Showing posts with label புலி. Show all posts
Showing posts with label புலி. Show all posts

Sunday, September 13, 2015

புலிVSபாகுபலி-சினிமா தொழில்நுட்பம்: பலியா, புலியா? யார் பெரிய ஆள்?- த இந்து ஒப்பீடு

  •  (மேலே) மகிழ்மதி அரண்மனையின் பென்சில் ஸ்கெட்ச் வரைபடம் கீழே- மகிழ்மதி அரண்மனையின் போட்டோ ரியலிஸ்டிக் எஃபெக்ட்
    (மேலே) மகிழ்மதி அரண்மனையின் பென்சில் ஸ்கெட்ச் வரைபடம் கீழே- மகிழ்மதி அரண்மனையின் போட்டோ ரியலிஸ்டிக் எஃபெக்ட்
‘தல பெரிய ஆளா, தளபதி பெரிய ஆளா?’ என்ற ‘நெட்’டடிப் பஞ்சாயத்தெல்லாம் பழசாகிவிட்டது. பாகுபலியின் விஷுவல் எஃபெக்ட்ஸ் மற்றும் கிராஃபிக்ஸ் காட்சிகளின் பிரமாண்ட விருந்து ஏற்படுத்திய தாக்கத்தின் காரணமாகத் தற்போது கிராஃபிக்ஸில் எந்தப் படம் பெரிது என்று வறுக்க ஆரம்பித்திருக்கிறார்கள் இணைய ரசிகர்கள்.
'புலி’ படத்தின் டீசரைப் பார்த்ததுமே பலரும் அதை ‘பாகுபலி’ படத்துடன் ஒப்பிட்டுப் பேச ஆரம்பித்துவிட்டார்கள். சுமார் 250 கோடி ரூபாய் செலவில் தயாரிக்கப்பட்டதாகக் கூறப்படும் ‘பாகுபலி’ படத்துடன் ‘புலி’ படத்தை இப்படி ஒப்பிட நினைப்பது சரியாக இருக்காது. அதேபோல ஒரு படத்தின் மொத்த ஷாட்களில் விஷுவல் எஃபெக்ட்ஸ் செய்யப்பட்ட ஷாட்கள் எத்தனை? அவை எத்தனை நிறுவனங்களுக்கு பிரித்துக்கொடுக்கப்பட்டு கிராஃபிக்ஸ் வேலை பகிர்ந்தளிக்கப்பட்டது, எத்தனை தொழில்நுட்பக் கலைஞர்கள் அதில் பணியாற்றினார்கள் போன்ற அளவுகோல்கள் முக்கியமானவை.
‘பாகுபலி’ முழுவதும் சரித்திரப் பின்னணியில் வெளியான படம். ‘புலி’ ஒரு ஃபேன்டஸி சரித்திரக் கதை. புலி படமும் 95% விஷுவல் எஃபெக்ட்ஸ், கிராஃபிக்ஸ் காட்சிகளை நம்பியே தயாராகியிருக்கிறது என்கிறார்கள். ‘பாகுபலி’ படத்துக்கு  நிவாசமோகன் விஷுவல் எஃபெக்ட்ஸ் பணியைச் செய்துவருகிறார். ‘புலி’ படத்தின் விஷுவல் எஃபெக்ட்ஸ் கண்காணிப்பாளர் கமலக்கண்ணன். இவர்கள் இருவரும் இயக்குநர் ஷங்கரின் பல படங்களில் ஒன்றாக வேலை பார்த்தவர்கள்தான். ஆனால், புலி படத்தின் விஷுவல் எஃபெக்ட்ஸ் காட்சிகள் எந்த அளவுக்கு ரசிகர்கள் நம்பும்படியாக ரியல் லுக்குடன் உருவாக்கப்பட்டிருக்கின்றனவோ அதைப் பொறுத்தே அதன் தரத்தை முடிவு செய்ய முடியும்.
