Thursday, March 24, 2011

வை கோ - ஆனந்த விகடன் பேட்டி - காமெடி கும்மி

வைகோ என்ற விதை நெல்லை வீணடித்துவிட்டார் ஜெ! தனது பசியைக்கூடப் பொறுத்துக்கொண்டு, எதிரிகளுக்கு விருந்து வைக்கும் யதார்த்த நிலைக்கு கருணாநிதி இறங்கி வந்திருந்தார். ஆனால், விசுவாசத்தைக் கொஞ்சம் கூடுதலாகவே காட்டிய வைகோவின் வயிற்றில் அடிக்கும் அளவுக்கு ஜெயலலிதா துள்ளிக் குதிக்கிறார். அ.தி.மு.க. அணி கலகலத்துவிட்டது தெளிவு.

கருணாநிதிக்கு எதிரான வாக்குகளை ஜெயலலிதாவுக்குச் சாதகமானதாக மாற்றும் சாமர்த்தியத்துடன் வலம் வந்த வைகோவின் துணை இல்லாமல் தேர்தலைச் சந்திக்க வருகிறார் ஜெயலலிதா. தி.மு.க-வில் இருந்த காலம் முதல் இன்று வரை அனைத்துத் தேர்தல்களிலும் பம்பரமாகச் சுழன்று வந்த வைகோ, இந்தத் தேர்தலில்... வெறும் பார்வையாளர்! 



1. ''நீங்கள் விரும்பும் அளவிலான தொகுதிகளை ஜெயலலிதா தர மாட்டார் என்று தெரிந்தது. ஆனால், கூட்டணியைவிட்டு விலகும் அளவுக்கு நிலைமை மாறும் என்று யாருமே எதிர்பார்க்கவில்லையே?''

''மறுமலர்ச்சி தி.மு.க. தங்கள் அணியில் இருக்கக் கூடாது என்று தொடக்கத்திலேயே ஜெயலலிதா முடிவெடுத்துவிட்டார். தொகுதிப் பங்கீடு குறித்து நாங்கள் அமைத்த குழு, நான்கு முறை அ.தி.மு.க-வுடன் பேச்சு நடத்தியது. கடந்த முறை எங்களுக்குத் தரப்பட்ட 35 இடங்களை முதலில் கேட்டோம். இரண்டாவது சுற்று பேச்சில் 30 தொகுதிகளாவது வேண்டும் என்றோம். நான்காவது சுற்றுப் பேச்சுவார்த்தையில்தான் எங்களுக்கு 6 இடங்கள்தான் தர முடியும் என்று சொன்னார்கள்.
பல்வேறு கட்சிகள் வருவதால் 23 தொகுதிகளாவது ஒதுக்கச் சொன்னோம். 7 தொகுதிகள் தருவதாகச் சொன்னார்கள். அதன் பிறகு, 8 தருவதாகச் சொன்னார்கள். பிறகு அவர்களே, 8 தர முடியாது, 7 தான் முடியும் என்றார்கள். பிறகு, 8 தர முடியும் என்றார்கள். அதன் பிறகு 9 இடங்கள் தருவதாகச் சொல்லி, கையெழுத்து போட வரச் சொன்னார்கள்.


ஜெயலலிதா சொல்லி அனுப்பிய எண்ணிக்கைகள் அவரது மன ஊசலாட்டத்தைக் காட்டுவதாக மட்டும் இல்லை. எதைச் சொன்னால் நான் ஏற்க மாட்டேனோ, அதைச் சொல்லி என்னைக் கோபப்படுத்த நினைத்தார். நானாகவே வெளியேறிவிடுவேன் என்று திட்டமிட்டார்.


'நீ இன்னுமா இருக்கிறாய்?’ என்று ஜெயலலிதா கேட்பதுபோல இருந்தது. எங்களுக்கும் அவருக்குமான பிரச்னைக்கு எண்ணிக்கை காரணம் அல்ல... எண்ணமே காரணம்!''

அண்ணே.. முதல்ல பேச்சு வார்த்தைன்னா வெட்டு ஒண்ணு துண்டு ரெண்டுன்னு இருக்கனும்.. முதல் கட்ட பேச்சு வார்த்தை, 2வது கட்ட பேச்சு வார்த்தை.. இதெல்லாம் எதுக்கு..பேரம் பேச இதென்னா மாட்டுச்சந்தையா?
2. ''ஜெயலலிதாவுக்கு உங்கள் மீது கோபம் வர என்ன காரணம்?'' 

''2006-ம் ஆண்டு அ.தி.மு.க-வுடன் கூட்டணிவைக்கும் முடிவைக் கனத்த இதயத்துடன் நான் எடுத்தேன். பொடாவில் என்னை 19 மாதங்கள் சிறைவைத்த ஜெயலலிதாவுடன் அணி சேரத் தயங்கினேன். ஆனால், குறைவான இடங்களை கலைஞர் ஒதுக்கினார்.

எனவே, அ.தி.மு.க. கூட்டணிதான் சரியானது என்று கட்சி முன்னணியினர் முடிவெடுத்தார்கள். அதற்கு, நான் கட்டுப்பட்டேன். அப்போது நான், 'அரங்கேற்றம்’ படத்தின் கதாநாயகி, தனது தம்பியைப் படிக்கவைக்கக் கெட்டுப்போவதைப்போல, கட்சி நலனுக்காக இதற்கு உடன்படுகிறேன்!’ என்றேன். அ.தி.மு.க. கூட்டணிக்கு என்னைக் கட்டாயப்படுத்தி அழைத்துப் போனவர்கள் இன்று தி.மு.க-வில் போய்ச் சேர்ந்துவிட்டார்கள்!


அந்த சட்டமன்றத் தேர்தலில், அடுத்து வந்த உள்ளாட்சித் தேர்தலில், சட்டமன்ற நடவடிக்கைகளில், இடைத் தேர்தல்களில் எல்லாம் அ.தி.மு.க-வுடன் எந்த முரண்பாடும் இல்லை. நாடாளுமன்றத் தேர்தலில் நாங்கள் கேட்காத நெல்லை, தஞ்சாவூரை ஜெயலலிதா ஒதுக்கினார். போராடித்தான் நான்கு தொகுதிகள் வாங்கினேன். 

அதிலும் நாங்கள் கேட்காத நீலகிரி, தஞ்சையைத் தந்தார். கொடுத்ததை வாங்கிக்கொள்ளவில்லை என்ற கோபத்தில், தீவுத் திடல் கூட்ட மேடையில் என்னிடம் ஜெயலலிதா பேசவில்லை. அன்று அவரது வீட்டில் விருந்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டது. நான் போனேன். வாசலில் முறையான வரவேற்பு இல்லை.

ஆனால், மற்ற தலைவர்களை வாசலில் வந்து வரவேற்று அழைத்துச் சென்று இருப்பதை ஜெயா டி.வி-யில் பார்த்தபோது, 'இந்த சோற்றைத் தின்றிருக்க வேண்டாம்!’ என்று நினைத்தேன். அது தனிப்பட்ட வைகோவுக்கு இழைக்கப்பட்ட அவமானம். தாங்கிக்கொண்டேன். ஆனால், இன்று, 6, 7, 8, 9... என்பது ம.தி.மு.க-வுக்கு ஏற்பட்ட அவமானம். என்னைவிட இயக்கம்தான் பெரிது.


சிறையில் இருப்பது மட்டும் தியாகம் அல்ல. நிந்தனைக்கும் பழிக்கும் ஆளாகும் நிலையை எடுப்பதும் தியாகம்தான். அதன் பிறகும் அவமானம்தான் பரிசு என்றால், ஏன் அதைத் தாங்கிக்கொள்ள வேண்டும்?''

அதிமுக என்றாலே அ வமானத்தை தி னமும்  மு ந்திக்கொண்டு தரும் க ழகம் என்று தான் பொருள்.. ஏம்ப்பா அவ்வளவு கஷ்டப்பட்டு அங்கே போறீங்க.. அந்தம்மா குணம்தான் தெரியுதல்ல....


3. ''குறைவாக இருந்தாலும், வெற்றி பெறும் தொகுதிகளை வாங்கி, அதில் மட்டும் நின்றுஇருக்கலாமே?'' 


''21 இடங்கள்... அதுவும் நாங்கள் கேட்ட இடங்கள் கொடுத்தாலும் ஜெயலலிதாவுடன் கூட்டணி சேர்ந்து போட்டியிடுவது தவறு என்பதைக் கடந்த 10 நாட்களின் சம்பவங்கள் எனக்கு உணர்த்திவிட்டன!


48 ஆண்டுகள் பொது வாழ்க்கை உடையவன் நான். திராவிட இயக்கத்தின் வழித்தோன்றல் நான். இந்த அனுபவத்தில் சொல்கிறேன், 'ஜெயலலிதா இன்னும் திருந்தவில்லை... திருந்தவும் மாட்டார்’ என்பதை இந்த 10 நாட்கள் உணர்த்திவிட்டன. 

ஜெயலலிதாவின் அணுகுமுறையில், காலம் தந்த படிப்பினைகளால் மாற்றம் ஏற்பட்டு இருக்கும் என்று நம்பியது முற்றிலுமாகப் பொய்த்துவிட்டது. அவருடைய போக்கிலும் அணுகுமுறையிலும் எத்தகைய மாற்றமும் ஏற்படவில்லை. 

அகந்தையும், ஆணவமும், தன்னிச்சையான அணுகுமுறையும், இன்னமும் போகவில்லை. அவருடன் இணைந்து கூட்டணியில் தொடர்வதும் வாக்காளர்களைச் சந்திப்பதும் எந்த வகையிலும் சரியானது அல்ல.

ம.தி.மு.க-வைச் சேர்ந்தவர்கள் சட்டமன்ற உறுப்பினர்களாக ஆக வேண்டும் என்பதற்காக, திருந்தாத ஜெயலலிதாவுக்கு நான் வாக்கு கேட்டுச் செல்வது, 'வைகோ நல்லவன்’ என்று நம்பும் தமிழ் மக்களுக்குச் செய்யும் மாபெரும் துரோகம். என்னுடைய மனசாட்சிக்குச் செய்யும் துரோகம்.


தேர்தலில் வெற்றி பெறுவதற்கு முன்பே, இவ்வளவு ஆணவம் தலை தூக்குமானால், இப்படிப்பட்டவர் கையில் ஆட்சி போனால் என்ன ஆகும்? முதலமைச்சர் நாற்காலியில் உட்கார்ந்த ஜெயலலிதா செய்யும் தவறுகளைக் கண்டிக்க, பிரசாரம் செய்ய எனக்கு யோக்கியதை உண்டா? 

'உன்னைச் சேர்ந்தவர்களை எம்.எல்.ஏ ஆக்க, ஜெயலலிதாவை நல்லவர் என்று சொல்லி, எங்களை முட்டாள் ஆக்கினீர்களா?’ என்று பொதுமக்கள் கேட்க மாட்டார்களா?

என்னைப் பொறுத்தவரையில், மக்களின் நம்பகத்தன்மையை மட்டும்தான் சொத்தாக நினைக்கிறேன்!''

இப்படி சொல்ற நீங்க.. இதே ஜெ உங்களுக்கு 20 சீட் குடுத்திருந்தா அம்மான்னா சும்மா இல்ல... ஆஹா ஓஹோ பேஷ் பேஷ்னு சொல்லி இருப்பீங்க.. மனுஷனோட நாக்கு இருக்கே அது நரம்பில்லாதது.. எப்படி வேணும்னாலும் மாத்தி மாத்தி பேசும்....


4. ''மூன்றாவது அணியாவது அமைக்க முயற்சித்து இருக்கலாமே?'' 


''தமிழகத்தைப் பொறுத்தவரை மூன்றாவது அணி சாத்தியம் இல்லை. பண பலம்கொண்ட இரண்டு அணிகளை எதிர்த்தால், மூன்றாவது அணி... மூன்றாவது இடத்தில்தான் வரும்!''


அப்படி சொல்ல முடியாது.. தி மு க வின் நிரந்தர ஓட்டு வங்கி 32%, அதிமுகவின் நிரந்தர ஓட்டு வங்கி 29 % ... மீதி இருக்கற எல்லா எதிர்க்கட்சியும் ஒண்ணு சேர்ந்து ஓட்டே போடாத, போடப்பிடிக்காத அனைவரும் ஒன்று சேர்ந்தா மாற்றம் நிகழும்...

5. ''தனியாக நிற்பது..?'' 


''ஒரு தரப்பை வீழ்த்த, இன்னொரு தரப்பிடம் பணம் வாங்கினேன் என்ற பழிச் சொல் மட்டும்தான் அதனால் கிடைக்கும்!''

அதுவும் இல்லாம கைக்காசு வீணா செலவு தான் ஆகும்.. அதையும் சொல்லுங்க.. இதுல என்ன ஒளிவு மறைவு.?
6. ''தேர்தல் அரசியலில் நம்பிக்கைகொண்ட ஒரு கட்சி தேர்தலைப் புறக்கணிப்பது சரியானது அல்லவே?'' 

''நாங்கள் இந்தத் தேர்தலை மட்டும்தான் புறக் கணித்து இருக்கிறோம். இனி, தேர்தலில் நிற்கவே மாட்டோம் என்று சொல்லவில்லையே! ஒரு குழப்பமான சூழ்நிலை ஏற்பட்டபோது, மேற்கு வங்கத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஒரு தேர்தலில் பங்கேற்கவில்லை. சூழ்நிலைகளைச் சரிப்படுத்தி, கட்சியைப் பலப்படுத்திவிட்டு தேர்தலைச் சந்தித்தது. சீனாவில் மாசேதுங், தனது செம்படையைத் திடீரென்று கலைத்தார். எல்லோரும் இதைக் கடுமையாகக் கண்டித்தார் கள். ஆனால், ஓர் ஆண்டுக்குப் பிறகு மீண்டும் அதை உருவாக்கி வென்று காட்டினார்.


ஒரு பக்கம்... தன்னுடைய சுயநலத்தால் தி.மு.க-வைக் கபளீகரம் செய்து தமிழினத்தைக் காட்டிக்கொடுத்த கருணாநிதி, இன்னொரு பக்கம் ஆணவப் போக்குகொண்ட ஜெயலலிதா - இந்த இருவர் மீதும் கோபம்கொண்ட பொதுமக்கள்தான் நாட்டில் அதிகம். அந்த வெற்றிடத்தை நாங்கள் நிரப்புவோம். எனக்கு அனுப்பப்படும் கடிதங்கள் அனைத்தும், 'தன்மானத்தை இழந்துவிடாதீர்கள்... சுயமரியாதையை இழந்துவிடாதீர்கள்!’ என்றே சொல்கின்றன. இழக்கவில்லை என்பதைத் தேர்தல் புறக்கணிப்பு மூலம் நிரூபித்து இருக் கிறேன்!''

