Showing posts with label ஆண்ட்ரியா. Show all posts
Showing posts with label ஆண்ட்ரியா. Show all posts

Sunday, May 18, 2014

அரண்மனை -பேய்ப் படத்துக்கு மூன்று அழகான கதாநாயகிகள் எதுக்கு?: இயக்குநர் சுந்தர்.சி பேட்டி

காமெடிதான் இன்றைய டிரென்ட் என்று சொன்னாலும் பல படங்கள் ரசிகர்களை சிரிக்க வைப்பதில்லை. ஆனால் காமெடிக்கு கேரன்டி தரும் சுந்தர்.சி போன்ற இயக்குநர்கள் கோடம்பாக்கத்தில் மிகக் குறைவு. தற்போது மூன்று முன்னணிக் கதாநாயகிகளை வைத்து ‘அரண்மனை' படத்தை ஒரே மூச்சில் இயக்கி முடித்திருக்கும் அவரைச் சந்தித்துப் பேசியதிலிருந்து... 



அரண்மனை படத்தில் என்ன ஸ்பெஷல்? 


 
நான் பண்ற முதல் பேய்ப் படம் இது. முன்னால் எல்லாம் பேய்ப் படங்கள் அப்படின்னாலே பார்க்கவே மாட்டேன். திடீர் பார்த்தா இந்தப் பேய்ப் படங்களுக்கு எல்லா இடத்துலயும் ரொம்ப வரவேற்பு. குடும்பத்தோடு படம் பார்க்குறவங்களைச் சொல்லலாம். என்னோட குடும்பமே ஒரு உதாரணம். எல்லாரும் ஒண்ணா இருக்கும்போது பேய்ப் படங்கள் டிவிடியில பிளே பண்ணிட்டு ஒவ்வொரு செகண்டுக்கும் பயப்படுற மாதிரி உட்கார்ந்து ரசிப்போம். நானும் அவங்ககூட உட்கார்ந்து பேய்ப் படங்கள் பார்த்து பார்த்து ரசிகனாகிட்டேன். அந்தப் பாதிப்பில் உருவானதுதான் ‘அரண்மனை' படம். அரண்மனை வீட்ல இருக்குறவங்க ஒருத்தர் உடம்புல பேய் இருக்கு. அந்தப் பேய் யாரு அப்படிங்கிறதுதான் கதையை நகர்த்திக்கிட்டு போற சஸ்பென்ஸ். 

 

அப்போ உங்க பாணி காமெடி இதில் இருக்காதா? 


 
முழுக்க பயமுறுத்தினா நல்லா இருக்காது. அதனால காமெடி, கலர்ஃபுல் பாடல்கள் இப்படி எல்லாம் சேர்ந்த பிரம்மாண்டமான ஒரு ஜாலியான படம்தான் ‘அரண்மனை'. பூர்வீக அரண்மனை வீட்டை விற்பதற்காக வெவ்வேறு ஊர்கள்ல வாழுற ஒரே ஜமீன் குடும்பத்தைச் சேர்ந்தவங்க, அரண்மனைக்கு வந்து தங்குறாங்க. அப்போ என்ன நடக்குதுங்கிறதுதான் படம். குடும்பத்தோட வந்தாங்கன்னா சிரிக்கவும், பயப்படுவதற்கும் இதில நிறைய ஸ்கோப் இருக்கு. 



ஒரு பேய்ப் படத்துக்கு ஹன்சிகா, ஆண்ட்ரியா, லட்சுமி ராய்னு எதுக்கு மூணு அழகான ஹீரோயின்ஸ்? 



மூணு பேரோட கேரக்டருமே புதுசா இருக்கும். ஹன்சிகான்னாலே துறுதுறு, பப்லி இப்படிதான் இருக்கும். இதுல அந்த மாதிரி இல்லாத ஒரு ஆச்சரியமான வில்லேஜ் கேரக்டர். அதே மாதிரி ஆன்ட்ரியா இந்தப் படத்துக்கு கிடைச்ச ஒரு சர்ப்ரைஸ் பேக்கேஜ். இதுல எல்லா கேரக்டருமே முக்கியம்தான். ஹன்சிகா, ஆன்ட்ரியா, லட்சுமி ராய், நான், வினய், சந்தானம், கோவை சரளா இப்படி எல்லாருமே முக்கியமான கேரக்டர். 

