Showing posts with label கட்டுரை. Show all posts
Showing posts with label கட்டுரை. Show all posts

Wednesday, February 22, 2012

ஓ பக்கங்கள் ஞானியை, கலாய்த்த ஓஹோ பக்கங்கள் விஞ்ஞாநி சாருவை கலாய்க்கும் அஞ்ஞானி குமாரு

http://charuonline.com/blog/wp-content/uploads/sujatha-300x236.jpg 

ஞாநிக்கு பதில் எழுதுவதாகச் சொன்னீர்களே?  ஏன் இன்னும் எழுதவில்லை?” என்று கேட்டு பல கடிதங்கள் வந்துள்ளன.  ஊர் ரெண்டு பட்டா… என்ற பழமொழி தான் ஞாபகம் வந்தது.  ஞாநி பத்து நிமிஷத்தில் குற்றச்சாட்டுகளை அடுக்கி விட்டுப் போய் விட்டார்.  அதற்கு பதில் எழுதப் புகுந்தால் நான்கு ஐந்து மணி நேரம் ஆகும் போல் இருக்கிறது.  ”சாருவுக்கும் எனக்கும் ஒரே வயது” என்றார் ஞாநி.  அது மட்டும் அல்ல; அதை நிறுவுவதற்காக ”சாருவுக்கும் பைபாஸ் ஸர்ஜரி நடந்துள்ளது; எனக்கும் ஆஞ்ஜியோ நடந்துள்ளது; இதோ இந்த வாரம் இன்னொரு ஸர்ஜரி நடக்க உள்ளது” என்று பல உதாரணங்களையும் அடுக்கினார்.   இந்த ஒரு வசைக்கு பதில் சொல்லவே பத்து பக்கங்கள் எழுத வேண்டும் போல் இருக்கிறது.    ஸர்ட்டிஃபிகேட் பிரகாரம் அவருக்கும் எனக்கும் ஒரே வயதுதான்.  ஆனால்?  இந்த ஆனாலுக்குத்தான் பத்து பக்கங்கள் எழுத வேண்டும்.


சி.பி - சாருவுக்கு மனசுக்குள்ள இன்னும் சின்னப்பாப்பான்னே நினப்பு..  டீச்சர், இவன் என்னை கிள்ளிட்டான்.. அவன் என்னை அடிச்சுட்டான்.. 

சீனி கம் படம் பார்த்திருக்கிறீர்களா? 


சி.பி - இல்லண்ணே, சீன் படமா? அது?



 அதில் அமிதாப் பச்சன் 64 வயது இளைஞனாக வருவார்.  ஆம்; இளைஞன்.  தபுவுக்கு 34 வயது.  இரண்டு பேருக்கும் காதல்.  அமிதாப் லண்டனில் வசிப்பவர்.    தபுவின் அப்பாவிடம் தங்கள் காதலைச் சொல்லி சம்மதம் கேட்கலாம் என்ற எண்ணத்தில் இந்தியா வருகிறார்.  தபுவின் அப்பா ஓம் பிரகாஷுக்கு அமிதாபை விட 6 வயது கம்மி.  ஆனால் அமிதாபைப் பார்த்ததும் அவர் 90 வயதான இரண்டு கிழவர்கள் சந்தித்துக் கொண்டதைப் போல் பேசுவார்.  என்ன ஜி, வாக்கிங் எல்லாம் போகிறீர்களா?  வயசாகிப் போச்சு… நம்ம வயசுல வாக்கிங் போயே ஆகணும்… இல்லேன்னா கொலஸ்ட்ரால், ஷுகர், ஹார்ட் ப்ராப்ளம்…  இப்போவே பாருங்க… உங்க கிட்ட பேசும் போதே மூச்சு இரைக்குது…  நீங்க என்ன விட 6 வயசு மூத்தவர்னு நீனா (தபு) சொன்னா…  ரொம்ப ஜாக்கிரதையா இருக்கோணும்…  இல்லேன்னா அவ்ளோதான்…  சரி, என்ன குடிக்கிறீங்க… டீ தானே?  சீனி கம்?  நான்லாம் சீனியே போட்டுக்கிறது இல்லே…  நேத்து தான் ஆஞ்ஜியோ டெஸ்ட் பண்ணினேன்…  ஒரே ஒரு இடத்துல ப்ளாக் இருக்கு… ஓவர் கொலஸ்ட்ரால்…  நீங்களும் அப்பொப்போ டெஸ்ட் பண்ணிடுங்க…  வாரீஹளா.. நாளைக்கு ஃபுல் பாடி செக்கப்புக்கு அழைச்சுக்கிட்டுப் போறேன்…?


 சி.பி - ஆஹா, படம் செமயான தீம் போல... பார்த்துடவேண்டியதுதான்..


தபுவைப் பெண் கேட்க வந்த அமிதாபுக்கு எப்படி இருந்திருக்கும் என்று யோசித்துப் பாருங்கள்…


சி.பி - எக்சைல் நாவலை படிச்ச மாதிரி சப்புன்னு இருந்திருக்கும்.. ஹி ஹி 

  ஓம் பிரகாஷ் ஒரு சராசரி இந்தியனின் பிரதிநிதி.  ஞாநி தன் வயதையும் என் வயதையும் ஒப்பிட்டு மூச்சு வாங்க மூச்சு வாங்கப் பேசிய போது எனக்கு அச்சு அசல் ஓம் பிரகாஷ் கேரக்டரைப் பார்ப்பது போலவே இருந்தது.  சான்ஸே இல்லை.  என்ன ஒற்றுமை!!!



சி.பி -  உங்க 2 பேருக்கும் ஒரே குறைங்கற ஆதங்கத்துல தெரியாம சொல்லிட்டார்.. விடுங்க்ணா.. கூல்


என்னுடைய நண்பர்கள் அத்தனை பேரும் 30 வயதைத் தாண்டாதவர்கள். 


சி.பி - அண்ணன் கொள்கை எனக்கு பிடிச்சிருக்கு.. தாத்தா ஆனாலும் அண்ணனோட சிநேகம் எல்லாம் யூத்துங்க கூடத்தான்.. ஹி ஹி 



 ஒரு நண்பனோடு பெங்களூர் ஹிண்ட் பப்பில் இரவு 12 மணி வரை குடித்து விட்டு, அறைக்கு வந்து அங்கேயும் குடித்து விட்டு காலை நான்கு மணி அளவில் படுத்தேன். 


சி.பி - கேப்டனையே மிஞ்சிடுவீங்க போல, உங்களுக்கு அரசியல்லயும் நல்ல எதிர்காலம் இருக்குங்க்ணா.. ஏன்னா குடியும் ,கூத்தியும் வெச்சிருக்கிறவங்க தான் அரசியல்ல ஷைன் பண்றாங்க.. 

https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjf_XPAyv6WfA1kK9tYrOQVVCanCajiO06CIa_dH0SO0vpgsw3fzVud-11Y0ncbKZqhFFIlsVB40or0S3lUyNh4QTSiU11SGTxdWl1XVEFbKAsNelH1j2rxwW7DrbbX-mhmxdf81nktTv-M/s320/charu+zero3.JPG



 காலையில் ஏழு மணிக்கு எழுந்து எக்ஸைல் நாவலை கர்ம சிரத்தையாக எழுதிக் கொண்டிருந்தேன். 

