Showing posts with label நெல்லை. Show all posts
Showing posts with label நெல்லை. Show all posts

Tuesday, June 21, 2011

திருநெல்வேலி அல்வாடா.. வடை வாங்கி செல்வாடா.. நெல்லை பதிவர் சந்திப்பு பாகம் 2



நெல்லை பதிவர் சந்திப்பு பற்றி பேச ஆரம்பிக்கும்போதே ஆன் லைன் -ல் அனைவரும் அந்த சந்திப்பை காண வேண்டும் என்ற அளப்பரிய ஆர்வம் இலங்கை அலப்பறை மன்னன் நிரூபனுக்கு இருந்தது.. பதிவர் சந்திப்பு அன்று அவர் ஆஃபீஸ்க்கு லீவ் போட்டுட்டு வீட்ல காத்துட்டு இருந்தார்..


யார் செய்த பாவமோ,அண்ணன் உணவு உலகம் போன ஜென்மத்துல  எந்த ஃபிகரை ஏமாத்தி சாபம் வாங்குனாரோ ஹோட்டல்ல நெட் ஒர்க் ஆகலை..

என்னென்னமோ முயற்சி செஞ்சு பார்த்தோம், முடியலை.. நிரூபனை ஒரு வழியா சமாதானப்படுத்திட்டு  பதிவர் சந்திப்பு  கூட்டம் ஆரம்பம் ஆச்சு..


எல்லாரும் அவங்கவங்களைப்பற்றி ஒரு வரி அறி முகம்..

பெயர் சொல்ல விருப்பம் இல்லை (ஹூம் இப்படி ஒரு பிளாக்கர் பேரா/) ஆள் செம காமெடியா இருந்தார்.. கன்னிப்பொண்ணுங்க பொதுவா பசங்களுக்கு என்ன சாத்துவாங்களோ அதை நெற்றில இட்டிருந்தார் .. ( அதாங்க நாமம்)

ரசிகன் ஷர்புதின் அப்பாஸ் மாதிரி இருந்தார்.. ( தனி மெயில்ல அஜித் மாதிரி தான் இருக்கறதா போடனும்னு மிரட்னாரு.. )

மேலும் ஒவ்வொருத்தர் பற்றியும் வர்ணிக்கறதுக்குள்ள  புரோக்ராம் ஸ்டார்ட் ஆகிடுச்சு..

லேப்டாப் மனோ பேசறான் (ர்),அருகில் அண்ணன் உணவு உலகம்,வலைச்சரம் சீனா ,பலாபட்டறை சங்கர், அப்பாஸ் ரசிகன் ஷர்புதீன்


நிகழ்ச்சியின் 2 வது கட்டமா கோபி காதல் மன்னன் கோமாளி செல்வா  கதை விடும் நேரம்.. ( கோபி மாவட்டம் பாரியூர் என்ற ஊரில் மட்டும் எங்கள் தங்கத்தலைவன் செல்வாவுக்கு 3 காதலிகள் ஹி ஹி .. அந்த ஃபிகர்களோட ஃபோட்டோ வேண்டுபவர்கள் செல்வாவிடம் தனி மெயிலில் கேட்டுப்பெற்றுக்கொள்ளவும்,.. )


கோமாளி செல்வாவைப்பற்றி ஒரு அறிமுகம்,, அவர் பிளாக் உலகில் உள்ள மிக முக்கியமான நகைச்சுவை எழுத்துக்கு சொந்தக்காரர்..செல்வா கதைகள் என அவர் எழுதி வருவது முல்லா கதைகளுக்கு இணையானது..  இவர் பத்திரிக்கை உலகை கலக்கும் நாள் வெகு தொலைவில் இல்லை.. இவர் இப்போதே ட்விட்டர் அக்கவுண்ட்டில் பின்னிட்டு இருக்கார்.. ஆனந்த விகடனில் 5  ட்வீட்கள் வந்துள்ளது..இவர் என்னை விட வயதில் குறைந்தவராக இருந்தாலும் திறமையில்,நகைச்சுவையில் ,பழகும் பண்பில்,கண்ணியத்தில் மிக மிக உயர்ந்தவர்.. 


கோமாளி செல்வா மீது நான் நல்ல மரியாதை வைத்திருக்கிறேன். ஆனால் அவர் கதையை படிக்க உங்கள் சுவராஸ்யத்துக்காக அவரை செந்திலாகவும் , என்னை கவுண்டமணியாகவும் கற்பனை செய்து கொள்க.. இந்த உரையாடலில் ஏற்படும் மரியாதைக்குறைவான வசனங்களுக்கு மன்னிக்கவும்..செல்வாவின் குடும்பத்தார்கள், அவரது நண்பர்கள் ,அவரால் கழட்டி விடப்பட்ட, இனி கழட்டி விடப்போகிற காதலிகள் அனைவரும் என்னை மன்னிக்கவும்.. ஹி ஹி



எல்லோருக்கும் வணக்கம். எனக்கு இந்தக் கதையை எப்படி ஆரம்பிக்கிறதுனே தெரியல. 

