Wednesday, February 09, 2011

நாளைய இயக்குநர் VS சுஜாதா கதைகள் - விமர்சனம்

http://i1.ytimg.com/vi/SXqp9v22yvU/0.jpg 
கலைஞர் டி வி ல வர்ற உருப்படியான புரோகிராம்னா அது நாளைய இயக்குநர்  நிகழ்ச்சிதான்.வளரும் இளம் இயக்குநர்களை ஊக்குவிக்கும்படியா குறும்படங்கள் வாரா வாரம் 4 போட்டு பரிசும் தர்றாங்க.கடந்த 3 வாரங்களா பிரபல எழுத்தாளர்களின் சிறுகதைகளை மையமா வெச்சு குறும்படங்கள் வர்றது வரவேற்கத்தக்க விஷயம்.

1. மழைக்காலங்கள் ( சுபா)  - இயக்கியது அருண்குமார்

ஒரு மனிதனின் வாழ்வில் பல்வேறு கால கட்டங்களில் சந்திக்கும் மழைக்காலத்தை பற்றி கவிதையா சொல்ல முயன்றிருக்கிறார்.கதையா படிக்கறப்ப இருந்த பாதிப்பு குறும்படத்துல வர்லை. பொதுவா இது சகஜமா நடக்கறதுதான்.ஏன்னா எழுத்தாளணின் பேனா எழுதிய விஷயங்களை படிக்கிற வாசகன் தன் கற்பனைக்கேற்றபடி இந்த சம்பவத்தை நினைச்சுப்பாத்துக்கறான்.. அதுவே திரையில் பார்க்கும்போது அவன் நினைச்ச பிம்பத்துக்கும், இயக்குநர் காட்டற பிம்பத்துக்கும் ஒரு இடைவெளி வந்துடுது.அதனாலதான் கதைகள் படங்களாக ஆகும்போது இயக்குநர் இரண்டு மடங்கு எச்சரிக்கையுடன் பணி ஆற்ற வேண்டி இருக்கு.பெட்டர் லக் நெக்ஸ்ட் டைம் அருண்.

2.மஹா என்கிற மாடு   ( சுஜாதா) -இயக்கியது திருப்பூர் ராம்

அமரர் சுஜாதா எழுதுன குதிரை என்ற ஹாஸ்யக்கதையை கையில் எடுத்துக்கிட்ட நண்பர் திருப்பூர் ராம் அடிப்படையில் ஒரு கவிஞர்.கவிதைல கலக்குனவர் காமெடிக்கதைல கை வரிசை காட்டுனது பாராட்டப்பட வேண்டியது.

மூலக்கதைல ஹீரோவை குதிரை ஒண்ணு கடிச்சிடும்.அதனால அவன் சந்திக்கிற பிரச்சனைகளை காமெடியோட சொல்லி இருப்பாரு சுஜாதா.ராம் இந்த கதைல குதிரைக்குப்பதிலா மாடு கடிக்கற மாதிரி கதையை கொண்டு போயிட்டாரு.
https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjdbJ95UT9TueS-YZUZJqLMjHmjSvRwvPQScMPA07KzH1w3qJTU3u4XlJiRVT_wtecPKs-jcN7qn8nmX0vj8a3hhVHi-Svp8CDR5BnrHv_-mDgU0wSHpzhkEC7wA7e-2xRCLClXrDNMUMC6/s1600/Naalaya.jpg
ரசித்த வசனங்கள்

1. டாக்டர்.. என்னை ஒரு மாடு கடிச்சிடுச்சு.. கடிச்சுட்டு முறைச்சுது..

உங்க சதை டேஸ்ட்டா இல்லையோ என்னவோ..?


2. வாடா .. ஜூஸ் கடைக்குப்போலாம்..

சரி.. எனக்கு அருகம்புல் ஜூஸ் குடு...

அடப்பாவி மாடு கடிச்சதுல இருந்து நீ மாடாவே மாறிட்டு வர்றே....

3. சரி,, மாடு கடிச்ச ராசி எப்படி இருக்குதுன்னு போய்பார்ப்போம்..யோவ்.. கிளி ஜோசியரே...எனக்கு ஒரு சீட் எடுத்து ராசிபலன் சொல்லுய்யா..

பரவால்ல .. உங்களுக்கு கோமாதா சீட்டு வந்திருக்கு.

மறுபடியும் மாடா... எஸ்கேப்.....


இந்தக்கதைல மாடு கடிச்சவரோட நண்பனா வர்றவரோட நடிப்பு நல்லாருந்தது.மாடு கடிச்ச நபரோட நடிப்பு ஓவர் ஆக்டிங்க்.இயக்குநர் ஒவ்வொரு சீன்லயும் தடுமாறி இருக்கறது அப்பட்டமா தெரியுது.ஒரு சீன் முடிக்கறப்ப நாம இந்த சீனை பக்காவா எடுத்துட்டோம்னு நம்பிக்கை வரனும். ஆனா ராம் ஏனோ சுஜாதா கதைங்கறதால டென்ஷன் ஆகிட்டார் போல..

ஆனா ஒரு ஆச்சரியம் இந்த படத்துக்குத்தான் முதல் பரிசு கிடைச்சது.

3. குகை ( பி கே பி ) - இயக்கியது மணிவண்ணன்

தொல்பொருள்ராய்ச்சியாளர் தனது நண்பனும், பி ஏவுமான வில்லனை கூட கூட்டிட்டு போறார். போற வழில ஏற்படற வாக்குவாதத்தால வில்லன் ஹீரோவை போட்டுத்தள்ளிடறான்.மறுபடி ரிட்டன் ரயில்ல வர்றப்ப மற்ற ஃபிரண்ட்ஸ் மூலம் தான் கொலை செஞ்சவன் தன்னை நல்ல நண்பனா நினைச்சான் அப்படிங்கற மேட்டர் தெரிஞ்சு குற்ற உணர்ச்சி தாங்காம தற்கொலை பண்ணிக்கறான்.இதுதான் கதை. கதைல பெரிய மைனஸ் நம்பகத்தன்மை கொஞ்சம் கூட இல்லை.

பாராட்ட வேண்டிய ஒரே விஷயம் இந்த 5 நிமிஷ குறும்படத்துக்காக இயக்குநர் ராஜஸ்தான் பாலைவனம் போய் படம் பிடிச்சதுதான்.பொதுவாவே தமிழ் சினி ஃபீல்டுல ஒரு பழக்கம் உண்டு. கதை சரி இல்லைன்னா படம் பூரா ஃபாரீன் லொக்கேஷன்ஸ்ல எடுத்து மைனஸ்ஸை பிளஸ் ஆக்க ட்ரை பண்ணுவாங்க.அதைத்தான் நம்ம மணியும் பண்ணி இருக்கார். ஆனா எடுபடலை.
http://tamil.webdunia.com/entertainment/tvtime/news/0905/07/images/img1090507079_1_1.jpg
4.  அதே முகம் ஆசை முகம் ( சுஜாதா) - இயக்கியது ரங்கநாதன்

2 வெவ்வேறு கால கட்டங்களில் நடக்கும் கதைகள் எந்தப்புள்ளில எப்படி இணையுதுன்னு சொல்ற மேஜிக் ரியலிச கதை.ஒரிஜினல் சிறுகதையின் தலைப்பு ஒரு கதையில் இரு கதைகள்.

சரித்திர காலத்தில் நடக்கும் கதையில் இளவரசியாக நடிப்பவர் சுமார் ஃபிகர்தான். கலக்கலான ஃபிகராக போட்டிருக்கலாம்.( சம்பளம் ஓவரா கேட்டிருப்பாரோ?)அவர் ஷகீலா ரேஞ்சுக்கு லோ கட்  டிரஸ்ஸில் வருவது பாத்திரத்தின் கண்ணியத்தையே குறைத்து விட்டது.அதே போல் லிப்ஸ்டிக்கும் ஓவர் டோஸ்.

2வது கதையில் வரும் இளஞ்சோடிகளின் வாக்குவாதம் அழகு கவிதை.

பளிச் வசன மின்னல்

டியர்.. உன் எண்ணங்கள்ல வண்ணம் (கலர் ) இல்லை.. எல்லாம் பிளாக் & ஒயிட்டாவே இருக்கு.. எனக்கு நீ சரிப்பட்டு வரமாட்டே..

இயக்குநர் ரொம்ப மெனக்கெட்டு பண்ணி இருந்தார்.இதுக்குத்தான் முதல் பரிசு கிடைக்குனு நினைச்சேன்.ஆனா ஹாய் மதன்  2 கதையும் எந்தப்புள்ளில இணையுதுன்னு நீங்க  காட்டவே இல்லைன்னு காரணம் சொன்னார். அவர் சுஜாதாவோட ஒரிஜினல் கதையை படிக்கல போல.

அப்படி காட்ட வேண்டிய அவசியம் இல்ல. ஏன்னா அப்படி ஒரு சம்பவம் நடக்க சான்ஸ் இல்ல. சும்மா பார்வையாளரை திகைப்பில் ஆழ்த்த கணடறியப்பட்ட உத்தி அது.

சரி விடுங்க , ரசனை என்பது மனிதனுக்கு மனிதன் மாறுபடும் தன்மை உடையது.

TASTE DIFFER FROM PERSON TO PERSON.

Tuesday, February 08, 2011

மெக்ஸிகோ நாட்டு சலவைக்காரி ஜோக்ஸ் 18 +


10 வருடங்களுக்கு முன்பு (அய்யய்யோ ஃப்லஷ்பேக்கானு யாரும் ஓட வேணாம்) ஹெர்குலிஸ் என்ற ஆண்கள் மாத இதழில் வெளி வந்த எனது ஜோக்ஸ்.

1.டாக்டர்,எனக்கு ஹெச் ஐ வி (H I V)வைரஸ் இருக்குமோனு பயமா இருக்கு.

ஏன் பயப்படறீங்க?பாசிட்டிவ் திங்க்கிங்க் வேணும்
.
அய்யய்யோ டாக்டர்,ரிசல்ட் பாசிட்டிவ்வா இருந்துடக்கூடாதுனுதான் பயமா இருக்கு.

------------------------------------------
2.என் கணவர் இண்ட்டீரியர் டெக்ரேஷன்ல டிப்ளமோ படிச்சவர்டி.
அதுக்காக ஒவ்வொரு வீடா போய் லேடீஸ் கிட்ட “உங்க பிராவை குடுங்க,புது டிசைன் மாடலா மாத்தி தர்றேன்னு சொல்றதா?”
---------------------------------------
3.மிஸ்,ஒன்றைப்பெறவேண்டும் என்றால் உங்களீடம் உள்ள ஏதோ ஒன்றை இழக்க வேண்டும் அப்டினு பெரியவங்க சொல்லி இருக்காங்க.

டைரக்டர் சார்,சினிமா சான்ஸ் கேட்டா ஏதேதோ புரியாத பாஷைல பேசறீங்க.என்ன வேணும் உங்களுக்கு?நேரடியா விஷயத்துக்கு வாங்க.
 ------------------------------------

4.என்ன விலை அழகே ?னு பாட்டு பாடுனேன் ,அது தப்பா?இந்த மொத்து மொத்திட்டாங்களே?

