Saturday, March 05, 2011

ஈரோட்டில் நமீதா நீதிமன்றம்.என்ன கொடுமை சார் இது?

http://www.tamilactress.org.in/images/full/7/namitha-0178.jpg 

1.எங்கள் கட்சி தொலை நோக்குடன் செயல்படுகிறது.

இல்லையே... மக்களுக்கு தொல்லை கொடுக்கும் நோக்கில் செயல்படறதா சொல்லறாங்களே..

--------------------------------

2. பிச்சைக்காரன் - சார்.. ரூ 6 குடுங்க..டீ குடிக்கனும்...


எதுக்கு 6 ரூபா?ஒரு டீ 3 ரூபா தானே..?

இலை சார்.. எனக்கு ஒரு கேர்ள் ஃபிரண்ட் இருக்கா.. அவளுக்கும் சேர்த்து...

என்னது?பிச்சைக்காரனுக்கும் கேர்ள் ஃபிரண்டா?

நான் பிச்சைக்காரன் ஆனதே கேர்ள் ஃபிரண்டாலதான்...” 

----------------------------------
3.ஜட்ஜ் - உனக்கு 6 மாச ஜெயில் தண்டனை விதிக்கிறேன்.

கைதி - என் பர்ஃபார்மென்ஸ் சரி இல்லைன்னு ஜெயிலை விட்டு எலிமினேட் பண்ணீடுவீங்கனு பார்த்தேன்.  ( மானாட மயிலாட பாதிப்பு போல)

--------------------------------------------
4. சன் டி வி புகழ் சந்தியா என ஊரே சொல்லுதே.. நீங்க சன் டி வி ல என்ன புரோகிராம் பண்ணி இருக்கீங்க?

அதெல்லாம் இல்ல... சன் டி வி ல வர்ற எல்லா புரொகிராமையும் ஒண்ணு விடாம பார்ப்பேன்...

------------------------------------------

5.  தலைவருக்கு ஒரு விபரமும் தெரியலைன்னு எப்படி சொல்றே..?

ஆ.ராசா,என் கே கே பி ராஜா  ரெண்டு பேரும் மன்னர் குடும்பமா?ன்னு கேட்கறாரே...?

----------------------------------------
http://www.telugu365.com/photo/1290056345Tapsee.jpg

6.இந்தப்படத்துல ஹீரோவுக்கு தாதா கேரக்டர்னு எப்படி சொல்றே..?
ஷூட்டிங்க் ல ஹீரோ கோட் சூட் போட்டுட்டு இந்தப்பக்கம்,அந்தப்பக்கம் நடக்கறதையே  28 நாள் எடுத்தாங்களே..?

-----------------------------------

7.என்னது? நமீதா நீதிமன்றமா?புதுசா இருக்கே?

நமீதா நற்பணி மன்றம்தான்.நமீதா ஜட்ஜா வந்ததால அதை நீதி மன்றமா மாத்தீட்டாங்களாம்.

------------------------------------
8. தலைவருக்கு அடிக்கடி எகனை மொகனையான டவுட் வருது.

எப்படி?

வெண்டைக்காயை லேடீஸ் ஃபிங்கர்னு சொல்றாங்களே... எந்தக்காயை ஜெண்ட்ஸ் ஃபிங்கர்னு சொல்வாங்க?ன்னு கேட்கறார்.

-------------------------------------
9.தலைவரைக்காண அலை அலை யா மக்கள் கூட்டம் வருதுன்னு சொன்னதும் சந்தோஷப்படாம தலைவர் ஏன் பயப்படரார்?

அவர் காதுக்கு அலை வரிசை அலை வரிசையா .. அப்படின்னு விழுந்துச்சாம்.அலை வரிசைன்னாலே சி பி ஐ யும் பின்னாலயே வருமே னு பயப்படறார்.

-------------------------------------

10.உங்களுக்கு சுகர் இருக்கறது எனக்கு தெரியம்.. இப்போ உப்பும் இருக்கே எப்படி?

கொஞ்சம் அசால்ட்டா இருந்துட்டேன் டாக்டர்.

-------------------------------------------

டிஸ்கி -




Friday, March 04, 2011

சிங்கம் புலி - லேடி சபலிஸ்ட் கதை - சினிமா விமர்சனம் 18 பிளஸ்


http://www.tamilcinemanews.in/wp-content/uploads/2010/12/singam_puli_posters_wallpapers_01_thumb.jpg 
படத்தோட முதல்  2 ரீல் ஓடுனதுமே பயந்துட்டேன்.. வாலி படக்கதைதானோன்னு..நல்ல வேளை இயக்குநர் சுதாரிச்சு திரைக்கதைல ஒரு டர்னிங்க் பாயிண்ட் குடுத்து கதையின் போக்கையே மாற்றி டபுள் ஆக்ட் ஆள்மாறாட்டக்கதை லேபிள்ல இருந்து லேடி சபலிஸ்ட் ஆண்ட்டி ஹீரோவின் கதையா மாத்தி படத்தை காப்பாத்தீட்டாரு.

ஒரு ஜீவா கள்வனின் காதலி எஸ் ஜே சூர்யா மாதிரி,கண்ணுல படற பொண்ணுங்களை எல்லாம் பிராக்கட் போட்டு கரெக்ட் பண்ணி ,பூஜையை முடிச்சுட்டு கழட்டி விட்டுடுவாரு..இன்னொரு ஜீவா நேர்மையானவரு.நேர்மையான ஜீவாவோட காதலியை வில்லன் ஜீவா ஏதாவது பண்ணிடுவாரோ?ன்னு ஆடியன்ஸ் கிட்டே ஒரு எதிர்பார்ப்பை கிளப்பி விட்டு  வேற மாதிரி கதையை கொண்டு போயிடறாரு.

முதல் கண்டனம் இயக்குநருக்கு....காதலை,பெண்களை கொச்சைப்படுத்தியதற்கு.... ஹீரோயினை முதன் முதலா பார்க்கற ஹீரோ காதல் வசப்படற கண்றாவியைக்கூட மன்னிச்சிடலாம்,ஆனா 2வது முறை பார்க்கறப்ப பிரா 2 டஜன் கிஃப்ட்டா வாங்கித்தர்றதும்,3வது சந்திப்புலயே அந்தப்பொண்ணு தேடி வந்து ஐ லவ் யூ சொல்றதும் சகிக்கல..

(எந்தகாதலனாவது ரோஜா குடுக்காம பிரா தருவானா?)

அப்புறம் இயக்குநர் செஞ்ச 2வது தப்பு கதையை நல்லவனா வர்ற ஜீவா பார்வைல கொண்டு போகாம வில்லனா வர்ற ஜீவா பார்வைல கொண்டு போறது.

https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEi7H5v2UHyPoMDZQ-HMWZ3NbENZllvUrGQ92ozFyJrvxR2wP1I0SLGq33N8DY0P-YIM9FeBXIoJ5cx4AhPPmFaZOh2Bf-VSFleWcFdjcjdn3iT8IK7BOr24dczNROuDj7ScKz4FgSOjVk8/s1600/tamil+movie+Singam+Puli00-16.jpg
ஆனா சந்தானம் காமெடியும்,பல சுவராஸ்யமான காட்சிகளும் படத்தை காப்பாத்திடுது.படத்தோட ஓப்பனிங்க் சீன்ல தர்மத்தின் தலைவன் ரஜினி (பேராசிரியர் கேரக்டர்) மாதிரி பக்திப்பழமா வர்ற ஜீவா வீட்டை விட்டு வெளில கிளம்புனதுமே தடால்னு ஆப்போசிட் கெட்டப் & கேரக்டரா மாறும் சீன் செம கலகல...

சந்தானம் நிறம் மாறாத பூக்கள் விஜயன் கெட்டப்ல வரும்போது தியேட்டரே அதிர்கிறது கைதட்டலால்...அவர் வரும் காட்சிகளில் எல்லாம் ஜீவா டம்மியாக தெரிவது இயக்குநரின் தவறல்ல... அதே போல் சந்தானம் வசனம் பேசும் காட்சிகளில் எல்லாம் இயக்குநர் சொல்லிக்கொடுத்துப்பேசுவது மாதிரியே இல்லை...எஸ் வி சேகர் இயக்கும் நாடகங்களில் அவர் அதீத ஆளுமை செலுத்துவது போல் (OVER DOMINATION) சந்தானம் செலுத்தும் டாமினேஷன் வளரும் நகைச்சுவை நடிகர்கள்,குறும்பட இயக்குநர்கள் கவனிக்க வேண்டிய ஒன்று... 

ஹீரோ- ஹீரோயின் சம்பந்தப்பட்ட பாடல் காட்சிகளில் ஹீரோயினுக்கு காதல் உணர்வு வந்த மாதிரியே தெரியவில்லை.விரக தாபம் வந்த அஞ்சரைக்குள்ள வண்டி அஞ்சனா மாதிரி அவர் செய்யும் மூவ்மெண்ட்ஸ்,முக பாவனைகள் (FACE EXPRESSIONS) டூயட் காட்சிகள்,காதல் காட்சிகள் எப்படி எடுக்கக்கூடாது என்பதற்கான பாடம்.

இடைவேளை வரை தட்டுத்தடுமாறிய இயக்குநர் படத்தின் பின் பாதியில் விறு விறுப்பாக காட்சிகளை நகர்த்தி இருக்கிறார்.தான் தப்பிப்பதற்காக உடன் பிறப்பையே ஆள் வைத்து போட்டுத்தள்ள வில்லன் ஜீவா முடிவு எடுத்த பிறகு படம் ஸ்பீடாகிறது.அப்புறம் வழக்கமான ஆள்மாறாட்டம்,குழப்பம் என படம் மாமூல் மசலா பாணியில் போகிறது.

http://tamil.way2movies.com/wp-content/uploads/2010/12/Singam-Puli-Movie-Stills-20.jpg
வசனகர்த்தா பாராட்டு பெறும் இடங்கள்

1.  எப்படி என் தார்மீக சிந்தனை..?

சந்தானம் - டேய்.. தர்பூஸ் மணடையா...நீ எல்லாம் சிந்திக்க ஆரம்பிச்சுட்டியா?

2. அப்பா.. அப்போ நான் வீட்ல இருக்கறது உனக்கு பிடிக்கலை?

ஆமா....

அப்போ... நீ வீட்டை விட்டு போயிடு....

ஹூம்.. உன்னைப்பெத்ததுக்கு நான் தூக்குல தாண்டா தொங்கனும்...

எங்கே.. சொல்லீட்டு இருக்கே,. செய்ய மாட்டேங்கறியே...

3, சந்தானம்- பசங்க சூசயிடு பண்ண பத்து ரூபா குடுத்து பாய்சன் வாங்கறது எல்லாம் அந்தக்காலம்..ஒரு ரூபா குடுத்து ரோஜாப்பூ வாங்கி ஒரு ஃபிகர் கைல குடுத்து ஐ லவ் யூ சொன்னான்னு வெச்சுக்கோ.. மேட்டர் ஓவர்.. அவளே அவனை கொன்னெடுத்துடுவா...
 

4.ஜொள்ளு ஜீவா  - எப்படிங்க.. இப்படி..? எதெது எங்கே எங்கே இருக்கனுமோ அதது அங்க அங்கே இருக்கு...நான் தெரியாம தான் கேட்கறேன் ,நீங்க பிரம்மா பெத்த பொண்ணா?

