Showing posts with label 251 ரூபாய் ஸ்மார்ட் போனின் அசத்தல் அம்சங்கள்!. Show all posts
Showing posts with label 251 ரூபாய் ஸ்மார்ட் போனின் அசத்தல் அம்சங்கள்!. Show all posts

Thursday, February 18, 2016

251 ரூபாய் ஸ்மார்ட் போனின் அசத்தல் அம்சங்கள்!

ந்தியாவின் நொய்டாவை சேர்ந்த நிறுவனம் ஒன்று,  251 ரூபாய்க்கு புதிய ஸ்மார்ட் போனை வெளியிட்டுள்ளது.
இந்த ஸ்மார்ட் போன்கள், ‘ப்ரீடம் 251’ என்ற பெயரில் சந்தைக்கு வர உள்ளன. வரும் பிப்ரவரி 18-ம் தேதி,  ரிங்கிங் பெல்ஸ் நிறுவனத்தின் இணையதளத்தில்,  காலை 6 மணி முதல் 21-ம் தேதி இரவு 8 மணி வரை இந்த 251 ரூபாய் ஸ்மார்ட் போன் விற்பனை தொடங்கவுள்ளது.
* இந்த போன் சமீபத்திய நவீன லாலிபாப் ஆன்ட்ராய்டில் இயங்கவுள்ளது. அடுத்ததாக 3 ஜியிலும் மிக வேகமான இயங்க கூடியது. 

* 5 ஆயிரம் ருபாய் மதிப்புள்ள போன்களுக்கு உள்ளது  போல 4 இன்ச் ஸ்கிரீன் உள்ளது. 

* 1 ஜிபி ரேம் வசதி கொண்டது. ஃபேஸ்புக், வாட்சஸ், ட்விட்டர் போன்ற சமூக வலைதளங்களை மிக வேகமாக இயக்க முடியும்

* இந்த போனில் 8 ஜிபி இன்டர்னல் கார்டு உள்ளது. அதுபோல் 32 ஜி.பி. எஸ்.டி கார்டு பொருத்தலாம்.  இந்த மைக்ரோ எஸ்.டி. கார்டு இந்த போனின் விலையை காட்டிலும் அதிகம். 

* 3.2 மெகாபிக்சல் கேமரா இந்த செல்போனில் பொருத்தப்பட்டுள்ளது. செல்பி 0.3 மொகாபிக்சல் ஆகும். 

* இவ்வளவு குறைந்த விலையில் இந்த போன் கொடுக்கப்பட்டாலும் பேட்டரி ஒரு நாள் முழுமைக்கும் தாங்கும். 1450 எத்.ஏ. ஹெச் பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது. 

* ஃப்ரீடம் 251 செல் போன் ராணுவ அமைச்சர் மனோகர் பாரிக்கர் தலைமையில் முரளி மனோகர் ஜோசி எம்.பி. முன்னிலையில் அதிகாரப்பூர்வமாக அறிமுகப்படுத்தப்பட்டது. 

* நாடு முழுவதும் 650 சர்வீஸ் சென்டர்கள் உள்ளன. அத்துடன் ஒரு வருட வாரண்டியும் உள்ளது. 

'மேக் இன் இந்தியா 'திட்டத்தின் கீழ் பி இந்த ஸ்மார்ட் போன்கள் தயாரிக்கப்பட்டிருப்பதாகவும், இவை முழுமையாக உள்நாட்டில் தயாரிக்கப்பட்டவை என்றும் இதனைத் தயாரிக்கும் ரிங்கிங் பெல்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது. மத்திய அரசின் முயற்சிக்கு கிடைத்த வெற்றியாகவும் இது பார்க்கப்படுகிறது. சந்தையில் ஸ்மார்ட் போன்களின் குறைந்தபட்ச விலை 1,500 ரூபாய் ஆகும்.

நன்றி - விகடன்