Showing posts with label பட்ஜெட். Show all posts
Showing posts with label பட்ஜெட். Show all posts

Tuesday, February 26, 2013

ரயில்வே பட்ஜெட் தாக்கல்: முக்கிய அம்சங்கள் ! தமிழகத்திற்கு அறிவிக்கப் பட்டுள்ள 14 புதிய ரயில்களின் முழு விவரம்.

கட்டண உயர்வு இல்லா ரயில்வே பட்ஜெட் தாக்கல்: முக்கிய அம்சங்கள் ! 
 
 
புதுடெல்லி: 2013-14 ஆம் நிதியாண்டுக்கான ரயில்வே பட்ஜெட்டை  ரயில்வே அமைச்சர் பவன்குமார் பன்சால் நாடாளுமன்றத்தில் இன்று தாக்கல் செய்தார்.


புதிய ரயில்கள், திட்டங்கள், சலுகைகள் குறித்த அறிவிப்பை அவர் வெளியிட்டு  வருகிறார்.


அவர் தனது உரையில் ரயில்வேயின் தொடர் நஷ்டம்  காரணமாக பயணிகளின் சேவையில் குறைபாடு ஏற்பட்டதாகவும், ரயில்வே நிதி ஆதாரத்தை பெருக்குவதில் தன்னிறைவு பெற்றதாக ரயில்வே துறை இருக்க வேண்டும் என்றும் குறிப்பிட்டார்.'


ரயில் விபத்துகளை குறைப்பதில் இலக்குகள் எட்டப்பட உள்ளதாக கூறிய பவன்குமார் பன்சால், இடு பொருட்களின் விலை உயர்வு காரணமாக ரயில் கட்டணத்தை உயர்த்த வேண்டிய கட்டாயம் ஏற்பட்டதாக கூறினார்.


தேர்தலுக்கு முந்தைய பட்ஜெட் என்பதனாலும், 17 ஆண்டுகளுக்கு பின்னர் காங்கிரஸ் அமைச்சர் ஒருவர் ரயில்வே பட்ஜெட்டை தாக்கல் செய்வது இதுவே முதன்முறை என்பதனாலும் பட்ஜெட் குறித்த எதிர்பார்ப்புகள் அதிகமாகி உள்ளது.



ரயில்வே பட்ஜெட்டின் முக்கிய அமசங்கள் 


*  பயணிகளுக்கான ரயில் கட்டணத்தில் மாற்றமில்லை 

 
புதிய ரயில்கள் 


* 67 புதிய விரைவு ரயில்கள் & 27 பயணிகள் ரயில் அறிமுகம் 


* 58 பயணிகள் ரயில்களின் பயண  தூரம் நீட்டிப்பு

*  தமிழகத்திற்கு 3 புதிய ரயில்கள் அறிமுகம் 



* தட்கல், முன்பதிவு & முன்பதிவு ரத்து கட்டணம் அதிகரிக்க்ப்படும்



*  2013 - 14 ல் பயணிகள் ரயிலின் எண்ணிக்கை 12,335 ஆக அதிகரிப்பு

* பயணிகளின் பாதுகாப்புக்கு ரயில்வே மிகுந்த முக்கியத்துவம் அளித்து வருகிறது


* 12 ஆவது ஐந்தாண்டு திட்டத்திற்கு பின்னர் ஆளில்லா லெவல் கிராசிங் இருக்காது


* * பயணிகள் ரயில் சேவைகள் மூலமான இழப்பு 2011 ல் ரூ.4,955 கோடியாக இருந்து, 2011-12 ல் ரூ. 22,500 கோடியாக அதிகரித்துள்ளது. இது 2012-13 ல் ரூ. 24,600 கோடியாக அதிகரிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.


*  கல்வி நோக்கத்துடன் 'ஆசாதி எக்ஸ்பிரஸ்' திட்டம் அறிமுகம்


* ரயில்வேயின் தொடர் நட்டம் காரணமாக பயணிகளுக்கு குறைபாடு ஏற்பட்டது. இம்முறை அதனை களைய முயற்சிப்போம்.


* செலவுகள் அதிகரிப்பு காரணமாக சரக்கு கட்டணம் உயர்த்தப்படுகிறது.



* சில குறிப்பிட்ட நீண்ட தூர ரயில்களில் அனுபூதி என்ற சிறப்பு பெட்டிகள் சேர்க்கப்படும். இதில் உயர்தர, ஆடம்பர சேவைகள் பயணிகளுக்கு வழங்கப்படும்.

* இணையதள முன்பதிவு நேரம் காலை 12.00 முதல் இரவு 11.30 வரை நீட்டிக்கப்படுகிறது.

* புகார்களுக்கும், ஆலோசனைகளுக்கும் 1800 - 111 - 321 என்ற இலவச எண்ணைத் தொடர்பு கொள்ளலாம்.




