Friday, January 10, 2014

வீரம் - சினிமா விமர்சனம்


ஒட்டன்சத்திரம் - இந்த ஊர் ல  ஹீரோ தன் தம்பிங்க 4 பேர் கூட கட்டை பிரம்மச்சாரியா வாழ்றாரு.மேரேஜ் பண்ணிக்கிட்டா வர்ற மனைவி குடும்பத்தைப்பிரிச்சுடுவா என்பதால் அவர் மேரேஜே பண்ணிக்கலை. ஆனா தம்பிங்க 4 பேரும் ஆளுக்கு ஒரு பிகரை  தனித்தனியா லவ் பண்றாங்க .இப்டியே  அண்ணனை விட்டா  அவர்  நம்ம எல்லாரையும்  பிரம்மச்சாரியாவே ஆக்கிடுவார் என்பதால் அவருக்கு  ஒரு ஃபிகரை கோர்த்து விடலாம்னு சந்தானம்  கூட சேர்ந்து  ஐடியா பண்றாங்க. இவங்க பண்ற கலாட்டாக்கள் , கோர்த்து விடல்கள் என இடைவேளை வரை படம்  ஜாலியாப்போகுது .


இவர் ஊருக்கே  எஜமான் மாதிரி , அடிதடி ரகளைன்னு வாழ்ந்தவர் . இவருக்கு ஜோடி சேர்ந்த பொண்ணு அமைதியான டைப்.அவங்கப்பாவும்  அமைதியை விரும்பும் ஆள். அவங்க ஊருக்கு ஹீரோ  நல்லவர் மாதிரி அமைதியாப்போறாரு.போகும்போது  ரயில் ல  ரவுடிகள்  தாக்க வரும்;போது ஹீரோ  செம ஃபைட் போடறதைப்பார்த்து அந்தம்மா ஆடிப்போகுது. ஆம் ஆத்மி கட்சி செல்வாக்கைப்பார்த்து  ஷீலா தீட்சித் மாதிரி .இடைவெளை.


அதுக்குப்பின்  ஹீரோ அவங்க கிராமத்தில் போய் தங்கி நல்ல பேர் எடுக்கறாரு. ஹீரோயின் குடும்பத்துக்கு வேற ஒரு பகை வருது.அவங்க கிட்டே  இருந்து அவங்களைக்காப்பாத்தி எப்டி  கரை சேர்க்கிறார்? என்பதே  மிச்ச மீதிக்கதை 


ஆரம்பம் அதிரடிப்படம்  கொடுத்து அடுத்த 70 வது நாளில்  ஒரு  வில்லேஜ் சப்ஜெக்ட் செய்ய துணிச்சல் வேணும். ஏன்னா நம்ம  கோடம்பாக்கம் செண்ட்டிமெண்ட் செம்மல்கள்  ஒரு ஹீரோ  படம்  ஹிட் ஆகிட்டா அதே பாணில 25 படம் வரிசையா கொடுக்க நிர்ப்பந்திப்பாங்க . அந்த பாணியில் இருந்து  விலகி அஜித் இதில்  விநாயகம் கேரக்டரில்  நடிச்சுப்பட்டையைக்கிளப்பி இருக்கார் . 


இவர் வசனம் பேசும் காட்சிகளில்  பொறுத்து, நிறுத்தி நிதானமாப்பேசுவதும் , அடிக்குரலில் செந்தூரப்பூவே  கேப்டன் போல் கனத்த குரலில் பேசுவதும் அஜித்க்குப்புதுசு. நல்லாப்பண்ணி  இருக்கார். 

என்ன தான் மைசூர்பாக் ஸ்வீட்டா இருந்தாலும் தொடர்ந்து  3 சாப்பிட நேரும்போது  கொஞ்சம் மிக்சர் சாப்ட்டுட்டு அடுத்த ஸ்வீட்டை சாப்ட்டா தித்திப்பு திகட்டாது, அது மாதிரி அஜித்க்கு சால்ட்& பெப்பர்  லுக் மங்காத்தா , ஆரம்பம் 2ல் நல்லா எடுபட்டுச்சு என்பதற்காக  தொடர்ந்து ஒரே மாதிரி ஸ்டைலில் செய்தால் போர் அடிச்சுடும் , ஒரு படம் அப்படி , அடுத்த படம் இப்படி என மாத்தனும் .


டூயட் காட்சிகளில்  நெளிய வைக்கிறார். வேட்டி போட்டு கோட் போட்டு வரும் காட்சியைத்தவிர்த்து இருக்கலாம். அதே போல் பாடல்களுக்கான நடன அசைவுகளும் டூயட்களில் எடுபடவில்லை. தனிக்குத்தாட்டப்பாட்டு  ஓக்கே . 


சந்தானம்  இதிலும்  கோல் அடிச்சிருக்கார், வழக்கமா அவர் எந்தபப்டத்தில் வந்தாலும்  ஹீரோவை நேருக்கு நேர் கலாய்ப்பவர் இதில் பம்மி  இருப்பது ஏனோ? அவர் அடிக்கும்  ஒன் லைனர்கள் பரவாயில்லை. வழக்கம் போல் பழைய ஜோக்ஸ்களை உல்டா செய்வதும் இதில்  தொடருது. அவர் வரும் காட்சிகள் எல்லாம் கல கல .


 இடைவேளைக்குப்பின் தம்பி ராமையா காமெடி பேலன்ஸ் செய்யுது, 

தமனா தான்  ஹீரோயின் . பெரிய வாய்ப்பு தான், ஆனாலும் அதிக திறமை காட்ட வாய்ப்பில்லை என்ப்தால்  முடிந்த வரை  கண்ணீயமாக கிளாமர் காட்டி இருக்கார் (கிளாமரில் என்னய்யா கண்ணியமான கிளாமர், கண்ணியம் இல்லா கிளாமர் ? ) 


விதார்த் உட்பட்ட 4 தம்பிகள் நடிப்பும் ஓக்கே . கஜினி வில்லன் தான் இதிலும் வில்லன், பெரிசா எதுவும் செய்யலை. நாசர் நடிப்பு கன கச்சிதம் . 


இடைவேளைக்குப்பின் வரும் திரைக்கதை தடுமாறுது. எப்படி  சுவராஸ்யமாய்க்கொண்டு போவது என  தெரியாமல்  காமெடிக்காட்சிகளை வெச்சு  ஒப்பேத்தி  இருக்காங்க . 



சபாஷ் சத்யா 


1. படத்தில்  அஜித் வரும் காட்சிகளில் வரும் தீம் மியூசிக் வழக்கம் போல் கெத்து. மழையில்  குடையுடன்  வரும்  மாஸ்  சீன் , ரயில்  ஃபைட்டுக்கான ஓப்பனிங்க் பில்டப் , க்ளைமாக்ஸ் பஞ்ச் வசனங்கள் எல்லாம் அருமை 



2. ஹீரோ அண்ட்  கோ அமைதியான குடும்பம் என அறிமுகப்படுத்தி எல்லோரும் சாப்பிட உட்காரும்போது செல் ஃபோன்  ரிங்க் டோனாக “அட்ரா அட்ரா நாக்கு முக்க “ பாட்டு ஒலிப்பதும் நாசர்   திகைப்பதும்  செம காமெடி 



3. ஹீரோ , ஹீரோயின் இருவரின்  ஓப்பனிங்க் காட்சிகளில் சமாதானப்புறா பறக்க விடுவது , ஒரு காட்சியில்   நிர்மூல வானத்தின் பின்னணியில் கழுகு ஒன்று மேலே பறக்க அஜித்க்கு  கிரவுண்ட்   ஷாட் ஆங்கிளில்  பில்டப்  கொடுப்பது எல்லாம் அக்மார்க்  அஜித் ஸ்டைல் பிராண்ட்.விநாயகம்  என்ற பெயரில்  தீப ஒளிவிளக்கு வரிசை வருவது  வீரா படத்தில் மலைக்கோவில் வாசலில் கார்த்திகை தீபம் மின்னுதே பாட்டின் ஓப்பனிங்க் லீடில்  இருந்து  உருவப்பட்டிருந்தாலும்  நேர்த்தியான காட்சி 


4.  ஃபேமிலி ஆடியன்சை கவரும் வகையில் இடைவேளை வரை கலகலப்பாக நகரும்  குடும்பக்கதை படத்துக்கு பெரிய பிளஸ். ஆல் செண்ட்டர் ரசிகர்களும் ரசிக்கும்படி முன் பாதி அமைஞ்சிருக்கு 


சொதப்பல் சொப்னா 


1. பெட்ரோல் பங்க்கில் மோதி கார் வெடிக்கும் காட்சி  மிக மோசமான கம்ப்யூட்டர்  கிராஃபிக்ஸ் ஒர்க் . இன்னும் மெனக்கெட்டு  இருக்கலாம் . 


