Friday, July 23, 2010

தில்லாலங்கடி-சினிமா விமர்சனம்




-ஜெயம்,எம்.குமரன் சன் ஆஃப் மஹாலட்சுமி,உனக்கும் எனக்கும் சம்திங் சம்திங் எனும் ரீமேக் வரிசையில் டைரக்டர் ராஜாவின் புதிய காதல் கலாட்டா கதைதான் தில்லாலங்கடி.
எல்லாத்துலயும் பர்ஃபெக்‌ஷன் பார்க்கற ஆளுக்கும் ,எதுலயுமே ப்ர்ஃபெக்‌ஷன் இல்லாத ஆளுக்கும் காதல் வந்தால் எப்படி இருக்கும் என்ற ஒன் லைன் தான் கதை.அதை முடிந்தவரை கலாட்டா,காமெடி .கடி எல்லாம் கலந்து கொஞ்சம் காதில் பூவையும் சுற்றியும் சொல்லி இருக்கிறார்.



படத்தோட ஓபெனிங் சீன்லயே தமனாவை யோகா செய்வதை க்ளோசப்பில் காட்டும்போதே நமக்கு புரிந்து விடுகிறது இயக்குனரின் எண்ணம்.தியேட்டரில் என்ன ஒரு விசில்.தமிழ் ரசிகர்களூக்கு யோகா மேல் இவ்வளவு ஆர்வமா?



சத்யன் &கோவிற்கு காதல் கை கூட ஜெயம் ரவியும்,தமனாவும் உதவும் காமெடி கலாட்டா ரசிக்க வைக்கிறது என்றாலும் அதில் அநியாயத்துக்கு நாடோடிகள் வாசம்.


காத்லுக்காக 14 தடவை கையை வெடிக்கிட்டவன் நான் என்ற சத்யனின் அறிமுகம் டாப்.எனக்கு கல்யானம் நடக்குமா?கருமாதி நடக்குமா?என சந்தேகமாக அவர் கேட்கும்போது எது நடந்தாலும் நான் பார்த்துக்கறேன்,ரெண்டுக்கும் எனக்கு மந்திரம் தெரியும் என புரோகிதர் சொல்வது வெடிச்சிரிப்பு.



தமன்னாவுக்கு காமெடி நடிப்பு,ஆச்சரியம்,வெட்கம் என எல்லா ஆக்டிங்கும்
வந்தாலும் சோக நடிப்பில் அவர் இன்னும் ஆனந்த தாண்டவம் மதுமிதா பாதிப்பிலிருந்து வெளிவரவில்லை.



ஒவ்வொரு சந்திப்பிலும் ரவி தம்னாவிடம் தயவு செஞ்சு என்னை லவ் பண்றேன்னு உடனே சொல்லிடாதே,எனக்கு கிக்கே போயிடும்,நல்லா அலைய வை என சொல்லி த்லை சுற்ற விடுவது நல்ல கற்பனை.


ரவி பேராண்மை பாதிப்பிலிருந்து அநாசயமாக வெளி வந்து அசால்ட்டாக நடித்திருக்கிறார்,அவ்ரது கேரக்டர் சந்தோஷ்சுப்ரமனியம் ஜெனீலியா
கேரக்டரையும், உனக்கும் எனக்கும் சம்திங் சம்திங் சந்தோஷ் கேரக்டரையும் மிக்ஸ் பண்ணியது மாதிரி வடிவமைத்தது டைரக்டரின் சாமார்த்தியம்.



ஓப்ப்னிங்கில் அவர் என்ன்னோட ஒரு முகத்தைத்தானே பார்த்திருக்கே,இன்னொரு முகத்தை காட்டற மாதிரி வெச்சுக்காதே  என பஞ்ச் டயலாக் சொல்லி விட்டு பின் அவரே ஏன்னா எனக்கு ஒரே ஒரு முகம்தான் என நக்கலடிப்பது நல்ல கிண்டல்.



ஜெயம் ரவியை வெறுப்பேற்றுவதற்காக தமனா வடிவேலுவை லவ் பண்ணுவதாக டூப் விடுவதும் ,அவர் கூட பைக்கில் ரைடு போவதும் செம அப்ளாஷ் வாங்கும்சீன்.


வடிவேலு-தமனா பிட் டூயட்டுக்கு ரசிகர்களிடம் அப்படி ஒரு ரெஸ்பாண்ஸ்.


இடைவேளை வரை ஜாலியாகப்போகும் கதையில் ஷாம் வந்ததும் ஒரு தேக்கம் வருகிறது.படத்தில் ட்விஸ்ட் வேண்டும் என டைரக்டர் நினைத்து வைத்த ஷாம் கேரக்டர் எடுபடவில்லை.


திடீர் என கதை ட்ராக் மாறுகிறது.ஜெண்டில்மேன் அர்ஜூன் மாதிரி இருப்பவர்களிடம் இருந்து எடுத்து இல்லாதவர்களிடம் கொடுக்கும் ராபின்ஹூட் ஆகிறார் ஜெயம் ரவி.


பிறகு அவர் கஜினி மாதிரி பழசெல்லாம் மறப்பதாக நடிப்பதும் தமனா நம்புவதும் ,ம்ஹூம் எடுபடவில்லை.


இடைவேளை வரை வடிவேலு காமெடி என்றால் அதற்குப்பிறகு சந்தானம் காமெடி.பல இடங்களில் நாடகத்தன்மை வர ஜெயம் ரவியின் கேரக்டர் சரியாக வடிவமைக்கப்படாததே காரணம்.



மன்சூரலிகான் போலீஸாக வந்து காமெடி பண்றார்.இடுப்புக்கு கீழே பைக்கில் அடி பட வைத்த வடிவேலுவிடம் என்னை குடும்பம் நடத்த விடாம பண்ணிட்டு நீ மட்டும் நல்லா வாழ விட்றுவேனா பழிக்குப்பழி என அவரும் வடிவேலுவை அதே பைக் ஏற்றி அதே இடத்தை டேமேஜ் பண்ணுவது வயிறு குலுங்கச்சிரிக்க வைக்கும் காமெடி.

