Showing posts with label பதிவர் சந்திப்பு. Show all posts
Showing posts with label பதிவர் சந்திப்பு. Show all posts

Monday, June 27, 2011

நெல்லை பதிவர் சந்திப்பு கடைசி பாகம் -பாகம் 6



பண்டிகைகளும், விழாக்களும் மக்களின் மகிழ்ச்சிக்காக உருவாக்கப்பட்டவை.வீட்டில் ஏதாவது சண்டை,கணவன்,மனைவிக்குள் ஊடல் என்றால் இந்த மாதிரி விழாக்காலங்களில் உறவினர்கள் வீட்டுக்கு வரும்போது அவர்கள் முன் சும்மானாச்சிக்காவது தம்பதிகள் சந்தோஷமாக முகத்தை வைத்துக்கொள்வார்கள்.. அந்நியோன்யமாய் இருப்பது போல் காட்டிக்கொள்வார்கள்.. பிறகு அதுவே தொடர் கதை ஆகிவிடும்..

இது போன்ற உயரிய காரணங்களுக்காகவும்,மனித நேயம் வளர்வதற்காகவும்,உறவுகள் மேம்படுவதற்காகவும் உருவாக்கப்பட்டவைதான் விழாக்கள்..ஊர்த்திருவிழா என்றால் வியாபாரிகளுக்குக்கொண்டாட்டம்.. சுபச்செலவாக இருப்பதால் யாரும் அது பற்றி கவலைப்படுவது இல்லை.. 

பிரபலமான எழுத்தாளர்களை வாசகர்கள் சந்திக்க ஆர்வமாக இருப்பதும், சந்திப்புக்குப்பின் அவன் மனம் ஏமாற்றம் அடைவதையும் நான் கண்டிருக்கிறேன்..  காரணம் அவன் படித்த எழுத்து மூலம் அவனுக்குள் ஒரு கற்பனை  பிம்பத்தை உருவாக்கி வைத்திருப்பான்.. 

நேரில் சந்தித்து உரையாடிய பின் அவன் கற்பனைகள் தவிடுபொடியாகும்..அவன் எதிர்பார்ப்புகளுக்கு மாறாக எழுத்தாளனின் முகம் வெளிப்படும்போது அவன் ஏமாற்றம் அடைகிறான்...

ஆனால் பதிவர் சந்திப்பில் யாரும் அதிகமாக எதிர்பார்த்து வரவில்லை.. ஒவ்வொரு பதிவரின் எழுத்தை மட்டுமே பார்த்தவர்கள் அவர்கள் எப்படிப்பட்ட கேரக்டர்?பழகுவதற்கு எந்த மாதிரி ஆள் என்பதை கண்கூடாக காண முடிவதால் சந்திப்புக்கு பிறகு உறவு பலப்படும் வாய்ப்பே அதிகம்.. 


எல்லா பதிவர்களூம் பேசி முடித்த பின் ஒரு நன்கொடை வசூலிக்கப்பட்டது.. பதிவர்கள் மனம் உவந்து பணம் கொடுத்தனர்.. இதில் சித்ராவும் ,பலாப்பட்டறை சங்கரும் அதிகமான பணம் கொடுத்தனர்.. நான் 100 ரூபாய் கொடுத்தேன்..

மொத்தம் 37 பதிவர்கள் வந்திருந்தனர்.. சராசரி ஆளூக்கு ரூ 50 டூ 100 தருவாங்க, அதிக பட்சம் ரூ 3000 கலெக்ட் ஆகும் என நினைத்தேன்.. ஆனால் ரூ 5615 கலெக்ட் ஆச்சு.. ஆச்சரியம் தான்.. இதில் நெஞ்சை நெகிழ வைக்கும் செய்தி யாரோ ஒரு பதிவர் ஏழ்மை நிலையையும் மீறி ரூ 15 நன்கொடையாக கொடுத்ததுதான் விழாவின் ஹை லைட்..அப்போதுதான் நான் நன்கொடை இன்னும் அதிகமாக கொடுத்திருக்கலாமோ என வருந்தினேன்..

ஒவ்வொரு மனிதனும் அவசரமாக ஒரு செயலை செய்தி முடித்து விடுகிறான்.. பிறகு காலம் எல்லாம் அதை அப்படி செய்திருக்கலாமோ?இதை இப்படி செய்திருக்கலாமோ என நினைத்து நினைத்து வருந்துகிறான்.. இது இயற்கை.. மனித மன விசித்திரம்..

சும்மா வந்து சந்தித்தோம், சிந்தித்தோம் என வாய் வார்த்தைக்காக இல்லாமல் ஏதோ உபயோகமாக செய்த திருப்தி அனைவர் உள்ளத்திலும்..

பதிவர் மீட்டிங்க் முடிந்ததும் சாப்பாடு...


பஃபே சிஸ்டம்..ஒரு ஆள்க்கு ரூ 160 செலவு (உபயம் அண்ணன் உணவு உலகம்).

செம கலக்கலான சைவ சாப்பாடு..


முதல்ல ஒரு சூப் குடிச்சோம்.. அப்புறம் நாண் ரொட்டி ,குருமா , பிறகு வெஜ் ஃபிரைடு ரைஸ்.. தயிர் பச்சடி..

அப்புறம் நார்மல் ஒயிட் ரைஸ் ,ரசம், தயிர்.. அப்பளம், மாங்காய் ஊறுகாய்  என வெளுத்து வாங்கினோம்..

இந்த சாப்பாட்டை செம எஞ்சாய் பண்ணி சாப்பிட்டது இம்சை அரசன் பாபு,வெறும்பய ஜெயந்த்,கல்பனா ,நாஞ்சில் மனோ சாரி லேப்டாப் மனோ இந்த செட் தான்.. ஊஞ்சல்ல உக்காந்துட்டு ஜாலியா பேசிக்கிட்டே கிண்டல் அடிச்சுக்கிட்டே சாப்பிட்டாங்க.. அவங்க என்ன பேசுனாங்க, என்ன கமெண்ட்ஸ் பண்ணாங்க என்பது எல்லாம் இங்கே சொன்னா அது ரொம்ப நீளம் ஆகிடும்.. ஏற்கனவே பதிவை சீக்கிரம் முடிடா ரொம்ப இழுக்காதே என ஏகப்பட்ட மிரட்டல்கள் வருவதால் அவை கட்..

பாபு வும் ,மனோவும் கல்பனாவை மிரட்டி (அன்பு மிரட்டல்) அதை வாங்கிட்டு வா, இதை வாங்கிட்டு வா என அதிகாரம் செஞ்சாங்க.. ஏன்னா இவங்க போனா அடிக்கடி வர்றானே அப்டின்னு இமேஜ் ஸ்பாயில் ஆகிடுமாம்.. 

நாய்க்குட்டி மனசு,சித்ரா,கவுசல்யா இவங்க ஒரு செட்.. டேபிள்ல உக்காந்து சாப்பிட்டாங்க..


பலாபட்டறை சங்கர்,மணிஜி,மணிவண்ணன் ,வலைச்சரம் சீனா,வெடிவால் இவங்க எல்லாம் ரொம்ப நாசூக்கா சாப்பிட்டாங்க..

ஜோசஃபின் அவர் கணவர் கூட  ஸ்டேண்டிங்க்லயே சாப்டாங்க.. அவர் மனைவிக்கு ரொம்ப தான் மரியாதை செலுத்துனார்.. லவ் ஜோடி போல.. நான் கேட்டேன்.. என்ன சார் உக்காந்து சாப்பிடலியா?ன்னு , அதுக்கு அவர் அது எப்படிங்க மனைவிக்கு எதிரே மரியாதை இல்லாம அமர்வது என்றார்..  ஹூம்.. நல்லவேளை.. என் மனைவியை அழைத்து வரவில்லை என நினைத்துக்கொண்டேன்..

நான் நின்னுட்டே தான் சாப்பிட்டேன்.. ஒரு இடத்துல உக்காந்து சாப்பிட்டா எல்லாரையும் நோட் பண்ண முடியாதே?

சாப்பிட்டு முடிச்ச பிறகு எல்லாரும் குரூப் குரூப்பா ஃபோட்டோ எடுத்துக்கிட்டோம்..காலேஜ் ஃபைனல் இயர் ஸ்டூடண்ட்ஸ் மாதிரி ஒரு ஃபீலிங்க்..

இறுதி நிகழ்ச்சியா சித்ரா எல்லா பதிவர்களூக்கும் ஸ்வீட் பாக்கெட் குடுத்தாங்க.. உணவு உலகம் அண்ணன் தான் அவங்க கிட்டே நீங்க கொடுங்கன்னு வேண்டுகோள் விடுத்தார்.. அப்பவே என் மைண்ட் 37 பதிவர்களுக்கு அல்வா கொடுத்த ஃபாரீன் பதிவர் சித்ரா.. பதிவுலகம் அதிர்ச்சி அப்டின்னு டைட்டில் வெச்சுடலாமா?ன்னு யோசிச்சுது..

சித்ரா கிட்டே பர்மிஷன் கேட்டேன்.. தம்பி.. நீ பதிவர் சந்திப்பு போஸ்ட்டையாவது எந்த கோணங்கித்தனமும் பண்ணாம உருப்படியா எழுதப்பாரு அப்டின்னாங்க.. ஆஹா.. சி.பி போற பக்கம் எல்லாம் பல்பு வாங்கறானே அப்டின்னு நினைச்சுட்டு டைட்டில் ஐடியா கேன்சல்..ஓக்கே அக்கா அப்டின்னுட்டேன்..

அப்புறம் எல்லார்கிட்டேயும் சொல்லிட்டு பிரியா விடை பெற்றோம்.. ( நல்ல வேளை பிரியாங்கற பேர்ல எந்த பதிவரும் இல்லை)


அப்புறம் நான் ,லேப்டாப் மனோ, கோமாளி செல்வா ,லேப் டாப் மனோ மேல நம்பிக்கை இல்லாம அவரோட சம்சாரம் ( தாலி கட்டிய முதல் மனைவி ) பாடிகார்டா அனுப்பின மனோவின் மச்சினன் 4 பேரும் குற்றாலம் போய் வந்தோம்.. அது தனியாக பின்னொரு நாளில் குற்றாலத்தில் கும்மி அடிச்சோம் என்ற தலைப்பில் பதிவு போட்டுக்கலாம்..

இப்போதைக்கு நெல்லை பதிவர் சந்திப்பு போஸ்ட் இனிதே நிறைவு பெறுகிறது.. வாழ்க வளமுடன்,, வாழ்க வையகம்..

டிஸ்கி - பதிவர்சந்திப்புக்கான வீடியோ இணைப்பு கிடைத்தால் அண்ணன் உணவு உலகம் அனுமதியுடன் அதை பதிவாக போடலாமா? என யோசித்து வருகிறேன்..  ..

Friday, June 24, 2011

சென்னை,கோவை ,வெளியூர் பதிவர்கள் பேச்சு ( நெல்லை பதிவர் சந்திப்பு பாகம் 5)

 

1.டாக்டர் கந்தசாமி, கோவை - நான் என் பிளாக்லயே யார் வேண்டுமானாலும் என் பதிவை காபி பேஸ்ட் செய்து கொள்ளலாம் என எழுதி வெச்சிருக்கேன்..
( நீர் மனுஷன்)ஏன்னா எல்லாரும் படிக்கனும்கறதுகுத்தான் நாம் எழுதறோம்.. அதை யார் பேஸ்ட் பண்ணி போட்டா என்ன? மொத்தத்துல நம்ம படைப்பு யாருக்காவது யூஸ் ஆனா சரி.. (அப்போ என் படைப்பு யாருக்கும் யூஸ் இல்லைங்கறீங்களா? அவ்வ்வ்வ்)என் பிளாக்ல கமெண்ட் பாக்ஸை க்ளோஸ் பண்ணி வெச்சுட்டேன்.. (ஏன்,அது என்ன குணச்சித்திர நடிகையா?மூடி மூடி வைக்க?)அவங்க கமெண்ட் போட நான் அதுக்கு நன்றி கமெண்ட் போடனும்,அப்புறம் அவங்க பிளாக் போகனும்.. என்னால சுதந்திரமா செயல்பட முடியாது..




