Showing posts with label பூஜை. Show all posts
Showing posts with label பூஜை. Show all posts

Tuesday, October 21, 2014

பூஜை - சினிமா விமர்சனம்


 ஹீரோவோட அம்மா  ரொம்ப வருசமா  ஹீரோவை ஒதுக்கி வைக்கறாரு.அது ஏன்?இதுக்கு பயங்கரமா சிந்திச்சிருக்காங்க.ஹீரோவோட மாமா பொண்ணு ஹீரோவை  விரும்புது.ஆனா  யார் கிட்டயும்  சொல்லலை. வீட்ல மாப்ளை பார்த்ததும்  டக்னு ஹீரோக்கு  செல்  போன் ல  ஒரு மெசேஜ் 143 -னு அனுப்பி  இருக்கலாம். செய்யலை. ரேட் கட்டர் போடலை போல . வாசல்ல அப்பா  இருக்கும்போதே கேனம் மாதிரி அந்தப்பொண்ணு  ஹீரோவைக்கட்டிப்பிடிச்சு அழுது,அதைப்பார்த்து அப்பன்காரன் செம காண்ட் ஆகி  திட்றாரு. ஹீரோவோட அம்மாவுக்கு இதனால அவமானம். பளார் பளார் பளார்னு 3 அறை .

 வருசம் 16 படத்துல  குஷ்பூ , பாத்ரூம் , கார்த்திக்   சீன் ல  இருந்து  உருவிட்டாங்க போல,ஹீரோ வாயைத்திறந்து “ அம்மா என் மேல  தப்பில்லை, அவ தான் வந்து கட்டிப்பிடிச்சா”ன்னா  மேட்டர்  ஓவர் . ஆனா  சொல்லலையே. ஓபிஎஸ்க்கே அண்ணன் போல , அம்மாவுக்கு  முன்னால பவ்யமா  இருக்காரு.

இப்போ  அம்மா  ஒரு ஊர்ல ,  மகன் இன்னொரு ஊர்ல .வில்லன்  ஹீரோ  குடும்பத்துல  ஒருத்தரை  செருப்பாலயே அடிக்கறாரு.உடனே அம்மா  ஹீரோவை வரச்சொல்லி அவன்  கையை வெட்டிட்டு வாடாங்கறாங்க. வாவ். வாட்டே அம்மா ? 

ஹீரோ - வில்லன்  க்ரூப்க்கு இடையே நடக்கும்  துரத்தல்கள்  , சண்டைகள் , வெட்டுகள்  குத்துகள்  தான்  படம். காது வலி இல்லாதவர்கள் நிச்சயம்  வலியோடு தான்  திரும்பனும்னு கங்கணம் கட்டிட்டு  சவுண்ட்  மிக்சிங் பண்ணி  இருக்காங்க.

ஹீரோவா  புரட்சித்தளபதி  விஷால். ஆள்  வாட்டசாட்டமா  இருக்கார் தான். எக்சசைஸ் பாடி தான் . எல்லாம் ஓக்கே  ஆனா  ஃபுட் பால் விளையாடற மாதிரி அவர்  வில்லன் ஆட்களை உதைப்பது , அவங்க 25 கிமீ போய் விழுவது எல்லாம்  ரொம்பவே  ஓவர்.ஹீரோயினுடன் அவர் பம்முவது ஓக்கே . காதல் காட்சிகளில்  ஸ்ருதியுடன் சரியா  ஒட்டலை . லட்சுமிமேனன் பயமா? கமல் பயமா? தெரியலை . பாண்டிய நாடு படத்துடன் ஒப்பிட்டால் இது பல படி கீழேதான்.


நாயகியா  ஸ்ருதி  கமல் . இவரது கம்பீரமான ஆண்  குரல் மைனஸ் மாதிரி  தெரிந்தாலும்   ரொம்ப  கேவலமா  எல்லாம் இல்லை. சமாளிக்கலாம்.டூயட் காட்சிகளில்  தனது  திறமையை  சென்சார் அனுமதித்த அளவில்  காட்டி  இருக்கார்.



