Showing posts with label . Show all posts
Showing posts with label . Show all posts

Monday, December 29, 2014

பொங்கல் ரேஸ் - ஜெயிக்கப்போகும் குதிரை எது?

  • 'ஐ' படத்தில் விக்ரம், ஏமி ஜாக்சன்
    'ஐ' படத்தில் விக்ரம், ஏமி ஜாக்சன்
சமீப காலமாக பண்டிகை தினங்களில் இரண்டு பெரிய பட்ஜெட் படங்களுக்கு மேல் ரிலீஸாகாமல் இருந்தன. ஆனால், இந்த கிறிஸ்துமஸ் பண்டிகை முதல் இந்த நிலை மீண்டும் மாறியிருக்கிறது. ‘கயல்’, ‘மீகாமன்’, ‘கப்பல்’, வெள்ளக்கார துரை’ என்று நான்கு படங்கள் கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு ரிலீஸாக, அடுத்ததாக வரவுள்ள பொங்கல் பண்டிகைக்கு ஐந்து படங்கள் இப்போதே வரிசைகட்டி நிற்கின்றன. 


பொங்கலுக்கு வெளியாகும் என்று விளம்பரப்படுத்தப்படும் படங்கள் அனைத்துமே முன்னணி நடிகர்களின் நடிப்பில் தயாராகும் பெரிய பட்ஜெட் படங்கள். இதனால் எந்தப் படத்துக்கு முன்னுரிமை கொடுப்பது என்று தெரியாமல் திரையரங்க உரிமையாளர்களும், விநியோகஸ்தர்களும் குழம்பிப் போய் உள்ளனர். இந்நிலையில் நிஜமாகவே இப்படங்கள் பொங்கல் ரேஸுக்கு தயாராக இருக்கிறதா என்று கோலிவுட்டில் விசாரித்தோம். 



‘ஐ’
விரைவில் வெளியீடு என்று பலமுறை விளம்பரப்படுத்தப்பட்ட ‘ஐ’ திரைப்படத்தை பொங்கல் பண்டிகைக்கு வெளியிட்டே தீருவது என்ற தீர்மானத்துடன் உள்ளார்கள் இப்படக் குழுவினர். ‘ஐ’ படத்துக்கு யு/ஏ சான்றிதழ் கிடைத்துள்ள நிலையில், தற்போது ‘யு’ சான்றிதழ் பெற முயற்சிகள் நடந்து வருகிறது. அவ்வாறு கிடைக்காவிட்டாலும் யு/ஏ சான்றிதழுடன் படத்தை வெளியிடத் தீர்மானித்துள்ளதாக கூறப்படுகிறது. “பொங்கலுக்கு முன்பு ஜனவரி 9-ம் தேதி படத்தை வெளியிடுவோம். இதிலிருந்து எந்த காரணத்தைக் கொண்டும் பின்வாங்குவதில்லை” என்கிறார்கள் இப்படக் குழுவினர். மிக விரைவில் ‘ஐ’ படத்தை விளம்பரப்படுத்தும் பணிகள் தொடங்கவுள்ளதாக கூறப்படுகிறது. 



‘என்னை அறிந்தால்’
படத்தின் முதல் பாதியின் இறுதிகட்டப் பணிகள் அனைத்தும் முடிந்துவிட்டன. இரண்டாம் பாதிக்கான இறுதிகட்டப் பணிகள் நடந்துவருகின்றன. அதையும் விரைவில் முடித்து ஹாரிஸ் ஜெயராஜிடம் பின்னணி இசைக் கோப்பு பணிக்குக் கொடுக்க திட்டமிட்டுள்ளனர். அது முடிந்ததும் இசை வெளியீட்டு விழாவை விரைவில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளனர். “ஜனவரி 15-ம் தேதி ‘என்னை அறிந்தால்’ படம் வெளியாகும். படத்தின் பணிகள் அனைத்தும் அதற்குள்ளாகவே முடிந்துவிடும்” என்கிறார்கள் ‘என்னை அறிந்தால்’ படக் குழுவினர். 



‘ஆம்பள’
படப்பிடிப்பு தொடங்கும்போதே இப்படம் பொங்கலுக்கு வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டது. அதன்படி விறுவிறுப்பாக இப்படத்தின் இறுதிக்கட்ட பணிகள் நடந்து வரு கின்றன. இத்தாலியில் பாடல் காட்சிகளை படமாக்கி திரும்பியுள்ள நிலையில் டிசம்பர் 27-ம் தேதி இசை வெளி யீட்டு விழா நடைபெற உள்ளது. அதைத் தொடர்ந்து படத்தை விளம்பரப்படுத்தும் பணிகள் தொடங்கும் என்கிறார்கள் படக் குழுவினர். பொங்கலுக்கு படத்தை ரிலீஸ் செய்வதில் இருந்து எக்காரணத்தைக் கொண்டும் பின்வாங்குவதில்லை என்பதில் தீர்மானமாக இருக்கிறது இப்படக்குழு. 



‘கொம்பன்’
‘கொம்பன்’ படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு 26-ம் தேதி (நாளை) வரை நடைபெறவுள்ளது. அதே நேரத்தில் படத்தின் அடுத்தக்கட்ட பணிகளான டப்பிங் உள்ளிட்டவற்றையும் துரிதப்படுத்தி இருக்கிறார்கள். அனைத்து பணிகளும் முடிந்து பொங்கலுக்கு வெளியிட வேண்டும் என்ற முனைப்புடன் ‘கொம்பன்’ குழுவினர் உறுதியாக இருக்கிறார்கள். 



‘காக்கி சட்டை’
டிசம்பர் வெளியீட்டில் இருந்து பொங்கல் ரேஸில் புதிதாக இணைந்துள்ள படம் ‘காக்கி சட்டை’. படத்தின் அனைத்து பணிகளும் முடிந்து சென்சார் மட்டுமே பாக்கி இருக்கிறது. விரைவில் அப்பணியும் முடிந்து, விளம்பரப்படுத்தும் பணிகள் தொடங்கவுள்ளதாக கூறுகிறது ‘காக்கி சட்டை’ படக் குழு. 


மேலே குறிப்பிட்டுள்ள படங்களில் ‘ஐ’, ‘ஆம்பள’, ‘காக்கி சட்டை’ ஆகியவை பொங்கல் வெளியீட்டில் இருந்து எந்த ஒரு காரணத்தைக் கொண்டும் பின்வாங்கப் போவதில்லை என்பதில் உறுதியாக இருக்கிறார்கள். ‘என்னை அறிந்தால்’ படத்தைப் பொறுத்தவரை அதன் வெளிநாட்டு உரிமையை வாங்கியிருக்கும் அட்மஸ் நிறுவனம் ஜனவரி 14-ம் தேதி படம் உலகளவில் வெளியாகும் என்று அறிவித்திருக்கிறது. ஜனவரி 14-ம் தேதி என்றால் இந்தியாவில் ஜனவரி 15-ம் தேதி வெளியாகும் என்பது உறுதியாகி இருக்கிறது. 


நன்றி- த இந்து

Sunday, December 28, 2014

ஐ - லிங்கா வை முந்தி விடும் - ராம் கோபால் வர்மா பேச்சால் சர்ச்சை



ஜெ., ரஜினியைவிட ஷங்கர்தான் பெரிய ஆள்: ராம் கோபால் வர்மா ரகளைப் பதிவு

அவ்வப்போது சர்ச்சையான கருத்துக்களை தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டு கவனம் ஈர்க்கும் இயக்குநர் ராம் கோபால் வர்மா, இயக்குநர் ஷங்கரையும் நடிகர் ரஜினிகாந்தையும் ஒப்பிட்டு பேசியிருப்பது பரபரப்பைக் கிளப்பியிருக்கிறது. 