* இன்டெர்நெட், மொபைல் போன்கள் மூலமாக 24 மணி நேரமும் டிக்கெட் முன்பதிவு செய்யலாம்.


* இந்த ஆண்டு முடிவில் அடுத்த தலைமுறை மின் டிக்கெட் தொழில்நுட்பம் அறிமுகப்படுத்தப்படும். இதன்முலம் ஒரு நிமிடத்திற்கு 7,200 டிக்கெட்கள் வழங்க முடியும்.


*முன்பதிவு நிலவரத்தை அறிய விரைவில் எஸ்.எம்.எஸ். ( SMS)  அனுப்பும் முறை நடைமுறைப்படுத்தப்படும்.


* சக்கர நாற்காலி உள்ள பெட்டிகள் பரிசீலனையில் உள்ளது.

* ரயில் நிலையங்களிலும் இதேபோன்ற வசதி செய்யப்பட உள்ளது.

* 104 ரயில் நிலையங்கள் புதுப்பிக்கப்படும்.
* ஐந்தாண்டு திட்டத்தில் ரயில்வே துறைக்கு 5.13 லட்சம் கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

* இந்திய ரயில்வே அடுத்த 4 ஆண்டுகளில் ரூ.95,000 கோடியை ஈட்டியே ஆகவேண்டும்.

* மாநகர ரயில் சேவையில் பெண்கள் பாதுகாப்பிற்காக பெண் ரயில்வே காவலர்கள் நியமிக்கப்படுவார்கள்.

* 2012-13 ஆம் நிதியாண்டில் மட்டும் ரயில்வே துறைக்கு ரூ.24,000 கோடி இழப்பு எதிர்பார்க்கப்படுகிறது.



* RPF பணியிட ஒதுக்கீட்டில் 10 விழுக்காடு பெண்களுக்கு ஒதுக்கப்படுகிறது.

* பெண்கள் பாதுகாப்பிற்கு 24 மணி நேர தொலைபேசி சேவை வழங்கப்படுகிறது.


* கூடுதல் ரயில் நீர் உற்பத்தி ஆலைகள் அமைக்கப்படும்.

* குறிப்பிட்ட சில ரயில்களில் இலவச WiFi அமைக்கப்படும்.

* முக்கிய ரயில் நிலையங்களில் 179 மின் படிக்கட்டுகள் மற்றும் 400 மின் தூக்கிகள் செயல்படுத்தப்படும்.


* இந்தியாவில் உள்ள சுமார் 10,797 ஆளில்லா லெவல் கிராஸிங்குகளை அகற்ற நடவடிக்கை எடுக்கப்படும்.

* 17 முக்கியமான ரயில் நிலையங்களில் சீரமைப்பு பணி மேற்கொள்ளப்படும்.

* ரயில் நிலையங்களை தூய்மையாக வைத்துக் கொள்ள உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.

இரும்புத் தாது சுரங்கங்களை இணைக்க ரூ.800 கோடியில் திட்டம்*கழிவு இரும்பு விற்பனை மூலம் ரூ.4500 கோடி நிதி திரட்ட ரயில்வே அமைச்சகம் முடிவு*நாக்பூரில் ரயில் துறை பயிற்சி மையம் அமைக்கப்படுகிறது*இணையதள முன்பதிவு வசதி அதிகாலை இரவு 12.30 மணி முதல் நள்ளிரவு 11.30 மணி வரை நீட்டிப்பு*

100 கோடி டன் சரக்கு கையாளும் திறன் படைத்த 100 நாடுகள் பட்டியலில் இந்தியா இடம்*ரயில்வே அதிகாரிகளுக்கு பயிற்சி அளிக்க செகந்தராபாத்தில் நிறுவனம்*
வைஷ்ணவதேவி கோவிலுக்கு செல்பவர்களுக்கு சிறப்பு ரயில் - பஸ் வசதி மேற்கொள்ளப்படும்*

மேலும் 6 'ரயில் நீர்' உற்பத்தி நிறுவனங்களை அமைக்க முடிவு* ரயில்வே துறையில் காலியாக இருக்கும் 1லட்சத்து 52 ஆயிரம் பணியிடங்கள் விரைவில் நிரப்பப்படும்*

* சுதந்திர போராட்டம் நடைபெற்ற இடங்களை இணைக்கும் வகையில் புதிய ரயில் சேவை திட்டம் செயல்படுத்தப்படும்

