Showing posts with label அனுபவம் சென்னை பதிவர் பெண் விழிப்புணர்வு. Show all posts
Showing posts with label அனுபவம் சென்னை பதிவர் பெண் விழிப்புணர்வு. Show all posts

Tuesday, July 19, 2011

சென்னைப்பெண் பதிவரின் வாழ்வில் நடந்த திடுக் சம்பவம் (பெண்களுக்கான விழிப்புணர்வுப்பதிவு)



 
ஜாக்கிரதை உணர்வு என்பதற்கும் ,உள்ளுணர்வு என்பதற்கும் பெண்ணைப்போல மறு பெயர் வேறு இல்லை.. ஆண்களை விட பெண்களுக்கு பொதுவாகவே உள்ளுணர்வு ஜாஸ்தி.. ஒருவனைப்பார்க்கும்போதே, அல்லது பழகிய கொஞ்ச நாளிலேயே அவனைப்பற்றி எடை போட்டு விடுவாள். ஆனால் 5 வருடங்கள் பழகியும்  தன் கணவனின் நண்பனே எதிரியாகப்போன ஒரு பெண் பதிவரின் வாழ்வில் நடந்த உண்மை சம்பவம் இது..

சென்னையில் உள்ள பிரபல நிறுவனத்தில் டீம் லீடராகப்பணி ஆற்றும் அந்தப்பெண் பதிவர் பெயர் மாளவிகா ( உண்மைப்பெயர் அல்ல,மாற்றப்பட்டுள்ளது).வளசரவாக்கத்தில் அபார்ட்மெண்ட்டில் குடி இருக்கிறார்.. சொந்த வீடுதான். அவர் வீட்டுக்கு அருகில் முபாரக் என்பவனும் குடி இருக்கிறான்.மாளவிகாவின் கணவனின் நண்பன் அவன் என்பதால் 5 வருடங்களாக சாதாரணமாக,சிநேகமாகப்பழகி இருக்கிறார். மாளவிகாவின் கணவன் பெயர் சாந்தனு

முபாரக் ரியல் எஸ்டேட் பிஸ்னெஸ் செய்பவன்.வசதி படைத்தவன்.மாளவிகா லேட்டாக ஆஃபீஸ் கிளம்பும்போது, ஷாப்பிங் போகும்போது தனது பைக்கில் மாளவிகாவை டிராப் செய்வான். சகஜமாக பழகி வருவான்.

மாளவிகா இப்போது 2 மாத கர்ப்பம்.இவருக்கு ஏற்கனவே ஒரு குழந்தை உண்டு .பையன் வயது 8.இப்போது கர்ப்பமாக இருக்கும் மாளவிகாவைப்பார்க்க அவரது பள்ளித்தோழி அறிவுமதி திருத்தணியிலிருந்து வருகிறார்,சம்பவம் நடந்த அன்று தேதி 27.5.2011


அறிவுமதி வந்ததும் அவரை வரவேற்ற மாளவிகா கொஞ்ச நேரம் பேசி விட்டு குளிக்க செல்கிறார்.மாளவிகாவின் கணவர் ஊரில் இல்லை. அவர் ஆஃபீஸ் விஷயமாக 3 நாள் டூர் சென்றுள்ளார்.அறிவு மதி சமையல்கட்டில் போய் டீ போடுகிறார்.

அப்போது காலிங்க் பெல் அடிக்கிறது. கதவைத்திறந்தால் முபாரக்.அறிவுமதி முபாரக்கிடம் நீங்க யாரு? என கேட்க அவன் தன்னை அறிமுகம் செய்திருக்கிறான்.அவன் பெயரை சொன்னதும் ஏற்கனவே அவனைப்பற்றி நல்ல விதமாக தோழி கூறி இருந்தபடியால் அவனை உள்ளே வரச்சொல்லி  சோபாவில் அமரச்சொல்லி இருக்கிறார் அறிவு மதி.

