Saturday, February 12, 2011

தம்பிக்கோட்டை - சந்தானம் காமெடி + மசாலா - சினிமா விமர்சனம்

படத்தோட டைட்டிலையும், போஸ்டர் டிசைனையும் பார்த்து இந்தப்படம் தேறாதுன்னு நினைச்சுட்டு உள்ளே போனா ஷாக் சர்ப்பரைஸ்.. சந்தானம் காமெடி படத்தோட முதல் பாதியை காப்பாத்திடுது....

உன்னைப்போல் ஒருவன் கமல் மாதிரி கெட்டப்ல சந்தானம் மொட்டை மாடில நின்னுக்கிட்டு  சிம் மாத்தி மாத்தி ஃபிகருங்களோட கடலை போடறது  நல்ல ஓப்பனிங்க்....

ஹீரோ சித்திரம் பேசுதடி,அஞ்சாதே நரேன்.. பாக்க பாவமா இருக்கார்...(சம்பளம் சரியா தர்லை போல)விஷால் கால்ஷீட் கிடைக்காம இவரைப்பிடிச்சுட்டாங்களோன்னு யோசிக்க வைக்குது கதையோட ஒன்லைன்.

காலேஜ் படிக்கற ஹீரோ சொந்த ஊரை விட்டு வேற ஒரு ஊருக்கு போறாரு ( மலைக்கோட்டை உல்டா)அங்கே ஹீரோயினை பார்க்கறாரு. லவ் பண்றப்ப ஒரு தாதா ,தாதாவோட தங்கை ( இவரும் ஒரு தாதாவே) 2 பேரையும் சமாளிச்சு எப்படி கைப்பிடிக்கறாரு? அப்படிங்கறதுதான் திரைக்கதை.. ( திமிரு உல்டா)...

இந்தக்கதை போதுமா? இன்னும் கொஞ்சம் வேணுமா? அப்படிங்கற மாதிரி ஃபிளாஷ்பேக்ல பிரபு 4 சீன் வர்றார்..

அக்கா கேரக்டர்ல மீனாவைப்பாக்க சங்கடமா இருக்கு.( நமக்கு பொண்ணுங்களைப்பார்த்தாலே ஒரு இரக்கம் வந்துடுது.. ஹி ஹி )அக்கா தம்பி பாசத்தை போட்டு பிழி பிழின்னு பிழிஞ்சு எடுத்திருக்காரு டைரக்டரு.
ஹீரோயின் பூனம் பஜ்வா.. (இதுவரை ஏனோ தானோன்னு விமர்சனம் படிக்கறவங்க நிமிந்து உக்கார்றாங்க  # ஞான திருஷ்டி)).பசுமையான இலை தழைகளோட கொத்தா வாங்குன ஊட்டி கேரட் மாதிரி அவ்வளவு ஃபிரஷ்...(சைட் அடிக்கறப்பக்கூட சைடு டிஷ் ஞாபகம் ).. பார்ட்டி நல்ல ஃபிகர்தான்.. ( நாம எந்தக்காலத்துல பொண்ணுங்களை குறை சொல்லி இருக்கோம்? # ஷெல்ஃப் ஷொட்டு)

ஹீரோ - ஹீரோயின் சந்திக்கற முத சீன்ல ஹீரோயின் தடுக்கி விழுந்து ஹீரோ மேல படர்ந்து கிஸ் அடிச்சுடறாரு...( நல்லா யோசிக்கறாங்கய்யா சீனு). நரேன் பூனம் பஜ்வாவிடம் தனது காதலை வெளிப்படுத்தும் சீன் செம செயற்கை.அதே போல் ஹீரோயின் அறிமுக காட்சியில் வரும் பாடலில் டான்ஸ் மாஸ்டர் இன்னும் மெனக்கெட்டிருக்கலாம்.

ஹால் டிக்கெட்டை தொலைத்த ஹீரோயின் காட்டும் பதட்டம்,டென்ஷன் எல்லாம் ஓவர் ஆக்‌ஷன். ( நாமதான் அப்பாயிண்ட்மெண்ட் ஆர்டரே தொலைஞ்சாலும் கண்டுக்காத ஆள் ஆச்சே...). ஆனால் அந்தக்காட்சியில் கோட்டை விட்டவர் கோயிலில் சிவப்பு  - சிவப்பு கலர் காம்பினேஷனில் தேவதையாக வரும் சீனில் மனதை அள்ளி சரிக்கட்டி விடுகிறார்.( அந்த ஷாட்டில் நல்லா டைட் க்ளோஷப் ஷாட் வெச்சிருக்கலாம் # ஜஸ்ட் மிஸ்ஸு.)
பெண் தாதாவாக வரும் சங்கீதா ஓவரோ ஓவர் ஆக்டிங்க்.10 சொர்ணாக்கா, 15 நீலாம்பரி கலந்தவனு பில்டப்பு வேற. ஆனா அவர் சேலையை கிராமங்களில் ஆண்கள் லுங்கியை தூக்கிக்கட்டுவது போல் கெண்டைக்கால் தெரிய தூக்கிக்கட்டுவது செம கிளு கிளு (நீ பார்க்கும் மொக்கைப்படத்தில் கூட எதிர்பாராத விதமாக சக்க சீன் இருக்கலாம் மிஸ் பண்ணிடாதே # மனசாட்சி )

இந்த பட விமர்சனத்துக்கு தேவையே இல்லாத ,ஆனா நமக்கு(!!??) தேவையான ஒரு சீன்.தாதா சங்கீதா காலை வேலைக்காரப்பொண்ணு அமுக்குது. அப்போ , “ஏய்.. முழங்காலுக்கு மேலே வராதே.. என் புருஷனே அங்கே எல்லாம் வந்ததில்லை...  ( தியேட்டர்ல ஹீரோ அறிமுக சீனுக்கு கூட எவனும் கை தட்டலை.. இந்த சீனுக்கு செம அப்ளாஸ்)

ஹீரோவோட பேரு படத்துல அழகிரின்னு வெச்சதுல ஏதாவது உள்குத்து இருக்கான்னு தெரியல. ஆனா இந்த கான்செப்ட் ஒர்க் அவுட் ஆகிடுச்சுன்னா இனி ஆளாளுக்கு அழகிரி,ஸ்டாலின், உதய நிதி,அப்படி இறங்கிடுவாங்களோன்னு பயம்.
மாமூல் மசாலாப்படத்தில் பார்த்த மால் வசனங்கள் ( காமெடி)

1. ஏன் எல்லாப்பொண்ணுங்களுக்கும் எஸ் எம் எஸ் அனுப்பிட்டு இருக்கே?

