Tuesday, January 18, 2011

பிரபல தமிழ் சினிமா ஹீரோக்கள் வலைப்பூ ஆரம்பித்தால்...(ஒரு ஜாலி கற்பனை)

http://3.bp.blogspot.com/_zHh2s8KidXI/SWM7qSKsZMI/AAAAAAAACLg/bO6Jrfpotws/s400/Tamanna.jpg
1 ரஜினி - நான் 3 மாசத்துக்கு ஒரு தடவைதான் பதிவு போடுவேன்.
நான் ஒரு பதிவு போட்டா அது 100 பதிவு போட்ட மாதிரி...என் பிளாக்ல
ஃபாலோயர்ஸ் மட்டும் 4 கோடி பேர் சேர்ந்துட்டாங்க..தமிழ்மணத்தில
பதிவை போட அவங்களுக்குகட்டணம் செலுத்தறது மத்தவங்க பாலிசி.
ஆனா என் பதிவை போட அவங்க கிட்டே கட்டனம் வசூல் பண்றது
என் பாலிசி.நான் பதிவு போட்டா நெட் டிராஃபிக்கே ஜாம் ஆகிடும். ஆன் லைன்ல அதிகபட்சம் 60 பேர பார்த்திருப்பே... வினவு பதிவுன்னா 140 பேரைப்பார்த்திருப்பே.. 4 லட்சம் பேர் ஆன்லைன்ல ஒரே பிளாக்ல பார்த்திருக்கியா?இப்புடுச்சூடு கண்ணா.. இனிமே ஒரு படம் முடிச்சதும் இமயமலைக்குப்போக மாட்டேன்,நெட் செண்ட்டருக்கு  வந்துடுவேன்.நடிகை மீனாவுக்கு ஒரு குழந்தை பிறந்திருக்காம். 2020ல அந்த பொண்ணோட ஜோடி சேர்ந்துட வேண்டியதுதான்..

2. கமல் - என் பிளாக் காத்து வாங்கிட்டு இருக்குன்னு ஆளாளுக்கு நக்கல்
அடிக்கறாங்க..நான் எழுதறது எதுவும் புரியறதில்லைன்னு ஒரே கம்ப்ளைண்ட்.
நான் படத்துல வசனம் பேசறது மட்டும் புரிஞ்சிடுச்சா?அதுக்கு மட்டும்
கை தட்டுறீங்க..?கூகுள் காசுல ஆரம்பிச்ச பிளாக்ல நல்ல நல்ல
பதிவா போடுவேன்,காசு குடுத்து டொமைன் ஆரம்பிக்கனும்னா
ஜகா வாங்கிடுவேன்.என் பிளாக் ஓப்பன் பண்ணுனா ஆன்லைன்ல
எப்பவும் பெண்லைனா இருக்கும். அதாவது பெண்கள் கூட்டமா இருக்கும்.
எனக்கு ஒரே ஒரு டவுட்.என் படத்துல எப்படியும் ஒரு கிஸ் சீன்
வெச்சிடுவேன்.பிளாக்ல என்ன பண்றது?பேசாம லோகோவை கிஸ் பண்ண்ற
மாதிரி வெச்சிட வேண்டியதுதான்.

3.கேப்டன் - இந்த பிளாக்கர்ஸ் உலகத்துல மொத்தம் 1680 பதிவர்கள் இருக்காங்க. அதுல மொக்கைப்பதிவர்கள் 380 பேர். நல்ல பதிவர்கள் 1002 பேர்..கணக்கு உதைக்குது... மனப்பாடம் பண்ணிட்டு வர்றப்ப எங்கேயோ தப்பு நடந்திருக்கு.. மைனஸ் ஓட்டு -பிளாக் உலகுல எனக்கு பிடிக்காத ஒரே வார்த்தை.வசனம் பேசும்போதும் சரி..பதிவு போடும்போதும் சரி..பல்லைக்கடிச்சுக்கிட்டேதான் பதிவு போடுவேன்..என் கல்யான மண்டபத்தை இடிச்சாங்க  பொறுத்துக்கிட்டேன்.. என் பிளாக்கை யாராவது ஹேக் பண்ண நினைச்சா அவங்களை சும்மா  விடமாட்டேன்..பஞ்ச் டயலாக் பேசியே அவங்களைக்கொன்னெடுத்துடுவேன்..
 என் பிளாக்கை ஓப்பன் பண்ணுனா ஆன்லைன்ல ஒரே ஒரு ஆள்தான் வர்றதா சிலர் நக்கல் அடிக்கறாங்க.. அந்த ஒரு ஆளும் நான்தான்.. எனக்கு கூட்டணி பிடிக்காது.. அது அரசியலா  இருந்தாலும் சரி..வலைப்பதிவா இருந்தாலும் சரி.. தனியாத்தான் எல்லாம்..யாரும் என் பிளாக் பக்கம் வராதீங்க.. ஆனா ஓட்டு மட்டும் போட்டுடுங்க..
http://thebollywoodactress.com/wp-content/uploads/2008/05/asin1.jpg
4. விஜய் - தமிழ்மணம் டாப் 20 -ங்கறது ஒரு வட்டம் மாதிரி.. இதுல மேல இருக்கறவர்  கீழே வருவார்..கீழே இருக்கறவர் மேலே போவார்..தமிழ்மணம் கட்டண சேவையை பயன்படுத்தி ஹிட்சை ஏத்திக்கற மாதிரி என் படம் ரிலீஸ் ஆகற தியேட்டர்லயும் ஏதாவது சேவையை  பயன்படுத்தி படத்தை ஹிட் ஆக்கிடனும்..ஆளாளுக்கு பிளாக்ல நம்மை நக்கல் அடிக்கறாங்க..இனி பிரச்சனை இல்ல ,காவலன் ஹிட் ஆகிடுச்சு.. இனி என்னைப்பத்தி எவனாவது போஸ்ட் போட்டு நக்கல் அடிக்கட்டும்..எதிர் பதிவா போட்டு பின்னி எடுத்துட வேண்டியதுதான்..நான் பதிவு போட்டா யாரும் தூங்க மாட்டாங்க.. பதிவு போடலைன்னா யாரும் தாங்க மாட்டாங்க..என்ன ஒண்ணுமே புரியலைன்னு யோசிக்கறீங்களா? பிரபல பதிவர்னா அப்படித்தான் அவங்க பதிவும் புரியக்கூடாது.. அவங்க பேசுறதும் புரியக்கூடாது..

5. டி ஆர் - ஏய் டண்டணக்கா டனக்கு நக்கா.. என் பையன் பேரு சிம்பு ,நான் ஆரம்பிக்கப்போற பிளாக் பேரு வம்பு..WWW.VAMBU.BLOGSPOT.COM. நான் அடிக்கடி கட்சி மாறிடறேன்னு ஆளாளுக்கு நக்கல் அடிக்கறாங்க..நான் பிளாக்கர்சை பார்த்து கேக்கறேன். நீங்க மட்டும் நிலையா ஒரே திரட்டி மட்டும் போதும்னு என்னைக்காவது நினைச்சு இருக்கீங்களா? தமிழ்மணமும் வேணும்,இண்ட்லியும் வேணும் அப்படின்னு சேஃப்டியா இருக்கலையா? அதே மாதிரிதான் நானும் ..என் பிளாக் லோகோவா யாரய்யா அது கரடி பொம்மையை அட்டாச் பண்ணுனது? ஓ.. என் ஃபோட்டாவா?..தறுதலைக்காதல்கள் இருக்கறதுக்கு மத்தில ஒரு தலைக்காதல் அப்படின்னு படம் எடுத்து ஓஹோன்னு வரப்போறேன்..

6. கார்த்தி - பயமா? எனக்கா? நல்லதா ஒரு பதிவு கூட போடாமயே வலைப்பதிவு உலகை விட்டுப்போயிடுவேனோன்னு ஒரே ஒரு பயம்தான் இருக்கு.நான் போஸ்ட் போடும்போது என் கை மீசையை முறுக்கிட்டு இருக்கனும். சிரிச்சுக்கிட்டே போஸ்ட்டை ரிலீஸ் பண்ணனும்.தமனா அடிக்கடி என் பிளாக்ல கமெண்ட் போடறதா ஒரு குற்றச்சாட்டு இருக்கு..எப்போ பதிவு போட்டாலும் மீ த ஃபர்ஸ்ட் -னு ஒரு கமெண்ட் போட்டு 2 பேரும் எப்பவும் ஒண்ணாதான் இருக்கோம்கறதை காட்டிக்குடுத்திடறாங்க..ஆனா ஒண்ணு மட்டும் உறுதி.. நான் எங்க வீட்ல பார்க்கற பொண்ணைத்தான் கல்யாணம் பண்ணிக்குவேன்.