* முன்பதிவில் தாமதத்தை தவிர்க்க IRCTC சேவை துரிதப்படுத்துகிறது.
நிமிடத்திற்கு 7,200 டிக்கெட் முன்பதிவு செய்யலாம்* பெண் பயணிகள் பாதுகாப்புக்கு புதிதாக 8 கமபெனி படைகள் அமைக்க நடவடிக்கை*நலிவடைந்த பிரிவினர் 47000 பேருக்கு வேலைவாய்ப்பு*ஆதார் திட்ட தகவல்களை பயன்படுத்திக் கொள்ள ரயில்வே நிர்வாகம் முடிவு*

அனுபூதி என்ற பெயரில் அதிநவீன ஏசி ரயில் பெட்டிகள் முக்கிய விரைவு ரயில்களில் இணைக்கப்படும்* ரேபெரேலி, பாலக்காடு உள்ளிட்ட 7 இடங்களில் புதிய ரயில் பெட்டிகள் அமைக்கும் தொழிற்சாலை நிறுவப்படுகிறது* ராஜீவ் கேல் ரத்னா விருது, ஒலிம்பிக் விருது பெற்றவர்களுக்கு இலவச ரயில் பாஸ்
 
 
 
தமிழகத்திற்கு அறிவிக்கப் பட்டுள்ள 14 புதிய ரயில்களின் முழு விவரம். 
 
 
 
2013-14 ஆம் நிதியாண்டில் ரயில்வே பட்ஜெட்டில்  தமிழகத்திற்கு  14 . புதிய அறிவிக்கப்பட்டுள்ளன.
 
 
எக்ஸ்பிரஸ் ரயில்கள் விவரம்: 
 
1.பாலக்காடு- ஈரோடு 2.மதுரை- கச்சிகுடா (ஹைதராபாத்) வாராந்திர எக்ஸ்பிரஸ் 
 
 
3.சென்னை- ஷாலிமார் (கொல்கத்தா) வாரந்திர ரயில் 
4.மன்னார்குடி- திருப்பதி (வாரம் 3 முறை- திருவாரூர், விழுப்புரம், காட்பாடி வழியாக) 
 
 
5.கோவை- பிகானீர் (ராஜஸ்தான்) ஏசி எக்ஸ்பிரஸ் வாரந்திர ரயில் 
 
 
6.சென்னை- பெங்களூர் ஏசி டபுள் டெக்கர் தினசரி 
 
7.திருச்சி- திருநெல்வேலி தினசரி இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸ் (மதுரை, விருதுநகர் வழியாக) 
 
 
8.விசாகபட்டினம்- சென்னை வாரந்திர ரயில் 
 
9.சென்னை- பூரி (ஒரிஸ்ஸா) வாரந்திர ரயில் 
 
10.சென்னை- அசன்சோல் (மேற்கு வங்கம்) வாரந்திர ரயில்.
 
பாசஞ்சர் ரயில்கள்: 
 
1.விழுப்புரம்- காட்பாடி தினசரி 
 
2.விழுப்புரம்-மயிலாடுதுறை தினசரி 
 
3.பாலக்காடு- கோவை- ஈரோடு 
 
4.மன்னார்குடி- திருச்சி- மானாமதுரை தினசரி
 
 
thanx
 

Sunday, March 18, 2012

பொது பட்ஜெட் 2012-13 அப்டேட்ஸ்: முக்கிய அம்சங்கள்


தனிநபர் வருமான வரி விலக்கு உச்சவரம்பில் ரூ.20,000-ஐ உயர்த்துவது உள்ளிட்ட நடுத்தர மக்களின் மகிழ்ச்சிக்குரிய அம்சங்கள் இருக்கும் அதேவேளையில், சேவை வரி உயர்வு, கலால் வரி உயர்வின் தாக்கங்களைச் சுமந்துகொண்டு வந்திருக்கிறது, பொது பட்ஜெட் 2012-13.
2012-13 பொது பட்ஜெட்டில் பிரணாப் முகர்ஜி வெளியிட்ட அறிவிப்புகளின் முக்கிய அம்சங்கள்:

* உலக பொருளாதாரத்துடன் ஒப்பிடுகையில், இந்தியாவின் நிலை சிறப்பாக உள்ளது.

* பொருளாதார வளர்ச்சி 6.9 சதவீதமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. 


* இந்த ஆண்டு வேளாண் வளர்ச்சி 2.5%

* இன்னும் சில மாதங்களில் பணவீக்கம் குறைந்து, பின்னர் நிலையானதாக இருக்கும்.

* பொருளாதார சீர்திருத்தத்துக்கு சில கடினமான முடிவுகளை எடுக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.

* சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் விலை பேரலுக்கு 115 டாலராக அதிகரித்துள்ளது. இது, எரிபொருள் மானிய மசோதாவில் தாக்கத்தை ஏற்படுத்தும்.


* கறுப்பு பணத்தை கட்டுப்படுத்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. நடப்பு நாடாளுமன்ற தொடரில் கறுப்பு பணம் தொடர்பாக வெள்ளை அறிக்கை வெளியிடப்படும். 