 சி.பி - அப்போ ஆரம்பிக்காதே.. நாங்க தப்பிச்சுக்கறோம்.. 


காரணம் என்ன விட பெரிய பெரிய எழுத்தாளர்கள் எல்லாம் இருக்கீங்க. அந்த பயம்தான். அதுவும் இல்லாம இது ஒரு மொக்க கதை.

 சி.பி- ஒரு மொக்கைப்பையன் கிட்டே இருந்து வேற எதை எதிர்பார்க்க முடியும்?


தயவு செஞ்சு கோபப்பட்டுறாதீங்க. சீக்கிரமே முடிச்சிடறேன்.

 சி.பி - கதையையா? எங்களையா? 

கூடவே இத நான் பேச்சு வழக்குல இல்லாம உரைநடை வழக்குல சொல்லப்போறேன். அது எப்படி இருக்குனு நீங்க கேட்டு முடிச்சதுக்கு அப்புறம் சொல்லுங்க!

சி.பி - உயிரோட இருந்தா சொல்றோம்.. 


நீங்கள் இந்தப் பதிவர் சந்திப்பிற்கு மன்னிக்கவும் நண்பர்கள் சந்திப்பிற்கு வரும்போது பூனை குறுக்கே செல்லுதல் போன்ற சகுனங்கள் ஏற்ப்பட்டு அது மூட நம்பிக்கை என்று உதாசீனப்படுத்திக்கொண்டு வந்திருந்தால் நான் சொல்லப்போகும் இந்தக் கதை உங்களின் அந்த எண்ணத்தை மாற்றிவிடும்.

சி.பி - பூனை குறுக்கே வர்லை.. ஒரு யானை தான் குறுக்கே வந்துச்சு.. லேப் டாப் மனோ.. தான் மப்புல  குறுக்கே வந்தான்.. ஹா ஹா 


முதலில் உங்களுடன் சிறு கேள்வி ஒன்று இருக்கிறது. உங்களில் யாருக்கேனும் இன்று காலை சூரியன் உதித்ததிலிருது இப்பொழுதுவரை எத்தனை நாளிகைகள் ஆகியுள்ளன என்று துல்லியமாகத் தெரியுமா ?


சி.பி - நாளிகையா? நாழிகையா? டவுட்டு/....

உங்களுக்குத் தெரியாதென்பது எனக்குத் தெரியும். உண்மையைச் சொல்லப்போனால் எனக்கும் அதுபற்றித் தெரியாது.


சி.பி - அடங்கொய்யால.. உனக்கும் தெரியாதா> அப்புறம் என்ன இதுக்கோசரம் என்னை கேட்டே? 

இன்னொரு முக்கியமான செய்தி என்னவென்றால் நாளிகைக் கணக்கிற்கும் நமது கதைக்கும் எந்தவித சம்பந்தமும் இல்லையென்பதே. ஆகையினால் நாம் கதையைத் தொடரலாம். கதையின் சில இடங்களில் புயல் , மழை வருமென்பதால் எல்லோரும் தயவு செய்து உங்களது குடைகளைக் கையுடன் எடுத்துக்கொள்ளுங்கள்.

 சி.பி - குடையை கையில் எடுத்த வை கோ வுக்கு  நேர்ந்த கதி எங்களுக்கும் வரனுமா? 



சுமார் 2100 வருடங்களுக்கு முன்னர் தமிழ் பீட்டர் என்றொரு குறுநில மன்னன் இருந்தான் என்று உங்களுக்குத் தெரியுமா ? தெரிந்திருக்க வாய்ப்பில்லை. ஏனெனில் உங்களில் யாரும் 2100 வருடங்களாக வாழ்ந்துவருபவர்களாகத் தெரியவில்லை.

சி.பி - இந்த கூட்டத்துலயே  கோவை டாக்டர் கந்த சாமியும்,உணவு உலகம் அண்ணனும் தான் சீனியர்ஸ்.. நீ எல்லாரையும் விட சீனியர் போல..

இருந்தாலும் நான்தான் திருவள்ளுவரின் வகுப்பாசிரியர் என்றும் நான் கணிதப்பாடம் நடத்தியதால் வெறுத்துப்போன திருவள்ளுவர் திருக்குறளை இயற்றினார் என்றும் உங்களில் யாரேனும் எழுந்து நின்றோ அல்லது உட்கார்ந்து கொண்டோ சொல்ல வாய்ப்புள்ளது என்ற அச்சத்தால் அந்த மன்னன் எனது கற்பனையில் வந்தவன் என்பதையும் கூற விழைகிறேன்!

 சி.பி - முப்பொழுதும் உன் கற்பனைகள் ஏன் இவ்வளவு கேவலமா இருக்கு..? நாயே... நாயே.. 