சி.பி - காலங்காத்தால ஒரு வேலை இல்லாம ஒரு மொக்கை நாவல் எழுதும் ஹோமோ மன்னவனே.. என்ன நாவல்? அது என்ன நாவல்? ஓஹோஹோ.. 



  நண்பன் 12 மணிக்கு எழுந்து வாந்தி எடுத்தான். 

சி.பி - சரக்கு அடிச்சா வாந்திதான் எடுப்பான், பின்னே வாய்ல இருந்து லிங்கமா எடுப்பான்? அவன் என்ன நித்யானந்தாவா?



 நண்பனுக்கு வயது 28.  இதையும் எக்ஸைலில் எழுதி இருக்கிறேன்.  வாசகர் வட்டக் கூட்டங்களில் நான் நண்பர்களுடன் காலை நான்கு மணி வரை நடனம் ஆடுவது சர்வ சகஜம். 


 சி.பி - உங்களைப்போன்ற நல்ல மனிதர்கள் தான் எதிர்கால இந்தியாவை வழி நடத்தி செல்ல வேண்டும்.. உங்களின் 2 லட்சம் ரசிகர்களுக்கு என் வாழ்த்துகள்

 இதை விடுங்கள்.  பைபாஸ் ஸர்ஜரி என்னிடமிருந்து பணத்தைப் பிடுங்குவதற்காக அந்த மருத்துவமனை செய்த காரியம்.  வெறும் மருந்து மூலமாகவே குறைக்கக் கூடியதாகவே இருந்தது என்று அதற்குப் பின் பல மருத்துவர்கள் அபிப்பிராயப் பட்டனர். 



சி.பி - லேட் பிக்கப் லத்திகாண்ணே நீங்க.. நித்யானந்தாவை பற்றி   ஆஹா ஓஹோ பேஷ் பேஷ்னு சொன்னது இதே வாய் தான்.. அப்புறம் அபாயம் போகாதேன்னு லேட்டா சொல்லுச்சு.. ஏண்ணே.. இப்படி?

 தவிர, இதுவரை நான் அந்த வலி, இந்த வலி, ஜூரம் என்றெல்லாம் படுத்ததே இல்லை. 


 சி.பி - ஓஹோ , வலி வந்தா உக்காந்துக்குவீங்களா? சிட்டிங்க் ரைட்டர் கம் சீட்டிங்க் ரைட்டர்?


 கடந்த பத்து ஆண்டுகளில் ஒரே ஒரு முறைதான் படுத்திருக்கிறேன். 


 சி.பி - ஹி ஹி ஹி ஹி நாங்க நம்ப மாட்டோம்..

 நான் யாருக்கு ஃபோன் செய்தாலும் அவருக்கு உடல்நலம் இல்லை என்கிறார்கள்.  கடந்த பத்து ஆண்டுகளில் நான் ஒரே ஒருமுறை தான் சொல்லி இருக்கிறேன்.  இது என் நண்பர்களுக்குத் தெரியும்.  என்னிடம் பணம் இல்லை.  ஆனால் இந்த ஆரோக்கியத்தை வழங்கிய இறைவனுக்கு நன்றி.



சி.பி - ஹூம், ஆண்டவனை நினைச்சாத்தான் எனக்கு பாவமா இருக்கு, அவரும் தான் பாவம் எத்தனை பாவிங்களை கவனிப்பாரு?

ஆனால் இந்த ஆரோக்கியத்தைப் பேணுவது எப்படி என்று நாளொரு தினமும் எழுதிக் கொண்டு வருகிறேன்.  எக்ஸைல் நாவலில் பல பக்கங்களில் இந்த விபரம் உண்டு.  இதை சிரத்தையாகப் பின்பற்றினால் நீங்களும் 90 வயதில் துள்ளிக் குதிக்கலாம்.  நம் சித்தர்கள் சொல்லிக் கொடுத்த அற்புதம் இது.


சி.பி - அட.. ஆமாம்.. நீங்க கூட சித்தர்கள் ராஜ்ஜியம் பிளாக்ல நிறைய  படிச்சேன்னு ரீல் விட்டீங்களே..?


என் உடம்பு ஒன்றும் இரும்பால் செய்தது அல்ல.  ஆனால் நான் பின்பற்றும் சில வழிமுறைகளால் அப்படி இரும்பாக்கி வைத்திருக்கிறேன். 


சி.பி - இரும்படிக்கற இடத்துல ஈக்கு என்ன வேலை?உங்க உடம்பு இரும்புன்னா ஏண்ணே ஹாஸ்பிடல் எல்லாம் போறீங்க? ஹி ஹி  மெக்கானிக் ஷாப்ல போய் சர்வீஸ்க்கு விடலாமே?




 தினமும் காலையில் நாகேஸ்வர ராவ் பூங்காவில் 5 கி.மீ. தூரத்தை 35 இலிருந்து 40 நிமிட நேரத்தில் நடந்து முடிக்கிறேன்.  நான் குடி கூட இல்லாமல் வாழ்ந்து விடுவேன்.  ஆனால் காஃபிக்கு அப்படி ஒரு அடிமை. 


சி.பி - காஃபிக்கு நான் அடிமை.. கிடச்ச சூஃபிக்கு நான் அடிமை.. 



 காலையில் எழுந்ததும் ஃபில்டர் காப்பி குடித்தே ஆக வேண்டும். 

சி.பி - அண்ணே, நீங்க எந்தக்காலத்துல காலைல எந்திரிச்சிருக்கீங்க? மட்டையாகி விடிகாலைலதான் தூங்குவேன், மதியம் 12 மணீக்குதான் எந்திரிப்பேன்னு நீங்கதானே சொன்னீங்க?



 ஆனால் மூன்று ஆண்டுகளாக காலை காப்பியை விட்டு விட்டேன்.  அர்க் தான் குடிக்கிறேன்.  அர்க் என்பது பசு மாட்டின் மூத்திரத்தை distill செய்தது. 

