Showing posts with label சமூக விழிப்புணர்வு. Show all posts
Showing posts with label சமூக விழிப்புணர்வு. Show all posts

Sunday, January 09, 2011

பெண்மையை கேவலப்படுத்தும் BSNL-ன் அத்து மீறிய விளம்பரம்

 http://telecomtalk.info/wp-content/uploads/2009/04/bsnl-postpaid-plans-1024x703.jpg
சமீபத்துல ஒரு மொக்கைப்படத்துக்குப் போயிருந்தேன்,(நாம என்னைக்கு
நல்ல படத்துக்கு போயிருக்கோம்?)அது என்னமோ தெரியல ,என்ன மாயமோ
புரியல,நான் போற படம் எல்லாம் மொக்கையாவே ஆகிடுது.(நன்றி - குணா
வசனகர்த்தா பாலகுமாரன்)

படம் போடறதுக்கு முன்னால சில விளம்பரங்களை போட்டாங்க..
அதுல BSNL-ன் 3G  சேவை பற்றிய விளம்பரமும் வந்துச்சு.ஆ ராசோவோட
ஸ்பெக்ட்ரம் ஊழல் கூட எனக்கு இவ்வளவு பெரிய ஷாக் குடுக்கல,(வழக்கமா
அரசியல்வாதிங்க பண்றதுதானே - வாழ்க தமிழனின் சகிப்புத்தன்மை)

ஆண்கள் உபயோகப்படுத்தும் ஷேவிங்க் கிரீம் விளம்பரத்தில்,அடுத்தவனோட புது பொண்டாட்டிய கரெக்ட் பண்ண ஐடியா குடுக்கும் மெண்ட்டோ ஃபிரஸ் விளம்பரத்தில் என பெண்களை போகப்பொருளாய்,பகடைக்காயாய் சித்தரிக்கும் விளம்பரங்கள் அதிகரித்து வரும் சூழலில் BSNL-ன் 3G  சேவை பற்றிய விளம்பரமும் நெம்பர் ஒன் மோசமான விளம்பரம் என பெயர் பெற்றுள்ளது.

ஒரு பஸ்சில் ஒரு நவ நாகரீக மங்கை மிடியுடை அணிந்து அமர்ந்துள்ளார்.(மாடர்ன் கேர்ள் சுடிதாரோ ஜீன்சோ போட மாட்டாரா?)அருகில் அமர்ந்து உள்ள இளைஞனிடம் வழிகிறாள்.அந்த இளைஞன் ஃபிகர் நமக்கு சிக்னல் குடுத்துடுச்சு,என அடுத்த கட்ட  நடவடிக்கையில் இறஙகுகிறான். இப்போதான் கதை(!?)ல ஒரு பெரிய ட்விஸ்ட். ஸ்டேண்டிங்கில் நிற்கும் இன்னொரு இளைஞன் கையில்  BSNL-ன் 3G  சேவை உள்ள ஒரு ஃபோனை வைத்துக்கொண்டு அவனது கேர்ள் ஃபிரண்டிடம் படம் காண்பிக்கிறான்.உடனே  சிட்டிங்கில் இருக்கும் சிட்டு (சி-னாவுக்கு சி-னா,நமக்கு எதுகை மோனை நல்லா வருதே கவிஞன் ஆகிடலாமோ? #டவுட்) உடனே பச்சோந்தி ஆகி அருகில் இருக்கும் இளைஞன் மீது எரிந்து விழுகிறாள்.

ஏய், மிஸ்டர், கையையும் காலையும் வெச்சிட்டு சும்மா இருக்க மாட்டீங்க?
எந்திரிங்க ,எந்திரிங்க  முதல்ல என அவனை துரத்தி விடுகிறாள்.(இவருக்கான
டப்பிங்க் வாய்ஸ் மகா மட்டம்),பிறகு ஸ்டேண்டிங்கில் இருக்கும் இளைஞனிடம்
மிஸ்டர்,நீங்க இங்கே வந்து உட்கார முடியுமா? என கேட்கிறாள்.உடனே ஷாக் சர்ப்பரைஸ் ஆகும் அவன், அவனது கேர்ள் ஃபிரண்டை அம்போ என விட்டு விட்டு( ராம்தாசை கழட்டி விட்ட கலைஞர் மாதிரி)அவள் அருகே போய் அமர்ந்து கொள்கிறான்.

க்ளைமாக்சில் அந்தப்பெண் அவளது காலைத்தூக்கி அவனது காலில் போட்டு
அவனது தோளில் சாய்ந்து கொள்கிறாள்,(ஏதோ 10 வருடம் காதலித்த காதலனுடன் இருப்பது போல).விளம்பர வாசகம் வருகிறது. BSNL-ன் 3G  சேவை பெற்றிடுங்க, கொண்டாடுங்க என.

கலாச்சார சீர்கேட்டின் உச்சம் அல்லவா இது?முன்னே பின்னே அறிமுகம் இல்லாத  இளைஞனுடன் ஒரு பெண் இப்படி நடப்பதாக காட்டுவது பெண் இனத்தையே கேவலப்படுத்துவது போல் உள்ளது.நான் இடைவேளையில் தியேட்டர் ஆப்பரேட்டரிடம் ,இந்த விளம்பரம் எத்தனை நாளா வருது? என்றேன்?அது ஒரு மாசமா வருதே என்றார் சர்வ சாதாரணமாக. சும்மா சின்ன விஷயத்துக்கு எல்லாம் பொங்கி எழும் பெண்னிய அமைப்புகள்,மாதர் சங்கங்கள் எல்லாம் என்ன செய்கின்றன?