கோபியின் காதல் மன்னன் எங்கள் அண்ணன் கோமாளி செல்வா ,வம்பை விலைக்கு வாங்குவோம்ல மணிவண்ணன்
( கூலிங்க் கிளாஸை மறந்துட்டு வந்துட்டாராம்.. )

தமிழ் மன்னனுக்கு அதுவும் 2100 ஆண்டுகளுக்கு முந்தய மன்னனுக்கு எப்படி தமிழ் பீட்டர் என்றொரு ஆங்கிலப்பெயர் வந்தது என்கிற உங்களின் சந்தேகம் நியாயமானதாக இருந்தாலும் இல்லாவிட்டாலும் நான் அதற்கான காரணத்தை நள்ளிரவு 12 மணிவரை விழித்திருந்து எழுதித் தொலைத்துவிட்டதால் மன்னிக்கவும் எழுதி கையுடனே கொண்டுவந்திருப்பதால் நீங்கள் கேட்டுத்தான் ஆகவேண்டும்.

சி.பி - என்ன? கலைஞரை சோனியா மிரட்டி 63 சீட் வாங்குன மாதிரி மிரட்றே? 

அதிக தமிழர்கள் உள்ள இடத்தில் தேவையில்லாமல் ஆங்கிலத்தில் பேசுபவரை நாம் பீட்டர் விடுறான் என்று சொல்கிறோம். அதைப்போலவே நமது மன்னர் ஒரு சமயம் அரசு வரிப்பணத்தில் வெளிநாட்டைச் சுற்றிப்பார்க்காவிட்டால் தான் மன்னராயிருப்பதற்கே தகுதியற்றவர் என்ற என்று நினைத்ததால் இங்கிலாந்தைச் சுற்றிப்பார்க்கச் சென்றிருந்தார்.

சி.பி - அட பொழப்பு கெட்ட மன்னா.. மன்னர்னா அந்தப்புரத்தை சுத்திப்பார்க்கனும்.. 

அப்பொழுது இங்கிலாந்தில் பிறந்த இரண்டுவயதுக் குழந்தை கூட ஆங்கிலத்தில் பேசுவதைக் கண்டு ஆச்சர்யப்பட்டார். அந்த நேரத்தில் அங்கு வந்த ஒரு வாலிபன் நமது மன்னரிடம் சில கேள்விகளைக்கேட்டன். மன்னரும் எவ்வளவோ முயன்றும் வாயில் வார்த்தைகளே வரவில்லை. அவருக்கு ஆங்கிலம் தெரியாதுதான் காரணம் என்று நீங்கள் நினைத்தால் அதற்கு நான் பொறுப்பல்ல.


சி.பி - டேய் டேய்.. சீக்கிரம் மேட்டருக்கு வாடா.. பொறுப்பல்ல பருப்பல்லன்னு என்னடா இழுவை.. 

ஏனெனில் என் குலதெய்வத்தின் மீது சத்தியமாகச் சொல்கிறேன் நான் அவரை ஆங்கிலம் கற்க வேண்டாமெனச் சொல்லவேயில்லை. சரி கதைக்கு வருவோம்.


சி.பி - உன் குள தெய்வம்  அடச்சே... குல தெய்வம் ஹன்சிகா மோத்வாணி தானே?

பதிலேதும் பேசமுடியாமல் நின்றிருந்த நம் மன்னர் திடீரென தமிழில் பேச ஆரம்பித்தார். மன்னர் பேசியது அந்த இளைஞருக்கோ அல்லது அந்த இளைஞர் பேசியது நம் மன்னருக்கோ புரியவில்லை.

சி.பி - இப்போ நீ பேசறது  மட்டும் எங்களுக்குப்புரிஞ்சிடுச்சாக்கும்.. நாயே நாயே..

எனவே ஆங்கிலம் அதிகம் பேசுவோர் இருக்கும் இடத்தில் தமிழில் பேசியதால் நம் மன்னரின் பெயர் அன்றிலிருந்த தமிழ் பீட்டர் என்றானது.


சி.பி - வேட்டிப்பேச்சு சித்ராவை நக்கல் அடித்ததற்காக எனது கடும் கண்டனங்கள் ஹி ஹி நாங்களும் கோர்த்து விடுவோமில்ல. ஏஹே ஹேய்  

மன்னரின் பெயர்க்காரணத்திற்கே இவ்வளவு நேரம் ஆகிவிட்டபடியால் விரைவில் இந்தக் கதையை முடிக்க முயற்சிக்கிறேன்.

சி.பி - உன்னை முடிச்சா போதும் ,கதை உடனே முடிஞ்சிடும்.. 


சிறிது நாட்களுக்குப் பிறகு இங்கிலாந்து சுற்றுப்பயணத்தை முடித்துக்கொண்டு நாடு திரும்பிய மன்னருக்கு பெரிய அதிர்ச்சி காத்திருந்ததது.

