Showing posts with label ரயில்வே. Show all posts
Showing posts with label ரயில்வே. Show all posts

Wednesday, November 11, 2015

இனி ரயில் புறப்படுவதற்கு அரை மணி நேரம் முன்னால் டிக்கெட் முன்பதிவு செய்யலாம்

நாளை (நவம்பர் 12-ம் தேதி) முதல், ரயில்கள் புறப்படுவதற்கு அரை மணி நேரம் முன்னால், ஆன்லைனில் டிக்கெட் முன்பதிவு செய்யலாம்.
பயண இறுதி அட்டவணை தயாராகும் முறையில் மாற்றங்கள் செய்துள்ள ரயில்வே, இப்போது இரண்டு முறை அட்டவணையை தயாரிக்க உள்ளது.
முதல் முன்பதிவு பயண அட்டவணை, ரயில் கிளம்புவதற்கு நான்கு மணி நேரங்கள் முன்னால் தயாரிக்கப்பட்டு வந்த முறையோடு இப்போது, அரை மணி நேரம் முன்பாக ஒரு முறை இறுதி முன்பதிவு அட்டவணை தயாரிக்கப்பட உள்ளது.
மாற்றியமைக்கப்பட்ட விதிகளின்படி, இணையம் மற்றும் முன்பதிவு கவுண்டர்களில் என இரண்டு வழிகளிலும் முன்பதிவு செய்யலாம். இருக்கும் பெர்த்களின் எண்ணிக்கையைப் பொருத்து, குறிப்பிட்ட ரயில்களுக்கு, முதல் முன்பதிவு பயண அட்டவணை தயாரான பின்னரும், முன்பதிவு செய்ய முடியும்.
இதற்காக நவம்பர் 12-ம் தேதியில் இருந்து, முதல் முன்பதிவு பயண அட்டவணையை 4 மணி நேரத்துக்கு முன்னதாகவே இறுதி செய்யும்படி, ரயில்வே ஊழியர்களுக்கு உத்தரவிட்டுள்ளது.
இதனால், அரை மணி நேரத்துக்கு முன்னதாக ஆன்லைனிலோ அல்லது இல்லை ரயில் நிலையத்திலோ டிக்கெட் முன்பதிவு செய்யும் பயணிகளுக்கு எந்தெந்த ரயிலும் எவ்வளவு இடம் காலியாக இருக்கிறது என்பது தெரியவரும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
அதேபோல், ரயில் கிளம்பும் முன்னதாக இரண்டாவது மற்றும் இறுதி முன்பதிவு பயண அட்டவணை, ரயிலில் உள்ள டிக்கெட் பரிசோதகரிடம் ஒப்படைக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

  • சென்னையின் போக்குவரத்து நெருசலில் அரை மணிக்கு முன்பாக ஆன் லைனில் முன் பதிவு செய்து விட்டு ரயிலைப்பிடிக்க போனால் ரயில் நம்மை விட்டு போய் குறைந்தது 2 மணி நேரமிருக்கும்.
    2250
    about an hour ago
     (0) ·  (0)
     
    • S
      Siva  from India
      தற்போது உள்ள நடுப்பு பதிவு (Current Booking) முறையை இணைய வழியிலும் பயன் பாட்டிற்கு கொண்டு வந்துள்ளனர். ஆனால் நீண்ட தூர வண்டிகளில் (எடு) தில்லி - கன்னியாகுமரி இடையில் இருந்து பயணிக்க நினைப்பவர்கள் அரை மணி நேரம் முன்னதாக பதிவு செய்ய முடியாது. எனவே பயணச் சீட்டு பரிசோதகர்களும் மின்னணு முறையில் பரிசோதிக்க ஆரம்பித்தால்தான் முழுமையான பயன் கிட்டும்.
      12250
      about 3 hours ago
       (0) ·  (0)
       
      • B
        Babu  from Saudi Arabia
        Thanks easy way to reach people...
        about 3 hours ago
         (0) ·  (0)
         
        • AS
          Amith Sha  from India
          இது ஏற்கனவே நடைமுறையில் உள்ள கரண்ட் ரேசெர்வேசன் நடைமுறை தான்.ஆன்லைன் வசதி பண்ணிருக்காங்க. பழைய மொந்தைல புது கள்.
          about 4 hours ago
           (0) ·  (0)
           