பொறுப்புள்ள இடத்தில் ,நாடு முழுதும் பரவி இருக்கின்ற, அரசு மேற்பார்வையில் இயங்கும் ஒரு நிறுவனம் இப்படி நடக்கலாமா? அந்த விளம்பரம் தடை செய்யப்பட வேண்டும். வருத்தம் தெரிவிக்கப்பட வேண்டும்.

இந்த மேட்டரை ஆங்கிலத்தில் மொழி பெயர்த்து ஹிந்து நாளிதழுக்கும்,தமிழில்
குமுதம் இதழுக்கும் அனுப்பி இருக்கிறேன்.அதிகமான மக்களை போய்ச்சேர..

பார்ப்போம்.

Wednesday, October 20, 2010

சினிமா -உல்டா சீன் போட்டி (கண்டுபிடிச்சா பரிசு)





அறிஞர் வாழ்வில் நிகழ்ந்த அற்புத சம்பவம்

            தேசபக்தி சி.ஆர்.தாஸ் ஒரு தடவை ஒரு வழக்கில் வாதிடுவதிற்காக
வழக்குரைஞர் என்னும் பொறுப்பில் வெளியூர் சென்றிருந்தார்.  அவர் வாதிட்ட வழக்கு, வெற்றி பெற்றுவிட்டது.  வெற்றி பெற்ற கட்சிக்காரர்கள் சி.ஆர்.தாஸுக்குப் பெருந்தொகையை அன்பளிப்பாகக் கொடுத்தார்கள்.

                        சி.ஆர்.தாஸ், புகைவண்டியில் முதல் வகுப்பில் பயணம் செய்தவாரு ஊருக்குத் திரும்பிக் கொண்டிருந்தார்.  அவர் பயணம் செய்த அதே முதல் வகுப்புப் பெட்டியில் ஓர் அழகான இளம்பெண்ணும் பயணம் செய்து கொண்டிருந்தாள்.

            அந்த இளம்பெண் சி.ஆர்.தாஸிடம் ஏராளமாகப் பணம் இருப்பதை
அறிந்து கொண்டாள். அவள் பணத்தை எப்படியாவது அபகரித்துவிட
வேண்டுமென்று திட்டமிட்டாள்.  அவள் எழுந்து, சி.ஆர்.தாஸ் அருகில் சென்று
அமர்ந்துகொண்டு, காதல் பேச்சுகள் பேசி சரசமாட ஆரம்பித்தாள்.

                        ”நான் உங்களைக் காதலிக்கிறேன்.  நாம் இருவரும் திருமணம்
செய்துகொள்வோம்” என்று அந்த இளம்பெண் குழைந்து குழைந்து பேசினாள்.
அது, சி.ஆர்.தாஸுக்கு அருவருப்பாக இருந்தது. அதனால் அவர் ஏதும் பேசாமல்மௌனமாக இருந்தார்.

            தன் சரசம் பலிக்காததால், அவள் மிரட்டலில் இறங்கினாள்.
“என் விருப்பத்திற்கு நீங்கள் இணங்காவிட்டால் அபாயச் சங்கிலியைப் பிடித்து இழுத்து வண்டியை நிறுத்தி விடுவேன்; பலாத்காரம் செய்ததாகப் போலீசாரிடம் புகார் சொல்லுவேன்” என்று மிரட்டினாள்.

            அந்தப் பெண், கூறியது போல் செய்தால், போலீசாரும் மற்றவர்களும்,
ஒரு பெண் என்பதால், அவள் சொல்வதைத் தான் நம்புவார்கள்.  அதனால், தன் நிலைமை கேலிக்கிடமாக ஆகிவிடும் என எண்ணினார், சி.ஆர்.தாஸ்.  அவர் தமக்குள் ஒரு திட்டம் வகுத்துக் கொண்டார்.

            பிறகு அவர், அந்த இளம்பெண்ணை நோக்கி,”அம்மா! நான் ஒரு
முழுச்செவிடு. நீ என்ன சொல்கிறாய் என்பதே விளங்கவில்லை.  நீ
சொல்வதை ஒரு தாளில் எழுதிக் காட்டு. நான் படித்து தெரிந்து கொள்கிறேன்”
என்று கூறினார்.

                        அந்தப் பெண் அவ்வாறே ஒரு தாளில், அவ்வளவு நேரமாகத் தான்
பேசிய விஷயங்களையெல்லாம் எழுதிக் காண்பித்தாள். அதைப் படித்துப்பார்த்த சி.ஆர்.தாஸ்,”அம்மா! நீ எழுதியுள்ள விஷயங்களைப் படித்துத் தெரிந்து கொண்டேன். ஆனால், உன் பெயரை என்னால் தெரிந்துகொள்ள முடியவில்லை. அதையும் எழுதிக் காட்டினால் தெரிந்துகொள்ள எனக்கு உதவியாக இருக்கும்” என்றார்.
அந்த இளம்பெண் தன் பெயரை அந்தத் தாளின் அடியில் எழுதினாள்.

