Showing posts with label பேட்டி. Show all posts
Showing posts with label பேட்டி. Show all posts

Monday, March 09, 2015

சரவணப் பொய்கை - இயக்குநர் வி சேகரின் மகன் கார்ல் மார்க்ஸ் சிறப்புப் பேட்டி

  • ‘சரவணப் பொய்கை’ அருந்ததி, காரல் மார்க்ஸ்
    ‘சரவணப் பொய்கை’ அருந்ததி, காரல் மார்க்ஸ்
  • ‘சரவணப் பொய்கை’ படத்தில் ஆர்த்தி, கருணாஸ், அருந்ததி, காரல் மார்க்ஸ்’
    ‘சரவணப் பொய்கை’ படத்தில் ஆர்த்தி, கருணாஸ், அருந்ததி, காரல் மார்க்ஸ்’
  • அப்பாவுடன்...
    அப்பாவுடன்...
நடுத்தர மக்களின் வாழ்வியலை நகைச்சுவை கலந்த யதார்த்தத்துடன் திரைப்படங்களாகத் தந்தவர் இயக்குநர் வி. சேகர். அவருடைய மகன் காரல் மார்க்ஸ், ‘சரவணப் பொய்கை’ என்ற திரைப்படத்தின் மூலம் நாயகனாக அறிமுகமாகிறார். அப்பாவைப் போல இயக்குநர் ஆகாமல் நடிப்புப் பாதையைத் தேர்ந்தெடுத்த காரணத்தை நம்முடன் பகிர்ந்துகொள்கிறார் இங்கே… இது அவரது முதல் பேட்டி.
கதாநாயகர்களைக் கடவுள்போல வழிபடுவதற்கு எதிராக ‘நீங்களும் ஹீரோதான்’ என்ற படத்தை இயக்கியவர் உங்கள் அப்பா. அவரது இயக்கத்தில் ஹீரோவாகியிருக்கிறீர்களே?
அடிப்படையில் அப்பா ஒரு கம்யூனிஸ்ட். எனக்குத் தெரிந்தவரை அவர் நேருக்கு மாறாக நடந்ததில்லை. நடுத்தர மக்களுக்கு விழிப்புணர்வு தரும் கதைகளை மட்டுமே அவர் படமாக்கியிருக்கிறார். வரிசையாக ஆறு 100 நாள் படங்களைக் கொடுத்தவர். நீங்களும் ஹீரோதான் படத்தில் ‘மக்களே கதாநாயகர்கள், அவர்களால் மட்டுமே மாற்றத்தை உருவாக்க முடியும்’ என்று அழுத்தமாகச் சொன்னவர்.
சாமான்ய மனிதர்களைப் பிரதிபலிக்கும் கதாபாத்திரங்களே நிஜமான ஹீரோயிசம் கொண்டவை என்பதில் அதிக நம்பிக்கை கொண்டவர். இன்று தனுஷும் விஜய்சேதுபதியும், சிம்ஹாவும் வென்றிருப்பது மக்களின் முகங்களாகத்தான். ஹீரோயிசத்தால் அல்ல. நானும் இந்த எளிய பாதையில் வர வேண்டும் என்றே யதார்த்த நாயகனாக என்னை அறிமுகப்படுத்துகிறார். கதாநாயகனாக இருப்பதைவிட கதையின் நாயகனாக இருப்பதையே நானும் விரும்புகிறேன்.
சரவணப் பொய்கை என்ற தலைப்பைப் பார்க்கும்போது இதுவொரு பக்திப் படம்போல் தெரிகிறதே?
இது முழுக்கக் முழுக்க காதல் படம். பழனி அருகிலுள்ள சரவணப் பொய்கைக் கோயில் ஊரைச் சுற்றிக் கதை நடைபெறுவதால், இந்தத் தலைப்பைத் தேர்ந்தெடுத்தோம்.
உங்கள் அப்பா குடும்பப் பாணியிலிருந்து எதற்காகக் காதல் கதைக்குத் தாவியுள்ளார்?
அவரது கதை பாணியைத் தொலைக்காட்சிகள் எடுத்துக் கொண்டுவிட்டன. அவருடைய பெண் ரசிகர்களும் டிவிலேயே செட்டில் ஆகிவிட்டார்கள். அதனால் இன்றைய இளம் ரசிகர்களுக்கு ஏற்ற வகையில் நல்ல காதல் கதையை இயக்கியுள்ளார். அதேநேரத்தில் அவரது யதார்த்தமான நகைச்சுவையும் விறுவிறுப்பான திரைக்கதையும் சரவணப்பொய்கையில் இருக்கும். அவருக்கு இந்தப் படம் ஒரு புதிய ஸ்டைலாக இருக்கும்.
என்னமாதிரியான கதாபாத்திரத்தில் அறிமுகமாகிறீர்கள்?
கணக்கம்பட்டி என்ற கிராமத்தில் உள்ள தியேட்டரில் டிக்கெட் கொடுக்கும் ஒரு தொழிலாளியின் கதாபாத்திரம். என்னுடன் டிக்கெட் கிழிப்பவராக அண்ணன் கருணாஸ் நடித்திருக்கிறார். தியேட்டர் முதலாளியாக எம். எஸ். பாஸ்கர் நடித்திருக்கிறார். அவருடைய ஒரே மகளாக அருந்ததி வருகிறார். அவருக்கு என் மீது காதல். வழக்கமான இளைஞர்களைப் போல் காதல் என்றவுடன் கட்டிப்பிடித்து விடாமல், நான் அவள் காதலை மறுக்கிறேன். காதல் வேறு வாழ்க்கை வேறு என்று அட்வைஸ் செய்கிறேன்.
இருந்தாலும் அந்தப் பெண் என்னை விடாமல் துரத்துகிறாள். நீ நிச்சயம் பெரிய ஆளாக வந்துவிடுவாய் என்று ஊக்கப்படுத்துகிறாள். நானோ என் தகுதியை உயர்த்திக் கொண்டபிறகு சொல்கிறேன் என்று பிடிகொடுக்காமல் நழுவுகிறேன். இதற்கிடையில் நவீனமயமாக்கப்பட்ட எங்கள் தியேட்டரைத் தொடங்கி வைக்கச் சென்னையிலிருந்து நடிகர் விவேக்கை நான் அழைத்து வருகிறேன்.
விழாவுக்கு வந்த அவருக்கு என் முதலாளியின் மகளைப் பிடித்துவிடுகிறது. அவளைத் திருமணம் செய்துகொள்ள ஆசைப்படுகிறார். முதலாளியும் மகளிடம் கேட்காமல் ஓகே சொல்லி விடுகிறார். எங்கள் காதல் வெற்றிபெற்றதா இல்லையா என்பதுதான் கதை. நமக்குக் காதலிக்க கற்றுக்கொடுத்த திரையங்கம், ஒரு காதலால் உயர்ந்ததா இல்லையா என்பதும் உணர்ச்சிகரமாக இருக்கும்.
படப்பிடிப்பு அனுபவம் எப்படி?
முதல்படம் என்றாலும் இயக்குநர் அப்பாதானே என்று படப்பிடிப்புக்குக் கூலாகப் போய்விட்டேன். அண்ணன்கள் விவேக், எம். எஸ். பாஸ்கர், கருணாஸ் ஆகியோருடன் நடிக்கும்போது திணறிவிட்டேன். அப்பா காட்சியை விளக்கி ரிகர்சல் பார்க்கும்போது சாதாரணமாக இருந்துவிட்டு டேக் என்றவுடன் புலிபோல் சீறிவிட்டார்கள்.
நான் எலியாக மாட்டிக்கொண்டேன். பிறகு அவர்களே ஊக்கமும் ஒத்துழைப்பும் கொடுத்து என்னோடு நடித்தார்கள். இந்தப் படத்தைப் பார்க்கும்போது என்னை ஒரு புதுமுகம் என்று சொல்ல மாட்டீர்கள். அதற்கு இந்த அண்ணன்களுக்குத்தான் நன்றி சொல்ல வேண்டும்.
நடிக்க வரும்முன் என்ன செய்து கொண்டிருந்தீர்கள்?
சென்னையில் பள்ளிப்படிப்பு முடிந்ததும், அப்பாவின் ஆசைக்கு இணங்க, அவரது சொந்த ஊரான திருவண்ணாமலையில் இன்ஜினியரிங் படித்தேன். நான்கு ஆண்டுகள் படிப்பை முடித்தபோது கிராமத்து வாழ்க்கை முறையை முழுமையாக அறிந்து ஒரு மண்வாசனை இளைஞனாக வெளியே வந்தேன். அந்த அனுபவம் இப்போது கதாநாயகனாக நடிக்கும்போது கைகொடுத்தது.
பிறகு கோவையில் எம்.பி.ஏ படிப்பை முடித்துவிட்டு அப்பாவின் தயாரிப்பு நிறுவனமான திருவள்ளுவர் கலைக்கூடத்தில் தயாரிப்பு உதவியாளராக சில ஆண்டுகள் பணிபுரிந்தேன். பிறகு நடிப்புத் துறையில் ஏற்பட்ட ஆர்வத்தால் கூத்துப்பட்டரையில் நடிப்புப் பயிற்சி பெற்றேன். சிவசங்கர் மாஸ்டரிடம் நடனம், விமலா. இராமநாராயனிடம் பரதநாட்டியம், ஜாக்குவார் தங்கத்திடம் சிலம்பம், ஃபயட்கார்த்தி என்ற மாஸ்டரிடம் சண்டைப் பயிற்சியும் எடுத்துக் கொண்டேன்.
சினிமா குடும்பப் பின்னணி பலமா பலவீனமா?
என்னைப் போன்ற வாரிசுகளுக்கு உடனே கதாநாயகன் ஆகும் வாய்ப்பு கிடைத்துவிடுகிறது. அது லக். ஆனால் அதைத் தக்கவைத்துக் கொள்ள, சினிமா பின்புலம் இல்லாதவர்களைவிட நாங்கள் அதிகம் போராட வேண்டும். அப்பா அம்மா சம்பாதித்த பெயரைக் காப்பற்ற வேண்டிய கட்டாயம் முதல் போராட்டம். அவர்கள் பெயரைத் தாண்டிப் பயணிக்க வேண்டியது இரண்டாவது போராட்டம்.
எனக்குக் காரல் மார்க்ஸ் என்று கம்யூனிஸ்ட் தலைவரின் பெயரை வைத்திருப்பது இதுபோன்ற போராட்டங்களை எதிர்கொள்வதற்குத்தான் என்று நினைக்கிறேன். நிச்சயம் உழைப்பால் உயர்வேன் என்ற நம்பிக்கை இருக்கிறது. அதற்கு அனைவரின் வாழ்த்துகள் இருந்தால் போதும்.

