Thursday, July 29, 2010

ஓ பக்கங்கள் ஞானிக்கு குமுதத்தில் கல்தா ஏன்?

ஆனந்த விகடன் இதழில் சில காலம் அரசியல் சாட்டையடிகளை நிகழ்த்தி,வாசகர்களிடம் அமோக வரவேற்பை பெற்றவர் ஞானி.
பிறகு ஆனந்த விகடன் இதழின் ஆசிரியருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக அங்கே இருந்து வெளியேறினார்.
அண்ணன் எப்போ எந்திரிப்பாரு,திண்ணை எப்போ காலியாகும் என்று எதிர்பார்த்திருந்த குமுதம் அப்படியே அவரை தன்னகத்தே இழுத்துக்கொண்டது.
தொடர்ந்து 3 வருடங்களாக காரசாரமாக குட்டு.திட்டு,ஷொட்டு என அரசியல் உலகை விமர்சித்தவர் சில வாரங்களாக உருளைக்கிழங்கு சாப்பிடுவதாலேற்படும் நன்மைகள்,வாக்கிங் போனால்.. என்பது மாதிரி மருத்துவக்குறிப்புகள் எழுத ஆரம்பித்தார்.
அப்போதே வாசகர்கள் சந்தேகப்பட்டனர்.ஏதோ உள் குத்து நடக்கிறது என்று.
பதிவர் சவுக்கு கைதுக்கு முன் அந்த பிளாக்கில் தரப்பட்ட சில விஷயங்களை
குமுதத்தில் பகிர முற்பட்ட ஞானியை பிரியாகல்யாணராமன் அழைத்து ஆளுங்கட்சிக்கு எதிராகவோ,கலைஞர் குடும்பத்தை தாக்கியோ இனி எழுத வேண்டாம் என நிபந்தனை விதித்திருக்கிறார்.
வெகுண்டு எழுந்த ஞானி வெளியேறி விட்டார்.ஆனால் குமுதத்தில் அதை பற்றி எந்த அறிவுப்பும் இல்லை.