Showing posts with label புனைவு. Show all posts
Showing posts with label புனைவு. Show all posts

Monday, March 12, 2012

பத்திரமா பார்த்துக்குங்க - சினிமா விமர்சனம்

சில பல வருடங்களுக்கு முன்னால தல நடிச்ச காதல் மன்னன் படம் நினைவு இருக்கா? ஊர்ல 1008 பொண்ணுங்க வயசுக்கு வந்து ரெடியா இருந்தாலும் நம்மா ஆளுங்க ஆல்ரெடி நிச்சயம் ஆன பொண்ணையே குறி வெச்சு லவ் பண்ணுவாங்களே. அதே கதைதான்.. கொஞ்சம் ஆல்டர் பண்ணி இட்லியை உப்புமா ஆக்கி சமைச்சிருக்காங்க..


ரொம்ப நாளைக்குப்பிறகு கோடம்பாக்கத்துக்கு லட்சணமா, சுஹாசினி மணிரத்னம் விருப்பட்ட மாதிரி கலரா  ஹேண்ட்சம்மா ஒரு புதுமுக ஹீரோ வந்திருக்காரு.. இதை ஏன் ஸ்பெசிபிக்கா சொல்றேன்னா இந்த 10 வருஷமா புதுமுக ஹீரோன்னா தலை சீவாம, தாடியோட பார்த்து பார்த்து அலுத்துடுச்சு.. இவர் ஆள் டீசண்ட்டா இருக்கார்.. ஆனா அண்ணன் சிரிக்கும்போதுதான் ஸ்டாலின் மாதிரி உதடு ஒரு சைடுல லேசா இழுக்குது... மற்றபடி ஓக்கே.. ஆள் செம சுறு சுறுப்பு.. நல்ல எதிர்காலம் இருக்கு.. அண்ணன் பேரு சரண் குமார்

ஹீரோயின் கூட ஆள் லட்சணமா, கொழுக் மொழுக் கன்னத்தோட ஜைஜாண்டிக்காதான் இருக்காரு.. ( இந்த ஜைஜாண்டிக் என்பது அதிகாரப்பூர்வமா அறிவிக்கப்படாத  ஒரு ஆண் பால் வார்த்தை ஹி ஹி பாப்பா கிட்டே கொஞ்சம் பெண்மை , நளினம் மிஸ்சிங்க் )ஜிகிடி பேரு ஸ்மிதா ஸ்ரீ

http://tamildigitalcinema.com/wp-content/uploads/2011/07/Pathirama-Pathukkunga-3.jpg

சரி கதைக்கு வருவோம்.. வழக்கம் போல ஹீரோ ஹீரோயினை முத தாட்டி ( தாட்டின்னா தடவைனு அர்த்தம் ஹி ஹி )பார்க்கறப்ப மயங்காத குறையா வாயை பிளக்கறாரு.. பின்னாலயே நாய் மாதிரி சுத்தறாரு.. காணாததைக்கண்ட மாதிரி ஹீரோ ஹீரோயினையே அடிக்கடி உத்து பார்க்கறப்ப ஹீரோயினுக்கு புரியாமயா இருக்கும்?தன்னை கரெக்ட் பண்ணத்தான் அலையறான்னு? ஆனா பாப்பா அப்பாவி போல.. 

எனக்கு ஆல்ரெடி ஃபிக்ஸ் ஆகிடுச்சுன்னு இண்டர்வெல்க்கு 15 நிமிஷம் முன்னால பாப்பா சொல்லுது.. உடனே ஹீரோ நிச்சயிக்கப்பட்ட மாப்ளையை நம்ம இளைய தலைவலி விஜய் நடிச்ச ஷாஜகான்,யூத் படங்கள்ல வர்ற மாதிரி நம்ப வெச்சு கழுத்தை அறுத்து ஹீரோயின் கிட்டெ கெட்ட பேர் ஏற்படுத்தறார்.. 

இதுல என்ன செம காமெடின்னா அந்த பேக்கு மாப்ளை முன்னே பின்னே பழக்கம் இல்லாத ஹீரோ சொல்ற மாதிரி எல்லாம் கேட்டு ஹீரோயின் கிட்டே கெட்ட பேர் வாங்கிக்கறார்.. 

கடைசில அந்த மாப்ளையே ஹீரோ - ஹீரோயினை சேர்த்து வெச்சுடறார்.. இதுதான் கதை... 