* நேரடி வரிவிதிப்பு மசோதா இயன்றவரை விரைவில் அறிமுகப்படுத்தப்படும்.


* ஊட்டக்குறைவு, கறுப்பு பணம், ஊழல் போன்றவற்றை களைவதற்கு அதி முக்கியத்துவம் தரப்படும்.
* கார்ப்பரேட் சந்தை சீர்த்திருத்த நடவடிக்கை தொடங்கப்பட்டுள்ளது.
* பால் உற்பத்தி திட்டத்தை மேம்படுத்த உலக வங்கி ரூ.242 கோடி உதவி.
* மதிய உணவுத் திட்டத்துக்கு ரூ.11,937 கோடி ஒதுக்கீடு.
* தேசிய உணவு மேலாண்மை திட்டம் வரும் நிதியாண்டில் தொடங்கப்படும்.
* கட்டுமானத் துறைக்கு 12-வது ஐந்தாண்டு திட்டத்தில் ரூ.50 லட்சம் கோடி தேவை. இதில் பாதியளவு தனியார்த் துறையிடம் இருந்து பெறப்படும்.
* பின் தங்கிய பகுதிகளுக்கான திட்டங்களுக்கு ரூ.12,040 கோடி ஒதுக்கீடு.
* கல்விக் கடனுக்காக கடன் உத்தரவாத நிதி திட்டம் பரிந்துரைக்கப்படும்.
* ஒருங்கிணைந்த குழந்தைகள் மேம்பாட்டுத் திட்டத்துக்கு ரூ.15,850 கோடி ஒதுக்கீடு (இது கடந்த ஆண்டு ரூ.10 ஆயிரம் கோடி)
* 200 மாவட்டங்களில் குழந்தைகள் ஊட்டச்சத்து திட்டம் தொடங்கப்படும்.
* தேசிய ஊரக மேம்பாட்டுக்கு ரூ.20,820 கோடி ஒதுக்கீடு.
* காலநிலை மாற்றம் குறித்த ஆராய்ச்சிக்கு ரூ.200 கோடி ஒதுக்கீடு.
* தேசிய சமூக உதவித் திட்டத்துக்கு ரூ.8,447 கோடி ஒதுக்கீடு.
* தேசிய திறன் மேம்பாட்டுக் கழகத்துக்கு ரூ.1,000 கோடி வழங்கப்படும்.
* தேசிய ஊரக வாழ்வாதார திட்டத்துக்கு ரூ.3,915 கோடி செலவிடப்படும்.
* ஊரக சாலை வசதி திட்டத்துக்கு ரூ.24,000 கோடி.
* வேளாண் துறையில் புதிய கண்டுபிடிப்புகளுக்கான ஆராய்ச்சிக்கு ரூ.200 கோடி.
* 7 மருத்துவக் கல்லூரிகள் தரம் உயர்த்தப்படும்.
* ஏப்ரல் 2012-க்குள் 40 கோடி ஆதார் அட்டைகள் வழங்கப்படும்.
* பாதுகாப்புத் துறைக்கு ரூ.1,93,407 கோடி நிதி ஒதுக்கீடு. இது கடந்த ஆண்டை விட 17 சதவீதம் அதிகம்.
* போக்குவரத்து மற்றும் மின்சாரத்துக்கு தலா ரூ.10,000 கோடி ஒதுக்கீடு.
* பொதுத்துறை வங்கிகளுக்கான முதலீடு ரூ.15,888 கோடி.
* மாநிலங்களுடன் ஒருமித்த கருத்துடன் சில்லறை வர்த்தகத்தில் 51% அந்நிய நேரடி முதலீட்டுக்கு நடவடிக்கை.
* அடுத்த 5 ஆண்டுகளில் யூரியா தேவையில் இந்தியா தன்னிறைவு அடையும்.
* மண்ணெண்ணெய் நேரடி மானியம் பைலட் ப்ராஜகட் என்ற திட்டத்தின் கீழ் ராஜஸ்தான் மாநிலத்தில் ஆழ்வார் என்ற இடத்தில் தொடங்கி வைக்கப்படும்.
* நிதி சீர்திருத்த மசோதாக்கள் விரைவில் நிறைவேற்றப்படும்.
* உணவுப்பொருட்களுக்கான மானியம் தொடரும்.
* சமையல் எரிவாயுக்கு மானியம் வழங்குவதில் புதிய திட்டம் அமலுக்கு வருகிறது.
* உரம் மானியம் வழங்குவதில் அரசு புதிய திட்டத்தை கடைபிடிக்கும்.
வருமான வரிவிலக்கு வரம்பு..
* தனிநபர் வருமான வரி விலக்குக்கான உச்சவரம்பு, ரூ.1.8 லட்சத்தில் இருந்து ரூ.2 லட்சமாக உயர்வு.
* ரூ.2 லட்சம் முதல் ரூ.5 லட்சம் ரூபாய் வரை வருமானம் பெறுவோருக்‍கு 10 சதவீதம்.
* ரூ.5 லட்சம் முதல் ரூ.10 லட்சம் வரையிலான வருமானத்துக்கு 20 சதவீதம்.
* ரூ.10 லட்சத்துக்கு மேல் வருமானம் பெறுவோருக்‍கு 30 சதவீதம் வரியும் விதிக்‍கப்படுகிறது.
* வங்கி சேமிப்புக்‍ கணக்‍குகள் மீதான வட்டித் தொகைக்‍கு 10 ஆயிரம் ரூபாய் வரை வரி விலக்‍கு.