2. வலைச்சரம் சீனா -அண்ணன் நைஸா பத்தோட பதினொண்ணா எங்களோட உட்காரப்பார்த்தார்.. நாங்க விடுவோமா? அவரை தலைமை ஏற்று நடத்திக்கொடுக்கனும்னு உணவு உலகம் அண்ணன் பக்கத்துல உட்கார வெச்சுட்டோமில்ல.. “ நான் 2 வருடங்களாகத்தான் இந்த பொறுப்பேற்று இருக்கேன்.. வாரா வாரம் ஒரு பதிவரை எழுத வெச்சு மெயிண்டெயின் பண்றது சிரமமா இருக்கு.. ஆனா ஆத்ம திருப்திக்காக இதை பண்றேன்..புதிதாக எழுத வருபவர்களை,ஊக்குவிப்பதே என் நோக்கம்.. “





3.  பலா பட்டறை சங்கர்  - வந்த பதிவர்கள்லயே செம பர்சனாலிட்டி அண்ணன் தான்.. செம ஹேண்ட்ஸம்.. கந்த சாமி பட விக்ரம் மாதிரி இருந்தார்.. ஆர்ப்பாட்டமா ஆள் இருந்தாலும் அவரது பேச்சு ,குரல், த்வனி எல்லாம் அமைதியாவும், அவரது பக்குவத்தை ,அனுபவத்தை எடுத்து உரைப்பதாவும் இருந்தது.. 

”உண்மைத்தமிழன் உட்பட பலர் பத்திரிக்கைகளில் வந்த மேட்டர்களை பதிவா போடறாங்க.. சிலர் அதை காப்பி பேஸ்ட் என சொன்னாலும் என்னைப்பொறுத்தவரை அது தேவை தான். ஏன்னா புக் ஒரு வாரம் போனா அழிஞ்சுடும்,ஆனா பதிவு ரெக்கார்டா இருக்கும், நாளைக்கே அந்த டைட்டில் குடுத்து கூகுள்ல தேடுனா கிடைக்கும், நம்ம அவசரத்துக்கு உதவும்..

அதே சமயம் தமிழ்மணம்ல நெம்பர் ஒன் வர்றதால யாருக்கும் எந்த பிரயோஜனமும் இல்லை.. ( அண்ணன் நம்மளைத்தான் மறைமுகமா தாக்கறார் ஹி ஹி ) சிங்கிள் டீக்கு கூட உதவாது.. அதனால எழுதுவதை ஒரு பொழுது போக்கா வெச்சுக்கிட்டு  பொழப்பைப்பாருங்க.. (அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்).. இப்போ எல்லாரும் கூகுள்  பஸ்ல கமெண்ட் போட ஆர்வமா இருக்காங்க ,பதிவு எழுதறதுல ஆர்வம் குறைஞ்சிண்டிருக்கு. இது மாறனும்.. . இணையம் என்பது டைரி போன்றது, பல வருடங்கள் கழித்து நாமே இதை எடுத்து படிக்கும் போது கிடைக்கும் நிறைவு மிக பெரிது, மேலும் நமக்கு பின் நம் வாரிசுகள் இதை படித்து தெரிந்து கொள்ள வசதியாக இருக்கும்.




4. பெயர் சொல்ல விருப்பமில்லை - ஹா ஹா இவரோட காமெடி.. இவருக்கு சப்போஸ் ஒரு லவ்வர் இருந்தா .....

” டியர் .. நான் இப்போ 3 மாசம்.. முழுகாம இருக்கேன்.. இப்போவாவது உங்க பெயர் சொல்லுங்க..  

சாரி.. எனக்கு  என் பெயர் சொல்ல விருப்பமில்லை, உன்னை கல்யாணம் பண்ணிக்கொள்ள வும் இஷ்டம் இல்லை.. அப்டின்னு அல்வா கொடுத்திருப்பாரோ..?

“ நான்  தளத்துல கணிதம் கற்றுக்கொள்வது எப்படின்னு ஒரு பதிவு போட்டேன்.. எடுபடலை.. 

அது உங்க தப்பு.. கணக்கு பண்ணுவது எப்படி?ன்னு டைட்டில் குடுத்திருக்கனும் .செம ஹிட் ஆகி இருக்கும்..



5. இம்சை அரசன் பாபு.. - இவர் ஆள் பார்க்க தாதா மாதிரி இருந்தாலும் பச்ச மண்ணுய்யா.. இவரோட கிராமியம் கலந்த தமிழை கேட்பவர்கள் இவரை மறக்கவே முடியாது.. லோகோவை வைத்து இவர் முரடானவர்னு யாராவது நினைச்சா ஏமாந்தே போனீங்க.. செம சாஃப்ட் டைப்.. ( தொட்டு பார்த்தியா?ன்னு கேட்கக்கூடாது.. ஹி ஹி ) 

” நான் சீரியஸ் பதிவு எப்பவாவதுதான் எழுதறேன்... (பொதுவா நீங்க பதிவே எப்பாவாவதுதானே எழுதறீங்க? அவ்வ்வ்வ்வ்)என் பொண்ணுகிட்டே நான் வாங்குன பல்புகளை மையமா வெச்சுத்தான் நான் கதை எழுதறேன்.. (மய்யமா வெச்சு .. மய்யம்..... கமல் ரசிகரோ..?)

 பாபு அண்ணே . உங்களுக்கும் எனக்கும் ஒரே வித்தியாசம் தான் .. நீங்க  பெத்த பொண்ணை வெச்சு பதிவு போடறீங்க.. நான் ஊர்ல இருக்கற மத்த பொண்ணுங்களை வெச்சு பதிவு தேத்தறேன்.. ஏன் என்னை மட்டும் எல்லாரும் வையறாங்க? அவ்வ்வ்வ்வ்வ்......




6. தமிழ்வாசி பிரகாஷ்.. இவர் பேரையும், லோகோவையும் பார்த்துட்டு சின்னப்பையன்னு நினைச்சுட்டுப்பார்த்தா ஆள் பிரபுவுக்கு தம்பி மாதிரி இருக்கார்.. (அப்போ குஷ்பூக்கும் இவருக்கும் என்ன முறை?ன்னு கேட்கக்கூடாது)இவர் வர்ற வழில பஸ்ல மாட்டிக்கிட்டாராம். பஸ் பஞ்சராம்.. அதான் வர லேட்னார்.. ( பஸ்ல மாட்னாரா? பஸ்ல  வந்த மிஸ் பிக்கப் ஆகி அவரை விரட்னாரா ந்னு சரியா தெரில,, )




7. வம்பை விலைக்கு வாங்குவோம்ல மணிவண்னன் - விக்ரம் படத்துல சத்யராஜ்  தகடு எங்கேடா.. தகடு தகடு அப்டினு கேட்பாரே.. அந்த ஆள் மாதிரியே இவரு இருந்தாரு.. அவர் கன்னத்துல பெரிய தழும்பு.. இவர் உடம்பெல்லாம் கொழுப்பு..  (செம ஜாலி பார்ட்டி.. ) யோவ்.. ஏய்யா கூலிங்க் க்ளாஸ்ல வர்லை?  என கேட்டு கலாய்த்தோம்..  இவரு சரியா பேசலை.. கேட்டதுக்கு சாரி.. என் லவ்வர் கூடவே சரியா பேசமாட்டேன்னாரு.. (கூச்ச சுபாவமாம்)




8. வெடிவால் சகாதேவன் - இவர் ஒரு சீனியர் பதிவர் என்பதை விட இவரது குடும்பமே பதிவர்கள் குடும்பம் தான், கோமு மேடம், ராமலக்ஷ்மி... இவரது பங்கெடுப்பு சிறப்பாக இருந்தது.இங்கே கலந்துக்கிட்ட பதிவர்களிலேயே  சீனியர் பதிவர்  இவர் தான்.. ( அப்போ ஜூனியர் பதிவர் ? வேற யாரு நான் தான் ஹி ஹி ) ராமலட்சுமி மேடம் யார்னா பஸ்ல இப்போ சமீப காலமா கலக்கறவங்க.. ஃபோட்டோ போட்டி நடத்தும் ஒரே பதிவர்.. செம கலக்கல் ஃபோட்டோஸ் இவர் தளத்துல இருக்கும்.. சுடறவங்க போய் சுட்டுக்குங்க.. ஹி ஹி .. 



9. ரசிகன் ஷர்புதின்.. _ இவர் சரியான லொள்ளூ பார்ட்டி.. எல்லார் தளத்துக்கும் போய் அவங்க பிளாக்கிற்கு மார்க் போடுவார்.. ஆனானப்பட்ட கேபிள் சங்கர்க்கே 50 மார்க் தானாம்.. அவ்வ்வ்வ்வ்வ்வ்வ். இந்த பழக்கம் அவருக்கு எப்படி வந்ததுன்னா.. 

இவருக்கு 19 வயசு இருக்கும்போது காலேஜ் வாசல்ல, ஸ்கூல் கேட் கிட்டே நின்னு போற ,வர்ற ஃபிகர்ங்களுக்கு மார்க் போட்டுட்டு வருவாராம்.. இதுக்கு மார்க்கோ ஃபோபியா சைட்டோ கார்க்னு வியாதி பேரு... அதை குணப்படுத்திட்டாங்க.. ஆனா.. இதை.. ??? முடியல ஹா ஹா 






10. ஸ்ரீவில்லிப்புத்தூர் ரத்னவேல் - இவர் சம்சாரத்தோட வந்திருந்தார்

( அவரோட சம்சாரம் தான் ) ஆன்மீகப்பதிவர்... ரொம்ப அமைதியா இருந்தாரு.. அவர் மிசஸ் அவரை விட அமைதி.. ரொம்ப குடுத்து வெச்சவர் சார் நீங்கன்னேன்.. நைஸா , “தம்பி.. அண்ணி வீட்ல புலி வெளில எலி “ன்னார்.. சேம் பிளட் அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்.. 




11. லேப்டாப் மனோ..  - இவரை தெரியதவங்க யார் இருக்க முடியும்?லேட்டா தான் வந்தார்.. கூடவே ஒரு பாடிகார்டை கூட்டிட்டு வந்தார்.. பி ஏ அப்டின்னு பில்டப் குடுத்தார்.. விசாரிச்சா.. அவரோட மச்சினராம்... மச்சினியோட சுத்தற ஆள் எதுக்கு மச்சினரோட சுத்தனும்னு பார்த்தா மனோவோட சம்சாரம் சந்தேகப்பேர்வழியாம் (அவருமா?அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்) மனோ என்ன பண்றார்னு கண்காணிக்க அனுப்பி இருக்காங்க.. ( என்ன பண்ணுவாரு.. தில்லு முல்லு தான் ) டேய்.. தம்பி லேப் டாப் எங்கேன்னு கேட்டா  அத்தை பொண்ணு கிட்டே குடுத்துட்டு வந்துட்டேன்னு கதை விட்டார்....ஆனா லோகோல பார்த்ததை விட ஆள் ஸ்மார்ட்.. லோகோல கேப்டன் மாதிரி இருந்தாரு.. 




12. வெறும்பய ஜெயந்த் -   சிங்கப்பூர் பதிவர்,ஆள் தளபதி தினேஷ் மாதிரி இருந்தாரு..இவருக்கு கை குடுத்து என் கையே போச்சு.. முறம் மாதிரி முரட்டு கை,.. ஆள் செம ஜாலி டைப்.. ஜோதி மேட்டர் என்னய்யா ஆச்சுன்னு கேட்டா யோவ்,, அவ என் காதலி,, மேட்டர்னா பல்லை தட்டிடுவேன்னு மிரட்னார்

13.மணிஜி , சென்னை - இவர் எனக்கு ஏற்கனவே அறிமுகம்,நேரில் இப்போதுதான் பார்க்கிறேன். தண்டோரா எனும் பிளாக்கின் ஓனர். ஜாக்கிசேகரின் நெருங்கிய நண்பர்..இவர் சங்கருடன் வந்தார்.. விழாவுக்கு தாமதமாக வந்தததால் இவர் அதிகமாக  எதுவும் பேசவில்லை என நினைக்கிறேன்...ஆனால் அனைவரின் பேச்சையும் உற்று கவனித்தார்..  விழா முடிந்ததும் சங்கர் சாருடன் குற்றாலம் கிளம்பி விட்டார்.


