Friday, June 01, 2012

வெள்ளிக்கிழமை ராமசாமி வெட்டாஃபீஸ் வெங்கிடுசாமி (1.6..2012 ) 5 படங்கள் முன்னோட்ட பார்வை

https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgS3g5l6f9OQaFyb5wAegsrJLqEjCu2lA52mz8iZDvCC9MiYXP1vlMNy_fMgQ7qHBsqvQL4zc1LViGLQdwjLZHQu6GErrMeHq7R34UvrKW2E2-I63Hv7Vo0Wa1FWtdaKgv9sfzgyIDEf-4/s1600/Manam+Kothi+Paravai+Mp3+Songs+1.jpg1,மனம் கொத்திப்பறவை  -துள்ளாத மனமும் துள்ளும் சூப்பர் ஹிட் கொடுத்த இயக்குநர் அடுத்து பெண்ணின் மனதைத்தொட்டு எனும் அட்டர் ஃபிளாப்க்குப்பிறகு லாங்க் கேப் விட்டு வந்திருக்கார் . -நகைச்சுவைக்கு முக்கியத்துவம் உள்ள காதல் கதையாக மனம் கொத்திப்பறவை உருவாகிறது என்று இயக்குனர் எழில் தெரிவித்துள்ளார்.


ஒலிம்பியா மூவிஸ் பட நிறுவனம் சார்பில் மனம் கொத்திப்பறவை படத்தை எழில், அம்பேத்குமார், ரஞ்சீவ் மேனன் ஆகியோர் இணைந்து தயாரிக்கிறார்கள்.
இதில் மெரீனா பட நாயகன் சிவகார்த்திகேயன், நாயகி ஆத்மியா இருவரும் இணைந்து நடிக்கிறார்கள்.



இவர்களுடன் இளவரசு, சூரி, ரவிமரியா, தெய்வத்திருமகள் கிஷோர், ஆடுகளம் நரேன் மற்றும் பலர் நடிக்கிறார்கள். கதை, திரைக்கதை, வசனம் எழுதி படத்தை இயக்குனர் எழில் இயக்குகிறார்.


படத்தின் படப்பிடிப்பு தொடர்ந்து நடைபெற்று வருகிறது. காரைக்கால் பகுதியில் "ஐய்யய்யோ வாடி புள்ள ஆளில்லை வீட்டுக்குள்ளே" என்ற பாடல் காட்சியில் சிவ கார்த்திகேயன், ஆத்மியா இருவரும் இணைந்து நடித்துள்ளார்கள்.


படப்பிடிப்பின் போதே இப்பாடல் மக்கள் மத்தியில் பிரபலமடைந்ததால் பாடலை மேலும் சிறப்பாக எடுக்க வேண்டும் என்ற உந்துதல் படக்குழுவினரிடம் ஏற்பட்டுள்ளது.


அதனால் பாடல் காட்சியை படமாக்க கடுமையாக உழைத்துள்ளோம் என்றும் நகைச்சுவைக்கு முக்கியத்துவம் உள்ள காதல் கதையாக மனம் கொத்திப்பறவை திரைப்படம் உருவாகிறது எனவும் இயக்குனர் எழில் தெரிவித்துள்ளார். ஈரோடு அபிராமியில், சண்டிகாவில் ரிலீஸ்


https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiK3T3ZT7NpoMg6zVjzdKysMaTYdQxeV_2rc5TTWZkiQ5ueK4Vc5LA1eewD4zws7YEsXFmS61fvvaTrNPYHp8nihbpKb_B_O4rOV2CjxF5kw1ZPxnRbsXsTKW9zAqLM5eEaIF53EL4xTA4/s640/thadaiyara-thaakka-latest-wallpapers-and-posters-1.jpg



2. 'தடையறத்தாக்க -  கொலிவுட்டில் அருண் விஜய், மம்தா மோகன் இருவரும் இணைந்து 'தடையறத் தாக்க' படத்தில் நடித்துள்ளார்கள்.இப்படத்தை இயக்குனர் கெளதம் வாசுதேவ் மேனனின் உதவியாளர் மகிழ்திரு மேனி இயக்கியுள்ளார்.


சாலிக்கிராமத்தில் இந்தப்படத்தின் இசைவெளியீட்டு விழா சமீபத்தில் நடந்தது.
இவ்விழாவில் திரையுலக பிரபலங்கள் உட்பட படத்தில் நடித்தவர்கள் மற்றும் தொழில்நுட்பக்கலைஞர்கள் திரளாக கலந்து கொண்டார்கள்.


படத்தின் ட்ரைலர் காண்பிக்கப்பட்டது. அருண் விஜய், மம்தா இருவரும் நடித்த காதல் பாடல், கவர்ச்சி அழகிகளுடன் அருண் விஜய் ஆடிய 'குத்தாட்ட 'பாடலும் திரையிடப்பட்டது.


இவ்விழாவுக்கு வந்திருந்தவர்கள் ஆரவாரத்தோடு ரசித்தார்கள். தடையறத்தாக்க படத்தின் நாயகி மம்தா, இந்த விழாவில் கலந்து கொள்ள வில்லை.