            அந்தத் தாளைப் பத்திரமாக எடுத்து வைத்துக்கொண்ட சி.ஆர்.தாஸ்
சிரித்துக்கொண்டு எழுந்தார்,”அம்மா! அபாய அறிவிப்புச் சங்கிலியை இழுக்கும் சங்கடம் இனி உனக்கு வேண்டாம்.  அதை நானே பார்த்துக்கொள்கிறேன்” என்று கூறிவிட்டு அபாய அறிவிப்புச் சங்கிலியை பிடித்து இழுத்தார். வண்டி நின்றது. தம்மைச் சந்திக்க வந்த இரயில்வே போலீஸ் அதிகாரியிடம், அந்தபெண்ணையும் அவள் எழுதிய கடிதத்தையும் ஒப்படைத்தார். பிறகு, சி.ஆர்.தாஸ் தொடர்ந்து நிம்மதியாக பயணம் செய்தார்.

டிஸ்கி 1 - மேலே சொல்லப்பட்ட உண்மை சம்பவத்தை சுட்டு 4 தமிழ் படங்களில் இதே மாதிரியான சம்பவத்தை படம் பிடித்திருக்கிறார்கள்.எது என சொல்ல முடியுமா?அட்லீஸ்ட் ஒரு படப்பெயரை சொன்னா போதும்,பரிசு 10 டி வி டிக்கள் .ஒவ்வொரு டி வி டியிலும் 5 படங்கள் (ஆங்கிலம்).மொத்தம் 50 படங்கள்


டிஸ்கி 2 - பரிசு 4 பேருக்கு.அதிக பேர் சரியான விடை அளித்தால் முந்தியவருக்கு முன்னுரிமை அல்லது நமீதா முறையில் பரிசு (குலுக்கல் முறை)


Wednesday, September 29, 2010

எந்திரன் தியேட்டர்களில் நடக்கும் காமெடி கலாட்டாக்கள்

1.தினகரன் பத்திரிக்கை இன்னைக்கு மட்டும் செம சேல்ஸாமே?ஏன்?

எந்திரன் பட ரிசல்ட் ஸ்பெஷல் எடிசனாம்.

2.அவரு உலக மகா அப்பாவினு எப்படி சொல்றே?

எந்திரன் ஓடற தியேட்டர்ல டிக்கட் கவுண்ட்டர் திறப்பாங்கன்னு நம்பிக்கையா க்யூவுல நிக்கறாரே?

3.சன் டி.வி.ல வர வர ஓவரா பீலா விட ஆரம்பிச்சுட்டாங்க.


ஏன்?


எந்திரன் ரிலீஸ் ஆவதை முன்னிட்டு ஷேர் மார்க்கெட் பிளஸ்ல போகுது,அப்படினு சன் நியூஸ்ல சொல்றாங்களே?


4.ஐஸ் யாருக்கு ஜோடி?சயிண்ட்டிஸ்ட் ரஜினிக்கா?ரோபோவுக்கா?


ரெண்டு பேருக்கும் கிடையாது,அபிஷேக்கோட ஜோடி.

5.அக்ட்டோபர் 1 முதல் 10 தேதி வரை எஸ் எம் எஸ் ல க்ரூப் மெஸேஜ் அனுப்பக்கூடாதுனு சன் டி வி ல சொல்றாங்களே,ஏன்?

எந்திரன் ரிசல்ட்டோ,கதையோ வெளில பரவிடக்கூடாதாம்.




6.தியேட்டர் ஓனர் பால்கனில படம் பாக்காம பென்ச்ல உக்காந்து பாக்கறாரே,ஏன்?

ரசிகர்கள் அப்பப்ப அள்ளி வீசற காசு,பணம் எல்லாம் கலெக்ட் பண்ணி கல்லாவுல கணக்கு காட்டனும்னு சன் பிக்சர்ஸ் ஆர்டராம்.


7.தியேட்டர் ஆப்பரேட்டர் ஏன் கோபமா இருக்கார்?


அவரைக்கூட ரூ 300 வாங்கிட்டுதான் உள்ளே விட்டாங்களாம்.






8.தியேட்டருக்கு செக்யூரிட்டிக்கு வந்த போலீஸால என்ன பிரச்சனை?


வெளில எந்தக்கலவரமும் இல்ல,உள்ள ஒரு ரவுண்ட் பார்க்கறோம்னு நைசா உள்ளே போய்ட்டாங்களாம்.


9.படம் ஓகே,ஆனா வசனம் புரியலை.


யோவ்,நீ பார்த்தது ரோபோட்,ஹிந்திப்பதிப்பு,காம்ப்ளெக்ஸ் மாறி வந்துட்டே.




10.ஆசிரியர் - அக்டோபர் 2 ந்தேதி ஏன் லீவ் விடறாங்க?


மாணவன் - சார்,எந்திரன் படத்துக்கு டிக்கட் வாங்குன களைப்பு போகவா இருக்குமோ?


ஆசிரியர் - அடப்பாவி,காந்தி ஜெயந்தின்னா என்னனு தெரியல.