சந்தானம் - பேச ஆசைதான். ஆனா செல்லுல பேலன்ஸ் இல்லை.10 பைசாதான் இருக்கு.

2.  டேய்.. உன்னைப்பார்த்தா என் வயிறு எரியுது..

சந்தானம் - ஏன் ..ராவா குடிச்சியா?

3. டே.. நல்லா கேட்டுக்கோ.. நான் எழுதியே தர்றேன்.. நீ ஃபெயில் தான்.

சந்தானம்  - சார்..நீங்க எழுதிக்குடுத்தா நான் கண்டிப்பா ஃபெயில் தான் ஆவேன். நான் வேற நல்ல ஆள் வெச்சுக்கறேன்.

4. காலேஜ் லெக்சரர் - ராமாயணத்துல மொத்தம் ஆறு காண்டம் இருக்கு..

சந்தானம் - டே மாப்ளை நேத்து நீ வாங்கிட்டு வந்த காண்டம் பாக்கெட்ல 3 தாண்டா இருந்தது.. கடைக்காரன் உன்னை ஏமாத்தீட்டானா?

5. பேங்க், போஸ்ட் ஆஃபீஸ் இங்கே தான் லஞ்ச் டைம் போகக்கூடாது.. ஆனா ஃபிரண்ட் வீட்டுக்கு சாப்பாட்டு டைம் தான் போகனும்.. அதான் நம்ம ஃபிரண்ட்ஷிப் ரூல்ஸ்..

6. சந்தானம்  - ஏம்மா.. அக்கா.. உன் தம்பி போருக்கா போறான்..?இங்கே இருக்கற ஊருக்கு டூருக்குத்தானே போறான்.. எதுக்கு ஆரத்தி எல்லாம் எடுத்து ஓவர் பில்டப் தர்றே,..?

7. போலீஸ் பாதுகாப்போட பெட்ஷீட் போர்த்தி படுத்திருக்கற அந்த ஆள் யாரு?

 டேய்.. அது டெட் பாடிடா...

அய்யய்யோ.. யார்டா அது ..பட்டப்பகல்ல கொலை பண்ணுனது?

சந்தானம்  - மாலைக்கண் வியாதிக்காரனா இருப்பான்..

8. வில்லன் - என் மேல இன்னும் 19 கேஸ் நிலுவைல இருக்கு.. வக்கீல் சரி இல்லை. பேசாம வக்கீலைப்போட்டுத்தள்ளீட்டு அதை 20 கேஸ் ஆக்கிடலாமா?

9. சின்ன வீட்டுக்கு இருக்கற மரியாதை பரம்பரை வீட்டுக்கு இருக்கறதில்லையே அது ஏன்?   ( அது மரியாதை இல்லை.. கிளு கிளுப்பு # படத்துல வராத பிட்டு)

10.வில்லன் - இந்தாங்க கோயிலோட சாவி.. பொழுது சாஞ்சா உடனே என் கைக்கு சாவி வந்தாகனும்.

சந்தானம்  - ஏன் உங்களுக்கு காக்கா வலிப்பு நோய் இருக்கா?

11. இதோ இங்கே உக்காந்து பிச்சை எடுத்துட்டு இருக்கே இந்தப்பொண்ணு தான் கோயிலோட ரிசப்ஷனிஸ்ட்..இந்தப்பொண்ணைத்தாண்டி ஒரு பய உள்ளே வந்துட முடியாது..அதோ காசை எண்ணிட்டு இருக்கே ஒரு தறுதல.. அவன் தான் கேஷியர்.. பிச்சைக்கார நாயிங்களா..

12, ஆர்த்தி  - என்னால இப்போ கோயிலை விட்டு வெளில வர முடியாது...

சந்தானம்  - ஏன்?

 ஏன்னா இப்போ சுண்டல் தர்ற நேரம்.

13.சந்தானம்  - அதென்னடா எல்லாப்படத்துலயும் நீங்க வில்லனோட பொண்ணையே லவ் பண்ரீங்க.. ஊர்ல எத்தனை பொண்ணுங்க இருக்கு...?

14.  ஒரு வருஷம் உன் பின்னாலயே சுத்துனேன் நாய் மாதிரி.. 

நான் என்ன வோடஃபோன் கனெக்‌ஷனா?

15. சந்தானம்  - நீ கனகா மடில படுக்கனும்கறதுக்காக நான் கவர்மெண்ட் ஹாஸ்பிடல்ல நான் படுக்க முடியாது.. 

16. லவ் பண்றவனை ஃபிரண்டா வெச்சுக்கிட்டா அவன் தூக்க மாத்திரை சாப்பிட்டுத்தான் படுக்கனும் இல்லைன்னா தூங்க விடமாட்டானுங்க..

17. சந்தானம்  - என்னது முருகரை விநாயகர் கும்பிடுது?

ஆர்த்தி - 108 தடவை ஸ்ரீராம ஜெயம் எழுதி ஆஞ்சநேயர் மேல சாத்தறேன்..

சந்தானம் - அதை எழுதுனதுக்கு பிட் எழுதி இருந்தாக்கூட பாஸ் ஆகி இருப்பே..?

18. திருவிழாங்கற கான்செப்ட் ஏன் வந்துது தெரியுமா?

ஊர்ல மாசாமாசம் ரேப் நடக்கும். ஊர்ப்பெருசுங்களுக்கு அது பொறுக்கல.. இனி வருஷம் ஒரு தடவை மட்டும் தான் அதெல்லாம் நடக்கனும்கறதுக்காகத்தான் திருவிழாவையே கண்டு பிடிச்சானுங்க..

19..சந்தானம்  -  மேடம் .. உங்க செயினை விட்டுட்டு போறீங்களே...