டிஸ்கி 1 - ஈரோடு மாவட்ட கழகக்கண்மணிகளின் அன்பு வேண்டுகோளுக்கு இணங்க ( மிரட்டுனாங்க அப்படிங்கறதைக்கூட நாசூக்காத்தான் சொல்ல வேண்டி இருக்கு) கலைஞரின் இளைஞன் பட விமர்சனம் லாக் செய்து விட்டேன்.. இனி அந்தப்படம் ஈரோடு வி எஸ் பி தியேட்டரில் 100 நாட்கள் ஓடி விடும் என்று எதிர்பார்க்கிறேன்..ஹா ஹா ஹா

டிஸ்கி 2 -- பொங்கல் லீவ்ல நெட் பக்கம் வராதவங்களுக்காக

இளைஞன் - வறட்சி ஆகி விட்ட புரட்சி - சினிமா விமர்சன

2.

காவலன் - விஜய் -ன் புதிய பரிமாணம் - சினிமா விமர்சனம்


.3 சிறுத்தை - செம ஸ்பீடு வித்தை - சினிமா விமர்சனம்

4.       ஆடுகளம் - அதகளம் - சினிமா விமர்சனம்

5.

பொங்கல் ரிலீஸ் படங்கள் - ஒரு பார்வை 

 

கோக்கு மாக்கு ஜோக்கு - BY ''A" பேக்கு 21+

Monday, January 17, 2011

எனக்கு புத்திமதி சொல்ல நீ யாரு?


http://shuhaibmh.files.wordpress.com/2010/07/socrates.jpg
இந்த உலகத்துல ரொம்ப ஈசியா கிடைக்கற விஷயம் புத்திமதிதான். இப்போவெல்லாம் யாராவது அட்வைஸ் பண்ண ஆரம்பிச்சா பின்னங்கால் பிடரி தெறிக்க ஓடிடறோம்.. இருந்தாலும் நான் படிச்ச சில தத்துவங்களை ,பொன்மொழிகளை உங்களோட பகிர்ந்துக்கறேன்..

1. எதையும் சிந்தித்து செய்தால் நமக்கு கிடைப்பது வெற்றி..எதையும் செய்து விட்டு சிந்தித்தால் நமக்கு கிடைப்பது அனுபவம். - அப்துல்கலாம்
--------------------------------------------------------------------
2. கனவுகளுக்கும்,லட்சியங்களுக்கும்  ஒரே வித்தியாசம்

கனவுகளுக்கு தேவை - அமைதியான தூக்கம்
லட்சியங்களுக்கு தேவை - அளவான தூக்கம். -

--------------------------------------------------------------------------

3. உனக்கு கிடைக்கும் வெற்றியில் பலரின் தோல்வி இருக்கும்.உனக்கு கிடைக்கும் தோல்வியில் யாரோ ஒருவரின் வெற்றி  இருக்கும் -

---------------------------------------------------------

4. அதிகமாக சிரிக்க வைப்பவனும்,அதிகமாக சிரித்துக்கொண்டு இருப்பவனும்தான் உலகில் மிகப்பெரிய மனிதன்.
------------------------------------------------------

5.நீ மட்டும் நடந்து சென்றால் யாரும் உன்னை திரும்பிப்பார்ப்பது இல்லை,என்னையும் உன்னுடன் அழைத்துச்செல் - தன்னம்பிக்கை

________________________----------------------------------------
http://math2033.uark.edu/wiki/images/6/65/Aristotle.jpg
6. உன் கோபம் உன்னை நேசிப்பவர்களைக்கூட வெறுக்க வைக்கும்.ஆனால் உன் அன்பு உன்னை வெறுப்பவர்களைக்கூட நேசிக்க வைக்கும்.

----------------------------------------------------------------------------

7.  நீ நேசிக்கும்  யாராவது உன்னை விட்டுவிலகினால் விட்டு விடு..
உன் நேசம் நிஜம் என்றால் மீண்டும் உன்னை தேடி வருவார்கள்

---------------------------------------------------------\\

8. அன்புதான் இந்த உலகத்தில் எல்லா நோய்களுக்கும் மருந்து..அந்த அன்பே பொய்யானால் உலகத்தில் அதை விட கொடிய நோய் எதுவும் இல்லை. அன்னை தெரேசா

----------------------------------------------------------

9. நீ அடைவதெல்லாம் கடவுள் உனக்கு தரும் பரிசு.
    நீ இழப்பதெல்லாம் கடவுளுக்கு நீ தரும் பரிசு.

---------------------------------------------------

10. நாம் வெறுக்க வேண்டியது ஒரு மனிதனின் கெட்ட குணங்களைத்தான்..
அந்த மனிதனை அல்ல.

-------------------------------------------

டிஸ்கி 1- டைட்டிலுக்கான விளக்கம்.நான் யாரைப்பார்த்தோ கூறுவதாக டைட்டிலை புரிந்து கொண்டால் அது என்னை யாரும் புரிஞ்சுக்கலைன்னு அர்த்தம். நான் போட்ட இந்த பதிவில் உள்ள  அட்வைசை பார்த்து நீங்க இப்படி சொல்வீங்களோன்னு நினைச்சுப்பார்த்த போது தோணுன டைட்டில்..ஹி ஹி

டிஸ்கி 2  - சினிமா தளங்கள் சில எனக்கு மெயிலில் தகவல் சொல்லீட்டு அவங்களாவே எனது சினிமா விமர்சனத்தை எடுத்து அவங்க தளத்துல போட்டுக்கறாங்க.நான் பதிவு போட்டு 12 மணி நேரம் கழிச்சி எடுத்துக்கங்கன்னு கேட்டுக்கறேன்.ஏன்னா எனக்கு ஹிட்ஸ் ரேட் 16 % குறையுது.மீறி  எடுத்தா என்னால ஒண்ணும் பண்ண முடியாது..ஹி ஹி ஹி.

டிஸ்கி 3 - பொங்கல் லீவ்ல நெட் பக்கம் வராதவங்களுக்காக

1.

இளைஞன் - வறட்சி ஆகி விட்ட புரட்சி - சினிமா விமர்சனம்

 

2.

காவலன் - விஜய் -ன் புதிய பரிமாணம் - சினிமா விமர்சனம்


.3 சிறுத்தை - செம ஸ்பீடு வித்தை - சினிமா விமர்சனம்

4.       ஆடுகளம் - அதகளம் - சினிமா விமர்சனம்

5.

பொங்கல் ரிலீஸ் படங்கள் - ஒரு பார்வை 

 

கோக்கு மாக்கு ஜோக்கு - BY ''A" பேக்கு 21+

Saturday, January 15, 2011

காவலன் - விஜய் -ன் புதிய பரிமாணம் - சினிமா விமர்சனம்

http://www.songs4u.net/wp-content/uploads/2011/01/Kavalan-2010.jpg
காலமெல்லாம் காதல் வாழ்க படத்தின் ஒன்லைன் தான் காவலன் கதையும்,
ஆனால் வித்தியாசமாக திரைக்கதை அமைத்து காமெடியை காதல் உணர்வில்
கலக்கி சித்திக் மீண்டும் வெற்றி பெற்று இருக்கிறார்.

ஒரு ஆக்‌ஷன் ஹீரோவாக பரிமளித்த பின்னும், மாஸ் ஓப்பன் உள்ள ஒரு ஹீரோ இந்த மாதிரி காமெடி கம் காதல் கதையில் நடிக்க ஒத்துக்கொண்டதும்,தனது புதுமையான நடிப்பினை வெளிப்படுத்தி மனம் கவர்ந்ததும் விஜயை பாராட்ட வைக்கிறது.

தொடர்ந்து 6 தோல்விப்படங்கள் கொடுத்த அயர்ச்சி, அரசியல் கட்சி
ஆரம்பிக்கலாமா? வேண்டாமா? என்ற குழப்பம், இந்த சாஃப்ட் சப்ஜெக்ட்டை
ரசிகர்களும் ,மக்களும் ஏற்றுக்கொள்வார்களா என்ற தயக்கம் இதெல்லாமே
விஜய் -ன் முகத்தில் ஏற்றுக்கொண்ட கேரக்டரின் தன்மையை மீறி
தெரிவதும், அவரது முகத்தில் ஒரு டல்னெஸ் தெரிவதும் வருத்தம் தரக்கூடிய
மாற்றம்.