ராதிகா தான் அம்மா. எடுபடலை . கிழக்குச்சீமையிலே   கேரடக்ர் எல்லாம்  எப்படி  எல்லாம் கலக்கினார்?
 

சூரி தான்  காமெடியன். கரலாட்டக்காரன் வாழைப்பழக்காமெடி ரீ மிக்ஸ் பட்டி டிங்கரிங்க்  ஜோக்கிற்கு  10% மக்கள்  சிரிக்கறாங்க . நல்ல  முன்னேற்றம். முன்பெல்லாம் 3% ஆட்கள்  தான்  சிரி[ப்பாங்க 


 வில்லனாக  முகேஷ்  திவாரி. அய்யோ பாவம் . பலி ஆடு. ஹீரோ  கிட்டே அடி வாங்கவே நேரம் சரியா  இருக்கு

 சத்யராஜ்-ன்  மொட்டை பாஸ் கெட்டப் கலக்கல். ஆனா அவருக்கு வாய்ப்பு கம்மி . போலீஸ் ஆஃபீசர் என்றதும் அவருக்கு   பெரிய  முக்கியத்துவம்  இருக்கும்னு எதிர்பார்த்தா  ஏமாத்திட்டாங்க 


 பாடல்காட்சிகள்  சுமார்  தான் . வழக்கமாக குத்தாட்டப்பாடல்களீல் கலக்கும்  ஹரி இதில் அடக்கி வாசிச்சிருக்கார்.



இயக்குநர் பாராட்டுப்பெறும் இடங்கள்


1  தீபாவளிக்கு  போட்டியே  இல்லாத  டைமில் படத்தை  ரிலீ ஸ்  செஞ்சது



2 படம் பர பரப்பாக   இருப்பது  போல் சம்பவங்களை , காட்சி அமைப்பை வேக வேகமாக அடுக்கிச்செல்வது 

புது வசந்தம் சித்தாராவை அழகாகக்காட்டியது




இயக்குநரிடம் சில கேள்விகள் 


1   சத்யராஜ்மாதிரி   ஒரு ஜைஜாண்டிக்கான  போலீஸ் ஆஃபீசர் ஒரு சினிமா  தியேட்டர் வாசலில்  ஒரு ஆள் வந்து காலில் விழுவது  போல் நடிச்சு காலை வாரி  விடும்போது வேடிக்கை பார்த்து அப்படி பெப்பரப்பேன்னு   விழுவாரா? 


2 ஹீரோ  ஹீரோயின்  கிட்டே லவ் சொல்லும்போது  ஒண்ணா  பிடிச்சிருக்குன்னு  சொல்லனும் , இல்லை பிடிக்கலைன்னு சொல்லனும், பெண் இனத்தையே  கேவலப்படுத்துவது போல் அப்படி வசனம் எதுக்கு ? 


3 முதன்  முதலா காதலைச்சொல்லும்  முறைப்பெண்   எதுக்கு கட்டிப்பிடிக்கனும்? சொல்லவே  கூச்சம். கட்டிப்பிடிக்க  கூச்சம் இல்லையா? ( பொறாமை தான் )

4   வில்லன் அடியாளுங்க  86 பேர் அரிவாளோட இருக்காங்க . ஹீரோ  ஒரே ஒரு  பைக் பம்ப்பர் கொண்டு செம தாக்கு தாக்கறார். அவர் மேல ஒரு கீறல்  குட விழாதா?

மனம் கவர்ந்த வசனங்கள்


1 ஸ்ருதி - என்னங்க இது? உங்க பிரண்ட் பீர்  தர்றாரு?


விஷால் = ?

சூரி = கூலிங்கா ஏதாவது குடுன்னியே?# பூஜை




2 சாமிக்குப்பலி  கொடுத்தா  பூஜை முடிஞ்சிடும்.நான் அவனை பொலி போட்டுட்டு பூஜையை முடிக்கிறேன் # பூஜை




3 பெத்தவங்க மனசை வேதனைப்ப்டுத்திட்டு யாரும் நிம்மதியா வாழ்ந்ததா சரித்திரமே இல்லை # பூஜை

4 இந்தக்காலத்துப்பொண்ணுங்க அஞ்சு பீரை அட்டர் டைம் ல அடுக்குவாங்க # பூஜை

5 உன்னைப்பாத்தா வைரமுத்து மாதிரி இருக்கு.