ஷங்கர் இயக்கத்தில் விக்ரம், ஏமி ஜாக்சன் நடித்திருக்கும் ''ஐ'' படத்தின் தெலுங்கு ட்ரெய்லரைப் பார்த்துவிட்டு தனது ட்விட்டர் தளத்தில் அவர் சில கருத்துகளைத் தெரிவித்திருக்கிறார். ஜெயலலிதாவையும் ரஜினிகாந்தையும்விட இயக்குநர் ஷங்கர்தான் பெரிய ஆள் என்கிற ரீதியில் அவர் பதிவிட்டுள்ளார். 


இயக்குநர் ஷங்கர் குறித்து ராம் கோபால் வர்மா தனது ட்விட்டர் தளத்தில் தெரிவித்திருப்பது: 


"இப்போதுதான் ''ஐ'' படத்தின் ட்ரெய்லரைப் பார்த்தேன். இந்த சங்கராந்தி கண்டிப்பாக சங்கரின் ராத்திரியாக மாறும். 'ஐ' படத்துக்கு போட்டியாக எந்தப் படத்தை வெளியிட்டாலும் மடத்தனமே. 


இந்திய இயக்குநர்கள் ஒவ்வொரும் ஏன் நம் எல்லைகளை நாம் இன்னும் விரிவுபடுத்தவில்லை என யோசிக்க வைக்கும் திரைப்படமாக 'ஐ' இருக்கும். 


இந்தியப் படங்களை ஹாலிவுட் கவனிக்க 'ஐ' ஒரு காரணமாக இருக்கும். நம் கவனத்தைக் கவரும், மின்சாரம் பாய்ந்ததைப் போல உற்சாகமூட்டும் வகையில், ரஜினிகாந்தைவிட ஷங்கர் உயர்ந்து நிற்கிறார். ஷங்கர் அடுத்து ஆமிர் கானுடன் இணையும் திரைப்படம், இந்தியாவின் 'அவதார்' ஆக இருக்கும். 


'ஐ' படத்தின் முதல் நாள் வசூல், லிங்காவின் வசூலை முந்தும் என்பது என் கணிப்பு. அதனால் தான் ரஜினியை விட ஷங்கர் பெரிய ஆளாகத் தகிழ்கிறார் என்று சொல்கிறேன். 


பெரிய பெரிய இயக்குநர்கள் எல்லாம் ஷாரூக், சல்மா, ஆமிர் போன்ற நட்சத்திரங்களை நம்பி இருக்கையில், ஷங்கர் அந்த நட்சத்திர அந்தஸ்தை உடைத்தெறிந்துள்ளார். அதுதான் அவரது சக்தி. 


ஷங்கர், எனக்கு உங்கள் ட்விட்டர் முகவரி தெரியாது, ஆனால் உங்களிடம் ஒன்று சொல்ல நினைக்கிறேன். தற்போது ஒட்டு மொத்த இந்தியத் திரையுலகில் இருக்கும் ஒரே ஒரு முன்னோடி நீங்கள்தான். ஆகச் சிறந்த கற்பனை, அடர்த்தி, அசலான பார்வை என்ற வகையில் 'ஐ' ஒரு முன்மாதிரியாக இருக்கும். 


'ஐ' ட்ரெய்லரை பார்த்த பின் பொதுமக்களில் ஒருவனாக எனக்கு தோன்றுவது, தமிழகத்தில் ஜெயலலிதா, ரஜினிகாந்தைவிட ஷங்கர்தான் பெரிய ஆள் என்பதே" என்று ராம் கோபால் வர்மா கூறியிருக்கிறார். 

நன்றி - த இந்து


Sunday, September 14, 2014

ஐ - ஷங்கரின் பாணியில் ஒரு த்ரில்லர் திரைப்படம்- விக்ரம் பேட்டி

ஐ' படத்தின் கதை எதைப் பற்றியது என்று நடிகர் விக்ரம் தொலைக்காட்சி பேட்டி ஒன்றில் கூறியுள்ளார்.

விக்ரம், ஏமி ஜாக்சன் உள்ளிட்ட பலர் நடித்திருக்கும் 'ஐ' படத்தின் இசை வெளியீட்டு விழா செப்டம்பர் 15ம் தேதி சென்னையில் நடைபெற இருக்கிறது. ஷங்கர் இயக்கி இருக்கும் இப்படத்தின் இசையினை அர்னால்ட் வெளியிட இருக்கிறார். ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்து இருக்கும் இப்படத்திற்கு பி.சி.ஸ்ரீராம் ஒளிப்பதிவு செய்திருக்கிறார். 


ரஜினி, கமல் உள்ளிட்ட பல்வேறு முன்னணி தமிழ் திரையுலக பிரபலங்கள் 'ஐ' இசை வெளியீட்டு விழாவில் கலந்து கொள்ள இருக்கிறார்கள். நேரு உள்விளையாட்டு அரங்கில் செப்.15ம் தேதி மாலை விழா நடைபெற இருக்கிறது. 


இப்படம் குறித்து ஷங்கர் பல்வேறு பேட்டிகள் அளித்திருந்தாலும், நடிகர் விக்ரம் இப்படம் குறித்து எதுவுமே பேசாமல் இருந்தார். முதன் முறையாக தொலைக்காட்சி பேட்டி ஒன்றில், "'ஐ' என்றால் அழகு என்று அர்த்தம். விளம்பரம் மற்றும் மாடலிங் உலகம் குறித்து இப்படம் பேசும். ஒரு மாடல் உடைய கடுமையான உழைப்பும், வேதனையும் தான் படம். பிறக்கும் போதே மாடலாக வேண்டும் என்று இல்லாமல், நாயகன் எதிர்பாராத விதமாக எப்படி மாடலாகிறான், அதற்குப் பிறகு என்னவாகிறது என்பது தான் 'ஐ'. 


இது ழுழுக்க முழுக்க ஷங்கரின் பாணியில் ஒரு த்ரில்லர் திரைப்படம் தான். ஒரு நடிகனாக, நடிப்பதற்கு எனக்கு நிறைய இடங்கள் இருக்கிறது. படம் பார்ப்பவர்கள் அதிர்ந்து போவார்கள். மூன்று முறை இப்படத்திற்காக எனது உடலமைப்பை மாற்றினேன். கதை மிகவும் பலமாக இருந்ததால், என்னுடைய கடுமையான உழைப்பைக் கொட்டியிருக்கிறேன். நான் இந்தப் படத்தை ரொம்ப ஆவலாக எதிர்நோக்கி இருக்கிறேன் " என்று விக்ரம் கூறியிருக்கிறார்.

என்னோடு நீயிருந்தால் உயிரோடு நானிருப்பேன்: பாடலாசிரியர் கபிலனின் ‘ஐ’ அனுபவங்கள்

கோலிவுட்டின் முன்னணி இயக்குநர்கள் விரும்பும் பாடலாசியர், கபிலன். ஏ.ஆர். ரஹ்மான் இசையில் தீபாவளி வெளியீடாக வரவிருக்கும் ஷங்கரின் ‘ஐ’ படத்தில் மூன்று பாடல்கள் இவரது கைவண்ணத்தில் வருகிறது. ‘உன் சமையல் அறையில் உப்பா? சர்க்கரையா?’, ‘எகிறிக் குதித்தேன் வானம் இடித்தது’, ‘கரிகாலன் காலப் போல’ ‘இன்னும் கொஞ்ச நேரம் இருந்தாதான் என்ன?’ இப்படி கணக்கிட முடியாத வெற்றிப் பாடல்களைத் தொடர்ந்து கொடுத்து வரும் பாடலாசிரியர் கபிலன் ‘தி இந்து’ வுக்காக அளித்த கவித்துவப் பேட்டி.. 


