Saturday, February 19, 2011

எல்லாத் தொகுதிலயும் சுயேச்சைகளே ஜெயிச்சுட்டா ..?

1. காலேஜ்ல  ஃப்ஸ்ட்  இயர்  ஸ்டூடன்ஸை  சந்திக்க  தலைவர்  ஆர்வமா  இருக்காரே...  ஏன்?

முதன்  முதல்ல  அவங்க  போடற  ஓட்டு  அவருக்கே  விழனுமாம்.

-------------------------------------------------------


2. தலைவர்  ஜோசியர்  மேல  ஏன்  கடுப்பா  இருக்காரு?

உங்களுக்கு  அரசியல்ல  எதிர்காலம்  பிரகாசமாத்தான்  இருக்கு.  ஆனா  பாவம்  நாட்டோட  எதிர்காலம்தான்  நாசமாப்  போகப்  போகுது  அப்டீன்னாராம்.

-----------------------------------------

3. இதுதான்  நான்  சந்திக்கப்போகும்  கடைசி  தேர்தல்-னு  தலைவர்  சொல்றாரே?

எனக்கென்னமோ  மக்கள்  ஏமார்ற  மாதிரி  தெரியலை.  நாங்கள்  சிந்திக்கப்  போகும்  முதல்  தேர்தல்-னு  அவங்க  சொல்றாங்க.


-------------------------------------------------

4. தலைவர்  ஏன்  மூடு  அவுட்டாகிட்டாரு?

எல்லாத்  தொகுதிலயும்  சுயேச்சைகளே  ஜெயிச்சுட்டா  நம்ம  கதி  என்ன?-னு டவுட்  கேட்டானாம்.

---------------------------------------


5. எகிப்து  நாட்டை  நினைச்சு  ஏங்க  பெருமூச்சு  விடறீங்க...

டியர்...  அது  வேற  ஒண்ணும்  இல்லை.  அங்கே  சர்வாதிகார  ஆட்சி  ஒரு  முடிவுக்கு  வந்துடுச்சு...


--------------------------------------------

6. இந்த  மாத்திரையை  சாப்பாட்டுக்குப்  பிறகு  சாப்பிடுங்க.

டாக்டர்  நான்  எப்பவும்  டிஃபன்  தான்  சாப்பிடுவேன்.

----------------------------------------------------
7. ஜட்ஜ்: நீ  ரேப்  பண்ணுன  பொண்ணு  மாசமா  இருக்கா.  இப்போ  என்ன  பதில் சொல்லப்போறே  அந்தப்  பொண்ணுக்கு?

கைதி: ஒருவர்  ரேப்  செய்வதால்  மட்டுமே  ஒரு  பெண்  கர்ப்பமாகி  விட  முடியாது-னு  எதையாவது  உளறி  எஸ்கேப்  ஆகிடுவேன்  யுவர்  ஆனர்.


----------------------------------------------------------

8. அவருக்கு  சினிமா  நாலெட்ஜ்  சுத்தமா  இல்லை-னு  எப்படி  சொல்றே?

‘சிங்கம்  புலி’  படத்தோட  ஹீரோ  டைரக்டர்  சிங்கம் புலியா?  அப்டினு கேட்கறாரே?



----------------------------------------------

9. தலைவர்  விடுதலைப்  புலி  எதிர்ப்பாளர்-னு  எப்படி  சொல்றே?

ஆடுபுலி,  சிங்கம் புலி  இரண்டு  படமும்  எப்படி  ரிலீஸ்  ஆச்சு?-னு கேட்டறாரே?

------------------------


10. சிரஞ்சீவி  தன்னோட  கட்சியை  காங்கிரஸ்ல  இணைச்சது  தப்பு-னு  எப்படி சொல்றே?

பின்னே  என்ன?  காதலியைக்  கூட்டிட்டு  ஊரைவிட்டு  ஓடி  வந்தவன்  3  மாசம் கழிச்சு  காதலியை  அவளோட  பெற்றோர்  வீட்லயே  விட்டுட்டு  வந்தா  எப்படி இருக்கும்?


-----------------------------

diski - 1st image - tapsi     2nd image   iliyanaa      ,,

காதலர் குடியிருப்பு - ட்ராஜடி லவ் - சினிமா விமர்சனம்


http://indiamoviez.com/wp-content/uploads/2009/12/KaavalarKudiyiruppuFront.jpg
சயனைடு (குப்பி )என்ற வித்தியாசமான படம் குடுத்த ரமேஷ் இயக்கத்தில் வந்துள்ள காதல் சப்ஜெக்ட் படம்.மனதைக்கனக்க வைக்கும் க்ளைமாக்ஸ், இறுக்கமான, உருக்கமான கடைசி 30 நிமிட காட்சிகள் என பல பிளஸ் பாயிண்ட்ஸ் இருந்தும் படத்தின் முதல் பாதியில் இயக்குநர் ஏன் அவ்வளவு தடுமாறினார் என்றே புரியவில்லை...

நண்பனுக்காக காதலை விட்டுகொடுத்தல்,தனக்கு நோய் இருப்பதால் காதலியாவது நல்லாருக்கட்டும் என காதலிக்காக காதலை விட்டு கொடுத்தல்,குடும்ப நலனுக்காக காதலை விட்டுக்கொடுத்தல் வரிசையில் நன்றிக்கடனுக்காக காதலை விட்டுக்கொடுக்கும் கதை.

ஹீரோ அனிஷ் தேற மாட்டார். (ஹூம், நாம எந்தக்காலத்துல ஆம்பளைங்களை பாராட்டி இருக்கோம்..?# மனசாட்சி)காதல் வரும்போது,ஊடல் கொள்ளும்போது, அம்மாவிடம் பேசும்போது,காதலியிடம் பேசும்போது, என எல்லா சந்தர்ப்பங்களுக்கும் அண்ணனிடம் கைவச,ம் ஒரே முக பாவனை தான். பாவம் அவர் வெச்சுக்கிட்டா வஞ்சனை பண்றார்..? சட்டில இருந்தாத்தானே அகப்பைல வரும்?

இப்படியாக முதல் கோணல் முற்றும் கோணல்ங்கற மாதிரி ஹீரோ செலக்‌ஷன்லதப்பு பண்ணுன இயக்குநர் ஹீரோயின் செலக்‌ஷன் ல அடடே சொல்ல வெச்சுட்டார்.. ( அதானே பார்த்தேன்..)

https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEijYhFWTYHtbuW6AkGT33bXhPVbZAJJnIh_L956kmQboo6cFnsnDIG0ZRDxEAeP5CpsspoWOHnm9W96uXHx6MmzCtL5CA4OZt-3FeJEnh86a3PprAqsSjdCmnVmA8f3SfGLrS0ROjLA_uzb/s400/009-Kavalar-Kudiyiruppu-37.jpg

ஸ்ருதி... இவர் நடிப்புல பாஸ் மார்க் வாங்கிடறார் ஈஸியா..( பொண்ணுங்க எப்பவும் ஈஸியா பாஸ் ஆகிடுவாங்க..) இவர் கிட்டே பர்சனலா எனக்கு பிடிச்சதே இவர் சுடிதாருக்கு போடற துப்பட்டாவை புரட்சித்தலைவி எப்படி கூட்டணிக்கட்சிகளை மதிக்கமாட்டாரோ..( குறிப்பா வை கோ-வை )அந்த மாதிரி படம் பூரா கண்டுக்காம விட்டதுதான்.வாழ்க தமிழச்சி பண்பாடு.



படத்துல இயக்குநர் ரொம்ப நம்பி இருந்த சீன் பாபர் மசூதி இடிப்பு நடந்த சமயத்துல நாட்டுல நடந்த கலவரத்தை படத்துல சாமார்த்தியமா புகுத்துன விதம்.ஆனா பின்னணி இசை, படமாக்கம், எடிட்டிங்க் எல்லாமே ரொம்ப சுமார்தான் அந்த சீன்ல.

கங்கை நதி எங்கேயோ பிறந்து .. பாட்டு 1968 ல நடக்கற கதைல வர்ற சிச்சுவேஷன்கறதை  புரிஞ்சுக்கிட்டு இசை அமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தன் போட்டிருக்கும் பழைய கால மெட்டு இதம்.

சொன்னதைக்கேட்க மாட்டே பாட்டு செம கும்மாளம் என்றாலும் அது ஸ்ரீகாந்த் - சினேகா நடித்த ஏப்ரல் மாதத்தில் படத்தில் வரும் சைட் அடிக்கப்போக மாட்டோம் பாட்டின் மெட்டை ஞாபகப்படுத்துது.



http://nowrunning.com/content/movie/2009/kavalarkudiyiruppu/stills/kaavalaar_kudiyiruppu%20(34).jpg
--
உயிரே ... என் உயிரில் ஏன் வந்தாய் பாட்டுக்கான ஓபனிங்க் லீடில் ஹீரோயின் ஒரே ஒரு நெற்பயிரைக்கையில் வைத்துக்கொண்டு சிரித்துக்கொண்டே நிற்கும் காட்சியை படமாக்கிய விதத்தில் இயக்குநர் தனது அழகியல் ரசனையை பதிவு செய்கிறார்.

ஹீரோயினுக்கு ஹீரோ மேல் ஏன் காதல் வருது? என்பதற்கான காட்சி அமைப்பில் ஒரு ஆபத்து என்றதும் ஓடி வந்து ஹீரோ காப்பாத்தறார் என்பதுதான் எனும்போது பெண் எப்போதும் செக்யூரிட்டி பர்ப்பஸ்க்குத்தான் லவ் பண்ணுறாங்க என்ற எண்ணம் வருது.அதே போல் ஹீரோ ஹீரோயின் மேல் எரிந்து எரிந்து விழுகிறார்.. தியேட்டர் இருட்டின் தனிமையில் ஹீரோயின் ஹீரோ தோளில் சாய்ந்து கொண்ட அந்த உடல் நெருக்கத்தில் தான் ஹீரோவுக்கு ஹீரோயின் மேல் காதல் வருகிறது என்று சொன்னதும் ஒரு காதல் சப்ஜெக்ட்டில் முக்கிய மைனஸ்.

பொதுவாக ஒரு காதல் கதை வெற்றி பெற வேண்டுமானால் ஹீரோ - ஹீரோயினுக்குள் காதல் வரும் சம்பவம் கவிதையாக இருக்க வேண்டும்.பிறகு முதன் முதலாக காதலை பரஸ்பரம் எப்படி வெளிப்படுத்துகிறார்கள் என்பதிலும் ஒரு கலக்கலான காட்சி அமைப்பு வைக்க வேண்டும்.இந்த இரண்டையும் சரியாக கவனிக்காத காதல் படங்கள் தோல்வி அடைவதை தவிர்கவே முடியாது. காரணம் படம் பார்ப்பவர்கள் மனதில் முதலில் அந்த காதல் ஆழப்பதிய வேண்டுமே...

https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiXMZ_ye7_G7EaWXD5utx7u7pe5jVAPYYDFoNZemKv9zXloKbCToQs-Nt4mL_C8NUc0udef6BXLsvnxyqE0Ro_d6XecCxPhyphenhyphenpKqCea5C8yueOv-4xITcS330gpUgQbR8JNWCwGB4qQ7RJrh/s400/kavalar-kudiiruppu-movie-latest-stills-pics-photo-gallery-01.jpg
வசனகர்த்தா நம் மனதில் குடி கொண்ட இடங்கள்

1. ஹீரோயின் - அத்தை...காலேஜ் சீட் கிடைச்சிருக்கு..ஸ்வீட் எடுத்துக்கோங்க..

ஹீரோ - த்தூ...

சரண்யா - ஏண்டா.. துப்பறே,,?

ஹீரோ - பல் துலக்கறப்ப துப்பாம எப்படி இருக்கறது..?

2. டேய். பைக் வேணாம்டா.. நடந்தே போயிடலாம்டா...

ஏன்?

ஷோ ரூம் காரன் போட்ட பெட்ரோல் தீர்ந்துடுச்சு.

அட த்தூ... ( படம் பூரா துப்பீட்டே இருக்கறாங்கப்பா..)

3. எங்கண்ணன் கூட பிளஸ் டூ எக்ஸாம் எழுதுனே...,அப்புறம் என் கூட, இப்போ என் தம்பி கூட... அவங்க எல்லாம் பாஸ் ஆகிட்டாங்க.. நீ அநேகமா என் பையன் பிளஸ் டூ படிக்கறப்பவும் எழுதுவேன்னு நினைக்கறேன்...