'தன்மானத்தை இழந்துவிடாதீர்கள்... சுயமரியாதையை இழந்துவிடாதீர்கள்னு எல்லாரும் சொன்னப்பவே நீங்க ஒண்ணு மறந்துட்டீங்க... தன்மானம் இருக்கறவங்க இந்தக்காலத்துல அரசியலுக்கே வரக்கூடாது.. சுய மரியாதை இருக்கறவங்க அம்மா கூட கூட்டுன்னு அங்கே போய் கால்ல விழக்கூடாது...

7. ''பதவிகள், பொறுப்புகளுக்காக கட்சிக்குள் வருபவர்கள் ஏமாந்து போவார்கள். கட்சி மாறிவிடுவார்களே?'' 

''எல்லா சூழ்ச்சிகளையும் தாண்டித்தான் ம.தி.மு.க. இயங்கிக்கொண்டு இருக்கிறது. லட்சங்களைக் காட்டி பொதுக் குழு உறுப்பினர்களைப் பிரித்து, 'நாங்கள்தான் உண்மையான ம.தி.மு.க’ என்று ஒரு கும்பல் சதித் திட்டம் தீட்டியபோதே, எங்கள் உறுப்பினர் எவரும் போகவில்லை. லட்சியத்தைப்பற்றி நான் பேசுவதால் மட்டுமே அவர்கள் இருக்கிறார்கள்!''

இங்கே தான் கலைஞர் தப்பு பண்ணீட்டார்.. லட்சங்களை காட்டாம கோடியை காட்டி இருந்தா எல்லாரும் புற்றீசல் மாதிரி அங்கே போய் இருப்பாங்க.. உங்க கட்சி ஆளுங்களை குறைச்சு மதிப்பிட்டுட்டார் கலைஞர்....


8. ''யாருக்கு வாக்களிப்பது என்பதைச் சொல்வீர்கள்தானே?'' 


''ம.தி.மு.க. தொண்டனின் மனசாட்சியே அதை முடிவு செய்யும்!''

இதுல சொல்றதுக்கு என்ன இருக்கு? அம்மாவுக்கு எதிராத்தான் போடுவாங்க.. அது அய்யாவுக்குத்தான் போகும்.. கலைஞருக்கு செம லாபம்...
9. ''இத்தனை ஆண்டு காலப் பொது வாழ்வில் இந்த இரண்டு வாரங்களில் நீங்கள் பெற்ற படிப்பினை என்ன?'' 

''சிகாகோவில் உள்ள மே நாள் நினைவு அரங்கில், 'மௌனம் சில வேளைகளில் சப்தத்தைவிட வன்மையானது’ என்று எழுதப்பட்டுள்ளது. ஒரு பேச்சாளனான நான், இது சத்தியமானது என்பதை உணர்ந்துகொண்டேன். இந்த இரண்டு வாரமும் நான் மௌனமாக இருந்தேன். 

ஆனால், ஆயிரம் கூட்டங்கள் பேசினால் கிடைக்கும் பெருமையையும், நற்பெயரையும் இந்த மௌனம் எனக்கு வாங்கித் தந்திருக்கிறது. கடந்த முறை அ.தி.மு.க-வுடன் கூட்டணிவைத்ததால், பழிக்கு ஆளானேன். அந்தப் பழி துடைக்கப்பட்டுவிட்டது. காலம் எனக்குச் செய்திருக்கும் அருட்கொடை இது!''

எனக்கென்னவோ நீங்க அடுத்த எலக்‌ஷனுக்கு அய்யா கூடவே சேர்ந்து எனது ஒரே தலைவன் கலைஞர் தான்னு வீர முழக்கம் இடுவீங்களோன்னு டவுட்டா இருக்கு...


10. '' 'என்றும் நான் உங்கள் அன்புச் சகோதரிதான்!’ என்று ஜெயலலிதா ஒரு கடிதம் அனுப்பியிருக்கிறாரே?'' 

''ம.தி.மு.க-வுக்கு ஒதுக்க வேண்டிய தொகுதிகளுக்கும் சேர்த்து வேட்பாளர் பட்டியலை அறிவித்ததும் அதே அன்புச் சகோதரிதானே! ம.தி.மு.க நடத்தப்பட்ட விதம் குறித்து, பொதுமக்கள் மத்தியில் கோபமும் அ.தி.மு.க. தொண்டர்கள் மத்தியில் எனக்கு ஏற்பட்ட அனுதாபத்தையும் பார்த்துப் பயந்துபோன ஜெயலலிதா, இப்படி ஒரு கடிதத்தை அனுப்பி நீலிக் கண்ணீர் வடிக்கிறார்!''

சீட் குடுக்க முடியலைன்னா கலைஞர் இதயத்தில் இடம் உண்டுன்னு டகால்டி அடிப்பாரே.. அந்த மாதிரி இது அம்மா டெக்னிக்....


11. ''இந்தத் தேர்தல் களத்தில் நீங்கள் இல்லை...வருத்தமாக இல்லையா?'' 

''தேர்தலுக்குப் பிறகு நிச்சயம் இருப்போம்!''

நீங்க இருப்பீங்க... கட்சி இருக்குமா? # டவுட்டு

Wednesday, March 23, 2011

வீட்டுக்காவலில் வைக்கபட்ட ஜெயலலிதா.... அதிமுக அதிர்ச்சி


http://makkalavaitherdhal2009.files.wordpress.com/2009/03/subramaniam-swamy.jpg?w=257&h=300 

இன்றைக்கு வெளியான ஜூனியர் விகடனில் வந்த அம்மா பற்றிய நியூஸ் பதட்டத்தை கிளப்பியது.அ தி மு க மத்தியிலும் சரி சாதாரண அரசியல் ஆர்வலர்களும் சரி , இந்த செய்தியை நம்பவும் முடியாமல், நம்பாமல் இருக்கவும் முடியாமல் தவித்தனர்...


 ஏனெனில் வெளியான இதழ் நம்பகத்தன்மை மிக்க விகடன் குரூப் நியூஸ்.. ஆனால் சொன்ன ஆள் அரசியல் காமெடியன் சு சுவாமி....அவரது பேட்டியும் எனது கமெண்ட்டும்.......


1. ''அ.தி.மு.க. வேட்பாளர் லிஸ்ட் முதலில் வெளியிட்டது எனக்குத் தெரியாது என்று ஜெயலலிதா சொல்லியதில் இருந்தே, கட்சி அவரது கட்டுப்பாட்டில் இல்லை என்கிற பரிதாப நிலைமையைப் புரிந்துகொள்ளலாம்! இரண்டாவது லிஸ்ட் இப்போது வெளி வந்து இருக்கிறது. இதாவது அவருக்குத் தெரியுமா, என்பது போகப் போகத்தான் நமக்குத் தெரியும்.

இதென்னங்க பெரிய பிரமாதம், ஏப்ரல் 14 க்குப்பிறகு கேப்டனே யார்னு தெரியாதுன்னு சொல்லப்போறாங்க..அவர் வந்து என்னை சந்தித்ததே எனக்கு நினைவில் இல்லைன்னு ஒரு ஸ்டேட்மெண்ட் விடப்போறரா ?இல்லையா?ன்னு பாருங்க...
 http://thatstamil.oneindia.in/img/2008/12/sasikala-jayalalitha-250.jpg

2. தேர்தல் அறிவிக்கப்பட்ட நேரத்தில், ஜெயலலிதா பக்கம் வெற்றி என்கிற நிலை இருந்தது. இப்போது மாறி வருகிறது. போயஸ் கார்டனில் ஜெயலலிதா கிட்டத்தட்ட ஹவுஸ் அரெஸ்ட்டில் இருக்கிறாரோ என்கிற சந்தேகம் எனக்கு எழுகிறது. 'மன்னார்குடி  கும்பல் பிடியில்... நவ துஷ்டக் கிரகங்களின் பிடியில்... ராகு கேது பிடியில் ஜெயலலிதா சிக்கிக்கொண்டு தவிக்கிறாரோ?' என்று சந்தேகப்படும் அளவுக்கு, அடுத்தடுத்த குழப்பங்களை செய்து வருகிறார்.

நவக்கிரகம்கறீங்க.. ஆனா எனக்கென்னவோ ஒரே ஒரு கிரகம் தான் அவரைப்பிடிச்சு ஆட்டுவிக்குதுன்னு நினைக்கறேன்..  அது சசிகலா ...அந்த கிரகம் இல்லைன்னா அம்மா செம ஃபார்ம்ல இருப்பாங்க.

3. மெஜாரிட்டியான ஸீட்டுகளைப் பிடித்து, காங்கிரஸுடன் தேர்தலுக்குப் பிறகு கூட்டணிவைக்க வேண்டும் என்பதுதான் சசிகலாவின் திட்டம். அதை நிறைவேற்ற வேண்டும் என்பதற்காகத்தான், முதலில் ராமதாஸைக் கூட்டணியைவிட்டு விரட்டினார். இப்போது வைகோவையும் அனுப்பிவிட்டார். விஜயகாந்த்தையும் அலைக்கழித்து விரட்டப் பார்த்தார். இப்படித் தப்பும் தவறுமாக ஜெயலலிதா அரசியலில் முடிவெடுப்பதாக வெளியில் பிரகடனப்படுத்தி, அவரது இமேஜை சீர் குலைக்கும்விதமாக செயல்படுகிறது அந்தக் கூட்டம்.

காங்கிரஸ் கூட கூட்டணி வெச்சா அம்மா இமேஜ் டேமேஜ்தான் ஆகும்.
ராம்தாஸ் புற்றுநோய் மாதிரி.. விரட்டுனதே நல்லது...கேப்டன் இப்போ அம்மா கூட இருக்கறது நல்லதுதான்..  

http://thatstamil.oneindia.in/images25/jaya-sasi-450.jpg

4. அ.தி.மு.க-வில் எந்தக் கட்சிகளை சேர்க்க வேண்டும்? யாரை கழட்டிவிட வேண்டும்? ஜெயலலிதா யாருடன் போனில் பேச வேண்டும்? யாரை நேரில் சந்திக்க வேண்டும்? இன்றைக்கு ஜெயலலிதா என்ன சேலை கட்ட வேண்டும்? என்பது உட்பட அனைத்து விஷயங்களையும் கன்ட்ரோல் பண்ணுவது சசிகலாதான்!'' 

 மகாபாரத்துக்கு ஒரு சகுனி, ராமாயனத்துக்கு ஒரு கூனி, போயஸ் தோட்டத்துக்கு ஒரு சசிகலா...


5. , ''சசிகலா சொல்வதைச் செய்யும் ரோபோ பொம்மைதான் ஜெயலலிதா. சுயமாக அவரால் எதையும் செய்ய முடியாது. 2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல்பற்றி இனி ஜெயலலிதா எங்கே பேசப்போகிறார்? பொறுப்பான எதிர்க்கட்சி என்கிற வகையில், முதலில் ஜெயலலிதா என்னுடன் ஆலோசனை செய்து இருக்கலாம். ஆனால், செய்தாரா? நானும்கூட, 'சசிகலா போயஸ் கார்டனில் இருக்கும் வரை பேசப் போவது இல்லை' என்று முடிவு எடுத்து இருக்கி​றேன். அதனால்தான், நானும் ஜெயலலிதாவுடன் தொடர்புகொள்ளவே இல்லை. எங்கள் இருவருக்கும் இடையே விரிசல் விழுந்துவிட்டது!'' 

 அம்மா ஒரு கண்ணாடி மாதிரி.. யார் வந்து மோதுனாலும் விரிசல் விழத்தான் செய்யும்...


6. ''வைகோ இருந்தால், தேர்தலுக்குப் பிறகு காங்கிர​ஸுடன் கூட்டணி சேர முடியாதே? அதனால்தான், கழட்டிவிட்டார். கண்டிப்பாக தமிழகத்தில் தேர்தல் முடிந்த பிறகு, புதிய கூட்டணி ஏற்படப்போகிறது. எம்.எல்.ஏ-க்கள் மியூசிக்கல் சேர் விளையாட்டு, குதிரை பேரங்கள் நடக்கும். முடிவில், ஜெயலலிதாவோ, கருணாநிதியோ... முதல்வர் பதவியில் அமர மாட்​டார்கள். அமரப்போவது யார் என்கிறீர்களா? காங்​கிரஸ்! அதற்காகத்தான் சசிகலா மறைமுகமாக அரசியல்​ரீதியாக காய் நகர்த்துகிறார்!''

இதென்ன புதுக்கதை?காங்கிரஸ்க்கு டெபாசிட்டே கிடைக்காம கேவலப்படப்போகுது....
 http://img.dinamalar.com/data/uploads/WR_316760.jpeg

'7. 'சொன்னால் நம்ப மாட்டீர்கள். தமிழக அரசியலில் என்ன நடக்கப்போகிறது என்பது முடிவானதே லண்டனில்! கடந்த சில நாட்களாக டெல்லியை சேர்ந்த முக்கிய அரசியல் வி.வி.ஐ.பி. ஒருவர் லண்டனுக்கு ஆஸ்துமா சிகிச்சைக்காகப் போனார். அங்கே புலிகள் ஆதரவாளர் ஒருவரை அவருக்கு ஏற்கெனவே தெரியும். அந்தத் தொடர்பு மூலம், சென்னையில் உள்ள அ.தி.மு.க. பிரமுகரை அணுகி, தேர்தலுக்குப் பிறகு நடக்கவிருக்கும் எதிர்கால அரசியல் பேச்சுவார்த்தை சுமூகமாக பேசி முடிக்கப்பட்டுவிட்டது. அதைத்தான் நான் சொல்கிறேன்!'' 

 பக்கத்துல இருந்து பார்த்த மாதிரியே சொல்றாரே...



8. ''ஜெயலலிதாவுக்கு ராஜ்ய சபா உறுப்பினர் பதவி கொடுத்து டெல்லி அரசியலுக்கு அனுப்பிவிடுவார்கள். இங்கே சசிகலாவின் திரை மறைவு அரசியல் தொடரும். அதன் மூலம் வரும் பலாபலன்களை நிர்வகிப்பார். அவரது டம்மிகள் காங்கிரஸ் அமைச்சரவையில் இடம்பெறுவார்கள். மிடாஸ் மதுபான உற்பத்தி கம்பெனியானது சசிகலாவுக்கு வேண்டப்பட்டவர்களால் நடத்தப்படுவது. அந்த நிறுவனத்துக்கு கடந்த ஐந்து வருட தி.மு.க. ஆட்சியில் எவ்வளவு கோடி ரூபாய்க்கு ஆர்டர் கிடைத்தது என்று கேட்டால், மயக்கமே போட்டுவிடுவீர்கள். அந்த அளவுக்கு தி.மு.க-வுடன் தொழில் முறைத் தொடர்புகள் உண்டு. இவை எல்லாம் ஜெயலலிதாவுக்குத் தெரியுமா... தெரியாதா? என்று எனக்குத் தெரியாது. ஆனால், நடந்தது உண்மை. இதைப்போலவே, தேர்தலுக்குப் பிறகும் நான் சொன்னது நிச்சயமாக நடக்கும்!''