சொல்பேச்சு கேட்காத சுந்தரியே சரியான ஹிட் பாட்டு.ஆனால் அது அப்படியே தூள் படத்தில் வரும் பாட்டின் நகல்.ஆர்ட் டைரக்‌ஷன்,டான்ஸ் மூவ்மெண்ட் என அப்படியே காப்பி அடித்திருக்க வேணுமா?



உனக்கு ஏதோ சொல்லனும் போல் இருக்கா?எனக்கு ஏதோ கேட்கனும் போல் இருக்கு  , மறதி சந்தோசமான விஷயம் ,அவங்கவங்க ஆசையை அவங்கவங்களே நிறைவேத்திகறதுல என்ன கிக் இருக்கு,அடுத்தவங்க ஆசையை நிறைவேத்தறதுலதான் கிக் என்பது போன்ற மெச்சூரிட்டியான வசனங்களும் உண்டு.



ஹீரோ வரும் பல சீன்களில் அன்னியன் பட ஹம்மிங் தீம்மை சுட்டு போட்டிருக்கிறார் யுவன் சங்கர் ராஜா.


பாடல்களில் 3 தேறுகிறது.படம் ஃபுல்லா மலேசியாவில் எடுத்திருப்பதால் ஒளிப்பதிவு கண்ணுக்கு குளுமை.



நல்ல காதல் கதையாக ஜாலியாகப்போன கதையில் தேவை இல்லாமல் ஆக்‌ஷனை நுழைத்து தானும் குழம்பி  ,ரசிகனையும் குழப்பி விட்டார் டைரக்டர்.


பிரபு கெஸ்ட் ரோல்.மகனுடன் தண்ணி அடிக்கும் காட்சி அருமை.ஆனால் காதல்ன் பட நினைவு வருதே.


அதிகமாக அறிமுகமில்லா குழந்தைக்காக ஹீரோ 20 லட்சம் செலவு செய்வது நம்பும்படி இல்லை.என் பேரை மறுபடி மாத்திக்கறேன் என வடிவேல்

சொல்லும்போதும்,பிறந்தமேனியா நோய் என சந்தானம் சொல்லும்போதும் தியேட்டரில் வெடிச்சிரிப்பு.



இனி தான் கேம் ஸ்டார்ட் ஆகுது -இந்த டயலாக்கை படத்தில் ஆளாளுக்கு சொல்கிறார்கள்.ஏன் என்று தெரியவில்லை.(தியேட்டர் ஆடியன்ஸ் கமெண்ட்-படத்தை ஸ்டார்ட் பண்ணுங்கப்பா.)



வடிவேல்,சந்தானம் இவர்களோடு இணைந்து ஜெயம் ரவியின் காமெடி ,த்மனாவின் இளமை படத்தின் பலம்.ஷாம் கேரக்டர்,ஆக்‌ஷன் காட்சிகள்,நாடகத்தனமான் காட்சி அமைப்புகள் படத்தின் பலவீனம்.



பி,சி செண்ட்டர்களில் 50 நாள் ஓடும்.


Thursday, July 22, 2010

அரசியலில் குதிக்க முடிவெடுத்த நடிகை ‘கற்பு” காஞ்சனாவுடன் ஒரு பேட்டி.



அரசியலில் குதிக்க முடிவெடுத்த நடிகை ‘கற்பு” காஞ்சனாவுடன் ஒரு பேட்டி. 



நிருபர் : வணக்கம் மேடம். பேட்டிக்குள்ளே போலாமா? 
]
நடிகை : ஓ தாராளமா? என்னமோ வேட்டிக்குள்ளே போலாமா?-ங்கற மாதிரி ஏன் தயங்கித் தயங்கி கேட்கறீங்க. ரிலாக்ஸா கேளுங்க .. 

நிருபர் : மேடம் முத கேள்வி உங்க பெயர்க்கு முன்னால ஒரு அடை மொழி இருக்கே. அதுக்கு என்ன காரணம்? சினி‡பீல்டுலயே  நீங்க மட்டும் தான் கற்புள்ள நடிகையா? 

நடிகை : அதெல்லாமில்லைங்க. நல்ல கலரா, சிவப்பா இருக்கற நடிகைகளே வரிசையா ஹிட் ஆகிட்டே இருந்த நேரம், ஒரு ட்ரெண்ட் செட்டிங்கா கறுப்பா இருக்கற நான் என்ட்டர் ஆனேன். ஹிட் ஆகிட்டேன். அந்த நன்றியை மறக்காம இருக்கனும்கறதுக்காக ‘கறுப்பு” காஞ்சனா-னு டைட்டில்ல போடச் சொன்னேன். அது அப்படியே மருவி ‘கற்பு” காஞ்சனா-னு ஆகிடுச்சு. 
நிருபர் : ஓ.கே. மேடம். ஒரு பேட்டில நீங்க ஒரு வகைல மன்னர் பரம்பரைல வந்ததா சொல்லியிருந்தீங்க. அது எப்படி? 

நடிகை : மன்னர்கள்னா புறமுதுகு காட்டி ஓடறது வழக்கம் தானே, அதே மாதிரி நானும் என்னால முடிஞ்சவரை புறமுதுகு அக முதுகு எல்லாத்தையும் காட்டி நடிச்சேன் என் படங்களைப் பார்த்த ஒரு தொல்பொருள் ஆராய்ச்சியாளர் ஆராய்ஞ்சு (எதை ஆராய்ஞ்சுனு கேட்காதீங்க) நான் மன்னர் பரம்பரையாத்தான் இருக்கும்னு யூகமா சொன்னார். அவர் என்னிடம் வழிஞ்சதை நான் நிரூபரிடம் வழிமொழிஞ்சேன். 