4. எதுக்கு தாரை தப்பட்டையோட ஊர்வலம் வர்றீங்க..?

நான் பிளஸ் டூ ல பாஸ் ஆகிட்டேன்.

அடப்பாவி,.. இது சாவுக்கு அடிக்கற மேளம்டா...

5. ஹீரோயின் - நீ குடிச்சாலும் சரி,வேற ஒரு பொண்ணோட சுத்துனாலும் சரி.. நான் உன்னைத்தான் லவ் பண்ணுவேன். ( நல்ல பொண்ணு போல...)

6. நீ அவளைக்கல்யாணம் பண்ணிக்கலைன்னா அவ செத்துடுவா... ஆனா பண்ணீக்கிட்டா அவங்கம்மா,அப்பா செத்துடுவாங்க... ( அப்போ ஆடியன்ஸ்..?)

சரண்யாவின் நடிப்பு அருமை.ஒரு சராசரி தாயின் பரிதவிப்பை கண் முண் கொண்டு வந்து நிறுத்துகிறார். ஆனால் பேசாம செத்துத்தொலையேன்மா என கோபத்தில் மகன் சொன்னதும் நிஜமாகவே தற்கொலை செய்வது நம்பும்படி இல்லை.

அதே போல் மதக்கலவரம் நடக்கும்போது தனது மாமா மகனுக்கு ஃபோன் பண்ணி ஹீரோயின் கூப்பிடும்போது அவர் சாரி.. நான் வர்லை பைக்ல பெட்ரோல் இல்லை என்பதும்,ஃபோன் ரிசீவரை கையில் வைத்துக்கொண்டே தனது அம்மாவிடம் கலவரம் நடக்கறப்ப நான் போனா மாட்டிக்குவேன் என சொல்வதும் காதில் பூ சுற்றும் காட்சிகள்.

மாமா பொண்ணுக்கு ஏதாவது ஒண்ணுன்னா நாங்க எல்லாம் பாய்ஞ்சு போக மாட்டோம்..? ( அதான் உனக்கு மாமா பொண்ணே இல்லை..)என்ன பண்றது..? ஹீரோ வந்து தான் ஹீரோயினை காப்பாற்ற வேண்டும் என்ற ஆகம விதியின் படி.....

படத்துல ரசிக்கற மாதிரி ஒரு சீன்னா  ( சாதா சீனப்பா) ஹீரோ,ஹீரோயின் சந்திப்பின்போது ஹீரோயின் ஹீரோவிடம் உன் ஃபிரண்டை கழட்டி விடு ,நாம ஜாலியா பேசிட்டு இருக்கலாம் என்பதும் அதற்கு நண்பன் நொந்து கொள்வதும் செம காமெடி சீன். ஹீரோவின் நண்பராக நடிப்பவரின் முக பாவனை அருமை. அதனால்தானோ என்னவோ ஹீரோ வசனம் பேசும் காட்சிகளில் கூட கேமரா ஹீரோவின் நண்பன் முகத்தையே காட்டுது.

ஒளிப்பதிவு சுமார் ரகம்தான்.ஹீரோயின்-ன் மாமா மகனாக வருபவர் சல்மான்கான் மாதிரி ஜம் என இருப்பதும்,ஹீரோவாக வருபவர் பேப்பர் பொறுக்குபவர் போல் சீவாத பரட்டைத்தலை,துவைக்காத ஜீன்ஸ் பேண்ட்டுடன் இருப்பதும் தமிழ் சினிமாவின் தலை எழுத்து.

ஏ, பி ,சி என அனைத்து செண்ட்டர்களிலும் இந்தப்படம் 10 நாட்களைத்தாண்டாது.

ஆனந்த விகடன்ல இந்தப்படம் விமர்சனம் போட மாட்டாங்க ,மீறிப்போட்டா 37 மார்க்.(மீறாம போட்டா..?)

குமுதம் ரேங்க்கிங்க்  - சுமார்.



டிஸ்கி 2 -  ஆடுபுலி - Dr ராம்தாஸ் சுய சரிதை? - சினிமா விமர்சனம்

Friday, February 18, 2011

ஆடுபுலி - Dr ராம்தாஸ் சுய சரிதை? - சினிமா விமர்சனம்


http://cinema.vikatan.com/index.php?view=image&format=raw&type=img&id=1460&option=com_joomgallery&Itemid=65
சி எம் சீட்டுக்காக நாய் மாதிரி அலையும் ஒரு சந்தர்ப்பவாத , பச்சோந்தித்தனமான மன நிலை கொண்ட அரசியல் வாதி.... ( சுருக்கமா நம்ம டாக்டர் ராம்தாஸ் மாதிரி) தான்  படத்துக்கு வில்லன்.(பொதுவா இந்த அரசியல் வாதிகளே நமக்கு வில்லன்க தானே..?). அவரது பொண்ணைக்காதலிக்கும் ஹீரோ...எப்படி எதிர்ப்புகளை மீறி கைப்பிடிக்கிறார்ங்கறது தான் கதை.

ஈரம்,அய்யனார்,மிருகம் போன்ற வித்தியாசமான சப்ஜெக்ட்டில் நடித்து நல்ல பெயர் வாங்கிய ஆதிக்கு விஜய் மாதிரி ஆக்‌ஷன் கம் மசாலா ஹீரோ ஆகனும்னு ஆசை வந்துடுச்சு போல.. அறிமுக பாடல் காட்சிலயே விஜய் மாதிரி டான்ஸ் மூவ்மெண்ட்ஸ் எல்லாம் குடுத்து பயப்பட வைக்கிறார்.அதே போல் வில்லனிடம் சவால் விடும் காட்சிகளில் சிவகாசி விஜய்-யை இமிடேட் செய்கிறார்.ம்ஹும், தேற மாட்டார்னு நினைக்கிறேன்.. ஏற்கனவே விஷால்க்கு நேர்ந்த கதிதான் இவருக்கும்.

ஹீரோயின் பூர்ணா.. ஜூனியர் அசின் -னு முகச்சாயல்ல இவரை கோடம்பாக்கத்துல சொல்றாங்களாம். (அப்படின்னு பூர்ணாவே வதந்தியை கிளப்பறார்னு நினைக்கிறேன்.)முகத்துல ஒரு ஃபிரஸ்னெஸ்ஸெ இல்லை. ஏதோ சம்பளம் வாங்குனமா? டைரக்டர் சொன்னபடி நடிச்சமா?ன்னு ரொம்ப சுமாரான நடிப்புத்தான்.

படத்துல ஆறுதலான ஒரே அம்சம் வில்லனா வர்ற சுரேஷ்தான் ( பன்னீர் புஷ்பங்கள் புகழ்)சொட்டைத்தலையோட வந்து அவர் நயவஞ்சகமா சிரிக்கறப்ப அப்படியே டாக்டர் ராம்தாஸைப்பார்க்கற மாதிரியே இருக்கு.

http://www.dinamani.com/Images/article/2010/8/6/cin2.jpg
வில்லனுக்கு பி ஏ வாக வரும் மயில்சாமி அப்பப்ப சிச்சுவேஷனுக்குத்தக்கபடி கவுண்ட்டர் டயலாக் குடுத்து அப்ளாஸை அள்ளறார்.

உன்னை நினைக்கையிலே மனசுக்குள் மழைக்காலம் என்ற பாடல் வரிகளை அழகாக எழுதிய கவிஞர் பாடலை படமாக்கிய விதத்தினை பார்த்திருந்தா (PICTURAISATION OF THE SONG)பாட்டு எழுதுறதையே விட்டுடுவார்னு நினைக்கிறேன்.

அதே போல் இடைவேளைக்குப்பிறகு வரும் மாமூல் ஃபேமிலி சாங்க்கில் அத்தனை பேரும் (கிட்டத்தட்ட 24 பேர்) கூலிங்க் கிளாஸ் அணிந்து வந்து பயமுறுத்துகிறார்கள். அந்த பாடல் காட்சியில் பழம்பெருமை மிக்க ரவிச்சந்திரன்,கே ஆர் விஜயா உட்பட அனைவருக்கும் டான்ஸ் மூவ்மெண்ட் கொடுத்து அவர்களையும் படுத்தி , நம்மையும் படுத்தி எடுக்கிறார் இயக்குநர்.

மனதைத்தொட்ட வசனங்கள்

https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEip5yXmTS28HTTvXFc6fyBMstjRMTKdmLRfI92ZwrLF8X0-0-XUr4HfxXaStLbxnvUR-S6Uxhyphenhyphen2EFBJW9Qz4ef37bhM2efDyDlzAvrMNhrTsBeHdaNGJ9JyVLzX3gWVOUQf7EjEdE909Ls/s320/poorna.jpg
1. அடேங்கப்பா.. வழுக்கு மரமே இப்படி ஏர்றானே.....வாழ்க்கைல எப்படி முன்னேறுவான்?

அவ்வளவுதானா? நான் கூட என்னவோ ஏதோன்னு நினைச்சேன்.

2.  நீங்கதான் என் பையனுக்கு ஒரு பேரு வைக்கனும்.

ஹரிதாஸ்  , ஹரிதாஸ்

எனக்கு இந்த பேரு பிடிக்கலை.
ஓ. இதுக்குத்தான் குழந்தைகளுக்கு பேசறதுக்கு முன்னேயே பேரு வெச்சுடறாங்க போல...

3. ஏம்மா.. படுத்திருந்த பொண்ணைக்காணோமேன்னுபதட்டப்படாம ஸ்கூல்க்கு கிளம்பறியே.. ஏன்?

பொண்ணைப்பெத்திருந்தா பயப்படுவேன், பொறுக்கியை அல்ல பெத்திருக்கேன்..? ( ஆஹா என்ன ஒரு மாதர் குல மாணிக்கங்களாடா...)

4. பாப்பா பாக்க டாப்பாத்தான் இருக்கு, ஆனா ட்ரை பண்ணிப்பார்த்தா படு லோக்கலா இருக்கும் போல...

5. கணக்கு டீச்சர் - டேய்.. உங்கப்பாவுக்கு நான் ரூ 1000 பணம் கடன் தர்றேன். மாசாமாசம் ரூ 50 திருப்பித்தர்றதா சொல்றாரு. அப்போ எத்தனை  மாசத்துல திருப்பித்தருவாரு?

மாணவன் - எத்தனை  மாசமானாலும் திருப்பியே தரமாட்டார் மேடம்.. உங்களுக்கு எங்கப்பாவைப்பற்றித்தெரியலை...

6. ஒரு கெட்டவன் உருவாகறது அவன் சொன்ன முதல் பொய்ல...

7. எல்லாரும் சாவுக்கு சங்கு ஊதுவாங்க.. இவன் தான் சாகறதுக்கே சங்கு ஊதறான்.

8. ஒரு பொண்ணு வண்டி ஓட்டறப்ப அவ பின்னால ஒரு பையன் உக்காந்தா அது லிஃப்ட்டுன்னு நினைப்பாங்க. ஆனா ஒரு பையன் பின்னால ஒரு பொண்ணு உக்காந்தா லிஃப்ட்டைத்தவிர மத்த எல்லாத்தையும் நினைப்பாங்க..

9. ஹீரோயின் - உன் கை டிகாக்‌ஷன் மாதிரி இருக்கு, என் கை பால் மாதிரி இருக்கு...

ஹீரோ - அப்போ நமக்குப்பிறக்கபோற குழந்தை காஃபி  மாதிரி இருக்கும்னு சொல்லு.

(இந்த சீன்ல என்ன காமெடின்னா 2 பேர் கையும் மாநிறமா தான் இருக்கும் )

10. எனக்கு இந்த மாப்பிள்ளை வேணாம்.

ஏன் அப்படி சொல்றே.. எனக்கு எந்த கெட்ட பழக்கமும் இல்லையே...எந்தப்பொண்ணையும் எதுவும் பண்ணுனது இல்லையே...

அதான். கல்யாணத்துக்குப்பிறகு மட்டும் என்னைக்கட்டிட்டு என்ன செய்யப்போறே,,?

(சபாஷ்.. தமிழ்ப்பொண்ணுன்னா இப்படித்தான் கலாச்சாரத்தைக்காப்பாத்தனும்)

11. ஹீரோ - அப்பா, இவ்வளவு கட்டுப்பாடா வளர்ந்த நீங்க எப்படி எனக்கு இவ்வளவு ஃபிரீடம் குடுத்தீங்க..?