2. பின் பாதியில்  வரும் காட்சிகள்  சோர்வைத்தருது. என்ன நடக்கப்போகுது என்பதை எளிதில்  யூகிக்க முடியுது . அஜித் மாதிரி  ஒரு மாஸ்  ஹீரோவை பின் பாதியில்  ரொம்ப அடக்கி வாசிக்க வைத்தது  இரிட்டேட்டிங்க்.


3.அஜித்க்கு பாடல் காட்சிகளில்   அணிவித்த  கூலிங்க் கிளாஸ் ஃபிரேம்  மேட்ச் ஆகலை . ரேபான் மெல்லிய ஃபிரேம் தான் செம கெத்து 


4. எஜமான் , சின்னக்கவுண்டர் படங்களில்  வில்லன்கள் ஏதாவது பெரிய சதி வேலைகள் செய்வாங்க, அதை  ஹீரோ முறியடிப்பார். இதில் அது மாதிரி  சுவராஸ்ய   முடிச்சுகள்  இல்லை 


நச் டயலாக்ஸ் 


சந்தானம்


1.  இங்கே பாருங்க வக்கீல் சார்.....

 அங்கே எல்லாம் பார்க்க  முடியாதுங்க , யூ புரொசீட்



2.  மழை வர்றதுக்கு முன்னே காய வெச்சிருக்கும் துணிகளை எடுத்துவிடுவது மாதிரி , மூஞ்சில அடிக்கும்  முன்  முன் ஜாமீன் எடுத்து வெச்சுடுவோம் 


3.  ஆடு அரிவாளை வாய்ல கவ்விட்டு வந்து  என்னை வெட்டு வெட்டுங்குது 


4.  சாரி அக்கா , என்னை மறந்துடு


 என்னது ? அக்காவா?

 பின்னே, பொண்ணுங்க மட்டும் தன்னைக்காதலிச்சப்பையனை கழட்டி விடும்போது அண்ணன், தம்பி அப்டினு சொல்ற மாதிரி பசங்க ஏன் காதலியை கழட்டி விட அக்கா, தங்கைன்னு அள்ளி  விடக்கூடாது? 



5.  நாங்க போறோம்.

 ஏன்? பம்பு செட்ல போய் இரண்டு பேரும் மீதிக்குளியலைப்போடறதுக்கா? 



6.  ரொம்ப நேரமா உன் மூஞ்சியைப்பார்த்துட்டு  இருக்க முடியலை, சீக்கிரம் சொல்லு உன் ஃபிளாஸ்பேக்கை 




7. பைலைப்போடுங்கடா கீழே 


 போலீசைப்போட வேணாமா?

 அட, கலவரத்துக்குப்பிறந்தவங்களா!


8. வாசக்கதவைச்சாத்திட்டியா?

லேடி - ம் 


கொல்லைக்கதவை?

 ம்

 ஜன்னல் கதவை?

 பீரோக்கதவைக்கூட சாத்தியாச்சு , வாங்க 


9. நான்  சொன்னபடி செய்யலை, இன்னைக்கு ராத்திரி நீ திராட்சை சாப்பிட முடியாது  ( டபுள் மீனிங்க் )



10 உன்னை அசிங்கப்படுத்தறதுல ஒரு அரசாணையே வெளியிடலாம் போல 


11 முதன் முதலா எங்கண்ண,ன் கண்ணாடியைப்பார்க்கறாரு 

 அப்போ இத்தனை நாளா செங்கல்லைப்பார்த்தா ஷேவிங்க் செஞ்சாரு ? 


12  டேய், கடைசி வரை நீங்க அண்ணி கையால சாப்பிடவே மாட்டீங்க , இந்தப்பன்னி கையால தான் சாப்பிடுவீங்க 



13  ஏண்டா, தம்பிங்க எனும் போர்வைல நீங்க எல்லாம் மாமா வேலை தானே பார்த்துட்டு இருந்திருக்கீங்க ?


14   வண்டியைத்தள்ளி ஸ்டார்ட் பண்ணத்தேவை இல்லை போல, தானா ஸ்டார்ட் ஆகிடும் போல ( டபுள் மீனிங்க் ) 


15  அதெப்பிடிடா இஞ்செக்சன் போட்டுக்கற குழந்தை மாதிரியே மூஞ்சியை வெச்சுக்கிட்டு இதெல்லாம் பண்ண முடியுது ? 
டேய்  பிசையறதை  நிறுத்துடா , கண்  கொண்டு பார்க்க முடியலை 


16  பீடி ஊதற வாயை வெச்சு பீ பீ ஊத வெச்சுடுவான் போல  இருக்கே?


17   ஆடத்தெரியாத  சிலுக்கு  கால்லசுளுக்குன்னாளாம்


18.  பறவை மேல இவ்ளவ் பாசத்தைக்காட்ட காரணம் ?


 டேஸ்ட் தான் 


19  ஐ  கோழி 

 பின்னே வீராட் கோலின்னா சொன்னேன்?


20   நீங்க ஒரு நல்ல குடும்பப்பொறுக்கின்னு பாப்பா சொல்லுது 


21  வீட்ல விளக்கேத்தலை ?

 லாரி டிரைவர் பின்னால போய் இருக்கார் ,வந்ததும் எல்லா விளக்கையும் ஏத்திடுவார் 


22  தமனா - விளக்கேத்த  ஹெல்ப் பண்ணுங்களேன் 


அஜித் - டியூப் லைட் போட்டுக்குங்க , நல்ல வெளிச்சம்  கிடைக்கும் 


23 , அவங்க என்ன குழம்பா ஊத்தறாங்க? போதும் போதும்னு சொல்ல? பர்ஃபார்மென்ஸ் பண்ண விடுங்கடா 


24  மாலை போடச்சொல்லிக்குடுத்தாங்களே, ஜட்டி போடச்சொல்லிக்குடுத்தாங்களா?


25   எங்கண்ணன்  கெஞ்ச ஆரம்பிச்சார்னா அனக்கோண்டாவே அழும் 


26  அவரைக்குத்து மதிப்பா எடைப்போட்டுடாதீங்க . குத்து - மதிப்பா எடை போடுங்க  


27 அந்தக்காலத்துலயே எங்கப்பா தினமும் 1000பேருக்கு சோறு போட்டவரு. சந்தானம் - ஏன்? உங்கப்பா ஹோட்டல்ல சர்வரா இருந்தவரா? # ஜோக் உ ராஜாஜி @ சாவி

28 எல்லாரும் மூட்டையைக்கட்டுங்க. சந்தானம் - ஏன் ? துணி துவைக்கப்போறியா?