5.  ஜொள்ளு ஜீவா - காதல்ங்கறது  ஒரு தடவை தாண்டா வரும்... இப்பவாவது நம்பறியா? நான் அவளை சின்சியரா லவ் பண்றேன்னு..?

சந்தானம்-லவ் டுடே டயலாக்கை பேசினா யாருக்கும் தெரியாதுன்னு நினைச்சியா?
http://www.movieupdates.in/wp-content/uploads/2010/12/04_singam_puli_posters_wallpapers_jeeva_divya_spandana.jpg
6.  ஜொள்ளு ஜீவா  - எனக்காக இந்த உதவியை செய்டா.. என் காதலை அவ கிட்டே சொல்டா...

சந்தானம்- உனக்காக இல்லைன்னாலும்,ஊர்ல இருக்கற மத்த பொண்ணுங்களோட கற்பை காப்பாத்தவாவது உதவறேன்...

7.  ரிசப்ஷனிஸ்ட் - உங்களுக்கு என்ன வேணும்? அவங்களை டிஸ்டர்ப் பண்ணாதீங்க. அவங்க பிஸியா இருக்காங்க...

சந்தானம்- அப்போ நீங்க ஃபிரீயா மிஸ்....

8. சந்தானம்-  ஒன்றரை டஜன் பிரா குடுங்க... என்ன.. எல்லாம் வெள்ளைல தர்றீங்க.. கலர் கலரா குடுங்க... ஏன்னா அது ஒரு கலர் ஃபுல் ஃபிகரு

9. எதுக்காக எனக்கு பிரா வாங்கித்தந்தீங்க?

நீ தானே மனசை டச் பண்ற மாதிரி வேணும்னே... ( இது ஆனந்த விகடனில் 1998-ல் வந்த அரதப்பழசான ஜோக் - ஆர் ஜே அனுசுபா எழுதியது)


10. டியர்.. உன்னைத்திட்டுனாக்கூட எனக்கு வலிக்குமேன்னு உன்னை ஒண்ணும் சொல்றதில்லை...உன்னை நினைச்சு சாவேனே தவிர மறந்துட்டு வேற ஒரு பொண்ணு கூட வாழ மாட்டேன்.

https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhtmlUbRQ40Bo5vBEmx4qaJkgyqjFBkLnr_PW6AL57DCUmtQgWchohVhRs7HaC39XSmCoFyOyzbAiS722xYZQc6ibSU893daSFzxlz5_iBbrmhJhnGMLEorvh5V7IZz7IHtt4C8CLGgaZg/s400/Singam-Puli-Movie-Stills-2.jpg
11. ஹூம்.. எங்கப்பன் என்னைப்பற்றி நல்லது சொன்னாலே நம்ப மாட்டான்...

12..லேடி போலீஸ்  - (லாக்கப்பில்) டேய்.. டிரஸ்ஸை கழட்டுடா....

சந்தானம்-  மேடம்.. கை வசம் காண்டம் இல்லை.. ஓக்கேவா?

13. சந்தானம்- இவன் கிட்டே இருந்து ஊர்ப்பெண்களைக்காப்பாற்ற போலீஸ் கிட்டே புகார் பண்ணுனோம்..ஆனா இவன் அந்த லேடி போலீஸையே கரெக்ட் பண்ணீட்டானே..?

14.. ஹீரோயின் - என்னது வந்தது.. நீங்க இல்லையா? அவனா? அப்பவே நினைச்சேன்..

ஹீரோ - ஆமா.. இப்போ சொல்லு.. நனைச்சேன், காயப்போட்டேன்னு...

15. மேடம்.. முருங்கைக்காய் ஃபிரஸ்சா இருக்கு வேணுமா?


ஆஹா கஸ்டமரை என்னமா கவர் பண்றாண்டா....

16.   மேடம்.. வெறும் டீ மட்டும் தானா? டிஃபன் கிடையாதா?

இருந்து ஃபுல் மீல்ஸே சாப்பிட்டுட்டு போங்க...

http://www.tamilulakam.com/news/upload/cinema/Tu_29539.jpg
17. மிஸ்.. இந்த ஃபோன் டச் ஃபோனா?                    ஆமா....

ஃபிரஸ் பீஸா?                                                                     ம்.. பார்த்தா எப்படி தெரியுது?

18.என்னது ?இவங்க லேடி போலீஸா? யூனிஃபார்ம் போட்டுட்டு ஏன் வர்லை?

சந்தானம்-  ம்.. துவைக்கறதுக்காக அவங்க புருஷன் கிட்டேகுடுத்துட்டு வந்திருக்காங்களாம்.. யாருக்கு தெரியும்..? ஹூம்.. விதி வீணை வாசிக்கும்போது,செக்கிங்க் ஷேர் ஆட்டோல வந்துடுச்சு....

19. சந்தானம்-  (பெட்டிக்கடைக்காரரிடம்) டேய்.. சிகரெட்டை எடு...

காசு?

சந்தானம்- - காசு வேணாம்,சிகரெட் மட்டும் குடு  போதும்

20. சந்தானம்- - சரக்கு அடிக்கறதே தப்பு.. இதுல எதுக்கு தண்ணீரை கலக்கனும்?உடம்புக்கு கெடுதல். அப்படியே சாப்பிடலாம்.

21. சந்தானம்- டேய் மாப்ளே.. என் மூஞ்சில ஒருத்தன் நலங்கு வெச்சுட்டான். ஃபோனை வெச்சுட்டு உடனே வாடா...

22. ஹீரோயின் - அவனை அணைச்சிட்டு வாழறதுதான் வாழ்க்கைன்னு இல்லை.வாழ்நாள் முழுதும் நினைச்சுட்டு வாழ்றதுதான் வாழ்க்கை.

23. சந்தானம்- (பெண் வேஷத்தில்) நான் லவ் பண்ற பொண்ணை எங்கே இவன் உஷார் பண்ணீடுவானோன்னு பயந்தா இப்போ என்னையே உஷார் பண்ணீடுவான் போல...

24. தூக்குல தொங்கிடுவேன்,மாத்திரை சாப்பிட்டுடுவேன்ன்னு சொல்லி இன்னும் எத்தனை லவ்வர்ஸை கொல்ல நினைக்கறீங்க?இப்படி மிரட்டி மிரட்டி லவ்வை சாகடிக்கறதே பெற்றோர்களுக்கு பொழப்பா போச்சு.

25.சந்தானம் - என்னது? அவர் ஜெண்டில்மேனா? அப்போ நான் குஞ்சு மோகனா?

உங்களை அவர் கிட்டே சொல்லி தோலை உரிக்க சொல்றேன்..

சந்தானம்-  ஆமா.. நான் என்ன வாழைப்பழமா?


http://tamildigitalcinema.com/wp-content/uploads/2010/09/hansikamotwani-1.jpg

பாடல் காட்சிகளில்  ஃபாரீன் ஃபிகர்களை இளசாக இறக்கி ஆட விட்டதில் இயக்குநரின் ரசனை தெரிகிறது.ஃபிகரு கிடைச்சுட்டா கூசாம பொய் சொல்லுடா பாட்டு ஓப்பனிங்க் அசத்தல்

பூவே பூவே போதை ஏற்று பூவே செம கிக்கான பாட்டு

வர்றாளே வர்றாளே ஜில் ஜில் சிங்காரி பாட்டு செம டப்பாங்குத்து.

ஹீரோவின் தங்கையை பெண் பார்க்க வரும் மாப்பிள்ளை வீட்டார் சொந்தக்காரப்பெண்னாக வரும் ஃபிகர் செம கலக்கல்.பேசாம அந்த ஃபிகரையே ஹீரோயின் ஆக்கி இருக்கலாம்.அந்த ஃபிகரையும் ஹீரோ கரெக்ட் பண்றார்..(!!)

ஜொள்ளு ஜீவா கேரக்டர் ஒரு ஆண்ட்டியை கரெக்ட் பண்ணி மேத்தமேட்டிக்ஸ் முடிச்சு கிளம்பறப்ப அந்த ஆண்ட்டியின் மகள் வருவதும் அவள் ஹீரோ ஏற்கனவே கரெக்ட் பண்ணுன ஃபிகர் என ஹீரோவுக்கு தெரிவதும் தியேட்டரில் கை தட்டலைப்பெற்று தந்தாலும் கலாசார சீர்கேட்டுக்கு வித்திடுன் சீன்.

அந்தக்கொடுமை போதாதென்று அந்த சீனில் ஒரு ஆள் மாடு,கன்னுக்குட்டி ரெண்டையும் ஓட்டிட்டுப்பொற மாதிரி காட்சி வைத்து கே பாலச்சந்தர் ரேஞ்சுக்கு டைரக்‌ஷன் டச் வைத்து விட்டதாய் இயக்குநர் மனதில் நினைத்திருந்தால் .....சாரி...

ஜீவாவுக்கு இது வித்தியாசமான 2 வேடம்.நல்லா பண்ணி இருக்கிறார். வக்கீலாக,மீன் விற்பவராக 2 கேரக்டரில் வருபவர் பல இடங்களில் ஒரே மாதிரி சேரி பாஷையில் பேசுவது கேரக்டர் ஸ்டடி இன்னும் பத்தாது என்பதையும்,அர்ப்பணிப்பு உணர்வு இன்னும் தேவை என்பதையும் காட்டுகிறது.

ஏ செண்ட்டரில் 30 நாட்கள், பி செண்ட்டரில் 20 நாட்கள், சி செண்ட்டரில் 15 நாட்கள் ஓடலாம்.

எதிர்பார்க்கப்படும் ஆனந்த விகடன் மார்க் - 40

எதிர்பார்க்கப்படும் குமுதம் ரேங்க் - ஓக்கே

பதிவை படிச்சிட்டு சிரிக்காம இருந்தா ரூ 10,000 பரிசு

https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEinv5qTd8sZl9I1dbWTJWRjk0HO7rDlWYmDa99qj7gnk-FZnt_z8wJXeNX2QSMoWDA5nyz1K_t-XxXLQF-Jmwbnn2IMZAsA0JvyzjsI2sbjfAtnzJwOgTqVk_wLoAYC-enNHhNJJ_JkGO6u/s1600/mynaa-heroine-amala-paul-hot+%25282%2529.jpg 
1. ஆஸ்திரேலியா கண்டத்துல தனது சுற்றுப்பயணத்தை முடிச்சுட்டு தலைவர் இன்று தாய் நாடு திரும்பறாராம்.

அப்போ தமிழ்நாட்டுக்கு கண்டம் ஸ்டார்ட் ஆகிடுச்சு...அப்படின்னு சொல்லு.

------------------------------------------------

2. அத்தான்.. சாம்பார்ல ஏகப்பட்ட ஸ்பூன் இருக்கே?ஏன்?

சமையல் குறிப்புல  உப்பு ஒரு ஸ்பூன், கடலை எண்ணய் 3 ஸ்பூன்,மிளகாய் பொடி ஒரு ஸ்பூன் போடவும்  அப்படின்னு போட்டிருந்தது.. மொத்தம் 5 ஸ்பூன் தானே இருக்கும்..நீ எப்படி ஏகப்பட்ட ஸ்பூன் என சொல்லலாம்..?

(ஆஹா .. இவன் தாண்டா உண்மையான புருஷன்)

-------------------------------------------------------

3.  அம்மா... தாயே...

யாரய்யா.. அது காலங்காத்தால பிச்சை எடுக்க வந்திருக்கறது... அடடே.. நீங்களா? வாங்க வாங்க .. உங்களுக்கு கண்டிப்பா 2 சீட் உண்டு.