 சி.பி - ஏன் பட்டத்து ராணி குப்பத்து கோபால் கூட ஊடிப்போயிடுச்சா?

அது என்ன அதிர்ச்சி என்று தெரிந்துகொள்ள சிறிய விளம்பர இடைவேளை விடலாம் என்றிருந்தேன். விளம்பரத்திற்காக நான் பட்ட இன்னல்கள் கொஞ்சம் நஞ்சமல்ல. சில சோப்பு நிறுவனங்களிடமும், எங்கள் ஷாம்பூ போட்டு பல்லு விளக்கினால் பற்களில் கூட முடி முளைக்கும் என்று விளம்பரம் செய்யும் விளம்பரக் கம்பனிக்காரர்களிடமும் எனது கதைக்கு நீங்கள் ஸ்பான்சர் செய்யுங்கள் என்று நீண்ட நேரம் போராடினேன். பலனில்லை . அவர்கள் சொன்ன ஒரே பதில் மானாடி , மயிலாடி கெமிஸ்ட்ரி வந்தால்தான் நாங்கள் ஸ்பான்சர் செய்வோம் என்றதுதான்.

சி.பி - கலைஞர் டி வியை நக்கல் அடிக்கற அளவு பெரிய ஆள் ஆகிட்டயா ராஸ்கல். இதுக்கு தண்டனையா கலா மாஸ்டரை க்ளோஸப்ல மேக்கப் இல்லாம ஒருக்கா, ஃபுல் மேக்கப்போட மறுக்கா காட்டனும்டா..  (ஒருக்கா ,மறுக்கா ,கலாக்கா அடடே நானும் கவிஞன் ஆகிடுவேன் போல இருக்கே... ஹூம் நம்ம முதல் கவிதையே கலாபூர்வமா அமைஞ்சிடுச்செ..?)

படிக்கும் காலத்திலிருந்தே நானும் கெமிஸ்ட்ரியும் ஒரே நேர்கோட்டில் ஆனால் எதிர் எதிர் திசைகளில் பயணித்ததால் அவர்கள் கேட்டது போல எனது கதையில் கெமிஸ்ட்ரி வராது என்பதால் விளம்பரம் தேடும் எனது முயற்ச்சியைக் கைவிட்டுவிட்டேன்.

 சி.பி - கோபில இருக்கற கெமிஸ்ட்ரி டீச்சர் ஏன் ரிசைன் பண்ணீட்டாங்கன்னு இப்போத்தான் தெரியுது.. பாப்பா எங்கே போனாலும் எதிர்க்கவே அதாவது எதிர் திசைலயே வந்தா எப்படிய்யா?

அதே போல தொடரும் என்று போடுவதற்கு இது ஒன்று தொடர் நாடகமில்லை என்பதால் மறுபடியும் கதையைத் தொடர்கிறேன்.

நாடு திரும்பிய நம் மன்னருக்கு காத்திருந்த பெரிய அதிர்ச்சி என்னவென்றால் வெளிநாடு சென்று வந்த தினத்தன்று மன்னர் அகோரப் பசியிலிருந்தார். அதனால் அன்று பல்லுவிலக்குவதைக் கூட இரு தினங்களுக்கு ஒத்திப்போட்டுவிட்டு நாட்டில் யாருமே பல்லு விளக்கக்கூடாது என்ற சட்டத்தையும் போட்டுவிட்டு பந்தியில் அமர்ந்தார்.

சி.பி - அய்யய்யோ ,ரமேஷ்க்கு ஆபத்தாச்சே.. அவர் பல் துலக்காம சாப்பிட மாட்டாரே?ஓ சி சாப்பாடுன்னா மட்டும் விதி விலக்கு உண்டு.. 


அப்பொழுது என்னைத் தொடாதே என்றொரு சத்தம் கேட்டது.

சி.பி - தம்பி . இது பதிவர் சந்திப்பு , லேடீஸ் எல்லாம் இருக்காங்க.. இது அட்ராசக்க பிளாக் கிடையாது.. எது வேணாலும் சொல்லலாம்கறதுக்கு அடக்கி வாசி அமுக்கி வசி.. 


அதிர்ச்சியில் உறைந்துபோன மன்னர் அந்த சத்தம் இலையில் வைத்திருந்த பச்சியிலிருந்து வருவதைக் கண்டு ஆச்சர்யப்பட்டார்.. மன்னரின் அகோரப்பசி அந்தப் பச்சி சொல்வதைக் கேட்காமல் இரண்டு பச்சிகளை எடுத்து அப்படியே விழுங்கிவிட்டார்.

அப்பொழுது இலையிலிருந்த இன்னொரு பச்சி சொன்னது " பல்லு விளக்காமல் எங்களைச் சாப்பிட்டதால் எதிர்காலத்தில் சான்றோர்களின் முன்னிலையில், உன்னைவிட அறிவாளிகளின் முன்னிலையில் நீ ஒரு மொக்கைக் கதை சொல்வாய் அதற்காக பயந்து நிற்பாய் " என நான் சாபம் அளிக்கிறேன் என்று வாயை மூடுவதற்குள் மன்னர் அந்தப் பச்சியை தனது வாயில் போட்டு மூடிவிட்டார்.