 ஆனா பாருங்க டைரக்டர்க்கு திடீர்னு ஒரு டவுட்.. படம் யூத்ங்க மட்டும் பார்த்தா போதுமா? தாய்க்குலங்களை கவர வேணாமா? அதுக்காக அண்ணன் தேவி பாலா எழுதுன மாலைமதி நாவல் ஒண்ணை நைஸா சுட்டு அந்த கதையை ஹீரோவோட அம்மா அப்பா, ஹீரோயினோட அம்மா அப்பா இடைல புகுத்தி 2 பேரும் முறை பொண்ணு -முறை பையன் தான் அப்டின்னு ஒரு கிளைக்கதையை நைஸா சொருகறாரு..

http://tamildigitalcinema.com/wp-content/uploads/2011/07/10.jpg

இயக்குநர் பாராட்டு பெறும் இடங்கள் 

1.  டிபார்ட்மெண்ட் ஸ்டோர்ல ஹீரோ தனக்கு வராத ஒரு ஃபோனை வந்த மாதிரி காட்டி அதுல சொல்லாத ஒரு ஃபோன் நெம்பரை ஹீரோயின் கையை பிடிச்சு உள்ளங்கைல எழுதி டச் பண்றாரே அந்த ஐடியா நல்லாருக்கு.. ( நோட் பண்றா நோட் பண்றா)

2. ஒரு பாடல் காட்சில ஹீரோயின் குளத்துல ஏகப்பட்ட ரோஜாப்பூக்கள்க்கு இடையில் குளிக்கறாரே அந்த சீன் செம ( யாரும் டென்ஷன் ஆகாதீங்க.. அந்த சீன்ல ஹீரோயின் தலை மட்டும் தான் தெரியுது ஹி ஹி - இங்கே படத்துல தலையை தாண்டி தெரியுதேன்னு கேட்காதீங்க, அந்த சீன் படத்துல நஹி ) )

3. ஹீரோ ஹீரோயினை டார்ச்சர் பண்ண செல் ஃபோன், லேண்ட் லைன் ஃபோன் என மாறி மாறி  கலாய்ப்பதும், அதற்கு அவர் கொடுக்கும் விளக்கங்களும் நைஸ்

4. ஹீரோயினுக்கு வெள்ளை நிறம் பிடிக்காதுன்னு தெரிஞ்சதும் ஹீரோ ஹீரோயினுக்கு நிச்சயிக்கப்பட்ட மாப்ளைக்கு எல்லாமே வெள்ளை நிறம் வர்ற மாதிரி ரெடி பண்ணி அனுப்புவது செம,.,. குறிப்பா மாப்ளையோட செல் ஃபோன் ரிங்க் டோன் கூட “ வெள்ளைப்புறா ஒன்று ஏங்குது கையில் வராமலே.. “அந்த சீன்ல ஹீரோயின் கடுப்பாவதும், ஹீரோ துள்ளிக்குதிப்பதும், மாப்ளை பல்பு வாங்குவதும் ஆஹா..!!

5. ஹீரோ மற்றும் ஹீரோயின் செலக்‌ஷன்.. நீட்.. அவங்க பர்ஃபார்மென்ஸ் ஆல்சோ குட்.. 

http://tamildigitalcinema.com/wp-content/uploads/2011/07/Pathirama-Pathukkunga-20.jpg


 இயக்குநரிடம் சில கேள்விகள்


1.ஹீரோவுக்கு மாமாவா வர்ற இன்ஸ்பெக்டர் எதுக்காக வில்லன் இடத்துக்கு போய் அங்கே 2 ஸ்டெப் போட்டு டான்ஸ் ஆடறார்? கண்ணியத்தையே குறைச்சுடுச்சே?

2. எந்த கேனையனாவது  தனக்கு நிச்சயம் ஆன பெண்ணை என்னமோ பஸ்ல முன் சீட்ல உக்காந்து இருக்கற புது ஃபிகர் காலை உரசுற மாதிரி ஹோட்டல்ல உரசி கெட்ட பேர் வாங்குவானா?

3. ஹீரோயின் எதுக்காக கேன்சல் ஆன கல்யாண மாப்ளை ஆஃபீஸ்க்கு சம்பந்தமே இல்லாம வர்றார்? அந்த சீன் டிராமா மாதிரி இருக்கு.. 