ஆனால் இதெல்லாம் படத்தின் இடைவேளை வரைதான்.
கதையின் ஜீவனாக விளங்கும் படத்தின் பின் பாதியில் விஜய் -ன்
கலக்கலான நடிப்பு பார்ப்பவர்களை வியக்க வைக்கிறது.அது வரை
வடிவேலுவும், இயக்குநரும் படத்தை தாங்கி நிற்பதும், அதற்குப்பிறகு
விஜய் தூண் மாதிரி நின்று படத்தை காப்பாற்றுவதும் ரசிக்க வைக்கும்
ஆரோக்கியமான போட்டி.
http://pirapalam.net/wp-content/uploads/2010/08/Kaavalkaran-On-Location-4.jpg
வடிவேலு வலுக்கட்டாயமாக திணிக்கப்பட்ட கேரக்டர்தான் என்று தெரியாத
வண்ணம் அவருக்கு புத்திசாலித்தனமாக காட்சிகளை ஒதுக்கி இருக்கிற
விதம் அழகு.பஸ் கூட்டத்தில் முன் பின் தெரியாத பெண்ணின் மடியில்
அமர்வது..காந்த டிரஸ் போட்டு இரும்புக்குண்டினால்  முக்கிய இடத்தில்
அடி வாங்குவது.,என வடிவேல் கேப் கிடைக்கிற இடத்தில் எல்லாம்
பொங்கல் வைக்கிறார்.

அசினின் அப்பாவாக வரும் ராஜ்கிரண் கண்ணியமான ,கச்சிதமான நடிப்பு.
அசினுக்கு அம்மாவாக ரோஜா வருவது காலத்தின் கட்டாயம்.ஆரம்பக்காட்சிகளில் ரோஜா விஜய்யை தேவை இல்லாமல் கண்டிப்பது.. டீஸ்  செய்வது தேவை அற்ற தெனாவெட்டு..( விஜய் ரசிகர்களின் ஏகோபித்த எதிர்ப்பைப்பெறும் அளவு அவருக்கு ஓவர் இடம் கொடுத்தது இயக்குநரின் தவறு)

அசினின் தோழியாக வருபவர் நல்ல ஃபிகர்தான். அவர் வரும் காட்சிகளில்
துப்பட்டாவை போனால் போவுது போட்டுக்கலாம் என்பது போல்
அலட்சியமாக உடுத்தி இருப்பதை வன்மையாக பாராட்டுகிறேன்.. ( ஹி ஹி )
https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEh1gIa9DSi9wcI3E6W1OW-xPS9n6S_MLF1z4thVi5INAHtDGStyBQPyCM1sTEn6ajP3uUtKfhVgqpViTi2QwM9CSwpaI8AXGRf4idZS8TIj_rDjeS9-q5Pyq4KhtJqUtfEzUxZssxwp8L0/s1600/vi-18-09-2010-350.jpg a
படத்தின் ஓப்பனிங்க் பாட்டான விண்ணைக்காப்பான் ஒருவன்,,பாட்டில் விஜய் -ன் டான்ஸ் வழக்கம் போல் கலக்கல்.அதேபோல் ஓப்பனிங்க் பாக்சிங்க் ஃபைட்டில் அவரது ஆக்ரோஷம் அப்ளாஸ் அள்ள வைக்கும் நடிப்பு.

டான்ஸ் மாஸ்டரை காலேஜை விட்டு துரத்தி விட்டு விஜய் டான்ஸ்
பிராக்டீஸ் தருவது செமயான சீன் தான். ஆனால் அந்தக்காட்சியில் விஜய்
இன்னும் நல்லா பண்ணி இருந்திருக்கலாம்.( வாடி வாடி கை படாத சி டி பாட்டு
 டான்ஸ் மாதிரி அந்தப்பாட்டை கலக்கல் ஹிட் ஆக்கி இருக்க வேண்டியதை
ஹேர் இழையில் தவற விட்டு விட்டார்கள்.)

அசினின் நடிப்பில் பழைய நளினம் மிஸ்ஸிங்க்.கஜினி ஹிந்தி படத்துக்குப்பிறகு  அவரிடம் பழைய துள்ளலை பார்க்க முடிய வில்லை.இருந்தாலும் கதையின்  தன்மையும், கேரக்டரின் போக்கும் அந்தக்குறை பெரிய அளவில் தெரியாமல்  மறைத்து விடுகிறது.
http://www.4tamilmedia.com/ww5/images/stories/cinema/kavalan.jpg
காமெடியில், செண்ட்டிமெண்ட்டில் வசனகர்த்தா கலக்கிய இடங்கள்

1. ராஜ் கிரண் - நம்பிக்கைக்கு உரியவன் எதிரியா இருந்தாலும் மன்னிப்பேன்.
ஆனா நம்பிக்கை துரோகி நண்பனா இருந்தாலும் மன்னிக்க மாட்டேன்.

2. பேர் வைக்கிறவன் குணம் தான் குழந்தைக்கு வரும்..

3. பலம் பலவீனத்தை அடக்கி ஆள்றது நாட்டுக்கு ஒத்து வராது,காட்டுக்குத்தான் அது சரி .அன்பாலதான் எதிரியை ஜெயிக்கனும்.

4. இனிமே டியூட்டிங்கற போர்வைல லேடீஸ் டாய்லெட் இருக்கற பக்கம் போவியா?

உங்க அனுமதி இல்லாம போகமாட்டேங்க எங்கேயும்.
.
சரி சரி போ..

எங்கே ?லேடீஸ் டாய்லெட்டுக்கா?

5. காலேஜ் புரொஃபசர் லிவிங்க்ஸ்டன் - எப்போ பாரு இவன் லேடீஸ் டாய்லெட் பக்கமே போறானே.. அப்படி அங்கே எனதான் இருக்கும்?நாமும் போய் பார்ப்போம்..

6. வடிவேல் - பார்வதி நம்பியார்னு சொல்றியே.. அது யாரு?

ஹய்யோ.. அது பார்வதி நம்பியார் இல்லை.. பிரைவேட் நெம்பர்.

7. விஜய் - நான்சென்ஸ்.. ஸ்டுப்பிட்

வடிவேல் - கூப்பிட்டீங்களா? பாஸ்?

விஜய் - இல்லை.. உன்னை திட்டுனேன்..

8. வடிவேலுவின் ஃபிகர் - பாடிகார்டு இப்போ யூனிஃபார்ம் போடல..


வடிவேல் - உனக்கு எப்படி தெரியும்?


ரூம்ல எட்டிப்பார்த்தேன்.

பாத்துட்டியா?எவ்வளவு தைரியம் இருந்தா அதை என் கிட்டேயே வந்து சொல்வே?


9. நல்லா வேலை செய்யறதால ஓனர் அவளை எப்பவும் பிரக்னெண்ட்டா வெச்சிருக்காரு..


என்னது?இங்கிலீஷ் தெரியலைன்னா பரவால்ல ,அதை கொலை பண்ணாதே.. பர்மணண்ட்டா வெச்சிருக்காரு.

10. எதுக்குடா அடி வாங்குனே?

நான் என்ன அமவுண்ட் குடுத்தா வாங்குனேன்?

சரி எத்தனை பேர் அடிச்சாங்க?

 கவுண்ட் பண்ண எல்லாம் டைம் இல்ல.

11. டாக்டரை பார்க்கப்போறேன்.

அவர் பேர் என்ன?

அது  அது.. வந்து பேர் தெரியாது.. ஆனா அவரை நான் டாக்டர் டாக்டர்னுதான் கூப்பிடுவேன்.

12. இப்போதான் முத தடவையா என் காதலியை பார்க்கப்போறேன்.

அவ அழகா இல்லைன்னா?

அழகுங்கறது கண்ணுக்குத்தானே.. மனசுக்கு இல்லையே?
http://reviews.in.88db.com/images/kaavalkaaran/kavalan-Latest-Movie-Stills-4.jpg
13. நீதான் அவ கூட சண்டை போட்டுக்கிட்டியே.. மறுபடி அவ கூப்பிடுவான்னு எப்படி நம்பறே..?

உண்மையான காதல் இருந்தா கண்டிப்பா கூப்பிடுவா..

14. ஆசைப்பட்டு அடையறதுக்கு இது பணம் இல்ல. குணம்.பிறப்புலயே வர்றது.

15. அசின் -டெயிலி யூனிஃபார்ம் போட்டுட்டு வர்றியே ,நீ என்ன எல் கே ஜி யா?

விஜய் - ஹி ஹி


வடிவேல் - அப்போ நீ எல் கே ஜி மாதிரி பெரிய பெரிய் படிப்பெல்லாம் படிச்சிருக்கிறியா? சொல்லவே இல்ல..

16. விஜய் -அயன்பாக்ஸ்ல சூடு பட்டதுல என் பேண்ட்ல ஓட்டை விழுந்திடுச்சு,

வடிவேல் -எனக்கு ஒரு டவுட், அயன்பாக்ஸ் ஒண்ணுதான் இருக்கு, ஆனா ஓட்டை 2 இருக்கே.. எப்படி?

17. ஃபோன் அவருது.. டோன் என்னுது..

என் லவ்வர் உனக்கு எதுக்கு ஃபோன் தரனும்?