நன்றி - த இந்து

Sunday, March 01, 2015

எனக்குள் ஒருவன் -லூசியா’ கன்னடத்தில் ஹிட் ஆன அளவு தமிழில் ஆகுமா?-தனுஷின் முன்னாள் சகலை பேட்டி

  • ‘எனக்குள் ஒருவன்’ படத்தில் சித்தார்த் - சிருஷ்டி டாங்கே
    ‘எனக்குள் ஒருவன்’ படத்தில் சித்தார்த் - சிருஷ்டி டாங்கே
  • ‘எனக்குள் ஒருவன்’ படத்தில் சித்தார்த் - தீபா சன்னிதி
    ‘எனக்குள் ஒருவன்’ படத்தில் சித்தார்த் - தீபா சன்னிதி
பாய்ஸ் படத்தில் விடலைப் பையனாக அறிமுகமாகி ‘காவியத் தலைவன்’ போன்ற படங்களுக்கு நகர்ந்திருப்பவர் சித்தார்த்.
தனக்கென்று தனிப் பாணி கொண்ட அவரைச் சந்தித்தபோது, “ கடந்த 12 வருடங்களில் 25 படங்கள்தான் நடித்திருக்கிறேன். எனக்கு வித்தியாசமான கதைகளில் நடிக்கத்தான் பிடித்திருக்கிறது. அதற்காக நான் பண்ணிய படம்தான் ‘எனக்குள் ஒருவன்’.” தரமான சினிமா தர வேண்டும் என்ற தாகம் வெளிப்படப் பேச ஆரம்பித்தார் அவர்.
‘லூசியா’ கன்னடத்தில் ஹிட். அதன் மறு ஆக்கத்தில் நடித்தால் வெற்றி உறுதி என்பதால்தான் ஒப்புக்கொண்டீர்களா?
இப்படத்தை ‘லூசியா’ ரீமேக் என்ற ஒரு வார்த்தையில் அடக்க முடியாது. அடிப்படைக் கதைக் கருவை மட்டும் வைத்துக்கொண்டு திரைக்கதையில் தமிழ்க் கலாச்சாரத்துக்கு ஏற்ற மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.
இப்படத்துக்காக இயக்குநர் பிரசாத் எழுதியிருக்கும் வசனங்களைப் பார்த்துப் பிரமித்துப் போய்விட்டேன். ‘லூசியா’ பார்த்தவர்கள் இப்படத்தைப் பார்த்தால், இந்த வேறுபாட்டை உணர்வார்கள். பார்க்காதவர்களுக்கு இரட்டை விருந்து.
முதல் முறையாக ஒரே படத்தில் இரண்டு கதாபாத்திரங்களில் நடித்த அனுபவம் எப்படி இருந்தது?
ஒரேநேரத்தில் இரண்டு கதாபாத்திரங்களிலும் நடிக்க மாட்டேன் என்று இயக்குநரிடம் சொல்லிவிட்டேன்.
முதலில் ஹீரோ கதாபாத்திரத்தை நடித்துவிட்டுப் பிறகு திரையரங்கப் பணியாள் கதாபாத்திரம் செய்தேன். அதற்காக முகத்தைக் கறுப்பாக்கினேன். எனக்கே என்னை அடையாளம் தெரியவில்லை. இருபது நாட்கள் திரையரங்கு ஒன்றில் படப்பிடிப்பு நடத்தினோம். அது எனக்கே புதிய அனுபவம். அங்கு படப்பிடிப்பு நடக்கும்போது என்னை யாருக்குமே அடையாளம் தெரியவில்லை.
மக்களோடு மக்களாக நின்று கொண்டிருப்பேன். ‘ஹீரோ யாருப்பா… எங்க இருக்காருன்னு’ அவர்கள் கேட்கும் கேள்விகளுக்கு ‘இன்னும் வரலை. மேக்கப் போட்டுட்டு நானே இருக்காருப்பா…’ என்று பதிலளித்தேன். அதே போல தீபா சன்னிதி, நரேன் இருவருக்குமே என்னை முதல் முறையாகப் பார்க்கும் போது அடையாளம் தெரியவில்லை. இப்படி நிறைய நிஜ காமெடியை அனுபவித்தேன்.
உலகக் கோப்பை கிரிக்கெட் நடைபெறும் நேரத்தில் படம் வெளியாகிறதே?
எங்கள் படத்துக்கு முன்னர் ‘காக்கிச் சட்டை’ வெளியாகிறது. அவங்க எந்த நம்பிக்கையில் வெளியிடுகிறார்களோ, அதே நம்பிக்கையில்தான் நாங்களும் வெளியிடுகிறோம்.
போன வருடம் இதே மார்ச் மாதத்தில், ‘எனக்குள் ஒருவன்’ படம் ஜெயிச்சுருக்கு, அந்த நம்பிக்கையில் நம்ம படத்தை வெளியிடலாம் என்று சொல்லி அடுத்த வருடம் நிறைய படங்களை வெளியிடுவார்கள். அந்தப் பெயர் எங்களுக்குக் கிடைக்கும்.
இந்தி, தெலுங்கில் படம் பண்ணுவதை ஏன் குறைத்துக்கொண்டீர்கள்?
இதுவரை மூன்று படங்கள் இந்தியில் பண்ணியிருக்கேன். அதில் இரண்டு வெற்றிப் படங்கள். தெலுங்குப் படம் பண்ணி மூன்று வருடங்கள் ஆகின்றன. இப்பவும் இந்தி, தெலுங்கிலிருந்து நிறையக் கதைகள் வருகின்றன. ஆனால் தமிழில் நல்ல தரமான படங்களைப் பண்ணிவிட்டுப் போகலாம் என்ற முடிவில் இருக்கிறேன்.
எனக்கு இந்த சாக்லேட் பாய், அழகான பையன் என்ற இமேஜ் எல்லாம் போக வேண்டும். சொல்லப் போனால் என்னை சாக்லேட் பாய் என்று சொல்லும்போது கோபம்தான் வருகிறது. அப்படிக் கூப்பிடுவதை நான் வெறுக்கிறேன். ‘எனக்குள் ஒருவன்’ படத்துக்குப் பிறகு இந்தப் பிம்பம் மாறும் என்ற நம்பிக்கையில் இருக்கிறேன். இனிமேல் எந்த மாதிரியான கதையிலும் சித்தார்த்தை நடிக்க வைக்கலாம் என்ற முடிவுக்கு வருவார்கள்.
வித்தியாசமான கதைகளில் நடிக்க வேண்டும் என்கிறீர்கள். அப்படியென்றால் வணிகப் படங்கள் பண்ண மாட்டீர்களா?
எம்.பி.ஏ. படிச்சிட்டு வருஷத்துக்கு 25 லட்ச ரூபாய் சம்பளத்துல நல்ல வேலையில இருந்தேன். அப்புறம் அந்த வேலை போரடிக்குதுன்னு சொல்லித்தான் வெறும் 2000 ரூபாய் சம்பளத்துல உதவி இயக்குநராக சினிமாவுக்குள் சேர்ந்தேன்.
எங்கப்பா ‘எதுக்குப்பா இது’ன்னுகூடக் கேட்டாரு. ‘ஒரே வேலைய செய்றது போரடிக்குதுப்பா’ன்னு அவர்கிட்ட சொன்னேன். இப்பவும் அதைத்தான் சொல்றேன்.
போதுமான அளவுக்குச் சம்பாதிச்சிட்டேன். இன்னமும் பணம் சம்பாதிக்கணும்னு நினைத்தால், வெளிநாட்டில் போய் டூயட் ஆடி, பூ கொடுத்துக்கொண்டுதான் இருக்கணும். எனக்கு அதுவும் பிடிக்கல… வித்தியாசம் தேடித்தான் சினிமாவுக்குள்ளேயே வந்திருக்கேன். இங்கேயும் ஒரே மாதிரிதான்னா எப்படி..?
அதற்காக வணிகப் படங்களுக்கு நான் எதிரியல்ல. நல்ல கதை அமைந்தால் கண்டிப்பாக நடிப்பேன். ‘சிங்கம்’ மாதிரியான கதை எனக்கு வரவில்லை. சூர்யாவுக்கு வந்தது; நடித்தார். எனக்கு எது சரியா வரும் என்று இயக்குநர்கள் நினைக்கிறார்களோ அதில் நடிக்கிறேன். நல்ல வணிகப் படத்துக்கான கதை வரும்போது அதில் கண்டிப்பாக நடிப்பேன்.
‘காவியத் தலைவன்’ படத்துக்கு நீங்கள் எதிர்பார்த்த அளவுக்கு வரவேற்பு கிடைக்கவில்லையே…
வசூல் ரீதியில் வரவேற்பு கிடைக்கவில்லை என்பது உண்மைதான். எனக்கும் வருத்தம் உண்டு. ஆனால் ‘காவியத் தலைவன்’ படம் தப்பான படம் கிடையாது. நான் ரொம்பப் பெருமைப்பட்டுக் கொள்ளும் விதத்தில் எனக்கு அமைந்த படம். வசந்தபாலன் மாதிரியான இயக்குநர்களைத் தமிழ்த் திரையுலகம் கொண்டாட வேண்டும்.
இன்னும் ஒரு பத்து வருடங்கள் கழித்துப் பாருங்கள் அப்படத்தைப் பற்றிப் பேசுவார்கள். இப்போதுகூட நாம் கமல் சார் நடித்த ஓடாத படங்களைப் பற்றித்தானே பேசிக் கொண்டிருக்கிறோம். அவர் நடிப்பில் வெற்றியடைந்த படங்களைப் பற்றி நாம் பேசுகிறோமா? இல்லையே!
மறுபடியும் உங்களைப் பற்றிய காதல், பிரிவு செய்திகள் வலம் வருகின்றனவே?
(சிரித்துக் கொண்டே…) எதுக்கு அதைப் பற்றிப் பேசிக்கொண்டு…? இந்தியா உலகக் கோப்பை ஜெயிக்கட்டும்; என்னுடைய திருமணத்தைப் பற்றிச் சொல்கிறேன்.