 

முதல்ல இயக்குநர், அப்புறம் ஹீரோ, இப்போ இயக்கி ஹீரோவா நடிச்சிருக்கீங்க. அடுத்து என்ன திட்டம்? 


 
எனக்கு எந்தத் திட்டமும் கிடையாது. அடுத்த படம் என்ன அப்படின்னுதான் யோசிப்பேன். ‘தீயா வேலை செய்யணும் குமாரு', ‘கலகலப்பு' படங்கள்ல நான் நடிக்கிற மாதிரி எந்த ஒரு பாத்திரமும் கிடையாது. ‘அரண்மனை' கதைல நான் நடிக்கிற மாதிரி ஒரு கேரக்டர் இருந்துச்சு. நடிச்சேன். இந்த படத்தைப் பொறுத்தவரை நான் ஹீரோ கிடையாது. எனக்கு லவ், டூயட் எதுவுமே கிடையாது. அடுத்து நான் பண்ற ரெண்டு படங்களுமே வெறும் இயக்கம்தான். 

 

உங்க படங்கள்ல வர்ற காமெடி மட்டும் பெரிய வெற்றிபெற என்ன காரணம்? 


 
30 படங்கள் இயக்கியிருக்கேன், முழுநீள காமெடி படங்கள்ன்னா 3 அல்லது 4 சொல்லலாம். என்னோட படங்கள்ல காமெடி ஏன் பேசப் படுதுன்னா, எனக்குப் படங்கள்ல காமெடியைத் தனி டிராக்கா உபயோகப் படுத்துறதுல உடன்பாடு இல்ல. கதை நகர்த்துவதற்கு நான் காமெடியை யூஸ் பண்ணிக்கிறேன். காமெடி பெரிய அளவிற்குப் பேசப்படுறதுனால காமெடி படம்னு முத்திரை குத்துறாங்க. ஆனா நான் ‘அன்பே சிவம்' பண்ணியிருக்கேன். ‘கிரி' மாதிரி கமர்ஷியல் படங்களும் பண்ணியிருக்கேன். ‘வின்னர்' பார்த்தீங் கன்னா அது காமெடி படமே கிடையாது. அது ஒரு பயங்கரமான மசாலா படம். சண்டைக் காட்சிகள் எல்லாம் அவ்வளவு மெனக்கெட்டு பண்ணியிருப்போம். ஆனா அதுல வைச்ச காமெடி பெருசா பேசப்பட்டதுல காமெடி படம் ஆயிடுச்சு. 



உங்க பெண்ணை நாயகி ஆக்கிற திட்டம் ஏதும் வைச்சுருக்கீங்களா? 


 
அதெல்லாம் கிடையாது. அவங்க விருப்பம்தான். தகப்பனா நல்ல படிப்பு கொடுக்கணும், நல்ல வசதிகள் பண்ணிக் கொடுக்கணும். அது மட்டும்தான் என்னோட கடமை. 

 
நீங்களும் அரசியலுக்கு வர்ற திட்டம் இருக்கா? 

 
வீட்டுக்கு ஒருத்தர் போதும்ன்னு நினைக்கிறேன். 

 
 a



நன்றி - த இந்து

Tuesday, February 12, 2013

ஆண்ட்ரியா நிர்வாணமாக நடித்த 'என்றென்றும் புன்னகை’ இயக்குநர் பேட்டி

 

3 க்ளோஸ் ஃப்ரெண்ட்ஸ்... அவங்க என்ன பண்றாங்க... என்ன பேசிக்கிறாங்கனு அவங்களுக்கே தெரியாம கேமராவெச்சு ரெக்கார்ட் பண்ணா எப்படி இருக்கும்? அப்படி இருக்கும் படம்'' - பிரகாசமாகப் புன்னகைக்கிறார் 'என்றென்றும் புன்னகை’ இயக்குநர் அஹமத்.  



''இந்த ஜெனரேஷன்ல நட்பு எப்படி அப்டேட் ஆகியிருக்குனு பேசும் படம் இது. ஜீவா, வினய், சந்தானம்... மூணு பேரும் நேரம்காலம் பார்க்காமச் சுத்துற பசங்க. கல்யாணம் பண்ணிக்கிட்டா சுதந்திரமா இருக்க முடியாது. பெரிய பெரிய பொறுப்புகள் தோள்ல விழும். 