18. ஆசைப்பட்டு ஆட்டையைப்போட்டிருந்தாலும் பரவால்லை,ஓட்டையை போட்டுட்டியே பேண்ட்ல..

19. தேவை இல்லாம தேரை இழுத்து தெருவுல விட்டது நீதானா..?

20. குள்ள அமிதாப் - என் உயரத்துக்கு இந்த மலர் மாலை ஆர்ச் மாதிரி இருக்கு..பூச்செண்டு இவ்வளவு பெருசு எதுக்கு?என் சைஸுக்கு ரோசாப்பூவே அதிகம்.

21. அவன் யாரு?     பாடிகாட்.


நீ யாரு?                       அவனுக்கு ஜோடிகாட்

22. நம்பறவங்களை அவன் சந்தேகப்பட மாட்டான்,ஏமாத்தவும் மாட்டான்.

23. வடிவேலுவின் ஆள் - நாங்க யாரும் பாடிகாட்டை முழுசா பார்த்ததில்லை.

வடிவேல் - நீ எதுக்கோசரம் அவனை அந்த கோலத்துல பாக்கனும்?

ஹய்யோ அவன் முகத்தை சொன்னேங்க..
https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjD1W7ZaY6mVAmAGI6LTQMxNw2PlVHW2K0X3REcID5LHw7NZY6Xa31So1U8cjsacvST_79WVdJLgak0MxDuOO-sbykGJjX5U-LAbYENRxiTxrI4uL7wP0xMG7XDFsp1aXQb9AEiI5BEKEA/s1600/kavalan16.jpg
யாரது? யாரது? பாட்டு நல்ல மெலோடி.பட்டாம்பூச்சி பாட்டில் விஜய் ஏன் எண்ணெய் வழிந்த முகத்தோடு வர்றார்னு தெரியல.

கண்ணுக்குள் நிலவு படத்துக்குப்பிறகு விஜய் இந்தப்படத்தில் இதுவரை காட்டாத பல ஃபேஸ் எக்ஸ்பிரஸ்ஸன்சை காட்டி கலக்கி விட்டார்.இந்தப்படத்தின் வெற்றி அவருக்கு புதிய தெம்பைத்தந்து தொடர்ந்து வித்தியாசமான கேரக்டர்கள் செலக்ட் பண்ண அடிகோலும் என எதிர்பார்க்கலாம்.

இந்தக்கதையில் ஆக்‌ஷன்,காமெடி இல்லாமல் முழு நீள காதல் படமாகவும் எடுத்திருக்கலாம்.. ஆனால் செக்யூரிட்டிக்காகவும்,கமர்ஷியல் காம்ப்ரமைஸூக்காகவும் அதை எல்லாம் மிக்ஸ் பண்ணி இருக்கிறார்கள். 

இந்தப்படத்தில் விஜய்க்குப்பஞ்ச் டயலாக்ஸே இல்லை.குடும்பத்துடன் காண வேண்டிய காதல் கம் காமெடி ஃபிலிம்.

ஏ செண்ட்டர்களில் 75 நாட்கள், பி செண்ட்டர்களில் 50 நாட்கள், சி செண்ட்டர்களில் 25 நாட்கள் ஓடலாம்.

எதிர்பார்க்கப்படும் ஆனந்த விகடன் மார்க் - 45

எதிர்பார்க்கப்படும் குமுதம் ரேங்க் - நன்று.

டிஸ்கி - இது ஒரு மீள் பதிவு..காரணம் திடீர்னு இந்த போஸ்ட்டையே காணோம்.என் பிளாக் பாஸ்வோர்டு எனக்குக்கூட அப்பப்ப மறந்துடுது.. சிலர் எப்படியோ கண்டு பிடிச்சு உள்ளே வந்து என்னென்னவோ பண்ணிடறாங்க..ம் ம்.

நான் யார் வழிலயும் குறுக்கிடறதில்லை.. மீறி என் வழில யாராவது குறுக்கிட்டா....ஹி ஹி ஒதுங்கி போயிடுவேன்.. அல்லது  ரிட்டர்ன் பேக் தான்..ஹா ஹா ( நம்மாலயே முடியல.. எதுக்கு பஞ்ச் டயலாக்?)

சிறுத்தை - செம ஸ்பீடு வித்தை - சினிமா விமர்சனம்

https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiAT9rtlW-A73SoPcBXfcFMt4yrG7gEFmlAKeFApv39nJCT9X48EICMI-uMIRleiyMHY2hWyCQd91jcxR_Iv8F99CPI-8z1iso0OWsMTN9lEQHDG8xbvb7-l-jm2R0L6WSleWfUOBwEXdHI/s1600/SIRUTHAI+%25285%2529.jpg 
20 வருஷங்களுக்கு முன் வந்த சிரஞ்சீவி படங்கள் ,பழைய எம் ஜி ஆர் படங்களில் வந்த டபுள் ஆக்ட் ஹீரோ சப்ஜெக்ட்தான் படத்தோட KNOT என்றாலும் இயக்குநர் சிவாவின் இயக்கத்தில படம் காமெடி பாதி,ஆக்‌ஷன் மீதி என கலக்கலான கமர்சியல் மசாலாவாய் இருப்பதை ஒத்துக்கொள்ளத்தான் வேண்டும்.


ஜாலிபாயாக இதுவரை கலாய்த்து வந்த கார்த்திக்கு இதில் போலீஸ் ஆஃபீசர் ரத்தின வேல் பாண்டியாக வெரைட்டி நடிப்பு காண்பிக்க வாய்ப்பு.மனிதர் பின்னி எடுத்து விட்டார்.அவரைப்போலவே இருக்கும் இன்னொரு கார்த்தி அவரது தம்பி என்று ஒரு ஃபிளாஸ்பேக் வைக்காமல் விட்டது ஒரு ஆறுதல்.                       ( ஃபிளாஸ்பேக் வைக்க எல்லாம் எங்கே நேரம் இருக்கு.. படம் பர பர என பறக்குது..)

படம் போட்ட முதல் 40 நிமிடங்கள் சந்தானம் கார்த்தி கூட்டணி செய்யும் காமெடிக்காட்சிகள் கலக்கல் ரகம்.நான் ரொம்ப ரொம்ப நல்ல பிள்ளை இல்ல, ஏய் ராஜா ராஜா ..ராக்கெட் ராஜா பாட்டு செம டப்பாங்க்குத்து.. தியேட்டரில் ஆடியன்ஸ் ஒரே ஆட்டம் பாட்டம்தான் அந்தப்பாட்டுக்கு..

காமனா (COMMON) எல்லாருக்கும் பிடிச்ச தங்க நிற லெமனா அழகு காட்டும் இடை அழகி தமனா ஓப்பனிங்க் சீன்ல ரோஜாப்பூக்கள் மேலே கொட்ட என்ன ஒரு கை தட்டல்.. ( ஓப்பனிங்க் சீன்ல இருந்தே அவங்க எல்லாமே ஓப்பனா இருக்கறது மனசுக்கு ரொம்ப ஆறுதல்)
http://tamildigitalcinema.com/wp-content/uploads/2011/01/Siruthai-New-Stills-42.jpg
திருடனாக வரும் கார்த்தி  யாரைப்பார்த்தாலும் ,எந்தப்பொருளைப்பார்த்தாலும்  என்ன ரேட்டுக்கு போகும் என பிரைஸ்டேக்குடன் கற்பனை பண்ணிப்பாக்கும் சீன் செம கலகல.

யாரோட முதலிரவு அறைக்குள்ளோ எதேச்சையாக நுழையும் கார்த்தி அங்கே இருக்கும் நகைகளை ஆட்டையைப்போடும் சீனும் தூள்தான். கண்ணா லட்டு திங்க ஆசையா? இன்னொரு லட்டு திங்க ஆசையா? விளம்பரத்தை சாமார்த்தியமாய் யூஸ் பண்ணியதற்கு இயக்குநருக்கு பாராட்டு.

கூட்டுக்களவாணிகளாக களம் இறங்கும கார்த்தி சந்தானம் கூட்டணி தமனாவைப்பார்த்ததும் பல்டி அடித்து திருடனைத்துரத்தறேன் பேர்வழி என சந்தானத்தையே பிடித்து மாட்டி விடும் காட்சி காமெடி களேபரம்.

ராக்கம்மா ராக்கு ராக்கு நெஞ்சுக்குள்ளே ராக்கெட்டு பாட்டும்,ஆட்டமும் தூள்மா.கார்த்தி என்னா உற்சாகமாய் படம் முழுக்க கலக்கறார்?தமனாவுக்கும் இவருக்கும் பாடி கெமிஸ்ட்ரி பிரமாதமாய் ஒர்க் அவுட் ஆவதும், படத்தின் தேவைக்கு மீறி இருவரும் அந்நியோன்யமாய் இழையோடுவதும் சிவகுமார் சிந்திக்க வேண்டிய விஷயங்கள். ( பத்த வெச்சுட்டியே பரட்டை..?)