14. ஜாக்கி சேகர் அவர்கள் வருவதாக இருந்தது,கடைசி நிமிடஅவசரப் பணியின் காரணமாக வர முடியாமல் போய் விட்டது

மீதி புது பதிவர்கள்  எனக்கு சரியா அடையாளம் தெரில,. மன்னிக்கவும்.. அடுத்து ஓ சி சாப்பாடு போஸ்ட்.. கடைசி பகுதி......நிறைவுப்பகுதி.. ( 2ம் ஒண்ணு தானே?)

தொடரும்..

Thursday, June 23, 2011

கண் கலங்க வைத்த பெண் பதிவர்கள் - நெல்லை பதிவர் சந்திப்பு பாகம் 4



பதிவுலகில் பெண் எழுத்து என்றாலே பெரும்பாலும் பலர் என்னத்தை இவங்க எழுதிடப்போறாங்க?சமையல் குறிப்பு, கோலம் போடறது எப்படி? மீறிப்போனா காதல் கவிதைகள் எழுதுவாங்க.. என்றெல்லாம் தவறான கருத்துக்களைத்தான் கொண்டுள்ளனர்.. அவர்கள் எண்ணங்களை எல்லாம் தவிடு பொடி ஆக்கியது  பெண் பதிவர்களின் பங்களிப்பும் ,அவர்கள் காட்டிய எழுச்சியும்.... 


இவர் ஆரம்பத்திலேயே போல்டாக சொல்லி விட்டார்.. சார் என் எழுத்துக்கள் மக்களுக்குப்பயன் அளித்தால் போதும்..  அதனால் என் ஃபோட்டோக்கள் எதுவும் பப்ளிஷ் ஆகக்கூடாது என கிட்டத்தட்ட மிரட்டினார்.. இவரது பாடி லேங்குவேஜ் அசாதாரணமான ஒரு அரசியல் தலைவரை  நினைவு படுத்தினாலும். ( டேய் சி பி அருவா அருவா ) அவரது பேச்சுக்கள் உண்மையை பட்டவர்த்தனமாக, எந்த வித மேல் பூச்சும் இன்று வெளிப்படுத்தியது.. (அக்கா ,மன்னிச்சுக்கங்கக்கா)

நான் (அதாவது அக்கா.. )  என் பிளாக்கில் பெரும்பாலும் தம்பதிகளுக்கான ஆலோசனைகளை மட்டுமே வழங்கி வருகிறேன்.. ஆரம்பத்தில் சுமாராகப்போன தளம் இப்போ  பரவாயில்லை.. போகிறது.. பலர் தங்கள் அனுபவங்களை எனக்கு மெயில் பண்ணி ஆலோசனை கேட்கிறார்கள்.. நான் அவர்களுக்கு பதில் அளிக்கிறேன்.. அதையே பதிவா போடறேன்..

( அக்காவுக்கு எம்புட்டு சவுகர்யம்.. பதிவு போட சரக்கில்லாம எங்கேயும் தேட வேண்டியதில்லை.. 100க்கு 98 பேர்  சம்சாரம் கூட சண்டை போட்டுட்டுத்தான் இருப்பான்.. சண்டையே போடாம இருந்தா அது சம்சாரமா? ஆஹா டைட்டில் பிரமாதமா இருக்கே.. நோட் பண்றா.. நோட் பண்றா.. _)

என்னால பலர் பயன் பெறுகிறார்கள்.. தம்பதிகளுக்குள் வரும் மனத்தாங்கல்களை நான் தீர்த்து வைக்கிறேன்..

பதிவை படித்தவர்கள் தங்களின் சில தவறுகளை திருத்திகொண்டதாக / குறைத்துகொண்டதாக சொல்லும்போது மனதிற்கு நிறைவை கொடுப்பதால் தொடர்ந்து அத்தொடரை தொடருகிறேன்..

( இதுக்காகவே அக்கா தளத்துல போய் மைனஸ் ஓட்டு போடனும்  ம்  ம்.. நாம ஏதாவது சாக்கு சொல்லி சம்சாரத்தை கழட்டி விடலாம்னு பார்த்தா இவங்க விட மாட்டாங்க போல இருக்கே.. ?  அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்  )


கழுகு என்ற தளத்தை பற்றி நிறைய பேசினாங்க...விழிப்புணர்வு பதிவு ஏதோ ஒன்று , இரண்டு நம்ம தளத்தில் எழுதுவோம், ஆனா அதற்கென்றே இருக்கும் தளம் கழுகு. அப்டின்னார்..


அப்புறம் அக்கா நைஸா பலா பட்டறை சங்கர் சார்ட்ட மெயில் ஐ டி வாங்கி சார் உங்க கட்டுரை ஒண்ணு கழுகுக்கு தேவைப்படுதுன்னார்.. அவரும் ஓக்கே ரெடி பண்றேன்னார்.... இப்படியே பல முக்கிய பதிவர்களிடம் மெயில் ஐ டி , ஃபோன் நெம்பர்  வாங்குனாங்க,..... என் பக்கம் வரவே இல்ல.. நானும் வெட்கத்தை விட்டு அவங்க கிட்டே கேட்டேன்.. (நமக்குத்தான் வெட்கமே இல்லையெ அதை ஏன் விடனும்னு யாரும் கேட்றாதீங்க.. ) 

 ”அக்கா அப்போ நானு? அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்.. ” அதுக்கு அவ்ங்க சொன்னாங்க..” தம்பி.. கழுகு ஒரு சமூக விழிப்புணர்வு தளம்.. ஏதோ அதுக்குன்னு ஒரு இமேஜ் இருக்கு.. வாசகர் வட்டம் இருக்கு.. நீ எழுதி இருக்கற பேரையும் கெடுத்துடாதே” ன்னார்..

( இதுக்கு எதுவும் நான் கேட்காமயே இருந்திருக்கலாம்.. இது வீடியோவுல வேற ரெக்கார்டு ஆகிடுச்சு.. அவைக்குறிப்புல இருந்து நீக்கச்சொன்னா அண்ணன் உணவு உலகம் முடியாதுன்னுட்டார்.. ஹூம்.. போற பக்கம் எல்லாம் சொம்பு வாங்கனும்கறது நம்ம தலை எழுத்து போல.. அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்)



 இம்சை அரசன் பாபுவின் அன்புத்தங்கையும்,லேப் டாப் மனோவின் பாச மலர்த்தங்கையும்,வெறும்பய ஜெயந்தின் முதல் தங்கையும் ஆன ஸ்மைலி ராணி & அழுகாச்சி காவியம் கல்பனா அடுத்து பேச எழுந்தாங்க.. 

முதல்ல பெயர்க்காரணம்.. இவர் ஒரு கவிதை தன்னோட அப்பாவைப்பற்றி எழுதி இருக்காங்க.. அந்த கவிதை பலராலும் பாராட்டப்பட்டாலும் சிலரால் கிண்டல் செய்யப்பட்டு அழுகாச்சிக்காவியம் ஆனார்.. அந்த கவிதையை எப்போ படிச்சாலும் அழுதுடுவாராம்.. ஹய்யோ ஹய்யோ ..

இவர் நன்பர்களுக்கு மெசேஜ் அனுப்பும்போது ஓகே என 2 வார்த்தை டைப் பண்ணிட்டு 8 ஸ்மைலி போட்டு அனுப்புவாராம்....இவர் ஒரு அப்பள பிரியை.. இது  எப்படித்தெரிஞ்சுதுன்னா லஞ்ச்ல ஓசி சாப்பாடு சாப்பிடறப்ப நான் பார்த்தவரையே அவர் மட்டும் ஆறு அப்பளம் சாப்பிட்டார்.. அவ்வ்வ்வ்வ்வ்வ்.

ஆறு மனமே ஆறு.. அவங்க  அபேஸ் பண்ணுன அப்பளம் ஆறு ( சிச்சுவேஷன் சாங்க்)

கல்பனா- 

என் பிளாக் பேரு அறிவியல் . எனக்கு இன்னொரு பிளாக்கும் இருக்கு.. பேரு..நான் ரசித்தவை ரசிக்க வாருங்கள் என்னோடு
எனக்கே உரித்தான " என் தேடல்கள் " உங்களுக்காக ..... அப்டின்னாங்க.. ஹலோ மேடம்.. என்ன சொன்னீங்க .. புரியல.. இன்னொரு முறை சொல்லுங்க.. என கூட்டத்தில் ஒருவர் கிண்டல் அடித்தார்.. அவர் ரிப்பீட்டினதும்  உங்க பிளாக் பேர்  இவ்வளவு நீளமா வெச்சதுக்காகவே உங்களுக்கு அவார்டு தரனும்னாங்க.. ஹா ஹா 

அப்புறம் அவர் படித்த கவிதை.. பாதி படிச்சதுமே டி வி சீரியல் ஹீரோயின் ஆகிட்டாங்க..
இனிப்புபால் புகட்டி
 இதழ் படபடத்த
எனை முதற்  கையில் ஏந்தி
சிரிக்கையில் சிரித்து,
அழுகையில் அன்பால்
எனை அரவணைத்தாயே..!!

கைபிடித்து தோழனாய்
நீ நடக்கையில்
தெருக்கள் சுற்றியும்
உலகம் இனித்தே !!

அன்று
சத்தமிடும் சந்தையிலே
சனமிடையே - என்
மனம் வேண்டுவனக்கு
மௌன பட்டியல்
போட்டாயே !!!

வருடலின் தாலாட்டில்
அணைப்புதனை
கர்வங்கொண்டு
பெருமிதத்தில்
உன்னருகே
உறங்கிய நாட்கள் நெருடுதே..!!

பதினாலுவயசுல
ஆளாகி நின்னவள
பதறாம கண்ணெழுதி
 (கல்பானாவின் அப்பா)
உச்சி மோர்ந்து
ஊரே மெச்ச
விழா தொடுத்த
கனம் மறக்குமோ..??!!

பார்பவையனைத்தும்
உன் சாயல் கொண்டுள்ளதே...
என் முக'வரி உள்ளுட்டு!!

தும்மலுக்கு இசைமீட்டி ரசித்தாயே
விம்மலோடு - இன்று
என் விழிகள் உன் இல்லாமையால்..

"உன்ன விட்டு போறேன் பாரு"- என்ற
என் வெகுளி சொல்லுக்கு உடைந்தையே !!
ஆனால் இன்றோ நீ ???
ஏன்ப்பா.........!!!???

இறந்தார் மீள்வரா
ஐயத்திற்கு
சுற்றம் உரைத்தது..!
'நாடு பொறுக்குமா?'
இருப்பினும்
வாழ்கிறாயே
என் சிந்தையில்..!!

உனக்கு
என்றும் ஐயம் - வேண்டாம் அப்பா
நீ உருக
காதலித்த இதயம்
பொக்கிஷமாய்
தாயுருவில்!!!
இவங்க சொந்த ஊரு விருது நகராம்.. கவிதைக்கு விருது உண்டோ இல்லையோ இவங்க அழுகைக்கு விருது உண்டு..


3.

ஜோஸபின் பாபா  

இவர் பேரே இவர் ஒரு சீரியஸ் பதிவர்னு சொல்லிடுச்சு.பொதுவா பதிவர்கள் யார் எழுதுனாலும் அவங்களோட வாழ்க்கைத்துணை அவ்வளவா அதை விரும்ப மாட்டாங்க.. ஏன்னா தன்னை, தன் குடும்பத்தை கவனிக்காம பிளாக்கை கவனிக்கறாங்கலேன்னு ஒரு எண்ணம் உணடு.. ஆனா இவரோட கணவர் ரொம்ப வித்தியாசம்.. அவர் மனைவிக்கு ரொம்ப ஹெல்ப்பா இருக்கார்.. மனைவியை பார்க்கும் பார்வையிலேயே அவரது கண்களீல் பெருமிதம் மிளிர்ந்ததை கண்டேன்.. காட் பிளஸ் தெம் .. (LET GOD BLESS THEM)
 இவர் பேசுனது........