---------------------------------------

4. அபிலாஷா நடிச்ச முதல் பாவம்  சீன் படம் ரிலீஸ் ஆகி பல வருஷங்கள் ஆச்சு.

ஆமா.. அதுக்கென்ன இப்போ..?

அவரோட ரெண்டாவது பாவம், மூணாவது பாவம் எல்லாம் எப்போ ரிலீஸ் ஆகும்?

( பய புள்ளே.. ராம்சாமிட்ட கேட்க வேண்டிய கேள்வியை எல்லாம் என் கிட்டே கேட்டுட்டு..)

------------------------------------

5. பால் உற்பத்தியாளர்கள் போராட்டம் பண்றப்ப மக்கள் கவனத்தை ஈர்ப்பதற்காக பாலை ரோட்டில் கொட்டியது தவறு-ன்னு தலைவர் சொல்றாரே..?

சரி... அதுக்காக அமலா பால்-ஐ ரோட்ல தள்ளி விட்டு  போராட்டம் பண்ண முடியுமா?

(#அப்பாடா .. நடிகை ஸ்டில் போட்டுடலாம். ஹி ஹி )

------------------------------------------------------
https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjpOS-NEUi9ilZjXSC5aNkMXEtfUTbLpl_Z5VDo_4cSeMoUpbjYOM9yPCfz8VFn0sBzYfRDPH2IilbCtwC7hOUVA8o31t44eg5a-uGhnwS2EeskUYUOZIQDWnFep75rc0ysMI6K666A1xY/s640/actress_amala_paul+_hot_photos_gallery_01.jpg
6. தலைவருக்கு தேர்தல் பயம் வந்துடுச்சுன்னு எப்படி சொல்றே..?

நெஞ்சுக்கு பீதின்னு நாவல் எழுதறாராம் . ( நெஞ்சுக்கு நீதி பார்ட் 8 )

-----------------------------------------------------------

7. தலைவரே.. லேடீஸ் மேட்டர்ல நீங்க வீக்னு எல்லாரும் பேசிக்கறாங்களே..?

யாருய்யா.. அப்படி ஒரு புரளியை கிளப்புனது..? நான் அந்த மேட்டர்ல ஸ்ட்ராங்க் தான். டவுட்னா 17 வருஷமா நான் வெச்சுட்டு இருக்கற மகளிர் அணித்தலைவி  மல்லிகாவைக்கேட்டுப்பாரு...


(பெரிய அபூர்வமான குறிஞ்சி மலரு....)

---------------------------------------

8.உன் மனைவியை நீ அடிச்சதே இல்லையா?

ஆமா.. அவ ஒரு அடி தாங்கா  பத்தினிங்க...( படி தாண்டா பத்தினிக்கு தங்கை)

-----------------------------------------------------

9. உங்க சம்சாரம் உங்களை பளார்னு கன்னத்துல அறையறா..பார்த்துட்டுசும்மா இருக்கீங்களே..?

சும்மா இல்லாம..? எதுக்கு அடிச்சே?ன்னு எதிர்த்துப்பேசி இன்னொரு கன்னத்துலயும் அடி வாங்க சொல்றீங்களா?

----------------------------------

10.டாக்டர் பட்டம் வழங்குனதுக்கான நன்றி உரை விழாவுல தலைவர் சொதப்பீட்டாராமே..?

ஆமா.. எனக்கு டாக்டர் பட்டம் வழங்கிய யுனிவர்சிட்டிக்கு நன்றி.. கூடவே என் கூட உதவிக்கு நர்ஸ் அனுப்பி வைத்த க்ளினிக்கிற்கு நன்றி அப்படின்னு பேசி மானத்தை வாங்கிட்டாரே..

-------------------------------------

டிஸ்கி 1 - .அமலாபால் ,அபிலாஷா இருவர் பற்றிய ஜோக்ஸ்-ம் போட்டு அபிலாஷா ஸ்டில் மட்டும் ஏன் போடலை?ன்னு கண்டனம் தெரிவிப்பவர்களுக்கு நான் என்ன வெச்சுக்கிட்டா வஞ்சகம் பண்றேன்.. கிடைக்கலை.. அபிலாஷா ஸ்டில்லை வெச்சிருக்கறவங்க( @அண்டர்லைன் ஸ்டில்லை) என் மெயில்க்கு அனுப்பினா உடனே நடவடிக்கை எடுக்கப்படும்.

டிஸ்கி 2 - இன்னைக்கு வெள்ளிக்கிழமை.. உங்களுக்கே தெரியும்.. லேடீஸ்க்கு கோயில்.. என்னை மாதிரி சின்னப்பசங்களுக்கு தியேட்டர்... மீண்டும் மதியம் 3 மணிக்கு சந்திப்போம்...சிங்கம்புலி,பவானி,தப்பு (அஜால் குஜால் படம்),ஒரு இங்கிலீஷ் (INFESATION)படம் மொத்தம் 4 படம் ரிலீஸ் ஆகுது

டிஸ்கி 3  - டைட்டிலில் ஏதோ பரிசு போட்டிருக்கே.. நான் வேணும்னே சிரிக்கலைன்னு பிரதாப் போத்தன் மாதிரி இன்னும் முகத்தை உம்முன்னு வெச்சிருக்கறவங்களுக்கு...ஊழல் அற்ற ஆட்சி தருவோம்னு ஒவ்வொரு முறையும் வாக்கு குடுத்துட்டு இன்னும் ஊழலைத்தவிர வேற எதுவும் பண்ணாம இருக்காங்களே... அவங்க கிட்டே கேட்டுட்டு அப்புறமா என் கிட்டே வாங்க.. ( ஈரோடு பஸ் ஏறி ரொம்ப கிட்டே வந்து பய முறுத்தக்கூடாது)

Thursday, March 03, 2011

ஈரோடு டாஸ்மாக் கடைகளில் நடக்கும் ஊழல்கள் + வேரோடு களையப்படவேண்டிய மோசடிகள்


http://dilipnaidu.files.wordpress.com/2010/09/tasmac-semester-1-ovbe-1.jpg 
தன்னைப்பற்றியும், தன் குடும்பத்தைப்பற்றியும் எப்போதும் சிந்திக்காமல் இப்பொழுதும், அப்பொழுதும்,எப்பொழுதும்,முப்பொழுதும் தமிழக மக்களின் நலனைப்பற்றியே சிந்திக்கும் முத்தமிழ் வித்தவர் சாரி வித்தகர் டாக்டர் கலைஞர்  மது விலக்கு சாத்தியம் இல்லை என தனது நிரந்தரக்கூட்டாளியும்,பச்சோந்தி போல் மாறும் அரசியல்வாதிகளுக்கு நடுவே மாறாத குணமும்,தனது கட்சியில் தனது குடும்ப வாரிசுகளின் ஆதிக்கம் இருந்தாலோ. வாரிசுகளுக்கு பதவி கொடுக்கபட்டாலோ நடு வீதியில் என்னை செருப்பால் அடியுங்கள் என டயலாக் பேசி வன்னியர்களின் ஓட்டைக்கவர்ந்தவருமாகிய 2011-ன் சிறந்த தியாகி டாக்டர் ராம்தாஸ் அவர்களிடம் கூறியபோது நான் கூட அதை உண்மை என்றும் வேறு வழி இல்லை போல என்றும் நம்பி இருந்தேன்.

ஈரோட்டில் உள்ள ஒரு டாஸ்மாக்கில் எனது நண்பன் டாஸ்மாக் ஊழியனாகப்பணி புரிந்து வருகிறான்.டிகிரி முடித்தவன்.ரொம்ப நாளுக்குப்பிறகு நேற்று அவனை சந்தித்தேன்.

வாப்பா.. எப்படி போயிட்டிருக்கு வேலை.. எல்லாம்?

ம் ,ம் ,நல்லா போயிட்டிருக்கு.

எவ்வளவு சம்பளம்?

பிடித்தம் போக ரூ 3000 வருது..

ரொம்ப கம்மியா இருக்கே.. எப்படி குடும்பத்தை சமாளிக்கறே,...

சம்பளம் கம்மியா இருந்தா என்ன? கிம்பளம் கிடைக்கும் அல்ல?

ஆமா... நீ என்ன ஆ ராசாவா?டெண்ட்டர்ல கையெழுத்தைப்போட உனக்கு தேடி வந்து மொய் வைக்க...?

ஆஃப் குவாட்டர் சிஸ்டம் இருக்க பயம் ஏன்?

புரியலையே....
https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEi_q4lWGcoI_l8GCrU0aPt0hs1lU68-L1M3HpzjIp99l0lhjoBkV2m04gsagqL1nykCrxcL8RwkrPNL51WswL6AWADrS5Mq8aTkW8sr69jqmTutp5xhCRBo2FSSjkg3BFkJDqSGcgNiE2M/s400/8.jpg
தம்பி...மானிட்டர்,ஷிவா,கோல்கொண்டா,மெக் டவல்,ஓல்டுமங்க் உட்பட கிட்டத்தட்ட 45 வெரைட்டி ஐட்டம் இருக்கு.ஒவ்வொரு ஐட்டம் ஃபுல் பாட்டில்ல சீல் உடைச்சு ஒரு ஆஃப் குவாட்டரை எடுத்து ஒரு குவாட்டர் பாட்டில்ல ஊத்திக்க வேண்டியது.அப்புறம் அந்த ஃபுல் பாட்டில்ல புனல் வெச்சு தண்ணி ஊத்திட வேண்டியது.பழையபடி சீல் ஒட்டிட வேண்டியது.அவ்வளவுதான் ,மேட்டர் ஓவர்.....

அடேங்கப்பா.. குடிக்கற ஆளுங்களுக்கு தண்ணீர் கலந்திருக்கற விஷயம் தெரியாதா?

ரெகுலரா குடிக்கறவங்களுக்கு நாக்கு மரத்துடும். இது எப்படின்னா ஒரு மைசூர்பாக்கை நீ வாரம் ஒரு தடவை சாப்பிட்டா ஸ்வீட்டா இருக்கும்.தொடர்ந்து கேப் விடாம சாப்பிட்டு பாரு,நாக்கு மரத்துடும், நாக்கின் சுவை அரும்பு மொட்டூக்கள் உணர்வு சக்தியை இழந்திடும்.

சரி.. அதையும் மீறி நம்ம ராம்சாமி அண்ணன் மாதிரி மதி நுட்பமும், துல்லியமான டேஸ்ட் கண்டு பிடிப்புத்திறனும் உள்ளவங்க வந்து கண்டு பிடிச்சுட்டா என்ன பண்ணுவே..?

அந்த மாதிரி ஆளுங்களுக்கு நல்ல சரக்கா(!!!) குடுப்பேன்.

சரி.. இதுல உனக்கு என்ன வந்துடப்போவுது..?ஒரு 500 ரூபா..?

தம்பி.. நீ இன்னும் கத்துக்க வேண்டியது நிறைய இருக்கு..கிட்டத்தட்ட ரூ 3000 டூ ரூ 3500 தேறும்.

http://photo.outlookindia.com/images/gallery/20100804/wine_shop_chennai_20100816.jpg
கலைஞர் நல்லாட்சி நடத்தறார்னு சொல்லி இருந்தாக்கூட அப்படி அதிர்ச்சி அடைஞ்சிருக்கமாட்டேன்..எனக்கு தலை சுத்துச்சு...அப்போ இவனோட மாத வருமானம் மாவட்டக்கலெக்ட்டர் வாங்கற சம்பளத்தை விட டபுள் மடங்கு ஆச்சே...