சி.பி - இலக்கிய உலகின் ராஜாஜியே!! நீர் வாழி!

 https://www.nhm.in/img/978-81-8493-204-1_b.jpg

 தண்ணீர் கலக்காமல் குடித்தால் நாக்கு வெந்து விடும்.  நாற்றத்தில் குமட்டல் வந்து விடும்.  நாலரை மணிக்குக் குடிப்பேன்.  ஏழரைக்கு எழுந்து வரும் அவந்திகாவுக்கு அப்போதும் அறையில் பரவி இருக்கும் மூத்திர நாற்றம் குமட்டல் வருகிறது என்று சொன்னதால், எக்ஸாஸ்ட் ஃபேனைப் போட்டு விட்டுக் குடிக்கிறேன்.  அவந்திகாவிடமிருந்து பாராட்டு பெறுவது ரொம்பக் கஷ்டம்.  அதுவும் நான் என்றால் ரொம்ப ரொம்பக் கஷ்டம்.  அப்படிப்பட்ட அவளே ஒருநாள் நான் இரவில் அர்க் குடிப்பதைப் பார்த்து விட்டு “உன்னைப் போல் சகிப்புத் தன்மை கொண்டவர்களைப் பார்ப்பது கடினம்” என்றாள். 

சி.பி - உங்க நாவலை எல்லாம் ரெகுலரா படிக்கற உங்க வாசகர்கள் தான் சகிப்புத்தன்மை உள்ளவங்கன்னு நினைக்கறேன்.. 



 அர்க் குடித்த அன்று காக்டெய்ல் சாப்பிடுவதில்லை.  சாப்பிட்டால் அர்க் வேலை செய்யாது.

 சி.பி - ஓஹோ.. அர்க் ஜெர்க் ஆகிடுமா?

அது மட்டும் அல்ல; அர்க் குடித்தால் அதற்குப் பிறகு ஒரு மணி நேரத்துக்குத் தண்ணீர் கூட குடிக்கக் கூடாது.  அர்க் குடித்து விட்டு, நடக்கப் போய் விட்டால் அப்போது ஒரு தாகம் எடுக்கும் பாருங்கள்… கொடுமை.  எதற்கு இவ்வளவு பாடு?  உடம்பு இரும்பைப் போல் இருக்க வேண்டும்.  நோய் நொடி வரக் கூடாது.
இந்த அர்க் என்பது நான் செய்து வரும் ஹட யோகப் பயிற்சி முறைகளில் ஒன்றே ஒன்றுதான்.  இது போல் நூறு விஷயங்கள் இருக்கின்றன.

 சி.பி - நீங்க சொன்ன ஒரு மேட்டரே  வாசம் தூக்குது.. இதுல இன்னும் 100? அவ்வ்வ்



 இன்னொரு உதாரணம், பால் கலந்த எதையும் சாப்பிடுவதில்லை.   தேநீர் என்றால், ஊட்டியிலிருந்து வரவழைத்த white tea.  இது தேயிலைச் செடியின் மொக்குகளிலிருந்து தயாரிக்கப்படுவது.  இல்லை; சரியாகச் சொன்னால், ஒரு தேயிலைச் செடி வளர்ந்து முதல் மொக்கு விடும் நிலையிலேயே எடுத்து விடுவார்கள். 

 சி.பி - அண்ணன் தேயிலைல கூட ஃபிரெஸ் தான் கேட்பாரு போல..

  இப்படி எந்தக் காரியத்திலும் ஒரு ஹட யோகியாகவே வாழ வேண்டும்.  இதனால்தான் சில சாமியார்கள் ‘அந்த’ விஷயத்தில் பெரும் கில்லாடிகளாக இருக்கிறார்கள்.  ஸர்ட்டிஃபிகேட் வயது எனக்கு 59-ஆக இருக்கலாம். 


 சி.பி - நீங்க அம்பத்தி ஒன்பதா?ஹி ஹி

 ஆனால் 25 வயது இளைஞன் கூட என்னோடு எந்த விஷயத்திலும் போட்டி போட முடியாது.  எந்த விஷயத்திலும் என்பதை அழுத்தியே சொல்கிறேன். 


சி.பி - நீங்க, வெண்ணிற ஆடை மூர்த்தி, எஸ் ஜே சூர்யா எல்லாம் சாதாரணமா பேசுனாலே டபுள் மீனிங் தான்னு எங்களுக்குத்தெரியாதா? இடம் சுட்டி பொருள் விளக்கனுமா?

https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgO44puUY5_K2cQ-taCFAqTtzG984L5yakjlb0gdu-2DT_dW9VQiye_bCEXXLvTeSStIpnwcGfeJdckoPjVE5-FySCGa_lbOWeVb2Jg0rsTW687ycd_VdM_7Y96RVtGhk7idz1dU9l4UXk/s220/charu-blog-pic.tif
 nivedhidhaa chaterjii
 உங்கள் வயது எழுபதா?  நான் சொல்லும் டிப்ஸைக் குறித்துக் கொள்ளுங்கள்.  ஆறே மாதத்தில் 25 வயது இளைஞனாகி விடலாம்.  காலையில் இஞ்சி; மதியம் சுக்கு; இரவில் கடுக்காய்.  எப்படிச் சாப்பிட வேண்டும்?  கொஞ்சம் மரியாதையோடு கேட்டால்தான் சொல்லுவேன்.


கூட்டத்தை மதியம் இரண்டு மணிக்கு வைத்திருப்பதையும் விமர்சித்தார் ஞாநி.  எல்லோரும் உறங்கும் நேரத்தில் வைத்து விட்டதாகச் சொன்னார்.  மைக் முன்னால் பேசிக் கொண்டிருந்தவர் என் பக்கம் திரும்பி “நீங்களும் உறங்கும் நேரம் தானே இது?” என்று கேட்டார்.  நானும் தலையை ஆட்டி வைத்தேன்.  வேறு என்ன செய்வது?  நான் பகல் நேரத்தில் தூங்கியதே இல்லை.  இரவில் வெகு நேரம் கண் விழிப்பதும் இல்லை.  நாவல் எழுதிக் கொண்டிருந்தால் இந்த விதி பொருந்தாது.  இரவு பகல் எல்லா நேரமும் எழுத்துதான்.  இல்லாவிட்டால் எக்ஸைல் போன்ற ஒரு நாவலை ஐந்தாறு மாதத்தில் எழுதி முடிக்க முடியுமா?
மேலும், நான் எக்ஸைல் பற்றிப் பேசாமல் சக எழுத்தாளர்களைத் திட்டினேன் என்றார். 


 சி.பி - அது பொய்.. முதல்ல சுய புராணம், அப்புறமா தான் திட்டல் புராணம்.. நீங்க நெம்ப நெம்ப நல்லவர்ங்க்ணே

 இரண்டு மணி கூட்டத்துக்கு அவர் வரும் போது சுமார் நான்கு மணி இருக்கும்.  அதில் தவறு இல்லை.  கூட்டம் முடிவதற்குள் வந்து விட்டால் போதும்.  முன்னாலேயே வந்து உட்கார்ந்து இருக்க வேண்டும் என்ற எந்த அவசியமும் என் கூட்டத்தில் இல்லை.  அப்படிப்பட்ட சர்வாதிகாரப் போக்குகள் என் வாசகர் வட்டத்தில் கிடையாது.  ஆனால் இரண்டு மணியிலிருந்து ஒவ்வொரு நண்பரும் பேசிய பின் நானும் பேசினேன்.  அதைக் கேட்காமல் ஞாநி  எப்படிக் கருத்து சொல்ல முடியும்?  ஆனாலும் நான் எக்ஸைல் பற்றிப் பேசவில்லை.