          • D
            Durai  from India
            சுத்த ஹம்பக் . டிக்கெட் இருந்தால்தானே ! எல்லாம் கலெக்ஷன் ட்ரிக் . ரயில்வே நிர்வாகம் பயணிகளிடமிருந்து பல வழிகளில் பல ரூட்டுகளில் காசு சம்பாதிக்க வகை செய்துகொள்கிறது .
            185
            about 5 hours ago
             (2) ·  (0)
             
            RAJA · ram Up Voted
            • D
              Dawood  from India
              இது மறைமுகமாக அதிகக் கட்டணம் வசூளிப்பதுபோல் இருக்கிறது. தனியார் பேருந்துகளில்தான் இந்தமுறையில் ஏய்க்கிறார்கள் என்றால் அரசு அதனையேதான் செய்கிறது.,
              170
              about 6 hours ago
               (2) ·  (1)
               
              RAJA · ram Up Voted
              yours Down Voted
              • இந்த ஏற்பாடு எல்லோருக்கும் உண்டா அல்லது தத் கால் பயணிகளுக்கு மட்டுமா ?
              thanx - the hindu

              Tuesday, February 26, 2013

              ரயில்வே பட்ஜெட் தாக்கல்: முக்கிய அம்சங்கள் ! தமிழகத்திற்கு அறிவிக்கப் பட்டுள்ள 14 புதிய ரயில்களின் முழு விவரம்.

              கட்டண உயர்வு இல்லா ரயில்வே பட்ஜெட் தாக்கல்: முக்கிய அம்சங்கள் ! 
               
               
              புதுடெல்லி: 2013-14 ஆம் நிதியாண்டுக்கான ரயில்வே பட்ஜெட்டை  ரயில்வே அமைச்சர் பவன்குமார் பன்சால் நாடாளுமன்றத்தில் இன்று தாக்கல் செய்தார்.


              புதிய ரயில்கள், திட்டங்கள், சலுகைகள் குறித்த அறிவிப்பை அவர் வெளியிட்டு  வருகிறார்.


              அவர் தனது உரையில் ரயில்வேயின் தொடர் நஷ்டம்  காரணமாக பயணிகளின் சேவையில் குறைபாடு ஏற்பட்டதாகவும், ரயில்வே நிதி ஆதாரத்தை பெருக்குவதில் தன்னிறைவு பெற்றதாக ரயில்வே துறை இருக்க வேண்டும் என்றும் குறிப்பிட்டார்.'


              ரயில் விபத்துகளை குறைப்பதில் இலக்குகள் எட்டப்பட உள்ளதாக கூறிய பவன்குமார் பன்சால், இடு பொருட்களின் விலை உயர்வு காரணமாக ரயில் கட்டணத்தை உயர்த்த வேண்டிய கட்டாயம் ஏற்பட்டதாக கூறினார்.


              தேர்தலுக்கு முந்தைய பட்ஜெட் என்பதனாலும், 17 ஆண்டுகளுக்கு பின்னர் காங்கிரஸ் அமைச்சர் ஒருவர் ரயில்வே பட்ஜெட்டை தாக்கல் செய்வது இதுவே முதன்முறை என்பதனாலும் பட்ஜெட் குறித்த எதிர்பார்ப்புகள் அதிகமாகி உள்ளது.



              ரயில்வே பட்ஜெட்டின் முக்கிய அமசங்கள் 


              *  பயணிகளுக்கான ரயில் கட்டணத்தில் மாற்றமில்லை 

               
              புதிய ரயில்கள் 


              * 67 புதிய விரைவு ரயில்கள் & 27 பயணிகள் ரயில் அறிமுகம் 


              * 58 பயணிகள் ரயில்களின் பயண  தூரம் நீட்டிப்பு

              *  தமிழகத்திற்கு 3 புதிய ரயில்கள் அறிமுகம் 



              * தட்கல், முன்பதிவு & முன்பதிவு ரத்து கட்டணம் அதிகரிக்க்ப்படும்



              *  2013 - 14 ல் பயணிகள் ரயிலின் எண்ணிக்கை 12,335 ஆக அதிகரிப்பு

              * பயணிகளின் பாதுகாப்புக்கு ரயில்வே மிகுந்த முக்கியத்துவம் அளித்து வருகிறது


              * 12 ஆவது ஐந்தாண்டு திட்டத்திற்கு பின்னர் ஆளில்லா லெவல் கிராசிங் இருக்காது


              * * பயணிகள் ரயில் சேவைகள் மூலமான இழப்பு 2011 ல் ரூ.4,955 கோடியாக இருந்து, 2011-12 ல் ரூ. 22,500 கோடியாக அதிகரித்துள்ளது. இது 2012-13 ல் ரூ. 24,600 கோடியாக அதிகரிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.