நிருபர் : மேடம்! முன்னால் ஜனாதிபதி அப்துல்கலாம் பற்றி நினைக்கும் போதெல்லாம் ரசிகர்களுக்கு உங்க ஞாபகம் வந்துடறதா சொன்னீங்களாமே? அவருக்கும், உங்களுக்கும் ஏணி வெச்சாக்கூட எட்டாதே? அவரு கல்பாக்கம், நீங்க கோடம்பாக்கம், எப்படி லிங்க்-னு சொல்லுங்க.
  
நடிகை : நீங்க நினைக்கற மாதிரி இல்லை, அப்துல்கலாம்னா ‘ராக்கெட்” விட்டது நினைவு வரும். நான்-னா விதவிதமா அதை  வெச்சு சொன்னேன்.  

நிருபர் : அடடே நீங்க போட்டுட்டு வர்ற ஜாக்கெட் டிசைனைப் பார்க்க குடும்பப் பெண்களெல்லாம் காத்திட்டு இருப்பாங்களாமே? 

நடிகை : விதவிதமான டிசைன்ல நான் ஜாக்கெட் போடறதால அது எப்படி இருக்கும்னு  பார்க்க பெண் ரசிகர்களும், ஜாக்கெட் போடாம நான் நடிக்கறப்ப ஆண் ரசிகர்களும் Q ல நின்னு ரசிக்கறாங்க.    

நிருபர் : மேடம் சினி‡பீல்டுல கொடி கட்டி பறந்த நீங்க திடீர்னு சின்னத் திரைக்கு வந்துட்டீங்களே ஏன்? 
நடிகை : சினிமா தான் எனக்க சோறு போட்டுது அதுல எந்த மாற்றமும் இல்லை. அதை மறுக்கவும் இல்லை. ஆனா டி.வி எனக்கு பிரியாணியே போட்டுது. அதான் டி.விக்கு ஜம்ப் பண்ணிட்டேன்.  

நிருபர் : புரியலையே இந்த சோறு- பிரியாணி மேட்டர். 

நடிகை : அதாவது சினிமால நடிச்சா ஒரு படத்துக்கு 60 நாள் கால்ஷீப் வாங்கி நைட், பகல்-னு ட்ரில் எடுத்து 30 லட்சம் தர மூக்கால அழுவாங்க, செக் தருவாங்க, பவுன்ஸ் ஆகும். ஆனா டி.வி.ல அப்படி இல்லை கைல காசு வாயில தோசை. காலைல 9.00 மணிக்கு நடிக்கப் போவேன் மாலை 6 மணிக்கு கிளம்பிடுவேன். அப்பவே ரூ 2 லட்சம் டவுன் பேமண்ட்.   

நிருபர் : ஓஹோ, இதுல இப்படி ஒரு தொழில் ரகசியம் இருக்கா? ஓ.கே மேடம், உங்க எழில் ரகசியம் என்ன?-னு சொல்லுங்க. 

நடிகை : நான் என் வீட்டுக்காரரோட சண்டையே போடமாட்டேன் அதனால எப்பவும் சந்தோஷமா இருப்பேன். 

நிருபர் : மேடம் உங்க ஹவுஸ் ஓனரைப் பற்றி இப்ப எதுக்குப் பேச்சு? 

நடிகை : ஹய்யோ வீட்டுக்காரர்னா ஹஸ்பெண்ட்.

நிருபர் : ஓஹோ, அதான் மேரேஜ் ஆன ஆளுங்க எல்லாம் பெண்டு கழண்டு முதுகு பெண்ட் ஆகி இருக்காங்களா? மேடம். என்னால நம்பவே முடியலை. புருஷன்- பெண்டாட்டின்னா சண்டை வரத்தானே செய்யும்? ஏப்படி வராது னு சொல்றீங்க?

நடிகை : புருஷன் கூட சண்டை ஸ்டார்ட் ஆச்சுன்னா, நான் காரை ஸ்டார்ட் பண்ணி கோர்ட்டுக்கு போய் டைவர்ஸ் வாங்கிடுவேன். ஜாக்கெட்டை மாத்தற மாதிரி புருஷனை மாத்திடுவேன் ஆயிரம் புருஷனை மாற்றிய அபூர்வ சிகாமணி- னு பெயர் எடுக்க ஆசை. 
நிருபர் : ஓஹோ, ஹாலிவுட் நடிகைக்கு சவால் விடும் விதத்தில் இருப்பேன்னு நீங்க சொன்னீங்களே அது இந்த விஷயத்துல தானா? நாங்க கூட நடிப்புல வெரைட்டி காண்பிப்பீங்கனு பார்த்தா நீங்க இதுல வெரைட்டி காட்;டறீங்களா?

நிருபர் : மேடம் ஒரு முன்னணி ஹீரோ கூட லவ் இருந்ததா கிசுகிசு வந்தது. 

நடிகை : இது ஒரு பெரிய மேட்டரா? மார்க்கெட் அவுட் ஆன ஹீரோவையா லவ் பண்ண முடியும்? லீடிங் ஹீரோவை லவ் பண்ணுனா தான் அவர் நடிக்கற படத்துல எல்லாம் என்னையே ஹீரோயின் ஆக்குவாரு.
நிருபர் : அந்த ஹீரோ கூடவே 26 படம் பண்ணி இருக்கீங்க. இதுக்கு உங்க 2 பேருக்கும் பாடி கெமிஸ்ட்ரி ஒர்க் அவுட் ஆகிட்டதாலா?

நடிகை : ஆமா பிஸிக்கலா நாங்க சேர்ந்துட்டோம். கெமிஸ்ட்ரி ஒர்க் அவுட் ஆகிடுச்சு. இப்போ என் உடம்புல பயாலாஜிக்கல் (biological) மாற்றங்கள்.  

