Wednesday, March 30, 2011

நாளைய இயக்குநர் - சஸ்பென்ஸ் + த்ரில்லர் கதைகள்

http://www.cinesnacks.in/tamil-movies/actress/Spicy-Keerth-Chawla-Gallery/keerthi-chawla-stills-019.jpg 


இன்னைக்கு (27.3.2011) ஒரு இனிய ஆச்சரியம் என்னன்னா முதல் போட்டியாளர் ஒரு பெண் இயக்குநர்.. பேரு வெண்ணிலா ( கவிதாயினி அ. வெண்ணிலா அல்ல).அவரைப்பார்த்ததும் ஏதோ ஃபேமிலி செண்ட்டிமெண்ட் எடுத்துக்கொல்லப்போறார்னு நினைச்சேன்.. ஆனா சஸ்பென்ஸ் ஸ்டோரி...

1. நான் சொல்வதெல்லாம் உண்மை - வெண்ணிலா

பாட்டோட பல்லவியை படத்துக்கு டைட்டிலா வைக்கிறது,பழைய படங்களோட டைட்டிலை புதுப்படத்துக்கு வைக்கரது இதெல்லாம் இப்போதைய டிரெண்ட் போல.. ஆனா என்னை கேட்டா கிரியேட்டிவ் மைண்ட் இல்லாதவங்க தான் அப்படி வைப்பாங்கன்னு சொல்வேன்.. ஆனா சிலர் மக்களை ஈஸியா போய் ரீச் ஆக ஏற்கனவே ஹிட் ஆன டைட்டில் பெட்டர்னு சொல்றாங்க..

நூறாவது நாள் படத்தோட ஒன்லைன் தான் இந்த குறும்படத்தோட கதை..அதாவது ஹீரோவுக்கு நைட் கண்ட கனவு மறு நாள் மதியம் 12 மணிக்கு பலிக்குது..அந்த பலிக்கற சூழல் அந்த டைம்ல ஹீரோ எங்கே இருக்காரோ அந்த இடத்துல யார் இருக்காங்களோ அவங்களை பாதிக்குது..இந்த மாதிரி 3 கனவு பலிக்குது..

4 வது கனவுல யாரோ ஆக்சிடெண்ட்ல இறக்கற மாதிரி பார்க்கறார் ஹீரோ..அப்போ கூட இருக்கற ஃபிரண்டை எச்சரிக்கறப்பத்தான் அவருக்கு பலி ஆகப்போவது தான் தான் என்ற எண்ணம் வருது.. ஆனா.. அட சட்.. டூ லேட்.. ஆக்சிடெண்ட் ஆகுது...ஆள் அவுட்.. 

இந்த க்ளைமாக்ஸ் KNOT  மட்டும் மாதவன் நடிச்ச யாவரும் நலம் படத்தோட க்ளைமாக்ஸ் ட்விஸ்ட்ல இருந்து உருவி ஆல்டர் பண்ணி டிங்கரிங்க் ஒர்க் பண்ணி இருக்காங்க..

இதுக்கு பேக் கிரவுண்ட் மியூசிக் கலக்கலா போட்டிருந்தாங்க..பொதுவா இந்த மாதிரி சஸ்பென்ஸ் த்ரில்லர்க்கு இசை தான் முக்கியம்.. 

ஆனா சராசரிக்கும் மேலே உள்ள இந்தப்படத்தை மதன்+ பிரதாப் போத்தன் பெரிசா சிலாகிக்கலை.. ஓக்கே அப்படின்னாங்க...
...
http://www.topnews.in/files/Keerthi-Chawla.jpg



2. ஸ்கூல் பெல் - பிரின்ஸ்

குமுதத்துல வர்ற ஒரு பக்க கதை மாதிரி ரொம்ப சின்ன கதையா இருந்தது. குறும்படம் ஓடறதுக்கான டைம் அவங்க குடுக்கறது 7 நிமிஷம்னா குறைஞ்ச பட்சம் 5 நிமிஷமாவது யூஸ் பண்ணனும்.. ஆனா இந்தப்படம் 4 நிமிஷம் தான் ஓடுச்சு..

ஒரு ஏழைக்குடும்பத்துல 2 குழந்தைங்க காலைல அவசர அவசரமா ரெடி ஆகறாங்க.. அம்மா.. சீக்கிரம் டிஃபன் ரெடி பண்ணு.. ஸ்கூல் பெல் அடிக்கப்போறாங்க... லேட்டாப்போனா அடி விழும் என 2 பேரும் சொல்றாங்க.. இந்த பில்டப்புல 3 சீன் ஓடுது.. அப்புறம் பார்த்தா 2 குழந்தைங்கள்ல ஒரு பையன் ஸ்கூல்க்கு போறான்.. இன்னொரு குழந்தை ( பொண்ணு ) வேலைக்கு போகுது.. ஸ்கூல் பெல்லை ஒரு டைமிங்க்க்கான அடையாளமா வெச்சிருக்காங்க.. அவ்வளவுதான்.

குழந்தைதொழிலாளர் எதிர்ப்புக்கான ஒரு டாக்குமெண்ட்ரியா இந்தப்படம் எடுக்கப்பட்டிருக்கே ஒழிய ஒரு குறும்படத்துக்கான ட்விஸ்ட்டோ, அழகிய ரசனை சார்ந்த  மேக்கிங்க் ஸ்டைலோ இல்லை..இதை 2 ஜட்ஜூங்களுமே சொன்னாங்க.. ( குறையை கரெக்ட்டா சொல்லிடறாங்கப்பா..)

இந்தப்பட இயக்குநரிடம் சில கேள்விகள்

1.   கதைக்களன் ரொம்ப ஏழை.. கிட்டத்தட்ட சேரின்னு முடிவான பின்னே அந்த கேரக்டர்கள் அதே போல் செலக்ட் பண்ண வேண்டாமா?சிட்டி லைஃப் குழந்தைகளை செலக்ட் பண்ணாம சேரிக்குழந்தைகளையே செலக்ட் பண்ணி இருக்கலாம்...

2. ஓப்பனிங்க் ஷாட்ல ஹைக்ளாஸ் பெட்ஷீட்டை போர்த்தி படுத்திருக்கு குழந்தை.. அது எப்படி?


http://s4.hubimg.com/u/3606995_f520.jpg
3. இலக்கணப்பிழை - சரத்

இதே டைட்டில்ல இப்பத்தான் ஒரு  கில்மாப்படம் ரிலீஸ் ஆச்சு..( கில்மா = KILL மா -அதாவது எதுவுமே இல்லாம கொலையா கொன்னெடுக்கற படம் ஹி ஹி ))ஆனா அந்தப்படத்தை விட இந்த படத்துக்குத்தான் டைட்டில் ரொம்ப பொருத்தம்..

நடைபாதைல தள்ளுவண்டி வியாபாரம் பண்ற ஒரு தம்பதி..அதுல கணவனை போட்டுத்தள்ள ஒருத்தன் வர்றான்.அவன் கூட கை கலப்பு நடக்கறப்ப எதிர்பாராத விதமா வந்தவனை கணவன் கொலை பண்ணிடறான்.

அந்த டெட்பாடியை மறைக்க முயலும்போது கணவனோட நண்பன் வர்றான்.. அவனையும் ஒரு கை பிடிக்க சொல்லி பாடியை அப்புறப்படுத்தும்போது செல் ஃபோன் இருக்கு.. அந்த ஃபோன்ல நண்பனோட நெம்பரை பார்த்ததும் தான் உண்மை தெரியுது.. 

கணவனோட  நண்பன் தான் அந்த கூலிப்படை ஆளை அனுப்பினதே..உடனே 2 பேருக்கும் கை கலப்பு நடக்குது..அப்போ


பிரபு தேவா - நயன் தாரா மாதிரி.. கள்ளக்காதலர்கள்... இவங்க காதலுக்கு கணவன் இடஞ்சலா இருந்துடக்கூடாதுன்னு ப்ளேன் போட்டு நடத்தறப்ப ஜஸ்ட் மிஸ் ஆகி காதலன் செத்துடறான்...

ஆனா கணவனுக்கு கடைசி வரை தன் மனைவி டாக்டர் ராம்தாஸ் மாதிரி ஒரு நயவஞ்சகக்காரி என்பது தெரியாமலே போகுது..

இந்தப்பட இயக்குநரிடம் சில கேள்விகள்

1,  பொதுவா ஒரு மனைவி கணவனை கொல்ல நினைச்சுட்டா 1008 வழி இருக்கு.. சாப்பாட்ல விஷம் வைக்கலாம்..,மலைல இருந்து தள்ளி விடலாம்,மப்புல இருக்கறப்ப எதாவது பண்ணலாம், தூங்கிட்டு இருக்கறப்ப தலைல கல்லை தூக்கி போடலாம்... ( இதுக்கு மேல விவரிச்சா நானே லீடு குடுத்த மாதிரி ஆகிடும்..)ஆனா இந்த மனைவி ஏன் இப்படி ஒரு ரிஸ்க்கான வழியை தேர்ந்தெடுத்தா?


2. அப்புறம் முக்கியமான விஷயம் ஒருத்தரை தாக்கறப்ப அவர் மட்டும் தனியா இருந்தா நாம் ஒரே அடில ஆளை முடிக்கற மாதிரி பவர் ஷாட் குடுத்து கொலை செய்யலாம்.. (இதெப்பிடி உனக்கு தெரியும்?)ஆனா 2 பேரு சண்டை  போட்டுட்டு இருக்கறப்ப ஒரே ஷாட்ல ஆளை முடிக்க முடியாது.. முதல் அடி லைட்டா எதிராளி நிலை குலையற அளவு மட்டும் அடிச்சுட்டு, அடுத்த அடில தான் ஆளை முடிச்சுக்கட்டுவாங்க.. 

மதன் இந்த படத்துக்கு ஒரு ஐடியா சொன்னாரு.. அதாவது மனைவி தாக்கும்ப்[ஓது ஸ்லோமோஷன் ஷாட் வெச்சிருக்கலாம்.. அப்பத்தான் அவ கணவனை கொலை செய்ய போய் மிஸ் ஆகி காதலனை கொலை செய்தது தெளிவா பார்வையாளனுக்கு தெரியும்னார்...


இந்தப்படத்துக்கான ஒளிப்பதிவு ரொம்ப இயல்பா இருந்தது.. கேமரா கோணங்களும் அழகு.. இந்தப்படம் தான் இந்த வார சிறந்த படமா தேர்ந்தெடுப்பாங்கன்னு நினைச்சேன்..ஆனா...
https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjW-69AV7Tn-itTuuwqGt_5QMqC2R6Eax2ds3FqQo7HQoAFyXSPpi67Yludufhzn5O_ymDKQVoKJFxhpMzQBB031VuQThJYddJpxYZM1ksr_ujGMKPlabnVtEfyRahCynkyxBxZBUYNC0bg/s1600/rahi-bd-hot-tv-anchor-10.jpg

4. கானல் நீர் - அருண்

ராஜேஷ் குமாரோட பாதிப்பு இந்த கதைல நிறையவே தெரிஞ்சுது..ஒரு அம்மா, பொண்ணு  மட்டும் இருக்கற வீடு.. அப்பா சில நாட்கள் முன்புதான் இறந்திருக்காரு.. அது கொலை.. கொலை செஞ்சது அம்மாவோன்னு சந்தேகப்படறா பொண்ணு... 

அப்புறம் பார்த்தா அப்பாவோட ஆஃபீஸ்ல ஒரு பொண்ணு கூட தொடர்பு.. அந்த பொண்ணோட புருஷன் அப்பாவையும், அவனோட மனைவியையும் போட்டுத்தள்ளி இருக்கான்..

இந்தப்படத்துக்கான கேமரா ஷாட்ஸ் ரொம்ப புத்திசாலித்தனமா இருந்தது.. படத்தோட மைனஸ் என பார்த்தா பொலீஸ் ஆஃபீசரா வர்ற கேரக்டர் எப்போ பாரு தம் அடிச்சுக்கிட்டே இருப்பது...எதுக்காக அப்படி ஒரு ஷாட் வைக்கனும்?அப்புறம் எதுக்கு கஷ்டப்பட்டு புகை பிடிப்பது உடல் நலனுக்கு கேடு என வாசகம் ஓட விடனும்?

இந்தப்பட இயக்குநரிடம் சில கேள்விகள்

1. டெட்பாடியில் ரத்தம் வர்ற மாதிரி காட்சில ரத்தத்தை அப்படி தெளிக்கக்கூடாது..

2. வயலட் கலர்ல ரத்தம் எந்த கிரகத்துல இருக்கு?டாக்டர் ராஜசேகரோட மன்னிக்க வேண்டுகிறேன் படத்துலதான் முதன் முதலாக உண்மையான ரத்தத்தையே யூஸ் பணி கொலைக்காட்சிகள் எடுத்தாங்களாம். அந்த அளவு இல்லைன்னாலும் ஓரளவாவது மெனக்கெடலாமே..?

போட்டில ஸ்கூல் பெல் படத்தை தவிர மற்ற  3 பட டைரக்டர்களுமே குவாட்டர் ஃபிஅனலுக்கு போறாங்க..


டிஸ்கி 1 - ஈரோடு மாவட்டம் வெள்ளகோவில் பகுதில நில நடுக்கம் வந்ததா தகவல் வந்திருக்கு.. எனக்கு சொன்னவர் நம்ம காங்கேயம் நந்த குமார்.. சன் டி வி குரூப்ல நிறைய பேர் அங்கே இருக்காங்களாம்.. இன்னைக்கு மாலை நான் அங்கே போறேன்... ஏதாவது மேட்டர் சிக்குச்சுன்னா அதை ஒரு பதிவா போடறேன்... 

டிஸ்கி 2  - இங்கே போடப்பட்டுள்ள ஸ்டில்ஸ்களுக்கும் நாளைய இயக்குநர் நிகழ்ச்சிக்கும் எந்த சம்பந்தமும் இல்லை.. இது திராவிடக்கட்சிகள் அறிவித்த இலவச திட்டங்கள் மாதிரி.. சும்மா ஒரு அட்ராக்‌ஷனுக்காக...

Tuesday, March 29, 2011

2 ஜி ஊழலை வைத்து பாமர மக்களை ஏமாற்ற முடியாது - கலைஞர் பரபரப்பு பேட்டி

http://aakayam.files.wordpress.com/2010/05/p42.jpg 

மு.க.ஸ்டாலினை அடுத்த தலைவராக திமுகவினர் ஒருமனதாக ஏற்பார்களா.. தேர்தலில் திமுக அணி வெற்றி பெற்றால், கூட்டணி ஆட்சி அமையுமா என்பன உள்ளிட்ட கேள்விகளுக்கு முதல்வர் கருணாநிதி பதிலளித்துள்ளார்.

 
திமுக தலைவரும், தமிழக முதல்வருமான கருணாநிதி, சிஎன்என் ஐபிஎன் செய்தித் தொலைக்காட்சி சேனலுக்கு பேட்டியளித்துள்ளார்.

 கூட்டணி தொடருமா?

1. 'தொகுதி ஒதுக்கீடு பற்றிய பேச்சுவார்த்தையில் காங்கிரஸுக்கும், திமுகவுக்கும் இடையே கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டதால், தேர்தலுக்குப் பிறகும் இந்தக் கூட்டணி தொடரும் என்ற நம்பிக்கை இருக்கிறதா?'

"அகில இந்திய அளவில் இல்லாவிட்டாலும் இந்திய அளவில் காங்கிரஸும், தமிழக அளவில் திமுகவும் பெரிய கட்சிகள் என்பதை நாங்கள் பரஸ்பரம் உணர்ந்தவர்கள். எனவே எங்களுக்கு ஒரு சில கொள்கைகள், லட்சியங்கள் இருக்கின்றன. அவற்றை நிறைவேற்றுவதற்காக எங்களுக்கு மத்திய அரசின் உதவி தேவைப்படுகிறது.