ஆர்த்தி - விளையாடாதீங்க.. அது யானையைக்கட்டற சங்கிலி.

20.ஆர்த்தி - அவங்கப்பாவுக்கு மேட்டர் தெரிஞ்சா பிரச்சனை ஆகிடும்.

சந்தானம் - ஏன் ? உங்கப்பனுக்கு தெரிஞ்சா ஒண்ணும் சொல்ல மாட்டானா?

ஆர்த்தி -  தோலை உரிச்சிடுவார்.

சந்தானம்  - அப்போ சாத்துக்குடிப்பழம் 2 கிலோ வாங்கித்தர்றேன்...உக்காந்து உரிச்சுத்தர சொல்லுங்க..
அப்புறம் படத்தோட க்ளைமாக்ஸ் நெருங்கறப்ப வர்ற தம்பிக்கோட்டை கனகா தாலி கட்ட வரவா பாட்டு அப்படியே அச்சு அசல் கில்லி பட அப்படி போடு பாட்டு நடனத்தின் காப்பி..

ஒரு சீன்ல கரண்ட் போயிடுது.. உடனே எல்லாரும் மெழுகுவர்த்தி பற்ற வைத்து போற மாதிரி வருது.. அவ்வளவு பெரிய மாளிகைல எமர்ஜென்சி லைட்டே இருக்காதா? ஏகப்பட்ட லாஜிக் ஓட்டைகள் படமெங்கும் விரவி இருக்கின்றன,

வித்தியாசமான படம் விரும்பும் தமிழ்ப்பட ரசிகர்களுக்கு இந்தப்படம் சாதா.மற்றபடி மாமூல் மசாலாப்படம்னா ஓக்கே என்பவர்களுக்கு இந்தப்படம் இருக்கும் தோதா.. ( மனசுக்குள்ள இவனுக்கு டி ஆர்-னு நினப்பு) 

படம் ஏ பி செண்ட்டர்ல தலா ஒரு மாசம் ஓடிடும். சி  செண்ட்டர்ல 15 நாட்கள் ஓடிடும்.

எதிர்பார்க்கும் ஆனந்த விகடன் மார்க் - 40

எதிர்பார்க்கும் குமுதம் ரேங்கிங்க் - ஓக்கே

டிஸ்கி 1 - படத்துல முக்கிய கேரக்டர்களா வர்ற பிரபு - மீனா ஸ்டில்ஸ் ஏன் போடலை? ஏன்னா அட்ரா சக்க யூத்துங்களுக்கு மட்டும் இடம் தரும் ஹி ஹி

டிஸ்கி 2

பிரகாஷ்ராஜ்-ன் பயணம் - ஹைஜாக்





தமிழ்வாணன் -ன் நந்தி - கிராமத்துக்காதல் -
 


 

தமிழ்வாணன் -ன் நந்தி - கிராமத்துக்காதல் - சினிமா விமர்சனம்

கல்லூரி ஹீரோ அகில், ரேணிகுண்டா ஹீரோயின் தனுஷா, கள்வனின் காதலி இயக்குநர் தமிழ்வாணன் ( எஸ் ஜே சூர்யா - நயன் தாரா) மூவரும் சேர்ந்த கூட்டணியில் உருவாகி இருக்கும் ஒரு கிராமத்துக்காதல் கதை தான் இந்த நந்தி..சப் டைட்டிலா வணங்கி செல்னு எதுக்கு போட்டிருக்காங்கன்னு கடைசி வரை தெரியவே இல்லை..

படத்துல முக்கியமா  குறிப்பிட்டு சொல்லியே ஆகவேண்டிய கேரக்டர் ஹீரோவின் அப்பாவா வர்றவர்.. செமயான ஆக்டிங்க்.ஒரு கிராமத்து அப்பாவைக்கண் முன் கொண்டு வந்து நிறுத்தி இருக்கார்.இவரும் ,காமெடியன் கம் இயக்குநர் சிங்கம்புலியும் செய்யும் அலப்பறைகள்சிரிக்க வைக்கிறது என்றாலும் இன்னும் மெனக்கெட்டு இருக்கலாம்.

ஹீரோ அகில் போன படத்தை விட அதிக ஷாட்ஸ் வர்றார். தேறிடுவார்.அவருக்கு காதல் காட்சிகளை விட ஆக்‌ஷன் காட்சிகளில் தான் ரொம்ப இண்ட்ரஸ்ட் போல.

ஹீரோயின்  தனுஷா ரொம்ப பிஞ்சு முகம்.ரேனிகுண்டால பார்த்ததை விட இதுல கொஞ்சம் அழகு கம்மிதான்.. காரணம் ஒளிப்பதிவாளர் + கேரக்டர்.
அவர் டூயட் காட்சிகளில் கொஞ்சம் ஓவர் ஆக்ட் பண்றார். ஜோதிகா ரசிகை போல.
படத்தோட ஓப்பனிங்க் சாங்கா வரும் சங்கு சக்கர சாமி வந்து சிங்கு சிங்குனு ஆடுச்சாம் செம டப்பாங்குத்துப்பாட்டு. ஆனால் அதற்கான நடன தாரகைகள் (குரூப் டான்சர்ஸ்) ரொம்ப முத்தல் முகங்கள் ( முகம் மட்டுமா?).

வத்தலான தேகமா இருந்தாலும் சரி, முத்தலான முகமா இருந்தாலும் சரி தமிழன் ரிஜக்ட் பண்ணிடுவான்கறதை தமிழ் இயக்குநர்கள் புரிஞ்சிக்கிட்டா தேவலை.சூப்பரா டான்ஸ் ஸ்டெப் போடற இந்த 35 + களை விட ,தட்டுத்தடுமாறும் 16 + களை  டான்ஸ் ஆடப்போட்டா கண்ணுக்கு குளிர்ச்சியா இருக்கும்..

பாடல் காட்சிகளில் ஒளிப்பதிவாளர் இன்னும் கொஞ்சம் சிரத்தை எடுத்து பண்ணி இருக்கலாம்.மயங்கினேன் மயங்கினேன்  பாட்டும்,தண்ணிக்குள்ளே தீப்பிடிச்ச பாட்டும் நல்ல மெலோடீஸ்.