பிரபு -  நான் எப்படி எல்லாம் வாழனும்னு நினைச்சனோ அந்த மாதிரி...நீ வாழனும்னு ஆசைப்படறேன்.

12. ஹீரோயின்  - எதுக்காக என்னை அவசரமா வரச்சொன்னே..?

ஹீரோ - நம்ம லவ் மேட்டர் எங்க வீட்ல எல்லோருக்கும் தெரிஞ்சு போயிடுச்சு.

ஹீரோயின் - அய்யய்யோ.. என்ன சொன்னாங்க..?

ஹீரோ - ஓக்கே சொல்லீட்டாங்க.. அதான் கவலையா இருக்கு..

13. வில்லனின் எடுபுடி  - பால்பாண்டின்னா பால் கறக்கற பாண்டின்னு நினைச்சியா?உனக்குப்பால் ஊத்தற பாண்டிடா... ( பஞ்ச் டயலாக்காம்.. சகிக்கல...)



http://www.sivajitv.com/newsphotos/poorna4.jpg
இயக்குநர் பாராட்டுப்பெறும் இடங்கள்

1. ஹீரோ தனது காதலை குடும்பத்தில் உள்ள அனைவரிடமும் தனித்தனியே சொல்லி உங்க கிட்ட மட்டும் தான் சொல்றேன் .என டபாய்ப்பதும் அதைத்தொடர்ந்து வரும்  கல கல சீனும்.

2.செலவு அதிகம் இல்லாம ஒரு மசாலாப்படத்தை கொடுத்தது.

3. ஹீரோயினை சுமாரா செலக்ட் பண்ணி கடுப்பை கிளப்பினாலும் ஹீரோயின் அம்மாவா யுவராணியை போட்டு கிளுகிளுப்பு ஏத்துனது..

இயக்குநரிடம் சில கேள்விகள்

1. படத்தோட ஓப்பனிங்க் சாங்க்ல ஹீரோ கம்பம் ஏறும்போது கீழே விழுந்து சேறு ஆகிடுது ஓக்கே... அப்போ கூட இருந்த 42 பேருக்கும் அதே மாதிரி சேறு எப்படி ஆச்சு? ( பாட்டுக்கு மேட்ச்சுக்கு மேட்சுக்கா?)

2. க்ளைமாக்ஸ்ல ஹீரோ பைக்ல வேகமா வந்து விழறார். வில்லனோட அடியாளுங்க 34 பேர் சுத்தி நிக்கறாங்க. உடனே எந்த ஸ்பேனர், ஸ்க்ரூ ட்ரைவர் இல்லாம தன் பைக்கோட முன்னாடி சக்கரத்தை கழட்டி வீசி அடிக்கறாரு..? அது எப்படி?அந்த ஒரு சக்கரம் பட்டு 12 பேர் விழறாங்க...

எப்படியோ படம் தப்பிச்சிக்கிச்சு....

ஏ செண்ட்டர்ல 35 நாட்கள், பி செண்ட்டர்ல 25 நாட்கள், சி செண்ட்டர்ல  15 நாட்கள் ஓடலாம்.

ஆனந்த விகடன் எதிர்பார்ப்பு மார்க் - 39
குமுதம் ரேங்க்கிங்க் - ஓகே


டிஸ்கி -

நடுநிசி நாய்கள் - சைக்கோ த்ரில்லர் - சினிமா விமர்சனம் 18 +

https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEh_t-4vJLNXuIJBIPYl99jizc7qQNRqvmXbowZJkK1GWkeTZs3sfVOQstEBQgtsnuwY7CT6MQWtwzo-3vjSSN7ishJOAprczsoU9iOd4JufGiliJPALL4IHGhQy1Yqu-Kc-_zA0a77R_8ck/s1600/nadunisi_naaigal_movie_wallpapers_01.jpg

இசையோ, பின்னணி இசையோ இல்லாமல் வெறும் சிறப்புச்சத்தங்கள்.ஒலிச்சேர்ப்பு மட்டுமே துணையாகக்கொண்டு ஒரு த்ரில்லர் படம் கொடுக்க தைரியமாக வந்த இயக்குநர் கவுதம் வாசுதேவ் மேனனனுக்கு ஒரு ஃப்ளவர் பொக்கே கொடுத்துப்பாராட்டலாம் என்றால்.........


சிகப்பு ரோஜாக்கள் படத்தில் வருவது போல் பெண்களை துரத்தி துரத்தி வேட்டையாடும் ஒரு சைக்கோவின் கதை தான் இது என்பது கூட பரவாயில்லை. ஆனால் ஆண்ட்டி ஹீரோ சைக்கோ ஆனதற்கு இயக்குநர்  வைத்திருக்கும் ஃபிளாஷ்பேக்... ஸாரி சார்...

மென்மையான காதல் படங்களை மயில் இறகு வருடுவது மாதிரியான காட்சி அமைப்புகளில் மனம் கவர்ந்த இயக்குநரா இப்படி? என அதிர்ச்சி ஏற்படுத்தும் வண்ணம் பல காட்சிகளை கண் முன் நிறுத்தும் படி எடுத்ததற்கு என் வன்மையான கண்டனங்கள்.

மனவியல் நிபுணர்களின் கருத்துப்படி ஹோமோ வாக மாறும் ஒரு ஆண் பெண்களுடன் பழகும் வாய்ப்பு பெறாதவனாகவே இருப்பான் என்கிறார்கள். ஆனால் பல பெண்களுடன் சகவாசம் வைத்திருக்கும் கதையின் ஹீரோவின் அப்பா தனது சொந்த மகன் (அதுவும் வயது 8) கூடவே.....


http://cinema.natpu.in/thiraippadam/cinebits/samira.jpg
இளவயதில் பாலியல் வன்முறைக்கு ஆளாகும் குழந்தைகளின் நலன் கருதிதான் எடுத்தேன் என 1000 சால்ஜாப்புகள் சொன்னாலும், BASED ON A TRUE STORY  போஸ்டரில் போட்டு தப்பிக்கப்பார்த்தாலும்  இந்த மாதிரி படங்கள் பார்ப்பவர்களின் மன நிலையை பாதிக்கும் என்பதால்,சமூகத்தில் குற்றங்கள் மீண்டும் மீண்டும் தொடர இது பாதை வகுக்கும் என்பதால் இந்த மாதிரி படங்கள் தடை செய்ய்ப்பட வேண்டும் அல்லது மக்களே ஒதுக்க வேண்டும்.

16 வயதே ஆன ஹீரோ தனது கார்டியன் மாதிரி இருக்கும்  பக்கத்து வீட்டு ஆண்ட்டியை பலாத்காரப்படுத்தும் இடமும்,ஒரு கட்டத்துக்கு மேல் அந்த ஆண்ட்டியும் இணங்குவது போல் காட்டுவதும் வன்மையாகக்கண்டிக்கத்தக்க சீன்கள்.

அதே ஆண்ட்டி தனது காதலனை கல்யாணம் பண்ணி வந்த பிறகு முதல் இரவிலேயே ஹீரோ கணவனை கொலை செய்வதை நேரில் பார்த்த பிறகும் போலீஸில் சாட்சி சொல்லாமல் ஹீரோவைக் காப்பாற்றுவதும் நம்ப முடியாத காட்சி அமைப்பு.

அதே போல் இறந்து விட்ட அந்த ஆண்ட்டி உயிருடன் இருப்பது போல் கற்பனை செய்து கொண்டு வாழும் மனப்பிறழ்வு நோய் கொண்டவர் ஹீரோ என்பதெல்லாம் ஆங்கில சைக்கோ ( ஹிட்சாக்) படத்திலும், பாலு மகேந்திராவின் மூடு பனி படத்திலும், ஆர் .பார்த்திபனின் குடைக்குள் மழை படத்திலும்  வந்தவை தான்.

http://narumugai.com/wp-content/uploads/2010/10/sameera-reddy-2.jpg
சிட்டியில், பப்ளிக்காக ஹீரோ பெண்களை கடத்துவதும், கொலை செய்வதும் சர்வசாதாரணமாக நடப்பதாக காண்பிப்பது கேலிக்கு உரியது. போலீஸ் எல்லாம் என்ன தான் பண்றாங்க?

அதே போல் அந்த ஆண்ட்டி பெட்ரூமில் உள்ள மெழுகுவர்த்தி கீழே விழுந்து தீ விபத்தில் மாட்டுவது நம்பும்படி இல்லை.ஹீரோவாக நடிப்பவரின் (வீரா) முக பாவனை, பாடி லேங்குவேஜ் எல்லாம் ஓக்கே.ஒளிப்பதிவு, ஒலிப்பதிவு எதுவும் குறை சொல்லும்படி இல்லை. இசை இல்லாதது படத்தில் ஒரு குறையாகவே தெரியவில்லை.

ஷமீரா ரெட்டியின் நடிப்பும், அவரது பாடி லேங்குவேஜ்ஜூம் அருமை.ஆனால் திகில் படங்களில் நடிப்பதில் கலக்கிய நளினி( நூறாவது நாள் ),ஜீவிதா போல் வரவில்லை.

நகரத்தில் வாழும் இளம்பெண்களை எதற்கும் கவலைப்படாதவர்கள் போலவும் ,கற்பு பற்றிய எண்ணம் இல்லாதவர்கள் போலவும், குடும்பப்பாங்கான வாழ்க்கைக்கு ஒத்து வரமாட்டார்கள் என்பது போலவும் வரும் காட்சி அமைப்புகள், வசனங்கள் வன்மையாக கண்டிக்கத்தக்கவை.

http://narumugai.com/wp-content/uploads/2010/08/sameerareddy.jpg
--
கண்டிக்கத்தக்க வசனங்களில் சில சாம்ப்பிள்ஸ்

1.பொண்ணுங்க.. பாருங்க... ரொம்ப அறிவாளியா இருப்பாங்க... ஆனா நெட்ல உக்காந்து பாருங்க.. சேட்டிங்ல வரிசையா விழுவாங்க..

2. அம்மா, அப்பா ரூம்ல பொண்ணு படிக்கறதா நினைப்பாங்க.. இவளுங்க ரூம்ல பசங்களோட சேட்டிங்க்ல இருப்பாளுங்க...

.3. ஏய்ய்... என் பேரு வீரா... நான் ரொம்ப நல்லவன்...இப்போ உன்னை ரேப் பண்ணப்போறேன்.

4.நீ தூங்குன பிறகு எப்பவாவது உன் ரூமுக்கு வந்து உங்கப்பா நீ ரூம்ல தான் இருக்கியா?ன்னு செக் பண்ணி  இருக்காரா? என்னா நீ நல்லவன்னு தெரியும்... அதனால நீ என்ன பண்றே.. நைசா சுவர் ஏறி குதிச்சு என் ரூம்க்கு வர்றே....

5. இப்போ உன் கிட்டே வந்து ஐ லவ் யூ சொல்லி இருந்தா நீ என்ன பண்ணி இருப்பே.. அர்ஜூனை ஏற்கனவே லவ் பண்றேன்னு சொல்லி இருப்பே.. அதான்.. அவனை சீனை விட்டே தூக்கிட்டேன்..

6. இந்தா தண்ணீர்..  WASH YOUR MOUTH... I WANT TO KISS YOUR MOUTH.

நல்ல பேர் எடுக்க ரொம்ப நாள் ஆகும் , ஆனா கெட்ட பேரை சீக்கிரமா எடுத்துட முடியும் என கிராமங்களில் சொல்வார்கள். அது மாதிரி இத்தனை நாளாக கஷ்டப்பட்டு சேர்த்த  நல்ல பெயரை இந்த ஒரு படத்தின் மூலம் இழக்கப்போகிறார் இயக்குநர்.

இதய பலஹீனம் உள்ளவர்கள், மென்மையான மனம் படைத்தவர்கள்,பெண்கள், மாணவ மாணவிகள்,கர்ப்பிணிப்பெண்கள் இந்தப்படம் பார்க்க வேண்டாம் என அறிவுறுத்தப்படுகிறார்கள்

ஏ செண்ட்டர்களில் 25 நாட்கள், பி செண்டர்களில் 20 நாட்கள் , சி செண்ட்டர்களில் 10 நாட்கள் ஓடலாம்.

ஆனந்த விகடன் எதிர்பார்க்கப்படும் மார்க் - 40

பிரபு தேவா - நயன் தாரா ஜோடியா நடிச்சா..?

http://narumugai.com/wp-content/uploads/2010/09/931.jpg
1. தலைவருக்கு கிரிக்கெட் மோகம் ஜாஸ்தின்னு  எப்படி சொல்றே?