சி.பி - நீங்க என்னைக்கு சப்ஜெக்ட் சம்பந்தமா பேசி இருக்கீங்க? 

  ஆனால் நான் ஏன் பேச வேண்டும் என்று கேட்கிறேன்.    காமராஜர் அரங்கில் வாசகர் வட்ட நண்பர்கள் எக்ஸைல் பற்றிப் பேச நேரம் இல்லாமல் போய் விட்டது.  அவர்கள் பேச வேண்டும் என்பதற்காக மட்டுமே இந்தக் கூட்டம் நடத்தப்பட்டது.


சரி, விஷயத்துக்கு வருகிறேன்.  

சி.பி - அப்பா சாமி, முடியல.. அண்ணன் மெயின் மேட்டர்க்கு வர ரொம்ப நேரம் எடுத்துக்கறாரு.. 


ஒரு பத்திரிகையில் கட்டுரை வந்து விட்டது என்பதற்காக இறைவனுக்கு நன்றி சொல்ல வேண்டுமா? டூ மச் என்றார் நண்பர் ஒருவர்.  ”ஒரு” பத்திரிகையில் இல்லை என்பதுதான் விஷயம்.  சென்னை, கல்கத்தா, மும்பை, தில்லி மட்டும் அல்ல; லண்டன் வாசகர்களுக்கும் சுவாரசியமாக இருக்கும்படி எழுத வேண்டும்.  இது எப்படி என்றால், தமிழ் சினிமாவில் யாருமே வட இந்தியா பக்கம் செல்ல முடியவில்லை.  நடிகைகள் மட்டுமே விதி விலக்கு.  ரஜினி, கமல், இளையராஜா யாராலும் முடியவில்லை.  சிவாஜியால் கூட முடியவில்லை.  முதல் முதலாக அதை உடைத்தவர்கள் மணி ரத்னமும் ஏ.ஆர். ரஹ்மானும்.  பிறகு ரஹ்மான் இந்திய எல்லையையும் தாண்டி ஹாலிவுட் சென்றார்; வென்றார்.  நான் ஏஷியன் ஏஜ் லண்டன் எடிஷனில் எழுதுவது ரஹ்மான் ஹாலிவுட் படத்துக்கு இசை அமைப்பதற்கு ஒப்பாகும்.  அதனால்தான் இறைவனுக்கு நன்றி சொன்னேன். 

 சி.பி - ஏஷியன் ஏஜ் லண்டன் பற்றி மக்கள்க்கு தெரிய வந்த ஒரே ஒரு பயன் தான் இந்த கட்டுரைல..

http://gracehopper.org.in/2011/files/2011/09/Srinivasan_Charu-185x300.jpg
 charu srinivasan
 அது சரி, ரஹ்மான் இறைவனுக்கு நன்றி சொன்னால் இனிக்கிறது; நான் சொன்னால் மட்டும் கசக்கிறதா?  இதில் அடங்கியுள்ள மர்மம் என்ன?  சொல்ல முடியும்…  சாதி, மதம் பேசுகிறேன் என்பார்கள் …


சி.பி - அண்ணே, இறைவனுக்கு நன்றி சொல்ல ஓரளவுக்காவது நல்லவரா இருக்கனும்ணே.. 


Love, in pixels -ஐ எழுதும் போது அது லண்டன் எடிஷனுக்கும் போகிறது என்று எனக்கு உறைக்கவில்லை.  பிறகுதான் ஞாபகம் வந்ததும் கலவரம் ஆகி விட்டது.  எனக்கு ஆங்கிலத்தில் எழுதும் columnists யாரையும் பிடிப்பதில்லை; வினோத் மேஹ்தாவும், குஷ்வந்த் சிங்கும் மட்டுமே விதி விலக்கு.  அவர்களை நான் தாண்ட வேண்டும்.  அதனால்தான் லோக்கல் இலக்கிய பாலிடிக்ஸ் வேண்டாம் என்று ஒதுங்கி இருக்கிறேன்.  இறைவனின் அருளால் வினோத் மேஹ்தாவையும் சர்தாரையும் தாண்டிச் செல்வேன்.  வாசகர் வட்ட நண்பர்களின் அன்பு ஒன்று போதும்.  நேற்று போரூரிலிருந்து விரால் மீன் வாங்கிக் கொண்டு வந்து கொடுத்தார் கணேஷ் அன்பு.  அவருடைய அன்பை நான் என்னவென்று சொல்வது?  இங்கே மைலாப்பூர், ஆர்.ஏ.புரம் ஏரியாவில் விரால் மீனே கிடைப்பதில்லை என்று ஒருநாள் சொல்லிக் கொண்டிருந்தேன்.  அதனால்தான் போரூரிலிருந்து விரால்மீனைக் கொண்டு வந்து விட்டார்.  கணேஷ் அன்புவைப் போல் சுமார் 50 பேர் இருக்கிறார்கள்.  அவர்களின் அன்பும் இறைவனின் அருளும் என் நோக்கங்களை நிறைவேற்றுவதற்காக சக்தியை எனக்குக் கொடுக்கும்…


சி.பி - இதன் மூலம் அண்ணன் தெரிவிப்பது வாசகர்கள் எது கொடுத்தாலும் அண்ணன் ஓ சி யில் வாங்கிக்க தயரா இருக்கார் என்பதே.. ஹி ஹி 


Friday, February 10, 2012

புற்று நோயை வெற்று நோய் ஆக்குவது எப்படி? -நேசம்+யுடான்ஸ் கேன்சர் விழிப்புணர்வுப் போட்டி

1980 களில் வந்த சினிமா படங்கள் நம் மக்கள்ட்ட ஏற்படுத்துன பயம் இன்னும் போகலை..அதாவது கதைப்படி ஹீரோ அல்லது ஹீரோயின்க்கு கேன்சர் வந்திருக்கும்.. டாக்டர் தேதி குறிச்சுடுவார்.. நிர்ணயிக்கப்பட்ட மரணம் என்பது போல் ஒரு தவறான  கற்பிதம் மக்கள் மனதில் பரவிடுச்சு.. அது இன்னும் நிலைத்திருப்பது வேதனை தான்..

சினிமா பிரபலங்களான லிசா ரே, கவுதமி , மம்தா மோகன் தாஸ் உட்பட பல நடிகைகள் புற்று நோயால் பாதிக்கப்பட்டு ஆரம்ப நிலையில் கண்டறிந்து சிகிச்சை பெற்று குணம் அடைந்தவர்களே.. அதனால் யாரும் கேன்சர் என்றால் மரணம் தான் என எண்ணத்தேவை இல்லை..