11.பங்கு மார்க்கெட்,சினிமா மார்க்கெட் என்ன வித்யாசம்?

இப்போ பங்கு மார்க்கெட்ல காளையின் ஆதிக்கம் அதிகம்,சினிமா மார்க்கெட்ல முரட்டுக்காளையின் ஆதிக்கம் அதிகம்.


12.உங்க வகுப்புலயே இவன்தான் ரொம்ப பின் தங்கிய மாணவன்னு எப்படி சொல்றே?


எல்லாரும் எந்திரன் படத்தை விடிகாலை 4 மணி ஷோவே பாத்துட்டாங்க,இவன் மட்டும் மேட்னி ஷோதான் பார்த்தான்.


13.தியேட்டர் ஓனர் எப்படி போண்டி ஆனார்?


படம் திருப்தி இல்லை எனில் பணம் வாபஸ் அப்படின்னு விளம்பரம் பண்ணி மாட்டிக்கிட்டாராம்.


14.டிக்கெட்ல தியேட்டர் பேருக்குப்பதிலா பரிமளா இல்லம்னு போட்டிருக்கே?


வீடுதான்,ஹோம் தியேட்டர் வெச்சிருக்காங்களாம்.


15.எந்திரன் ஆடியன்ஸ் கிட்ட டூரிஸம் டிப்பார்ட்மெண்ட்(சுற்றுலாத்துறை) டாக்ஸ் கேக்குதே,ஏன்?


உலகின் அனைத்து டூரிஸ்ட் ஸ்பாட்லயும் ஷூட்டிங்க் எடுத்திருக்கறதா ஷங்கர் பேட்டில சொன்னாராம்.


16.என்ன சார்,ரூ 300 குடுத்து படம் பார்க்க வந்திருக்கேன்,பெஞ்ச் ல உக்காந்து பாக்கச்சொல்றீங்க?நான் வெளில போய் கலெக்டர்கிட்ட மனு குடுப்பேன்.


உனக்கெதுக்கு கஷ்டம்,அதோ உனக்கு முன்னால கலெக்டரே மண்ணைக்கூட்டி உக்காந்து படம் பாக்கறாரு பாரு,அங்கேயே போய் குடு.




எந்திரன் பற்றி ஷங்கரின் பேட்டியும்,நையாண்டி நாரதரின் நச் கேள்விகளும்

எந்திரன் திரைப்படம் தயாரானது எப்படி என்பதை பெரிய புத்தகமாக எழுதலாம். ரசிகர்களுக்கு மாத்திரமல்ல, திரைப்படத் துறையில் பணியாற்றுபவர்களுக்கும் பல பாடங்கள் அதிலே படிக்கக் கிடைக்கும். ஒவ்வொன்றும் ஒவ்வொரு விதம். ஒன்றிலிருந்து மற்றொன்று முற்றிலும் வித்தியாசமானது. எல்லா அனுபவங்களுக்கும் பொதுவான தன்மை ஒன்றுதான்: சுவாரசியம்.இன்று ‘காதல் அணுக்கள்’ பாடலை படமாக்கியது குறித்த தனது உணர்வுகளை நம்மோடு பகிர்ந்துகொள்கிறார் ஷங்கர்...

‘காதல் அணுக்கள்‘ ரொம்ப மென்மையான பாடல். கனவுப் பாடல். அதனால ஐரோப்பால ஜெர்மனி மாதிரி குளுமையான ஒரு நாட்டுல அந்த பாடலை படமாக்கலாம்னு திட்டம் போட்டிருந்தேன். ஆனா, லொகேஷன் பார்க்க போனா எல்லா இடமும் ஏதோ ஒரு டீவில வர்ற பாடல்ல பார்த்த மாதிரியே இருந்துது. அதே மாதிரி, லொகேஷன் மானேஜரும் ஒவ்வொரு இடத்துக்கு போனதும், ‘போன வாரம்தான் இந்த இடத்துல ஒரு தெலுங்கு ஷூட்டிங் நடந்துச்சு.. இந்தி பாட்டு எடுத்தாங்க..’ அப்படீம்பார்.

யாரும் ஷூட் பண்ணாத இடமா இருக்கணும்னு நான் உறுதியா இருந்தேன்.. அப்பதான் பிரேசில் நாட்ல, ‘கிளிமஞ்சாரோ‘ பாடலுக்கு இடம் தேடினப்ப பாத்து வச்ச லாங்காய்னு ஒரு இடம் ஞாபகம் வந்துது. பெரிய பாலைவனத்துல நடுவுல துண்டு துண்டா நிறைய ஏரிகள் இருந்தா எப்படி இருக்கும்? அதுதான் லாங்காய். அந்த மாதிரி இடம் உலகத்துல வேற எங்கயுமே கிடையாது. ஆனா, கஷ்டப்பட்டு அங்க போனதுக்கு அப்புறம்தான் தெரிஞ்சுது, ‘கிளிமஞ்சாரோ‘ பாடல்ல ஒரு பகுதியதான் அங்க எடுக்க முடியும். முழு பாடலும் எடுக்க முடியாது. அதனால் கிளம்பி வந்துட்டோம். ‘காதல் அணுக்கள்‘ அங்க எடுத்தா என்னானு தோணுச்சு. நிறைய ஸ்டில்ஸ் எடுத்துருந்தோம். அதையெல்லாம் பாத்ததும் ‘மென்மையான பாட்டுக்கு இந்த இடம் பிரமாதமான விஷுவலா இருக்கும்’னு (ஒளிப்பதிவாளர்) ரத்னவேலு அடிச்சு சொன்னார்.