இடைவேளை வரை காமெடி ,ஆட்டம், பாட்டம் ,கொண்டாட்டம் என செம ஸ்பீடாய் பாயும் சிறுத்தை இடைவேளைக்குப்பிறகு ஆக்‌ஷனுக்கு மாறுது,. அதுக்குப்பிறகு தமனா அம்போ என விடப்படறார்.வன்முறைக்காட்சிகளை இன்னும் குறைத்திருக்கலாம். 

போலீஸ் ஆஃபீசர் கார்த்தியின் மகளாக வரும் பேபி கொள்ளை அழகு, அஞ்சலிப்பாப்பா பேபி ஷாம்லி மாதிர் சாயல்.நடிப்பும் அருமை.எதிர்காலம் இந்தபேபிக்கு நல்லாருக்கும்.
http://gallery.nkl4u.in/wp-content/gallery/shuruthi-1/siruthai_new_stills-1.jpg
வசனகர்த்தாவாக இயக்குநர் சீறிப்பாய்ந்து கோல் அடித்த இடங்கள்.

1. உன் வீட்ல ஸ்ரீதேவி குடி இருக்கா..

போன வாரமே அவ காலி பண்ணீட்டு போயிட்டாளே...

மூதேவி.. அந்த ஸ்ரீதேவி இல்லை... அதிர்ஷ்ட தேவதை ஸ்ரீதேவி...

 2.  செலவே இல்லாம மொட்டை போடறது எப்படி?

சந்தானம் - பிளேடே இல்லாம கூட மொட்டை போடலாம்.

எப்படி?

சந்தானம் - உன் மண்டைல இருக்கற ஒவ்வொரு முடியா  பிடுங்கி..


3.  மொட்டைய போடாம ஆட்டைய போட்டால் நிறைய கில்மாக்கள் சிக்கிடும் போல இருக்கே.. அய்யய்யோ 300 பருத்தி வீரர்கள் மாதிரி இத்த்னை பேர் துரத்திட்டு வாராளுகளே..

4. ஃபிரண்டு விஷயத்துல கணக்கு பார்க்க மாட்டேன்.. கணக்கு விஷயத்துல ஃபிரண்டு பார்க்க மாட்டேன்..

5. நல்ல குடும்பத்துல பொறந்த யாரும் பொம்பளைங்க மேல  கை வைக்க மாட்டாங்க..( அடிக்க)

ரொம்ப் தாங்க்ஸ் தம்பி...

ஆனா நான் நல்ல குடும்பத்துல பிறக்கல.. இப்போ பாரு.. ஒரே மிதிதான்.

6. ஒரு அட்டு ஃபிகரு - எதுக்கு என்னை கட்டிப்பிடிச்சே..?

சந்தானம் - இந்தக்கூட்டத்துலயே நீதான் சுமாரா இருந்தே.. இந்தா பூ..

த்தூ..

சந்தானம் - எதுக்கு இப்போ பூவுக்கு தண்ணி ஊத்தறே..?

7. சந்தானம் - டேய்.. வாழ்க்கைல நான் எத்தனையோ ஷாப்ல திருடி இருக்கேன்... ஆனா முத முறையா என்னை மெடிக்கல் ஷாப்ல திருட வெச்சுட்டியே..? என்னா ஒரு அடி.. பின்னீட்டாங்களே..

8. கார்த்தி - மேடம் .. நீங்க சின்ன வயசுல இருந்தே இப்படித்தான் பிரைட்டா இருந்தீங்களா?இல்ல இடைல இப்படி ஆனீங்களா?

9. சந்தானம் - அவன் என்ன சொன்னாலும் இவ நம்பீடறாளே.. சச்சின் டெண்டுல்கர் நான் தான்ன்னு சொன்னாக்கூட நம்பிடுவா போல இருக்கே..
சக்க ஃபிகருன்னு பார்த்தா இப்படி மக்கு ஃபிகரா இருக்கே..

10. கார்த்தி -ஹி ஹி நான் லவ் பண்றேன்..

சந்தானம் - நீ என்ன கிரகத்தை வேணாலும்  பண்ணீக்கோ..ஆனா இப்படி வெக்கப்படாதே..


11.. சந்தானம் - டேய் .. போதும் கையை எடுடா.. ஜாக்கெட்டை அவுத்துடப்போறே..

12.  பொடியன் - அண்ணே .. என் கூட விளையாட வர்றீங்களா?

சந்தானம் - டேய்.. பவுடர் அடிச்ச பன்னிக்குட்டி மாதிரி இருந்துட்டு.. என்னை விளையாடக்கூப்பிடறியா..?

13. அது என்ன மாயமோ, மந்திரமோ தெரியலங்க.. நான் சின்ன வயசுல இருந்தே ரொம்ப நல்லவனா வளர்ந்துட்டேன்..

14. கார்த்தி -  டேய்.. அந்தப்பாப்பா என்னை அப்பான்னு கூப்பிடுதே..

சந்தானம் - எனக்கு என்ன தெரியும்.? நான் என்ன விளக்குப்பிடிச்சா பார்த்தேன்..?எங்கெங்கே போனியோ?

15.      தமனா - ஏன் இந்த ரூட்ல போறீங்க? மெயின் ரூட்ல போலாமே.. 

கார்த்தி - ஹி ஹி இந்த ரூட்லதான் நிறைய ஸ்பீடு பிரேக்கர்ஸ் இருக்கு.. 
( நோட் பண்ணுங்கப்பா) 

16. ஆம்பளைங்க நாங்க எதுவுமே தெரியலைனாலும் எல்லாமே தெரிஞ்ச மாதிரி பேசுவோம்..ஆனா பொம்பளைங்க நீங்க எல்லாமே தெரிஞ்சிருந்தாலும் ஒண்ணுமே தெந்ரியாத மாதிரி நடந்துக்குவீங்க..  ( செம கிளாப்ஸ்)


17. சந்தானம் - ஆளாளுக்கு ஏன் டேய்-ங்கறீங்க.. டேய்ங்கறது ரவுடிங்களோட ரிங்க் டோனா? ( கலக்கலான கவுண்ட்டர் டயலாக்)

18. மக்கள் மனசுல 100 வருஷம் நிலைச்சு வழனும்னா 100 வருஷம் உயிர் வாழனும்னு அவசியம் இல்ல..ஒரு நாள் ஒரே ஒரு நாள் நல்ல படியா வாழ்ந்தா போதும்.

19. வில்லன் - சார்.. அவன் அப்படி பண்ணீட்டு போறான்.. கண்டுக்காம நிக்கறீங்களே..

பானுச்சந்தர் - ஊர்ல எந்த அநியாயம் நடந்தாலும் கண்டுக்காத மாதிரி இருந்துக்கோன்னு நீங்கதானே சொன்னீ ங்க ..

20.  பயம் இல்லாதவன் மனுஷனே கிடையாது.. பயத்துக்குன்னு ஒரு மரியதை இருக்கு.
 http://tamildigitalcinema.com/wp-content/uploads/2010/10/apoorva.jpg
பொதுவா டபுள் ஆக்ட் படத்துல ஆள்மாறாட்டம் பண்றப்போ 2வதா வர்றவர் முதல் ஆள் ,மாதிரி நடந்துக்க முயற்சி பண்ணுவார்,ஆனா இதுல போலீஸ் ஆஃபீசர்  கார்த்தி மாதிரி நடிக்க வேண்டிய சூழல்ல திருடன் கார்த்தி காமெடியா திருடன் ஸ்டைல்லயே நடந்துக்கறது புதுசு..

    இயக்குநர் சறுக்கிய இடம் 

தமனாவின் இடையில் ஒரு மச்சம் இருப்பது மாதிரி அடிக்கடி காண்பித்து விட்டு ஒரு பாடல் காட்சியில் அந்த மச்சம் இல்லாதது மாதிரி காண்பித்தது  கண்ட்டின்யூட்டி மிஸ்சிங்க்.. ( ஹி ஹி நாங்க எல்லாம் படத்தை ரொம்ப உன்னிப்பா பாக்கறவங்க.)

                                                                                                                                                                இந்த மசாலா ஃபார்முலா ஒர்க் அவுட் ஆனதால் கார்த்தி இதே திசையில் பயணிக்காமல் வெரைட்டி ரோல் நடிப்பது நல்லது..இயக்குநர் சிவா கோலிவுட்டின் முக்கியமான கமர்சியல் மசாலா டைரக்டர் ஆகி விட்டார்.

ஏ செண்ட்டர்களில் 92 நாட்கள் ( ஏப்ரல் 14 வருதே)

பி செண்ட்டர்களில்  50 நாட்கள், சி  செண்ட்டர்களில் 25 நாட்கள் ஓடும்.