மகளிர் அணித்தலைவியை ஏலம் போட்டுடலாமா?ன்னு கேட்கறாரே?

-------------------------------------------

2.பிரபுதேவா- நயன் தாரா 2 பேரும் ஒரு படத்துல ஜோடியா நடிச்சா என்ன டைட்டில் வைப்பாங்க?

கள்ளக்காதலுக்கு மரியாதை

------------------------------------

3.என் கட்சில கோஷ்டிப்பூசலே கிடையாது...

விளையாடாதீங்க தலைவரே...  உங்க கட்சில இருக்கறதே 2 பேரு. 1. நான். 2. நீங்க.

---------------------------------

4. மக்களுக்கு சேவை செய்யத்தான் நான் அரசியலுக்கு வந்தேன்.

தலைவரே... பொது மக்களுக்கா? உங்களோட வாரிசு மக்களுக்கா?

---------------------------------------

5. தன்னை கேவலப்படுத்தறது தெரியாம டி வி யை ரசிச்சுப்பார்த்துட்டு இருக்காரு தலைவரு.

புரியலையே..?

தலைவரோட  டாப் டென் ஊழல்கள் பற்றி  புரோக்ராம் நடக்குது.....கை தட்டி ரசிக்கறாரே..?

-----------------------------------
http://www.dinamani.com/Images/article/2010/12/18/niira_radia.jpg
6. தலைவருக்கு ஒரு சின்ன வீடு இருக்குன்னு சொன்னியே.. அது அவர் காதுக்கு கேட்டுடுச்சு.. கோவிச்சுக்கிட்டாரு...

அய்யய்யோ. அப்புறம்?

சின்ன பங்களான்னு தான் இனி சொல்லனுமாம்.

------------------------------------

7. டைப்ரைட்டிங்க் இன்ஸ்டிட்யூட்டை திறந்து வைக்க தலைவர் ஒத்துக்கலை.

பிராஸ்டிடியூட் இன்ஸ்டிடியூட்னா உடனே ஓக்கே சொல்லி இருப்பாரு.

-------------------------------

8. இந்திய மாணவர்கள் கால்களில் கண்காணிப்புக்கேமரா பொருத்தப்பட்டதைப்பற்றி தலைவர்ட்ட கருத்து கேட்டது தப்பா போச்சு.

 ஏன்?

நாமும் பதிலுக்கு அமெரிக்க மாணவிகள்  கால்ல  கண்காணிப்புக்கேமரா பொருத்தி அவங்க குளிக்கறப்ப சீன் பார்த்துட வேண்டியதுதான் அப்படிங்கறாரே....

------------------------

9. நம்ம தலைவர் அரெஸ்ட் ஆனதும் டில்லில இருக்கற 40 மினிஸ்டர்களுக்கு ம் ஹார்ட் அட்டாக் வந்துடுச்சே.. ஏன்?

அப்ரூவர் ஆகிடறதா தலைவர் சி பி ஐ கிட்டே வாக்கு குடுத்துட்டாராம்.

----------------------------------

10. தலைவர் அப்ரூவர் ஆகிடறதா வாக்கு குடுத்தும் யாரும் பயப்பட்ட மாதிரி  தெரியலையே....?

எந்தக்காலத்துல கொடுத்த வாக்குறுதியை நிறைவேத்தி இருக்காருங்கற தைரியம் தான்.

-----------------------------------

டிஸ்கி -1   : இன்னைக்கு வெள்ளிக்கிழமைங்கறதால ஆஃபீஸ்ல கண்காணிப்பு அதிகமா இருக்கும். அதையும் தாண்டி நடுநிசி நாய்கள்,காவலர் குடி இருப்பு, ஆடு புலி, மார்கழி 16,உட்பட ரிலீஸ் ஆகி இருக்கற 5 படங்கள்ல ஏதாவது ஒரு படத்தை கட் அடிச்சுட்டு பார்த்துடனும்.ஸ்கூ;ல் லைஃப்,காலேஜ் லைஃப்,ஆஃபீஸ்லைஃப்னு பல கால கட்டங்கள்லயும் கட் அடிச்சுட்டு படம் பார்க்கறது ஒரு த்ரில்லிங்க் அனுபவம் தான்.

டிஸ்கி 2 - இந்த 7 மாசத்துல முதன் முதலா பயணம் படத்துலதான் என் கணிப்பு 100% மேட்ச் ஆகி இருக்கு.ஆனந்த விகடன் மார்க்கும், என் எதிர்பார்பு மார்க்கும் 42 தான்.ஆனந்த விகடன் எதிர்பார்ப்பு மார்க்கிற்கு நான் ஏன் முக்கியத்துவம் தர்றேன்னா அந்த பத்திரிக்கை ஆஃபீஸ்ல பணியாற்றத்தான் முடியல்... அந்த கெஸ்ஸிங்கையாவது கரெக்ட்டா பண்ணலாம்னுதான்.

Thursday, February 17, 2011

நாளைய இயக்குநர் - ஃபேண்ட்டசி கதைகள் - எஸ் ராமகிருஷ்ணன் கதை - விமர்சனம்

http://www.tamilgood.com/movies/wp-content/uploads/2011/01/Naalaiya-Iyyakunar55.jpg 
மேஜிக் ரியலிசம் எனும் அலிபாபாவும் அற்புத விளக்கும் கான்செப்ட் இந்த வார கலைஞர் டி வி யில் ஞாயிறு காலை 10 .30 மணிக்கு நாளைய இயக்குநர் நிகழ்ச்சில கொடுத்தாங்க. லட்டு மாதிரி சப்ஜெக்ட்.ஆனா கலந்துக்கிட்ட 4 கதைகள்ல சந்தேகத்துக்கு இடமே இல்லாம எஸ் ராமகிருஷ்ணன் கதை தான் கலக்கி முதல் பரிசை தட்டிச்சென்றது.அது கடைசில......

1. தேய் மச்சி தேய்  - இயக்கம் ராஜேஷ் குமார் ( எழுத்தாளர் ராஜேஷ் குமார் அல்ல)

க்ரெடிட் கார்டு யூஸ் பண்றது ரொம்ப டேஞ்ஜர்,கைல இருக்கற காசுக்கு தக்கபடி செலவு பண்ணி சிக்கனமா இருக்கனும்கற சாதாரன படிப்பினையை தரும் கதை. ஃபேண்ட்டசி எனும் தளத்துக்கு இவர் எடுத்துக்கிட்ட தீம் ரொம்ப சுமார்தான்.
2 நிமிஷத்துல கிட்டத்தட்ட 120 ஷாட்ஸ்ஸை ஸ்பீடா காண்பிக்கறாங்க. விழலுக்கு இறைத்த நீர். டைம் மிஷின் மாதிரி மினி ரிமோட் கிடைக்கப்பெற்றவன் இப்படி அல்ப சொல்பமா ஒரு ஷாப்பிங்க் மட்டும் தானா போவான்? கற்பனை எல்லைகளை இன்னும் விஸ்தாரப்படுத்தனும்.....பெட்டர் லக் நெக்ஸ்ட் டைம்..

http://i.ytimg.com/vi/gDRftuVBnFc/0.jpg
2. கைக்குள் சொர்க்கம்  - ரமேஷ்

ஆட்டையைப்போட்டுட்டு வந்த ஒரு செல்ஃபோன்ல தற்செயலா கால் (CALL) சொர்க்கத்துக்கு போகுது... என்ன வேணும்னாலும் கேட்கலாம்.ரொம்ப சாதாரண ஆசைகளை நிறைவேத்திக்கறாரு ஹீரோ.க்ளைமாக்ஸ்ல ஃபோனுக்கு சொந்தக்காரர் வந்து அந்த ஃபோனை பிடுங்கிகறார். லாஜிக்கே இல்லை. 

கதைல குறிப்பிட்டு சொல்ற மாதிரி கிராஃபிக்ஸ் ஒர்க் மட்டும் தான் நல்லாருந்தது.அதுவும் செல் ஃபோன் எண் அப்படியே வளைஞ்சு வானத்துக்கு போற சீன் அழகு. எதிர்பார்த்த மாதிரியே அந்த பட  கிராஃபிக்ஸ் ஒர்க்கிற்கு பரிசு கிடைச்சுது.

3.  வானவில் - கல்யாண்

இது கொஞ்சம் அம்புலிமாமா கதை டைப்பா இருந்தது.பணக்கார வீட்டுப்பசங்க விளையாடறதை ஏக்கத்தோட பார்க்கறான் ஏழைச்சிறுவன்.. அவனோட ஆசை ,லட்சியம் எல்லாமே பிரியா கூட விளையாடனும், அவ்வளவுதான்.குளத்துல இருக்கற மீன், “ நான் தான் தேவதை ,உனக்கு என்ன வேணும்”னு கேக்கறப்பக்கூட பிரியா கூட விளையாடனும்கற அதே பல்லவியைதான் பாடறான்.அவனுக்கு அந்த சான்ஸ் கிடைக்குது. 

பிரியா கிட்டே தேவதை பற்றி சொல்றான். அவ நம்பாம ஆற்றங்கரைக்கு வந்து பார்க்கறா.அப்போ இருட்டிடுது. தேவதை வர்ல.( தேவதைங்களுக்கு இருட்டுன்னா பயம் போல..?)உடனே நீ பொய் சொன்னே.. தேவதைனு யாரும் கிடையாதும்ன்னு அந்த பிரியா சொல்லீட்டு போயிடறா..அவ்வளவுதான் கதை.ரொம்ப சுமாரான திரைக்கதை.
https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiCJVT62g6sO5-4ZpYF4aaC81A7zHq47G1DkFwlFeg5lnY7mKv-X0cl1tILaGWWtyQ8Tvc2DvaBcaKiNRE5qz7Kw9B0PWTU3-7maaVIPuPt9bnfmcDaAjOMUL4fnBTy0r0UIgUxKT8wQgA/s400/keerthi-sneha.jpg
4. கொக்கரக்கோ - அருண்

மத்த 3 படங்களும் சொதப்புனதுக்கு வட்டியும் முதலுமா இந்தப்படம் செம கலக்கு கலக்கிடுச்சு. எஸ் ராம கிருஷ்ணனின் கதையைப்படிக்கறப்ப இருந்த அதே பாதிப்பு, உற்சாகம்,பர பரப்பு , சஸ்பென்ஸ் இந்தப்படத்துல அட்சரம் பிசகாம அப்படியே கொண்டு வந்தது இயக்குநரின் சாமார்த்தியம்.

சரவெடி சண்முகம்னு ஒரு அரசியல்வாதி - ஒரு மேடைல அவருக்கு சேவல் டாலர்  செயினை பரிசா போடறாங்க. அப்போதிருந்து அவருக்கு பேச்சு வர்றதில்லை.. வாயைத்திறந்தா கொக்கரக்கோன்னு தான் சத்தம் வருது.அதை வெச்சு நடக்கற காமெடி கூத்துக்கள் தான் திரைக்கதை. க்ளைமாக்ஸ்ல அவர் மனம் நொந்துபோய் பீச்ல உக்காந்திருக்கறப்ப ஒரு திருடன் வந்து அவர் கிட்டே இருக்கற செயினை பறிச்சிட்டுப்போயிடறான்.இப்போ இவருக்கு பேச்சு வந்துடுது, திருடனுக்கு கொக்கரக்கோ குரல் வந்துடுது.

சரவெடி சண்முகமா வர்ற வரோட நடிப்பு, பாடிலேங்குவேஜ்,வசன உச்சரிப்பு எல்லாமே பிரமாதம்.கலக்கீட்டார் மனுஷன்.இந்தப்படத்துல கவனிக்க வேண்டிய விஷயம் என்னன்னா படத்துல வர்ற எல்லா கேரக்டரும் சீரியஸா இருப்பாங்க.. ஆனா பார்க்கற ஆடியன்ஸ் சிரிச்சிட்டு இருப்பாங்க.ரொம்ப ரேர் (RARE)  இந்த மாதிரி கான்செப்ட் கிடைக்கறது. கிட்டத்தட்ட எஸ் வி சேகரின் ஃபார்முலா..