உடனே புறப்பட்டோம். லாங்காய் பெரிய டூரிஸ்ட் ஸ்பாட். ரொம்ப கட்டுப்பாடுகள். சின்ன பேப்பர்கூட கீழே போடக்கூடாது. ஓட்டல்ல இருந்து கார்ல ஒரு பயணம், அப்புறம் படகுல ஒன்றரை மணி நேரம், திரும்ப ரெண்டு மணி நேரம் கார்ல, அதுக்கு பிறகு பாலைவனத்துல போறதுக்கு ஸ்பெஷலா பண்ணின ஜீப்ல பயங்கரமான பயணம். கடைசி அஞ்சு நிமிஷம் தண்ணிக்குள்ள ஜீப் போகும். அதுக்கப்புறம் இறங்கி நடக்கணும். ஏன்னா, அது காடு. ஜீப் போகக்கூடாது. எல்லாத்தையும் தூக்கிட்டு போய் ஷூட் பண்ணுவோம். மத்தியானம் பசிக்கும். அங்க எதுவும் சாப்பிட கூடாது. திரும்ப ஒரு மணிநேரம் டிராவல் பண்ணி சாப்பிட்டுட்டு ஓடி வரணும். சிரமப்படறதுக்குன்னே போய் எடுத்த மாதிரி கஷ்டப்பட்டு எடுத்தோம். ‘சும்மா சொல்லக்கூடாது, ஷங்கர்.. கூட்டிட்டு வந்தீங்களே இடம்.. இந்த மாதிரி நான் பார்த்ததே இல்லை..‘ன்னு ரஜினி சார் சொல்லிட்டே இருப்பார். அந்த பாலைவனத்துல எப்பவும் காத்தடிச்சுட்டே இருக்கும். எல்லார் மேலயும் மணல் விழும். முகத்துல துணி கட்டிகிட்டு கொள்ளை கோஷ்டி மாதிரி வேலை பாத்தோம். பிரமாண்டமான ஏரியா. கண்ணுக்குள்ள அடங்காது. அதனால ஹெலிகாப்டர்ல பறந்து படம் பிடிச்சோம்.

ரஜினி சார்கிட்ட எல்லாருக்கும் பிடிச்ச ஒரு லுக் இருக்கு. அதோட ஒரிஜினலை ரீ கிரியேட் பண்ணணும்னு சொல்லி பழைய ஸ்டில்ஸ் எல்லாத்தையும் பார்த்தேன். அதுல ஒரு லுக் ரொம்ப பிடிச்சிருந்துது. அருமையான லுக் அது. அதுக்கான விக் ரெடி பண்ணி, நினைச்சது வர்ற வரைக்கும் நிறைய மாற்றங்கள் பண்ணி, அதே மாதிரி லுக் கொண்டு வந்திருக்கோம். பானுவோட மேக்கப்பும் ரத்னவேலுவோட லைட்டிங்கும் சேந்து அவரை இன்னும் அழகா காட்டும். ‘ஜானி‘ படத்துல ஒரு பாட்டுல ரஜினி சார் ரொம்ப கேஷுவலா வருவார். அதே மாதிரி ‘தம்பிக்கு எந்த ஊரு‘ படத்துல ரொம்ப யதார்த்தமா பேன்ட் பாக்கெட்ல கைய விட்டு பாடிக்கிட்டே நடப்பார். அத பார்க்கும்போது நல்ல ஃபீல் கிடைக்கும். இன்னைக்கும் மறக்க முடியாது. அது மாதிரி பண்ணணும்னுதான் இந்த பாட்டுக்கு மெனக்கிட்டோம். ரகுமான் அழகா ட்யூன் போட்ருக்கார். ரஜினி சார் கிடார் வச்சுகிட்டு ஃப்ரீயா பண்ணியிருக்கார். படத்துல எனக்கு ரொம்ப பிடிச்ச பாடல்னு கேட்டா இதைத்தான் சொல்லுவேன்.

காதல் வந்த ஒரு விஞ்ஞானி பாடுற பாடல். வழக்கமான காதல் மொழி தெரியாது. அதனால் விஞ்ஞான ரீதியா ரொமான்டிக் பாடல் வேணும்னு கேட்டேன். வைரமுத்து சார் நியூட்ரான், எலக்ட்ரான்னு வச்சு வித்தியாசமா எழுதினார். எல்லாரோட பங்களிப்பும் சேந்து அந்த பாடல் சீனை எப்படி சூப்பரா அமைச்சுருக்குன்னு படத்தை பாத்துட்டு சொல்லுங்க.. 



