Monday, February 03, 2014

உளுந்தூர்ப்பேட்டையில் கேப்டன் தெளிவாகப்பேசியது என்ன? -ஒரு மப் போர்ட்

தே.மு.தி.க., தனித்து போட்டி? மாநாட்டில் விஜயகாந்த் பேச்சு


உளுந்தூர்பேட்டை : 'தேர்தலில் தனித்து போட்டியிடவே தொண்டர்கள் விரும்புகிறார்கள்; கூட்டணி வேண்டாம் என்கிறார்கள். கடந்த தேர்தலில் கூட்டணி வைத்து, அதனால் பட்ட அடி போதும்' என, உளுந்தூர்பேட்டையில் நடந்த தே.மு.தி.க. மாநாட்டில் விஜயகாந்த் தெரிவித்தார்.

விழுப்புரம், உளுந்தூர்பேட்டையில் நேற்று தே.மு.தி.க., நடத்திய 'ஊழல் எதிர்ப்பு மாநாட்டில்" தமிழகம் முழுவதும் இருந்து பெருந்திரளான தொண்டர்கள் பங்கேற்றனர். 

இம்மாநாட்டில் விஜயகாந்த் பேசியதாவது:விழுப்புரம் மாவட்டத்தில் கடல் இல்லை என்று நினைத்தேன். என் மனைவி பிரேமலதா கூறியதுபோல் உளுந்தூர்பேட்டை அருகில் உள்ள எறஞ்சியில் இளைஞர்கள் கடல் இங்கே இருப்பதைக் காண முடிகிறது.அருகில் உள்ள விருத்தாசலம், ரிஷிவந்தியம் தொகுதி மக்களுக்கு எனது நன்றி. இங்கு ஒரு நரையை கூட பார்க்க முடியவில்லை. அனைவரும் இளைஞர் கூட்டம்.மக்களுக்கு நல்லது செய்யும் போலீஸ் வேடத்தை அதிக படத்தில் ஏற்று நடித்தேன். இதற்காக இப்போது வெட்கப்படுகிறேன். எனது மகனையும் போலீஸ் வேடத்தில் நடிக்க விடமாட்டேன். போலீஸ் துறை, இந்த மாநாட்டை நடக்க விடாமல் செய்ய அனைத்து வேலைகளையும் செய்தனர். இந்த மானம் கெட்ட பிழைப்புக்கு தூக்கு போட்டு சாகலாம். ஆண்டுக்கு ஒருமுறை மாநாடு நடத்துகிறோம். இதற்கு அனுமதி மறுக்கின்றனர். தமிழகத்தில் திருடன், கொலைகாரனை வளர்த்து விடும் வேலையை ஜெ., செய்கிறார்.வரும் 24ம் ததேி ஜெ., பிறந்த நாளில் பேனர் கட்டுவார்களே, அதை போலீஸ் தடுப்பார்களா. தமிழகத்தை பாதுகாக்கும் செயலை ஜெ., செய்யவில்லை. இங்கு 
கூடியிருக்கும் கூட்டத்தை நான் தூண்டிவிட மாட்டேன்.ஆண்ட, ஆளும் கட்சிக்கு அடித்து கூறுகிறேன். தே.மு.தி.க., மாற்றுக்கட்சியாக செயல்படும் என்பதை மறந்து விடக்கூடாது. பேனர் கட்டும் கயிறு எனது தொண்டனின் நரம்பு.

பணக்காரனிடம் ஊழல் இருக்க கூடாது. இளைஞர்களுக்கு வேலை கொடுங்கள். லஞ்சம் இருந்தால் நாடு உருப்படாது. மாடுகளை தாக்கிய கோமாரி நோயை தீர்க்க ஆள் இல்லை. இந்நோய் தாக்கி 1 லட்சம் கால்நடைகள் இறந்து உள்ளது. நாட்டை திருத்த விவேகானந்தர் 100 இளைஞர்களை கேட்டார். எனது கட்சியில் 25 லட்சம் இளைஞர்கள் உள்ளனர்.இந்தியா முழுவதும் ஊழல் நிறைந்துள்ளது. தமிழகத்தில் இலவச மிக்சி, கிரைண்டர் வழங்கும் திட்டத்தை விலையில்லா பொருட்கள் வழங்கும் திட்டம் என்று பெயர் மாற்றி பெரும் ஊழல் நடந்து வருகிறது.பத்திரிகையில் என்னை பற்றி எது எழுதினாலும் நான் கவலைப்படமாட்டேன். சட்டசபைக்கு ஏன் போகவில்லை என்று பலர் கேட்கின்றனர். அங்கே எதையும் பேச விடுவதில்லை. அதிக எம்.எல்.ஏ.,க்கள் அ.தி.மு.க,. வில் உள்ளதால் அவர்களே பேசிக்கொள்கின்றனர். மக்களை நாங்கள் ஏமாற்றவில்லை. ஆனால், அ.தி.மு.க., அரசு இளைஞர்களை கெடுக்க டாஸ்மாக் திறந்துள்ளது. விழுப்புரம் மாவட்டம் விவசாய பூமி. இங்கு 70 சதவீதம் விவசாயம் செய்யப்படுகிறது. டாஸ்மாக் கடை மூலம் டார்கெட் பிக்ஸ் செய்து 300 கோடி, 350 கோடி ரூபாய் என்று விற்பனை செய்து வருவாய் ஈட்டுகின்றனர்.

விவசாயிகள் வருவாய் பெருக்க எந்த டார்கெட்டையும் அரசு நிர்ணயிக்க வில்லை. சட்டசபையில் 110 விதியின் கீழ் இதுவரை 8 லட்சம் கோடி ரூபாய்க்கு மேல் அறிவிப்புக்கள் வெளியிடப்பட்டுள்ளது. ஆனால் ஒரு ஆண்டுக்கு பட்ஜெட் தொகையே 1.25 லட்சம் கோடிதான். இட்லி ஒரு ரூபாய், ஆனால் தண்ணீர் 10 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. தண்ணீருக்கு விலை வைத்த ஒரே முதல்வர் ஜெ., மட்டுமே.கூட்டணி கட்சி என்றால் சட்டசபையில் 'ஜிங்ஜாங்' போடுவதற்கு அல்ல. தவறு செய்யும் போது சுட்டிக்காட்ட வேண்டும். அதைத்தான் நான் செய்தேன். நான் தலை குனிந்தாலும் எனது தொண்டர்களை தலை குனிய விடமாட்டேன். பால் விலை, பஸ் கட்டணம் உயர்வு குறித்து பேசியது தவறு என்று ஜெ., நினைக்கிறார். பென்னாகரத்தில் டெபாசிட் இழந்த ஜெ., எங்களால் தான் தே.மு.தி.க., வெற்றிபெற்றது என்று வீண் பிரசாரம் செய்கிறார்.ஆனால் தி.மு.க., ஆட்சியில் நடந்த 13 இடைத்தேர்தல்களிலும் அ.தி.மு.க., தோல்வியை தான் கண்டது. கூடங்குளம் மக்களை ஏமாற்றும் வகையில் 500 கோடி ரூபாய் நிதி ஒதுக்கியதாக கூறி ஏமாற்றினார். ஆனால் அந்த பகுதியில் இதுவரை ஒரு பள்ளிக்கூடம் கூட கட்டவில்லை. சொல்வது ஒன்று செய்வது ஒன்று என்பதுதான் ஜெ., வின் பழக்கம். ஜெ., வின் செயலால் வாஜ்பாய் படுத்த படுக்கையாய் போனார். இரு பெண்களால் தான் அவர் பதவி இழந்தார்.இலங்கை தமிழர் கண்ணீரில் சிலர் கட்சி நடத்துகின்றனர். ஜாதி, மதத்தை வைத்து இனி யாரும் அரசியல் செய்ய முடியாது. 

40 சீட்டையும் காசு கொடுத்து வாங்கலாம் என்று ஜெ., நினைக்கிறார். ஆனால் பணத்திற்காக மக்கள் தங்கள் ஓட்டுக்களை விற்க மாட்டார்கள். தே.மு.தி.க.,வில் எதிரிகளை மன்னித்து விடுவோம், துரோகிகளை மன்னிக்க மாட்டோம். குள்ளமாக இருக்கும் ஜெ., வுக்கு உயரமாக இருக்கும் ஆண்கள் குனிந்துதான் வணக்கம் சொல்ல வேண்டும்.இந்த ஆட்சியில் இரண்டு மூன்று நாட்கள் கூட அமைச்சர்கள் பதவியில் இருக்கமுடியவில்லை. இதனால் துறைகள் குறித்து அவர்களுக்கு தெரிவதில்லை. சாது மிரண்டால் காடு கொள்ளாது. இதை உணர்ந்து போலீஸ் துறை எங்களிடம் மரியாதையாக நடந்து கொள்ள வேண்டும். 66 கோடி ரூபாய் சொத்து குவிப்பில் ஜெ., சிக்கி தவிக்கிறார்.நான் உண்மையை பேசினால் குடித்து விட்டு பேசுகிறேன் என்று குறை சொல்கிறார்கள். வரும் லோக்சபா தேர்தலில் கூட்டணி வேண்டுமா, வேண்டாமா என்று கேட்டால், என் தொண்டர்கள் கூட்டணி வேண்டாம். தனித்தே நிற்கலாம் என்கின்றனர். கடந்த முறை கூட்டணி வைத்து பட்ட அடி போதும். இவ்வாறு விஜயகாந்த் பேசினார்.



ஆனாலும், கேப்டன் கொஞ்சம் வித்தியாசமாகதான் முடிவுகள் எடுக்கிறார்..... சட்டமன்ற தேர்தலுக்கு கூட்டு போடுகிறார்....பாராளுமன்ற தேர்தலுக்கு தனியே என்கிறார்.....தனித்து நின்றால் சட்ட மன்ற தேர்தலிலேயே தேறுவது கடினம்.... பாராளுமன்ற தேர்தலில் எப்படி?........விஜயகாந்தின் 'எதிர்பார்ப்புகள்' நிறைவேற்றப்படும் என்றுதானே அவருக்கு உறுதி அளிக்கப்பட்டதாக செய்திகள் கசிந்தன...
..எங்கேயோ இடிக்குதே?