கருத்து மாறுபடுவதாக இருந்தால், எங்களுக்கும் மத்தியிலே அமைகிற அரசுக்கும் மாறுபட்ட கொள்கை ரீதியாக வித்தியாசங்கள் இருக்கலாம். அதாவது திட்டங்கள் தமிழகத்துக்கு இன்னும் நிறைய வேண்டும் என்பதில் போராடுவதின் காரணமாக ஏற்படுகிற மாறுபாடுகள் இருக்கலாம்.

ஆனால், அடிப்படைக் கொள்கைகளில் எங்களுக்கும் அவர்களுக்கும் அதாவது மதவாதத்தை ஒழிப்பது, இந்தியாவில் சமதர்ம சமுதாயத்தை உருவாக்குவது போன்றவற்றில் நாங்கள் இருவரும் மாறுபட்டவர்கள் அல்ல
 http://www.nakkheeran.in/UltimateEditorInclude/UserFiles/DMK/kk.jpg

2. இந்தத் தேர்தலில் திமுக முன்பை விட குறைந்த இடங்களில் மட்டுமே போட்டியிடுகிறது. இதனால், தேர்தலில் வெற்றி பெற்றால் கூட்டணி ஆட்சியும் அமையும் என எடுத்துக்கொள்ளலாமா?

"அரசியல் மாற்றங்களைப் பொறுத்தவரையில் ஒரே கட்சியின் ஆட்சியா அல்லது கூட்டணி ஆட்சியா என்பதை தேர்தல் முடிந்த பிறகு தான் சொல்ல முடியும்.
 

மேற்கு வங்கத்தில் கூட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஆளுங்கட்சியாக இருந்தாலும், தேர்தல் முடிவு வருவதற்கு முன்பே கூட்டணி அமைத்து, அந்தக் கூட்டணியில் பல கட்சிகள் இணைந்து, இடதுசாரிக் கட்சிகள், பார்வர்டு பிளாக் மற்றும் வலதுசாரி கட்சிகள் எல்லாம் இடம்பெற்று அவர்கள் எல்லாம் தேர்தல் முடிந்த பிறகு உகந்தவாறு அரசு அமைக்கிறார்கள். 


அதைப் போல நாம் நம்புகிறேன், எண்ணுகிறேன். தமிழ்நாட்டு மக்களும் மற்றவர்களும் ஒரே கட்சியின் ஆட்சி நீடிக்க வேண்டுமென்று தான் கருதுவார்கள் என்று எண்ணுகிறேன்.

ஒருவேளை வோட்டிங் பேட்டன் என்று சொல்வார்களே, அதிலே மாற்றம் ஏற்பட்டு கூட்டணி ஆட்சி அமைந்தால் தான் ஒரு அரசு நிலைத்திருக்க முடியும் என்ற சூழ்நிலை தோன்றினால் நாங்கள் அப்போது மற்ற கட்சிகளோடு கலந்து பேசி அதைத் தீர்மானிப்போம்,"
 https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhEFWi8FjQK7IBzwutFtXcbwu0jzyfQvjGZzCOGtclejXmE6Ckabz4vTsiu1IS-8oQSl_fOkmE5GJRVUPGPes_BcpsjEPblZr7gFbZJKmlGJ7tIXuxrHAEQQ-8yjvMwiVSI68i9PZCjOEM/s400/thamalachi5.jpg
அரசியல் வாரிசு... 

3. "நீங்கள் 12-வது முறையாக தேர்தல் களத்தில் நிற்கிறீர்கள். உங்கள் மகனும், துணை முதல்வருமான மு.க.ஸ்டாலின் தான் உங்களுடைய அரசியல் வாரிசு என்பதில் ஏதாவது கேள்விக்குறி இருக்கிறதா?"  

https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgDuVlJl-9r_GrzZtNHAq_zQ5kaCsjQuknb4M1bOUVHlugEeOQVP-CO-WS3K62zSaV9EnKyhQqsff_gUPKH9QTQlNS7qGZEhddq2xSUhpoCBYAnTelyuz2bUMufewXlTM0YFeNOIgBIeHFb/s1600/Niira-Radia_2.jpg
"எந்தக் கேள்விக்குறிக்கும் இடம் இல்லாமல் வளர்ந்தவர் தான் மு.க. ஸ்டாலின். நான் அரசியலில் நுழைந்து அண்ணா தலைமையில் ஓர் அரசியல் கட்சியின் முக்கிய பொறுப்பை ஏற்றுக் கொள்பவனாக இருந்து, பொருளாளராக அண்ணாவால் நியமிக்கப்பட்டு, தேர்ந்தெடுக்கப்பட்டு, அந்த பொறுப்பை நான் எப்படி நிறைவேற்றினேனோ, அதற்கு அண்ணா காட்டிய அன்பும் என்னிடம் அவர்கள் வைத்த நம்பிக்கையும், அதற்கு கொஞ்சமும் குந்தகம் இல்லாமல் எப்படி நான் நடந்து கொண்டேனோ, அதைப் போலவே என்னுடைய தலைமையில் மு.க.ஸ்டாலின் தொண்டாற்றி வருகிறார்.

என்னிடத்தில் நம்பிக்கை வைத்திருக்கின்ற கழகத் தோழர்கள் கழகத்திலே இருக்கின்ற முன்னணியினர் பொதுக்குழு உறுப்பினர்கள் எல்லாம் மு.க.ஸ்டாலினிடமும் நம்பிக்கை வைத்திருக்கிறார்கள். எனவே அது கேள்விக்குறியாக ஆவதற்கு எந்தவித நியாயமும் இல்லை,"


4. "கட்சியில் உள்ள அனைவரும் ஸ்டாலினை அடுத்த தலைவராக ஏற்றுக் கொள்வார்களா?"

"திராவிட முன்னேற்ற கழகம் ஒரு ஜனநாயக இயக்கம், அடுத்தது யார் என்ற கேள்விக்கு நாமே ஒருவரைப் பிடித்து வைத்து, இவர் தான் அடுத்தது என்று சொல்லக்கூடிய இயக்கம் அல்ல இது. அதாவது, மடாதிபதிகள் நடத்துகின்ற மடம் அல்ல இது.

மடாதிபதி என்றால், உதாரணம் சொல்ல வேண்டுமேயானால் சங்கரமடம் இருக்கிறது அல்லவா, அந்த மடத்திலே பெரியவர் சங்கராச்சாரியார் இருந்து, தனக்கு பின்னர் இவர் தான் என்று ஒருவரை அடையாளம் காட்டி விட்டு சென்றார். அதை அந்த மடத்தை சேர்ந்தவர்கள் எல்லோரும் ஏற்றுக் கொண்டார்கள்.

அதைப் போல திராவிட முன்னேற்ற கழகம் ஒரு மத நிறுவனம் அல்ல. இது ஜனநாயக ரீதியான ஸ்தாபனம். ஜனநாயகத்தில் தலைவர்களை எப்படித் தேர்ந்தெடுக்கிறார்களோ, அதை போல தான் இயக்கத் தோழர்கள், கழக செயலாளர்கள் எல்லாம் சேர்ந்து இவர் இந்தப் பொறுப்பு வகிக்க தகுதியானவர் என்று கருதினால் அவர்கள் தேர்ந்தெடுப்பார்கள்,"
 https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEitf1lIIvaUKl-mWbHf1H3J4FY1l-jH92OjOUdf-tY0XrY3wHrYD3nSQnnsIEuUyPsfprOdBd5wgMY1f7vhx6XRmBS_t7U2UIYVWbfu2vj-Y9QGbCp-FWBFDu-ax0Y7aVLUYz67jkmDyJKH/s1600/2.jpg
குடும்ப அரசியல்...

5. குடும்ப அரசியல் குறித்த கேள்விக்கு பதிலளிக்கையில், "எனக்கு குடும்பம் இருப்பதால் பெரிய தொல்லை, என்னைப் புரிந்த வர்கள் குடும்ப அரசியல் நடத்துகிறேனா இல்லையா? என்பதை எண்ணிப் பார்க்க வேண்டும்.
குடும்பம் நடத்துவது என்றால் திருமணமாகி ஆணும், பெண்ணும் சேர்ந்து அவர்களுக்கு பிறக்கின்ற பிள்ளைகள், அண்ணன், தம்பி இவர்கள் தான் குடும்பம் என்று அர்த்தம் அல்ல.

துணைக்கு யார் - யாரோ சேர்ந்து கொண்டு சில குடும்பங்கள் உருவாகின்றன. நான் அப்படிப்பட்ட குடும்பத்தைச் சேர்ந்தவன் அல்ல. ஒரு நேர்மையான குடும்பத்தைச் சேர்ந்தவன்,"
 https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjNwmT9eeXLTQr9A7es5yrhwXzHw6nPvrB60VCWy7cs-ULUa__geGN8cwv5EltixuQWNn-jYEw2jdAniAiVgzeWUVQREFc-HsrjfIyNILsXSCB1OPoeTI1L7Bgvful1isw3VoI12xegOc8/s1600/kanimozhi2.jpg
2ஜி ஸ்பெக்ட்ரம்... 

6. 2ஜி ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு தொடர்பாக உங்கள் மகள் கனிமொழி, மனைவி தயாளு அம்மாள் ஆகியோரிடம் விசாரிக்கப்பட்டுள்ளது. கலைஞர் டிவி நிர்வாகத்திடமும் விசாரிக்கப்பட்டது. உங்களுக்கு தெரியாமல் எதுவும் இதிலே நடைபெற்றிருக்க முடியாது என்று எதிர்கட்சிகள் கூறுவது குறித்து?

"இது ஊழலே அல்ல. இதைப் பற்றி பகிரங்கமாக பத்திரிகைகளிலே செய்தி வெளிவந்துள்ளது. கலைஞர் டி.வி. என்பதில் என் பெயர் இடம் பெற்றிருக்கிறதே தவிர எனக்கு அதில் எந்தவிதமாக உரிமையும் கிடையாது. அதில் என்னுடைய மகள் 20 சதவீதம் பங்குதாரர். என்னுடைய மனைவி தயாளு 60 சதவிகித பங்குதாரர். சரத்குமார் 20 சதவிகித பங்குதாரர்.


இந்த விவரத்தையே நான் விசாரித்து விட்டு தான் கூறுகிறேன் என்பதை நீங்கள் பார்க்கலாம். கலைஞர் டி.வி. கருணாநிதிக்கு சொந்தமானதல்ல. கருணாநிதி குடும்பத்தைச் சேர்ந்த இரண்டு பேர் அதிலே பங்குதாரர்களாக இருக்கிறார்கள். இந்த குற்றச்சாட்டு எழுந்தவுடனேயே அதைப் பற்றி பத்திரிகைகளில் சரத்குமார் ஒரு விளக்க அறிக்கையினைத் தந்திருக்கிறார்.

அது எல்லா பத்திரிகைகளிலும் வெளிவந்திருக்கிறது. ஒரு கடனை அடைப்பதற்காக ஒருவரிடம் கடன் பெற்றார்கள். பிறகு பெற்ற கடனை வட்டியோடு திருப்பிக் கொடுத்து விட்டார்கள். அதற்கு வட்டி, அதற்காக வருமான வரித்துறைக்கான தொகை எல்லாம் தரப்பட்டு அதற்கு வருமான வரித்துறைக்கும் விவரம் தெரிவித்திருக்கிறார்கள். இதற்கு பிறகு அது எப்படி ஊழலாகும் என்று எனக்குத் தெரியவில்லை," 
 http://www.alaikal.com/news/wp-content/stalin-ma.jpg
7. 2ஜி விவகாரத்தால் திமுகவின் பெயருக்கு களங்கம் ஏற்பட்டுள்ளதா?

 சைபர், சைபர், சைபர், சைபர் என்று போட்டு இவ்வளவு பெரிய ஊழல் நடந்திருக்கிறது என்று சொல்லும் போது பல்லுக்கு பல் இருகாதம், பல்லிடுக்கு மூன்று காதம் என்று அந்த காலத்தில் பூசாரிகள் பம்பை அடிப்பார்கள். அதைக் கேட்டு இன்னொருவர் ஆமாம், ஆமாம் என்பார். மக்களும் அதை கேட்டு தலையட்டிக் கொண்டிருப்பார்கள்.

காதம் என்றால் பத்து மைல் தொலைவு. பல்லுக்கு பல் இரு காதம் என்றால் இருபது மைல் தூரம். பல் லிடுக்கு மூன்று காதம் என்றால் முப்பது மைல். அந்த அளவிற்கு பல்லுக்கிடையே இடைவெளி என்றால் வாய் எந்த அளவிற்கு இருக்கும் என்பதையெல்லாம் நினைத்துப் பார்க்காமல் ஆமாம், ஆமாம் என்று ஒப்புக் கொண்டு பூசாரி பம்மை அடிப்பதைப் போல பாமர மக்களை ஏமாற்றிட ஒரு சில அரசியல்வாதிகள் பம்பை அடிக்கிறார்கள்.

அது தான் உண்மை என்று வேறு சிலர் பம்பை அடிக்கிறார்கள். அந்த விஷயத்தைப் பற்றி நான் விரிவாக, உச்சநீதி மன்றத்தில் வழக்கு நடைபெறுகின்ற காரணத்தால் எதுவும் சொல்ல விரும்பவில்லை. ஊழலா இல்லையா என்பதைக் கண்டுபிடித்துச் சொல்ல வேண்டியது உச்சநீதிமன்றம். அதிலே நான் தலையிட விரும்பவில்லை.

அந்த நிறுவனத்துக்கு கடனைக் கொடுத்தவர்கள் மீது வழக்கு இருக்கலாம். கடன் வாங்கிய பணம் ஊழல் பணம் என்று சொல்வது முறையல்ல. அது நீண்ட விசாரணைக்கு பிறகுதான் தெரியும்,

என்னது? பவுன் போட்டு பொண்ணு கட்டிட்டு போகனுமா?

Hilarious political cartoon images
1. ம.தி.மு.க., கொள்கை விளக்க அணிச் செயலர் நாஞ்சில் சம்பத்: 2016ம் ஆண்டு பொதுத் தேர்தலில் வைகோவை முதல்வராக்க, இந்தத் தேர்தலில் குறிப்பிட்ட தொகுதியில் வெற்றி பெற வேண்டுமென கனவு கண்டோம். அந்தக் கனவை கல்லெறிந்து கலைத்துவிட்டனர்.

அண்ணன் 10 சீட்டுக்கே தகிந்தினந்தோம் போட்டுட்டு இருந்தாரு.. அதுக்குள்ள 234 தொகுதிக்கு ஆசப்பட்டா எப்படி? கணக்கு போட்டுக்குங்க.. இன்னும் 50 வருஷம் கழிச்சு வேணா ம தி மு கவுக்கு 25 சீட் கிடைக்கும். ஆனா அது வரை கட்சி இருக்கனும்..

----------------------------

2. தலைமைத் தேர்தல் கமிஷனருக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கடிதம்: இந்தத் தேர்தலிலும் ஓட்டுக்காக பணமும், பொருளும் வழங்க, தி.மு.க., - காங்கிரஸ் கூட்டணியினர் திட்டமிட்டுள்ளனர். பணம் எடுத்துச் செல்ல, "108' ஆம்புலன்சை பயன்படுத்தப் போவதாக, தகவல்கள் வருகின்றன. இது குறித்து தேர்தல் கமிஷன் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

முதல் உதவி வாகனத்தை மக்களுக்கு முதல் போட உதவியா கொண்டு போறாங்க.. அதுல என்ன தப்பு இருக்கு?கோடிக்கனக்குல பணத்தை அடிப்பாங்க .. அதை விட்டுடுங்க.. ஏதோ எங்களுக்கு 2000 குடுக்கறது உங்களுக்கு பிடிக்காதே..