‘எந்திரன்’ படத்தில் இடம்பெறும் ‘கிளிமஞ்சாரோ’ பாடல் ஷூட்டிங், பெரு நாட்டில் உள்ள மச்சு பிச்சு மலையில் நடந்தது. அந்த அனுபவம் பற்றி சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் கூறியதாவது: முதன் முதலா ‘எந்திரன்’ பட ஷூட்டிங்... முதல் ஷாட்டுன்னு வச்சுக்கோங்களேன். மச்சுபிச்சு மலையில கிளிமஞ்சாரோ பாடல். மச்சுபிச்சு மலை மேல போனோம். அங்க டான்ஸ் ஷூட். முதல்ல பெரிய மூவ்மென்ட்டுன்னு சொல்லிட்டாரு ராஜு மாஸ்டர். என்ன ஏதுன்னு கேட்டா, பண்ணிடலாம்னு, டைரக்டர்கிட்டயும் சொல்லிட் டாங்க. மொதல்ல கஷ்டமான மூவ்மென்ட்ஸை பண்ணிட்டா, அப்புறம் ஈசியாயிடும்னாங்க. சரி, ஐஸ்வர்யா ராய் வர்றதுக்கு லேட்டாகும்&அவங்க அன்னைக்குதான் இந்தியாவுல இருந்து வர்றாங்க. நாம மேக்கப்போட்டு பிராக்டிஸ் பண்ணிறலாம்னு 30, 40 வாட்டி பிராக்டிஸ் பண்ணிட்டு ரெடியா இருந்தேன். அதுக்கப்புறம் ஐஸ்வர்யா ராய் வந்தாங்க. பார்த்ததும் ரொம்ப சந்தோஷம். பெரிய மூவ்மென்ட், ரொம்ப டைம் எடுத்துப்பாங்க... அப்படின்னு நெனைச்சா, மூவ்மென்ட் பார்க்கலாம்னு சொன்னாங்க.


மூவ்மென்ட் பார்த்த உடனேயே டேக்குன்னு சொல்லிட்டாங்க. நான், என்னடா இது? ரிகர்சல்தான் பார்ப்பாங்கன்னு நினைச்சா, டேக்குன்னு சொல்லிட்டாங்களேன்னு நினைச்சேன். அப்புறம் டைரக்டர், மாஸ்டர் எல்லாரும் வந்து ரிகர்சல் பார்த்திரலாம்னாங்க. ஐஸ்வர்யா ராய் ரிகர்சல் பண்ணினாங்க... சூப்பர்ப். நான் 40 வாட்டி ரிகர்சல் பண்ணியிருக்கேன். பாடி ஸ்டடியா இருக்கு. மைன்ட் ஆஃப் ஆயிடுச்சு. சவுண்டும் கேட்க மாட்டேங்குது, ஒண்ணும் கேட்க மாட்டேங்குது. என்னடான்னு நினைச்சா, முதல்ல நல்லா வந்திட்டிருந்தது எல்லாமே மறந்து போச்சு எனக்கு. ஐஸ்வர்யா ராய் வந்து, ‘இது கஷ்டமான மூவ்மென்ட், டான்சர்களே கஷ்டப்படுறாங்க. நீங்க இவ்வளவு தூரம் பண்ணியிருக்கீங்களே’னு என்னை எங்கரேஜ் பண்ணினாங்க. முதல் ஷாட் ஒ.கே ஆன உடனேயே  எல்லாரும் கை தட்டினாங்க. எக்ஸலண்ட் பாட்டு. அங்க ஆடுன, பிரேசில்ல இருந்து வந்த ஒவ்வொரு டான்சரும் ஐஸ்வர்யா ராய் மாதிரி இருந்தாங்க. அவங்க உடம்புலயே ரிதம் இருந்தது. அங்க காஸ்ட்யூம் கரெக்ட் பண்றவங்களும் டான்ஸ் ஆடிட்டு இருந்தாங்க அவங்களுக்கு டீ, காபி கொடுத்துட்டு போறவங்களும் டான்ஸ் ஆடிட்டே போனாங்க. நான் இதுலயே ஷாக் ஆயிட்டேன். நல்ல அனுபவம். நீங்க அதை படத்துல பாருங்க.


நையாண்டி நாரதரின் கேள்விகள்.

1.சிவாஜி படத்துல கறுப்பு பணத்துக்கு எதிரான கருத்தை சொன்ன நீங்க எந்திரன் ல அதை ஏன் ஃபாலோ பண்ணலை?

2.ரஜினி தன் மகளோட கல்யாணத்துக்கு ரசிகர்கள் யாரும் வரவேண்டாம்,கூட்ட நெரிசலால் அவதி ஏற்படும்னு சொன்னாரே,எந்திரன் பட ரிலீஸ்க்கும் கூட்ட நெரிசல் அதை விட 4 மடங்கு அதிகமா இருக்கும்.ரசிகர்கள் யாரும் ஒரு வாரத்துக்கு தியேட்டர் பக்கமே வராதீங்கனு சொல்லலையே ,ஏன்?

3.ஈரோட்ல 6 தியேட்டர்ல படம் ரிலீஸ் ஆகுது.விடிகாலை 4-30 மணிக்கு முத ஷோ,மக்களுக்கு விழிப்புணர்ச்சி ஏற்படுத்தறதுனா இப்படித்தானா?