விட்டா சசிகலா ,கலைஞர் கூட்டு சதின்னு சொல்லிடுவீங்க போல....

செய்யும் ஊழலில் 25 % மக்களுக்கு.. உங்கள் வாக்கு..எங்களுக்கே

https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjQSZCnKTKLcApdb8J-a8I52obAnmKsKt36qF0B5NZJZ_a6h1Qh08Zp3u_a71OYzEQGYU2yjbJn8_14vjnKY6mZXjORl3ua_l7VUtpHGwuYUwoabkiToFgragkS__lK7Q4tP0ur7EjMXbM/s1600/PM.JPG

1. இந்திய தேசிய லீக் கட்சியின் தேசிய தலைவர் முகமதுசுலைமான் பேச்சு: எங்கள் சமுதாயத்தைச் சேர்ந்தவர்கள் தேர்தலில் போட்டியிடும் போது, மற்ற கட்சிகளின் சின்னத்திலேயே நிற்க வைக்கின்றனர். இதில், எங்களுக்கு உடன்பாடில்லை; அதனால், சட்டசபை தேர்தலில் நாங்கள் தனித்து நிற்கிறோம்.

தம்பி டீ இன்னும் வர்லை.. ஹா ஹா என்னது? தனியா நிக்கறீங்களா? ஹய்யோ ஹய்யோ.. நீங்க ஒருத்தர் மட்டும் தனியா நின்னா பயமா இருக்காது?

------------------------------------------

2. அகில இந்திய மூவேந்தர் முன்னணிக் கழகத்தின் தலைவர் சேதுராமன்: தி.மு.க., அரசை வீட்டுக்கு அனுப்புவதே எங்கள் ஒரே நோக்கம். அதற்காக எங்களுக்குள் எந்த கருத்து வேறுபாடுகள் இருந்தாலும், ஒட்டு மொத்தமாக தமிழக மக்களின் நலன் கருதி தேர்தலில் எந்த பிணக்கும் இன்றி பணியாற்றுவோம். மூன்றாவது அணி என்ற பேச்சுக்கே இடமில்லை.

எந்த பிணக்கும் இன்றி பணியாற்றுவது போல எந்த கணக்கும் இன்றியும் பணியாற்றினால் தேவல... ஏன்னா கணக்குப்பார்த்து வேலை செஞ்சுதான் தமிழன் நாசமா போயிட்டு இருக்கான்...

-------------------------------------------------

3. மாவட்டச் செயலர்களிடம் தே.மு.தி.க., தலைவர் விஜயகாந்த்: மாவட்டச் செயலர்கள் என்ன முடிவை எடுக்கச் சொன்னாலும், அதற்கு நான் தயாராக இருக்கிறேன். எதைச் செய்தாலும் நாம் சரியாகச் செய்ய வேண்டும். ஒரு நாள் நிதானமாக யோசித்துவிட்டு, முடிவு எடுக்கலாம்.

இப்போ கடைசியா என்ன சொல்றீங்க? 41 போதுமா? அல்லது இன்னும் 4 வேணும்னு பிரச்சனையை கிளப்பப்போறீங்களா? பார்த்துக்குங்க.. அம்மாவுக்கு கோபம் வந்துட்டா உள்ளதும் போச்சுடா நொள்ளக்கண்ணா கதை ஆகிடும்..


----------------------------------------------------
http://www.tamilhindu.com/wp-content/uploads/dinamanicartoon260211.jpg
4. டாஸ்மாக் பணியாளர்கள் சங்கம்: டாஸ்மாக் பணியாளர்கள் உழைப்பால், ஆண்டுக்கு, 14 ஆயிரம் கோடி ரூபாய் அரசுக்கு வருவாய் வருகிறது. ஏழு ஆண்டுகளில், 12 ஆண்டு உழைப்பைச் செலுத்திய டாஸ்மாக் பணியாளர்களை பணி நிரந்தரம் செய்து, அரசுப் பணியாளர்களுக்கு இணையான ஊதியம் வழங்குவதாக அனைத்துக் கட்சிகளும் தேர்தல் வாக்குறுதி வழங்க வேண்டும்.


வாக்குறுதிதானே,..? அதுல எந்தக்குறையும் அய்யா வைக்க மாட்டார். வாரி வழங்கிடுவார்.. ஆனா நிறைவேத்தறது எப்போன்னு கேட்கக்கூடாது...

-----------------------------------------

5. இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தலைவர் காதர் மொய்தீன் பேட்டி : தி.மு.க., சின்னத்தில் மட்டும் நாங்கள் நின்றதில்லை; காங்கிரஸ் கூட்டணியில் நின்ற போது, கை சின்னத்தில் நின்றோம். அ.தி.மு.க., கூட்டணியில் இருந்தபோது, இரட்டை இலை சின்னத்தில் நின்றோம்.


மொத்தத்துல சொந்தக்கால்ல நின்னு உங்களுக்கு பழக்கம் இல்ல...

----------------------------------------

6. சமூக சேவகி மேதா பட்கர் பேச்சு: ஊழல் புரியாத கட்சி என்று எதுவும் இல்லை. ஊழலை முற்றிலுமாகத் தடுப்பதற்கு, ஊழல் தடுப்பு ஆணையம் ஒன்று அமைக்க வேண்டும். ஏற்கனவே இருக்கும் ஆணையத்தால், ஊழலை சரிவரத் தடுக்க முடியவில்லை. எனவே, புதிய விதிமுறைகளுடன் ஆணையம் அமைக்க வேண்டும்.

புதிய விதி முறைன்னா எப்படி? புரியும் ஊழலில் மக்களுக்கு 50 % கொடுத்துடனும்னா? பட் இந்த டீலிங்க் நல்லாருக்கு.. 

-------------------------------------
https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiojZkLhJd0WzO_-aZBnLZwvD5mFWJf-AdudNxalF9G-4ORvBghDjPWt83ffvdpnCCawJ8oeYGM-wi0bt0B_bLyZ5QGCX7X5TEKgCrtZhpsrSp12gXF__lPzGAwDKbBeU50VqZBtjr3-lw2/s1600/tamilmakkalkural_blogspot_viji.jpg
7. இந்திய தேசிய லீக் தேசிய தலைவர் முகமது சுலைமான் பேட்டி: காங்கிரஸ் ஆட்சியில் தான், பாபர் மசூதி இடிப்பு வழக்கில், அநீதியான சட்ட விரோத தீர்ப்பு வழங்கப்பட்டது. இந்தத் தீர்ப்பை, தி.மு.க.,வும், அ.தி.மு.க.,வும் வரவேற்றன. இதன் காரணமாக, எந்தக் கட்சியுடனும் கூட்டணி வைத்துக் கொள்ளாமல், நாங்கள், 20 தொகுதிகளில் தனித்து போட்டியிடுகிறோம்.

யாரும் உங்களை தடுக்க மாட்டாங்க. தாராளமா தனித்து போட்டி இட்டுக்கொள்ளுங்க.. ஆனா அண்ணே... பயமா இருக்காது ..கட்சி ஆஃபீஸ்ல சிங்கிள் மேனா இருக்க..? 

-----------------------------------------------


8. கொங்கு இளைஞர் பேரவையின் தலைவர் தனியரசு பேட்டி: கொ.மு.க.,வுக்கு, ஏழு சீட்டுகள் ஒதுக்கியது தவறு என்பதை தேர்தல் முடிவுகள் தி.மு.க.,வுக்கு உணர்த்தும். கொங்கு மண்டல மக்களின் கோரிக்கைகளின் பட்டியல் பெரியது. ஆனால், எந்த கோரிக்கைகளுக்காக, கொ.மு.க., போராடியிருக்கிறது? போராடுவதாக அறிக்கைகள் மட்டுமே தருவர்.

தனியரசுன்னு பேர் வெச்சிருக்கீங்களே. நீங்க தனியா போட்டி போட்டு தனியா ஆட்சி அமைக்கலாமே.. ஏன் கண்ட நாய்ங்க பின்னால அலையறிங்க..?

---------------------------------------------
https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhyoUE_slgsRqLQ_1qZYGeRXMS3PjxDcSij7b9xIdxJ4qnJoH3p4X2iCBSYmfYzznLwOo_CkPJd0J6Ya-oKswJCFnjc9kWclQd54wW83QSXd-sf5UAoUmeEn6ZeeKDYONb8N-GBcAwjqOU/s400/cartoon_385.jpg
9. மகாராஷ்டிர உள்துறை அமைச்சர் பாட்டீல் பேச்சு: என் தாய் மொழியான மராத்தியில் படித்தவன் நான். இதனால், எனக்கு இந்தி, ஆங்கிலம் சரியாக தெரியாது. 2008ல், மும்பை பயங்கரவாத தாக்குதல் சம்பவம் நடந்த போது, இதன் பாதிப்பை உணர்ந்தேன். அப்போது, செய்தியாளர்கள் இந்தியில் கேட்ட கேள்விகள் எனக்கு சரியாக புரியவில்லை. இதனால், தவறாக பதில் அளித்தேன். மற்ற மொழிகளையும் கற்க வேண்டிய அவசியத்தை அப்போது உணர்ந்தேன்.

நீங்க இப்போ தான் உணர்ந்தீங்களா? நாங்க தலைவர் கலைஞரின் பேரன்கள் ஹிந்தி படிக்க டியூஷன் போன பின்னும் அதை உணராம தமிழ் தமிழ் என தள்ளாடிட்டு இருக்கோம்..

-------------------------------

10. பகுஜன் சமாஜ் கட்சி மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங் பேட்டி:
எம்.ஜி.ஆர்.,ஆட்சிக்காலத்திலேயே சென்னை தி.மு.க.,வின் கோட்டை என்றவர்கள், இப்போது சென்னையில் ஏழு தொகுதிகளை கூட்டணி கட்சிகளுக்கு விட்டுக் கொடுத்துள்ளனர். இது கூட்டணி தர்மம் அல்ல. தேர்தலில் கிடைக்கப் போகும் தோல்வி பயம் தான்.


என்னது? தோல்வி பயமா? ஏ ஹே ஹே ஹே ... ஓட்டுக்கு ரூ 10000 கொடுக்கும் அளவு அவங்க கிட்டே பணம் இருக்கு. பணம் இருக்க பயம் ஏன்?

---------------------------------------------------------

சாந்தி அப்புறம் நித்யா அப்புறம் ரஞ்சிதா.....அப்புறம் ....?

https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhS9T3hAgxobOlcg9iF2GdZxxCIXK3lQbSix875fKvObG5IX7crhHpQl15LRqcAiioaTuWRqarf1YaIoLFzxICAE7YfqxrNMbJ-che-Wbogcea3DsHD0KEeq1kH54tNc9IFqghaW1GCub1z/s1600/Shanthi-Tamil-Movie-Hot-gallery-6.jpg 
 தமிழ்நாட்டின் இளைய உள்ளங்கள் ஏங்கித்தவித்த இந்த நூற்றாண்டின் இணை யற்ற படமான ( இணை அற்ற என்றால் ஜோடி இல்லாத என அர்த்தம் வருதே# அவ் அவ்) சாந்தி அப்புறம் நித்யா படம் 25 அன்று ரிலீஸ் ஆகிறது.எனக்கென்னவோ இந்தப்படத்தில் செமத்தியான சீன் இல்லைன்னாலும் படம் பார்க்கலாம் என்றே தோன்றுகிறது..( அப்போ எப்படியும் பார்த்திடுவே.. எதுக்கு இந்த விளக்கம்..?)

இந்தப்படத்துக்கு முதல்ல வெச்ச டைட்டில் சாந்தி அப்புறம் நித்யா அப்புறம் ரஞ்சிதா.....என இருந்திருக்கும்னு நான் நினைக்கறேன்.. அப்புறம் சில பிரச்சனைகளால மாத்தி இருப்பாங்க.. ஹி ஹி . ஏன்னா நித்யா(னந்தா) ரஞ்சிதா இல்லாம எங்கேயும் வெளீல போறதில்லையாம்...

அப்புறம் இந்த வாரம் இன்னொரு அதிசயமும் நடக்க இருக்கு. (நடக்காது.. ஓடும்)அதாவது இந்த 25ந்தேதி மட்டும் 4 அஜால் குஜால் படம் ரிலீஸ் ஆகுது.. ஹி ஹி . நாலு படத்தையும் பார்க்கறது கன்ஃபர்ம்.. ஆனா எந்தப்படத்தை முதல்ல பார்க்கறதுன்னு தரம் பிரிக்கறதுக்குள்ள தாவு தீர்ந்துடும்..

https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEg1VwfQsk3HqGMyeItHBRrHnIpV6dVKensXGEuzrechvtf8TOvm6Ky6jkJsp2NER34-odLJ0tHRTQy00TuABRCoGALAHh_jsQTyN84NN0HnKzQStZekzbPPyozid12FxoEmRbwbMPIBIoBG/s1600/Shanthi11-568x1200.jpg
1. arasu1691 அரசியலுக்கு ஹீரோக்கள் வந்தாலே காமெடியா இருக்கும், இதுல காமெடியன்களே வந்தா..ம்ம் கிழிஞ்சுது லம்பாடி லுங்கி #வடிவேலு, விவேக்

----------------------------------------------
2.  bharathbharathi வைகோ- வை வரவேற்க தயாராக இருக்கிறோம்-பிஜேபி கூட்டணி: அய்யாகிட்ட போன தொண்டன், இங்க வந்தா தலைவன் # எப்படி வசதி #tnfisherman


--------------------------------------------
3. navi_n அடுத்தவன் குற்றத்தை வைத்து தன்னைப் பெருமை படுத்திக் கொள்ளும் நிலையிலேயே இரண்டு கட்சிகளும் உள்ளன. #தமிழகத்தின்_தலைஎழுத்து 

---------------------------------------------------

4.  mankuthirai RT @arivaali : தி.மு.க.,வை ஆதரித்து வடிவேலு தேர்தல் பிரசாரம் # கட்ட துரைக்கு கட்டஞ் சரி இல்ல #fb 

------------------------------------------------
5.. bharathbharathi வைகோ- வை வரவேற்க தயாராக இருக்கிறோம்-பிஜேபி கூட்டணி: இங்கே கதவுகளை மூடுவதேயில்லை. #tnfisherman 

---------------------------------------
https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjDCWXSiWfKafVPVU0BP-F-D9UMz6lO_SP0RlfMIuaWhL3PUljLATIjcNqcbnKBrAd5yicko-cFQDrndAnp3V_tGnIY7B6Uu9NQkVZ1Ot-lnfG6idlHVush3UfKEmeIBPt1QE-rPOLwwYDc/s1600/Archana-10.jpg
6.  iamkarki சொல்லுறதெல்லாம் சுத்தமான பொய்/வைக்கிரதெல்லாம் பாக்கெட்டுல கை/ பாறாங்கல்லில் கூட எடுத்துடுவேன் நெய் நெய்/ ராசா ராசா. நான் ஸ்பெக்ட்ரம் ராசா 

-------------------------------------------
7.      UVMP ஏங்க யாரவது TR ரை பாத்தா தேர்தல் நடக்குதுன்னு வர சொல்லுங்க, அவர் செய்ய வேண்டிய காமெடி இன்னும் பாக்கி இருக்கு#மிஸ் யு TR

-------------------------------

8. penathal ஏஞ்சலினா ஜோலியின் பாஸ்வேர்ட் வேண்டுமா, இங்கே க்ளிக்கு என்கிறது மெயில். பாஸ்வேர்டை வைத்துக்கொண்டு என்ன செய்ய? தெரியவில்லையே!! 