thanx = the hindu



Wednesday, February 25, 2015

காக்கிசட்டை - எட்டுத்திக்கும்மதயானை 2 ம் ஒரே கதையா? - ராட்டினம் இயக்குநர் பேட்டி

  • ஸ்ரீமுகி
    ஸ்ரீமுகி
  • ‘எட்டுத்திக்கும் மதயானை’ ஸ்ரீமுகி, சத்யா
    ‘எட்டுத்திக்கும் மதயானை’ ஸ்ரீமுகி, சத்யா
‘‘அந்த ஹீரோவிடம் கதை சொல்லுங்கள். ஓகே என்றால் படப்பிடிப்புக்கு கிளம்புங்கள்.. இப்படிச் சொல்லும் தயாரிப்பாளர்கள்தான் இன்றைக்கு நிறைய தென்படுகிறார்கள். பெரும்பாலான தமிழ் சினிமா, நடிகர்களை நம்பியே இருக்கிறது.
தயாரிப்பாளர்களும் நல்ல கதையா என்றெல்லாம் பார்ப்பதில்லை. ‘ஆர்டிஸ்ட் வேல்யூ’ மட்டுமே பார்க்கிறார்கள். ஆனால், இப்படியெல்லாம் பார்த்துப் பார்த்து எடுத்து 2014-ல் வெளியான பெரிய ஹீரோக்களின் படங்கள் எல்லாம் தயாரிப்பாளருக்கு லாபம் ஈட்டித் தந்ததா? இல்லையே..’’
- தமிழ் சினிமாவின் தற்போதைய சூழல் பற்றி சற்று கோபத்துடன் பேசுகிறார் ‘எட்டுத்திக்கும் மதயானை’ படத்தின் இயக்குநர் கே.எஸ்.தங்கசாமி.
‘ராட்டினம்’ நல்ல பேரை வாங்கிக் கொடுத்ததும், அடுத்த படத்துக்கு 12 தயாரிப்பாளர்கள் என்னை அணுகினர். கமர்ஷியல், காமெடி மட்டும், பெரிய ஹீரோ என்று ஆளுக்கொன்று கூறினார்கள். நான் எடுக்கத் திட்டமிட்டிருந்த கதைக்கு அந்த களங்கள் சரிப்பட்டு வராது என்று தெரிந்தது.
விறுவிறுவென நானே பட வேலைகளைத் தொடங்கிவிட்டேன். அந்த ஓட்டத்தில்தான் ஆர்யா தம்பி சத்யா, ஸ்ரீமுகி, லகுபரண், சாம் ஆண்டர்சன், துர்கா என பலரும் இணைந்தனர்.
நாயகன் சத்யா, படத்தின் புரமோஷன் வேலைகளில் கவனம் செலுத்தவில்லை என்கிறார்களே?
எங்கள் இடையே பிரச்சினை எதுவும் இல்லை. அவர் படத்தின் நாயகன். படத்தை விளம்பரப்படுத்துவதும், பண்ணாததும் அவர் விருப்பம். ஒரு படம் வெற்றி அடைந்தால் அதில் உரிமை கொண்டாட எல்லோருக்கும் பங்கு உண்டு.
அதுவே தோல்வி அடைந்தால் இயக்குநர் மட்டுமே பொறுப்பேற்க வேண்டும். ரசிகர்களை நம்பி படம் எடுக்கிறோம். இந்தப் படத்தை எல்லோரிடமும் கொண்டுபோய் சேர்க்கும் பணியை ‘ஸ்டுடியோ 9’ தயாரிப்பு நிறுவனம் கையில் எடுத்துள்ளது.
முழுக்க கமர்ஷியல் பின்னணியில் புதிய பட வேலைகளைத் தொடங்கிவிட்டீர்களாமே?
கமர்ஷியல், யதார்த்தம், பிரம்மாண்டம் இதை எல்லாம் கடந்து நல்ல சினிமா என்பதுதான் சரியான வெற்றி. கடந்த ஆண்டு வெளியான ‘சதுரங்க வேட்டை’ போன்ற படங்களின் வெற்றிதான் பெரிய வெற்றி.
அந்த வகையில் கலகலப்பாக ஒரு கதையை எழுதி வருகிறேன். கதாபாத்திரத் தேர்வு உள்ளிட்ட பணிகளை எல்லாம் ‘எட்டுத்திக்கும் மதயானை’ ரிலீஸுக்கு பிறகு தொடங்கவேண்டும்.
‘ராட்டினம்’ படத்தில் காதலை வித்தியாசமாக காட்டியிருந்தீர்கள். இந்த படம் எதை நோக்கி பயணிக்கிறது?
‘ராட்டினம்’ திரைப்படம் திருட்டு டிவிடி வழியேதான் அதிக மக்களை போய்ச் சேர்ந்தது. திரையரங்குகளில் இருந்து எடுத்த பிறகு கிடைத்த பாராட்டுகள்தான் அதிகம். ‘எட்டுத்திக்கும் மதயானை’ படத்தை காவல்துறை பின்னணியில் படமாக்கியிருக்கிறோம்.
அதே நாளில் ரிலீஸாகும் ‘காக்கிச்சட்டை’ படமும் போலீஸ் கதைதானே.
‘காக்கிச்சட்டை’ படத்தில் பரவலாக முகம் அறிமுகமான ஹீரோ என்பதால் கமர்ஷியல், மாஸ் ஆகிய விஷயங்களில் பெரிதாக கவனம் செலுத்தியிருப்பார்கள். ‘எட்டுத்திக்கும் மதயானை’யில் யதார்த்தம் மட்டும்தான் பிரம்மாண்டம்.
சாமானிய மனிதர்களின் பிரச்சினைகளைத்தான் அலசியிருப்போம். தகுதிவாய்ந்த ஒரு பொறுப்பில் இருக்கும் அதிகாரி அந்த பணியின் முக்கியத்தை உணர்ந்து செயல்பட வேண்டும். அவர்கள் தவறுவதால் நிகழ்கிற சமூக அவலங்களை எடுத்துக் காட்டியிருக்கிறோம். இது வித்தியாசமான போலீஸ் பின்னணியாக இருக்கும்.
முதல் படத்தில் இயக்குநர். அடுத்த படத்திலேயே இயக்குநர், தயாரிப்பாளர், நடிகர் என பல பொறுப்புகளை சுமப்பது ஏன்?
இன்றைக்கு சினிமாவில் உள்ள 20-க்கும் மேற்பட்ட நேரடி கிளைத் தொழில்களில் தயாரிப்பாளர் பணம் போடுகிறார். ஆனால், போட்ட பணத்தை நேரடியாக, எளிதாக எடுத்துவிட முடிகிறதா? அதில் ஏகப்பட்ட சிக்கல்கள், பிரச்சினைகள். இயக்குநராக இருந்த நான், தயாரிப்பாளர் ஆனபிறகு இப்படி பல அனுபவம் கிடைத்திருக்கிறது.
‘ராட்டினம்’ நல்ல பேரை வாங்கிக் கொடுத்ததும், அடுத்த படத்துக்கு 12 தயாரிப்பாளர்கள் என்னை அணுகினர். கமர்ஷியல், காமெடி மட்டும், பெரிய ஹீரோ என்று ஆளுக்கொன்று கூறினார்கள். நான் எடுக்கத் திட்டமிட்டிருந்த கதைக்கு அந்த களங்கள் சரிப்பட்டு வராது என்று தெரிந்தது.
விறுவிறுவென நானே பட வேலைகளைத் தொடங்கிவிட்டேன். அந்த ஓட்டத்தில்தான் ஆர்யா தம்பி சத்யா, ஸ்ரீமுகி, லகுபரண், சாம் ஆண்டர்சன், துர்கா என பலரும் இணைந்தனர்.



நன்றி  - த இந்து 

Sunday, February 01, 2015

அமர்க்களம்,காதல் மன்னன்,அட்டகாசம்,அசல் தொடர்ந்து சரண் -அஜித் காம்போ படம்

ஆயிரத்தில் இருவர்’ படத்தின் இறுதிக்கட்ட பணிகளில் பரபரப்பாக இருந்த இயக்குநர் சரணை சந்தித்தோம்.
“இந்தப் படத்தில் முதல் 10 நிமிடத்தில் கதையை சொல்லிவிடுவேன். அதற்கு பிறகு எல்லாமே சம்பவங்கள்தான். முதல் 10 நிமிட கதையை அடிப்படையாக வைத்து நிகழும் நிகழ்வுகள்தான் மொத்த படமுமே” என்று ‘ஆயிரத்தில் இருவர்’ படத்தைப் பற்றிய விளக்கத்துடன் பேச ஆரம்பித்தார் சரண்.
‘செந்தட்டி காளை செவத்த காளை’ படத்தைத்தான் ‘ஆயிரத்தில் இருவர்’ படமாக மாற்றி இருக்கிறீர்களா?
‘செந்தட்டி காளை செவத்த காளை’ படமும் ‘ஆயிரத்தில் இருவர்’ படமும் வெவ்வேறு கதை. அந்தப் படம் பல்வேறு காரணங்களால் நிறுத்தப்பட்டது. அந்தப் படத்துக்காக நான் பேசி வைத்த நடிகர், நடிகைகள் அனைவருமே ‘ஆயிரத்தில் இருவர்’ கதைக்கு பொருத்தமாக இருந்தார் கள். ஆகையால் அவர்களை வைத்தே இதைப் படமாக்கி விட்டேன். மற்றபடி இரண்டு படங்களுக்கும் சம்பந்தம் இல்லை.
நீங்களும் அஜீத்தும் இணைந்து பல படங்களைக் கொடுத்திருக்கிறீர்கள். மீண்டும் அவருடன் இணையும் திட்டம் இருக்கிறதா?

அஜீத் எனக்கு மிகவும் நெருக்கமான நண்பர். ‘அசல்’ படத்துக்கு பிறகு இன்னொரு படத்தை இணைந்து செய்யலாம் என்று நானும், அவரும் பேசினோம். இதுபற்றி வேறொரு தயாரிப்பு நிறுவனத்திடம் பேசி யிருந்தோம். ஆனால் சில காரணங்களால் அப்படத்தை செய்ய முடியவில்லை. மீண்டும் இணைந்து படம் பண்ணுவதற்கான சூழ்நிலை வரும்போது கண்டிப்பாக பண்ணுவோம்.
எனக்கும் அவருக்குமான நட்பு எப்படி என்றால், நாங்கள் எப்போதுமே திடீரென்றுதான் இணைந்து படம் செய்ய முடிவெடுப்போம். அவர் கூப்பிட்டு பேசிய அடுத்த நாள் முதல் படத்துக்கான வேலைகளைத் தொடங்கிவிடுவோம். ‘அட்டகாசம்’, ‘அசல்’ எல்லாமே அப்படித்தான் நடந்தது. அந்த மாதிரியான வாய்ப்பு எப்போது வேண்டு மானாலும் வரலாம்.
‘காதல் மன்னன்’ படத்தில் அஜீத்தை சாக்லெட் பாயாக காட்டினீர்கள். ஆனால், தற்போது அவர் கமர்ஷியல் படங்களில் சிக்கிக் கொண்டாரே?
நான் ‘காதல் மன்னன்’ படம் பண்ணியதே ஒரு கமர்ஷியல் பார்வையில்தான். மறைந்த இயக்குநர் பாலசந்தர் அப்படத்தின் முதல் பிரதியைப் பார்த்துவிட்டு, “இந்த கதையை மூன்று விதமாக எடுக்கலாம். அந்த மூன்று விதங்களில் நீ கமர்ஷியலாக பண்ணி யிருக்கிறாய். நல்லாயிருக்கு” என்று பாராட்டினார்.
தற்போது ஒரு குறும்படம் இயக்கி வெற்றி பெற்றாலே சினிமா இயக்குநர் ஆகிவிடலாம் என்ற சூழ்நிலை உருவாகிவிட்டதே? 