 


வலைப்பதிவு என்பது அறிவாளிகளால் உருவாக்கபடுவது எழுதப்படுவது என்பதிலும் தாண்டி உண்மை உரைக்கும் இதயத்தால் பேசும் நபர்கள் கொண்டு வழி நடத்தி செல்வதே. ஒரு வலைப்பதிவில் பலவும் வீட்சியும் அதன் தணிக்கையற்ற செய்தி வெளியிடலும் கட்டுபாடற்ற சுதந்திரமான படைப்பு ஆகும்.

வலைப்பதிவுகள் என்பது ஒரு பொழுது போக்கு என்பதையும் தாண்டி சமூக வளர்ச்சிக்கு எடுத்து செல்லவேண்டும். உதாரணமாக திருநெல்வேலி மக்களின் உயிருக்கு எந்த நேரவும் ஆபத்து விளவிக்கும் கூடன்குளம்  அணு-உலை போன்ற வற்றின் செய்தியே மக்கள் மத்தியில் கொண்டு செல்ல உதவ வேண்டும்.

வலைப்பதிவுகள், பொழுது போக்கு அம்சம் என்பதை கடந்து கருத்துரையாடலுக்கு , மாற்று ஊடகமாகவும், தகவல்களை சிறப்பாக பறிமாறி கொள்ள, சமூக சீர்திருத்தம் என பல நிலைகளில் பங்கு ஆற்றுகின்றது. வலைப்பதிவுகள் என்றாலே நாட்குறிப்பீடு என்று ஒரு பொதுவான எண்ணம் உண்டு. ஆனால் வலைப்பதிவுகள் என்பது 3 வகையாக பிரிக்கலாம், நாட்குறிப்புப் பேடு(diary) வகை சார்ந்தது, நோட்டு புத்தகம்(note book)வகை மற்றும் ‘தேடி தேர்ந்து எடுக்க தகுந்தது’ (filter blog) என 3 ஆக வேர்படுத்தலாம்.

வலைத் தளத்தின் ஒரு பாகமான வலைப்பதிவுகளை பொழுது போக்கு அம்சம் என்பதை கடந்து ஈழம் என்ற தங்கள் அடையாளத்தை பேணவும், வெகுசன ஊடங்களால் உண்மையான செய்திகள் அரசியல் காரணங்களால் மறுக்கப் பட்ட போதும் மழுங்கடிக்கப் பட்ட போதும் தங்கள் ஒருவருக்கு ஒருவர் கருத்துக்களை பறிமாற வலைப்பதிவுகள் உலகில் பல நாடுகளில் தஞ்சம் அடைந்துள்ள ஈழ தமிழர்களை உதவியது என்று ஆய்வு முடிவில் எட்டியுள்ளேன். மேலும் நிலைத்தை தன் உடமை உறவுகளை இழந்த ம்க்கள் தங்கள் வலைப்பதிவு வழியாக தங்கள் உணர்வுகளை பகிர்ந்து கொள்ள  ஈழம் என்ற தங்கள் அடையாளத்தை வாழ்வை பதிவு செய்ய வலைப்பதிவுகள் பெரிதும் பயண்படுத்துகின்றனர்.

ஊடகத்தின் பணியான அடி நிலை மக்களின்  செய்தியை பெருவதிலும் அதை மக்கள் மத்தியில் கொண்டு சேர்ப்பதிலும் பெரிதும் பங்கு ஆற்றுகின்றது என்றால் மிகையாகாது. என் நிலத்தின் நடக்கும் நிகழ்வுகளை உதாரணமாக எடுத்து கொண்டால் என் பிறந்த ஊரில் நடந்த சபரிமலை ஆபத்து என்பது எங்கோ ஒரு மூலையில் குடியிருக்கும் பத்திர்க்கையாளர்களை விட அந்த மண்ணின் மக்களுக்கு பெரிதும் தெரிந்திருக்கலாம்.  இது வலைப்பதிவாக வரும் சூழலில் உண்மைக்கு வலு  சிறப்பு சேர்க்கின்றது.

அடுத்தாக நம் செய்திகளை மிகவும் துரிதமாக  மிகை குறைந்த செலவில் ஒரு கூட்டம் ஜெனங்களிடம் ஒரே நேரம் கொண்டு சேர்க்க இயல்கின்றது.
வலைப்பதிவுகள் பொழுது போக்கு அம்சம் என்பதையும் கடந்து அவன் சிந்தனை நிலையை தட்டி எழுப்பும் சூழல் உருவாக்குகின்றது.

13 வருடங்களுக்கு முன்பு நான் சென்ற வீடல்ல இன்று என்னுடையது. இன்று நான் வாழ்ந்த அறை என் மேசை கட்டில் ஏன் நான் இந்த உலகை நோக்கிய என் அறைகள் அதன் சன்னல்கள் எல்லாம் என்னில் இருந்து பிரித்தெடுக்கபட்டதாக உண்ர்ந்தேன். என் வீடு என் குழந்தைகள் கணவர் என்று இருக்கும் போது என்னில் இருந்து பிரித்து எடுக்கப்பட்ட நிலம் இடம் உறவு சார்ந்த வேதனைகளை என் உணர்வுகளை பங்கிட இயல்கின்றது என்பதும் இதன் சிறப்பே.

இவர் இதை பேசறப்ப அழுதுட்டார்.. இலங்கை அகதிகளின் மனக்குமுறல்கள் இவரது பேச்சில் வெளிப்பட்டது..
 4. chella நாய்க்குட்டி -ரூஃபினா.

இவர் தன்னோட சோக நினைவுகளை பகிர்ந்துக்கிட்டார்.. என்னோட அப்பா இறந்துட்டார்.. அதை என் பிளாக்ல தகவலாவும்,அஞ்சலியாவும் போட்டிருந்தேன்.. அதை பார்த்துட்டு அவரோட ஸ்டூடண்ட்ஸ்  காண்டாக்ட் பண்ணி தகவலுக்கு நன்றி சொன்னார்.. எங்கெங்கோ இருக்கற சொந்தங்கலை நண்பர்களை இணைக்கற பாலமா பிளாக் இருக்கு..

அப்டீன்னார்..

4. கொஞ்சம் வெட்டி பேச்சு - சித்ரா

இவரைப்பற்றி நான் சொல்லவேண்டியது எதுவுமே இல்லை.. ஒரு பெண் பதிவர் எப்படி இருக்கனும்கறதுக்கு இவர் ஒரு முன் உதாரணம்.. இவரை தாக்கி எழுதுனாக்கூட சிரிச்சிக்கிட்டே திட்டுவாரு.. சிரிக்காத சித்ராவை யாராலும் பார்க்கவே முடியாது.. எதுக்கெடுத்தாலும் சிரிப்புதான்.. ஆனா பேசறப்ப கொஞ்சம் சீரியஸ் ஆனார்.. ” நான் ஒரு முறை நடு நிசி நாய்கள் பட விமர்சனத்துக்கு கமெண்ட் போட்டேன்.. அந்த விமர்சனம் எழுதுனவர் என்னோட ஃபேமிலி ஃபிரண்ட்.. ஆனா ஒருத்த தனி மெயில்ல 18+ பதிவுக்கு வழக்கமா நீங்க கமெண்ட் போட மாட்டேங்களே.. இதுக்கு மட்டும் ஏன்? அப்டின்னு கேட்கறாங்க..  ஒரு பெண் பதிவர் தன்னோட கருத்தை சுதந்திரமா தெரிவிக்க முடியறதில்லை.. எத்தனை எதிர்ப்புகள்.. எல்லாவற்றையும் தாண்டித்தான் நாங்க செயல்பட வேண்டி இருக்கு..  அப்டின்னு சலிச்சுக்கிட்டார்.. ( ஒரு உபரித்தகவல்.. அப்டி மெயில் அனுப்பிக்கேட்ட பதிவர்.. 6 எழுத்தில் பிளாக் நேம், 9 எழுத்தில் அவர்  பெயரும் கொண்டவர் )

 தொடரும்

Wednesday, June 22, 2011

நெல்லையில் நான் ஆற்றிய உரை (இவர் பெரிய டீ மாஸ்டரு..!!) நெல்லை பதிவர் சந்திப்பு பாகம் 3

 


இடம் இருந்து வலமாக முதல் நபர் புது பதிவர்,பெயர் சொல்ல விரும்பவில்லை (PVS),சி.பி ,கோமாளி செல்வா,கூலிங்க் க்ளாஸ் மணி வண்ணன் (வம்பை விலைக்கு வாங்குவோம்ல), வலைச்சரம் சீனா,தாதா தமிழ்வாசி பிரகாஷ்,அவரால் மிரட்டப்படுவது ரசிகன் ஷர்புதீன்

ஜாலியாகபோய்க்கொண்டிருந்த பதிவர் சந்திப்பு நான் பேச எழுந்த போது ஒரு மவுன அலை அரங்கில் நிலவியது.. வீட்டில் மாப்பிள்ளை பார்த்துட்டாங்க.. இனி நம்ம காதல் அவ்வளவு தான் என்று காதலி சொன்னதும் காதலனிடம் ஏற்படும் இறுக்கம் போலவும்,வேலையை விட்டு டெர்மினேட் செய்யப்பட்ட ஊழியரின் கடைசி நாள் பணி நடக்கும்போது ஏற்படும் சங்கடம் போலவும்,சாப்பிட்டுக்கொண்டிருக்கும்போது யாராவது பசியுடன் நம்மை கை ஏந்தும்போது நம் வயிற்றுக்குள் தோன்றும் அழுகை போலவும் அரங்கில் ஒரு அசாதாரணமான அச்சுறுத்தும் அமைதி பரவியது.. 

பதிவுலகில் நான் வந்ததிலிருந்து இன்று வரை எனக்கு ஏற்பட்ட எதிர்ப்புகள்,அப்போது நான் அவற்றால் பாதிக்கப்படாதது போல் வெளியே காட்டுக்கொண்டு உள்ளுக்குள் அழுது கொண்ட சம்பவங்களை நினைவு கூற முடிவு செய்தேன்..

மன பாரங்களை உள்ளுக்குள் இருத்தி வைக்கும் வரை அவை நனைந்த பஞ்சு மூட்டை போல கனமாகவும்,யாரிடமாவது கொட்டித்தீர்த்தால் அது காற்றில் பறக்கும் தூசி போலவும் எளிதாகிவிடும் என்பதால் நான் எல்லாவற்றையும் ஓப்பனாக பேசி விட துணிந்தேன்..


1. என் மேல் வைக்கப்பட்ட முதல் குற்றச்சாட்டு - நான் ஹிட்சுக்காக எழுதுகிறேன் என்பது..

ஒரு பையன் ஸ்கூ;ல்லயோ,காலேஜ்லயோ படிக்கறான்னா அவனும்,அவனோட பெற்றோர்களும் அவன் முதல் ரேங்க் வாங்கனும்னு நினைப்பாங்களா? ஏதோ படிச்சா போதும்னு நினைப்பாங்களா?

எல்லாருக்கும் தான் முன்னணில இருக்கனும், தான் பாராட்டுப்பெற வேண்டும் என எண்ணம் இருக்கும்.அது தான் எனக்கும் இருக்கு.. நீ எந்த வேலை செஞ்சாலும் அதுல பெஸ்ட்டா இரு.. என்பதே எனது கொள்கை.. இதுல என்ன தப்பு இருக்கு..?

நான் பொழுது போக்குக்குத்தான் எழுதறேன்.. எனக்கு எந்த வெறியும் இல்லைன்னு  சொல்றவங்க தாராளமா அப்படி இருந்துக்கலாம்.. நான் கேட்கலையே.. எனக்கு எது சரின்னு படுதோ அதை நான் செய்யறேன்.. உங்களுக்கு எது சரின்னு படுதோ அதை நீங்க செய்ங்க.. அடுத்தவனை குறை சொல்லாதீங்க.. 

பதிவுலகுல என்ன பதிவு போட்டா மக்களுக்கு யூஸ் ஆகும்னு பார்த்து பதிவு போடுங்க.. அவன் என்ன பண்றான், இவன் என்ன சொல்றான், இவனை போட்டு தாக்குவோம்னு ஏன் நினைக்கறீங்க.. அவங்கவங்க வேலையை அவங்கவங்க பாருங்க..
2. நான் ஆனந்த விகடன் குரூப்  பத்திரிக்கைகளிடம் இருந்து  பதிவுகளை காப்பி பேஸ்ட் பண்றேன் என்பது.. 

