Saturday, March 26, 2011

திருச்சியில் கலைஞரின் அத்து மீறிய பேச்சும், தேர்தல் கமிஷனை வம்புக்கு இழுத்த ஏச்சும் - காமெடி கும்மி


திருச்சியில்  25. 3.2011 நேற்று ( வெள்ளிக்கிழமை )இரவு நடைபெற்ற திமுக கூட்டணி பிரசார பொதுக் கூட்டத்தில் முதல்வர் கருணாநிதி பேசியதும்  அதற்கான என் கேள்விகளும்...


 தேர்தல் ஆணையம் நடுநிலையோடு செயல்பட வேண்டும் .  "எதிர்க்கட்சியாக இருக்கிறவர்களை ஆளும் கட்சியாக கொண்டு வரவேண்டும் என்கிற அளவில் இந்திய தேர்தல் ஆணையம் செயல்பட்டுக்கொண்டு இருக்கிறது,


ஆளும் கட்சியாக இருப்பவர்கள் மக்கள் நலனுக்கு எதிராக செயல்படுவது மட்டும் சரியா தலைவரே..?


"நான் 80 வருடத்துக்கு முன்பு திருக்குவளையில் ஒரு சாதாரண, சாமான்ய குடும்பத்தில் பிறந்தேன். அங்கு சாதி, மத, பண ஆதிக்கம் இருந்தது. அப்போது தந்தை பெரியாரின் கருத்துக்களை காதால் கேட்டும், அண்ணாவின் அரிச்சுவடிகளை கண்ணால் பார்த்தும், இரண்டு பேரின் அறிவுரைகளை கேட்டும் இந்த இயக்கத்தை நடத்தும் வலிமையை பெற்றேன்.


தலைவரே ... அம்மா மாதிரி ஆர்ப்பாட்டம் பண்ணாம கமுக்கமாவும், விஞ்ஞானப்பூர்வமாவும் ஊழல் பண்ணும் வித்தையை யார் கிட்டே கத்துக்கிட்டீங்க..? ஒரு வேளை சுயம்புவா..?
 

இப்படி திரட்டப்பட்ட வலிமையை மக்களுக்காக செலவழிக்க வேண்டும் என்று எண்ணி உழைக்கின்றேன். அந்த காலத்தில் நான், நாவலர் நெடுஞ்செழியன், பேராசிரியர் அன்பழகன் ஆகியோர் ஒரு கருத்தை அன்பிலாரிடம் கேட்டால் அவர் அண்ணாவிடம் கேட்போம் என்று சொல்வார்.


அன்று முதல் இன்று வரை உங்க கூடவே இருக்கும் விசுவாசி ஆன அன்பழகனை ஏன் துணை முதல்வர் ஆக்காம ஸ்டாலினை துணை முதல்வர்ஆக்கினீங்க தலைவரே..? 

உடனே நாங்கள் அண்ணாவிடம் கேட்டால் நமது காதர் மொய்தீனிடம் அந்த கருத்தை கேட்டு என்னிடம் சொல்லுங்கள், அவர் சொல்வது சரியாகத்தான் இருக்கும் என்று சொல்வார். அப்படிப்பட்ட காதர் மொய்தீன் இங்கு பேசும்போது அவற்றை சற்று எண்ணிப் பார்த்தேன்.


எல்லாத்தையும் எண்ணிப்பாருங்க.. ஆனா இலங்கைத்தமிழர் நிலையையும்,இங்கே இருக்கற தமிழர் நிலையையும், மீனவர் வாழ்வையும் நினைச்சுப்பார்த்துடாதீங்க.... 

எனது அரசியல் ஏற்றத்துக்கு, சமுதாய பணிக்கு வித்திட்டது திருச்சி மாவட்டம் தான். இந்த கருணாநிதியை அரசியலில் முதலில் வளர்த்தது திருச்சி மாவட்டம் தான். ஆரம்பத்தில் கல்லக்குடி போராட்டம் ஒரு மிகப் பெரிய எழுச்சியைத் தந்து வெற்றி பெற்றது. அதற்கு திருச்சி மாவட்டத்தின் தீரர்கள், உடன் பிறப்புகள் முக்கிய காரணம்.


அடடா... திருச்சி செண்ட்டரான ஊருன்னு நினைச்சேன்.. இப்படி டெண்ட்டர்ரான ஊரா?பாவம்.. அந்த ஊரு பண்ணுன பாவத்துக்கு பரிகாரத்தை எப்படி செய்யப்போகுதோ.. பார்ப்போம் ஸ்ரீரங்கத்துல நிக்கற அம்மாவை ஜெயிக்க வைக்குதான்னு... 