ஜட்ஜா வர்ற ஹாய் மதன் பேசறப்ப தான் ஒரு அறிவு ஜீவிங்கறது எல்லாருக்கும் தெரியனும்கறது மாதிரி பேசறாரோன்னு டவுட்டா இருக்கு. சாதாரணமா பேசுனா தேவல. (நிறைய கமல் படம் பார்ப்பார் போல)

பிரதாப் போத்தன் - சொல்லவே வேண்டாம். வளரும் கலைஞர்களை ஊக்குவிக்கனும், அவங்க மூஞ்சில அடிக்கற மாதிரி கமெண்ட் தரக்கூடாதுங்கற அடிப்படை  நாகரீகம் கூட தெரியாம எடுத்த எடுப்புலயே உங்க படம் எனக்கு பிடிக்கலை, மோசம்னு தடாலடியா அவர் சொல்றதும் , படைப்பாளிகள் மேடைலயே கண் கலங்கறதும் பார்க்கறவங்க மனசை பாதிக்கற மாதிரி இருக்கு.

என்னோட கருத்து என்னன்னா இந்த 2 பேரையுமே தூக்கிட்டு கே பாலச்சந்தர்,கிரேசி மோகன் போன்றவர்களை ஜட்ஜ் ஆக்கினால் ரொம்ப நல்லாருக்கும். 

இயக்குநர் கே பாலச்சந்தர் கருத்து சொல்றப்ப நல்லாருந்தா அருமைங்கறார். நல்லாலைன்னா ரொம்ப நாசூக்கா இதப்படத்தை இன்னும் நல்லா பண்ணி இருக்கலாம்னு இதமா சொல்றார்.

ஒரு படைப்பாளியை மேடைலயே அவமானப்படுத்தறதுக்கு இவங்க 2 பேருக்கும் சம்பளம் கொடுத்து ஏன் வெச்சிருக்கனும்?ஹாய் மதனைக்கூட ஒரு கணக்குல சேர்த்துக்கலாம். ஆனா பிரதாப் போத்தனின் அநாகரீகமான கமெண்ட்ஸ் வன்மையா கண்டிக்கத்தக்கது.

நமீதா- கேரளா - டிஸ்ஸப்பாயிண்ட்மெண்ட்

https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjbQroVVj6k8LXYAuE_9g2t9a5R6Lj1CLv8cuA1as9mCcG2GGQ2_-3aa3SNZpXcNOiRl6rMj3UL1sAFwR-Yjn-gCewJgpy1NqfBZ9qaBN1Op_dG2gnPOxXObAQcs1ghFv9qCIV_17anpVAx/s400/namitha_hot_11.jpg
1.அரசியல் வானில் என்னென்ன மாற்றங்கள் நிகழப்போகுதுன்னு யாராலும் சொல்ல முடியாது.

ஏன் முடியாது? நீரா ராடியாவுக்கு ஒரு ஃபோன் போட்டு, கேளுங்க.. ஃபுல் டீட்டெயிலும் தெரிஞ்சுடும்.

-----------------------------------
2. என்னது? திருடுனது ஒரு லேடியா? துரத்திப்பிடிச்சீங்களா?

எஸ் ஸார்,  பிடிச்சேன், மெத் மெத்னு இருந்தது... மயக்கத்துல இருந்தப்ப நழுவி ஓடிட்டா...

----------------------------

3.எதுக்காக பைக்ல 120 கிமீ வேகத்துல போனே..?

என்னைத்துரத்திட்டு வந்த பைக்கோட ஓனர் 140 கி  மீ வேகத்துல வந்தாரு.. அதான்.

---------------------------------

4.நேத்து ஒரு ஃபுல் வாங்கி நானும், என் ஆளும் ஆளுக்கு ஒரு ஆஃப் அடிச்சோம்.


ஓஹோ... நீ பாதி , நான் பாதி கான்செப்டா?


-------------------------------------

5. மோஹனா.. காலைல எந்திரிச்சதும் ஒரு குட்மார்னிங்க் மெசேஜ் அனுப்ப இவ்வளவு நேரமா? நீ எல்லாம் ஒரு லவ்வரா?

அது சரி.. நீங்க பாட்டுக்கு ஈசியா சொல்லீட்டீங்க.. நான் 184 பேருக்கும் அனுப்ப வேண்டாமா?நீங்க 185 வது லவ்வர். குரூப் மெசேஜ் செட்டிங்க்ஸ் வேற கிடையாது. தனித் தனியாதான் அனுப்பனும்.

(வாழ்க உத்தம பத்தினி)

------------------------------------
https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgz8ggU7CkOLwisrDCz1mDRYgxUdRO_LXOuGoh2hykqE7wNWpTFjO1ZYQ01xaU62WhRpKxzSTLKHoWQi94_ysdLJncGQLnJb3oXsxuecd-ITCk_Tk1XRJZtRpLk1zF40iVorSAfg4gI2URI/s1600/namitha.jpg
6. பழையன கழிதலும் ,புதியன புகுதலும்னு பெரியவங்க சொல்லி இருக்காங்களே...

அதுக்காக நீ வருஷா வருஷம் லவ்வரை மாத்தறது சரி இல்லை.

--------------------------------------

7.டாக்டர்.. நர்ஸ் நமீதாவை நான் லவ் பண்றேன்..

யோவ்.. கஷ்டப்பட்டு கேரளா போய் நல்ல ஃபிகரா கூட்டிட்டு வந்து அப்பாயிண்ட் பண்றது  நான்... ஈசியா செட் பண்ணி கூட்டிட்டு போய் என்னை டிஸ்ஸப்பாயிண்ட் பண்றது நீயா..?

---------------------

8.பணத்துக்காகவும்,பதவிக்காகவும் அலையற ஆள் நான் கிடையாதுன்னு தலைவர் சொல்றாரே...

ஆமா.. அவர் அலையறதே மகளிர் அணித்தலைவி சொப்பன சுந்தரிக்காகத்தானே...

--------------------------------

9. எந்தக்கட்சியை சேர்ந்தவரா இருந்தாலும் தியாகிகளுக்கு பரிசு உறுதின்னு தலைவர் சொல்றாரே...?

அதாவது ... தான் இருக்கறது எந்தக்கட்சியா இருந்தாலும் அதை உதறிட்டு வந்து தலைவர் கட்சில சேர்ற தியாகிகளுக்குன்னு அர்த்தம்.

--------------------------------------------------

10.நம்ம தலைவர் பெண்களுக்கு நிறைய உதவிகள்  பண்ணி இருக்காராமே..?

ஆமா, அவரோட சின்ன வீட்டுக்குபெங்களூர்ல ஒரு பங்களா,அவரோட ஆசை நாயகிக்கு ஆக்ரால ஒரு இடம்னு வாங்கிப்போட்டிருக்காரே..

----------------------------------

டிஸ்கி - 1 உலக பதிவுலக வரலாற்றிலேயே முதன் முறையாக நமீதாவை பாவாடை தாவணியில் ஸ்டில் வைத்தது அட்ரா சக்க என்றுதான் நினைக்கிறேன். இதற்காக டீசண்ட் மேன் ஃபிரம் டீசண்ட் ஃபேமிலி விருதை எனக்கு யாராவது தருவதாக இருந்தால் அதை எந்த பிகுவும் இல்லாமல் மனமுவந்து ஏற்றுக்கொள்கிறேன்.

 டிஸ்கி 2 - முதல் ஸ்டில் அவரோட “சின்ன” வயசுல எடுத்தது... 2வது ஸ்டில் அவரோட பெரிய வயசுல எடுத்தது... ஹி ஹி ஹி

Wednesday, February 16, 2011

கலைஞருக்கு மீனவன் எழுதும் கடிதம் ( ட்வீட்ஸ்)

http://www.nakkheeran.in/UltimateEditorInclude/UserFiles/nakkheeran/2009/july/23.07.09/singhalaboat.jpg

1.மீனவன் உயிர் இங்கே ஊசலாடிட்டு இருக்கு...உங்க டி வி ல மானாட மயிலாட ஓடிட்டிருக்கா தலைவரே..


-----------------------------------------------

2.மீன் செத்தா கருவாடு, மீனவன் செத்தா தமிழ்நாடு #கலைஞரின் அடுத்த பட பாட்டுக்கான பல்லவி..?

---------------------------------------------

3.தமிழன் ஒண்ணு தண்ணில மிதக்கிறான் அல்லது பிணமா தண்ணீர்ல மிதக்கிறான் # தமிழ்நாடே சொர்க்கம்டா

----------------------------------

4.
காதலர் தினத்தை நாடே கொண்டாடுது..மீனவன் இறந்த தினத்தை நினைத்து நினைத்து தமிழ்நாடு திண்டாடுது..ஆண்டவா.. மறதியை கொடு

---------------------------------------------
5.சாண்டில்யன் கடல் புறா குடுத்து கலக்குனாரு...கலைஞர் கடல் சுறாக்களுக்கு இரை கொடுத்து கலங்க வைக்கறாரு-விடிவு காலம் எப்போ?
 
 --------------------------------------------
 http://1.bp.blogspot.com/_bnhUKdYMdI4/TUO3jaI5gWI/AAAAAAAAAIM/5i1H43ivJbY/s1600/meena.jpg
6.அரசியல்வாதிகள் சீட்டுக்கு நாய் மாதிரி அலையறான்கள்.மீனவர்கள் நாய் மாதிரி சுடப்படுகிறர்கள்.தமிழ்நாட்டின் தேசிய விலங்கு நாய்?

-----------------------------------------


7. தமிழ்நாட்டைத்தான் ஆண்டவனால காப்பாத்த முடியல.. தமிழக எல்லை கடந்த மீனவர்களையுமா?

------------------------------------------

8.இலங்கைத்தமிழன் செத்தான்.. இப்போ மீனவன் சாகறான். கலைஞர்  டி வி ல கண்டு கொண்டேன் கண்டு கொண்டேன்படம் பார்த்துட்டு இருப்பாரோ..?

-------------------------------------

9. ராமன் ஆண்டாலும் ராவணன் ஆண்டாலும் எனக்கு கவலை இல்லை.. ஆனா தமிழன் அநியாயமா மாண்டாலும் கவலை இல்லைன்னு கலைஞர் மாதிரி கமுக்கமா என்னால இருக்க முடியல.


---------------------------------------

10.மக்களுக்காக பாடுபடறேன் பாடுபடறேன்னு சொல்லீட்டு இப்படி மீனவனை பாடாப் படுத்தலாமா? கலைஞரே!

-------------------------------

Tuesday, February 15, 2011

நாடு ஏன் இப்படி குட்டிச்சுவரா போச்சு?

http://img1.dinamalar.com/cini//CNewsImages/NT_180507000000.jpg
1.அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி உறுப்பினர் கார்த்தி சிதம்பரம் பேட்டி: கடந்த தேர்தலில், இலங்கைத் தமிழர் பிரச்னை தான், தேர்தல் முடிவைத் தீர்மானிக்கப் போகிறது என, எதிர்க்கட்சிகளும், ஊடகங்களும் தவறான பிரசாரம் செய்தன. குறிப்பாக, சோனியாவைப் பற்றி, "சிடி' போட்டு அவதூறு பரப்பின. அதையும் மீறித்தான் எங்களுக்கு வெற்றி கிடைத்தது. அதுபோலத்தான், இந்தத் தேர்தலும் இருக்கும். ஸ்பெக்ட்ரம் மீதான ஓட்டெடுப்பாக இது இருக்கப் போவதில்லை.



வழக்கமா கலைஞருக்கு தி மு க காரங்க தானே ஜால்ரா அடிப்பாங்க.. நீங்களுமா?

---------------------------------------------------------------------------------

2.இ.கம்யூ., மாநிலச் செயலர் தா.பாண்டியன் பேட்டி: ஸ்பெக்ட்ரம் ஊழல் சம்பந்தமாக, பல தரப்பினர் கோரிக்கை விடுத்ததின் பேரில் விசாரணை நடத்தியதில், ஊழலில் சம்பந்தப்பட்டவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். ஊழல் சுமத்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க மறுத்து வந்ததை, அரசு ஒப்புக்கொள்ளத்தான் வேண்டும். ஸ்பெக்ட்ரம் ஊழலில் ராஜா, தனக்கு ஆதாயம் தேடிக்கொண்டு சதி திட்டம் தீட்டியுள்ளார்; லஞ்சம் வாங்கி உள்ளார்; லஞ்சம் கொடுத்துள்ளார்; தனக்கு வேண்டிய நிறுவனங்களுக்கு உதவி புரிந்துள்ளார்.