4. லவ்வர்ஸ்னா முதல்ல கோயில், பார்க், பீச், சினிமா தியேட்டர் இப்படித்தான் போவாங்க.. ஆனா ஹீரோயின் திடு திப்னு லவ்க்கு ஓக்கே சொன்ன அடுத்த செகண்டே ஹீரோவோட வீட்டுக்குப்போகலாம்குதே அது எபப்டி;? ( ரொம்ப பிராக்டிகல் பொண்ணு போல)

5.ஹீரோவும், ஹீரோயினும் டான்ஸ் ஆடறப்ப அவங்க பின்னால கலர் குண்டு போடற பழக்கம் எல்லாம் ரஜினி நடிச்ச ராஜா சின்ன ரோஜா- சூப்பர் ஸ்டாரு யாருனு கேட்டா - காலத்துலயே முடிஞ்சுடுச்சு,.. எதுக்கு பழசை எல்லாம் மறுபடி கிளரிங்க்?

6. படத்துல நம்ப முடியாத முக்கியமான விஷயம் ஹீரோவோட ஃபிரண்டோட தங்கச்சிக்கு ஹீரோவோட இன்னொரு ஃபிரண்ட் கில்மா மெசேஜ் அனுப்புறதும் அந்தப்பழி ஹீரோ மேல வர்றதும்.. அதுல அந்த தங்கச்சி அத்தனை கில்மா மெசேஜையும் எரேஸ் பண்ணாமயா வெச்சிருப்பா? அப்படி அசால்ட்டா வெச்சவ செல்ஃபோனை மறந்துட்டு போவாளா?

7. ஹீரோவோட மாமா இன்ஸ்பெக்டர் பேங்க் அக்கவுண்ட்ல வில்லன் அவருக்கே தெரியாம பல தவணைகள்ல பல தடவை பணம் கட்டறான்.. அது எப்படி இன்ஸ்பெக்டருக்கு தெரியாம இருக்கும்? அந்த பேங்க்லதான் எஸ் எம் எஸ் வசதி அலர்ட் பண்றாங்களே. முதல் தடவை பணம் கட்டுனதும் SMS வந்திருக்குமே.. அதுவும் இல்லாம ஒரு இன்ஸ்பெக்டர் தன் பேங்க் பேலன்ஸை பல மாதங்கள் செக் பண்ணாம இருப்பாரா?

8. ஹீரோவுக்கு பேங்க்ல அக்கவுண்ட்டே இல்லையாம் அய்யோ ஹய்யோ.. இந்தக்காலத்துல ஸ்கூல், காலேஜ் படிக்கும்போதே பல சந்தர்ப்பங்கள் பேங்க் அக்கவுண்ட் ஓப்பன் பண்ண சான்ஸ் இருக்கே?

9. அம்மாவுக்கு உடம்பு சரி இல்லைன்னு ஏமாத்தி ஆபரேஷனுக்காக ஹீரோவோட  மாமா பேங்க் அக்கவுண்ட்ல பணம் கட்டறதா சீன் வருது.. ஓக்கே , ஆனா 13 டைம் அவ்ளவ் பெரிய  தொகை செலுத்தப்படு,ம்போது டவுட் வராதா?

10. ஹீரோயின் அவ்ளவ் லூசா? நிச்சயிக்கப்பட்ட மாப்ளையை டகார்னு கழ்ட்டிவிடுது.. ஹீரோவை ஏத்துக்குது.. டகார்னு ஹீரோவை வெறுக்குது.. ஒய் திஸ் கொலை வெறி?.


https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhAzyuNqN34sTAk7SOAMb2TuZ0pqWLEU_h4IIlXtWVF6yUKaGZ5vxQFAi-Mbb1xhWruNGpn1XAd3h9v-zJHd4NwstvGHaRotAmFqUHWi1nMjBxchsXxQDsvQzOEQKQn4ypINlE7mrixa6Pn/s1600/pathirama-pathukkunga-movie-stills-26.jpg

மனம் கவர்ந்த வசனங்கள்

1.  தினம் காசு கேட்கறாரு... அடிக்கறார்.. காசு குடுத்தாலும் குடிச்சுட்டு வந்து மறுபடி அடிக்கறார்


தண்ணி அடிக்கறதுக்கு முன்னே அவ அடிப்பா, அதுக்குப்பிறகு நான் அடிப்பேன்


2. போலீஸ்காரனா உத்தியோகம் பார்த்தாலும் சரி, மளிகைக்க்டைல பொட்டலம் கட்டறவனா இருந்தாலும் சரி மதியம் டி வி சீரியல் பார்க்கற டைம் வீட்டுக்கு வந்தா பொண்ணுங்க மரியாதையே தர்றதில்லை..

3. சரி சரி வாங்க சாப்பாடு போடறேன்..

விளம்பரம் போடற டைம்லயாவது புருஷன் நினைவு வருதே..


