Showing posts with label VIJAY. Show all posts
Showing posts with label VIJAY. Show all posts

Friday, August 09, 2013

தமிழ் நாட்டில் தலைவா இன்னைக்கு ரிலீஸா?

 

 

நடிகர் விஜய் நடித்த தலைவா படம் இன்று வெளியாகுமா? நேற்று இரவு வரை முடிவு ஏற்படவில்லை

Will Thalaivas film release today?
 சென்னை:நடிகர் விஜய் நடித்த, "தலைவா படத்தை வெளியிடுவதில், திடீர் சிக்கல் ஏற்பட்டுள்ளது. திட்டமிட்டபடி, தியேட்டர்களில் இன்று, "ரிலீஸ் ஆகுமா என்ற நிலை உருவாகி உள்ளது.

நடிகர் விஜய் - அமலா பால் நடித்துள்ள, "தலைவா படம், இன்று (9ம் தேதி) வெளியாக இருந்தது. தமிழகத்தில், 500 தியேட்டர்; உலக அளவில், 2,000 தியேட்டர்களில் வெளியிட ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. சென்னையில் மட்டும், 35 தியேட்டர்களிலும், திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டங்களில், 35 தியேட்டர்களிலும் படம் வெளியிட திட்டமிடப்பட்டது.
இந்நிலையில், நேற்று முன்தினம், சென்னை, மயிலாப்பூரில் உள்ள, "ஐநாக்ஸ் தியேட்டர் உட்பட, முக்கியமான, ஒன்பது தியேட்டர்களுக்கும், காஞ்சிபுரத்தில் உள்ள ஒரு தியேட்டருக்கும், "வெடிகுண்டு வைக்கப்படும் என, மிரட்டல் கடிதம் வந்தது; போன் மூலம் மிரட்டல்களும் வந்தன. இதனால், தியேட்டர்களுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது.இத்துடன், படத்தில் அரசியல் தொடர்பான காட்சிகள் அதிகம் உள்ளது  எனவும் தகவல் வெளியானது.
 உடன் நடிகர் விஜய், "படத்தில் அரசியல் தொடர்பான காட்சிகள் ஏதும் இல்லை; முழுக்க, முழுக்க ஜனரஞ்சக காட்சிகள் மட்டுமே படத்தில் இடம் பெற்றுள்ளது என, விளக்கமளித்தார்."படத்தின் கதை, எங்கள் குடும்ப கதை எனக்கூறி, திருநெல்வேலி மாவட்டத்தைச் சேர்ந்த ஒருவர் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். வரும், 14ம் தேதிக்குள் படத்தின் கதை குறித்து, படத்தின் தயாரிப்பாளர், இயக்குனர், வெளியீட்டாளர் பதில் அளிக்க வேண்டும் என, கோர்ட்  உத்தரவிட்டது.படத்திற்கு பல பிரச்னைகள் ஏற்பட்டதால், தியேட்டர் உரிமையாளர்கள் படத்தை வெளியிட தயங்கினர்; வினியோகஸ்தர்கள் அதிர்ச்சியடைந்தனர். தயாரிப்பாளர், வினியோகஸ்தர்கள் மற்றும் தியேட்டர் உரிமையாளர்களின் அவசரக் கூட்டம் சென்னையில் நடந்தது.

அதில் வியாபார ரீதியான பிரச்னை குறித்து பேசப்பட்டது. பிரச்னைகளை தீர்க்க தயாரிப்பாளரும், விஜய்யின் தந்தை எஸ்.ஏ.சந்திரகேசரனும் முயன்றனர். ஆனால்,  உடன்பாடு ஏற்படவில்லை.படத்திற்கு, சென்சார் அமைப்பு, "யு சர்ட்டிபிகேட் கொடுக்கப்பட்டிருந்தாலும், "கேளிக்கை வரி விலக்கு இன்னும் அளிக்கவில்லை என, தியேட்டர் உரிமையாளர்கள் போர்க்கொடி தூக்கினர். "வரி சலுகை கிடைக்காவிட்டால் படத்தை திரையிட மாட்டோம் என, சிலர் கூறினர்.இந்த சூழ்நிலையில், கேளிக்கை வரி விலக்கு வழங்கும் குழு, நேற்று மாலை, சென்னை, நுங்கம்பாக்கத்தில் உள்ள, "ப்ரிவியூ தியேட்டர் ஒன்றில், படத்தை பார்த்தனர். எனினும், கேளிக்கை வரி விலக்கு உண்டா என்பது  இன்று தான் தெரியும்.