----------------------------------------
9.   Ganesukumar செய்த தப்பை மறைக்க சண்டை போடுபவர்கள் ஆண்கள். செய்தது தப்பே இல்லை என்று சண்டை போடுபவர்கள் பெண்கள்.

-------------------------------------------------
https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEg3_YtzGOi6yi0BR8rIi4eTGYS8HVyMm1-bEanZ4MLYcAr5zT5mi9da5R8s9Ul7hR14sJ8G3HBMcdtBDfKlH9iR1tTJgJDqB02TZMygrrCMgVSPtZRw5HQu1r8tpHY3BsM05Sbx-y9OMFro/s1600/malavika_16.jpg

10. vedhalam விஜய் ஹாலிவுட்டுக்கு போக வேண்டும் - சத்யராஜ் # அங்க ஏற்கனவே ஒரு மிஸ்டர் பீன் இருக்காரு

--------------------------------------

11.  RajanLeaks ஜெ வீடு அருகே மரத்தில் ஏறி போராட்டம் #நடிகை வீட்டருகே மரத்திலேறி எட்டிப் பார்த்தனர்னு தினத்தந்தி காரன் நாளைக்கு நியூஸ் போடுவான்! 

---------------------------------------

12. Pattapatti இரவு 10 மணிக்கு மேல், சைகை காட்டிய நடிகர் சரத்குமார் மீது போலீசார் வழக்குபதிவு#ஹி..ஹி சித்திக்கு குட்நைட் சொல்லியிருப்பாருங்க போன்லே.. 

-------------------------------------------

13.   RajanLeaks தமிழர்களே தமிழர்களே என்னைக் கடலில் தூக்கிப் போட்டால் கடல் தண்ணீர் தான் வெளியே வந்து விழும் நான் தப்பித்துக் கொள்வேன் # அதிமுக ஆட்சி! 

----------------------------------
https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjSs5SYcGt_YwMxnqwFz3LHb3EtxPmbd9YDs_uFJFF-uhdcXWyCqndfhMd733WFQ7bTb0LuqCaQTQFxmUX6kU5chyphenhyphenj087zvSz7NpxA76CRwHgXf0_leepVcJdX8zgn7hG_DuN2FM3lqNAHC/s1600/Poonam-Bajwa-stills-015.jpg
14. navi_n உற்றுப் பார்த்தவுடன் இழுத்து மூடுவீர்கள் என்றால், வீட்டிலிருந்து கிளம்பும்போதே அதைச் செய்யலாமே. 


-----------------------------------------------
15.         gpradeesh சரத்குமார்,விஜயகாந்த்,அருண்பாண்டியன்,மன்சூர்! என்னங்கடா இது? பல்க்கான பார்ட்டிகளா நிக்குது. சட்டசபைல சண்டைபடமா எடுக்கபோறாய்ங்க?

டிஸ்கி 1 - படம் 1,2 ஆகியவற்றில் இருப்பது  சாந்தி அப்புறம் நித்யா பட நாயகி.இந்தப்படத்துல அவுட்டோர் ஷூட்டிங்கே இல்லையாம்.. எல்லாம் ஒரே வீட்டுக்குள்ளயே எடுத்திருக்காங்க... அடடா.. நிறைய லொக்கேஷன்ஸ் மிஸ் ஆகுதேன்னு வருத்தப்படறவங்க......லத்திகா படம் பார்க்கவும்...


டிஸ்கி 2 -  படம் 3-ல் இடமிருந்து வலமாக 3 வது ஃபிகரை கவனிக்கவும்.. அவர் என்ன பண்றார்னே தெரில.. ஆனா எனக்கு இடமிருந்து வலமா முதல் ஃபிகர் தான் பிடிச்சிருக்கு.. 




டிஸ்கி 3 -  படம் 4-ல் இடம் பெற்றவர் பெயர் அர்ச்சனா.. ஒரே படத்தின் மூலம் 10 ஏக்கரா இடம் பெற்றவர்.. ஹி ஹி 


டிஸ்கி 4 - படம் 5-ல் இடம் பெற்ற மாளவிகாவுக்கு பின்னால நிக்கற ஃபிகர் யார் என தகவல் அளிப்பவர்க்கு தக்க அல்லது தகாத சன்மானம் அளிக்கப்படும்..


டிஸ்கி 5  - கடைசி  படத்தில் இடம் பெற்றுள்ள பூஜா டிரஸ் பண்ணீட்டு இருக்கும்போதே ஆ ஜா ( வந்துடு) என்றாராம் மும்பை டைரக்டர்,, அதான் போட்டது போட்டபடி வந்துட்டார்,. ஹி ஹி . அப்புறம் பூஜா டி எம் கே வாத்தான் இருக்கனும் என்று நினைப்பவர்கள் தொலை நோக்குப்பார்வை உள்ளவர்கள்.

Tuesday, March 22, 2011

சமையல் பண்ணமாட்டேன்னு சலம்பல் பண்ணும் சம்சாரத்தை சமாளிப்பது எப்படி?

http://tamil.webdunia.com/entertainment/tvtime/news/0911/27/images/img1091127022_1_1.jpg 

பொதுவா கணவன்மார்களை மிரட்ட இந்த பொண்டாட்டிங்க வெச்சிருக்கற 2 ஆயுதங்கள்ல சமையல் 2வது ஆயுதம்..முதல் ஆயுதம் என்ன?ங்கறதை தனி பதிவா தலையணை மந்திரம் போடும் தலைவியிடம் தப்பிப்பது எப்படி?ன்னு மறுக்கா போடறேன்..( மணி மேகலைப்பிரசுரம் ரேஞ்சுக்கு போய்ட்டமே...)

பெரும்பாலும் எல்லா சம்சாரங்களுமே ஒரே டெக்னிக்கைத்தான் ஃபாலோ பண்றாங்க..( சுமாரா நீ எத்தனை சம்சாரத்தை பார்த்தே..?)எனக்கு எப்படித்தெரியும்னா எல்லாம் கேள்வி ஞானம்தான்.(நான் பார்த்த எல்லா சம்சாரமுமே சுமாராத்தான் இருந்தது,..)

அவங்க வீட்டு சொந்தக்காரங்க கல்யாணத்துக்கு நம்மால வர முடியாம போச்சுன்னா, ( தண்டம் வேற முட்டுக்கோல் வேற.. )அவங்க கேட்ட பொருள் ஏதாவது வாங்கித்தர முடியாம போச்சுன்னா( வாங்கற சம்பளம் ரூ 5000 ஆனா 5 லட்சம் ரூபாக்கு நெக்லஸ் கேட்டா),வீட்டுக்கு லேட்டா வந்தா இப்படி 10 பைசாவுக்கு பெறாத சின்ன சின்ன விஷயங்களுக்குக்கூட இந்த டெக்னிக்கை அவங்க யூஸ் பண்ணிக்குவாங்க..
http://www.newsonweb.com/newsimages/June2010/eb637c18-3465-49a8-8bb1-9c0972d798a31.jpg
எனக்கு தலை வலிக்குது... என்னமோ மாதிரி இருக்கு.. இப்படி ஏதாவது காரணத்தை சொல்லிட்டு அவங்க குப்பற படுத்துக்குவாங்க.. நாம என்னடா பண்றதுன்னு மல்லாக்க படுத்து யோசிப்போம்.. ( நாமளும் குப்புற படுக்கலாம்.. அப்புறம் நமக்கும் ,அவங்களுக்கும் ஒரு வித்தியாசம் இல்லாம போயிடுமே. #கோபமா இருக்கறப்பக்கூட நமக்கு பிரஸ்டீஜ் முக்கியம்).)

நமக்கு மட்டும் பசிக்குதே.. அங்கே பசியே எடுக்காதா?ன்னு மண்டையை உடைச்சுக்க வேண்டியதில்லை... ஏன்னா சண்டை போடறதுன்னு முடிவு பண்ணுனதும் அவங்க முதல்லியே தெம்பா சாப்பிட்டு இருப்பாங்க.. 

ஹோட்டல்ல போய் சாப்பிட நமக்கு கையாலாகாது...சரி நாமே சமைக்கலாம்னு நினைப்போம்...அப்பாடா.. இப்போதான் மேட்டருக்கு வந்தேன்.. இந்தப்பதிவுல சுயமா சமைப்பது எப்படி?ன்னு பதிவர்களுக்கு சொல்லப்போறேன்..இது ஆண்களுக்கு மட்டுமானது...ஏதோ எனக்கு தெரிஞ்ச அரை குறை ஞானத்தை வெச்சு டிப்ஸ் தர்றேன்...இதைப்படிக்கிற பெண்கள் யாராவது அது சரி இல்லை, இது சரி இல்லைன்னு நொனை (குறை) சொன்னா நான் கடுப்பாகிடுவேன்.. (அடுப்புல வேலையா இருக்கறப்ப கடுப்பு.. ஆஹா எப்படி எதுகை மோனை தானா வருது...?)
http://www.supanet.com/woman-cleaning-clean-kitchen-lady-14693465.jpg

ஒரு டம்ளர் அரிசியை ஒரு குண்டாவுல போட்டு அதுல ஒரு சொம்பு தண்ணி ஊற்றி ஊற வைங்க..( தண்ணி மட்டும் ஊத்துனா போதும்.. அதுவா ஊறும்..)

அரை மணி நேரம் ஊறனும். அதுக்குள்ள கடைக்கு பொடி நடையா போய் தயிர் அரை லிட்டர் வாங்கிட்டு வந்துடுங்க..இப்போ வீட்டுக்கு வந்து ஊறுன அரிசியை களையனும்.. அதாவது அந்த தண்ணியை கீழே ஊத்தனும். வை கோ வை அம்மா கழட்டி விட்ட மாதிரி..மறுபடி தண்ணி ஊத்தி மறுபடி களையனும்.. இப்போ 2 டம்ளர் தண்ணீர் ஊற்றனும்.

அதாவது எவ்வளவு அரிசி போட்டமோ அதை விட 2 மடங்கு...கடைல வாங்குன அரிசி பழையதா இருந்தா இந்த பதம். அதுவே புது அரிசியா இருந்தா அரை டம்ளர் தண்ணீர் சேர்த்து ஊத்தனும்..

குக்கர்ல 2 டம்ளர் தண்ணீர் ஊற்றனும். அப்புறம் குக்கருக்குள்ள அரிசி குண்டாவை வைக்கனும்.அப்புறம் குக்கர் மூடியை டைட்டா மூடனும்..குக்கர் வெயிட் போட மறக்கக்கூடாது...இப்போ அடுப்புல குக்கரை வெச்சுட்டீங்க..10 நிமிஷம் டைம் ஆகும்.
http://thumbs.dreamstime.com/thumblarge_242/1204260906YAxDh5.jpg
அதுக்குள்ள ரசம் ரெடி பண்ணிடலாம்.அது ரொம்ப ஈஸி.. பி ஜே பி காரங்க வேட்பாளர் லிஸ்ட் ரெடி பண்ற மாதிரி.. எந்த கஷ்டமும் இருக்காது..முதல்ல புளி கொஞ்சம் எடுத்து ஒரு சின்ன குண்டாவுல போட்டு ஊற வைக்கனும்..( தண்ணீர் ஊற்றி)

இப்போ பெரிய அடுப்புல அரிசி வெந்துட்டு இருக்கும். சின்ன அடுப்புல புளிக்கரைசல் குண்டாவை வைங்க..2 தக்காளி எடுத்து வாஷ் பண்ணி  4 பாகமா அறிந்து புளிக்கரைசல்ல போடுங்க..அப்புறம் ரசப்பொடி 2 ஸ்பூன் போடுங்க.. 4 நிமிஷத்துல கொதிக்க ஆரம்பிக்கும்,, சீரகப்பொடி ஒரு ஸ்பூன் போடுங்க.. அப்புறம் கறி வேப்பிலை,கொத்து மல்லி தழை கொஞ்சம் போடுங்க.. 

கொஞ்சம் உப்பு போடுங்க..(ஏன் கொஞ்சம் உப்பு போட சொல்றேன்னா அதிக உப்பு போட்டு சாப்பிட்டா நமக்கு கோபம் வந்துடும்.. ஹி ஹி .. முடிஞ்சவரை குடும்பஸ்தங்க ரோஷம் இல்லாம இருப்பதே நல்லது.. )இப்போ தள புள தள புளன்னு கொதிக்கும்.. வாசம் கம கமன்னு வரும்.. சப்போஸ் வாசமே வர்லைன்னாக்கூட என்ன வாசம் ஆஹா அப்படின்னு நாக்கை சப்புக்கொட்டிக்கனும்..( எல்லாம் வெறுப்பேத்தத்தான்.. ஹி ஹி )

இப்போ ரசத்தை இறக்கி வெச்சுடுங்க.. சின்ன அடுப்பை ஆஃப் பண்ணிடுங்க..இப்போ குக்கர் விசில் அடிக்கும்..2 சவுண்ட் விடும் வரை பொறுத்திருக்கவும். அப்புறம் கேஸ் அடுப்பின் வேகத்தை தணிக்கவும் .7 நிமிடம் கழித்து அடுப்பை ஆஃப் பண்ணவும்..
https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhD6nypfysSGGXNe2sLDCj-KK5XzCxbHT0IUwcyNhoIXSrl7if_sloBZDRfXVbDkf8HU9PN2xl6M2mbp-Ys4Tf4IO4SeLdY-Tgz4t1MO7emKgAXvFH2FytFB4VGkGMlv0uhI2Uc08-2Ire-/s1600/002.jpg
இப்போ 10 நிமிஷம் வெயிட் பண்ணுங்க.. அவசரப்பட்டு இப்பவே மூடியைத்திறந்தா அம்மா கார்த்திக்கை தூக்கி வீசுன மாதிரி மூடி தூக்கி அடிக்கும். வெயிட் ப்ளீஸ்...