29 சந்தானம் - நைன்ட்டி ( கட்டிங்) அடிச்ச ஆன்ட்டியைக்கூட நம்புவாங்க.நைட்டி போட்ட உன்னை மாதிரி ஆம்பளையை நம்ப மாட்டாங்க

30 தலைகால் புரியாம ஆடிட்டேன்.இப்போ தான் தல எது ? வால் எது?னு தெரியுது # வில்லன்


அஜித் பஞ்ச்

சந்தோஷம் வந்தா நாலு பேரோட பகிர்ந்துக்கனும்.கஷ்டம் வந்தா தான் மட்டும் அனுபவிக்கனும்.அவன் தான் மனுசன்

2 இது என் குடும்பம்.இவங்களை அடிக்கனும்னா என்னைத்தாண்டி தாஆஆண்டி த்தொட்றா பாக்கலாம்

3 சுடுகாட்டுக்கு எப்டிப்போகனும்னு கேட்டாங்க.நான் வழி சொன்னேன்.இந்நேரம்் போய்ச்சேர்ந்திருப்பாங்க

4 நீ கண்ணை மூடி 8 வரைக்கும் எண்ணு அதுக்குள் அங்க்கிள்் எல்லாரும் ஒளிஞ்சுக்குவாங்க

நம்ம கூட இருக்கறவங்களை நாம பாத்துக்கிட்டா நமக்கு மேல இருப்பவன் நம்மைப்பாத்துக்குவான் # 2014 ன் முக்கிய வசனம்

பொண்ணு னு ஒருத்தி நம்ம வாழ்க்கைல வந்துட்டா அவளுக்காக நாம் மாற வேண்டி இருக்கும்.ஏன் இந்த கஷ்டம்? நாம் நாமாவே இருப்போம்

7 நான் ம் னு சொன்னா 4 பேரும் உன்னை உழுதுடுவாங்க

8 எதிரியா இருந்தாலும் அவன் நெஞ்சுல குத்தனும்டா

9 4 பேர் தான் இருக்கீங்க. 5 பேர் னு சொல்றே.யார் அந்த அஞ்சாவது ஆள் ? 
யாருக்கும் அஞ்சாத ஆள் !

10 நீ எந்த ஜாதின்னு நினைக்கறயோ அந்த ஜாதி. உழைக்கிற ஜாதி

11 இனி விதைச்ச விவசாயி தான் ரேட்டை நிர்ணயம் செய்வான்

12 சாப்பாடு போட்டு அதுக்கப்புறம் ஏன் வெளுத்து வாங்கறீங்க? ஏன்னா அடி வாங்க உடம்பு ல தெம்பு இருக்கனும் இல்ல




படம் பார்க்கும்போது போட்ட ட்வீட்ஸ் 


1. வீரம் ,ஜில்லா 2 ம் சரி விகிதத்தில் + - இருப்பதால் 2 ம் ஒரே ரேட்டிங்கில் .மக்கள் தீர்ப்புக்காக ஐ ஆம் வெய்ட்டிங்.என்ன நான் சொல்றது?

2 அஜித் அடிக்குரலில் வசனம் பேசும் ஸ்டைல் செந்தூரப்பூவே வில் கேப்டன் பேசுவது போல். குட்

3 ரசிகர்கள் அல்லாத பொது ஜனங்களைக்கவர்வதில் ஜில்லாவை விட வீரம் முன்னிலை # இடை வேளை வரை

4 வீரம் இடைவேளை வரை சந்தானம் காமெடி ,அஜித் ஷார்ப் டயலாக் டெலிவரி னு ஜாலியாப்போகுது.பேமிலி ஆடியன்சை அதிகம் வர வைக்கும் கதை சம்பவங்கள்+

இண்ட்டர்வெல் பிளாக்கில் வரும் ரயில் பைட்டுக்கான ஓப்பனிங் பில்டப் தீனா பட காபி ஷாப் பைட்க்கு இணையான சீன்

6 தமனாவை குட்டைப்பாவாடையில் பாடல் காட்சியில் பார்த்ததும் GOOD டைப்பாவாடை என தோணுது

7 பைக் ஓட்டும்போதும் கை தட்னாங்க.மாட்டு வண்டி ஓட்னாலும் தட்றாங்க

8 அஜித் தமனா ஜோடிப்பொருத்தம் சுமார் தான் னு சொல்றவங்க தயிர் சாதம் VS லெமன் பிக்கிள் காம்பினேசனை கிண்டல் பண்ற மாதிரி # லெமனா வந்த தமனா

9 இனி ஏறுமுகம் தான் என்பதை சிம்பாலிக்கா சொல்வது மாதிரி தமனாவுக்கு ஓப்பனிங் ஷாட் கிரேன் ஷாட்

10 இன்னொரு டெண்டர் இருக்கு டயலாக் முடிந்ததும் கொட்டும் மழையில் குடையுடன் அஜித் வரும் காட்சி மாஸ் சீன்

11 ஒட்டன் சத்திரம் வெற்றிச்சித்திரம்

12 அஜித்தின் ஓப்பனிங் சீன் எஜமான் ரஜினி மாதிரி .சமாதானப்புறாக்கள் பின்னணி ல வருதே அது ல ஏதாவது குறியீடு இருக்குமோ?

13 விஜயா புரொடக்சன் டைட்டில் ஐடியா சூப்பர்.எம் ஜிஆர் ,ரஜினி வரிசையில் அஜித்



சி பி கமெண்ட்ஸ் 

வீரம் - பேமிலி ஆடியன்சைக்கவர்ந்திழுக்கும் முன் பாதி , யூகிக்க வைக்கும் திருப்பங்கள் இல்லாத பின் பாதி - 


விகடன்மார்க் =43


குமுதம் ரேங்க்கிங்க் - ஓக்கே


,ரேட்டிங் =3.25 / 5

ரஜினிக்கு ஒரு எஜமான்.கேப்டனுக்கு ஒரு சின்னக்கவுண்டர் .அஜித்துக்கு ஒரு வீரம்

திருப்பூர் டைமண்ட் தியேட்டர் . வீரம் . மதியம் 1 மணி ஷோ .திருப்பூர் ஆகாய மனிதன் யுவராஜ் உடன் பார்த்தேன்


டிஸ்கி: ஜில்லா-சினிமா விமர்சனம் http://www.adrasaka.com/2014/01/blog-post_10.html 

ஜில்லா - சினிமா விமர்சனம்

ஊருக்கே  தாதா  மோகன் லால்.அவரோட  டிரைவரோட பையன் தான் விஜய்.சின்ன வயசுல  நடந்த  ஒரு ரகளைல மோகன் லால் மனைவியின்  உயிருக்கு வந்த ஆபத்தில்  இருந்து விஜய் காப்பாத்துவதால் அவரைத்தன் வளர்ப்பு மகனாவே மோகன் லால் வளர்க்கிறார். விஜய்யோட  நிஜ அப்பா ஒரு போலீஸ் ஆஃபீசர் கையால  சாவதால் விஜய்க்கு சின்ன வயசுல  இருந்தே போலீஸ்னாலே வெறுப்பு .


காஜில் அகர்வால்  போலீஸ் ஆஃபீசர் ( யாரும் சிரிக்கப்படாது,இந்தக்கதைல எல்லாரும் போலீஸ் தான் , ஹீரோ , ஹீரோயின்,காமெடியன்).ஹீரோயின் போலீஸ் -னு தெரியாம ஹீரோ பொண்ணுப்பார்க்கப்போறார்.போலீஸ்னு தெரிஞ்சதும் ஜகா வாங்கறார். அதை வெச்சுக்கொஞ்சம் காமெடி , கலாட்டான்னு படம் ஜாலியாத்தான் போகுது. 