நன்றி -தினமலர்
Rate this:
0 members
members
members
Share this comment
R.Subramanian - chennai,இந்தியா
03-பிப்-201407:51:41 IST Report Abuse
R.Subramanian
ஆந்திராவில் சிரஞ்சிவி செய்தது போல் விஜயகாந்த் தன் கட்சியை ஏதேனும் ஒரு தேசிய கட்சியோடு இணைத்து விடலாம். இவர் தனித்து நிற்பதால் வாக்குகள் சிதறுமே தவிர அதனால் இவர் கட்சிக்கோ அல்லது தமிழகத்திற்கோ நன்மை இல்லை... இதுவே ஒரு தேசிய கட்சியில் இவர் கட்சியை இணைக்கும் போது அது இவருக்கு மட்டும் இல்லை தமிழகத்திற்கு நன்மை கொண்டு வரும். என்னை பொருத்தவரையில் இவர் காங்கிரஸ் கட்சியோடு தேமுதிகவை இணைத்து தமிழகத்தில் மீண்டும் தேசிய கட்சியின் ஆட்சியை கொண்டு வர உதவலாம். திராவிட கட்சிகளின் ஆட்சியை விட தேசியக்கட்சிகளின் ஆட்சி நன்றாகவே இருக்கும்...
Rate this:
0 members
members
members
Share this comment
T.R.Radhakrishnan - nagpur,இந்தியா
03-பிப்-201407:41:15 IST Report Abuse
T.R.Radhakrishnan
கப்டனின் முடிவை மதிப்போம்....வரவேற்போம்......பெரிய கட்சிகளே தனித்து நிற்க திராணி இல்லாத நிலையில், இவர் தனித்து நிற்கிறேன் என்கிறார்.... அந்த வகையில் நல்லது...ஆனால், காப்டனின் தற்போதைய ஒரே குறிக்கோளான ஜெயாவை தோற்கடிக்கும் எண்ணத்துக்கு இந்த முடிவு எந்த வகையில் துணை போகும்?.......ஜெயா அதிக இடங்கள் பெறுவது என்பது வரப்போகும் மத்திய அரசின் ஆயுள் கம்மி என்பதையே குறிக்கும்....அது பா.ஜ.க. அரசாக இருந்தாலும் சரி, இல்லை மூன்றாவது அணியாக இருந்தாலும் சரி.....
Rate this:
0 members
members
members
Share this comment
saravanan sagadevan - chennai,இந்தியா
03-பிப்-201407:39:41 IST Report Abuse
saravanan sagadevan
நேற்று மாநாடு ஜெயலலிதாவை திட்டுவதற்காக தான் நடத்தப்பட்டது. எல்லோரும் தொண்டை கிழியும் அளவு கத்தினார்கள். விஜயகாந்த் பற்றி சொல்லவே வேண்டாம், வழக்கம் போல் என்ன பேசுறோம் என்று தெரியாமல் ஏதோ உளறிக்கொண்டு இருந்தார். இடையில் கூட்டத்தினரை பார்த்து கோப பட்டார். கேப்டன் டிவியில் நேரலையாக இருந்தாலும் அடிக்கடி சென்சார் செய்யப்பட்டது. அவர் கட்சியினரை அவரே அமைதிபடுத்த முடியவில்லை ஜெயலலிதாவை தாக்கி பேசுகிறோம் என்று அநாகரிகமாக பேசினார். மாநாட்டின் சாராம்சமே தெரியாமல் ஒரு கூத்து நடந்தது .
Rate this:
2 members
members
members
Share this comment
menaha govindan - putukkottai,இந்தியா
03-பிப்-201407:22:03 IST Report Abuse
menaha govindan
நான் அடித்து சொல்லுகிறேன் கண்டிப்பா கூட்டணிதான்
Rate this:
0 members
members
members
Share this comment
K Sanckar - bengaluru ,இந்தியா
03-பிப்-201407:16:04 IST Report Abuse
K Sanckar
விஜயகாந்த் கூட்டத்தை வைத்து கணக்கு போடுகிறார். காசு கொடுத்தால் கூட்டம் வரும் அந்த கணக்கு பிரகாரம் வோட்டுக்கும் காசு கொடுக்க வேண்டும். விஜயகாந்த் இதை மறந்து விடக்கூடாது. விஜயகாந்த் ஏதோ பேரம் பேசப்போகிறார் என்று தெரிகிறது. அதற்கு தயாராகிறார் என்று தோன்றுகிறது. அதனால் தான் மாநாட்டில் சொன்னபடி கூட்டணியை அறிவிக்கவில்லை. பார்க்கலாம் என்ன நடக்கிறது என்று ?
Rate this:
1 members
members
members
Share this comment
Nagulan - hanoi,வியட்னாம்
03-பிப்-201407:12:52 IST Report Abuse
Nagulan
கேப்டன் அவர்களே புதுசா ஏதாவது சொல்லுங்க இது எல்லோருக்கும் தெரியும் இதற்க்கு மாநாடு தேவையில்லை
Rate this:
8 members
members
27 members
Share this comment
ஜாம்பஜார் ஜக்கு - chennai,இந்தியா
03-பிப்-201406:58:11 IST Report Abuse
ஜாம்பஜார் ஜக்கு
ஐந்து முனைப்ப் போட்டி.......ஜெயாவிற்கு சாதகம். மினிமம் கியரண்டீ.....35
Rate this:
37 members
members
98 members
Share this comment
மிஷன் 272 PLUS - delhi,இந்தியா
03-பிப்-201406:55:12 IST Report Abuse
மிஷன் 272 PLUS
விஜயகாந்த் எடுத்த தனியாக நிற்ப்போம் என்ற முடிவுக்கு பாராட்டுக்கள்... அதே நேரத்தில் நீங்கள் ஒன்றை நினைவில் வைத்து கொள்ளவேண்டும்.... தங்களின் நிர்வாகத்திறமை என்ன என்பது மக்கள் அறியாதது... அதனை நிருபியுங்கள்... இல்லை எனில் கெஜிரிவாலின் மறுவுருவம் என்று மக்கள் என்ன கூடும்... இப்பொழுது உங்களுக்கு வழங்கப்பட்ட எதிர்க்கட்சி தலைவர் என்ற அந்தஸ்தை வைத்து அதனை ஓரளவிற்கு நிருபிக்க முடியும்....இந்த தேர்தலில் உங்களுக்கு எவ்வளவு தொகுதிகள் கிடைக்கிறது என்று எண்ணாமல் எதிர்காலத்தில் தமிழகத்தில் கால்பதிக்க இது உதவும்...All the best..
Rate this:
31 members
members
89 members
Share this comment
Mathiyalag - salem,இந்தியா
03-பிப்-201407:38:51 IST Report Abuse
Mathiyalag
கேஜ்ரிவால் பற்றி 30 நாட்களில் புரிந்த அரசியல் ஞானி உலகத்தில் நீங்கள் மட்டுமே ....
Rate this:
0 members
0 members
0 members
Share this comment
P. Kannan - bodinayakkanur,இந்தியா
03-பிப்-201406:48:52 IST Report Abuse
P. Kannan
யாருடனும் கூட்டணி இல்லை என்றால் மிகவும் சந்தோசப்படுவது திமுக தான். அவர்களின் வெகுநாள் கனவு நனவாக போகிறது. தனித்து போட்டியிட்டால், அந்த பீலிங்க்ல புல்லா மூழ்கிடுவாரு
Rate this:
53 members
members
51 members
Share this comment
NAMO ROCKERS - coiambatore.  Posted via: Dinamalar Android App )
03-பிப்-201406:38:44 IST Report Abuse
NAMO ROCKERS
என்ன தா சொல்ல வர்ரிங்க சாமி எங்களுக்கு ஒன்னும் புரியல
Rate this:
16 members
members
40 members
Share this comment
TIRUVANNAMALAI Kulasekaran - australia  Posted via: Dinamalar Android App )
03-பிப்-201406:33:53 IST Report Abuse
TIRUVANNAMALAI Kulasekaran
நீயும் உன் பையனும் போலீசா நடிக்க மாட்டீங்களா ரொம்ப நல்லதா போச்சுடா சாமி தப்பிச்சாங்க தமிழ் ரசிகர்கள்
Rate this:
17 members
members
122 members
Share this comment
TIRUVANNAMALAI Kulasekaran - australia  Posted via: Dinamalar Android App )
03-பிப்-201405:49:35 IST Report Abuse
TIRUVANNAMALAI Kulasekaran
சூப்பர் முடிவு கேப்டன் தெளிவாகத்தான் எடுத்தாரா ஃ வெரி குட் சீக்கிரமே கட்சி அங்கீகாரம் பறி போகும் ஃ ஊ ஊஊ ஊ ஊஊஊ சங்குதான்
Rate this:
21 members
members
145 members
Share this comment
TIRUVANNAMALAI Kulasekaran - australia  Posted via: Dinamalar Android App )
03-பிப்-201405:45:44 IST Report Abuse
TIRUVANNAMALAI Kulasekaran
விவேக் சொன்னது தோற்கும் தொகுதி் கணக்கு
Rate this:
11 members
members
55 members
Share this comment
Ganapathysubramanian Gopinathan - bangalore,இந்தியா
03-பிப்-201405:45:07 IST Report Abuse
Ganapathysubramanian Gopinathan
ோலீஸ் போல பணம் வாங்கியது மறந்ததோ/
Rate this:
9 members
members
38 members
Share this comment
என்னுயிர்தமிழகமே - hyderabad,இந்தியா
03-பிப்-201405:44:14 IST Report Abuse
என்னுயிர்தமிழகமே
ஏங்க விஜயகாந்து நீங்க அரிதாரம் பூசிய, பூசி கொண்டிருக்கும் நபர் அல்லவோ, தொண்டர்களிடத்தில் நரையை எதிர்பார்க்காத நீங்க, நரையை மறைத்தது ஏனோ? கொஞ்சம் தெளிவா இருங்க :), அந்த ஒரு வசனத்தை நீங்க "கட்" சொல்லியிருக்கலாம்.
Rate this:
5 members
members
48 members
Share this comment
Vivek Palaniappan - paris,பிரான்ஸ்
03-பிப்-201405:34:35 IST Report Abuse
Vivek Palaniappan
நான் 2 வாரம் முன்னாடியே என்னோட கருத்த சொன்னேன். எப்போ மறுபடி சொல்லுறேன், விஜய்காந்துக்கு 40000 VOTE
Rate this:
8 members
members
46 members
Share this comment
Vivek Palaniappan - paris,பிரான்ஸ்
03-பிப்-201405:31:04 IST Report Abuse
Vivek Palaniappan
யாரு எப்படி தான் நில்லுங்க நான் சொல்லுறேன் ADMK 35 BJP 4 MDMK 1 எது தான் தமிழ்நாடுல 2014 election ரிசல்ட்
Rate this:
97 members
members
60 members
Share this comment
s.maria alphonse pandian - chennai-88,இந்தியா
03-பிப்-201408:01:03 IST Report Abuse
s.maria alphonse pandian
அப்போ அதிமுக கூட்டணி கம்யுனிச்டுக்கு ஒண்ணுமே இல்லையா?சொல்றதுதான் சொல்றீங்க..அதிலே ஏன் ஓர வஞ்சனை? ADMK 40 ன்னு சொல்லிட்டு போங்களேன்......
Rate this:
0 members
0 members
3 members
Share this comment
Ram Psa - சிங்கப்பூர்,சிங்கப்பூர்
03-பிப்-201405:27:59 IST Report Abuse
Ram Psa
கேப்டன் சரியான முடிவை எடுத்து இருக்கிறார்.இதே முடிவை அம்மா கூட சேர்வதற்கு முன்பே எடுத்து இருந்தால் இன்னும் நல்லா இருந்திருக்கும்.தனியா நிக்கிறதுக்கும் ஒரு தில்லு வேணும்.தில்லு இருந்தா பேசு இல்லாட்டி ஒரு ஓரமா உக்காந்து வேடிக்கை பாரு.தமிழ் நாட்ல எந்த கட்சிக்காவது தனியா நிக்க தில்லு இருக்கா.தனியா நிக்கிறேன்னு சொல்ல வேண்டியது.தேர்தல் வந்துட்டா யார் கூடயாவது கூட்டணி சேர்ந்து கும்மி அடிக்க வேண்டியது.எதுக்கு இந்த மானங்கெட்ட பொழப்பு.ஜெயிக்கிறமோ,தோக்குரமோ அது முக்கியம் இல்ல ஆனா நம்மளோட தனித் தன்மைய இழந்து விட கூடாது.மறுபடியும் கேட்குறேன் எந்த கட்சிக்காவது தனியா நிக்கிற தில்லு இருக்கா.என்னப்பா யாருமே வாய தொறக்க மாட்டென்குரிங்க.சும்மா மா..மா..மா..மா..அதிருதில்ல..ல..ல..ல..ல..
Rate this:
89 members
members
57 members
Share this comment
madurai mani bharathi - madurai,இந்தியா
03-பிப்-201405:26:43 IST Report Abuse
madurai mani bharathi
பு ஸ் ஸ் ஸ் ஸ் ஸ் ஸ் ஸ் ஸ் ஸ் ஸ் ஸ் ஸ் ஸ் ......................................... பஞ்சர் ஆயி காற்று போன தண்ணி வண்டி.
Rate this:
13 members
members
41 members
Share this comment
Samy Chinnathambi - rayong,தாய்லாந்து
03-பிப்-201405:19:34 IST Report Abuse
Samy Chinnathambi
பாஜக கூட்டணியில் தேமுதிக இடம் பெறாதது ஏமாற்றம் தான். ஆனால் அவர் அதனை தவிர்த்து தனியாக நிற்பதும் பாராட்ட பட கூடியதே...ஏனெனில் கூட்டத்திற்கு வந்த தொண்டர்கள் தனியாக தான் நிற்க சொல்கிறார்கள்... தொண்டர்களின் கருத்தை மதிப்பவர் விஜயகாந்த்...எனவே அவர் தனியாக நின்றால் ஆச்சரியமில்லை....
Rate this:
88 members
members
57 members