அமரர் சுஜாதா கற்றதும் ,பெற்றதும்ல அவருக்குப்பிடிச்ச ,அவர் படிச்ச நல்ல படைப்புகளை பகிர்ந்துக்கிட்டாரு.. எழுத்தாளர் சாவி என்னைக்கவர்ந்த படைப்புகள்னு ஒரு தொடர் எழுதுனாரு..
அவங்களோட கம்ப்பேர் பண்ண எனக்கு தகுதி இல்லை.. ஆனா அதே மாதிரி நான் எனக்குப்பிடிச்ச ,மக்களுக்குப்பயன் அளிக்கும் என நான் நினைக்கும் படைப்புகளை காப்பி பேஸ்ட் பண்றேன்.. இதுல என்ன தப்பு?

ஆனந்த விகடனின் சேல்ஸ் 8 லட்சம், நம் வலை உலகை ஆக்ரமித்திருக்கும் படைப்பாளிகள் 1789 பேர்.. படிப்பாளிகள் சுமார்  10,000 பேர்.. அதில் என் தளத்திற்கு வந்து படிப்பவர்கள் சுமார் 1000 டூ 2000 பேர் மட்டுமே.. அப்படி இருக்கும்போது நான் காப்பி பேஸ்ட் செய்து பதிவு போட்டால் அதனால் பத்திரிக்கை  சேல்ஸே குறைஞ்சிடும் என்பதும்,அதனால் விகடனில் படிக்க சுவராஸ்யம் இல்லாமல் போய் விடும் என்பதும் கேலிக்கூத்து.. எத்தனை பேர் அவள் விகடன், சக்தி விகடன்,நாணயம் விகடன் வாங்கறாங்க? அப்படி வாங்காதவங்க வந்து படிக்கறாங்க.. பயன் உள்ளதா சொல்றாங்க.. உங்களுக்கு ஏன் கஷ்டமா இருக்கு..?

3. கில்மா படங்களின் விமர்சனம் போடறார் என்ற குற்றச்சாட்டு..

சீன் படம் என்று அழைக்கப்படும் கில்மா பட விமர்சனங்கள் போடறாதல சமூகமே சீரழிஞ்சிடுச்சு.. சி.பி சமுதாயத்தையே கெடுத்துட்டாரு என்பவர்களே.. 
a
 
 பேசுவது ஸ்ரீவில்லிப்புத்தூர் ரத்னவேல்,உணவு உலகம்,வலைச்சரம் சீனா,பலா பட்டறை சங்கர்
 
என் கில்மா பட விமர்சங்களில் ஆபாசமான வர்ணனையோ,உணர்ச்சியை தூண்டும் எழுத்துக்களோ இருந்ததுண்டா..?சீன் படம் பார்க்கப்போகும் ஆண் எப்படி சங்கடப்பட்டுக்கிட்டே தியேட்டருக்குப்போறான் என்பதை காமெடியாகத்தான் சொல்வேன்.. 

சரி , நான் கலாச்சாரக்காவலர்களை ஒன்று கேட்கிறேன்.. நான் அந்த மாதிரி பட விமர்சனங்கள் இதுவரை 19 போஸ்ட் போட்டிருக்கிறேன்.. அந்த பட விமர்சனங்கள் 1500 பேர் படித்தார்கள்.. பல பதிவர்கள் என் பிளாக் லிங்க் குடுத்து இங்கே போய்ப்பார்.. எவ்வளவு மொக்கையா பதிவு போடறான் என சொல்லி மேலும் 2000 பேர் படிக்க காரணம் ஆகிறீர்களே.. உங்களிடம் ஒரு கேள்வி.. 

நான் எத்தனையோ நல்ல போஸ்ட் போட்டேன்.. புது வருட பிறப்பன்று புத்தாண்டில் நாம் எடுக்க வேண்டிய சபதங்கள் என்னும் விழிப்புணர்வு பதிவு போட்டேன்.. அது 180 பேர் மட்டும் தான் படிச்சாங்க.. அதுக்கு லிங்க் கொடுக்க வேண்டியது தானே..? சி .பி நல்ல பதிவு போட்டிருக்கான் இதை போய் படிச்சுப்பாருங்கன்னு ஏன் சொல்லலை..? 


இந்த சமுதாயம் நல்லாருக்கனும்னு நீங்க உண்மையிலேயே நினைச்சா நான் போட்ட 500 நல்ல பதிவுகளை பாராட்டி லிங்க் குடுங்க.. அப்போ நான் தப்பான பதிவு போட்டா தட்டி கேட்டா அதுல ஒரு நியாயம் இருக்கு.. உண்மையான நண்பன்னா என்ன செய்யனும்?நல்ல பதிவு போடறப்ப பாராட்டனும், மோசமான பதிவு போடறப்ப தட்டிக்கேட்கனும்.. நீங்க என்ன பண்றீங்க.. அண்ணன் எப்போ சறுக்குவான், எப்போ திண்ணையை விட்டு துரத்தலாம்னு பார்க்கறீங்க..?

இப்படி குறை சொல்றவங்களை தனி மெயில்ல நீங்க அந்த மாதிரி படங்கள் பார்ப்பீங்களா?ன்னு கேட்டா ஹி ஹி பார்ப்பேன் , ஆனா பப்ளிக்கா வெளில சொல்ல மாட்டேன்.. அப்டீங்கறார்.
 


4. நடிகைகளின்  கிளாமர் ஸ்டில்களை போட்டு ஹிட்ஸ் ஏற்றிக்கிறார்.. குடும்பப்பொண்ணுங்களை,காலேஜ் பொண்ணுங்களை ஸ்டில்ஸ் ஸா போடறார்..

 ஆரம்பத்தில் ஒரு கவர்ச்சிக்காக நடிகைகளின் கிளாமர் ஸ்டில்ஸ் போட்டேன்.. அதற்கு எதிர்ப்பு வந்ததும் காலேஜ்,ஸ்கூல் விழாக்களில் பெண்கள் படம் இடம் பெற்றதை கூகுள்-ல் இருந்து எடுத்துப்போட்டேன் . இப்போ அதற்கும் எதிர்ப்பு வருகிறது.. இவற்றில் நியாயம் இருப்பதாக நான் நினைப்பதால் இனி என் தளத்தில் ஓவர் கிளாமரான நடிகைகள் ஸ்டில்ஸோ, குடும்பப்பெண்களின்  ஸ்டில்ஸோ இடம் பெறாது என்று சொல்லிக்கொள்கிறேன்.. அதற்குப்பதிலாக இயற்கை காட்சிகள், வித்தியாசமான ரசனை  தூண்டும் படங்கள் போடலாம்னு இருக்கேன்..

5. பதிவுக்கும் ,உள்ளடக்கத்துக்கும் சம்பந்தமே இல்லாமல் டைட்டில் வைக்கிறாரே..?

 ஒரு சினிமாவுக்கு போஸ்டர் எப்படி முக்கியமோ, ஒரு நாவல் அல்லது கவிதைத்தொகுப்புக்கு அட்டைப்படம் எப்படியோ அப்படித்தான் ஒரு பதிவுக்கு டைட்டில் முக்கியம்.. ஒரு வாசகனை நம் தளத்திற்கு அழைத்து வர அது ஒரு கீ வோர்டு.. அது கிளாமராக வைப்பதில் தப்பு இல்லை.. ஒவ்வொரு முறை ஆட்சியாளர்கள் வாக்குறுதி அளிக்கும்போது கவர்ச்சிகரமாக,பொய்யான வாக்குறுதி கொடுத்து நம்மை ஏமாற்ற வில்லையா?அதை நாம் சகித்துக்கொண்டு மீண்டும் மீண்டும் அவர்களை அரியணையில் மாற்றி மாற்றி உட்கார வைப்பதில்லையா?

6. இவரிடம் சரக்கு தீர்ந்து விட்டது.... அதனால் தான் காப்பி பேஸ்ட் பதிவு போடறார்..

நான் பத்திரிக்கை உலகில் 18 வருடங்களாக படைப்புகள் எழுதி வருகிறேன்.. இதுவரை நான் எழுதிய ஜோக்குகள் மட்டும் ஒரு லட்சத்து எட்டாயிரத்து அறுநூறு.. அவற்றில் பத்திரிக்கைகளில் பிரசுரமான படைப்புகள் மட்டும் 9780... தினமும் 10 ஜோக் என்று போட்டாலே நான் 3 வருடங்களுக்கு  பதிவு போடுவேன்.. சரக்கு  இல்லாமல் அல்ல.. தொடர்ந்து ஜோக்காக  போட்டால் போர் அடித்து விடும் என்பதால் தான் வெவ்வேறு சப்ஜெக்ட்ஸ் போடறேன்..


7. சினிமா விமர்சனம் எழுதினால் கேவலமா?

 சினிமா விமர்சனம் எழுதினால் கேவலம் என சிலர் சொல்றாங்க..  ரொம்ப சீப்பா பார்க்கறாங்க.. சினிமா விமர்சனம் எழுதுவது தான் பதிவு போடறதுலயே  ரொம்ப சிரமம்.ஒரு மொக்கைப்படத்தை ரெண்டரை மணி நேரம் உட்கார்ந்து பார்க்கனும்,அதை நினைவு வெச்சுக்கிட்டு ஒரு மணி நேரம் டைப் பண்ணனும்..
அந்தப்படம் கம்ர்ஷியல் ஹிட்டா? இல்லையா? என்பதை கணிக்கனும்,விகடன் மார்க் எவ்வளவு போடுவாங்க என போடனும்.. 


சினிமா விமர்சனத்தில் எதற்கு வசனங்களை ப்போடறீங்கன்னு கேட்டாங்க.. 

பதிவுலகில் ஏற்கனவே சினிமா விமர்சனம் எழுதுவதில் வல்லவர்களான கேபிள் சங்கர்,ஜாக்கிசேகர்,உண்மைத்தமிழன், அதிஷா மற்றும் பலரது விமர்சன நடையில் இருந்து மாறவும், தனித்திருக்கவும், எனக்கென ஒரு அடையாளத்தினை ஏற்படுத்தவும் அந்த வசனங்கள் எழுதும் உத்தியை கொண்டு வந்தேன்..

இதற்கு மேல் ஏதாவது கேள்விகள் என்னை கேட்க வேண்டுமானால் கேளுங்கள் பதில் சொல்கிறேன்.. 


- தொடரும்.. 

டிஸ்கி - பாகம் 4 -ல் பெண் பதிவர்கள்  6 பேர் என்ன பேசினார்கள் என்பதும், பாகம் 5 இல் மீதி உள்ள பதிவர்களின் பேச்சும் இடம் பெறும்

Tuesday, June 21, 2011

திருநெல்வேலி அல்வாடா.. வடை வாங்கி செல்வாடா.. நெல்லை பதிவர் சந்திப்பு பாகம் 2



நெல்லை பதிவர் சந்திப்பு பற்றி பேச ஆரம்பிக்கும்போதே ஆன் லைன் -ல் அனைவரும் அந்த சந்திப்பை காண வேண்டும் என்ற அளப்பரிய ஆர்வம் இலங்கை அலப்பறை மன்னன் நிரூபனுக்கு இருந்தது.. பதிவர் சந்திப்பு அன்று அவர் ஆஃபீஸ்க்கு லீவ் போட்டுட்டு வீட்ல காத்துட்டு இருந்தார்..


யார் செய்த பாவமோ,அண்ணன் உணவு உலகம் போன ஜென்மத்துல  எந்த ஃபிகரை ஏமாத்தி சாபம் வாங்குனாரோ ஹோட்டல்ல நெட் ஒர்க் ஆகலை..

என்னென்னமோ முயற்சி செஞ்சு பார்த்தோம், முடியலை.. நிரூபனை ஒரு வழியா சமாதானப்படுத்திட்டு  பதிவர் சந்திப்பு  கூட்டம் ஆரம்பம் ஆச்சு..


எல்லாரும் அவங்கவங்களைப்பற்றி ஒரு வரி அறி முகம்..