ஒழுங்கா தமிழ்ல பாடி இருந்தா பிரச்சனையே இல்லை.உன்னை யார் இங்க்லீஷ் ல  வாட் ரேட் பியூட்டினு பாடச்சொன்னது?

 -------------------------------------

5.ஆசிரியர் -உன் வாழ்க்கையில் நடந்த மறக்க முடியாத அனுபவம் ஒன்றை சொல்.

மாணவன் -அனுபவமா?போங்க சார்,அதைப்போய் உங்ககிட்ட எப்படி கூச்சம் இல்லாம சொல்றது?


-----------------------------------




6.டீச்சர் -அறிவியல்பூர்வமான சந்தேகம் ஏதாவது இருந்தா கேள்

மாணவன் -வயாக்ரா-அப்ரிமா எது பெஸ்ட்?

 ------------------------------------

7.செஸ் பிளேயரை கல்யாணம் பண்ணுனது தப்பா போச்சுடி.

ஏன்?

முதலிரவுல என்னைப்பார்த்து 10 நிமிஷம் கழிச்சு கன்னத்தை தொட்டாரு,அப்புறம் யோசிச்சாரு,20 நிமிஷம் கழிச்சு உதட்டை தொட்டாரு.ஒவ்வொரு மூவ்க்கும்  அரை மணி நேரம் யோசிக்கறாரு.
-------------------------------
8.அத்தான்,முதலிரவுல போய் இப்படி ஒரு கேள்வி கேட்கறீங்களே,சொன்னா நம்புங்க,இது வரை யாரும் என்னை தொட்டதில்லை.

சும்மா கதை விடாதே,டவுன் பஸ் ல கூட போனதில்லையா?

---------------------------------------
9.சார்,நான் நடிகை பிந்துஸ்ரீயோட ரசிகன்.அவங்களை பார்க்கறதுக்காக ஈரோட்ல இருந்து சென்னை வந்திருக்கேன்.

வெய்ட் பண்ணுங்க,அவங்க பாத்ரூம்ல குளிச்சுட்டு இருக்காங்க.

ஓகே,ரொம்ப நல்லதாப் போச்சு,பாத்ரூம் எங்கே இருக்கு?

--------------------------------

10.குருவே,பெண்கள் விஷயத்தில் நீங்க வீக்னு (WEAK)பேசிக்கறாங்களே?

சிஷ்யா,அதை நம்பாதே,ஸ்ட்ராங்க் (STRONG) தான்,அப்படி இல்லைனா ஆசிரமத்துல இத்தனை பொண்ணுங்களை வெச்சு சமாளிக்க முடியுமா?

------------------------------------

(டிஸ்கி)- மெக்ஸிகோ நாட்டு சலவைக்காரிக்கும் ,நயன்தாராவுக்கும் என்ன சம்பந்தம் என யாரும் கேட்க வேண்டாம்.ஏன்னா  அவரு சும்மா ஒரு கிளாமருக்கு.

ரஜினி நடிக்கும் ராணா - காமெடி கும்மி

http://www.media.desicolours.com/2009/february/Deepika%20Padukone01.jpg 
நம்ம சூப்பர் ஸ்டார் ரஜினியோட அடுத்த படம் கே எஸ் ரவிக்குமார் டைரக்‌ஷன்ல ஏ ஆர் ரஹ்மான் இசைல, தீபிகா படுகோனே ஜோடியாக நடிக்க வரப்போவதா ஒரு நியூஸ் வந்திருக்கு.இதை நியூஸா போட்டா ஏம்ப்பா நீ என்ன நியூஸ் சேனலா நடத்தறே?ன்னு கேப்பாங்க.ஏற்கனவே ஆ ராசா கைது மேட்டரை போட்டதுக்கு கடும் எதிர்ப்பு.அதனால நியூஸை காமெடியாக்கி போட்டிருக்கேன். என்ஜாய்




.1.தலைவர் ரொம்ப அப்பாவின்னு எப்படி சொல்றே?

ரஜினியோட புதுப்படம் ராணா ஷூட்டிங்க் ஈரோடு ராணா கல்யாண மண்டஃபத்துலயா நடக்கும்?னு கேட்டாராம்.


--------------------------------------------------------------------------------------

2.  ரஜினியின் ராணா படத்துல 3 கெட்டப்ஸ் அவருக்கு இருக்காம்.

அட, அதை விடுங்க..அந்த 3 செட்டப்ஸ் யாரு..? ( ஜோடிகள்)

--------------------------------------------------


3. ரஜினி ரசிகர்களிலேயே  நல்ல நேரம் சதீஷ் ரொம்ப தீவிரமானவர்னு எப்படி சொல்றே?

ராணா படம் இன்னும் பூஜையே போடலை.. அதுக்குள்ள எனக்குப்பிடித்த ரஜினி படங்கள் டாப் 10 -ன்னு ஒரு பதிவு போட்டு அதுல ராணாவையும் சேர்த்திருக்காரே,,,

-----------------------------------------------------

4.ரஜினி படங்களுக்கு எப்பவும் யூ சர்ட்டிஃபிகேட்தானே குடுப்பாங்க.?ராணா படத்துக்கு மட்டும்  ஏ சர்ட்டிஃபிகேட்டா? ஏன்?

படத்தோட ஹீரோயின் தீபிகா படுகோனே ஆச்சே?

-------------------------------------------------------------

5. பெண்ணுரிமை இயக்கங்கள் எதுக்கு போராட்டம் பண்றாங்க?

தீபிகா படுகோனே தன்னோட பெயரை தீபிகா உட்கார் கோனே என மாத்தனுமாம்.

--------------------------------------------------
http://wallpapers.oneindia.in/d/126211-6/deepika-padukone08.JPG

6.ராணா படத்துல ரஜினியோட பஞ்ச் டயலாக்கை நெட்ல ரிலீஸ் பண்ணீட்டாங்களாம்.

அப்படியா? என்ன பஞ்ச்?

என் பேரு ராணா.... என்னை எதிர்க்க யாராவது இருக்காங்களா ஆணா?பகைச்சுக்காதே வீணா...

-------------------------------------------------

7.ராணா படத்துல ஒளிப்பதிவாளர் ரத்னவேலுவை நீக்கிட்டு வேற ஆளை போடனும்னு ரஜினி ரசிகர்கள் போராட்டம் பண்றாங்களா? ஏன்?

அவரு வேலு நாயக்கர் ஃபேமிலினு நாயகன்  கமல் ரசிகர்கள் கட்டுக்கதை கிளப்பி விட்டுட்டாங்களாம்.

---------------------------------------------------

8.ரஜினி அரசியலுக்கு வருவார்னு எப்படி உறுதியா சொல்றே?

அரசாங்கமே எனக்கு எதிரானா.... அரசியல் வாழ்வு ஒரு புதிரானா...கலங்க மாட்டான் இந்த ராணா... அப்படின்னு பஞ்ச் டயலாக் பேசி இருக்காராம் ரஜினி.


-------------------------------------------------------

9 ராணா படத்தோட டைரக்டர் கே எஸ் ரவிக்குமாராமே..?

அப்போ படையப்பா நீலாம்பரியா ரம்யா கிருஷ்ணனை நடிக்க வெச்சது மாதிரி
பச்சையாம்பசு வா ரம்யா நம்பீசனை நடிக்க வெச்சுடுவாருன்னு சொல்லு...

----------------------------------------------

10. என்னய்யா இது படம் இன்னும் பூஜையே போடலை ,அதுக்குள்ள படத்தோட கதை என்னுதுதான்னு ஒரு பன்னாடை கேஸ் போட்டிருக்கு?

தவளைங்கறதுக்கு விலங்கியல் பெயர் (ZOOLOGICAL NAME) ரானா ஹெக்ஸாடாக்டைலா. அந்தாளு RANA HEXADACTYLA அப்படிங்கற டைட்டில்ல ஒரு ஆராய்ச்சிக்கட்டுரை சப்மிட் பண்ணி இருக்காரு..சும்மா அவர் பாப்புலர் ஆக அப்படி கேஸ் போட்டிருக்காரு.

Monday, February 07, 2011

மின்சாரக்காதலி - இஷாகோபிகர் நடித்த ஜல்சா பட விமர்சனம் 17 +

http://www.jointscene.com/php/image.php/picmain.jpg?width=350&height=350&image=/ahtees/admin/movies/content/13767_17_Minsara%20Kadhali.jpg
மின்சாரக்காதலி - என் சுவாசக்காற்றே படம் வந்த புதுசல அர்விந்த சாமியை விட  இஷாகோபிகர் தான் அதிகம் பேரால ரசிக்கப்பட்டாங்க..(நாம எந்தக்காலத்துல ஹீரோக்களை ரசிச்சோம்?)அவங்க நடிச்ச ஒரு ஹிந்திப்படத்தை தமிழ்ல டப் பண்ணி இருக்காங்க.

சரி. .. மேட்டருக்கு வருவோம்...(மேட்டரா? யாரு யாருன்னு கேக்கப்படாது..)படத்தோட கதை என்ன?ஒரு பிரபல அட்வர்ட்டைசிங்க் கம் மாடலிங்க் கம்பெனியின் எம் டி...அவர் கம்ப்பெனில நம்ம இஷா மேடம் ரிசப்ஷனிஷ்ட்டா சேர்றாங்க...அப்புறம் அவரோட திறமையைப்பார்த்து (!!??)பர்சனல் அசிஸ்டெண்ட்டா பிரமோஷன் கொடுத்திடறாரு.2 பேருக்கும் ராங்க் கனெக்‌ஷன் ஆகிடுது.அப்பதான் கதைல ஒரு ட்விஸ்ட்.. இஷா மேடத்துக்கு இன்னொரு 25 வயசு இளைஞன் மேல காதல் வருது.. (காசா பணமா? காதல்தானே ,வந்துட்டுப்போகட்டும்)

பா ம க ராம்தாஸ் வெட்கமே இல்லாம தி மு க , அ தி மு க அப்படினு மாத்தி மாத்தி கூட்டணிவெச்சுக்கற மாதிரி இஷா மேடமும் 2 பேர் கூடவும் தெய்வீகக்காதல்ல ஈடுபடறாரு.(2 பேரை லவ் பண்ணுனா அது எப்படி தெய்வீகக்காதல் ஆகும்னு யாரும் கிராஸ் கேள்வி கேக்கப்படாது...)

அப்போ கதைல அடுத்த ட்விஸ்ட் .. கம்பெனி எம் டி க்கு ஒரு பொண்ணு.. அந்தப்பொண்ணு ஒரு பையனை காதலிக்கிறா... (பின்னே.. பொண்ணையே காதலிச்சா ஃபயர் ஆகிடுமே..)அந்தப்பையன் தான் ஏற்கனவே இஷா காதலிக்கற பையன்.
http://www.top10cinema.com/dataimages/300/ish34a.jpg
கே பாலச்சந்தர் பார்த்தா அவமானத்துலயே படம் எடுக்கறதை நிறுத்திடுவாரு.இப்போ கதைல என்ன ட்விஸ்ட்டுன்னா அந்தக்காதலன் திடீர்னு இஷா வை கழட்டி விட்டுடறான்.இஷாவுக்கு கோபம் வந்துடுது.. படையப்பா நீலாம்பரி கணக்கா வெகுண்டு எழுந்து அடைந்தால் அதே காதலன் இல்லாவிட்டால் காலன் அப்படினு சபதம் எடுக்கறாரு.(இடைவேளை ட்விஸ்ட்டாம்).. க்ளைமாக்ஸ்ல என்ன ஆகுதுங்கறதுதான் கதை.