Share this comment
Samy Chinnathambi - rayong,தாய்லாந்து
03-பிப்-201405:17:47 IST Report Abuse
Samy Chinnathambi
மோடிக்கு பிறகு தேமுதிகவுக்கு தான் இவ்வளவு பெரிய கூட்டம் கூடி நான் பார்கிறேன்...அதனை இவர்கள் ஜெயாவை திட்டுவதற்கு பயன்படுத்துவதில் எனக்கு உடன்பாடு இல்லை...இருந்தாலும் அவர்கள் கோவத்தில் ஒரு நியாயமும் இருக்கிறது.........மாநாட்டிற்கு அனுமதி கொடுப்பதற்கு கடைசி வரை இழுத்தடித்தது, மற்றும் போலிஸ் காரர்களை இலட்சணக்கான மக்கள் கூடும் கூட்டத்திற்கு பாதுகாப்பிற்கு அனுப்பாதது, மற்றும் மாநாட்டு திடல் தவிர வேறு ஊர்களில் பிளக்ஸ் போர்டு பேனர் வைக்க அனுமதி தராதது போன்ற கோவம் அவர்களது பேச்சில் தெறிக்கிறது...ஜெயாவுக்கு இருபத்தினாலாம் தேதி பிறந்த நாள் வருகிறது. அப்போது இதே காவல்துறை அதிமுக ஆட்களுக்கும் பிளக்ஸ் போர்டு பேனர் வைக்க அனுமதி தர கூடாது. அப்படி செய்யுமா காவல் துறை....நடக்காது...மாநிலம் முழுக்க பிளக்ஸ் போர்டு பேனர்களை காண்பீர்கள்...அதனால் தான் அவர்கள் கோவப்பட்டு அடக்குமுறை என்று திட்டுகிறார்கள்...மற்றும் தனியார் பேருந்து முதலாளிகளை மாநாட்டிற்கு செல்ல கூடாது என்று நிர்பந்தித்த காரணத்தினால் காவல் துறை மீதும் ஜெயா மீதும் கோவமா இருக்கிறார்கள்...
Rate this:
120 members
members
80 members
Share this comment
Kasimani Baskaran - singapore,சிங்கப்பூர்
03-பிப்-201404:54:08 IST Report Abuse
Kasimani Baskaran
"இட்லி ஒரு ரூபாய், ஆனால் தண்ணீர் 10 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது" - அலுவாலியா சொன்னதை சரியாக நினைவில் வைத்து ஒவ்வொரு ஏழையும் ஆளுக்கு 2 இட்லி ஒரு தண்ணீர் பாட்டில் மூலம் பசியை போக்கிக்கொள்ளலாம் என்று கொடுத்ததை ஏன் கஜிநிகாந்தால் புரிந்து கொள்ள முடியவில்லை? கான்வென்ட்-இல் படித்திருந்தால் புரிந்திருக்கும்...
Rate this:
17 members
members
29 members
Share this comment
s.maria alphonse pandian - chennai-88,இந்தியா
03-பிப்-201404:52:11 IST Report Abuse
s.maria alphonse pandian
விஜயகாந்த் பிஜேபி கூட்டணிக்கு ஓகே சொல்லியிருந்தால் முதல் பக்க பெரிய தலைப்பு செய்தியாக போட்டிருப்பீர்கள்..இப்போது கூடிய அந்த பெரும் கூட்டத்தின் படத்தையும் போடாமல் சில்லறை செய்தி போல போட்டுவிட்டீர்கள்...
Rate this:
469 members
members
125 members
Share this comment
Kasimani Baskaran - singapore,சிங்கப்பூர்
03-பிப்-201404:50:31 IST Report Abuse
Kasimani Baskaran
"சட்டசபையில் 110 விதியின் கீழ் இதுவரை 8 லட்சம் கோடி ரூபாய்க்கு மேல் அறிவிப்புக்கள் வெளியிடப்பட்டுள்ளது" - எப்பேர்ப்பட்ட பொய்களை சொன்னாலும் ஏற்றுக்கொள்ளக்கூடிய பகுத்தறிவுவாதிகள் தமிழகத்தில் மிக அதிகமாக இருப்பதன் விளைவு இது. அம்மா பிரதமரானால் அமெரிக்க + சீன + ஜப்பானிய GDP யையும் சேர்த்தால் வரக்கூடிய தொகையை விட 10 மடங்கு அதிகமாக 110 விதி மூலம் திட்டங்களை அறிவித்து விடுவார்.
Rate this:
5 members
members
68 members
Share this comment
s.maria alphonse pandian - chennai-88,இந்தியா
03-பிப்-201404:49:54 IST Report Abuse
s.maria alphonse pandian
எம்ஜிஆர் இரட்டை விரலை " v " என காட்டியதே v = vijaykanth என்பதற்காகத்தானாம்....இனி ஜெயலலிதா இரட்டை விரலை அப்படி காட்டுவாரா?
Rate this:
245 members
members
59 members
Share this comment
s.maria alphonse pandian - chennai-88,இந்தியா
03-பிப்-201404:47:59 IST Report Abuse
s.maria alphonse pandian
3 மாதத்துக்குள் சிறைக்கு செல்ல இருக்கும் ஜெயலலிதாவால் ஊழல் ஒழிப்பு மாநாடு நடத்த முடியுமா? என எழுப்பப்பட்ட சவால் உண்மையிலேயே யோசிக்க வேண்டிய ஒன்று.....e
Rate this:
375 members
members
77 members
Share this comment
s.maria alphonse pandian - chennai-88,இந்தியா
03-பிப்-201404:45:48 IST Report Abuse
s.maria alphonse pandian
மிக அருமையான ஒரு முடிவை எடுத்துள்ளதற்காக கேப்டனுக்கு பாராட்டுக்கள்....தனித்து போட்டி என்பதில் உறுதியாக இருக்க வேண்டும்...இது அடுத்துவரும் சட்டமன்ற தேர்தலில் பயன்படும்...இப்போது பிஜேபியோடு கூட்டணி வைத்து 5 சீட்டு ஜெயித்தாலும் இது மோடி அலையினால் கிடைத்தது என்பார்கள்...திமுகஅதிமுக கட்சிகளை நீக்கிவிட்டு மூன்றாம் நபராக தொடர்ந்து செயல்படட்டும்...
Rate this:
353 members
members
68 members
Share this comment
Samy Chinnathambi - rayong,தாய்லாந்து
03-பிப்-201407:15:32 IST Report Abuse
Samy Chinnathambi
இந்த உலகத்திலேயே மிகவும் சந்தோசமா இருக்க போவது ரெண்டு பேரு இப்போ...ஒன்னு கட்டுமரம், ரெண்டாவது அதன் தொண்டரடி அத்தலைவர் மரியா.....
Rate this:
5 members
3 members
156 members
Share this comment
Kasimani Baskaran - singapore,சிங்கப்பூர்
03-பிப்-201404:45:45 IST Report Abuse
Kasimani Baskaran
"எனது மகனையும் போலீஸ் வேடத்தில் நடிக்க விடமாட்டேன்" - ஹி ஹி...சூப்பர். போலிஸ் வேடத்தில் நடிக்க ஆட்களா இல்லை?
Rate this:
6 members
members
29 members
Share this comment
gopalakrishnan saminathan - grigny,பிரான்ஸ்
03-பிப்-201404:17:11 IST Report Abuse
gopalakrishnan saminathan
இன்னும் மயக்கம் தீரளையப்பா
Rate this:
14 members
members
41 members
Share this comment
s.maria alphonse pandian - chennai-88,இந்தியா
03-பிப்-201404:53:04 IST Report Abuse
s.maria alphonse pandian
ஜெயலலிதாவின் டாஸ்மாக் கடை மக்களை இன்னும் மயக்கத்திலிருந்து தீர வைக்கவில்லை.......
Rate this:
275 members
0 members
36 members
Share this comment
மிஷன் 272 PLUS - delhi,இந்தியா
03-பிப்-201406:56:45 IST Report Abuse
மிஷன் 272 PLUS
மரியா... மதுக்கடைகளை தமிழகத்தில் முதன் முதலில் திறந்து விட்டவர் கருணா ... அவரை எதுவும் சொல்லவில்லையே......
Rate this:
38 members
0 members
237 members
Share this comment
Suresh - nagercoil,இந்தியா
03-பிப்-201404:03:09 IST Report Abuse
Suresh
இங்கு ஒரு நரையை கூட பார்க்க முடியவில்லை...இனி வரும் காலத்தில் ஒரு நரயையும் உங்களால் பார்க்க முடியாது காரணம் 30 வையதிலே பெயிண்ட் அடித்து விடுகிறோமே...ரொம்ப பில்டப் பண்ணாமல் கூட்டனியை பத்தி சொல்லிவிடுங்கள். தி மு க வில் சேர்ந்தால் உங்கள் குடும்ப ஓட்டு கூட உங்களுக்கு கிடைக்காது....
Rate this:
51 members
members
338 members
Share this comment
gopalakrishnan saminathan - grigny,பிரான்ஸ்
03-பிப்-201404:01:19 IST Report Abuse
gopalakrishnan saminathan
அப்படி யானால் இன்றைக்கும் குடித்தானா பாவம் இவருக்கு ஷேர்பண்ண ஆலிலையோ அந்த விரக்தியோ
Rate this:
8 members
members
139 members
Share this comment
gopalakrishnan saminathan - grigny,பிரான்ஸ்
03-பிப்-201403:59:08 IST Report Abuse
gopalakrishnan saminathan
உளுந்தூர் பேட்டையும் புசுவானம்மா போய்ட்டா கூட்டம் இருந்தால் வோட்டு விழும்மா எல்லாம் கேப்டன் தெளிந்து விட்டாரா என்று பார்க்க வந்த கூட்டம்
Rate this:
12 members
members
333 members
Share this comment
s.maria alphonse pandian - chennai-88,இந்தியா
03-பிப்-201404:55:02 IST Report Abuse
s.maria alphonse pandian
காவல்துறையையும் நிர்வாகத்தையும் வைத்து இம்மாநாட்டுக்கு எதிராக ஜெயலலிதா நடத்திய ஆரவாரத்துக்கு நல்ல பதிலடிதான் அங்கே குவிந்திருந்த கூட்டம்.......
Rate this:
317 members
1 members
37 members
Share this comment
Raju - auckland,நியூ சிலாந்து
03-பிப்-201403:56:20 IST Report Abuse
Raju
ம்ம்ஹூம் வாய்க்கு வந்தபடி பேசியதால்தான் கோர்ட் கேஸ் என அலையவிட்டார் முதல்வர். திரும்பவும் உளறல் ஜாஸ்தியாய் இருக்கே?
Rate this:
62 members
members
540 members
Share this comment
s.maria alphonse pandian - chennai-88,இந்தியா
03-பிப்-201404:56:31 IST Report Abuse
s.maria alphonse pandian
வாங்குறது ஆண்டுக்கு 100 வாய்தா...இதுலே மத்தவுங்க மேல கேசு....நாடு விளங்கிடும்.......
Rate this:
438 members
1 members
107 members
Share this comment
gopalakrishnan saminathan - grigny,பிரான்ஸ்
03-பிப்-201403:56:06 IST Report Abuse
gopalakrishnan saminathan
இவர் கேட்கும் பணம் யாரிடமும் இல்லைப்பா ஆகையால் இவர் யாரிடமும் கூட்டணி இல்லை
Rate this:
13 members
members
129 members
Share this comment
Gsanky - bangalore,இந்தியா
03-பிப்-201403:32:20 IST Report Abuse
Gsanky
வினாச காலே விபரீத புத்தி
Rate this:
33 members
members
280 members
Share this comment
தமிழ் சிங்கம் - chennai,இந்தியா
03-பிப்-201403:32:06 IST Report Abuse
தமிழ் சிங்கம்
தனித்து நில்லுங்கள். அதைதான் நாங்கள் எதிர்பார்கின்றோம். பிஜேபி, மதிமுக, பாமகவுடன் கூட்டு சேர்ந்து ஓட்டை பிரித்துவிடாமல், தனித்தே நில்லுங்கள். அப்போதுதான் தலைவர் நாற்பதுக்கு நாற்பது வெல்ல முடியும். உங்களின் தைரியத்தை மனமார பாராட்டுகிறேன். முட்டை வாங்க நீங்கள் காட்டும் ஆர்வம் மெச்சத்தக்கது. அனைத்து கட்சிகளும் தனித்தே களம் இறங்கும் போது, திமுக சுலபமாக அனைத்து சீட்டுகளையும் வெல்லும். தமிழகத்தின் பெரிய கட்சி திமுக எனும் சுறா மற்ற கெண்டை மீன்களை திங்க போவதை நினைத்தால், எங்களுக்கே பரிதாபமாக உள்ளது. என்ன செய்ய முடியும்? பசிக்கும் போது திங்கதான் வேண்டும். இப்போது தமிழர்களுக்கு மின்சார பசி, தண்ணீர் பசி, வேலை வாய்ப்பு பசி உள்ளது. அதை போக்க, உதய சூரியனின் வெளிச்சம் வேண்டும். வரும். மலைகளில் இருந்து புகை மூட்டங்களில் இருந்து, உதய சூரியன் வெளியே வரும். தமிழர்களை காக்கும். " தமிழ் சிங்கம் " என்ற பெயரில் இன்னொரு அதிமுக புல்லுருவி கருத்துகள் எழுதி வருவதை கண்டு வாசகர்கள் குழப்பம் அடையவேண்டாம்.
Rate this:
191 members
members
42 members
Share this comment
வைகை செல்வன் - சென்னை,இந்தியா
03-பிப்-201403:20:51 IST Report Abuse
வைகை செல்வன்
பேரம் படியவில்லையா ??
Rate this:
45 members
members
215 members
Share this comment