காதலன் - காதலி வில்லன்னு குண்டுச்சட்டிலதான் குதிரை ஓட்டி இருக்காரு இயக்குநர். இன்னும் சுவராஸ்யமான சம்பவங்கள். திருப்புமுனைகளை திரைக்கதைல சேர்த்திருக்கலாம்.ஏன்னா காதலர்கள் அல்லாதவர்கள் இந்தப்படத்தை பார்க்க பொறுமை தேவை.

ஹீரோயினோட அப்பா திடீர்னு நல்லவர் ஆகறது நம்பற மாதிரி இல்லை.ஹீரோ அடிக்கடி “ என் பொறுமையை சோதிக்காதே “ன்னு வில்லன் கிட்டே பஞ்ச் டயலாக் பேசறாரு. அது ஆடியன்சுக்கா?வில்லனுக்கா? # டவுட்டு
வசனகர்த்தா வசன விருந்தை பந்தி பரிமாறியதில் நினைவில் நின்றவை

1. காலம் மாறிடுச்சு.. மாட்டுக்கு இங்கிலீஷ் மருந்து.. மனுஷனுக்கு கஷாயமா..? ஹூம்...

2. அப்பா.. வாப்பா.. அம்மா தண்ணி அடிக்கக்கூப்பிடுது.. இந்தா குடம்.

சிங்கம்புலி - போடா.. நான் தண்ணி அடிக்ககூப்பிட்டா மட்டும் அவ வர மாட்டேங்கறா...அவ மட்டும் கம்பெனி தரமாட்டா.. நான் தரனுமா?

3.ஹூம்  , விஞ்ஞானம் வளருது.. விவசாயம் வளர மாட்டேங்குது..

4. டேய்... நியூஸ் பேப்பரை பிரிச்சா.. பொம்பளை ஃபோட்டோ மட்டும் பாருங்கடா...நியூஸைப்படிச்சிடாதீங்க..

5. இந்த ஊர்ல டீக்கடை வெக்கறதுக்கு பாகிஸ்தான்;ல போய் பஞ்சு மிட்டாய்க்கடை வைக்கலாம் போல...

6.டேய்.. வராதவங்க நம்ம வீட்டுக்கு வந்திருக்காங்க.. கடைக்கு போய் கலர் வாங்கிட்டு வா..

சிங்கம்புலி - அவங்களே ஒரு கலரு.. அவங்களுக்கு ஒரு கலரா?

7. எல்லா உறவுகளும் ஒவ்வொரு கட்டத்துல விலகிடும்.ஆனா எப்பவும் விலகாத உறவு காதல் மட்டும்தான்.

8. ராத்திரி ஆனா பொண்டாட்டி கிட்டேயும், பகல்ல ஊர்க்காரங்க கிட்டேயும் என்னால பதில் சொல்லவே முடியல்ல... கேள்வி கேட்டே கொன்னெடுக்கறாங்க


9.உன்னை முதலாளி வேலையை விட்டுத்தூக்குனது ஓக்கே.. உனக்கு வேற வேலை கிடைச்சுடும். ஆனா என்னை ஏன் வேலையை விட்டுத்தூக்குனாரு? எனக்கு எப்படி வேற இளிச்சவாய முதலாளி கிடைப்பாரு?

10. நம்ம பொண்ணு ஆசைப்பட்டதை எல்லாம் வாங்கி குடுத்துட்டோம்.அவ ஆசப்பட்ட பையனையும் அவளுக்கே கல்யாணம் பண்ணி வெச்சா என்ன?

11. நல்ல காரியம் நடக்க இருக்கறது சந்தோஷம் தான். ஆனா கைல காசே இல்லை. எப்படி கல்யாணத்தை நடத்துவேன்?

சிங்கம்புலி - பணம்தான் பிரச்சனையா?என் பொண்டாட்டி கழுத்துல அநாவசியமா 20 பவுன் செயின் தொங்கிட்டு இருக்கு, அதை அபேஸ் பண்ணிடறேன்..

பொதுவாகவே கோடம்பாக்க இயக்குநர்கள் படத்தின் திரைக்கதை மீது நம்பிக்கை குறைந்தால் படத்துக்கு ஒரு அனுதாப பார்வை கிடைப்பதற்காக க்ளைமாக்ஸில் தேவையே இல்லாமல் ஹீரோவயோ, ஹீரோயினையோ சாகடித்து விடுகிறார்கள்.

கதை அனுமதிக்காத போது இந்த மாதிரி ஆண்ட்டி க்ளைமாக்ஸ் வைப்பது எவ்வளவு பெரிய தவறு என்பதை அவர்கள் உணர இந்தப்படத்தின் தோல்வி ஒரு பாடமாக இருக்கும்.

ஏ பி சி செண்ட்டர்களில் சராசரியாக 20 நாட்கள் தான் ஓடும்.

ஆனந்த விகடன்ல இந்தப்படத்தோட விமர்சனம் போடறது டவுட்தான் அப்படி போட்டா மார்க 37.

குமுதம் ரேங்க்கிங் - சுமார்

டிஸ்கி- 3வது ஸ்டில்லில் ஹீரோயின் அழகாக தெரிவதற்காக கூட இருக்கும் தோழிகளை மொக்கை ஃபிகர்களாக தேர்ந்தெடுத்த இயக்குநரின் ஐடியாவை பாருங்க..

diSki 2 - பிரகாஷ்ராஜ்-ன் பயணம் - ஹைஜாக் ஆக்‌ஷன் - சினிமா விமர்சனம்

Friday, February 11, 2011

பிரகாஷ்ராஜ்-ன் பயணம் - ஹைஜாக் ஆக்‌ஷன் - சினிமா விமர்சனம்



மொழி,அபியும் நானும் போன்ற நெஞ்சை நெகிழ வைக்கும் படங்களை எடுத்த ராதா மோகன் தனது வழக்கமான பாணியிலிருந்து விலகி ஆக்‌ஷன் அவதாரம் எடுத்துள்ள படம் பயணம்.
தீவிரவாதியின் விடுதலை கோரி ஒரு விமானம் கடத்தப்படுகிறது.பயணிகளின் தவிப்பு,அதிகாரிகளின் மீட்பு நடவடிக்கைதான் திரைக்கதை.