இன்று மாடர்ன் டெக்னாலஜிகள் வந்து விட்டது.. கீமோதெரபி உட்பட்ட பல சிகிச்சைகள் குணம் அடைய போதுமான மருத்துவ முறைகள் வந்து விட்டன.. எனவே எந்த விதமான மரண பயமும் இல்லாமல் இந்த நோயை அணுகலாம்.. எய்ட்ஸ் போல் இது உயிர்க்கொல்லி நோய் அல்ல என்பதை புரிந்து கொள்ள வேண்டும்..


புற்று நோய் என்பது என்ன? அதுல என்னென்ன வெரைட்டி இருக்கு?நோய் வரும் முன் காப்படு எப்படி? வந்த பின் சிகிச்சை மூலம் குணம் ஆவது எப்படி? நோயின் தீவிரத்தை குறைப்பது எப்படி? என்பதை எளிமையா, பாமரனுக்கும் புரியற மாதிரி பார்ப்போம்.. 

புற்று நோய் என்பது குறிப்பிட்ட வயது வந்த ஆட்களைத்தான் தாக்கும் என்றில்லை, அது யாரை வேணும்னாலும் தாக்கலாம்.. ஆனாலும் வயது அதிகம் ஆக ஆக வாய்ப்பு அதிகம்,, 

நம்ம உடம்பு பல செல்களால் ஆனது.. செல்கள் பிரிந்து பல புதிய செல்களை உருவாக்குது.. பழைய செல்கள் இறந்து வெளியேறாமல் உள்ளேயே தங்கிடுது.அதுதான் புற்று நோய் ஏற்பட முக்கிய காரணம்

புற்றுநோய் அதிகமாக பெண்களை தாக்குகிறது..

 புற்று நோய் வருவதற்கான காரணங்கள் +.யார் யாருக்கெல்லாம் நோய் தாக்கும் அபாயம்?
1. அதிகமாக உடலில் படும் சூரிய ஒளி

2. அதிக உடல் எடை போடுதல்

3. உடல் பயிற்சி செய்யாமல் உடல் உழைப்பு இல்லாமல் இருத்தல்

4. கருத்தடை மாத்திரைகள் அடிக்கடி உபயோகம் செய்யும் பெண்கள்

5.மிக தாமதமாக முதல் குழந்தை பெற்றுக்கொள்ளும் பெண்கள்

6. மிகச்சிறிய வயதில் பூப்டையும் பெண்கள்

7. தாய்ப்பால் கொடுக்காத பெண்களுக்கு

8. மிகத்தாமதமாக மாத விலக்கு நிற்கும் பெண்கள் ( மெனோபாஸ் லேட்)

9. கொழுப்புச்சத்து அதிகம் உள்ள உணவு வகைகள் உண்பவர்கள், மாமிச உணவு அதிகம் உண்பவர்கள்

10. குடும்பத்தில் அம்மா அல்லது சகோதரர்களுக்கு இருந்தால் அந்த பெண்ணுக்கு வர வாய்ப்பு அதிகம்

 புற்று நோய்களின் வகைகளும், வருவதற்கான காரணங்களும்

 1. செஸ்ட் கேன்சர் - ( மார்புப்புற்று) பெரும்பாலும் இது பெண்களுக்கே வரும், ஒரு குழந்தை மட்டுமே பெற்ற பெண்கள்,தாய்ப்பால் தராத பெண்கள்,குழந்தைப்பேறு இல்லாத பெண்கள், குண்டான உடல் வாகு கொண்ட பெண்கள்க்கு செஸ்ட் கேன்சர் வருகிறது

2. லங்க்ஸ் கேன்சர்  - (நுரையீரல் புற்று ) புகை பிடிக்கும் பழக்கம் உள்ளவர்கள்க்கு வரும் வாய்ப்பு அதிகம்.. ஆஸ்பெஸ்டாஸ், சிலிக்கான் தொழிற்சாலைகளில்  பணி புரிபவர்கள் , சிமெண்ட் தொழிற்சாலைகளில் பணி புரிபவர்கள்க்கு வரும் வாய்ப்பு அதிகம்

3. மவுத் கேன்சர்  - (வாய்ப்புற்று) -புகையிலை உபயோகிப்பவர்களுக்கு,பான் பராக், ஜர்தா பீடா அடிக்கடி சாப்பிடுபவர்கள், பற்களை முறையாக பராமரிக்காமல் அஜாக்கிரதையாக இருப்பவர்கள்க்கு இது வரும் வாய்ப்பு அதிகம்.

4. லிவர் கேன்சர் - (ஈரல் புற்று ) -  மது பான வகைகளை அதிகம் உபயோகிப்பவர்கள், வைரஸ் காய்ச்சலால் பாதிக்கப்பட்டோர்கள்க்கு வர வாய்ப்பு அதிகம்

5. ஸ்டொமக் கேன்சர்  -( வயிற்றுப்புற்று) -  முறையில்லாமல் கண்ட நேரத்தில் சாப்பிடும் உணவுப்பழக்கம் கொண்டவர்கள் அதாவது நினைச்ச நேரம் சாப்பிடுபவர்கள்க்கு,ஜங்க் ஃபுட் எனப்படும் பாக்கெட்களில் விற்கப்படும் நொறுக்ஸ்களை அதிகம் உண்பவர்கள்க்கு,சரக்கு அடிக்கற குடிமகன்கள்க்கு, தம் அடிக்கற ஆட்களுக்கு இது வர வாய்ப்பு அதிகம்

6.  ஸ்கின் கேன்சர் - ( தோல் புற்று  ) - சோரியாசிஸ் எனப்படும் தோல் வியாதி வந்தவர்கள், நாட்பட்ட ஆறாத புண்கள் உள்ளவர்களுக்கு, அதிகமாக வெய்யில்லில் உடல் காய்பவர்களுக்கு வர வாய்ப்புகள் அதிகம்

7. யூட்ரஸ் கேன்சர் -(கருப்பை புற்று) - கணக்கு வழக்கே இல்லாம ,வகை தொகை இல்லாம குழந்தை பெத்துக்கற பெண்கள்க்கு,ஹெச் பி வி வைரஸ் தாக்கிய பெண்கள்க்கு இந்த நோய் வர வாய்ப்புகள் அதிகம்.. பல ஆண்களுடன் உறவு வைக்கும் பெண்கள்,பிறப்பு  உறுப்பை சுத்தமாக வைத்துக்கொள்ளாத பெண்கள்க்கு வர வாய்ப்பு அதிகம்

8.  பிளட் கேன்சர்  ( ரத்தப்புற்று) - புகை பிடிக்கும் பழக்கம் உள்ளவர்கள்க்கு, சில சிகிச்சைகளின் போது இன்ஃபெக்‌ஷன் ஏற்படுபவர்களுக்கு இது அதிகம் வருகிறது.. பரம்பரைத்தன்மையும் ஒரு காரணம்.. அதிக வயது ஆனவர்களுக்கும் வரலாம். 