தினமும் சந்திக்கிற நண்பர்களை எப்போவாவதுதான் பார்க்க முடியும்’னு காரணங்கள் சொல்லி  'கல்யாணமே வேண்டாம்’னு இருக் கார் ஜீவா. அப்புறம் அவருக்குக் காதல், கல்யாணம், கடவுள் மேல் எப்படி நம்பிக்கை வருதுன்னு பயணிக்கும் திரைக்கதை. ரொம்ப உயிர்ப்பா இருக்கும் படம்.'' 



'' 'முகமூடி’, 'நீதானே என் பொன்வசந்தம்’ படங்களுக்குப் பிறகு ஜீவாவுக்கு இப்போ அவசியம் ஒரு ஹிட் தேவைப்படுதே... இந்தப் படத்தில் அது சாத்தியமா?''  


   

''நிறைய நல்ல படங்கள் கமர்ஷியலா சக்சஸ் ஆகாம இருந்திருக்கு.  இது எல்லா ஹீரோக்களுக்கும் நடக்கிறதுதான். ஆனா, தொழிலுக்கு ரொம்ப நேர்மையாவும் பக்தியாவும் இருக்கிறவர் ஜீவா. முந்தைய படத்தோட ரிசல்ட் பத்திக் கவலைப்படாம, அடுத்தடுத்த படங்களில் ரிஸ்க் எடுத்து நடிப்பார். அதோட ஜீவாவுக்குள் ஒரு இயக்குநர் ஒளிஞ்சிருக்கார்.




 போட்டோகிராஃபர் புதைஞ்சிருக்கார். நடிச்சுக்கிட்டே இருப்பார். பேக்கப் சொல்றப்போ, அன்னைக்கு ஷூட்டிங்ல எவ்வளவு செலவாகி இருக்கும்னு கரெக்டா சொல்வார். அவ்ளோ துல்லியமா சினிமாவைத் தெரிஞ்சுவெச்சிருக்கார். ஒரு சில படங்களோட முடிவு ஜீவாவைப் பாதிக்காது!''


''நண்பர்கள்ல ஒருத்தரா இருந்தாலும், சந்தானம் இந்தப் படத்துலயும் வழக்கமான காமெடிதானே பண்ணுவார்?''




''சந்தானம் பண்ற காமெடி பிடிச்சா சிரிப்போம்... இல்லைன்னா, கமென்ட் பாஸ் பண்ணிட்டுப் போயிருவோம். ஆனா, தினமும் ஒவ்வொரு படத்துலயும் காமெடி பண்ணி நடிக்கிறது நிச்சயம் சந்தானத்துக்கு ரொம்பவே கஷ்டமான வேலை.



 நான் சந்தானத்துக்கு அந்தக் கஷ்டத்தை வைக்கலை. 'இந்தப் படத்தை நான் ரொம்ப எதிர்பார்க்கிறேன். நல்லா வந்திருக்கு’னு எல்லார்கிட்டயும் சந்தானமே அக்கறையா சொல்லிட்டு இருக்கார். அவரோட வழக்கமான ஸ்டைல் இதுல இல்லை. வேற ஒரு வெர்ஷன்ல சந்தானத்தை இதில் பார்ப்பீங்க.''




''ஆண்ட்ரியா ஓவியக் கல்லூரி மாணவர்களுக்காக நிர்வாண போஸ் கொடுத்து நடிக்கிறதா பரபரப்புக் கிளப்பிட்டீங்களே?''  



''படத்துல ஆண்ட்ரியா மாடல்ங்கிறது உண்மை. ஆனா, ஓவியக் கல்லூரி மாடல் இல்லை. ஃபேஷன் ஷோ மாடல். அது நியூட் போஸ் இல்லை. ஸ்கின் டிரெஸ்னு ஒண்ணு இருக்கு. தோலின் நிறத்திலேயே இருக்கும். ராம்ப் வாக்கில் ஆண்ட்ரியா அந்த டிரெஸ்ல வர்ற மாதிரி பிளான் இருந்தது. 



ஆனா, இப்போ அந்த சீனும் படத்தில் இல்லை. ஒரு ஃபேஷன் மாடலா கலர்ஃபுல்லா, அழகா இருப்பாங்க ஆன்ட்ரியா. ஒரு மிடில்கிளாஸ் பொண்ணா, பொறுப்பா, பளிச்னு இருப்பாங்க த்ரிஷா. இது தமிழ்ப் படம். தமிழ்ப் படத்துக்கு என்ன தேவையோ, அது மட்டும்தான் படத்துல இருக்கும்!''


நன்றி - விகடன்