சரி.. நீ எப்படி கால்குலேட் பண்ணி பணம் எடுப்பே..?குழப்பம் வராது.?

ஹா ஹா .. அப்பப்ப எடுத்து பாக்கெட்ல போட்டுக்குவேன்.. உதாரணமா ஒரு ஆஃப் குவாட்டர் தண்ணி கலந்தது விற்கறேன்னா அதுக்குண்டான அமவுண்ட் ரூ 30 அல்லது ரூ 25  எடுத்து பாக்கெட்;ல போட்டுக்குவேன்.டியூட்டி முடிஞ்சு போறப்ப அந்த சில்லரைகளை(!!) எல்லாம் கல்லாவுல போட்டுட்டு 500 ரூபா நோட்டா எடுத்து பாக்கெட்ல போட்டுக்குவேன்..

சரி.. உனக்கு வருத்தம்னு ஒண்ணு ஏற்படவே ஏற்படாதா?

ம்.. 31 நாளும் நாமளே டியூட்டி பார்க்கனும்னு நினைப்பேன். ஆனா ஆள் மாத்தி விட்டுடுவாங்க.. 15 நாள் தான்.

அட.. பாவி.. அதை நான் கேட்கலை.. இப்படி எல்லாம் அடிக்கறமே... மனசாட்சி உன்னைக்கேள்வி கேட்காதா?


அடப்போடா.. இவனே.. நாட்ல எவன் யோக்கியனா இருக்கான்?ஒரு டிராஃபிக் கான்ஸ்டபிள்  அப்பாவி டி வி எஸ் 50 காரன் சிக்குனா ரூ 300 தேத்திடறாரு.கவர்மெண்ட் ஊழியர்கள் எல்லாரும் அவங்கவங்கவேலைல எந்த அளவு சுருட்ட முடியுமோ அதை சுருட்டீட்டுதான் இருக்காங்க.. நான் மட்டும் யோக்கியமா நடக்க நான் என்ன இளிச்சவயனா?
http://m3chennai.com/wp-content/uploads/2010/11/Lekha-Washington-hot-2.jpg
அவனை விட்டு நான் ஆஃபீஸ் போனேன்.. மேலும் சில டாஸ்மாக் கடைகளுக்கு ஃபோன் போட்டு விசாரித்தேன்.சிலர் ஒத்துக்கொள்ளவில்லை.. சிலர் யாருங்க நீங்க என கேட்டார்கள்.

நான் அனைவரிடமும் எனது நண்பனின் தங்கைக்கு மேரேஜ் ஃபிக்ஸ் ஆகி இருக்கு. மாப்பிள்ளை டாஸ்மாக் ஊழியன். சம்பளம் கம்மியா இருக்கேன்னு நாங்க யோசிச்சப்ப மாப்பிள்ளை சம்பளம் கம்மியா இருந்தா என்ன? சைடு வருமானம் வருதுன்னு ஒரு பெரிய தொகையை சொல்றாரு.. இது உண்மையா? என கேட்டபோது சிலர் மென்று முழுங்குனாங்க.சிலர் என்னை வம்புல மாட்டி விடாதீங்க என்றார்கள். சிலர் ஆமாங்க ஓரளவு வருமானம் இதுல இருக்கு என ஒத்துக்கொண்டார்கள்.

ஒரு கடை நிலை ஊழியனுக்கே டாஸ்மாக் கடையில் வேலை கிடைச்சா இவ்வளவு சம்பாதிக்க முடியும்னா அந்த கடையை நடத்தற கவர்மெண்ட்டுக்கு லீகலா. இல்லீகலா எவ்வளவு வருமானம் கிடைக்கும்.?

பொதுவா ஆஃபீஸ்ல வேலை செய்யறவங்க ஏதாவது சாக்கு சொல்லி லீவ் கேட்பாங்க.. ஆனா இந்த டாஸ்மாக் வேலைல இருக்கறவங்க மட்டும் லீவே எடுக்கமாட்டாங்களாம்.எடுத்தா ரூ 3000 அல்லது ரூ 4000 வருமானம் போச்ச
Delete
டிஸ்கி 1 - எனவே குடி மக்கள் பீர், ஒயின் மட்டும் குடித்து உங்கள் உடம்பை மட்டும் கெடுத்துக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிரார்கள்.அல்லது அடிச்சா ஒரு ஃபுல் குவாட்டர் இல்லைன்னா இன்னைக்கு நோ மேட்டர் என கொள்கை ரீதியான முடிவுக்கு வரவும்.

டிஸ்கி 2 - சரக்கு அடிக்கற பழக்கம் இல்லாத உனக்கு எதுக்கு இந்த சரக்கு பற்றிய ஆராய்ச்சி என கேட்பவர்களுக்கு ... நமக்கு ஊழல் பண்ணிக்கூடத்தான் பழக்கம் இல்ல ,ஆனா ஸ்பெக்ட்ரம் ஊழல் பற்றி ஆராய்ச்சி பண்றதில்லையா? அதைப்பற்றி பேசறது இல்லையா?

டிஸ்கி 3 - கட்சிகள் தங்கள் கொள்கைல இருந்து மாறி கூட்டணி அமைத்துக்கொண்டாலும் அட்ரா சக்க இணைய தளம் தான் கொண்ட கொள்கையில் உறுதியாக இருந்து சமூக விழிப்புணர்வுப்பதிவில் கூட வ குவாட்டர் கட்டிங்க் பட நடிகை ஸ்டில் போட்டு ஆற்றிய மக்கள் தொண்டை மெச்சிக்கொள்கிறது # கலைஞர் தனக்குத்தானே பாராட்டு விழா நடத்திக்கறமாதிரி.. ஹி ஹி

டிஸ்கி 4 -Blogger Thirumalai Kandasami said...குடிமகன்களுக்கு ஒரு நற்செய்தி. http://tasmac.tn.gov.in ,,இங்கு விலை பட்டியல்(புட்டியல்) ,சரக்கு நிலவரம் அனைத்தும் கிடைக்கும். TASAMC அரசு வருமானம் Just a simple calculation of Tamilnadu Government - TASMAC sale per day,based on following URL. http://new.vikatan.com/news.php?nid=467 Daily Beer usage - 73,800 case So total Beer Bottles - 73800 * 12 - 885600 Approx cost ,70 Rs per bottle - 885600 * 70 - 6,19,92,000 Beer sales (per day)- 6 Crore and 19 Lakhs and 92 Thousands - 20 % of Whole sale So Approx Total sales(per day) - 30,99,60,000 Approx total - 31 Crores per day !!! Total sales in USD per day - 6866002.2148 $

கிறுக்குத்தனமான அரசியல்வியாதிகள் VS கேனத்தனமான ஜோக்குகள்

http://www.thelatestnews.in/wp-content/uploads/2010/03/vidya-balan1.jpg 
1. சம்பளமே வேணாம்னு தலைவர் சொல்லீட்டாரே.. அவரு அம்புட்டு .நல்லவரா?

பாவத்தின் சம்பளம் மரணம்னு சொன்னாங்களாம்... ( பதவில இருக்கறப்ப பண்ணுனதெல்லாம் பாவங்கள் மட்டும்தானே..)

---------------------------------------------

2. தலைவரே!  உங்களைக்கேவலமா திட்டுனவர் கூட வெட்கமே இல்லாம கூட்டணி வெச்சுக்கிட்டீங்களே... ஏன்?

ஆமா... அவலமான தோல்வியை விட கேவலமான திட்டு எவ்வளவோ பரவால்லைன்னு தோணுச்சு... ( கேவலப்படும்போது கூட எதுகை மோனை கேக்குது.. அடச்சே...)

------------------------------------

3. தியேட்டர்காரங்களுக்குகூட கரண்ட் பாலிட்டிக்ஸ் தெரிஞ்சு இருக்குன்னு எப்படி சொல்றே..?

த மம்மி ரிட்டர்ன்ஸ் ( THE MUMMY RETURNS) படத்தை ரீ ரிலீஸ் பண்றாங்களே...

------------------------------------

4. கேப்டன் அம்மா கூட கூட்டணி வைக்கறதுக்கு முன்னால ட்ரெயினிங்க் எடுக்க ஃபாரீன் டூர் போறாரா? எதுக்கு?

எகிப்து போய் மம்மி முன்னால எப்படி பம்மிக்கிட்டு நிக்கறதுன்னு பயிற்சி எடுக்கறாராம்.

-----------------------------------------

5.  வில்லன் சார்... இந்த சீன்ல நீங்க ஹீரோயினை ரேப் பண்ண முயற்சி பண்றீங்க...

போங்க டைரக்டர் சார்... வெறும் முயற்சி மட்டும்தானா? ( அடங்கொய்யால.. முயற்சி உடையார் இகழ்ச்சி அடையார்... )

---------------------------------------
http://www.bharatwaves.com/wallpapers/d/5331-2/Vidya+Balan.jpg
6.   ஜெயில்ல இருந்து பெயில்ல வந்த தலைவரு ஏன் கடுப்பாகிட்டார்?

கட்சி ஆஃபீஸ் வாசல்ல இருந்த பியூன், “ என்ன தலைவரே, அதுக்குள்ளே வந்துட்டீங்க?ன்னு கேட்டானாம். ( 10 வருஷம் வர மாட்டாரு.. ஆட்டையைப்போடலாம்னு பார்த்தார் போல..)


---------------------------------------------

7. நடிகை - ஸாரி  சார்...  முதுகுல ஜன்னல் வெச்ச ஜாக்கெட் போட்டு நடிக்கறது எனக்கு பிடிக்கல...

டைரக்டர் -ஏம்மா? தமிழ்க்கலாச்சாரம் தடுக்குதா?

 . நடிகை - அதெல்லாம் இல்ல சார்.. வேணும்னா முதல் மரியாதை ராதா மாதிரி ஜாக்கெட்டே போடாம சேலை மட்டும் கட்டி நடிக்கறேன்...

-------------------------------------------------

8. உலகக்கோப்பை கிரிக்கெட் கோப்பை யாருக்கு கிடைக்கனும்னு நினைக்கறீங்க?ன்னு  தலைவர்  கிட்டே கேட்டது தப்பா போச்சு...

 ஏன்?


அது யாருக்கோ கிடைச்சுட்டு போகுது.. ஆனா பரிசுத்தொகை ரூ 170 கோடி மட்டும் என் கைக்கு வந்துடனும்னாரே...

-------------------------------------------------

9.  மளிகைக்கடைல வந்து  “வெரைட்டி ரைஸ்” 5 கிலோ குடுங்கன்னு கேட்கறீங்களே..புரியலை..?

என் மனைவிதான் சொன்னா, “ ஒயிட் ரைஸ் சாப்பிட்டு போர் அடிச்சிடுச்சு,இனி ஒரு வாரம் தக்காளி சாதம், லெமன் சாதம், புளி சாதம் இப்படி வெரைட்டி ரைஸ் சமையல் பண்ணுங்கன்னு... அதான்.. 

-------------------------------

10. சுவாமி... சொர்க்கத்துக்கு குறுக்கு வழி எது..?

சிஷ்யா... ஆசிரமத்தில் தியான அறையில் மட்டுமே உன் கவனம் இருக்கனும்...என் சயன அறையில் வேவு பார்க்கக்கூடாது...