--------------------------------------------

http://www.movieinf.com/wp-content/images/2009/07/Hansika-Motwani1.jpg
3. சேலம் மாவட்ட தேர்தல் அதிகாரி: சாதாரண சாப்பாடு 35 ரூபாய், அசைவம் 80 ரூபாய், சைவ பிரியாணி 20 ரூபாய், வெரைட்டி ரைஸ் 15, உப்புமா 18, இட்லி இரண்டு 12 ரூபாய், சப்பாத்தி இரண்டு 18 ரூபாய், பூரி செட் 18, பொங்கல் 18, ரோஸ்ட் 20, புரோட்டா 20, வடை 15, மினரல் வாட்டர் 14, மட்டன் பிரியாணி 100, சிக்கன் பிரியாணி 80, வாட்டர் பாக்கெட் 2, டீ 5, காபி 8, கூல் டிரிங்ஸ் 10, ஆம்லெட் 10 ரூபாய் என, உணவு வகைகளுக்கு விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

முக்கியமான ஒண்ணை விட்டுட்டியே நைனா.....சரக்கு..?


---------------------------------------------

4. அ.தி.மு.க., எம்.பி., சிவசாமி பேச்சு: ஒரு நாட்டின் வளர்ச்சி, அனைத்து நாடுகளுடனும் நல்லுறவு வைத்துக் கொள்வதில் தான். ஆனால், அண்டை நாடுகளுடன் நம் உறவு திருப்திகரமாக இல்லை. இந்திய அரசு தன் வெளிநாட்டுக் கொள்கையை கூர்ந்து கவனித்து மாற்றிக் கொள்ள வேண்டியது.

எனக்கென்னமோ ஒரு நாட்டோட வளர்ச்சி ஓட்டோட ரேட்டை வெச்சுத்தான்னு தோணுது.. போன எலக்‌ஷன்ல ரூ 2000. இப்போ ரூ 10,000 என பேசிக்கிறாங்க.. அப்போ 5 மடங்கு வளர்ந்திருக்கு...அடி வாங்குன கைப்புள்ள தமிழனுக்கே இவ்வளவுன்னா அடி குடுக்கற கலைஞருக்கு எவ்வளவோ..?
--------------------------------------------------
http://rianai.com/wp-content/uploads/2009/10/Hansika_Motwani_11-500x750.jpg
-5. ராஷ்ட்ரீய லோக்தளம் தலைவர் அஜித் சிங் பேட்டி: அணு ஒப்பந்தத்தை எங்கள் கட்சி கடுமையாக எதிர்த்தது. இந்த விவகாரத்தில், அரசுக்கு எதிராக வெளிப்படையாக ஓட்டளித்தோம். எனவே, அரசுக்கு ஆதரவளிக்க எங்கள் கட்சி எம்.பி.,க்கள் லஞ்சம் பெற்றதாக வெளியான தகவல் அடிப்படையற்றது.

ஓஹோ உங்க எம் பிக்கள் யாருக்கும் கொடுக்காம  எல்லாத்தையும் நீங்களே சுட்டுட்டீங்களா? இது ரொம்ப தப்பு.. எல்லாரும் சரி சமமா பிரிச்சுக்கனும்.. அது தானே நல்ல இந்தியனுக்கு அடையாளம்..?

----------------------------------
6. பா.ஜ., தேசிய செய்தித் தொடர்பாளர் நிர்மலா சீதாராமன் பேட்டி: தமிழகத்தில் ஓட்டு வங்கியைக் கருத்தில் கொள்ளாமல், தொண்டர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்கும் வகையில் பா.ஜ., தனித்துப் போட்டியிடுகிறது. தென் மாநிலங்களில், கர்நாடகாவிற்கு அடுத்தபடியாக தமிழகத்தில் கட்சியை வலுப்படுத்த தனிக்கவனம் மேற்கொள்ளப்படும்.

 உங்க கட்சி ஆளுங்க தினமும் பேரீட்சை சாப்பிட்டாலும் கட்சி வளர்ச்சி அடையாது...ஏன் இந்த  வேண்டாத வேலை..?

------------------------------------------
https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjtOYasLEDrghHumtsCvnbBIxJzp_reCPVrV09ykzRsoJDNpWbSsPEm0vMALrexfhWOTBzVU42E0YHAsPeqLN2x-n8e-vqmb_co0TIR0FsSkkMnJoU13BOO3bh3l7PsoZ14xYZi57dbrqg/s1600/HansikaMotwani01.jpg

7. ஜனாதிபதி பிரதிபா பாட்டீல் பேச்சு :இந்தியாவில், ஆண்களுடன் ஒப்பிடும் போது, பெண்களின் எண்ணிக்கை குறைவாக உள்ளது. இதே நிலை நீடித்தால் சமூகத்தில், வேண்டாத விளைவுகள் ஏற்படும்.

ஆமாமா.. ஏற்கனவே சில  பொண்ணுங்க பண்ற அல்டாப்பு தாங்கல... இதுல அவங்களோட பிறப்பு விகிதம் இன்னும் குறைஞ்சிட்டா  அப்புறம் அவங்க ஓவரா ஆடுவாங்க.. பவுன் போட்டு கட்டிட்டு போக வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுடும்..

------------------------------------------------------

8. சமூக சேவகி மேதா பட்கர் பேச்சு: அனைத்து அரசியல் கட்சித் தலைவர்களையும் ஒரே மேடையில் நிறுத்தி கேள்வி கேட்கும் முறையைக் கொண்டு வரவுள்ளோம். எம்.எல்.ஏ.,க்கள் மற்றும் எம்.பி.,க்கள் சரியாக செயல்படாத போது, அவர்களை திரும்பப் பெறுவதற்கான உரிமையும் மக்களுக்கு கொடுக்க வேண்டும்.

எங்க ஆளுங்களுக்கு லஞ்சம் கேட்கத்தான் தெரியும்.. கேள்வி கேட்டா பதில் சொல்லத்தெரியாதே...அப்புறம் ரிட்டர்ன் பெறும் உரிமையை மக்களுக்கு குடுத்துட்டா வாரா வாரம் எலக்‌ஷன் வைக்க வேண்டி வந்துடுமே..எவன் இங்கே யோக்கியனா இருக்கான்?

--------------------------------------------------
டிஸ்கி 1 - நடிகைகள் போஸ் குடுக்கறப்ப நேரா நிமிர்ந்து நிக்காம ஏன் கூன் விழுந்த மாதிரி இருக்காங்க?ன்னு ரொம்ப நாளா எனக்கு ஒரு சந்தேகம் உண்டு.. ஹன்சிகா மோத்வானியின் முத ஸ்டில்லை பார்த்ததும் அது க்ளியர் ஆகிடுச்சு.. அப்புறம் அவங்க லிப்ஸ்டிக்,இமைகளின் மேல் போட்ட வண்ணப்பூச்சு,சுடி எல்லாமே ஒரே கலர்ல இருக்கறதைப்பாருங்க..இது தான் மேட்சுக்கு மேட்ச்..ஹி ஹி

டிஸ்கி 2 - திருப்பூர் ஜோதிஜி அண்ணன் எலக்‌ஷன்ல நிக்கறதை முன்னிட்டு கிஃப்டா குடுத்த திருப்பூர் பனியன் தான் மேடம் போட்டிருக்காங்க 2 வது ஸ்டில்லுல...தொடர்ந்து அவர் எல்லா நடிகைகளுக்கும் இதே டைப்ல (ஹி ஹி மாடல் நல்லாருக்குல்லா?)பனியன் வழங்குமாறு அன்போடு கேட்டுக்கொள்கிறேன்.

டிஸ்கி 3 - மேடத்தோட 3 வது ஸ்டில் பெண்களுக்கான விழிப்புணர்வு ஃபோட்டோ.. இள நரை வந்தாlலோ, கிழ நரை வந்தாலோ கறுப்பு மருதாணி தான் தலைக்கு போடனும்.. விவரம் தெரியாம சிவப்பு மருதாணி போட்டா இப்படித்தான் தலை செம்பட்டை ஆகிடும்..இந்த அரிய தகவல் தெரிவிச்சதுக்காக எனக்கு யாராவது அழகு டிப்ஸ் அழகேசன் விருது கொடுத்தா கூச்சமே இல்லாம வாங்கிக்குவேன்.. ( விருது வாங்க எதுக்கு கூச்சம்?)

Monday, March 28, 2011

எவண்டி உன்னைப்பெத்தான்.. ? அவன் மட்டும் என் கைல சிக்குனான்.. செத்தான்!!!!

http://narumugai.com/wp-content/uploads/2010/10/33876_471562211317_108887661317_6484073_6826200_n.jpg

1. “தலைவர் சென்னைல போட்டி போடாம ஏன் வெளி ஊர்ல போட்டி இடறாரு?”

      “சென்னை ஃபிகர்ஸை பார்த்து போரடிச்சுடுச்சாம். வெரைட்டியா ஸைட் அடிக்க ஐடியா பண்ணீட்டாரு”


------------------------------------------------

2.   “தலைவர் ஜெய்க்கபோறது உறுதி-னு எப்படி சொல்ற?”

       “செய்யும் ஊழலில் 50% மக்களுக்கு ஷேர் தர்றேனு சொல்லீட்டாரே?”


--------------------------------------------------------

3.    “தலைவர் ஏன் தனிக்குடித்தனம் வந்திருக்காரு?”

       “அவரு இந்த எலக்‌சனை புறக்கணித்ததா அறிவிச்சதும் அவரோட சம்சாரம் அவரை புறக்கணிச்சுடுச்சாம்”


--------------------------------------------
https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhD3rMCCt_qH2GSwook6WXZ9gSfP4p_Sx3EqNRXjB1IDf144FjGbi5FaHt6f7nPw-RL7bU2xC-oFmCdvSkPTf10dN3Ky0FCegV50KordYwffGQDEHvVMSgDC1PRx7GySIfAZ-BGcjT49xxS/s1600/anushka_1.jpg
4.   “தலைவர்க்கு சொந்தமா வலைப்பூ(BLOGSPOT) ஆரம்பிக்கலாமா-னு கேட்டது தப்பாப் போச்சு?”

       ‘’ஏன்?”

பூ லேடீஸ் வச்சுக்கறது, வலை மீனவர்கள் வச்சுக்கறது எனக்கு எதுக்கு இதெல்லாம்? அப்படீனுட்டாராம்”

--------------------------------------------------



5.  “நாங்கள் ஆட்சிக்கு வந்தால் நமது கிரிக்கெட் அணி தவற விட்ட உலகக் கோப்பையை வெற்றி பெற்ற அணியிடமிருந்து நைசா அபேஸ் பண்ண ஆவண செய்யப்படும்”

---------------------------------------------------------



6.   “தலைவர் ஏன் மிரண்டுபோய் நிக்கறாரு?”

      “எவண்டா உன்னை எலக்‌ஷன்ல நிக்க சீட் குடுத்தான்... அவன் மட்டும் என் கைல கிடைச்சா அவன் செத்தான் அப்படினு மக்கள் திட்டுனாங்களாம்”

--------------------------------------------
http://narumugai.com/wp-content/uploads/2010/10/Anushka-1.jpg

7.    “தலைவர் பிரச்சாரத்துக்காக நெட்ல பிளாக்ஸ்பாட் ஆரம்பிச்சது தப்பா போச்சு”

        “ஏன்?”

      “அவர் மேல பிளாக் மார்க் விழுந்துடுச்சு”

-----------------------------------------------------


8.   “எல்லா தொகுதிலயும் தனியா போட்டி இடுவேன் -னு அறிவிச்ச தலைவர் ஏன் வாபஸ் வாங்கிட்டார்?”

        “234 வேட்பாளர்கள் கிடைக்கலையாம். மொத்தமே 63 பேர் தான் கட்சில இருந்தாங்களாம்”.

-----------------------------------------



http://narumugai.com/wp-content/uploads/2010/11/Sneha-ullal12.jpg

9.    “நம்ம தலைவர்க்கு தேர்தல் ஜுரம் பிடிச்சிருக்கு .....”

       “இப்பவே இப்படீன்னா.. தேர்தல் ரிசல்ட் வந்தா அவ்ளோதான் போல...”





----------------------------------------------------------

10.    “தலைவர்க்கு இன்னும் சின்னம் ஒதுக்கல போல...?”

         “ஆமா...போற போக்க பார்த்தா அவரையே ஒதுக்கீருவாங்க போல”









-----------------------------------------------------------------


டிஸ்கி 1 - முத ஸ்டில்லுல இருந்து நாம கத்துக்க வேண்டிய நீதி என்னன்னா மஞ்சள் கலர் டிரஸ் போடறவங்க எல்லாம் டி எம் கே கிடையாது...அதே மாதிரி மேட்சுக்கு மேட்ச்  வளையல் போடற பொண்ணுங்க வலது கைல கரெக்ட்டா மேட்சிங்கா போட்டாலும், இடது கைல சொதப்பிடுவாங்க..ஜெ  கேப்டனுக்கு கரெக்ட்டா சீட் குடுத்துட்டு, வை கோ  மேட்டர்ல சொதப்புன மாதிரி......


டிஸ்கி 2 - அனுஷ்காவோட ரெண்டாவது ஸ்டில்லைப்பார்த்துட்டு நான் இரட்டை இலை ஆதரவாளன்னு யாரும் முத்திரை குத்தாதீங்க.. வேணும்னா அனுஷ்கா ஆதரவாளன்னு சொல்லிக்குங்க.. ஒண்ணும் பிரச்சனை இல்லை.. ( எனக்கு என்ன பிரச்சனை..? அனுஷ்காவுக்குத்தான் பிரச்ச்னை..) தி மு க காரங்க வெற்றிலை = வெற்று + இலை எனவும், அதிமுக காரங்க வெற்றி + இலை எனவும் அர்த்தம் கற்பிப்பாங்க...நமக்கு அதைப்பற்றி கவலை இல்லை.. அனுஷ்கா மேல் படர்ந்த வெற்றிலைக்கொடி  அடையாளத்துக்கு 2 இலையை விட்டுட்டு போயிடுச்சு போல,.....#கவிஞண்டா...


டிஸ்கி 3 - அனுஷ்காவோட 3 வது ஸ்டில்லைப்பார்த்துட்டு கம்யூனிஸ்ட்னு நினைச்சுடாதீங்க.. எனக்கு அந்த ஸ்டில்லைப்பார்த்தா பாப்பாவுக்கு வளையல் டேஸ்ட்டே இல்லைன்னு தோணுது.. (வளையல் எப்படி டேஸ்ட்டா இருக்கும்? #டவுட்டு)  அழகா ரெண்டே ரெண்டு வளையல் போட்டாத்தான் நல்லாருக்கும்.. இப்படியா கரகாட்டக்காரி மாதிரி போடறது..?


டிஸ்கி 4  - கடைசி படத்துல இருக்கற ஃபிகரு பேரு சினேஹா.. நம்ம ரெகுலர் சினேகா இல்ல ( ரெகுலர் சினேகா = ரெகுலரா நாம பார்க்கும் சினேகா ஹி ஹி )

வானம் படத்துல வர்ற இன்னொரு ஹீரோயின்.. படத்துல அவங்க போட்டிருக்கற  டி சர்ட் வாசகம் என்ன? னு தயவு செஞ்சு யாரும் உத்து பார்க்காதீங்க.. ஏன்னா 2 மணி நேரமா பார்த்த ராம்சாமிக்கே அது என்ன?னு தெரியலையாம்...

டிஸ்கி 5  - டைட்டிலுக்கான விளக்கம் .. வானம் படத்துல சிம்பு இயற்றி பாடி உள்ள அந்த பாடல் வரிகளின் பல்லவிக்கு பெண்கள் பலத்த எதிர்ப்பை தெரிவிக்கறாங்களாம்.. அப்போ நியாயமா நாம என்ன பண்னனும்? ஹி ஹி அதே..... ஆதரிக்கனும்.. ஹி ஹி

கேபிள் சங்கரை வம்புக்கு இழுத்த செந்தில்


http://www.kollywoodtoday.com/gallery/actress/anjali/images/anjali_027.jpg 

1. பத்திரிகைச் செய்தி: தேர்தல் ஓட்டுப்பதிவு நடக்கும் ஏப்ரல் 13க்கு, இரண்டு நாட்களுக்கு முன்பாக தமிழகம் முழுவதும் உள்ள, "டாஸ்மாக்' கடைகளை மூடும்படி, தேர்தல் கமிஷன் அறிவுரை வழங்கி உள்ளது. அதனால், கமிஷனின் உத்தரவுப்படி, கடைகளை மூடுவது குறித்து அதிகாரிகள் ஆலோசனை மேற்கொண்டுள்ளனர்.