உன்னைப்பார்த்தா வயிறு முத்துவனாட்டம் இருக்கு # பூஜை



6 சூரியின் மொக்கை = டேய் சுடலை.நீ விக்கற கடலை சுடலை




படம் பார்க்கும்போது போட்ட ட்வீட்S  


1  ஹரி திரைக்கதை எழுதும்போது ஜாக்கிங் போய்க்கிட்டே எழுதுவாரா? படம் பறக்குது # பூஜை

2  ( அம்மாவோட )சித்தப்பா வை செருப்பால அடிச்சவனை ஹீரோ பழி வாங்கறதுதான் கதை.அடேங்கப்பா.# பூஜை

3 கோவை கங்கா யமுனா காவேரி தியேட்டர் காம்ப்ளெக்ஸ் ல விஷால் 28 பேரை அடிக்கறாரு.அடேங்கப்பா # ஹரிடா

4 லோ கட் சர்ட் போட்டுட்டு ஸ்ருதி கமல் ஸ்கிப்பிங் ரோப் இல்லாமயே சும்மா சும்மா குதிக்குது.சமூகத்துக்கு ஏதோ சொல்ல வருதோ? # பூஜை

5 அம்மா ராதிகா பையன் விஷால் கிட்டே " போடா வெளியே"னு துரத்தறாரு.அப்போ அந்த குரல் 6 டைம் எக்கோ அடிக்குது.நம்மைத்தான்  போகச்சொல்றாரா?


6 ஸ்ருதி கமல்  மேலாக்கா  ஏதோ போட்டிருக்காங்க அசால்ட்டா.ஓ அதான் தாவணியாம்.ஒரு ஓரமாகிடக்கு # பூஜை



தீபாவளி ரிசல்ட்
1 கத்தி = தலைவலி
2 பூஜை = காதுவலி






சி பி கமெண்ட் =

பூஜை =அடிதடி ,வெட்டு,குத்து ,கொலை,சேசிங் ,ஜீப் ,கார் ,லாரி .மாமூல் மசாலா.ஹரி மார்க் கொலைகள் .விகடன் மார்க் =41 , ரேட்டிங் = 2.5 / 5



எதிர்பார்க்கப்படும் ஆனந்த விகடன் மார்க் = 41





குமுதம் ரேட்டிங்க் = ok


 ரேட்டிங் =  2.5  /  5
  
யு/ஏ சான்று! அதிர்ச்சியில் பூஜை படக்குழு - ரிவைசிங் கமிட்டிக்கு செல்ல முடிவு

தாமிரபரணி படத்திற்கு பிறகு விஷால்-ஹரி கூட்டணி சேர்ந்துள்ள படம் பூஜை. இப்படத்தில் விஷால் ஜோடியாக ஸ்ருதிஹாசன் நடித்துள்ளார். யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ளார். விஷாலே தயாரிக்கவும் செய்துள்ளார். இப்படத்தின் ஷூட்டிங் எல்லாம் முடிந்து ரிலீஸ்க்கு தயாராக உள்ள நிலையில், படத்தை தணிக்கை குழுவிற்கு அனுப்பியுள்ளனர். படத்தை பார்த்த தணிக்கை அதிகாரிகள் படத்தில் நிறைய வன்முறை காட்சிகள் இருப்பதாக கூறி யு/ஏ சான்று அளித்துள்ளனர். இதனால் பூஜை படக்குழு அதிர்ச்சியில் இருக்கிறது.

பொதுவாக ஒரு படத்திற்கு யு சான்று கிடைத்தால் மட்டுமே வரிவிலக்கு பெற இயலும், ஆனால் இப்போது பூஜை படத்திற்கு யு/ஏ சான்று கிடைத்துள்ளதால் வரி விலக்கு பெற முடியாத சூழல் உருவாகியுள்ளது. இதனால் படத்தை ரிவைசிங் கமிட்டிக்கு அனுப்பி யு சான்று பெறும் முயற்சியில் இறங்கியுள்ளனர் பூஜை படக்குழுவினர்.