ஆனால், இந்தியப் படங்களில் விஷுவல் எஃபெக்ட்ஸ் துறையில் பாகுபலிக்கு முன் பாகுபலிக்குப் பின் என்று கோடு கிழித்துவிட்டதற்கு, அந்தப் படத்தின் இயக்குநர் ராஜமௌலியின் காட்சிக் கற்பனைத் திறனும், அதை அப்படியே விஷுவலில் கொண்டுவர எல்லா சாத்தியங்களையும் உருவாக்கிக்கொண்ட விஷுவல் எஃபெக்ட்ஸ் குழுவினரின் நம்பிக்கையும் உழைப்பும்தான் முக்கியக் காரணங்கள்.
இனி, பாகுபலியில் வியக்கவைத்த விஷுவல் எஃபெக்ட் காட்சிகள் எப்படி உருவாயின என்று பார்க்கலாம். பாகுபலியில் இந்தியா, மற்றும் வெளிநாடுகளைச் சேர்ந்த 17 விஷுவல் எஃபெக்ட் ஸ்டுடியோக்களுக்கு வேலை பகிர்ந்தளிக்கப்பட்டது. இந்த நிறுவனங்களைச் சேர்ந்த 600 வரைகலை ஓவியர்கள் இரவு பகலாகப் படம் தயாரான ஹைதராபாத்திலேயே பணியாற்றினார்கள்.
சரித்திரப் பின்னணியில் எடுக்கப்படும் ஒரு படத்துக்கு அரண்மனையின் 360 டிகிரி தோற்றம், அரண்மனைக்கு முன்பிருக்கும் நுழைவுப் பகுதி, அரண்மனை அமைந்திருக்கும் கோட்டைக் கொத்தளம், அதற்குள் அமைந்திருக்கும் சிறைச்சாலை, அரண்மனை லாயம், அரண்மனையின் தர்பார் ஹால், அரண்மனையில் மன்னன் உள்ளிட்ட அரச குடும்பத்தினர் வசிக்கும் பகுதிகள், போர்க்களம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் காட்சிகள் இடம்பெறலாம்.
விஷுவல் எஃபெக்ட் துறை வளர்ச்சியடைவதற்கு முன்புவரை பாகுபலி போன்ற ஒரு சரித்திரப் படமென்றால், தற்போது சுற்றுலா தலங்களாக மாறிவிட்ட அரண்மனைகளில் படப்பிடிப்பு நடத்தப்படும். போர்க்களக் காட்சிகளுக்கு ஆயிரக்கணக்கான துணை நடிகர்கள் வரவழைக்கப்படுவார்கள். அனைவருக்கும் டம்மி ஆயுதங்கள் செய்ய வேண்டியிருக்கும். நூற்றுக்கணக்கான குதிரைகள் நேரடியாகப் பயன்படுத்தப்படும். அரண்மனையில் பல்வேறு உள்ளரங்கக் காட்சிகளுக்கு செட் போடப்பட்டு எடுக்கப்படும்.