"தலைவா படத்திற்கு நேற்று முன்தினம் முதல், டிக்கெட் முன்பதிவு துவக்கம் என, விளம்பரம் செய்யப்பட்டிருந்ததால், சென்னை தியேட்டர்களில் ரசிகர்கள் குவிந்தனர். ஆனால், டிக்கெட் வழங்கப்படவில்லை. "நாளை வாருங்கள் பார்க்கலாம் என, தியேட்டர் நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. தேவி தியேட்டர் வாசலில், "தலைவா படத்தின் முன்பதிவு தேதி பின்னர் அறிவிக்கப்படும் என, விளம்பர பலகை  வைக்கப்பட்டிருந்தது. சத்யம் தியேட்டர் வாசலில் அறிவிப்பு பலகை இல்லை. மாலை வரை ரசிகர்கள் காத்திருந்துவிட்டு, ஏமாற்றத்துடன் திரும்பினர்."தலைவா படம், ஆந்திரா, கேரளா, கர்நாடகா மாநிலங்களில் உள்ள தியேட்டர்களில், இன்று வெளியிட ஒப்பந்தம் செய்யப்பட்டு உள்ளது.
 ஆனால், நேற்று இரவு, 8:00 மணி வரை, வினியோகஸ்தர்கள் ஒப்புதல்  தெரிவிக்கவில்லை. அதேபோல், வெளிநாடுகளில் வெளியீடு உண்டா? என்பதிலும், தெளிவான விளக்கம் தரப்படவில்லை.படம் தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்திய சிலர், "இன்று பிரச்னை சரியாகிவிடும். உடனே படம் வெளியிடப்படும். அல்லது வெளியிடும் தேதி மாறும் என்றனர்.

 ஜெயலலிதாவை சந்திக்க விஜய்க்கு அனுமதி மறுப்பு : முதல்வர் ஜெயலலிதாவை சந்திக்க, நடிகர் விஜய்க்கு கொடநாட்டில் அனுமதி மறுக்கப்பட்டதால், ஏமாற்றத்துடன் திரும்பி சென்றார்.கொடநாட்டில் தங்கி, அரசு மற்றும் அரசியல் பணிகளை கவனித்து வரும், முதல்வர் ஜெ.,வை சந்திக்க, நேற்று காலை, 9:00 மணியளவில், நடிகர் விஜய், "தலைவா படத்தின் தயாரிப்பாளர் சந்திரபிரகாஷ் ஜெயின் மற்றும் சிலர் வந்தனர்.கெரடாமட்டம் பகுதியில், பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார், இவர்களது வாகனத்தை தடுத்து நிறுத்தி, கொடநாடு செல்ல அனுமதிக்கவில்லை.
 15 நிமிடங்களுக்கு பிறகு, கொடநாடு ஊராட்சி அலுவலகம் அருகே இருந்த போலீசாரிடம், "நாங்கள் முதல்வரை சந்திக்க அனுமதிக்க வேண்டும் என, விஜய், கோரிக்கை விடுத்தார்.இதன் பிறகு, முதல்வர் ஜெ.,யின் நேர்முக உதவியாளரை சந்திக்க, அனுமதி கொடுக்கப்பட்டது. கொடநாடு எஸ்டேட் அலுவலகம் சென்ற நடிகர் விஜய், முதல்வரின் நேர்முக உதவியாளரிடம் மனு கொடுத்து, ஏமாற்றத்துடன் திரும்பினார்.விஜய் கொடுத்த மனுவில், "தலைவா திரைப்படம் வெளியிடுவதற்காக பாதுகாப்பு அளிக்க வேண்டும் என, கூறப்பட்டு உள்ளது."முதல்வர் ஜெ., வரும், 12ம் தேதி சென்னை வரும்போது, உங்கள் பிரச்னைகள் குறித்து தெரியப்படுத்துங்கள்; நீங்கள் கூறிய தகவல்களை நாங்கள் சொல்லி விடுகிறோம் என, விஜயிடம் தெரிவித்ததாக கூறப்படுகிறது.