பூஜை படம் தீபாவளியன்று, விஜய்யின் கத்தி படத்தோடு மோத இருக்கிறது.



யு/ஏ சான்று! அதிர்ச்சியில் பூஜை படக்குழு - ரிவைசிங் கமிட்டிக்கு செல்ல முடிவு




ஹரி இயக்கத்தில் உருவாகியுள்ள 13வது படம் பூஜை. இந்த படத்தில் விஷால்-ஸ்ருதிஹாசன்-சத்யராஜ் முக்கிய வேடங்களில நடித்துள்ளனர். யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்திருககிறார். தீபாவளிக்கு வெளியாகும் இப்படம் இதுவரை விஷால் படங்கள் இல்லாத அளவுக்கு 1108 தியேட்டர்களில் வெளியாவதாக அதிகாரப்பூர்வமான செய்தி வெளியாகியிருக்கிறது.


அந்த வகையில், தமிழ்நாட்டில் மட்டும் 375 தியேட்டர்களிலும், கேரளாவில் 70, ஆந்திராவில் 473, கர்நாடகாவில் 47, எப்எம்எஸ்- 143 ஆக மொத்தம் 1108 தியேட்டர்களில் பூஜை வெளியாகிறதாம். இதில் தமிழ்நாட்டை விட, ஆந்திராவில்தான் அதிகமான தியேட்டர்களில் வெளியிடுகிறார்கள்.


தமிழில் உருவான ஒரு படத்துக்கு தெலுங்கிற்கு இத்தனை முக்கியத்தும் கொடுப்பதற்கும் காரணம் இருக்கிறது. தமிழில் விஜய்யின் கத்தி படம் சர்ச்சைகளில் சிக்கியிருந்தபோதும், அந்த படத்திற்கான எதிர்பார்ப்பே அதிகமாக உள்ளது. அதனால் விஷால் படம் பற்றிய பேச்சே இல்லை என்பதுதான் உண்மை


அதனால் ஒருவேளை தமிழ்நாட்டில் எதிர்பார்த்த வசூல் இல்லையென்றால்கூட ஆந்திர ரசிகர்கள் படத்தை காப்பாற்றி விடுவார்கள் என்ற நம்பிக்கைதான் விஷாலுக்கு அதிகமாக உள்ளதாம். காரணம், விஷால் ஆந்திராக்காரர்தான் என்றபோதும், அவருக்கு அங்கு பெரிதாக மார்க்கெட் இல்லை. ஆனால், அப்படத்தின் நாயகி ஸ்ருதிஹாசனுக்கு பெரிய மார்க்கெட் உள்ளது. அவர் நடித்த எல்லா படங்களுமே கிட்டத்தட்ட அங்கு வசூலை வாரி குவித்திருக்கின்றன.


அவர் ஒத்த பாட்டுக்கு குத்தாட்டம் போட்டால்கூட அந்த படம் ஹிட்தான் என்ற செண்டிமென்ட் இருப்பதால்தான் விஷாலுக்கு ஆந்திரா மீது இத்தனை நம்பிக்கை ஏற்பட்டுள்ளதாம். ஆக, தமிழ்நாட்டில் விஷால் படம் என்று வெளியாகும் பூஜை, ஆந்திராவில் ஸ்ருதிஹாசன் படம் என்று விளம்பரப்படுத்தப்பட்டு வெளியாகிறதாம்.