அந்தப் பச்சியின் சாபம் நிறைவேறாது என்று கர்வத்தில் இருந்த நமது மன்னர் சில தினங்களில் இறந்து விட்டார்.ஆனால் நல்லோரின் சாபம் ஊழ்வினை உறுத்துவந்து ஊட்டும் என்கிற சிலப்பதிகார சொற்களை ஞாபகப்படுத்த வைத்துவிட்டது இப்பொழுது! ஆம் அந்த பச்சி சொன்ன சான்றோர்கள் நீங்கள்தான் , பின்னர் அந்த மன்னர் யாரென்று நீங்களே ஒரு முடிவிற்கு வாருங்கள்!


சி.பி - இது தெரியாதா? எங்க பண்ணையார் அண்ணன் ராசலீலா ராசேந்திரன் தான் ,ஏன்னா அவரு தான் 5 செல் ஃபோன் வெச்சிருக்காரு.. செல் ஃபோனே 5 வெச்சிருக்காரே..   சரி சரி அண்ணன் பப்ளிக் பப்ளிக்னு கண் அடிக்கிறார்... விட்ருவோம்.. 



அதற்கு முன்னர் நான் முதலில் கூறியது போல இந்த கதையில் மழை , புயல் வராததற்குக் காரணம் நீங்கள் யாரும் குடை எடுத்துக்கொண்டு வரதாதால் மழை வந்து அதனால் நம் மன்னருக்கும் நாட்டிற்கும் ஏற்பட்ட தீமைகளால் நான்கு நாட்கள் தொடர்ந்து எழுதிய எனது கதையின் நானூற்றி ஐந்தாயிரம் பக்கங்களை உங்களுக்கு சொல்ல முடியாமல் போனது கண்டு வருந்துகிறேன்.

மேலும் முதலில் சொன்னது போல இதில் சகுனங்களை நம்புவீர்கள் என்று சொல்லியிருந்தேன். அதற்குக் காரணம் இந்தக் கதையை கேக்குறதே கெட்ட விசயம்தானே! இப்ப சகுனத்த நம்புரீங்கள்ள :-)


சி.பி -சகுனத்தை நம்பவே முடியாது.. சில சமயம் என்னைப்பார்த்து சிரிப்பா.. சில சமயம் முறைப்பா.. எதிர் வீட்டு ஃபிகர் சகுனத்தை பத்தித்தானே  பேசறே.. ? ஆனா சற்குணத்தை நம்பலாம் .. களவாணி என செம ஹிட் படம் கொடுத்தாரே..?


தமிழ்வாசி பிரகாஷ்,வெறும்பய ஜெயந்த் ( ஜோதி புகழ்)


அடுத்து என் உரை. இதுவரை காமெடியாக போய்ட்டு இருக்கற பதிவு இப்போ கொஞ்சம் சீரியஸ் ஆகப்போகுது..

ஏன்னா வலை உலகில் என்னை குறி வைத்து தாக்கப்படும் பதிவுகள் ,விமர்சனங்களுக்கு நான் நேரடி பதில் அளிக்கப்போகிறேன்.. வித் அவுட் எனி சென்சார்.. ...  கொஞ்சம் ரிலாக்ஸ் பண்ணிக்கறேன்.. ஏன்னா கலர் டோன் மாறுது.. அதுவரை  குட்டி பிரேக்..  (குட்டி = சின்னதா) #நோ டபுள் மீனிங்க் ப்ளீஸ் ஹி ஹி 


டிஸ்கி 1 - இந்தப்பதிவில் வரும் செல்வாவைப்பற்றிய மரியாதைக்குறைவான வார்த்தைகள் பதிவின் நகைச்சுவையை கூட்டவே.. யார் மனதாவது புண்பட்டால் மன்னிக்கவும்.. இப்படிக்கு ஒவ்வொரு பதிவிலும் மன்னிப்பு கேட்பதையே பொழப்பாக வைத்திருக்கும் ஒரு மானங்கெட்ட அடச்சே மானமிகு  பதிவர் ...ஹி ஹி 


டிஸ்கி 2 - படங்கள் உதவி ஸ்மைலி ராணி & அழுகாச்சி காவியம்  கல்பனா ராஜேந்திரன் (பெயர்க்காரணம் பாகம் 4 -ல்) மற்றும் உணவு உலகம் அண்ணன் ராசலீலா ராஜேந்திரன்.. (இவரைப்பற்றி ஒரு கில்மா மேட்டர் பாகம் 5 -ல் )




தொடரும்.........