"தலைவா படத்திற்கு அரசு தரப்பிலும் நெருக்கடி?"நடிகர் விஜய் நடித்த, "தலைவா படம், இன்று வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், நேற்று சில மாவட்ட கலெக்டர்கள், நகரில் அரசியல் கட்சி பேனர்கள் தவிர, மற்ற பேனர்களை அகற்றும்படி, வருவாய் துறையினருக்கு உத்தரவிட்டுள்ளனர். காஞ்சிபுரம் மாவட்டத்தில், "அரசியல் கட்சி பேனர் தவிர, பொது இடங்களில் உள்ள, மற்ற பேனர்களை அகற்ற வேண்டும். அகற்றுவதற்கு முன்பும், அகற்றிய பின்னரும், அந்த இடத்தை புகைப்படம் எடுக்க வேண்டும். கட்டட உரிமையாளர் அனுமதி பெற்று, கட்டடங்களில் வைக்கப்பட்டுள்ள, பேனர்களை அகற்ற வேண்டாம் என, கலெக்டர் உத்தரவிட்டுள்ளார்
."தலைவா படத்தில், அரசை விமர்சித்து, சில வசனங்கள் இடம் பெற்றிருப்பதாக கூறப்படுகிறது. எனவே, படத்திற்கு நெருக்கடி கொடுப்பதற்காக, பேனர்களை அகற்ற உத்தரவு பிறப்பிக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.

இதுகுறித்து, வருவாய் துறை அதிகாரிகள் கூறுகையில், "பொதுவாக பேனர்களை அகற்றும்படி, கலெக்டர் உத்தரவிட்டுள்ளார். எதற்காக என்பது எங்களுக்கு தெரியாது என்றனர்.

thanx - dinamalar
 படம் பார்த்த ஃபாரீன் ட்விட்டர்ஸ்  போட்ட ட்வீட்ஸ்



  1. RT : சந்தானம் ஒன் லைனர் ஒகே! பட் சாம் ஆண்டர்சன்லாம் வர்றாப்ல....ம்ம்ம் காமெடி வறட்சி
  2. RT : Factory is our proffession. Dance is our passion. Vijay punch dialogue
  3. RT : Amala paul and suresh do not fit into police officers role at all. That's one wrong decision by director and vijay
  4. RT : Climax twist as ponvannan into villans friend is unwanted idea. Appreciate vijay just for his body fitness
  5. RT : At the age 39 or 40 vijay looks like 24 to 26 year old guy

Sunday, January 27, 2013

இணையத்தில் வரும் நெகட்டிவ் விமர்சனங்களை எப்படி எடுத்துக்குவீங்க?'' - விஜய் பேட்டி

http://www.southgossips.net/wp-content/uploads/2009/10/vijay-family-in-vikranth-marriage8.jpg
-
"பாலா, அமீர் படங்களில் நடிக்க ஆசை!"

விஜய் விறுவிறு
எம்.குணா
படம் : வி.செந்தில்குமார்
தேங்க்ஸ்ங்ணா... சினிமாவுல நான் பாட்டுக்கு ஓடிட்டே இருக்கேன். அப்போ நடிக்கிற படங் களைப் பத்தி மட்டும்தான் மனசுல நினைப்பு ஓடிட்டு இருக் கும். ஹீரோவா நடிக்க ஆரம்பிச்சு 20 வருஷமாயிருச்சுனு ஃப்ரெண்ட்ஸ் சொன்னப்போ, 'அட’னு சின்ன ஆச்சர்யமா இருந்துச்சு. சிறந்த நடிகனுக்கான விகடன் விருது அந்த ஆச்சர்யத்தைப் பெரிய சந்தோஷமாக்கிருச்சு!''- நெஞ்சில் கைவைத்துச் சிரிக்கிறார் விஜய். 'துப்பாக்கி’யின் 100 கோடி வர்த்தகம், அடுத்த படத்துக்கான எதிர் பார்ப்பை ஏகத்துக்கும் எகிறச் செய்திருக்கிறது.