அவனுக்கும் டீ போட சமையல்கட்டுக்குள் போனார். அவன் பின்னாலேயே சமையல்கட்டுக்கு வந்து அவருடன் பேச்சுக்குடுத்திருக்கிறான்..

நீங்க எந்த ஊரு?என்ன பண்றீங்க? இப்படி ..

டீயைக்கொடுத்து விட்டு அறிவுமதி சமையல் வேலையை பார்க்கிறாள்.முபாரக்கின் பார்வை சரி இல்லை என்பதையும் அவன் டபுள் மீனிங்கில் பேசுகிறான் என்பதையும் சட் என அறிவுமதி உணர்கிறார்.


சாம்ப்பிள்ஸ் ஆஃப் ஹிஸ் ஜொள் டயலாக்ஸ்


நீங்க போட்டுகுடுத்த டீ பிரமாதம். உங்க கையால விருந்து கிடச்சா இன்னும் நல்லாருக்கும், இதுக்காகவே உங்க ஊருக்கு வரனும் போல இருக்கு. உங்க கையால சமையல் சாப்பிட கொடுத்து வெச்சிருக்கனும். .


இதற்குள் குளிக்கப்போன மாளவிகா வெளியே வருகிறார்.. தீம் பார்க் டிக்கெட்ஸ்ஸை ரிசர்வ்டு செய்ததை முபாரக் இருவரின் டிக்கெட்ஸையும் தந்து விட்டு வெளியேறுகிறான்.

இப்போது அறிவுமதியின் மனதில் போராட்டம்.முபாரக் பற்றி தோழியிடம் சொல்லலாமா? வேணாமா? என .. 5 வருட நட்பை நாம் ஏன் கெடுக்க வேண்டும் என எதுவும் சொல்லாமல் விட்டு விடுகிறார்.

இப்போது இருவரும் தீம்ஸ்பார்க் போறாங்க. காலையிலிருந்து மதியம் வரை பல விளையாட்டுக்கள் விளையாடறாங்க.முபாரக்கும் அங்கே வர்றான். 

தண்ணீர் விளையாட்டுக்கள் விளையாடப்போறாங்க.. கடல் அலை வருமே அந்த விளையாட்டு. இங்கே அறிவுமதி மற்றும் மாளவிகாவின் கல்லூரித்தோழர்கள்  கண்ணன் மற்றும் அவர் மனைவி, வீணா மற்றும் அவர் கணவர் என  4 பேர். 

மாளவிகா தண்ணீரில் நீச்சல் அடித்துக்கொண்டு விளையாடிக்கொண்டிருந்திருக்கிறார்.அறிவுமதிக்கு நீச்சல் தெரியாது. அந்த மேட்டர் கண்ணன் மனைவிக்கு தெரியாது. அவர் விளையாட்டாக அறிவுமதியை தண்ணீரில் பிடித்து இழுத்திருக்கிறார் .அறிவுமதி தடுமாறி தண்ணீரில் விழுந்திருக்கிறார்.


காலையிலிருந்து  இது போன்ற ஒரு சந்தர்ப்பத்துக்குக்காத்திருந்த முபாரக் அறிவிமதியை காப்பாற்றும் போர்வையில் தொடக்கூடாத இடங்களில் தொட்டுத்தூக்கி இருக்கிறார்..அறிவுமதியின் முகமாற்றத்தைக்கண்ட கண்ணன் முபாரக்கை ஒரு முறை முறைத்து அவர் பிடியில் இருந்து அறிவுமதியை விடுவித்து காப்பாற்றி கரையில் அனுப்பி விட்டார்..

இந்த சம்பவம் எதுவும் மாளவிகாவுக்கு தெரியாது..வீடு திரும்பியதும் அறிவுமதி மூடு அவுட்டாக இருப்பதைப்பார்த்து மாளவிகா காரணம் கேட்டிருக்கிறார்.