‘ஐ’ படத்தின் பாடல்கள் எப்படி வந்திருக்கிறது? 


 
‘பாய்ஸ்’ படத்தின் மூலம் ஏ.ஆர்.ரஹ்மானிடமும், ‘அந்நியன்’ படம் வழியே ஹாரிஸ் ஜெயராஜிடமும் என்னை அறிமுகப்படுத்தியவர், இயக்குநர் ஷங்கர். நான் அடுத்தகட்ட உயரத்துக்குச் செல்ல காரணமாக இருந்தவரும் அவரே. ‘ஐ’ படத்துக்காக 



‘‘என்னோடு நீயிருந்தால்
உயிரோடு நானிருப்பேன்
உண்மைக் காதல் யாதென்றால்
உன்னை என்னைச் சொல்வேனே..
நீயும் நானும் பொய்யென்றால்
காதலைத்தேடிக் கொல்வேனே
கூந்தல் மீசை ஒன்றாக ஊசி நூலில் தைப்பேனே
தேங்காய்க்குள்ளே நீர்போல
உன்னை நெஞ்சில் தேக்கி வைப்பேனே...
வத்திக்குச்சி காம்பில் ரோஜா பூக்குமா?
பூனை தேனைக் கேட்டால் பூக்கள் ஏற்குமா? 



இப்படியான வரிகளோடு பயணிக்கும் பாடல் ஒன்றை எழுதியிருக்கிறேன். இந்தப் பாடலை பெண் பாத்திரத்துக்கான சிறு மாற்று வரிகள் சேர்த்தும் மற்றொரு பாடலாக எழுதி யிருப்பேன். 



இன்னொரு பாடல் சென்னை பேச்சுத் தமிழில் எழுதப்பட்டுள்ளது. அந்த அனுபவம் வித்தியாசமாகவே இருந்தது. இந்தப் பாடல், வடசென்னையைச் சேர்ந்த காதலன் ஒருவன் தன் காதலியை வர்ணித்து பாடுவதாக படமாக்கப்பட்டுள்ளது. இதற்காக வடசென்னை மக்கள் பயன்படுத்தும் வார்த்தைகளைக் குறிப்பெடுத்து அவர்கள் மொழியிலேயே பாடலை எழுதினேன். கொடக்கானல் மலை உச்சியில் ஷங்கருடன் அமர்ந்து இப்பாடலை எழுதினேன். பாடல் முழுவதும் தயாரானதும் இயக்குநர் ஷங்கர், ‘‘உங்களை உச்சத்துக்குக் கொண்டு போகப்போகிற பாடல் இது’’ என்றார். அந்த வரிகள்தான்.. 



‘‘நான் வண்ணாரப்பேட்டை
நீ வெண்ணிலா மூட்டை
ஒரு மாட்டுக்கொம்பு மேல
பட்டாம்பூச்சிபோல..’’ இந்தப் பாடலை இசையமைப்பாளர் அனிருத் பாடியிருக்கிறார். 


இயக்குநர் ஷங்கரோடு நிறைய படங்களில் பணியாற்றி இருக்கிறீர்கள். அந்த அனுபவங்கள் எப்படி? 

 
எளிமையான வரிகளைப் பெறுவதில் இயக்குநர் ஷங்கர் மிகவும் திறமையானவர். அவருடன் அமர்ந்து பாடலுக்கான பல்லவியைப் பிடிப்பது ஓர் அழகான அனுபவமாக இருக்கும். என்னைக் கேட்டால் பல்லவி என்பது உயிருக்குத் தலை மாதிரி; ரயிலுக்கு இன்ஜின் மாதிரி. அது பிடித்தமாதிரி அமைந்துவிட்டால் அடுத்தடுத்து வரிகளைப் பிடிப்பது எளிது. ‘ஒரு ஊர்ல ஒரு ஆயா வடை சுட்டாங்களா!’ என்று ஒரு குழந்தைக்கு கதை சொல்வதைப்போல எளிமையாகப் பாடலுக்கான சூழலை விளக்குபவர், ஷங்கர். ஒரு பாடலை எப்படி படமாக்கத் திட்டம் என்பதில் தொடங்கி பென்சில் பிடித்து படம் வரைந்து விவரிப்பார். பாடலில் நாயகன், நாயகியின் அணிகலன், ஆடைகளின் வண்ணங்கள் இவற்றையெல்லாம் பகிர்வார். அந்த சூழலே நம்மை அற்புதமான மனநிலைக்குக் கொண்டுபோய்விடும்

.
‘தெகிடி’ படத்தின் பாடலில் ஓர் இடத்தில் காதல் இரண்டெழுத்து என்று எழுதியிருக்கிறீர்களே? 

 
‘விண்மீன் விதையில் நிலவாய் முளைத்தேன்’ என்று தொடங்கும் பாடல் அது.
மழையின் இசை கேட்டு மலரே தலையாட்டு…
மழலை மொழி போல மனதில் ஒரு பாட்டு
இனி நீயும், நானும் ஒன்றாய்ச் சேர்ந்தால் காதல் இரண்டெழுத்து…’ 



இப்படித்தான் அந்தப் பாடல் வரிகள் நகரும். பலர் என்னிடம் அது எப்படி காதல் இரண்டெழுத்து? என நேரடியாகவும், சமூக வலைதளங்களின் வழியாகவும் கேட்கிறார்கள். சங்க இலக்கியத்தில் ‘கா’ என்பதற்கு சோலை என்ற ஒரு பொருள் உள்ளது. அந்தக் காலத்தில் பெரும்பாலும் காதலர்கள் சோலையில்தான் சந்திப்பார்கள். அடுத்து ‘த’ என்றால் தந்து பெறுதல். காதலர்கள் அன்பைத் தந்து பெறுபவர்களாச்சே. ‘ல்’ என்பது இல்லறம், இல்வாழ்க்கை, குடும்பம். இந்தப்படப்பாடலின் சூழலில் நாயகன், நாயகி இருவரும் காதலர்களாக மட்டுமே இருக்கிறார்கள். அவர்கள் அப்போது குடும்ப வாழ்க்கையைத் தொடங்காமல்தான் இருக்கிறார்கள். அந்த சூழலில் ‘காதல்’ இரண்டெழுத்து என்பது சரிதானே. 


பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம், கண்ண தாசன் போன்ற கவிஞர்கள் இருந்த சூழலைப் போல இப்போதும் பாடலாசிரியர்கள் மீது அதே மதிப்பு உள்ளதா? 


 
இப்போது பாடலாசிரியர்களின் எண்ணிக்கை அதிகம். புதிதாக வருபவர்கள் தங்களைச் சரியாகத் தயார்படுத்திக்கொள்ள வேண்டும். இசை தெரியாதவர்கள் இசையமைப்பாளராக முடியாது. இன்றைக்கு வேறு துறையில் இருப்பவர்கள் பலர் பொழுதுபோக்காகப் பாடல் எழுதுகிறார்கள். அதற்குப் பெரிதாகத் தொகை எதுவும்கூட வாங்குவதில்லை. ஒரு கவிஞனிடம் அந்தப் பாடலைக் கொடுத்தால் அவன் வீட்டில் அடுப்பெரியும். இப்படிப்பட்ட சூழலுக்கு இடையே இன்று நல்ல பாடல்களும் வந்துகொண்டுதான் இருக்கிறது. 