பெயர் சொல்ல விருப்பம் இல்லை (ஹூம் இப்படி ஒரு பிளாக்கர் பேரா/) ஆள் செம காமெடியா இருந்தார்.. கன்னிப்பொண்ணுங்க பொதுவா பசங்களுக்கு என்ன சாத்துவாங்களோ அதை நெற்றில இட்டிருந்தார் .. ( அதாங்க நாமம்)

ரசிகன் ஷர்புதின் அப்பாஸ் மாதிரி இருந்தார்.. ( தனி மெயில்ல அஜித் மாதிரி தான் இருக்கறதா போடனும்னு மிரட்னாரு.. )

மேலும் ஒவ்வொருத்தர் பற்றியும் வர்ணிக்கறதுக்குள்ள  புரோக்ராம் ஸ்டார்ட் ஆகிடுச்சு..

லேப்டாப் மனோ பேசறான் (ர்),அருகில் அண்ணன் உணவு உலகம்,வலைச்சரம் சீனா ,பலாபட்டறை சங்கர், அப்பாஸ் ரசிகன் ஷர்புதீன்


நிகழ்ச்சியின் 2 வது கட்டமா கோபி காதல் மன்னன் கோமாளி செல்வா  கதை விடும் நேரம்.. ( கோபி மாவட்டம் பாரியூர் என்ற ஊரில் மட்டும் எங்கள் தங்கத்தலைவன் செல்வாவுக்கு 3 காதலிகள் ஹி ஹி .. அந்த ஃபிகர்களோட ஃபோட்டோ வேண்டுபவர்கள் செல்வாவிடம் தனி மெயிலில் கேட்டுப்பெற்றுக்கொள்ளவும்,.. )


கோமாளி செல்வாவைப்பற்றி ஒரு அறிமுகம்,, அவர் பிளாக் உலகில் உள்ள மிக முக்கியமான நகைச்சுவை எழுத்துக்கு சொந்தக்காரர்..செல்வா கதைகள் என அவர் எழுதி வருவது முல்லா கதைகளுக்கு இணையானது..  இவர் பத்திரிக்கை உலகை கலக்கும் நாள் வெகு தொலைவில் இல்லை.. இவர் இப்போதே ட்விட்டர் அக்கவுண்ட்டில் பின்னிட்டு இருக்கார்.. ஆனந்த விகடனில் 5  ட்வீட்கள் வந்துள்ளது..இவர் என்னை விட வயதில் குறைந்தவராக இருந்தாலும் திறமையில்,நகைச்சுவையில் ,பழகும் பண்பில்,கண்ணியத்தில் மிக மிக உயர்ந்தவர்.. 


கோமாளி செல்வா மீது நான் நல்ல மரியாதை வைத்திருக்கிறேன். ஆனால் அவர் கதையை படிக்க உங்கள் சுவராஸ்யத்துக்காக அவரை செந்திலாகவும் , என்னை கவுண்டமணியாகவும் கற்பனை செய்து கொள்க.. இந்த உரையாடலில் ஏற்படும் மரியாதைக்குறைவான வசனங்களுக்கு மன்னிக்கவும்..செல்வாவின் குடும்பத்தார்கள், அவரது நண்பர்கள் ,அவரால் கழட்டி விடப்பட்ட, இனி கழட்டி விடப்போகிற காதலிகள் அனைவரும் என்னை மன்னிக்கவும்.. ஹி ஹி



எல்லோருக்கும் வணக்கம். எனக்கு இந்தக் கதையை எப்படி ஆரம்பிக்கிறதுனே தெரியல. 

 சி.பி - அப்போ ஆரம்பிக்காதே.. நாங்க தப்பிச்சுக்கறோம்.. 


காரணம் என்ன விட பெரிய பெரிய எழுத்தாளர்கள் எல்லாம் இருக்கீங்க. அந்த பயம்தான். அதுவும் இல்லாம இது ஒரு மொக்க கதை.

 சி.பி- ஒரு மொக்கைப்பையன் கிட்டே இருந்து வேற எதை எதிர்பார்க்க முடியும்?


தயவு செஞ்சு கோபப்பட்டுறாதீங்க. சீக்கிரமே முடிச்சிடறேன்.

 சி.பி - கதையையா? எங்களையா? 

கூடவே இத நான் பேச்சு வழக்குல இல்லாம உரைநடை வழக்குல சொல்லப்போறேன். அது எப்படி இருக்குனு நீங்க கேட்டு முடிச்சதுக்கு அப்புறம் சொல்லுங்க!

சி.பி - உயிரோட இருந்தா சொல்றோம்.. 


நீங்கள் இந்தப் பதிவர் சந்திப்பிற்கு மன்னிக்கவும் நண்பர்கள் சந்திப்பிற்கு வரும்போது பூனை குறுக்கே செல்லுதல் போன்ற சகுனங்கள் ஏற்ப்பட்டு அது மூட நம்பிக்கை என்று உதாசீனப்படுத்திக்கொண்டு வந்திருந்தால் நான் சொல்லப்போகும் இந்தக் கதை உங்களின் அந்த எண்ணத்தை மாற்றிவிடும்.

சி.பி - பூனை குறுக்கே வர்லை.. ஒரு யானை தான் குறுக்கே வந்துச்சு.. லேப் டாப் மனோ.. தான் மப்புல  குறுக்கே வந்தான்.. ஹா ஹா 


முதலில் உங்களுடன் சிறு கேள்வி ஒன்று இருக்கிறது. உங்களில் யாருக்கேனும் இன்று காலை சூரியன் உதித்ததிலிருது இப்பொழுதுவரை எத்தனை நாளிகைகள் ஆகியுள்ளன என்று துல்லியமாகத் தெரியுமா ?


சி.பி - நாளிகையா? நாழிகையா? டவுட்டு/....

உங்களுக்குத் தெரியாதென்பது எனக்குத் தெரியும். உண்மையைச் சொல்லப்போனால் எனக்கும் அதுபற்றித் தெரியாது.


சி.பி - அடங்கொய்யால.. உனக்கும் தெரியாதா> அப்புறம் என்ன இதுக்கோசரம் என்னை கேட்டே? 

இன்னொரு முக்கியமான செய்தி என்னவென்றால் நாளிகைக் கணக்கிற்கும் நமது கதைக்கும் எந்தவித சம்பந்தமும் இல்லையென்பதே. ஆகையினால் நாம் கதையைத் தொடரலாம். கதையின் சில இடங்களில் புயல் , மழை வருமென்பதால் எல்லோரும் தயவு செய்து உங்களது குடைகளைக் கையுடன் எடுத்துக்கொள்ளுங்கள்.

 சி.பி - குடையை கையில் எடுத்த வை கோ வுக்கு  நேர்ந்த கதி எங்களுக்கும் வரனுமா? 



சுமார் 2100 வருடங்களுக்கு முன்னர் தமிழ் பீட்டர் என்றொரு குறுநில மன்னன் இருந்தான் என்று உங்களுக்குத் தெரியுமா ? தெரிந்திருக்க வாய்ப்பில்லை. ஏனெனில் உங்களில் யாரும் 2100 வருடங்களாக வாழ்ந்துவருபவர்களாகத் தெரியவில்லை.

சி.பி - இந்த கூட்டத்துலயே  கோவை டாக்டர் கந்த சாமியும்,உணவு உலகம் அண்ணனும் தான் சீனியர்ஸ்.. நீ எல்லாரையும் விட சீனியர் போல..

இருந்தாலும் நான்தான் திருவள்ளுவரின் வகுப்பாசிரியர் என்றும் நான் கணிதப்பாடம் நடத்தியதால் வெறுத்துப்போன திருவள்ளுவர் திருக்குறளை இயற்றினார் என்றும் உங்களில் யாரேனும் எழுந்து நின்றோ அல்லது உட்கார்ந்து கொண்டோ சொல்ல வாய்ப்புள்ளது என்ற அச்சத்தால் அந்த மன்னன் எனது கற்பனையில் வந்தவன் என்பதையும் கூற விழைகிறேன்!

 சி.பி - முப்பொழுதும் உன் கற்பனைகள் ஏன் இவ்வளவு கேவலமா இருக்கு..? நாயே... நாயே.. 


கோபியின் காதல் மன்னன் எங்கள் அண்ணன் கோமாளி செல்வா ,வம்பை விலைக்கு வாங்குவோம்ல மணிவண்ணன்
( கூலிங்க் கிளாஸை மறந்துட்டு வந்துட்டாராம்.. )

தமிழ் மன்னனுக்கு அதுவும் 2100 ஆண்டுகளுக்கு முந்தய மன்னனுக்கு எப்படி தமிழ் பீட்டர் என்றொரு ஆங்கிலப்பெயர் வந்தது என்கிற உங்களின் சந்தேகம் நியாயமானதாக இருந்தாலும் இல்லாவிட்டாலும் நான் அதற்கான காரணத்தை நள்ளிரவு 12 மணிவரை விழித்திருந்து எழுதித் தொலைத்துவிட்டதால் மன்னிக்கவும் எழுதி கையுடனே கொண்டுவந்திருப்பதால் நீங்கள் கேட்டுத்தான் ஆகவேண்டும்.

சி.பி - என்ன? கலைஞரை சோனியா மிரட்டி 63 சீட் வாங்குன மாதிரி மிரட்றே? 

அதிக தமிழர்கள் உள்ள இடத்தில் தேவையில்லாமல் ஆங்கிலத்தில் பேசுபவரை நாம் பீட்டர் விடுறான் என்று சொல்கிறோம். அதைப்போலவே நமது மன்னர் ஒரு சமயம் அரசு வரிப்பணத்தில் வெளிநாட்டைச் சுற்றிப்பார்க்காவிட்டால் தான் மன்னராயிருப்பதற்கே தகுதியற்றவர் என்ற என்று நினைத்ததால் இங்கிலாந்தைச் சுற்றிப்பார்க்கச் சென்றிருந்தார்.

சி.பி - அட பொழப்பு கெட்ட மன்னா.. மன்னர்னா அந்தப்புரத்தை சுத்திப்பார்க்கனும்.. 

அப்பொழுது இங்கிலாந்தில் பிறந்த இரண்டுவயதுக் குழந்தை கூட ஆங்கிலத்தில் பேசுவதைக் கண்டு ஆச்சர்யப்பட்டார். அந்த நேரத்தில் அங்கு வந்த ஒரு வாலிபன் நமது மன்னரிடம் சில கேள்விகளைக்கேட்டன். மன்னரும் எவ்வளவோ முயன்றும் வாயில் வார்த்தைகளே வரவில்லை. அவருக்கு ஆங்கிலம் தெரியாதுதான் காரணம் என்று நீங்கள் நினைத்தால் அதற்கு நான் பொறுப்பல்ல.


சி.பி - டேய் டேய்.. சீக்கிரம் மேட்டருக்கு வாடா.. பொறுப்பல்ல பருப்பல்லன்னு என்னடா இழுவை.. 

ஏனெனில் என் குலதெய்வத்தின் மீது சத்தியமாகச் சொல்கிறேன் நான் அவரை ஆங்கிலம் கற்க வேண்டாமெனச் சொல்லவேயில்லை. சரி கதைக்கு வருவோம்.


சி.பி - உன் குள தெய்வம்  அடச்சே... குல தெய்வம் ஹன்சிகா மோத்வாணி தானே?

பதிலேதும் பேசமுடியாமல் நின்றிருந்த நம் மன்னர் திடீரென தமிழில் பேச ஆரம்பித்தார். மன்னர் பேசியது அந்த இளைஞருக்கோ அல்லது அந்த இளைஞர் பேசியது நம் மன்னருக்கோ புரியவில்லை.

சி.பி - இப்போ நீ பேசறது  மட்டும் எங்களுக்குப்புரிஞ்சிடுச்சாக்கும்.. நாயே நாயே..

எனவே ஆங்கிலம் அதிகம் பேசுவோர் இருக்கும் இடத்தில் தமிழில் பேசியதால் நம் மன்னரின் பெயர் அன்றிலிருந்த தமிழ் பீட்டர் என்றானது.


சி.பி - வேட்டிப்பேச்சு சித்ராவை நக்கல் அடித்ததற்காக எனது கடும் கண்டனங்கள் ஹி ஹி நாங்களும் கோர்த்து விடுவோமில்ல. ஏஹே ஹேய்  

மன்னரின் பெயர்க்காரணத்திற்கே இவ்வளவு நேரம் ஆகிவிட்டபடியால் விரைவில் இந்தக் கதையை முடிக்க முயற்சிக்கிறேன்.