விந்தையான விஷயம் - மேற்கொண்ட எந்த கெட்ட பழக்கங்களும் இல்லாதவர்களுக்கும் கேன்சர் வர வாய்ப்பு உண்டு.. நமக்குத்தான் எந்த கெட்ட பழக்கமும் இல்லையே என ஜாலியாக இருக்கக்கூடாது.. 35 வயதுக்கு மேல் முழு உடல் செக்கப் செய்து கொள்வது அவசியம்.. 

புற்று நோய் வராமல பாதுகாப்பது எப்படி?

1. நார்ச்சத்து அதிகம் உள்ள உணவுப்பொருள்களை சேர்த்துக்கொள்தல்

2. பச்சை காய்கறிகள் அதிகம் உட் கொள்தல்

3. வைட்டமின் டி குறைபாடு வராமல் பார்த்துக்கொள்ள  அந்த வைட்டமின் சத்து உள்ள உணவு வகைகளை உண்ணுதல்

4. பிளாஸ்டிக் கேன்களில் தண்ணீர் குடிக்காமல் தவிர்த்தல்,அழகு சாதனப்பொருட்கள் அதிகம் உபயோகிக்காமல் இருத்தல் நலம்..

5. ரோட்டோரம் விற்கும் நடைபாதை கடைகளில் பஜ்ஜி, போண்டா சிப்ஸ் வகைகள் சாப்பிடாமல் தவிர்த்தல் நலம், ஏன் எனில் அவர்கள் ஒரே எண்ணெயை மீண்டும் , மீண்டும் உபயோகிப்பதால் அது உடல்க்கு கெடுதல் விளைவிக்கிறது

 புற்று நோய் வந்ததற்கான அறி குறிகள்

1. வாயில் கொப்புளங்கள் வந்து ஆறாமல் இருத்தல்

2. வெள்ளை அல்லது சிவப்பு நிற புள்ளிகள் வாயின் உட்புறத்தில் காணப்படுதல்

3. மார்பில் வலி உள்ள அல்லது வலி அற்ற கட்டிகள் தோன்றுதல்

4.மார்பகம் வழக்கத்திற்கு மாறாக பெரிதாக இருத்தல்

5. உடல் உறவின்போதோ, அதற்குப்பின்போ ரத்தக்கசிவு இருப்பது

6. நீண்ட நாட்களாக ஆறாத புண்கள் இருத்தல்

7. அதீத இருமல், உணவு உண்ணுவதில் ஏற்படும் மாற்றங்கள்

8. இயற்கை உபாதைகளில் வழக்கத்திற்கு மாறான சில மாற்றங்கள்


சிகிச்சை முறைகள்

1. கதிர் இயக்க சிகிச்சை 2.  அறுவை சிகிச்சை 3  மருத்துவ சிகிச்சை

இப்போதெல்லாம் பெரும்பாலும் கதிரியக்க சிகிச்சையே அளிக்கப்படுகிறது..

பீட்ரூட், கீரை வகைகள் சேர்த்துக்கொள்வது நல்லது..

செல் ஃபோன்கள் அதிகம் பயன் படுத்துவதால் கேன்சர் வரும் வாய்ப்பு உள்ளதாக சில ஆராய்ச்சியாளர்கள் சொல்றாங்க.. இது முழுதாக நிரூபிக்கப்படலை, இருந்தாலும் அனைவரும் செல் ஃபோன் பயன் பாட்டை குறைக்கனும். தொடர்ந்து ஒரு மணி நேரம் ஒரே காதில் வைத்துப்பேசுவது கூடாது.. .

கோவை ஸ்ரீ ராம கிருஷ்ணா புற்று நோய் சிகிச்சை மையம் மிக புகழ் பெற்றது.. அது போக அனைத்து முக்கிய நகரங்களில் புற்று நோய்க்கான சிகிச்சை மையங்கள் உள்ளன..

நாம் செய்ய வேண்டியது ஒன்று தான் . 35 வயது டூ 40 வயது ஆனவர்கள் உடனடியாக முழு உடல் பரிசோதனை செய்வதே ..

புற்று நோய் இருப்பது கண்டறியப்பட்டு சிகிச்சை பெற்று வரும் பிரபலங்கள் கிரிக்கெட் வீரர் யுவராஜ் சிங்க்.. காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி.. இதில் சோனியாவுக்கு சிகிச்சை முடிந்தது.. நலமாக உள்லார்.. யுவராஜ்க்கு இப்போதான் சிகிச்சை ஆரம்பித்து உள்ளார்கள்

புற்று நோயை ஆரம்ப நிலையில் கண்டறிவோம், அதை வெற்று நோய் ஆக்குவோம்.. ஆரோக்யமான உலகம் படைப்போம்.. நாளைய உலகமும், இன்றைய உலகமும் நம் கையில்..

Thursday, October 20, 2011

பெங்களூர் கோர்ட்டில் ஜெ - காமெடி கும்மி கலாட்டா

வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்தது தொடர்பான வழக்கில், பெங்களூரு சிறப்புக் கோர்ட்டில் நேரில் ஆஜராவதற்கு, விலக்கு அளிக்க வேண்டும் என, தமிழக முதல்வர் ஜெயலலிதா, சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்த மனு, நிராகரிக்கப்பட்டது. "இன்று ஆஜராக வேண்டும்' எனவும், சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டுள்ளது.

இதை கேள்விப்பட்டதும் ஜெ முகாமில் என்ன நடந்திருக்கும் என ஒரு ஜாலி கற்பனை.. இது சும்மா காமெடிக்கு மட்டும் தான் ரத்தத்தின் ரத்தங்கள் பொங்காமல் ஜாலியாக சிரித்துக்கொண்டே படிக்கவும்.. 

 http://www.dinamani.com/Images/article/2010/3/19/jaya.jpg
போயஸ் தோட்டத்தில் 

பெங்களூரு கோர்ட்டில் ஜெ., ஆஜராக வேண்டும்: சுப்ரீம் கோர்ட் உத்தரவு # நான் தமிழ் நாட்டின் முதல்வர்,தமிழ் நாட்டை விட்டு வர முடியாது- ஜெ


----------------------------


. போயஸ் தோட்டத்தை தாண்டக்கூடாது என MGR சத்தியம் வாங்கி இருக்கிறார்-ஜெ --------------------



-------------------------------------------------



நான் பெங்களூர் போகும் சைக்கிள் கேப்பில் தீயசக்தியான கருணாநிதி ஆட்சியைப்பிடிக்க முயலமாட்டார் என்பதற்கு உத்தரவாதம் இருக்கிறதா? - ஜெ ஆவேசம்
-------------------------------------

http://inthiya.in/ta/wp-content/uploads/2011/03/jayalalitha_vaiko_alliance-cartoon.jpg
பெங்களூர் கோர்ட்டில் ஜெ - காமெடி கும்மி கலாட்டா

டவாலி - ஜெயலலிதா ஜெயலலிதா ஜெயலலிதா

ஜெ- புரட்சித்தலைவி என அழைத்தால்தான் வருவேன், என்னை யாரும் இது வரை பெயர் சொல்லி அழைத்ததில்லை..