'தடையறத்தாக்க படத்தில், தமன் இசையில் வரும் கேளாமலே பாடல், என் மனதை இதமாக வருடிய பாடல். பஹ்ரைனில் நான் இருந்ததால் என்னால் விழாவில் கலந்து கொள்ள முடியாமல் போனது என்று மம்தா கூறியுள்ளார்.

ஒரு காலத்தில் கிளுகிளுப்பு பாடல்கள் பாடுவதில் உச்சத்தில் இருந்தவர் எல்.ஆர்.ஈஸ்வரி. அவரை நீண்ட இடைவேளைக்குப்பிறகு சிம்பு நடித்த ஒஸ்தி படத்தில் சலாசலா என்ற குத்துப்பாடலை பாட அழைத்தனர். அந்த பாடலை டி.ஆருடன் இணைந்து அற்புதமாக பாடியிருந்தார் ஈஸ்வரி. அதோடு பாடலும் ஹிட்டாகி விட்டதால், செண்டிமென்ட் சினிமா உலகம் தற்போது மீண்டும் அவருக்கு பாட வாய்ப்பு கொடுத்து வருகிறது.

 அந்த வகையில், அருண்விஜய் நடித்து வரும் தடையறத்தாக்க படத்திலும் ஒரு பாடலை பாட வைத்திருக்கிறார் அதே இசையமைப்பாளர் தமன். இந்த படத்தில் பூந்தமல்லிதான் புஷ்பவள்ளிதான் என்றொரு குத்துப்பாடலை பாடியிருக்கிறார் எல்.ஆர்.ஈஸ்வரி. ஈரோடு தேவி அபிராமியில் ரிலிஸ்

http://www.nakkheeeran.com/AllImages/Gallerys/22219_1.jpg


3. மயங்கினேன் தயங்கினேன் - படத்தை பார்த்த சென்சார் அதிகாரிகள் அந்த படத்திற்கு 100கட் கொடுத்து யு சான்று கொடுத்துள்ளனர். தாய்மண் திரையரங்கம் சார்பில் திருமதி ராஜேஸ்வரி வேந்தன் தயாரிக்கும் படம் "மயங்கினேன் தயங்கினேன்". இப்படத்திற்கு கதை, திரைக்கதை, எழுதி இயக்குகிறார் எஸ்.டி. வேந்தன். இப்படத்தில் நிதின் சத்யா, தருண் ஷத்ரியா, கஞ்சாகருப்பு, புதுமுகம் பாலா, தேஜாஸ்ரீ, அஜெய் ரதன்ம், சஞ்சனா சிங் உட்பட பலர் நடித்துள்ளனர். இப்படம் வருகிற ஜூன் மாதம் சுமார் 150 தியேட்டர்களில் ரிலீஸ் ஆக இருக்கிறது.



இப்படம் குறித்து டைரக்டர் எஸ்.டி.வேந்தன் கூறியுள்ளதாவது, வாழ்க்கையில் எந்தவித கவலையும் இன்றி வாழக்கூடிய நான்கு நண்பர்கள் நிதின் சத்யா, தருண் ஷத்ரியா, கஞ்சா கருப்பு, பாலா. இந்த நால்வருக்கும் ஒரு விநோதமான பழக்கம் உண்டு. அதாவது வீட்டுக்கு வீடு தண்ணீர் கேன் சப்ளை செய்யும் கஞ்சா கருப்பு, பூட்டிக் கிடக்கும் வீட்டை நோட்டமிட்டு தன் நண்பர்களிடம் சொல்லுவார். அவர்கள் அந்த வீட்டுக்குள் புகுந்து, சமையலறைக்குள் நுழைந்து, சமையல் செய்து, திவ்யமாக சாப்பிட்டுவிட்டு, ஒரு குட்டித்தூக்கம் போட்டு விட்டு கிளம்பிவிடுவார்கள்.


 இப்படி ஒரு நாள் பூட்டிக்‌கிடக்கும் வீடு ஒன்றில் நுழைந்து விடுகிறார் தருண் சத்ரியா. அங்கு ஒரு இளம்பெண் இருப்பதை பார்த்து அதிர்ச்சி அடைய, எங்கு தான் மாட்டிக்கொள்வோம் என்று கிளம்ப நினைக்கையில் அந்த இளம்பெண் தன்னை காப்பாற்றும்படி கேட்கிறாள். அப்படியே தன்னுடைய சோக கதையை கூற அதில் மனம் உருகுகிறார் தருண் ஷத்ரியா. பின்னர் நட்பாக பழகும் இருவரும் காதலிக்க தொடங்குகின்றனர். அப்படியே படத்தில் இன்னொரு சமூக விஷயத்தையும் சொல்லியுள்ளேன். மனநல காப்பகத்தில் நடக்கும் மோசடிகளை அப்படியே தோலுரித்து காட்டியுள்ளேன் என்றார்.