சி.பி - உன்னை முடிச்சா போதும் ,கதை உடனே முடிஞ்சிடும்.. 


சிறிது நாட்களுக்குப் பிறகு இங்கிலாந்து சுற்றுப்பயணத்தை முடித்துக்கொண்டு நாடு திரும்பிய மன்னருக்கு பெரிய அதிர்ச்சி காத்திருந்ததது.

 சி.பி - ஏன் பட்டத்து ராணி குப்பத்து கோபால் கூட ஊடிப்போயிடுச்சா?

அது என்ன அதிர்ச்சி என்று தெரிந்துகொள்ள சிறிய விளம்பர இடைவேளை விடலாம் என்றிருந்தேன். விளம்பரத்திற்காக நான் பட்ட இன்னல்கள் கொஞ்சம் நஞ்சமல்ல. சில சோப்பு நிறுவனங்களிடமும், எங்கள் ஷாம்பூ போட்டு பல்லு விளக்கினால் பற்களில் கூட முடி முளைக்கும் என்று விளம்பரம் செய்யும் விளம்பரக் கம்பனிக்காரர்களிடமும் எனது கதைக்கு நீங்கள் ஸ்பான்சர் செய்யுங்கள் என்று நீண்ட நேரம் போராடினேன். பலனில்லை . அவர்கள் சொன்ன ஒரே பதில் மானாடி , மயிலாடி கெமிஸ்ட்ரி வந்தால்தான் நாங்கள் ஸ்பான்சர் செய்வோம் என்றதுதான்.

சி.பி - கலைஞர் டி வியை நக்கல் அடிக்கற அளவு பெரிய ஆள் ஆகிட்டயா ராஸ்கல். இதுக்கு தண்டனையா கலா மாஸ்டரை க்ளோஸப்ல மேக்கப் இல்லாம ஒருக்கா, ஃபுல் மேக்கப்போட மறுக்கா காட்டனும்டா..  (ஒருக்கா ,மறுக்கா ,கலாக்கா அடடே நானும் கவிஞன் ஆகிடுவேன் போல இருக்கே... ஹூம் நம்ம முதல் கவிதையே கலாபூர்வமா அமைஞ்சிடுச்செ..?)

படிக்கும் காலத்திலிருந்தே நானும் கெமிஸ்ட்ரியும் ஒரே நேர்கோட்டில் ஆனால் எதிர் எதிர் திசைகளில் பயணித்ததால் அவர்கள் கேட்டது போல எனது கதையில் கெமிஸ்ட்ரி வராது என்பதால் விளம்பரம் தேடும் எனது முயற்ச்சியைக் கைவிட்டுவிட்டேன்.

 சி.பி - கோபில இருக்கற கெமிஸ்ட்ரி டீச்சர் ஏன் ரிசைன் பண்ணீட்டாங்கன்னு இப்போத்தான் தெரியுது.. பாப்பா எங்கே போனாலும் எதிர்க்கவே அதாவது எதிர் திசைலயே வந்தா எப்படிய்யா?

அதே போல தொடரும் என்று போடுவதற்கு இது ஒன்று தொடர் நாடகமில்லை என்பதால் மறுபடியும் கதையைத் தொடர்கிறேன்.

நாடு திரும்பிய நம் மன்னருக்கு காத்திருந்த பெரிய அதிர்ச்சி என்னவென்றால் வெளிநாடு சென்று வந்த தினத்தன்று மன்னர் அகோரப் பசியிலிருந்தார். அதனால் அன்று பல்லுவிலக்குவதைக் கூட இரு தினங்களுக்கு ஒத்திப்போட்டுவிட்டு நாட்டில் யாருமே பல்லு விளக்கக்கூடாது என்ற சட்டத்தையும் போட்டுவிட்டு பந்தியில் அமர்ந்தார்.

சி.பி - அய்யய்யோ ,ரமேஷ்க்கு ஆபத்தாச்சே.. அவர் பல் துலக்காம சாப்பிட மாட்டாரே?ஓ சி சாப்பாடுன்னா மட்டும் விதி விலக்கு உண்டு.. 


அப்பொழுது என்னைத் தொடாதே என்றொரு சத்தம் கேட்டது.

சி.பி - தம்பி . இது பதிவர் சந்திப்பு , லேடீஸ் எல்லாம் இருக்காங்க.. இது அட்ராசக்க பிளாக் கிடையாது.. எது வேணாலும் சொல்லலாம்கறதுக்கு அடக்கி வாசி அமுக்கி வசி.. 


அதிர்ச்சியில் உறைந்துபோன மன்னர் அந்த சத்தம் இலையில் வைத்திருந்த பச்சியிலிருந்து வருவதைக் கண்டு ஆச்சர்யப்பட்டார்.. மன்னரின் அகோரப்பசி அந்தப் பச்சி சொல்வதைக் கேட்காமல் இரண்டு பச்சிகளை எடுத்து அப்படியே விழுங்கிவிட்டார்.

அப்பொழுது இலையிலிருந்த இன்னொரு பச்சி சொன்னது " பல்லு விளக்காமல் எங்களைச் சாப்பிட்டதால் எதிர்காலத்தில் சான்றோர்களின் முன்னிலையில், உன்னைவிட அறிவாளிகளின் முன்னிலையில் நீ ஒரு மொக்கைக் கதை சொல்வாய் அதற்காக பயந்து நிற்பாய் " என நான் சாபம் அளிக்கிறேன் என்று வாயை மூடுவதற்குள் மன்னர் அந்தப் பச்சியை தனது வாயில் போட்டு மூடிவிட்டார்.

அந்தப் பச்சியின் சாபம் நிறைவேறாது என்று கர்வத்தில் இருந்த நமது மன்னர் சில தினங்களில் இறந்து விட்டார்.ஆனால் நல்லோரின் சாபம் ஊழ்வினை உறுத்துவந்து ஊட்டும் என்கிற சிலப்பதிகார சொற்களை ஞாபகப்படுத்த வைத்துவிட்டது இப்பொழுது! ஆம் அந்த பச்சி சொன்ன சான்றோர்கள் நீங்கள்தான் , பின்னர் அந்த மன்னர் யாரென்று நீங்களே ஒரு முடிவிற்கு வாருங்கள்!


சி.பி - இது தெரியாதா? எங்க பண்ணையார் அண்ணன் ராசலீலா ராசேந்திரன் தான் ,ஏன்னா அவரு தான் 5 செல் ஃபோன் வெச்சிருக்காரு.. செல் ஃபோனே 5 வெச்சிருக்காரே..   சரி சரி அண்ணன் பப்ளிக் பப்ளிக்னு கண் அடிக்கிறார்... விட்ருவோம்.. 



அதற்கு முன்னர் நான் முதலில் கூறியது போல இந்த கதையில் மழை , புயல் வராததற்குக் காரணம் நீங்கள் யாரும் குடை எடுத்துக்கொண்டு வரதாதால் மழை வந்து அதனால் நம் மன்னருக்கும் நாட்டிற்கும் ஏற்பட்ட தீமைகளால் நான்கு நாட்கள் தொடர்ந்து எழுதிய எனது கதையின் நானூற்றி ஐந்தாயிரம் பக்கங்களை உங்களுக்கு சொல்ல முடியாமல் போனது கண்டு வருந்துகிறேன்.

மேலும் முதலில் சொன்னது போல இதில் சகுனங்களை நம்புவீர்கள் என்று சொல்லியிருந்தேன். அதற்குக் காரணம் இந்தக் கதையை கேக்குறதே கெட்ட விசயம்தானே! இப்ப சகுனத்த நம்புரீங்கள்ள :-)


சி.பி -சகுனத்தை நம்பவே முடியாது.. சில சமயம் என்னைப்பார்த்து சிரிப்பா.. சில சமயம் முறைப்பா.. எதிர் வீட்டு ஃபிகர் சகுனத்தை பத்தித்தானே  பேசறே.. ? ஆனா சற்குணத்தை நம்பலாம் .. களவாணி என செம ஹிட் படம் கொடுத்தாரே..?


தமிழ்வாசி பிரகாஷ்,வெறும்பய ஜெயந்த் ( ஜோதி புகழ்)


அடுத்து என் உரை. இதுவரை காமெடியாக போய்ட்டு இருக்கற பதிவு இப்போ கொஞ்சம் சீரியஸ் ஆகப்போகுது..

ஏன்னா வலை உலகில் என்னை குறி வைத்து தாக்கப்படும் பதிவுகள் ,விமர்சனங்களுக்கு நான் நேரடி பதில் அளிக்கப்போகிறேன்.. வித் அவுட் எனி சென்சார்.. ...  கொஞ்சம் ரிலாக்ஸ் பண்ணிக்கறேன்.. ஏன்னா கலர் டோன் மாறுது.. அதுவரை  குட்டி பிரேக்..  (குட்டி = சின்னதா) #நோ டபுள் மீனிங்க் ப்ளீஸ் ஹி ஹி 


டிஸ்கி 1 - இந்தப்பதிவில் வரும் செல்வாவைப்பற்றிய மரியாதைக்குறைவான வார்த்தைகள் பதிவின் நகைச்சுவையை கூட்டவே.. யார் மனதாவது புண்பட்டால் மன்னிக்கவும்.. இப்படிக்கு ஒவ்வொரு பதிவிலும் மன்னிப்பு கேட்பதையே பொழப்பாக வைத்திருக்கும் ஒரு மானங்கெட்ட அடச்சே மானமிகு  பதிவர் ...ஹி ஹி 


டிஸ்கி 2 - படங்கள் உதவி ஸ்மைலி ராணி & அழுகாச்சி காவியம்  கல்பனா ராஜேந்திரன் (பெயர்க்காரணம் பாகம் 4 -ல்) மற்றும் உணவு உலகம் அண்ணன் ராசலீலா ராஜேந்திரன்.. (இவரைப்பற்றி ஒரு கில்மா மேட்டர் பாகம் 5 -ல் )




தொடரும்.........

Monday, June 20, 2011

நெல்லை பதிவர் சந்திப்பும்,நான் வாங்கிய பல்புகளும்


ஜூன் மாசம் 17ம் தேதி வெள்ளிக்கிழமை அன்னைக்கு திருநெல்வேலியில் பதிவர் சந்திப்பு நடந்தது.

ஜூன் 16 நைட் 10 மணிக்கு ஈரோடு ரயில்வே ஸ்டேஷன்ல நாகர்கோயில் எக்ஸ்பிரஸ்ல இடம் பிடிச்சாச்சு..ஈரோடு டூ நெல்லை ரயில் பயணத்தில் என்ன நடந்தது என்பதை ஜூன் 25 அன்று தனி பதிவா போட்டுக்கலாம்.. இப்போ பதிவர் சந்திப்புல என்ன நடந்ததுங்கறதை மட்டும் பார்ப்போம்..


நெல்லையில் காலை 5 மணிக்கு ரயில் ஸ்டேஷன் அடைகிறது.. வரவேற்க யாராவது வந்திருப்பாங்கன்னு பார்த்தா ஒரு பயலையும் காணோம்..  ( ஆமா இவரு பெரிய ஃபிகரு.. ரோசாப்பூ மாலையோட வந்து வரவேற்க.. )

இறங்குனதும் நம்ம உணவு உலகம் ராசலீலா ராஜேந்திரன்க்கு ஃபோன் போட்டா அண்ணன் ஃபோனை எடுக்கவே இல்லை.. அடடா.. இது ரெகுலரா அண்ணன் பதிவு போடற டைம் ஆச்சே..


நடிகர் விக்ரம்,நடிகர் சம்பத் போல சாயலில் கலக்கலாக என் அருகே அமர்ந்திருப்பவர் பலா பட்டறை சங்கர்

சரி.. நாமே ஹோட்டல் பேரை வெச்சு விசாரிப்போம்னு விசாரிச்சுட்டு போனா ஹோட்டல் வாசல்ல லேப் டாப் மனோ படுத்திருக்கான்.. டேய் ராஸ்கோலு.. மப்புல இருக்கியா? எந்திரிலேய்.. என்றேன்..

செம சரக்கு போல.. அப்படியே வாசப்படில உருண்டுட்டு இருக்கட்டும்னு விட்டுட்டு ரிசப்ஷன்ல போய் விசாரிச்சேன்..