              *  கல்வி நோக்கத்துடன் 'ஆசாதி எக்ஸ்பிரஸ்' திட்டம் அறிமுகம்


              * ரயில்வேயின் தொடர் நட்டம் காரணமாக பயணிகளுக்கு குறைபாடு ஏற்பட்டது. இம்முறை அதனை களைய முயற்சிப்போம்.


              * செலவுகள் அதிகரிப்பு காரணமாக சரக்கு கட்டணம் உயர்த்தப்படுகிறது.



              * சில குறிப்பிட்ட நீண்ட தூர ரயில்களில் அனுபூதி என்ற சிறப்பு பெட்டிகள் சேர்க்கப்படும். இதில் உயர்தர, ஆடம்பர சேவைகள் பயணிகளுக்கு வழங்கப்படும்.

              * இணையதள முன்பதிவு நேரம் காலை 12.00 முதல் இரவு 11.30 வரை நீட்டிக்கப்படுகிறது.

              * புகார்களுக்கும், ஆலோசனைகளுக்கும் 1800 - 111 - 321 என்ற இலவச எண்ணைத் தொடர்பு கொள்ளலாம்.




              * இன்டெர்நெட், மொபைல் போன்கள் மூலமாக 24 மணி நேரமும் டிக்கெட் முன்பதிவு செய்யலாம்.


              * இந்த ஆண்டு முடிவில் அடுத்த தலைமுறை மின் டிக்கெட் தொழில்நுட்பம் அறிமுகப்படுத்தப்படும். இதன்முலம் ஒரு நிமிடத்திற்கு 7,200 டிக்கெட்கள் வழங்க முடியும்.


              *முன்பதிவு நிலவரத்தை அறிய விரைவில் எஸ்.எம்.எஸ். ( SMS)  அனுப்பும் முறை நடைமுறைப்படுத்தப்படும்.


              * சக்கர நாற்காலி உள்ள பெட்டிகள் பரிசீலனையில் உள்ளது.

              * ரயில் நிலையங்களிலும் இதேபோன்ற வசதி செய்யப்பட உள்ளது.

              * 104 ரயில் நிலையங்கள் புதுப்பிக்கப்படும்.
              * ஐந்தாண்டு திட்டத்தில் ரயில்வே துறைக்கு 5.13 லட்சம் கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

              * இந்திய ரயில்வே அடுத்த 4 ஆண்டுகளில் ரூ.95,000 கோடியை ஈட்டியே ஆகவேண்டும்.

              * மாநகர ரயில் சேவையில் பெண்கள் பாதுகாப்பிற்காக பெண் ரயில்வே காவலர்கள் நியமிக்கப்படுவார்கள்.

              * 2012-13 ஆம் நிதியாண்டில் மட்டும் ரயில்வே துறைக்கு ரூ.24,000 கோடி இழப்பு எதிர்பார்க்கப்படுகிறது.



              * RPF பணியிட ஒதுக்கீட்டில் 10 விழுக்காடு பெண்களுக்கு ஒதுக்கப்படுகிறது.

              * பெண்கள் பாதுகாப்பிற்கு 24 மணி நேர தொலைபேசி சேவை வழங்கப்படுகிறது.


              * கூடுதல் ரயில் நீர் உற்பத்தி ஆலைகள் அமைக்கப்படும்.

              * குறிப்பிட்ட சில ரயில்களில் இலவச WiFi அமைக்கப்படும்.

              * முக்கிய ரயில் நிலையங்களில் 179 மின் படிக்கட்டுகள் மற்றும் 400 மின் தூக்கிகள் செயல்படுத்தப்படும்.


              * இந்தியாவில் உள்ள சுமார் 10,797 ஆளில்லா லெவல் கிராஸிங்குகளை அகற்ற நடவடிக்கை எடுக்கப்படும்.

              * 17 முக்கியமான ரயில் நிலையங்களில் சீரமைப்பு பணி மேற்கொள்ளப்படும்.

              * ரயில் நிலையங்களை தூய்மையாக வைத்துக் கொள்ள உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.