அடுத்த உங்களது புதிய படைப்புகள்? 

 
‘குறில் நெடில்’, ‘நகர்ப்பறை’ ஆகிய இரண்டு கவிதைத் தொகுப்புகளும், ‘எகிறி குதித்தேன் வானம் இடித்தது’ என்ற கட்டுரைத் தொகுப்பும். எழுதி முடித்துத் தயாராக உள்ளன. இன்னும் வடிவமைப்பு உட்பட சில பணிகள் மட்டும் மீதமுள்ளது. 


கவிஞர் வாலியின் பிரிவு தமிழ்த் திரைத்துறை யில் எந்தமாதிரியான வெற்றிடத்தை ஏற்படுத்தி யுள்ளது? 

 
ஐந்து தலைமுறைக்குப் பாடல் எழுதிய கவிஞர். எம்.ஜி.ஆர் தொடங்கி சிம்பு, சிவகார்த்திகேயன் வரைக்கும் பாடல்கள் எழுதியவர். நடப்பு நிகழ்வுகளைக் கூர்மையாக வைத்திருந்தவர். கார்கில் யுத்தம், மின்வெட்டு, நிலக்கரி ஊழல் இப்படி எதையும் பாடல் வழியே பேசியவர். இறுதி நாட்கள் வரைக்கும் வாய்ப்புகள் அவரைத் தேடியே போனது. அவரது மறைவின்போது நான் எழுதிய வரிகள்தான் என் நினைவுக்கு வருகின்றன..
கடவுள் இருந்திருந்தால்
ஒரு விபூதி சாம்பலாகியிருக்காது. 



உங்கள் பாடல் வரிகள் படத்தின் தலைப்பாக வரும்போது எப்படி உணர்வீர்கள்? 

 
மகிழ்ச்சியாகத்தானே இருக்கும். சமீபத்தில்கூட ‘உன் சமையல் அறையில்’ என்கிற தலைப்பில் ஒரு படம் வந்தது. என்ன ஒரே ஒரு வருத்தம் மட்டும் உண்டு. ஒரு கவிஞன் எழுதிய பாடல் வரிகளைப் பயன்படுத்தும்போது அந்தக் கவிஞனை அழைத்து அந்தப்படத்தில் பாடல் எழுதச் சொல்லலாமே என்பதுதான் அது. 









thanx - the hindu

Sunday, February 16, 2014

ஷங்கரின் 'ஐ' வெளியீடு - வீடியோ திட்டம்

ஐ' படத்தினை விளம்பரப்படுத்த இயக்குநர் ஷங்கர் படம் உருவான விதத்தின் வீடியோவே போதுமானது என்று திட்டமிட்டு இருக்கிறார்.
விக்ரம், ஏமிஜாக்சன், ராம்குமார், சுரேஷ் கோபி, சந்தானம் உள்ளிட்ட பலர் நடிப்பில், தமிழ் சினிமாவில் உருவாகி வரும் மெகா பட்ஜெட் படம் 'ஐ'. ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்க, பி.சி.ஸ்ரீராம் ஒளிப்பதிவு செய்ய ஷங்கர் இயக்கியிருக்கிறார்.



படத்தில் விக்ரம் என்ன லுக்கில் வருகிறார் என்பதை கூட ஷங்கர் வெளியிடவில்லை. இப்படத்தினைப் பற்றிய செய்திகள் எல்லாமே மர்மமாகவே இருக்கிறது. இறுதிகட்ட படப்பிடிப்பு சென்னையில் துவங்கவிருக்கிறது. பிரம்மாண்ட அரங்கில் பாடல் காட்சி ஒன்றை காட்சிப்படுத்த இருக்கிறார்கள்.



இந்நிலையில், படத்தினை விளம்பரப்படுத்த படம் உருவான வீடியோ பதிவே போதும் என்று திட்டமிட்டு இருக்கிறாராம் ஷங்கர். பேட்டிகள் எல்லாம் கொடுத்துவிட்டு, படம் உருவான விதத்தினை டிவி சேனல்களில் கொடுத்தாலே போதும், மக்கள் ஆச்சர்யப்பட்டு விடுவார்கள் என்று திட்டமிட்டு இருக்கிறாராம்.


ஏனென்றால், விக்ரமின் உழைப்பு, பாடல்களுக்காக செட்கள் போடப்பட்ட விதம், பாடல்களுக்கு விக்ரமிற்கு போடப்பட்ட மேக்கப், சண்டைக் காட்சிகள் உருவான விதம் என எல்லாவற்றையுமே வீடியோவாக எடுத்திருக்கிறார்கள்.



இந்த வீடியோ பதிவை பார்த்தாலே வியப்படைந்து விடுவார்கள். ஆகையால் பேட்டி கொடுத்துவிட்டு, இந்த வீடியோவை கொடுத்து விடலாம் என்று திட்டமிட்டு இருக்கிறாராம்.

a





a


a










a







Thursday, January 03, 2013

ஷங்கரின் ஐ பட காமெடி டிராக்கில் நான் - பவர் ஸ்டார் பட்டாசு பேட்டி

http://tamil.oneindia.in/img/2012/06/01-powerstar-srini-300.jpg 
"கோடிக்கணக்கான ரசிகர்களுக்கு நான் அண்ணேன்டா!"

க.ராஜீவ்காந்தி
படங்கள் : ஜெ.தான்யராஜு
ப்பாடா... உலகம் அழியலையே!’ எனப் பெருமூச்சு விடுபவர்களுக்கு... ''அப்படி எல்லாம் உங்களை ரிலாக்ஸ் ஆக விட மாட்டேன்ல!'' என்று துள்ளித் தொடை தட்டி வருகிறார் உங்கள் 'பவர் ஸ்டார்’ கம் அக்குபஞ்சர் டாக்டர் சீனிவாசன். ஜெயலலிதா, ரஜினி, கமல், ஷங்கர், சிம்பு, சந்தானம் என்று நான் கேட்ட கேள்விகளும் சரி, அதற்கு பவர் ஸ்டார் அளித்த பதில்களும் சரி... செம சீரியஸ்தான். ஆனால், அதைப் பேட்டியாகப் படிக்கும்போது, 'இது ஜாலி பேட்டிதானே’ என்று எழும் எண்ணத்தைத் தவிர்க்க முடிகிறதா... பாருங்கள்


http://tamildigitalcinema.com/wp-content/uploads/2011/04/Anandha-Thollai-21-10-2010-0000.jpg



காலர் டியூனா 'அம்மா என்றழைக்காத’ பாட்டு வெச்சிருக்கீங்களே... வழக்குகள்ல இருந்து தப்பிக்கத்தானே?'' 


'எனக்கு அம்மான்னா ரொம்பப் பிடிக்கும். என் சொந்த அம்மா மட்டும் இல்ல... 'அம்மா’வும்தான். அவங்களுக்காகத்தான் இந்தப் பாட்டு வெச்சிருக்கேன். இன்னொண்ணு... தாயில்லாமல் நானில்லை!''



''ஆக்ச்சுவலா உங்க வயசு என்ன?''



''என் அருமைத் தம்பி சிம்புவைவிட 10 வயசு... கம்மி!''


''சார், சிம்பு கோச்சுக்கப் போறாரு?''



''அட... நீங்க வேற! என்னைப் பார்த்தாலே அவர் சிரிச்சுடுறாரு! 'எத்தனையோ பேரைச் சிரிக்கவெச்சிருக்கேன். என்னையே சிரிக்கவெச்சது நீங்கதான்’னு என்கிட்டயே சொல்லிஇருக்காப்ல. நம்ம மேல அவருக்கு ரொம்ப மரியாதை!''