4. இவருக்கு இங்க்லீஷ்ல பிடிக்காத ஒரே வார்த்தை சிக்ஸ் பேக்


5. மோதிர விரல்ல தான் அன்பு, காதல், சந்தோஷம் எல்லாம் இருக்குற நரம்பு ஓடுது..  அதனால மோதிரத்தை அங்கே தான் போடனும் ( நல்ல வேளை,.. ஹி ஹி )

நீ இங்கே இருக்க வேண்டிய ஆளே இல்லை.. எங்காவது ரோட்ல கிளி ஜோசியம் பார்க்க வேண்டிய ஆள் ..


6. அவ வீட்டு வாசல்ல நாய் ஜாக்கிரதை போர்டு இருக்குடா..

 அவளுக்காக எத்தனை நாய் கடிச்சாலும் தாங்குவேன்..

நீ தாங்குவே.. அது உன் தலை விதி.. எங்களுக்கென்னடா?

7.  இவன் என் ஃபிரண்ட்.. டைரக்டர் ஆகனும்கற வெறியோட இருக்கான்..

பார்த்து கிட்டே வந்து கடிச்சு வெச்சுடப்போறான்?

8. ஏய் என்ன இது? எல்லாமே வெள்ளையா இருக்கு? உஜாலாவுக்கு மாறிட்டியா?


 படம் டி வில போட்டா முதல் 4 ரீல் மட்டும் பார்க்கலாம்.. அதுல ஹீரோ ஹீரோயின் அறிமுக காட்சிகள் வரும் , அப்புறம் நீங்க உங்க வேலையை பார்க்கலாம்  ஹி ஹி நான் கூட அப்படித்தான் செஞ்சேன்.. உலக வரலாற்றில் முதன் முதலாக தியேட்டர்லயே ஆஃபீஸ் வேலை பார்த்தேன் ஹி ஹி

எதிர்பார்க்கப்படும் ஆனந்த விகடன் மார்க் - 36

எதிர்பார்க்கப்படும் குமுதம் ரேங்க் - சுமார்

சி.பி கமெண்ட் - கிரேட் எஸ்கேப் ஆகவும் ஹி ஹி




ஈரோடு ஸ்ரீகிருஷ்னாவில் படம் பார்த்தேன் ( கூட டோட்டலா 14 பேர்தான் இருந்தாங்க, பாவம் கரண்ட் சார்ஜுக்கே கட்டுபடி ஆகி இருக்காது)




அகில உலக ஆரியர் அன்புமணி ராமதாஸ் பேட்டி காமெடி கும்மி பை வம்புமணி


மக்கள் அழைத்தார்கள்... அதனால் வந்தேன்!”

சி.பி - ஹா ஹா , இப்போ மக்கள் போன்னு துரத்துனா போய்டுவீங்களா? அடங்கோ...

அதிரடியான பேச்சுக்களால் அரசியல் அரங்கத்தை அதிரவைக்கிறார் அன்புமணி ராமதாஸ். ''திராவிட இயக்கங்களால் தமிழ்நாட்டுக்கு ஒரு பிரயோஜனமும் இல்லை. கருணாநிதி, எம்.ஜி.ஆர்., ஜானகி, ஜெயலலிதா, வைகோ... இவர்கள் எவருமே தமிழர்களே இல்லை. தமிழர் தலைவர் ராமதாஸ் மட்டும்தான்'' என்பது இவரது புது குண்டு! 'புதிய அரசியல்... புதிய நம்பிக்கைஎன்பது இவரது புது முழக்கம். என்ன திட்டத்தில் இருக்கிறது பா..? மனம் திறக்கிறார் அன்புமணி ராமதாஸ்.  

சி.பி - ஆனா அதிமுக மடம், ஆகாட்டி திமுக மடம்னு 2 குட்டைலயும் மாறி மாறி விழுந்து சேறு பூசிக்கிட்டு இப்போ 2 பக்கமும் துரத்தி விட்டதும் பேச்சை பாரு.. ஹா ஹா 



1. ''அது என்ன 'புதிய அரசியல்... புதிய நம்பிக்கை’?''
''கிட்டத்தட்ட அரை நூற்றாண்டாக திராவிடக் கட்சிகள் தமிழகத்தைச் சீரழித்து வருகின்றன. இலவசக் கலாசாரம், சினிமா கலாசாரம், சாராயக் கலாசாரம். இவை மூன்றுதான் தமிழன் கண்ட பலன்கள். போதும்... திராவிடக் கட்சிகளால் மக்கள் அடைந்த பலன்கள் போதும். தமிழகத்தை ஆளும் எல்லாத் தகுதிகளும் பா..-வுக்கு இருக்கின்றன;