மோகன் லாலுக்கு  போலீஸ்னாலே ஒரு  சிக்கல் வருது. அப்போதான் அவர் முடிவெடுக்கறாரு, நாம ஆபத்தில்லாம தொழில் பண்ணனும்னா நம்மாளு ஒருத்தன் போலீஸ் ஆஃபீசரா  இருக்கனும்னு. விஜய்  அசிஸ்டெண்ட் கமிஷனரா ஆகிடறார். 


ராமர் அவதாரம் எடுத்த ராவணன்  சீதையைத்தொடப்போனப்ப ராமர் நல்ல மனசும் வந்துட்டதால  டச்சிங் டச்சிங்க் பண்ணாமயே வீணாப்போன மாதிரி ஹீரோ போலீஸ் ஆனதும் மனசு மாறிடறார்.

விஜய்க்கும் ,மோகன் லாலுக்கும் முட்டிக்குது.இடைவேளை.


அதுக்குப்பின் என்ன நடக்குது? தங்கச்சி செண்ட்டிமெண்ட் , அம்மா  செண்ட்டிமெண்ட் ( நம்ம அம்மா இல்ல , நிஜ அம்மா ) ,தம்பி செண்ட்டிமெண்ட் எல்லாத்தையும் கசக்குப்பிழிஞ்சு ( ஃபேமிலி ஆடியன்ஸ் வேணுமே? ) படத்தை முடிக்கறாங்க .


எது எப்படியோ தலைவா தோல்வியால் துவண்டு போன விஜய்க்கு இது  பூஸ்ட் அப் குடுக்கும் படம்  தான்.

மோகன் லாலின் கம்பீரமான நடிப்பு , கணீர்க்குரல் அவருக்கு பெரிய பிளஸ்.பல காட்சிகளில் அநாயசமான நடிப்பு .விஜய் , மோகன் லால் காம்போ காட்சிகளில்  மோகன் லாலுக்கு நல்ல முக்கியத்துவம் கொடுக்கப்பட்டிருக்கு .


விஜய் இந்தப்படத்தில்  ரொம்ப இளமையா , அழகா , புதுப்புது மேனரிசத்தோட ,வசன உச்சரிப்பில்   சில மாற்றங்களோட வர்றார். தேவை இல்லாத பஞ்ச் டயலாக்ஸ் எதுவும் பேசாம கனகச்சிதமான நடிப்பு . 

போக்கிரி படத்தில் போலீஸாக வந்தாலும் யூனிஃபார்மில்   அவரை அதிக நேரம் பார்க்க முடியாத ரசிகர்களுக்கு இதில் பாயாசத்துடன் விருந்து . போலீஸ்  யூனிஃபார்மில் கலக்கிட்டார். 

பாடல் காட்சிகளில் வழக்கமான விஜய் துள்ளாட்டம் போட்டிருக்கிறார். காவலன் படத்தில் அசினின் பின்னால பதம் பார்த்தவர் இதில் காஜல் பின்னாடி போய் பின்னால  பரோட்டா  பண்றார். இனி விஜய் ரசிகர்கள் காதலிகளிடம் இதைச்சொல்லியே பரோட்டா ஆர்டர் செய்வாங்கனு எதிர்பார்க்கலாம். 


காஜல் அகர்வால்  படம்  முழுக்க   4 ரீல் கூட வர்லை. க்ளைமாக்ஸ் காட்சியில் மட்டும் தான் குங்கும நெற்றியுடன் வர்றார்.மற்ற காட்சிகளில் எல்லாம் சாதா நெத்திதான். முந்திரி இல்லா கேசரி மாதிரி இருக்கு.அவருக்கு மேக்கப் விமன் யார்னு பார்த்து  பாதி சம்பளம் கட் பண்ணனும் , லிப்ஸ்டிக் எடுபடாத கலரில். அவர் இயல்பான இதழே கனகாம்பரக்கலர் தானே? எதுக்கு வானவில்லுக்கு வல்லியனா ஒரு மேக்கப் ? இயக்குநரும், ஒளிப்பதிவாளரும் ரொம்ப நல்ல கேரக்டர் போல , கிளாமர் காட்சிகளில்  அடக்கி வாசிக்க வைத்திருக்கிறார்கள்.வரும் காலத்தில் இந்த மாதிரி நல்லவர்கள் கூட எல்லாம் கூட்டணி வைக்க வேணாம் என விஜயைக்கேட்டுக்கொள்கிறேன்.

புரோட்டா  சூரி அப்பப்ப மொக்கை போட்டாலும் 4 இடங்களில்  சிரிக்க முடியுது. 


முன் பாதி  திரைக்கதையில்  இருந்த வேகம்  பின் பாதியில்  இல்லை . கடைசி 30 நிமிடங்கள்  இழுவை . மொத்த படம்  3 மணி நேரம் என்பதால்  ரசிகர்கள்  பொறுமை காக்க வேண்டி  இருக்கு. எடிட்டிங்கில் இன்னும்  ட்ரிம் பண்ணி  இருக்கலாம். 

விஜய்  ஒரு பாட்டு பாடி  இருக்கார். நல்ல வாய்ஸ் . குத்தாட்டத்தை  விட மெலோடியை அதிகம் நம்பிய இமானுக்கு  ஒரு ஷொட்டு . 

படம்  முழுக்க ஆங்காங்கே வரும்  ஜில்லா ஜில்லா தீம் இசை  ரசிகர்களிடையே பலத்த ஆரவாரம் பெறுகிறது 
திருப்பூர்  சிவன் தியேட்டர் ஹவுஸ் ஃபுல் ,டிக்கெட்  ரேட் 200  ரூபா

சபாஷ்  சத்யா 


1. கண்டாங்கி சேலை பாட்டில் மூங்கில்  தோட்ட லொக்கேஷன் , பின் புலத்தில் கேரள கத களி ஆட்டக்காரர்கள் கண்ணுக்கு விருந்து 



2  கேரள மார்க்கெட்டுக்காக மோகன் லாலுக்குத்தரப்பட்ட முக்கியத்துவம் , அவரின் பிரமாதமான பர்ஃபார்மென்ஸ் அப்ளாஸ் அள்ளுது

3 தாதா கதை என்றாலும்  வன்முறைக்காட்சிகள் எதையும் காட்டாமல்   ஃபேமிலி செண்ட்டிமெண்ட்ஸ் காட்சிகளால் திரைக்கதை அமைத்த சாமார்த்தியம் 


4.  இமானின் இசை , பின்னணி இசை , ஒளிப்பதிவு , ஆர்ட் டைரக் சன்  எல்லாமே   ஒரு கமர்ஷியல் மசாலாப்படத்துக்கு என்ன தேவையோ அதை  நிறைவேற்றிய விதம் 



சொதப்பல் சொப்னா 



1. விஜய் அப்பாவுக்கு என்ன தான் செல்வாக்கு  இருந்தாலும்  இன்ஸ்பெக்டர் போஸ்ட் வாங்காமல் டைரக்டா  அசிஸ்டெண்ட் கமிஷனர் போஸ்ட்டே வாங்கித்தருவது ஓவர்னா   அவர் வாழும் அதே  ஏரியாவிலேயே போஸ்ட் வாங்குவது சாத்தியமே  இல்லை. போலீஸ்  முத  ரூல்ஸே அவங்க பிறந்த  ஊர், வாழும்  ஊரில் பதவி வகிக்கக்கூடாது என்பது தானே? 


2. போலீஸ்  மீட்டிங்க் நடக்கும்போது  வராண்டாவில்  எல்லாரும்  நிக்கறாங்க.  ஏ சி சார்க்கு  ஒரு சேர்  கூடவா கிடைக்கலை? ஏன் ஜீப் மேல ஏறி  நின்னு  “ அன்பார்ந்த வாக்காளப்பருமக்களே “ரேஞ்சுக்கு காமெடி பண்றார்? 