இந்த படத்துக்கு ஏ சர்ட்டிஃபிகேட் எதுக்கு குடுத்தாங்கன்னே தெரியல.சுத்தமா ஒரு சீன் கூட இல்லை. ( அசுத்தமாக்கூட இல்லை)

சீன் படத்தில் வந்த காமெடி காட்சிகள்

1. லட்சக்கணக்கான சொத்துக்கு அதிபதியா வரும் தொழில் அதிபர் பாவம் 2000 ரூபா மொபைல் ஃபோன் தான் வெச்சிருக்காரு.( ரொம்ப லோ பட்ஜெட் படம் போல)

2. புதுசா ஜாயின் பண்ணுன ரிசப்ஷனிஸ்ட் சர்ட் போட்டு ஃபுல்லா கவர் பண்ணி இருப்பாங்க.. நம்ம இஷா வந்து சர்ட் பட்டன் 3 ஐ கழட்டி விட்டுட்டு  மாடலிங்க் கம்பெனினா இப்படித்தான் டிரஸ் பண்ணி இருக்கனும்பாரு..(வாழ்க தமிழ்க்கலாச்சாரம்)

3. நடிகை அசின் மேல என்ன கோபமோ  ஹீரோயின் பேரு அசின் அப்படினு வெச்சிருக்காங்க..( அவங்ககிட்டே கால்ஷீட் கேட்டு கிடைச்சிருக்காது)

4. இஷாவின் கள்ளக்காதலன் பேசும் வசனம் செம காமெடி..

ஆமா.. உங்களை லவ் பண்ணுனது உண்மைதான். இப்போ அவளை லவ் பண்றேன்... என்னைத்தொந்தரவு பண்ணாதீங்க.. முதல்ல உங்க கூட இருந்தது பாவம், இப்போவும் உங்க கூட இருந்தா துரோகம்..( கண்டு பிடிச்சிட்டாருய்யா 
கவர்னரு)

http://dinamani.co.in/Images/article/2009/7/12/13isa.jpg
உலக திரைப்பட வரலற்றிலேயே முதல் முறையாக பிட்டு இல்லாத பிட்டுப்படத்துக்கான வசன அணீவகுப்பு


1. உங்க பொண்ணு தண்ணி அடிக்கறப்ப சரக்குல தண்ணீரை அதிகம் மிக்ஸ் பண்றாங்க..  ராவா அடிக்க சொல்லுங்க எல்லாம் சரி ஆகிடும்.

2.பார்ட்டிங்கறது என்ன? ட்ரிங்க்ஸ் + கிளாமர் இதான்.பொண்ணுங்க உடம்பை ஆம்பளைங்க வேடிக்கை பார்க்கற இடம்.

3. டாடி.. நான் ஒருத்தனை லவ் பண்றேன்.

அவன் எப்படி..?உன்னை மதிரியே அசிங்கம இருப்பானா?

4. சார்.. என்ன சொல்றீங்க?இவங்க உங்க பொண்ணா?

அதுல உனக்கென்னப்பா சந்தேகம்? 


5 கிளைமாக்ஸ் பஞ்ச் - நீ எனக்கு அம்மா முறையா? சக்களத்தி முறையா? நீயே முடிவு பண்ணு..

இந்தப்படம் திருப்பூர்ல 4 தியேட்டர்ல ரிலீஸ் ஆகி இருக்கு.. சீன் படத்துக்கு போகாத ஆளுங்க கூட அடடே 4 தியேட்டர்ல போட்டிருக்காங்களா? அப்போ படத்துல கண்டிப்பா ஏதவது இருக்கும்னு பேசிக்கறாங்க.. ( ஆஹா, என்ன ஒரு நம்பிக்கை)

இந்தப்படத்துல சீன் இல்லைங்கற வரலாற்று உண்மையை பதிவு செஞ்சதால யாராவது எனக்கு ஏதாவது அவார்டு குடுத்தா பிகு பண்ணாம வாங்கிக்க தயாரா இருக்கேன்.. ஹி ஹி

டிஸ்கி -
டிஸ்கி  - சனி, ஞாயிறு நெட் பக்கம் வராதவங்களுக்காக

1.

சகி...நீ நடிக்கறது சகிக்கலை


2. 

தூங்கா நகரம் - சினிமா விமர்சனம்


3. 

யுத்தம் செய் - சஸ்பென்ஸ் த்ரில்லர் - சினிமா விமர்சனம்



4. 

.காதலுக்கு அதிக மதிப்பு தர்றது ஆண்களா? பெண்களா?


5.

ஊழல் இல்லாத பாரதம் உருவாக.

ஊழல் இல்லாத பாரதம் உருவாக.....

https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiEpi5r8QTbHYr0s6BF-g36ZstGVoW65t0bB3MFwNrbK_5y9pMpnfnS25ONXqjUHgDw1aI05DR892bqOntQPYKdVk7XcnfURAz66MekCw35Zvsdt0q15ZhBP3xsLsetpSlR8dypLvrp5x8/s1600/Maalai+Nerathu+Mayakkam+Andrea.jpg
1. இனிமே நைட் டியூட்டி பார்க்க மாட்டோம்னு லேபர்ஸ் எல்லாம் ஸ்ட்ரைக் பண்றாங்களே.. ஏன்?

 டே டியூட்டி பாக்கறவங்க நடு நிசி நாய்கள்னு கிண்டல் பண்றாங்களாம்.

------------------------------------------------------------------------

2.    எக்ஸ்க்யூஸ் மீ மிஸ்... என்னை த்தெரியுதா?

ஸ்டுப்பிட்..

அட.. கரெக்ட்டா ஞாபகம் வெச்சு இருக்கீங்களே..

------------------------------------------------

3. ஆசிரியர் - என் தமிழ் வகுப்புல இனி எல்லாரும் தமிழ்ல தான் பேசனும்..

OK SIR, 100% WE WILL FOLLOW THIS.


-------------------------------------------------------

4.மூன்றெழுத்தில் என் மூச்சு இருக்கும்னு வீரமா பேசாம தலைவர் காதலா பேசறாரே..?

கடமையை மனசுல வெச்சிருந்தா வீரமா பேசி இருப்பாரு.. தப்ஸியை மனசுல வெச்சிருந்ததால காதலா பேசி இருக்காரு.

-----------------------------------------

5.தலைவரே... திடீர்னு நீங்க கூட்டணியை மாத்திக்கிட்டதால மக்கள் உங்களை மானங்கெட்டவர்னு திட்டறாங்க..

இவ்வளவுதானா? நான் என்னவோ ஏதோன்னு நினைச்சேன்..

-------------------------------------------------------

6.  தலைவர் சிவப்பும் இல்ல.. கறுப்பும் இல்ல..என்ன பட்டப்பெயர் வெச்சுக்கப்போறாரு.?

இதென்ன பிரமாதம்? மாநிற எம் ஜி ஆர்னு வெச்சா போச்சு..

--------------------------------------

7.மீனவர்களுக்காக குரல் கொடுங்கன்னு தலைவரை  அப்படின்னு உசுப்பி விட்டது தப்பா போச்சு..

ஏன்?

மகளிர் அணித்தலைவியை பார்த்து கட்டு மரத்துடுப்பு போல இடுப்பை ஆட்டறா..அப்படின்னு  யுத்தம் செய் பட பாட்டை பாடறாரே..?

--------------------------------------

8. என் வாழ்க்கைல உங்களால கறை படிஞ்சிடுச்சு தலைவரே,.. என்னை ரேப் பண்ணீட்டீங்க.. அதனால என்னை மேரேஜ் பண்ணீக்குங்க..

சரி விடம்மா.. கறை நல்லதுன்னு சொல்றாங்களே..

----------------------------------------

9.தலைவர் தனியா நிப்பேன்னு சொன்னதை தேர்தல் கமிஷன் ஏத்துக்கலையா? ஏன்? அது அவங்கவங்க தனிப்பட்ட விஷயமதானே..?

அட நீ வேற ,,.. தொகுதில அவர் ஒரு ஆள் மட்டும்தான் நிக்கனுமாம்.

--------------------------------------

10. தலைவரே.. ஊழல் இல்லாத பாரதம் உருவாக என்ன செய்யனும்?

எல்லா அரசியல் வாதிகளையும் நாடு கடத்திட்டு ஜனாதிபதி ஆட்சி கொண்டு வரனும்...

------------------------------------------------


டிஸ்கி  - சனி, ஞாயிறு நெட் பக்கம் வராதவங்களுக்காக

1.

சகி...நீ நடிக்கறது சகிக்கலை


2. 

தூங்கா நகரம் - சினிமா விமர்சனம்


3. 

யுத்தம் செய் - சஸ்பென்ஸ் த்ரில்லர் - சினிமா விமர்சனம்



4. 

.காதலுக்கு அதிக மதிப்பு தர்றது ஆண்களா? பெண்களா?


Sunday, February 06, 2011

சகி...நீ நடிக்கறது சகிக்கலை

http://keturahweathers.theworldrace.org/blogphotos/theworldrace/keturahweathers/love2.jpg
யதார்த்த உலகம்  நமக்கெதற்கு?

வா, பெண்ணே.. முகமூடியை அணிந்து கொள்வோம்..


மனசு நினைப்பதை உன் கண்கள் சொல்ல

வெளியே வர முட்டுக்கட்டையாய்

உன் மவுனம்...

தினமும் பார்த்தும் பாராதது போல்

உன் அலட்சிய முகபாவம்.

நடைமுறை உலகில்

நாலு பேருடன்

பொய்யாய் சிரித்து செயற்கையாய் நடந்து ...
 http://farm4.static.flickr.com/3214/2746389145_652abe6215.jpg
யதார்த்த உலகம்  நமக்கெதற்கு?

வா, பெண்ணே.. முகமூடியை அணிந்து கொள்வோம்..

உலக அரங்கில

நல்ல நடிகர்கள் என்று பெயர் எடுப்போம்.

Saturday, February 05, 2011

.காதலுக்கு அதிக மதிப்பு தர்றது ஆண்களா? பெண்களா?

https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiR-YzGCgi98zn1Wb9B_SWom7iFynhi7mQ24pX3DwCiX1ffbhExpaDkodb-o3GSjt8ST_QageaHnf8cRVTFtev-fvg-tyA4TxxsAiaM7WSG8i1cbAjutRJ4IUllKeXq2ZLY60yA4K61M5X2/s1600/Thapsi+Desi+Pic+(2).jpg
1.தலைவரே...நாட்டுக்காக இதுவரை என்ன செஞ்சிருக்கீங்க..?

எனக்காகவே இன்னும் செஞ்சு முடிக்கல.....

-------------------------------------------

2.ரவுடின்னு தெரியாம கை மாத்து கேட்டது தப்பா போச்சு..

ஏன்?

செம மாத்து கிடைச்சது..