ஆமா.. வேண்டியவங்களுக்குத்தான் உதவி பண்ணுவாங்க... வேண்டாதவங்களுக்கா உதவி பண்ணுவாங்க?ஆனா அண்ணன் இப்போ கம்பி எண்ணுறதைப்பாத்தீங்க இல்ல... பாவம் கட்டு கட்டா நோட்டை எண்ணுனாரு...

-------------------------------------

3. சமூக ஆர்வலர்கள் சாடல் : ம.தி.மு.க., கொள்கை பரப்புச் செயலர் நாஞ்சில் சம்பத் பேச்சு: சட்டசபை தேர்தலுடன், லோக்சபா தேர்தலையும் சந்திக்கும் அவசரம் வந்துள்ளது. இந்த ஊழலால் தி.மு.க., தொண்டனே அவமானப்பட்டு நிற்கிறான். கோர்ட் மட்டும் இல்லாதிருந்தால் நாட்டை விற்றிருப்பர். இலவச வீடு வழங்கும் திட்டத்தில், கொடுக்கப்படும் பணத்தில், கழிவறை கூட கட்ட முடியாது. ஓட்டுக்கு பணம் கொடுத்தாலோ, வன்முறையில் இறங்கினாலோ சும்மா இருக்க மாட்டோம். காலை 7 மணிக்கே சென்று ஓட்டு போட்டு விடுங்கள். இல்லாவிட்டால், மற்றவர்கள் போட்டு விடுவர்.

தி மு க தொண்டன் அவமானப்பட்டு நிக்கறான், ஓக்கே. தி மு க தலைவனுங்க யாரும் அவமானப்படலையே...ராசாவை தூக்கில் போட்டாக்கூட நம்ம கலைஞரு “ ஒருவரை தூக்கில் போடுவதால் மட்டுமே அவர் குற்றவாளி ஆகி விட மாட்டார்”னு முரசொலில எழுதப்போறாரு.

--------------------------------------------------


4. காங்கிரஸ் கட்சித் தலைவர்களை விமர்சித்ததற்காக, "சஸ்பெண்ட்' செய்யப்பட்டுள்ள தி.மு.க., பேச்சாளர் வாகை முத்தழகன் பேட்டி: கருணாநிதியிடம் அவர் மகன்கள் கூட நம்பிக்கை வைக்க மாட்டார்கள்; தொண்டர்கள் நம்பிக்கை வைத்துள்ளனர். அவர்களில், நானும் ஒருவன். தலைவர் என்பவர் உண்மைகளை விசாரித்து, நடவடிக்கை எடுக்க வேண்டும். கூட்டணிக்காக என்னை பலிகடா ஆக்கிவிட்டார். குறையுள்ளவன் தான் மாற்று முகாம் தேடிப் போவான்; என்னிடத்தில் நிறைகள் தான் அதிகம்.

எல்லாம் இருந்து என்ன பண்றது? ஜால்ரா அடிக்கத்தெரியலையே...வாலி, வைரமுத்துவெல்லாம் பாருங்க.. என்னமா ஜால்ரா அடிச்சு பொழப்பை ஓட்டறாங்க..விசுவாசமா இருந்தா மட்டும் போதாது... கேக்கறவங்க காது கூசுற அளவு ஜால்ரா அடிக்கனும்.அப்பத்தான் கழகத்துல முன்னேற முடியும்.

-------------------------------------------------------------


5எழுத்தாளர் நாஞ்சில் நாடன் பேட்டி: உலக மக்கள் பிரச்னை எல்லாம் தமிழன் எழுதியிருக்கிறான். ஆனால், தமிழர்கள் பிரச்னை என்று வந்தால், பிறமொழி எழுத்தாளர்கள் யாருமே பெரிதாக கவலைப்படவுமில்லை; எழுதவுமில்லை. நவீன படைப்பு இலக்கியவாதிகள் ஈழம் குறித்து பதிவு செய்யத் தவறிவிட்டனர்

அவங்களுக்கு அதுக்கெல்லாம் எங்கே டைம் இருக்கு...?தேகம் பற்றிய சந்தேகங்களுக்கு நாவல் எழுதவே நேரம் சரியா இருக்கு.
அப்படியே மீறி எழுதுனாலும் மீறி மீறி போனா 100 புக் விக்கும்.அது பதிப்பக வாடகைக்கு கூட கட்டாது.. 100 டிகிரி, திருப்பூர் பனியனும்,அருப்புக்கோட்டை அகிலாவும்னு நாவல் எழுதுனா 2 லட்சம் புக் விக்குது
 
  --------------------------------------------------
 http://narumugai.com/wp-content/uploads/2010/10/Sameera_Reddy1.jpg
6.தமிழக காங்., எம்.எல்.ஏ., யசோதா: எனது தொகுதியில் உள்ள ஆதனூருக்கு பாலம் தேவை என, அ.தி.மு.க., ஆட்சியிலும் கேட்டேன்; கிடைக்கவில்லை. இந்த ஆட்சியிலும் ஐந்தாண்டுகளாக தொடர்ந்து கேட்டு வந்தேன்; கிடைக்கவில்லை.

உங்களை யாரு கலைஞர்ட்ட டைரக்ட்டா கேக்க சொன்னது? நீரா ராடியா கிட்ட சொல்லி இருந்தா வாங்கற கமிஷனை வாங்கிட்டு ஆக வேண்டியதை பார்த்திருப்பாங்க... இன்னும் பச்சப்புள்ளயாவே இருந்தா அரசியல்ல குப்பை கொட்ட முடியாது.

-----------------------------------------------------


7.தமிழக சிறைத் துறை அமைச்சர் துரைமுருகன்: புழல் சிறையில், நாடாவால் தூக்கு போட்டு, ஒரு கைதி இறந்துள்ளார். இந்த மரணம் தொடர்பாக அரசுக்கு சந்தேகம் ஏற்பட்டுள்ளதால், விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. "இதுபோன்ற சம்பவங்கள் தொடரக் கூடாது' என, அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

நல்லா விசாரிச்சு பாருங்க . அந்த தூக்கை போட்டதே அந்த ஜெயிலராத்தான் இருப்பான்.நீங்க சொல்றது எப்படி இருக்குன்னா  ராசாவிடம் இனி ஊழல் பண்ண வேணாம்னு அறிவுறுத்தி உள்ளேன்னு நம்ம தன்மானங்கெட்ட தலைவரு சொன்ன மாதிரி இருக்கு.

--------------------------------------

8முன்னாள் மத்திய அமைச்சர் அன்புமணி: நம் வீட்டு பிள்ளைகள், சினிமாவை நம்பி ஓடுகின்றனர். நடிகரின் கட்-அவுட்டுக்கு பால் ஊற்றுகிறான்; பால் இல்லை என்றால் பீர் ஊற்றுகிறான். அவன் ஹீரோவுக்கு பிடித்தது பீர்; அதனால் அதை ஊற்றுகிறான். இது கேவலமான கலாசாரம்.

நீங்க சொல்றது கரெக்ட்தான். ஆனா 2011 எலக்‌ஷன்ல யார்கிட்டே பிச்சை எடுக்கலாம்?கலைஞரா? ஜெ-வா?ன்னு இன்னும் முடிவு பண்ணாம பச்சோந்தி மாதிரி மாத்தி மாத்தி குழப்பறாரே.. அந்த கேவலமான கலாச்சாரத்துக்கு இது மோசம் இலை.

-----------------------------------------------------

9. தமிழக அரசின் துணை மானியக் கோரிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள விவரம்: அரசுக்கு தமிழ்நாடு மின்சார வாரியம் செலுத்த வேண்டிய மின்வரி மற்றும் மின்வரி மீதான தண்ட வட்டித் தொகை 1,235 கோடியே 13 லட்சம் ரூபாய், மின் வாரிய பங்கு மூலதனமாக மாற்றப்பட்டுள்ளது.

நல்லா விசாரிங்கப்பா.. கடைசில கலைஞர் டி வி நிர்வாகம் கணக்குல அதை வரவு வெச்சிருக்கப்போறாங்க..

---------------------------------------------
10. நடு நிசி நாய்கள் படம் பல கலாச்சார சீரழிவுகளை உள்ளடக்கியது. படம் வந்தால் பல சர்ச்சைகளை சந்திக்க நேரிடும். - இயக்குநர் கவுதம் மேனன்


அப்போ சீன் எடுக்கும்போதே வேணும்னே தான் எடுத்திருக்கீங்க...தமிழ்க்கலாச்சாரம் எக்கேடு கெட்டா என்ன? உங்களுக்கு கல்லா நிரம்புனா சரி...
--------------------------------------------

டிஸ்கி -1  சமீரா ரெட்டியின்  முதல் ஸ்டில்லுல அவர் சரியா ஏன் தலை சீவலை? அவரோட 2வது ஸ்டில்லுல அவர் போட்டிருக்கற செயின் நல்லா தெரியுது.. ஆனா டாலர் சரியா தெரியலன்னு யாராவது கவலைப்பட்டா நான் கடுப்பாயிடுவேன் . ஹி ஹி .

டிஸ்கி -2  - நாடு குட்டிச்சுவர் ஆகறது இருக்கட்டும்.. நீ ஏன் இப்படி குட்டி சுவரா இருக்கேன்ன்?னு கேக்கறவங்களுக்கு நாடு எவ்வழி குடிமகன் அவ்வழி.. ஹி ஹி

காதலர் தினத்தன்று நடந்த காமெடி கலாட்டாக்கள்

http://sports.dinamalar.com/SportsImages/news02_29.jpg
1. சொர்க்கத்துக்கான டெம்ப்பரவரி பாஸ்வோர்டு - ஐ லவ் யூ டியர்.பர்மணெண்ட் பாஸ்வோர்டு - எனக்கு ஆளே கிடையாது.. எப்பவும் ஃபிரீ.

-----------------------------------------------------

2. லவ்வர் கிடைக்காதவங்க எல்லாம் கேப்டன் ஃபார்முலாவை ஃபாலோ பண்ண வேண்டியதுதான்.-# யாருடனும் கூட்டணி கிடையாது.

----------------------------------------

3. ஒருமை, பன்மை - இலக்கண குறிப்பு வரைக. ஒரு ஃபிகரை மட்டும்வெச்சே லைஃப் லாங்க் ஓட்டிடறது ஒருமை.... ஹி ஹி

------------------------------------------

4. டியர், நீ என்ன கலைஞரா? நான் என்ன மீனவனா? செத்தாக்கூட கவலை இல்லைங்கறியே.. # புலம்பல்

----------------------------------------------

5. என் காதலியும் சிங்களப்படை மாதிரி.. எல்லையை தாண்டினா கண்ணாலயே (GUN) சுட்டுடுவா..

------------------------------------------
http://sports.dinamalar.com/SportsImages/news01_43_43.jpg
6.காதலிக்கு ரெகுலரா குடுக்கற கிஃப்ட் தான் இன்னைக்கும்.சீப் & பெஸ்ட் முத்தம் தான்  #காசு குடுத்து கிஃப்ட் வாங்க கையாலாகாதோர் சங்கம்.

---------------------------------------

7. பீச்சுக்கு என் தோழியையும் அழைச்சுட்டு வரவா?ன்னு கேட்ட காதலி கிட்டே நோ சொல்லீட்டேன்.# 1. இடைஞ்சல் 2. என் மனசு தோழி பக்கம் மாறிட்டா?

-------------------------------------

8.பீச்ல ஏகப்பட்ட லவ் ஜோடிங்க போன வருஷம் வந்ததுல 70 % ஜோடி மாறிடுச்சே..? # மாற்றம் ஒன்றே உலகில் மாற்றம் இல்லாதது.

--------------------------------------

9. தியேட்டருக்கு வர்ற லவ் ஜோடிகள்ல நல்ல ஜோடியை எப்படி அடையாளம் காண்பது?கார்னர் சீட்ல உக்காராம ஃபேன் க்கு கீழே உள்ள சேர்ல உக்காந்தா நல்ல ஜோடி.