''அந்த எதிர்பார்ப்பை ஒவ்வொரு நிமிஷமும் நான் உணர்றேன். பிசிக்கல் ஸ்ட்ரெய்ன், மென்ட்டல் ஸ்ட்ரெஸ்... இது இரண்டுமே சேர்ந்ததுதான் ஒரு நடிகனோட வாழ்க்கை. 'Life of an actor gets tough and tougher' சொல்வாங்க.
 ஒரு நடிகன் தன் இமேஜை, இடத்தைத் தக்கவெச்சுக்க, கஷ்டத்துக்கு மேல கஷ்டம் அனுபவிச்சே தீரணும். இருபது, முப்பது வருஷமா ஒரு நடிகனைத் தலைமேல தூக்கி வெச்சுக் கொண்டாடுற ரசிகர்கள் திடீர்னு அவனை வெறுக்க ஆரம்பிச்சா, அதுக்கு முழுக் காரணமும் அந்த நடிகன்தானே தவிர, ரசிகர்கள் கிடையாது. இந்த உண்மையைத்தான் இப்போ மனசுல ஓட்டிப் பார்த்துக்கிட்டே இருக்கேன்.''   
'' 'துப்பாக்கி’ 100 கோடி பிசினஸ் பண்ணும்னு எதிர்பார்த்தீங்களா?'' 


''இந்தியாவில் இந்தி பேசுற மக்கள் வாழும் மாநிலங்கள்தான் அதிகம். அதனால், இந்திப் படங்களான 'கஜினி’, 'தபாங்’ எல்லாம் 200 கோடியைத் தாண்டுறது சாதாரணம். ஆனா, தமிழ்ப் படமான 'துப்பாக்கி’ 100 கோடி வசூலிச்சது பெரிய விஷயம்தான். சினிமா பார்க்கிற ரசிகர்களின் எண்ணிக்கை வளர்ந் துட்டே இருக்கு. அவங்க ரசனையும் வேற பிளாட்ஃபார்முக்கு மாறிடுச்சு. அதனால இனி ரசிகர்களின் ரசனைக்கு ஏத்த மாதிரி படம் கொடுக்க வேண்டிய கட்டாயம் எங்களுக்கு. அப்படி அவங்களை ரசிக்கவெச்சா, 100 கோடி என்ன... 200 கோடியைக்கூட அள்ளிக் கொடுப்பாங்க.''


''இப்போதைய ஹீரோக்களில் யாரை உங்களுக்குப் பிடிச்சிருக்கு?''


''ஒவ்வொரு ஹீரோவும் ஒவ்வொரு ஸ்டைல்ல மிரட்டுறாங்க. என்னைப் பொறுத்தவரை எல்லாருமே பெஸ்ட்தான்!''


''சரி... அப்போ, இப்போ சினிமாவில் உங்களுக்குப் போட்டி யார்?''


''வேற யாரு... விஜய்தான்!''


''உங்களைப் பத்தி இணையத்தில் வரும் நெகட்டிவ் விமர்சனங்களை எப்படி எடுத்துக்குவீங்க?''


''ஜாலியான கமென்ட்ஸை எல்லாரையும் போல நானும் ரொம்பவே ரசிக்கிறேன். கடுமையான விமர்சனங்களில் இருக்கும் நியாயத்தை மட்டும் கவனிச்சு, என் அடுத்தடுத்த படங்களில் திருத்திக்கிறேன். பொதுவா, எல்லா ஹீரோக்களைப் பத்தியும்தான் சோஷியல் நெட்வொர்க்களில் கமென்ட் பண்றாங்க. ஆனா, தனிப்பட்ட பெர்சனல் தாக்குதலா,  அவங்க மனசைப் புண்படுத்துறது மட்டுமே நோக்கமா இருக்கும் விமர்சனங்கள்தான் நிறைய இருக்கு. அப்படியான விமர்சனங்களை நான் கண்டுக்கவே மாட்டேன்.''


''எந்தக் கேள்விக்கும் பளிச்னு பதில் சொல்லாம பெரும்பாலும் மௌனமாவே இருப்பது ஏன்?''


''தாய்மொழி தமிழ் மாதிரி, என்னோட இயல்பு மௌனம். எனக்குத் தெரிஞ்சு நிறையப் பேர் வார்த்தையைவிட்டு வாழ்க்கையைத் தொலைச்சு இருக்காங்க. வார்த்தை தடுக்கினால் வாழ்க்கை தடுக்கிடும்கிற உண்மை உணர்ந்தவன் நான். அதான் மௌனமா இருக் கேன்!''


''யார் இயக்கத்தில் நடிக்க ஆசை?''


''இதுவரை நான் நடிச்ச படங்கள் எதுவுமே பெரிய திட்டமிடல்கள் இல்லாமத்தான் நடந்துச்சு. ஆனா, இனி ஒவ்வொரு படத்தையும் அழகா, அம்சமா டிசைன் பண்ணணும்னு  நினைச்சிருக்கேன். பாலா, அமீர்... இவங்க ரெண்டு பேரோட ஒவ்வொரு படத்தையும் பார்த்து அசந்துபோயிருக்கேன். அவங்க படங்களில் நடிக்க ஆசையா இருக்கு.  சீக்கிரமே நடிப்பேன்.''