3. போலீஸ் கமிஷனர்  ஐயப்ப சாமி  தாடி வைக்கலாம், ஆனா ஸ்டைலிஸ் பிரெஞ்ச்  தாடியுமா? 


4. காஜல் சேறில் விழுந்து எழுந்து நடக்கும்போது பின்னால் விஜய் ஃபாலோ பண்ணும்போது “அழகே பிரம்மனிடம் மனுக்குடுக்க போய் இருந்தேன் “பாடல் பல்லவி  இசை  பி ஜி எம்மா வருதே ஏன்? 


5. வாசல்ல நிறுத்தி வெச்ச பைக்கை  மோகன் லால் தள்ளி விடும்போது பெட்ரோல் டேங்க்  மூடி ஓப்பன் ஆகி  பெட்ரோல் கொட்டுதே எப்படி? அதை லாக் பண்ணித்தானே சாவியை எடுக்க முடியும் ? சாவி இல்லாம எப்படி  ஓபன் ஆச்சு? 

6. விஜய்  தன் தம்பியை  ஒரு ரூமிலடைத்து  வெளியே போகும்போது வில்லனைப்பத்தி  ஒரு எச்சரிக்கை ஏன் செய்யலை ? செஞ்சிருந்தா அவர்  தப்பி  ஓடி வில்லன்  கிட்டே மாட்டி  இருப்பாரா? 


7. மரணத்தின்  விளிம்பில்  இருக்கும் தம்பி “ஹாஸ்பிடலுக்குப்போகாதே , அப்பா கிட்டே கூட்டிட்டுப்போ , என்னைக்கொன்னது யார்னு சொல்றென்”னு சொல்வது ஏன்? செல் ஃபோன் எதுக்கு இருக்கு?ஹாஸ்பிடல் போய்ட்டே  ஃபோன்ல சொல்லலாம், எஸ் எம் எஸ் ;பண்ணலாம் . 


8. சூரி  எதுக்காக  தம்பி அடைக்கப்பட்ட  ரூமுக்கு  உள்ளே கதவைத்திறந்து போறார்? அது தேவையே  இல்லையே?

தாரை தப்பட்டை  முழங்க  ரசிகர்களின்  வெற்றிக்கொண்டாட்டம்


நச் வசனங்கள்

1எதிரிய எதிர்ல வெச்சுக்கலாம் . ஆனா துரோகிய தூரத்துலக்கூட வெச்சுக்கக்கூடாது.... # பன்ச்


2  போலீஸடிச்சுப் பாத்திருப்ப - போலீஸையே அடிச்சுப் பாத்துருப்ப? # அதான் காஜல் ..!


3ஆஸ்பத்திரிக்கு வந்தா ஒன்னு குணமாகிப்போகனும், இல்ல பொணமாகிப்போகனும் ....!!


4. அழிக்குறவந்தாண்டா சிவன் - இந்த சிவன அழிக்குற சக்தி எவனுக்குமில்லை ... # மோகன்லால் பஞ்ச் # ஜில்லா


5 தீயிலயும் , பகையிலயும்  மிச்சம் வைக்ககூடாது 


6.சிவனையும் , பாக்க மாட்டேன், எவனையும் பாக்க மாட்டேன், தூக்கிட்டுப்போய்ட்டே  இருப்பேன் 

 உன் பின்னால 1000 பேர்  இருக்கலாம், என் பின்னால ஒரே ஒரு ஆள் இருக்கான் 


7. ஏம்மா  , இவன்  காக்கி கலர் ல கவர் வந்தாலே  பிரிச்சு மேஞ்சுடுவான், நீ காக்கியையே கவர் பண்ணிட்டு வந்திருக்கியே 


8  சார், உங்க பொண்ணோட  2......

 வாட்?


 2 கண்ணைப்பார்க்கும்போது......


டேய், அது பொண்ணோட அப்பாடா.. 


9. பொண்ணோட  வண்டிச்சத்தம் இங்கே கேட்குது


 வண்டிச்சத்தத்தை வெச்சே இத்தனை கணிக்கறானே......


10  அவளை  டிரஸ்  இல்லாம பார்த்துட்டேன் 

 பார்த்துட்டியா? 

 ஐ மீன்  யூனிஃபார்ம்  டிரஸ்  இல்லாம 

11  வண்டியை  விட்டு  இறங்கு எவ்ளவ்  பெரிய ஆளா  இருந்தாலும் இறக்கிடுவேன் , அதான் போலீஸ் 



12  திருடன்  போலீஸ்  விளையாட்டுல  திருடனும் நாமளாத்தான்  இருக்கனும், போலீசும் நாமாத்தான்  இருக்கனும் 


13  போலீஸ்  கிரிமினலா  யோசிச்சு தன் புத்தியைக்காட்டிடுச்சு, கிரிமினல் போலீஸ் ஆகி நம்ம புத்தியைக்காட்ட வேணாம் ? 


14 தொப்பி போட்ட போலீசை விட தொப்பை போட்ட போலீஸ்  தான் அதிகம் 


15 சரி, நான் இப்போ மேட்டருக்கு வர்றேன் 

 அதான்  முடிச்சிட்டியே ? 

16  விஜய்  டூ காஜல் = அப்போ  நீ என் பின்னால கை வெச்சியே, அது உன் டர்ன், இது என்  டர்ன்  ( டர்னிங்க் பாயிண்ட்டாம் ) 




17   நான்  சொன்னது எல்லாம் உண்மை  தான், ஆனா தாத்தாவை மட்டும் தத்து எடுத்துக்கிட்டேன் 


18  தப்பைத்தடுக்கனும்னு  எப்ப  நீ நினைச்சியோ அப்பவே நீ போலீஸ் 


ஆகிட்டே 


19  சீன்  முடியறதுக்குள்ளே  சீன் போடக்கூடாது 


20  போலீஸ் காப் ? வளைகாப்பே நடத்திடுவான் போல 



21  கட்டைல தானே அடிப்பான்னு சொன்னே ? இப்போ   கொ.... கொலையே பண்ணப்பார்த்தானே? 


22 நான் நினைச்சா இவன் முடிப்பான்.இவன் சாதா சக்தி இல்ல.ஜீவன் உள்ள சக்தி # மோகன் லால் பஞ்ச்


23 நாட்ல வண்டி ஓட்டத்தெரியாதவன் கூட உண்டு.பிகரை ஓட்டத்தெரியாதவன் யாரும் இல்ல # சூரி


24 போலீஸ் அடிச்சுப்பார்த்திருப்பே.போலீசையே அடிச்சுபார்த்திருக்கியா ? # தம்பி ராமையா


25 சூரி - புரொடியூசர் நீ தானே?


வாட்? 



பொண்ணைப் புரொடியூஸ் செஞ்சது நீ தானே? கோ புரொடியூசர் எங்கே?