--------------------------------------------

3.மன்னா.! நம் நாட்டில் ஏழைகளே இல்லாம பண்ணப்போறீங்களாமே..?

ஆம் ,அமைச்சரே... எல்லா ஏழைங்களையும் அண்டை நாட்டுக்கு துரத்தி விட்டுட வேண்டியதுதான்.

-------------------------------------

4.கோதுமைத்தோட்டம் 10 ஏக்கரா  மாப்ளைக்கு இருக்கு..

அப்போ WHEAT டோட மாப்ளைன்னு சொல்லு.. ( WHEAT - வீட் -கோதுமை)

-----------------------------------

5. டாக்டர்.. கீழே விழுந்துட்டேன்..

அடடா.. எப்படி விழுந்தீங்க?

மறுபடி ஒருக்கா விழுந்து காண்பிச்சா மறுபடி அடிபட்டுடுமே.. டாக்டர்.

------------------------------------
http://2.bp.blogspot.com/_MjCKDkRXAD0/SjO0ld6ju2I/AAAAAAAAB2g/hHI2S24M63o/s400/Tamanna.jpg
6.உங்க பையன் சரியான ஜொள் பார்ட்டின்னு எப்படி சொல்றீங்க..?

ஜில்லுன்னு இருக்கற பொருட்களுக்கு உதாரணம் சொல்லுன்னா பெப்ஸி , தப்ஸி அப்படின்னு சொல்லி இருக்கான்.

------------------------------------------------------

7.டாக்டர்.. உங்க கிளினிக்ல கூட்டமே வர்லைன்னாக்கூட கிளினிக்கை மூடிட்டு பியூட்டி பார்லர் ஆரம்பிச்சு பொழப்பு நடத்திக்கலாம்..

எப்படி சொல்றீங்க?


எல்லா நர்ஸூங்களும் சூப்பர் ஃபிகர்ஸா இருக்காங்களே..

-----------------------------------------------------------

8.ஆன்மீகத்துல தலைவருக்கு அவ்வளவு ஈடுபாடா..?ஆலயம் கட்ட ரூ 2 கொடி நிதி உதவி செஞ்க்சிருக்காரே..?

அட நீ வேற .. அவரு நடிகை தமனாவுக்கு கோயில் கட்டத்தானே நிதி உதவி தந்தாரு.?

------------------------------------

9.சார்.. நீங்க எப்போ வேணும்னாலும் எங்க வீட்டுக்கு வரலாம்.. வர்றதுக்கு முன்னே ஒரு ஃபோன் பண்ணி தகவல் மட்டும் சொன்னா போதும்..

எதுக்கு? முன் ஜாக்கிரதையா வீட்டை பூட்டி வெளில கிளம்பத்தானே..?

---------------------------------------

10.காதலுக்கு அதிக மதிப்பு தர்றது ஆண்களா? பெண்களா?

ஆண்கள்தான் மதிப்பு தர்றாங்க.. பெண்கள் மிதிப்புதான் தர்றாங்க..( ஒண்ணா அண்ணனை விட்டு மிதிக்க வெச்சுடறாங்க.. இல்லைன்னா காதலையே மிதிச்சிட்டு டாட்டா காட்டிடறாங்க..)

--------------------------------------------

டிஸ்கி  1- 6 -ம் நெம்பர் ஜோக்கும், 8- ம் நெம்பர் ஜோக்கும் நமக்கு  சொல்ற நீதி என்ன?

டிஸ்கி 2 - நமக்கு நடிகைங்க ஸ்டில்ஸ் போடனும்னு ஆசையா இருந்தா இப்படி வலுக்கட்டாயமா அவங்க பேர் வர்ற மாதிரி ஜோக் ரெடி பண்ணிக்கனும்?

டிஸ்கி 3 - டிஸ்கி 2 நமக்கு  சொல்ற நீதி என்னன்னா நம்ம மைனஸ் பாயிண்ட் எதுன்னு பார்த்து எப்படி கமெண்ட் வரும்னு யூகம் பண்ணி அதை நாமே நக்கல் அடிச்சுக்கிட்டா வெளி ஆட்கள் கமெண்ட் போடறப்ப வேற வழி இல்லாம ஜோக் நல்லர்ருக்கு.. பதிவு சூப்பர்னு கமெண்ட் போட்டுடுவாங்க.. ஹி ஹி ஹி

டிஸ்கி 4 - நீங்கள் ஆவலுடன் எதிர்பார்த்த என் சுவாசக்காற்றே புகழ் இஷா கோபிகர் நடித்த அஜால் குஜால் படமான மின்சாரக்காதலி ப்பார்த்தாச்சு.அதை விமர்சனமா போடறதுல சில சர்ச்சைகள்
இருக்கு. அது பத்தி ஆலோசிக்க இன்று கூடும் ரகசியக்கூட்டத்தில் அட்ராசக்க இணைய தளத்தின் அதிகாரபூர்வமான வக்கீல் நண்டு நொரண்டு ராஜா,சித்தோட்டு சிறுத்தை நல்ல நேரம் சதீஷ்,007 ஜேம்ஸ்பாண்ட் சதீஷ் மூவரும் கூடி முடிவு எடுப்பாங்க

 ..

தூங்கா நகரம் - சினிமா விமர்சனம்

http://www.sivajitv.com/newsphotos/Dina%20mani%20%20ad%20-6%20.jpg
வழக்கமான கிராமத்துக்காதல் கதைதானோ என நினைக்க வைக்கும் ஆரம்பக்கட்ட காட்சிகள் சலிப்பைத்தந்தாலும் இடைவேளைக்குப்பிறகு திடீர் என கதை ட்ராக் மாறுகிறது.அந்த க்ளைமாக்ஸ் ட்விஸ்ட் ஒன்றைத்தான் இயக்குநர் பெரிதாக நம்பி இருக்கிறார் என்பது தெளிவாக தெரிகிறது.

4 நண்பர்களின் அறிமுகமும் ,அவர்களது குறும்புத்தனத்தையும் இன்னும் நல்லாவே சொல்லி இருக்கலாம்.களவாணி விமல் தான் ஹீரோ ,ஆனால் அவர் ஏனோ தானோ என்றுதான் நடித்திருக்கிறார்.அதே போல் திரைக்கதை இடைவேளை வரை ஒரு சீரான இலக்கில்லாமல் காட்டாறு போல , டாக்டர் ராம்தாஸின் கடைசி நேர தேர்தல் கூட்டணி முடிவைப்போல தடுமாறுகிறது.

ட்ரெயிலரில் காட்டப்பட்ட வடிவேல் படத்தில் 10 செகண்ட் மட்டுமே வருகிறார் என்பது ஆடியன்ஸூக்கு முதல் ஏமாற்றம்.அப்புறம் பெஸ்ட் கவுண்ட்டர் டயலாக் மேன் என பெயர் பெற்ற இயக்குநர் கம் காமெடியன் சிங்கம்புலியை சரியாக யூஸ் பண்ணாமல் விட்டது... ( கேட்டால் படத்தில் ஃபுட்டேஜ் பிராப்ளம் .. என சால்ஜாப்பு பதில் ரெடியாக இருக்கும்.)



http://cinema.vikatan.com/index.php?view=image&format=raw&type=img&id=1981&option=com_joomgallery&Itemid=77
அழகு மயில் மாதிரி வரும் அஞ்சலியைக்கூட ஜஸ்ட் லைக் தட் யூஸ் பண்ணி இருக்காங்க. விமல் -அஞ்சலி சம்பந்தப்பட்ட காதல் காட்சிகளை இன்னும் கவிதையாக,டீட்டெயிலாக காட்டி இருக்கலாம்.

படத்தோட கதை என்ன?மதுரையில் 4 நண்பர்கள்.அந்த ஊர்ப்பெரிய மனுஷனோட பையன் ஜவுளிக்கடைல பெண்கள் டிரஸ் மாத்தறப்ப செல்ஃபோன்ல ஃபோட்டோ எடுத்து அந்தப்பெண்களை  மிரட்டறான்.நம்ம ஹீரோ அவனை துவைச்சுக்காயப்போட்டுடறாரு.வில்லனோட அப்பா ஹீரோவை சொந்த விரலாலயே கண்ணை குத்த வைக்கற மாதிரி ஹீரோவோட நண்பர்களை விட்டே அவனை முடிச்சுக்கட்ட முடிவு பண்றாரு..
இந்த KNOT டை கையில் எடுத்துக்கிட்டு இயக்குநர் நம்மை (ஆடியன்ஸ்) முடிச்சுகட்ட முடிவு பண்றாரு.


படத்தோட ஓப்பனிங்க் சீன்ல மதுரையோட அழகை ஒரு ரவுண்டு காட்டறாங்க.. அடடா...அதே போல் ஆவணி மாசம் அத்தை பொண்ணு தாவணிபோட்டா கொண்டாட்டம் தான் செமயான கிராமிய கலை நுட்பங்களை உள்வாங்கி வெளிப்படுத்தும் தெம்மாங்கு கலக்கல் ஹிட். ( நமக்கு அத்தை பொண்ணு தாவணி போட்டாலும் சந்தோசம்தான், போடலைன்னாலும் சந்தோஷம்தான்)

அந்தப்பாட்டில் அஞ்சலியை தன்னோடு ஆடுவதாக ஒருத்தன் கற்பனை பண்றப்ப ( அந்த ஒருத்தன் ஹீரோ அல்ல)  அஞ்சலி பளார் என ஒண்ணு குடுத்து ஏண்டா கனவு சீன்னா எப்படி வேணாலும் கற்பனை பண்ணிக்குவியா? என கேட்டு மலையாள முண்டு சீன் டூ தமிழ் கலாச்சார தாவணி டிரஸ்க்கு மாறுவது இயக்குநரின் நகைச்சுவைத்திறனை வெளிப்படுத்தும் காட்சி.

ஆனால் மார்ச்சுவரியில் வேலை செய்யும் ஒரு நண்பன்  ஒரு சீமந்த விழாவில் ( கர்ப்பமான பெண்ணுக்கு கட்டுச்சோறு விருந்து ஆக்கிப்போடுதல்)அந்தப்பெண்ணை பிணமாக கற்பனை செய்வது ஓவர் டோஸ் காமெடி..அது சூழ்நிலைக்கு சற்றும் பொருந்தாத சீன்.


https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhQaHM9HXgCB6C2Y_j2_aTmKtxD7_xenFxQBH-vecrJgXg8c1M0GSrU-sdLNShoNyeuNs0OuKbhYI_nkxs6gCiMY6MvnHJ8d5p7lt7-MFonZ7Qc97eBB5W50yKm6SbuzEuPdMDuKnnvh2Q/s1600/0+karungali+anjali+hot+stills.jpg
பூவான பார்வைகள், குறும்பான வார்த்தைகள் எனத்தொடங்கும் பாட்டு செம ஹிட் அடிக்கப்போகும் மெலோடி. ஆனால் அந்தப்பாட்டுக்கான பிக்சரைஷேசனில் (PICTURAISATION) இயக்குநர் இன்னும் கவனம் செலுத்தி இருக்கலாம். டான்ஸ் மாஸ்டர் கூட சுமாராகத்தான் அந்த பாட்டுக்கு ஒர்க் பண்ணி இருக்கர்.அந்த பாடலில் அஞ்சலி மட்டும் அழகு தேவதையாக வர்றார்.