திருநெல்வேலி வாசிகள்க்கு ரசனை கம்மி போல.. (நெல்லைவாசிகள் மன்னிக்க) அவ்வளவு பிரமாதமான ஹோட்டல்ல ஒரு பக்கா ஃபிகரை ரிசப்ஷ்னிஸ்ட்டா போடாம ஒரு ஆம்பளையை அப்பாயிண்ட் பண்ணி இருந்தாங்க.என்னது? ஓப்பனிங்கே சரி இல்லையே?ன்னுட்டுயோசிச்சேன்..

சார்.. ரூம் இருக்கா?

ஓ ,இருக்கே.. மொத்தம் 237 ரூம் இருக்கு..

ஓக்கே ஒரு சிங்கிள் காட் ரூம் வேணும்..

அவசரப்படாதீங்க.. ரூம் இருக்கு,ஆனா எதுவும் காலியா இல்லை..

அடிங்கொய்யால.. நம்ம கிட்டேயேவா?ன்னு நினைச்சுட்டு பக்கத்துல உள்ள 6 ஹோட்டல்லயும் விசாரிச்சா எங்கேயும் ரூம் கிடைக்கல.. அது கூட பரவாயில்ல.. எல்லா ஹோட்டல்லயும் லேடி ரிசப்ஷனிஸ்ட் நஹி.. ஹூம்..

அப்புறம் எப்படியோ ஒரு ஹோட்டல்ல ரூம் கிடைச்சது.. ரூம்க்கு போய்ட்டு ராசலீலா ராஜேந்திரன் அண்னனுக்கு மெசேஜ் அனுப்பினேன் (மெசேஜ் அனுப்பினா நாலணா தான் )அண்ணன் ரிப்ளை எதுவும் அனுப்பலை.(அவருக்கு ஒரு ரூபாயாம் மெசேஜ் அனுப்ப)



பதிவுலக தாதா மாதிரி ,ஸ்டண்ட் மாஸ்டர் தளபதி தினேஷ் மாதிரி ,ஹிந்தி வில்லன் மாதிரி தோற்றம் அளித்தாலும் பச்சப்புள்ளய்யா இந்த ஜெயந்த(வெறும்பய)

ஆனா 10 நிமிஷத்துல அண்ணன் ரூம்க்கு வந்துட்டாரு..

நான் தான் ரூம் வேணுமா?ன்னு முதல்லயே கேட்டப்ப வேணாம்னீங்க..

ஆமாண்ணே.. எதுக்கு உங்களுக்கு சிரமம்,நமக்கு கிடைக்காத ரூமா?ன்னு அசால்ட்டா இருந்துட்டேன்..

சரி.. குளிச்சுட்டு ஃபிரஸ் ஆகிட்டு வாங்க நான் ரிசப்ஷன்ல வெயிட் பண்றேன்..

அண்ணே,நான் ஆல்ரெடி ஃபிரஸ் பீஸ் தான்.. குளிச்சாத்தான் ஃபிரஸ்ஸா? அவ்வ்வ்வ்


சரி சரி.. வாங்க..நாம 2 பேரும் டிஃபன் சாப்பிடலாம்..

(ஆஹா.. காலைலயும் ஓசி சாப்பாடா.. டேய் சி பி நீ நிறய புண்ணியம் செஞ்சவண்டா.. )

அண்ணன் ஒரு ஆஃபீசர் இல்லையா?தன்னோட கெத்தை காமிச்சாரு.. டேய் தம்பி.. இதை எல்லாம் க்ளீன் பண்ணு என்ன இப்படி இருக்கு?



நான்,அழுகாச்சி காவியம் புகழ் கவிதாயினி கல்பனா,ஃபாரீன் புயல் சித்ரா,உணவு உலகம் ராசலீலா ராஜேந்திரன்

போன ஜென்மத்துல அண்ணன்  பரங்கிமலை ஜோதி தியேட்டர்ல ஆபரேட்டர் போல.. நல்ல படம் காமிச்சார்.. ஆனா ஒண்ணு அண்ணனுக்கு ஊர்ல செம செல்வாக்கு.. போலீஸ்காரங்க எல்லாம் அண்ணனுக்கு சல்யூட் வெச்சாங்க..

அவரோட ஆஃபீஸ்க்கு கூட்டிட்டு போனாரு.. ஆஃபீஸ்ல அண்ணனுக்கு செம சவுகர்யம்.. ஒரு பெரிய ஹால் 40 * 40 சைஸ்..ஒரே ஒரு சேர்... வெளில இருக்கறவங்க உள்ளே பார்க்க முடியாது.. உள்ளே இருக்கறவங்க வெளில பார்க்கலாம்.. ஹூம்.. அண்ணன் என்னென்னெ தில்லு முல்லு பண்றாரோ//.. ஆனா பதிவர் சந்திப்புக்கும் அண்ணனோட பர்சனல் லீலைகளுக்கும் சம்பந்தம் இல்லாததால மேட்டர்க்கு வரேன்.

இங்கே ஏன் வெயிட் பண்ணனும்? நேரா ஹோட்டல்க்கு போயிடலாம்..?

இருங்க.. இப்போ பலா பட்டறை சங்கரும்,மணிஜி யும்,கவுசல்யாவும் வருவாங்க.. அப்புறம் போலாம்

சொன்ன மாதிரியே பலா பட்டறை சங்கரும்,மணிஜி யும் வந்தாங்க.. சங்கர் அண்னன் ஹிந்தி ஹீரோ கணக்கா  செம கலரா இருந்தாரு,,ஆனா பந்தா எல்லாம் பண்ணலை.. ( இனிமே நாமளும் வெட்டி பந்தா பண்ணுவதை குறைச்சுக்கனும்,, அஜித் மாதிரி இருக்கறவங்களே அடக்கி வாசிக்கறப்ப  அட்டக்கறுப்பா இருக்கற நாம எப்படி இருக்கனும்? )

மணிஜி அண்னன் ஜாக்கிசேகரோட தோஸ்த்.. ஏற்கனவே எனக்கு அறிமுகம், நேரில் இப்போத்தான் பார்க்கறேன்..

அப்போ அண்ணனுக்கு ஃபோன் வந்தது.. பேசுனது கவுசல்யா மேடம்

சார்.. நான் நேரா ஹோட்டலுக்கே வந்துடறேன்.. ஆஃபீஸ்க்கு வர்லை..

ஏம்மா?



அங்கே வந்தேன் .. சி பி அங்கே இருக்கறதை பார்த்தேன்.. அவன் விவகாரம் பிடிச்ச ஆள் ஆச்சே.. பிளாக்லயே நடிகைங்க ஃபோட்டோ எல்லாம் போடுவான்.. எதுக்கு வம்பு..? புரொஃபைல்ல என் ஃபோட்டோ தெரியக்கூடாது.. என் எழுத்து மட்டும் தெரிஞ்சா போதும்னு நினைக்கறேன்.. இவன் பாட்டுக்கு செல் ஃபோன்ல ஃபோட்டோ எடுத்து போட்டுட்டா?

சரி சரி.. ஓக்கே ஓக்கே

அப்புறம் அண்ணன் வந்து சமாளிச்சார்..

மேடம் டிராஃபிக்ல மாட்டிட்டாங்களாம்.. நேரா ஹோட்டல்க்கு வந்துடறதா சொன்னாங்க..

 சரின்னு ஹோட்டல்க்கு  போனோம்..


அங்கே போனதும் “ வாங்க வாங்க வணக்கம்னு ஒரு லேடி வாய்ஸ் கேட்டுது..


ஆஹா, நம்மையும் ஒரு லேடி மதிச்சுட்டாங்களேன்னு நானும் பதிலுக்கு வணக்கம் போட்டேன்..

அந்த மேடம் அண்ணன்  கிட்டே ரகசியமா “ தம்பி யாரு?”ன்னு கேட்டாங்க..

ஹூம் ,யாருன்னு தெரியாமயே இந்த பில்டப்பா? ந்னு நினைச்சுட்டே அக்கா என் பேரு சி.பி அப்டின்னேன்.. அய்யய்யோ அப்டின்னாங்க..

என்ன கொடுமை சார்.. இது? ஆளாளுக்கு பார்த்து பயப்பட நான் என்ன செஞ்சேன்? ஏதோ 19 கில்மா பட விமர்சனம் பண்ணி இருக்கேன்.. ( எண்ணிக்கைல கரெக்ட்டா இருப்போம்ல..?)
 
கோமாளி செல்வா,லேப்டாப் மனோ,நான்(குற்றாலம்)

அவங்க அண்ணன் கிட்டே ஏதோ சொல்லி நைஸா என் செல் ஃபோனை பிடுங்கி வெச்சுக்கிட்டாங்க.. ( நான் ஃபோட்டோ எடுத்துடக்கூடாதாம்)

டாக்டர் கந்த சாமி கோவை ஆல்ரெடி அங்கே இருந்தார்.. அவர் கிட்டே அறிமுகம் நடந்தது..

இம்சை அரசன் பாபு ,வெறும்பய ஜெயந்த்,கோமாளி செல்வா,கல்பனா 4 பேரும் வந்தாங்க..

பாபு ஆள் காலேஜ் பிரின்ஸ் மாதிரி இருந்தாரு.. ஆள் நல்ல ஜாலியா பேசுனாரு.. ஜெயந்த் ஹிந்திப்பட வில்லன் மாதிரி இருந்தாரு.. தெரியாத்தனமா அவர் கிட்டே நான் கை குடுத்துட்டேன்.. குலுக்கறேன்கற பேர்ல கையை கசக்கி எடுத்துட்டாரு..

(அவரோட கோபத்துக்கு காரணம் அவர் எழுதுன ஜோதி தொடர் ல நான் “அப்புறம் ஜோதியை முடிச்சீங்களா? இல்லையா? அப்டின்னு கமெண்ட் போட்டிருந்தேன்.. அதான் , பழி வாங்கிட்டாரு..)

செல்வா ஏற்கனவே பார்த்து அறிமுகம் ஆனவர் தான்.. கைல ஸ்கிரிப்ட் வெச்சிருந்தார் ,காமெடி கதை போல.. மனப்பாடம் பண்ணிட்டு இருந்தார்..

கல்பனா தமிழ்ப்பொண்ணு கணக்கா ஒரு கும்பிடு போட்டாங்க,, நானும் கும்பிடு போட்டுட்டு சுய அறிமுகம் பண்ணுனேன்... (வேற யாரும் என்னை அறிமுகப்படுத்தலை..கலைஞரின் நமக்கு நாமே திட்டப்படி நானே அறிமுகம் பண்ணிக்கிட்டேன்,வேற வழி?)

. என் பேரு.. சி.பி.. அட்ரா சக்க பிளாக் ஓனர்.. (பொல்லாத முதலாளிடா இவனுங்க.. )

அப்டியா.. சாரி.. நான் கேள்விபட்டதில்லை.. கண்ட கண்ட பிளாக் எல்லாம் நான் படிக்கறதில்லைன்னாங்க..

 ஹி ஹி .. நீங்க ஓப்பனா பேசறீங்க.. வெரிகுட்.. ( நற நற.. )

வெட்டிப்பேச்சு சித்ரா வந்தாங்க.. என்னமோ சொல்லீட்டே வந்தாங்க.. எல்லாம் அமெரிக்கன் இங்கிலீசா இருந்ததால எனக்கு ஒண்ணும் புரியல.. (பட்லர் இங்கிலிஸே ஒழுங்கா புரியாது நமக்கு.. )



அப்போத்தான் நம்ம ஆஃபீசர்.. ஒரு வில்லங்கமான காரியத்தை பண்ணுனாரு..

ஒண்ணா நேரடியா என்னை அறிமுகப்படுத்தி இருக்கோனும்.. இல்ல சும்மா விட்டிருக்கனும்.. இவர் பில்டப் குடுக்கறேன்கற பேர்ல..

 சித்ரா மேடம்.. இது (அக்ரிணை) யார்னு தெரியுதுங்களா?

எவனா இருந்தா எனக்கென்ன? ஹா ஹா  ஹா

அப்டின்னாங்க..

ஹூம் நமக்கு நேரமே சரி இல்லையே என நினைக்கும்போதுதான் நிரூபன் ஃபோன் வந்தது..

தொடரும்...