26 விஜய் - சப்பை பிகரைக்கூட லவ் பண்ணுவேன்.ஆனா சப் இன்ஸ்பெக்டரை லவ் பண்ண மாட்டேன்

27 மோகன் லால் - இந்த சிவன் இல்லாம சக்தி இல்லை. விஜய் - சக்தி இல்லாம எவனும் இல்லை # இடைவேளை பஞ்ச்


28 மத்தவங்க கிட்டே தோத்தாத்தான் தோல்வி , சொந்தப்பையன் கிட்டே தோத்தாலும் அது வெற்றி தான்



சி பி கமெண்ட் - ஜில்லா - முன் பாதி செம ஸ்பீடு ,பின் பாதி ஓக்கே. புதுக்கதை.நோ ரீ மேக். ஹிட் ஆகிடும்


எதிர்பார்க்கும் .விகடன் மார்க் - 43


, ரேட்டிங் = 3.25 / 5

சன் டி வி வீடியோ கிராஃபர் ரசிகர் ஷோ கூட்ட ஆட்டத்தை அப்டேட்டிங்

படம் பார்க்கும்போது போட்ட ட்வீட்ஸ்



1 ஒன் ஆப் த பெஸ்ட் ஓப்பனிங் சீன் டூ விஜய் # கண்ணாடி சில்லுகள் சிதற ஆக்சன்

2 காஜல் அகர்வாலுக்கு ஓப்பனிங் சீன் சரி இல்ல.ஹீரோயினை கோபமான முகத்துலயா காட்டனும் ? வாடால்லிக்கலர் லிப்ஸ்டிக் வேற :-(

விரசாப்போகையிலே மெலோடி சாங்க்.விஜய் ன் அலட்டிக்காத டான்ஸ் ஸ்டெப் கலக்கல்.ஆர்ட் டைரக்சன் ,ஒளிப்பதிவு ,டான்ஸ் மாஸ்டர் ராக்ஸ்

4 சிவனும் சக்தியும் ஒண்ணா சேர்ந்தா மாஸ் டா வரிகள் வரும் ஒவ்வொரு சீனிலும் ரசிகர்கள் கரகோஷத்தில் அரங்கம் அதிர்ந்தது

5 பைட் சீன் களில் விஜய் புதுசா ஒரு மேனரிசம் காட்றார் .குட்

6 ஜிங்கிளமணி குத்தாட்டப்பாட்டு கலக்கல்.அதற்கான டான்ஸ் ஸ்டெப் பில் இன்னும் வெரைட்டி காட்டி இருக்கலாம்.அந்த 2 லேடீஸ்க்கு முகமும் முத்தல்


7 ஜில்லா @ இடைவேளை. கமர்சியல் கலக்கல்.தலைவா வை தாண்டிடுச்சு.ரீமேக் கதை இல்லை.புதுசு.ட்விஸ்ட் குட்


8 எப்போ மாமா ட்ரீட்டு .அக்மார்க் விஜய் டான்ஸ் கலக்கல்.பின்றார்யா. இசை குட். காஜில் ஸ்லீவ்லெஸ் ரெட் டிரஸ்




தியேட்டர் மேட்டர் - திருப்பூர் சிவன் தியேட்டரில் ஆகாய மனிதன் எனும் யுவராஜ் கூடப்படம் பார்த்தேன்.அதி காலை 5 மணி க்கு ஷோ என்பதால் 4 55 க்குப்போனா அவங்க 4 50 க்கே படம் போட்டுட்டாங்க , மோகன் லால் ஓப்பனிங்க் சீன் பார்க்க முடியல .தியேட்டர் சுமார் தான் , ஏ சி , டி டி எஸ் எல்லாம் ஓக்கே .

Thursday, January 09, 2014

ஜெயிக்கப்போவது ஜில்லாவா? வீரமா? (பொங்கல் ஜல்லிக்கட்டு)

ஜெயிக்கப்போவது ஜில்லாவா? வீரமா?: பொங்கல் ஜல்லிக்கட்டு கவுண்டவுன் ஸ்டார்ட்!

எம்.கே.டி.தியாகராஜ பாகவதர், பி.யூ.சின்னப்பா ரசிகர்களின் மோதலில் தொடங்கியது கருப்பு வெள்ளை பொங்கல். எம்.ஜி.ஆர், சிவாஜியில் தொடர்ந்தது ஹாட் பொங்கல். சினிமா கலர் பூசிக்கொண்ட பிறகு ரஜினி, கமல் என அந்த பொங்கல் கொஞ்சம் காரசாரமாகவே பொங்கியது. இப்போது விஜய், அஜீத் பொங்கல். அந்த கவுண்டவுன் நாளை முதல் ஸ்டார்ட். போட்டிக்கு முன்னால் சின்ன ட்ரைய்லர் ஓட்டிப்பார்க்கலாமா...

* "விஜய்" மூன்றெழுத்து, "அஜீத்" மூன்றெழுத்து, "ஜில்லா" மூன்றெழுத்து, "வீரம்" மூன்றெழுத்து, இருவரும் எதிர் பார்க்கும் "வெற்றி" மூன்றெழுத்து. எப்பூடி.

* விஜய், மோகன்லால் என்ற கேரளத்து களரி வீரனோடு களம் இறங்குகிறார். அஜீத் விதார்த், பாலா, முகிஷ், சுஹைல் என்ற சகோதரர்களின் துணையோடு களம் இறங்குகிறார்.

* விஜய்க்கு கள்ளசிரிப்பழகி காஜல் அகர்வால் ஜோடி. அஜீத்துக்கு தகதக தக்காளி தமன்னா ஜோடி. இரண்டு பேருமே நடிப்பிலும், அழகிலும் "சபாஷ் சரியான போட்டி" என களத்தில் ஆடிக் கொண்டிருப்பவர்கள்.

* விஜய்யை இயக்கி இருப்பவர் முருகா என்ற ஒரு சுமாரான படத்தை இயக்கிய நேசன். அஜீத்தை இயக்கியவர் தெலுங்கில் இரண்டு ஹிட் படங்களையும், தமிழில் சிறுத்தை என்ற ஹிட் படத்தையும் இயக்கிய சிவா.


* இரண்டு பேரையுமே சண்டை போட வைத்திருப்பவர் ஸ்டண்ட் மாஸ்டர் சில்வா. "இரண்டு பேருமே டூப் போடாமல் சண்டை போட்டிருக்கிறார்கள். விஜய்யும், மோகன்லாலும் போடும் சண்டையில் இருவரின் இமேஜையும் காப்பாற்றி இருக்கிறேன்" என்றும், "அஜீத் போடும் சண்டையில் அனல் பறக்கும், காலில் இருக்கும் பிரச்னையை பொருட்படுத்தாமல் புகுந்து விளையாடி இருக்கிறார்" என்று பேட்டிகளை தட்டிவிட்டு சேம் சைட் கோல் போட்டிருக்கிறார் சில்வா.

* இரண்டு கதைகளுமே இந்த நிமிடம் வரைக்கும் படு சீக்ரெட். கசிந்த வரையில் கதை இதுதான். மோகன்லாலின் வளர்ப்பு மகன் விஜய், வளர்ப்பு மகன் என்று தெரியாமல் அப்பா மீது உயிரையே வைத்திருப்பார். மதுரையில் பெரும் புள்ளியான மோகன்லாலுக்கு எந்த பிரச்னை என்றாலும் அவருக்கே தெரியாமல் மகன் விஜய் முன்னால் நின்று முடித்து வைப்பார். மகனின் அசுர வளர்ச்சியும், செல்வாக்கும் அப்பா மோகன்லாலுக்கு பிடிக்காது. ஏன் பிடிக்காது என்றால். தனது அடுத்த வாரிசாக அவர் தன் சொந்த மகன் மகத்தை கொண்டு வர நினைக்கிறார். அதற்கு விஜய் தடையாக இருப்பாரோ என்று கருதி தனது அஸ்திரங்களை விஜய்க்கு எதிராக திருப்புவார். அது தெரிந்தும் விஜய் கடைசி வரை அப்பாவுக்காகவே உழைப்பார். அதை கடைசியில் உணர்ந்து சொந்த மகனை விட வளர்ப்பு மகன் விஜய்யே சிறந்தவன் என்பதை மோகன்லால் உணர்வார். இது ஜில்லாவோட கதை.