இது வரவேற்கத்தக்கதுதான். நல்ல படம் எடுக்கும் எல்லாருக்குமே இங்கு வாய்ப்பு இருக்கிறது. புதிதாக வருபவர்கள் இயக்குநர் களிடம் இருந்து கற்றுக்கொண்டும் வரலாம், கல்லூரியில் படித்து விட்டும் வரலாம். யாரிடமும் கற்றுக் கொள்ளாமல் இயக்குநர் மணிரத்னம் தனிமுத்திரை பதித்து இருக்கிறாரே.
அதேபோல குறும் படம் எடுத்து சினிமா உலகுக்குள் நுழைபவர்களாலும் தனி முத்திரை பதிக்க முடியும். ஆனால் அதே நேரத்தில் அவர்களை யாரும் விமர்சிக்கக் கூடாது, வரவேற்கும் விதமாகத்தான் பேச வேண்டும் என்று சொன்னால் அது தவறு.
குறும்படம் எடுத்து சினிமாவுக்கு வருபவர்களில் 5 சதவீதம்பேர் நல்ல சினிமாவைக் கொடுக்க வேண்டும் என்ற முனைப்புடன் வருகிறார்கள். மீதமுள்ள 95 சதவீதம் பேர் இயக்குநர் நாற்காலியில் உட்காரும் வாய்ப்பாக மட்டுமே குறும்படங்களை பயன் படுத்திக் கொள்கிறார்கள். பணம் இருப்பவர்களை ஈர்த்து ஒரு படத்துக்கு முதலீடு செய்ய வைக்கிறார்கள்.
இப்படி நிறையப் பேர் வருவதால் ‘போலி மருத்துவர்’ மாதிரி ‘போலி இயக்குநர்கள்’ பெருகிவிட்டார்கள். அவர்களுக்கான களம் இது அல்ல என்பதை மிகுந்த வருத்தத்தோடு பதிவு செய்கிறேன். 

 thanx - the hindu

 



  • Namale kathaya thirudidan padam எடுக்குறோம் maththavangala குறை சொல்றோம் போலினு.
    about 17 hours ago ·   (3) ·   (1) ·  reply (0) ·
       
  • sundar  
    ....‘போலி மருத்துவர்’ மாதிரி ‘போலி இயக்குநர்கள்’ பெருகிவிட்டார்கள். .... என்றும் ......பணம் இருப்பவர்களை ஈர்த்து ஒரு படத்துக்கு முதலீடு செய்ய வைக்கிறார்கள்......என்றும் சொல்லியுள்ளார். எடுத்த படம் ஒழுங்கா போகலை என்றால் அவஸ்தை படும் தயாரிப்பாளர்கள் தவிர நடிகர், நடிகையரும் இவர்களிடம் மாட்டிக்கொண்டு என்னபாடு படப்போகிறார்களோ??? போலீஸ், உண்மைவிளம்பி டி.வீ நிகழ்ச்சிகளுக்கு கொண்டாட்டம்தான்.
    Points
    1165
    about 18 hours ago ·   (0) ·   (0) ·  reply (0) · 
  • Gnanasekaran  
    "போலி இயக்குநர்கள் பெருகிவிட்டார்கள்" இப்படியெல்லாம் யோசிப்பதை விட்டு விட்டு, புதுசா மக்களுக்கு புடிச்ச மாதிரி நல்ல படங்களை கோடாங்க. ஜெர்மன் கவிஞன் Goethe சொல்ற மாதிரி, "All truly wise thoughts have been thought already thousands of times; but to make them truly ours, we must think them over again honestly, till they take firm root in our personal experience." இத முதலில் follow பண்ணுங்க சரண் சார், நீங்க உண்மையான படத்தை எடுக்கலாம். உண்மையிலேயே அனைத்து படைப்பாளிகளும் போலியானவர்களே. அவனவனுக்கு தான் தெரியும் தாம் எங்கிருந்து திருடுகிறோம் என்று...
    Points
    1815
    about 18 hours ago ·   (1) ·   (0) ·  reply (0) · 
  • skv  
    செத்தவீட்டுலேதான் தலைய விரிச்சுன்னு ஆடுவாக அன்று .இன்று சினிமாலே எல்லாமே அப்படிதான் இருக்கு உடைக்கோ பஞ்சமொபஞ்சம் திருமானமான பெண்கள் எவாலுமே தாலியே போடறது இல்லே சிநிமாகாரிகளைபார்த்து குடும்பபெங்களும் அப்படியே பின்பர்ருகிரார்களே அதுதான் கொடுமை

Sunday, January 25, 2015

ஓம் சாந்தி ஓம் - பிசாசு , டார்லிங் வரிசையில் பேய்ப்படம் -திருச்சி இயக்குநர் பேட்டி

‘ஓம் சாந்தி ஓம்’ ஸ்ரீகாந்த், நீலம் உபாத்யாயா
‘ஓம் சாந்தி ஓம்’ ஸ்ரீகாந்த், நீலம் உபாத்யாயா
“மூளைக்குள் உதிக்கும் ஒரு யோசனையை எழுத்தாக கொண்டு வருவதே பெரிய வேலை. அந்த எழுத்தை காட்சியாக படம்பிடிப்பது அதை விட கடினமான பொறுப்பு. இதை இந்தப் படத்தின் வழியே ஆரோக்கியமாக கொண்டு வர முயற்சி செய்திருக்கிறேன். ஒரு அறிமுக இயக்குநராக நுழையும் எனக்கு இந்தப் படம் நல்ல பேரை வாங்கிக்கொடுக்கும்’’ என்று நம்பிக்கையுடன் பேசத் தொடங்குகிறார், ‘ஓம் சாந்தி ஓம்’ படத்தின் இயக்குநர் சூரிய பிரபாகர். 
ஸ்ரீகாந்த், நீலம் உபாத்யாயா நடிப்பில் ஆத்மாக்களின் மனநிலையை கருவாகக் கொண்டு இந்தப் படத்தை இயக்கி வருகிறார். அவருடைய முதல் பட அனுபவங்களைப் பற்றி பேசினோம்...
இந்தப் படம் திகில் படம் என்று கூறப்படுகிறதே?
எல்லோரும் இதை ஆவிகள் சம்பந்தப்பட்ட படம் என்றுதான் நினைக்கிறார்கள். அது உண்மையல்ல. இறந்துபோன நம் முன்னோர்களை நினைவுபடுத்திக்கொள்ளும் ஆத்மா சார்ந்த படம் இது. அவர்கள் நம் அருகில் இருந்தால் எப்படி உதவியாக இருப்பார்கள் என்பதைத்தான் இதன் கதை உணர்த்தும். இந்தப் பின்னணி யில் ஒரு கார் கம்பெனியில் வேலை பார்க்கும் ஸ்ரீகாந்த், நீலம் உபாத்யாயா இருவருக்குமான காதலை கலந்து பொழுதுபோக்காக படம் நகரும்.
தமிழ் சினிமாவில் இப்போது திகில் படங்கள் மீது ஒரு காதல் ஏற்பட்டுள்ளதே?
நாங்கள் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பே இப்படத்தின் வேலைகளை தொடங்கிவிட்டோம். அப்போது திகில் மற்றும் பேய் படங்கள் வரவே இல்லை. இன்று பல படங்கள் தொடர்ச்சியாக வருவதால் இன்றைய சூழலுக்கு பொருத்தமான படம் இது என்று சொல்லலாம். 
‘ஓம் சாந்தி ஓம்’ என்ற பெயரில் ஏற்கெனவே ஷாருக்கான் நடித்த படம் வெளிவந்திருக்கிறதே?
இது ஆத்மாக்கள் சார்ந்த கதை என்பதால் சாந்தி என்ற வார்த்தை பொருத்தமாக இருக்கும் என்று இந்த பெயரை வைத்தோம். மற்றபடி அந்தப் படத்தின் கதைக்கும் இதற்கும் எந்த சம்பந்தமும் இல்லை.
இப்படத்தின் சில காட்சிகளை கம்போடியாவில் படமாக்கியிருக்கிறீர்களே?
கம்போடியாவில் உள்ள அங்கோர் வாட் கோயில், சுமார் 40 ஏக்கர் பரப்பளவிலான இடம். இந்திய அளவிலான படங்களில் இதுவரை யாரும் அங்கு படம்பிடித்ததாக தெரியவில்லை. உலகின் அழகான இடங்களில் அதுவும் ஒன்று என்பதால் அங்கு படப்பிடிப்பு நடத்தினோம்.
உங்களைப்பற்றி..?
திருச்சி அருகில்தான் என் சொந்த ஊர் இருக்கிறது. பொறியியல் படிப்பு முடித்த நான், சினிமா ஆசையில் சென்னைக்கு வந்தேன். கதிர், சரவ ணன் சுப்பையா, செந்தில்குமார், சுப்ரமணியம் சிவா, எஸ்.ஜே. சூர்யா என்று பல இயக்குநர்களிடம் உதவி இயக்குநராக பணியாற்றி உள்ளேன். நண்பர் எம்.ராஜேஷின் படங்களின் கதை விவாதங்களிலும் பங்குபெற்றுள்ளேன். அப்படி ஒரு சந்தர்ப்பத்தில் உருவான கதைதான் இது.
இந்தப்படத்தின் தயாரிப்பாளர் அருமைச்சந்திரனிடம் கதை சொல்வதற்கு வாய்ப்பு அமைந்த போது, எம்.ராஜேஷ்தான், இந்தக் கதையை கூறுமாறு சொன்னார். அவர் சொன்னபடியே இந்தக் கதை தயாரிப் பாளருக்கும் பிடித்துப் போனது. தயாரிப்பாளர் கட்டப்பொம்மன் உள்ளிட்ட மேடை நாடகங்களில் நடித்த அனுபவம் உள்ளவர் என்பதால் அவரிடம் எளிதாக ஒட்டிக்கொள்ள முடிந்தது.

