி முறைகள் உருவாகுவது எதிர்காலத்தில் சாத்தியமாகுமா?


     இப்போதே அதன் தாக்கம் அதிகமே.. ஃபிஷர்மேன் ட்வீட் ஏற்படுத்திய தாக்கம் பிரமாதம்.. முன்பெல்லாம் ஒரு படம் ரிலீஸ் ஆனால் அதன் ரிசல்ட் தெரிய 7 நாட்கள் ஆகும், ஆனால் இப்போது நெட்டில் வரும் விமர்சனங்களால் படம் ரிலீஸ் ஆகி 4 மணி நேரத்தில் ரிசல்ட் தெரிகிரது. பட தயாரிப்பாளர்கள் இணைய எழுத்தாளர்கலை மதிக்கிறார்கள்..
இணைய வாசகர்கள் இப்போது சராசரியாக 10000 பேர் தமிழ்நாட்டில் இருக்கிறார்கள்.. இது பல மடங்கு உயரும்,உயரனும்.. 


ஜோஸ்பின் பாபா:

நண்பா, உங்கள் நகைச்சுவை உணர்வின் பின் புலன் என்ன?

   ஒவ்வொரு மனிதரின் வாழ்விலும் சோக சம்பவங்கள் இருக்கும். சிலர் அந்த சோகங்களை மனசுக்குள் வைத்துப்பூட்டிக்கொண்டு மறுகுகிறார்கள்.. சிலர் அதை மறக்க நகைச்சுவை எனும் ஆயுதத்தை கையில் எடுக்கிறார்கள்.. தானும் சிரிக்க மற்ரவர்களை சிரிக்க வைப்பது ஒரு கலை.. அந்த கலையை நான் 12 வது படிக்கும் நிலையிலிருந்து ஆரம்பித்து விட்டேன்..

சார்லி சாப்ளின் கவிதை ஒன்று நினைவு வருது..
"நான் மழையில் நனைய விரும்ப காரணம்
என் கண்ணீர் யாருக்கும் தெரியாமலே போகட்டும் என்று தான்"
நான் நகைச்சுவை மழையில் நனைவதும் மற்றவர்களை நனைய வைப்பதற்கும் அதுவே காரணம். 



மதிசுதா 

1.வணக்கம் சீபி நேரே கேட்பதற்கு மன்னிக்கவும். 
போட்டிகள் பொறாமைகள் நிறைந்த இந்தப் பதிவுலகத்தில் தலைக்கனம் இல்லாத ஒரு மனிதனாக வலம் வரகிறீர்கள். இப்படியான நிலையில் தங்களைச் சுற்றி போடப்பட்ட சதிவலை தங்களை எந்தளவு பாதித்தது ?



ஹா ஹா நேரே கேட்காமல் சைட்ல நின்னா கேக்க முடியும் ( SIDE   NOT SIGHT) 
ஹெட் வெயிட் எனக்கு இல்லாததற்குக் காரணம் நிஜமாகவே என் வீடு சுடுகாட்டின் அருகே தினம் தினம் பிணங்கள் போகும் பாதையில் வீடு அமையப் பெற்ற ஒருவன் வாழ்க்கையின் நிலையில்லாத் தன்மையை எளிதில் புரிந்து கொள்வான். 

அதுவும் இல்லாம நான் ஹேர் கட் மாதம் ஒரு முறை பண்ணிக்குவேன் சோ நோ சான்ஸ் டூ தலைக்கனம். சதி வலைன்னு சொல்ல முடியாது ஆற்றாமை, பொறாமை காரணமாக எழுந்த எதிர்ப்புகள்னு சொல்லலாம். அவற்றை பொறுமை, சகிப்புத்தன்மை என்ற 2 ஆயுதங்கள் மூலம் சமாளீத்தேன். 


2.தங்கள் கருத்துப்படி ஒரு பதிவர் என்பவர் எப்படி இருக்க வேண்டும் ?