Monday, June 20, 2011

நெல்லை பதிவர் சந்திப்பும்,நான் வாங்கிய பல்புகளும்


ஜூன் மாசம் 17ம் தேதி வெள்ளிக்கிழமை அன்னைக்கு திருநெல்வேலியில் பதிவர் சந்திப்பு நடந்தது.

ஜூன் 16 நைட் 10 மணிக்கு ஈரோடு ரயில்வே ஸ்டேஷன்ல நாகர்கோயில் எக்ஸ்பிரஸ்ல இடம் பிடிச்சாச்சு..ஈரோடு டூ நெல்லை ரயில் பயணத்தில் என்ன நடந்தது என்பதை ஜூன் 25 அன்று தனி பதிவா போட்டுக்கலாம்.. இப்போ பதிவர் சந்திப்புல என்ன நடந்ததுங்கறதை மட்டும் பார்ப்போம்..


நெல்லையில் காலை 5 மணிக்கு ரயில் ஸ்டேஷன் அடைகிறது.. வரவேற்க யாராவது வந்திருப்பாங்கன்னு பார்த்தா ஒரு பயலையும் காணோம்..  ( ஆமா இவரு பெரிய ஃபிகரு.. ரோசாப்பூ மாலையோட வந்து வரவேற்க.. )

இறங்குனதும் நம்ம உணவு உலகம் ராசலீலா ராஜேந்திரன்க்கு ஃபோன் போட்டா அண்ணன் ஃபோனை எடுக்கவே இல்லை.. அடடா.. இது ரெகுலரா அண்ணன் பதிவு போடற டைம் ஆச்சே..


நடிகர் விக்ரம்,நடிகர் சம்பத் போல சாயலில் கலக்கலாக என் அருகே அமர்ந்திருப்பவர் பலா பட்டறை சங்கர்

சரி.. நாமே ஹோட்டல் பேரை வெச்சு விசாரிப்போம்னு விசாரிச்சுட்டு போனா ஹோட்டல் வாசல்ல லேப் டாப் மனோ படுத்திருக்கான்.. டேய் ராஸ்கோலு.. மப்புல இருக்கியா? எந்திரிலேய்.. என்றேன்..

செம சரக்கு போல.. அப்படியே வாசப்படில உருண்டுட்டு இருக்கட்டும்னு விட்டுட்டு ரிசப்ஷன்ல போய் விசாரிச்சேன்..

திருநெல்வேலி வாசிகள்க்கு ரசனை கம்மி போல.. (நெல்லைவாசிகள் மன்னிக்க) அவ்வளவு பிரமாதமான ஹோட்டல்ல ஒரு பக்கா ஃபிகரை ரிசப்ஷ்னிஸ்ட்டா போடாம ஒரு ஆம்பளையை அப்பாயிண்ட் பண்ணி இருந்தாங்க.என்னது? ஓப்பனிங்கே சரி இல்லையே?ன்னுட்டுயோசிச்சேன்..

சார்.. ரூம் இருக்கா?

ஓ ,இருக்கே.. மொத்தம் 237 ரூம் இருக்கு..

ஓக்கே ஒரு சிங்கிள் காட் ரூம் வேணும்..

அவசரப்படாதீங்க.. ரூம் இருக்கு,ஆனா எதுவும் காலியா இல்லை..

அடிங்கொய்யால.. நம்ம கிட்டேயேவா?ன்னு நினைச்சுட்டு பக்கத்துல உள்ள 6 ஹோட்டல்லயும் விசாரிச்சா எங்கேயும் ரூம் கிடைக்கல.. அது கூட பரவாயில்ல.. எல்லா ஹோட்டல்லயும் லேடி ரிசப்ஷனிஸ்ட் நஹி.. ஹூம்..

அப்புறம் எப்படியோ ஒரு ஹோட்டல்ல ரூம் கிடைச்சது.. ரூம்க்கு போய்ட்டு ராசலீலா ராஜேந்திரன் அண்னனுக்கு மெசேஜ் அனுப்பினேன் (மெசேஜ் அனுப்பினா நாலணா தான் )அண்ணன் ரிப்ளை எதுவும் அனுப்பலை.(அவருக்கு ஒரு ரூபாயாம் மெசேஜ் அனுப்ப)



பதிவுலக தாதா மாதிரி ,ஸ்டண்ட் மாஸ்டர் தளபதி தினேஷ் மாதிரி ,ஹிந்தி வில்லன் மாதிரி தோற்றம் அளித்தாலும் பச்சப்புள்ளய்யா இந்த ஜெயந்த(வெறும்பய)

ஆனா 10 நிமிஷத்துல அண்ணன் ரூம்க்கு வந்துட்டாரு..

நான் தான் ரூம் வேணுமா?ன்னு முதல்லயே கேட்டப்ப வேணாம்னீங்க..

ஆமாண்ணே.. எதுக்கு உங்களுக்கு சிரமம்,நமக்கு கிடைக்காத ரூமா?ன்னு அசால்ட்டா இருந்துட்டேன்..