எதிர்பார்க்கப்படும் ஆனந்த விகடன் மார்க் - 43

எதிர்பார்க்கப்படும் குமுதம் ரேங்க் - ஓக்கே

டிஸ்கி -1. நேற்று தமிழ்மணத்தில் ஏதோ பிரச்சனை, ஓட்டுப்பட்டை வேலை செய்யலை.. அதனால அதுல யாரும் ஓட்டுப்போடலை..டைம் இருந்தா போய் போடுங்க

ஆடுகளம் - அதகளம் - சினிமா விமர்சனம்

டிஸ்கி 2 - காவலன்  இன்னைக்கு ரிலீஸ் ஆகிடுச்சு. 4 மணிக்கு விமர்சனம் போடறேன்

டிஸ்கி 3 - கடைசியா போட்டிருக்கற ஸ்டில் படத்துல கெஸ்ட் ரோல்ல வர்ற அபூர்வா.

Friday, January 14, 2011

ஆடுகளம் - சினிமா விமர்சனம்

 https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiBvdyTNlnjXWsGlmtKE5kcE_ETgnL5I2GYY3d0eFmwkvvmk_Zuos6hSw1PSdoTH9MQtUNormbwxQTCZB7CIWEJrjoGziK8om7X-OaA0wKbB-7M7cbIM-XGuw-dfsl49srDXwsrq6eiM0Bu/s640/6.jpg
சேவல் சண்டையை மையமாக வைத்து ஒரு கிராமியக்கதையை இவ்வளவு சுவராஸ்யமாய் எடுக்க முடியும் என்று நிரூபித்ததற்காகவே இயக்குநருக்கு ஒரு ஷொட்டு.பொல்லாதவன் படத்துக்குப்பிறகு இயக்குநர் வெற்றி மாறனுக்கு கிடைத்த பொங்கல் ஹிட்டு.

மனிதனுக்கு கிடைக்கும் வெற்றி,போதையைக்கொடுத்து அதை தக்க வைத்துக்கொள்ள என்ன வேண்டுமானாலும் அவனை செய்ய வைக்கும்  என்ற உளவியல் தத்துவத்தை அட்டகாசமாய் வெளிக்கொணர்ந்திருக்கிறார்.

ரெண்டே முக்கால் மணி நேரம் ஓடும் படத்தில் 30 நிமிடம் சேவல் சண்டையை திரில்லிங்காய் குடுத்திருப்பது புதுசு..படத்தில் தனுஷ் மதுரை வட்டார வழக்குத்தமிழ் பேசி ஜெயித்திருக்கிறார்.ஹீரோயின் புதுமுகம்.கிட்டத்தட்ட பிரியாமணியின் சாயல் (குரல் மட்டும் அதே மாதிரி கட்டைக்குரல்)நல்ல ஃபிகர்தான்.ஆங்கிலோ இண்டியன் மாதிரி காண்பித்திருக்க வேண்டிய அவசியமே இல்லை.
http://www.koodal.com/cinema/koodal_reel/2010/Aadukalam-reel-27.jpg
அப்படி காண்பித்ததால் தேவை இல்லாமல் ஆங்கில வசனங்கள் பேச வைத்தது கிராமியக்கதைக்கு அந்நியம் சேர்க்கிறது.ஹீரோயினை தன்னை லவ் பண்ணுவதாக 2 பேர் சொல்ல ,ஏம்மா.. நீ யாரை லவ் பண்றே? என கேட்க ஹீரோயின் ஹீரோவைக் கை காண்பிக்கையில் தனுஷின் ஃபேஸ் எக்ஸ்பிரஸ்ஸன்ஸ் அருமை.

அந்த ஃப்ளோவில் வரும் டப்பாங்குத்துப்பாட்டு இசை அமைப்பாளர்,நடன இயக்குநர்,இயக்குநர் அனைவரும் கலக்கி எடுத்த கலக்கல் காக்டெயில் நடனம்.

அதே ஹீரோயின்  அவன் என்னை உன்னை விட அதிகமா டார்ச்சர் பண்ணுனான்,அதனாலதான் உன்னை லவ் பண்றதா பொய் சொன்னேன் என பல்டி அடிக்கும்போது தனுஷின் சோக நடிப்பும் கன கச்சிதம்.


படத்தின் கதைக்களன் சேவல் சண்டைதான் என்பதையும்,கதை நடப்பது கிராமத்தில் தான் என்பதையும் அடிக்கடி நினைவுபடுத்த சேவலின் கொக்கரக்கோ சத்தத்தை அடிக்கடி யூஸ் பண்ணி இருப்பதும் அவசியமே இல்லாதது.

மனிதனுக்கு பந்தயம் ,போட்டிகளில்,சூதாட்டத்தில் ஏற்படும் வெறியை நிதர்சனமாய் காண்பித்து பார்வையாளர்களுக்கும் அந்த வெறியை ஏற்படுத்துவதில் இயக்குநருக்கு வெற்றியே..

சேவல் சண்டையை கிராஃபிக்ஸில் எடுத்தது தெரியாத அளவு ஒளிப்பதிவாளர் பாடுபட்டு அழகாக சமாளித்து இருக்கிறார்.படத்தில் வில்லனாக வருபவர் உண்மையில் ஒரு கவிஞர்.தாத்தா மாதிரி இருக்கும் அவருக்கு அவரை விட 30 வயது இளைய பெண் காதலித்து மனைவி ஆனவர் என்பது நம்பும்படி இல்லை.

அதே போல் தனது மனைவியை அவர் சந்தேகப்படும் சீனும் எடுபடவில்லை.ஆனால் அந்த சீனில் மனைவியாக நடிப்பவரின் பிரமாதமான நடிப்பு மைனசை போக்கி விட்டது.


வசனகர்த்தாவாக இயக்குநர் ஜொலித்த இடங்கள்

1. இப்படியே தனியா பேசிட்டு இரு, சீக்கிரம் மெண்ட்டல் ஆகிடுவே...

சரி சரி விடம்மா.. உன் பையன் உன்னை மாதிரிதானே இருப்பான்..?

2. சும்மா ஜாலிக்காகத்தான் அவ கூட சுத்துனேன்.நேத்துதான் அவங்கப்பனைப்பார்த்தேன்,இனி நாமதான் அவளை கவனமா ,நல்லப்டியா பாத்துக்கோணும்னு அப்பவே முடிவு பண்ணீட்டேன்.


3. வேட்டைக்காரன் சாவு வீரமாத்தான் இருக்கோணும்,சாவே வந்தாலும் களத்துக்கு வெளில வந்த பிறகுதான் சாகனும்.

4.எனக்கு ஒரு பிரச்சனைன்னு வந்தப்ப என் கூடவே 10..15 வருஷமா இருந்த யாரும் ஹெல்ப் பண்ணலை,அவந்தான் உதவி செஞ்சான்..அவன் கெட்டவனா இருந்தா என்ன?

5. மனுஷனுக்கு ஒரு பிரச்சனை வரும்போது அவன் சவுகர்யத்துக்கு மாறிடறான்,அவனோட அடிப்படை  குணங்கள் மாறிடுது.

6. போலீஸ்காரன் புத்தி திருட்டு புத்தின்னு நிரூபிச்சுட்டியே,....

7. எனக்கு ரூ 2000 அவசரமாத்தேவைப்படுது.

சரி.. இந்தா..

ஓக்கே.என்னை லவ் பண்றதா சொல்லி ஏமாத்துனியே.. அதுக்கு ஃபைனா இதை நினைச்சுக்கோ...

8. தோத்திடுவோம்னு பயமா?

பயமா? எனக்கா? நாங்க எல்லாம் சுனாமிலயே ஸ்விம்மிங்க் பண்ற ஆளுங்க

(இந்த வசன பஞ்ச்சுக்கு தியேட்டரில் இருந்த தனுஷ் ரசிகர்கள் 22 பேரும் கை தட்டுனாங்க)

9. ஏய்.. எதுக்காக இப்போ என் கையை பிடிச்சே?

அது வந்து... சேஃப்டியா கூட்டிட்டு போறதா வாக்கு குடுத்துட்டேன்,, அதான்..

10. இப்போ நான் யாருமே இல்லாத தனியனாய் ஆகிட்டேன்,அதிர்ஷ்டத்துல ஜெயிச்சவன் எல்லாம் என்னைப்பார்த்து எள்ளி நகையாடறான்.

11.எங்கப்பாவோட தோத்த முகத்தை என்னால பாக்க முடியல.

12,  சந்தோஷமா இருக்கறதுக்கு காசு ,பணம்,ஸ்டேட்டஸ் எதுவும் தேவை இல்லைன்னு உன்னைப்பார்த்த பிறகுதான் தெரிஞ்சுக்கிட்டேன்.

13.  என்ன ..தயங்கறே..கேளு..