''குடும்ப வாழ்க்கை எப்படி இருக்கு?''


''சஞ்சய் இப்பதான் பிறந்த மாதிரி இருக்கு. அதுக்குள்ளே நெடுநெடுனு வளர்ந்து செவன்த் படிக்கிறார். பொண்ணு ஷாஷா, செகண்ட் ஸ்டாண்டர்டு. ஷூட்டிங் இல்லாதப்போ ரெண்டு பேரையும் ஸ்கூல்ல டிராப் பண்ணுவேன். எனக்கு பிரேக் கிடைக்கிறப்ப, எங்கேயாவது பிக்னிக் போகலாம்னு கேட்டா, பசங்க லீவு போட மாட்டேங்கிறாங்க. நான் எல்லாம் ஸ்கூலுக்குப் போக அவ்வளவு அடம்பிடிச்சு அழுவேன். ஆனா, சஞ்சய்... ஷாஷா ரெண்டு பேரும் குஷியாக் குதிச்சு ஆடிட்டு ஸ்கூலுக்குக் கிளம்புறாங்க. நான் வீட்ல இருந்தா, 'இன்னிக்கு ஒருநாள் லீவு போடுங்கப்பா... அப்பா உங்களை வெளியே அழைச்சுட்டுப் போறேன்’னு கேட்டா, 'செல்ல அப்பால்ல... ப்ளீஸ்... ப்ளீஸ்... ஸ்கூல் போயிட்டு வந்திடுறேன். அப்புறம் வெளில போகலாம்’னு நம்மளை மயக்கிட்டு ஓடிர்றாங்க. கடைசில நான்தான் வீட்ல வெட்டியா உக்காந்திருக்கிற மாதிரி ஃபீல் பண்றேன். செம பசங்க. வாழ்க்கையை ரொம்ப அர்த்தம்உள்ளதா ஆக்கிட்டாங்க!''


''காதலை ஏற்றுக்கொள்ளாத பெண் மீது ஆசிட் வீச்சு, மாணவி பலாத்காரம்னு நிறையச் செய்திகள் வருகின்றன. நீங்கள் நடிக்கும் படங்கள் மூலம், உங்கள் 'மக்கள் இயக்கம்’ மூலமா இளைஞர்களிடையே இந்த விவகாரம் தொடர்பா விழிப்பு உணர்ச்சி உண்டாக்கலாமே?''


''இளைஞர்களுக்கு என்னோட ஒரே வேண்டு கோள்... நம்ம வீட்டுப் பொண்ணுக்கு அப்படி ஒண்ணு நடந்தா எப்படி இருக்கும்னு யோசிச்சுப் பார்த்தாலே, உங்க மனநிலை நிச்சயம் மாறும். சில நிமிஷ சபலத்தால் உங்க வாழ்க்கையைப் பாதிக்கவிடாதீங்க... உங்களுக்குக்கூடப் பிரச்னை இல்லை... நீங்க பாட்டுக்கு ஜெயில்ல மூணு வேளை சாப்பிட்டு, பொழுதைப் போக்கிருவீங்க. 




ஆனா, அப்புறம் உங்க அம்மா, அப்பாவைக் கொலைகாரனைப் பெத்தவங்கன்னும், அக்கா, தங்கச்சியைக் கொலைகாரன்கூடப் பொறந்த வங்கன்னும் சுத்தி நிக்கிறவங்க அவமானப் படுத்துவாங்க. அதை யோசிச்சுப் பாருங்க... குழந்தைப் பருவம், பள்ளிப் பருவம், முதுமை மாதிரி இளமைப் பருவமும் நம்ம வாழ்க்கையில் ஒரு அத்தியாயம்தான். அதை மத்தவங்களுக்கு எந்தத் தொந்தரவும் கொடுக்காம அனுபவிங்க.  நாட்டுக்கும் வீட்டுக்கும் நாம செய்ய வேண்டிய நல்ல காரியங்கள் எவ்வளவோ இருக்கு... அதை மட்டும் மனசுல வெச்சுக்கங்க!''