---------------------------

டிஸ்கி 1  - சில்க்கின் வாழ்க்கை வரலாறு ஹிந்தியில் பேடு பிக்சர்ஸ் என்ற பெயரில் நடிகை வித்யாபாலனை  ஹீரோயினாக போட்டு படம் எடுக்கிறார்களாம்.அதற்கு வினுசக்ரவர்த்தி எதிர்ப்பு தெரிவிக்கிறாராம்.இதுதான் கோடம்பாக்க லேட்டஸ்ட் டாக். படத்தின் ஸ்டில்கள் கிளாமர் கம்மியாக இருப்பதால் சமூக விழிப்புணர்வை முன் வைத்து அட்ரா சக்க இணைய தளமும்  தன் எதிர்ப்பை பதிவு செய்கிறது.. ஹி ஹி

டிஸ்கி 2 -  BAD PICTURES  படத்தின் முன்னோட்ட விமர்சனம் அதி விரைவில்... ஹி ஹி ட்ரெயிலருக்குக்கூட  விமர்சனமா?என யாரும் கேட்க மாட்டீங்கன்னு நம்புறேன்.. ஹி ஹி

டிஸ்கி 3  - என்னைத்தொடர்ந்து அண்ணே என அழைத்துக்கேவலப்படுத்திக்கொண்டு வரும் விக்கி,செங்கோவி,தனிக்காட்டு ராஜா வகையறாக்களுக்கு மைனஸ்  ஓட்டு காத்திருக்கு ஹிஹி . டேய்.. ச்சோட்டா லட்கா,சின்னத்தம்பி, பொடிப்பயலே.. என கூப்பிடுபவர்களுக்க்கு ஒரு நல்ல ஓட்டு ,ஒரு கள்ள ஓட்டு கன்ஃபர்ம்.. ஹி ஹி

Wednesday, March 02, 2011

லேட்டஸ்ட் குமுதம் VS கிரேட்டஸ்ட் கேப்டன் பேட்டி - காமெடி கும்மி

http://www.amazingonly.com/wp-content/uploads/2010/09/Vijayakanth_Family_Photos_00.jpg 
9.3.2010 தேதி இட்டு இன்று வெளியான (2.3.2011)குமுதம் வார இதழில் கறுப்பு எம் ஜி ஆரும்,ஆண்டவனுடன் மட்டுமே கூட்டணி என்று அறிவித்த நாளைய முதல்வரும் ஆன கேப்டன் விஜய்காந்த் பேட்டி வெளியானது. பேட்டியின் நீளம் கருதி நானே எடிட்டர் ஆகி அவரது பதிலை சுருக்கி போட்டு ,அவரது மனசாட்சி என்ன பதில் சொல்லி இருக்கும் என கற்பனை கலாட்டா காமெடிகளையும் சேர்த்துள்ளேன். பதிவுலகில் உள்ள அந்த 14 விஜயகாந்த் ரசிகர்களும் மன்னிக்க.

1.குமுதம் -  அ.தி.மு.க +தே.மு.தி.க  கூட்டணி உருவாக ரொம்ப லேட் போல..?

கேப்டன் - பேச்சுவார்த்தையில் இழுபறி...எலக்‌ஷனுக்கு இன்னும் டைம் இருக்கே..இந்த காரணங்கள்தான்..

மனசாட்சி - அந்தம்மா கிட்டே அப்பாயிண்ட்மெண்ட்  வாங்கவே ஆறு மாசம் ஆகிடுச்சு..போயஸ் தோட்டம் போனா 2 நாள் வெயிட் பண்ணுங்கன்னு சொன்னாங்க.  சொல்லி 2 நாள் கேட் அருகிலேயே அமர்ந்திருந்தும் ,2 நாள் கழிச்சு போயிட்டு நாலு நாள் கழிச்சு வாங்கன்னு விரட்டி விடறாங்க...ம் ம்.


2.குமுதம் -  ஆட்சியில் பங்கு வேணாம்னு சொல்லீட்டீங்களாமே.. ஏன்?

கேப்டன் - தி.மு.கவை ஆட்சியை விட்டு அகற்றனும்ங்கறதுதான் என் லட்சியம்.அதனால சீட் எண்ணிக்கை பிரச்சனை இல்லை.

மனசாட்சி - என்னமோ அந்தம்மா இந்தா இந்தா அப்படின்னு 80 சீட்டு தூக்கி குடுத்த மாதிரியும், நான் தான் வேணாம் ,வேணாம்னு சொன்ன மாதிரியும் பேசறீங்களே..கடைசிவரை என்னை அவமானப்படுத்தாம விட்டாலே போதும்.. ஹூம் பார்ப்போம்.. அவரோட சரித்திரத்துல அவர் அவமானப்படுத்தாத கூட்டணிக்கட்சித்தலைவரே கிடையாது.. ஆனானப்பட்ட கவர்னரையே அவமானப்படுத்தீட்டாரு...
http://www.manakkudiyan.com/wp-content/uploads/2009/09/vijayakanth-seril-brindo-1.jpg
3. குமுதம் - இப்போ உங்க கூட்டணில 14 கட்சிகள் இருக்கு..தொகுதிப்பங்கீடு,கொள்கை ரீதியா பிரச்சனை வராதா?

கேப்டன் -ஒரு குடும்பத்துல சகோதர சகோதரிகளுக்கிடையே பிரச்சனை வராதா?அதெல்லாம் பேசித்தீர்த்துக்கலாம்.

மனசாட்சி - எவன் எக்கேடு கெட்டுப்போனா எனக்கென்ன?எப்படியாவது 15 சீட்டாவது ஜெயிச்சா போதும். ஓட்டு 12% ல இருந்து டபுள் ஆகி 24 % வாங்குனா இப்போதைக்கு போதும்.அப்புறம் கொள்கை ரீதியான பிரச்சனையா? ஹா ஹா உங்களை நினைச்சா எனக்கு சிரிப்பாத்தான் இருக்கு.. இங்கே அரசியல்ல எல்லாருடைய கொள்கையும் ஒண்ணுதான். நாம நல்லாருக்கனும், நமக்கு பதவி கிடைக்கனும்,முடிஞ்ச வரை சுருட்டணும். மக்கள் எப்படி நாசமாப்போனா  என்ன?
4. குமுதம் - ஜெ- கேப்டன் சந்திப்பு எப்போது நடக்கும்?

கேப்டன் -விரைவில்...  அதற்கான பேச்சுவார்த்தை நடந்துட்டு இருக்கு..

மனசாட்சி - யோவ்.. ஏய்யா பீதியை கிளப்பி விடறே..நானே பயந்துட்டு இருக்கேன். அவரை சந்திக்கறப்ப படையப்பா படத்துல வர்ற மாதிரி நிக்க வெச்சே பேசி அவமானப்படுத்தி அனுப்புமோன்னு.. 
http://www.newsreporter.in/wp-content/uploads/2011/02/vijayakanth-dmdk-jayalaitha-aiadmk-join-hands.jpg
5.குமுதம் - காங்கிரஸ்ஸோடு கூட்டணிப்பேச்சுவார்த்தை நடத்துனதா சொல்லப்படுகிறதே..

கேப்டன் -அப்படி எல்லாம் ஒண்ணும் இல்லை... நாங்க ஏர்போர்ட் பக்கம் போயே 6 மாசம் ஆகுது.. அப்புறம் எங்கேடெல்லி போறது?

மனசாட்சி - எல்லாம் நடத்துனோம்.ஆனா அவங்க எங்களை விட விளைஞ்ச ஆளா இருக்காங்க. காங்கிரஸ் தான் சி எம் வேட்பாளரை நிறுத்தும், நீங்க டெபுடி சி எம் அப்படின்னாங்க..அவங்க ஆதரவுல டெபுடி சி எம் ஆகறதுக்கு அம்மா கிட்டே எடுபுடியா இருக்கறதே  பெட்டர்...


6.குமுதம் - எந்தப்பிரச்ச்னையை முன் வைத்து உங்கள் கூட்டணிப்பிரச்சாரம் அமையும்?

கேப்டன் -தமிழ்நாட்ல பிரச்சனைக்கா பஞ்சம்? திரும்புன பக்கம் எல்லாம் பிரச்சனைதான்.உலகமாகா ஊழல் அலைக்கற்றை இருக்க பயம் ஏன்?

மனசாட்சி - ஹூம்.. பிரச்சனையே எங்க கூட்டணிதான். மேடைல அம்மா மட்டும் உக்காந்திருக்கும். நான் நின்னுட்டே இருக்கனும்.பேசறதுக்குக்கூட அவர் கிட்டே அனுமதி கேட்கனும்.லியாகத் அலிகான் இருந்த வரை (கேப்டனின் ஆஸ்தான வசனகர்த்தா)என் சவுகர்யத்துக்குப்பேசி மக்களை கொலையா கொன்னெடுத்தேன்.ஹூம். 20 பக்கம் மனப்பாடம் பண்ணீட்டுப்போறேன்.. அட்லீஸ்ட் 4 வரியாவது பேச விட்டா பரவால்லை.

http://mmimages.mmnews.in/Articles/2009/Dec/834f07f4-0c1e-46aa-be95-4d56789d8f0a_S_secvpf.gif
7. குமுதம் - ஜெயலலிதா - விஜயகாந்த் இணைந்து பிரச்சாரம் செய்யும் எண்ணம் உண்டா?

கேப்டன் -இல்லை..இரு தலைவர்கள் தனித்தனியே பிரச்சாரம் பண்றது புதுசில்லை..ஏற்கனவே எம் ஜி ஆர் -கலைஞர் ஒண்ணா இருந்தப்ப 2 பேரும் தனித்தனியேதான் பிரச்சாரம் பண்ணுனாங்க...அதே போல்...நாங்களும்..

மனசாட்சி - எனக்கும் ஆசைதான். ஆனா அதுல ஒரு ஈகோ பிரச்சனை வரும். கூடுன கூட்டம் எனக்காகத்தான் கூடுச்சுன்னு நான் சொல்வேன்.ஆர்ப்பரிக்கும் அலைகடலென திரண்ட கூட்டம் எனக்காக வந்தவைன்னு அவங்க சொல்வாங்க... எதுக்கு வம்பு...?

8. குமுதம்  -கடைசி நேரத்தில் தி. மு.கவுடன்  கூட கூட்டணிக்கு முயற்சி செஞ்சீங்களாமே...?

கேப்டன் -சே.. சே கற்பனை.. அதெல்லாம் உண்மை இல்லை.

மனசாட்சி - அதென்ன தி மு க கூட... அவ்வளவு இளப்பமா போச்சா?தனியா நின்னு ஆளுங்கட்சிக்கு எதிரான வாக்கைப்பிரிங்க ரூ 500 கோடி வாங்கிக்குங்கன்னு பேரம் பேசுனாங்க.. நான் அப்படியே கண்ணெல்லாம் சிவக்க பொங்கி எழுந்துட்டேன்.. தமிழ்ல எனக்கு பிடிக்காத ஒரே வார்த்தை பேரம் தான். இவங்க மட்டும் ஒண்ணேமுக்கால் லட்சம் கோடி அசால்ட்டா அடிப்பாங்களாம். நமக்கு மட்டும் பிச்சைக்காரத்தனமா ரூ 500 கோடி மட்டும் தருவாங்களாம்.யார் கிட்டே....? நான் ஃபைனலா ரூ 10,000 கோடி கேட்டேன்.. அரண்டுட்டாங்க... 
https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhT3-H__ZGJgTy2QnRPzISYXnO4p3-VcDFZqIgMhubeu9Bq2uiKDBs9wC7UYaGMGq6uvdp-bBCmLO2Css5Q5pvYim5ToQ5iPpxOsLHEO7cJAERni5LkArVZQAWBuV-SR_OvHo8KvNK7jMc/s400/Ayiraththil_Oruvan.jpg
9. குமுதம் - நடிகர் விஜய் உங்கள் கூட்டணிக்காக பிரச்சாரம் செய்வாரா?அதற்கான வாய்ப்பு உண்டா?