வசனகர்த்தா நீங்கா இடம் பிடித்த இடங்கள்

1.இந்த உலகத்துல எல்லாருக்கும் தெரிஞ்ச ஒரு விஷயம் நாம எல்லாருமே ஒருநாள் சாகப்போறோம் என்பதுதான். தெரியாத விஷயம் எப்போங்கறதுதான். அது தெரிஞ்சிட்டா எவனும் நிம்மதியா வாழ முடியாது..

( சாகற நாள் தெரிஞ்சிட்டா வாழ்ற நாள் நரகமாயிடும் வசனத்தின் உல்டா)

2. பொண்ணா இது ?பன்னு மாதிரி இருக்கு.. வேற பொண்ணு ஃபோட்டோ காட்டுங்க.

இது?

வயக்காட்டு சோளக்கொல்லை பொம்மைக்கு சேலை கட்டி விட்டாப்ல ஒல்லியா இருக்கே..?

அது சரி.. இது ஐஸ்வர்யாராய் ஃபோட்டோ..இதையே குறை சொல்றே..

3. நானும் உலக அளவுல  எத்தனையோ குடிகாரனுங்களைப்பார்த்திருக்கேன்.ஆனா சரக்கை ஸ்ட்ரா போட்டு உறிஞ்சறதை இப்போதான் பாக்கறேன்.

4. இவங்க எல்லாம் யாருன்னு தெரியுமா?

பெரிய கலெக்டரா?

ம்ஹூம்,என் நண்பன்,தோழன்.சிநேகிதன்..

மூணும் ஒண்ணுதாண்டா மூதேவி..

5.சரக்கடிக்கப்போறப்ப பாக்கெட்டை காலி ஆக வெச்சிருக்கனும் இல்லைன்னா கண்ட கண்ட நாய்க்கெல்லாம் நாம செலவு பண்ண வேண்டியதா போயிடும்.

6. கில்மாப்படத்துல சீன் போடறவன் கூட இவ்வளவு பில்டப் தர மாட்டான். நீ ஓவரா சீன் போடறே..

7.பொண்ணுங்களை லவ் பண்ணாலே இப்படித்தான் புலம்ப விட்டுடுவாளுங்க..

8.நாங்க ரொம்ப ராசியான ஆளுங்க.. அந்தப்பொண்ணு வயசுக்கு வந்தப்ப நாங்கதான் வந்து வேலை செஞ்சு குடுத்தோம்.. வளைகாப்புக்கும் நாங்கதான், அவ்வளவு ஏன் கருமாதிக்குக்கூட நாங்கதான் வந்தோம்.

9.அவனுக்கு மனைவியா வரப்போறவ ரொம்ப குடுத்து வெச்சவளா இருக்கனும். ஃபிரண்டையே இவ்வளவு கவனமா பாத்துக்கறவன் கட்டிக்கப்போறவளை எவ்வளவு நல்லா பார்த்துக்குவான்?

10  அப்பா.. இந்த 15 வருஷத்துல ஊரே மாறிடுச்சுப்பா...

ஹூம்.. மனுஷங்களும் மாறி இருந்தா பரவால்ல..

11. கலி யுகத்துல கடவுள் இல்ல. அப்படி இருந்தா இப்படி  நான் கஷ்டப்படறதைப்பார்த்து சும்மா இருப்பானா?

நாம 140 கோடிப்பெர் இருக்கோம்.எல்லாத்தையும் ஒரே கடவுளால பாக்க முடியாது. எவன் ஒருத்தன் கஷ்டத்துல உதவி செய்யறானோ அவன் தான் கடவுள். ( தியேட்டரில் அப்ளாஸை அள்ளிய இடம்)

12 . டேய்... டேய்.. அவளை என்னடா பண்றே..?

புது ஹீரோயின் ரெடி பண்றேண்ணே..

அவளையே ரெடி பண்ற மாதிரி இருக்கு..

நண்பர்கள் கொலை வெறியுடன் ஹீரோவைத்தாக்க முயலும் சதி சீன்கள் எல்லாம் எடுபடவில்லை.நட்புக்கு அவமானம்.இந்த இடத்தில் இயக்குநர் சறுக்கி விட்டார். என்னதான் அதற்கான ட்விஸ்ட் இருந்தாலும் .....

படம் ஏ செண்ட்டரில் ஓடறது கஷ்டம் தான். பி செண்ட்டர்களில் 30 நாட்கள், சி செண்ட்டர்களில் 15 நாட்கள் ஓடும்.

எதிர்பார்க்கப்படும் ஆனந்த விகடன் மார்க் - 38

எதிர்பார்க்கப்படும் குமுதம் ரேங்கிங்க் - சுமார்





http://www.icetamil.com/ta/images/stories/janelvn/tamil%20actress%20anjali%20hot.jpga
டிஸ்கி - நேற்று நெட் பக்கம் வராதவங்களுக்காக


யுத்தம் செய் - சஸ்பென்ஸ் த்ரில்லர் - சினிமா விமர்சனம்

Friday, February 04, 2011

யுத்தம் செய் - சஸ்பென்ஸ் த்ரில்லர் - சினிமா விமர்சனம்

http://www.tamilnow.com/movie/images/yutham-sei.jpg

காதல் கதையை எந்த அளவு அழகியல் ரசனையோடு சொல்ல முடியுமோ அதே மாதிரி ஒரு க்ரைம் இன்வெஸ்டிகேஷன் ஸ்டோரியையும் மென்மையாக சொன்னதற்காகவே  இயக்குநர் மிஷ்கின் பாரட்டுக்கு உரியவர் ஆகிறார்.சாஃப்ட் ஹீரோ என பெயர் எடுத்த யதார்த்த நாயகன்  சேரன் இந்த படத்தில் அண்டர் ப்ளே ஆக்டிங்க்கின் எல்லை வரை சென்று அடக்கி வாசித்திருக்கிறார்.

படத்தோட கதை என்ன?சொல்றக்கு தர்மசங்கடமா இருந்தாலும் முடிஞ்சவரை கவுரவமான வார்த்தைகளில்  சொல்றேன்.பெண் சுகத்தை அனுபவிக்க முடியாத 60 வயசு கிழ போல்ட்டுங்க ஆள் வெச்சு பெண்களை கடத்திட்டு வந்து குடோன்ல தங்களோட அடியாளை விட்டு ரேப் பண்ண சொல்லி லைவ் ஷோ பார்க்கறாங்க. அவங்க காரியம் முடிஞ்சதும் கொலை பண்ணிடறாங்க.. பாதிக்கப்பட்ட ஒரு பொண்ணோட பெற்றோர் அந்த கும்பலை பழி வாங்கறாங்க..

கேட்கறதுக்கு சங்கடமா இருக்கற கதையோட ஒன்லைனை இயக்குநர் முடிஞ்சவரை ரொம்ப டீசண்ட்டா சொல்லி இருக்கார்..வெல்டன் ஒர்க்.


படத்தோட ஓப்பனிங்க் ஷாட்ல இருந்தே தன்னோட ஃபேவரைட் டாப் ஆங்கிள் ஷாட்ஸ்,ஒயிடு ஆங்கிள் ஷாட், சிம்பாலிக் ஷாட்னு இயகுநர் அசத்தறார்.சேரன் அறிமுக காட்சி எந்த பில்டப்பும் இல்லாம சாதாரணமா இருக்கறதே நல்லாருக்கு.. ஆனா அவரால ஒரு சி பி சி ஐ டிக்கான தோரணை, பாடி லேங்குவேஜ் இதெல்லாம் மெயிண்ட்டெயின் பண்ண முடியல.உயரம் கம்மி,எக்சசைஸ் பாடி இல்லை.. இருந்தும் இவரைக்களம் இறக்கியது துணிச்சல்தான்




https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEi7coTQrjvLNBH5oGH8bibFpZN41QkoIBUbG4cXKjhlKGbrCN3c7dl9LxPuHlqkCS3XBhAwF7pH_yuUebbzEhk10APpuU8twGXU92I5DDhYsMhqVZdEkkHaL3Vr9DQah7JOSnMqpZYGHmdL/s1600/Yutham-Sei-Poster-3.jpg
சேரன் மேலதிகாரியையோ,சக ஆஃபீசர்ஸையோ மதிக்காம தெனாவெட்டா நடக்கறது விக்ரம் பட கமல் நடிப்பை ஞாபகப்படுத்துது...அப்படி அவர் நட்ந்துக்க காரணம் தன்னோட தங்கை கடத்தப்பட்டதுதான் என்பதை இன்னும் அழுத்தமாக சொல்லி இருக்கலாம்.

அதே போல் ஒரு போலீஸ் ஆஃபீசருக்குண்டான டிரஸ்ஸிங்க்சென்ஸ் என்ன?என்பதை சேரன் சரியாக அப்சர்வ் பண்ணாமல்  இருக்கிறார்
(அன் யூனிஃபார்ம்ல இருக்கறப்ப கட்டம் போட்ட சட்டை போடறது, சட்டையின் முதல் பட்டனை கழட்டி விட்டிருக்கறது...இப்படி..)

படம் போட்ட முதல் 25 நிமிஷங்களுக்கு பின்னணி இசை ஒரு ஆர்ட் ஃபிலிமுக்குண்டான இசை தான். இயக்குநரின் அபார தன்னம்பிக்கை அசர வைக்கிறது.


போலீஸ் என்கொயரி நடத்தும்போது சேரனின் பாடி லேங்குவேஜ் அழகு..அவர் என்கொயரியில் உதவி செய்த சிறுமிக்கு கை கொடுத்து நெகிழ்வது பரவசமான காட்சி.


http://mimg.sulekha.com/tamil/yudham-sei/yudham-sei_m.jpg
எல்லாவற்றையும் விட முக்கியமாக சிலாகித்து சொல்ல வேண்டிய விஷயம் இடைவேளைக்கு முன் வரும் அந்த ஃபைட் சீன் தான்.. நடை பாதை (பாலம்)யில் சேரன் நடந்து வர்றார்.. வில்லன் குரூப் கத்திகளுடன் வர சாதாரணமாக சமாளிக்கும் அந்த சீன் ஃபைட் மாஸ்டர், இயக்குநர்,ஹீரோ,ரீ ரெக்கார்டிங்க் என கலக்கலான காக்டெயில் உழைப்பு.அதுவரை ஒரு இறுக்கத்துடன் செல்லும் படம் அப்போதுதான் முதல் அப்ளாஸை அள்ளுகிறது.

வீட்டுக்குள் கூட சேரன் ஷூ போட்டுட்டே சுத்தறது ஏன்?னு தெரியல.அப்புறம் சில சீன்களில் பிரவுன் கலர் ஷூ போட்டு வரும் சேரன் அடுத்த ஷாட்டில் பிளாக் கலர் ஷூ போட்டு வர்றார். கண்ட்டினியூட்டி மிஸ்ஸிங்க்..