சட்டப்படி கடையை மூடுனா கடைல ஒர்க் பண்றவங்க செட்டப்படி சைடுல கடையை திறந்து வெச்சு டபுள் மடங்கு லாபம் பார்த்துடுவாங்க..நட்டம் கவர்மெண்ட்டுக்கும், குடிமகனுக்கும் தான்.. 


--------------------------------------------------

2. தமிழக துணை முதல்வர் ஸ்டாலின்: கடந்த பொதுத் தேர்தலில் கொடுத்த வாக்குறுதிகளை அரசு நிறைவேற்றி உள்ளது. அதன் அடிப்படையில், மக்கள் எங்கள் மீது அசைக்க முடியாத நம்பிக்கை வைத்துள்ளனர். அதனால், தேர்தல் அறிக்கை, மக்களின் நம்பிக்கைக்குரிய வரவேற்பைப் பெற்றுள்ளது.

அண்ணே.. அப்புறம் ஏன் நீங்களும், கலைஞரும் சென்னைல போட்டி போடாம இடத்தை மாத்தறீங்க..?போடா வெண்ணை அப்படின்னு சொல்லக்கூடாது,,


-----------------------------------------------------
http://www.cinespot.net/gallery/d/370379-1/Tapsi+photos+_19_.jpg
3. பா.ம.க., தேர்தல் அறிக்கை: பார்லிமென்ட் மற்றும் சட்டசபையில் பெண்களுக்கு, 50 சதவீத இட ஒதுக்கீடு அளிக்க வேண்டும் என வலியுறுத்துவோம். புகையில்லா தமிழகம், பூரண மதுவிலக்கு ஆகியவற்றை அமல்படுத்த பாடுபடுவோம்.

தமிழகத்தை குஜராத் ஆக்க பாடுபடுவோம்னு சொல்றீங்க.. சந்தோஷம்.. ஆனா நீங்க கூட்டணி வெச்சிருக்கறது தி மு க கூட.. தமிழகத்தை பீகார் மாதிரி ஆக்காம கலைஞர் ஓய மாட்டார் போல... 


----------------------------------------

4. மா.கம்யூ., மாநிலச் செயலர் ராமகிருஷ்ணன் பேட்டி: ஊழல், விலைவாசி உயர்வு, மின் வெட்டு போன்ற பலவற்றால், தி.மு.க., அரசு தோல்வியை சந்தித்திருக்கிறது. கடந்த, தி.மு.க., தேர்தல் அறிக்கையில், கூறப்பட்ட இரண்டு ஏக்கர் இலவச நிலம் வழங்கும் திட்டம், இந்த முறை கூறப்படவில்லை. ஓட்டுக்கு பணம் கொடுத்தல், வன்முறை போன்ற தி.மு.க.,வினரின் தில்லுமுல்லு செயல்களை வாக்காளர்கள் நிராகரித்து, முறியடிப்பர்.

எல்லா இடங்களையும் இலவசமா மக்களுக்கு கொடுத்துட்டா மந்திரிங்க என்ன பண்ணுவாங்க..இருக்றதை அள்ளிக்குடுத்துட்டு தொண்டு செய்ய அவங்க என்ன இளிச்ச வாயர்களா? 

----------------------------------
http://www.teluguflavours.com/gallery/allgallerys/Models/876/Tapsi%20Panu%20(3).jpg
5. பார்லிமென்ட் பா.ஜ., தலைவர்கள் சுஷ்மா சுவராஜ், அருண் ஜெட்லி கூட்டாக அளித்த பேட்டி: நம்பிக்கை ஓட்டெடுப்பில், எம்.பி.,க்களுக்கு லஞ்சம் கொடுக்கவில்லை எனக் கூறி, பார்லிமென்ட்டை தவறாக வழி நடத்துகிறார் பிரதமர். இந்த விஷயத்தில், பார்லிமென்ட் கமிட்டி கண்டறிந்த உண்மைக்கு மாறான கருத்தை பிரதமர் தெரிவித்திருக்கிறார். நம்பிக்கை ஓட்டெடுப்பில் வெற்றிபெற லஞ்சம் கொடுக்கப்பட்டது, தற்போது நிரூபணமாகியுள்ளது. லஞ்சம் கொடுத்து, கட்சி மாறி ஓட்டளிக்க வைத்ததன் மூலம் ஆதாயமடைந்த முதன்மை பயனாளிகள் பிரதமரும், ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசும் தான்.

ஆமா.. இது வரை நடந்த எல்லா நம்பிக்கை ஓட்டெடுப்பிலும் இது மாதிரி நடந்திருக்கே.. என்னமோ புதுசா சொல்றீங்க.. காலம் காலமா நடந்துட்டு வர்ற சம்பிரதாயத்தை மாத்த முடியுமா? நம்ம இந்தியா பழம்பெரும் பாரம்பரியம் மிக்கதாச்சே.. ?

---------------------------------------

6. லோக் ஜனசக்தி தலைவர் ராம்விலாஸ் பஸ்வான் பேச்சு: காங்கிரஸ், பா.ஜ., கூட்டணியில் இடம் பெறாமல், சில கட்சிகள் உள்ளன. மூன்றாவது அணி அமைக்க வேண்டியதன் அவசியத்தை, இந்த கட்சிகள் உணர்ந்துள்ளன. இதை செயல்படுத்த, அனைத்து கட்சித் தலைவர்களும், வேறுபாடுகளை மறந்து, ஓரணியில் திரள வேண்டும்.

மூன்றாவது அணியும்,ராமராஜன் படமும் ஒண்ணு தான்.. வேலைக்காகாது...

----------------------------------------
https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiP1U86zMIPEkcZkcj4mbxYH9Sjmu35JmSNunYDCnnIs1-jAqCuzpdBcQi_vuaNH13Rh0TcKyiK-9aeYNAhZ5FCeOGGYmAf6ltsigDHQIyCmm6d5jQcGcfIV9Kvq9WQx2WL711VkYraTvRe/s640/Tamanna+47852+(17).jpg
7. நகைச்சுவை நடிகர் செந்தில் பேட்டி : தமிழகத்தில் திருக்குவளை மன்னராட்சியை ஒழிக்க மக்கள் விழிப்புணர்வுடன் இருக்கின்றனர். இலவச, "டிவி'களை கொடுத்து மக்கள் வரிப்பணத்தை வீணாக்கியவர் ஏன், "கேபிள்' இணைப்பை இலவசமாக வழங்கவில்லை?

கேபிள் சங்கர் பிளாக்ல போய் சப்ஸ்கிரைப் பண்ணிக்கிட்டா இலவசமா அவரோட படைப்புகள்  ரீடர்ல வருமே... இதுக்கு எதுக்கு கலைஞர் லெவலுக்கு போறீங்க? 

---------------------------------------

8. தமிழக மக்கள் முன்னேற்றக் கழக நிறுவனத் தலைவர் ஜான்பாண்டியன் பேச்சு: உண்டு கொழுத்த முதலைகளாக, மக்களை ஏமாற்றி பிழைக்கும் கட்சிகளாக திராவிடக் கட்சிகள் உள்ளன. "இலவசம்' என்ற பெயரில் மக்களை ஏமாற்றி, முட்டாளாக்கி, பிச்சைக்காரர்களாக்கி வருகின்றன. அவர்களுக்கு நமது கூட்டணி சிம்மசொப்பனமாக உள்ளது.

முதல்ல சொன்ன மேட்டர் சீரியஸா யோசிக்க வேண்டியதுங்கண்ணா.. கடைசியா சொன்னீங்களே.. சிம்ம சொப்பனம், ( SIM  ம சொப்பனம்) பேட்டரி சொப்பனம், செல்ஃபோன் சொப்பனம்னு .. நீங்க ஒரு தமாஷ்காரர்ங்கண்ணா.. 

------------------------------------

9. கள் இயக்க ஒருங்கிணைப்பாளர் நல்லசாமி பேச்சு: கள் இறக்க விதித்திருக்கும் தடையை நீக்க தமிழக அரசு மறுத்து விட்டது. கள் இறக்க அனுமதிக்க வேண்டும் என்று கள் இயக்கம் கொண்டிருக்கும் கோரிக்கையில் நியாயமில்லை என முதல்வரும், அவர் அமைச்சரவையில் இடம் பெற்றுள்ளவர்களும் நிரூபித்து விட்டால், எங்களது கோரிக்கையைக் கைவிட்டுவிடுவோம்.

கள் இறக்க அனுமதி கொடுத்துட்டா அரசுக்கு வரக்கூடிய வருமானங்கள் குறைஞ்சிடும்.எல்லா பயனையும் விவசாயிங்களே அடைவாங்க.. அந்த அளவு அரசியல்வாதிகளை இளிச்ச வாயர்கள்னு நினைச்சீங்களா?


டிஸ்கி 1 - முத ஸ்டில்லுல அஞ்சலி சேலை கட்றக்குள்ள ஃபோட்டோகிராஃபருக்கு அவசரம் போல.. ஆனா அவர் ஃபோட்டோ எடுக்கறப்ப நியாயமா அஞ்சலி கையை குறுக்க தானே கட்டி பதட்டப்படனும்? சிரிச்சுக்கிட்டே போஸ் குடுக்குதே ? #டவுட்டு


டிஸ்கி 2  - ரெண்டாவது ஸ்டில்லுல தப்ஸி போட்டிருக்கற சேலை ஹீரோக்களுக்கு ரொம்ப சிரமத்தை குடுக்கும்.. டூயட் சீன்ல குத்தும்...அதனாலதான் ஒரு பாதுகாப்புக்காக அப்படி டிரஸ் போட்டிருக்காங்க போல.. பொது நலன் கருதி  வெளியிடுவோர்  அட்ரா சக்க அல்டாப் பேர்வழி.. ஹி ஹி

டிஸ்கி 3  - மூணாவது ஸ்டில்லுல தப்ஸியைப்பார்த்ததும் எனக்கு 2 மேட்டர் நினைவு வருது. 1. ஊட்டி, கொடைக்கானல் ரோட்ல வைக்கப்ட்ட போர்டுகளான அபாய வளைவுகள் ஜாக்கிரதை, குறுகிய சாலை கவனமாக செல்லவும்.. ஹி ஹி . 2. அவர் அவுட் ஆஃப் ஃபேஷனான ரப்பர் வளையல் போட்டிருந்தாக்கூட அதுலயும் மேட்சுக்க்கு மேட்ச் போட்டிருக்கார் பாருங்க..

டிஸ்கி 4.   - கடைசி ஸ்டில்லுல பாருங்க தமனா கை கழுத்து வெறுமையா இருப்பதை.. பாப்பாவுக்கு எக்ஸ்ட்ரா அணிகலன்கள் பிடிக்காது போல..அந்த இமேஜ் எல்லையை மீறி ஓவர்லேப் ஆகற மாதிரி இருக்கு கரெக்ட் பண்ணுங்க (தமனாவை அல்ல அவரோட இமேஜை)  அப்படின்னு கமெண்ட் போட நினைப்பவங்க.. கவனிக்க நான் வேணும்னு தான் அப்படி போட்டேன்.. அவங்க நம்மை ஆக்ரமித்த விதத்தை விளக்கும் சிம்பாலிக் ஷாட் அது.. ஹி ஹி  ( இவனுக்கு மனசுல கே பாலச்சந்தர்னு நினைப்பு)

டிஸ்கி 5  - பதிவின் டைட்டிலுக்கும், பதிவுக்கும் சமபந்தம் இல்லையே என யோசிப்பவர்கள் கமெண்ட் 7 ஐ பார்க்கவும்.. ஹி ஹி இப்படிக்கு சமாளிஃபிகேஷன் சண்முகராஜன்.

டிஸ்கி 6 - சனி ,ஞாயிறு நெட் பக்கமே வராதவங்களுக்கு

டிஸ்கி A - குள்ளநரிக்கூட்டம் - காதலில் கண்ணியம் + காமெடியில் WIN னியம் - சினிமா விமர்சனம்


டிஸ்கி B - சட்டப்படி குற்றம் - ஆ ராசாவை துவைச்சு காயப்போட்ட படம் - சினிமா விமர்சனம் 

டிஸ்கி C SUCKER PUNCH - ஹாலிவுட் சினிமா விமர்சனம் 18 கூட்டல்

Sunday, March 27, 2011

உமா சங்கர் ஐ.ஏ.எஸ். பரபரப்பு பேட்டி - சி எம் போஸ்ட்டுக்கு கலைஞர், ஜெ இருவருமே தகுதியானவர்கள் இல்லை


http://www.vinavu.com/wp-content/uploads/2010/07/uma-shankar-ias.jpg
நிமிடத்துக்கு நிமிடம் அரசியல் நிலை மைகள் மாறிக்கொண்டே இருக் கின்றன. கூட்டு, பிளவு, மீண்டும் கூட்டு எனத் தமிழக அரசியல் களத்தில் இதுவரை கண்டிராத கூத்துக்கள் எல்லாம் அரங்கேறுகின்றன.அரசியல் கட்சிகளின் அனுதின அதிரடிகளில் நியாயமும் நிலைப்பாடும் கேலிக்கு உள்ளாகின்றன

. கண் முன்னே நடக்கும் அத்தனை தலைகீழ் நிகழ்வுகளையும்  அப்பாவியாகப் பார்த்துக்கொண்டு இருக்கிறான் வாக்காளன். 'இவர்களில் யாரைத் தேர்ந்தெடுப்பது?’ என மனசாட்சியோடு மல்லுக்கட்டும் வாக்காளனுக்கு நம்பிக்கை பகர்கிறார் உமா சங்கர் ஐ.ஏ.எஸ். 


''கொடைக்கானலுக்குக் குடும்பத்தோடு கிளம்பினோம். 120 கி.மீ. வேகத்தில் சென்ற எங்களுடைய கார், திடீரெனத் தலை குப்புறக் கவிழ்ந்துவிட்டது. அவ்வளவு பெரிய விபத்து நடந்தும் எங்களுக்குச் சிறு சிராய்ப்புகூட இல்லை. அடுத்த இரண்டு மணி நேரத்தில் இன்னொரு கார் வரவழைத்து, எவ்விதப் பதற்றமும் பயமும் இல்லாமல் கொடைக்கானல் பயணத்தை முடித்தேன். 'இந்த விபத்தில் நமக்கோ, குழந்தைகளுக்கோ ஏதும் ஆகிஇருந்தால்...’ என நான் யோசிக்கவே இல்லை.

'நான் நியாயமாகவும், எதையும் எதிர்கொள்ளும் நேர்மையுடனும் இருக்கிறேன். அதனால், எந்த நிகழ்வாலும் என்னைக் குலைக்க முடியாது. நான் என் பாதையில் போய்க்கொண்டே இருப்பேன். நியாயமாகவும் நேர்மையாகவும் வேலை பார்ப்பவர்களுடன் கடவுள் எப்போதும் உடன் இருக்கிறார் என்பது என் நம்பிக்கை மந்திரம். இது என் மனசாட்சியை வழிநடத்துகிறது. இத்தகைய மந்திரம் ஒவ்வொரு வாக்காளரின் மனத்திலும் எதிரொலித்தால், நமக்கான தலைமை தகுதி வாய்ந்ததாக இருக்கும்.


'தலை சரியாக இருந்தால், வால் சரியாக இருக்கும்’ என ஒரு சொலவடை சொல்வார் களே... அதைப்போல் நமக்கான தலைவர் களைத் தகுதிமிக்கவர்களாக நாம் தேர்ந்தெடுத்தால், இந்த தேசமே தகுதியான தேசமாகிவிடும்!