நாகார்ஜூன் தெலுங்கில் சூப்பர்ஸ்டார் ஆக இருந்தாலும் இந்தப்படத்தில் அண்டர் ப்ளே ஆக்டிங்க் செய்திருப்பது வரவேற்கத்தக்கது.ஆனால் பாடி லேங்குவேஜ்ஜில் அவர் காட்டிய மிடுக்கை கொஞ்சம் கெட்டப்பிலும் காட்டி இருக்கலாம்.நேஷனல் செக்யூரிட்டி கார்டாக வரும் அவர் க்ளோஸ் ஹேர் கட் பண்ணி இருந்தால் கூடுதல் கம்பீரம் சேர்த்திருக்கும்.படத்தில் அவருக்கு ஜோடி ஏதும் இல்லை என்பது டூயட்டை வெறுக்கும் பார்ட்டிகளுக்கு நிம்மதி.


படத்தின் தயாரிப்பாளர் என்பதற்காக படம் முழுக்க வர வேண்டும் என்ற சில்லித்தனமான எண்ணம் எதுவும் இல்லாமல் கதை எந்த அளவு அனுமதிக்கிறதோ அந்த அளவு மட்டும் பிரகாஷ்ராஜ் வந்து போவது அழகு
படத்தில் சின்ன சின்ன கேரக்டர்களைக்கூட கவனிக்க வைக்கும் அளவு முக்கியத்துவம் கொடுக்கும் வெகு சில இயக்குநர்களில் ராதாமோகனும் ஒருவர். மனித நேயங்களுக்கும் , உறவுகளுக்கும் மதிப்புக்கொடுக்கும் அவர் இந்த ஆக்‌ஷன் படத்தில் கூட தனது பாணியில் மாறாமல் டைரக்‌ஷன் டச்சை வெளிப்படுத்திய விதம் பாராட்டத்தக்கது.
பயணிகளாக வருபவர்களில் கவனிக்க வைப்பவர்கள் டீலா நோ டீலா ரிஷி, பாதிரியாராக வந்து குணச்சித்திர நடிப்பை வெளிப்படுத்தும் எம் எஸ் பாஸ்கர்,ஷைனிங்க் ஸ்டாராக வந்து கலகலப்பு ஊட்டும் பப்லு என வரிசையாக சொல்லிக்கொண்டே போகலாம்.

இடைவேளை வரை , படம் எதிர்பார்த்த, நமக்கு பழக்கப்பட்ட ஒரே திசையில் பயணிக்கும்பொது, கைதியான தீவிரவாதி விபத்தில் இறந்து விட்டார் என்றதும் திரைக்கதையில் புதிய திருப்பம்.. அதைத்தொடர்ந்து கதையின் போக்கில் ஏற்படும் மாற்றம் நல்ல திரைக்கதை ஆசிரியரின் உத்தியுடன் சொல்லப்படும் ட்விஸ்ட்கள் சபாஷ் சொல்ல வைக்கின்றன.
டம்மி தீவிரவாதியாக வருபவரின் பயந்தா கொள்ளித்தன நடிப்பு கலக்கல் ரகம். கிட்டத்தட்ட கோல்மால் படம் போன்ற KNOT.படத்தில் பாடல்களே இல்லாதது, தீவிரவாதிக்கு குழந்தையிடம் ஏற்படும் அன்பு அன்று அங்கங்கே அழகியல் அம்சங்கள்.

வசனகர்த்தா நம் இதயங்களில் பயணம் செய்த இடங்கள்.


1.டைரக்டர் - சார்.. ஃபைட் சீன் ரெடி பண்ணீட்டேன். நீங்க 50 பேரை அடிக்கற மாதிரி...
ஹீரோ - இப்போ வர்ற பசங்க எல்லாம் 30 பேர் 40 பேரை சர்வ சாதாரணமா அடிக்கறாங்க..நான் அட்லீஸ்ட் 100 பேரையாவது அடிக்கனும்.ரெடி பண்ணுங்க. டவுட்னா கில் பில் ( KILL BILL) படம் பாருங்க.

2. ஊர்ல பல பேர் ஸ்பெல்லிங்க் மிஸ்டேக்கோட தங்களோட பேரை எழுதறாங்கன்னா அதுக்குக்காரணமே உங்களை மாதிரி நியூமராலஜிஸ்ட்ஸ்தான்.
3. சிவாஜி, சிரஞ்சீவி, நிரோத் எல்லாமே கூட்டுத்தொகை 5 வருது.. செம ஃபேமஸ்.
யோவ்,சிவாஜி, சிரஞ்சீவி, ஓக்கே.. எதுக்கு சம்பந்தமே இல்லாம நிரோத் இங்கே வருது..?

மக்கள் மத்தில பிரபலம் ஆகிடுச்சுல்ல?

4.என்னது? தீவிரவாதிங்களா? ஏன்னா..நம்ம ஊர்ல கூட இந்த மாதிரி ஆளுங்க இருக்காங்களா?

ம்.. இருப்பாங்க.. ஏன். இப்போ உங்க வீட்ல இல்ல?

5. இந்தப்படம் ஓடுச்சா?

படம் பூரா ஹீரோதான் ஓடிட்டே இருந்தாரு..படம் ஓடலை.
படம்தான் பார்க்க நல்லாலைன்னா கதை என்னன்னு கேக்கறதுக்குக்கூட நல்லாலையே..?

6. பேசினா தீர்க்க முடியாத பிரச்சனைகள் இந்த லோகத்துல இருக்கோன்னா?

7.இந்தியாவுக்கே இப்போ நேரம் சரி இல்ல. கடக ராசி,, ஏழரை நாட்டு சனி நடக்குது..

ஏழு நாடு கூட ஏதோ ஒத்துக்கலாம். இந்த அரை நாடு... எங்கே..?

8. இந்த கோயில் , சாமி எல்லாம் இல்லைன்னா என்ன ஆகி இருக்கும்?

மக்கள் எல்லாம் ஒழுங்கா இருந்திருப்பாங்க.இருக்காங்காட்டிதான் என் மதம் உன் மதம்னு அடிச்சுக்கறாங்க.