இப்போ சாப்பாடு, ரசம், தயிர் ரெடி... சாப்பிடுங்க.. சாம்பார் எங்கே?ன்னு கேட்கறீங்களா? நாம்பளே சாம்பார் மாதிரி தான் இருப்போம்...ஹி ஹி 

இந்தப்பதிவு ஹிட் ஆகித்தொலைத்தால் அடுத்தடுத்து தக்காளி சாதம் செய்வது எப்படி? லெமன் சாதம் செய்வது எப்படி? போன்ற பல பதிவுகள் வரும்.. ஹி ஹி 

இந்தப்பதிவு வழக்கம் போல் ஊத்திக்கிச்சுன்னா மறுபடி இதே பதிவை தலைப்பை மட்டும் மாற்றி மீள் பதிவாக வரும்.. ஹி ஹி

டிஸ்கி 1 - சினிமாவைத்தவிர இவனுக்கு எந்த மேட்டருமே தெரியாது போலன்னு இனி யாரும் எள்ளி நகையாட மாட்டாங்க...இந்தக்கொடுமைக்கு அந்த கொடுமையே தேவலாம்கற முடிவுக்கு வந்துடுவாங்க..

டிஸ்கி 2 - நான் ஏதோ என் சம்சாரம் கூட சண்டை போட்டுட்டனோன்னு யாரும் நினைக்க வேனாம், என் பொண்டாட்டி ரொம்ப நல்லவ..(இதுல கூட சினிமா டைட்டில்). அப்போ என் பொண்டாட்டி கெட்டவாளா?ன்னு சண்டைக்கு வர வேணாம்..

(மன்னிப்பு)  டிஸ்கி 3 - இது வழக்கமா நான் போடறது தான்.இந்தப்பதிவு யார் மனதையாவது புண்படுத்தினால் சாரி.. தாவணி சுடி  மிடி. இங்கேயே மன்னிப்பு கேட்டுக்கறேன்..

டிஸ்கி 4 - டைட்டில்ல சலம்பல் எனும் வார்த்தை வந்துள்ளதே அதுக்கு அர்த்தம் என்ன? என்பவர்களுக்கு  ஹி ஹி எனக்கே தெரியாது.. சமையல், சம்சாரம்,சமாளிப்பு இந்த 3 வார்த்தைகளுக்கும் எதுகை மோனையா எனக்கு ஒரு வார்த்தை தேவைப்பட்டுச்சு...அதுக்கு தகராறு, அலம்பல்,போன்ற அர்த்தங்கள் இருக்குன்னு நினைக்கறேன்..

டிஸ்கி 5  - படம் 2 - ல் இருக்கும் பெண் அணிந்திருக்கும் சேலை சண்டே மண்டே சாரியாம்.. அப்படினா அந்த 2 நாள் மட்டும் தான் அதை கட்டனுமா?ன்னு கேட்டேன்.. அதுக்கு காரணம் யாருக்கும் தெரியல.. ஹி ஹி

லஞ்சம் உண்டு, ஊழல் உண்டு ஓட்டு போடு ராசா.....

http://inthiya.in/ta/wp-content/uploads/2011/01/mkilaignnan.jpg 

1. கொ.மு.க., மாநிலத் தலைவர், "பெஸ்ட்' ராமசாமி: உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடவில்லை; நாங்கள் தனி சின்னத்தில் போட்டியிடுகிறோம். சிலிண்டர் சின்னத்தைக் கேட்டுள்ளோம்; தமிழகம் முழுவதும் தி.மு.க., வெற்றிக்கு பாடுபடுவோம்.

ஹா ஹா சிலிண்டர்னாலே ரொம்ப லேட்டாத்தானே கிடைக்கும்.. அது சரி.. நீங்க இப்போ வேஸ்ட் நாம சாமி ஆகிட்டதா சொல்றாங்களே.. உண்மையா?பின்னே என்ன? எலக்‌ஷன் வரும் வரை கலைஞரை எதிர்த்துட்டு இப்போ ஒரு சீட்டுக்காக அவர் கால்ல விழுந்திருக்கீங்களே.. வெட்கமா இல்லை?


--------------------------------------------

2. தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரிக்கு, தலைமைத் தேர்தல் கமிஷன் கடிதம்: பொதுத் தேர்வுகள் நடக்கும் பள்ளிகள் அமைந்துள்ள இடத்தில் இருந்து, 200 மீட்டருக்குள் தேர்தல் பிரசாரம் நடக்காமல் கண்காணிக்க வேண்டும்; பள்ளிகளில் இருந்து 200 மீட்டருக்குள் ஒலிபெருக்கி பயன்படுத்துவதற்கும், பிரசாரம் செய்வதற்கும் தடை விதிக்க வேண்டும்.


லூஸ்தனமா இருக்கு.. ஒலிப்பெருக்கியோட சத்தம் 2 கி மீ வரை கேட்கும்.. வெறும் 200 மீ தூரம் விலக்கு இருந்தா போதுமா?

------------------------------------------

3. பத்திரிகை செய்தி: டிரான்ஸ்பார்மர் பழுதால் வத்திராயிருப்பு அருகே உள்ள இலந்தைக்குளம் கிராமம், நான்கு நாட்களாக இருளில் மூழ்கி கிடக்கிறது. வெளிச்சத்திற்காக கிராம மக்கள் தீப்பந்தங்களை ஏந்தி இரவை கழித்து வருகின்றனர்.

ஏன்? உங்க சொந்த பந்தங்கள் யாரும் தி மு க வுல இல்லையா? இப்படி தீப்பந்தம் ஏந்தும்படி ஆகிடுச்சே..?


---------------------------------------------
http://vimarisanam.files.wordpress.com/2010/09/15-sept-thuglaq.jpg?w=500&h=665
4. ம.தி.மு.க., கொள்கை பரப்புச் செயலர் நாஞ்சில் சம்பத் பேச்சு:வெற்றியை தீர்மானிக்கும் இடத்தில், ம.தி.மு.க., உள்ளது. நாங்கள் ஜாதிக் கட்சி அல்ல. கட்டுமானத்தில் தி.மு.க., - அ.தி.மு.க.,வை விட, பலமாகவே உள்ளோம். கூட்டணியில் இருந்தாலும், தனித்து இருந்தாலும், தனித்தன்மையை நாங்கள் இழக்கவில்லை.வெற்றியை தீர்மானிக்கும் இடத்தில், ம.தி.மு.க., உள்ளது. நாங்கள் ஜாதிக் கட்சி அல்ல.


எங்கே போனாலும் கேவலப்படறதுதான் உங்க தனித்தன்மையா?  நீங்க பேசாம திருக்குறள்ல தீ நட்பு, கூடா நட்பு அதிகாரத்துல இருக்கற குறளை எல்லாம் படிச்சுப்பாருங்க...

----------------------------------

5. பா.ஜ., மூத்த தலைவர் அத்வானி பேட்டி: தேர்தலுக்கு முன் குற்றம் புரிந்தவர்கள், தேர்தலில் வெற்றி பெற்றால், குற்றத்தில் இருந்து அவர் விடுபட்டவராக எப்போதிலிருந்து கருதப்படுகிறது? 1989ம் ஆண்டு தேர்தலுக்கு முன், "போபர்ஸ்' பீரங்கி ஊழலில், ராஜிவ் மீது குற்றம் சாட்டப்பட்டு, தேர்தலில் காங்கிரஸ் தோல்வியைத் தழுவியது. ராஜிவ் குற்றவாளி என மக்கள் தீர்ப்பளித்துள்ளனர் என பொருள் கொள்ளலாம் என்பதை, பிரதமர் மன்மோகன் சிங் உணர்ந்துள்ளாரா?

உங்களுக்கு இந்தியாவோட வரலாறே தெரில.. பதவில இருந்தா அவர் நிரபராதி.. பதவி பறி போனா அவர் குற்றவாளி...

---------------------------------------


6. முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் பேச்சு: ஜப்பான் நாட்டு புக்குஷிமா அணுமின் உலைகளில் ஏற்பட்டுள்ள அபாய நெருக்கடி, இந்தியாவில் மேற்கொள்ள உள்ள அணு மின் உலைகளுக்கு ஒரு பாடமாக இருக்கும். ஜப்பானில் ஏற்பட்டுள்ள நிலைமைகளை நாம் உன்னிப்பாக கவனித்து வருகிறோம். நில நடுக்கத்தால் பாதிக்கும் இடமாக நாம் கருதும் ஜெய்தாபூர் அணுமின் உலை விஷயத்திலும், கவனமாக செயல்பட வேண்டும்.

அப்படியே அந்த அணு உலைகளால திராவிடக்கட்சிகளுக்கு உலை வைக்க முடியுமா?ன்னு பாருங்க..

------------------------------------------
https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEg_j0VZegZNOSGquvjFuB8B6jwRrHiFvvVNpOtVK-XX6UdwEpvGpKqDiFLqf19O7g5Y6lpqq6R_7q-gHPWQSjDUhPBro-41rHf8ZxrsN7e5TPIRW4TZzMkoM6PfIZZ6p93yY2nIQ93B34Ai/s320/thuklaq.jpg

7. பா.ம.க., எம்.எல்.ஏ., வேல்முருகன் பேட்டி: தி.மு.க., கூட்டணியில் பா.ம.க.,வும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியும் ஒன்றாக இடம் பெற்றிருப்பது மிகப்பெரிய பலம். இதனால், வட மாவட்டங்களில், தி.மு.க., அமோக வெற்றி பெறும். லோக்சபா தேர்தலில் நாங்கள் தோல்வியடைந்தோம் என்பது உண்மை தான்; எங்கள் எதிர்பாராத தோல்விக்கு காரணம் என்ன என்பது அனைவருக்கும் நன்றாகத் தெரியும்.


5 வருஷத்துக்கு ஒரு தடவை கால்ல விழற ஆளை மாத்துவீங்க.. இதுல என்ன பெரிய மாற்றம்?

-----------------------------------
8. ஊழியர்கள் சங்க பொதுச் செயலர் சீனிவாசன் பேச்சு: தன் பிரச்னைக்காக, சென்னை மெரீனா கடற்கரைக்குச் சென்று மவுனவிரதம் மேற்கொண்ட கருணாநிதி, தங்களுடைய கோரிக்கைகளை முன்வைத்து உண்ணாவிரதம், ஆர்ப்பாட்டம் என இயக்கங்கள் நடத்த முயன்ற தொழிற்சங்கங்களுக்கும், மக்கள் அமைப்புகளுக்கும் கூவம் கரையில் தான் இடம் ஒதுக்கினார். அரசு ஊழியர்கள் கோரிக்கைகள் குறித்து, பேச்சுவார்த்தை நடத்த முன் வராமல் காவல்துறையைக் கொண்டு தாக்குதல் நடத்திய தி.மு.க.,வுக்கு பாடம் புகட்டுவோம்.

எங்கே.. பாடம் புகட்டறது,.? அவங்க தான் திகட்டற அளவு கதாநாயகியை களம் இறக்கீட்டாங்களே..மக்கள் மதி மயங்குவது நிச்சயம்... 
Hilarious political cartoon images

Monday, March 21, 2011

பங்குனிதேர் உற்சவம் -சென்னிமலையில் ஒரு உற்சாக உலா..?

https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEglpO6dgaJc4OFurCXq9JC2YrzJiFKxksuLzLDlPYwcsjaDBVzdT9uBGrsG0HAj86folCq2rsWLZeOutsvd04l5FhDWyhWfu2XgdyQ_LTjLdcYvX6RHD_4pz1xGQKKAYU3idzlBdlthNv1t/s400/thaipusam6_creativespark.jpg 

நேற்று பங்குனித்தேர்த்திருவிழா...வழக்கமா தைத்தேர்க்கு இருக்கற உற்சாகமும், மக்கள் கூட்டமும் இதுல 4 மடங்கு கம்மியா இருந்தது.சென்னிமலையோட மக்கள் தொகை 1,76,000 .அதுல வெறும் 500 பேர் வந்தாக்கூட தேரை இழுக்கலாம்.. ஆனா காலைல 6 மணில இருந்து வேட்டு வெச்சு  7 மணிக்குத்தான் கூட்டம் சேர்ந்தது.வேட்டு சத்தம் கேட்டு அங்கங்கே மனித தலைகள் தெரிய ஆரம்பித்தன.


தைத்தேர்க்கு வெளியூர் ஆட்கள் நிறைய வருவாங்க.. கூட்டம் செமயா இருக்கும்.. ஆனா இந்த தேர்க்கு ஏன் கூட்டம் வர்றது இல்லைன்னு தெரியல..பல வருடங்களாவே அப்படித்தான் இருக்கு..


மக்களிடையே பக்தி குறைந்து வருவதும், அவர்களிடையே  கடவுள் பற்றிய உண்மையான நம்பிக்கை அருகி வருவதும் வருத்தமான விஷயங்கள்.ஏன்னா தனி மனித ஒழுக்கத்துக்கும், சமூக முன்னேற்றத்துக்கும் ஆன்மீகம் தெரிஞ்சோ தெரியாமயோ ஒரு காரணியா இருக்கு.

எப்படின்னா ஒரு ஸ்கூல்ல ஹெச். எம் .கண்டிஷனா இருந்தா அந்த ஸ்கூல்  ஸ்டூடண்ட்ஸ் பங்க்சுவாலிட்டியா இருப்பாங்க.. ஒரு ஆஃபீஸ் அல்லது கம்பெனியின் மேனேஜர் கண்டிப்பானவரா இருந்தா அங்கே வேலை செய்யறவங்களும் ஒழுங்கா வேலை செய்வாங்க..அதே போல் முன்பெல்லாம் கடவுள் பற்றிய பயம் அதிகமா இருந்தது. தப்பு பண்ணுனா சாமி கண்ணை குத்திடும் என்று பயமுறுத்தி வெச்சிருந்தாங்க..

மனசாட்சிக்கு பயப்படாதவன் கூட சாமிக்கு பயப்பட்டான்.சாமி சும்மா விடாது.. தண்டனை உண்டுன்னு பயந்தான்.சின்ன வயசுல நோட் புக்கோ,பேப்பரோ மிதி பட்டா சரஸ்வதி சாமியை அவமானப்படுத்திட்டே.. உனக்கு இனி படிப்பே வராதுன்னு சொல்வாங்க..காசை,அல்லது பணத்தை தெரியாம மிதிச்சாக்கூட லட்சுமி சாமியை அவமானப்படுத்தீட்டே.. உன் கிட்டே செல்வம் தங்காது.. உன் கிட்டே லட்சுமி சேர மாட்டா அப்படிம்ப்பாங்க..
http://www.thedigitaltrekker.com/wp-content/uploads/2009/02/20090208-045908.jpg
ஆனா இந்தக்கால பசங்க கிட்டே பக்தியையோ,உண்மையான ஆன்மீகத்தையோ பார்க்க முடியல..இப்ப இருக்கற தலை முறைகள்ல எத்தனை பேருக்கு தேவாரம், திருவெம்பாவை, திருப்பாவை, கந்த சஷ்டி தெரியும்?