நிருபர் : ஓ.கே மேடம், ஹீரோவை லவ் பண்ணுன நீங்க திடீர்-னு ஒரு டைரக்டரை மேரேஜ் பண்ணிட்டீங்களே. 

நடிகை : அந்த ஹீரோ ஜீரோ ஆகிட்டாரு நான் டைரக்டர் ஆ‡ப் த டைரக்டர்-னு பேரெடுக்க ஆசைப்பட்டேன். 

நிருபர் : ஓ.கே. மேடம் படிப்பறிவே இல்லாத நீங்க உங்க பேருக்குப் பின்னால BA.BL.-னு பட்டம் போட்டுக்கிட்டீங்களே? எப்படி? 

நடிகை : சாதாரண வக்கீலே B.L. பட்டம் போடறப்ப ஒரு ஜட்ஜ் B.AB.L னு பட்டம் போடறது 
தப்பா?

நிருபர் : மேடம் மாசமா இருக்கறது நீங்க. ஆனா எனக்கு தலை சுத்துது. படத்துலதான் நீங்க பேசற வசனங்கள் புரியறதில்லை, பேட்டிலயுமா?

நடிகை : டி.வி. டான்ஸ் புரோக்ராம்ல ஜட்ஜா வர்றேன். அதைச் சொன்னேன்.  

நிருபர் : ஓஹோ தமிழ்நாட்ல இருக்கற பல ஜட்ஜுங்க ரிசைன் பண்ணுனதுக்கு காரணமே நீங்க ஜட்ஜ் ஆனது தானா? சுப்ரீம் கோர்ட், ஹைகோர்ட்-னு ஜட்ஜ் பஞ்சம் உருவாகிடுச்சே.. சரி அது போகட்டும,; மேடம். திருச்சில உங்க ரசிகர்கள் உங்களுக்கு சுடுகாடு கட்டி இருக்கறதா கேள்விப்பட்டமே அதைப் பற்றி கொஞ்சம் சொல்லுங்க . 

நடிகை : எனக்கு கோயில் கட்டி கும்பாபிஷேகம் பண்றதா ரசிகர்கள் சொன்னாங்க. ஆனா அற நிலைத்துறைல விடலை. அவங்களுக்கு ஒரு பாடம் கற்பிக்கனும் என்பதற்காக ஆப்போசிட்டா சுடுகாடு கட்டிட்டாங்க.  

நிருபர் : அந்த சுடுகாடு கட்டுனதுல யாருக்கு என்ன லாபம்? 

நடிகை : பொதுவா சினிமா ரசிகர்களுக்கு நடிகையை நேர்ல பார்க்கனும் தொட்டு பேசனும்-னு நினைப்பாங்க. சில கணவர்கள் மனைவி கூட படுத்திருக்கறப்ப தங்களோட அபிமான நடிகையை மனசுக்குள்ள நினைச்சுக்கு வாங்க-னு உளவியல் நிபுணர்கள் கூட சொல்றாங்க, என் பேர்ல இயங்கி வர்ற அந்த சுடு காட்ல ஒரு மேடை அமைச்சிருக்கோம். என் ரசிகர்கள் அங்கே வந்து உண்டியல்ல காணிக்கை போட்டுட்டு கல் மேடைல கொஞ்ச நேரம் படுத்திருந்துட்டு போயிடுவாங்க. 

நிருபர் : O.K மேடம் கோயில்ல செருப்புக் காலோட கால் மேல கால் போட்டு உட்கார்ந்து பிரச்சனைல மாட்டிக்கிட்டீங்களாமே? 

நடிகை : அட நீங்க வேற, என் கணவருக்கு ஊயடட பண்ணுனேன் நாட் ரீச்சபிள்னு வந்தது. அதனா ல  CALL  மேல CALL போட்டேன். அதை பத்திரிக்கைங்க திரிச்சு கால் மேல கால் போட்டு உட்கார்ந்ததா எழுதிட்டாங்க.
நிருபர் : கருமாதிக்கு முன்னாலயே படையல் போட்ரனும்-னு நீங்க ஒரு கருத்து சொன்னீங்களாமே? ஏன்? 

நடிகை : கல்யாணத்துக்கு முன்னாலயே உறவு வெச்சுக்கலாம்-னு நான் சொன்ன கருத்து பயங்கர பிரச்சனை ஆகிடுச்சு. அதை டைவர்ட் பண்றக்காக கருமாதி மேட்டரை சொன்னேன். 

நிருபர் : உங்க மேல 1730 வழக்கு போட்டாங்களாமே?

நடிகை : அதை ஏன் கேட்கறீங்க? ஆல் இண்டியா டூர் போன மாதிரி கோர்ட் கோர்ட்டா அலைஞ்சு என் சொத்துல பாதி கரைஞ்சிடுச்சு. நான் சினிமா ஆர்ட்டிஸ்டா? கோர்ட்டிஸ்ட்டா?-னு டவுட்டே வந்திடுச்சு. 

நிருபர் : எப்படியோ உங்களுக்கு சாதகமா தீர்ப்பு வந்துடுச்சு, இப்போ உங்க கருத்துல ஏதாவது மாற்றம் உண்டா?

நடிகை : இன்னும் கொஞ்சம் அட்வான்ஸா போய் பெண்கள் நிச்சயதார்த்தத்திற்கு முன்னமே உறவு கொள்ளலாம்-னு சொல்லப் போறேன்
.
நிருபர் : ஹீம். ஜென்மக்கூறு பேட்டா செருப்பால அடிச்சாலும் திருந்தாதுங்கறது சரியா இருக்கு. நல்ல வேளை பெண்கள் வயதுக்கு வரும் முன்பே உறவு கொள்ளலாம்-னு சொல்லாம விட்டீங்களே? OK  மேடம், திடீர்னு அரசியல்ல இறங்கி இருக்கீங்களே ஏன்?