9.இந்தியாவுல 40 கோடி பேர் கழிப்பறை இல்லாம கஷ்டப்படறாங்க.. அதைக்கட்ட வழியைப்பாக்காம இங்கே ஒரு கோயிலை இடிச்சு இன்னொரு கோயிலை எப்போ கட்டலாம்னு டைம் பார்த்துட்டு இருக்காங்க..

10. இன்னும் எத்தனை நாளுக்கு தீவிரவாதிங்க கிட்டே பேசிட்டே இருப்பீங்க?
11.இவனுங்களுக்கெல்லாம் ( அரசியல்வாதிகள்) எலக்‌ஷன் பற்றி மட்டும்தான் கவலை..பயம் எல்லாம், மக்கள் பற்றி கவலையோ ,அக்கறையோ கிடையாது.

12. முடிவு எடுக்க டிலே (DELAY) பண்றதும், தப்பான முடிவு எடுக்கரதும் ஒண்ணுதான்.

13. வியட்நாம் போர் ஒரு முடிவுக்கு வர காரணமா இருந்தது ஒரு ஜர்னலிஸ்ட் எடுத்த புகைப்படம்தான். அதே ஜர்னலிஸ்டாலதான் ஒரு நாட்டின் இளவரசியே அகால மரணம் அடைஞ்சாங்கங்கறதையும் மறந்துடக்கூடாது.( டயானா)
14 . தீவிரவாதி - நம்மோட முதல் எதிரி கண்ணீர், அடுத்தது செண்ட்டிமெண்ட்.

15. கம்ப்யூட்டர் படிச்சு அலுங்காம குலுங்காம அமெரிக்கா போயிடறீங்க.. ஏன் காஷ்மீர் போய் பாருங்களேன்.
16. சார்.. கூல் டவுன்..
உங்களை மாதிரி ஜோசியம் படிச்சிருந்தா கம்முனு உக்காந்திருப்பேன். காந்தியும், கம்யூனிசமும் ,காரல்மார்க்ஸூம் படிச்சுட்டனே.

17. என்னை அடிச்சு ஆக்‌ஷன் ஹீரோ ஆகனும்னு பார்க்காதே.. ஏன்னா என்னை என் மனைவி கூட அடிப்பா.. அவ்வளவு ஏன்? என் 4 வயசு பையன் கூட அடிப்பான்.

18. என் கிட்டே கோவிச்சுக்கிட்டு அம்மா வீட்ல போய் 3 மாசம் இருந்துட்டு வந்துட்டே... ஆனா நான் ஒரு தடவை கூட உன் கிட்டே சாரி கேட்கலையே.. தப்பு சாரி கேட்டிருக்கனும்.

19. மழலை - அங்கிள் நீங்க யாரு? உங்க பேரு என்ன?

பேரே கிடையாது எங்களுக்கு.. நாங்க இறைவனால் படைக்கப்படற போராளிகள்.
கரப்பான் பூச்சிக்கே ரியல் லைஃபில் பயப்படுபவர்தான் சினிமாவில் ஆக்‌ஷன் ஹீரோ என ஒரு வாரு வாரி இருப்பது வெல்டன் ராதா பாரதி என சொல்ல வைக்கிறது.அதே போல் சீரியஸான இந்தக்கதையில் முடிந்த வரை எங்கெல்லாம் காமெடி மசாலாவை தூவ முடியுமோ அங்கெல்லாம் கலகலப்பாய் கொண்டு செல்வது இயக்குநரின் ஸ்பெஷல் டச்.
ஆனால் அதே சமயம் படம் படு சீரியஸாக செல்லும்போது ஆங்காங்கே வரும் காமெடிகள் படத்தின் வேகத்துக்கும், டெம்ப்போவுக்கும் ஸ்பீடு பிரேக்கர் ஆகி இருப்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும்.
எல்லா மனிதரும் நல்லவரே என்ற இயக்குநரின் கான்செப்ட் பிரமாதம் தான் என்றாலும் இவரது படங்களில் வரும் அனைவரும் நல்லவர்களாகவே வருவதும் எல்லாருமே எம் ஏ சைக்காலஜி முடித்தவர் போல் தத்துவம் பேசுவதும் களைய வேண்டிய குறைகள்.

பிருத்வி எனும் பப்லுவை ஆக்‌ஷன் ஸ்டார் ஆக காண்பித்து தமிழ் சினிமா ஹீரோக்களை செம இறக்கு இறக்குனது கலகல.. ( நிஜத்தில் இவரது முதல் படத்துக்கு கால்ஷீட் கேட்டு ஒரு முன்னணி ஹீரோவை அணுகிய போது அவர் நடிக்க மறுத்து விட்டார்.. அந்த கோபத்தைத்தான் இப்படி காட்டி தீர்த்துக்கொள்கிறார்.)

காமெடியில் கை கொடுத்து ஹீரோ அடிக்கும் நக்கல் பஞ்ச டயலாக்ஸ்.
1.நீ அடிக்கடி அடிப்பியே ஒரு பாழாப்போன பஞ்ச் டயலாக்.. அதென்ன?

ரத்தத்துல வேணா பல குரூப் இருக்கலாம்.ஆனா மனுஷங்க எல்லாம் ஒரே குரூப்தான்.

2, நீங்க பார்க்கத்தான் சைலண்ட்.. ஆனா வயலண்ட்..போய் அட்டாக் பண்ணுங்க.

3. தாய்க்கு ஒரு ஆபத்துன்னா ஆம்புலன்சுக்கு ஃபோன் பண்ணுவேன்

ஆனா தாய் நாட்டுக்கு ஒரு ஆபத்துன்னா நானே ஓடிப்போய் காப்பாத்துவேன்..

மொழி,அபியும் நானும் படங்கள் போல எல்லாத்தரப்பு ரசிகர்களுக்கும் இந்தப்படம் பிடித்து விடும் என சொல்லி விட முடியாது.ஆனாலும் தமிழில் இது வரவேற்கத்தக்க ஒரு முயற்சியே..
 