ஆனால், இன்று நிலைமையே வேறு. இயக்குநரின் கற்பனைக்கு ஏற்ப, காலத்தால் அழிந்துபோன பிரம்மாண்டமான அரண்மனைகளைக் கூட ‘போட்டோ ரியலிஸ்டிக் எஃபெக்ட் (Photo realistic effects in vfx) என்ற 3டி கிராபிக்ஸ் மூலம் மீண்டும் உருவாக்கிக் காட்டிவிடலாம். ‘போட்டோ ரியலிஸ்டிக்’ என்ற இரண்டு வார்த்தைகளின் அர்த்தமே இது எப்படிப்பட்ட கிராஃபிக்ஸ் உத்தி என்பதை உங்களுக்குச் சொல்லிவிடும். மனிதர்கள், விலங்குகள், பறவைகள், தாவரங்கள் உள்ளிட்ட உயிர்களும், கடல், காடு, மலை, அருவி உள்ளிட்ட இயற்கையும், மனிதனால் உருவாக்கப்பட்ட ஜடப்பொருட்களும் யதார்த்தத்தில் இருப்பதைக் கண்ணாடிபோல உள்ளது உள்ளபடி காட்டக்கூடியவை ஒளிப்படங்கள். வீடியோ வந்துவிட்டாலும் போட்டோக்களை நாம் பொக்கிஷமாக மதிப்பதற்குக் காரணம் அதில் இருக்கும் ரியாலிட்டி.
சினிமாவில் விஷுவல் எஃபெக்ட்ஸ் துறையைப் பொறுத்தவரை இன்று ‘போட்டோ ரியலிஸ்டிக் எஃபெக்ட்’ என்பது அதிகம் புழங்கும் பதமாகிவிட்டது. இயக்குநர்கள் அனைவரும் “எனது படத்தில் கிராஃபிக்ஸ் காட்சிகள் போட்டோ ரியலிஸ்டிக்காக இருக்க வேண்டும் என்று கூற ஆரம்பித்திருக்கிறார்கள். இதற்குக் காரணம் இந்த அட்டகாசமான தொழில்நுட்பம்தான்.
பாகுபலி படத்தில் இதற்கு முன் எந்த இந்தியப் படங்களிலும் இல்லாத அளவுக்கு போட்டோ ரியலிஸ்டிக் எஃபெக்ட்ஸ் உத்தி முழுமையாகவும் அதன் சாத்தியங்கள் அனைத்தும் பயன்படுத்தப்பட்டன. ‘பாகுபலி முதல் பாகத்தில் ரசிகர்களை வாய்பிளக்க வைத்த ‘மகிழ்மதி’ தேசத்தின் அரண்மனையும் அதன் மற்ற பகுதிகளும் முதலில் பென்சில் டிராயிங் முறையில் வரையப்பட்டு, பின் அந்த ஓவியங்கள் கணிப்பொறியில் ஸ்கேன் செய்யப்பட்டு 3டி டிராயிங் படங்களாக மாற்றப்பட்டன. இப்படி மாற்றப்பட்ட அரண்மனையில் ஊறுகாய் மாதிரி தேவைப்படும் இடங்களில் கொஞ்சம் செட்டும் பயன்படுத்தப்பட்டது. இப்படி அரைகுறையாகப் போடப்பட்ட செட்டுகளின் பின்னணியில் பச்சை நிறத் திரைச்சீலைகள் வைக்கப்பட்டன. இந்த பின்னணியில் நடிகர்களின் ‘லைவ் ஆக்‌ஷன்’ நடிப்பு படமாக்கப்பட்டது. பிறகு எது செட், எது போட்டோ ரியலிஸ்டிக் இமேஜ் என்று தெரியாத வண்ணம், ஆஃப்டர் எஃபெக்ட்ஸ் என்ற மென்பொருள் பயன்படுத்தப்பட்டு அவை எவ்வாறு போட்டோ ரியலிஸ்டிக் தன்மைக்கு வாய் பிளக்க வைக்கும் பிராமாண்ட காட்சிகளாக மாற்றப்பட்டன என்பதன் படிநிலைகளை அடுத்துப் பார்க்கலாம்.