thanx - the hindu

Wednesday, January 21, 2015

லட்சுமிமேனனுக்கு இப்போதான் 15 வயசு ஆகுதா? -லட்சுமிமேனன் பேட்டி

‘நீங்கள் விளிக்கிண்ட நம்பர் அட்டெண்ட் செய்யில்லா. பரிட்செக்கு பிஸியாகி. சொற்ப நேரம் கழிச்சு கால் செய்யு’ - லட்சுமி மேனனுக்கு போன் செய்தால் இப்படி ஒரு குரல் கேட்கிறது.
திரும்பவும் அழைத்தால் ‘நான்தான் அப்படி சொன்னேன். நம்பிட்டீங்களா!’ என்று குதூகலச் சிரிப்போடு கேட்கிறார். பள்ளிக்கூடம், டியூஷன் என்று பரபரப்பாக இருக்கும் லட்சுமி மேனனை அலைபேசியில் பிடித்தோம்.
லட்சுமி மேனனை சிம்பிள் ஏஞ்சல்னு எல்லோரும் கொண்டாடுறாங்களே. இது எப்படி சாத்தியமாச்சு?
‘கும்கி’ படம்தான் காரணம். பிரபு சாலமன் சார் அறிமுகம் எனக்கு பெரிய அடையாளம். ‘சுந்தரபாண்டியன்’, ‘குட்டிப் புலி’, ‘பாண்டிய நாடு’, ‘நான் சிகப்பு மனிதன்’, ‘மஞ்சப்பை’, ‘ஜிகர்தண்டா’ன்னு தொடர்ந்து பல படங்கள்ல நடிச்சேன். அடுத்து ‘கொம்பன்’ ரிலீஸ் ஆகப் போகுது. நல்ல படங்கள் பண்ணா மக்கள் என்றைக்கும் ஏத்துப்பாங்க. இப்பகூட நல்ல படங்கள்ல நான் இருக்கணும்னு ஆர்வமா இருக்கேன். லைஃப்ல இப்படி ஒரு படம் பண்ணணும்னு எல்லாருக்கும் ஒரு ஏக்கம் இருக்கும். அந்த ஏக்கத்தை நான் நடிக்குற ஒவ்வொரு படமும் போக்கிடுது..
எந்த ஹீரோயின் மாதிரி நடிக்கப் பிடிக்கும்?
எனக்கு வித்யாபாலனை ரொம்பப் பிடிக்கும். எல்லோரையும் திரும்பிப் பார்க்க வைக்கணும்னு நடிகைகள் வித்தியாசமா நடிக்க ஆசைப்படுவாங்க. ஆனா, வித்யாபாலன் கொஞ்சமும் அலட்டிக்காம ‘டர்ட்டி பிக்சர்’, ‘கஹானி’ன்னு தனியா தெரிஞ்சாங்க. ‘பாபிஜாசூஸ்’ படத்துக்காக பல கெட்டப்புல அடையாளம் கண்டுபிடிக்க முடியாத அளவுக்கு மிரட்டுனாங்க.
லட்சுமி மேனன் விரும்புவது குடும்பப் பாங்கா, கவர்ச்சிகரமா?
மாடர்ன் காஸ்டியூம்ஸ் எனக்கு செட்டாகாது. மாடர்ன் டிரஸ் இருக்குற போட்டோக் களை ஃபேஸ்புக்ல போட்டாக்கூட, ‘இது உங்களுக்கு நல்லா இல்லை. சேலை, தாவணி யிலதான் சூப்பரா இருக்கீங்க. அதை மாத்தாதீங்க.. ப்ளீஸ்’னு சொல்லும்போது எப்படி மீற முடியும்? இப்போதைக்கு ஹோம்லிதான்!
பாடகியாகணும்னீங்க.. அந்த ஆசை ஒருவழியா நிறைவேறிடுச்சா?
இமான் இசையில ‘ஒரு ஊர்ல ரெண்டு ராஜா’ படத்துல பாடினதும் ரொம்ப சந்தோஷப்பட்டேன். அதுல கஷ்டப்படாம, ரொம்ப சுலபமா பாடினதுக்குக் காரணம் என் அம்மாவும், பாட்டியும்தான். இப்போ பிரசாந்த் நடிக்கும் ‘சாஹசம்’ படத்துல ஒரு பாடல் பாடியிருக்கேன்.
தமிழில் படங்கள் குறைந்ததற்கு என்ன காரணம்?
தமிழில் இப்போதும் அதிக வாய்ப்புகள் வருது. நான்தான் குறைத்துக்கொண்டேன். நிறைய படம் ஒப்புக்கிட்டா படிப்பு தடைபடும். பிளஸ் 2 முடிச்சப்புறம் நிறைய படத்துல நடிப்பேன்.
மலையாளத்துல திலீப்புடன் நடித்த ‘அவதாரம்’ படத்துக்கு நல்ல வரவேற்பா?
ஓரளவு ஓடியது. மலையாளத்தில் நடிக்கணும்கிற தனி ஆசையெல்லாம் கிடையாது. எங்கு படம் கிடைக்குதோ, அங்கு நடிக்கணும்.. அவ்ளோதான். தமிழ்ல தொடர்ந்து படம் கிடைக்கிறதால, இங்கு தொடர்ச்சியா நடிக்கிறேன். சினிமாவேகூட நான் மிகவும் நேசித்த, தவமிருந்து கிடைத்த விஷயம் கிடையாது. அதுவா கிடைச்சுது.. நடிக்கிறேன். அதேநேரம், கிடைச்ச வாய்ப்பை நல்லா பயன்படுத்திக்குவேன். என் கதாபாத்திரத்துக்குத் தேவையான உழைப்பு, அர்ப்பணிப்பை முழுசா தருவேன்.
சினிமாவுக்கு வந்துட்டதுல நண்பர்களை ரொம்ப மிஸ் பண்றீங்களா?
ஆமாப்பா. சீனியர், ஜூனியர்னு என்னை சுத்தி எப்பவும் நண்பர்கள் அதிகம் இருப்பாங்க. நெனைச்ச டைம்ல கட் அடிச்சுட்டு சுத்துவோம். எனக்கு ஆண் நண்பர்கள் அதிகம். ஆனா, இப்ப எங்கே சுத்தவும் நேரம் இல்ல. நண்பர்களை ரொம்ப மிஸ் பண்றேன்.
ஆண் நண்பர்கள் அதிகம்னா, காதல் தொல்லை களும் இருக்குமே?
நோ நோ! உண்மையைச் சொல்லணும்னா இதுவரை யாருமே என்கிட்ட நேர்ல காதலைச் சொன்னதில்ல. சின்ன வயசுல நான் அவ்ளோ அழகா இல்லையோ என்னவோ. என்னைவிட அழகான பொண்ணுங்க நெறைய பேர் இருந்திருக்கலாம். அதனால, என்கிட்ட லவ்வை சொல்லாம விட்டிருக்கலாம். ஆனா, எனக்கு காதல் ரொம்ப ரொம்ப பிடிக்கும். அதுக்காக காதலிக்கணும்னு இல்லை. இப்போதைக்கு எனக்கு காதலிக்க நேரம் இல்லை.
உங்ககூட நடிச்ச ஹீரோக்கள் பத்தி..
சசிகுமார் சார் எது நடந்தாலும் அலட்டிக்கமாட்டார். விக்ரம் பிரபு நல்ல நண்பர். ரெண்டு பேரும் ஒரே படத்துல அறிமுகமானதால, பயம் இல்லாம பேசிப்போம். விமல் இருக்குற இடம் எப்பவும் கலகலன்னு இருக்கும். நேரம் போறதே தெரியாது. ஆனா, கிளாப் அடிச்சு ஷாட் ரெடியானா சீரியஸ் ஆகிடுவார். சித்தார்த்தின் மிகத் தீவிரமான ரசிகை நான். ‘பாய்ஸ்’ படம் ரிலீஸானப்ப நான் மூணாங்கிளாஸ் படிக்குறேன். சித்தார்த்தை நேர்ல பார்ப்பேன்னு நெனச்சுக்கூட பார்த்ததில்ல.
அவர்கூட நடிச்சது அதிசயமா, ஆச்சரியமா இருக்கு. ‘கும்கியில நல்லா பண்ணீங்க’ன்னு சித்தார்த் வாழ்த்து சொன்னப்ப, வானத்துல பறக்குற மாதிரி இருந்துச்சு. விஷால் சீனியரா இருந்தாலும் அன்பா பழகுவார். கவுதம் கார்த்திக் என் வயசுக்காரர் என்பதால் ரொம்ப க்ளோஸ். ஒவ்வொரு சீன்லயும் பட்டயக் கிளப்புறார். கார்த்தி இயல்பா பழகுறார். ‘இந்த வயசுல இவ்ளோ மெச்சூரிட்டியா இருக்கே. உன் நடிப்பு யதார்த்தமா இருக்கு’ன்னு சொல்றார்.
அலைபேசியில் கலகலவென்று சொல்லிவிட்டு விடைபெறுகிறார் லட்சுமி மேனன். 



நன்றி - த இந்து


வாசகர் கருத்து


ram  
இதெல்லாம் இந்திய கலாச்சாரத்துக்கு எதிரான கிடையாதா. கதைகலத்துக்கும் நடிகரின்/ நடிகையின் வயசுக்கும் ஒரு சந்பந்தம் வேண்டாமா . ஒரு மைனர் பொன்னை ஒரு மேஜர் பொன்னாக நடிக்க வைப்பது , இந்திய கலாச்சாரத்துக்கு எதிரானது இல்லையா , ஒரு மேஜர் பொன்னை மைனர் பொன்னாக நடிக்க வைக்கலாம், இது தவறு. நான் சிகப்பு மனிதன் படம் எடுத்த இயக்குனரை எதிர்த்து கேசு போடமாடிர்களா ?
about 7 hours ago ·   (5) ·   (1) ·  reply (0) · 
   
Santhosh   என்னம்மா இப்பிடி பண்றீங்கலேமா ..

Thursday, December 25, 2014

கப்பல் - இயக்குனர் ஷங்கரைக்கவர்ந்தது ஏன்? -மயிலாடுதுறை மாப்ளை கார்த்தி ஜி.கிரிஷ் பேட்டி

‘கப்பல்’… ஓர் அறிமுக இயக்குநரின் படத்துக்கு நாளுக்கு நாள் எகிறி வருகிறது எதிர்பார்ப்புகள்! ஷங்கரின் உதவியாளரான கார்த்தி ஜி.கிரிஷுக்கு சொந்த ஊர் மயிலாடுதுறை. திரைப்படக் கல்லூரி படிப்புக்குப் பின் “சிவாஜி’, “எந்திரன்’ என இரண்டு படங்களில் வேலை பார்த்த அனுபவத்தோடு கோடம்பாக்கம் நுழைந்திருக்கிறார். நீண்ட இடைவெளிக்குப் பின் ஷங்கரின் “எஸ் பிக்சர்ஸ்’ இப்படத்தை வாங்கி வெளியிடுவதால் பரவசமும், உற்சாகமும் சூழ்ந்திருக்கிறது கார்த்தி ஜி.கிரிஷின் முகத்தில்…



ஸ்டில்ஸ்… டிரெய்லர் எதிலும் பெரிய வித்தியாசம் தெரியலை… இருந்தும், இந்தப் படத்தில் எந்த அம்சம் ஷங்கரை கவர்ந்திருக்கும்….?



எல்லா இடங்களிலும் இழையோடி இருக்கும் நகைச்சுவை தான் இதன் சிறப்பம்சம். அந்த விஷயம்தான் ஷங்கர் சாரை வெகுவாக கவர்ந்திருக்கும். பிரம்மாண்டம், சீரியஸ் என அவர் படங்களின் பேசு பொருள்கள் வெவ்வேறு திசைகளில் இருந்தாலும், ஷங்கர் சாருக்கு உள்ள க்யூமர் சென்ஸ் அபாரமானது. பத்து நிமிடங்கள் அவரிடம் நெருங்கிப் பேசினால், ஷங்கரா இப்படி? என்று நீங்கள் ஆச்சரியத்தில் உறைந்து போகலாம். “ஜீன்ஸ்’ கதைக்கு அவர் முதலில் தேடிப் பிடித்த ஆள் யார் தெரியுமா? கவுண்டமணி. இரட்டை வேடங்களில் கவுண்டமணியை அந்தப்படத்தில் நடிக்க வைப்பதுதான் ஷங்கர் சாரின் திட்டம். ஆனால்,அந்த சமயத்தில் கவுண்டமணி பிஸி. கால்ஷீட் கிடைக்கவில்லை. திட்டமிட்ட நாள்களுக்குள் முடித்தாக வேண்டிய படம் அது என்பதால், நடிகர்களைத் தொடர்ந்து, கதையிலும் நிறைய மாற்றங்கள் நிகழ்ந்து விட்டன. இப்போதும் காமெடி படங்களின் தீவிர ரசிகர் ஷங்கர் சார். அந்த மாதிரியான அம்சங்கள் இதில் அவரை கவர்ந்து இழுத்திருப்பதாக நினைக்கிறேன்.



ஷங்கரின் உதவியாளர்கள் பெரும்பாலும் காதல், காமெடி என்றுதானே கதையைத் தொட்டுப் பிடிக்கிறார்கள்….? நீங்கள் கூட இப்போது காமெடி…?




இது எனக்கு முதல் டெஸ்ட். எந்த விஷயத்திலும் தீர்மானமாக இறங்க முடியாது. வியாபாரம் தொடங்கி எல்லாவற்றிலும் ஒரு வித கவனம் தேவை. அப்படியொரு விஷயம்தான் இதில் நடந்தேறி இருக்கிறது. எதையும் இங்கே வலிந்து திணிக்க முடியாது. தமிழ் சினிமா ரசிகன் மனதில் இன்றைக்கும் நட்பை பேசும் படங்களுக்கு இடம் உண்டு. அது மாதிரியான பாணியில் ஒரு கதை பிடித்தேன். மயிலாடுதுறை மாதிரி ஒரு சின்ன நகரத்திலிருந்து சென்னை மாதிரி பெரிய நகரம் வரும் நண்பர்களின் கதை. பிரியம், விருப்பம், ஆறுதல், அக்கறை என்ற வார்த்தைகளுக்கு அர்த்தம் தேடாமலே சில நேரங்களில் குறுகி விடுகிறோம். நாகரிக விகிதம் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் இந்தக் காலக் கட்டத்திலும் அதே அன்பு, அதே நல்லியல்புகளுடன் நட்பை போற்றிப் பாதுகாக்கும் சிலருக்கு இங்கே ஒரு பிரச்னை. அந்த பிரச்னைகளிலிருந்து அவர்கள் எப்படி மீண்டு வந்தார்கள்? அது என்ன பிரச்னை என்பதுதான் திரைக்கதையின் உள்ளுக்குள் இருக்கும் சிறப்புகள். வாய் விட்டு சிரித்த பின்னர் கண்களின் ஓரம் கசிந்திருக்குமே ஈரம் அது போன்ற உணர்வு இது.