சி.பி - அண்ணே, உங்க பாயிண்ட்ஸ் எல்லாம் கரெக்ட் தான்.. ஆனா ஜாதிக்கட்சி இன்னும் ஆபத்தாச்சே.. அதிகாரம் கைல இல்லாதப்பவே உங்கப்பா படப்பெட்டியை தூக்கிட்டு ஓடறது, மரத்தை வெட்டி போடறதுன்னு வன்முறைல இறங்கறாரு.. சி எம் ஆகிட்டா  அவ்ளவ் தான்.. தமிழகம் 2 ஆகிடும்


 எங்களுக்கு வாய்ப்பு கொடுங்கள் என்று மக்களை நோக்கிப் போகிறோம். பா..-வின் இந்தப் புதிய பயணத்துக்குப் பெயர்தான் 'புதிய அரசியல்... புதிய நம்பிக்கை’. இனி, எங்கள் அரசியல் 'சயின்டிஃபிக் பேஸ்டுஅரசியலாக இருக்கும்; 'மைக்ரோ பிளானிங்அரசியலாக இருக்கும். நவீன யுகத்துக்கான அரசியலாக இருக்கும்!''



சி.பி -  மைக்ரோ பிளானிங்அரசியல்னா யார் கண்ணுக்கும் தெரியாத அலவு நுணுக்கமா ஊழல் பண்றதா?சயின்டிஃபிக் பேஸ்டுஅரசியல்னா உங்களை எதிர்க்கறவங்க முகத்துல ஆசிட் ஊற்றுவதா?



2. ''நவீன யுகத்துக்கான அரசியல் என்கிறீர்கள்... ஆனால், உங்களுடைய சாதிய அரசியல் சரிதானா?''

''சாதி வேண்டாம் என்றுதான் நாங்களும் நினைக்கிறோம். சாதியை ஒழிக்க வேண்டும் என்பதுதான் பா..-வின் இலக்கு. ஆனால், சாதி இல்லை என்று யாராவது மறுக்க முடியுமா? இந்தியாவில் பல்லாயிரம் ஆண்டுகளாக மக்கள் சாதிரீதி யாகத்தான் அடிமைப்படுத்தப்பட்டனர். அதனால், சீர்திருத்தத்தை அங்கே இருந்துதான் தொடங்க வேண்டும்.''
''இடையில் கொஞ்ச நாட்கள் பா..-வைச் சாதி அடையாளத்துக்கு அப்பாற்பட்ட கட்சியாக்குவது தொடர்பாகப் பேசினீர்கள். ஆனால், இப்போது கட்சியில் மீண்டும் வன்னியர் முழக்கம் ஓங்கி ஒலிக்கிறது. பா... குழப்பத்தில் இருக்கிறதா?''
''அப்படி எல்லாம் இல்லை. அடிப் படையில் அடித்தட்டு மக்களுக்கான கட்சி பா... தமிழகத்திலேயே அதிகக் குடிசை கள் உள்ள மாவட்டம் விழுப்புரம் மாவட் டம். தமிழகத்தில் மனித வளக் குறியீட்டில் கடைசி ஐந்து இடங்களில் இருக்கும் மாவட்டங்கள் விழுப்புரம், கடலூர், திருவண்ணாமலை, தருமபுரி, வேலூர். கல்வி வளர்ச்சியில், உள்கட்டமைப்பில்... எல்லாவற்றிலும் வட தமிழகம் பின்தங்கி இருக்கிறது. யார் இங்கு பெரும்பான்மை மக்கள்? வன்னியர்கள். அவர்களுக்காகப் போராடுவது சாதி அரசியல் ஆகாது. அதைச் சமூக நீதி அரசியல் என்றே கொள்ள வேண்டும்!''



சி.பி - ஆல் ஓவர் தமிழ்நாடு உங்க செல்வாக்கு 4 தொகுதில மட்டும் தான்.. அதனால அடக்கி வாசிங்க..  