ASHOK - tanjore,இந்தியா
03-பிப்-201403:11:34 IST Report Abuse
ASHOK
நாளைமுதல்குடிக்கமாட்டேன்சத்தியமடிதங்கம்...

Sunday, February 02, 2014

தமிழ்த்திரையும் யதார்த்தபாணியும் - தியடோர் பாஸ்கரன்

திரைப்படமொன்றின் தாக்கம் ஆழமானதாக அமைய வேண்டுமானால் அதில் நம்பகத்தன்மை அடிநாதமாக இருக்க வேண்டும். அந்தத் தன்மையின் அடிப்படை யதார்த்தம். Realism என்ற ஆங்கிலப் பதத்தையும் மனதில் கொண்டால் இந்தப் பொருள் விளங்கும். படத்தின் தாக்கம் நன்றாக அமைந்தால், இயக்குநர் சொல்லவரும் கருத்து பார்வையாளர்கள் மனதில் பதிந்து பாதிப்பை ஏற்படுத்தும். அரசு எந்திரத்தின் நிர்தாட்சண்யமான அணுகுமுறை, லஞ்சப்பேய் இவற்றின் மத்தியில் அல்லலுறும் மத்தியதர மக்களின் நிலையை உணர்த்திய பாலுமகேந்திராவின் வீடு (1988) படத்தைப் பார்த்தவர்களுக்கு இந்த யதார்த்தவாதக் கோட்பாடும் அதன் பாதிப்பும் புலப்படும்.




திரைப்பட இயக்குநர் உருவாக்கும் உலகினுள் பார்வையாளர் நுழைந்து வசதியாகக் சஞ்சரிக்க யதார்த்தவாதம் கைகொடுக்கின்றது. 


திரைப்படம் ஒன்றைப் பார்க்கிறோம் என்ற உணர்வு எழாமல் இருக்க, கதாபாத்திரங்களின் உணர்வுகளுடன் பார்வையாளர் ஒன்றிப்போவது நல்ல சினிமா அனுபவமாக அமைகின்றது.



 இந்த யதார்த்தப் பண்பு இல்லையென்றால் ஒரு படத்தைப் பார்த்துக்கொண்டிருக்கின்றோம் என்ற உணர்வே மேலிட்டிருக்கும். இந்நிலை சினிமாவைப் பொழுதுபோக்குத் தளத்திலேயே நிறுத்திவிடுகின்றது. அதுமட்டுமல்ல, இதுதான் சினிமா என்ற தவறான புரிதல் மக்கள் மனதில் உறைந்துவிடுகின்றது. அந்த நிலையில் பொழுதுபோக்குப் படங்கள், நேரம்கொல்லிப் படங்கள் மக்களிடையே நல்ல வரவேற்பையும் பெறும். தமிழ் சினிமா இந்தத் திசையில்தான் வளர்ந்துவிட்டது. ஆரம்ப முதலே சினிமா என்றாலே அது கேளிக்கைக்குத்தான் என்ற நோக்கு நம் மக்கள் மனதில் ஆழமாகப் பதிந்துவிட்டது. ஆகவேதான் ஆட்டபாட்டம், சண்டைக்காட்சிகள், துரத்தல், குத்தாட்டம்,

 பெண்ணுடல் காட்டல் இவை தமிழ்த் திரைப்படத்தின் இன்றியமையாத அங்கங்களாக ஆகிவிட்டன




. அருமையான ஒரு கருத்தாக்கத்தின் அடிப்படையில் யதார்த்த இயல்புடன் உருவாக்கப்பட்டிருந்த கருத்தம்மா (1994) படத்தில்கூட ஒரு டூயட் காட்சி ஒன்றை நுழைத்திருந்தார் பாரதிராஜா. தேவையில்லாத குறுக்கீடாக அது அமைந்திருந்தது. கதையில் ஒட்டாத நகைச்சுவைக் காட்சிகளும் இத்தகைய குறுக்கீடுகள்தாம்.






பேசும்படம் தோன்றி முதல் இருபது ஆண்டுகளில் வந்த பெருவாரியான தமிழ்ப்படங்கள் புராணக்கதைகள்தாம். தமிழ்சினிமாவின் மூதாதையரான கம்பெனி நாடகங்களே படமாக்கப்பட்டன. சினிமாவின் சாத்தியக் கூறுகள் பயன்படுத்தப்படாமல், ஒரு மேடை நாடகத்தின் சாத்தியக் கூறுகளே திரையில் காட்டப் பட்டன. அதே பாணியில் அவ்வப்போது சில சமகாலக் கதைகளும் நாம் இருவர் போன்று (1947) சமூகப்படம் என்ற பெயரில் படமாக்கப்பட்டன. பாத்திரப் பேச்சு, காட்சியமைப்பு, கதையமைப்பு எல்லாமே நாடகபாணியில் இருந்தன. நடிப்பும்கூட. இவை யாவுமே யதார்த்தத்தைவிட்டு வெகுதூரம் விலகி இருந்தன.





நாடகபாணி நடிப்பில் உடல்மொழி அதீதமாக இருக்கும். தூரத்தில் அமர்ந்திருக்கும் ரசிகருக்குத் தெரிய வேண்டுமே. கையைத் தூக்கி, ஆட்டிப் பேசு வார். சினிமாபோல அண்மைக்காட்சி (close-up) நாடகத்தில் கிடையாதே. இத்தகைய, மோடித்தனமான (stylized) நடிப்பு யதார்த்தத்தைக் குலைக்கின்றது. 



அதேபோல ஒலிபெருக்கி இல்லாத காலத்தில் கடைசி வரிசையில் அமர்ந்திருக்கும் ரசிகர்களுக்கும் பேசுவது கேட்க வேண்டும். ஆகையால் நடிகர்கள் பாத்திரப் பேச்சைச் சத்தம் போட்டுப் பேசினார்கள் நாடகத்திலிருந்து வந்த நடிகர்கள் யாவரும் இந்தக் கத்திப்பேசும் பாரம்பரியத்தில் பயிற்சி பெற்றவர்கள். அவர்களை ஆதர்சமாகக் கொண்டு புதிதாய் வந்த பல நடிகர்களும் அதே பாணியைப் பின்பற்றினர்.




பன்னாட்டளவில் சினிமாத் துறையில் யதார்த்தபாணி அழுத்தமாக ஆரம்ப காலத்திலேயே அறிமுகப்படுத்தப்பட்டது. இத்தாலிய சினிமாவின் யதார்த்த அலை மூலம்தான் (Italian Neo-realism) ஐரோப்பிய சினிமா உலகின் மற்ற நாடுகளுக்குப் பரிச்சயமானது. இரண்டாம் உலகப்போர் இந்த





அலை உருவாவதற்கு ஒரு காரணமாய் அமைந்தது. ஐரோப்பாவின் பெரிய ஸ்டுடியோக்கள், அவைகளிலிருந்த விலையுயர்ந்த உபகரணங்கள் குண்டுவீச்சில் அழிந்துபட்டபின், இயக்குநர்கள் நிஜத் தளங்களில், -கிராமங்களில், நகர்வெளிகளில், - எளிமையாகப் படமெடுக்க வேண்டிய நிலை வந்தது. இம்மாதிரியான படமாக்கல் முறை அவர்களை யதார்த்தபாணிக்கு இட்டுச் சென்றது. அதுமட்டுமல்ல. இருபெரும் சர்வாதிகாரிகள் வெறுப்புக் கொள்கைகளையும் பொய்களையும் ஊடகங்கள்மூலம் பல ஆண்டுகள் மக்கள்மீது திணித்துக்கொண்டிருந்த அந்தக் காலம் முடிந்தபின், உண்மையைத் திரைமூலம் சொல்ல யதார்த்தபாணி வசதியாக உருவானது.





இதில் நமக்கு மிகவும் தெரிந்த படம் பை சைக்கிள் தீவ்ஸ் (Bicycle Thieves, 1948) இந்தப் பாணி உலகின் பல இயக்குநர்களைப் பாதித்து பல சினிமாக்களில் தாக்கத்தை ஏற்படுத்தியது. யதார்த்தபாணி சினிமாவிற்கு சில இயல்புகள் உண்டு. அன்றாட நிகழ்வுகள் நிறைந்திருக்கும். நிஜநிகழ்வு போலவே இருக்க வேண்டும் என்பதற்காக இயக்குநர்கள் தொழில்முறை சாரா

நடிகர்களை நடிக்க வைப்பது, ஸ்டுடியோ சாராத இடங்களைப் படப்பிடிப்பிற்குப் பயன்படுத்துவது, எளிய காமிரா அசைவுகள், கவனிப்பை ஈர்க்காத காமிராக் கோணங்கள் போன்ற அழுத்தமான பல உத்திகளைப் பயன்படுத்துவதுண்டு.



 செயற்கை ஒளி இருப்பது தெரியாத முறையில் ஒளியூட்டல் (lighting) கையாளப்பட்டது. ஒலித்தடத்தில் (sound track) பின்னணி இசையைவிடச் சுற்றுப்புற ஒலிக்கும் நிசப்தத்திற்கும் முக்கியத்துவம் அளிக்கப்பட்டிருக்கும். இயக்குநர் குறியீடுகளைப் (symbols) பயன்படுத்துவதைப் தவிர்ப்பார்.





1952இல் நம்நாட்டில் நடத்தப்பட்ட முதல் பன்னாட்டு திரைப்படவிழா யதார்த்தபாணி சினிமாவை இங்கு அறிமுகப்படுத்தியது. இரண்டு மூன்று வருடங்களில் ஹிந்தி, வங்காள சினிமாவில் இதன் அதிர்வுகளை உணர முடிந்தது. தமிழ்சினிமாவை அது பாதிக்கவில்லை என்றாலும் 1954இல் வந்த படமான அந்த நாள் விழாவில் திரையிடப்பட்ட ஜப்பானியப் படமான ரோஷமானை (Roshamon) வடிவமைப்பில் ஒத்திருந்தது பலரது கவனத்தை ஈர்த்தது.





ஒரு திரைப்படத்தில் யதார்த்தத் தன்மை மேலோங்கி இருக்க வேண்டுமானால் சினிமாவின் எல்லாப் பரிமாணங்களிலும் உழைப்பு வேண்டும். நடிப்பு, செட் அமைப்பு, ஆர்ட் டைரக்?ஷன், காமிராவின் அசைவுகள், ஒளியமைப்பு, பின்னணி இசை, ஒலி என தமிழ் சினிமாவில் (இந்திய சினிமாவில்) பாத்திரப் பேச்சு, தனியாக ஒலிப்பதிவு (dubbing) செய்யப்படுகின்றது. நடிக்கும்போது நடிகர் பேசுவது நேரடியாகப் பதிவு செய்யப்பட்டு ஒலித் தடத்தில் ஏற்றப்படுவது இல்லை. பல படங்களில், நடிப்பவர் வேறு, குரல் கொடுப்பவர் வேறு. இதற்கென்று ஒலிக்கூடங்கள் இயங்குகின்றன (Dubbing Studio). இப்பழக்கம் யதார்த்தத்தைக் குலைக்கின்றது.




 அதிலும் அண்மைக்காட்சிகளில் இது நன்றாகத் தெரியும். வெளிநாடுகளில், படமெடுக்கும் போதே பாத்திரப் பேச்சும் பதிவாகின்றது. (in situ recording) இது நிஜத்தன்மையைக் கூட்டுகின்றது. அது மட்டுமல்ல . . . நடிக்கும்போதே பேசும் வசனம் உணர்ச்சி பொதிந்து இருக்கும். பாத்திரப் பேச்சை உணர்ச்சியுடன் பேசுவது நடிப்பின் ஒரு முக்கியப் பரிமாணம். இதனால் தான் நம்நாட்டில் தேசிய விருதுகளுக்குப் போட்டியிட நடிப்பவரே வசனங்களைப் பேசியிருக்க வேண்டும் என்று ஒரு அடிப்படை விதி இருக்கின்றது.