4.டிக்கட் விலை ரூ 250,ரூ 300.நார்மல் டிக்கட்டைப்போல் 23 மடங்கு அதிகம்.இது ரசிகர்களை ஏமாற்றிப்பணம் பறிப்பது ஆகாதா?


5.ஒரு தியேட்டரில் ஒரு ஷோவுக்கு 1200 பேர் பார்ர்க்கிறார்கள்.6 ஷோ ஒரு நாளுக்கு 6 தியேட்டர் 6*6*1200=
43,200 மக்கள் ஒரு நாளில் படம் பார்க்கிறார்கள்.முதல் 10 நாட்களில் கிட்டத்தட்ட நாலரை லட்சம் பேர் படத்தை பார்த்து விடுவார்கள்.படம் நல்லாருக்கோ,இல்லையோ,டப்பாவோ ரிசல்ட் கேட்காமலேயே இத்தனை பேர் பார்க்கறதால புரொடியூசரான சன் டிவிக்கு ஏகப்பட்ட லாபம்.ரசிகனுக்கு?


6.இந்தப்படத்தைப்பார்க்கலைன்னா அது ஏதோ தெய்வக்குத்தம் மாதிரி ஒரு இமேஜை சன் டி வி கிளப்பிட்டிருக்கு,அது ஏன்?


7.இத்தனை பிரம்மாண்டங்களுக்கு நடுவிலும் வரிவிலக்குக்கு ஆசைப்பட்டு ரோபோ டைட்டிலை தமிழ்ல மாத்தி இருக்கீங்க,ஏன்?(வரி விலக்குஎன்பது சின்ன பட்ஜட் படங்களுக்கு அரசு மக்கள் வரிப்பணத்துல இருந்து தர்றது)






Thursday, September 23, 2010

மாதர்தம்மை இழிவு செய்யும் மடமைதனை......

1. தான் அழகுக்காக விலை போகிறோம் என்பதை அறியாதவரை பெண் சுதந்திரம் என்பது எட்டாக்கனிதான். - இங்க்ஸ்

2.விளம்பரங்களில் பெண்கள் நடிக்கவில்லை,மாடல்கள் என்ற பெயரில் விலை போகிறார்கள்.இது ஒரு நவநாகரீக அநாகரீகமே . - அருந்ததிராய்

3.பெண்ணை பார்த்தவுடன் சிரிப்பவன் முட்டாள்,பழகிய பின்னும் சிரிக்காதவன் ஏமாளி.- ஆஸ்திரேலியப்பழமொழி

4.ஒரு பெண்ணுக்கு எல்லாவிதமான நற்குணங்களையும் எதிர்பார்க்கும் சமூகம் ஆணிடம் மட்டும் எவ்வித நற்குணங்களையும் எதிர்பார்க்காதது எவ்விதத்தில் நியாயம் என்றே தெரியவில்லை. - நா.பார்த்தசாரதி

5.பெண்கள் தேவதைகள்தான்,ஆனால் திருமணம் அவர்களை குட்டிச்சாத்தானாய் ஆக்கி விடுகிறது.- லார்டு பைரன்

6.உலகத்தில் பெரிய பூ எது? பெண்.உலகத்தில் மிக மிருதுவான விஷயம் எது? பெண்.கடவுள் படைப்பில் மிக அற்புதம் எது? பெண். கடவுள் எது? பெண்.- பாலகுமாரன்

7.கற்புள்ள ஒரு பெண்ணைப்பற்றி மோசமாகப்பேசுவதை விட ஒரு கோயிலை இடிப்பது பெரிய பாவம். - ரஷ்யப்பழமொழி
(நம்மாளுங்க ஒரு பெண்ணுக்கு ட்ரை பண்ணி கிடைக்கலைன்னா உடனே அந்தப்பொண்ணோட கேரக்டர் சரி இல்லைனு சொல்லிடுவாங்க.இவங்களுக்கு படிஞ்சுட்டா நல்ல கேரக்டராம்.என்ன கொடுமை சரவணன் இது?)

8.தன் மனதை வெளிப்படுத்த ஆண்கள் கையாளும் முறைகளைக்காட்டிலும் பெண்கள் கையாளும் முறைகள் மிக மிக நுட்பமானவை.மலரின் மணத்தை விட மென்மையானவை. - ஜான் எஃப் கென்னடி

9.பணத்தைவிட பண்புதான் முக்கியம் என்ற உறுதி பெண்களிடம் இருந்தால் எந்த ஆணும் நெருங்கவே முடியாது என்பதை உணர வேண்டும் பெண். - எழுத்தாளர் லட்சுமி

10.பெண்களின் கண்ணீர் உலகிலேயே ஆற்றல் மிக்க நீர்வீழ்ச்சி.- மில்னர்

Sunday, September 12, 2010

அரசாட்சி Vs மனசாட்சி



பத்திரிக்கைகளைப்படித்தால் முதலிலெல்லாம் நாட்டு நடப்பு தெரியும்.ஆனால் இப்போது காமெடிதான் தெரிகிறது.நிருபர்கள் கேட்கிறார்கள் என்பதற்காக ஏதோ  ஒரு பதிலை சொல்லி சமாளிக்கும் நம் அரசியல்வாதிகள் அந்த பதிலை சொல்லும்போது அவர்கள் மனசாட்சி என்ன நினைத்திருக்கும் என்று ஒரு கற்பனை. (அரசியல்வாதிகளுக்கு ஏது மனசாட்சி என கேட்கக்கூடாது,அதான் கற்பனை என்று சொல்லி விட்டேனே?)