3. ''பிற கட்சிகளை நீங்கள் குறை கூறுகிறீர்கள். ஆனால், உங்கள் கட்சியும் அதே வாரிசு அரசியல் பாதையில்தானே பயணிக்கிறது?''
''என் அப்பா கஷ்டப்பட்டவர். கடுமையான வறுமையில் வளர்ந்தவர். ஆடு, மாடு மேய்த்து, சாணி பொறுக்கி, மூட்டை தூக்கி... இப்படி எல்லாம் கஷ்டப்பட்டுதான் டாக்டருக்குப் படித்தார். ஆனால், நான் அப்படி எல்லாம் இல்லை. ஏற்காட்டில், ஆங்கிலோ இந்தியன் ஸ்கூலில் படித்தேன். அப்போது என் கனவு பைலட் ஆவது. நான் டாக்டர் ஆனதுகூட அப்பாவுடைய விருப்பம்தான். அப்போது எல்லாம் சாதி, சமுதாயம், கஷ்ட - நஷ்டம் எதுவுமே எனக்குத் தெரியாது.ஸ்கூலிலும் ஹாஸ்டலிலும் ஆங்கிலத்தில் பேசிப் பழகிய எனக்கு, வீட்டுக்கு வரும்போது தமிழ் வார்த்தைகளே புதிதாக இருக்கும். படிப்பு முடிந்ததும்
ஒன்றரை வருஷம் நல்லாழம் கிராமத்தில் பணியாற்றினேன். அப்போதுதான் மக்கள் எவ்வளவு கஷ்டப்படுகிறார்கள் என்று தெரிந்தது. சாதியப் பாகுபாடுகள் புரிய ஆரம்பித்தன. மக்களுக்கு ஏதாவது செய்ய வேண்டும் என்று நினைத்தேன். குழந்தைகள் பிறந்ததும் அவர்கள் படிப்புக்காக திண்டிவனத்தில் இருந்து சென்னை வந்தேன். கட்டுமானத் தொழிலில் இறங்கினேன். மக்களுக்கு ஏதாவது செய்ய வேண்டும் என்பது மட்டும் ஓடிக் கொண்டே இருந்தது. என்னைப் பொறுத்த அளவில் 'பசுமைத் தாயகம்அதற்குப் போதுமான தாக இருந்தது. ஆனால், லட்சோப லட்ச மக்களும் பல்லாயிரக்கணக்கான தொண்டர்களும் நான் பொறுப்புக்கு வர வேண்டும் என்று அழைத்தபோது... என்னால் தவிர்க்க முடியாமல் போய்விட்டது!''



சி.பி - அண்ணன் கட்சி உறுப்பினர்களைத்தான் மக்கள்னு சொல்றார் போல.. ஹி ஹி 
4. ''அப்படியென்றால், மக்கள் அழைத்ததால்தான் அரசியலுக்கு வந்தீர்களா?''


சி.பி - ஆமா, அவங்க மானமுள்ள கட்சிக்காரங்க, மக்கள் போ அப்டினு டெபாசிட்டை பிடுங்கி துரத்தி விட்டுட்டா சத்தம் போடாம வந்துடுவாங்க.. 

''ஆமாம். அதை இன்றைக்கு நினைத்தாலும் என் கண்கள் கலங்கும். ஒருநாள் மனைவியுடன் காரில் சென்றேன். வழியில் காரை நிறுத்தி என் காருக்கு முத்தமிட்டு, பாசத்தை வெளிக்காட்டினார்கள் மக்கள். என் மனைவியிடம்
கேட்டேன், 'இவர்களுக்கு நான் என்ன செய்யப்போகிறேன்?’ '' (கண் கலங்குகிறார்).

சி.பி - என்னது? காருக்கு முத்தம் இட்டாங்களா? நல்லா விசாரிங்க.. கார் அவங்களுதா இருக்கும்னு நினைக்கறேன்.. அடமானத்துக்கு வந்ததை உங்கப்பா ஆட்டையை போட்டுட்டாரோ என்னவோ?
5. ''உங்கள் தந்தை, 'என் குடும்பத்தினர் அரசியலுக்கு வந்தால், என்னைச் சவுக்கால் அடியுங்கள்என்று அறிவித்தவர். அப்படிப்பட்டவர் உங்களுடைய அரசியல் பிரவேசத்துக்கு எப்படிச் சம்மதித்தார்?''


சி.பி - ஒரு வேளை அன்புமணி தத்துப்பிள்ளையோ என்னவோ?ஏன் சொல்றேன்னா எங்கண்ணன் ராம்தாஸ் அய்யா மானஸ்தர்.. ஒரு வார்த்தை ஒரு சொல் ஒரு நாக்கு அவருக்கு.. கலைஞர் மோசம்னு ஒரு தடவை சொல்லிட்டா மறுபடி அந்த பக்கமே போக மாட்டார். ஜெவை திட்டுனார்னா போயஸ் பக்கமே தல வெச்சு படுக்க மாட்டார்.. 
''ஒரு ரகசியம் சொல்லவா? நாளைக்கு நான் மந்திரி பதவி ஏற்கிறேன் என்றால், இன்றைக்கு இரவுதான் அப்பா சம்மதிக்கிறார். அதுவும் எப்படி? கட்சியின் அத்தனை தலைவர்களும் ஒருமித்த குரலில் 'தம்பியைப் பதவியில் அமர்த்துங்கள்என்று அப்பாவிடம் வலியுறுத்தியபோது.