நன்றி-த இந்து

Thursday, September 03, 2015

புலி படத்தின் மெயின் காமெடி ஹீரோ ரோபோ சங்கர் பேட்டி

‘மாரி’ படத்தின் மூலம் காமெடி நடிப்பில் பளிச்சென்று தெரிந்தார் ‘ரோபோ’ சங்கர். தற்போது விஜய் நடித்து வெளிவரவுள்ள ‘புலி’ படத்திலும் முக்கிய பாத்திரத்தில் நடித்துள்ள அவரைச் சந்தித்தோம்.
நீங்கள் எப்படி ‘ரோபோ’ சங்கர் ஆனீர்கள்?
என்னுடைய பெயர் சங்கர். நான் மதுரைக்காரன், எம்.ஏ வரை படித்திருக் கிறேன். படிக்கும்போதே நான் பாடி பில்டர். நடனக் குழுக்களிலும் இருந்துள் ளேன். ஒரு முறை வித்தியாசமாக MUSCLES நடனம் பண்ண ஆரம் பித்தேன். பிறகு உடல் முழுக்க பெயின்ட் அடித்து ரோபோ போன்று நான் ஆடிய நடனம் பிரபலமானது. அப்படித்தான் ‘ரோபோ’ சங்கர் ஆனேன். இதுவரை 42 நாடுகளில் 14,000 கலை நிகழ்ச்சிகள் நடத்தியுள்ளேன்.
கலை நிகழ்ச்சிகளில் இருந்து எப்படி சினிமாவுக்கு வந்தீர்கள்?
தொலைக்காட்சியில் ‘கலக்கப் போவது யாரு’ நிகழ்ச்சிதான் எனக்கு அறிமுகம். அதன் மூலமாக மேலும் சில நிகழ்ச்சிகளில் வாய்ப்பு வந்தது. அது இன்னும் பிரபலமாக சினிமா வாய்ப்புகள் வந்தன. ‘இதற்குத் தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா’, ‘வாயை மூடி பேசவும்’ படங்களில் பெரிய பாத்திரங்கள் கிடைத்தன. ‘வாயை மூடி பேசவும்’ இயக்குநர் பாலாஜி மோகன் மூலமாக ’மாரி’ படத்தில் வாய்ப்பு வந்தது. அதன்மூலம் இப்போது எல்லோருக்கும் தெரிந்த முகமாகி இருக்கிறேன். இந்த இடத்தைப் பிடிக்க நான் நிறைய கஷ்டப்பட்டுள்ளேன்.
நான்தான் ‘மாரி’ படத்தின் நிஜ ஹீரோ என்று நீங்கள் பேசியதாக சில செய்திகள் வெளிவந்ததே?
என் வாழ்க்கையிலேயே நான் மிகவும் வருத்தப்பட்டது இந்தச் செய்தியைப் பார்த்துதான். ‘மாரி’ படத்தில் எனக்கு பெரிய வாய்ப்பு கொடுத்தவர் தனுஷ் சார். அப்படி இருக்கும்போது தனுஷ் சாரை புண்படுத்தும் விதமாக நான் அப்படி சொல்வேனா?
தனுஷ் சாரை நேரில் சந்தித்து, அந்த மாதிரி எல்லாம் நான் பேசவில்லை சார் என்றேன். அதற்கு அவர், “எனக்கு உங்களைப் பற்றி தெரியும். நீங்கள் இப்போதுதானே வந்திருக்கிறீர்கள். இதைப்போல இன்னும் நிறைய வரும். எதைப் பற்றியும் கவலைப்படாமல் உங்கள் வேலையைப் பாருங்கள்” என்றார். அதற்கு பிறகு 2 நாட்கள் கழித்து ஒரு தங்கச் சங்கிலியை பரிசளித்தார். என் வாழ்க்கையில் மறக்க முடியாத நாள் அதுதான்.
எந்த இயக்குநரின் படங்களில் நடிக்க ஆசைப்படுகிறீர்கள்? எந்த வேடத்தில் நடிக்க விரும்புகிறீர்கள்?
ஒவ்வொரு இயக்குநருக்கும் ஒரு தனித்திறமை இருக்கிறது. ஆகையால் அனைத்து இயக்குநரின் படங்களிலும் நடிக்க ஆசைப்படுகிறேன். நமக்கு காமெடிதான் வரும். அதனால் காமெடிக்கு முதலில் முக்கியத்துவம் அளிப்பேன்.
‘புலி’ படத்தில் உங்களுக்கு என்ன பாத்திரம்?
அதில் முக்கியமான பாத்திரத்தில் நடித்திருக்கிறேன். என்ன பாத்திரம் என்பது மட்டும் சஸ்பென்ஸ்.
எந்த நாயகனுடன் இணைந்து காமெடி பண்ண ஆசைப்படுகிறீர்கள்..
எனக்கு கமல் சார், அஜித் சார் இருவருடனும் நடிக்க வேண்டும் என்ற ஆசை இருக்கிறது. அதே போல, நிறைய காமெடி நடிகர்கள் இருக்கிறார்கள், நான் யாருக்கும் போட்டி இல்லை. என் வழி தனி வழி என்று தீர்மானித்து போய் கொண்டிருக்கிறேன்.


நன்றி - த இந்து

Monday, January 12, 2015

புலி - விஜய் 58 பட இசை வீரம் இசையை மிஞ்சுமா?-தேவி ஸ்ரீபிரசாத் பேட்டி

தேவி ஸ்ரீபிரசாத் | படம்: கிரண் சா
தேவி ஸ்ரீபிரசாத் | படம்: கிரண் சா 
 

'புலி'யில் புது இசை: சிலாகிக்கிறார் தேவி ஸ்ரீபிரசாத்

 