நடிகர்களின் பங்களிப்பு எப்படி இருந்தது…?




நடிகர்களின் தேர்வுக்குதான் அதிக நாள் பிடித்தது. இதுவரை இல்லாத அளவுக்கு ஒரு கலர் கொடுக்க வேண்டும் என நினைத்தேன். காமெடி படம் என்றாலே, இங்கே நாலைந்து ஹீரோக்கள் ஞாபகத்துக்கு வந்து விடுகிறார்கள். அவர்களையெல்லாம் தவிர்க்க வேண்டும் என்பது இதில் நான் கடைப்பிடித்த முதல் விதி. தெரிந்த முகம், ஆனால் இதுவரை இல்லாத நடிப்பு என்பதுதான் ஹீரோ தேர்வுக்கு நான் வைத்திருந்த ஐடியா. அந்த இடத்தில் வைபவை பொருத்தி பார்த்தேன். நினைத்தபடி அதற்கு பொருந்தி வந்தார். லுக், மேனரிஸம் எல்லாவற்றிலும் சில மாற்றங்கள் கொண்டு வந்து பார்த்தால், நான் நினைக்கிற சினிமாவுக்கு ஏற்ற ஆளாக இருந்து போனார். ஹீரோயின் வேடத்துக்கு சோனம் பஜ்வா மும்பை இறக்குமதி. நிச்சயம் தமிழ் சினிமாவில் ஒரு தனி இடம் பிடிப்பார். முக்கிய வேடத்துக்கு கருணாகரன், அர்ஜூன், விடிவி கணேஷ். இதைத் தவிர இன்னும் பல புதுமுகங்கள் இருக்கிறார்கள். இது என் முதல் படம். அதை நினைத்தபடி எடுப்பதற்கு இந்த கலைஞர்களின் பங்கு முக்கியமானது.




ஷங்கர் கூட இரண்டு படம்…. அது மட்டுமே முழு சினிமா பயணத்துக்கும் போதுமானதா…?

மயிலாடுதுறை ஏவிசி கல்லூரி மாணவன் நான். கல்லூரி நாள் மேடைகள் எல்லாவற்றிலும் எனக்கே கைத்தட்டல்கள். அந்த கைத்தட்டலின் ருசி பிடித்து போனதால் அதைத் தக்க வைத்துக் கொள்ள மனசு விரும்பியது. திரைப்படக் கல்லூரியில் படித்தால் போதும், இயக்குநராகி விடலாம் என்பதுதான் அப்போதைய திட்டம். ஆனால் அது மட்டுமே போதாது என்பதுதான் ஷங்கர் சாரிடம் நான் கற்றுக் கொண்ட விஷயம்.

ஷங்கர் சாரின் உதவியாளர் நேர்முகத் தேர்வுக்கு நேற்று போனது போல் இருக்கிறது. நேர்முகத் தேர்வில் கலந்து கொண்ட 400 பேரில் நான் உள்ளிட்ட சிலர்தான் தேர்வானோம். ஷங்கர் சார் எனக்கு கற்றுக் கொடுத்தது கணக்கு வழக்கே இல்லை. “சிவாஜி’, “எந்திரன்’ இரண்டு படங்களில் வேலை பார்த்தது 200 படங்களில் வேலை பார்த்ததற்குச் சமம். அந்த அனுபவங்களை வைத்துக் கொண்டு இன்னும் பத்து படங்கள் இயக்கலாம். எதையும் எதிர்பார்க்காமல் படம் பார்க்க அழைத்தேன். பார்த்தவர் விழுந்து விழுந்து சிரித்தார். கொஞ்ச நேரத்தில் இதை நானே ரிலீஸ் செய்யலாம் என இருக்கிறேன் என சொன்னார். அவர் என் குரு மட்டுமல்ல. அதற்கும் மேலே…

- ஜி.அசோக்.

நன்றி  - தினமணி 

Sunday, November 30, 2014

திகார் - பேரரசு உடன் எனது 'திகார்' அனுபவம்: 'பவர் ஸ்டார்' சீனிவாசன் பேட்டி

திகார் இசை வெளியீட்டு விழாவில் கிரண் பேடி உடன் பவர் ஸ்டார் சீனிவாசன்
திகார் இசை வெளியீட்டு விழாவில் கிரண் பேடி உடன் பவர் ஸ்டார் சீனிவாசன் 
பேரரசு இயக்கத்தில் பார்த்திபன் உள்ளிட்ட பலர் நடித்திருக்கும் 'திகார்' படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் புதன்கிழமை நடைபெற்றது.
கிரண்பேடி படத்தின் இசையை வெளியிட, வ.உ.சி.யின் பேரன் சிதம்பரம் பெற்றுக் கொண்டார். இவ்விழாவில் ரமேஷ் கண்ணா, எம்.எஸ்.பாஸ்கர், 'பவர் ஸ்டார்' சீனிவாசன் உள்ளிட்ட பல்வேறு திரையுலக பிரபலங்கள் பங்கேற்றார்கள். 



இவ்விழாவில் 'பவர் ஸ்டார்' சீனிவாசனை பேச அழைப்பதற்கு, "இங்கு வந்துள்ளவர்களில், ஒருவருக்கு மட்டுமே திகாரைப் பற்றி தெரியும். பெயரிலே பவரை வைத்திருக்கும் பவர் ஸ்டாரை அழைக்கிறேன்" என்று கூறினார் பேரரசு. 



அதனைத் தொடர்ந்து 'பவர் ஸ்டார்' சீனிவாசன் பேசியது: 



"பேரரசு போன் செய்து இசை வெளியீட்டு விழாவிற்கு வரணும்னு கேட்டார். நான் என்ன படம் என்று கேட்டேன். 'திகார்' என்றார். என்னது திகாரா? மறுபடியும் டெல்லி போலீஸ் வந்திருச்சோ என்று பார்த்தேன். உண்மையில் நான் ரொம்ப கொடுத்துவைத்தவன் என்று நினைக்கிறேன். 


நிறைய இயக்குநர்களின் இயக்கத்தில் நடித்துவிட்டேன். தம்பி பேரரசு இயக்கத்தில் நடித்தபோதும் சந்தோஷமாக இருந்தது. ரொம்ப அலட்டிக் கொள்ளாமல் சொல்லுவார், நானும் அலட்டிக் கொள்ளாமல் நடித்துவிட்டேன். 2, 3 நாள் நடித்தது சந்தோஷமாக இருக்கிறது. இந்தப் படத்தின் இசை வெளியீட்டு விழாவிற்கு அழைத்ததிற்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். 



நான் இந்த நிகழ்ச்சிக்கு வரணுமா, வேண்டமா என்று யோசித்தேன். வந்தால் கிண்டல் செய்வார்களோ என்று பயந்தேன். போவோம், எல்லாத்தையும் பார்த்துவிட்டோம்... இதையும் பார்ப்போம் என்று வந்திருக்கிறேன். 



ரமேஷ் கண்ணா, வெங்கடேஷ் இருவரும் டெல்லி என்றாலே பரபரப்பாக இருக்கும் என்று கூறினார்கள். அதெல்லாம் ஒண்ணுமே கிடையாதுங்க. திடீரென்று இரவு 12 மணிக்கு தமிழ்நாட்டில் இருந்து "சார்.. உங்களை டெல்லிக்கு கூட்டிட்டு போறோம்" என்றார்கள். எதுக்கு என்று கேட்டேன். விசாரணை என்றவுடன் முன்னாடியே சொல்லக்கூடாதா கொஞ்சம் பணம் ஏதாவது எடுத்துட்டு வருவேன்ல என்றேன். எதுக்கு டெல்லி, கூட்டிட்டு போய் தூக்கு போட்டுருவாங்களோ என்று யோசித்தேன். 



என்ன தான் வருது என்று பார்த்துவிடுவோம் என்று கிளம்பினேன். வேலூரில் இருந்தே ஏற்றினார்கள். என்னங்க சென்னைக்கு போகலயா என்று கேட்டேன். இல்லை சென்னைக்கு சென்றால், உங்களது ரசிகர்கள் உங்களை பிடித்துவிடுவார்கள் என்றார்கள். சரி பரவாயில்லை என்றேன். அதிகாலை 2 மணிக்கு எழுப்பி, 3 மணிக்கு குளித்து கிளம்பி கூட்டிட்டு போனார்கள். 



என்னை நம்பிக்கை துரோகம் செய்தார்கள். வேண்டுமென்றே நான் செய்யவில்லை. என் உடன் இருந்தவர்கள் என்னை ஏமாற்றி விட்டார்கள். கோடிக்கணக்கான பணங்களை இழந்து, நான் இந்த இடத்தில் நிற்கிறேன் என்றால், அது கடவுள் கொடுத்த வரம் என்று தான் சொல்லுவேன். உண்மை என்று ஜெயிக்கும் என்பார்கள். அதனால் தான் உங்கள் முன் நிற்கிறேன். 



உண்மையில் சொல்கிறேன், திகார் ஜெயில் ரொம்ப நல்ல ஜெயில். இரவு 8 மணிக்கு கொண்டுப் போய் விட்டார்கள். மொழி தெரியாது, புது இடம் என்று பயந்தேன். ஒரு ரூம்மில் படுக்கச் சொன்னார்கள். படுத்திருந்தேன். பக்கத்தில் இருவர் படுத்திருந்தார்கள். அவர்கள் யார் என்றே தெரியாது. காலையில் எழுந்தவுடன் கடவுளுக்கு தான் நன்றி சொன்னேன். ஏனென்றால், திகாரில் ஜெயிலில் இருந்த 1500 தமிழ் போலீஸும் என்னுடைய ரசிகர்கள். 



என்னை பார்த்தவுடன், "என்ன பவர்.. இங்க வந்துட்டா. ஷுட்டிங்கா " என்றார்கள். ஆமா என்று பொய் சொல்லக்கூடாது ஏனென்றால் ரொம்ப நாள் இருக்கப் போகிறோம் என்று எனக்குத் தெரியும். குறைந்தது 20 நாளாவது இருக்கணும், அப்படின்னா தான் பெயில் கிடைக்கும். ஷுட்டிங் எல்லாம் இல்லை. அப்படியே வந்தேன் என்று தெரிவித்தேன். பரவாயில்லை பவர். அதனால ஒண்ணுமில்லை. இதப் பார்த்து நீங்க படம் எடுக்கணும் என்றார்கள். கண்டிப்பாக எடுக்கிறேன் என்று தெரிவித்தவுடன், உங்களுடன் இரவு படுத்திருந்தார்கள் அல்லவா யாரென்று தெரியுமா என்று கேட்டார்கள். தெரியாது என்றேன். ரேப் கேஸில் வந்தவர்கள் என்றவுடன், நம்மளை ரேப் பண்ணாமல் விட்டார்களே சாமி என்று எண்ணினேன். 