     மனிதனாக இருக்க வேண்டும். தன்னால் யாருக்கும் கெடுதல் வரக்கூடாது. ஏதாவது செய்தால் அது மக்களுக்கு யூஸ் ஆகற மாதிரி இருக்கனும்.நமக்குள்ள அடிச்சுக்க கூடாது. சிரிக்க வைக்கும் திறமை இருப்பவர்கள் சிரிக்க வைக்கலாம், சிந்திக்க வைக்கும் திறமை இருப்பவர்கள் விழிப்புணர்வு பதிவுகள் போடலாம்


சூ. மஞ்சு - யாழ் கணினி நூலகம்

1. உங்களை பதிவுலகத்திற்கு வர தூண்டியது எது? அதாவது என்ன நோக்கத்திற்காக காலடி வைத்தீர்கள்? 

 அப்படி  ஒரு நோக்கம் எல்லாம் ஒண்ணூம் இல்லை. நல்ல நேரம் சதீஷ் தான் என்னை இங்கே இட்டாந்தார்.. ஏதாவது திட்டனும்னா அவரை திட்டுங்க ஹி ஹி





   ஆனந்த விகடன் இல் ட்விட்டர் அக்கவுண்ட்டில் போடும் ட்வீட்கள் வலை பாயுதே என வர ஆரம்பித்தது.. பலத்த வரவேற்பை பெற்றது.. அதிலும் புகுந்து பார்த்துடலாம்னு நினைச்சேன். அதே போல் கேபிள் சங்கரின் பிளாக் பற்றிய விமர்சனம் விகடனில் வந்தது.. நாமும் அது போல் வர வைக்கனும் என்ற எண்ணம் மனதில் பிறந்தது..


2. அந்த நோக்கத்தை அடையும் திசையில் உங்கள் பயணம் தொடர்கிறதா? 


ம் .. அப்படித்தான் நினைக்கிறேன். ஆனால் காலம் தான் நல்ல பதில் சொல்லும், கூடவே வாசகர்களும் நண்பர்களூம் தான் சொல்ல வேண்டும்.



டிஸ்கி -1 கேள்வி கேட்கறவங்க பின்னூட்டத்துலயும் கேட்கலாம்,ஆனாநான் பதிலை பின்னூட்டத்துல சொல்ல மாட்டேன் ( அப்புறம் எப்படிபதிவு தேத்த?)
[email protected]  இந்த மெயில்லயுமகேட்கலாம்..முதல் 3 பாகங்கள் தக்‌ஷினாமூர்த்தி வலைப்பதிவிலும், 4, 5 ம் பாகம் தமிழ் வாசி தளத்திலும் வந்தவை

டிஸ்கி 2 - மெயில் அனுப்ப முடியாதவங்க செல் ஃபோன்ல எஸ் எம் எஸ் அனுப்பியோ, கால் பண்ணியோ கேட்கலாம்..( நைட் 8 டூ 9)  அதுக்காக மிஸ்டு கால் விடக்கூடாது ஹி ஹி - 9842713441 ( வெள்ளிக்கிழமை மட்டும் கால் பண்ணாதிங்க  கோயில்லயோ, தியேட்டர்லயோ இருப்பேன் :) 

டிஸ்கி 3  -  இதன் முதல் பாகம் படிக்காதவங்களுக்காக- http://adrasaka.blogspot.com/2012/01/1_31.html


டிஸ்கி 4 -  இதன் 2ம் பாகம் படிக்காதவங்களுக்காக http://adrasaka.blogspot.in/2012/02/2.html


டிஸ்கி 5 - இதன் 3 ம் பாகம் படிக்காதவங்களூக்காக -http://www.adrasaka.com/2012/02/3_29.html


 டிஸ்கி 6 - இதன் 4 ஆம் பாகம் படிக்காதவங்க  http://www.adrasaka.com/2012/04/4.html

Monday, April 02, 2012

அட்ராசக்க சி.பி எக்ஸ்க்ளூ “ஜிவ்” பேட்டி - பாகம் 4


சேட்டைக்காரன்:
1. எல்லாருக்கும் ஒரு நாளைக்கு 24 மணி நேரம்தான். உங்களுக்கு எவ்வளவு மணி நேரம்?