மேலும் ‘மயங்கினேன் தயங்கினேன்’ படத்தை பார்த்த சென்சார் போர்டு குழுவினர், இப்படத்திற்கு ‘ஏ’ சான்று தான் தருவோம் என்றார்கள். அவர்களிடம் இக்கதையின் தன்மையை எவ்வளவோ விளக்கி சொல்லியும் ‘யு’ சான்று தர மாட்டேன் என்றார்கள். கடைசியில் ‘யு’  சான்று தருவதென்றால் 100 இடங்களுக்கு ‘கட்’ கொடுத்தார்கள். 10 இடங்களுக்கு டயலாக்கை மியூட் செய்தார்கள். அவர் சொன்ன 100 இடங்களை கட் செய்தேன். 10 இடங்களில் மியூட் செய்தேன்.


என் படத்தின் கதையையும், நான் சொல்ல வந்த விஷயத்தையும் எந்தவித பாதிப்பும் இன்றி மிகத் தெளிவாக சொல்லி இருக்கிறேன்.  தயாரிப்பாளர், சொந்தமாக இப்படத்தை ரிலீஸ் செய்கிறார். ஜுன் 1-ம் தேதிக்கு பிறகு இது மக்கள் மன்றத்தில் பெரிய படமாக கொண்டாடப்படும் என்று நம்பிக்கை எனக்க இருக்கிறது என்று கூறியுள்ளார் இயக்குனர் எஸ்.டி. வேந்தன்.ஈரோடு ஸ்டாரில் ரிலீஸ்

http://www.entertainmentwallpaper.com/images/desktops/movie/the-raid-redemption04.jpg

4. The Raid: Redemption (2011) - In the Jakarta slums, a derelict apartment building has become a no-go area - even the police are unwilling to enter. It has become a safe-house for the most dangerous killers and gangsters. A SWAT team infiltrate the building, under the cover of darkness, to remove its owner - a notorious drug lord named Tama. Written by Kad

the real superstar in this movie is Rama (Iko Uwais), who was introduced as a newbie special force in the team. Fantastic martial art movements, which is traditional martial art called Pencak Silat from Indonesia truly filled this movie with wowing watcher's experience. Fast moves, intense close combat and his knife play in combat successfully increased my adrenalin. The best part of Iko was when He's about to face several people alone in a hallway. That was obviously cool. I think Iko plays the part like Jason Statham (fighting) and Steven Seagal (with his knife) but only better. The Raid was rained with bloodbath. So it's wise to avoid bringing children to watch this movie.

The other character that stole my attention was this man called Mad Dog (Yayan Ruhian). In my opinion, it'll be difficult to find this kind of man in this world. His expression and fighting style was stunning.

When I watch movies, I always intensely wait for the twists. The Raid doesn't give so many twists but it still has enough twist that improve the story. Still this is a nicely written story. Simple idea but creatively developed.

At first, I thought it'll be a one man show where Rama played the whole part of fighting till the end. But I was wrong. The Raid gives fair proportion to fighters in this movie. Rama isn't the only one that showed a great fight against the enemy in this movie. There're the sarge, Andi, the last cop in control room. The only thing that disturbed me a little bit is the original dialog which is Indonesian. I don't know but it's kinda awkward for me to hear the conversation in Indonesian although it's my native language. As I imagine, it may sounds better in English. Never mind, it's just me. ERODE VSP 


http://www.cineikons.com/wp-content/uploads/2012/05/idayam.jpeg


5.  இதயம் திரையரங்கம், - தமிழ் சினிமா கார்ப்பரேஷன் சார்பில் விஜய் பத்மா தயாரிக்கும்படம் இதயம் திரையரங்கம், இதில் நாயகனாக புதுமுகம் ஆனந்த் நாயகிகளாக ஸ்வேதா, வாலன்டினா நடிக்கின்றனர். காதல் சுகுமார், மனோபாலா, கஜினி ராஜேஷ், அஞ்சலி, பாலா சிங்கம் ஆகியோரும் நடிக்கின்றனர்.

இப்படத்தை ராம்கி ராமகிருஷ்ணன் இயக்குகிறார். படம் பற்றி அவர் சொல்கிறார். 

ஏழை இளைஞனுக்கும், பணக்கார பெண்ணுக்குமான காதலே கதை. நாயகன் கார் மெக்கானிக். பெற்றோருக்கு வீடு கட்டி கொடுக்கும் லட்சியத்தில் வாழ்கிறான். அவன் மேல் நாயகிக்கு காதல் அக்காதலுக்கு எதிர்ப்பு கிளம்புகிறது. நாயகன் தன்மேல் காதல் வயப்பட நாயகி என்ன செய்கிறாள் என்பது விறுவிறுப்பான திரைக்கதையாக்கப்பட்டு உள்ளது. படப்பிடிப்பு முடிந்துள்ளது. 

ஏற்கனவே நானும் என காதலும் என இப்படத்துக்கு பெயரிடப்பட்டு தற்போது இதயம் திரையரங்கம் என மாற்றப்பட்டுள்ளது ஈரோடு ஸ்ரீலட்சுமியில் ரிலீஸ்