 
2014ல் அஜித் நடித்த 'வீரம்' படத்திற்கு இசையமைத்தவர், 2015ல் விஜய் நடித்து வரும் 'புலி' படத்திற்கு இசையமைத்து வருகிறார்... அவர்தான் தேவி ஸ்ரீபிரசாத்.
தமிழ், தெலுங்கு என இரு மொழிகளிலும் அதிகமான படங்களுக்கு இசையமைத்து வரும் தேவி ஸ்ரீ பிரசாத்திடம் பேசினோம்.
"2014ம் ஆண்டு எனக்கு ‘வீரம்’ படம் மூலமா நல்ல ஒரு வரவேற்பு கிடைத்தது. தெலுங்கிலும் பல படங்களுக்கு வரவேற்பு கிடைத்தது. இந்த 2015ம் ஆண்டு மிகவும் மகிழ்ச்சியாக ஆரம்பித்திருக்கிறது.
விஜய் படத்திற்கு இசையமைப்பது என்பது ஒரு இனிமையான அனுபவம். அவர் நடிச்ச படங்களில் எல்லா பாடல்களுமே சூப்பர் ஹிட்டாக அமைந்த படம் 'வில்லு' தான் என்று என்னிடம் பலமுறை கூறியிருக்கிறார்.
இயக்குநர் சிம்புதேவன் என்னிடம் 'புலி' படத்தைப் பற்றி பேசும் போதே எனக்கும் அவரும் நல்ல செட்டாகி விட்டது. அவர் ஒரு கார்டூனிஸ்ட் என்பதால், படத்தில் ஒவ்வொரு பாத்திரத்தையுமே கார்டூனாக காட்டியதால் எனக்கு ரொம்ப எளிமையாக இருந்தது. 'புலி'யில் புது இசையை கொடுக்க வேண்டும் என்று தீர்மானித்திருக்கிறேன். 'புலி' தலைப்பிற்கே ஒரு பெரிய ரீச் கிடைத்திருக்கிறது.
'புலி' ஒரு வித்தியாசமான படமாக இருக்கும். இதற்கு முன்னால் இந்த மாதிரியான படத்திற்கு நான் இசையமைத்ததில்லை. இப்படத்திற்கு நான் பண்ணப் போகிற இசையில் படத்தோட கதைக்கும், பிரம்மாண்டத்துக்கும், அதனோட அழகுக்கும், பொருத்தமா இருக்கணும். அதற்கு ஏற்றார் போல் பண்ணிக் கொண்டிருக்கிறேன்.
இரண்டு பாடல்களை முடித்து கொடுத்துவிட்டேன். ஒரு பாடலின் படப்பிடிப்பு முடிந்துவிட்டது. மொத்தம் 6 பாடல்கள் இருக்கிறது. விஜய், ஸ்ருதிஹாசன் இப்படத்தில் பாடுகிறார்களா என்பது இப்போதே சொல்ல முடியாது. நான் எதையாவது சொன்னால் புலி என்னை சாப்பிட்டு விடும்.
என்னுடைய பாடல்கள் குழந்தைகளுக்கும் பிடிக்கணும் என்பதை மனதில் வைத்து தான் அனைத்து பாடல்களையும் பண்றேன். தெலுங்கில் நிறைய படங்கள் பண்ணுவதால், தமிழில் ரொம்ப தேர்ந்தெடுத்து தான் பண்றேன்.
என்னோட குரு மறைந்த மாண்டலின் ஸ்ரீனிவாஸ் அவர்களுக்கு மிகப்பெரிய இசை அஞ்சலி நிகழ்ச்சியை அடுத்த மாதம் நடத்த இருக்கிறோம். இந்தியாவில் இருக்கிற பெரிய இசைக் கலைஞர்கள் பலரும் இதில் கலந்து கொள்ள இருக்கிறார்கள். நடிகர் கமல்ஹாசன் சிறப்பு விருந்தினராக கலந்து கொள்ள இருக்கிறார். நிறைய பேருக்கு நான் மாண்டலின் ஸ்ரீனிவாஸ் சிஷ்யன் என்பது தெரியாது.
நாலைந்து வயது இருக்கும் போதே அவர்கிட்ட மாண்டலின் கற்றுக் கொள்ள போய்விட்டேன். என்னை மிகப் பெரிய மாண்டலின் கலைஞராக பார்க்க வேண்டும் என்று ஆசைப்பட்டார். ஆனால், நான் சினிமா பக்கம் போய்விட்டேன்" என்றார். 


நன்றி -த இந்து