ஏ, பி செண்ட்டர்களில் 40 டூ 50 நாட்கள் ஓடலாம். சீ செண்ட்டர்களில் 15 நாட்கள் ஓடலாம்,
 
எதிர்பார்க்கப்படும் ஆனந்த விகடன் மார்க் - 42
 
எதிர்பார்க்கப்படும் குமுதம் ரேங்கிங்க் - ஓக்கே

diski - தமிழ்வாணன் -ன் நந்தி - கிராமத்துக்காதல் - சினிமா விமர்சனம்


Thursday, February 10, 2011

ஜோக் சொன்னா சிரிக்க மாட்டீங்களா?

https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjiNjiTM-bNET1OTmNeA6oofNKiv9xAEYFLsqfKUHm4z4RbXL_Ws0Xe-05LBdWdi9CBDeK7S2bH7UX4S84SHPn7uXL3A1O4epv1wXFylfPWa7WMvA99JIxgb10x0sZs3lUTYXi4GfsiD6x3/s1600/Thapsi.jpg 
1.எந்தப்படம் ரிலீஸ் ஆனாலும் உங்க பையன்  அன்னைக்கு நைட்டே அந்தப்படத்தை செகண்ட் ஷோ பார்த்துடறான்.

சோம்பேறிப்பையன்.. அன்னைக்கு மார்னிங்க் ஷோவே  பார்க்கறதுக்கு என்ன?


-------------------------------------------

2. தலைவரு ஒரு ஜொள் பார்ட்டின்னு எப்படி சொல்றே?

ரோட்ல ஒரு ஃபிகர் நடமாடிடக்கூடாது... உடனே இந்தப்பொண்ணை நம்ம கட்சில சேர்த்துக்கலாமா?ன்னு கேக்கறாரு..

-------------------------------------------


3.  தலைவலி சரியாக நீங்க கிளாஸ் போடனும்...

டாக்டர்.. ஏற்கனவே கூலிங்க் கிளாஸ் போட்டுத்தானே இருக்கேன்,பத்தாததுக்கு சரக்கும் ஒரு கிளாஸ் போட்டிருக்கேன்.

--------------------------------

4.சிரசாசனம் சொல்லிக்குடுத்த யோகாசன டீச்சரை தலைவர் டச் பண்ணீட்டாராமே...?

ஆமா.. சிரசாசனம் உரசாசனம் ஆகிடுச்சு...

------------------------------------

5.அடிக்கடி நீங்க செல்ஃபோன் யூஸ் பண்ணுவீங்களா?

நோ டாக்டர்... காலைல 6 மணில இருந்து நைட் 12 மணி வரை மட்டும்தான் யூஸ் பண்றேன்.

---------------------------------------------
https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgJFjgTVMzPxo5mad4Zv25VJEGNFgZxu8j036kZzEv4_Zx0GngcB_KRKFky1bSUqIF7MwTTO9qrxxPU1eqMvHlAqPVuhU_lD3D02dyLWeF7WyCPfvbfS72Pw8SclmrLfpQONvJbwun3PbIZ/s1600/tapsi-photos-17.jpg
6.தலைவருக்கு பிறந்த ஊரு பழனி, வளர்ந்த ஊரு திருப்பதி...

அப்போ எப்படியும் மக்களுக்கு மொட்டை அடிக்கப்போறது உறுதின்னு சொல்லுங்க..

----------------------------

7. ஃபீஸ் குடுக்க ஏன் இவ்வளவு டிலே பண்றீங்க?

டாக்டர்.. ஃபீஸை உடனே குடுத்துட்டா நர்ஸ் உள்ளே போயிடுவாங்க.. அப்புறம் நான் யாரை சைட் அடிக்கறது?

--------------------------------------------

8.தலைவருக்கு கேரளாப்பொண்ணுங்க மேல ஒரு கண்ணுன்னு எப்படி சொல்றே?

தமிழ்நாட்ல இருக்கற கட்சி மகளிர் அணித்தலைவி போஸ்ட்க்கு  பாலக்காட்டு ஓமனாக்குட்டியை போடலாம்னு சொல்றாரே...

---------------------------------------

9. வீட்டு வாடகையை எப்போ தர்றதா உத்தேசம்?
சம்பளம் கைக்கு வந்ததும்...

சம்பளம் எப்போ  கைக்கு வரும்?

கேனத்தனமா கேக்காதீங்க... வேலைக்கே இன்னும் போகலை.. எந்த மடையன் சம்பளம் தருவான்.?

--------------------------------------

10. உன் காதலர் சலவைத்தொழிலாளியா?

ஏன் கேட்கறே?

உன் அழகைப்புகழ்றப்பக்கூட வெள்ளாவி வெச்சுத்தான் வெளுத்தாங்களா? நீலம் போட்டு உன்னை அலசுனாங்களா?ன்னு கேனத்தனமா கவிதை எழுதிட்டு இருக்கானே,,?

தல தலயா அடிச்சுக்கிட்டேன் யார் கேட்டா..? இப்போ பாருங்க...

நண்பர் ஒருவர் எனக்கு அனுப்பிய மெயில் இது.இந்தியாவுல ஏன் இவ்வளவு பிரச்சனை இருக்கு தெரியுமா?னு கேட்டு அதைப்பற்றி காமெடியா ஒரு விளக்கம் கொடுத்திருக்காங்க.தேவைப்பட்ட இடத்துக்கு மட்டும் தமிழ்ல மொழி பெயர்த்திருக்கேன்.ஒரு வெளை இதை ஏற்கனவே பார்த்திருந்தால் ரிப்பீட் ஆடியன்ஸாக ரசிக்கவும்.

இந்தியாவின் மக்கள் தொகை 110 கோடி,அதுல 9 கோடி பேரு ரிட்டயர் ஆகிட்டாங்க.37 கோடி பேரு மாநில அரசில் பணி புரிகிறார்கள்.20 கோடி பேரு நடுவண் அரசில் பணி புரிகிறார்கள்.(மத்திய அரசுன்னு சொன்னா டாக்டர் ராம்தாஸ்க்கு கோபம் வந்துடும்.)