தமிழ்த்திரையில் யதார்த்த சினிமாவை அழுத்தமாக அறிமுகப்படுத்தியவர் ஜெயகாந்தன். உன்னைப் போல் ஒருவன் (1964) என்ற தனது குறுநாவலைப் பாடமாக்கினார். (நாவலாசிரியரே தனது படைப்பைப் படமாக்குவது ஓர் அபூர்வமான நிகழ்வு. மலையாள எழுத்தாளர் எம்.டி.வாசுதேவன்நாயர் நிர்மால்யம் (1973) என்ற தனது நாவலை அதே பெயருடன் படமாக இயக்கிப் புகழ்பெற்றார்.) யதார்த்தத்திலிருந்து வெகுதூரம் விலகியிருந்த தமிழ்த்திரைக்கு உன்னைப்போல் ஒருவன் உள்ளடக்கத்திலும் வடிவமைப்பிலும் ஒரு புதுமையாக வந்தது. விளிம்புநிலை மக்களைக் கதாமாந்தர்களாகக் கொண்டிருப்பதே ஒரு புதுமையாக அமைந்திருந்தது. படத்தைக் காண வந்தோருக்கு கொடுக்கப்பட்ட ஒரு துண்டறிக்கையில் ‘நீங்கள் ஒரு புதிய ரசனையின் பிரதிநிதிகள்’ என்று கூறி ரசிகர்களை வரவேற்றிருந்தார் ஜெயகாந்தன்.

இதை அடுத்து அவர் இயக்கிய, அவரது கதையான யாருக்காக அழுதான்? (1966) படத்திலும் யதார்த்தத் தன்மை அழுத்தமாக இருந்தது. இந்தப் படத்தை ஒளிப்பதிவு செய்த நிமாய்கோஷின் பங்களிப்பும் இதற்கு முக்கியமான காரணம். அதிலும் அவரது ஒளியூட்டல் உத்திகள் இந்த யதார்த்தத்திற்கு கைகொடுத்தன. 





சத்தியஜித்ரே யதார்த்தரீதியில் படமெடுத்துப் புகழடையும் முன்னரே சின்னமூல் (புலம்பெயர்ந்தவர்கள், 1951) என்ற வங்காளப் படத்தை யதார்த்தபாணியில் எடுத்து, புகழடையாவிட்டாலும், இந்திய சினிமா வரலாற்றில் இடம் பெற்றவர் நிமாய்கோஷ். ரஷியாவில் இப்படம் 188 அரங்குகளில் திரையிடப்பட்டது இந்திய சினிமாவிற்கு ஒரு பெருமை. இவர் பொதுவுடமை இயக்கத்தைச் சேர்ந்தவர். ரித்விக் கதக் ஒரு நடிகராகத் தனது திரை வாழ்வைத் துவக்கியது இதில் தான் என்ற பெருமையும் பெற்றது இப்படம்.





எழுபதுகளில் தமிழ்த் திரையுலகில் நட்சத்திரங்களின் ஆதிக்கம் மறைய ஆரம்பித்தபோது பல புதிய இளம் இயக்குநர்கள், புதிய நடிகர்களை வைத்து தங்கள்
பாணியில் படங்களை உருவாக்கினர்.



 அவர்கள் யதார்த்தபாணியை நோக்கி நகர்வது மிகவும் அழுத்தமாக வெளிப்பட்டது. பாரதிராஜா, ருத்ரையா, பாலுமகேந்திரா, மகேந்திரன், துரை, ஜெயபாரதி போன்றோரின் படைப்புகளைச் சுட்டிக் காட்டலாம். படங்களின் உள்ளடக்கத்தில் சில சமரசங்களைச் செய்து கொண்டார்கள். எனினும் இவர்கள் படப்பிடிப்பு அரங்குகளை விட்டு, நிஜத் தெருக்கள், கிராமப்புற வீடுகள் இவைகளில் படம் பிடித்து நம்பகத் தன்மையைக் கூட்டினார்கள்.




16 வயதினிலே (1977), முள்ளும் மலரும் (1978) போன்ற படங்களில் யதார்த்தத் தன்மையை நிலைநாட்ட இயக்குநர்கள் பாரதிராஜாவும் மகேந்திரனும் மிகுந்த முயற்சி எடுத்துக்கொண்டது தெரிகின்றது. எனினும் பாட்டுகள், கதாநாயகியின் நடை, உடை, பாவனை, உடல் மொழி, நிறம் இவை கிராமத்து யதார்த்தத்திலிருந்து விலகியிருந்தன. அதிலும் ஒரு திரைப்படத்தில் கதை சொல்லலில் குறுக்கே வரும் பாட்டுக்காட்சி அப்படத்தின் இயல்புத் தன்மையைச் சிதைக்கின்றது. தமிழ்சினிமாவில் இன்று வந்து கொண்டிருக்கும் பல படங்களின் யதார்த்தத்தைப் பாட்டுக்காட்சிகள் சிதைக்கின்றன. ஒரு குறுக்கீடாக அவை வருகின்றன.




பாட்டு மட்டுமல்ல, இடைவேளையும் ஒரு சினிமா அனுபவத்தில் வேண்டாத குறுக்கீடுதான். அண்மையில் ஒரு திரைப்பட அரங்கில் Life of Pi பார்த்தோம். படம் ஆரம்பித்து ஒருமணி கழிந்து, பரந்திருக்கும் கடல், பறக்கும் மீன்கள், ஓங்கில் கூட்டம், திமிங்கலம் என்று சமுத்திர உலகில் ஆழ்ந்து சஞ்சரித்துக்கொண்டிருந்தபோது, தீடீரென Intervel என்ற சொற்கள் திரையில் தோன்றின. இது நம்மூர் திரையரங்கினர் செய்த வேலை. 10 நிமிட இடைவேளை முடிந்தபின், இது சினிமா கொட்டகையா அல்லது ரெஸ்டாரண்ட்டா என சந்தேகம் எழும்படி ஒவ்வொருவரும் ஒரு அட்டைப் பெட்டி நிறைய மக்காச்சோளம், சமோசா, பேப்பர் கப்பில் காபி என உள்ளே நுழைய ஆரம்பித்தனர்.





பத்தாண்டுகளுக்கு முன் தமிழ்த்திரையில் ஒரு புதியஅலை உருவானது. பல படங்கள், அதிலும் கிராப்புறப் பின்புலத்தில், யதார்த்தபாணி காட்சிகளுடன் உருவாக்கப்பட்டன. பல திரைப்பட விழாக்கள் நாட்டில் நடக்க ஆரம்பித்ததும் இந்தப் பாதிப்பிற்கு ஒரு காரணம். பன்னாட்டுப் படங்கள் DVD உருவில் கிடைக்க ஆரம்பித்ததும் ஒரு காரணமாக இருக்கலாம். லத்தீன் அமெரிக்கப் படங்களின், முக்கியமாக அர்ஜன்டினிய படமான, நான்கு ஆஸ்கார் விருதுகளுக்குப் பரிந்துரைக்கப்பட்ட பெர்னாந்தோமெரியல் (Fernando Merielles) இயக்கிய City of God போன்ற படங்களின் தாக்கத்தைப் பல தமிழ்ப் படங்களில் பார்க்க முடிந்தது.



 2008இல் வெளிவந்த சுப்ரமணியபுரம் இந்த யதார்த்தபாணி அலையின் உச்சக்கட்டமென்று கூறலாம். இதில் பல காட்சிகள், பேருந்து நிலையம், சிறைக்கூடம், மீன்மார்க்கெட், காவல்நிலையம், கோர்ட் சார்ந்த காட்சிகள் யதார்த்த பாணியிலுள்ளன. ஸ்டாண்டில் பொருத்தாமல் காமிராவைக் கையில் பிடித்துக்கொண்டு படம் பிடிக்கப்பட்ட பல காட்சிகள் இந்த யதார்த்த அணுகுமுறைக்கு அழுத்தம் கொடுக்கின்றன. இம்முறை படமாக்கலை நிஜசினிமா (cinema-verite) என்று திரையியலாளர்கள் குறிப்பிடுகிறார்கள். அவள் அப்படித்தான் (1978) படத்தில் சென்னை மகளிர் கல்லூரி மாணவர்களை ஒரு ஆவணப்படத்திற்காக கதாநாயகன் நேர்காண்பது போன்ற காட்சி படமாக்கப்பட்டிருக்கும் விதம் நிஜ சினிமாவிற்கு எடுத்துக்காட்டு. இன்று யதார்த்தப் பாணிப் படங்கள் பல வருவதும் அதற்கு மக்களிடையே நல்ல வரவேற்பு இருப்பதும் நல்ல அறிகுறிகள். சென்ற ஆண்டு
வெளிவந்த அழகர்சாமியின் குதிரை (2011) யதார்த்தத்தில் துல்லிய கவனம் செலுத்தியதுடன் மதநம்பிக்கை பற்றிய ஒரு நோக்கை அடக்கமாகக் கூறியது ஒரு சீரிய கலையனுபவமாக அமைந்தது.



 இந்த ஆண்டில் தமிழ்சினிமாவின் ஒரு முக்கிய நிகழ்வு பாலாஜி சக்திவேலின் வழக்கு எண் 18/9 நகர்ப்புறப் பின்புலத்தில் ஒரு யதார்த்தப்பாணி கதையாக வெளிவந்து கவனிக்கப்பட்டது. (இப்படம் கான் திரைப்பட விழாவில் திரையிடப்பட்டது தமிழ்சினிமாவிற்குப் பெருமை). சம்பந்தமில்லாத குறுக்கீடுகள் ஏதுமின்றி சக்திமிக்க காட்சிப் படிமங்களுடன்கூடிய கதை சொல்லலில் உள்ள தரம் மட்டுமே பார்வையாளர்களின் கவனத்தை ஈர்த்துப் பிடிக்கின்றது. இம்முறையில் கதை சொல்லப்படும்போது அப்படத்தின் உள்ளடக்கமாக இருக்கும் சிந்தாந்தம் நீர்த்துப்போகாமல் பார்வையாளரை அடைகின்றது.





யதார்த்த சினிமாவைத் தாண்டி, வேறு பாணிகளில் படமெடுத்துப் புகழ்பெற்ற இயக்குநர்கள் உண்டு. நம்நாட்டில் மணிகௌல் அவர்களைச் சுட்டிக் காட்டலாம். இவரது படத்தில் கதாபாத்திரங்கள் முகபாவங்களை மாற்றாமல் ரோபோக்கள்போல நடமாடுவர். எடுத்துக்காட்டு ஆஷாத் கா ஏக்தின் (1971). மலையாளத்தில் டி.வி. சந்திரனும் ஒரு உதாரணம்.இவர் இயக்கிய தமிழ்ப் படம் ஹேமாவின் காதலர்கள் 1985இல் வெளிவந்தது. அத்தகைய இயக்குநர்களும் யதார்த்த சினிமாவில் பரிச்சயம் அடைந்த பின்னரே அதிலிருந்து வேறுவகையான படமாக்கலுக்குச் சென்றனர். இலக்கணங்களை மீறும் கவிபோல. அங்கதத்தை ஆதாரமாகக் கொண்டு வெற்றி பெற்ற படம் இம்சை அரசன் 23ஆம் புலிகேசி.




எந்த ஒரு சினிமாவிலும் பொழுதுபோக்குப் படங்களுக்கு இடம் உண்டு. ஆனால் அந்த அளவில் மட்டும் சினிமா நின்றுவிட்டால்தான் ஆபத்து. உலகெங்கும் சினிமாவின் எல்லைகள் விரிந்த வண்ணம் இருக்கின்றன. தமிழ்சினிமா உயிர்ப்போடு வளர வேண்டுமென்றால் நாம் கேளிக்கை என்ற ஒரு தளத்தில் நின்று சினிமாவின் எண்ணற்ற சாத்தியக் கூறுகளைக் கட்டிப்போட்டுவிடக் கூடாது. அப்போதுதான் அரசியல் சினிமா மலர முடியும்.



thanx - kalachuvadu

Saturday, February 01, 2014

கோலி சோடா' - திருட்டு சோடாவா? - விஜய் மில்டன் ஆவேச பேட்டி

நான் செய்தது தப்பு என்றால் முகத்திரையை கிழியுங்கள்: விஜய் மில்டன் ஆவேசம்


கோலி சோடா' படத்திற்கு பெரும் வரவேற்பு கிடைத்திருக்கும் நிலையில், இணையத்தில் வேறு ஒருவர் கதையை திருடி விஜய் மில்டன் படமாக எடுத்து விட்டார் என்று தகவல்கள் வெளியானது.