நன்றி - விகடன்


https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEh6KMstq-jg8QYayHk6MsUaI3dGcuhvDsTlAAS-6KWlqju7b1tKdKMJsmspUHLxt982VP0AKW8G4z0qnnsMtjMRKaWtqo98ASZ1G27yBv_h7JtszzyNQrzd7S52AXUz93VhxQ28-QlhC7w/s1600/Vijay_Sangeetha_Family_05.jpg

Saturday, December 08, 2012

நடிகைகள் சமூக வலைத்தளங்களில் இருந்தா..... - நடிகை அமலா பால் பர பரப்புப்பேட்டி

http://moviegalleri.net/wp-content/gallery/amala-paul-hot-in-red-saree/amala_paul_hot_in_transparent_red_saree_stills_-1625.jpg 


அமலாபால் பேட்டி

விஜய் பேசறதே அபூர்வம்!

ராகவ்குமார்

அமலாபால் பார்ப்பதற்கு முன்பைவிட அழகாகவும், இளமையுடனும் இருக்கிறார். சமீபத்திய போட்டோ ஷூட்களில் கிளாமராகவும், மாடர்னாகவும் இருக்கிறார். கொஞ்ச காலமாக மீடியாக்களில் பேசப்படாமல் இருந்தவர் மறுபடியும் கோடம்பாக்கத்தில் முகாமிட்டிருக்கிறார். பேச ஆரம்பித்தால் சின்னப் பொண்ணா இது என்று ஆச்சர்யப்படும் அளவுக்குப் பேசுகிறார்.
வாய்ப்பு குறைவதால் கிளாமர் பக்கம் திரும்பிட்டீங்களா?
கிளாமரா நடிக்கறதால மட்டும் எந்த ஒரு இயக்குனரும் வாய்ப்பு தரமாட்டார். இந்த நடிகையால் இந்த கேரக்டரை செய்ய முடியும் என்ற நம்பிக்கை வந்தால் மட்டும் தான் வாய்ப்பு கிடைக்கும். மைனாவில் வில்லேஜ் கேரக்டரில் வந்ததால், அந்தப் பாதிப்பில் நிறையபேர்அமலா நீங்க கிளாமரா பண்ணுவீங்களான்னு ஆச்சர்யமா கேட்கறாங்க. நான் சினிமாவில் வர்றதுக்கு முன்னாடி மாடலிங்கில் இருந்தேன். எனது லைஃப் ஸ்டைல் மாடர்னாகத்தான் இருக்கும். அடிப்படையில் நான் மாடர்னான பொண்ணு. ஒரு நடிகையாக எல்லாவித கேரக்டரிலும் செய்யணும்ன்னு நினைக்கிறேன். இதில் கிளாமரும் ஒன்று. மத்தபடி வாய்ப்புக்காக கிளாமர் பக்கம் திரும்பலை."
அப்புறம் ஏன் இந்த இடைவெளி?

இந்த வருஷ ஆரம்பத்தில் நிறைய படங்கள் நடிச்சதால, ஏற்பட்ட ஸ்ட்ரெசில் உடம்பு சரியில்லாம போச்சு. ஸோ, நிறைய படங்களில் கமிட் பண்ண முடியலை. சினிமாவில் நடிச்சாலும் படிப்புமேல எனக்கு ஈடுபாடு அதிகம். நான் படிச்சுக்கிட்டிருந்த பி.. கம்யூனிகேட்டிவ் இங்கிலீஷ் கடைசி செமஸ்டர் எக்ஸாமை சமீபத்தில்தான் எழுதினேன். நடுவில் படிக்கப் போய்ட்டேன். தெலுங்கில் ராம்சரண், அல்லுஅர்ஜுன், மலையாளத்தில் மோகன்லால் இவங்களோட நடிச்சிட்டு, இப்போது ஜெயம் ரவியுடன்நிமிர்ந்து நில்’, விஜய்யுடன் பெயரிடப் படாத படங்களிலும் நடிக்கிறேன். என்னை நடிகையா உலகத்துக்குக் காட்டிய தமிழ் சினிமா எனக்கு தாய்வீடு மாதிரி."
ஏன் மீடியாவை விட்டு ஒதுங்கியே இருக்கீங்க?
சும்மா பப்ளிசிட்டிக்காக மீடியாவில் வந்து பேசறதில் எனக்கு உடன்பாடு இல்லை. என் படங்கள் வரும் போது கண்டிப்பாக மீடியாவில் வருவேன். இப்ப எனது படங்கள் வரப் போகுது. உங்ககிட்ட பேசிக்கிட்டிருக்கேன். மீடியாவை விட்டு ஒதுங்கி இருக்க முடியாது. மீடியா இல்லாமல் நான் இல்லை."
விஜய்கூட என்ன பேசுனீங்க...