கேப்டன் -தெரியாது.

மனசாட்சி - தே.மு.தி.க விற்காக முதல்ல அம்மா பிரச்சாரம் பண்ணுவாங்களா? அப்படிங்கறதே டவுட்.. இதுல இது வேறயா?

அம்மாவின் ராசி எண்ணான 9 கேள்விகள் மட்டுமே கேட்கப்பட்டது தற்செயலானதா? திட்டமிட்டே போடப்பட்டதா?ன்னு தெரியல.

.தமிழ்நாட்டின் மக்களை இனி அந்த ஆண்டவனே வந்தாலும், ஏற்கனவே ஆண்டவரே வந்தாலும், இப்போது ஆண்டவரே மீண்டும் வந்தாலும் காப்பாத்த முடியாது என்பது மட்டும் தெளிவாத்தெரியுது.

அம்மா தாயே... 41 சீட்டாவது பிச்சை போடுங்கம்மா.......

http://www.seithy.com/admin/upload/kanimoli-karunanidhi-250_07042008.jpg 
1. ஜனதா கட்சித் தலைவர் சுப்பிரமணியசாமி பேட்டி : ராசாவுடனான விசாரணையில், அதிகாரிகள் முக்கியமாகக் கேட்டுத் தெரிந்து கொள்ள முயற்சிப்பது, "ஸ்பெக்ட்ரம்' ஊழல் மூலம் கொள்ளையடித்த பணத்தை அவர் எங்கு பதுக்கி வைத்திருக்கிறார் என்பதைத் தான். ராஜா எதுவுமே சொல்லவில்லை என்றாலும், சி.பி.ஐ., கைக்கு எல்லாமே கிடைக்கும். என்னைப் போன்ற பலரும் இதற்காக, இரவு, பகல் பாராமல் உலகம் முழுக்க சுற்றிச் சுற்றி வேலை பார்த்துக் கொண்டுள்ளோம் என்பது, ராஜாவுக்கும், அவர் கட்சித் தலைவர் கருணாநிதிக்கும் தெரியும்.


அது சரி.. கஷ்டப்பட்டு கொள்ளை அடிக்கறது  ஒரு கூட்டம்.. நீங்க ஒத்த ஆளு மொத்த பணத்தையும் அமுக்கலாம்னு பார்க்கறீங்களா?அப்புறம் மத்த கூட்டுக்களவாணிகளுக்கு பங்கு கொடுக்கனுமே....?நீங்களா வந்து பதில் சொல்வீங்க?


2. முன்னாள் அமைச்சர் ஜெனீபர் சந்திரன் பேச்சு: "2ஜி ஸ்பெக்ட்ரம்' ஒதுக்கீட்டில், மத்திய அரசுக்கு, 1.76 லட்சம் கோடி இழப்பை ஏற்படுத்திய, கருணாநிதி குடும்பத்தின் மீது நடவடிக்கை எடுக்க, மத்திய அரசு தயங்குவது ஏன் என்று கேள்வி எழுந்துள்ளது. அரிசியில் கொள்ளை, மணல் கொள்ளை, நகை மற்றும் பணம் கொள்ளை என கேள்விப்பட்டிருக்கிறோம். ஆனால், காற்றில் ("2 ஜி' அலைக்கற்றை) கொள்ளையடித்த ஒரே குடும்பம், கருணாநிதி குடும்பம் தான். சட்டசபை தேர்தலில், ஊழல் நிறைந்த மத்திய, மாநில அரசுகளுக்கு மக்கள் பாடம் புகட்ட வேண்டும்.

பஞ்ச பூதங்களும் லஞ்ச வடிவாகும்... ஆறு காலங்களிலும் ஊழலே தோணும்...


3.தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்ட பல்கலை துணைவேந்தர் விஜயகுமார் பேச்சு: சட்டம் பற்றி பேசக்கூடிய சட்டக் கல்லூரி, அரசு நிர்வாகம், நீதித் துறை என எந்தவொரு இடத்தை எடுத்துக் கொண்டாலும், அங்கிருப்பவர்களில் ஒருவர் கூட இந்திய அரசியலமைப்புச் சட்டத்தை முழுமையாகப் படித்திருக்கவில்லை.

அடடா. எம் எல் ஏ, எம் பிகளூக்கு மட்டும் தான் படிக்கத்தெரியாதுன்னு இத்தனை நாளா நினைச்சிட்டு இருந்தோம்...


4. தி.மு.க., அமைச்சர் மைதீன்கானின் தம்பி முகமது இக்பால் பேட்டி: நான் வியாபாரம் செய்வதால், எல்லா மக்களையும் சந்திக்கிறேன். இதனால், மக்களின் மன ஓட்டம் புரிகிறது. ஆனால், தொண்டர்களை சந்திக்காத மைதீன்கானுக்கு, மக்களின் நிலை தெரிய வாய்ப்பில்லை. அவர் அமைச்சர் ஆவதற்கு காரணமாக இருந்த தொகுதி மக்களுக்கு எந்த நன்மையும் செய்யாததால், கடுமையான கோபத்தில் உள்ளனர்.

மன்னர் எவ்வழி..? மந்திரி அவ்வழி...
http://www.koodal.com/contents_koodal/article/images/thamizhachi_spl.jpg

5.சுப்ரீம் கோர்ட் நீதிபதி மார்கண்டேய கட்ஜு பேச்சு: பொதுமக்கள் தங்கள் பிரச்னைகளுக்கு, தீர்வு காண, கோர்ட்டுகளை யே முழுமையாகச் சார்ந்துள்ளனர். அனைத்து பிரச்னைகளுக்கும் கோர்ட்டில் முழுமையான தீர்வு கிடைக்காது. ஓரளவு தீர்வு தான், கோர்ட்டுகள் மூலம் கிடைக்கும். பொதுமக்கள் பெரும்பாலும் தங்கள் பிரச்னைகளுக்கு தாங்களே தீர்வு காண முயற்சிக்க வேண்டும். அது தான் பாதுகாப்பானது.

ஹா ஹா ஹா .. அப்புறம் என்ன இதுக்கோசரம் இத்தனை  கோர்ட், இத்த்னை வக்கீலுங்க இருக்காங்க..? சம்பளம் மட்டும் வாங்கிக்கவா?


6.இந்திய ஜனநாயக கட்சி நிறுவனர் பச்சமுத்து பேட்டி: தமிழகத்தில், 65 சதவீத விவசாயிகள் உள்ளனர். ஆனால், விவசாயிகளுக்கான திட்டங்கள் எதுவும் தீட்டப்படுவதில்லை. விவசாயிகளின் அடிப்படை தேவையான மின்சாரத்தை வினியோகிக்க எவ்வித நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை. காவிரி தண்ணீரையும் பெற்றுத் தரவில்லை.

ஊழல் பண்றதுக்கும், அந்த ஊழலை மறைப்பது எப்படி?பணத்தை பங்கு போடுவது எப்படி? இதுக்கே நேரம் போறது இல்லை...அப்புறம் எங்கே இருந்து விவசாயிகளுக்கு திட்டம் தீட்டுவது?
http://farm4.static.flickr.com/3053/2670267029_f7e2560337.jpg

7.முஸ்லிம் லீக் தலைவர் காதர் மொகிதீன்: கடந்த முறை இரண்டு தொகுதிகளில் போட்டியிட்டோம். இந்த முறை, முதல் சுற்று பேச்சின்போது எட்டு தொகுதிகள் கேட்டோம்; மூன்று தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன.

கிடைச்சவரை லாபம்னு ஓடிடுங்க... 2வது கட்ட பேச்சுவார்த்தைல உக்காந்தா  3 என்பது நாலாக ஆகும்னு நினைச்சா அப்புறம் நீங்க வெளீல வர ரொம்ப நாளாகும்...அப்புறம் உள்ளதும் போச்சுடா....பழமொழி ஆகிடும்...


8. வருமான வரித்துறை டைரக்டர் ஜெனரல் லூகோஸ்: சுப்ரீம் கோர்ட் முன்னாள் தலைமை நீதிபதி பாலகிருஷ்ணனின் உறவினர்கள், கறுப்புப் பணம் வைத்திருந்ததை, அதிகாரிகள் கண்டுபிடித்துள்ளனர். இது தொடர்பாக அவர்களிடம் மீண்டும் விசாரணை நடத்தவுள்ளோம். கே.ஜி.பாலகிருஷ்ணனிடம் விசாரணை நடத்தப்படுமா என்பதற்கு பதில் அளிக்க முடியாது.

அது எப்படிங்க விசாரணை பண்ணுவீங்க... இப்போ ஆ ராசாகிட்ட மட்டும் தான் விசாரணை பண்றாங்க.. மெயின் ஸ்விட்சே கலைஞரும், சோனியாவும் தான்.. அவங்க கிட்டே விசாரணை பண்ணுவாங்களா?

9.தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி பிரவீன் குமார்: எம்.எல்.ஏ., வேட்பாளர்கள் தேர்தல் செலவு, 10 லட்சத்திலிருந்து, 16 லட்ச ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது. வேட்பாளர்கள் தனி வங்கிக் கணக்கு தொடங்கி, அனைத்து செலவுகளையும், குறிப்பிட்ட வங்கிக் கணக்கு மூலமே செய்ய வேண்டும்.

ஆமாம்ப்பா.. ஞாபகம் இல்லாம உங்க சேவிங்க்ஸ் அக்கவுண்ட்ல கணக்கு வரவு செலவு வெச்சு சமர்ப்பிச்சுடாதீங்க.. அப்புறம் வருமான வரி த்துறை அதிகாரிங்க மயக்கம் போட்டு விழுந்துடுவாங்க.. 


10. முன்னாள் தலைமை தேர்தல் கமிஷனர் கோபாலசாமி: 2006க்கு முன் வரை, தேர்தல் நடத்த சிரமமான மாநிலங்களின் பட்டியலில், பீகார், உத்தர பிரதேச மாநிலங்கள், முதல் இரண்டு இடங்களில் இருந்தன. 2006க்கு பின், இந்த பட்டியலில் பீகார், உத்தர பிரதேச மாநிலங்களை பின்னுக்குத் தள்ளி, தமிழகம் முதல் இடம் பெற்றுள்ளது.

பாத்துப்பா... இதுக்கும் ஒரு பாராட்டு விழா நடத்தி கலைஞரைக்காட்டிக்குடுத்துடாதீங்க...


டிஸ்கி 1 - அரசியல் பதிவு போட்டாலும் நாங்க   அடிப்படை பேட்டர்ன் மாத்தமாட்டமில்ல?எப்படி தமிழன் போட்ட தமிழச்சி ஸ்டில்லு..?