இத்தகவலை மறுத்துள்ள விஜய் மில்டன், இது தொடர்பாக வீடியோ பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த வீடியோ பதிவில் அவர் கூறியிருப்பது :
"இணையத்தில் 'கோலி சோடா' படத்திற்கு இவ்வளவு பெரிய வரவேற்பு கிடைக்கும் என்று நான் எதிர்பார்க்கவில்லை. ரொம்ப வருடங்களாக கடுமையாக உழைத்து வருகிறேன். இவ்வளவு வருட உழைப்பிற்கு எல்லாம் கொஞ்சம் கொஞ்சமாக சேர்த்து இந்த படத்திற்கு பலன் கிடைத்தாக நினைத்துக் கொள்கிறேன். என்னிடம் பேசியவர்கள் எல்லாருமே நாங்க ஜெயிச்ச மாதிரியிருக்குனு சொல்றாங்க. அந்த வார்த்தை ரொம்ப சந்தோஷமாக இருக்கு.



கடந்த இரண்டு, மூன்று நாட்களாக இந்தக் கதை அவருடையது, என்னுடையது அப்படினு நிறைய தகவல்கள் வெளியாகி வருகின்றன. இந்தப் படத்தோட கான்சப்ட் என்னோடது, ஏற்கனவே எடுத்தாச்சு, தலைப்பு என்னோடது இப்படி என்ன எல்லாமோ சொல்றாங்க. எனக்கு கோபமே வரமாட்டேங்குது. தப்பு செஞ்சு இருந்தா கோபம் வரக்கூடாது. எனக்கு தப்பு செய்யலன்னா கோபம் வராது. அதான் விஷயம்.



ஒரு சின்ன வேண்டுகோள் மட்டும் சொல்றேன். நீங்க யாராக இருந்தாலும் சரி, உங்களிடம் ஆதாரம் இருந்தால் அது வெளிப்படுத்துங்க. ஏன்னா அடையாளத்தைப் பத்தி படம் எடுத்துட்டு, அவன் போலி அடையாளத்தோட இருக்கக்கூடாது. இது என்னோட கதை அப்படினு சொல்றவங்களை விட, இது அவரோட கதை அவங்களை ஏமாத்திட்டாரு அப்படினு சொல்றாங்களே அவங்களை நான் மதிக்கிறேன். ஏதோ ஒரு விஷயத்தை உண்மை அப்படினு நம்பி அதை வெளியே கொண்டு வரணும்னு நினைக்கிறாங்க. தயவு செய்து கொண்டு வாங்க. சம்பந்தப்பட்ட ஆளை பேச சொல்லுங்க, ஏன்னா அவங்களுக்கும் மனசாட்சி இருக்கு.


இந்தக் கதையை எழுதி வரிக்கு வரி என்கிட்ட இருக்கு. அதை எவ்வளவு நாளைக்கு முன்னாடி எழுதினேன் அப்படினு ஆதாரமும் இருக்கு. நீங்க உங்களோட ஆதாரத்தை கொடுங்க. என்னால நீருபிக்க முடியும் 'கோலி சோடா' என்னோட கதை அப்படினு.


இந்தக் கதையை வைச்சுட்டு நான் எவ்வளவு தயாரிப்பாளர்களை போய் பார்த்தேன். ஏன் அவங்க பண்ணல. பிச்சை எடுத்த மாதிரி காசு சேர்த்து, வாரம் முழுவதும் வேலைச் செய்து சனி, ஞாயிறு ஷுட்டிங் வந்து அந்தக் காசை வைச்சு ஷுட் பண்ணுவேன். இப்படி ஒன்றரை வருஷம் கஷ்டப்பட்டு இந்தப் படத்தை பண்ணியிருக்கேன்.



ஒருத்தரோட கதையை வைச்சு, இன்னொருத்தர் படம் பண்ணி ஜெயிக்கவே முடியாது. கதை, திரைக்கதை, வசனம் அப்படிங்குறது வேற, இயக்கம் என்பது வேற. ஒரு கதையை திருடி இன்னொருத்தர் எடுக்கவே முடியாது. ஒரு கதையை மாதிரி இன்னொரு கதை வருவது நடக்கத்தான் செய்யும். its part of the game.



உங்களிடம் ஆதாரம் இருந்தால் நீதிமன்றம் போங்க, போலீஸுக்கு போங்க. எல்லாத்துக்கும் நான் தயாரா இருக்கேன். தயவு செய்து இணையத்தில் என்னோட முதுகிற்கு பின்னால் எழுதுவதை நிறுத்திக் கொள்ளுங்கள்.


எளிமையான மனுஷனோட அடையாளத்துல கையை வச்சா என்ன நடக்கும் என்பதை தான் படமா எடுத்திருக்கேன். இன்னொருத்தோட அடையாளத்தை நான் படமா எடுத்தா நான் மனுஷனே கிடையாது. என்னோட அடையாளத்தை யாராவது அழிக்க நினைத்தால் நானும் மனுஷனா இருக்க மாட்டேன். இது நியாயமான ஒரு சினிமாக்காரனுக்கு வரும் கோபம்.


இனிமேல் இதைப் பற்றி நான் எதுவும் பேசப் போறதில்லை. யாராவது நான் செய்தது தப்பு என்றால் என்னோட முகத்திரையை கிழியுங்கள். இந்தப் படத்தில் என்னோடு பணியாற்றியவர்கள் யாராவது வருத்தப்பட்டாலோ, கோபப்பட்டலோ நான் வருத்தப்படுவேன். ரெண்டு நாள் தூங்காம இருப்பேன். உங்களைப் பற்றி எல்லாம் எனக்கு கவலையில்லை. உங்களுக்கும் இந்தப் படத்திற்கு எந்த சம்பந்தமும் கிடையாது." என்று கூறியுள்ளார்.


நன்றி - த தமிழ் இந்து 


டாக்டர். இலந்தைப்பழம் சாப்ட்டா வாய் புண்ணா போகுமா?

1. லேடி - டாக்டர்.நான் சமையல் செஞ்சா உடனே தலைவலி வருது.அதை சாப்ட்டா புருசனுக்கு வயித்து வலி வருது.இப்போ நான் என்ன செய்ய?


==============



2  அத்தான்.கல்யாண மண்டபத்துல ஏன் என் கூட ஜோடியா உக்காராம தனியா உக்காந்துட்டீங்க?



 மொள்ள மாரி எப்பவும் தனியாத்தான் இருப்பான்.ஈ


==============



3  டாக்டர்.டெய்லி பிளம் கேக் சாப்பிட்டா நல்லதா? கெட்டதா?




 உங்க உடம்புக்கு நல்லது.உங்க கணவர் பட்ஜெட்க்கு கெட்டது



==========================



4  டாக்டர்.ரெட்டைத்தலைவலி எதனால வருது?



 மிஸ் ! ரெட்டை ஜடையை இவ்ளவ் இறுக்கமா போட்டா?




============================



5 டாக்டர்.2 சம்சாரம் கட்டுனா ரெட்டைக்குழந்தை பிறக்குமா?


 ம்ஹூம் சக்களத்தி சண்டை ,குடும்பத்தில் கலகம் தான் பிறக்கும்



============================



6 டியர்.லெமன் சேவை செய்யவா ?



,வேணாம் .ஊரெல்லாம் போய் என் புருசனுக்கு சேவை செஞ்சேன் னு அள்ளி விடுவே. ஆணியே புடுங்க வேணாம்


==========================



7  உப்புமா எப்படி செய்யறதுனு இப்போ ரெசிபி சொல்லப்போறேன்.




மேடம் ,அதை எப்படி சாப்பிடறதுனும் சொல்லிக்குடுத்துட்டா சவுகர்யம்



======================



8 மிஸ் வீணா !,தயவு செஞ்சு நீங்க எந்த சினிமாப்படத்துக்கும் போக வேணாம்.போனா இது வீணா போன படம்னு எல்லாரும் சொல்லிடுவாங்க



======================



9 டைரக்டர் - மிஸ்! டான்ஸ் ஆடத்தெரியுமா?



 வாய்ப்புக்கேட்டு வந்த புதுமுகம்.- ம்ஹூம்.ஆனா டான்ஸ் ஆடுனா தெரியும் ,ஐ மீன் ஆட ஆட பழகிக்குவேன்



========================


10  சார்.எனக்கு கெட்டப் சேஞ்ச் வராது.



அடடா.அதுவும் வராதா? சரி சமாளிப்போம்


==========================



11 சார்.டூயல் ரோல் னா 2 ஜோடி ,டபுள் சம்பளம் உண்டா?



கதையே ஒரே பொண்ணை லவ் பண்ற 2 ட்வின்ஸ் ஜீன்ஸ் கதை தான்.



==========================



12  ரூபா நோட்டுல வருசத்தை எப்படிப் பார்க்கிறது?"


முதல்ல மிஸ் ரூபா கிட்டே இருக்கும் நோட்டை வாங்கனும்



====================


13 ஜட்ஜ் - காய்ச்சல் னு வந்த லேடி பேஷண்ட்டை ஏன் கட்டிப்பிடிச்சீங்க?



கில்மா டாக்டர் கிரி - குளிருதுன்னாங்க



===========================


14 மேடம்.நாளைக்கு காலைல வெறும் வயித்தோட வாங்க.டெஸ்ட் பண்ணனும்.



அய்யய்யோ டாக்டர்.அது முடியாதே.மாசமா இருக்கேன்


=======================



15 பார்ட்டிகளில் ஹிப் ஹிப் ஹுர்ரே னு சொல்றாங்களே அதுக்கு என்ன அர்த்தம் ?



தெரிலை மேடம்.ஹிப் னா இடுப்பு னு தெரியும்.அவ்ளவ் தான் நம்ம ஜிகே



========================


16  டேமேஜர் - பொண்ணுங்களோட அடிக்கடி பேசிட்டு இருக்கீங்களாமே?



ஆமா ஸார் .நீங்க எப்படி? ஆம்பளைங்க கிட்டே பேசுவீங்களா?



====================


17 மேடம்.ஏன் இவ்வளவு பதட்டமா இருக்கீங்க? யாராவது ரேப் பண்ணிட்டாங்க்ளா?




பூ பான்டே - ச்சே ச்சே.யாரோ என் வெப்சைட்டை ஹேக் பண்ணிட்டாங்க



=====================



18 பண்ணையாரும் பத்மினியும் மலையாளத்தில் டப் செய்யப்பட்டால் என்ன டைட்டில் வைப்பாங்க ? 


= 60 வயசு பாழடைஞ்ச பங்களாப்பண்ணையாரும் ,16 வயசுப்பருவமங்கை பத்மினிக்குட்டியும்



==========================



19 ஆபீஸ் டைம் ல போன் பேசக்கூடாது.



 ஓக்கே சார்.அரை மணி நேரம் பர்மிசன் குடுத்தா நேர்லயே போய் (என் சொந்த) சம்சாரத்து கிட்டே பேசிட்டுவந்துடுவேன்



======================



20  ஸார்.2 நாள் லீவ் வேணும்.



ஸாரி தொடர்ந்து 2 நாள் லீவ் தரமுடியாது. சரி.நாளை ஒரு நாள் லீவ் இப்போ குடுங்க.அடுத்த லீவ் நாளை குடுங்க



====================



21 டாக்டர்.நான் டி வி அதிகம் பார்ப்பதில்லை.ஒரு டி வி தான் பார்க்கறேன்.ஆனாலும் தலைவலி வருது.ஏன்?


டி வி 1 தான்.ஆனா சேனல் 30 .சீரியல் 50


=======================


22 டாக்டர். இலந்தைப்பழம் சாப்ட்டா  வாய் புண்ணா போகுமா?


 கடைல வாங்கி 1, 2 சாப்ட்டா எதும் ஆகாது.இலந்தை மரத்தடில 1 விடாம எடுத்து சாப்ட்டா?



====================



23  ஸார்.உங்க படத்துக்கு குடும்பப்பெண்கள் கூட்டம் குவியபோகுது.



நிஜமா வா?