  சேட்டை அண்னே.. எனக்கு உறவினர்களுடன், நண்பர்களுடன் டைம் செலவழிக்கும் பழக்கம் கிடையாது.. ஆஃபீஸ் டைம் 10 மணி நேரம், தூங்கும் டைம் 7 மணி நேரம் போக மீதி 7 மணி நேரத்தில் 5 மணி நேரம் படைப்புக்கள் படைப்பதில் செலவிடுகிறேன்.. சினிமாவுக்கு போனால் கூட முழுசாக படம் பார்ப்பதில்லை.. படத்தில் மொக்கை சீன் ஓடும்போது.. எஸ் எம் எஸ் இல் ஜோக்குகள் டைப் பண்ணி டிராஃப்ட்டில் ஸ்டோர் பண்ணி வைப்பேன்.. எல்லாம் உங்களைப் போன்ற உழைப்பாளிகளீன் அட்வைஸ் படி.. 


தமிழ் வாசி பிரகாஷ்  

2. நீங்கள் வாங்கிய பல்புகளில் (மின்விளக்கு அல்ல) மிக சிறந்த பல்பு எது?

     இதுவரை நான் 1786 தடவை 378 பேர்ட்ட பல்பு வாங்கி இருக்கேன்.. ஆனா என் பொண்ணு கிட்டே வாங்கிய பல்பு தான் நான் வாங்குன பல்புகளீலேயே சிறந்த பல்பு.. அதுக்கான லிங்க்.. http://adrasaka.blogspot.com/2011/01/vs_28.html . ஹி ஹி (  நீதி - தமிழன் கேப் கிடைக்கற பக்கம் எல்லாம் சுய தம்பட்டமும் விளம்பரமும் பண்ணீக்குவான்..)

3. உங்கள் பதிவின் கருத்துரைகளில் மிகச்சிறந்த கருத்துரை இடுபவர் யார்?

          லேப் டாப் மனோவும்,விக்கி தக்களியும் தான் .. ஏன்னா மனோ பதிவை படிக்கவே மாட்டாரு. அருவா வெட்டு,அப்டின்னு கமெண்ட் போடுவாரு. தக்காளி லைட்டா படிப்பாரு ஹி ஹி அப்டினு கமெண்ட் போடுவாரு.. மத்தவங்க எல்லாம் என்னை குறை சொல்வாங்க.. படிச்சுட்டு கருத்து சொல்வாங்க,, என்னை பொறுத்தவரை படிக்காமயே என் பதிவை சூப்பர்னு சொல்றவங்களைத்தான் பிடிக்கும் ஹி ஹி  ( இது சும்மா காமெடிக்கு.. உடனே சிலர் சீறி எழுந்து மன்னிப்பு கேள்னா கேட்டுடுவேன் ஹி ஹி )


4. உங்களுக்கும் தக்காளிக்கும் அடிக்கடி சண்டை வருமாமே, ஏன்? எந்த விஷயத்திற்கு சண்டை வரும்?


             விக்கி  தக்காளிக்கு அடிக்கடி ஃபோன் பண்ணுவேன்.. அப்போ அவரு 
பி ஏ கூட ஏதாவது அஜால் குஜாலா பேசிட்டு இருப்பாரு.. ஃபோனை கட் பண்னாதப்பா.. ஒட்டு கேட்கறேன்பேன்.. ஓக்கேன்னு சொல்லிட்டு முக்கியமான டைம்ல கட் பண்ணிடுவாரு.. ஐ டோண்ட் லைக் இட் ஹி ஹி 