தீபாவளிக்குத் திரைக்கு வரும் படங்களில் பலரும் 'கத்தி' படத்தைப் பற்றி மட்டுமே பேசி வருகிறார்கள். அதே தினத்தில் வெளிவரும் 'பூஜை' படத்தைப் பற்றிய பேச்சு குறைவாகவே இருக்கிறது. விஜய்க்கு இருக்கும் லட்சக் கணக்கான ரசிகர்களே அதற்குக் காரணம். சமூக வலைத்தளங்களில் கூட 'கத்தி' படத்தைப் பற்றித்தான் நல்ல விதமாகவோ, கெட்ட விதமாகவோ கமெண்ட்டுகள் அடிக்கப்பட்டு வருகின்றன. ஆனால், 'பூஜை' படத்தைப் பற்றி யாருமே கண்டுகொள்ளவில்லை. இருந்தாலும் 'பூஜை' படம் 'கத்தி'க்கு சிறிதும் குறைவில்லாமல் அமைதியாக ஒரு சாதனையைப் படைத்து வருகிறது. தமிழ், தெலுங்கு, மற்ற மாநிலங்கள், உலகம் முழுவதும் சுமார் ஆயிரத்துக்கும் மேற்பட்ட திரையரங்குகளில் படம் வெளியாக உள்ளதாம்.தமிழ் நாட்டில் மட்டும் சுமார் 400 திரையரங்குகள், தெலுங்கில் சுமார் 500 திரையரங்குகள், கேரளா, கர்நாடகா மற்றும் உலகமெங்கும் வெளியாகும் திரையரங்குகளைக் கணக்கில் கொண்டால் 1200க்கும் மேற்பட்ட திரையரங்குகளில் வெளியாக உள்ளது என கோலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. முன்னணி கமர்ஷியல் இயக்குனரான ஹரி, தெலுங்கில் முன்னணி ஹீரோயினான ஸ்ருதிஹாசன் ஆகியோர் இருப்பதால் தெலுங்கிலும் படத்திற்கு நல்ல வியாபாரம் நடந்துள்ளதாம். அதோடு யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்து சமீபத்தில் வெளியாகிய 'கோவிந்துடு அந்தாரிவாடிலே' படமும் நல்ல வெற்றி பெற்று அவருக்கு மீண்டும் ஒரு ஹிட்டைக் கொடுத்துள்ளதாலும், 'பூஜை' படம் தெலுங்கில் தமிழை விட அதிக திரையரங்குகளில் வெளியாகிறது என டோலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

'பூஜை' படத்துடன் தமிழில் 'கத்தி' படமும், தெலுங்கில் 'கார்த்திகேயா' என்ற படமும் மட்டுமே போட்டியாக வெளியாகிறது. 'கத்திக்கும், கார்த்திகேயாவுக்கும்' வெற்றி பெற 'பூஜை' தேவைப்படுகிறது.
நன்றி- தினமலர்

Monday, May 12, 2014

ரேஸ் குர்ரம் படத்தில் படுகிளாமராக நடித்தது ஏன் ? ஸ்ருதி கமல் சமாளிஃபிகேஷன் பேட்டி @ த ஹிந்து

திரையுலகின் முன்னணிக் கதாநாயகியாக தனது இடத்தைக் தக்கவைத்துக் கொண்டே, இந்தியிலும் தனது மறுபிரவேசத்தை அழுத்தமாக உறுதிசெய்திருக்கிறார் ஸ்ருதி. ஏழாம் அறிவு படத்தில் தோன்றிய ஸ்ருதி ஹாசனா இது என்று ஆச்சரியப்படும் பொலிவுடன் வலம் வர ஆரம்பித்திருக்கும் இவர் தற்போது தாய்மொழியான தமிழிலும் தனிக் கவனத்துடன் படங்களை ஒப்புக்கொள்ளத் தொடங்கியிருக்கிறார். ஹரி இயக்கத்தில் விஷால் ஜோடியாக நடித்து வரும் ‘பூஜை’ படத்தின் போட்டோ ஷூட்டுக்காகச் சென்னை வந்திருந்த ஸ்ருதியுடன் பேசியதிலிருந்து..... 



தெலுங்குத் வலுவான திரைப்படக் குடும்பப் பின்னணியில் இருந்து இன்று முன்னணிக் கதாநாயகியாக வளர்ந்து நிற்கிறீர்கள். இந்த இடத்திலிருந்து உங்களது திரைப்பயணத்தை எப்படி எடுத்துச் செல்லத் திட்டம்? 