''ஸோலோ ஹீரோவா பட்டையக் கிளப்பிட்டு இருந்தீங்க. இப்ப ஏன் மூணு ஹீரோ சப்ஜெக்ட்ல நடிச்சு உங்க பேரைக் கெடுத்துக்குறீங்க?''



''என்ன தம்பி இப்படிக் கேட்டுட்டீங்க... சந்தானம் தம்பிகூட நடிக்கிறதெல்லாம் எவ்ளோ பெரிய வாய்ப்பு. இருந்தாலும், உங்களை மாதிரி தீவிரமான ரசிகர்களுக்காக(!) சோலோவாகவும் நடிப்பேன். அப்பப்போ காம்பினேஷன்லயும் நடிப்பேன்!''



''சந்தானம் ஷூட்டிங் ஸ்பாட்ல உங்களைக் கண்டபடி கலாய்ச்சுட்டே இருந்தாராமே?''



''சந்தானம்கூட எனக்கு கெமிஸ்ட்ரி ரொம்ப நல்லா வந்திருக்கு. எனக்கு ஒரு தம்பி இல்லையேங்கிற ஏக்கத்தைப் பூர்த்தி செஞ்சுட்டாரு சந்தானம் தம்பி. அடுத்த ஜென்மம்னு ஒண்ணு இருந்தா, அந்தத் தம்பியே எனக்குத் தம்பியாப் பொறக்கணும்!''



''நடிக்கிறதுக்கு ஹோம்வொர்க் பண்ணுவாங்களே... நீங்க எந்தப் படத்தைப் பார்த்து உற்சாகப்படுத்திக்குவீங்க?''


'' 'பாட்ஷா’தான். அந்தப் படத்தை 30 தடவை பார்த்துட்டுதான் நடிக்கணும்கிற வெறி எனக்குள்ள வந்துச்சு!''


''உங்க ரசிகர்கள் பற்றி..?''


''என்னை நம்பி இருக்கிற கோடிக்கணக்கான ரசிகர்கள்பத்தி நினைச்சாலே, எனக்குக் கண்ணீர் வந்துடும். 'உயிரை விடு’னு சொன்னா, விடுற அளவுக்கு எனக்கு ரசிகர்கள் இருக்காங்க. இவங்கள்லாம் எனக்கு எப்படிக் கிடைச்சாங்கன்னு இப்ப வரை தெரியலை. எல்லாமே பாபா வோட அருள்!''



'' 'ஐ’ படத்துல ஒலிம்பிக் போட்டியில் கலந்துக்கிற விக்ரமுக்கு நீங்கதான் கோச்சாமே... உண்மையா?''



''ஷ்...ஷ்ஷ்... அப்படிலாம் இல்லை. இந்தப் படத்துலயும் சந்தானம்தான் எனக்கு பார்ட்னர். படம் ஃபுல்லா வருவோம். காமெடி பண்ணுவோம். கதையை வெளியே சொல்லக் கூடாதுனு ஷங்கர் சார் கண்டிச்சுச் சொல்லியிருக்காரு. அதனால கதை வேண்டாம்!''



''உங்க பாடிகார்டு எத்தனை பேர்? அவங்களுக்கு எவ்ளோ சம்பளம் தர்றீங்க?''


''எல்லாருமே பிரியப்பட்டு, 'அண்ணன்’கிற அன்புக்குக் கட்டுப்பட்டு இருக்காங்க. யாரும் பணத்துக்கு ஆசைப்பட்டு இல்லை.''



''2013-ல தமிழ்நாட்டு மக்களுக்கு என்ன பரிசு கொடுக்கப்போறீங்க?''  



''நான் நடிச்ச நிறையப் படங்கள் வெயிட்டிங் லிஸ்ட்ல இருக்கு. ஆனா, சந்தானம் தம்பி கேட்டுக் கிட்டதால நிறுத்திவெச்சிருக்கேன். சீக்கிரமே 'மன்னவன்’, 'தேசிய நெடுஞ்சாலை’, 'சீனு எம்.ஏ.பி.எல்’னு வரிசையா படங்கள் வெளிவரும்!''


https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgbmzmXqjqHN4NBDi1IsW3HRA_7Elk4G50tADDzP0QtnlpEkTPm3BdHti9HTYv0T4GzrS3YynWj5YJ8ZyA5XHPaAcB16eWiiW1SEHYDBVKGK5qUtf44wT01lva1QNc3yc8h0W1peU9d9Q4/s1600/Meenakshi-srinivasan-Hot-In-Lathika-Movie-Stills.jpg


''விக் இல்லாமலேயே அழகாத்தானே இருக்கீங்க... அப்புறம் எதுக்கு டோப்பா எல்லாம்?''



''ஹலோ தம்பி... இது நேச்சுரல் முடி. நம்புங்க! நான் சில படங்களுக்காக, அந்த கேரக்டர் கேட்டுக் கிட்டதால மொட்டை அடிச்சதைப் பார்த்து எனக்கு சொட்டைத் தலைனு நினைச்சுட்டாங்க. ஆனா, இதுதான் ரியல்!''



''நீங்க ரஜினியை ஃபாலோ பண்றீங்கன்னு பார்த்தா, திடீர்னு 'விஸ்வரூபம்’ கமல் மாதிரி ஸ்டெப்ஸ் போடுறீங்களே?''


''உலக நாயகனோட யாரும் போட்டி போட முடியாது. அவர் வேற பாணி. இது பவர் பாணி!''



''நீங்க நடிக்கிற படத்துக்குனு பஞ்ச் டயலாக் யோசிச்சு வெச்சிருப்பீங்களே... அதைக் கொஞ்சம் சொல்லுங்க?''


''ம்ம்ம்... சூப்பர் ஸ்டாருக்குப் போட்டின்னா... அது பவர் ஸ்டார்தான்!''



''ஓ... அப்போ ரஜினி மட்டும்தான் உங்களுக்குப் போட்டியா இங்கே?''


''ஆங்... ஆமாதானே... இல்லையா? அவர்கூட போட்டி இருக்கு. ஆனா, பொறாமை கிடையாது. இதை அவரோட தீவிர ரசிகனா சொல்றேன்!''


''நீங்க நல்லவரா... கெட்டவரா?''


''அது எனக்கே தெரியலையே!'' 


நன்றி - விகடன்


https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiqqGnrsG6K2LpReTmUDWKNu7Y5pgD24S81uNtZ6FlsnNP0HC34K4mgVsd0U4ASM3NAY1_XMbYU7d2TpRdIfqDOAyQkqUgaxJbO_nJH4eTsdNmyX1EHlwZEUr5X1DiBBWctpC2R1vCwBZM/s1600/power.jpg

Saturday, November 10, 2012

கலைஞரும் , கலைமாமணி பட்டமும் - திண்டுக்கல் ஐ லியோனி பேட்டி




      தனது நாவன்மையால் பட்டிமன்ற மாமன்னராகத் திகழ்ந்து கொண்டிருக்கிறவர் திண்டுக்கல் லியோனி.

அவர் வாய் திறந்தால், கருவில் இருக்கும் குழந்தைகள் முதல் கல்லறைக் குப்போன முதியவர்களும்கூட வாய்விட்டுச் சிரிப்பார்கள். அத்தகைய நகைச்சுவை ஆற்றல்கொண்ட லியோனி கடல் கடந்தும் தமிழ் முழக்கம் செய்து வருகிறார்.  "இனிய உதய'த்துக்காக அவரை நாம் கேள்விகளோடு சந்தித்தபோது...