5. நீங்கள் இதுவரை எழுதிய பதிவுகளில் மிகவும் சிரமப்பட்டு அதிக நேரம் செலவழித்து எழுதிய பதிவு எது? ஏன்? (லிங்க் வேண்டும்)

    http://adrasaka.blogspot.com/2011/05/blog-post_11.html பெண் எழுத்து ஒரு பாசிட்டிவ் பார்வை. இந்த பதிவுக்கு சில புள்ளி விபரங்கள் தேவைப்பட்டது. லைப்ரரில போய் கலெக்ட் பண்ணினேன்.. ..ரொம்ப சிரமப்பட்டு கிட்டத்தட்ட 4 மணி நேரம் செலவு பண்ணி ரெடி பண்ணுன பதிவு ஹிட் ஆகலை. ஆனா நான் 16 நிமிடங்களில் ஜஸ்ட் டைப் பண்ணுன 10 ஜோக்ஸ் உள்ள பதிவு சூப்பர் ஹிட் ஆகி இருக்கு.. அந்த மாதிரி வெற்றிகள் எனக்கு வருத்தத்தை தரும். இந்த மாதிரி தோல்விகள் வாசகர்களைப் போய்ச் சேரவில்லையே என்ற வருத்தம் தரும். 


6. எந்த நடிகை வந்து இந்த பேட்டியை உங்களிடம் கேட்டால் நன்றாக இருக்கும் என நினைக்கிறீர்கள்?

      எந்த நடிகையா இருந்தா என்ன? புது முகமா இருக்கனும். வயசு 15 டூ 16 க்குள்ள இருக்கனும். ஹி ஹி . மற்றபடி சிலர் புரளி கிளப்புவது போல் நமீதா, அஞ்சலி,ஹன்சிகா மேல் தனிப்பட்ட அபிமானம் ஏதும் இல்லை... என்னைப்பொறுத்தவரை யாரும் ஃபிகரே யாவரும் கலரே..  ஹி ஹி... 


7. உங்கள் வலைப்பூவுக்கு எத்தனை உதவியாளர்கள் வச்சிருக்கிங்க? எவ்வளவு சம்பளம் கொடுக்கறிங்க?

        ஹா ஹா ஏன் இந்த கொலை வெறி? நான் வெளில இருந்தா என்னால பதிவு போட முடியாத டைம்ல  பிளாக் பாஸ்வோர்டு குடுத்து யாரையாவது ஃபிரண்டை பதிவு போட சொல்லிடுவேன்.. ஆல்ரெடி டிராஃப்ட்ல 50 பதிவு டூ 60 ரெடியா வெச்சிருப்பேன்.. சம்பளம் எல்லாம் கிடையாது..  என் கிட்டே 800 டிவிடி இருக்கு.. அதுல 10 டிவிடி கிஃப்ட்..


8. உங்கள் வலைப்பூவை டாட் காமாக (dot com) ஆக மாற்றும் எண்ணம் உள்ளதா?

       நான் எப்பவும் காம் டைப் கிடையாது.. கல கல டைப்.. என் பிளாக் மட்டும் ஏன் காம் அதாவது டாட் காம் ஆக இருக்கனும்? அதுவும் இல்லாம மாசம் ரூ 500 பணம் தரனுமாமே?
அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்,அந்தளவு நான் ஒர்த் இல்லைங்க.. 

( ஆனா இப்போ வேற சில காரணங்களூக்காக டாட் காம் மாறிட்டேன்.. ஹி ஹி ) 




9. பதிவுலகில் உங்களுக்கு போட்டியாக யாரை நினைக்கிறீர்கள்?

        ஹா ஹா எழுத வந்ததே ஒரு ஜாலிக்காகத்தான்.. இதுல போட்டியாவது ஒண்ணாவது.. ஆனா இவங்க அளவுக்கு எனக்கு திறமை இல்லையேன்னு சிலரை மனசுக்குள்ள நினைச்சிருக்கேன்.

  1. குசும்பன் 2. சேட்டைக்காரன் 3 ராம்சாமி 4. பட்டாபட்டி 5 . ஜோதிஜி திருப்பூர்..6  . ம தி சுதா    என நீளும் பட்டியல்கள்.... 


10. வலைப்பூவை பற்றி, உங்கள் பதிவுகளை பற்றி நீங்கள் உங்கள் குடும்பத்தாரிடம் பகிர்ந்து கொள்வீர்களா?