அங்கு எனக்கு ஒரு அருமையான நண்பர் கிடைத்தார். என்ன பவர் இங்கு இருக்கீங்க என்று கூட்டிட்டு அவருடைய இடத்திற்கு சென்றார். அடுத்த நாள் இன்னொரு இடத்திற்கு கூட்டிட்டு போனார். அங்கு இருந்தது எல்லாம் பெரிய பெரிய முதலைகள், போனவுடன் என்ன பண்ணிட்டு வந்தீங்க என்று கேட்டார்கள். சின்ன மேட்டர் தான் என்றவுடம், நான் எவ்வளவு தெரியுமா 2000 கோடி என்றார்கள். நான் கடப்பாரை நீ குண்டு ஊசி என்றார்கள். 


ஒவ்வொரு இடத்திற்கு சொல்லும் போது, வெவ்வேறு அனுபவங்கள் கிடைக்கிறது. திகார் அனுபவங்கள் எல்லாம் வேண்டாம், ஆனால் நான் பார்த்துவிட்டேன். திகார் பார்த்தவுடன் நிறைய விஷயங்கள் இருக்குமோ என்று பார்த்தால், ஒண்ணுமே இல்லை. ஆனால் இந்த 'திகார்' படத்தில் நிறைய விஷயங்கள் இருக்கிறது. 



இந்தியாவில் எங்கு சென்றாலும் இனிமே சமாளிக்க முடியும் என்ற நம்பிக்கை இருக்கிறது. இனிமேல் எங்கேயும் போக மாட்டேன், திரையுலகில் தான் நிரந்தரமாக இருப்பேன். என்னுடன் இருந்த நண்பர்கள், உள்ளிட்ட அனைவரையும் துரத்திவிட்டேன். என்னுடைய ரசிகர்கள் தான் என்னை இந்தளவிற்கு கொண்டு வந்திருக்கிறார்கள். என்னுடைய ரசிகன் ஒருவன், "தலைவா.. நீ உள்ளே போனால், உனக்காக உயிரைக் கொடுப்பேன்" என்றார்கள். ஆனால், ஒரு பாட்டில் தண்ணீர் கொடுக்கவில்லை. நான் இதெல்லாம் உங்களை சந்தோஷப்படுத்த வேண்டும் என்று சொல்லவில்லை. அனுபவத்தில் கற்றுக்கொண்டதால் சொல்லுகிறேன். 'திகார்' வெற்றியடைய வாழ்த்துகள்" என்று சீனிவாசன் பேசினார். 



நன்றி  - த இந்து

Tuesday, August 05, 2014

காவியத்தலைவன் ஜிகர்தண்டா வைத்தாண்டிடுமா? - சித்தார்த் பேட்டி

தேனீயைப்போல படு சுறுசுறுப்பாக இயங்கிக்கொண்டிருக்கிறார், சித்தார்த். ‘ஜிகர்தண்டா’ படம் ரிலீஸாகியுள்ள நிலையில் ‘காவியத்தலைவன்’, கன்னட ரீமேக் படமான ‘லூசியா’ என்று அடுத்தடுத்து தமிழில் முழு கவனம் செலுத்தி வருகிறார். 


‘‘தமிழில் நான் ஆசைப்பட்ட படங்கள் முதன்முறையாக எனக்கு கிடைக்கத் தொடங்கியிருக்கிறது. என் திரையுலக வாழ்க்கையில் மிக முக்கியமான ஆண்டு இது’’ என்றவாறு பேசத் தொடங்கினார். 


‘பீட்சா’ படத்தின் மூலம் கார்த்திக் சுப்புராஜ் மீது விழுந்த தனிக் கவனம்தான் அவருடன் ‘ஜிகர்தண்டா’வில் உங்களைச் சேர்த்து வைத்ததா? 

 
‘பீட்சா’ என்னை ரொம்பவே பாதித்த படம். அந்தப் படத்தைப் பாராட்டி நான் சமூக வலை தளத்தில் எழுதியிருந்தேன். பின்னர் ஒருமுறை அவருடன் இதுபற்றி பேசிக்கொண்டிருந்த போதே, ‘இப்படி ஒரு இயக்குநர் நமக்கு கதை சொன்னால் நல்லாயிருக்குமே’ என்று நான் யோசிக்கத் தொடங்கிவிட்டேன். அந்த நேரத்தில் அவரே, ‘ஒரு கதை இருக்கிறது கேக்குறீங்களா?’ என்றார். 



‘ஜிகர்தண்டா’ கதையை சொல்வதற்கு முன்பே அவருடன் படம் பண்ண வேண்டும் என்று ஃபிக்ஸ் ஆகிட்டேன். அப்போதைக்கு கதை கொஞ்சம் பிடித்திருந்தால் போதும் என்ற மனநிலையில்தான் இருந்தேன். ஆனால், கதை ரொம்பவே பிடித்துப்போனது. குறிப்பாக என் கதாபாத்திரம் எனக்கு மிகவும் பிடித்தது. உடனே ஒப்புக்கொண்டேன். 


நீங்கள் ஒருபுறம் மணிரத்னம், ஷங்கர், அமீர்கான் போன்றவர்களோடு பணிபுரிந்து வருகிறீர்கள். மறுபுறம் புது இயக்குநர் களோடும் குறும்பட இயக்குநர்களோடும் பயணிக்கிறீர்கள். இது எப்படி சாத்திய மாகிறது? 


 
புதுமுக இயக்குநர்களுடன் அதிகமாக வேலை பார்க்கும் நடிகர்களில் நானும் ஒருவன். நான் புது இயக்குநர்களோடு கிட்டத்தட்ட 15 படங்கள் செய்திருக்கிறேன். மணி சார், அமீர்கான் எல்லாம் ஜாம்பவான்கள். எல்லோரையுமே கதைதான் பேச வைக்கிறது. இப்போது கார்த்திக்கின் பலமும் கதைதான். 10 நிமிட குறும்படங்களிலேயே அசத்தும் குறும்பட இயக்குநர்கள் 2 மணி நேரம் கிடைக்கும்போது இன்னும் வித்தியாசமாக அசத்திவிடுகிறார்கள். ‘காதலில் சொதப்புவது எப்படி’, ‘ஜிகர்தண்டா’ படங்களில் எல்லாம் நான் ஒரு புதிய அனுபவத்தை கற்றேன். இப்போது ‘காவியத்தலைவன்’ படத்தில் வசந்தபாலன், ஏ.ஆர்.ரஹ்மான், நீரவ்ஷா என்று பெரிய அணியே இருக்கிறது. கதை என்கிற ஒரு விஷயம் எல்லாவற்றையும் கடந்து ஒரு பெரிய எதிர்பார்ப்பை முன் நிறுத்தும். 



தெலுங்கில் நீங்கள் அதிக கவனம் செலுத்திய தால்தான் தமிழில் இடைவெளி ஏற்பட்டதா? 

 
எந்த ஒரு விஷயத்துக்கும் இரண்டு பக்கம் உண்டு. கடந்த 7, 8 ஆண்டுகளாக நான் தெலுங்கில் ஓடிக்கொண்டே இருந்தேன். அங்கே நிறைய வெள்ளி விழா படங்களை கொடுத்துவிட்டேன். அங்கே பிஸியாக இருந்தபோது தமிழில் வாய்ப்புகள் வந்தது. அடுத்த இரண்டு ஆண்டுகள் என் கவனம் தமிழ் படங்களில்தான் இருக்கும். 


நீங்கள் படங்களைத் தயாரிக்கப் போவதாக அறிவித்துள்ளீர்களே? இப்போதே அது தேவையா? 

 
நான் படம் தயாரிப்பதற்கு இரண்டு காரணங்கள் உள்ளன. முதல் காரணம் உதவி இயக்குநராக இருந்த காலம் முதலே சினிமாவின் முக்கிய தொழில்நுட்பங்கள் எனக்கு தெரியும் என்பது. அடுத்ததாக ஒரு கதை நல்ல கதை என்று மனதில் பட்டால்தான் நிச்சயமாக அதை தயாரிப்பேன். நான் பணம் பண்ணுவதற்காக தயாரிப்பாளராக மாறவில்லை. நல்ல படங்களைக் கொடுக்கவே தயாரிப்பாளராக மாறுகிறேன். 


எனக்கு தெரிந்த நிறைய தொழில்நுட்பக் கலைஞர்கள் இருக்கிறார்கள். அவர்களின் திறமையை காத்திருப்பில் போட்டுவிடக்கூடாது என்று நினைக்கிறேன். வரும் ஜனவரி தொடங்கி மூன்று தமிழ் படங்கள் தயாரிக்க உள்ளேன். அதில் ஒரு படத்தில் நான் நடிக்கவும் செய்கிறேன். 


உங்கள் கனவு? 

 
ஒரு கதையை இயக்குநரோ, கதாசிரியரோ எழுதும்போது இந்த கதாபாத்திரத்தை சித்தார்த் செய்வான் என்று அவர்கள் மனதில் ஓட வேண்டும். அதுதான் என் கனவு. அது எந்த மாதிரியான கேரக்டராக இருந்தாலும் நான் கண்முன் வர வேண்டும். 


மணிரத்னத்திடம் நீங்கள் உதவி இயக்குந ராக இருந்துள்ளீர்கள். நீங்கள் எப்போது ஒரு படத்தை இயக்குவீர்கள்? 

 
கண்டிப்பாக. அதுக்கு இன்னும் நேரம் இருக்கிறது. இப்போது நடிப்பு, தயாரிப்பு, பாடுவது, கதை எழுதுவது என்று பல வேலைகளைச் செய்கிறேன். ஆனால் படம் இயக்கும்போது வேறு எதையும் செய்யக்கூடாது. குறைந்தது 2 ஆண்டுகள் ஒதுக்கி வைத்துவிட்டு ஒரு படத்தை இயக்குவேன். 

திருமணம்? 
 
தெரியவில்லை…. இப்போதைக்கு இல்லை…. இன்னும் கொஞ்ச நாட்கள் ஆகட்டுமே. 


thanx - the hindu

Saturday, July 05, 2014

பூலோகம் - ஜெயம் ரவி, பேட்டி


பையனாக இருந்த ஜெயம் ரவி, சில மாதங்களுக்கு முன்பு சமூக அநீதிகளைக் கண்டு பொங்கி எழும் ‘அரவிந்தனாக’ ரசிகர்கள் மனதில் ‘நிமிர்ந்து நின்றார்’. தற்போது சமூகத்துக்காக வேறொரு வண்ணத்தில் ‘பூலோகம்’ என்ற குத்துச்சண்டை வீரராக வர இருக்கிறார். எஸ்.பி.ஜனநாதனின் உதவியாளர் கல்யாண் இயக்கத்தில் உருவாகியிருக்கும் இந்தப் படத்தைப் பற்றி ‘தி இந்து’வுக்காக பிரத்யேக மாகப் பேசினார் ஜெயம் ரவி.


பூலோகம் என்ற தலைப்பு உங்கள் கதாபாத்திரத்தின் பெயரா? இல்லை கதையோடு தொடர்புடையதா?