ஆமா.டி வி ஸீரியல் கணக்கா இருக்கு


===========================

Friday, January 31, 2014

B.A.PASS - சினிமா விமர்சனம் ( hindi ) 18 +

 

இந்த  கில்மாப்படப்போர்வைல வந்திருக்கும் அவார்டு  வாங்குன படம் உலகப்படமாம். அதெல்லாம்  தமிழனுக்கு  முக்கியம் இல்லை. தமிழனைப்பொறுத்தவரை  ரெண்டே வெரைட்டி தான் . சீன் உள்ள படம் , சீன் இல்லாத  படம் . சரி நாம விமர்சனத்துக்குள்ளே  போலாம் ( என்னமோ  குடிசைக்குள்ளே நலங்கு வைக்கப்போலாம்னு சொல்ற மாதிரி  ஒரு பில்டப் )

ஹீரோவோட அம்மா, அப்பா ஒரு கார் விபத்துல  இறந்துடறதால அவர் டெல்லில  தன் அத்தை  வீட்டில் தங்கறார். அவருடைய  2 தங்கைகளும் ஹாஸ்டலில் தங்கிடறாங்க .அத்தை வீட்டில் எடுபுடி மாதிரி எல்லா வேலையும் செஞ்சுட்டு  ஹீரோ பி ஏ  படிக்கறார். ( அங்கே அந்த அத்தைக்கும் ஹீரோவுக்கும் கனெக்சன் ஆகும்னு ஒரு  ஜோசியர் சொல்றார் , அது தப்பு )


 ஒரு நாள்  அத்தை  வீட்டுக்கு  லேடீஸ்  மீட்டிங்க் நடக்குது  அதுல சரிகா-னு ஒரு ஆண்ட்டியை சந்திக்கறார். அந்த ஆண்ட்டி யார் தெரியுமா? ( சொன்னாத்தானே  தெரியும் ? ) மாமா  வேலை செய்யும் ஆஃபீஸ் ல உயர் அதிகாரியோட மனைவி . இனி அவங்க ஏதாவது வேலை சொன்னா லும் செய்யனும். ( மாமாவுக்கெல்லாம் மாமா )




 ஒரு நாள் ஏதோ ஆப்பிள் தருவாங்க போய் வாங்கிட்டு வான்னு இந்த ஆண்ட்டி சொல்ல  ஹீரோ அந்த ஆண்ட்டி வீட்டுக்குப்போறார். ( சி செண்ட்டர் ரசிகன் ஒருத்தன் எந்திரிச்சு ஆப்பிள் வாங்க பழமுதிர்ச்சோலை போனா போதுமே எதுக்கு ஆண்ட்டி வீட்டுக்குப்போகனும்னு கேட்ட்கறார்.அய்யோ ராமா _) இப்போதான்  தியேட்டர்ல இதுவரை  ஏனோ தானோன்னு உக்காந்துட்டிருந்த  தமிழன்  நிமிர்ந்து  உக்கார்றான் 


 மேலே  சொன்ன 4 பேரா வில்  தமிழன் , சி சென்ட்டர் ரசிகன் இதெல்லாம் யார்னு  யாரும்  குழப்பம் அடைய வேணாம், எல்லாம் நான் தான் . ஹி ஹி , 


18  வயசுப்பையனை  40 வயசு ஆண்ட்டி  கச முச  பண்ணிடறா . இது மாதிரி  6 டைம் நடக்குது ( 6 தடவையும்  எண்ணிட்டே  இருந்தேன் ) 


 அதுக்குப்பின் அந்த பத்தினி   ஒரு பாக்கெட் டைரி தர்ர்றா. அதுல பல  பெரிய மனுஷிக போன் நெம்பர்  இருக்கு 


 ஹீரோவோட வேலை என்னான்னா அந்த  வீட்டுக்கெல்லாம்  போன் பண்ணி அப்பாயிண்ட்மெண்ட் வாங்கிட்டுப்போய் அவங்களை சந்தோசப்படுத்திட்டு வரனும். அதுக்கு பணமும் தெருவாங்க . ஓசி ல கரும்பும் சாப்பிட்டு அதுக்கு குடக்கூலியும் வாங்கிக்கலாம். 


 இ[ப்படி கஷ்டப்பட்டு சாரி  ரொம்ப இஷ்டப்பட்டு ஹீரோ நிறைய பணம் சேர்த்துடறார். சேர்த்து வெச்ச பணத்தை தன் குரு ஆண்ட்டி  கிட்டே  குடுத்து வைக்கறார்



 ஒரு நாள் குரு ஆண்ட்டி  கூட ஹீரோ பிசியா  இருக்கும்போது மாமா வந்துடறார். குட்டு வெளிப்பட்டுடுச்சு 


 கேப்டன் கூட்டணி   வேணும்கறதுக்காக எப்படி அழகிரியை  வெளீல போன்னு தமிழ்  இனத்தலைவர் டிராமா செஞ்சாரோ அதே மாதிரி ஆண்ட்டி ஹீரோ வை துரத்தி  விட்டுடுது 

 இனிமே இந்த  ஏரியா பக்கமே வராதே அப்டிங்குது 


இப்போதான்  ஹீரோ வுக்கு  இன்னொரு இக்கட்டு வருது . அதாவது ஹாஸ்டல்ல தங்கிப்படிச்ச தங்கைகள் 2 பேருக்கும் ஆபத்து , அவங்க இவனைத்தேடி வர்றேன்கறாங்க . ஹாஸ்டல் வார்டன்  தப்பானவராம் ( தப்பான படத்துல  எல்லா கேரக்டரும் தப்பா தான்  இருக்கும் , விக்ரமன் படம்னா எல்லாரும்  யோக்கியமா  இருப்பாங்க .) 

 ஹீரோ அந்த  குரு ஆண்ட்டி கிட்டே இருந்து அந்தப்பணத்தை வாங்கினாரா? இல்லையா? என்பதுதான்  மிச்ச மீதிக்கதை


ஹீரோவா சாதப் கமல் அப்டினு ஒரு பையன்  சுமாரா நடிச்சிருக்கார். ( நாம என்னைக்கு ஆம்பளைங்களைப்பாராட்டி  இருக்கோம் ? )  அவருக்கு அதிக வேலை இல்லை 


ஹீரோயின் கம் வில்லியா  அதாவது ரேகா ஆண்ட்டியா ஷில்பா சுக்லா அப்டினு ஒரு ஆண்ட்டி நடிச்சிருக்கு . மேடம்க்கு முகமும் பயங்கர முத்தல் . மத்தபடி சொல்லிக்கற அளவோ . ஜொள்ளிக்கற அளவோ ஒண்ணும் இல்லை 


 கண்ணுக்கு குளிர்ச்சியா க ண்ணுக்கு  எட்டின தூரம் வரை  ஒரு யூத்  ஃபிகர்  கூடக்காணோம் . கதைப்படி எல்லாரும் ஆண்ட்டியா வர்றதால எதும்  தேறலை 



இயக்குநர் பாராட்டுப்பெறும்  இடங்கள்



1.  இது ஒரு கில்மாப்படம்னு  சொல்லாம  விருதுக்குரிய உலகப்படம்னு  ஊரை ஏமாத்தி நிஜமாலுமே   ஃபிலிம்  ஃபேர் அவார்டு வாங்குனது 


2  போஸ்டர்  டிசைன் பிரமாதமா  சீன்  இருப்பது போலவே அடிச்சது . தமிழ் , தெலுங்கு  . மலையாளம் என  மானா வாரியா   டப் பண்ணி  ரிலீஸ் செஞ்சது 



 இயக்குநரிடம் சில கேள்விகள்


1. நாட்ல  1008 பேங்க்  இருக்கு , என்ன இதுக்கோசரம்  ஹீரோ எல்லாப்பணத்தையும் ஆண்ட்டி  கிட்டே  கொடுத்து வைக்கனும் ? 


2   உன்னை மாதிரி பல பசங்க  கூட எனக்கு கனெக்சன் இருக்குன்னு  ஒரு குண்டைத்தூக்கிப்போடுது ஆண்ட்டி க்ளைமாக்ஸ் ல . ஆனா நாம பார்க்கும்போதெல்லாம்  டெண்ட் கொட்டாய் ல தினசரி 4 காட்சிகள்  ஓடற மாதிரி எப்போ பாரு  கில்மா தான் பண்ணிட்டு  இருக்காங்க . அது போக  இன்னும் பல பசங்கன்னா ஆண்ட்டிக்கு இதுதான் ஃபுல் டைம் ஜாப்பா ? 


3 க்ளைமாக்ஸ் ல  ஆண்ட்டி   அந்த ஹீரோ  கிட்டே வாசல்ல  ஊர் ஜனம்  எல்லாம் கூடிடுச்சு  என்னை லைட்டா வயித்துல  குத்து கத்தியால அப்டிங்குது . அது என்ன  டீக்கடையா? லை ட்  டீ , ஸ்ட்ராங்க்  டீ சொல்ல ? 


4   ஹீரோவுக்கு  ஜோடியா   ஒரு இள வயசுப்பொண்ணை காலேஜ் க்ளாஸ் மேட்டா   போட்டிருந்தா    ஐ மீன்  ஹீரோயினா  போட்டிருந்தா  என்ன குறைஞ்சு  போய் இருக்கும்  ? மூலக்கதையை அச்சு அசல் அப்படியே காப்பி அடிக்கனும்னு  ரூல்ஸ்  இருக்கா ? கொஞ்சம்  மேல்  மாடியை  யூஸ்  செஞ்சாதான் என்ன ? 


 நச் வசனங்கள்


1. செஸ் ல காஸ்பரோவ் அதிர்ஷ்டக்காரர்.ஆனா கேம் நுணுக்கங்கள் கார்ப்போவ்க்குத்தான் தெரியும்



2  எதுக்கு  என் பேக்கை  செக் பண்றீங்க ? நான் என்ன திருடனா? 


 இந்த  ஊர்ல  எல்லாருமே திருடங்க தான் 


3 அட , நிறைய வேலை செய்யறே  போல , எப்போ எங்க   வீட்டுக்கு வர்ஃப்றே? 



4 நம்ம சொசைட்டில  கல்யாணம்கற ரிலேசன் தவிர  ஃப்ரீயா  எது கிடைச்சாலும் எனக்கு  அது  பிடிக்கும் 


5 வாரத்துக்கு  5 நாள் மட்டும்  போய்ட்டு வர  இது ஒண்னும் கவர்மெண்ட்  ஜாப் இல்லை 


 6  பையன் பி ஹெச் டி பண்றான் . பகல் ல கெமிஸ்ட்ரி , நைட் ல பயாலஜி 


7  எல்லாத்துக்கும்  நேரம்  காலம் வரனும் , கால தேவனுக்கு யாரை  எப்போ எங்கே வைக்கனும்னு  தெரியும் 


 8  என் மேல ஏதாவது  கோபமா ? ]\


 நீ  என்ன என்  புருசனா ? தேவை இல்லாததுக்கு  எல்லாம்  கோபப்பட 

9 மத்தியானத்துல  தூங்குனா  மதி கெட்டுப்போகுமாம் 


10  நான்  பொணத்தை நம்பி வாழ்றவன் டெய்லி  ஒரு பொணம் வந்தாதான்  எனக்கு ஒரு வேளை சாப்பாடு . 

 

 சி பி கமெண்ட்  -  படத்துல  நீங்க  எதிர்பார்க்கும்  காட்சிகள்  எதுவும்  இல்லை . போய் ஏமாந்துடாதீங்க  . வேஸ்ட் . இன்னொரு  விஷயம்  சும்மா சும்மா ஃபோன் பண்ணி   படத்துல  சீன்  இருக்கா?ன்னு கேட்காதீங்க எல்லாருக்கும் ஒரே  பதில்  தான் . இந்த அவார்டு படத்தை   ஈரோடு சீனிவாசா வில் பார்த்தேன்


  ரேட்டிங்க் = 2.25 / 5

டிஸ்கி -  ரம்மி - சினிமா விமர்சனம் - http://www.adrasaka.com/2014/01/blog-post_3501.html

ரம்மி - சினிமா விமர்சனம்

 
கதை நடக்கும் கால கட்டம் 1987 , கதைக்களம் புதுக்கோட்டை மாவட்டம்,சிவகங்கை மாவட்டம். ஒரு கிராமம் 3 நண்பர்கள்  காலேஜ்க்குப்போறாங்க . அதுல  ஹீரோ தன் கிளாஸ் மேட் பொண்ணை லவ்வறார். ஆனா பொண்ணொட அப்பா காதலுக்கு எதிரி , ஜாதி மதம் எல்லாம் பார்ப்பவர் . ஹீரோவோட நண்பர்  கிறிஸ்டியன். அவர் ஒரு இந்துப்பொண்ணை லவ்வறார். 