1.கேள்வி :: ஜெயலலிதாவைக் கேட்டால் மக்கள் விரும்பும் கூட்டணி அமைப்போம் என்கிறார். விஜயகாந்தைக் கேட்டாலும் மக்கள் விரும்பும் கூட்டணி என்கிறார். மக்கள் விரும்பும் கூட்டணி என்றால் என்ன?

முதல்வர் கருணாநிதி: பத்திரிகை நிருபர்கள் விரும்புகின்ற கூட்டணி.


மனசாட்சி.-  மக்கள் விரும்பறது ஒரு ஓட்டுக்கு ரூ 1000.அதைத்தந்துட மாட்டோமா என்ன?

2.கட்சி செயல்பாடுகளில் இருந்த குறையை மேலிடத்துக்கு எடுத்துக்கூறி தங்கபாலுவை நீக்க வேண்டும் என பரிந்துரைத்தேன். அதற்காக அவர் என் மீது நடவடிக்கை எடுக்க முடியாது. என் மீது நடவடிக்கை எடுக்க தங்கபாலுவுக்கு அதிகாரம் இல்லை. என் மீது நடவடிக்கை எடுக்க அகில இந்திய காங்கிரஸ் தலைமைக்கு மட்டுமே அ‌திகாரம் இருக்கிறது. சட்டசபை தேர்தலின் போது குறைந்தது 109 சீட்டுகளாவது காங்கிரசுக்கு தர வேண்டும் என்றும், முதல்வர் வேட்பாளராக காங்கிரஸ் பிரமுகர் நிறுத்தப்பட வேண்டும

-இ.வி.கே.எஸ்.இளங்கோவன்!


 
மனசாட்சி - எப்படியோ அடிக்கடி நம்ம பேரு பத்திரிக்கைல வந்துட்டு இருந்தா போதும், அதுக்கு மேல காங்கிரஸ்ல இருந்து என்ன எதிர்பார்க்க முடியும்?




3)""தொழிற்சாலைகளுக்காக நிலங்களை கையகப்படுத்தும் போது, ஒரு சமச்சீரான அணுகுமுறையைப் பின்பற்ற வேண்டும். நல்ல விளைச்சல் தரக்கூடிய விளை நிலங்களை கையகப்படுத்தக்கூடாது. இந்த விஷயத்தில் விவசாயிகளின் நலன் பாதுகாக்கப்பட வேண்டும்,''  - காங்கிரஸ் தலைவர் சோனியாகாந்தி.

 -மனசாட்சி - எப்படியோ கட்சிக்கு கெட்ட பெயர் வந்துடாம இருந்தா சரி.இப்பவெல்லாம் நல்ல பெயர் எடுக்கறதை விட கெட்ட பெயர் எடுக்காம இருக்க ரொம்பப்பாடுபடவேண்டியதா இருக்கே?


4. ""அள்ளிக்கொண்ட பணத்தை மக்களுக்கு தேர்தல் நேரத்தில் கிள்ளிக் கொடுக்கின்றனர்'' -  பா.ம.க., நிறுவனர் ராமதாஸ்

 -மனசாட்சி -நமக்கு ஒரு எம்.பி சீட் குடுக்க ரொம்பத்தான் யோசிக்கறாங்க,அதை மட்டும் குடுத்திருந்தா இப்படி குழப்பமான சூழ்நிலை நம்ம கட்சிக்கு வந்திருக்குமா?


5.""தமிழக மேற்கு மண்டலத்தில் கடந்த எட்டு மாதங்களில் 224 கொலைகள் நிகழ்ந்துள்ளன. இவற்றில், பெரும்பாலான கொலை சம்பவங்கள், சொத்து தகராறு மற்றும் கள்ளக்காதல் உள்ளிட்ட பாலியல் தொடர்பு காரணமாக நிகழ்ந்துள்ளன,''  - ஐ.ஜி., சிவனாண்டி

 மனசாட்சி - அதுல பாதி போலிஸாலதான் நடக்குது.


6. தேர்தலில் 30, 40 "சீட்'களுக்காகவா கட்சி ஆரம்பித்தேன். மக்கள் ஏற்றுக் கொள்ளும்படியான கூட்டணி அமைப்பேன்'  - தே.மு.தி.க., தலைவர் விஜயகாந்த் .

  மனசாட்சி- இப்படிச்சொன்னாலாவது  அம்மா 25 சீட்டாவது குடுப்பாங்கன்னு பார்த்தா அடிமாட்டு விலைக்கு பேரம் பேசறாங்களே?


7. "தி.மு.க., அரசு ரவுடிகளின் ராஜ்யமாக விளங்குகிறது'  -  அ.தி.மு.க., பொதுச் செயலர் ஜெயலலிதா

 மனசாட்சி- எல்லா ரவுடிங்களையும் அவங்களே குத்தகைக்கு எடுத்துட்டா எலெக்‌ஷன் டைம்ல கட்சிப்பணிக்கு நாம என்ன பண்றது?