* சீனியர் சிட்டிசன்கள் முந்தைய வரி கட்டுவதில் வரி விலக்கு அளிக்கப்படுகிறது.
* கார்ப்பரேட் வரிவிதிப்பு விகிதத்தில் மாற்றம் இல்லை.
வேளாண் கடன் இலக்கு 5.75 லட்சம் கோடி!
* உணவு பாதுகாப்பு திட்டத்துக்கு முழு மானியம் அளிக்‍கப்படும்.
* வேளாண் துறைக்‍கான ஒதுக்‍கீடு 18 சதவீதம் அதிகரிக்கப்பட்டு, மொத்தம் ரூ.20,208 கோடி ரூபாய் ஒதுக்கீடு.
* விவசாயத்துக்‍கான கடனுதவி 5.75 லட்சம் கோடியாக உயர்வு.
* விவசாயிகளுக்‍கான கடனுதவி மீது 3 சதவீத வட்டி மானியம் வழங்கப்படும்.
* விவசாயத்திற்கான நிதி ஒதுக்கீடு 18% அதிகரிக்கப்படும்.
* கிராமப்புற சுகாதார, குடிநீருக்கு ரூ.14,000 கோடி.
* நபார்டு வங்கிக்கு ரூ.1000 கோடி நிதி ஒதுக்கீடு.
* நபார்டு சட்ட திருத்த மசோதா நடப்பு தொடரில் நிறைவேற்றப்படும்.
* நீர் பாசன திட்டங்களுக்கு ரூ.300 கோடி ஒதுக்கீடு.
* பண்ணை நீர் பாசனம், நுண்ணுயிர் பாசனத்துக்கு கடன் வழங்க தனி அமைப்பு.
* விவசாயத்தை பாதிக்காத வகையில் 100 நாள் வேலை திட்டம் நடைமுறைப்படுத்தப்படும்.
* விவசாய கடன் அட்டைகளை ஏ.டி.எம்.களில் பயன்படுத்தலாம்.
* பொதுத்துறை நிறுவனப் பங்குகள் விற்பனை மூலம் ரூ.30,000 கோடி வரை திரட்ட இலக்‍கு நிர்ணயிக்‍கப்பட்டுள்ளது
* பங்குச்சந்தையில் தகுதிவாய்ந்த வெளிநாட்டு நிறுவனங்கள் அனுமதிக்‍கப்படும்.
* சென்னை அருகே தொற்று நோய் தடுப்பூசி தயாரிக்கும் தொழிற்சாலை அமைக்கப்படும்.
* 12-வது ஐந்தாண்டு திட்டத்தின் கீழ் அரசு, தனியார் துறைகள் மூலம் 6,000 மாதிரி பள்ளிகள் உருவாக்கப்படும்.
* 150 மாவட்டங்களில் மகளிர் சுய உதவி குழுக்களுக்கு தலா ரூ.3 லடசம் கடன் உதவி.
* சிறு தொழில் வளர்ச்சிக்கு ரூ.25,555 கோடி
* மதிய உணவு திட்டத்துக்கு ரூ.11,937 கோடி ஒதுக்கீடு.
வருமானவரியை சேமிக்க புதிய திட்டம்...
* சிறு முதலீட்டார்கள் பயன் பெறும் வகையில் ராஜீவ் காந்தி பங்குச்சந்தை முதலீட்டுத் திட்டம் தொடங்கி வைக்‍கப்படும். இதில் 5 லட்சம் வரை முதலீடு செய்து 50 ஆயிரம் ரூபாய் வரை வரிவிலக்‍கு பெறலாம்.
* கச்சா எண்ணெய் மீதான மானியச் செலவு அதிகரிப்பு
* விமான எரிபொருளை நேரடியாக இறக்‍குமதி செய்ய அனுமதி; விமானப் போக்‍குவரத்தில் அன்னிய முதலீட்டை அனுமதிக்‍கத் திட்டம்;  விமான போக்‍குவரத்துத்துறைக்‍கு நடைமுறை மூலதனமாக 100 கோடி டாலர் திரட்ட திட்டம்.
* பொதுத்துறை வங்கிகளின் மறு முதலீட்டுக்‍கு ரூ.15,890 கோடி ஒதுக்‍கீடு.
* உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த ரூ.50 லட்சம் கோடி.
* 8,800 கிலோ மீட்டர் தொலைவுக்கு தேசிய நெடுஞ்சாலைகளை விரிவுபடுத்த ரூ.25,360 கோடி ஒதுக்‍கீடு
*  10 கோடி புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்‍க திட்டம்
* நுண் கடனுதவி நிறுவனங்கள் நெறிமுறை மசோதா கொண்டுவரப்படும்.
சேவை வரி அதிகரிப்பு...
* சேவை வரி 10 சதவீதத்தில் இருந்து 12 சதவீதமாக உயர்வு. இதன் மூலம் ரூ.18,660 கோடி கூடுதல் வருவாய்க்கு வாய்ப்பு.
* சேவை வரி விதிப்பில் இருந்து ப்ரீ ஸ்கூல் உள்ளிட்ட பள்ளிக் கல்வி, சினிமா துறை முதலியவற்றுக்கு விலக்கு.
* கலால் வரி 10 சதவீதத்திலிருந்து 12 சதவீதமாக அதிகரிப்பு.