இன்று மிகப் பிரபல மான பேச்சாளராகப் புகழ்பெற்றிருக்கிறீர்கள். உங்கள் பேச்சாற்றலுக்கு முன்மாதிரி யார் ?

என் பேச்சாற்றலுக்கு முன்மாதிரியாக இருந்தவர், எனக்குத் தமிழ் சொல்லிக்கொடுத்த என் தமிழாசிரியர், பெரும்புலவர் ஆர். ராகசாமி அவர்கள்தான். தற்போது அவர் தஞ்சை மாவட்டம் திருக்காட்டுப் பள்ளியில்  வசித்துவருகிறார். அவர் போட்டுக்கொடுத்த தடத்தில்தான் என் பயணம் உற்சாகமாகத் தொடர்ந்துகொண்டிருக்கிறது.

உங்கள் இளமைக்காலம் பற்றிச் சொல்லுங்கள்?

நான் திண்டுக்கல் ஆரோக்கிய மாதா கோவில் தெருவில் இருக்கும் புனித சின்னப்பர் நடுநிலைப் பள்ளியில் படித்தேன். தற்போது அது புனித பால் உயர்நிலைப் பள்ளியாய் உருமாறி உயர்ந்து நிற்கிறது.  நான் பெரிய குடும்பத்தில் பிறந்தவன். எனக்கு ஆறு சகோதரர்கள், மூன்று சகோதரிகள். மிகமிக வறுமையான சூழ்நிலையில் வளர்ந்தேன். அதேசமயம் என் உறவினர்கள் பலர் இசை, நாடகம், நகைச்சுவை போன்றவற்றில் ஆர்வம் கொண்ட வர்களாக இருந்தார்கள். எனவே இசையும் நகைச்சுவையும் என் இளமைப் பருவத்திலேயே என்னுடன் ஒட்டிக்கொண்டன. அவை நான் பெற்ற வாழ்வின் கொடைகள்.

பொதுவாக, பேசிப்பேசியே பொழுதைக் கழிக்காதே வீணாகிவிடுவாய் என்று அறிவுரை சொல் லுவார்கள். ஆனால் இந்த அறிவுரை உங்கள் விசயத் தில் பொய்த் துப் போய்விட்டதே. எப்படி?

இதுவும் எனக்குக் கிடைத்த இயற்கை யின் கொடைதான். பொதுவாக பேசிப்பேசியே வீணாகக் கழிக்கும் பேச்சு, பிரச்சினைகளைத்தான் உண்டாக்கும். நேரத்தையும்  அது விரயமாக்கும். ஆனால் நான் மேடையில் பேசும் பேச்சு, மக்களை சிரிக்கவும் சிந்திக்கவும் வைக்கிறது. என் பேச்சைக் கேட்பவர்கள் இன்னும் பேசுங்கள் என்று கேட்பதும் கட்டணம் கொடுத்து என்னைப் பேச அழைப்பதும்தான் இதுவரை நான் கண்டது. மனிதன், மற்றவர்களிடம் தனது கருத்தைப் பரிமாறிக்கொள்ளக் கிடைத்த ஓசை வடிவம்தான் பேச்சு. சிந்தனையாளர்களின் பேச்சு வரலாற்றில் பல அரிய நல்ல காரியங்களை ஏற்படுத்தி யிருக்கிறது. அறிஞர் அண்ணாவைப் போன்ற தலைவர்களின் பேச்சு, அரசியலில் மிகப்பெரிய புரட்சியையே உண்டாக்கியிருக்கிறது. தந்தை பெரியாரைப் போன்ற சீர்திருத்தச் சிந்தனையாளர்களின் பேச்சு, நம்பமுடியாத அளவிற்கு சமுதாய மறுமலர்ச்சியை உண்டாக்கியிருக்கிறது.

எனவே பேச்சுக்கலை என்பது பொழுதைப் போக்கக் கூடிய விசயம் அல்ல; பொழுதை ஆக்கக்கூடிய விசயம். எனது பேச்சாற்றலும் அப்படிப்பட்ட புரட்சியை உண்டாக்க வேண்டுமென்று ஆசைப்படுகிறேன்.

பள்ளிப் பருவத்தில் நீங்கள் பேசி, பரிசு பெற்றதுண்டா?

புனித சின்னப்பர் நடுநிலைப் பள்ளியில் நான் ஏழாம் வகுப்பு படித்தபோது, பேச்சுப் போட்டியில் மூன்றாம் பரிசாக ஒரு பிளாஸ்டிக் சோப்பு டப்பா வைப் பெற்றேன். அது மற்றவர்களுக்கு வேண்டு மென்றால் வெறும் பிளாஸ்டிக் டப்பா. என்னைப் பொறுத்தவரை நான் முதன்முதலில் வாங்கிய கோல்ட் மெடல். அதுதான் இன்றுவரை எனக்குள் நம்பிக்கையைக் கொடுத்துக் கொண்டிருக்கிறது.

உங்கள் முதல்மேடை அனுபவம்?

நான் முதன்முதலாகப் பட்டிமன்றம் பேசியது திண்டுக்கல் மேட்டுப்பட்டி பங்கு சர்ச் விழாவில் தான். அப்போது நடுவராக இருந்தவர் மரியாதைக்குரிய பட்டிமன்ற ஜாம்பவான் அய்யா பேராசிரியர் சாலமன் பாப்பையா. ஏசுநாதர் செய்தது சமயப் புரட்சியா? சமுதாயப் புரட்சியா? என்ற தலைப்பில்  நடந்த அந்த பட்டி மன்றத்தில் நான், சமயப் புரட்சி என்ற தலைப்பில் பேசினேன். ஆனால் அன்றைய பேச்சு எனக்கே பிடிக்கவில்லை. காரணம் அது சரியாய் சோபிக்கவில்லை. "ஆஹா! வேலைக்கா காது போலிருக்கே' என்று மனம் நொந்துபோனேன். அப்போது அந்த ஆலயத்தின் பங்குத் தந்தைதான், ""கவலைப்படாதே, நீ நன்றாகப் பேசினாய். உன்னிடம் விசயம் இருக்கிறது'' என்று என்னை உற்சாகப்படுத் தினார். அந்த உற்சாகம்தான், அந்த முதல் மேடையில் தோற்ற என்னை, இன்று வெற்றியாளனாக ஆக்கியிருக் கிறது.

உங்கள் பேச்சாற்றலுக்குக் கிடைத்த  மிகப் பெரிய பாராட்டாக எதைக் கருதுகிறீர்கள்?

தமிழுக்காகவும் தமிழர்களுக்காகவும் வாழ்ந்து கொண்டிருக்கும் மாபெரும் இலக்கியவாதியும், தேர்ந்த எழுத்தாளர், பேச்சாளர், அரசியல் தலைவர் என்ற மகுடங்களோடு கம்பீரமாக வாழ்ந்து கொண்டிருப்பவரும் முத்தமிழறிஞருமான டாக்டர் கலைஞரிடம், நான் பெற்ற பாராட்டுகளையே மிகப்பெரிய பாராட்டுகளாகக் கருதுகிறேன். எனது பட்டிமன்றப் பேச்சை முழுதாய் உட்கார்ந்து கேட்டு ரசித்து, அகம் மகிழ்ந்து என் நெற்றியிலே முத்தமிட்டு வாழ்த்தினாரே, அதைவிட வேறு என்ன  பாராட்டு எனக்கு வேண்டும்? நான் பெற்ற முத்தங்களிலேயே மறக்க முடியாத முத்தப் பரிசு அவரது  முத்தப் பரிசுதான். அதுமட்டுமல்லாது 2011-ல் என்னைப் பாராட்டி கலைமாமணி விருதை தனது கரங்களால் எனக்கு வழங்கி சிறப்பித்தி ருக்கிறார் கலைஞர்.