பல முறை வற்புறுத்தலுக்குப்பிறகு அறிவுமதி காலையில் இருந்து நடந்த முபாரக்கின் டபுள் மினிங்க் பேச்சு ,பேடு டச் ஆகியவற்றை சொல்லி இருக்கிறார்.அதிர்ச்சி அடைந்த மாளவிகா “சரி என் கணவர் வந்ததும் இது பற்றி பேசுகிறேன் “ என அறிவு மதியை சமாதானப்படுத்தி இருக்கிறார்.

அடுத்த நாள் காலை அறிவுமதி தன் ஊருக்கு கிளம்பி விட்டார்.

1.6.2011 அன்று மாளவிகாவின் கணவர் டூர் முடிந்து ஊருக்கு வர்றார். அவரிடம் மேட்டரை சொல்றார் மாளவிகா.சாந்தனுக்கு செம கோபம். முபாரக்கை கூப்பிட்டு லெஃப்ட் & ரைட் வாங்கி இருக்கிறார்.. 

முபாரக் தான் மாட்டி விடக்கூடாது என்பதற்காக பழியை அறிவுமதி மீது திருப்புகிறான். என் மேல எல்லாம் எந்த தப்பும் இல்ல. அவங்க தான் வேணும்னே என்னை உரசுனாங்க.. அதை கண்ணன் பார்த்துட்டதால பழியை என் மேல போடறாங்க. உன் மனைவி மட்டும் என்ன? எனக்காக பல முறை சிக்னல் கொடுத்தவ தானே?பைக்ல போறப்ப வேணும்னே என் மேல் பட்டவ தானே? என்னை குறை சொல்றே? என்று அபாண்டமாய் குற்றம் சாட்டி இருக்கிறான்.

சாந்தனு< “பைக்ல சீதையே டபுள்ஸ் வந்தாலும் மேலே படத்தான் செய்யும். கணவனின் நண்பன் என்பதற்காக உன்னிடம் சகஜமாக பழகியவளை குறை சொல்லாதே. இனி என் வீட்டுக்கு வராதே. நம்ம ஃபிரண்ட்ஷிப் இதோடு கட் என்று கூறி அவனை துரத்தி விட்டார்..

இந்த சம்பவம் முடிந்த பின் சாந்தனு அவர் ஆஃபீசுக்கு போய் விட்டார், மாளவிகா வீட்டில் தனியாக இருந்திருக்கிறார். 

காலிங்க் பெல் அடிக்கிறது. திறந்தால் முபாரக்.

- தொடரும்

டிஸ்கி - 1 வழக்கமாக என் பதிவுகளில் காமெடி கும்மி அடிக்கும் நண்பர்கள் இதில் அடக்கி வாசிக்கவும். இந்த சம்பவத்தில் பாதிக்கபட்ட இரண்டு பெண்களின் மனம் புண்படாதபடி கவனமாக உங்கள் கமெண்ட்ஸை போடவும்..இந்தப்பதிவின் தொடர்ச்சி நாளை மதியம் 12 மணிக்கு வரும்

டிஸ்கி 2 - இந்தப்பதிவின் நோக்கம் ஆண்கள் சகஜமாகப்பழகினாலும்,பெண்கள் எப்போதும் அவர்களிடம் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும் என்னும் விழிப்புணர்வை ஏற்படுத்தவே..எனவே அந்த பதிவர் யார்? அவர் செல் ஃபோன் நெம்பர் என்ன? என யாரும் கேட்கவேண்டாம் என கேட்டுக்கொள்கிறேன் .

டிஸ்கி - 3 சக பதிவர் ராஜியின் மகளுக்கு இன்று பிறந்த நாள் ,நேரம் இருப்பவர்கள் வாழ்த்து தெரிவிக்க இங்கே செல்லவும் http://rajiyinkanavugal.blogspot.com/2011/07/blog-post.html