இன்றைய அரசியலில் 95 சதவிகிதத் தலைவர்கள், சுயநலனை மட்டுமே குறிக் கோளாக வைத்திருக்கிறார்கள். அடித்துப் பிடித்து ஆட்சிக்கு வந்தால் போதும். மக்களைப் பற்றி யோசிக்க வேண்டியதே இல்லை. 

முடிந்தவரை நான்கைந்து தலைமுறைகளுக்குத் தேவையானவற்றைக் குறுக்கு வழியில் சம்பாதிக்க வேண்டும். இன்றைய தலைவர் களில் பெரும்பாலானவர்களுக்கு இதுதான் பிரதான கனவு. தங்களைத் தேர்ந்தெடுத்த மக்களுக்கு ஏதாவது செய்ய வேண்டுமே என்கிற சிறு அக்கறைகூட இன்றைய தலைவர்களுக்கு இல்லை.

பிரதமர் என்கிற உயரிய பதவி தொடங்கி, பஞ்சாயத்துத் தலைவர் என்கிற பதவி வரை இதே மாதிரியான பாராமுகங்கள்தான் மக்களுக்கான பரிசாகக் கிடைக்கிறது. மக்களின் பிரதிநிதிகளாகத் தேர்ந்தெடுக்கப்படுபவர்கள் மக்களைப் புறக்கணிக்கவும், சில நேரங்களில் மக்களை அடக்கி ஆளவும் நினைக்கிறார்கள். தேர்தலின்போது மட்டுமே திரும்பிப் பார்க்கப்படுகிற ஜீவன்களாக மக்களைப் பார்க்கிறார்கள்.


இன்றைக்கும் மக்களின் ஊழியனாகத்தான் என்னை அடையாளப்படுத்துகிறேன். அதன்படியே நடக்கிறேன். திருவாரூரில் நான் மாவட்ட ஆட்சியராக இருந்தபோது, சாலைகள் போடப்படும் இடத்தை நேரடியாக ஆராய்வேன். டேப் பிடித்து அளந்து பார்ப்பேன். வெறும் 40 சதவிகிதக் கற்களைப் போட்டுவிட்டு, 100 சதவிகிதம் போட்டதாகச் சொன்னதை, களத்திலேயே கண்டு பிடித்தேன்.


'என்னுடைய எஜமானர்கள் மக்கள்தான்!’ என்கிற எண்ணமே, நேர்மையான அதிகாரிகளை மக்களின் கடைக்கோடி வாழ்க்கை வரை உற்றுப் பார்க்கவைக்கிறது. அரசியல் தலைவர்களிடம் மக்கள் எதிர்பார்ப்பது இத்தகைய அக்கறையான கவனிப்பைத்தான். ஆனால், ஓட்டு வாங்கி ஜெயித்த உடனேயே மக்களின் எஜமானர்களாக அரசியல் தலைவர்கள் மாறிவிடுவதுதான் காலம் காலமாக இந்த சமூகத்தைத் துரத்தும் அவலம். 'தானாக எதுவும் மாறாது’ என்கிற பேருண்மை ஒவ்வொரு வாக்காளரையும் உந்தித்தள்ளும்போது, இந்த அவலம் நிச்சயம் அகற்றப்படும்!

யாரைத் தேர்ந்தெடுக்க வேண்டும் என்பதில், வாக்காளர்கள் மிகுந்த நிதானத்துடனும் ஆராய்ந்து தெளிந்த அறிவுடனும் செயல்பட வேண்டும். முதலில் வேட்பாளர் போட்டியிடும் கட்சியின் நிலைப்பாட்டை யும், அவர்களின் முந்தைய செயல்பாட்டை யும் கவனிக்க வேண்டும். அந்தக் கட்சியின் முதலமைச்சர் வேட்பாளர் யார் என்பது தெரிந்து, அவரைப்பற்றியும் தேர்ந்த அறிவோடு ஆராய வேண்டும். 

முதலமைச்சர் வேட்பாளர் சரியில்லாதவராக இருந்தால், அவருடைய கட்சி வேட்பாளர் எவ்வளவு நல்லவராக இருந்தாலும், அவருக்கு நம் வாக்கைச் செலுத்தக் கூடாது. காரணம், நல்ல வேட்பாளருக்கு நாம் செலுத்தும் வாக்கே தவறான ஒருவரைப் பதவியில் அமர்த்த அடிகோலிவிடும் அபாயம் இருக்கிறது. முதலமைச்சர் வேட்பாளர் நல்லவராக இருந்து, நம் தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர் தவறான வராக இருந்தாலும், அவருக்கு நாம் வாக்களிக்கக் கூடாது.


யாராவது ஒரு முதலமைச்சர் வேட்பாளருக்கு ஓட்டுப் போட வேண்டும் என முடிவு எடுத்தால், போட்டியில் இருக்கும் கட்சிகளில் யார் குறைந்தபட்ச ஊழல் பேர்வழி என்பதைக் கண்டறிந்து, அவர்களுக்கு வாக்களிக்கலாம். 'நமக்கான பிரதிநிதி கள் நல்லவர்களாக இருக்க வேண்டும்!’ என்கிற அக்கறை வாக்களிக்கும்போது நமக்குள் ரீங்கரித்துக்கொண்டே இருக்க வேண்டும். போட்டியிடும் யாரையுமே பிடிக்கவில்லை என்றால், சுயேட்சை வேட்பாளர்களை ஆதரிக்கலாம். இல்லையேல், 49 ஓ-வுக்கு வாக்கு அளிக்கலாம்.


தேர்தல் தினத்தில் எத்தகைய வேலைகள் இருந்தாலும், வாக்குப் போடும் வாய்ப்பை மட்டும் தவறவிடக் கூடாது. கிராமங்களைக் காட்டிலும் நகரவாசிகள்தான் வாக்களிப்பது வெட்டி வேலை என எண்ணி, அன்றைய தின விடுமுறையை வேறு வேலைகளுக்குப் பயன்படுத்திக் கொள்கிறார்கள்.

க்யூவில் நிற்பதைக்கூட அவர்கள் கௌரவக் குறைச்சலாக நினைக்கிறார்கள். இந்த நாட்டின் தலையெழுத்தைத் தீர்மானிக்கும் சக்தி நமக்கு இருக்கிறது என்கிற ராஜ மரியாதையை அவமானமாக நினைக்கும் அவலத்தை என்னவென்று சொல்வது? ஐந்து வருட ஆட்சியைத் தீர்மானிக்கும் பெரும் தகுதியைத் தவிர்த்துவிட்டு, வாக்குப் போடாமல் புறக்கணிப்பது தேசத் துரோகம். 

வாக்களிக்க மறுப்பவர்கள் தேசத் துரோகிகள். எத்தனையோ பேர் சிந்திய ரத்தத் துளிகளின் வடிவம் தான் நமக்கான சுதந்திரம். அதை நாமே அவமானப் படுத்துவதற்குச் சமமானதுதான் வாக்களிக்காமல் புறக்கணிப்பது!


அடுத்தது அன்பளிப்பு... ஐந்தாவது ஆண்டின் 11-வது மாதம் வரை மக்களைத் திரும்பியே பார்க்காதவர்கள், திடீரென அன்பு அவதாரம் எடுப்பார்கள். வலிய வந்து வணங்குவார்கள். ஏழைகளைப் பணத்தால் லபக்க முடியும் என்கிற ஆணையத்தில் இல்லாத 'தேர்தல் விதி’ அவர்களின் ஆணவத்தில் இருக்கும். அதனாலேயே வற்புறுத்திப் பணத்தைத் திணிப்பார்கள்.
Hilarious political cartoon images
அன்பளிப்புகள் தாராளமயமாகும். தேர்தல் நேரத்துத் தூண்டில்கள் துரத்தும்போது, எதற்கும் ஆசைப்படாத நிமிர்தலோடு, நாம் அவர்களைப் புறக்கணிக்க வேண்டும். லஞ்சம் வாங்குவது சாபத்துக்குச் சமமானது. அந்தப் பணமோ, பொருளோ, நம் வீட்டில் இருக்கவே கூடாது. நம் உழைப்பை விஞ்சி ஒரு பைசா கிடைத்தாலும், நாம் பிச்சைக்காரர்களே! 

இந்த உண்மையும் உளமார்ந்த வன்மையும் இன்றைக்கும் நிறைய கிராம மக்களிடம் இருக்கிறது. 'ஒன்னோட பணம் எனக்கெதுக்கு... நீ யார் வயித்துல அடிச்சு சம்பாரிச்சியோ?’ என வேட்பாளர்களைத் துரத்தும் பல பாட்டிகளை நான் பார்த்துஇருக்கிறேன். அத்தகைய நேர்மையும் வன்மையும் அனைத்து வாக்காளர்களிடமும் ஏற்பட வேண்டும்.


நம் கையில் இடப்படும் ஒரு துளி மையால் இந்த தேசத்தையே திருத்தி எழுத முடியும் என்கிற நம்பிக்கை நம்முள் எழுந்தால்... லஞ்சம், ஊழல், சமூக ஏற்றத்தாழ்வு, மக்களை மதிக்காத போக்கு என அத்தனை கேடுகளும் அகற்றப்பட்டுவிடும். மீண்டும் சொல்கிறேன்... தலை சரியாக இருந்தால், வால் சரியாக இருக்கும். 'தலை’யைத் தேர்ந்தெடுக்க வேண்டிய தகுதிபடைத்த நாம், தலைஆட்டும் வர்க்கமாக இனிமேலும் இருக்கக் கூடாது!''

டிஸ்கி 1 - குள்ளநரிக்கூட்டம் - காதலில் கண்ணியம் + காமெடியில் WIN னியம் - சினிமா விமர்சனம்


டிஸ்கி 2 - சட்டப்படி குற்றம் - ஆ ராசாவை துவைச்சு காயப்போட்ட படம் - சினிமா விமர்சனம் 

டிஸ்கி 3 SUCKER PUNCH - ஹாலிவுட் சினிமா விமர்சனம் 18 கூட்டல்

Saturday, March 26, 2011

SUCKER PUNCH - ஹாலிவுட் சினிமா விமர்சனம் 18 கூட்டல்

https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjGewYRXApehgg9oWKWg7_ekhMFh9kHWHxt3FAKkhGh4s2Hicgi2J_XCl5DPwFqxuU1Bqg7UWEdix6tNo7wwYJxIVNBXXoUDobgPXp2V8KcVrZW9mtbBAsn_R9lEfw5WLCGNXoyKVzatvE2/s1600/Sucker+Punch+Wallpaper.jpg 

டைட்டிலையும், போஸ்டரையும் பார்த்தாலே சில படங்கள் பார்த்துடலாம்னு நினைக்க வைக்கும்.. ( இல்லைன்னா மட்டும் நீ பார்க்காமயா விடப்போறே..)சில படங்கள் போலாமா? வேணாமா?ன்னு டைலம்மாவை ஏற்படுத்தும்..(அம்மா ஆதரவாளர்கள் மன்னிக்க)

ஈரோடு வி எஸ் பி தியேட்டர்ல இந்தப்படம் ரிலீஸ் ஆனதுமே இந்தப்படம் போக எனக்கு மனசே இல்லைதான்... சாந்தி அல்லது நித்யா படம் ரிலீஸ் ஆகாததால நமீதா இல்லாத மானாட மயிலாட நிகழ்ச்சியை மும்தாஜை வெச்சு அட்ஜஸ் பண்ணுன மாதிரி இந்தப்படத்துக்கு போலாம்னு முடிவு பண்ணுனேன்.( சாந்தி அல்லது நித்யா படம் பார்க்க முடியாம ரிட்டர்ன் ஆன ரசிகர்கள் மட்டும் தமிழகம் முழுக்க ஒண்ணே முக்கால் லட்சம் பேராம் # நான் லட்சத்தில் ஒருவன் ஹி ஹி )

சரி.. மேட்டருக்கு வருவோம்..படத்தோட கதை என்ன?ஒரு கில்மா கிளப்.. அதுல நிறைய பொண்ணுங்க மாட்டிக்கறாங்க..அவங்கள்ல 6 பேரு தப்பிக்க நினைக்கறாங்க.. அவங்க முயற்சி வெற்றி பெற்றதா? அல்லது வை கோ நிலைமை மாதிரி ஆச்சா? என்பது தான் கதை..
http://www4.pictures.zimbio.com/gi/Vanessa+Hudgens+Sucker+Punch+Red+Carpet+2010+BEB0p-9mMTGl.jpg
படத்தோட ஓபனிங்க் சீன்ல ஏகப்பட்ட ஃபிகருங்களைப்பார்த்ததும் நம்மாளுங்க மூச்சுக்காத்து கூட விடாம சைலண்ட்டா பார்க்கறாங்க.. ( சத்தம் போட்டு அந்த ஃபிகருங்க கோவிச்சுட்டுப்போயிட்டா..?)அதுல வேற வில்லன் அடிக்கடி பாஸ் வருவார்.. நீ ரெடியா இருந்துக்க.. அவர் உன்னை அடையாம  விட மாட்டார்னு பஞ்ச் டயலாக் சொன்னதால எவனும் வெளில போகவே இல்ல..( போன நேரத்துல சீன் போய்ட்டா..?)

ஒரு ஹால்ல எல்லாரும் வெயிட் பண்றாங்க.. இந்த பொண்ணுங்க எல்லாம் வந்து நிக்கறாங்க..டான்ஸ் நடக்கப்போகுதாம்... (அட போங்கப்பா.. எதுக்கு டான்ஸ்? ஸ்ட்ரைட்டா மேட்டருக்குப்போக வேண்டியதுதானே?ன்னு ஆடியன்ஸ் தரப்புல அவனவன் கமெண்ட் அடிக்கறான் )

ஹீரோயின் டான்ஸ் பண்ணப்போறான்னு ஏகப்பட்ட பில்டப் குடுத்துட்டு ஹீரோயின் கண்ணை மூடி ஒரு கற்பனை உலகத்துல சஞ்சரிக்கறா.. அதுல 3 பயங்கர வில்லன்களை வாள் சண்டை போட்டு கொல்றா...( ஹாலிவுட் விட்டலாச்சார்யா படத்துக்கா வந்தோம்னு அவனவன் செம காண்ட் ஆகறான்.# அதென்ன ? காண்ட் ஆகறது? வை கோ வை கேட்கவும்.. ஹி ஹி )
http://www.flicksandbits.com/wp-content/uploads/2011/03/abbie-cornish-sucker-punch.jpg
முதல் டைம் இப்படி நடந்ததும் ஏதோ டைரக்‌ஷன் டச் போல .. போனாப்போகுது புடவை பறக்குது புடிச்சுக்கோ அப்படின்னு விட்டா .. இதே மாதிரி 4 தடவை டான்ஸ் ஆடறேன்னு சொல்லிட்டு ஒரு ஸ்டெப் கூட ஆடாம இப்படியே காமிக்ஸ் படம் காண்பிச்சா மனுஷனா பிறந்தவனுக்கு கோபம் வருமா? வராதா? சொல்லுங்க.. ( ஹி ஹி எனக்கு எந்த கோபமும் வர்லை..கிடைப்பதை வைத்து சந்தோஷப்படு.. ஓட்டுனவரை ரசி என்பதே என் பாலிசி என்பதால்.. ஹி ஹி )

ஏதோ ஒரு தமிழ்ப்படத்துல நான் ஆடாமல் ஆடுகிறேன் பாடாமல் பாடுகிறேன், ஆண்டவனைத்தேடுகிறேன் வா வா  அப்படின்னு அம்மா பாடுவாங்களே (அநேகமா ஆயிரத்தில் ஒருவன் என நினைக்கிறேன்) அந்த மாதிரி ஹீரோயின் அடிக்கடி வில்லன் கட்டாயத்தால பாடறாங்க.. நம்மால தாங்க முடியல...