டிஸ்கி 2 -டைட்டிலுக்கான விளக்கம்.நமது புரட்டாசிக்கலைஞர் கேப்டன் புரட்டுத்தலைவியிடம் சரண்டர் ஆகிவிட்டதை பாராட்டும் வண்ணம்.... ஹி ஹி ஹி

Tuesday, March 01, 2011

நாளைய இயக்குநர் - சயின்ஸ் ஃபிக்‌ஷன் கதைகள் -3ம் கலக்கல் ரகம்

http://tv.burrp.com/images/s/t/6/t66b2mgg_1093_1_150.jpg
கலைஞர் + கலைஞர் டி வி நிர்வாகம் தெரிஞ்சோ தெரியாமலோ செஞ்ச உருப்படியான ஒரே நல்ல காரியம் நாளைய இயக்குநர் நிகழ்ச்சிதான்.27.2. 2011 அன்னைக்கு வானம் மேகமூட்டமா இருந்தது.. என்னடான்னு பார்த்தா பிரதாப் போத்தன் எல்லாரையும் ஊக்குவிக்கும்படியா பேசுனாரு.வழக்கமா “பப்ளிக்கா மட்டம் தட்டும் இவர் பாராட்டுனது ஆச்சரியம். ஆனா பாராட்டறப்பக்கூட அவர் ஏன் சிடு சிடுன்னு இருந்தாரோ தெரியல.. பாவம் அவரோட குடும்பம்...

1. எதையும் தாண்டி புனிதமானது. - அருண்ராஜ்

ரன் லோலா ரன், தமிழில் 12 B  ஆகிய படங்களில் வந்த  KNOT  தான்.ஒரு செகண்ட் லேட்டா கிளம்பி இருந்தா மனிதனின் வாழ்வில் ஏற்படும் மாற்றங்கள் என்ன? என்பதை அலசும் படம்.

7 நிமிடங்களில் இந்த கதையை இவ்வளவு அழகான திரைக்கதை ஆக்க யாராலயாவது முடியுமா?ன்னு பிரமிப்பா இருக்கு.ஒரு லவ் ஜோடி.. ஆக்சிடண்ட்ல மாட்டி பொண்ணோட உயிர் போயிடுது... ஹாஸ்பிடல்ல அந்த பையனைப்பார்த்து இன்னொரு பொண்ணு லவ் பண்றா...

இன்னொரு டிராக்ல அந்த ஆக்சிடெண்ட் நடக்காம இருந்தா....அதே பொண்ணு அவனை சந்திக்கவே இல்லை...

ஆக்சிடெண்ட் நடந்திருந்தா அவனை லவ் பண்ற பொண்ணு நீ இல்லாம நான் இல்லைங்கறா.. அதே ஆக்சிடெண்ட் நடக்காம இருந்தா அந்த பொண்ணு அவனை சந்திக்கவே இல்லை...

காதல் என்பது சந்திப்புகளில் வருவது..., நிகழ்வுகள் என்பது தற்செயலானதா? விதிப்படியா? போன்ற பிரமாதமான அலசல்களோட காட்சிப்படுத்தும் திறமை இந்த குறும்பட இயக்குநருக்கு கிடைச்சிருக்கு.
https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiCJVT62g6sO5-4ZpYF4aaC81A7zHq47G1DkFwlFeg5lnY7mKv-X0cl1tILaGWWtyQ8Tvc2DvaBcaKiNRE5qz7Kw9B0PWTU3-7maaVIPuPt9bnfmcDaAjOMUL4fnBTy0r0UIgUxKT8wQgA/s400/keerthi-sneha.jpg
இந்தப்படத்தில் கண்ட (கேட்ட) வசனங்கள்

1. THERE IS NO PAST IN LOVE  ( காதல்ல ,முடிஞ்சு போன காதல்னு எதுவுமே கிடையாது)

2. லவ்வுல ரெண்டே வகை தான்.1. நாம லவ் பண்றது நிஜம். 2. கடைசி வரை லவ்வே பண்ணாம இருக்கறது..

3.காதல்ங்கறது  நாம யார் கூட வாழ ஆசைப்படறோம்கறதுல இல்ல...நாம யார் இல்லாம வாழ முடியாதுன்னு நினைக்கறோமோ.. அது தான்.

இந்தப்படத்துக்கான ஒளிப்பதிவு, எடிட்டிங்க் எல்லாம் பக்கா.. இதுல 2 ஹீரோயின். நானும் பல படங்கள்லயும் ,குறும்படங்கள்லயும் பார்த்துட்டேன்.முதல் ஹீரோயினை விட 2வது ஹீரோயின் அழகா ,ஃபிகரா இருக்காங்க.. ஆனா அவங்களுக்கான காட்சிகள் கம்மி ..இது ஏன்? ( ஒரு ஆதங்கத்துல கேக்குறேன்.. ஹி ஹி )
http://vannitube.com/wp-content/uploads//2010/10/2029.jpg
கே பாலச்சந்தர் சொன்ன கமெண்ட் - காலம் தான் எல்லாவற்றையும் முடிவு செய்கிறது,, காதலையும் கூட .

ஹாய் மதன், பிரதாப் போத்தன் 2 பேரும் காமெடி பண்ணுனாங்க.. படம் பிரமாதமான KNOT. இன்னும் அழுத்தமா சொல்லி இருக்கலாம் அப்படின்னு ஒரு கருத்து சொன்னாங்க...ஒரு வேளை ஹீரோவை ஹீரோயின் டச் பண்ணாம விட்டதை சொல்றாங்களோ என்னவோ.. இந்தப்படத்துக்குத்தான் முதல் பரிசு குடுத்திருக்கனும்.ம்ஹூம்... தர்லை.சாகித்ய அகாடமி விருதுல இருந்து எம் பி பதவி வரை சர்ச்சையில் தான் ஓடும்போல.

2. உயிர்  - ராஜேஷ் 

டைட்டிலைப்பார்த்ததும் சாமி டைரக்ட் பண்ணி சங்கீதா அண்ணியா நடிச்ச உயிர் கதைதான் ஞாபகம் வந்தது. நல்ல வேளை. கதை வேற.

ஒரு ஆக்சிடெண்ட் நடக்குது. 4 பேர் மரணத்தின் வாசலில் இருக்காங்க.. அவங்க உடல் ரோட்ல இருக்கு.ஆனா அவங்களோட ஆத்மா வான் லோகத்தில் சென்று விவாதம் செய்யுது.. 4 பேர்ல ஒருத்தருக்கு மட்டும்தான் உயிர் பிழைக்க வாய்ப்பு இருக்கு.
ஒரு வயசான ஆள் நான் விலகிக்கறேன்னு அந்த கால சக்கரத்துல இருந்து குதிச்சிடறார்.அடுத்து ஒரு பணக்காரி மீதி இருக்கற 2 பேரையும் ஜெ கணக்கா விலை பேசறா.. கோபம் வந்த மெக்கானிக் கேரக்டர் அவளைப்பிடிச்சு தள்ளி விட்டுடறார்.மீதி இருக்கற 2 பேர்ல ஒரு கட்டத்துல மெக்கானிக் கீழே விழுந்துடறார். மிச்சம் இருக்கற ஒருத்தர் மட்டும் உயிர் பிழைக்கறார்.

இதை டைரக்ட் பண்ணுன ராஜேஷ்  அடிப்படைல சுஜாதா ரசிகர் போல.. அதே மாதிரி காட்சிப்படுத்துதல்ல பூர்ணம் விஸ்வநாதன் பாணியை கையாண்டிருக்கார்.மனிதனின் மரணத்துக்குப்பிறகு என்ன நடக்குது? விபத்தில் சிக்கும் மனிதர்களில் சிலர் இறந்துடறாங்க.. சிலர் பிழைச்சிக்கறாங்க.அது என்ன சூட்சுமம்?என்பது தான் கதையின் கரு.

வித்தியாசமான சிந்தனைதான்.ஆனா மியூசிக்கல் சேர் ஃபார்முலாவுல 4 உயிர்களும் விண்வெளில வாதாடுவதில் நம்பகத்தன்மை குறைவு.இந்தப்படத்துக்குத்தான் முதல் பரிசு கிடைச்சது.கே பி, ஹாய் மதன், பிரதாப் 3 பேரும் இந்த படத்தை ஆஹா ஓஹோன்னு புகழ்ந்தாங்க.
http://lh3.ggpht.com/_xDJKOay4yj4/SEIR-O0wAyI/AAAAAAAAACQ/tHcEJv83Ldg/madhan.jpg
ஆனா என்னைப்பொறுத்தவரைக்கும் ஒரு படம் பரிசு வாங்க 

1. வித்தியாசமான சிந்தனை 2. மனித மனங்களுக்கு ஒரு படிப்பினை 3. அனைவருக்கும் புரியும் வகையில் எளிமை 4.காட்சிப்படுத்துவதில் புத்திசாலித்தனம்

இந்த நான்கும் முக்கியம்னு நினைக்கறேன்.முதல் பாயிண்ட்டும், 4வது பாயிண்ட்டும் உயிர் படத்துல இருந்துது.ஆனா 4 பாயிண்ட்ஸூமே எதையும் தாண்டி புனிதமானது. படத்துல இருந்துது.

3.மறுபடியும் - கார்த்திக் பாலாஜி

சுபா எழுதுன மாலைமதி நாவலான பொன் ஜிதா வின் மையக்கருவை சுட்டு எடுத்த படம்.ஒரு சயிண்ட்டிஸ்ட் ஆராய்ச்சில செத்துப்போன மனிதனை உயிர்ப்பிக்கும் மருந்தை கண்டுபிடிக்கறாரு. ஆக்சிடெண்ட்டில் இறந்து போன ஒரு ஆளை உயிர் கொடுத்து எழுப்பி (!!??) விடறாரு.. செத்துப்போன ஆள் உயிரோட வர்றதைப்பார்த்த அவனது காதலி,குடும்பம் எல்லாருமே பயந்து ஓடறாங்க...அவன் மறுபடி ஒரு ஆக்சிடெண்ட்ல மாட்டி மறுபடியும் செத்துடறான். இப்படி செத்து செத்து விளையாடற காமெடி வேணாம்னு டாக்டர் அந்த ஆராய்ச்சியையே கை விட்டுடறாரு...

ஒரு நல்ல கதை மோசமான திரைக்கதையால் எப்படி நாசமாப்போகும்ங்கறதுக்கு நல்ல உதாரணம் இந்தப்படம்.

கே பி யின் கமெண்ட் - BIRTH IS BEAUTIFUL THING & ALSO DEATH IS BEAUTIFUL THING

இன்னோரு சந்தோஷமான மாற்றம்,இந்தப்படத்து டைரக்டரை மதன் தனியா கூப்பிட்டு சில பர்சனல் அட்வைஸ் பண்ணுனாரு...நிறைகளை உரத்து சொல், குறைகளை மெதுவாக ,தனியாக சொல் என்ற பாலிஸி போல.. குட்.
( நாம் பதிவுலகில் கமெண்ட் போடறப்ப பாசிட்டிவ் கமெண்ட்டை பப்ளிக்கா போட்டுட்டு குறை இருந்தா தனி மெயில்ல சொல்ற மாதிரி..) சிலர் இருக்கங்க மைனஸ் பாயிண்ட்டை கமெண்ட்டா போட்டுட்டு பாராட்டை மெயில் பண்ணுவாங்க..
கலைஞர் டி வில விமர்சனப்போட்டியும் இருக்கு.அடுத்த வாரத்து;ல இருந்து அனுப்பறவங்க அனுப்பலாம். ஞாயிறு காலை 10.30 ட்டூ 11.30.முகவரி

J V MEDIA
194,G3,GOLDEN NEST,3RD MAIN ROAD,SRI SAI NAGAR,VIRUKAMPAAKKAM,CHENNAI -92

டிஸ்கி -1 : இதே பதிவை காப்பி பண்ணி பேஸ்ட் பண்ணிடாதீங்க.. நான் ஏற்கனவே அனுப்பிட்டேன் நேத்தே..பரிசு ரூ 8000 மதிப்புள்ள எலக்ட்ரானிக் சாதனம்.