-----------------------------

10. பீச்சுக்கு வர லேட்டாகும்னா ஒரு மெசேஜ் பண்ணி இருக்கலாமே? - காதலி
இன்னைக்கு SMSக்கு 50 பைசா - கஞ்சக்காதலன்

----------------------------------------

டிஸ்கி - எனக்கு ஸ்போர்ஸ்ல அவ்வளவா ஆர்வமும் நாலெட்ஜூம் கிடையாது.அதனால நிறைய பேரு வருத்தபட்டுட்டாங்க.. விளையாட்டு சம்பந்தமா பதிவே போடறதில்லையேன்னு.. அவங்க வருத்தத்தை போக்கற விதமா 50 % இப்போதைக்கு சானியா மிர்சா படம் மட்டும்,, ஹி ஹி

Monday, February 14, 2011

அடுத்த வாரம் ஆனந்த விகடன்-ல் வரப்போகும் காதலர் தினம் ட்வீட்ஸ்


http://chabrieres.pagesperso-orange.fr/paintings/magritte_lovers_1928.jpg
1. ஆஃபீஸ்ல யாருக்கும் இனைக்கு லீவ் இல்லைன்னு மேனேஜர் சொல்லீட்டாரு.. 8 மணி நேரம் பர்மிஷன் மட்டும் கேட்டுப்பாக்கலாமா? #முயற்சி

----------------------------------------------
2. லவ் ஃபெயிலியர்ஸ் கேஸூங்க யாரும் வருத்தப்படவேண்டாம்.மைனஸ் இண்ட் மைனஸ் பிளஸ் மாதிரி தோல்வியும் தோல்வியும் ஜோடி சேரலாமே? #ஐடியா

-----------------------------------------

 3. காதலர் தினத்துக்கு பச்சை டிரஸ் போடனுமாம். மறந்துட்டேன்,அதுக்குப்பதிலா பச்சை பச்சையா பேசிடலாமா? #டவுட்டு

--------------------------

4. பிட்டுப்படம் ஓடற தியேட்டர் எல்லாம் இனைக்கு காத்து வாங்கும்.பீச்ல, பார்க்ல லைவ் ஷோ பார்க்க லைன் நிக்குது.நான் ரெடி.. நீங்க?

------------------------------------------

5. கள்ளக்காதல் ஜோடியை எப்படி அடையாளம் காண்கறது?துப்பட்டாவால முகத்தை மட்டும் மூடி இருப்பாங்க #உல்லாசங்கோ,உற்சாகங்கோ.

--------------------------------------------------
 https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiPcw8W3LP-oojjN0l1srZzjoP_09FSRZXVGBI5xdj2dBbxp7VWlOFjH73nGkH3UoqrfVJu7UngKMQnBB_76SiyB80ob-uDzXLB5epzg6pzcpLp42byRQbl8VhmI4rRdnEyc24qFmd1bBA/s640/south-indian-aunty-at-chennai-marina-beach-600x450.jpg


 6.  காதலர் தினம்னு ஏன் பேரு? காதலி தினம் ஏன் இல்லை? பொண்ணுங்க தான் ஆள் மாத்துவாங்க#ஆணாதிக்கம் வாழ்க

-----------------------------------------------------


 7. ஆர் கே செல்வமணி இன்னைக்கு வெளிலயே போக மாட்டாரு, ஏன்னா இன்னைக்கு ரோஜாக்கு டிமாண்ட் ஜாஸ்தியாம்# வாழ்க 14

------------------------------------------------

 8.  பீச்ல ஒரு பொண்ணும், 2 பசங்களும் ஜோடியா போனா  அது த்ரீ வே லவ்.ஒருதலைக்காதல் அல்லது தறுதலைக்காதல்#கலியுகம்

---------------------------------------------------

9.  இன்னைக்கு மட்டும் லேட்டா வீட்டுக்கு வந்தா சந்தேகப்படுவேன் - மனைவி.

நேரத்துலயே வந்தா?   ஹி ஹி சந்தோஷத்துல மேல படுவேன்.

-------------------------------------------
10. காதலி உள்ளவன் ஒரே ஒரு ஃபிகரை தள்ளீட்டு போறான்.இல்லாதவன் பல ஃபிகருங்களை கண்ணால அள்ளீட்டு போவான்.

-----------------------------------------------

 டிஸ்கி 1- டைட்டிலுக்கான விளக்கம்.இந்த ட்வீட்ஸ் எல்லாமே நான் எழுதுனதுதான். நான் எழுதுனதை நானே ரசிக்கலைன்னா எப்படி?இதுல எல்லாத்தையும் விகடன்ல செலக்ட் பண்ணாட்டியும் ஒண்ணாவது தேறும்னு நினைக்கறேன்.

டிஸ்கி 2 - மேலே இருக்கற முத ஸ்டில்லுல நான் இல்ல. 2வது ஸ்டில்லுல இருக்கற ஆண்ட்டி ( நான் கரெக்டாதானே சொன்னேன்?- சங்கிலி முருகன்)
யாருன்னும் எனக்கு தெரியாது.. ஹி ஹி

காதல் ரசம் சொட்ட சொட்ட - கவிதை

http://www.myorkutglitter.com/wp-content/uploads/2009/03/love-hurts.gifமருதமலைக்குக்கூட்டிச்செல்லாமலேயே

மயில்தோகையை காட்டிச்சென்ற அவள் கூந்தலுக்கு 

மருதாணியில் அரைத்த தைலம் தடவுவேன்.

மகாபாரதப்போர்க்காலம் கடந்தாலும் அர்ஜூனனின் வில்லுக்கு

மாடலிங்காக இருக்கும் அவள் புருவங்களுக்கு இடையே

மைசூர் சந்தனத்திலகம் இடுவேன்.

ஏழாம் எண்ணைக்கவிழ்த்தாற்போன்ற 

எடுப்பாக இருக்கும் அவள் நாசியில் 

அருண் ஐஸ்க்ரீமின் கோன் மேல் வைக்கும் செர்ரி போல்

மூவுலகமும் மூக்கில் விரல் வைக்கும் வண்னம்

அழகிய மூக்குத்தி இடுவேன்..

காங்கிரஸ் கட்சி போல் பிளவு பட்டிருந்தாலும் 

எப்போதும் இணைந்திருப்பது போலவே மாயத்தோற்றம்

அளிக்கும் அவள் உதடுகளுக்கு மென் முத்தம் எனும் 

உதடு ஒத்தடம் வழங்குவேன்.

மானினம்,மீனினம்,தமிழின் மெல்லினம்

 இம்மூன்றையும் தன் மென்மையில் தோற்கடிக்கும்

அவள் இடையினத்துக்கு 

இல்பொருள் உவமை அணிக்கு 

மிகச்சிறந்த எடுத்துக்காட்டு என பட்டம் அளித்து 

உயிரியல் லேப்பில் ஸ்பெசிமென் சாம்ப்ப்பிளாக (LAB SPECIMEN SAMPLE)

வைத்து அதற்கு தங்க ஒட்டியானம் செய்வேன்.

காலடி பட்டதும் மண்வளத்தை அதிகரிக்கும் 

அவள் பாதங்களுக்கு வெள்ளிக்கொலுசு அணிவிப்பேன்.

(தங்கக்கொலுசு அணிவிச்சா ஆயுள் குறைஞ்சிடுமாம்)
எங்கே இருக்கிறாய்

என் கற்பனைக்காதலியே..?
http://sirippu.files.wordpress.com/2010/02/a21.jpg
டிஸ்கி - 1  : இது கவிதை.. சும்மா படிச்சுப்பாக்காமயே  வழக்கமா போடற மாதிரி யாராவது ஜோக் சூப்பர்னு டெம்ப்ளேட் கமெண்ட் போட்டா நொந்து நூடுல்ஸ் ஆகிடுவேன்.ஹி ஹி 

டிஸ்கி 2 - சனி ,ஞாயிறு நெட் பக்கமே வராதவங்களுக்காக

1.அனகாவின் வர்மம் - சீன் படமா? - சினிமா விமர்சனம் 18

2.தம்பிக்கோட்டை - சந்தானம் காமெடி + மசாலா - சினிமா விமர்சனம்

Sunday, February 13, 2011

THE MECHANIC - ஹாலிவுட் சினிமா விமர்சனம் 18 +


காதலர் தினத்தை முன்னிட்டு கோலிவுட்டில்தான் லவ் சப்ஜெக்ட் படம் எதையும் ரிலீஸ் பண்ணலை,, சரி ஹாலிவுட்டிலாவது ஏதாவது அஜால் குஜால் படம் ரிலீஸ் பண்ணுவாங்களா?ன்னு பார்த்தா அங்கேயும் ஜோடி சுத்தம் # விளங்கிடும். ( காதலர் தினத்தன்னைக்கு சீன் படம் பாத்தா சாமி குத்தமா? # டவுட்டு)

த ட்ரான்ஸ்போர்ட்டர் புகழ் ஹீரோ நடிச்ச மெக்கானிக் தான் கடைசில சிக்குச்சு.ஈரோடு வி எஸ் பி - ஏ சி டி டி எஸ் ல படம் பார்த்தாலே கொண்டாட்டம்தான்.டைட்டில் கிளாமரா இல்லை.  I THINK BETTER AS " THE PROFESSIONAL KILLER" ( இங்கிலீஷ் படத்துல அங்கங்கே இங்கிலீஷ்ல ஒரு லைன் இருக்கனுமாம் # விமர்சன விதி)

புரொஃபஷனல் கில்லரா வர்ற ஹீரோ ஏன்? எதுக்கு?ன்னு கேள்வி கேட்காம மேலிடம் சொல்ற ஆட்களை ஸ்கெட்ச் போட்டு போட்டுத்தள்ளிடற ஆளு .ஒரு இக்கட்டான நேரத்துல தன்னோட ஃபிரண்டையே கொலை செய்ய வேண்டிய சூழல்.அதுக்கான காரணம் முக்கியமான ஒரு ஆளை ஹீரோவோட ஃபிரண்ட் கொன்னுடறதா ஹீரோவோட மேலிடம் சொல்லுது.

ஆனா ஹீரோ தன்னோட ஃபிரண்டை கொலை செய்த பிறகுதான் உண்மை தெரிய வருது, தன்னோட ஃபிரண்ட் கொலை செய்ததா சொல்லப்பட்ட ஆள் உயிரோட தான் இருக்கார். . ஹீரோவோட மேலிடம் சில தனிப்பட்ட காரணங்களுக்காக ஹீரோவை வஞ்சித்து விட்டது.

இப்போ கொலை செய்யப்பட்ட ஹீரோவின் நண்பரின் மகன் ஹீரோவிடமே வேலைக்கு சேர்றாரு. அவருக்கு ஹீரோ தான் அப்பாவைக்கொன்னார்ங்கற விஷயம் தெரிய வர்றப்ப எல்லாப்படத்துலயும் வர்ற மாதிரி ஹீரோவை பழி வாங்க திட்டம் போடறாரு.
திரைக்கதைல என்ன பாராட்ட வேண்டிய அம்சம்னா  வில்லன் டாக்டர் ராம்தாஸ் மாதிரி கூட இருந்தே குழி பறிக்கப்போறாரா? வை கோ மாதிரி எதிர்த்து நின்னு  பழி எடுக்கப்போறாரா? என்ற விஷயத்தை கடைசி வரை சஸ்பென்ஸாவே கொண்டு போனது தான்.


இதே கதையை தமிழ்ல எடுத்திருந்தா ஹீரோவுக்கு ஜோடி, 3 டூயட், அம்மா செண்ட்டிமெண்ட்னு போட்டு கொன்னெடுத்திருப்பாங்க.ஆனா ஹாலிவுட்ல கதை ஒரே நேர் கோட்டுல பயணிக்குது. ஹீரோயின் கிடையாது..(அப்போ மேலே உள்ள ஸ்டில்?அது சும்மா பத்து செகண்ட் சொர்க்கம்.( நன்றி - சுஜாதா)

நம்ம ஊர் பிரேமானந்தா மாதிரி ஒரு கேரக்டர் வருது. போலி மத குரு கேரக்டர். அந்த ஆளை போட்டுத்தள்ளும் சீன் செம விறு விறுப்பு.ஆன்மீகத்துல இருக்கற ஆளுங்க பெண்மீகத்துல -பெண் மோகத்துல கேடிங்க என்பது ஆல் ஓவர் வோர்ல்டுலயும் இருக்கு போல.

http://www.thebuzzmedia.com/wp-content/uploads/2011/01/Mini-Anden-in-The-Mechanic.jpg
மேலே உள்ள ஸ்டில்0- தியேட்டர்லதான் நோட்டீஸ் போர்டுல இருந்தது.. தேடி தேடிப்பார்த்தும் படத்துல காணோம்.பொண்ணுங்க வாசனையே படாம படத்தை ஓட்டுன இயக்குநருக்கு என் வன்மையான கண்டனங்கள்.