       பொதுவா ஒரு படைப்பாளிக்கு அங்கீகாரம் தான் முக்கியம்.. முகம் தெரியாத நண்பர்கள் பாராட்டும்போது மகிழ்ச்சியா இருந்தாலும் நம்ம குடும்பம் நம்மளை புரிஞ்சிக்கிட்டா சந்தோஷம் ,ஆனா எனக்கு அந்த சந்தோஷம் இல்லை.. ஏன்னா இதெல்லாம் வேலையத்த வேலைன்னு சொல்வாங்க.. குடும்பத்தை கவனிச்சா போதும்பாங்க.. ஆனா எங்கம்மா, அப்பா கிட்டே ஷேர் பண்ணும்போது சந்தோஷப்படுவாங்க.. ஆனா அதிலயும் ஒரு பிராப்ளம்.. அப்பா இறந்துட்டாரு.. நமக்கு யார் ஆதரவா ,பாசமா இருக்காங்களோ அவங்களை இழந்துடறது தான் மனிதனோட தலை விதி.


11. BLOGGER இல் இன்னும் என்னென்ன வசதிகள் இருந்தால் வலைப்பூவிற்கு எளிதாக இருக்கும் என நினைக்கிறீர்கள்?

     திரட்டிகளிடம் இணைப்பது ரொம்ப சிரமமா இருக்கு.. ஆட்டோமேட்டிக்கா இணைஞ்சா நல்லாருக்கும் ( நோகாம நோம்பி..!!!!!!!!!!!)


12. இனி வரும் காலத்தில் வலைப்பூவின் வளர்ச்சி நன்மையாக இருக்குமா? தீமையாக இருக்குமா?

        வலைப்பூவின் வளர்ச்சி பிரம்மாண்டமாக வளரும் என்பது காலத்தின் கட்டாயம்.. சமுதாய மாற்றத்துக்கு மீடியா எப்படி முக்கியப்பங்கு வகிக்குதோ அதே அளவு பிளாக்கும் அசுர வளர்ச்சி பெறும்.. 



டிஸ்கி -1 கேள்வி கேட்கறவங்க பின்னூட்டத்துலயும் கேட்கலாம்,ஆனாநான் பதிலை பின்னூட்டத்துல சொல்ல மாட்டேன் ( அப்புறம் எப்படிபதிவு தேத்த?)
[email protected]  இந்த மெயில்லயுமகேட்கலாம்..முதல் 3 பாகங்கள் தக்‌ஷினாமூர்த்தி வலைப்பதிவிலும், 4 ம் பாகம் தமிழ் வாசி தளத்திலும் வந்தவை

டிஸ்கி 2 - மெயில் அனுப்ப முடியாதவங்க செல் ஃபோன்ல எஸ் எம் எஸ் அனுப்பியோ, கால் பண்ணியோ கேட்கலாம்..( நைட் 8 டூ 9)  அதுக்காக மிஸ்டு கால் விடக்கூடாது ஹி ஹி - 9842713441 ( வெள்ளிக்கிழமை மட்டும் கால் பண்ணாதிங்க  கோயில்லயோ, தியேட்டர்லயோ இருப்பேன் :) 

டிஸ்கி 3  -  இதன் முதல் பாகம் படிக்காதவங்களுக்காக- http://adrasaka.blogspot.com/2012/01/1_31.html


டிஸ்கி 4 -  இதன் 2ம் பாகம் படிக்காதவங்களுக்காக http://adrasaka.blogspot.in/2012/02/2.html


டிஸ்கி 5 - இதன் 3 ம் பாகம் படிக்காதவங்களூக்காக -http://www.adrasaka.com/2012/02/3_29.html
 
 

Wednesday, February 29, 2012

ஃபிகர் என்ற வார்த்தையை ஒய் ரிப்பீட்டிங்க்? - அட்ரா சக்க சி பி பதில்கள் பாகம் 3

http://www.cineikons.com/wp-content/uploads/2012/01/kajal-agarwal-stills-085.jpg
26.   நீங்க இது வரை விட வேண்டும் என்று நினைத்து விட முடியாத