டிஸ்கி 2 : இந்த 3 படங்களை இயக்கிய இயக்குநர்கள் அல்லது அவர்கள் நண்பர்கள் படம் சம்பந்தப்பட்ட ஸ்டில்ஸ்,அல்லது டைரக்டர் ஸ்டில் அனுப்புனா இதே பதிவை எடிட் பண்ணி அட்டாச் பண்ணிடறேன்...



= ஹோம்லி நடிகை அமலாபாலா? தாப்ஸியா? பட்டிமன்றம்


1. தலைவருக்கு  சிறந்த  நகைச்சுவைப்  பேச்சாளர்  விருது  எப்படி  கிடைச்சுது?

குடும்ப  அரசியல்  நடத்துவதில்  எனக்கு  உடன்பாடு  இல்லை-னு சொல்லிட்டு  அவர்  குடும்பத்துல  இருக்கும்  142  பேருக்கு  சீட் குடுத்துட்டாராம்.

-----------------------------------------


2. மோஹனா...    லவ்  யூ.

இந்தாங்க   சதீஷ் டோக்கன்வெயிட்டிங்  லிஸ்ட்ல  இருங்ககூப்பிடறேன்.

-----------------------------------------


3. உடல்  மண்ணுக்கு  உயிர்  தமிழுக்குனு  தலைவர்  வீரமுழக்கம்  இடறாரே?

சும்மா  உதார்உடல்  அவர்  சின்ன  வீடு  மோஹனாவுக்குஉயிர்  மகளிர் அணித்  தலைவி  மல்லிகாவுக்கு.

---------------------------------------


4. நான்  சந்திக்கப்போகும்  கடைசி  தேர்தல்  இது-னு  தலைவர் தழுதழுக்கறாரே?

அதாவது  2011-ல்  சந்திக்கும்  கடைசித்  தேர்தல்னு  அர்த்தம்.

--------------------------------------


5. கட்சி  ஆட்கள்  எல்லாரும்  பேண்ட்  சர்ட்தான்  அணியனும்-னு  ஆர்டர்  வந்திருக்கேஏன்?

எங்க  கட்சில  கோஷ்டி-வேஷ்டி  என்ற  பேச்சுக்கே  இடம்  இல்லைனு ரைமிங்கா  பேசத்தான்.

--------------------------------

6. கிடா  மாதிரி  தெனாவெட்டா  திரிஞ்ச  உங்க  பையன்  இப்போ பலிகிடா  மாதிரி  பம்பிட்டு  போறானே?

மேரேஜ்  ஆகிடுச்சுல்ல?

--------------------------------


7. எதிரியை  எதிர்  கொள்வது  எப்படி  தளபதி?

எதிர்ல  யார்  வந்தாலும்  உடனே  கொல்வது  மன்னா!

--------------------------


8. மேடம்...  ஹோட்டல்ல  தங்கி  இருந்த  நீங்க  சொந்தமா  வீடு  வாங்கி  இப்போ  வீட்ல  இருக்கீங்களே?

ஹோம்லி  நடிகை-னு  பெயர்  எடுக்க  ஆசை.

------------------------------------


9. கதை  மதுரைல  நடக்குது...

அதுக்காக  ஹீரோ  மீனாட்சி  அம்மா...  மீனாட்சி  அம்மானு  அடிக்கடி  கூப்பிடறது  நல்லாலை. (புரியாதவங்க நடு நிசி நாய்கள் டிரெயிலர் பார்க்கவும்)

-------------------------------


10. வில்லன்  ஹீரோயினை  ரேப்  பண்ண  போறப்ப  ஹீரோ  காப்பாத்தறாரு...

ரொம்ப  பழைய  சீன்லேட்டஸ்ட்  டிரண்ட்டுக்கு  வாங்க. ஹீரோ  ஹீரோயின்  கூட  டூயட்  பாட  கிளம்பறப்ப  வில்லன்  தடுக்கறான்.

-------------------------------
 டிஸ்கி- 1: இந்த பட்டி மன்றத்துக்கு நீங்கதான் ஓனர்.. தீர்ப்ப்பு நீங்களே சொல்லிக்கலாம்

டிஸ்கி 2 - அமலா பால் சிவப்பு கலர் டிரஸ் போட்டது தற்செயலானது.. கம்யூனிஸ்ட் ஆளுங்க உடனே இதான் சாக்குன்னு நம்ம கட்சி போலன்னு பிரச்சாரத்துக்கு கூப்பிட்டுடாதீங்க..

Monday, February 28, 2011

ஈரோடு தனியார் பள்ளிகளில் நடக்கும் அவலங்கள்

http://www.baiwan.org/images/new%20school%20building.jpg 
ஈரோடு ஜி ஹெச் அருகில் சவீதா பஸ் ஸ்டாப் அருகே உள்ள கலைமகள் கல்வி நிலையம் நீண்ட வருடங்களாக நல்ல பெயர் வாங்கி வந்த ஸ்கூல்.பத்தாவது ரிசல்ட் வந்தாலே 100% கன்ஃபர்ம் தான்.இப்படி எல்லா இடங்களிலும்,எல்லா மாணவிகளிடமும் நல்ல பெயர் வாங்கி வந்த அந்த ஸ்கூலுக்கு 2 வருடங்களுக்கு முன் சோதனைக்காலம் ஆரம்பித்தது.

அதாவது இன்ஸ்பெக்‌ஷன் வந்த ஆஃபீசர்ஸ் கலைமகள் மெட்ரிகுலேஷன் ஸ்கூல் விதிகளின் படி கட்டப்படவில்லை,விதிமுறைகளை மீறி உள்ளது எனவே லைசென்ஸ் ரத்து செய்யப்பட போகின்றது  என ஒரு குண்டைத்தூக்கிப்போட்டனர்.

6வது வகுப்பு முதல் 12 வது வகுப்பு வரை உள்ள கலைமகள் ஹையர் செகண்டரி ஸ்கூல் எந்த பிரச்சனையும் இல்லை.  எல் கே ஜி ,1 வது முதல் 5 வது வரை செயல்படும் மெட்ரிகுலேஷன் ஸ்கூல் மாடியில வகுப்பு உள்ளது என காரணம் சொன்னார்கள். பாத்ரூம் வசதியும் கிடையாது என்றார்கள்.

நிர்வாகம் என்னென்னவோ செய்து பார்த்தது ,நடக்கவில்லை. விபரம் அறிந்த பெற்றோர்கள் சிலர் டி சி வாங்கி வேறு ஸ்கூலில் மாணவிகளை சேர்த்து விட்டார்கள்.

ஆனால் இப்போதும் அந்த ஸ்கூல் எந்த பாதிப்பும் இல்லாமல் அப்படியே தான் நடந்து வருகிறது.மாடியில் இயங்குகிறது.பாத்ரூம் வசதிகள் முறையாக இல்லை.இடையில் என்ன நடந்தது? எப்படி கவனிக்கப்பட்டார்கள் ?எவ்வளவு பணம் கை மாறியது என்று தெரிய வில்லை.

ஒரு வகுப்பில் 55 முதல் 65 மாணவிகள் இந்த மெட்ரிகுலேஷன் ஸ்கூலில் படிக்கிறார்கள். சராசரியாக 40 மாணவிகளை மட்டுமே ஒரு டீச்சரால் நிர்வகிக்க முடியும் என டீச்சரே சொல்கிறார். ( எனது பெரியம்மா பெண் அங்கே டீச்சர்)

அதே போல் மாமரத்துப்பாளையம் அருகே உள்ள ஒரு பள்ளியில் ஆசிரியைகளுக்கு 3 மாதங்களாக சம்பளம் தரப்படவில்லை.காரணம் சமீபத்தில் தனியார் பள்ளிகள் ஃபீஸ் வசூலிப்பதில் வந்த தடை. அவர்கள் சவுகரியத்துக்கு வசூல் பண்ண முடியாது என்றும் அரசு நிர்ணயித்த அளவே வசூல் பண்ண வேண்டும் என்றும் சொல்லப்பட்டது.

ஆனால் நிர்வாகம் பழையபடியே வசூல் செய்தது. பெற்றோர்கள் எதிர்த்தனர், சிலர் தர மறுத்தனர். அப்படித்தராத ,ஃபீஸ் கட்டாத குழந்தைகள் தனியே அமர வைத்து சரியாக பாடம் சொல்லித்தராமல் தனிமைப்படுத்துகிறார்கள்.இது மனவியல் ரீதியான பாதிப்பை குழந்தைகளிடம் ஏற்படுத்தும் என்பதை நிர்வாகம் உணர வேண்டும்.

மேலும் டீச்சர்களுக்கு சம்பளம் தராததால் அவர்கள் ஏனோ தானோ என பாடம் நடத்துகிறார்கள்.வேண்டா வெறுப்பாக செய்ய இது ஆஃபீஸ் உத்தியோகம் அல்ல.

ஸ்கூ;ல் ஃபீஸ் வாங்கி அதில்தான் சம்பளம் என அடம் பிடிக்கும் பள்ளி நிர்வாகி ஒரு கோடீஸ்வரர். பல பிஸ்னெஸ் செய்பவர்.அவர் ஸ்கூலில் பல லாபம் பார்த்த போது  இப்போது செம லாபம் எனவே உங்கள் சம்பளம் முன் கூட்டியே வழங்கப்படுகிறது என்றாரா? இல்லை. அப்படி இருக்க ஃபீஸ் சரியாக வசூல் ஆகலை என்பதை காரணம் காட்டி டீச்சர்களுக்கு சம்பளத்தை நிறுத்துவதால் அவர்கள் மனம் பாடம் நடத்துவதில் ஈடுபடுவதில்லை. அது மாணவிகளைத்தான் பாதிக்கிறது.

அதே போல் ஸ்கூல் மாணவிகளும் சரி, டீச்சர்களும் சரி யூனிஃபார்ம் பள்ளி நிர்வாகம் கொடுப்பதைத்தான் வாங்க வேண்டும் என வற்புறுத்தப்படுகிறார்கள்.இதன் மூலம் பள்ளி நிர்வாகம் அடிக்கும் பணம் ஏராளம்.

நான் முன்னாள் கார்மெண்ட்ஸ் ஓனர் என்ற முறையில் இது பற்றி நன்கு அறிவேன்.உதாரணமாக ஒரு சட்டை தையற்கூலி ரூ 60 என வைத்துக்கொண்டால் பல்க் ஆர்டர் அதாவது ஒரு ஸ்கூல் 2000 பேர் 4000 சர்ட் என்றால் வாங்கப்படும் கூலி ஒரு சர்ட்டுக்கு ரூ 35 மட்டுமே...ஆனால் டீச்சர்களிடமும், மாணவிகளிடமும் ரூ 60 கணக்கு போட்டே வங்கப்படுகிரது. இதே போல் தான் துணிகளும்.

ஸ்கூல் ஃபீஸ் வாங்கியே செம லாபம் பார்க்கும் பள்ளிகள் இது போல் யூனிஃபார்மில் பகல் கொள்ளை அடிப்பது முறையா?இதை யார் தட்டிக்கேட்பது?இதற்கு  என்னதான் தீர்வு?