 
நான் கமல் ஹாசன், சரிகா பெண்ணாக வாய்ப்பு தேடியதில்லை. எனது திறமைக்காக நிறைய வாய்ப்புகள் கிடைத்திருக்கின்றன. எனது படங்களில் எனக்காக எனது அப்பா அம்மா வந்து நடிக்கவில்லை. நான் நடிக்கும் படங்கள் ஆடியன்ஸூக்குப் பிடித்தால் மட்டுமே நான் முன்னேறிப் போக முடியும். இந்தியில் ‘ஹை புரஃபைல் லாஞ்ச்சிங் பேட்’ என்ற பரபரப்புடன்தான் நான் ‘லக்’ படத்தில் அறிமுகமானேன். ஆனால் அந்தப் படம் ஓடவில்லை. முதல் படத்திலேயே நான் தோல்வியை ருசித்தேன்.


 அது மிகவும் கசப்பானது. அதிலிருந்துதான் என்னைப் பற்றியே நிறைய கற்றுக்கொண்டேன். இன்னும் இருபது வருடங்கள் கழித்து நான் நடித்த படம் எவ்வளவு வசூல் செய்தது என்பதைப் பற்றி யாரும் பேச மாட்டார்கள். ஆனால் நான் அதில் என்ன செய்திருக்கிறேன் என்பதை டிவி, டிவிடி எல்லாவற்றிலும் பார்ப்பார்கள். அதனால் வெற்றி தோல்வி பற்றியெல்லாம் நான் யோசித்துக் கொண்டிருக்காமல் என் பயணத்தை இயல்பாகக் கடக்க விரும்புகிறேன். 



உங்களது அறிமுகப் படத்தில் தொடங்கி கிளாமராக நடிக்க நீங்கள் தயங்கியதில்லை. ஆனால் தெலுங்குப் படங்களில் கொஞ்சம் அதிகமான கிளாமரில் நடிக்கிறீர்கள்? ரசிகர்கள் ஏன் இந்தப் பாகுபாடு என்று கேட்கிறார்கள்?


 
அது எனது கையில் இல்லை. நான் டைரக்டரின் ஆக்டர். டைரக்டர் இந்தக் கதாபாத்திரம் இப்படித்தான் இருக்கும் என்று சொல்லும்போது அதை நான் தட்டுவதில்லை. ஒரு கதாபாத்திரம் நமக்குப் பிடித்துப் போய்விட்டால், அதைச் சிறப்பாகச் சித்திரித்துக் காட்ட இயக்குநர் விரும்பும் விதத்தில் நாம் நடித்துக் கொடுக்க வேண்டும். இந்த கிளாமர் வேறுபாடு என்பது கதையும், என் கதாபாத்திரமும் சம்பந்தப்பட்டது. ஏழாம் அறிவு படத்தில் வந்த சுபா சீனிவாசனுக்கோ, ‘கப்பர் சிங்’ படத்தில் வந்த பாக்கியலட்சுமிக்கோ கிளாமர் தேவைப்பட வில்லை. காரணம் அந்தக் கதாபாத்திரங்கள் அப்படி. ஆனால் ‘ரேஸ் குரம்’ ஸ்பந்தனா கிளாமராக இருந்தால்தானே சரி. 



தவிர நான் தமிழ், தெலுங்கு, இந்தி என்று ரசிகர்களைப் பிரித்துப் பார்க்க விரும்பவில்லை. என்னளவில் அவர்கள் இந்திய ரசிகர்கள். ரசனையில் வடக்கிற்கும் தெற்கிற்கும் மெல்லிய வேறுபாடுகள் இருக்கலாம். ஆனால் இமயமலை அளவுக்கு இல்லை. 



திரையில் அறிமுகமானபோது இருந்ததை விட இப்போது பேரழகுடன் இருப்பதாக டிவிட்டரில் உங்களது ரசிகர்கள் புகழ்ந்து தள்ளுகிறார்களே?

 
அழகென்றில்லை; உடல், பணம், வீடு என எதுவாக இருந்தாலும், நமக்குக் கிடைத்ததைக் கொண்டாடும் மனநிலை நமக்கு இருக்க வேண்டும். நான் அழகாக இருக்க வேண்டும் என்று அதிலேயே கவனத்தைக் குவித்துக் கொண்டிருப்பதால் அழகு கூடவோ குறையவோ செய்யாது. அழகு என்பதே இயல்புதான். கடவுள் கொடுத்திருப்பதைக் கொண்டாடக் கற்றுக்கொள்ள வேண்டும். நான் அழகாக இருக்க வேண்டும் என்று பெரிதாக மெனக்கிடுவதில்லை. அழகான அம்மா, அப்பா, தங்கையுடன் வளர்ந்ததுகூட எனது இந்த அணுகு முறைக்குக் காரணமாக இருக்கலாம். 