ஓ.பி. பன்னீர் செல்வம் -
அம்மா,இது தமிழ்நாடில்லை..கர்நாடகா... எல்லாரும் படிச்சவங்க,தமிழர்கள் போல் துதி பாடிகளை இங்கே பார்க்க முடியாது.. அதுவும் இல்லாம இது கோர்ட்.. கொஞ்சம் அட்ஜஸ் பண்ணிக்குங்கம்மா..

ஜெ- சரி சரி.. முதல்வருக்கான அரியாசனத்தை கோர்ட் கூண்டில் கொண்டு வந்து போடுங்க.. நான் நின்னுட்டெல்லாம் பேச மாட்டேன்.. எம் ஜி ஆர் முன்னாலயே நான் உட்கார்ந்துதான் பேசுவேன்..

ஓ.பி. பன்னீர் செல்வம்
- ஓக்கே அம்மா, அப்புறம் இன்னொரு விஷயம்.. (அப்படியே குனிந்து பம்முகிறார்)

ஜெ- ம் ம் சொல்லுங்க


https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjeI8ja3ptOV5Bo2F9g-XeQAA-qDQP_ZQGm-_mv5I6OWQKHaP4tzv5Tm9YN2M48TNrGMniAfwMAvddGFQwEKKmN-08OmbHORL-Hivhiec_NgNvxFgdDqdQDF6L9IVTC0-c1hIY05tnxqrE/s1600/jj-cartoon.jpg

ஓ.பி. பன்னீர் செல்வம் -
இப்போ ஜட்ஜ் வருவாரு, அவர் வர்றப்ப நீங்க எழுந்து நிக்கனும்.. வணக்கம் சொல்லனும்..

ஜெ- யாரைப்பார்த்து என்ன வார்த்தை சொல்லிட்டீங்க?நான் ஒரு நாட்டின் முதல் அமைச்சர்.. நான் எதுக்காக ஒரு சாதாரண ஜட்ஜைபார்த்ததும் எழுந்து நிக்கனும்? வணக்கம் வைக்கனும்? அதெல்லாம் நடக்காது.. நான் கவர்னரையே மதிக்க மாட்டேன்.. பிரதமரே எதிரில் வந்தாலும் துதிக்க மாட்டேன்..

ஓ.பி. பன்னீர் செல்வம் -
( எப்படியோ இந்த கேஸ்ல அம்மா மாட்டி உள்ளே போய்ட்டாங்கன்னா நாம தான் சி எம்.. அதுவரை பம்மிக்கிட்டே நடிக்க வேண்டியதுதான்.. )

ஜட்ஜ் வருகிறார், எல்லோரும் எழுந்து நிற்க ஜெ மட்டும் அமர்ந்த நிலையில் அந்த பக்கமாக முகத்தை திருப்பிக்கொள்கிறார்.. ஜட்ஜ் தலையில் அடித்துக்கொண்டே எல்லாம் என் தலை எழுத்து என மனசில் நினைத்த படியே அமர்கிறார்..

ஜட்ஜ் - வாதி என்ன சொல்ல நினைக்கிறாரோ அதை இப்போ சொல்லலாம்...

ஜெ - சாதா வாதி இல்லை. தமிழ்நாட்டையே கதி கலங்க வைக்கும் அரசியல்வாதி..  (சாதா வாதி இல்லைன்னா சரியான சந்தர்ப்பவாதியா?)போயஸ் தோட்டத்தின் தாதாதி தாதி.. நீங்க உடனடியா நான் குற்றமற்றவள்னு தீர்ப்பு சொல்லிட்டு கிளம்புங்க, அண்ணா நாமம் வாழ்க, புரட்சித்தலைவர் நாமம் வாழ்க..

ஜட்ஜ் - :வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்தது தொடர்பா உங்க கிட்டே விசாரணை பண்னனும்.. உங்க மாத வருமானம் என்ன?

ஜெ- ஒரு ரூபாய்.. 

http://www.dinamani.com/Images/New_Gallery/2010/1/10/10adade1.jpg

ஜட்ஜ் - என்னது ஒரு ரூபாயா? ( ஹார்ட் அட்டாக் வந்து நெஞ்சை பிடித்துக்கொள்கிறார்.. )

ஜெ - ஆமா.. முதல்வர் சம்பளத்துல ஏழைகளுக்கே தானம் பண்ணிடுவேன்.. எனக்குன்னு எதையும் வெச்சுக்க மாட்டேன்.. ( மைண்ட் வாய்ஸ் - ஊழல்ல சம்பாதிச்சது மட்டும் எனக்கு )

ஜட்ஜ் - அப்புறம் இத்தனை சொத்துக்கள், நிலங்கள், பணங்கள், தங்கங்கள் எல்லாம் எப்படி வந்தது?

ஜெ- எல்லாம் என் பிறந்த நாளுக்கு அமைச்சர்கள் நன்கொடையாக கொடுத்தது..

ஜட்ஜ் - ஓஹோ, அந்த சொத்து மதிப்பு நிலவரத்தை தர முடியுமா?

ஜெ - வழக்கு நடக்குதுன்னு தெரிஞ்சதும் எல்லாத்தையும் ஏழைகளுக்கும், பினாமிகளுக்கும் தானம் பண்ணிட்டேன்.. இப்போ என்ன பண்ணுவீங்க?

ஜட்ஜ் - இது கோர்ட்டை அவமதிக்கும் செயல்... 

ஜெ - சாரி யுவர் ஆனர்.. எனக்கு யாரையும் மதிச்சி பழக்கம் இல்லை, ஆனானப்பட்ட எம்ஜியாரையே நான் மதிச்சதில்லை.. ஏதோ ஜட்ஜ் என்பதல் பதிலாவது சொல்றேன்.. 

ஜட்ஜ் - உங்க மேல சுமத்தப்பட்ட குறச்சாட்டை நீங்க ஒத்துக்கறீங்களா?

ஜெ - இதுக்கு முன்னால ஆண்ட கருணாநிதி ஆட்சில பண்ணுன ஊழலை விட நான் கம்மியாதான் பண்ணி இருக்கேன்..

ஜட்ஜ் - அது இந்த கேஸ்க்கு அப்பாற்பட்டது.. நீங்க ஊழல் பண்ணுனது உண்மையா? இல்லையா? அதை மட்டும் சொல்லுங்க.. 

ஜெ - வழக்கை திசை திருப்பாதீங்க? நீங்க பிராமணர்களுக்கு எதிரானவரா? சூத்திர வம்சத்தில் பிறந்தவரா?அதனால்தான் இப்படி கேள்வி எல்லாம் கேட்கறீங்க.. 