  ஒரு இக்கட்டான நிலைமைல  அந்த இந்துப்பொண்ணு  சூட்கேஸ் எடுத்துட்டு கிறிஸ்டியன் நண்பர்  வீட்டுக்கே வந்து  ஊரை விட்டு ஓடிடலாம்குது. வேற வழி இல்லாம  அவரும் அவளைக்கூட்டிட்டு கிளம்பறாரு. 

 உடனே  வில்லன் கோஷ்டிங்க அந்த  ஜோடியைத்தேடி சல்லடைப்போட்டுத்தேடறாங்க , என்ன நடந்தது என்பதுதான் 144 நிமிசம்  ஓடக்கூடிய  ர ம்மி படக்கதை . 


 ஹீரோவா  இனிகோ பிரபாகர் . இயல்பான கிராமத்து இளைஞனைக்கண் முன்  நிறுத்தறார் . இவரது  உயரமும் , நிறமும் இவருக்கு பிளஸ். பாடல் காட்சிகளில் மட்டும் பாடி லேங்குவேஜில் இயல்புத்தன்மை தேவை , மற்ற படி ஓக்கே . 


இன்னொரு  ஹீரோவாக விஜய் சேதுபதி . பாடி லேங்குவேஜை எந்த எந்த காட்சியில் எப்படி வைத்திருக்க வேண்டும் என்பதை  மூளை செல்கள் கட்டளை  இடும் முன்பே அனிச்சையாக மாற்றும் பிரமாதமான நடிகர் . அசால்ட்டாக  இருக்கும் அவர் முகம் காட்சிக்கு ஏற்ற வாறு டக் என ,மாறும் போது சபாஷ் பெறுகிறார்  


நாயகியாக  காயத்ரி . சூரிய காந்திப்பூவை செடியில்  இருந்து பறிக்காமலேயே காலை எட்டு மணிக்கு அதன் மேல் தண்ணீர் தெளித்தால் எப்படி இருக்குமோ அந்த அளவு புத்துணர்ச்சியுடன் மலர்ந்த முகத்துடன் இருக்கிறார் . அவர் மீது அவருக்குப்பிடிக்காத ஆள் நெருங்கும்போது முகத்தில் காட்டும் வன்மம் அபாரம் , தாவணி யில் வலம் வரும்  தாமரைப்பூ போல் படம் முழுக்க இவர் ராஜ்ஜியமே . 


இன்னொரு நாயகி ஐஸ்வர்யா . தமிழனின்  தேசிய  நிறமான மாநிற கோதுமை அழகி .கிராமத்து வாசம் கமழும்  முகம் . கிணற்றடியில்  மஞ்சள் தேய்ச்சுக்குளிக்கும் காட்சி யும் , விஜய் சேதுபதியுடன்   கட்டிலில்  கொஞ்சும் காட்சியும்   சபாஷ் . க்ளைமாக்ஸ் காட்சியில்  அப்ளாஸ் அள்ளுகிறார்.


 காமெடியனாக  புரோட்டா  சூரி , வழக்கம் போல் வடிவேலுவின் காதலன் பட பாடி லேங்குவேஜ் . பஞ்ச் வசனங்கள் ., ஒன் லைனர்கள்  இல்லாமல் தடுமாறினாலும்  திரைக்கதையால் சாமார்த்தியமாகத்தப்பிக்கிறார். 


வில்லன்கள்  இருவர் நடிப்பும்  கன கச்சிதம் , காலேஜ் லைஃபில் வரும்  வில்லன் களவாணி வில்லன் சாயலில்  இருக்கார் 


பாடல் காட்சிகள்  அச்சு அசல் விக்ரமன் பட சாயல் . பூவே உனக்காக பட பாடல்களை  நடன அமைப்பை  பிரதி எடுத்ததுபோல்  இருக்கு  




இயக்குநர் சபாஷ்  பெறும் காட்சிகள்



1. நாயகி  வீட்டில்   பெற்றோர் “ இவ இப்படி செஞ்சா ஊர்ல கண் , மூக்கு வெச்சுப்பேச மாட்டாங்களா ? என கேட்கும்போது  காலேஜ் கிளாஸ்  ரூமில் நாயகி நாயகனின் படத்தை  ஓவியமாக கண் , மூக்கு வைக்கும் டச்சிங்க் காட்சி 


2  விஜய்  சேதுபதி - நாயகி ஐஸ்   இருவரும் கிணற்றடியில் செய்யும்  ரொமான்ஸ் காட்சிகள் ,  பாடலுக்கான  லீடில் வரும் காதல் பார்வை பரிமாறல்கள்  அருமை 


3   சுந்தர பாண்டியன் , சுப்ரமணிய புரம் , காதல் படங்களின்  சாயல்  இருந்தாலும் கதைக்குத்தேவை  இருந்தும்  வன்முறையைத்தவிர்த்தது பிளஸ் , அதே  போல்  குடிக்கும் காட்சிகள் அதிகம்  இல்லாதது ஆறுதல்


4  டி இமான் -ன் இசையில்  2 பாடல்கள்  சூப்பர்  ஹிட் . லொக்கேஷன்  செலக்‌ஷன்  அபாரம் .  ரம்மி டைட்டில்  போடும்போது வரும்  தீம் மியூசிக்கை பதட்டமான  காட்சிகளில்  எல்லாம்  உபயோகப்படுத்துவது  பம்பாய் சாயல் என்றாலும்  ரசிக்க முடிகிறது



இயக்குநரிடம்   சில கேள்விகள்



1 படத்தின்  பெரிய மைனசே  இடைவேளைக்குப்பின்  வரும்  காட்சிகளை  சுலபமாக யூகிக்க முடிவதுதான் . பல படங்களில் பார்த்த திரைக்கதை தான் 


2   பெரியப்பா கார் பாதையில்  எதிரே வந்ததும் ஹீரோ மரத்தின்  பின் ஒளிகிறார் . கார்  தாண்டிப்போன அடுத்த விநாடியே  லூஸ்  போல்  இருவரும்  ஜோடி போட்டு கிராமத்தில் நடப்பாங்களா? கார் ரிவர்யூமிரரில்  பார்ப்பாங்கன்னு  தெரியாதா? 


3  படத்தின் முன் பாதியில் எல்லாக்காட்சிகளிலும்  நெற்றியில்    விபூதிப்பட்டையோடு வரும்  சூரி எக்சாம் ஹாலில் மட்டும்  வெறும் நெத்தியில்  வருவது ஏனோ? பொதுவா அந்த டைம் ல தானே நம்மாளுங்க பக்தி  முத்திப்போய்  இருப்பாங்க ? 


4  பொன்னமராவதி என்னும்  ஊர் புதுக்கோட்ட்டையில்  இருந்து  38  கிமீ தூரத்தில்  இருக்கு , மதுரையில்  இருந்து   60  கிமீ . புதுக்கோட்டை  டூ மதுரை 100  கிமீ . ஆனால் படத்தில் வரும் ஒரு வசனத்தில்  புதுக்கோட்டையில் கதை நடக்கையில்   “ உனக்காக மதுரைக்குப்பக்கத்துல இருக்கும் பொன் அமராவதி யில் வாழை மரத்து  ஜவுளி ஸ்டோரில் புடவை  வாங்கி வந்தேன் என   வருது . 


5  நாயகி நகை , பணத்துடன் வந்திருக்கா . தூர தேசம் அல்லது 500  கிமீ தள்ளிப்போகாம அருகிலேயே ஏதோ  ஊருக்குப்போய் மாட்டிக்கொள்வது ஏனோ ?



 நச் வசனங்கள்


1.  உன் பையன் 1200 க்கு 500 , எதிர் வீட்டுப்பையன்  500 க்கு 400 .

 எப்படிப்பார்த்தாலும் என் பையன்  தான் ஜாஸ்தி மார்க்   ( மாலை மலரில்  கன்னியப்பன் எழுதிய  ஜோக்  இது ) 


2  ஹாய்  . நீயும் பாண்ட்ஸ் பவுடர், நானும் பாண்ட்ஸ் பவுடர் . இது பத்தி என்ன நினைக்கிறே ? 


3  டேய் , இது க்ளாஸ்  ரூம் , இங்கே என்ன கரகாட்டமா நடக்குது ? முன்னால போய்  உக்கார ? 


4  தெரியாதாஆஆ? நெடில்  இல்லை . தெரியாது குறில் 

  என்னது ? லவ்வா?ஆஆ?   லவ்வா? நெடில்  இல்லை , லவ் குறில் 


5  கொஞ்சம்  மெதுவா  பேசுடா  மனசுல  பேசுவது  வெளில கேக்குது 


6   வீட்டுக்குள்ளே  யாருங்க  ? 


 யாரும் இல்லை , இங்கே  கிணத்துக்குள்ளே பாருங்க , விழுந்துட்டேன் 


7  இவன்  எல்லாம் நல்லா வருவான்  

 போற போக்கைப்பார்த்தா  புள்ளையோட தான் வருவான் போல 


8  நம்பி வந்த பொண்ணை  கூட்டிட்டுப்போகாம என்னடா செய்யச்சொல்றே ? அவன் நிலைமைல  யாரா இருந்தாலும்  இதாண்டா செஞ்சிருப்பாங்க 


9 கெட்டது தானா தேடி வந்துடுச்சு.நல்லதை நாமதான் தேடிப்போகனும் # ரம்மி


10 கடைசி வரை என்னை வெச்சுக்காப்பாத்துவீங்களா? 



அது முடியாது.


 என்னது ? அப்போ என்னை விடுங்க, நான் போறேன் 


ஆனா நான் இருக்கும் வரை காப்பாத்துவேன் # ரம்மி 


11 அடியேய்.நீ காலேஜ்ல மட்டும் தான் 3 வருசம்.நான் எட்டாவதுல,10 வதுல 12 வதுல 3 வது வருசம் படிச்சவன்.இப்ப சொல்லு.யார் சீனியர்? # ரம்மி



12 படத்துக்குப்போலாமா?

 அய்யோ.தனியாவா? 


ச்செ ச்சே 2 பேரும் சேர்ந்து தான் #1987 எ லவ் ஸ்டோரி @ ரம்மி 



13 அங்கே அவன் கிட்டே என்ன பேச்சு?


 கூடை விழுந்துடுச்சுக்கா.


 கூடவே நீயும் விழுந்துடாதே # ரம்மி ரொமான்ஸ்


14  எங்க வீட்டுல எங்க பாட்டி வடை சுட்டாங்க. அவங்களுக்கு தெரியாம எடுத்துட்டு வந்துட்டேன்"



"அப்ப அது நீ சுட்ட வடைன்னு சொல்லு" #ரம்மி


15  வர்றான் பாரு படிக்குற புள்ள

,
எப்படி சொல்ற,


அதான் கண்ணாடி போட்டிருக்கான்ல

16 நண்பன மதிக்குற நண்பனுக்கு நண்பனா இருக்கிறது பெருமை


 
 படம் பார்க்கும்போது போட்ட  ட்வீட்ஸ் 


1 கிராமத்துப்பின்னணியில் 1987 ல் நடக்கும் 2 ஜோடி காதல் கதை.இடை வேளை வரை நார்மல் # ரம்மி



2 கூடை மேல கூடை வெச்சு கூரை மேல போறவளே # இமான் ன் மெலோடி



3   புதுக்கோட்டை மாவட்டம் வட காடு # லொக்கேஷன் செலக்சன் குட்


4 இப்பவெல்லாம் ஹீரோவை விட காமெடியனுக்குத்தான் ஓப்பனிங் அப்ளாஸ் # புரோட்டா சூரி


5  சாதாரணமான ,இயல்பான ஓப்பனிங் டூ அசாதாரணமான விஜய் சேதுபதி


6  விஜய் சேதுபதிக்கு இத்தனை ரசிகைகளா? ஒரே காலேஜ் கேர்ள்ஸ் கூட்டமா இருக்கே? # ஈரோடு அபிராமி ரம்மி

 


சி பி கமெண்ட் - ரம்மி - எம் சசிகுமார் பார்முலாவில் வில்லேஜ் லவ் த்ரில்லர் - பி சி  செண்ட்டர்களில்  மீடியமா  ஹிட் ஆகிடும்


எதிர்பார்க்கும் ஆனந்த  விகடன் மார்க் = 43 ,


 குமுதம் ரேட்டிங்க் = ஓக்கே 


ரேட்டிங் 3 / 5