* வேளாண் சாராத பொருள்களுக்கான சுங்கவரி அதிகபட்சமாக 10 சதவீதம்.

வேளாண்மை, உள்கட்டமைப்பு, சுரங்கம், ரயில்வே, சாலைகள், விமானப் போக்குவரத்து, உற்பத்திப் பிரிவுகள் சுகாதாரம் மற்றும் ஊட்டச்சத்து, சுற்றுச்சூழல் ஆகிய துறைகளுக்கு மறைமுக வரியிலிருந்து விலக்கு.

* சில குறிப்பிட்ட வகை சிகரெட்டுகள், பீடிகளுக்கு கூடுதல் கலால் வரி, பெரிய வகை கார்களுக்கு சுங்கவரி உயர்வு,

முத்திரையிடப்படாத நகைகளுக்கும் கலால் வரி, சிறிய கலைஞர்கள், பொற் கொல்லர்கள் மற்றும் முத்திரையிடப்பட்ட வெள்ளி நகைகளுக்கும் கலால் வரியிலிருந்து விலக்கு

*  வரி விதிப்பு மூலம் நிகர வருவாய் ரூ.41,440 கோடி
பல்வேறு வரிவிதிப்புகள் அடங்கிய பொது பட்ஜெட் எதிரொலியால் விலை குறையும் பொருட்கள்:
புற்றுநோய், எச்.ஐ.வி. மருந்துகள்
சோலார் பவர் விளக்குகள், எல்.இ.டி. பல்புகள்
அயோடின் உப்பு
சோயா உணவுப் பொருட்கள்
தீப்பெட்டிகள்
எல்.இ.டி மற்றும் எல்.சி.டி. டிவிக்கள்
பொது பட்ஜெட் எதிரொலியால் விலை அதிகரிக்கும் பொருட்கள்:
ஏ.சி. சாதனங்கள்
ஃபிரிட்ஜ்
சைக்கிள்கள்
ஜி.எஸ்.எம்., பி.டி.ஏ. மொபைல்கள்
தங்கம், பிளாட்டினம்
கார்கள்
சிகரெட்டுகள்
உயர்தர ஓட்டல் உணவுகள்
விமானக்கட்டணங்கள்
2012-13 ஆம் ஆண்டுக்கான திட்ட மதிப்பீடுகள்:

* மொத்த வரி வருமானம் - ரூ.10,77,612. கோடி (2011-12) ஆம் ஆண்டுக்கான மறுமதிப்பீட்டைவிட 19.5 சதவீதம் கூடுதலாகும்.

* மத்திய அரசுக்கான நிகர வரி வருமானம் ரூ.7,71,071 கோடி (மாநிலங்களுக்கு பகிர்ந்தளிக்கப்பட்ட பின்)

* வரியல்லாத வருவாய் - ரூ.1,64,614 கோடி

* கடனல்லாத வருவாய் - ரூ. 41,650 கோடி

* மொத்த செலவீனம் - ரூ.14,90,925 கோடி

* திட்ட செலவு - ரூ.5,21,025 கோடி

* திட்டமிடாத செலவு - ரூ. 9,69,900 கோடி

* உலக பொருளாதாரத்துடன் ஒப்பிடுகையில், இந்தியாவின் நிலை சிறப்பாக உள்ளது.

* பொருளாதார வளர்ச்சி 6.9 சதவீதமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

* இந்த ஆண்டு வேளாண் வளர்ச்சி 2.5%

* இந்த ஆண்டு பணவீக்கம் மேலும் குறையும்.