வந்து.. வந்து.. ஒரு கிஸ் அடிச்சுக்கிட்டா?

14.இத்தனை  நாளா நீ இங்கிலீஷ்ல பேசுனது புரியல.. இப்போ நீ தமிழ்ல பேசுறதும் புரியலயே..அது ஏன்?

15. என் பையன் உருப்பட்டுடுவான்.. என்னை சாகற வரை சந்தோஷமா வெச்சுக்குவான்னு நினைச்சேன்,, ம் ம் 

16. எங்கம்மா உயிரோட இருந்தவரை அவங்க எவ்வளவு முக்கியமானவங்கன்னு எனக்கு தெரியாமயே போச்சு..

17. மத்த ஜாதிப்பையனோட ஓடிப்போன பொண்ணு கடைசி வரை சந்தோஷமா இருந்ததை சரித்திரம் இதுவரை பார்த்ததில்லை..

18. அப்பன்கறது யாரு? ஆத்தா கூட படுத்து பிள்ளை பெத்துக்கறது மட்டும் இல்ல..பிள்ளையோட கையைபிடிச்சுக்கூட்டிட்டுப்போய் இதுதான் உலகம்னு காண்பிக்கனும்,

19. அண்ணே... ஏண்ணே இப்படிப்பண்ணீட்டே..?நீ பண்றது எனக்குப்பிடிக்கலை..செத்துப்போன்னு சொல்லி இருந்தாக்கூட செத்துப்போயிருப்பேனே....ஏன் நம்பிக்கை துரோகம் பண்ணுனே..

20. நாங்க எல்லாம் அம்பானிக்கே அட்வைஸ் தர்றவங்க..நமக்கே ஐடியாவா? 



இயக்குநர் சறுக்கிய இடங்கள்


1.ஹீரோ பந்தயத்தில் ரூ 10 லட்சம் ஜெயித்த பிறகு ஹீரோயின் லவ்வுக்கு ஓக்கே சொல்வது மாதிரி காட்சி வைத்து பெண்கள் எப்பவும் சேஃப்டி சைடு என்று தவறாக சொல்லப்படும் கருத்துக்கு ஆமாம் சாமி போட்டிருக்கிறார்.

2. என்னதான் கிராமங்களில் சேவல் சண்டை ஃபேமஸ் என்றாலும் ,சேவல் டோர்ணமெண்ட்டை விட்டால் வேறு உலகமே இல்லாதது மாதிரி திரைக்கதை அமைத்த  விதம்.

3.கலக்கல் ஃபிகராய் இருக்கும் ஹீரோயின் கசங்கிய சட்டை மாதிரி இருக்கும் ஹீரோவை லவ் பண்ணுவதற்கு நியாயமான காரணம் சொல்லாதது...


4.குழந்தைக்கு காது குத்தும் சீனை இவ்வளவு க்ளோசப்பில் காட்ட வேண்டுமா?கிராமப்படங்கள் எல்லாவற்றிலும் இது வருகிறது.

5.படம் முழுக்க யாராவது லொட லொட என பேசிக்கொண்டே இருப்பது ஓவர்.
பாதி வசனம் புரியவே இல்லை.

6. படம் பெரும்பாலும் இரவில் தான் நடக்கிறது என்பதால் ஒளிப்பதிவிலும் இருட்டாக காட்ட வேண்டிய கட்டாயம். இதை தவிர்த்திருக்கலாம்.

பாடல்கள் ஏற்கன்வே ஹிட். 3 பாடல்கள் நல்லாருக்கு.

வெற்றி பெறுவது பெரிசில்லை..அந்த வெற்றியை தக்க வைத்துக்கொள்ள வேண்டும்...மனிதனுக்குப்பொறாமை கூடாது. எதிரியை அஹிம்சை வழியிலும்,சரண்டர் முறையிலும் வீழ்த்தலாம் என புது ரூட் போட்டு ஜெயித்திருக்கிறார்.சேவல் சண்டையை இவ்வளவு விஸ்தீரமாக காட்டியதில்லை என்ற அளவிலும் இது ஒரு முக்கியப்பதிவாக அமைகிறது.


எதிர்பார்க்கப்படும் ஆனந்த விகடன் மார்க் - 44


எதிர்பார்க்கப்படும் குமுதம் ரேங்கிங்க் - நன்று


ஏ செண்ட்டர்களில் 50 நாட்கள்,  பி செண்ட்டர்களில் 30 நாட்கள்,  சி செண்ட்டர்களில் 20 நாட்கள் ஓடலாம்.

பொங்கல் ரிலீஸ் படங்கள் - ஒரு பார்வை

http://www.tamilmaxs.com/Admin/event/1085_thamna.jpg

1. சிறுத்தை - பொங்கலுக்கு ரிலீஸ் ஆகற படங்கள்லேயே ரொம்ப
பிரம்மாண்ட படைப்பும், பெரிய பேனர்,ஸ்டார் வேல்யூ உள்ள படமும்
இதுதான்.ஆனால் டிரெயிலரைப்பார்த்தால் படு டப்பா படம் போல் தோணுது.
தெலுங்கு ரீமேக்னு அவங்களே ஓப்பனா சொல்லீட்டாங்க..அடிதடி வெட்டு குத்து வன்முறைன்னு படம் பக்கா மசாலாவா இருக்கும்.சந்தானம் காமெடி படத்துக்கு பிளஸ் ஆக இருக்கும்னு எதிர்பார்க்க முடியாது.. இந்த மாதிரி ஆக்‌ஷன் ரீவேஞ்ஜ் சப்ஜெக்ட்ல காமெடி சும்மா ஊறுகாய் மாதிரிதான் இருக்கும்.தமனா செம கிளாமரா இதுல
நடிச்சிருக்கறதா கேள்விப்பட்டேன். கார்த்தி - தமனா கெமிஸ்ட்ரி ஏற்கனவே பையா படத்தில் ஒர்க் அவுட் ஆனதால் இதிலும் காதல் காட்சிகள் பட்டாசைக்கிளப்பும் என எதிர்பார்க்கலாம்.

ஆனால் என்னைப்பொறுத்தவரை இந்த மாதிரி வன்முறையைத்தூண்டும் மாமூல் மசாலாப்படங்களோ,தெலுங்கு ரீமேக்குகளோ ஹிட் ஆகாமல் இருப்பதே நல்லது மினிமம் பட்ஜெட் படங்கள் ஹிட் ஆனால்தான் கதாசிரியருக்கும், நம்மைப்போன்ற இளம் படைப்பாளிகளுக்கும் வாய்ப்பும்,மரியாதையும் கிடைக்கும்.

ஹீரோயிச படங்கள் ஹிட் ஆவதால் மேலும் மேலும் அவர்களது சம்பளம் உயருமே தவிர கோலிவுட்டில் ஆரோக்கியமான சூழல் நிலவாது.கதைக்கு முக்கியத்துவம் உள்ள படங்களே ஹிட் ஆக வேண்டும்.

ஈரோட்டில் இந்தப்படம் 4 முக்கிய தியேட்டரில் ரிலீஸ் ஆகுது. அபிராமி தியேட்டரில் காவலன் ரிலீஸ் ஆகும் என எதிர்பார்த்தேன்,ஆனால் தியேட்டர் மேனேஜர் சிறுத்தையை அபிராமியில் போட்டு,காவலனை தேவி அபிராமியில் ரிலீஸ் பண்ண முடிவெடுத்து விட்டார்.( அபிராமியில் 1280 சீட்,தேவி அபிராமியில் 680 சீட்) அவரது கால்குலேஷன் மிஸ் ஆகி
சிறுத்தையை விட காவலன் ஹிட் ஆகட்டும் என வாழ்த்துகிறேன்.(!?)
http://narumugai.com/wp-content/uploads/2011/01/Tapsee.jpg
2. ஆடுகளம் - தனுஷ் படம் என்பதால் அல்ல படத்தின் இயக்குநர் வெற்றிமாறன் என்பதால் இதற்கு எதிர்பார்ப்பு அதிகம். படத்தின் ஹீரோயின் புதுமுகம் என்பதாலும், பார்ட்டி நல்ல ஃபிகர் மாதிரி உத்தேசமான ட்ரெயிலர் பார்வையில் தெரிவதாலும் இளைஞர்களின் ரசனைக்குத்தீனி கன்ஃபர்ம்.பெரிய எதிர்பார்ப்புகள் இல்லாத படம் என்பதே இதற்கு ஒரு பிளஸ் பாயிண்ட்.எந்தப்படம் அதிக எதிர்பார்ப்புக்குள்ளாகிறதோ, அது ஃபிளாப் ஆவதும் சத்தமே இல்லாமல் ரிலீஸ் ஆகும் படங்கள் ஹிட் ஆவதும் கோலிவுட்டுக்கு புதுசில்லை.