விஜய் பேசறதே அபூர்வம். பேசினாலும் கொஞ்சமாத்தான் பேசுவார். இளையதளபதின்னு நிறைய பேர் கொண்டாடற ஒரு ஸ்டார் இவ்வளவு அமைதியா, ஆர்ப்பாட்டம் இல்லாம இருக்கறதை பிரமிச்சுப் பார்த்தேன்."
சமீபத்தில் காலேஜ் முடிச்சிருக்கீங்க... காலேஜ் லைஃப் எப்படியிருந்தது?
நான் படிச்சது லேடிஸ் காலேஜ். அதனால கேம்பஸில் காதல் அனுபவங்கள் எதுவும் இல்லை. ஆனாலும் எனக்கு லவ் எக்ஸ்பீரியன்ஸ் இருக்கு. அதெல்லாம் குழந்தைத்தனமா சின்ன வயது லவ். இப்ப சினிமாவை மட்டும்தான் லவ் பண்றேன். இந்த வருஷ வாலண்டைன்ஸ் டே அன்னைக்கு என் வீட்டுக்கு நிறைய கிஃப்ட் அயிட்டங்கள் எனக்கு லவ்வைச் சொல்லி வந்தன. ஒரு நடிகையாக வந்த பின்பும், பிரமிப்பா பார்க்காம ஒரு சாதாரண பொண்ணுக்கு வர்ற மாதிரி இத்தனை லவ் லெட்டர் வந்தது சந்தோஷமாக இருந்தது."
ஒரு நடிகையாக ஃபேஸ்புக், டிவிட்டர் போன்ற சமூக வலைத்தளங்களில் இருக்கறது சரியா?

நடிகையாகவும், சாதாரண பொண்ணாகவும் இது மாதிரி சோஷியல் நெட்வொர்க்கில் இருக்கறது தப்பு கிடையாது. பொண்ணுங்களுக்கு நிறைய விஷயங்களைத் தெரிஞ்சுக்க முடியுது. என் நடிப்பைப் பத்தி சொல்லக்கூடிய கமெண்ட்ஸ் எனக்கு பயனுள்ளதாக இருக்கும். நான்காவது படிக்கிற பசங்ககூட சோஷியல் நெட்வொர்க்கில் இருக்காங்க. சின்னக் குழந்தைகள் இதை யூஸ் பண்றப்ப பேரண்ட்ஸோடு கன்ட்ரோல் கண்டிப்பாக இருக்கணும். சின்மயிக்கு நடந்தது மோசமான கசப்பான அனுபவம். சைபர்கிரைம் சட்டங்கள் இன்னும் கடுமையாக இருக்கணும். என்னிடம் ஆபாசமாகவோ, மோசமாகவோ யாரும் கமெண்ட் பண்ணியதில்லை."
உங்களுக்குப் பிடிச்ச பையன் எப்படி இருக்கணும்?
பெண்களை மதிக்கக்கூடியவனா இருக்கணும்."
சாப்பாட்டில் உங்களுக்குப் பிடிச்சது?
முப்பொழுதும் உன் கற்பனைகள்ஷூட்டிங்குக்காக வெளிநாடு போனப்ப நிறைய சாப்பிட்டு உடம்பு முடியாம போயிடுச்சு. சாப்பாட்டில் இது அதுன்னு பாரபட்சம் பார்க்கமாட்டேன். ஹைதராபாத் போனா பிரியாணி, சென்னை வந்தா பொங்கல்னு எல்லாத்தையும் ஒரு பிடி பிடிப்பேன்."
உங்களிடம் எது அழகு?
நீங்க எல்லோரும் சொல்ற மாதிரி என் கண்கள்!"
எப்ப கல்யாணம்?
இப்பதான் எனக்கு 21 வயசு. கல்யாணத்துக்கு மெதுவா பையனைப் பார்க்கலாம்."


நன்றி - கல்கி  



http://www.teluguwave.in/wp-content/gallery/amala-paul-latest-hot-stills/amala-paul-latest-hot-stills-10.jpg