ஜட்ஜ் - நீங்க சொன்னதை என்னால ஜீரணிக்க முடியலை..

ஜெ - காரணம் நீங்க தமிழர் இல்லை.. இதை விட பல அந்தர் பல்டிகளை எல்லாம் இஞ்சி மொரப்பான் சாப்பிடாமலேயே தமிழன் சகிச்சுட்டு இருக்கான்.. இதெல்லாம் ஜுஜுபி.. 

ஜட்ஜ் - உங்கள் மேல் சுமத்தப்பட்ட குற்றச்சாட்டு சாட்சியங்களுடன் நிரூபிக்கப்பட்டுள்ளது, இதுக்கு என்ன சொல்றீங்க?

https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjkjHUVRc5hMlb9uHOYBKsB2ecMoZpm2jQrY7NJl8llKoCCv-kbyHRlYzLATDd3zGppMarVIMmDwZ3EUwP-uQoaNQ7mI4bguIhLSIEchfLbd1FUsHHDXYCyQ3YjossaIMv_j7YzsNuNne6J/s1600/8-2.jpg

ஜெ- இருக்கலாம், அந்த சாட்சிகள் இப்போ இருக்காங்களா? கூப்பிடுங்க பார்ப்போம்.. ஒரு பய வர முடியாது.. அண்ணாவின் ஆவி அவரை சும்மா விட்டிருக்காது.. அதிமுக தொண்டர்கள் அல்ப சொல்பமானவர்கள் கிடையாது.. 

ஜட்ஜ் - என்னம்மா, மிரட்றீங்களா?

ஜெ - இப்போ உங்க செல் ஃபோனுக்கு ஒரு  வீடியோ க்ளிப்பிங்க் வந்திருக்கும் பாருங்க.. அதை பார்த்துட்டு தீர்ப்பு சொல்லுங்க.. 

ஜட்ஜ் ( நடுங்கும் கைகளுடன் செல் ஃபோனை எடுத்துப்பார்க்கிறார்.. அவரது முகம் மாறுகிறது.. )

ஜெ மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகள் சாட்சிகளுடன் நிரூபிக்கப்படிருந்தாலும் அந்த சாட்சிகள் யாரும் இப்போது உயிருடன் இல்லை.. மேலும் குற்றம் சாட்டப்பட்ட நபரே தான் குற்றமற்றவர் என ஆணித்தரமாக கூறுவதால் அவரது நேர்மையை சந்தேகிக்க முடியாது.. அவர் அது போல் ஊழல் செய்திருந்தால் புரட்சித்தலைவி ஆகி இருக்க முடியாது.. எல்லாவற்றையும் சீர் தூக்கிப்பார்க்கையில் அவர் குற்றமற்றவர் என தீர்ப்பு சொல்லி அவரை விடுதலை செய்கிறேன்... 



ஜெ- வெற்றி வெற்றி , இது சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த வெற்றி.. தமிழ் நாட்டின் வரலாற்றில் பொன் எழுத்துக்களால் பொறிக்கப்படவேண்டிய வெற்றி..  பன்னீர் செல்வம்.. ஜட்ஜோட ஃபேமிலியை ரிலீஸ் பண்ணிடுங்க.. நமது எம் ஜி ஆர் பத்திருக்கைல ஸ்கூப் நியூஸா இந்த வெற்றி செய்தி வரனும்.. கேன்சல் ஆல் புரோகிராம்ஸ் ஆஃப் ஜெயா டி வி.. 

வெற்றி வெற்றி மீது வெற்றி வந்து என்னைச்சேரும், அதை வாங்கித்தந்த பெருமை எல்லாம் மக்களீன் அறியாமையையே சாரும்.. 


Wednesday, August 04, 2010

ஆனந்தவிகடன் கவுரவித்த 5 வலைபூ எழுத்தாளர்கள்

ஆனந்தவிகடன் பத்திரிக்கை உலகின் ஜாம்பவான் என்பதில் மாற்றுக்கருத்தே இருக்க முடியாது.பல எழுத்தாளர்களை அது இலக்கிய உலகிற்கு அளித்துள்ளது.சினிமாத்துறையில் உள்ள ஷங்கர்,மணிரத்னம் போன்ற பெரிய இயக்குனர்கள் கூட விகடனில் சினிமாவிமர்சனம் படிக்கத்தவறுவது இல்லை.
விகடனில் ஒரு படம் 40 மார்க் வாங்கி விட்டால் அந்தப்படம் தேறி விடும் என்று ஒரு பேச்சு திரை உலகில் உண்டு.
உதிரிப்பூக்கள்(65 மார்க்),நாயகன்(60 மார்க்)அஞ்சலி,பசங்க (50 மர்க்) என சொல்லிக்கொண்டே போகலாம்.அவ்வளவு ஏன் அமரர் சுஜாதா கற்றதும் பெற்றதும் கட்டுரையில் ஏழைதாசன் என்ற சிற்றிதழை பற்றி ஒரு வார்த்தை எழுதினார்.அதுவரை 500 பிரதிகள் மட்டும் விற்ற புத்தகம் அந்த வாரம் மட்டும் 2400 பிரதிகள் விற்றது.வாரா வாரம் வியாழன் அன்று வெளியாகும் அது கிட்டத்தட்ட 7 லட்சம் பிரதிகள் வெளீயாகி 10 லட்சம் மக்களை சென்றடைகிறது.
அப்படிப்பட்ட இதழில் நாளை வெளிவரப்போகும் இதழில் சிறந்த 5 வலைப்பூ எழுத்தாளர்கள் பற்றி ஒரு கட்டுரை மினி பேட்டியுடன் வருகிறது.

1.கேபிள் சங்கர்-இயற்பெயர் சங்கரநாராயனன்.இவ்ர் சினி ஃபீல்டில் காலடி எடுத்து வைக்க பிளாக்ஸ்பாட் உத்வி இருப்பதாக பேட்டியில் கூறி உள்ளார்.

2.பரிசல்காரன் -இயற்பெயர் கே.பி.கிருஷ்ணகுமார்.திருப்பூர்.நகைச்சுவையாக எழுதுவதில் வல்லவரான இவர் ஆரம்ப காலத்தில் பத்திரிக்கைகளில் முத்திரை பதித்தவர்.

3.விக்னேஷ்வரி -பெண்களுக்கான சரியான உபயோகமான துறை வலைப்பூ என பேட்டியில் தெரிவித்துள்ளார்

4.சுந்தர்ராஜன் - இவர் மக்கள் சட்டம் என்ற வலைப்பூ நடத்தி மக்களுக்கு சட்டம் பற்றிய விழிப்புணர்வை ஊட்டி வருகிறார்.

5. தீபா-இவர் தனது பேட்டியில் தனது வலைப்பூ பெயரை குறிப்பிடவில்லை.

ஆனந்த விகடன் கவுரவித்த இவர்களை நாமும் வாழ்த்துவோம்.