சரி.. குளிச்சுட்டு ஃபிரஸ் ஆகிட்டு வாங்க நான் ரிசப்ஷன்ல வெயிட் பண்றேன்..

அண்ணே,நான் ஆல்ரெடி ஃபிரஸ் பீஸ் தான்.. குளிச்சாத்தான் ஃபிரஸ்ஸா? அவ்வ்வ்வ்


சரி சரி.. வாங்க..நாம 2 பேரும் டிஃபன் சாப்பிடலாம்..

(ஆஹா.. காலைலயும் ஓசி சாப்பாடா.. டேய் சி பி நீ நிறய புண்ணியம் செஞ்சவண்டா.. )

அண்ணன் ஒரு ஆஃபீசர் இல்லையா?தன்னோட கெத்தை காமிச்சாரு.. டேய் தம்பி.. இதை எல்லாம் க்ளீன் பண்ணு என்ன இப்படி இருக்கு?



நான்,அழுகாச்சி காவியம் புகழ் கவிதாயினி கல்பனா,ஃபாரீன் புயல் சித்ரா,உணவு உலகம் ராசலீலா ராஜேந்திரன்

போன ஜென்மத்துல அண்ணன்  பரங்கிமலை ஜோதி தியேட்டர்ல ஆபரேட்டர் போல.. நல்ல படம் காமிச்சார்.. ஆனா ஒண்ணு அண்ணனுக்கு ஊர்ல செம செல்வாக்கு.. போலீஸ்காரங்க எல்லாம் அண்ணனுக்கு சல்யூட் வெச்சாங்க..

அவரோட ஆஃபீஸ்க்கு கூட்டிட்டு போனாரு.. ஆஃபீஸ்ல அண்ணனுக்கு செம சவுகர்யம்.. ஒரு பெரிய ஹால் 40 * 40 சைஸ்..ஒரே ஒரு சேர்... வெளில இருக்கறவங்க உள்ளே பார்க்க முடியாது.. உள்ளே இருக்கறவங்க வெளில பார்க்கலாம்.. ஹூம்.. அண்ணன் என்னென்னெ தில்லு முல்லு பண்றாரோ//.. ஆனா பதிவர் சந்திப்புக்கும் அண்ணனோட பர்சனல் லீலைகளுக்கும் சம்பந்தம் இல்லாததால மேட்டர்க்கு வரேன்.

இங்கே ஏன் வெயிட் பண்ணனும்? நேரா ஹோட்டல்க்கு போயிடலாம்..?

இருங்க.. இப்போ பலா பட்டறை சங்கரும்,மணிஜி யும்,கவுசல்யாவும் வருவாங்க.. அப்புறம் போலாம்

சொன்ன மாதிரியே பலா பட்டறை சங்கரும்,மணிஜி யும் வந்தாங்க.. சங்கர் அண்னன் ஹிந்தி ஹீரோ கணக்கா  செம கலரா இருந்தாரு,,ஆனா பந்தா எல்லாம் பண்ணலை.. ( இனிமே நாமளும் வெட்டி பந்தா பண்ணுவதை குறைச்சுக்கனும்,, அஜித் மாதிரி இருக்கறவங்களே அடக்கி வாசிக்கறப்ப  அட்டக்கறுப்பா இருக்கற நாம எப்படி இருக்கனும்? )

மணிஜி அண்னன் ஜாக்கிசேகரோட தோஸ்த்.. ஏற்கனவே எனக்கு அறிமுகம், நேரில் இப்போத்தான் பார்க்கறேன்..

அப்போ அண்ணனுக்கு ஃபோன் வந்தது.. பேசுனது கவுசல்யா மேடம்

சார்.. நான் நேரா ஹோட்டலுக்கே வந்துடறேன்.. ஆஃபீஸ்க்கு வர்லை..

ஏம்மா?



அங்கே வந்தேன் .. சி பி அங்கே இருக்கறதை பார்த்தேன்.. அவன் விவகாரம் பிடிச்ச ஆள் ஆச்சே.. பிளாக்லயே நடிகைங்க ஃபோட்டோ எல்லாம் போடுவான்.. எதுக்கு வம்பு..? புரொஃபைல்ல என் ஃபோட்டோ தெரியக்கூடாது.. என் எழுத்து மட்டும் தெரிஞ்சா போதும்னு நினைக்கறேன்.. இவன் பாட்டுக்கு செல் ஃபோன்ல ஃபோட்டோ எடுத்து போட்டுட்டா?

சரி சரி.. ஓக்கே ஓக்கே

அப்புறம் அண்ணன் வந்து சமாளிச்சார்..

மேடம் டிராஃபிக்ல மாட்டிட்டாங்களாம்.. நேரா ஹோட்டல்க்கு வந்துடறதா சொன்னாங்க..

 சரின்னு ஹோட்டல்க்கு  போனோம்..


அங்கே போனதும் “ வாங்க வாங்க வணக்கம்னு ஒரு லேடி வாய்ஸ் கேட்டுது..