* கிராமத்து அஜீத்துக்கு நான்கைந்து தம்பிகள். இவர்கள் பண்ணாத பஞ்சாயத்து கிடையாது. அடிக்காத ஆள் கிடையாது. அண்ணனுக்கு ஏதாவது ஒன்று என்றால் தலைகொடுக்கவும், தலை எடுக்கவும் தயங்க மாட்டார்கள் தம்பிகள். தம்பிகள் சிலருக்கு காதல் வர... அண்ணனுக்கு கல்யாணம் நடந்தால்தானே தங்களுக்கும் நடக்கும் என்று கருதும் தம்பிகள், அண்ணனுக்கு தமன்னாவை பெண் பார்க்கப்போன இடத்தில் ஒரு சிக்கலில் மாட்டிக் கொள்கிறார்கள். அந்த பிரச்னையை தீர்க்க அண்ணன் போராட. அண்ணனுடன் அண்ணி தமன்னாவை சேர்த்து வைக்க தம்பிகள் போராட கமகம கிராமத்து விருந்து வீரத்தோட கதை.


* ஜில்லாவுக்கு மெலடி கிங் இமான் இசை. வீரத்துக்கு குத்துப்பாட்டு கிங் தேவிஸ்ரீபிரசாத் இசை. பாட்டுல ரெண்டு பேருமே பட்டைய கிளப்பிட்டாங்க. பின்னணி இசையில என்ன பண்ணியிருக்காங்கன்னு படத்துலதான் பார்க்கணும்.

Current events
* விஜய்யின் கேரக்டர் பெயர் சக்தி, அஜீதின் கேரக்டர் பெயர் விநாயகம். புராணத்தில் சக்தியின் மூத்த மகன்தான் விநாயகம். ஆனால் சக்தியை விட அதிக சக்தி கொண்டவர் விநாயகம்.


* விஜய்க்கு கிருதாவுடன் இணைந்த சின்ன தாடி கெட்அப். அஜீத் மங்காத்தா, ஆரம்பம் படங்களின் தொடர்ச்சியாக சால்ட் அண்ட் பெப்பர் லுக் கெட்-அப். விதவிதமான மார்டன் டிரஸ் விஜய் காஸ்ட்யூம். வெள்ளை வேட்டி சட்டை அஜீத் காஸ்ட்யூம். பாடல்களில் மட்டும் கோட் சூட்.

* விஜய்யுடன் காமெடியில் கலக்குவது சூரி, அஜீத்துடன் காமெடியில் கலக்குவது சந்தானம். எனவே சந்தானம், சூரி போட்டியும் பொங்கலில் பொங்குகிறது.

* இரண்டு படத்திலுமே பாட்டு, பைட்டு, ஆக்ஷன், செண்டிமெண்ட், ரொமான்ஸ், காமெடி என கமர்ஷியல் அயிட்டங்கள் பக்காவாக இருக்கும். இல்லாத ஒரே விஷயம் லாஜிக்.


* ஜில்லாவை தயாரித்திருப்பது வெற்றிகரமான தயாரிப்பு நிறுவனமான சூப்பர் குட் பிலிம்ஸ். வீரத்தை தயாரித்திருப்பது பாரம்பரியமிக்க நிறுவனமான விஜயா புரொடக்ஷன்.

* இரண்டு படங்களுமே எல்லா ஏரியாவும் விற்று தீர்ந்துவிட்டது. சேட்டிலைட் ரைட்சும் பல கோடிக்கு விற்பனையாகி இருக்கிறது. இந்த நிமிடம் புரட்யூசர்கள் இருவருமே வெரி ஹேப்பி. படத்தை வாங்கியவர்களும், பார்க்கும் ரசிகனும் ஹேப்பியா என்பது இன்னும் 24 மணிநேரத்தில் தெரிந்து விடும்.

* ஜில்லா உலகம் முழுவதும் 1200 தியேட்டர்களில் ரிலீஸ். கேரளாவில் மட்டும் 300 தியேட்டர். வீரம் உலகம் முழுவதும் 1300 தியேட்டர்களில் ரிலீஸ். கேரளாவில் 150 தியேட்டர். இரண்டு படங்களுமே ஜனவரி 19 வரை அத்தனை தியேட்டர்களிலும் ஹவுஸ்புல் புக்கிங்.

* எட்டு வருடங்களுக்கு முன்பு வந்த போக்கிரி-ஆழ்வார் மோதலில் ஜெயித்தது போக்கிரி. இப்போது ஜில்லா-வீரம். ஜெயிக்கப்போவது யார்? அல்லது இருவருமா? நாளை (வெள்ளிக்கிழமை) மாலை தெரிந்து விடும். 


thanx - dinamalar

'வீரம்' - முன்னோட்டம்

நீண்ட நாட்களுக்கு பிறகு கிராமத்து பின்னணி கதையில் அஜித் நடித்திருக்கும் படம் 'வீரம்'. ஜனவரி 10ம் தேதி வெளியாகிறது. 


அஜித், தமன்னா, வித்தார்த், சந்தானம், வித்யூ ராமன், அப்புக்குட்டி என ஒரு நட்சத்திர பட்டாளத்தினை வைத்து இயக்கியிருக்கிறார் சிவா. தேவி ஸ்ரீபிரசாத் இசையமைக்க, விஜயா வாஹினி நிறுவனம் தயாரித்திருக்கிறது. 


அண்ணன் திருமணம் செய்து கொண்டால் தான் 4 தம்பிகளும் திருமணம் செய்து கொள்ள முடியும். இந்த கதைக்குள் எப்படி தமன்னா வருகிறார், வில்லன்களை எப்படி அஜித் எதிர்கொள்கிறார். இறுதியில் அண்ணனுக்கு திருமணம் செய்து வைத்து, தம்பிகளும் திருமணம் செய்து கொண்டார்களா என்பதே 'வீரம்' படத்தின் கதை. 


எப்போதுமே அடிதடி பண்ணிக்கொண்டிருப்பதால், வீட்டிலேயே ஒரு வக்கீலை வைத்துக் கொள்கிறார்கள். அந்த வக்கீல் வேடத்தில் சந்தானம் தனது காமெடி பங்களிப்பை அளித்திருக்கிறார். முதல் முறையாக படம் முழுவதும் அஜித் வேஷ்டி சட்டையில் அஜித் நடித்திருப்பது இப்படத்தின் ஹைலைட்டாக அமைந்திருக்கிறது. 

 
படத்தில் முதல் டீஸர், இரண்டாவது டீஸர், டிரெய்லர், பாடல்கள் என 'வீரம்' சம்பந்தப்பட்டவை வெளியான போது மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றிருக்கிறது. அதுமட்டுமன்றி நீண்ட நாட்கள் கழித்து அஜித் படத்தின் அனைத்து பாடல்களுமே மக்களிடம் வரவேற்பை பெற்றிருப்பது 'வீரம்' ஸ்பெஷல். 


அஜித்தின் வேஷ்டி சட்டை லுக், டிரெய்லரில் அஜித் போட்டிருக்கும் குத்தாட்டம் என அவரது ரசிகர்கள் இப்படத்தினை கொண்டாட காத்திருக்கிறார்கள். மக்களிடையேயும், பாக்ஸ் ஆபிஸிலும் தனது புஜத்தை சிலுப்பிக் கொண்டு 'வீரம்' சீறுமா என்பது இன்னும் ஒரு வாரத்தில் தெரியும். 



வேட்டி கட்டிய அஜித்.. வெளுத்து வாங்கும் விஜய்: பொங்கல் கவுண்ட் டவுன் ஸ்டார்ட்...