 கெட்ட பழக்கம் எது? (ஒண்ணு சொல்லுங்க போதும்) - சுதா, பெங்களூர்



 எனக்கு என்னவோ 75 கெட்ட பழக்கம் இருக்கற மாதிரியும், அதுல ஏதோ 

ஒண்ணு சொல்லுங்கன்னு கேட்கற மாதிரியும் இருக்கே? உலகத்துக்கே 

தெரியும் எனக்கு சிகரெட், தண்ணி (சரக்கு), காஃபி, டீ, அசைவம் என எந்த கெட்ட

 பழக்கமும் இல்லைன்னு.. என் கிட்டே இருக்கற ஒரே கெட்ட பழக்கமா அம்மா 

, அப்பா சொல்றது சினிமா ஒண்ணு விடாம பார்க்கும் ஆளா

 இருக்கான்கறதுதான்.. அதனால ஒண்ணும் பிரச்சனை இல்லை.. ஒவ்வொரு

 மனிதனுக்கும் ஒரு ரிலாக்ஸ் வேணும், அதுன் எனக்கு சினிமாவா இருந்துட்டு

 போகுது.. இப்போ என்ன?

----------------------------------



27.  நாளுக்கு இரண்டு பதிவு வீதம் பதிவு போடுறீங்களே, உங்கள் பதிவை 

நீங்கள் திரும்ப படிச்சு பார்க்க நேரம் இருக்கா ?         



 நான் போக்கிரி விஜய் மாதிரி, ஒரு தடவை போஸ்ட் பொட்டுட்டா என்

 போஸ்ட்டை நானே படிக்க மாட்டேன்.. ( ஏன்னா ஆல்ரெடி 3 தடவை படிச்சு

 பார்த்துட்டு, மிஸ்டேக் எல்லாம் கரெக்ட் பண்ணிட்டுதானே  பப்ளீஷ் 

பண்றேன்?)


-----------------------------------------

28. டிவிட்டில் சிலசமயம் சிலரை அளவுக்கு அதிகமா கிண்டல் செய்து அவங்க

 பீல் செய்தா காணமல் போயிடுறீங்க ?உங்க ஆக்சுவல் ரியாக்சன் என்ன?      


    

எனக்கு கிடைக்கற நேரம் ரொம்ப கொஞ்சம்.. கேப் கிடைச்சா 5 ட்வீட்

 போட்டுட்டு போயிடுவேன்.. அந்த கேப்ல என்னை காணாதவங்க கிசு கிசு

 பரப்புவாங்க .. பிரச்சனைன்னா ஓடிடறான் .. ஆண்கள் கேள்வி கேட்டா பதில் 

சொல்றதில்லைன்னு.. இவங்களா கிளப்பி விடறதுதான்.. ஆனா சில சமயம்

 குறிப்பிட்ட பெண் பதிவர்களை நகைச்சுவையா கிண்டல் செயுய்யறப்ப அது

 ஓவர் டோஸ் ஆகி அவங்க மனம் வருத்தப்பட்ட சம்பவங்கள் உண்டு, என் 

மேல் தப்பு இருந்தா டைம் லைனில், டி எம்மில் மன்னிப்பு கேட்க 


தயங்கியதில்லை.. 

-------------------------------------------



     29. சில கீச்சர்கள் பற்றி கற்பனை பதிவு போட்டீங்களே,கொஞ்சம் வரம்பு 

மீறியதா தோணலையா ? by @jroldmonk  




ஆமா, கோவை, சிங்கப்பூர் ட்வீட்டர்களை பற்றி தலா ஒரு பதிவு போட்டேன்.

. 2ம் காமெடிக்காகத்தான்.. ஆனால் அதில் ஒரு பதிவு தங்கள் குடும்பத்தை

 மனம் வருத்தம் செய்ய வைத்து விட்டது என்று அந்த ட்விட்டர் சொன்னதும்


அந்த பதிவை அகற்றி விட்டேன்.. 