நடிகை : இதெல்லாம் ஒரு கேள்வியா? மார்க்கெட் போன நடிகை தொழில் அதிபரை கல்யாணம் பண்றதும், பரபரப்பா நியூஸ்ல வரனும்னு நினைக்கற நடிகை பாலிடிக்ஸ்ல குதிக்கறதும் சகஜம் தானே?

நிருபர் : குறிப்பா இந்தக் கட்சில இணைய எதாவது காரணம் இருக்கா?

நடிகை :  ஆளுங்கட்சியா இருக்கே அந்த ஒரு காரணம் போதாதா?

நிருபர் : மக்களுக்கு சேவை செய்யத்தான் அரசியலுக்கு வந்தீங்களா?

நடிகை : வீட்ல புருஷனுக்கு இதுவரை ஒரு லெமன் சேவை கூட செஞ்சதில்லை சரி மக்களுக்காவது செய்யலாம்னு பார்த்தேன். 

நிருபர் : சரி உங்களால அரசியல்ல ஜொலிக்க முடியுமா?

நடிகை : சினி ஸ்டார் ஜொலிக்காம இருக்கமா? மேக்கப்புக்கே டெய்லி 5 மணி நேரம் செலவு பண்றேன். 

நிருபர் : கட்சில பதவி வேணும்-னு கேப்பீங்களா? மேலவைக்கு போட்டியிடுவீங்களா?

நடிகை : CM. போஸ்ட் லட்சியம,; MLC. சீட் நிச்சயம்.

நிருபர் : உங்களை அந்த கட்சி தாங்காதுனு ஒரு பத்திரிக்கையை தலையங்கம் எழுதி இருக்காங்களே?

நடிகை : நான் வெறும் 82 கிலோ தான்.  இதைக் கூட பாரம்பரியம் மிக்க கட்சி தாங்காதா என்ன?

நிருபர் : அரசியலுக்கு வந்துட்டீங்க. இனி சினிமால நடிப்பீங்களா?

நடிகை : சினிமால நடிக்கறனோ இல்லையோ, மேடைல நடிப்பேன். சினி‡பீல்டுல இருக்கற ஆள் தான் தமிழ்நாட்டின் CM. ஆக முடியும்கற விதியை நிரூபிக்கறேன்.  OK உற்சாகமா இருந்தீங்க, இப்ப ஏன் டல்லா இருக்கீங்க?

நிருபர் : தமிழனோட தலையெழுத்தை நினைச்சேன். எனக்கு தலைவலி வந்திடுச்சு. 

நடிகை : விடுங்க. எல்லாம் அவங்கவங்க தலைவிதி 

diski-   this is republished from my own blog.

Wednesday, July 21, 2010

DON -சினிமா விமர்சனம் -


அனுஷ்காவுக்கு ஒரு ராசி உண்டு.எந்த நடிகருடன் நடித்தாலும்,அவருக்கு அக்கா மாதிரி தோற்றம் அளிக்கும் முற்றிய முகம்.வேட்டைக்காரனிலும்
சரி,சிங்கம் படத்திலயும் சரி,விஜய்க்கும்,சூர்யாவுக்கும் அக்கா மாதிரிதான் தெரிந்தார்.ஏதோ வெல்வெட் இடுப்பு  இருப்பதால் சமாளிக்கிறார்.


இந்த டான் படத்தில் அந்த பிரச்சனை இல்லை.ஏன்னா நாகார்ஜூன் அனுஷ்காவிற்கு பெரியப்பா மாதிரி இருப்பதால்.

ராகவா லாரன்ஸ் டைரக்ட் பண்ணி உள்ள இந்தப்படத்தில் தெலுங்குப்படத்துக்கே உரித்தான அனைத்து அலப்பறைகளும்,அன்சகிக்கபிள்(நன்றி -சுஜாதா) மேட்டர்களும் உண்டு.


லோக்கல் தாதா நாகார்ஜூன்,அவரது அல்லக்கை ...சாரி வலது கை ராகவா லாரன்ஸ்,இண்ட்டர்நேஷனல் தாதாவுக்கும் இடையே நடக்கும் மோதல்களே படம்.இடை இடையே அனுஷ்காவை ஊறுகாய் மாதிரி தொட்டுக்கொள்கிறார் ஹீரோ.


படத்தோட   டைரக்டரே 2வது  ஹீரோ என்பதால் ஹீரோவுக்கு 60 சீன்கள்
என்றால் 2வது ஹீரோவுக்கு 70 சீன்கள் வைத்துக்கொண்டார்.

படத்தின் முதல் அபத்தம் பில்லா படத்தில் வருவது போல் படத்தில் வரும் 189 கேரக்டர்களும் 24 மணி நேரமும் கூலிங்கிளாஸ் அணீந்து கொண்டே இருப்பதுதான்.

2வது அபத்தம் நாகார்ஜுனின் மேக்கப்மேன்.இதயத்தை திருடாதே படத்தில் யங் ஹீரோவாக வரும்போதே நாகார்ஜுனை நரசிம்மராவின் வாரிசு மாதிரி இருப்பார்.போதாக்குறைக்கு ஓவர் பவுடர் அடித்துக்கொண்டு க்ளோசப்
காட்சிகளில் மிரட்டுகிறார்.


ராகவா லாரன்ஸ் ஓவர் அலம்பல்.அவர் செய்யும் லூட்டிகள் தாங்க முடியலை.தனிநபர் துதிகளும் ஆங்காங்கே உண்டு.
ஆண்டாண்டு காலமாக சினிமாக்களில் ரெகுலராக வரும் க்ளிஷேக்கள் இதிலும் உண்டு.ஹீரோயின் மாடர்ன் டிரஸ்ஸில் முதல் 4 ரீலுக்கு ஆட்டம் போடுவார்.ஹீரோவுடன் காதல் வந்ததும் நானிக்கோணி சேலையில் வந்து தலை குனிந்து நிற்பார்.இருந்தாலும் அனுஷ்கா சிவப்பு கலர் சேலையில் லோஹிப்பில் வந்து நிற்கும்போது பெருமூச்சு விடாத ஆண்களே தியேட்டரில் இல்லை.