 

நான் இங்கு பார்த்து பழகிய நண்பர்களை எண்ணிப்பார்க்கிறேன். அன்பில் தர்மலிங்கம் எப்போதும் எனக்கு முழு ஆதரவு தருபவராக இருந்து வந்துள்ளார். அழகுமுத்து யாதவ சமுதாயத்தைச் சேர்ந்தவர். அவர் என்னிடம் துணிச்சலாக பேசக் கூடியவர். ஒரு சமயம் அவர் என்னிடம் பேசும்போது யாதவ சமுதாயத்திற்கு மந்திரி பதவி இல்லையா என்று கேட்டார். அதற்கு நான் யாதவர் என்றாலே மந்திரிதான் என்று சொன்னேன்.


நல்லா வெறும் வாயிலயே முழம் போடறதுல தமிழ் இனத்தலைவரை அடிச்சுக்க ஆள் இல்ல..  

எம்.எஸ்.மணி எங்களுக்கு மாவட்ட கணக்கு பிள்ளையாக இருந்தார். காலையிலும், மாலையிலும் அவர் அயராது உழைத்தார். நாகசுந்தரம், முத்துகிருஷ்ணன், கிருஷ்ணமூர்த்தி, எம்.எஸ்.வெங்கடாசலம், இளமுருகு பொற்செல்வி, குளித்தலை முத்துகிருஷ்ணன், வெற்றிகொண்டான், காமாட்சி இப்படி எத்தனையோ பேரை மறக்க முடியாது. வெற்றிகொண்டானின் இடி முழக்க பேச்சை கேட்டுக்கொண்டே இருக்கலாம்.


அவங்களுக்கெல்லாம் ஊழல்ல பங்கு குடுக்க மாட்டீங்க.. கேட்டா என் இதயத்துல இடம் உண்டுன்னு சொல்வீங்க.. எல்லாத்துக்கும் பிரிச்சுக்குடுங்க தலைவரே....
இந்த தேர்தலில் போட்டியிடுவதன் மூலம் 6-வது முறையாக முதலமைச்சர் ஆக வேண்டும் என்ற பதவிப்போட்டிக்காக இறங்கி இருக்கிறேன். எனக்கு போட்டி யார்? எதிரி யார்? எதிர்ப்பாளர் யார்? யாருக்கும் அந்த தகுதி இல்லை என்று தம்பி திருமாவளவன் பேசினார். எனக்கு எதிரி, எதிர்ப்பாளர் என்று யாரையும் நான் கருதவில்லை.

அதான் பிரம்மாஸ்திரமான மிக்ஸி,கிரண்டர் இலவசம்கற  துருப்புச்சீட்டு இருக்கே.. உங்களுக்கு சி எம் சீட் கன்ஃபர்ம் தலைவரே...


என்னை பிடிக்காதவர் என்று மட்டுமே சொல்ல விரும்புகிறேன். நான் எழுதிய கதைகளை படித்து பார்த்த அண்ணா தம்பி இன்னும் நீ நன்றாக படித்து விட்டு வா என்றார். அண்ணா சொல்லி நான் செய்யாத ஒரு காரியம் அது ஒன்று தான். அப்படி படித்து விட்டு வந்து இருந்தால் இன்று கருணாநிதி எம்ஏ, பி.ஏ என்று பெயருக்கு பின்னால் போட்டு இருக்கலாம். அதை எல்லாம் விட தந்தை பெரியாரின், அண்ணாவின் தம்பி என்ற ஒரே பெருமை போதும் என்று நினைப்பவன் நான். அந்த பெருமையின் காரணமாக தான் 6-வது முறையாக என்னை முதல்மைச்சராக ஆக்கவேண்டும் என்று விரும்புகிறீர்கள்.


அண்ணா சொல்லி நீங்க செய்யாத காரியம் வேணா ஒண்ணா இருக்கலாம் தலைவரே.. ஆனா அண்ணா சொல்லாமல் நீங்க செஞ்ச காரியம்தான் எத்தனை எத்தனை....அதன் மூலம் கிடைச்ச வருமானம் தான் எத்தனை..? 

நான் குளித்தலை தொகுதியில் சட்டமன்ற உறுப்பினராக பணியாற்றியபோது அந்த தொகுதி மக்கள் முசிறிக்கும், குளித்தலைக்கும் இடையே காவிரி ஆற்றின் குறுக்கே பாலம் கட்டவேண்டும் என கோரிக்கை வைத்தார்கள். அவர்களது கோரிக்கையை நிறைவேற்றி தருவேன் என வாக்குறுதி அளித்த நான் முதலமைச்சர் ஆனதும் பாலம் கட்டி கொடுத்ததோடு அதனை திறந்தும் வைத்தேன்.