https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEg8el8_QO5KvcX_krHs8Rg7G9_SFx7BLRkRRQ198pXmOLmSygEr2K_DcsvfZaosDm_csuANZcnwaO7wNe6XxCyeADC4MscEtedZYLxfzcERTdCHNB1ZRiXKzLf6hWdfIDpBOQ7SAC9iAp39/s1600/resize_20111011204443.jpg


சி.பி - அடங்கப்பா சாமி.. இது உலக மகா நடிப்புடா.. வெட்கம் இல்லாம பதவிக்காக அதுவும் பையன் எம் பி ஆகனும்கறதுக்காக நாய் மாதிரி அலைஞ்சது எல்லாம்  எங்களுக்குத்தெரியாமயா இருக்கு?
இந்தியாவிலேயே 'எனக்கு எந்தப் பதவியும் வேண்டாம்என்று சொல்லிவிட்டு, அரசியலுக்கு வந்த ஒரே தலைவர் அப்பா.


சி.பி - அவ்ளவ் யோக்கியமா இருக்கறவர் ஏன் உங்களை களம் இறக்கனும்? ஊர்ல அநாதைகளுக்கா பஞ்சம்? ஒரு தலித் இளைஞரை களம் இறக்கி இருக்கலாமே? நான் என்ன சொல்றேன்னா அட்டூழியம் பண்ணுங்க, அராஜகம் பண்ணுங்க தப்பில்லை, ஏன்னா எல்லாரும் அதைத்தான் பண்றாங்க, ஆனா வெளீல நான் நெம்ப நெம்ப நல்லவன், உலகமகா யோக்கியன்னு சொல்லிட்டு அராஜகம் பண்ணாதீங்க..


 தான் முதல்வர், பிள்ளைகள் துணை முதல்வர், மத்திய அமைச்சர், நாடாளுமன்ற உறுப்பினர் என்று குடும்பத்தையே பதவியில் அமர்த்தியவர் அல்ல அவர். இந்த வாக்குறுதியையும் அவர் காப்பாற்றி இருப்பார். கட்சியினரின் வற்புறுத்தலால்தான் மீறினார்.''


சி.பி - அண்ணன் கட்சிக்காக உயிரையே கொடுப்பாரு.. ஆனா பாருங்க யாராவது அவரை எதிர்த்து பேசுனா கட்சியை விட்டுத்தூக்கிடுவாரு.. 
6. ''மது, புகைப் பழக்கத்துக்குத் தடை, டிஸ்கொதே, பப் ஆகியவற்றுக்குக் கட்டுப்பாடு, பிடிக்காத திரைப்படங்கள் ஓடும் திரையரங்குகள் மீது தாக்குதல்... இவை எல்லாம் தமிழகத்தின் 'கலாசாரக் காவலர்களாக உங்களைக் காட்டிக்கொள்ளும் முயற்சியா?''
''அறிவுரை சொன்னால், கேட்கிற நிலையில் இன்றைய தலைமுறை இல்லை. உலகிலேயே நடிகனுக்குப் பால் அபிஷேகமும் பீர் அபிஷேகமும் நடத்தும் ரசிகர் கூட்டம் இங்குதான் இருக்கிறது. நாட்டிலேயே புற்றுநோயாளிகள் அதிகம் உள்ள மாநிலங்களில், தமிழகம் முன்னணியில் இருக்கிறது. உலக சுகாதார மையம் சொல்கிறது, 'அடுத்த 10 ஆண்டுகளில் தமிழகத்தில் மது அருந்தாத இளைஞர்களே இருக்க மாட்டார்கள்என்று. அந்த நிலைக்குத் தமிழகம் சென்றுவிட நாங்கள் அனு மதிக்க மாட்டோம்.''

சி.பி - பா ம கவுக்கு கொள்கைன்னு 1 இருந்தா அது இது மட்டும்தான்,, இதை வரவேற்கிறோம்.. 
7. ''உங்களுக்குப் புகை, மதுப் பழக்கம் உண்டா?''
''ம்ஹூம்... தொட்டதே இல்லை.''

சி.பி - ஆமா, அண்ணனுக்கு மதுப்பழக்கம் இல்லை.. ஆனா .. ஹி ஹி 

8. ''தமிழர் என்ற சொல்லுக்கு, பா... புதிய வரையறை வகுக்கிறதா?''
''ஆமாம். தமிழ் பேசுவதாலேயே வந்தேறிகளை எப்படித் தமிழர்கள் என்று ஏற்றுக்கொள்ள முடியும்?