              இரும்புத் தாது சுரங்கங்களை இணைக்க ரூ.800 கோடியில் திட்டம்*கழிவு இரும்பு விற்பனை மூலம் ரூ.4500 கோடி நிதி திரட்ட ரயில்வே அமைச்சகம் முடிவு*நாக்பூரில் ரயில் துறை பயிற்சி மையம் அமைக்கப்படுகிறது*இணையதள முன்பதிவு வசதி அதிகாலை இரவு 12.30 மணி முதல் நள்ளிரவு 11.30 மணி வரை நீட்டிப்பு*

              100 கோடி டன் சரக்கு கையாளும் திறன் படைத்த 100 நாடுகள் பட்டியலில் இந்தியா இடம்*ரயில்வே அதிகாரிகளுக்கு பயிற்சி அளிக்க செகந்தராபாத்தில் நிறுவனம்*
              வைஷ்ணவதேவி கோவிலுக்கு செல்பவர்களுக்கு சிறப்பு ரயில் - பஸ் வசதி மேற்கொள்ளப்படும்*

              மேலும் 6 'ரயில் நீர்' உற்பத்தி நிறுவனங்களை அமைக்க முடிவு* ரயில்வே துறையில் காலியாக இருக்கும் 1லட்சத்து 52 ஆயிரம் பணியிடங்கள் விரைவில் நிரப்பப்படும்*

              * சுதந்திர போராட்டம் நடைபெற்ற இடங்களை இணைக்கும் வகையில் புதிய ரயில் சேவை திட்டம் செயல்படுத்தப்படும்

              * முன்பதிவில் தாமதத்தை தவிர்க்க IRCTC சேவை துரிதப்படுத்துகிறது.
              நிமிடத்திற்கு 7,200 டிக்கெட் முன்பதிவு செய்யலாம்* பெண் பயணிகள் பாதுகாப்புக்கு புதிதாக 8 கமபெனி படைகள் அமைக்க நடவடிக்கை*நலிவடைந்த பிரிவினர் 47000 பேருக்கு வேலைவாய்ப்பு*ஆதார் திட்ட தகவல்களை பயன்படுத்திக் கொள்ள ரயில்வே நிர்வாகம் முடிவு*

              அனுபூதி என்ற பெயரில் அதிநவீன ஏசி ரயில் பெட்டிகள் முக்கிய விரைவு ரயில்களில் இணைக்கப்படும்* ரேபெரேலி, பாலக்காடு உள்ளிட்ட 7 இடங்களில் புதிய ரயில் பெட்டிகள் அமைக்கும் தொழிற்சாலை நிறுவப்படுகிறது* ராஜீவ் கேல் ரத்னா விருது, ஒலிம்பிக் விருது பெற்றவர்களுக்கு இலவச ரயில் பாஸ்
               
               
               
              தமிழகத்திற்கு அறிவிக்கப் பட்டுள்ள 14 புதிய ரயில்களின் முழு விவரம். 
               
               
               
              2013-14 ஆம் நிதியாண்டில் ரயில்வே பட்ஜெட்டில்  தமிழகத்திற்கு  14 . புதிய அறிவிக்கப்பட்டுள்ளன.
               
               
              எக்ஸ்பிரஸ் ரயில்கள் விவரம்: 
               
              1.பாலக்காடு- ஈரோடு 2.மதுரை- கச்சிகுடா (ஹைதராபாத்) வாராந்திர எக்ஸ்பிரஸ் 
               
               
              3.சென்னை- ஷாலிமார் (கொல்கத்தா) வாரந்திர ரயில் 
              4.மன்னார்குடி- திருப்பதி (வாரம் 3 முறை- திருவாரூர், விழுப்புரம், காட்பாடி வழியாக) 
               
               
              5.கோவை- பிகானீர் (ராஜஸ்தான்) ஏசி எக்ஸ்பிரஸ் வாரந்திர ரயில் 
               
               
              6.சென்னை- பெங்களூர் ஏசி டபுள் டெக்கர் தினசரி 
               
              7.திருச்சி- திருநெல்வேலி தினசரி இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸ் (மதுரை, விருதுநகர் வழியாக) 
               
               
              8.விசாகபட்டினம்- சென்னை வாரந்திர ரயில் 
               
              9.சென்னை- பூரி (ஒரிஸ்ஸா) வாரந்திர ரயில் 
               
              10.சென்னை- அசன்சோல் (மேற்கு வங்கம்) வாரந்திர ரயில்.
               
              பாசஞ்சர் ரயில்கள்: 
               
              1.விழுப்புரம்- காட்பாடி தினசரி 
               
              2.விழுப்புரம்-மயிலாடுதுறை தினசரி 
               
              3.பாலக்காடு- கோவை- ஈரோடு 
               
              4.மன்னார்குடி- திருச்சி- மானாமதுரை தினசரி
               
               
              thanx