ஆஹா, நம்மையும் ஒரு லேடி மதிச்சுட்டாங்களேன்னு நானும் பதிலுக்கு வணக்கம் போட்டேன்..

அந்த மேடம் அண்ணன்  கிட்டே ரகசியமா “ தம்பி யாரு?”ன்னு கேட்டாங்க..

ஹூம் ,யாருன்னு தெரியாமயே இந்த பில்டப்பா? ந்னு நினைச்சுட்டே அக்கா என் பேரு சி.பி அப்டின்னேன்.. அய்யய்யோ அப்டின்னாங்க..

என்ன கொடுமை சார்.. இது? ஆளாளுக்கு பார்த்து பயப்பட நான் என்ன செஞ்சேன்? ஏதோ 19 கில்மா பட விமர்சனம் பண்ணி இருக்கேன்.. ( எண்ணிக்கைல கரெக்ட்டா இருப்போம்ல..?)
 
கோமாளி செல்வா,லேப்டாப் மனோ,நான்(குற்றாலம்)

அவங்க அண்ணன் கிட்டே ஏதோ சொல்லி நைஸா என் செல் ஃபோனை பிடுங்கி வெச்சுக்கிட்டாங்க.. ( நான் ஃபோட்டோ எடுத்துடக்கூடாதாம்)

டாக்டர் கந்த சாமி கோவை ஆல்ரெடி அங்கே இருந்தார்.. அவர் கிட்டே அறிமுகம் நடந்தது..

இம்சை அரசன் பாபு ,வெறும்பய ஜெயந்த்,கோமாளி செல்வா,கல்பனா 4 பேரும் வந்தாங்க..

பாபு ஆள் காலேஜ் பிரின்ஸ் மாதிரி இருந்தாரு.. ஆள் நல்ல ஜாலியா பேசுனாரு.. ஜெயந்த் ஹிந்திப்பட வில்லன் மாதிரி இருந்தாரு.. தெரியாத்தனமா அவர் கிட்டே நான் கை குடுத்துட்டேன்.. குலுக்கறேன்கற பேர்ல கையை கசக்கி எடுத்துட்டாரு..

(அவரோட கோபத்துக்கு காரணம் அவர் எழுதுன ஜோதி தொடர் ல நான் “அப்புறம் ஜோதியை முடிச்சீங்களா? இல்லையா? அப்டின்னு கமெண்ட் போட்டிருந்தேன்.. அதான் , பழி வாங்கிட்டாரு..)

செல்வா ஏற்கனவே பார்த்து அறிமுகம் ஆனவர் தான்.. கைல ஸ்கிரிப்ட் வெச்சிருந்தார் ,காமெடி கதை போல.. மனப்பாடம் பண்ணிட்டு இருந்தார்..

கல்பனா தமிழ்ப்பொண்ணு கணக்கா ஒரு கும்பிடு போட்டாங்க,, நானும் கும்பிடு போட்டுட்டு சுய அறிமுகம் பண்ணுனேன்... (வேற யாரும் என்னை அறிமுகப்படுத்தலை..கலைஞரின் நமக்கு நாமே திட்டப்படி நானே அறிமுகம் பண்ணிக்கிட்டேன்,வேற வழி?)

. என் பேரு.. சி.பி.. அட்ரா சக்க பிளாக் ஓனர்.. (பொல்லாத முதலாளிடா இவனுங்க.. )

அப்டியா.. சாரி.. நான் கேள்விபட்டதில்லை.. கண்ட கண்ட பிளாக் எல்லாம் நான் படிக்கறதில்லைன்னாங்க..

 ஹி ஹி .. நீங்க ஓப்பனா பேசறீங்க.. வெரிகுட்.. ( நற நற.. )

வெட்டிப்பேச்சு சித்ரா வந்தாங்க.. என்னமோ சொல்லீட்டே வந்தாங்க.. எல்லாம் அமெரிக்கன் இங்கிலீசா இருந்ததால எனக்கு ஒண்ணும் புரியல.. (பட்லர் இங்கிலிஸே ஒழுங்கா புரியாது நமக்கு.. )



அப்போத்தான் நம்ம ஆஃபீசர்.. ஒரு வில்லங்கமான காரியத்தை பண்ணுனாரு..

ஒண்ணா நேரடியா என்னை அறிமுகப்படுத்தி இருக்கோனும்.. இல்ல சும்மா விட்டிருக்கனும்.. இவர் பில்டப் குடுக்கறேன்கற பேர்ல..

 சித்ரா மேடம்.. இது (அக்ரிணை) யார்னு தெரியுதுங்களா?

எவனா இருந்தா எனக்கென்ன? ஹா ஹா  ஹா

அப்டின்னாங்க..

ஹூம் நமக்கு நேரமே சரி இல்லையே என நினைக்கும்போதுதான் நிரூபன் ஃபோன் வந்தது..

தொடரும்...