* தொழில்துறை வளர்ச்சி பலவீனமாக உள்ளது.

* முதல் காலாண்டில் ஏற்றுமதி 23% ஆக உயரும்.
* இந்திய பங்கு வர்த்தகம் மேம்பட்டுள்ளது.

* இன்னும் சில மாதங்களில் பணவீக்கம் குறைந்து, பின்னர் நிலைமை சீரானதாக இருக்கும்.

* வேளாண் மற்றும் சேவைத் துறை தொடர்ந்து சிறப்பாக உள்ளது.

* பொருளாதார சீர்திருத்தத்துக்கு சில கடினமான முடிவுகளை எடுக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.

* சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் விலை பேரலுக்கு 115 டாலராக அதிகரித்துள்ளது. இது, எரிபொருள் மானிய மசோதாவில் தாக்கத்தை ஏற்படுத்தும்.
* உணவு மற்றும் உரம் மானியங்கள் மிகப் பெரிய அளவில் செலவினத்தை ஏற்படுத்துகின்றன.

* உணவுப் பாதுகாப்பு மானியம் முழுமையாக வழங்கப்படுகிறது.
* மண்ணெண்ணெய் நேரடி மானியம் பைலட் புராஜெக்ட் என்ற திட்டத்தின் கீழ் ராஜஸ்தான் மாநிலத்தின் ஆல்வார் பகுதியில் தொடங்கி வைக்கப்படும்.
* சமையல் எரிவாயு, மண்ணெண்ணெய்க்கு நேரடி நிதி மானியம்

* சில்லறை வர்த்தகத்தில் அன்னிய நேரடி முதலீட்டுக்கு ஒருமித்த கருத்து ஏற்படுவதற்கு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
* கறுப்பு பணத்தை கட்டுப்படுத்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.

* நேரடி வரிவிதிப்பு மசோதா இயன்றவரை விரைவில் அறிமுகப்படுத்தப்படும்.
* ஊட்டக்குறைவு, கறுப்பு பணம், ஊழல் போன்றவற்றை களைவதற்கு அதி முக்கியத்துவம் தரப்படும்.

* பங்குச்சந்தைகளில் ரூ.50,000 ஆயிரம் வரை முதலீடு செய்வதற்கு சலுகைகள்.

* பொதுத்துறை வங்கிகள், மண்டல ஊரக வங்கிகளுக்கு ரூ.15,888 ஒதுக்கீடு.

ஆண்டு வருமானம் ரூ.10 லட்சத்துக்கு கீழே இருப்பவர்கள், ரூ.50,000 வரை பங்குச்சந்தையில் முதலீடு செய்தால், 50 சதவீத வரிமான வரிவிலக்கு சலுகை அளிக்கப்படும். இந்தத் திட்டத்துக்கு ராஜீவ் காந்தி பெயர்.

* மைக்ரோ பைனான்ஸ் நிறுவனங்கள், தேசிய நில வங்கி மற்றும் கடன் மேலாண்மை மசோதாக்கள் வரும் நிதியாண்டில் தாக்கல் செய்யப்படும்.

* தேசிய நெடுஞ்சாலை திட்டத்துக்கான ஒதுக்கீடு 14 சதவீதம் உயர்வு. வரும் நிதியாண்டில் 8,800 கிலோ மீட்டர் தூரத்துக்கு தேசிய நெடுஞ்சாலை அமைக்கப்படும்.

* கார்ப்பரேட் சந்தை சீர்த்திருத்த நடவடிக்கை தொடங்கப்பட்டுள்ளது.

* அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியா யூரியா உற்பத்தியில் தன்னிறைவு பெறும்.

* பால் உற்பத்தி திட்டத்தை மேம்படுத்த உலக வங்கி ரூ.242 கோடி உதவி.

* வேளாண் கடன் இலக்கு ரூ.5.75 லட்சம் கோடியாக அதிகரிப்பு.

* நபார்டு வங்கிகளுக்கு ரூ.10,000 கோடி ஒதுக்கீடு.

* ஏ.டி.எம்.களில் கிஸான் கிரெடிட் கார்டுகளை பயன்படுத்தலாம்.

* குறித்த காலத்தில் கடனைத் திருப்பிச் செலுத்தும் விவசாயிகளுக்கு பரிசு.

* உணவு தானியங்களை சேமிக்க புதிய கிடங்குகள் அமைக்கப்படும்.

* மதிய உணவுத் திட்டத்துக்கு ரூ.11,937 கோடி ஒதுக்கீடு.

* தேசிய உணவு மேலாண்மை திட்டம் வரும் நிதியாண்டில் தொடங்கப்படும்.