வில்லனாக வரும் வெள்ளைக்காரர் கவனிக்க வைக்கிறார். படையப்பா
படத்தில் வருவது போல் ஹீரோவை நிற்க வைத்து வில்லன் உட்கார்ந்து சீட் தராமல் அவமானப்படுத்தும் போது ஹீரோ உடனே அடிப்பொடி கைத்தடிகளை
கைகளாலேயே ஆசனம் அமைக்கவைத்து ஏறி உட்கார்ந்து வில்லனை பார்த்து எகத்தாளமாக சிரிக்கும்போது இன்னும் 100 வருஷம் ஆனாலும் ஆந்திராக்காரர்கள் திருந்தமாட்டார்கள் என உள்ளங்கை நெல்லிகனி போல் தெரிகிறது.

காமெடி பண்ணுவதாக நினைத்துக்கொண்டு மொக்கை போடும் சீன்களும் ஏராளம்.லாரன்ஸுக்கு ஜோடியாக வரும் பார்ட்டி அனுஷ்காவை தூக்கி சாப்பிடும் அழகு.

அவர் வில்லியாக மாறி வில்லனுக்கு ஜோடி ஆகி டர்னிங் பாய்ண்ட்களா அள்ளி விடுவது படு அபத்தம்.

படத்தில் வரும் சூப்பர் காமெடி சீன் -

லாரன்ஸுக்கு ஜோடியாக வரும் பார்ட்டி வில்லி என்பதை காட்ட தான் அணிந்திருக்கும் சேலையை கழட்டி உள்ளே மாடர்ன் டிரஸ் (பெட்டிகோட்-பிரா) போட்டிருப்பதை காண்பிப்பதுதான்.இந்த ட்விஸ்ட்
சிரிப்பு வரவில்லை.எரிச்சல்தான் வருது.

 நாகார்ஜூன்- ராகவா லாரன்ஸ்,இருவரும் ஒன்றாக நடனம் ஆடும் காட்சிகளில் தியேட்டர் சுவரில் போய் முட்டிக்கொள்ளலாம் என
தோன்றுகிறது.போக்கிரி படமே தெலுங்கிலிருந்து சுட்ட கதைதான்.இதில்

போக்கிரியிடம் இருந்து சுட்ட காட்சிகள் அதிகம்.

பி.கு-டான் பட போஸ்டரில் அனுஷ்கா காட்டிய சர்ச்சைக்குரிய கிளாமர் சீன் படத்தில் இல்லை.எனவே யாரும் அதற்காகப்போய் ஏமாற
வேண்டாம்.(அடடா,என்ன ஒரு சமூக நல  சிந்தனை)

படத்தில் காமெடி காட்சிகள் இல்லாதது,திடீர் என லாரன்ஸ் தளபதி பட ஸ்டைலில் தியாகி ஆவது எதுவுமே ஏற்கவே முடியவில்லை.

படம் இடைவேளை விட்டதும் பாதிப்பேர் (20) டான் டான் என வீட்டுக்கு கிளம்பி விட்டார்கள்.இதற்காகவே டான் என டைட்டில் வைத்தார்களோ?

Tuesday, July 20, 2010

THE SORCERER'S APPRENTICE - சினிமா விமர்சனம்


உல்டா பண்ணுவதில் நாம்தான் நெம்பர் ஒன் என நம்மாளுங்க யாரும் இனி மார் தட்டிக்க முடியாது.ஹாலிவுட் ஆட்களும் அந்த வேலையை செய்ய ஆரம்பித்து விட்டார்கள்.டிஷ்னி யின் மாயவளையம் அர்னால்டு ஸ்வார்சனேகர் நடித்த ஜட்ஜ்மெண்ட் டே(தி டெர்மினேட்டர்-2) படத்தை மாயாஜாலம்,மந்திரம் மிக்ஸ் பண்ணி சின்ன பசங்க பாக்கற அம்புலி மாமா,ஹாரிபாட்டர் டைப் படம் ஆக்கீட்டாங்க.


ஜட்ஜ்மெண்ட் டே(தி டெர்மினேட்டர்-2) படத்தில் ஹீரோ சிறுவனை காப்பாறுவார்.படம் பூரா வில்லன் சேஸ் பண்ணுவார்.இதில் ஒரு ஹீரோ ஒரு பையனை காப்பாற்ற,வில்லன் இன்னொரு பையனுடன் அவர்களை துரத்துகிறார்.மந்திர மோதிரம்,மிரில்லேனியத்தின் விடிவெள்ளி என பில்டப் வேறு.

படத்தோட ஓபெனிங் சீன் அருமை.நியூயார்க் நகரின் அழகை அள்ளிகொட்டுகிறது,குறிப்பா பாலம் பிரம்மாண்டம்.புதையல் வேட்டையில் வந்த (தெ நேஷனல் ட்ரெஸ்ஷர்)நிக்கோலஸ் கேஜ்தான் ஹீரோ.ஆனால் அவர் பூந்தோட்டக்காவல்காரன் விஜயகாந்த் மாதிரி கெஸ்ட் ரோல் தான்.

17 வயது பையனாக வரும் மெய்ன் ஹீரொ நண்பர்களுடன் அளவளாவும்
ஆரம்பக்காட்சியே கலகல.”10 வருஷம் கழிச்சு அவளை பார்த்திருக்கே,அவ்ளை கரெக்ட் பண்றதை விட்டுட்டு ஆண்ட்டனாவை கரெக்ட் பண்ணிட்டு வந்து இருக்கியே?” படத்தின் டைரெக்டருக்கு காமெடி ரொம்ப இயல்பா வருது.சீரியஸான காட்சிகளில்,ஆபத்தான காட்சிகளில் கூட போகிற போக்கில் நகைச்சுவையை அள்ளித்தெளித்து விட்டு போகிறார் . ஒரு உதா...
மந்திர வளையத்துக்குள்ள ஒரு தடவை உள்ளே வந்துட்டா மறுபடி வெளீயே போக முடியாது. அப்போ ஒரு தடவை சூசூ போய்ட்டு வந்துடட்டா?