--------------------------------------------


30.  புதியதாக பதிவு எழுத வருபவர்களுக்கு தங்களின் அட்வைஸ்? :- By

 @Prabhu_B         


நிறைய படியுங்க.. நீங்க ஒரு போஸ்ட் போடனும்னா 10 போஸ்ட் 

படிச்சிருக்கனும்.. நீங்க 10 பேர்க்கு போய் படிச்சு கமெண்ட் போட்டு , ஓட்டு 

போட்டுட்டு வந்தாத்தான் அதுல பாதிப்பேராவது உங்க பதிவுக்கு வருவாங்க.

. அதாவது நீங்க உங்க வீட்டு விஷேஷத்துக்கு மொய் வரனும்னு நினைச்சா

 ஆல்ரெடி நீங்க மொய் வெச்சிருக்கனும்.. எழுதுவது எல்லாருக்கும் 

உபயோகமாக இருக்கனும், மனம் களிக்கும்படி இருக்கனும், மற்றவங்க முகம் 

சுளிக்கும்படி இருக்கக்கூடாது

----------------------------------------



31. இந்த தீராத கலைதாகம்(!) உங்களுக்கு எப்டி,எப்பருந்து வந்துச்சு...? உங்க

 இன்ஸ்பிரேஷன் யாரு?  by @siva_says 



 நான் எப்பவும் வெய்யில்லயே சுத்திட்டு இருப்பேன், ஏன்னா என் வேலை

 அப்படி , வெளீல அலையற வேலை.. அதனால வீட்டுக்கு வந்ததும் செம தாகம்

 எடுக்கும். கொஞ்சம் தண்ணீர் குடிச்சுட்டு போஸ்ட் போட ரெடி ஆகிடுவேன் 


 ( ஏய்யா கேள்விக்கு இடைல ஆச்சரியக்குறி போட்டுட்டா கலாய்க்கறதா


 ஆகிடுமா?)





எனக்கு இன்ஸ்பிரேஷன் சேட்டைக்காரன், குசும்பன்,பன்னிக்குட்டி

 ராம்சாமி,சிரிப்புப்போலீஸ் உட்பட நகைச்சுவையா யார் எல்லாம்

 எழுதறாங்களோ அவங்க எல்லாம்..

 ( இப்போ லேட்டஸ்ட் ஹிட்டர் கட்டதுர கூட எனக்கு இன்ஸ்பிரெஷன் தான்.. )


-------------------------------------




 32.  உங்களை ஃபிகர் என்று அழைக்கலாமா??    By @RealBeenu         



 ஒரு ஃபிகரே என்னை ஃபிகர் என்று அழைக்குதே அடடே..!! 

 ஹலோ.. பொதுவா பொண்ணுங்க  திட்டுனாலே நாங்க சிரிப்போம், 

பாராட்டுனா கேட்கவா வேணூம்.. நீங்க என்னை செம கட்டை, சூப்பர் ஃபிகர் 

இப்படி எப்படி கூப்பிட்டாலும் கோபமே பட மாட்டேன்.. ஏன்னா நாங்க 

நல்லவ்ங்கங்க ங்க 


--------------------------------------------




33. மென்ஷன்களுக்கு இப்போதெல்லாம்  பதில் போடுவதில்லை ஏன் ?       

                       .சிலரிடம் மட்டும் பேசுகிறீர் அது ஏன் ? காரணம் ?   By @soniaarun     

      

மென்ஷன் பார்க்கவே கொஞ்ச நாளாத்தான் கத்துக்கிட்டு இருக்கேன்.. இனி முடிஞ்ச வரை போடறேன்.. எனக்கு டைம் ரொம்ப கம்மி.. இருக்கற கொஞ்ச நேரத்துல ட்வீட்ஸ் போடனும், பிளாக் போஸ்ட் போடனும், கமெண்ட்க்கு ரிப்ளை போடனும், மொய் வைக்கனும்( பிளாக்ல) 