* கட்டுமானத் துறைக்கு 12-வது ஐந்தாண்டு திட்டத்தில் ரூ.50 லட்சம் கோடி தேவை. இதில் பாதியளவு தனியார்த் துறையிடம் இருந்து பெறப்படும்.

* பின் தங்கிய பகுதிகளுக்கான திட்டங்களுக்கு ரூ.12,040 கோடி ஒதுக்கீடு.

* 12-வது ஐந்தாண்டு திட்டத்தின் கீழ் 6,000 பள்ளிகள் கட்டப்படும்.

* கல்விக் கடனுக்காக கடன் உத்தரவாத நிதி திட்டம் பரிந்துரைக்கப்படும்.
* ஒருங்கிணைந்த குழந்தைகள் மேம்பாட்டுத் திட்டத்துக்கு ரூ.15,850 கோடி ஒதுக்கீடு (இது கடந்த ஆண்டு ரூ.10 ஆயிரம் கோடி)

* 200 மாவட்டங்களில் குழந்தைகள் ஊட்டச்சத்து திட்டம் தொடங்கப்படும்.

* தேசிய ஊரக மேம்பாட்டுக்கு ரூ.20,820 கோடி ஒதுக்கீடு.

* காலநிலை மாற்றம் குறித்த ஆராய்ச்சிக்கு ரூ.200 கோடி ஒதுக்கீடு.

* தேசிய சமூக உதவித் திட்டத்துக்கு ரூ.8,447 கோடி ஒதுக்கீடு.

* மகளிர் சுய உதவித் திட்டத்தின் கீழ் ரூ.3 லட்சம் வரை கடன் திட்டம்.

* மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்புத் திட்டம் சிறப்பாக செயல்பட்டு வருகிறது.

* தேசிய திறன் மேம்பாட்டுக் கழகத்துக்கு ரூ.1,000 கோடி வழங்கப்படும்.

* தேசிய ஊரக வாழ்வாதார திட்டத்துக்கு ரூ.3,915 கோடி செலவிடப்படும்.

* ஊரக சாலை வசதி திட்டத்துக்கு ரூ.24,000 கோடி.

* வேளாண் துறையில் புதிய கண்டுபிடிப்புகளுக்கான ஆராய்ச்சிக்கு ரூ.200 கோடி.

* 7 மருத்துவக் கல்லூரிகள் தரம் உயர்த்தப்படும்.
*  நடப்பு நாடாளுமன்ற தொடரில் கறுப்பு பணம் தொடர்பாக வெள்ளை அறிக்கை வெளியிடப்படும்.

* ஏப்ரல் 2012-க்குள் 40 கோடி ஆதார் அட்டைகள் வழங்கப்படும்.
* கார்ப்பரேட் வரிவிதிப்பு விகிதத்தில் மாற்றம் இல்லை.

* தனி நபர் வருமான வரிவிலக்கு உச்சவரப்பு ரூ.2 லட்சமாக உயர்வு. இது, ரூ.1.8 லட்சமாக இருந்து வருகிறது.


* ரூ.2 லட்சத்தில் இருந்து ரூ.5 லட்சம் வரை - 10 சதவீதம்

* ரூ.5 லட்சத்தில் இருந்து ரூ.10 லட்சம் வரை - 20 சதவீதம்

* ரூ.10 லட்சத்துக்கு மேலான வருமானத்துக்கு 30 சதவீதம் வரி.
* சேமிப்பு கணக்கில் ரூ.10 ஆயிரம் வரை வரும் வட்டிக்கு வரி கிடையாது.

* சீனியர் சிட்டிசன்கள் முந்தைய வரி கட்டுவதில் வரி விலக்கு அளிக்கப்படுகிறது.


விலை உயரும், குறையும் பொருட்கள்...

* அயோடின் உப்பு, தீப்பெட்டி, சோயா பொருட்கள் விலைகள் குறைகிறது.

* சோலார் லைட்டுகள், எல்.இ.டி. பல்புகள் விலை குறைகிறது.

* கைவினைப் பொருட்களின் விலைகள் குறைகின்றன.

* புற்றுநோய், எச்.ஐ.வி. சிகிச்சைக்கான மருந்துகள் விலை குறைகின்றன.

* 10%-ல் இருந்து 30% ஆக வரி உயர்வதால், சைக்கிள்களின் விலை உயர்கின்றன.

* ஏ.சி., ஃப்ரிட்ஜ் உள்ளிட்ட பொருட்களின் விலைகள் அதிகரிக்கின்றன.

* ஆடம்பரப் பொருட்கள், விமானக் கட்டணங்கள் உயர்கின்றன.

* சிகரெட்டுகள் விலை அதிகரிக்கின்றன.

* தங்கம், வைரங்களின் விலைகள் உயர்கின்றன.