பிரமாதமாக எதிர்பார்க்கப்பட்ட கன்னித்தீவுப்பொண்ணா? கட்டழகு கண்ணா? பாட்டு செம டப்பாங்குத்து... அந்த பாட்டுக்கான டான்ஸ் மூவ்மெண்ட்,குதூகல இசை எல்லாம் கலக்கலாக இருந்தும் அந்தப்பாடல் வலுக்கட்டாய இடைச்செருகல் என்பதால் ஆடியன்சை பிரமாதமாக கவரவில்லை.அது திரைக்கதையின் இறுக்கத்துக்கு கிடைத்த வெற்றி.

அந்தப்பாட்டில் குரூப் டான்சர்கள் டீசண்ட்டாக புடவையில் வருவதும்,அவர்கள் கூந்தலோரம் ஒரு பெரிய பூ சூடி வருவதும் வித்தியாசம்.

அதே போல் என்கொய்ரியின் போது சேரன் டான்ஸ் கிளாசில் டீச்சரிடம் விசாரணை செய்கையில் பின்புலத்தில் தெரியும் ஃபிகர்கள் செம ஃபிரஸ்..( இந்த களேபரத்துலயும் உனக்கு கிளு கிளுப்பு கேட்குது?)

வழக்கமாக ஆங்கில படத்திலும் சரி, தெலுங்கு,தமிழ்ப்படங்களிலும் சரி..வில்லன் குரூப் ஜீப்களில் வந்து இறங்கும்போது காது ஜவ்வே கிழிஞ்சிடும்..ஆனால் இதில் சைலண்ட்டாக காண்பித்தே டெம்ப்போவை ஏற்றுகிறார்கள்.

ஒய். ஜி மகேந்திரனுக்கு வித்தியாசமான ரோல். கேரக்டருக்காக மொட்டை அடிச்சு நல்லா நடிச்சிருக்கார்.அவரது மனைவியாக வருபவர் க்ளைமாக்சில் கத்திக்குத்து பட்டதும் காட்டும் துடிப்பும், ரீ ஆக்‌ஷனும் அபாரம்.

ராஜேஷ் குமார் மாலை மதியில் எழுதிய வானவில்லுக்கு 1000 நிறங்கள் நாவலில் இருந்து சில சீன்கள் சுடப்பட்டுள்ளது. ( ராஜேஷ்குமாரே  எந்த ஆங்கில நாவலில் இருந்து சுட்டரோ?) குறிப்பாக ஒய் ஜி மகேந்திரன் தன் குடும்பத்தில் உள்ளது போலவே உயரம் எடை உள்ள அநாதை பிணங்களை ரெடி பண்ணீ கொளுத்திப்போடும் இடம்..

https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhb8F1TVr_PLW0nfugqv6FoS1mLqXcOYcJK4hR6IlZnowK00yu2BVoMIJk7EaSb7UW6kPhhrl8Yfulied6UYIPBmSWXidoXRSEMnzdunZTh96B15uDHuoHWvdvifkzTEKEM9efzDw39FjM/s1600/yaavarukkum.blogspot.com.jpg
வசனத்துக்கு வேலையே இல்லாத இந்தப்படத்திலும் ஆங்காங்கே தென்பட்ட வசன முத்துக்கள்

1.  அந்தப்பொண்ணு காணாம போயிட்டா....

இல்லை ஊரை விட்டு ஓடிப்போயிட்டா.. காதலனோட போறவ சொல்லீட்டா போவா?


2. கடைசில போலீஸ் விசாரனைல அவன் உண்மையை ஒத்துக்கிட்டான்.

ஒத்துக்கிட்டானா? ஒத்துக்க வெச்சீங்களா?

ம் , ஜட்ஜ்மெண்ட் கொடுத்த ஜட்ஜை போய் கேளுங்க...


3.   அந்தப்பொண்ணுக்கு என ஆச்சு?

ஏம்மா பொண்ணு , உனக்கு எதும் ஆகலையேன்னு சந்தோசப்படு.

4. நான் ஒரு போலீஸ்காரன். இன்னொரு போலீஸ்காரன் கிட்டே தோக்க மாட்டேன்..( அப்போ திருடன் கிட்டே தோத்தா பரவால்லியா?)


5. என் பொண்ணுக்கு என்ன ஆச்சு?

நீங்க பெத்த குழந்தைக்கு குழந்தை பெத்துக்கற உறுப்பு சிதைஞ்சு போச்சு...

6. வன்முறைன்னா என்னன்னே தெரியாத அந்த குடும்பம் வேட்டைக்கு தயார் ஆச்சு..


7. அமைதியான சூழல்ல வாழ்ந்த அந்த குடும்பத்தை அசிங்கமான இடத்துல புதைக்க வேண்டியதா போச்சே..

8. வாழ்க்கைன்னா என்ன? நரகம் தான் வேற எதுவும் இல்ல..(LIFE IIS NOTHING BUT HELL)

9. என் கண்ணுக்கு  அதெல்லாம் தெரியல. எனக்கு என் தங்கை வாழ்க்கைதான் முக்கியம்.

உன் சுயநலத்துக்காக சட்டத்தை அடகு வைக்க சொல்றியா?

10.கொஞ்சூண்டு அறிவை வெச்சுக்கிட்டு இவ்வளவு தப்பு பண்ண ஒருத்தனால முடிஞ்சா  இவ்வளவு அறிவை வெச்சு நாங்க எவ்வளவு பண்ணலாம்?

இயக்குநர் சறுக்கிய இடங்கள்

1. க்ளைமாக்சில் கத்தியால் வில்லனை 4 தடவை இப்படியும் அப்படியும் வெட்டுவது போல் வரும் சீனில் ரத்தம் பக்கெட்டில் இருந்து வருவது போல் வ்ந்துட்டே இருக்கு..

2. ஒரு சீனில் சேரனுக்கு முன் 3 போலீஸ் ஆஃபீசர்ஸூம் கை கட்டி நிக்கறாங்க..

3 ஒரு சீனில் அண்டர் கிரவுண்டில் காலை 6 மணீக்கு கூட்ட வரும் பெண் டெட் பாடியை பார்த்து அளறும் சீனில் மஞ்சள் வெயில் பிரகாசமாக அவ்வளவ் வருமா?

4. ஆரம்ப அறிமுக சீனில் சேரன் தன்னுடன் ஜூனியராக வரும் 2 ஆஃபீசர் பர்சனல் ஃபைலை குப்பைத்தொட்டியில் போடும் சீன்.

இயக்குநர் சபாஷ் வாங்கும் இடங்கள்

1. ஒரு ஆக்‌ஷன் திரில்லர் படத்துக்கு காதல், டூயட், காமெடி எல்லாமே அநாவசியமே என்பதை உணர்ந்து கலக்கலாய் திரைக்கதை அமைத்தது.

2.பல சந்தர்ப்பங்களில் ஃபைட் சீன் வைக்கும் வாய்ப்பு இருந்தும் அவற்றை தவிர்த்து விட்டு  ஒரே ஒரு சீனில் மட்டும் ஃபைட் வைத்தது..

3.பின்னணி இசை புலனாய்வுப்படத்துக்கு எந்த அளவு முக்கியத்துவம் வாய்ந்தது என்பதை உணர்ந்து வேலை வாங்கியது.

4. பெண்களும் பார்க்கும்படி பாலியல் பலாத்கார கொலைக்கதையை எடுத்தது


சி செண்ட்டர் ரசிகர்களுக்கு படம் அவ்வளவாக பிடிக்காது. ஏ செண்ட்டர்களில் 70 நாட்கள் ஓடும் ( ஏப்ரல் 14).. பி செண்டர்களில் 40 டூ 50 நாட்கள் ஓடும்.

எதிர்பார்க்கும் ஆனந்த விகடன் விமர்சனம் மார்க் - 42

..எதிர்பார்க்கும் குமுதம் ரேங்க்கிங்க் - ஓக்கே

டிஸ்கி -

தூங்கா நகரம் - சினிமா விமர்சனம்

எட்டுப்பட்டியும் எள்ளி நகையாடிய ராசா - காமெடி கும்மி

http://www.tamilcnn.com/images/stories/tamilcnn/january2011/india/anchalii.gif 
.1. ஊழல் வழக்குல கைதான தலைவரை எல்லோரும் பாராட்டறாங்களே..?

கைதாகி  24 மணி நேரம் ஆகியும்  அவருக்கு இன்னும் நெஞ்சு வலி வர்லையே..

---------------------------------------

2.கூட இருந்தே குழி பறிக்கறவங்க நம்ம கட்சில ஜாஸ்தினு எப்படி சொல்றீங்க தலைவரே,..?


பின்னே என்னய்யா..?நான் கைதானதும் எல்லாருக்கும் ஸ்வீட் குடுத்து  நம்ம கட்சி ஆளூங்களே கொண்டாடுனா...?

--------------------------------------------------

3 தலைவரோட அலம்பலுக்கு ஒரு அளவே இல்லைன்னு எப்படி சொல்றே,,?

என்னை கைது செய்தது இயற்கைக்கே பொறுக்கலை..அதனாலதான் என்னை அரெஸ்ட் பண்ணுன அதே நாள் ஜப்பான்ல எரிமலை வெடிச்சுதுன்னாரே..?

----------------------------------------

4.தலைவர் எப்பவும் தன்னையும்,தன் குடும்பத்தையும் ஏழையாவே நினைச்சுக்கறார்..

எப்படி சொல்றே..?

இறுதி மூச்சு உள்ளவரை ஏழை மக்களுக்காக பாடுபடுவேன்னாரே...

--------------------------------------------------------------------------------


5.தலைவரே.. நீங்க கைது ஆனதா பேப்பர்ல நியூஸ் பார்த்தேன்,பதட்டமே இல்லாம இருக்கீங்களே..?

விடப்பா.. நாளைக்கே நான் ஜாமீன்ல வந்ததா நியூஸ் வரும் பாரு..

--------------------------------------------
http://www.southdreamz.com/wp-content/uploads/2010/06/neetu-chandra-17a.jpg

6. தலைவரு இப்படி எல்லாம் பெருமை அடிச்சுக்கக்கூடாது...

ஏன்?


சின்ன வயசுல இருந்தே நான் ஊழல் பண்ண ஆரம்பிச்சுட்டேன் அப்படிங்கறாரே?

------------------------------------------------------------

7.கபாலிக்கு லொள்ளு ஜாஸ்தி ஆகிடுச்சு..

ஏன்?

நான் ஒரு தலீத் அப்படிங்கறதாலதான் என்னை லாக்கப்ல போட்டீங்க அப்படின்னு கேட்டு  பிரச்சனையை திசை திருப்பறானே...

-------------------------------------------

8.பாட்டுப்போட்டிக்கு வந்தவன் ரஜினி ரசிகன் போல ...

எப்படி  சொல்றே..?

ஸாரி.. நான் வாய்ஸ் தர மாட்டேன்கறானே..

-----------------------------------------------------


9.தலைவரே. உங்க லட்சியம் என்ன?

எல்லாரும் இந்த 1 3/4  லட்சம் கோடி ஊழலையே பெரிசா பேசறாங்க..அதை பிரேக் பண்ற மாதிரி ஊழல் பண்ணனும்.,

---------------------------------------------

10. நடிகை - முதல்லயே சொல்லிடறேன்.. எனக்கு ழ சரியா வராது...

டைரக்டர் - முதல்லயே வராதுன்னா கடைசில வருமா?