ஹீரோயின் தப்பிக்க போடும் திட்டங்கள் எல்லாம் படு திராபை...ஒரே ஒரு சீனில் ஹீரோயின் இமைகள் இரண்டும் மூடும்போது க்ளோசப் ஷாட்டில் ஒரே ஒரு துளி கண்ணீரை முத்து போல ஓட விடுவது ஒண்டர் ஃபுல் ஷாட்...ஆனா ரசிகர்கள் அந்த ஷாட்டை ரசிக்கற மனோ நிலைலயா இருக்கான்?
http://www.celebdirtylaundry.com/wp-content/uploads/Vanessa-Hudgens-Sucker-Punch.jpg
எதிர்பார்த்த அளவு சீன் இல்லையே என விசனப்பட்ட ரசிகனின் மனதில் தங்கிய வசனம்

1.  வில்லன் - என்னோட கான்செண்ட்ரேஷன் ஃபுல்லா அந்த ஃபிகரை கரெக்ட் பண்றதுலயே இருக்கு.குருடோ, நொண்டியோ கோழியை அமுக்கறதுன்னு முடிவான பிறகு கப்புன்னு அமுக்கிடனும். யோசிச்சுட்டு இருக்கப்படாது.. ( கவுண்டமணி டயலாக்கை பேசறானே..?)

2. இது ஒரு நரகம் மாதிரி இருக்கு.. நான் தப்பிக்கப்போறேன்...

முடிஞ்சா தப்பி.. நானா வேண்டாம்கறேன் .?. வெளில போனா எனக்கு லெட்டர் போடு...

3. சண்டை நடக்கறப்ப அவங்களை சாகடிக்கத்தயங்காதீங்க..ஏன்னா அவங்க ஏற்கனவே செத்துட்டாங்க.. ( ஏதாவது புரிஞ்சுது..? படிச்ச உங்களுக்கே இப்படி இருந்தா பார்த்த எங்களுக்கு எப்படி இருக்கும்..?)

http://www.flicksandbits.com/wp-content/uploads/2010/12/sucker-punch-image-1.jpg
இயக்குநருக்கு சில கேள்விகள்

1. கொழந்தைப்பசங்களுக்கு அம்புலிமாமா கதை எடுக்கறதுன்னா ஹாரிபாட்டர் மாதிரி எடுங்க வேணாம்னு சொல்லலை.. சீன் படம் எடுக்கற மாதிரி பில்டப் குடுத்து ஏமாத்தாதீங்க.. ஏன்னா ஆண் பாவம் பொல்லாதது.. அவ் அவ் .. ஒரு ஆணோட கஷ்டம் இன்னொரு ஆணுக்குத்தான் தெரியும்.. ஹி ஹி 

2.தப்பிக்க பிளான் போடும் ஹீரோயின் அந்த பிளான் போட்ட மேப்பை அப்படியே லூஸ் மாதிரி வில்லன் வந்து பார்க்கட்டும்னு அழிக்காம விட்டுட்டு வந்துடுவாளா?

3.கற்பனை உலகத்துல சஞ்சரிக்கற ஹீரோயின் கவுதமி கணக்கா இருக்காங்க.. அவங்க கடோத்கஜன் மாதிரி இருக்கற அரக்கனை , டைனோசரை எப்படி சர்வ சாதாரணமா வெல்றாங்க..?

4. காது வலிக்கற மாதிரி டப டப னு சுட்டுட்டே இருந்தா மனுஷன் தியேட்டர்ல உக்காந்திருக்க வேணாமா?

5. லட்டு மாதிரி 6 ஃபிகர் இருந்தும் என்ன பிரயோஜனம்? உங்களுக்கு ஏதாவது பிரயோஜனம் இருந்திருக்கலாம்.. அது உங்க பர்சனல் மேட்டர்.. ரசிகனுகு என்ன யூஸ்..?
http://cdn.buzznet.com/media/jjr//2009/08/vanessa-sp/vanessa-hudgens-sucker-punch-vancouver-02.jpg
டிஸ்கி -1.  இங்கே இருக்கற ஸ்டில்ஸ்களைப்பார்த்துட்டு சி பி ஏமாத்தறான்.. படத்துல சீன் இருக்கும் போல .. போய்த்தான் பார்ப்பமே என நினைப்பவர்களுக்கு.. ரஜினி டயலாக் தான்.. உங்களை ஆண்டவனால கூட காப்பாத்த முடியாது.. ஹி ஹி


டிஸ்கி 2 - - குள்ளநரிக்கூட்டம் - காதலில் கண்ணியம் + காமெடியில் WIN னியம் - சினிமா விமர்சனம்


டிஸ்கி 3 - சட்டப்படி குற்றம் - ஆ ராசாவை துவைச்சு காயப்போட்ட படம் - சினிமா விமர்சனம் 

திருச்சியில் கலைஞரின் அத்து மீறிய பேச்சும், தேர்தல் கமிஷனை வம்புக்கு இழுத்த ஏச்சும் - காமெடி கும்மி


திருச்சியில்  25. 3.2011 நேற்று ( வெள்ளிக்கிழமை )இரவு நடைபெற்ற திமுக கூட்டணி பிரசார பொதுக் கூட்டத்தில் முதல்வர் கருணாநிதி பேசியதும்  அதற்கான என் கேள்விகளும்...


 தேர்தல் ஆணையம் நடுநிலையோடு செயல்பட வேண்டும் .  "எதிர்க்கட்சியாக இருக்கிறவர்களை ஆளும் கட்சியாக கொண்டு வரவேண்டும் என்கிற அளவில் இந்திய தேர்தல் ஆணையம் செயல்பட்டுக்கொண்டு இருக்கிறது,


ஆளும் கட்சியாக இருப்பவர்கள் மக்கள் நலனுக்கு எதிராக செயல்படுவது மட்டும் சரியா தலைவரே..?


"நான் 80 வருடத்துக்கு முன்பு திருக்குவளையில் ஒரு சாதாரண, சாமான்ய குடும்பத்தில் பிறந்தேன். அங்கு சாதி, மத, பண ஆதிக்கம் இருந்தது. அப்போது தந்தை பெரியாரின் கருத்துக்களை காதால் கேட்டும், அண்ணாவின் அரிச்சுவடிகளை கண்ணால் பார்த்தும், இரண்டு பேரின் அறிவுரைகளை கேட்டும் இந்த இயக்கத்தை நடத்தும் வலிமையை பெற்றேன்.


தலைவரே ... அம்மா மாதிரி ஆர்ப்பாட்டம் பண்ணாம கமுக்கமாவும், விஞ்ஞானப்பூர்வமாவும் ஊழல் பண்ணும் வித்தையை யார் கிட்டே கத்துக்கிட்டீங்க..? ஒரு வேளை சுயம்புவா..?
 

இப்படி திரட்டப்பட்ட வலிமையை மக்களுக்காக செலவழிக்க வேண்டும் என்று எண்ணி உழைக்கின்றேன். அந்த காலத்தில் நான், நாவலர் நெடுஞ்செழியன், பேராசிரியர் அன்பழகன் ஆகியோர் ஒரு கருத்தை அன்பிலாரிடம் கேட்டால் அவர் அண்ணாவிடம் கேட்போம் என்று சொல்வார்.


அன்று முதல் இன்று வரை உங்க கூடவே இருக்கும் விசுவாசி ஆன அன்பழகனை ஏன் துணை முதல்வர் ஆக்காம ஸ்டாலினை துணை முதல்வர்ஆக்கினீங்க தலைவரே..? 

உடனே நாங்கள் அண்ணாவிடம் கேட்டால் நமது காதர் மொய்தீனிடம் அந்த கருத்தை கேட்டு என்னிடம் சொல்லுங்கள், அவர் சொல்வது சரியாகத்தான் இருக்கும் என்று சொல்வார். அப்படிப்பட்ட காதர் மொய்தீன் இங்கு பேசும்போது அவற்றை சற்று எண்ணிப் பார்த்தேன்.


எல்லாத்தையும் எண்ணிப்பாருங்க.. ஆனா இலங்கைத்தமிழர் நிலையையும்,இங்கே இருக்கற தமிழர் நிலையையும், மீனவர் வாழ்வையும் நினைச்சுப்பார்த்துடாதீங்க.... 

எனது அரசியல் ஏற்றத்துக்கு, சமுதாய பணிக்கு வித்திட்டது திருச்சி மாவட்டம் தான். இந்த கருணாநிதியை அரசியலில் முதலில் வளர்த்தது திருச்சி மாவட்டம் தான். ஆரம்பத்தில் கல்லக்குடி போராட்டம் ஒரு மிகப் பெரிய எழுச்சியைத் தந்து வெற்றி பெற்றது. அதற்கு திருச்சி மாவட்டத்தின் தீரர்கள், உடன் பிறப்புகள் முக்கிய காரணம்.


அடடா... திருச்சி செண்ட்டரான ஊருன்னு நினைச்சேன்.. இப்படி டெண்ட்டர்ரான ஊரா?பாவம்.. அந்த ஊரு பண்ணுன பாவத்துக்கு பரிகாரத்தை எப்படி செய்யப்போகுதோ.. பார்ப்போம் ஸ்ரீரங்கத்துல நிக்கற அம்மாவை ஜெயிக்க வைக்குதான்னு... 

 

நான் இங்கு பார்த்து பழகிய நண்பர்களை எண்ணிப்பார்க்கிறேன். அன்பில் தர்மலிங்கம் எப்போதும் எனக்கு முழு ஆதரவு தருபவராக இருந்து வந்துள்ளார். அழகுமுத்து யாதவ சமுதாயத்தைச் சேர்ந்தவர். அவர் என்னிடம் துணிச்சலாக பேசக் கூடியவர். ஒரு சமயம் அவர் என்னிடம் பேசும்போது யாதவ சமுதாயத்திற்கு மந்திரி பதவி இல்லையா என்று கேட்டார். அதற்கு நான் யாதவர் என்றாலே மந்திரிதான் என்று சொன்னேன்.


நல்லா வெறும் வாயிலயே முழம் போடறதுல தமிழ் இனத்தலைவரை அடிச்சுக்க ஆள் இல்ல..  

எம்.எஸ்.மணி எங்களுக்கு மாவட்ட கணக்கு பிள்ளையாக இருந்தார். காலையிலும், மாலையிலும் அவர் அயராது உழைத்தார். நாகசுந்தரம், முத்துகிருஷ்ணன், கிருஷ்ணமூர்த்தி, எம்.எஸ்.வெங்கடாசலம், இளமுருகு பொற்செல்வி, குளித்தலை முத்துகிருஷ்ணன், வெற்றிகொண்டான், காமாட்சி இப்படி எத்தனையோ பேரை மறக்க முடியாது. வெற்றிகொண்டானின் இடி முழக்க பேச்சை கேட்டுக்கொண்டே இருக்கலாம்.


அவங்களுக்கெல்லாம் ஊழல்ல பங்கு குடுக்க மாட்டீங்க.. கேட்டா என் இதயத்துல இடம் உண்டுன்னு சொல்வீங்க.. எல்லாத்துக்கும் பிரிச்சுக்குடுங்க தலைவரே....
இந்த தேர்தலில் போட்டியிடுவதன் மூலம் 6-வது முறையாக முதலமைச்சர் ஆக வேண்டும் என்ற பதவிப்போட்டிக்காக இறங்கி இருக்கிறேன். எனக்கு போட்டி யார்? எதிரி யார்? எதிர்ப்பாளர் யார்? யாருக்கும் அந்த தகுதி இல்லை என்று தம்பி திருமாவளவன் பேசினார். எனக்கு எதிரி, எதிர்ப்பாளர் என்று யாரையும் நான் கருதவில்லை.

அதான் பிரம்மாஸ்திரமான மிக்ஸி,கிரண்டர் இலவசம்கற  துருப்புச்சீட்டு இருக்கே.. உங்களுக்கு சி எம் சீட் கன்ஃபர்ம் தலைவரே...


என்னை பிடிக்காதவர் என்று மட்டுமே சொல்ல விரும்புகிறேன். நான் எழுதிய கதைகளை படித்து பார்த்த அண்ணா தம்பி இன்னும் நீ நன்றாக படித்து விட்டு வா என்றார். அண்ணா சொல்லி நான் செய்யாத ஒரு காரியம் அது ஒன்று தான். அப்படி படித்து விட்டு வந்து இருந்தால் இன்று கருணாநிதி எம்ஏ, பி.ஏ என்று பெயருக்கு பின்னால் போட்டு இருக்கலாம். அதை எல்லாம் விட தந்தை பெரியாரின், அண்ணாவின் தம்பி என்ற ஒரே பெருமை போதும் என்று நினைப்பவன் நான். அந்த பெருமையின் காரணமாக தான் 6-வது முறையாக என்னை முதல்மைச்சராக ஆக்கவேண்டும் என்று விரும்புகிறீர்கள்.


அண்ணா சொல்லி நீங்க செய்யாத காரியம் வேணா ஒண்ணா இருக்கலாம் தலைவரே.. ஆனா அண்ணா சொல்லாமல் நீங்க செஞ்ச காரியம்தான் எத்தனை எத்தனை....அதன் மூலம் கிடைச்ச வருமானம் தான் எத்தனை..? 

நான் குளித்தலை தொகுதியில் சட்டமன்ற உறுப்பினராக பணியாற்றியபோது அந்த தொகுதி மக்கள் முசிறிக்கும், குளித்தலைக்கும் இடையே காவிரி ஆற்றின் குறுக்கே பாலம் கட்டவேண்டும் என கோரிக்கை வைத்தார்கள். அவர்களது கோரிக்கையை நிறைவேற்றி தருவேன் என வாக்குறுதி அளித்த நான் முதலமைச்சர் ஆனதும் பாலம் கட்டி கொடுத்ததோடு அதனை திறந்தும் வைத்தேன்.

 அந்த பாலம் கட்டுன மேட்டர்ல எத்தனை தலைவரே தேறுச்சு..? மன்னிச்சுக்குங்க.. அது உங்க குடும்ப மேட்டரு... 


இப்படி மக்கள் பிரச்சினைகளை தெரிந்து அறிந்து அதற்கு பரிகாரம் காணவும், சமுதாய பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதிலும் தான் எனது பொது வாழ்வில் பெரும்பகுதியை செலவழித்து இருக்கிறேன்.

ஆமாம் தலைவரே.. அடிக்கடி உங்களை சினிமா ஃபங்க்‌ஷன்லயும், பாராட்டு விழாக்கள்லயும் பார்க்க முடியுது.. உலக அளவில இந்த அளவு ஒரு சி எம்  கேளிக்கை விழாக்களில் பங்கெடுத்ததே இல்லையாம் தலைவரே..
நான் செய்த சமுதாய பணிகளை எல்லாம் பட்டியல் இட்டு பேச நேரம் இல்லை. தேர்தல் ஆணையம் கொடுத்து இருக்கிற நேரம் தாண்டிவிடும். அதுவும் இப்போது இருக்கிற தேர்தல் ஆணையம் ரொம்ப கண்டிப்பான தேர்தல் கமிஷன், எதிர்க்கட்சியாக இருக்கிறவர்களை ஆளும் கட்சியாக கொண்டு வரவேண்டும் என்கிற அளவில் இந்திய தேர்தல் ஆணையம் செயல்பட்டுக்கொண்டு இருக்கிறது. தேர்தல் கமிஷனில் இருக்கிற சில அதிகாரிகளின் போக்கு அப்படிப்பட்டது என்பதை சென்னை உயர்நீதிமன்றமே சுட்டிக்காட்டி எச்சரிக்கை செய்த பின்னரும் உள்ளபடியே வருத்தமாக இருக்கிறது.


 விடுங்க தலைவரே.. 1000 கரங்கள் மறைத்தாலும் ஆதவன் மறைவதில்லை.. ஓட்டுப்போட பணம் கொடுத்து விடலாம் என்ற எண்ணம் இருக்கும் வரை நமக்கு தோல்வி பயம் இல்லை..