சிலர்ட்ட மட்டும் பேசறேன்னா - யார் நம்ம வேவ் லெங்க்த்க்கு செட் ஆகறாங்களோ அவங்க கூட பேசறேன்.. இப்போ உங்களை என்ன திட்டுனாலும் உங்களூக்கு கோபம் வராது.. கலாய்ச்ச்சாலும் ஜாலியா எடுத்துக்குவீங்க, சீரியஸ் ஆக மாட்டீங்கன்னா உங்க கிட்டே பேசுவேன்.. வீட்டை விட்டு வெளீல வர்றப்பவே சண்டைக்கு தயாரா வாளோட வந்தா..? ( வாள் பொண்ணை சொல்லலை.. )

-------------------------------------------

34. பிகர் , கில்மா என்ற வார்த்தைகள் தான் உங்களுக்கு அதிகம் பிடித்த வார்த்தைகளா?

கூகுள் சர்ச்ல மக்களால அதிகம் தேடப்படும் வார்த்தைகள் என்ன?னு ஒரு கணக்கெடுத்தேன். அதுல நாகரீகமான வார்த்தைகள் இந்த ரெண்டும் தான்.. இந்த வார்த்தைகலை என் பிளாக்ல  ட்வீட்ஸ் ல அதிகம் பயன் படுத்தறப்போ கூகுள் சர்ச்ல என் பிளாக் தட்டுப்படும் , அது ஒரு மார்க்கெட்டிங்க் டெக்னிக் வேற ஒண்ணும் இல்லை  

-------------------------------

35.    டைம் லைனில் ஒருவர் போடும்  ட்வீட்டை வைத்தே பல ட்வீட் போடுகிறீரே அது எப்படி ? ஏன் இப்படி எல்லாரையும் கலாய்க்கிறீங்க, அதுவும் மென்ஷன்  போடாமலேயே ?     

சொந்தமா சரக்கு இருக்கறவன் வந்தமா ட்வீட்ஸ் போட்டமா போனோமான்னு போயிடுவான், இல்லாதவன் மற்றவங்க போடற ட்வீட்ஸ்ல இருந்து ஒண்ணு புதுசா உருவாக்குவான்  ரீமிக்ஸோ டெக்னாலஜின்னு அதுக்கு பேரு ஹி ஹி 

 மென்ஷன் போட்டு கலாய்ச்சா சண்டை வந்துடும். பொதுவா சொன்னா யாரும் கேட்க மாட்டாங்க, கேட்டாலும் எஸ் ஆகிடலாம்.. நாங்க எல்லாம் அட்டாக் பண்றப்பவே ஓடறதுக்கு ரோடு எங்கே இருக்குன்னு பார்க்கற ஆளுங்க ஹி ஹி 


-  தொடரும் 


http://searchandhra.com/english/wp-content/uploads/2009/11/Kajal-Agarwal-Photo-Gallery-1-48.jpg


டிஸ்கி -1 கேள்வி கேட்கறவங்க பின்னூட்டத்துலயும் கேட்கலாம்,ஆனாநான் பதிலை பின்னூட்டத்துல சொல்ல மாட்டேன் ( அப்புறம் எப்படிபதிவு தேத்த?)
[email protected]  இந்த மெயில்லயுமகேட்கலாம்..

டிஸ்கி 2 - மெயில் அனுப்ப முடியாதவங்க செல் ஃபோன்ல எஸ் எம் எஸ் அனுப்பியோ, கால் பண்ணியோ கேட்கலாம்..( நைட் 8 டூ 9)  அதுக்காக மிஸ்டு கால் விடக்கூடாது ஹி ஹி - 9842713441 ( வெள்ளிக்கிழமை மட்டும் கால் பண்ணாதிங்க  கோயில்லயோ, தியேட்டர்லயோ இருப்பேன் :) 

டிஸ்கி 3  -  இதன் முதல் பாகம் படிக்காதவங்களுக்காக- http://adrasaka.blogspot.com/2012/01/1_31.html


டிஸ்கி 4 -  இதன் 2ம் பாகம் படிக்காதவங்களுக்காக http://adrasaka.blogspot.in/2012/02/2.html