----------------------------


டிஸ்கி 1 -  இன்னைக்கு 3 படங்கள் ரிலீஸ் ஆகுது. தூங்கா நகரம் பட அஞ்சலி ஸ்டில் தான் முதல்ல இருக்கறது.. யுத்தம் செய் பட நீது சந்திரா ஸ்டில்தான் 2வது..இஷா கோபிகர் நடிச்ச சீன் படமான மின்சாரக்காதலி  பட ஸ்டில் ரொம்ப ஓவரா இருந்ததால போடல. இன்னைக்கு ஆஃபீஸ்க்கு ஓபி அடிக்க வாய்ப்பு கிடைச்சா மூணுல ஏதாவது ஒரு படம் பார்த்து விமர்சனம் போடலாம்னு ஒரு ஐடியா..


டிஸ்கி 2 -  கடைசியா போட்ட நடிகை ஜோக்குக்கும் ,நீது சந்திராவுக்கும் எந்த சம்பந்தமும் இல்ல.

Thursday, February 03, 2011

விகடனில் விஜய் பேட்டி - காமெடி கும்மி


இந்த வார ஆனந்த விகடன்ல  அட்டைல விஜய் ஃபோட்டோ + பேட்டி மேட்டர் பார்த்ததும் ஆஹா மாட்டிடுச்சுய்யா பதிவுக்கு ஒரு மேட்டர்னு துள்ளிக்குதிச்சேன்.புக் வாங்கி பார்த்தா விஜய் கேப்டன் ரேஞ்சுக்கு பொங்கி இருந்தார்.. வழக்கமா 2 லைன்ல திருக்குறள் மாதிரி பதில் சொல்றவர்  இப்போ லியாகத் அலிகான் வசனம் எழுதிக்கொடுத்த மாதிரி நீள நீளமா பேசி இருக்கார்.. ( யார் இந்த லியாகத் அலிகான்? # கேப்டனோட ஆஸ்தான வசனகர்த்தா)

அதனால விஜய்யை ரசிக்கறவங்க பேட்டியை ரசிக்கவும்.. காமெடியை ரசிக்கறவங்க கமெண்ட்டை ரசிக்கவும்.

1.;முதல்ல எம் ஜி ஆர், அடுத்து ஜெயலலிதா,அப்புறம் கேப்டன்,  அந்த வரிசைல அடுத்து நான்..ஒரே ஒரு கேள்வி கேட்டார்னு தூக்கி எறியப்பட்டவர் எம் ஜி ஆர்,அவரோட இறுதி ஊர்வலத்துல கீழே தள்ளி விடப்பட்டவர் ஜெ, கல்யாண மண்டபம் இடிக்கப்பட்ட கேப்டன், அந்த வரிசைல காவலன் ரிலீஸ்க்கு முட்டுக்கட்டை போட்ட கூட்டம்..

இதுல எம் ஜி ஆருக்கு 136 படம் நடிச்ச அனுபவம் இருக்கு...அதுல பாதிப்படம் மக்களுக்கு உபயோகமான கருத்துக்கள் உள்ள படம்.. கேப்டன் படங்கள்ல 125 ல 60 படங்கள்ல ஏழைகள் பற்றி அரசியல் பற்றி பேசி இருக்காரு... நீங்க சங்கவிக்கு சோப்பு போட்டீங்க..படத்துல வில்லனுக்கு ஆப்பு வெச்சீங்க.. சீர்திருத்த கருத்து சொன்னீங்களா?

2. டிஷ்யூம் டிஷ்யூம் படங்களை இனி மேல் தொடர்ந்து தர மாட்டேன்..இனிமே வருஷத்துக்கு 2 படம் பண்ணுவேன்.. அதுல காவலன் மாதிரி கல கல காமெடி படம் ஒண்ணு, ஜிவு ஜிவுன்னு வேலாயுதம் மாதிரி ஆக்‌ஷன் படம் ஒண்ணு

எனக்கென்னவோ வேலாயுதம் ஜிவு ஜிவுவா? ஜவ்வான்னு டவுட்டா இருக்கு..


3;இதுவரைக்கும் என் படங்கள் ரிலீஸ் டைம்லயோ, அல்லது ரிலீஸ் பண்றதுலயோ எந்த பிரச்சனையும் வந்ததில்லை..காவலன தான் ஃபர்ஸ்ட் டைம்
உங்க படங்கள் ரிலீஸ் ஆகறப்ப எந்த பிரச்சனையும் வராது.. ரிலீஸ் ஆன பிறகு நாங்க அதை பார்க்கறப்பதான் பிரச்சனை.ஹி ஹி




4. என் படத்தை வராம தடுக்கறவங்க அவங்க டி வி சேனல்ல மட்டும் என் படங்களை தொடர்ந்து ஒளி பரப்பறாங்களே.. ஏன்?. என் முகத்தை அழிக்கக்கூட என் முகமேதான் மறுபடி தேவைப்படுது.


இப்போ எப்படி உங்க பேட்டியை நக்கல் அடிச்சே நான் ஒரு பதிவைத்தேத்துன மாதிரி..விஜய்யை பிடிக்கல பிடிக்கலன்னு சொல்லிச்சொல்லியே ஆளாளுக்கு விஜய் பதிவு போடற மாதிரியா?

5தியேட்டர் அதிபர்களை காவலன் படத்தை திரையிட வேணாம்னு ஓப்பனா மிரட்டுனாங்க..எல்லாத்தடைகளையும் மீறி படம் ரிலீஸ் ஆச்சு. மக்கள் கூட்டம் கூட்டமா வந்தாங்க..

வந்தாங்க.. ஓக்கே திரும்பி பத்திரமா வீட்டுக்கு போய் சேர்ந்தாங்களா?

(ஆனா அதுல ஒண்ணு வேணா உண்மை.. ஈரோட்ல அபிராமில ரிலீஸ் பண்ணக்கூடாதுன்னு மிரட்டல் வந்தது.. ஓனர் எதுக்கு வம்புன்னு சிறுத்தையை ரிலீஸ் பண்ணீட்டு தேவி அபிராமில காவலன் போட்டுட்டார்.)

6.  ;முன்பெல்லாம் பொங்கல்,தீபாவளி வந்தா 8 ஹீரோக்களின் படங்கள் ரிலீஸ் ஆகும்..தியேட்டரே திருவிழா மாதிரி இருக்கும். இப்போ  அப்ப்டி இல்லை.. 3 படம்தான் ரிலீஸ் ஆகுது...

பின்னே என்ன?. முன்பெல்லாம் ஒரு படம் ஒரு தியேட்டர்ல ரிலீஸ் ஆகும்..இப்போ ஒரே ஊர்ல 4 தியேட்டர்ல ரிலீஸ் பண்ணி ஒரே வாரத்துல ரிசல்ட் வெளில தெரியறதுக்குள்ள வசூலை அள்ளிடனும்னு நினைக்கறாங்களே..



7ஒரு படத்தை தயாரிக்க எவ்வளவு கஷ்டப்படறாங்க தெரியுமா?அத்தனை அவமானங்களையும்,கேவலங்களையும் தாண்டித்தான் காவலனை ரிலீஸ்  பண்ணுனேன்...

படத்தை தயாரிக்க எல்லாரும் சிரமப்படறாங்க ஓக்கே.. ஆனா அதை பார்க்க ரசிகர்கள் கூடத்தான் ரொம்ப கஷ்டப்படறாங்க...

8.  நடிகனாகனும்னு ஆசைப்பட்டேன்,நான் நினைச்சதை விட  மிகப்பெரிய இடத்துல உக்கார வெச்சிருக்காங்க இந்த ஜனங்க


இந்தத்தமிழங்க எப்பவும் இப்படித்தாங்க நீங்க அவங்களை நம்பி அரசியல்ல இறங்கி உள்ளதும் போச்சுடா... அப்படின்னு புலம்பாதீங்க..

 09-பிப்ரவரி  -2011

9.யார் பேச்சையும்  கேட்டு எதிலும் உடனடியாக இறங்கிட மாட்டேன்

என் பேச்சை நானே கேக்க மாட்டேன்னு ஒரு படத்துல பஞ்ச் டயலாக் பேசுனீங்க.. உங்க பேச்சையும் கேக்க மாட்டீங்க.. அடுத்தவங்க பேச்சையும் கேக்க மாட்டீங்கன்னா எப்படி..?


10.;யாருக்கு  எப்போ எப்படி வெற்றி தோல்வியை தரனும்னு தீர்மானிக்கறது கடவுள்.சாதாரண மாமிச உடம்புள்ள எந்த மனித ஜென்மத்தாலயும் இதைத்தடுக்க முடியாது..

கலைஞரைத்தான் தாக்குறீங்கன்னு எங்களுக்கு புரியுது..எதுக்கும் பார்த்துக்குங்க..வேலாயுதம் ரிலீஸ் அப்பவும் பிரச்சனை பண்ணிடப்போறாங்க...

நிறையப்பேரு என்ன சொல்றாங்கன்னா இந்த பேட்டியை படிச்சு கலைஞர் கோபப்பட்டு கூப்பிட்டு மிரட்டுனா அடுத்த  வாரமே நான் அந்த அர்த்தத்தில் பேட்டி அளிக்கவில்லைன்னு விஜய்யும், பிரிண்ட் போனப்ப ஒரு தவறு நேர்ந்து விட்டதுன்னு விகடனும் சால்ஜாப்பு சொல்லிடுவாங்க.. அப்படின்னு...

நாடகத்தின் 2 வது காட்சி - ராசா ராஜினாமா?கூடிய பொதுக்குழு

http://img.dinamalar.com/data/images_news/tblArasiyalnews_52933466435.jpg
2ஜி ஸ்பெக்ட்ரம் வழக்கில் கைது செய்யப்பட்டதன் எதிரொலியாக, திமுக கட்சிப் பதவியில் இருந்து ஆ.ராசா ராஜினாமா செய்ததாக அக்கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.மேலும், ராசாவுக்கு ஆதரவாக திமுக பொதுக் குழுவில் தீர்மானம் ஒன்றும் நிறைவேற்றப்பட்டுள்ளதாகத் தெரிகிறது.

முதல்வர் கருணாநிதி தலைமையில் தி.மு.க. பொதுக்குழு இன்று காலை சென்னை அண்ணா அறிவாலயத்தில் உள்ள கலைஞர் அரங்கில் கூடியது.
தி.மு.க. பொதுச் செயலாளர் அமைச்சர் அன்பழகன், பொருளாளரும், துணை முதல்வருமான மு.க.ஸ்டாலின், மத்திய மந்திரி மு.க.அழகிரி மற்றும் அமைச்சர்கள் உள்பட தி.மு.க. பொதுக்குழு உறுப்பினர்கள், சிறப்பு அழைப்பாளர்கள் கலந்து கொண்டனர்.