கடவுள் நம்பிக்கை இல்லாதவங்க கூட புராணங்கள், பக்தி இலக்கியங்கள் படிப்பது தப்பில்லை.இப்போ இருக்கற ஆட்கள்ல எத்தனை பேர் திரு நீறை நெற்றி நிறைய இட்டுக்கறாங்க..?அது சும்மா கம கமன்னு வாசம்  வீசுமே.. தலை வலியை காணாம போகச்செய்யுமே..நிறைய பேரு பவுடர் அடிச்சுட்டு ஒரு துளி கீற்று பவுடரை திருநீறு மாதிரி இட்டுக்கறாங்க..

கோயிலுக்குள்ள இளைஞர்களைப்பார்க்கறது அரிதாகி விடுகிறது..ஒரு அசாதாரணமான அமைதி கோயில்ல இருக்கும். பல கஷ்டங்கள், குடும்ப பிரச்சனைகள், ஆஃபீஸ் தலை வலிகள் எல்லாத்துக்கும் ஒரு அரு மருந்தா கோவில் விசிட் நமக்கு கை கொடுக்கும்.

நீங்க சாமியே கும்பிட வேண்டாம்.சும்மா வந்துட்டு போங்க.. 10 நிமிஷம் அமைதியா உட்கார்ந்து பாருங்க..ஒரு மாற்றம் தெரியும்.. மனசுல ஒரு நிம்மதி இருக்கும்.சாமி கும்பிடறவங்க பெரும்பாலும் அவங்களுக்கு என்ன தேவை என்பதை கோரிக்கையா வைக்கிறான்.அதற்கான காணிக்கையை உண்டியல்ல போடறான்.. இதுக்குப்பெயர் பக்தியா?
https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiwZICUISpjB2rN7jRhZmg14nYiQjwfWFezMsF5VwlJVAKK7hdPE14jYYdUxNgn6D6sPiZ5L61QfXDwjQ51EB1ERNj7Cq4FCINUjHmWYbbWBPLdgjC0bta0wLScWFoDMKAhxAhcFU0qojU/s1600/SAM_1546.JPG
ஆதியும் அந்தமும் இல்லா அரும்பெருஞ்சோதியை
யாம் பாட கேட்டே யும் வாள் தடங்கன்,
,மாதே வளருதியோ வன் செவியோ நின் செவி தான்
மாதேவன் வார்க்கழல்கள் வாழ்த்திய வாழ்த்தொலி போய்

வீதி வாய்க்கேட்டலுமே விம்மி விம்மி மெய் மறந்து
போதார் அமளியின் கண் நின்றும் புரண்டிங்கன்
ஏதேனும் ஆகாள் கிடந்தாள் என்னே என்னே
ஈதே எந்தோழி பரிசேலோர் எம்பாவாய்....




இந்தப்பாட்டு திருவெம்பாவைல வருது..மார்கழி மாசத்துல விடியற்காலைல 5 மணிக்கு எழுந்து பச்சைத்தண்ணில குளிச்சு ,நெற்றில பட்டை இட்டுக்கிட்டு வெறும் வேட்டி மட்டும் கட்டி சட்டை இல்லாம குளிர்ல ஈஸ்வரன் கோயிலை சுற்றி வருவாங்க..பாட்டு பாடிக்கிட்டே ..( திருவெம்பாவை)

பாட்டுக்கு அர்த்தம் புரியனும்னு அவசியம் இல்லை.. கேட்டாலே புண்ணியம்னு சொல்வாங்க..

ஒண்ணும் வேணாம் காலைல எழுந்ததும் சுப்ரபாதம் பாட்டு டேப்ல போட்டு கேளுங்க.. மனசுல ஒரு எழுச்சி தோணும்.. மன அமைதி கிடைக்கும்.
http://tconews.files.wordpress.com/2008/07/dsc00863.jpg
அப்புறம் மனிதனின் மிருக குணங்களை  இறைவனின் சந்நிதானம் அடக்க வல்லது. குறிப்பா சைவம் மட்டும் சாப்பிடறவங்க இதை உணர முடியும்.ஒரு உயிரை கொன்று அதன் சதைகளை விரும்பி சாப்பிடும்போது யோசிச்சுப்பாருங்க....நாம இறந்தா அதை சவம் என சொல்றோம்.. ஆனா விலங்கு இறந்தா மட்டன் ஆகிடுது.. அதுவும் டெட் பாடிதான்.. டெட் பாடியை சாப்பிடறோம்னு அருவெறுப்பு மனுஷனுக்கு வரனும்.

நான் ஏன் சைவத்தை பற்றி இந்த அளவு சொல்றேன்னா மனிதனோட உணவுப்பழக்க வழக்கம் அவனோட கேரக்டரை தீர்மானிக்குது..அசைவத்தை தவிர்க்க முடியாதவங்க அதை குறைக்கலாம்..

சபரி மலைக்கு மாலை போடறவங்க மாலை கழுத்துல இருக்கற வரை உத்தமனா இருப்பதும், மாலை கழுத்தை விட்டு இறங்குனதும் பண்ணாத அட்டூழியம் எல்லாம் பண்ணுவதும் நகைக்க வைக்கும் உண்மைகள்.

கோயில் பிரசாதங்கள் செம டேஸ்ட்டாக இருபதற்கு முக்கிய காரணம் அதை சமைப்பவர்கள் அர்ப்பணிப்பு உணர்வோடவும் ,பக்தியோடவும் சமைக்கறதுதான்.இந்த வித்யாசத்திற்கு இன்னொரு உதாரணம் சொல்றேன்.நம்ம அம்மா சமையலை விட மனைவியோட சமையல் டேஸ்ட் கம்மியா தான் இருக்கும் இதுக்கு என்ன காரணம்?
http://img.dinamalar.com/data/aanmeegam/large_160032500.jpg
1. கிட்டத்தட்ட 25 வருஷங்களா நாம அம்மா கைப்பக்குவத்தை சாப்பிட்டு பழகிட்டோம்.

2.மனைவி சமைக்கும்போது சில சமயங்களில் ஏதானும் சண்டை போட்டுக்கிட்டு வேண்டா வெறுப்பா சமைக்கலாம். அந்த வெறுப்புண்ர்வு கூட சமையலில் வந்து விடுமாம்.

கட்டுரை எங்கேயோ ஆரம்பிச்சு இங்கே வந்து நிக்குது..கடவுள் இருக்காரா? இல்லையா? முன் ஜென்மம் என்பது உண்மையா?பொய்யா?கர்ம வினைப்பயன் என்பது என்ன? ஜாதகம் என்பது உண்மையா? வரும் வாரங்களில் பார்ப்போம்.

வை கோ வை இழுக்க கலைஞர் பகிரங்க முயற்சி.. அரசியல் உலகில் பர பரப்பு

http://rachelchitra.files.wordpress.com/2008/10/vaiko_tn_chiefminister.jpg 

கலைஞர் சிறந்த ராஜ தந்திரி என்பதை இப்போதும் நிரூபித்துக்கொண்டே தான் இருக்கிறார்,வை கோ வை இழுக்க வீரமணி மூலம் தூது விட்டு இருக்கிறார்.

தி.மு.க. கூட்டணிக்கு ஆதரவு தாருங்கள்: வைகோவுக்கு வீரமணி திறந்த மடல்!
சென்னை, மார்ச் 21,2011
தி.மு.க. கூட்டணிக்கு ஆதரவு தர வேண்டும் என்று ம.தி.மு.க. பொதுச் செயலாளரை திராவிடக் கழகத் தலைவர் கி.வீரமணி கோரிக்கை விடுத்துள்ளார்.

இதுதொடர்பாக வைகோக்கு அவர் இன்று எழுதிய திறந்த மடல்:

"அன்புள்ள ம.தி.மு.க.வின் பொதுச் செயலாளர் சகோதரர் மானமிகு வைகோ அவர்களுக்கும், அவரது கட்சியின் சகோதரர்களுக்கும் உங்கள் தாய்க் கழகத்தின் தாய்க் கழகமான திராவிடர் கழகத்தின் தொண்டர்களுக்குத் தொண்டன் மிகுந்த பாசத்துடன் எழுதும் உரிமை வேண்டுகோள் இது.

அ.தி.மு.க. கூட்டணியிலிருந்து அதன் பொதுச் செயலாளர் ஜெயலலிதா தங்கள் கட்சியை தொகுதிப் பங்கீடு என்ற ஒரு சாக்கைப் பயன்படுத்தி, திட்டமிட்டே வெளியேற்றியது கண்டு - தங்களுக்கும், தங்களை நம்பி தொடர்ந்து பின்பற்றும் உடன்பிறப்புகளுக்கும் ஏற்பட்டுள்ள அவமரியாதை கண்டு எங்கள் மனம் வேதனைப்படுகிறது.


https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhiUmyuVFFeIGTdM0PJ-59cv63dyJonmK4IAB5iQ60A0Fu4XahSTq6zhnkdd5fRoub8RkijMbGm-tlPnHtOgsD0INUXBm1PQPzbg1_x3ZG-r4WU1ZJuteX2JaOfSn3PLS2SPEJhKAcVlZbp/s400/0016.JPG
தான் ஆடாவிட்டாலும் தன் சதை ஆடக்கூடிய அளவுக்கு கொள்கை லட்சிய முறையில் தந்தை பெரியார் என்ற மூல வேரிலிருந்து கிளைத்தவர்கள் அல்லவா நாம் அனைவரும்?
தங்களுக்குத் தொகுதிகளைக் குறைத்துக் கொடுத்ததைவிடக் கொடுமை, தங்களை (தங்கள் என்று சொல்லும்போது உங்களுடன் உள்ள உடன்பிறப்பு, தோழர்களையும் இணைத்தே சொல்வதாகக் கொள்ள வேண்டுகிறோம்) அக்கூட்டணியிலிருந்து அவமானப்படுத்தி, அதன் மூலம் ஆத்திரம் கொப்பளிக்க தாங்கள் இரவெல்லாம் பேசி முடிவு எடுக்க வைத்ததன் "ஆரிய மாயை" பற்றி எம்மைப் போன்ற - அவரை அணுஅணுவாக உணர்ந்தவர்களுக்கு இதில் வியப்போ, அதிர்ச்சியோ ஏற்படவில்லை. 

இது தங்களுக்கு என்றோ ஒரு நாள் நடைபெறும் என்பதை எதிர்பார்த்தவர்கள் நாங்கள் - விரும்பியவர்கள் அல்லர்.
வெளியிலிருந்து முதலாளித்துவ சக்திகள் தங்களை வெளியேற்ற எவ்வளவு முழு முயற்சி எடுத்துக் கொண்டுள்ளன என்கிற செய்திதான் மேலும் ஓர் அதிர்ச்சியாக உள்ளது!


கடந்த காலத்தில் அந்த அம்மையாரோடு தாங்கள் ஒத்துப்போன முறை - அவர்கள் கட்சிக்காரர்கள்கூட அந்த அளவுக்குச் செய்திருக்க மாட்டார்கள் என்ற அளவு பேசப்பட்ட ஒன்று.

திருமங்கலத்தில் உங்கள் கட்சி சட்டமன்ற உறுப்பினர் மறைந்ததால் ஏற்பட்ட இடைத் தேர்தலில், அந்த அம்மையார் தன் கட்சிக்குக் கேட்டு வாங்கி, தான் ஏதோ வெற்றியின் முகப்பில் உள்ளதாக ஒரு படம் காட்டச் செய்த முயற்சிக்கு நீங்கள் ஒத்துழைப்புத் தந்ததோடு, தமிழக சட்டமன்றத்திலும் - அ.தி.மு.க.வோடு இணைந்தே இடைத் தேர்தல் புறக்கணிப்பு, சட்டமன்ற வெளிநடப்பு போன்றவற்றிலும் ஒன்றிய நிலையிலேயே செயல்பட்டீர்கள்!
என்றாலும் ஆரியம் தனது வஞ்சத்தைத் தங்கள் மீது சமயம் பார்த்துக் காட்டி, தங்களை அழித்துவிட தனது அஸ்திரத்தை ஏவிவிட்டு வேடிக்கை பார்க்கிறது.

 https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiv5i6muKCDDt6hlslqkPStoIWT6Zqym8vw0drJWwr0WxX7a4h234PLi9khfKMRV1iMEIbxhTHJw5Z7xQgUzLZut4LO1O4nguJ6kd1YNm9EYHZxirLLpU8LcYBXrQ2uOi1kd1x8k0JyWtk/s1600/vaiko.jpg
ஜெயலலிதாவின் கடிதம் எத்தகையது?

தங்களது முடிவை மறுபரிசீலனை செய்யும்படி அந்த அம்மையார் வற்புறுத்தும் கடிதமாக அவர் எழுதிய கடிதத்தின் வாசகங்கள் அமையாது, தங்களுக்கு நிரந்தர வழியனுப்பு உபசாரப் பத்திரமாகவே காட்சி அளிப்பது - அவரது இயல்பின் இலக்கணத்தை வெளிச்சம் போட்டுக் காட்டுகிறது!
அவரிடம் உள்ள அகந்தை, ஆணவம், தன்முனைப்பு இவைபற்றிக் கூறியிருக்கிறீர்கள். இது ஒன்றும் தோண்டித் துருவிக் கண்டுபிடிக்க வேண்டியவையல்ல. அவரிடம் கூட்டுச் சேர்ந்திருந்த பா.ஜ.க. தலைவர்கள், இடதுசாரிகள், காங்கிரஸ் கட்சியினர் முதலிய பலரும் ஏற்கெனவே பட்டு அனுபவித்தது அறிந்த செய்தியாகும்.

அவரது தற்போதைய ஆலோசகர் சோ., சுப்ரமணிய சுவாமி இருவருக்கும், அம்மையாருக்கும் தங்கள் கட்சி நிலைப்பாட்டில் - குறிப்பாக ஈழத் தமிழர் பிரச்னையில் எந்த சிந்தனைப் போக்கு என்பது உலகறிந்த உண்மையல்லவா?

தங்களுக்கு அம்மையார் ஆட்சியில் இழைக்கப்பட்ட "பொடா" கொடுமையை தாங்கள் அரசியல் காரணமாக மறந்திருக்கலாம்; ஆனால் இன உணர்வு, நியாய உணர்வோடு நாங்கள் என்றும் மறந்ததில்லை - சகோதர பாசம் என்பது தேவை வரும்போது பீறிட்டுக் கிளம்பும் என்பதும் இயல்பானதே!


எண்ணெய்யும் நீரும் கலப்பது இயல்பானதல்ல; நீரும் நீரும் கலப்பதே இயல்பு என்னும் உண்மையை அறியாததல்ல!

வைகோவின் அரசியல் பாதை எப்படி அமைய வேண்டும்?