அழகைப் பராமரிப்பதற்காகப் பல கட்டுப்பாடுகளைக் கடைப்பிடிக்கும் பெண்களைப் பற்றி? 


நிறைய பேர் அதைத்தான் செய்து கொண்டிருக்கிறார்களோ என்று எண்ணத் தோன்றுகிறது. நம் மனதுக்குப் பிடித்த உணவு, நிம்மதியான உறக்கம் இரண்டுமே உங்கள் அழகைப் பாதுகாத்துக்கொள்ள மிக முக்கியம். 4 மணிநேரம் தூங்கினாலும் அது நிம்மதியான தூக்கமாக இருக்க வேண்டும். பிரச்சினைகள் எல்லோருக்கும் வரலாம். ஆனால் எல்லாப் பிரச்சினைகளுக்குமே தீர்வு உண்டு என்பதைப் பற்றி நம்மில் பலரும் நினைப்பதில்லை. அப்படி நினைத்துவிட்டாலே பாதி குற்றங்கள் குறைந்துவிடும். 



நீங்கள் சைவ உணவு விரும்பியா?\

 
இல்லை. நான்-வெஜிட்டேரியன் சாப்பிடுவேன். ஆனால் பீப் சாப்பிட மாட்டேன். தென்னிந்திய உணவு வகைகள் என்றால் எனக்குக் கொள்ளைப் பிரியம். பட்டினி கிடப்பது, குறைவாகச் சாப்பிடுவது அப்படியெல்லாம் எந்தக் கட்டுப்பாடும் என்னிடம் கிடையாது. எவ்வளவு அதிகமாகச் சாப்பிட்டாலும் அதற்கு ஏற்ப ‘ஒர்க் அவுட்’ செய்துவிடுவேன். 


ஸ்ருதியின் சிங்கிள் இசை ஆல்பம் கடந்த ஆண்டே வெளியாகும் என்றார்களே? 

 
இந்த ஆண்டு மட்டும் ஐந்து படங்களில் நடிப்பதால் இசையமைப்பாளர் ஸ்ருதி அவ்வப்போது பாடுவதோடு சரி. படப்பிடிப் பில் இசைக்கோப்பு செய்து, மற்றவர்களின் நேரத்தை நான் திருட விரும்பவில்லை. இந்த ஆண்டு இறுதிக்குள் எனது சிங்கிள் வெளியாகும் என்று உறுதியாகச் சொல்வேன். 



திரையுலகில் உங்கள் தோழன் யார்? 


 
இசைதான் என் தோழன். காலைமுதல் மாலைவரை அவன் என்னுடனே பயணிக்கிறான். என் காதுகளுக்கு அருகிலேயே பாடிக்கொண்டிருக்கிறான். எனக்குத் திரைப்படங்களின் பின்னணி இசைக் கோவையைக் கேட்பது மிகவும் பிடிக்கும். திரையிசைக்கு வெளியே நிறைய புதுமுகங்கள் ஃபிரெஷ்ஷான திறமைகளுடன் வந்துகொண்டே இருக்கிறார்கள். தமிழ்த் திரையுலகில் அனிருத்தின் இசை எனக்கு ரொம்பவும் பிடித்திருக்கிறது. 


யார் மீதும் காதல் வரவில்லையா? 

 
இல்லை. காதல் சுயநலமற்றதாக இருக்க வேண்டும். இல்லையென்றால் அது நம் வாழ்க்கையைக் கெடுத்து விடும். தற்போது நிஜ வாழ்க்கையில் காதலிப்பது பற்றிச் சிந்திக்கச் சுத்தமாக நேரமில்லை. 


தனியாக வசிப்பது பிடித்திருக்கிறதா? 