எனது கதாபாத்திரத்தின் பெயர்தான். விவேக் பூலோகம் என்ற குத்துச்சண்டை வீரனாக நடித்திருக்கிறேன். என்றாலும் பூலோகம் என்ற வார்த்தைக்குக் கதையிலும் முக்கியமான இடமிருக்கிறது. ஒரு இளம் பாக்ஸரின் வாழ்க்கையில் நடக்கும் முக்கிய சம்பவம்தான் கதையை நகர்த்துகிறது. குத்துச்சண்டைதான் கதையோட பேக்டிராப். பாக்ஸிங்கில் ஆறு விதமான குத்தும் முறைகள்தான் முக்கியம். அதை வைத்துக்கொண்டு களத்தில் நம்மை எதிர்த்து நிற்கும் போட்டியாளரைத் தாக்கி, ஜெயிக்கணும். இந்த ஆறு பஞ்ச்சஸ் மட்டுமே வைத்துக் கொண்டு மொத்தப் படத்தையும் எப்படி சுவாரசியமாக எடுப்பது என்பதுதான் எங்களுக்கு இருந்த மிகப் பெரிய சவால். இந்தச் சவாலை எப்படி எதிர்கொண்டோம் என்றால், எதற்காகப் பூலோகம் அடிக்கிறான் என்ற எமோஷனை வைத்திருக்கிறோம். தங்கைக்காக அடித்தான் என்றால் அது ஒரு எமோஷன், மக்களுக்காக அடித்தால் அதுவொரு எமோஷன், ஆனால் இந்தப் படத்தில் பூலோகம் என்ன காரணத்துக்காக அடிக்கிறான் என்பதில்தான் கதையோட சக்ஸஸ் உட்கார்ந்திருக்கு. பூலோகம் புத்திசாலித்தனமாக அடிப்பது, அவனை இயக்கும் பின்னணிக் காரணங்களின் பாதிப்புடன் அடிப்பது என்று மாறுபட்ட எமோஷன்களில் ஒவ்வொரு பாக்ஸிங் காட்சியும் இருக்கும். இது படத்தின் ஹைலைட்களில் ஒன்றாக இருக்கும். இது ஜெயம் ரவியின் படமாகவும் இருக்கும். இயக்குநர் கல்யாணின் படமாகவும் இருக்கும்.


எம்.குமரன் சன் ஆஃப் மகாலட்சுமியில் ஏற்கனவே குத்துச்சண்டை வீரராக நடித்திருந்தீர்கள். மறுபடியும் ஒரு குத்துச்சண்டை படத்தை ஏற்றுக்கொள்ள வலுவான காரணங்கள் இருக்க வேண்டும் இல்லையா?


ஹாலிவுட் படங்களிலும், இன்னும் பல உலக சினிமாக் களிலும் ரொம்பவே புரஃபெஷ னலான பாக்ஸிங் காட்சிகளைக் கொடுத்திருக்கிறார்கள். ஆனால் இந்தியாவில் பாலிவுட்டில்கூட அதுபோன்ற முயற்சி இதுவரை இல்லை. பூலோகம் படத்தின் மூலம் அந்தப் பெருமை தமிழ் சினிமாவுக்குக் கிடைக்கும். எம்.குமரன் படம் கிக் பாக்ஸிங். இது ரா பாக்ஸிங். பொதுவாக உலகம் முழுக்கவே பாக்ஸிங் வைத்துப் படமெடுத்தால் ஓடாது என்ற செண்டிமெண்ட் இருக்கிறது. ஆனால் எம்.குமரனில் அதை உடைத்தோம். பாக்ஸிங் இதில் பின்னணியாக இருந்தாலும், கதையை நகர்த்திச் செல்ல நம்ம கல்சரிலிருந்து சில விஷயங்களும், இயல்பை மீறாத ஒரு அழகான லவ்வும் இருக்கு.



கலாச்சாரத்திலிருந்து சில விஷயங்கள் என்கிறீர்கள்… ‘மயானக் கொள்ளை’ வழிபாட்டு முறையைப் படமாக்கியிருப்பதைத்தானே சொல்கிறீர்கள்?



ஆமா. ஹீரோவோட வாழ்க்கையில அதுவும் ஒரு முக்கியமான பார்ட். மக்களை அழிக்கிற அசுரனை வதம்பண்ண, அம்மனா அவதாரம் எடுத்து, மயானத்துக்குப் போய் அவனை வதம் பண்றதுதான். அதை விரிவா சொல்ல வேணாம்னு நினைக்கிறேன். அந்தக் காட்சிய சூட் பண்றதுக்கு முன்னாடி வருஷா வருஷம் நடக்கிற உண்மையான மயானக் கொள்ளையோட வீடியோவைக் கொடுத்துப் பார்க்கச் சொன்னாங்க. எனக்குக் குலை நடுங்கிவிட்டது. உண்மையான வீடியோவில் அம்மனாக அருள் வந்து மயானத்துக்குப் போகும் பெண்மணியைச் சந்தித்து, அந்த நேரத்தில் நான் என்ன நினைத்துக் கொள்ள வேண்டும், எப்படி நடந்துகொள்ள வேண்டும் என்று கேட்டேன். அவர் எனக்கு எந்த டிப்ஸும் கொடுக்கவில்லை. “ஆத்தா உனக்குள்ள வந்து உட்கார்ந்துடுவா போ” என்று ஆசி கொடுத்து அனுப்பினார். எனக்கு அதுதான் நடந்ததோ என்று இப்போது தோன்றுகிறது. மயானக் கொள்ளை ஒரு பாடல் காட்சி. அதில் எனது டிரான்ஸ்ஃபர்மெஷன் எனக்கே சர்ப்பிரைஸாக இருக்கிறது என்றால், ரசிகர்களும் ஜெயம் ரவிதானா இது என்று ஆச்சரியப்படுவார்கள்.



ஹாலிவுட் பட வில்லன்களுக்கும் உங்களுக்கும் அப்படி என்ன
 ஒரு பூர்வஜென்ம பந்தம்? இந்தப் படத்தில் நேதன் ஜோன்ஸ் ஏன் தேவைப்பட்டார்?



அது அப்படி அமைந்து விடுகிறது. பேராண்மை படத்தில் ‘சர்வதேசக் கூலிப்படை’ என்ற தீம் என்பதால் அதற்கு ரொனால்ட் தேவைப்பட்டார். பூலோகத்தில் இந்தியா ஒரு பெரிய மார்க்கெட் என்பது இந்தியர்களாகிய நமக்குத் தெரியாது என்று அந்நிய நாட்டவர்கள் நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். அப்படி நினைத்துக்கொண்டிருப்பது தவறு என்று புரிய வைப்பவன்தான் பூலோகம். இதில் நேதன் ஜோன்ஸைக் குறிப்பாக ஒரு நாட்டைச் சேர்ந்தவராகக் காட்டாமல் அந்நிய நாட்டவர் என்று காட்டுகிறோம். ‘ஸ்கார்பியன் கிங் ’ படத்தில் நேதன் ஜோன்ஸைப் பார்த்து நான் வாய் பிளந்துபோய் இருக்கிறேன். 



இவர் மனிதனா இல்லை கிராபிக்ஸா என்று கூட நினைத்ததுண்டு. நேதன் ஜோன்ஸுடன் மோத வேண்டும் என்று வருகிறபோது அவரது உயரத்துக்கு என்னால் இனி வளர முடியாது. ஆனால் அவர் அளவுக்கு என்னால் உடலை ஏற்ற முடியும். இதற்காக 15 கிலோ எடை கூட்டினேன். நேதன் ஜோன்ஸுக்கு அடி கொடுக்கிறவனாக நான் தெரிகிறேனா என்பதைப் படம் பார்த்துவிட்டு ரசிகர்கள் சொல்லட்டும். ஆனால் நேதன் ஜோன்ஸிடம் அடிவாங்குகிற அளவுக்கு உடலை ஏற்றினேன் என்று என்னால் சொல்ல முடியும். அதேபோல பூலோகம் கேரக்டரைசேஷன் என்பது நேதன் ஜோன்ஸுக்கு இணையாக இருக்கும்.



நேதன் ஜோன்ஸின் கடமை உணர்ச்சியைப் பார்த்து வியந்துபோனேன். முதல் நாள் படப்பிடிப்பின் இறுதியில் காலில் அடிபட்டுவிட்டது.முதலுதவியோடு சரி. “எனது ஊரில் போய்ச் சிகிச்சை எடுத்துக் கொள்கிறேன்.” என்று சொல்லி 48 மணிநேரம் இடைவிடாமல் கடுமையான பாக்ஸிங் காட்சிகளில் நடித்துக் கொடுத்துவிட்டுத்தான் கிளம்பினார். ரொனால்ட் என் வீட்டுக்கு வந்தார். நமது தமிழ்ப் பண்பாட்டின்படி வேட்டி அணிந்து விருந்து உண்டார். ஆனால் நேதனுக்கு அதற்கான நேரமில்லை. அதனால் எனது அப்பா, அம்மாவை செட்டுக்கு வரவழைத்து அவருக்கு அங்கவஸ்திரம் போர்த்தி மரியாதை செய்தோம். அவ்வளவு பெரிய உருவம் நெகிழ்ந்துவிட்டது.



நீங்க சொல்வதைப் பார்த்தால் இவர் படத்தின் முடிவில் வரும் வில்லன் என்று தெரியுது. அப்போ மெயின் வில்லன்?



பிரகாஷ்ராஜ். தீபக் ஷாங்கிற கேரக்டர் பன்றார். பெரிய பிசினஸ் மேக்னெட். பிச்சுருக்கார் மனுஷன். இந்த மாதிரி புத்திசாலி வில்லனைப் பார்த்து ரொம்ம நாளாச்சுன்னு ஃபீல் பண்ண வெச்சிடுவார். இவருக்குக் குப்பத்துல என்ன வேலை என்பதுதான் ஹீரோவோட இணைக்கிற புள்ளி.



மறுபடியும் த்ரிஷா கெமிஸ்ட்ரி அமைந்துவிட்டதே?



இதுவும் அதிர்ஷ்டம்தான். திகட்டாத அழகுன்னு சொல்வோம்ல அது த்ரிஷாதான். அதேபோல ஓவர் ஆக்டிங் பண்ணாம படத்துக்குப் படம் அந்த கேரக்டராவே தெரியுறதும் த்ரிஷாவோட ஸ்பெஷல். இந்தப் படத்துல ஒரு மலையாளப் பொண்ணுக்குரிய சாயலோட சிந்துன்னு ஒரு கேரக்டர் பண்ணியிருக்காங்க. அவங்க அண்ணன் பரோட்டா கடை வெச்சிருப்பார். படிச்சுகிட்டே அதுல பார்ட் டைம் வேலை செய்வாங்க. பூலோகம் கேரக்டர் ஒரு போட்டியில ஜெயிச்சிட்டா, பரிசு வாங்குற அந்த போட்டோவை உடம்புல பச்சை குத்திகிற கேரக்டர். கேக்குறதுக்கு ஒரு டைப்பா தெரியும். படத்துல பாருங்க. ஜமாய்ச்சிருக்காங்க. பூலோகம் படிக்காதவன். இண்டர்நேஷனல் பாக்ஸிங் எப்படியிருக்குன்னு இண்டர்நெட் வழியா அவனுக்கு ஃபீட் பண்றதும் ரசிக்கிற மாதிரி இருக்கும்.


நன்றி - த இந்து