2 பிரிவுலயும் யாரும் வேலை செய்யறதில்லை. ஐ டி ல (அதாவது தகவல் தொழில் நுட்பம் எனப்படும் இன்ஃபர்மேஷன் டெக்னாலஜி )1 கோடி பேரு இருக்காங்க.ஆனா அவங்க இந்தியாவுக்காக வேலை செய்யறதில்லை.25 கோடி பேரு ஸ்கூல் ஸ்டூடண்ட்ஸ். 1 கோடி பேரு குழந்தைங்க.(5 வயசுக்கும் கீழ).15 கோடி பேரு வேலை இல்லா பட்டதாரிகள்.1 கோடியே 20 லட்சம் பேரு எப்பவும் ஹாஸ்பிட்டலே கதினு இருக்காங்க.79,99.998 பேரு ஜெயில்ல களி சாப்பிட்டுட்டு இருக்காங்கன்னு ஒரு நிலையியல் புள்ளி விபரம் சொல்லுது.மிச்சம் இருக்கறது நீயும் ,நானும் மட்டும்தான்.நீ  வெட்டியா மெயிலை படிச்சுட்டு ,அதை ஃப்ரண்ட்ஸ்க்கு ஃபார்வர்டு பண்ணிட்டு இருக்கே.நான் மட்டும் தனியா இந்தியாவை எப்படி காப்பாத்தறது?அதான் மடேர் மடேர்னு தலைல அடிச்சுக்கறேன்.
Why INDIA is in trouble.....


Population: 110 crore






9 crore retired 
[][][][][]
37 crore in state Govt; 


20 crore in central Govt. 


(Both categories don't work) 
[][]




1 crore IT professional (don't work for India ) 
[][][][]




25 crore in school 
[][][]




1 crore are under 5 years 




[][]




15 crore unemployed 




[][][]




1.2 crore u can find anytime in hospitals 
[][][][][][]




Statistics says u find 79,99,998 people anytime in jail 




The Balance two are U & Me. 


U are busy " checking Mails /sending fwds.. "..!! 
[][][][][][]












HOW CAN I HANDLE INDIA alone? 


[]



- பி.கு-இது வெறும் நகைச்சுவைக்காக மட்டுமே.யார் மனதையும் புண்படுத்தும் நோக்கில் பதிவிடப்படவில்லை.

Wednesday, February 09, 2011

நல்ல நேரம் VS கெட்ட நேரம்

http://lh5.ggpht.com/_ilb4DaDhZFA/SSHVJH4vz_I/AAAAAAAAA70/DuWpsXHs66w/s800/sel.png
ஒரு மனுஷனுக்கு நல்ல நேரம் எப்போ ஸ்டார்ட் ஆகும்னு யாராலும் சொல்ல முடியறதில்ல.ஆனா ஒவ்வொரு மனுஷனோட வாழ்க்கைலயும், நல்ல நேரமும் உண்டு. கெட்ட நேரமும் உண்டு. சில வருடங்களுக்கு முன்னால கோகுலம் கதிர் என்ற மாத இதழில் காதலர் தினத்துக்கான ஸ்பெஷல் கவிதைப்போட்டி வெச்சாங்க.அதுல கலந்துக்கிட்டு முதல் பரிசு வாங்குனது எஸ் சி கலையமுதன் சுக்கம்பட்டி, சேலம்... அவர் இப்போ சாதாரண கிளார்க் உத்தியோகம்தான் பார்க்கிறார்.2வது பரிசு வாங்குனது நான். அந்த கவிதை தான் இங்கே.. நானும் ஏதோ குப்பை கொட்டிட்டு இருக்கேன்.

பிளாக்ல கொட்டறதை சொல்லலை. ஆஃபீஸ்ல கொட்டற குப்பையை சொன்னேன்.3 வ்து பரிசு வாங்குனவரு தஞ்சை  யுக பாரதி.இப்போ பாடல் ஆசிரியரா சினிமால ஜொலிக்கறாரு.நான் பொறாமைலயோ, ஆற்றாமைலயோ சொல்றதா யாரும் நினைக்காதீங்க..சும்மா ஒரு தகவலா பரிமாறிக்கிறேன்.. அவ்வளவுதான்.
https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgmp8yjwW0hbiU47jvyVN9-5huv_rpmqw9phxpGf0Wu_CJ3ho3ZjNaq9O1peNgY_AkCwhuFV8C4kFjx-kBE6Q4vQBiTblcwHN770QH6OA9Eh8SXQi0o3UxcaPU_1DSSY8MF7pDBuBDZNGmu/s1600/tear-drop-Widescreen+Wallpapers-Angelslover.com.jpg
கவிதைப்போட்டிக்கான தலைப்பு காதல் நேரம்

ஒவ்வொரு முறை வீட்டின் கூரையில்

காகம் வந்து கரையும்போதும்,

காற்றினால் வீட்டின் வாசல் கதவு

லேசாய் ஆடும்போதும்,

பக்கத்து வீட்டில் செருப்பு விடும் சத்தம் கேட்கும்போதும்,

என் வலது கண் துடிக்கும்போதும்

இடது கண் துடிக்காத போதும்,

ரோஜாவோடு குல்கந்து கலந்த வாசம் வீசும்போதும்,

கொலுசு சத்தம் கேட்காத எச்சரிக்கை நடை பாத ஒலியின் போதும்

எட்டிப்பார்ப்பேன்

அவள்தான் வந்து விட்டாளோ என.....

http://in.yimg.com/movies/movietalkies/20080110/18/jodhaaakbar-2008-1b-1_1199969127.jpg
டிஸ்கி - இந்த கவிதைப்போட்டில வின் பண்ணுனவங்களுக்கு வால்கிளாக் பரிசுன்னும், அதை (ரேப் ஸ்பெஷலிஸ்ட்) மன்சூர் அலிகான் தருவார்னும் அறிவிச்சாங்க... 13 வருஷம் ஆகியும் இன்னும் தர்லை...சமீபத்துல ஃபோன் பண்ணி பத்திரிக்கை ஆஃபீஸ்ல கேட்டேன்...எடிட்டர்ட்ட கேட்டு சொல்றோம்னாங்க... ( நான் நினைக்கிறேன்.. ஃபோனை  அட்டெண்ட் பண்ணுனதே அந்த எடிட்டராத்தான் இருக்கும்னு.. ஹா ஹா)