 அந்த பாலம் கட்டுன மேட்டர்ல எத்தனை தலைவரே தேறுச்சு..? மன்னிச்சுக்குங்க.. அது உங்க குடும்ப மேட்டரு... 


இப்படி மக்கள் பிரச்சினைகளை தெரிந்து அறிந்து அதற்கு பரிகாரம் காணவும், சமுதாய பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதிலும் தான் எனது பொது வாழ்வில் பெரும்பகுதியை செலவழித்து இருக்கிறேன்.

ஆமாம் தலைவரே.. அடிக்கடி உங்களை சினிமா ஃபங்க்‌ஷன்லயும், பாராட்டு விழாக்கள்லயும் பார்க்க முடியுது.. உலக அளவில இந்த அளவு ஒரு சி எம்  கேளிக்கை விழாக்களில் பங்கெடுத்ததே இல்லையாம் தலைவரே..
நான் செய்த சமுதாய பணிகளை எல்லாம் பட்டியல் இட்டு பேச நேரம் இல்லை. தேர்தல் ஆணையம் கொடுத்து இருக்கிற நேரம் தாண்டிவிடும். அதுவும் இப்போது இருக்கிற தேர்தல் ஆணையம் ரொம்ப கண்டிப்பான தேர்தல் கமிஷன், எதிர்க்கட்சியாக இருக்கிறவர்களை ஆளும் கட்சியாக கொண்டு வரவேண்டும் என்கிற அளவில் இந்திய தேர்தல் ஆணையம் செயல்பட்டுக்கொண்டு இருக்கிறது. தேர்தல் கமிஷனில் இருக்கிற சில அதிகாரிகளின் போக்கு அப்படிப்பட்டது என்பதை சென்னை உயர்நீதிமன்றமே சுட்டிக்காட்டி எச்சரிக்கை செய்த பின்னரும் உள்ளபடியே வருத்தமாக இருக்கிறது.


 விடுங்க தலைவரே.. 1000 கரங்கள் மறைத்தாலும் ஆதவன் மறைவதில்லை.. ஓட்டுப்போட பணம் கொடுத்து விடலாம் என்ற எண்ணம் இருக்கும் வரை நமக்கு தோல்வி பயம் இல்லை..

தேர்தல் கமிஷன் எந்த கட்சிக்கும் வக்காலத்து வாங்காமல் நடுநிலையோடு நடந்து கொள்ளவேண்டும். உயர்நீதிமன்ற உத்தரவுக்கு பிறகாவது இந்திய தேர்தல் ஆணையம் நடுநிலையோடு செயல்படவேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்.

 நடுநிலைமைன்னா தி மு க கட்சிக்காரங்க கள்ள ஓட்டுப்போடறப்ப கண்டுக்கக்கூடாது ...அதானே தலைவரே..?



நடுநிலையோடு பெறும் வெற்றி தான் நிலையானது.
இதற்கு நான் அடிக்கடி சொல்லக்கூடிய கேரளத்து புராணக்கதை ஒன்றை சொல்ல விரும்புகிறேன். அங்கு நல்லாட்சி நடத்தி வந்த மாவலி மன்னனை தேவர்களின் வேண்டுகோளுக்கு இணங்க விஷ்ணு பெருமான் அழித்தது போல் தமிழகத்தில் நல்லாட்சி நடத்திவரும் தி.மு.க. ஆட்சியையும் அழிக்க சிலர் திட்டமிடுகிறார்கள். கேரளத்து மக்களை போல் தமிழக மக்கள் ஏமாறமாட்டார்கள். ஏனென்றால் தமிழக மக்கள் பெரியாரால் தயார் படுத்தப்பட்டவர்கள். தமிழ் இனம், தமிழ் மொழி வாழவேண்டுமானால் தி.மு.க. கூட்டணிக்கு வாக்களியுங்கள் என கேட்டு விடைபெறுகிறேன்," 


தலைவரே.. கேரளாவுல படிச்சவங்க அதிகம்.. சிந்திச்சு ஓட்டுப்போடுவாங்க.. இங்கே இருக்கற பசங்க எல்லாம் படிக்காத பசங்க... எவனும் சிந்திக்க மாட்டான்..ஓட்டுக்கு பணம் வருதா ஓக்கேம்பான்.. மிக்சி கிடைக்குது, கிரைண்டர் கிடைக்குதுன்னு அவனவன் குதிக்கறான்...  கண்டிப்பா நம்ம ஆட்சி தான் தலைவரே,, ஒண்ணும் கவலைப்படாதீங்க. தமிழனுக்கு விடிவு காலமே வராது... நீங்க தான் தமிழினத்தை காக்கும் தலைவர்...