அரசியலில் இன்னொரு தேர்தல் வரும்வரை நாங்கள் சும்மா இருப்போம் என்கிற நிலைப்பாடு சரியாக அமையுமா என்பதை சற்று நிதானமாக யோசியுங்கள். என்றைக்கிருந்தாலும் நாம் ஒரே வேரிலிருந்து கிளைத்தவர்கள் என்பதால் தாங்கள் தங்களது கட்சியின் எதிர்காலத்தைப்பற்றி சற்று உணர்ச்சி வயப்படாமல் யோசியுங்கள். அரசியல் கட்சி நடத்துவோர் ஜனநாயகத்தில் வாக்களிக்காமல் புறக்கணிப்பது நல்லதா?


சுயமரியாதை உணர்வோடு தீர்மானம் நிறைவேற்றியுள்ளீர்கள்; என்றாலும், மேலும் தங்கள் அரசியல் பாதை எப்படி அமைந்தால் சிறப்பானதாக அமையும் என்பதற்கு தி.மு.க.வோடு ஒன்றாக இணைந்துவிட வேண்டும் என்று கூடச் சொல்ல மாட்டேன்; தனி அரசியல் கட்சியானாலும் தி.மு.க. என்ற தங்களின் தாய்க் கழகத்தின் கொள்கை, லட்சியங்களில்தான் அதிகமான ஒத்துப் போகின்ற தன்மைகள் "பளிச்சிடும்" நிலை உண்டு.


அதையொட்டி தாங்கள் 2004இல் நாடாளுமன்றத் தேர்தலில் கடுமையாகப் பிரச்சாரம் செய்தீர்கள். சேது சமுத்திரக் கால்வாய்த் திட்டம் போன்றவற்றைப் பற்றி வற்புறுத்தினீர்கள்.


- இவைபோன்ற பல்வேறு பிரச்னைகளில் நெருக்கமாக இருக்கும் ஒரே அரசியல் கட்சி, தி.மு.க.வாகவும் - அதன் தலைவர் கருணாநிதியுமாகத்தான் இருப்பார்கள்.

ஆயிரம் கோபதாபங்கள் நமக்குள் இருப்பினும் "நீரடித்து நீர் விலகாது" என்னும் பழமொழிக்கொப்ப, நாம் அனைவரும் ஓர் அணியில் நிற்க லட்சிய ரீதியான உணர்வு படைத்தவர்கள்.

தி.மு.க. கூட்டணியை ஆதரிக்கும் நிலைப்பாட்டினை எடுங்கள். எனவே, நிதானமாக யோசியுங்கள். துணிந்து ஒரு நிலைப்பாட்டினைத் தோழர்களோடு கலந்து எடுங்கள். ஆட்சிக்கு வருமுன்னரே இப்படித் தங்களை அலட்சியப்படுத்திய ஜெயலலிதா, தப்பித் தவறி வந்தால் எப்படி "விஸ்வரூபம்" எடுத்து அழிக்க முற்படக் கூடும் என்பதையும் எண்ணுங்கள்.

தி.மு.க.தான் கொள்கை ரீதியாக உடன்படும் கட்சி!

தேர்தலில் மீண்டும் முதல்வர் கருணாநிதி ஆட்சிக்கு வருவது கொள்கை ரீதியாக நமக்குத் தேவையானது. உரிமையுடன் அவரிடம் ஈழப் பிரச்சினை உள்பட அனைத்துக்கும் வற்புறுத்தி வாதாடலாம், செயல்பட வைக்கலாம்.
வேகாத வெயிலையும் பொருட்படுத்தாது, பல மணி நேரம் நீதிமன்றங்களில் வந்து காத்திருந்த தலைவர் கருணாநிதி - தங்களை அம்மையார் "பொடா"வில் போட்டு வதைத்தபோது!

அது மட்டுமல்ல; அண்மையில்கூட அவரது ஆட்சியில் கைது செய்த நிர்ப்பந்த நிலை ஏற்பட்டபோதுகூட தங்களை சிறையில் வைத்திருப்பதை விரும்பாது, மனிதநேயத்தோடு அரசு வழக்குரைஞருக்கே சொல்லி, மறுப்புச் சொல்லாதீர்கள் என்று கூறிய மனித நேயத்தைக் கொட்டியவர் நமது தலைவர். தங்களுக்குரிய மரியாதையை இந்த அணியில் எப்போதும் நீங்கள்பெற முடியும்.


உள்நோக்கமற்ற வேண்டுகோள் நாம் ஒன்றுபட்டு ஓரணியில் நிற்பதால் நம் தமிழினம் உலகம் முழுவதும் உரிமைக் களத்தினில் வெற்றி பெற உதவிடும். இது வெறும் அரசியல் வியூகம் அல்ல - நல்லெண்ணத்தோடும், கவலையோடும் ஒரு சகோதரரின் அறிவுப்பூர்வமான வேண்டுகோள். எந்த உள்நோக்கமோ, அரசியல் லாபங்களைக் கருதியோ அல்ல - இந்த வேண்டுகோள். மனதிற்பட்டது - தங்களது மனப் புண்ணுக்கு மருந்து என்று கருதியே இந்த யோசனை.


பகுத்தறிவாளர்களாகிய நாம் தொலைநோக்குப் பார்வையோடும் சிந்திக்கக் கடமைப்பட்டவர்கள்
என்பதால்தான் இந்த வேண்டுகோள். சிந்திக்க, செயலாற்றுக!"
இவ்வாறு அந்தக் கடித்தில் கி.வீரமணி கூறியுள்ளார்.

இதன் மூலம் வை கோவை குழப்பி குழம்பிய குட்டையில் மீன் பிடிக்க கலைஞர் திட்டம் போட்டிருக்கிறார்.. தாய்க்கழகத்தில் இணைய சான்ஸ் இருக்கு எனவே  ம தி மு க வட்டாரங்கள் தெரிவிக்கின்றன...

தி மு க வின் கதாநாயகி தமிழ்நாட்டுக்கு வில்லி

http://snapjudge.files.wordpress.com/2008/03/pmk_dmk_ramdoss_mp_rajya_sabha_kalainjar_kalki.jpg 

தமிழ்நாட்டில் சில வாரங்களுக்கு முன்பு வரை ஸ்பெக்ட்ரம் ஊழல் பெரிதாக பேசப்பட்டு வந்தது...எப்படியும் தி மு க வீழ்ந்து  விடும் என்ற நம்பிக்கையோடு தேச நலன் விரும்பிகள் நினைத்து வந்தார்கள். கலைஞர்  வெளியிட்ட தேர்தல் அறிக்கை தமிழக மக்களிடையே பெரிய பர பரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

 யார் வந்தாலும் ஊழல் தான் பண்ணுவாங்க...இவர் வந்தாலாவது நமக்கு கிரைண்டர் கிடைக்கும், இலவச பஸ் பாஸ் கிடைக்கும் என பேசி வருகிறார்கள்..எத்தனை  பதிவர்கள் எத்தனை விழிப்புணர்வுக்கட்டுரை எழுதினாலும் இனி பயன் இல்லை என்ற சோர்வே மிஞ்சுகிறது...


.1. பா.ம.க., நிறுவனர் ராமதாஸ்: அனைத்து தொகுதிகளிலும், கூட்டணிக் கட்சிகள் வெற்றி பெற, அனைவரும் கடுமையாக உழைக்க வேண்டும். திருமாவளவனுடன் இணைந்து தேர்தல் பிரசாரம் செய்வோம்; கருணாநிதியை ஆறாவது முறையாக முதல்வராக்க என்னென்ன வழிமுறை யுக்தி என்பதை மையமாக வைத்து பிரசாரம் செய்வோம்.


அடடா.. பச்சோந்தி என்ன அழகா பேசுது பாருங்க.. இதே ஆளு அன்புமணிக்கு  மந்திரி பதவி தரப்படலைன்னா என்னமா கூவுவாரு,,?
----------------------------------------------

2. வருமான வரித்துறை அதிகாரி தகவல்: வேட்பாளர்களின் கறுப்பு பணம் குறித்தும், அப்பணத்தைக் கொண்டு, அவர்கள் ஏதாவது சொத்து வாங்கியிருந்தால், அது பற்றிய தகவல்களைத் தெரிவிக்கலாம். வேட்பாளரிடமிருந்து பெறப்படும் கறுப்பு பணத்திற்கு வசூலிக்கப்படும் வரியில் 10 சதவீதம், தகவல் தருவோருக்கு சன்மானமாக வழங்கப்படும்.

ஆனா அந்த சன்மானத்தை வாங்க அவர் உயிரோட இருக்கனுமே...?

-------------------------------------------------
http://rajkanss.files.wordpress.com/2008/10/cartoon_1991.jpg?w=480&h=341
3. விடுதலைச் சிறுத்தைகள் தலைவர் திருமாவளவன்: அ.தி.மு.க., கூட்டணியில் விரிசல் ஏற்பட்டுள்ளது மகிழ்ச்சியளிக்கிறது. மேலும், மகிழ்ச்சியான செய்தி வரும் என எதிர்பார்க்கிறோம்.

ஆஹா.. தமிழன்னா இப்படித்தான் இருக்கனும்... பேஷ் பேஷ்.. ரொம்ப நன்னா இருக்கு..பக்கத்து வீட்டுக்காரனுக்கு ஒரு கஷ்டம்னா பரிதாபப்படமா பழி வாங்கத்துடிக்கறாங்களே...

-------------------------------------

4. மத்திய அமைச்சர் அழகிரி: தி.மு.க., கூட்டணி அமைய, என் பங்கு மட்டுமல்ல, அனைத்து கூட்டணித் தோழர்களின் பங்கும் உண்டு. அவர்கள், கூட்டணி வெற்றிக்கு தூண்டுகோலாக இருப்பர்.

அதெல்லாம் ஒண்ணும் வேணாம்.. தேர்தல் அறிக்கை எனும் கதாநாயகியே போதும்.. மக்கள் மாக்களாகத்தான் இன்னும் இருக்காங்க என்பதை நிரூபிக்க....

---------------------------

5. தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி பிரவீன் குமார்: திருவாரூர் தொகுதியில், பீர், பிராந்தி மற்றும் ரம் பாட்டில்கள் என, மொத்தம், 1,858 பாட்டில்களை அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர். இவற்றை, கருவூலத்தில் வைத்துள்ளோம். விசாரணைக்குப் பின், இவற்றை டாஸ்மாக் கடைகளுக்கு வழங்குவதா அல்லது வேறு எந்த வகைகளில், "டிஸ்போஸ்' செய்வது என்பது குறித்து முடிவெடுக்கப்படும்.


அதை ஏன் டிஸ்போஸ் பண்ணனும்? எலெக்‌ஷன் கமிஷன் ஆஃபீசர்களுக்கு அதைப்பற்றி எக்ஸ்போஸ் பண்ணுனா போதுமே..ஊத்தி மூடிட மாட்டாங்க..?

-------------------------------
http://www.dinamani.com/Images/article/2011/2/17/cartoonfeb17b.JPG

6. மேற்கு வங்க மாநில காங்கிரஸ் பொறுப்பாளர் ஷகீல் அகமது: மம்தா மீதும், அவரது கட்சி மீதும் எங்களுக்கு நம்பிக்கை உள்ளது. ஆனால், அவர் அறிவித்த தொகுதிப் பங்கீட்டில் எங்களுக்கு உடன்பாடு இல்லை. தொகுதிப் பங்கீடு குறித்த பிரச்னைக்கு, ஹோலி பண்டிகை முடிந்ததும், கட்சியின் மேலிடத் தலைவர்கள் ஆலோசித்து முடிவெடுப்பர்.

ஹோலி பண்டிகைல கலர் பொடி பூசுவாங்க...மம்தா உங்க முகத்துல கரியைப்பூசப்போறாங்க..

--------------------------------

7.  தமிழக பா.ஜ., தலைவர் பொன்.ராதாகிருஷ்ணன் பேட்டி:மத ரீதியாக நாங்கள் தேர்தலை அணுகவில்லை; மக்களும் அப்படி அணுகக் கூடாது. பா.ஜ., ஆளும் மாநிலங்களான கர்நாடகா, குஜராத், மத்திய பிரதேசம், சத்திஸ்கர் போன்ற மாநிலங்களின் வளர்ச்சியை, தமிழக மக்கள் சிந்தித்துப் பார்க்க வேண்டும்.


அதெல்லாம் சிந்திக்க எங்கே விடறாங்க.. நாடு முழுக்க தேர்தல் கதாநாயகி பற்றித்தான் பேச்சு.. தமிழ்நாடு நாசமாப்போகப்போவதை யாராலும் தடுக்க முடியாது போல இருக்கே..

------------------------------------
 8. நாடாளும் மக்கள் கட்சியின் தலைவர் கார்த்திக் பேட்டி: அ.தி.மு.க.,வை இயக்கும் ஒருவர், என் வீட்டு முன்,எங்கள் கட்சியின் கொடியை அவமதித்தார். இது குறித்து, ஜெயலலிதாவிற்கு கடிதம் எழுதினேன். இதற்கு அவரிடமிருந்து இதுவரை பதில் கடிதம் வரவில்லை. இதன் காரணமாக, அ.தி.மு.க.,வுடன் எங்கள் உறவு முறிந்தது; இனி, சேர்வதற்கு வாய்ப்பே இல்லை.

அம்மாவுக்கும் சரி, அவங்க கட்சிக்காரங்களுக்கும் சரி ஆளுங்களை அவமானப்படுத்தித்தான் பழக்கம்..  உங்க கட்சிக்கொடி எதுன்னே அவங்களுக்கு தெரிஞ்சிருக்காது... தெரியாம பைக் துடைச்சிருப்பாங்க....

--------------------------------
http://inthiya.in/ta/wp-content/uploads/2011/01/veeramani-karunanidhi.jpg
9. வேளாண் விஞ்ஞானி நம்மாழ்வார் பேச்சு: இந்தியாவின் பாரம்பரிய வேளாண்மை முறைகளைச் சீரழித்து நவீன தொழில் நுட்பம் என்ற பெயரில், இயற்கைக்கு விரோதமான ஆய்வுகள் செய்யப்படுகின்றன. இதன் மூலம், உற்பத்தி செய்யப்படும் விதைகளைக் கொண்டு உருவாக்கப்படும் உணவுப் பொருட்களை உட்கொள்வதால், நம் தேகத்திற்கும், தேசத்திற்கும் ஆரோக்கிய மற்ற நிலை உருவாகிறது.

தேகத்துக்கு ஆரோக்கியமற்ற நிலைன்னு சொன்னா சாரு நிவேதிதா கோவிச்சுக்குவாரு... அவர் நாவலை குறை சொல்றோம்னு....தேசத்துக்கு ஆரோக்கியமற்ற நிலை உருவாகுதுன்னா கலைஞர் கோவிச்சுக்குவாரு... அவரோட தேர்தல் அறிக்கை கதாநாயகியை நாம குறை சொல்றோம்னு....