உங்களால் மறக்கமுடியாத மேடை அனுபவம்?

 பட்டிமன்றங்களுக்கு வருவதற்குமுன் 85-களில் ஆசிரியர் போராட்ட மேடைகளில் நான் பேசிப் பழகிக்கொண்டிருந்தேன். அப்போது திண்டுக்கல் பழைய பேருந்து நிலையத்தில் ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்களின் ஆர்ப்பாட்டம் நடந்தது. அதில் நான் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் பாடிய "கையில வாங்கினேன் பையில போடலை, காசு போன இடம் தெரியலை' என்ற பாடலைப் பாடி அதற்கு விளக்கமும் சொன்னேன்.
 அப்போது தள்ளுவண்டி வைத்துப் பிழைக்கும் ஒரு வயதான பெரியவர், என்னிடம் வந்து, தன் வேட்டி முடிப்பில் இருந்து மூன்று ரூபாய்க்கான நாணயங்களை எடுத்து என்னிடம் கொடுத்து, "நீ நல்லா பேசுறே, பெரிய ஆளா வருவே' என்று வாழ்த்தி, வியர்வை வடிந்து கொண்டிருந்த தனது முகத்தை என் கைகளில் பதித்து, ஒரு முத்தம் கொடுத்தார். எனக்குக் கிடைத்த மக்களின் மாபெரும் அங்கீகாரமாக இதைத்தான் இப்போதும் நினைக்கிறேன்.

உங்கள் திருமணம் காதல் திருமணமா?

ஆமாம். காதல் திருமணம்தான்.

நீங்கள் கேட்டு வியந்த பேச்சு யாருடைய பேச்சு?

முத்தமிழறிஞர் கலைஞரின் பேச்சுகளைக் கேட்டுக் கேட்டு நான் வியந்திருக்கிறேன். தேர்தலில் தி.மு.க. வெற்றி வாய்ப்பை இழந்தபோது, நிருபர்கள் இது பற்றி என்ன நினைக்கிறீர்கள்? என்று அவரிடம் கேட்டனர். அப்போது கலைஞர், "ஒரு தாய் தனது குழந்தையைத் தலைக்கு மேலே தூக்கிக் கொஞ்சுகிறபோது அது முகத்திலே சிறுநீர் கழித்துவிட்டால், அந்தக் குழந்தையை தாய் வெறுப்பாளா? மாட்டாள். தன் முகத்தை சுத்தப்படுத்திக்கொண்டு மீண்டும் குழந்தையைக் கொஞ்ச ஆரம்பிப்பாள். அந்தத் தாயைப் போலத்தான்  நானும்' என்றார். இப்படிப் பட்ட  கலைஞரின் சமயோஜிதப் பேச்சாற்றல் பலரை யும் வியக்க வைத்திருக்கிறது.

நீங்கள்  படித்த ஆசிரியர்கள் உங்களைப் பார்க்கும்போது என்ன சொல்வார்கள்?

எனது ஆசிரியர்களை நான் சந்திக்க நேரும் போதெல்லாம் அவர்கள், "வகுப்பில் நாங்கள் பார்த்த உனக்கும் இப்போது இருக்கும் உனக்கும் சம்பந்தமே இல்லையே' என்று வியப்பார்கள். நான் படித்த காலத்தில் செய்த சேட்டைகளால் பெற்ற தண்டனைகள் அதிகம். அவர்களது அடிகளால் ஏற்பட்ட வடுக்களை நான் அவர்களிடம் காட்டியிருக்கிறேன்.

அப்போது அவர்கள் ஒருவித கூச்சத்தோடு, இப்போதைய எனது நிலைக்கு தங்கள் மகிழ்ச்சியைத் தெரிவிப்பார்கள் பாருங்கள். அந்த ஆனந்தத்திற்கு ஈடு இணையே இல்லை.


உங்கள் பலம் எது? பலவீனம் எது?

எந்தத் தலைப்பு கிடைத்தாலும் அதைப் பற்றிப் பேசமுடியும்- மக்களைக் கவரமுடியும் என்று நினைப்பது எனது பலம். அளவுக்கு அதிகமாக எளிமையாக இருப்பதும், பிறர் சொல்வதை உடனே நம்புவதும் எனது பலவீனம்.

எல்லாரையும் சிரிக்க வைக்கும் உங்களைக் கலங்க வைத்த  சம்பவம் எது?

எனது தந்தையார் பெயர் இன்னாசி. உடற்பயிற்சி ஆசிரியராக இருந்து ஓய்வுபெற்றவர். என்மீது அளவு கடந்த அன்பைப் பொழிந்தவர். எனக்கும் அப்பாமீது அளவு கடந்த பிரியம். அவரோடு 24-8-98 இரவில் பேசிக்கொண்டிருந்தேன். என்னுடன் மேலும் பேசிக்கொண்டிருக்க அப்பா ஆசைப்பட்டார்.

ஆனால் நானோ, அப்பா தூங்கட்டுமே என்று விரைவாக விடைபெற்று வீட்டுக்கு வந்துவிட்டேன். அடுத்த அரைமணி நேரத்தில் அவரது இறப்புச் செய்தி வந்து என்னை நிலைகுலைய வைத்தது. அவர் கடைசியாக விரும்பியதுபோல் இன்னும் கொஞ்சம் நான் பேசிக்கொண்டிருந்தால் அந்த மகிழ்ச்சியில் மேலும் சிலகாலம் அவர் வாழ்ந்திருக்கலாமோ என்று தோன்றுகிறது. என் அப்பாவின் மறைவுதான் என்னை ரொம்பவே கலங்க வைத்துவிட்டது.

அரசியல் மேடைகளிலும் தைரியமாக ஏறுகிறீர்களே எப்படி?

 நான் தற்போது திராவிட முன்னேற்றக் கழக மேடைகளில் ஏறிப் பேசிவருகிறேன். ஜாதி, மதம்... இந்த இரண்டும்  இல்லாமல் ஒரு மனிதனால் வாழ்ந்துவிட முடியும். ஆனால் மொழி இல்லாமல் எந்த மனித இனத்தாலும் வாழமுடியாது. நம் தாய்மொழியான தமிழைப் பாதுகாக்கவும் மூட நம்பிக்கைகளை ஒழிக்கவும் ஜாதிக் கட்டமைப்பு களைத் தகர்த்தெறியவும் தமிழர்களின் உரிமைகளுக் காகக் குரல்கொடுக்கவும் உழைத்துவருகிற ஒரே இயக்கம், திராவிட முன்னேற்றக் கழகம். எனவேதான் அந்தக் கட்சியின் கொள்கைகளால் ஈர்க்கப்பட்டேன். நான் நினைப்பது சரி என்று தோன்றியதால் தி.மு.க. மேடைகளுக்கு வந்தேன். அதன் விளைவுகளை சந்திக்கத் தயாராக இருப்பதால்தான், துணிச்சலாக தி.மு.க.வின் அரசியல் மேடைகளில் ஏறுகிறேன்.

உங்களுக்குப் பிடித்த இலக்கியவாதி யார்?

புரட்சிக் கவிஞர்  பாரதிதாசன். மொழிப் பற்று, மூட நம்பிக்கை ஒழிப்பு, அழகியல் என எல்லா அம்சங்களும் கலந்த பாடல்களை எழுதி தமிழ் உணர்வை யும் ஊட்டி தமிழர்களைத் தட்டி எழுப்பியவர் அவர். அவரது "எங்கள் வாழ்வும் எங்கள் வளமும் மங்காத தமிழென்று சங்கே முழங்கு' என்ற பாடலைப் பாடிதான் எனது எல்லாப் பட்டிமன்ற பேச்சுகளையும் நான் தொடங்குகிறேன்.