 
தனியாக வசிப்பதில்தான் பொறுப்புகள் இன்னும் அதிகம் என்று சொல்வேன். அம்மா, அப்பா இருவரது வீட்டின் கதவுகளும் திறந்தே இருக்கின்றன. ஆனால் நான் வீட்டில் மாதம் ஐந்து நாள் தனியாக இருந்தாலே ஆச்சரியம். மற்ற எல்லா நாட்களும் பல்வேறு நகரங்களின் படப்பிடிப்புகளில் இருக்கிறேன். 



உங்கள் அப்பா வணிக விளம்பரங்களில் நடிப்பதை அறவே தவிர்த்தவர். ஆனால் நீங்கள் விளம்பரத் தூதுவராக ஆர்வம் காட்டுகிறீர்களே? 


 
அப்பாவின் முடிவு அவரது தனிப்பட்ட விஷயம். அதில் நான் தலையிட விரும்பவில்லை. ஆனால் நான் தயாரிப்பின் தரத்தைப் பார்க்கிறேன். நான் விளம்பரத் தூதுவராக ஒப்புக்கொள்ளும் தயாரிப்பை முதலில் நான் பயன்படுத்துவேனா என்பதைப் பார்த்தே ஒப்புக்கொள்கிறேன். அழகு சாதன க்ரீம் விளம்பரங்களை நான் அடியோடு தவிர்த்து வருகிறேன். பணத்தைக் கொட்டித் தருகிறோம் என்றார்கள். நான் மறுத்து விட்டேன். சிவப்பு நிறமாக மாறுவதுதான் அழகு என்று வரையறுப்பது எத்தனை முட்டாள்தனம்? நிறத்துக்கும் அழகாக இருப்பதற்கும் எந்தத் தொடர்பும் கிடையாது. அடிப்படையே தவறாக இருக்கும்போது எப்படி என்னால் ஒப்புக் கொள்ள முடியும்? 


நன்றி - த தமிழ் இந்து


  • N Kannan  from Chennai
    பல ஆண்டுகளுக்குமுன் நடந்த நிகழ்ச்சி. மதுரைக்கு அருகே ஓர் கிராமத்தில் ஓர் இளம் வயது விவசாயி, அவரை உங்கள் ஒட்டு யாருக்கு எனக் கேட்டேன்.. அவர் அம்மாவுக்குத்தான் என்றார். எதனால் அப்படி என்றேன். அவர் நீ அம்மாவைப் பார்த்திருக்கியா என்ன ஒரு சிவப்பு தெரியுமா என்றார். இந்த எண்ணம் இருக்கும் வரை சுருதி ஹாசன் சொல்லுவது யார் காதிலும் விழப்போவதில்லை. ஆனாலும் நமது மக்களும் அழகு சாதன உற்பத்தியாளர்களும் உண்மையை உணரவேண்டும் என்பதே எனது வேண்டுகோள்.
    2 days ago ·   (0) ·   (0) ·  reply (0)
  • skv  
    நிறமிகளின் செயலே கருப்பு சிவப்பு அமைவது , இதெல்லாம் பலருக்கும் புரியறதே இல்லே அதான் கொடுமை சில க்ரீம்கலின் விளம்பாரப்பாக்கும்ப்போது சிரிப்பாக வரும் திராவிடர்களின் நிறம் கருப்புத்தான் அதற்காக வெறுப்பு வேண்டாமே , என் வீட்டிலேயே நானும் என் அக்காவும் கருப்புத்தான் மற்றவர்கள் நல்ல நிறம் என் தந்தையபோல ஒன்னும் குறைவே இல்லே ஜாம்ஜாம்னு ஜாலியாகவே இருக்கோம் உள்ளம் வெள்ளையாக இருக்கணும் தோலின் நிறம் கண்டுக்கவே கூடாது
    2 days ago ·   (0) ·   (0) ·  reply (0)
  • N Kannan  
    "சிவப்பு நிறமாக மாறுவதுதான் அழகு என்று வரையறுப்பது எத்தனை முட்டாள்தனம்? " இதைப் படித்த பிறகாவது நமது பெண்களும் பெண்களை ஏமாற்றும் அழகுசாதன உற்பத்தியாளர்களும் திருந்துவார்களா?