தேர்தல் கமிஷன் எந்த கட்சிக்கும் வக்காலத்து வாங்காமல் நடுநிலையோடு நடந்து கொள்ளவேண்டும். உயர்நீதிமன்ற உத்தரவுக்கு பிறகாவது இந்திய தேர்தல் ஆணையம் நடுநிலையோடு செயல்படவேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்.

 நடுநிலைமைன்னா தி மு க கட்சிக்காரங்க கள்ள ஓட்டுப்போடறப்ப கண்டுக்கக்கூடாது ...அதானே தலைவரே..?



நடுநிலையோடு பெறும் வெற்றி தான் நிலையானது.
இதற்கு நான் அடிக்கடி சொல்லக்கூடிய கேரளத்து புராணக்கதை ஒன்றை சொல்ல விரும்புகிறேன். அங்கு நல்லாட்சி நடத்தி வந்த மாவலி மன்னனை தேவர்களின் வேண்டுகோளுக்கு இணங்க விஷ்ணு பெருமான் அழித்தது போல் தமிழகத்தில் நல்லாட்சி நடத்திவரும் தி.மு.க. ஆட்சியையும் அழிக்க சிலர் திட்டமிடுகிறார்கள். கேரளத்து மக்களை போல் தமிழக மக்கள் ஏமாறமாட்டார்கள். ஏனென்றால் தமிழக மக்கள் பெரியாரால் தயார் படுத்தப்பட்டவர்கள். தமிழ் இனம், தமிழ் மொழி வாழவேண்டுமானால் தி.மு.க. கூட்டணிக்கு வாக்களியுங்கள் என கேட்டு விடைபெறுகிறேன்," 


தலைவரே.. கேரளாவுல படிச்சவங்க அதிகம்.. சிந்திச்சு ஓட்டுப்போடுவாங்க.. இங்கே இருக்கற பசங்க எல்லாம் படிக்காத பசங்க... எவனும் சிந்திக்க மாட்டான்..ஓட்டுக்கு பணம் வருதா ஓக்கேம்பான்.. மிக்சி கிடைக்குது, கிரைண்டர் கிடைக்குதுன்னு அவனவன் குதிக்கறான்...  கண்டிப்பா நம்ம ஆட்சி தான் தலைவரே,, ஒண்ணும் கவலைப்படாதீங்க. தமிழனுக்கு விடிவு காலமே வராது... நீங்க தான் தமிழினத்தை காக்கும் தலைவர்...

சட்டப்படி குற்றம் - ஆ ராசாவை துவைச்சு காயப்போட்ட படம் - சினிமா விமர்சனம்

http://movies.vinkas.in/files/2011/03/Sattapadi-Kutram.jpg 

சீன் 1 டேக் 1 

விஜய் - அப்பா ,ரொம்ப நாட்களுக்குப்பிறகு உங்க பழைய பாணில ஒரு படம் பண்ணறீங்க.. மறுபடி ஃபார்ம்க்கு வந்துடுவீங்களா?

எஸ்.ஏ. சந்திரசேகர் - அதைப்பற்றி எனக்கு கவலை இல்லை.. மறுபடியும் கலைஞர் ஃபார்ம்க்கு வந்துடக்கூடாது.. அதுதான் முக்கியம்.

விஜய் - பல வருஷங்களா அந்த கட்சில இருந்துட்டு இப்படி திடீர்னு பல்டி அடிக்கறீங்களே..?

எஸ்.ஏ. சந்திரசேகர் - ஆமா , என்ன பிரயோஜனம்.. ஏதாவது தேறும்னு பார்த்தேன்.. ஒண்ணும் பப்பு வேகலை.. சரி ரூட்டை மாத்துன்னு இப்போ அம்மா பக்கம் சாய ஆரம்பிச்சுட்டேன்..


விஜய் - சரி படத்தோட கதை என்ன?

எஸ்.ஏ. சந்திரசேகர் - அரசியல்வாதியின் இழுப்புக்கு இணங்காத ஒரு நேர்மையான போலீஸ் ஆஃபீசர் குடும்பத்தை பலி ஆக்கிய அரசியல்வாதியை அந்த ஆஃபீசர் பழி வாங்கறதுதான் கதை...

விஜய் - அட போங்கப்பா.. இந்த புளிச்சுப்போன கதையை எத்தனை படத்துல பாக்கறது?

எஸ்.ஏ. சந்திரசேகர் - அது தமிழனோட தலை எழுத்து.. சாவட்டும் எனக்கென்ன?
https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjD-wNrGLDlgY0pHpIbcXx9ZdO7DqcYBTAc293CXuKankrGNGyrW0iVfG3AalE3z1eksvCiwZcbv1IQtk36Ug0tJf6bI7DsyrzVq8QlWPfEgv1skz_w1suSTs7mK2lRSqNO4S2PI4MKNN4/s320/sattapadi_kutram_movie_stills_010.jpg
விஜய் - சரி ,இந்த டப்பா கதைல எப்படி கலைஞரை தாக்குவீங்க?


எஸ்.ஏ. சந்திரசேகர் - இது ஒரு பெரிய விஷயமா?ஆ ராசா மேட்டர்,நித்யானந்தா மேட்டர் அப்படின்னு இப்பத்த ட்ரெண்ட்ல எதெல்லாம் பரபரப்பா இருக்கோ அதை எல்லாம் தாக்கற மாதிரி பிட் பிட்டா சீன் எடுக்க வேண்டியது.. சம்பந்தமே இல்லைன்னாலும் அதை எடிட்டிங்க்ல சமாளிச்சு கதைல இணைச்சுட வேண்டியது.. எவனாவது பத்திரிக்கக்காரன் மானம் கெடற மாதிரி விமர்சனம் எழுதுனா லாஜிக் இல்லா மேஜிக் அப்படின்னு சமாளிச்சுடலாம்...

விஜய் - சரி.. படத்தோட ஓப்பனிங்க் சீன்ல மாறு வேஷத்துல போலீஸ் கிராமத்துல வர்ற மாதிரி காட்றீங்களே.. எந்த மாங்கா மடையனாவது அப்படி  ரிவால்வரை பப்ளிக்கா வெச்சிருப்பானா? 

எஸ்.ஏ. சந்திரசேகர்- என்னப்பா சேம் சைடுல கோல் போடுறே...?

விஜய் - அதைக்கூட மன்னிச்சிடலாம்.. கிராமத்துல இறங்குனதும் திடு திப்னு ஒரு பொண்ணு கிட்ட ஏம்மா இங்கே தீவிரவாதிங்க இருக்காங்களா? அப்படின்னு கேப்பாங்களா? என்னமோ மளிகைக்கடைல துவரம்பருப்பு இருக்கா?ன்னு கேக்கற மாதிரி...

எஸ்.ஏ. சந்திரசேகர் -அதை விடப்பா.. போலீஸ் ஆஃபீசர் எம் பியை செருப்பால் அடிக்கற சீன் எப்படி? கலக்கீட்டமில்ல?

விஜய் - அட போங்கப்பா.. வால்டர் வெற்றிவேல்லயே அதை அவர் பண்ணீட்டாரே..?

எஸ்.ஏ. சந்திரசேகர் - சத்யராஜை சேர்ல கட்டிப்போட்டு வில்லன் குரூப் அவரோட குடும்பத்தை சிதைக்கற சீன் எப்பூடி?

விஜய் - ம்க்கும்.. அது கமல் நடிச்ச அபூர்வ சகோதரர்கள்லயே வந்துடுச்சே..?

எஸ்.ஏ. சந்திரசேகர் - சரி... சத்யராஜோட சேகுவாரோ கெட்டப் எப்படி?
https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgliv13pzOjbwynAO3wVAppRVGqbSXTok8pnMDAkSklOX7Ah0VcJ-3U7DcNwUWAIpUQPM2iknalvGEj9hDlQzplJAkMKlVLrjujA_C2V1KqNxMTxjGNVnvcUO7HFfu9uLaCIoqyIayExz8/s1600/sattapadi_kutram_movie_stills_02.jpg
விஜய் - நல்ல வேளை அவர் உயிரோட இல்லை... ஏம்ப்பா.படத்துல சத்யராஜூக்கு 38 சீன் இருக்கு அதுல 42 சுருட்டு குடிக்கராரு.. 4 பஞ்ச் டயலாக் பேசறாரு, வேற பெருசா அவர் என்ன செஞ்சாரு?

எஸ்.ஏ. சந்திரசேகர் -சரி கோர்ட் சீன்ல சீமான் வக்கீலா எப்படி?

விஜய் - இந்தப்படத்துலயே உருப்படியான ஒரு விஷயம்னா அது சீமான் நடிப்பும், அவர் பேசும் வசனங்களும், அவரது வசன் உச்சரிப்பும் தான்...

எஸ்.ஏ. சந்திரசேகர் - ஏம்ப்பா ..தாமிரபரணில விஷால்க்கு ஜோடியா நடிச்ச  பானு நல்ல உருப்படி இல்லையா?

விஜய் - ஹூம் அப்பா மாதிரியா பேசறீங்க?..அப்புறம் சொல்ல மறந்துட்டேன்...கமிஷனர் மனைவியா ஒரு பொண்ணை காட்றீங்களே , வேலைக்காரி மாதிரி இருக்கா.. பாத்திரத்தேர்வுல கவனம் வேணும்..

எஸ்.ஏ. சந்திரசேகர் - ஹூம்.. எல்லாம் என் நேரம்.. அதை நீ சொல்றே.. ஒரே மாதிரி கேரக்டர்ல 19 படம் பண்ணுன நீ எல்லாம் எனக்கு அட்வைஸ் பண்றே... சரி படத்தோட வசனங்கள் அனல் கக்குமே.. அதைப்பற்றி எதுவுமே சொல்லலையே....

https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiaj8PHZ2fZSetyR61sByQ7Vr2a5pEsBczmaQtgDJZ3FVIlbpdqDrnU31AXDradSO-tiV6ZzMTg8UvvsJHIdkBsHmHP-ER5f6ZQsW5nljO3Gg_8L59cOgKSlDQuSXRBeafDlMWnQGtX2zvU/s1600/Sattapadi+Kutram+Audio+Launch+Gallery+%25282%2529.jpg
படத்தின் உயிரோட்டமாய் அமைந்த வசனங்கள்

1.  என் பொண்ணை மட்டுமல்ல.. அவனையே அவன் மறக்கனும்.. புரியலை..? அவனை அடிக்காதீங்க.. அடிக்ட் ஆக்குங்க...


2. நீ காதலை இழந்ததை நினைச்சு கவலைப்படாதே.. நம்பிக்கையை இழக்காதே..


3. தோழர்களே. உங்கள் பிறப்பு எப்படி வேண்டுமானாலும் இருக்கலாம்.ஆனால் உங்கள் இறப்பு ஒரு சரித்திரமாக இருக்க வேண்டும் . ( சேகுவாரா ,பிரபாகரன் வீர உரையிலிருந்து சுட்டது)

4.  நீங்க உளவுத்துறையா?

ஹூம்.. அந்தப்படத்தைக்கூட நான் பார்க்கலை.. ( நல்ல வேளை தப்பிச்சாரு)

5.  தீவிரவாதியா? அது ஊரை ஏமாத்த நீங்க எனக்கு வெச்ச பேரு.. நான் போராளி.. காட்டுக்குள்ள கூடி இருக்கற கந்தகக்கோட்டை...

6.  அரிசியைக் கடத்துனாங்க, சாராயத்தை கடத்துனாங்க.. இப்போ அரசாங்க ஆஃபீசரையே கடத்தறாங்களே..

7. எம் பி சார் உங்களை பார்க்க ஆசைப்படறார்... 

நான் என்ன சமைஞ்ச பொண்ணா? ( சத்யராஜின் இந்த நக்கல் கமெண்ட்டுக்கு செம கிளாப்ஸ்)

8. தலைவரே.. அந்தாள் கூட எதுக்கு சாவகாசம்..? சனியனை தூக்கி பனியனுக்குள்ள போட்டுக்கிட்டீங்க

நம்ம இலாகா (POOR ) புவரா இருக்கலாம்.. ஆனா நான் எப்பவும் பவரா (POWER) இருப்பேன்..

9. டியர்.. நான் ஒரு கவிதை சொல்லட்டா?

ம்.. ( முதல்ல நீ சொல்லு.. கவிதையா.. கருமாந்திரமா?ன்னு நாங்க சொல்றோம் # பக்கத்து சீட் ஆள்)

உன் கண்களில் இவ்வளவு மின்சாரம் இருக்கிறதே.., நீ என்ன நிலக்கரிக்கு பிறந்தவளா?   ( அடங்கோ.... அப்பாவை அவமானப்படுத்திட்டு பேச்சைப்பார்...)

10. இதயத்துக்கும்,மூளைக்கும் நடக்கற போராட்டத்துல உருவாகறதுதான் காதல்.. இந்த உலகமே அதுலதானே இயங்கிட்டு இருக்கு..?

11. ஒரு மினிஸ்டர் என் மேலயே நீ கை வைக்கறியா?

நீ மட்டும் மக்கள் பணத்துல கை வைக்கலாமா?

12. ராசாவை  போலீஸ் எங்கே வெச்சிருக்காங்க இப்போ..?

ராசா யாரை வெச்சிருக்காருன்னு வேணா சொல்றேன்.. அவரை போலீஸ் எங்கே வெச்சிருக்கார்னு எனக்கு தெரியாது..(அப்படிப்போடு.. சென்சார்ல எப்படித்தான் விட்டாங்களோ )

. 13.  எங்களை மாதிரி ஒரு போராளி சாகலாம்.. ஆனா உங்களை மாதிரி ஒரு லீடர் சாகக்கூடாது..அப்புறம் நம்ம இயக்கமே இல்லாம போயிடும்..

14. எனக்காக ஒருத்தி வாழறதை விட , 4 பேருக்காக நான் வாழ ஆசைப்படறேன்..
http://www.tamil.haihoi.com/Gallery/Downloads/Tamil-Events-Gallery/Sattapadi-Kutram-Audio-Launch/Sattapadi-Kutram-Audio-Launch-0022.jpg

கோர்ட் சீனில் சீமான் அனல் கக்கும் வசனங்கள்

1,  நம்ம தலைவருக்கு திருக்குறள் ஏன் பிடிக்கும் தெரியுமா?

அதுல அதிகாரம் இருக்கே..? ( பாவம் கலைஞர்)

காமத்துப்பால் கூட இருக்கு...

அது அவரோட தனிப்பட்ட விஷயம்...

2.  நாட்டைக்காட்டிக்கொடுப்பதை விடக்கொடுமையானது மக்கள் பணத்தை கொள்ளையடிப்பது.. ( ராசா... யுவர் அட்டென்ஷன் பிளீஸ்)

3. எல்லாம் தெரிஞ்சவன் வக்கீல்.. எதுவுமே தெரியாதவன் அமைச்சர்.. 

4. யுவர் ஆனர்.. என்னால இந்த குற்றவாளிக்கூண்டுல நிக்க முடியல... ஒரு சேர் குடுங்க ..

யுவர் ஆனர்.. இவருக்கு CHAIR  குடுத்தா உங்களுக்கும் SHARE குடுக்க ட்ரை பண்ணுவாரு...

5. ஒரே ஏரியாவுல 86 சின்ன வீடு இருக்கற ஒரே தலைவர் அந்த மினிஸ்டர் தான்.. ஊர் கன்யா குமரி.. ( யாரப்பா அந்த மன்மத குஞ்சு?)

6. முட்டாப்பசங்க எல்லாம் ஓட்டுப்போட்டு அயோக்கியப்பசங்களை ஆள வைப்பதுக்குப்பேருதான் தேர்தல்னு பெரியார் சொல்லி இருக்காரு.. ( அது எங்களுக்கே தெரியும்.. நீ என்ன சொல்றே # ஆடியன்ஸ்)

7. இப்பவாவது விழிச்சுக்குங்க.. இப்பவும் மக்கள்ட்ட விழிப்புணர்வு வர்லைன்னா அப்புறம் அவங்களுக்கு விழிக்க விழிகளே இல்லாம  போயிடும்.