படத்தில் தனது தந்தையை கொலை செய்த ஹீரோவிடம் வில்லன் கடைசி நேரத்துல எங்கப்பாவுக்கு ஏதாவது சான்ஸ் கொடுத்தீங்களா? என ஆரம்பித்து கேள்விக்கணைகளாக தொடுக்கும் இடங்களில் செண்ட்டிமெண்ட் டச்

படம் பார்க்கறவங்க ஹீரோ மர்டர் பண்ற அழகையே ரசிச்சிட்டு இருக்கறதால கூடவே இருக்கற நண்பரின் மகன் ஹீரோவைக்கொல்லப்போறாரா? என்ற பதட்டம் தோணவே இல்லை.இது திரைக்கதையில் ஏற்பட்ட மாபெரும் சறுக்கல்.ஏதோ ஜாலியா ஒரு படம் பார்த்தமா? வந்தமா?ன்னு இருக்கறவங்க இந்தப்படம் பார்க்கலாம்.

படத்தில் ரசனையான வசனங்களில் நினைவில் நின்றவைகள்


1.யார் சுட்டாலும் துப்பாக்கி சுடும்.. ஆனா சுட்டது யார்னு மத்தவங்களுக்கு தெரியாமயே சுடறதுதான் புத்திசாலித்தனம்.


2. வீல் சேர்ல இருக்கறவனை சுட்டுக்கொல்றவன் எப்படிப்பட்ட கோழையா இருப்பான்,,?

3. வாழ்க்கைல எப்பவும் மனசு சொல்றதை கேளு.. சரியோ தப்போ அதுதான் பெஸ்ட்டா இருக்கும்.அதை ஃபாலோ பண்ண தயங்கக்கூடாது.

4.முடியாதுன்னு நீ எப்பவும் சொல்லக்கூடாது.. எதையும் முடிக்கறவன் நீ...

5. இன்னைக்கு நான் சாத்தானை சந்திக்க விரும்பறேன்.. 

இந்த ஊசியை போட்டுக்கிட்டா நீங்களே சாத்தானா ஆகிடுவீங்க.. ( விஷ ஊசி)

வழக்கமான ஹாலிவுட் ஆக்‌ஷன் படங்களில் வரும் கார் சேஸிங்க் சீன்கள்,டமால்,டுமீல்,இதிலும் உண்டு. எதுவும் ஓவர் டோஸ் ஆகி விடாமல் சரியான கலவையில் தந்த இயக்குநருக்கு ஒரு ஷொட்டு.

டிஸ்கி -

அனகாவின் வர்மம் - சீன் படமா? - சினிமா விமர்சனம் 18 +

 


தம்பிக்கோட்டை - சந்தானம் காமெடி + மசாலா - சினிமா விமர்சனம்

 

அனகாவின் வர்மம் - சீன் படமா? - சினிமா விமர்சனம் 18 +



லேடீஸ் ஹாஸ்டலில் வார்டன் அஜாக்கிரதையாக இருந்தால் என்ன பின் விளைவுகள் ஏற்படும் என்பதை ஒன்லைனாக வைத்து ஒரு க்ரைம் த்ரில்லர் தர முயற்சி செய்திருக்கிறார் இயக்குநர்.

படத்தின் இடைவேளைக்குப்பிறகு காட்டிய அக்கறையையும்,கவனத்தையும் ,படத்தோட ஓப்பனிங்கல காட்டத்தவறிட்டாரு இயக்குநர்.

ஹீரோ புதுமுகம் அகிலன் சுமார்க்கும் கீழே இவரது நடிப்பு.(புரொடியூசர் பையன் அல்லது ஃபைனான்சியர் பையனோ? # டௌட்டு )

ஹீரோயின் அனகா (இவர் அமலா பால் எனும் அனாகாவுக்கு சித்தி பொண்ணா? #டவுட்டு 2) இவரது நடிப்பு ஓக்கே.. ஆளும் நல்ல ஃபிகராத்தான் இருக்காரு. ( ஆண்களை மட்டம் தட்டறதும், பெண்களை புகழ்றதுமே வேலையா போச்சு)
அது என்னமோ தெரியலை. இப்போ கோடம்பாக்கத்துல ஒரு புது ட்ரெண்ட் பரவிட்டு இருக்கு... அது என்னன்னா ஒரு பொண்ணு டிரஸ் மாத்தறதை செல்ஃபோன் மூலமா படம் பிடிச்சு மிரட்டி அவளை அடி பணிய வைப்பதும், அந்த வில்லனை சம்பந்தப்பட்ட பொண்ணோட ரிலேஷன் பழி வாங்கறதும் .. சமீபத்தில் ஹிட் ஆன யுத்தம் செய் முதல் ஈசன் வரை நிறைய உதாரணங்கள் சொல்லலாம். ( எல்லாருக்குமே ஏதோ ஒரு இங்கிலீஷ் படம் இன்ஸ்பிரேஷன் போல)

ஆனா ஒரு விஷயத்தை பாராட்டனும். உல்டா பண்றவங்க , காப்பி அடிக்கறவங்க எல்லாருமே அவங்கவங்க ஸ்டைல்ல திரைக்கதைல அமைச்சு புது கதையோன்னு ஒரு பிரமையை ஏற்படுத்திடறாங்க.

படத்தோட ஓப்பனிங்க்ல வர்ற தத்தோம் தகிடதோம் பாட்டு ஓகே ரகம் . ஆனா திடீர்னு அழகி படத்துல வர்ற மாதிரி கிச்சு கிச்சு தாம்பாளம் கியா கியா தாம்பூலம்னு படத்துக்கோ, கதைக்கோ சம்பந்தமே இல்லாம ஒரு பாட்டு வருது.. அது ஏன் வருது? எதுக்கு வருதுன்னு யாருக்கும் தெரில..

அன்பே எங்கள் அர்த்த சாஸ்திரம் பாட்டு மாமூல் தமிழ் சினிமா க்ளிஷே காட்சிகள் அடங்கிய டூயட் பாட்டு.

போலீஸ் ஆஃபீசர் ஹீரோவோட பெற்றோர்ட்ட விசாரணை பண்றப்ப அவங்க உதார் விடறதும், எகத்தாளமா பேசறதும் ஓவர். சும்மா முறைச்சாலே போலீஸ் பின்னி எடுக்குது.. அப்படி எதிர்த்து பேசியும் சும்மா விடுவாங்களா? என்ன?
சும்மா சஸ்பென்ஸுக்காக ஹீரோயின் தான் கொலைகாரியோ என்ற எண்ணத்தை ஏற்படுத்த இயக்குநர் கையாண்ட முயற்சி படு தோல்வி. இடைவேளை போடறப்ப ஹீரோ தான் கொலை காரன் கற ட்விஸ்ட்டை கொடுத்ததா மனப்பால் குடித்த இயக்குநருக்கு ... எத்தனை  தமிழ்ப்படங்கள் பார்த்திருகோம் பாஸ்?

ஒளிப்பதிவு, பின்னணி இசை எல்லாம் படு சுமார். ஆனா போஸ்டர் டிசைன் அமைச்சவர் ஏதோ சீன் படமோ என்கிற எண்ணத்தை ஏற்படுத்தும் விதமா செம ஜோரா கிளாமர் ஸ்டில்ஸ்...(. # நம்புங்க நான் சீன் படம்னு நினைச்சு போகலை)

ஹீரோவின் ஹவுஸ் ஓனர் மனைவியாக வரும் ஃபிகர் நல்ல ஷேப் ( ரொம்ப முக்கியம்). ஆனா அவருக்காக ஹீரோ ஒரு கொலை பண்றது ஓவர்.

சென்சார் போர்டு படத்தை பார்க்காமலேயே சர்ட்டிஃபிகேட் குடுத்துட்டுட்டாங்களா?ன்னு சந்தேகப்பட வைக்கும் வசனங்கள்
1 நம்ம கிட்டே இருக்கற பொண்ணுங்க எல்லாம்  M C A

அதென்ன M C A ?

மெடிக்கல் சர்ட்டிஃபிகேட் வாங்குனவங்க... பயம் இல்லாம எஞ்ஜாய்


2. ஹீரோயின் - ஒரு கிளாசை கூட ஒழுங்கா பிடிக்கத்தெரியலையே ..இவனுக்கெல்லாம் மேரேஜ் பண்ணி வெச்சா என்ன பண்ணப்போறானோ தெரியலையே..?

3.  டேய்.. முடியாது முடியாதுன்னு சொல்லீட்டே ஆளாளுக்கு பிக்கப் பண்ணிடறாங்களே..?

4.  ஹீரோயின் - டேய்.. சூப்பர்டா.. நல்லாதான் வேலை செய்யறே... என் வீட்டு வேலைக்காரன் கூட இப்படி சூப்பரா துணி துவைச்சிருக்க மாட்டான்.

5. ஏய்.. பொண்ணு.. மறந்துட்டியா..? நீ கூட ஆரம்பத்துல இப்படித்தான் கத்துனே..இப்போ ரசிகர் மன்றமே வைக்கற அளவு கஸ்டமரோட எண்ணிக்கை பெருகலை..?

6. வில்லன் - எனக்கு எதிரா பொண்ணுங்க கோஷம் போடறாளுகளா?ஒண்ணும் பயப்படத்தேவை இல்லை. இன்னைக்கு இங்கே கத்தறவங்க நாளைக்கே கத்திரிக்கா விலை ஏறிடுச்சுன்னா அங்கே போயிடுவாங்க..
மக்களுக்கு மறதி ஜாஸ்தி..
படத்தில் ஏகப்பட்ட அபத்தங்கள்

1. ஹீரோயின் பஸ் ஸ்டாப்பில் நின்று கொண்டிருக்கும்போது அங்கே வரும் ஹீரோவால் சேறு ஆகிடுது.. உடனே வழக்கமா பொண்ணுங்க என்ன பண்ணுவாங்க?திட்டுவாங்க.. அல்லது கம்முன்னு விட்டுடுவாங்க. ஆனா நம்ம ஹீரோயின் ( கவனிக்கவும் # நம்ம ஹீரோயின் ) என்ன பண்றாங்க..?

ஹீரோவோட ரூமுக்கே போய் அவங்களோட எல்லா டிரஸ்ஸையும்  (#அண்டர்லைன் எல்லா) கழட்டி ஒரு பெட்ஷீட் போர்த்திக்கிட்டு ஹீரோ கிட்டே என் டிரஸ் எல்லாத்தையும் நீயே  துவைங்கறா?
இப்படி யாராவது கேனத்தனமா நடந்துக்குவாங்களா?

2. பழி வாங்கற ஹீரோ பெண் வேஷம் போட்டு ஏன் கொலை பண்றார்?அது தேவையே இல்லையே.நைட்டு பெண் மாதிரி கொலை பண்றவர் காலைல மீசையோட இருப்பது எப்படி? (# கேசவர்த்தினி ஹேர் ஆயில் அவ்வளவு வேகமான முடி வளர்ச்சியை தருதா? # டவுட்டு)

3.லெடீஸ் ஹாஸ்டல்ல ஒரு ஆண் பெண் வெஷம் போட்டு ஒரு நைட் தங்கறதும், அங்கே ஹால்ல 8 பேர் வரிசையா படுத்திருக்கறப்ப
ஒரு பொண்ணு கிட்டே போய் கட்டிப்படிக்கற மாதிரி ஃபோட்டோ எடுத்துக்கறதும் நடைமுறைல சாத்தியமே இல்லாத விஷயங்கள். ( #லேடீஷ் ஹாஸ்டல் போய் செக் பண்ணுனவன் மாதிரியே பேசறானே..?)
மொத்தத்துல 2 மணி நேரப்படத்துல உருப்படியான ரெண்டே விஷயங்கள்
1. ஹீரோயின் 2 . ஹவுஸ் ஓனர் ஒயிஃப் ( ரெண்டுமே நல்ல உருப்படிகள் தான் )
 
இந்தப்படம் எல்லா செண்ட்டர்களிலும் 7 நாள் தான் ஓடும்.
 
ஆனந்த விகடன், குமுதம் எல்லாம் இந்தப்படத்துக்கு விமர்சனம் போட சான்சே இல்லை..
 
டிஸ்கி -1 மேலே உள்ள ஸ்டில் சிந்து சம வெளி புகழ் அமலாபால் எனும் அனாகா. மற்ற ஸ்டில்களில் உள்ளவர் அனகா.. 2 பேரும் ஒருத்தர்தானோ? எனது சந்தேகத்தை தீர்த்து வைப்பவருக்கு 1000 பொற்காசுகள்... ம்ஹூம் 1000 நன்றிகள்
 
டிஸ்கி 2 -