இக்கூட்டத்தில் சட்டப்பேரவைத் தேர்தல் கூட்டணி, தொகுதி பங்கீடு, தேர்தல் பிரசார வியூகம் ஆகியவை குறித்து ஆலோசிக்கப்பட்டது.
https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjX19qzDKq43lopCGDmTz91cbRnV9lNiyI5f8TcbeXxCA7SxiEOO-Y60RlfCr8zzWkhefkIMJVgh2SOXLSQLW0tj44nHAu7KR_YK1w8_EwgG8JP5mCH9P-j7NEgTM4Ysa20xeN6rJgGbfxj/s1600/K1.jpg 
ராசா ராஜினாமா..
2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல் வழக்கில் புதன்கிழமை முன்னாள் அமைச்சர் ஆ.ராசாவை சிபிஐ நேற்று டெல்லியில் கைது செய்தது.இந்நிலையில், ராசா சார்பில் திமுக பொதுக் குழுவில் ராஜினாமா கடிதம் ஒன்று அளிக்கப்பட்டது என்றும், அவர் தனது திமுக கொள்கைப் பரப்புச் செயலர் பதவியில் இருந்து விலகியதாகவும் அறிவாலய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
ராசாவுக்கு ஆதரவாக தீர்மானம்...
மேலும், ஒருவர் கைது செய்யப்பட்டதால் மட்டுமே குற்றவாளி என்று கருதிவிட முடியாது என ராசாவுக்கு ஆதரவாக திமுக பொதுக் குழுவில் தீர்மானம் ஒன்று நிறைவேற்றப்பட்டதாகவும் தெரிகிறது.

எல்லாமே எழுதி வைத்து அரங்கேற்றப்படும் நாடகம் போலவே உள்ளது.இதுவரை ராசாவுக்கு நெஞ்சு வலி வராமல் போனதே அதிசயம்தான்.

இனி தலித்துக்கு எதிரான நடவடிக்கை என கலைஞர் சப்பைக்கட்டு கட்டக்கூடும்.காங்கிரஸ் இதுதான் சாக்கு.. கிடக்கறதெல்லாம் கிடக்கட்டும் கிழவியை தூக்கி மனைல வை என்பது போல ஆட்சியில் பங்கும் 120 சீட்டும் கேட்கும்.

அரசியல் வானில் குழப்பமான நிலையே தென்படுகிறது.. தமிழன் விழித்துக்கொள்வானா? இல்லை பழைய குருடி கதவை திறடி என குத்துனா அய்யா இல்லைன்னா அம்மா என ஒரே பக்கமாக சாய்வானா? என தெரிய வில்லை.

கைதான ராசாவை நக்கல் அடிக்கும் ட்வீட்டுகள் -ஆனந்த விகடன் வலைபாயுதே

https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEi86qDxL5w9mVT_zvgvziIPmlGSs6zbcY_i5F7dmk7nRDKm2oL0-cbT1PQAnxo6Zu-kDIQ6Dz6W2P-R665jSvOoWeOHuWHnvv6KsQDH6997la1UJw4Dsh2tDrWUooWbA_S2E5FHuJFaaXQ/s1600/karunanidhi_kanimozhi_maran_20090608.jpg
நேற்று ஆ ராசா அரெஸ்ட் நியூஸ் வந்ததும் ட்விட்டர் பக்கம் போனா நம்ம ஆளுங்க தி மு க வை பொளந்து கட்டிட்டு இருந்தாங்க.. அப்போதான் ஒரு ஐடியா தோணுச்சு.. வழக்கமா மொக்கை படத்தை பார்த்து இதுக்கு எத்தனை மார்க் விகடன்ல போடுவாங்கன்னு கேவலமா ஒரு கணிப்பு போடுவமே.. அதே மாதிரி அடுத்த வார விகடன்ல எந்தெந்த ட்வீட் செலக்ட் ஆகும்னு பாக்கலாம்னு  உக்காந்தேன்.


சும்மா சொல்லக்கூடாது.. 3 மணி நேரத்துல நம்மாளுங்க 1438 ட்வீட்  ட்வீட்டீட்டாங்க..அதுல எதெல்லாம் அடுத்த வார விகடன்ல செலக்ட் ஆகும்னு  ஒரு கெஸ் பண்ணி இருக்கேன். வழக்கம் போல இதுவும் சொதப்புனா யாரும் என்னை திட்டக்கூடாது..

»1.
gulf- tamilan

RT @: @ ஒருவரை கைது செய்து நீதிமன்றம் தண்டித்தாலேயே அவர் குற்றவாளி என்றில்லை. இப்படிக்கு கலைஞர்

----------------------------------------------------------
2.
gulf- tamilan

RT @: நெஞ்சுவலி நாடகம் எப்போது? #ராசா #கைது. .


_--------------------------------------------------------------------

 3
ராஜன்

ஆ ராசா அரெஸ்ட்டு! தாத்தா 80 சீட்டு குடுக்காத்தால் சொக்கத்தங்கம் சோனியா செருப்படி!
4 minutes ago Favorite Retweet Reply 

-----------------------------------------------------------------------
4  
Sangkavi

ராஜா ஜாமீனில் விடுதலை இது நாளைய தலைப்பு செய்தி? #டவுட்டு

-----------------------------------------------------------
5.
Saravanan

இதனால் தாத்தா-ஆத்தா கூட்டணியில் தற்போதைக்கு ஆத்தாவின் கை ஓங்கியிருக்கிறது. கூடுதல் தொகுதி ஒதுக்கீடு நிச்சயம் கிடைக்கும்..!

---------------------------------------------------------
 http://new.vikatan.com/news/images/dec18.jpg
6.
ராஜன்

RT @: அலைவரிசைக்கு ஒரு நியாயம் கிடைச்சிருக்கு.. இலங்கையின் கொலைவரிசைக்கு எப்ப நியாயம் கிடைக்கும்?

-----------------------------------------------
7.
Santhappanசாந்தப்பன்

RT @: இன்னிக்கி யாரு ஊட்ல பார்ட்டி, ஸ்டாலின் வீட்டிலா இல்ல மாறன் வீட்டிலா?

---------------------------------------------------
8.
ராஜன்

RT @: ஊழலுக்காக, திமுகவை ஆரம்பித்த அண்ணா ஃபீல் பண்ணுனாருன்னா, காந்தி, அன்னிபெசன்ட், நேரு-லாம் ரத்த கண்ணீர் வடிக்கனும்!

--------------------------------------------
c.p.senthilkumar

போயஸ் தோட்டத்துல அல்வா தர்றாங்களாம்...2011 ல ஜெ எலக்‌ஷன்ல ஜெயிச்சாலும் மக்களுக்கு அல்வாதானே.
3 minutes ago Favorite Reply Delete 

------------------------------------------------------------
10
c.p.senthilkumar

நாளை முரசொலியில் என்ன சொல்லி சமாளிக்கனும்னு இப்பவே கலைஞர் யோசிக்க ஆரம்பிச்சிருப்பார்... ஜெ டிவில இன்னைக்கு OT டபுள் மடங்கு சம்பளம்

---------------------------------------------------
11
ராஜன்

கனிமொழியின் காலர் டியூன்! ‘’கூண்டுக்குள்ள என்ன வச்சி கூடி நின்ன ஊர விட்டு கூண்டுக்குள்ள போனதென்ன கோலக்கிளியே’’

-------------------------------------------
12  .RAHEEM  GAZALI:  புள்ளிராஜாவுக்கு  எய்ட்ஸ் வருமா?
ஸ்பெக்ட்ரம் ராஜாவுக்கு பெயில்வருமா?


---------------------

டிஸ்கி - இதுல 9வதும், பத்தாவதும் என்னுடையது..இவை விகடன்ல செலக்ட் ஆகும்னு சொல்ல முடியாது.. இருந்தாலும் நம்ம சரக்கு கொஞ்சமாவது இருக்கனுமேன்னு போட்டிருக்கேன்..சுய தம்பட்டம்னு யாரும் நினைச்சுக்க வேணாம்.

Wednesday, February 02, 2011

அரெஸ்ட் ஆன ஆ ராசா.. தி மு கவுக்கு ஆப்பு

http://www.maniyosai.com/cms/images/stories/a.raja%20-%20file%20pic.jpg 
ஆ.ராசா கைது: சிபிஐ நடவடிக்கை
புதுடெல்லி, பிப்.2,2011
2ஜி ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு ஊழல் தொடர்பாக, முன்னாள் அமைச்சர் ஆ.ராசாவை சிபிஐ அதிகாரிகள் இன்று கைது செய்தனர்.
ராசாவின் உதவியாளர் சந்தோலியா மற்றும் முன்னாள் தொலைத்தொடர்புச் செயலர் பெஹுரியா ஆகியோரையை சிபிஐ கைது செய்தது.
ஸ்பெக்ட்ரம் ஊழல் தொடர்பாக, ஆ.ராசாவிடம் 4-வது நாளாக இன்று சிபிஐ அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.
இந்த முறைகேட்டில், ராசா தொடர்புடையதற்கான போதுமான ஆதாரங்களைத் திரட்டிய நிலையில், அவரை சிபிஐ கைது செய்தது.
முன்னதாக, ஆ.ராசாவிடம் சி.பி.ஐ. அதிகாரிகள் திங்கட்கிழமை விசாரணை நடத்தினர்.  அவரிடம் கடந்த டிசம்பர் 24 மற்றும் 25-ம் தேதிகளில் இரண்டு தடவை சி.பி.ஐ. விசாரணை நடத்தியுள்ளது.
ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டுக்கு முந்தைய சூழ்நிலைகள், பண விவகாரம் ஆகியவை குறித்து விரிவாக விசாரணை நடத்தப்பட்டது. ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டில், சில தொலைத்தொடர்பு சேவை நிறுவனங்களுக்கு சாதகமாக நடந்து கொண்டதாக கூறப்படுவது குறித்து ராசாவிடம் விசாரிக்கப்பட்டுள்ளது.
2ஜி ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு பெற்ற தொலைத்தொடர்பு நிறுவனங்களின் கிளை நிறுவனங்களில் ஆ.ராசா குடும்பத்தினரின் தொடர்பு உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் குறித்தும் சிபிஐ விசாரித்தனர்.
இதன் தொடர்ச்சியாக, ராசாவின் கோதரர் ஏ.கே.பெருமாளிடம் சிபிஐ நேற்று விசாரணை நடத்தினர்.
http://www.makkalmurasu.com/images/articles/2010_11/23482/u1_ra.jpg
இதனிடையே, 2001-ம்  முதல் 2009-ம் ஆண்டு வரை ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு செய்யப்பட்டது தொடர்பான நடைமுறைகள் குறித்து ஆராய்வதற்காக தொலைத் தொடர்புத் துறையால் அமைக்கப்பட்ட ஓய்வு பெற்ற உச்சநீதிமன்ற நீதிபதி சிவராஜ் வி பாட்டீல் தலைமையிலான ஒருநபர் குழு,மத்திய தொலைத் தொடர்பு மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் கபில் சிபலிடம் அறிக்கையை தாக்கல் செய்தது.  அதில், ஆ.ராசாவின் நிர்வாகத்தின் மீதே குறைகூறப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியானது குறிப்பிடத்தக்கது.

தேர்தல் நேரத்தில் இந்த கைது பெரிய அரசியல் திருப்பத்துக்கு அடி கோலும் என சொல்லப்படுகிறது.


இந்த தகவலை எனக்கு அனுப்பி வைத்த ஆனந்த விகடனில் பணியாற்றும் நண்பருக்கு நன்றி..