 

சாதாரணமாக பொங்கலுக்கு சில மாதங்களுக்கு முன்பே தீபாவளி பண்டிகை முடிந்துவிடும். ஆனால் இந்த முறை தமிழக தியேட்டர்களுக்கு பொங்கலுக்கு நான்கு நாட்கள் முன்பு தீபாவளி வருகிறது. அஜித், விஜய் இருவரின் படங்களும் இந்த மாதம் பத்தாம் தேதி அதிரடியாக ரிலீஸாவதே இதற்கு காரணம். 7 வருடங்கள் கழித்து தமிழ் திரையுலக பாக்ஸ் ஆபிஸில் அஜித் - விஜய் படங்கள் நேரடியாக மோதவிருக்கிறது. 2001ல் தீனா - ப்ரெண்ட்ஸ், 2002ல் பகவதி - வில்லன், 2003ல் திருமலை - ஆஞ்சநேயா, 2006ல் ஆதி - பரமசிவன், 2007ல் போக்கிரி - ஆழ்வார் என்று பாக்ஸ் ஆபிஸில் போட்டியிட்டவர்கள் தற்போது 7 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் நேரடியாக களத்தில் இறங்கியிருக்கிறார்கள். 


ரசிகர்களை உற்சாகத்தின் உச்சிக்கு கொண்டுவந்துள்ள இந்தப் படங்களின் ஹைலைட்தான் என்ன என்று 'ஜில்லா' இயக்குநர் நேசனிடமும், 'வீரம்' இயக்குநர் சிவாவிடமும் கேட்டோம். 


வீரம் படத்தின் முக்கியத்துவத்தை பற்றி இயக்குநர் சிவா நம்மிடம் கூறியவை: 


 
முதல் முறையாக அஜித் முழுப்படமும் வேஷ்டி, சட்டையில் நடித்துள்ளார். இதுவரைக்கும் வந்த அஜித் படங்களில் இல்லாத அளவிற்கு இறங்கி அடிச்சிருக் கார். இந்த மாதிரி ஒரு கிராமத்துக் கதையில் இதற்கு முன் அஜித் நடித்த தில்லை. அதுதான் 'வீரம்' படத்தின் முதல் ஹைலைட். 


நீண்ட நாட்கள் கழித்து தமன்னா தமிழில் நடித்திருக்கிறார். அஜித், தமன்னா காம் பினேஷன் மிகவும் புதியதாக இருக்கும். டான்ஸ் காட்சிகளில் இருவரும் அசத்தியி ருக்கிறார்கள். 


படத்தோட பாடல்கள் பெரிய ப்ளஸ். ஒவ் வொரு பாடலுக்கும் அஜித் ரசிகர்களால் ஆடாமல் இருக்க முடியாது. 


சந்தானம், தம்பி ராமையா சம்பந்தப்பட்ட காமெடி காட்சிகள் படத்துக்கு மற்றொரு பிளஸ். படத்தில் நிறைய நடிகர்கள் என்பதால் மிக கஷ்டப்பட்டு 110 நாட்கள் படம் பிடித்தோம். 


அண்ணன் - தம்பி பாசம் சம்பந்தப்பட்ட காட்சிகள் எல்லாமே கண்டிப்பா பேசப்படும். படத்துல மட்டும் அஜித் தம்பிகளுக்கு அண்ணனா இல்ல. எங்க மொத்த யூனிட்டுக்குமே அவர் அண் ணனாக இருந்தார். 


ஒரு குடும்பத்துல சின்ன குழந்தைகள், அவங்களோட அப்பா, அம்மா, தாத்தா, பாட்டி, மாமா, அத்தை என மொத்த குடும்பமும் படத்துக்கு வந்தாங்கன்னா, எல்லாரையும் சந்தோஷப்படுத்துற படமா ‘வீரம்' இருக்கும். இதை 100% நம்பிக் கையோட சொல்றேன். 


படத்தின் முக்கிய காட்சிகளில் ஒன்று ரயிலில் நடக்கும் சண்டைக்காட்சி. இடைவேளையின்போது வரும் இந்த சண்டைக்காட்சி மிக பிரம்மாண்டமாக வந் துள்ளது. சண்டை இயக்குநர் செல்வா அதற்காக ரொம்பவே மெனக்கிட்டு இருக்கிறார். அதோடு கிளைமேக்ஸ் காட்சியிலும் ஒரு முக்கிய சண்டைக்காட்சி இருக்கிறது. 


இவ்வாறு இயக்குநர் சிவா கூறினார். 



‘ஜில்லா’ படத்தின் முக்கியத்துவத்தைப் பற்றி இயக்குநர் நேசன் நம்மிடம் கூறியவை: 

 
விஜய், மோகன்லால்னு இரண்டு மாஸ் ஸ்டார்களை வைச்சு நான் பண்ணி யிருக்கும் கமர்ஷியல் காக்டெய்ல் ‘ஜில்லா'. இரண்டு பேருமே சேர்ந்து வரும் காட்சிகள் பட்டையைக் கிளப்பும். 


ஒப்பனிங் சாங்கில் இரண்டு பேரும் சேர்ந்தே முழுப்பாட்டுக்கும் ஆடியிருக்காங்க. ரொம்ப பிரம்மாண்டமாக கலர்ஃபுல்லா எடுத்திருக்கோம். ஓப்பனிங் பாட்டுலயே பாக்குறவங்களை எல்லாம் ‘ஜில்லா’ கட்டிப் போட்டுரும்.. 


இதற்கு முன் விஜய்யுடன் காஜல் அகர் வால் சேர்ந்து நடித்திருந்தாலும், ‘ஜில்லா'வில் அவர்களின் காட்சிகள் பார்ப்பவர்களுக்கு புதுசா இருக்கும்.


விஜய், சூரி சேர்ந்து பண்ணியிருக்கும் காமெடி காட்சிகள் சிரிப்பு பொங்கல் தான். நிறைய காட்சிகளை படம்பிடித்த போது நானே கட் சொல்ல முடியாமல் சிரித்தேன். 


படத்தோட பாடல்கள் ஏற்கனவே ஹிட். அதுவும் விஜய் பாடியிருக்கும் ‘கண் டாங்கி' பாடலை ஜப்பானில் ஷுட் பண்ணி யிருக்கோம். 


கமர்ஷியல் படத்துக்கு பஞ்ச் வசனங்கள் தான் முக்கியம். ஆனா இதுல பஞ்ச் வசனங்கள்னு எதுவுமே கிடையாது. வசனங்கள் எல்லாமே ரொம்ப எதார்த்தமா இருக்கும். 


விஜய்யோட சண்டைக்காட்சிகள் எல்லாம் மாஸா இருக்கும். ரோப் இல்லாம, டூப் இல்லாம நிறைய சண்டைக்காட்சிகளை இதில் விஜய் செய்திருக்கார். 


க்ளைமாக்ஸ் சண்டைக்காட்சியை 100 ஏக்கர் சோளக்காட்டில் 6 கேமரா வைத்து பிரம்மாண்டமா எடுத்திருக்கோம். விஜய், மோகன்லால் ரெண்டு பேருமே வில்லன் களுடன் மோதும் அந்த காட்சியில் தீப்பொறி பறக்கும். 


படம் பார்க்க தியேட்டர்குள்ள வந்தீங்கன்னா படம் ஆரம்பிச்சதுல இருந்து, முடியுற வரை ஒவ்வொரு சீனும் விசில் அடிச்சு, சந்தோஷப்படற மாதிரி எடுத்திருக்கோம். 


இவ்வாறு நேசன் கூறினார். 


‘வீரம்' இயக்குநர் சிவா, ‘ஜில்லா' இயக்கு நர் நேசன் இருவருமே பரீட்சையை எழுதி விட்டார்கள். மக்களின் வழங்கப் போகும் ரிசல்ட்டுக்காக காத்திருக்கிறார்கள்.

 

 thanx -tamil hindu