வில்லனாக வருபவர் பிரதாப்போத்தன் மாதிரி வந்து அவர் பங்குக்கு லந்து பண்ணுகிறார்.மீண்டும் ஒரு உதா.. என்கிட்ட ஒரு பையன் இருக்கான்,ஆனா அவனுக்கு ஒண்ணும் தெரியாது. அப்ப அவந்தான் இந்த வேலைக்கு கரெக்ட்டா இருப்பான்.



கேஜ் மாங்கு மாங்கு என சாப்பிடுவதைப்பார்த்து யங் ஹீரோ வியந்து நின்றதும்

“தப்பா நினைக்காதே,நான் சாப்பிட்டு 10 வருஷம் ஆச்சு”

என்றதும் தியேட்டரே கை தட்டலால் அதிர்கிறது.

ஹீரோயின் மிச்சமான ஃபிகர்.(17 1/2(பதினேழரை)வயது}ஃபிரிட்ஜ் ஃப்ரீசரில் வைத்து எடுக்கப்பட்ட எலுமிச்சம்பழம் மாதிரி என்னா ஒரு ஃப்ரெஷ்னெஸ்,என்னா ஒரு கலர்?அவரது கூந்தல் அழகு தங்க இழைகளால் வார்த்து நெய்யப்பட்ட சுப்பையா பாவு மாதிரி அலை பாயும் அழகு..அடடா!


முக அழகில் மடோனாவாவின் மினியேச்சர்,பளிங்குக்கற்களில் ஊற்றிய பாதரசம் போல் கண்கள்,கோதுமை அல்வாவை 2 துண்டுகளாக வைத்தது போல் உத்டுகள்,ஒயிட் வாஷ் செய்யப்பட்ட சோளக்கருது முத்துக்கள் தர்ப்பூசனிப்பழத்தில் பதித்துவைத்தது போல் பற்கள்,இடை அழகில் இலியானாவின் க்ளோனிங்க்,நடை அழகில் நேருக்கு நேர் சிம்ரன்,ஷெரன் ஸ்டோனின் கட்டழகு,என இமைக்காமல் ரசிக்க வைக்கும் அழகுப்பொக்கிஷம்.
இருவருக்கும் இடையே நடக்கும் காதலா,நட்பா வசனங்கள் ரொம்ப அழகு,


என்னை உனக்கு கொஞ்சமா பிடிச்சிருக்கா,நிறையா பிடிச்சிருக்கா?

......யோசிச்சு சொல்றேன்

என்னை ரொம்பத்தெளீவா குழப்பறே!




இந்த ஜோடிகளின் அலம்பல் பத்தாதென்று கேஜின் ஜோடியாக வரும் வெரோனிக்கா வேறு இதழ் ஒத்தடம் கொடுத்து அவரையும்,நம்மையும் சூடேற்றுகிறார்.


அங்கங்கே வரும் கிராஃபிக்ஸ் காட்சிகள் சில பிரமிப்பு,சில சும்மா உதார்.மம்மி
படத்தில் வருவது போல் பல காட்சிகள்.


சேசிங் காட்சிகள் அதிகம்.கார் மாடெல் மாறுவது,வில்லன் கடைசி வரை ஹீரோவை டாமினேட் செய்வது ,என பல காட்சிகள் சிறுவர்களை கவருவது உறுதி.

காதில் பூ சுற்றும் காட்சிகளும்,லாஜிக்கே இல்லாத காட்சிகளும்
அதிகம்.ஆனால் ரசிக்க வைக்கும் அளவில்தான் அமைத்திருக்கிறார் டைரக்டர்.ஆங்கில பதிப்பில் பார்த்தால் பல வசனங்கள் புரியாமல் போக வாய்ப்புண்டு.



டிஸ்கி - -க்ளைமாக்ஸில் பேயாக மாறும் வெரோனிக்காவைப்பார்த்து யாரும் பயம் கொள்ளவே இல்லை.ஏனெனில் அவர் அப்போதுதான் லோ கட்டில்,லோ ஹிப்பில் கிளாமராக தெரிகிறார்.


15 வயசு முதல் 18 வயசு வரை உள்ள டீன் ஏஜ் பசங்களும்,அம்புலி மாமா,பாலமித்ரா காமிக்ஸ் ரசிகர்களூம்,ஹாரிப்பாட்டர் ரசிகர்களும் பார்க்கலாம்.

Monday, July 19, 2010

பொள்ளாச்சி மாப்ளே-சினிமா விமர்சனம்

-8 வருஷங்களுக்கு முன்பே  ரெடி ஆன படம் .பல பிரச்சனைகளால் ரிலீஸ் ஆகாமல் இப்போ வந்திருக்கு.80 வருஷங்களுக்கு முன்பே  வந்திருந்தால் ஒரு வேளை ஹிட் ஆகி இருக்கலாம்.அவ்வளவு அரதப்பழசான கதை.ஓரளவு தியேட்டரில் உட்கார்ந்திருக்க முடிகிறது என்றால் அதற்கு முழு காரணம் கவுண்டமணியின் எகத்தாளமும்,சத்யராஜின் லொள்ளும் தான்.