திராவிடர்கள் என்றால் யார்? திராவிடக் கட்சிகள், மலையாளிகள், கன்னடர்கள், தெலுங்கர்கள், தமிழர்கள் எல்லோரும் திராவிடர்கள் என்று சொல்கின்றன. அப்படி என்றால், ஆந்திரத்திலோ, கர்நாடகத்திலோ, கேரளத்திலோ, திராவிட என்ற பெயரில் ஒரு கட்சியாவது இருக்க வேண்டுமே... இருக்கிறதா? கிடையாது. ஆந்திரத்தில் ரெட்டி, நாயுடு தவிர வேறு இனத்தவர்கள் முதல்வர் நாற்காலியில் அமர முடியவில்லை. கேரளத்தில் நாயர், மேனன் தவிர வேறு இனத்தவர்கள் முதல்வர் நாற்காலியில் அமர முடியவில்லை. கர்நாடகத்தில் லிங்காயத்துகள், ஒகேலிக்கர்கள் தவிர வேறு இனத்தவர்கள் முதல்வர் நாற்காலியில் அமர முடியவில்லை. தமிழகத் தில் மட்டும்தான் இந்த அக்கிரமம். காரணம், இங்கு திராவிடர்கள் என்ற பெயரில் ஆட்சி யில் ஒட்டிக்கொள்பவர்கள் எவரும் தமிழர் கள் இல்லை என்பதுதான்.''


சி.பி - தமிழனை 2 வகையா பிரிக்கலாம் 1. யார் என்ன சொன்னாலும் அதை நம்பிடறவன் 2. காலச்சுழற்சியில் அரசியல்வியாதிகள் செய்யும் ஊழலை, அக்கிரமங்களை மறந்துடறவன்
9. ''அடுத்தடுத்த தேர்தல் தோல்விகள் மூலம் என்ன கற்றுக்கொண்டு இருக்கிறீர்கள்?''

சி.பி - யாரைப்பார்த்து என்ன வார்த்தை சொல்லீட்டீங்க, எல்லா எலெக்‌ஷன்லயும் அவங்க டெபாசிட் வாங்கியாச்சு.. 



''திராவிடக் கட்சிகளுடன் கூட்டணி அமைத்தது தவறு. இனி ஒருபோதும் அந்தத் தவறைச் செய்ய மாட்டோம்.''


சி.பி - இது எப்படி இருக்குன்னா ஒரு பணக்காரப்பெண்ணை கல்யாணம் பண்ணீக்கிட்டு எல்லா சொத்துக்களையும் அனுபவிச்சுட்டு அந்த பொண்ணுக்கு ஏதாவது உடம்பு சரி இல்லாம போனதும் நைஸா ஓடி போற மாதிரி இருக்கு.. 
10. ''இதை உறுதியாக எடுத்துக்கொள்ளலாமா?''
''சத்தியமாக!''

சி.பி - சின்ன வயசுல நாங்களும் இப்படித்தாண்ணே.. எதுக்கெடுத்தாலும் சத்தியம் பண்ணுவோம், அப்போ மனசுக்குள்ளே அ அப்படின்னு நினைச்சுக்குவோம் .. அதாவது அசத்தியமா ஹி ஹி . நீங்க வேணா பாருங்க உங்கப்பா கலைஞர் கால்லயோ ஜெ கால்லயோ போய் விழுந்து நாங்கள் இணைவது காலத்தின் கட்டாயம், அரசியலில் நிரந்தர எதிரியும் இல்லை, நிரந்தர நண்பனும் இல்லை அப்டின்னு வெட்கமில்லாம சொல்லிட்டு நரி மாதிரி நயவஞ்சக சிரிப்போட பேப்பர்ல நியூசா வருவார் பாருங்க.. அப்படி ஒரு சம்பவம் நடக்கலைன்னா நான் கில்மா படம் பார்க்கறதையே விட்டுடறேன். இது நயன் தாராவோட உண்மைக்காதல் மீது சத்தியம் ஹி ஹி 


டிஸ்கி - கேள்விகள் பச்சை நிறத்தில் இருப்பது எதேச்சையானது, பச்சோந்தி கட்சி என்று எங்களை கிண்டல் பண்றாங்க என யாராவது குதித்தால் அதற்கு நிர்வாகம் பருப்பல்ல.. அடச்சே பொறுப்பல்ல..