-------------------------------------------

10. பா.ஜ., தேசிய செய்தித் தொடர்பாளர் நிர்மலா சீதாராமன் பேட்டி:தேர்தலில், விலைவாசி உயர்வு, "ஸ்பெக்ட்ரம்' முறைகேடு, லஞ்சம் உள்ளிட்ட பிரச்னைகளை விளக்கி பா.ஜ., பிரசாரம் மேற்கொள்ளும். குறிப்பாக, கடலோர மாவட்டங்களில், தமிழக மீனவர்கள் மீதான தாக்குதல், டெல்டா மாவட்டங்களில் நதிகள் இணைப்பு, சாயக் கழிவு உள்ளிட்டவற்றுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படும்.

எல்லாம் வேஸ்ட் தான்..  தி மு க தேர்தல் அறிக்கை எனும் கதாநாயகி தமிழ்நாட்டின் பவர்ஃபுல் வில்லி

------------------------------------------
டிஸ்கி 1 - இன்று மாலை 4 மணிக்கு சென்னிமலை பங்குனித்தேர் பற்றிய ஒரு ஆன்மீக கட்டுரை போடறேன்.. அதுல வழக்கமான நகைச்சுவை, கிளாமர் இருக்காது..கடவுள் பற்றிய தேடலும், மனிதனின் பக்தி பற்றிய சர்ச்சையான கருத்துக்களும் இருக்கும் .. கபர்தார்...

டிஸ்கி 2 - கடந்த 2 தினங்களாக வலைப்பக்கம் வராமல் போனவர்களுக்கு மட்டும் எனது முன் தினப்பதிவுகள்



3.


Sunday, March 20, 2011

ஆனந்த விகடன் VS சீமான் பேட்டி - காமெடி கும்மி



காங்கிரஸ் கட்சிக்கான தொகுதிப் பட்டியலும் வேட் பாளர் விவரமும் எப்போது வெளியாகும் என தொடை தட்டிக் காத்திருக்கிறார் சீமான். 

''ஒரு நாளைக்கு முன்று தொகுதிகள்...
ஐந்து மணி நேரம் தொண்டை கிழியப் பேச்சு... 20 நாட்களில் 63 தொகுதிகளில் வலம்... காங்கிரஸுக்கு எதிராக இப்போதே களம் இறங்கிவிட்டேன். காங்கிரஸோடு கூட்டுவைத்தால், கருவறுக்கப் படுவோம் என்கிற அச்சம் இங்கே இருக்கும் அத்தனை கட்சிகளுக்கும் பிறக்க வேண்டும். அத்தகைய மரண அடியை இந்த முறை காங்கிரஸுக்குக் கொடுப்பேன். 

இந்த அடிபட்ட புலியின் உறுமலில் காங்கிரஸ் என்ன கதியாகப்போகிறது பாருங்கள்!'' - சபதம் போடும் சீமான் கட்சியின் உயர் மட்டக் குழு, ஆன்றோர் பேரவைகளைக் கூட்டி தேர்தல் வியூகங்களில் தீவிரமாக இருக்கிறார். 

 

1. ''தி.மு.க-வின் ராஜினாமா நாடகம் காங்கிரஸிடம் எடுபடாமல் போய்விட்டதே..?'' 

சீமான் - ''தமிழகத்தின் மிச்சம் மீதித் தன்மானத்தையும் காங்கிரஸின் காலடியில் அர்ப்பணம் செய்துவிட்டு வந்திருக்கிறது தி.மு.க. '63 தொகுதிகள் கேட்பது நியாயமா..? அதுவும் தங்களுக்கான தொகுதிகளை அவர்களே தேர்ந்தெடுக்கலாமா..?’ என்றெல்லாம் உரிமைக் குரல் எழுப்பி, முறுக்கிக் கிளம்பினார் முதல்வர். 

அதை வரவேற்று தி.மு.க-வினரே பட்டாசு வெடித்தார்கள். 'உலகத் தமிழர்களின் உளமார்ந்த எண்ணம் ஈடேறிவிட்டதாக’ப் பாராட்டி பொன்னாடை போர்த்திப் பூரித்தார்கள் பலரும். இறுதியில் என்ன நடந்தது? அதே 63 தொகுதிகளில் ஒன்றுகூடக் குறையாமல் நிர்பந்தித்து வாங்கி இருக்கிறது காங்கிரஸ். மீசை முறுக்கி ராஜினாமா கடிதங்களோடு கிளம்பியவர்கள், காங்கிரஸின் ஆசையை நிறைவேற்றிவிட்டு, 'கூட்டணி தொடரும்’ என வெட்கமே இல்லாமல் வெளியே வருகிறார்களே... இந்தக் கேவலமான சரணாகதி தேவைதானா? 

மலை மலையாக சொந்த இன மக்கள் கொன்று  குவிக்கப்பட்டபோதுகூட கருணையையும் சுரணையையும் கணக்கில்கொள்ளாதவர்கள், தேர்தலுக்காகத் திடீர் தன்மானம் காட்டினால் காங்கிரஸே சிரிக்காதா? சீட்டுக்காகப் பதவியைத் துறப்பதாகச் சொன்னவர்கள், ஈழ நாட்டுக்காகத் துறக்க முன்வந்தார்களா?

விசாரணை வளையம் தன் குடும்பத்தைச் சுற்றிவிடக் கூடாது என்பதற்காக கலைஞர் வீசிய மிரட்டல் அஸ்திரம் முனை மழுங்கி விழுந்திருக்கிறது. காங்கிரஸை வீழ்த்துவதற்காகவே தொடங்கப்பட்ட இயக்கத்தை, காங்கிரஸின் காலடியில் விழவைத்த பெருமை கலைஞர் பெருமகனாரையே சேரும்!''

சி பி - கலைஞர் ஒரு ராஜ தந்திரி.. .. எது செஞ்சாலும் ஒரு அர்த்தம் இருக்கும். தமிழ்க்குடும்பத்துக்குத்தான் என்ன செய்வது என அவருக்கு தெரியாதே தவிர.. தன்னோட குடும்பத்துக்கு என்ன பண்ணனும்னு அவருக்கு நல்லாவே தெரியும்.


2. ''காங்கிரஸின் சாதிப்பை முதல்வரின் ராஜ தந்திரத்துக்கு விழுந்த அடியாகக் கருதுகிறீர்களா?'' 

சீமான் - ''கிச்சுக்கிச்சு மூட்டாதீங்க... யார் ராஜ தந்திரி? எம்.ஜி.ஆர். உயிரோடு இருந்த வரை ஆட்சிக் கட்டிலில் அமர முடியாமல் அல்லாடித் தவித்தாரே, இவரா ராஜ தந்திரி? ஜெயலலிதாவிடம்கூட அரசியல் நடத்த முடியாமல் அவர் ஆட்சிக் கட்டிலில் அமர அடிகோலினாரே... இவரா ராஜ தந்திரி? வருகிற, போகிற கட்சிகளுக்கு எல்லாம் ஏழு சீட்டு, இருபது சீட்டு என அள்ளி வழங்கி, எப்படியாவது மறுபடியும் ஆட்சியைப் பிடிக்க மாட்டோமா என அஞ்சிக் கிடப்பவரை அரசியல் ராஜ தந்திரி என்றால், சிரிப்புத்தான் வருகிறது!''

சி பி  - கொடுத்ததெல்லாம் கொடுத்தார்.. அவர் யாருக்காக கொடுத்தார்... ஒருத்தருக்கா கொடுத்தார்.. இல்லை.. அனைவருக்குமே (பங்கு)கொடுத்தார்..


3. ''தமிழக மீனவர்கள் தாக்கப்படுவதைக் கண்டித்து கனிமொழி உள்ளிட்டவர்களும் களம் இறங்கிக் கைதாகி இருக்கிறார்களே?'' 

சீமான் - ''கனிமொழி மட்டுமா களம் இறங்கினார்... காங்கிரஸ்காரர்களே களம் இறங்கினார்கள். 'தமிழ் மீனவர்கள் தாக்கப்படக் கூடாது’ என ராஜபக்ஷே மட்டும்தான் கொடி பிடிக்கவில்லை. இவர்கள் நாடகப் போராட்டம் நடத்திய அடுத்த நாளே நூற்றுக்கும் மேற்பட்ட மீனவர்கள் கடத்தப்பட்டார்கள். இவர்களின் போராட்டத்தாலேயே அவர்கள் விடுவிக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டது. திரைக்கதைகளில்கூட இயற்ற முடியாத கற்பனையை இங்கே கடை விரிக்கிறார் கள்.

இதே மீனவப் பிரச்னைக்காகத் தானே நானும் போராடினேன். நான் பேசினால் ஐந்து மாதம் சிறைவாசம்... கனிமொழி பேசினால் ஐந்து மணி நேர சிறைவாசமா? அப்பாவின் கையில் இருக்கும் காவல் துறை, மகளைக் கைது செய்து விடுவித்த கூத்தைப் போராட்டம் எனச் சொல்லாதீர்கள். நாடகத்தாலேயே நாட்டை ஆண்டுவிட முடியும் என நினைக்கிற நயவஞ்சகம் அது!''

சி பி  - இந்தியாவின் இறையான்மைக்கு எதிரா நீங்க பேசுனீங்க..அவங்க என்ன பண்ணுனாங்க..? பாவம்.. அப்பா சொல்லிக்குடுத்ததை கரெக்ட்டா பண்ணுனாங்க..அவங்க அப்பாவுக்கு எதிராவும் பேசலை.. மீனவர்களுக்கு ஆதரவாவும் எதுவும் செய்யலை...


4. ''இந்தத் தேர்தல் களத்தில் நடிகர் விஜய்யின் நிலைப்பாடு எப்படி இருக்கும்?''

சீமான்  - ''விஜய் மட்டும் அல்ல... களத்துக்கு வராத பலருக்கும் இந்த ஆட்சியை அகற்றவேண்டிய ஆவேசம் இருக்கிறது. என்னுடைய நோக்கம் வேறு... விஜய் யின் நோக்கம் வேறு. ஆனால், இருவருமே ஆட்சி மாற்றத்தை விரும்புகிறோம். 

தேளும் ஒரு புழு இனத்தைச் சேர்ந்ததுதான். ஆனால், அதற்கு கொடுக்கு வந்தது எப்படி? பலரும் நசுக்க நசுக்க, தன்னைத் தற்காத்துக்கொள்ள தானாகவே அதற்கு கொடுக்கு முளைத்துவிட்டது. அப்படி கொடுக்கு முளைத்த தேள்தான் விஜய். அவர் என்ன ஆற்று மணலை அள்ளி விற்றாரா? மதுபானத் தொழிற்சாலை தொடங்கி மலை மலையாக பணம் குவித்தாரா? அப்படி இருக்க, அவருக்கு ஏன் இத்தனை பிரச்னைகள்? 

'இளைஞன்’ படம்தான் ஓட வேண்டும்; 'காவலன்’ ஓடக்  கூடாது என ஏன் கட்டுப்பாடு? தன்மானத்துக்காக மூன்று கோடி ரூபாயைத் தூக்கிக் கொடுக்கவேண்டிய இக்கட்டை விஜய்க்கு ஏற்படுத்தியது ஏன்? விநியோகஸ்தரையே தூக்கிக்கொண்டு போன விசித்திரங்களை எல்லாம் விஜய்யால் எப்படிப் பொறுக்க முடியும்?

ஒரு புழுவின் மனதோடு அத்தனையையும் பொறுத்துக்கொண்டவருக்கு அடுத்தடுத்த அவமானங்களும் அடக்குமுறைகளுமே கொடுக்கைக் கொடுத்துவிட்டன. அந்தக் கொடுக்கு, அவர்களைக் கொத்தாமல் விடாது. அதற்காக, விஜய் களத்துக்கு வந்து பிரசாரம் செய்யவேண்டியது இல்லை. அவர் வீட்டுக்குள் இருந்தாலே போதும். அவர் ஆட்சி மாற்றத்தை விரும்புகிறார் என்பது கடைக்கோடி ரசிகனுக்கும் தெரியும்!''

சி பி  - இளைஞன் படம் ஓடுச்சா.. ? செம காமெடி போங்க.. தியேட்டர்ல ஓடுனது 4 காட்சிகள்..ஒரு நாள் மட்டும்தான். இன்னும் கலைஞர் டி வி ல மட்டும் தானே ஓடிட்டு இருக்கு..?விளம்பரமா..?


5. ''ஜெயலலிதா - விஜயகாந்த் கூட்டணியை வலுவானதாகப் பார்க்கிறீர்களா?'' 

சீமான்  - ''ஆட்சி மாற்றத்தை அனைத்துத் தரப்பு மக்களும் விரும்புகிறார்கள் என்பதற்கு இங்கே ஆயிரத்தெட்டு பிரச்னைகள் இருக்கின்றன. தமிழகத்தில் இருக்கும் பெரிய கட்சியான அ.தி.மு.க-வுடன் விஜயகாந்த் இணைந்திருப்பது நிச்சயமான ஆட்சி மாற்றத்துக்கு வழிவகுக்கும்.

இத்தனை வருடங்களாகத் தொடர் போராட்டங்களைச் சந்திக்கும் தே.மு.தி.க. இன்றைக்கு அ.தி.மு.க. கூட்டணியில் 41 இடங்களைப் பெற்று இருப்பது அந்தக் கட்சித் தொண்டர்களை நம்பிக்கையோடு நிமிரவைத்து இருக்கிறது. அவர்களின் உழைப்புக்கான அறுவடைக் காலம்தான் இந்தத் தேர்தல்.


இவர்களோடு அண்ணன் வைகோவும் இடதுசாரித் தலைவர்களும் இணைந்திருப்பது மக்களின் கூட்டணியாக அந்த அணியை மாற்றி இருக்கிறது. இதைச் சொல்வதாலேயே, இரட்டை இலை சின்னத்துக்கு சீமான் ஆதரவு கேட்கிறார் என சொல்லத் தொடங்கிவிடுவார்கள்.

காங்கிரஸை எதிர்த்து நிற்பது இலையாக இருந்தாலும் பம்பரமாக இருந்தாலும் அதைத்தான் ஆதரிப்பேன். இங்கே சின்னம் முக்கியம் இல்லை. எண்ணம்தான் முக்கியம். கலைஞரையும் காங்கிரஸையும் எதிர்ப்பது ஜெயலலிதாவை ஆதரிப்பதற்குச் சமமாகிவிடுமே எனப் பதறுகிறார்கள் சிலர்...

அதைப்பற்றி கவலை இல்லை. அ.தி.மு.க. பார்ப்பன தலைமையிலான கட்சி என்பதற்காக கலைஞரின் அத்தனை கொடுமை களையும் சகித்துக்கொண்டு இருக்க வேண்டிய அவசியம் இல்லை!''

சி பி  - தமிழ்நாட்டின் இரண்டு தீய சக்திகளையும் துரத்த ஐடியா இருக்கா? அதை சொல்லுங்க.. மாத்தி மாத்தி 2 கொள்ளைக்காரங்களுமே நாட்டை கொள்ளை அடிக்க விடனுமா?