எஸ்.வி.சேகரின் தத்துப்பிள்ளை நாடகத்தை உல்டா பண்ணிய கதை.வினுசக்ரவர்த்திக்கு வாரிசு இல்லை.மனைவியும் இறந்து விட்டாள்.ஊதாரி மச்சினன் அலெக்ஸ் மட்டும் ஒரே சொந்தம்.அவர் பேரில் சொத்துக்களை எழுதி வைக்க வினுவுக்கு விருப்பம் இல்லை.டுபாக்கூர் ஜோசியர் டி பி கஜேந்திரனின் பேச்சை நம்பி வெட்டாஃபீஸர் சத்யராஜ்ஜை தத்துப்பிள்ளை ஆக்குகிறார்.அவர் கவுண்டமணி,மணிவண்ணன் &கோ வுடன் அடிக்கும் லொள்ளுகளே படம்.
வேலை இல்லாத வெட்டாஃபீஸராக வரும் சத்யராஜ் +கவுண்டமணியின் அறிமுகங்களே கலகலக்க வைக்கும் காமெடி.சத்யராஜ் கவுண்டமணியை ஷாருக்கான் என்பதும்,கவுண்டமணி சத்யராஜ்ஜை சல்மான்கான் என்று வாருவதும் லொள்ளுத்தனமான காட்சிகள்
.
செலவுக்கு பணம் வேண்டும்,அதை யாரிடமிருந்து ஆட்டையை போடலாம் என் இருவரும் தீவிரமாக சிந்திப்பதும்,பின் அதை செயல்படுத்துவதும் செம காமெடி.
ஹீரோயின் துவைத்துக்கொண்டிருக்கும்போது இருவரும் போய் பணம் கேட்பதும்,அதற்கு அந்த பத்தினி தெய்வம் ஜாக்கெட்டுக்குள்தான் இருக்கு எடுத்துக்குங்க என்பதும்,கவுண்டர் அங்கலாய்ப்பாய் பார்க்க சத்யராஜ் அதை எடுப்பதும் ரகளைக்கு ரகளை.கிளு கிளுப்புக்கு கிளு கிளுப்பு.

கில்லர் மணிவண்ணன் வந்ததும் என்னமோ பெரிய ட்விஸ்ட் படத்தில் வருவதாக டைரக்டர் நம்பி அந்த இடத்தில் இடைவேளை பொடுவது செம காமெடி.
ஜமீன் மகன் ஆனதும் கவுண்டர் செய்யும் அலப்பறைகள் அட்டகாசம்.
வயக்காட்டில் களை பிடுங்கும் பெண்களை உட்கார வைத்து இருவரும் கடலை போடுவதும் ரசிக்கத்தக்க சீன்களே.
படத்தின் டைரக்டர் டி வி சீரியல் எடுத்தவர் என்பதால் நாடகத்தன்மை படம் நெடுக.இளைய தலைமுறை டைரக்டர்களின் படத்தை பார்க்கவே மாட்டாரோ என கேட்க வைக்கிறது.

இலக்கியத்தனமான பாடல் வரிகளுக்கு 2 சாம்பிள்
1.வெச்ச இடம் நல்ல இடம் உச்சத்துல வை
2.வீட்டுக்குதிரையை ஓட்ட வந்த ஒட்டகம் நீதானய்யா
உபயம்-சினேகன்
ஒரு கொலைன்னா ஒரு லட்சம்,2 கொலைன்னா ரிடக்சன் உண்டு என மணீவண்ணனின் அறிமுகமே எள்ளல்.தொட்டதுக்கெல்லாம் மகாநடிகன் படம் போல் மொக்க காமெடி செய்வதால் படத்தில் தேவையான சீரியஸ்னஸ் வரவில்லை.

அப்பாவி-அண்ணே,நான் பழனில இருந்து வர்லை,
க.மணி-பின்னே,இளனில இருந்து வந்தியா?

மணிவண்ணன் -யோவ்,நீ நின்னாலே தெரியாது,அவ்வளவு குட்டை,உக்காந்தா எப்படி?
டி.பி.கஜேந்திரன் -??

முடிவெடுக்கறது கஷ்டம்,முடி எடுக்கறதுதான் ஈஸி

ஜோலியை பாருன்னா பொம்பள சோளியை பாத்துட்டு இருக்கே?
 போன்ற மொக்கை காமெடிகளும் உண்டு.
வசன்கர்த்தாவுக்கு வேலை ரொம்ப கம்மி.மணிவண்ணன்,கவுண்டமணி சத்யராஜ் 3 பேருமே சொந்த டயலாக்சே பேசி விடுகின்றனர்.
 ஒட்டு மொத்தப்படத்துலயே உருப்படியான ஒரே வசனம்-சஞ்சலப்படும்போது சந்தோசம் தர்றதுதான் தெய்வம்.

அங்கங்கே கேப் கிடைக்கின்ற இடத்திலெல்லாம் சத்யராஜ்  கமலை இமிடேட் செய்கிறார்.
மணீவண்ணன் சூட்கேசில் கொலை செய்வது எப்படி போன்ற புக்கை பார்த்து “புக் படிச்சுட்டு சமயல் பண்ணுனாலே விளங்காது,இதுல கொலை வேறயா என கவுண்டர் கேட்கும்போது ஒரே அப்ளாஸ்(மொத்தமே தியேட்டரில் 50 பேர்தான்)
அடிக்க வாட்டமா இருக்கேன் அப்படிங்கறதுக்காக மாத்தி மாத்தி அடிக்கறதா என டி.பி.கஜேந்திரன் புலம்பும் சீனும் அதே ரகம்.

க்ளைமாக்ஸ் மஹா சொதப்பல்.சொல்லி வெச்ச மாதிரி அலெக்ஸ்,சத்யராஜ் எல்லாருமா அப்படி திருந்துவார்கள்?
ஒளிப்பதிவு ,இசை  என தொழில் நுட்பங்களும் சொதப்பல் ரகமே.
சி செண்ட்டர்களில் ஓடும்.கவுண்டமணி ரசிகர்களூம்,கடிஜோக்ஸை ரசிப்பவர்களும் பார்க்கலாம்.