நீங்கள் சமீபத்தில் ரசித்த படைப்பு எது?

பேராசிரியர் சுப. வீரபாண்டி யன் எழுதிய "திராவிடத்தால் எழுந்தோம்' என்ற நூல்தான் நான் சமீபத்தில் படித்து, ரசித்து, சிந்திக்கத் தொடங்கிய நூல். திராவிட இயக்க வரலாற்றையும் திராவிட இயக்கம் மக்களிடம் ஏற்படுத்தியிருக்கும் மாற்றங் களையும் அந்த நூல் அற்புதமாக விளக்குகிறது. பஞ்சமர்களுக்கும்  பெண்களுக்கும் சுயமரியாதை யைப் பெற்றுக் கொடுத்த தோடு, அவர்களை இருளில் இருந்து மீட்டெடுத்த இயக் கம் திராவிட இயக்கம்  என்பது போன்ற தகவல் களை அழகாக மனதில் பதியும் வண்ணம் இந்த நூலில் விதைத் திருக்கிறார் சுப.வீ. எனக் குள் ஒரு சிந்தனை மாற்றத்தை ஏற்படுத்திய நூல் என்று கூட இதைச் சொல்லலாம்.

திரைப்படப் பாடல்களை மேடைகளில் அலசி ஆராய்கிற உங்களுக்கு, யாருடைய பாடல்கள் பிடிக்கும்?

அன்று முதல் இன்றுவரை நான் ரசிப்பது, மக்கள் கவிஞர் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் பாடல்களைத்தான். ஆழமான சிந்தனைகளை எளிய தமிழில் வெளியிட்டவர் அவர். பொதுவுடமைச் சிந்தனைகளை மிக எளிமையாகவும் அழுத்தமாகவும் பிரகடனப்படுத்தும் பாடல்கள் அவருடையவை. கல்யாணப் பரிசு படத்தில் "துள்ளாத மனமும் துள்ளும்' என்ற பாடலில் "துன்பக் கடலைத் தாண்டும்போது தோணியாவது கீதம்' என்ற வரிகளில் மிகச் சிறந்த கற்பனையை அள்ளிவீசியிருப்பார். இப்போது  அப்படிப்பட்ட பாடல்களை அதிகம்  கேட்க முடிவதில்லை. இப்போது வரும் பாடல்களில் பெரும்பாலானவை வெறும் டண்டனக்காதான்.

உங்கள் திரையுலக அனுபவங்கள் எப்படி?

நான் நடித்த ஒரே படம் "கங்கா கௌரி'. நடிகர் அருண் விஜய், வைகைப்புயல் வடிவேலு ஆகியோருக்கு அப்பாவாக நடித்தேன். ஒரு திரைப்பட நடிகனின் வாழ்க்கை எவ்வளவு கஷ்டமானது என்பதை அந்த ஒரே படத்தில் உணர்ந்துகொண்டேன். என்னை இயக்கிய இயக்குநர் மாதேஷ்வரன், தயாரிப்பாளர் விஷ்ணுராம் ஆகியோரை வாழ்நாள் முழுக்க என்னால் மறக்க முடியாது.

உங்களை வியக்க வைப்பவர்கள் யார்?

ஒருவர் கலைஞர். காரணம் 89 வயதிலும் ஓயாத உழைப்பும் அதீத நினைவாற்றல் கொண்டவராகவும் இருக்கிறார். இந்த வயதிலும் தொண்டர்களை நேரில் சந்திப்பதில் மகிழ்ச்சியடைகிறார். தேர்தல்களில் வெற்றி வாய்ப்பை இழந்தாலும் அவரது புன்னகை உதிர்வதே இல்லை. அவரது தன்னம்பிக்கை எவருக்கும் வராது.

இன்னொருவர்  கவியரசு கண்ணதாசன். உயர் நிலை வகுப்பைக்கூடத் தாண்டாத முத்தையா என்ற கிராமத்து வாசி, காலத்தால் அழியாத திரைக் காவியங்களை எழுதிக் குவித்திருக்கிறார்.

அதோடு அவர் எண்ணற்ற புத்தகங்களை எழுதி தமிழிலக்கியத்தையே திகைக்க வைத்திருக்கிறார்.

அடுத்தவர் கலைவாணர் என்.எஸ். கிருஷ்ணன். நகைச்சுவைக் கருத்துகள் மூலம் நாட்டுக்குத் தேவையான கருத்துகளை முற்போக்காகக் கூறியவர் அவர். அவரது இசையாற்றலும் வியக்கவைப்பதாகும். இதைவிட எல்லா நேரத்திலும் எந்த நிலையிலும் எவருக்கும் உதவக்கூடிய அவரது கொடைக்குணம் என்னை வியக்கவும் நெகிழவும் வைக்கிறது.

நீங்கள் நினைத்து நினைத்து சிரித்த விசயம் எது?

தூத்துக்குடி அருகில் கீழஈரால்  பக்கம் ஒரு கிராமம். அங்கு எங்களது பட்டிமன்றம் நடந்தது.

அப்போது எங்கள் குழுவைச் சேர்ந்த பேச்சாளர்  வதிலை ராஜா  பேச எழுந்தபோது, மேடையே  ஒரு குலுங்கு குலுங்கி பின்னோக்கி நகரத் தொடங்கி விட்டது. காரணம் மிகவும் குண்டான அவரது எடையை அந்த டிராக்டர் டிரெய்லர்மீது அமைக்கப் பட்ட மேடையால் தாங்க முடியவில்லை.  அப்பப்பா அதை இப்போது நினைத்தாலும் சிரிப்பு குபீரென்று பொத்துக்கொண்டு வருகிறது.

உங்கள் சாதனையாக எதைக் கருதுகிறீர்கள்?

ஈழத் தமிழர்கள் போர்க்களத்தில் இருந்தபோது அவர்களுக்கு நிதி திரட்ட ஐரோப்பிய நாடுகள் எல்லாவற்றிற்கும் போய் வந்தேன். தற்போது யாழ்ப்பாணம், வவுனியா, மட்டக்களப்பு பகுதிகளில் எங்கள் நிகழ்ச்சிகளை நடத்தி ஈழத் தமிழ்க் குழந்தைகளின் கல்வி வளர்ச்சிக் கான நிதியைத்  திரட்டினேன். இவற்றையே எனது சாதனைகளாகக் கருதுகிறேன்.

சிறந்த பேச்சாளராக விரும்பும் இளைய தலைமுறையினருக்கு நீங்கள் சொல்ல விரும்புவது என்ன?

தாழ்வு மனப்பான்மையை நீக்கி, தன்னம்பிக்கை யோடு மேடை ஏறுங்கள். ஒவ்வொரு மேடையையும் புது மேடையாகக் கருதுங்கள். மடை திறந்தாற்போல் பேச்சு வர, நிறைய நூல்களைப் படியுங்கள். உங்களுக் கென்று தனி பாணியை உருவாக்கிக் கொள்ளுங்கள்.

உங்கள் வெற்றியின் ரகசியம் எது?

தன்னம்பிக்கை, பணிவு, எளிமை. அதைவிட எல்லாரும் இன்புற்றிருக்க நினைக்கும் குணம்.

நேர்காணல்: அமுதா தமிழ்நாடன்







நன்றி - நக்கீரன்