எஸ்.ஏ. சந்திரசேகர் - சரி... இந்தப்படம் எத்தனி நாள் ஓடும்?

விஜய் - படத்தோட மேக்கிங்க் ஸ்டைல்  மகா மட்டமா இருந்தாலும் செகண்ட் ஆஃப்ல வர்ற சில வசனங்களுக்காக 30 நாட்கள் ஓடும்... அதுவும் பி செண்ட்டர்ல தான்.. ஏ செண்ட்டர்ல 20 நாள் தான்.. சி செண்ட்டர்ல ஒரு வாரம்..

எஸ்.ஏ. சந்திரசேகர் - சரி.. ஆனந்த விகடன் மார்க்?

விஜய் - 35. ஆனா விகடன் குரூப் இப்போ தி மு க மேல செம காண்ட்டா இருக்கறதால 40 போடக்கூட சான்ஸ் இருக்கு.. பார்ப்போம் அவங்க நடு நிலைமையை....

எஸ்.ஏ. சந்திரசேகர் - குமுதம் ரேங்க்கிங்க்..?

விஜய் - ஓக்கே என ரேங்க்  போடனும். ஆனா அவங்க இப்போ டி எம் கே சப்போர்ட் என்பதால் விமர்சனம் போடறதே டவுட் தான்... 

. ஈரோடு சண்டிகா தியேட்டர்ல படம் பார்த்தேன்.. ( இது மட்டும் சி பி வாய்ஸ்)

டிஸ்கி - குள்ளநரிக்கூட்டம் - காதலில் கண்ணியம் + காமெடியில் WIN னியம் - சினிமா விமர்சனம்

Friday, March 25, 2011

குள்ளநரிக்கூட்டம் - காதலில் கண்ணியம் + காமெடியில் WIN னியம் - சினிமா விமர்சனம்

http://www.tamilvix.com/wp-content/uploads/2011/03/kullanari-koottam-movie-posters.jpg 

போலீஸ் எஸ் ஐ செலக்‌ஷனில் நடக்கும் ஊழல்கள் மற்றும் மோசடிகளை படம் பிடித்துக்காட்ட வேண்டும் என்ற எண்ணம் இயக்குநருக்கு வந்ததைக்கூட சாதாரணமாக எடுத்துக்கொள்ளலாம்.. ஆனால் அதற்காக அவர் மெனக்கெட்டு அமைத்த ஜனரஞ்சகமான திரைக்கதை இருக்கே .. கலக்கல்...

இடைவேளை வரை காதல் ,அதற்குப்பிறகு போலீஸ் செலக்‌ஷன் ஸ்டோரி என எந்த விதக்குழப்பமும் இல்லாமல் இயக்குநர் சர்வசாதாரணமாக திரைக்கதையை கையாண்ட விதம் பிரமிப்பூட்டுகிறது...

ஹீரோ - ஹீரோயின் சந்திப்பைக்கூட சாதாரண செல்ஃபோன் ரீ சார்ஜ் மேட்டரில் அவர் டெவலப் பண்ணிய விதம் வளர்ந்து வரும் இயக்குநர்களுக்கு நல்ல பாடம்..

வெண்ணிலா கபடிக்குழு ஹீரோ விஷ்ணு இதில் ஆர்ப்பாட்டம் இல்லாமல் ரொம்ப சாதாரணமான தோற்றத்தோடு ,இயல்பாக நடித்து பெயரை தட்டி செல்கிறார்...படத்தில் ஹீரோவுக்கு ஃபைட் இல்லை என்பது கூடுதல் நிம்மதி..

ஹீரோயின் ரம்யா நம்பீசன்.. சுமாரான ஃபிகர்.. நடிப்பு ஓக்கே..இவர் கசாமுசா டிரஸ் எல்லாம் போடாமல் கதையின் கண்ணியத்துக்கு ஏற்றவாறு டீசண்ட்டாக உடை அணிந்து வந்து இயக்குநர் சொன்ன வேலையை கரெக்ட்டாக செய்து பாராட்டை பெறுகிறார்...
http://www.tamilnow.com/movies/gallery/kullanari-koottam/remya-nambeesan-in-kullanari-koottam-2.jpg
படத்தோட கதை என்ன?ஒரு போலீஸ் ஆஃபீசருக்குத்தான் பொண்ணைக்குடுப்பேன் என பிடிவாதம் பிடிக்கும் போலீஸ் ஆஃபீசர் பெண்ணை காதலிக்கும் பையன் தன் அப்பாவுக்கு போலீசையே பிடிக்காது என்ற முட்டுக்கட்டையை தாண்டி எப்படி எஸ் ஐ ஆகி காதலியின் கையைப்பிடிக்கிறான் என்பதுதான்... அதை எந்த அளவு கதையோட்டத்துடன் கூடிய காமெடியுடன் சொல்ல முடியுமோ அந்த அளவுக்கு சுவராஸ்யமாய் சொல்லுவதில் இயக்குநர் டிஸ்டிங்க்‌ஷனில் பாஸ் ஆகி இருக்கிறார் .

படத்தோட ஓப்பனிங்க்ல அப்பாவின் ஃபோனுக்கு ரீசார்ஜ் பண்ணுவதற்குப்பதிலாக யாரோ ஒரு பொண்ணுக்கு தவறுதலாக ரீ சார்ஜ் செய்ய அந்தப்பெண்ணை பார்த்து அந்த ரீ சார்ஜ் பணத்தை பெறுவதற்குள் அவர்களுக்குள் காதல் ரீ சார்ஜ் ஆகிறது..இந்த சுவராஸ்யமான சம்பவம் படத்தை இடைவேளை வரை கொண்டு போவது ஆச்சரியம் தான்..
http://gallery.nkl4u.in/wp-content/gallery/kullanari-kootam/kullanari-koottam-movie-exclusive-stills-1.jpg
கதையுடன் கூடிய காமெடியில் கலக்கும் வசனங்கள்

1. அப்பா - டேய், எனக்கு ஒரு உதவி பண்றியா..?

ஹீரோ - வேலைக்குபோன்னு சொல்லாம எது வேணாலும் சொல்லுங்க.. கேட்கறேன்..

அப்பா   - நடக்காததைப்பற்றி நான் எதுக்கு கவலைப்படறேன்..?


2.  இங்கே பாரு பசங்களா... மழைக்குக்கூட   போலீஸ் ஸ்டேஷன் பக்கம் ஒதுங்கிடக்கூடாது...அது உங்களுக்கு ஞாபகம் வரட்டும்னு தான் நான் இப்படி நடந்துக்கறேன்...


 3.  டேய்.. வாயை மூடிட்டு சாப்பிடு..

அது எப்படி முடியும்?நீ சாப்பிட்டு காமி...

அய்யோ அப்பா முடியலடா சாமி.. வெற்றிங்கற உன் பேரை ஏன் உன் வீட்ல வெட்டின்னு கூப்பிடறாங்கன்னு இப்பத்தான் தெரியுது...

4.  இந்தா.. நான் உன் கிட்டே வாங்குன 10 ரூபா.. சரியா இருக்கான்னு எண்ணிப்பார்த்துக்க...

ஏண்டா.. நீ என்ன 7 ரூபா + 3 ரூபான்னா குடுத்திருக்கே..? ஒரே ஒரு பத்து ரூபாதானே .. எதுக்கு எண்ணி பார்க்கனும்?

5. ஹீரோயின் - நீங்க என்ன பண்றீங்க..?

ஹீரோ -  ...................................

ஹீரோயின் - என்னங்க.. இப்படி சும்மாவே இருந்தா எப்படி? பதில் சொல்லுங்க..

ஹீரோ - நான் வேலைக்கு போகாம சும்மா இருக்கேன்கறதைத்தான் அப்படி சிம்பாலிக்கா சொன்னேங்க..


6.  எந்த பேங்க்ல அக்கவுண்ட் வெச்சிருக்கீங்க..?

ஹூம்.. என்னை நம்பி ஒரு டீக்கடைல கூட அக்கவுண்ட் வெக்க விட மாட்டேங்கறாங்க...( குமுதம் ஜோக் வெ சீதாராமன்)

7.  ஏங்க.. ஆட்டோ  எல்லாம் வேணாம்ங்க....

காசு நான் தர்றேன்.. 

அப்ப சரி.. இப்பவே போலாம்.. ஹி ஹி 

8.  ஏம்ப்பா.. ஆட்டோ வருமா..?

வந்தா கூட்டிட்டு போ... ( எஸ் வி சேகர் நாடகக்காமெடி- தத்துப்பிள்ளை)

9. ஹீரோயின் தோழி - யார்டி இவன்?

ஹீரோயின் - ஜஸ்ட் ஃபிரண்டுதாண்டி...

ஹீரோயின் தோழி - ஹூம்.. கல்யாணம் பண்ணிக்கப்போறவனையும் இப்படித்தான் சொல்றீங்க.. கழட்டி விடப்போறவனையும் இப்படித்தான் சொல்றீங்க... ( ஆடியன்ஸின் செம க்ளாப்ஸ்#எத்தனை பேர் பாதிக்கப்பட்டாங்களோ)

10. ஹீரோயின் - ஏண்டி.. அவனுக்கு ஃபோன் போட்டு பேசட்டுமா?

ஹீரோயின் தோழி - ஹய்யோ பச்சை மண்ணு.. என்னை கேட்டுத்தான் எதுவும் செய்யும்.. ஹூம்.. நானும் அழகாத்தான் இருக்கேன்.. எனக்கு ஒருத்தனும் மாட்ட மாட்டேங்கறானே..?  (எந்த ஒரு மொக்கை ஃபிகருக்கும் ஒரு இளிச்சவாயன் உண்டு , அது இயற்கையின் நியதி #இடைச்செருகல் சொந்த டயலாக் ஹி ஹி - நன்றி குருதிப்புனல் கமல் வசனம்)


11.  காது குத்தல் ஃபங்க்‌ஷன் நல்ல படியா முடிஞ்சுதா..?

ஹூம்.. இவன் நமக்குத்தாங்க காது குத்திட்டான்..லவ்வை டெவலப் பண்ண போயீட்டு வந்திருக்கான்..

12.  இப்படி தம் அடிக்க்கறீங்களே... போலீஸ் செலக்‌ஷன் ல எப்படி ஓடப்போறீங்க?

ரயில் ஓடறதுக்கு முன்னால புகை விடறதில்லையா? எப்படி ஓடறேன்னு மட்டும் பாரு... ( வெ. க.குழு படத்தில் 50 புரொட்டா சாப்பிட்டு ஜெயிக்கும் காமெடியனின் இந்த டயலாக்கிற்கு அரங்கம் அதிரும் கை தட்டல் # தம் பார்ட்டிங்க)

13.  ஏண்டா.. காதல் அவ்வளவு சக்தியை தருமாடா..? 

அனுபவிச்சுப்பார்த்தாத்தாண்டா அதனோட அருமை தெரியும்..

14. பேசாம நீ என் கட்சில சேர்ந்துடு.. நல்லா வளர்ந்துடுவே...

28 வருஷமா வளராதவனா இப்போ வளரப்போறேன்? அட போங்கப்பா.. (இந்த டயலாக்கை பேசும் காமெடியன் அழகர் சாமியின் குதிரை பட ஹீரோ)
http://boxoffice9.com/gallery/var/resizes/Tamil-Movie-Gallery/Tamil-Movie-Stills/Kullanari-Koottam-Stills,Photos,Pics/Kullanari%20Koottam%20Stills00-11.jpg?m=1299302886
படத்தில் பல சீன்கள் கை தட்டலை அள்ளிக்கொள்கின்றன.... பர்சனல் லோன் வேணுமா? என பிரைவேட் பேங்க் ஸ்டாஃப் கேட்கும்போது எரிச்சலாய் மறுக்கும் ஹீரோ அடுத்த 10 நிமிஷத்துலயே சார் எனக்கு 1500 ரூபா பர்சனல் லோன் வேணும் என கேட்பது செம காமெடி...

மிஸ்டு கால் கொடுக்கும் ஹீரோவை கலாய்க்க ஹீரோயின் ரெடியாக ஃபோனையே பார்த்துக்கொண்டிருக்க கண்ணிமைக்கும் நேரத்தில் ஹீரோ மிஸ்டு கால் கொடுப்பது செம சீன்...

மிஸ்டு காலை உடனே காண தோழி செய்யும் டி வி பக்கத்தில் போய் அலை வரிசை ஆடும்போது டக் என ஆன் பண்ணுவது இயக்குநரின் நுட்பமான பார்வைக்கு எடுத்துக்காட்டு..

இடைவேளை வரை காதலை கலகலப்பாக கொண்டு செல்லும் இயக்குநர் படத்தின் பின் பாதியை அப்படியே சர்வசாதாரணமாக கலர் மாற்றுவது செம..

ஃபர்ஸ்ட் ஆஃப் எடுத்த டைரக்டர் வேற.. செகண்ட் ஆஃப் எடுத்த டைரக்டர் வேற  என சொன்னால் கூட நம்பி விடலாம்...அந்த அளவு செகண்ட் ஆஃப்பில் களம் மாற்றம்..
https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhWLPAqoSE2DQf7WTsRx3-B_s_G_5xoe5ANS8X6PYgsxUIMiUGwvhZDOTWke5HLCS6igfGehQdciBEbywFOQTrRIhF18u5QEEFZJ8im766XmM_ZTAYkE0us4y7e5Yqbk5MLIWYaunqqnLCF/s400/Kullanari-Koottam-ramya-nambeesan-3.jpg
எஸ் ஐ செலக்‌ஷன் எப்படி நடக்குது? என்பதை இவ்வளவு விலாவாரியாக எந்த தமிழ்ப்படத்திலும் காட்டியதில்லை என்ற அளவிலும் இந்தப்படம் முக்கியமான பதிவை பகிர்கிறது...

காதல் என்பதை முத்தத்தில் சொல்லி விட்டாய்.. மவுனத்தில் உணர்த்தி விட்டாய் பாடல் வரிகள், படமாக்கப்பட்ட விதம் எல்லாமே தரம்.. ஒளிப்பதிவு  கண்ணுக்கு குளிர்ச்சி.. எடிட்டிங்க் உட்பட்ட டெக்னிக்கல் சமாச்சாரங்கள் எல்லாம் ஓக்கே ரகம்
.
படத்தில் டைட்டில் தான் சரி இல்லை.. இன்னும் கவித்துவமாய் வைத்திருக்கலாம்.. அதே போல் ஆரம்பத்தில் செல் ஃபோன் ரீ சார்ஜ் செய்யும் பெண்ணிடம் ஹீரோ பேசும் டபுள் மீனிங்க் டயலாக்கை கூட கட் பண்ணி விடலாம்....


இயக்குநர் ஸ்ரீ பாலாஜிக்கு  இது முதல் படம்.. சுசீந்தரனின் அசிஸ்டெண்ட் டைரக்டர் ஒரு கண்ணியமான படம் கொடுத்ததற்குப்பூச்செண்டு கொடுத்துப்பாராட்டலாம்..
ஏ செண்ட்டர்களில் 50 நாட்கள், பி செண்ட்டர்களில் 35 நாட்கள், சி செண்ட்டர்களில் 25 நாட்கள் ஓடலாம்..

எதிர்பார்க்கப்படும் ஆனந்த விகடன் மார்க் - 44


எதிர்பார்க்கப்படும் குமுதம் ரேங்க்கிங்க் - நன்று


ஈரோடு அபிராமி தியேட்டரில் பார்த்தேன்.. 140 நிமிடங்கள் ஓடுகிறது...


 டிஸ்கி -1. சட்டப்படி குற்றம் - ஆ ராசாவை துவைச்சு காயப்போட்ட படம் - சினிமா விமர்சனம் 

டிஸ்கி 2 -  
  SUCKER PUNCH - ஹாலிவுட் சினிமா விமர்சனம் 18 கூட்டல்