பெரிய பட்ஜெட் படங்களான சிறுத்தை,காவலன் ஆகிய படங்களுக்கு
நல்ல நல்ல தியேட்டர்கள் புக் ஆகி விட்டதால் இந்தப்படத்துக்கு
சுமாரான தியேட்டரே கிடைச்சிருக்கு. பார்ப்போம்.
http://www.123tamilcinema.com/images/2010/11/Kaavalan-e1290671207347.jpg
3. காவலன். - தொடர்ந்து 6 தோல்விபடங்கள் கொடுத்து விட்டதால்
விஜய் இந்தப்படத்தில் ஜெயித்தே ஆக வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறார்.
காமெடியை நம்பினோர் கைவிடப்படார் என்பது அனைத்து மொழிகளிலும்
நிரூபிக்கப்பட்டது என்பதாலும் ,ஏற்கனவே சூப்பர் ஹிட் படமான ஃபிரண்ட்ஸ்
பட இயக்குநர் சித்திக்கின் படம் என்பதாலும் இந்தப்படம் குடும்பத்துடன்
பார்க்கும்படி இருக்கும் என நம்பி போகலாம்.

ஏற்கனவே மலையாளத்தில் இந்தப்படம் ஹிட் ஆகி இருக்கிறது
என்பதும், அந்த படத்தை பார்த்தவர்கள் படம் நல்லாருக்கு என கருத்து சொல்லி
இருப்பதாலும் விஜய்யும், அவரது ரசிகர்களும் தெம்பாக இருக்கிறார்கள்.

அசின் ஜோடி என்றாலும் இன்னொரு ஃபிகரும் தட்டுப்படுது.பார்ட்டியும் ஷோக்காத்தான் இருக்கு.ஒளிப்பதிவு நல்ல கிளாரிட்டி.எனது தனிப்பட்ட எதிர்பார்ப்பு இந்தப்பொங்கலில் ஹிட் அடிக்கப்போவது காவலன் தான் .
http://tamil.chennaivision.com/wp-content/uploads/2010/11/ilaignan.jpg
4. இளைஞன் - இந்தப்படத்தின் விளம்பரங்களில் உங்கள் அபிமான தியேட்டர்களில் ட்ரெயிலர் அதிர்கிறது என வாசகம் வந்தது செம காமெடி.கலைஞர் வசனம் என்பதால் எப்படியாவது ஒப்பேற்றி விடலாம் என நினைக்கிறார்கள்.பாடல் ஆசிரியர் விஜய் ஜஸ்ட் பாஸ் ஆவது ஆக வேண்டும் என பிரார்த்தித்தபடி இருக்கிறார். ட்ரெயிலரை பார்த்தால் படம் பத்தோடு பதினொண்னு அத்தோட இதுவும் ஒண்ணு என்றே தோணுது.

டிஸ்கி -1 ; கடைசியா வந்த தகவல்படி (ஆமா,இவரு பெரிய நியூஸ் சேனல் நடத்தறாரு..) காவலன் இன்னைக்கு ரிலீஸ் ஆகலை.

டிஸ்கி 2 : நான் ஆடுகளம் படம் விமர்சனம் டைப் பண்ணிட்டு இருக்கேன். 5 மணிக்கு  போட்டுடுவேன்.( ஆமா, இவரு எவரெஸ்ட் சிகரத்தை டச் பண்ணீட்டாரு, இந்தியக்கொடியை நட்டு மானத்தை காபாத்தப்போறாரு...)

கோக்கு மாக்கு ஜோக்கு - BY ''A" பேக்கு 21+

http://data1.crowdreel.com/2010/07/14-05/9ec765e17e296866ab1bb8a20c952480736a12a7_thumb.jpg

1. அன்று அவளைக்காதலிக்க காலேஜுக்கு கட் அடித்தேன்.
இன்று அவளை மறக்க டாஸ்மாக்கில் கட்டிங்க் அடிக்கிறேன்.

வாழ்க குடி... வளர்க குடி மக்கள்.. வெளங்கிடும் நாடு.


----------------------------------------------------------------------
2. ஒரு கேவலமான கவிதை ( நாம என்னைக்கு நல்ல கவிதை எழுதி இருக்கோம்?)

அவள் மழையில் நனைந்து வந்த போதுதான்
எனக்கே நம்பிக்கை வந்தது ,காதல் மீது அல்ல
கடவுள் மீது..

ங்க்கொய்யாலே.. இத்த்னை நாளா மேக்கப் போட்டு ஏமாத்தி இருக்கா..


----------------------------------------------------------------------------------------------------
3. நம்மளை மாதிரி வாலிப பசங்க பைக் ஓட்டறப்ப யார் யார் எல்லாம் என்ன சொல்வாங்க?

1. அம்மா - நான் உட்கார மாட்டேன்,பயமா இருக்கு.

2. அப்பா
- உன் கூட மனுஷன் வருவானா?

3.காதலி - டேய்..வேணாம்,, ஆக்சிடெண்ட் பண்ணிடுவே,,..

4. நண்பன் - ஓட்றா மச்சான்,செத்தா ஒண்ணா சாவோம்

நண்பேண்டா....நண்பேண்டா....


_--------------------------------------------------------------------------------

4. டார்லிங்க்..வீட்டோட மாப்பிள்ளையா இருப்பீங்களா?ன்னு எங்கப்பா
கேட்கறார்...

டியர்.. உங்கப்பனுக்காக இல்லாட்டாலும் ,உன் தஙச்சிக்காக இருக்கேன் செல்லம்.

மச்சினி ராக்ஸ்.

____------------------------------------------------------------------------------
https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjF4TbLcPldVJICBaaTs_SyyjPwZERBxLCJrj5ryBTz3rpQKguNzH_0eWKKJUVf5hvtRBx3C1c1w2k5ZQH-u6gyujpyPYJy-EsseHZ5sTu38BKKUD9svpYJrEV5poUPH_NPcmKr_7vr2lo/s1600/jun08.jpg
5. டீச்சர் - எல்லாரும் அவங்கவங்க லவ்வர் பெயரை எழுதுங்க....

பசங்க 30 செகண்ட்ஸ் கழித்து   “ எஸ் மிஸ்.. முடிச்சிட்டோம்..”

பொண்ணுங்க 10 நிமிஷம் கழிச்சு , “ மிஸ் ,அடிஷனல் ஷீட் வேணும்...

ஃபிகர்ஸ் ராக்ஸ்.

--------------------------------------------------------------------------
6. கல்யானத்துக்கு முன்னால காதலன்

அன்பே..நீ இன்றி நான் இல்லை..நான் இன்றி நீ இல்லை.

கல்யாணத்துக்குஅப்புறம் கணவ்னான பின்னால

மவளே.. ஒண்ணு நீ இருக்கனும் ,அல்லது நான் இருக்கனும்.

-----------------------------------------------------------------
7.புரொடியூசர் - படத்தோட பேரைக்கேட்டாலே ஸ்கூல் ஸ்டூடண்ட்ஸ்
காலேஜ் ஸ்டூடண்ட்ஸ்,கவ்ர்மெண்ட்ஸ் ஆஃபீசர்ஸ், எல்லாரும் அதிரனும்,அந்த மாதிரி ஒரு டைட்டில் சொல்லுங்க...


சண்டே ஒர்க்கிங்க் டே  -ன்னு வைங்க.. அவனவன் ஆடிப்போயிடுவான்.

-------------------------------------------------------------

8. அன்பே.. நீ ஒரு நைட்டி போட்ட ரோஜா...

அப்போ நீங்க?

 ம் .. நான் ஒரு வேட்டி கட்டுன கூஜா...

(சரி சரி.. எல்லாரும் எடுபிடிங்கதான்.. அதையே நினைச்சுட்டு இருந்தா எப்படி?)

-----------------------------------------------
9.  GOLDEN WORDS  BY MALLIKAA SHERAAVATH (HINDHI KILMA JOLMA ACTRESS)

RAPE IS NOT A CRIME. THAT IS A SURPRISE SEX

பசங்க கஷ்டம் புரிஞ்ச மவராசி.. எங்கே இருந்தாலும் நல்லா இருக்கட்டும்.

---------------------------------------------

Thursday, January 13, 2011

மாயவலை -சினிமா விமர்சனம் 18+

https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEip-TTR4hH1DcuhdBoLa2ujGDcEiJGh6CCIKamh9INqcaNXmMze0HcbHhr_k9YBiDsAQL3fgFyCKhkgB8Hpypxm5UlAVzIYfGA0V8d44IXZiXeo3KmRkeAuONMX9djF9pHxTwdoOCPcl2Y/s320/Swetha510w070709_050.jpg
பொதுவா தீபாவளி,பொங்கல டைம்ல ஒரு வாரத்துக்கு முன்னால தியேட்டர்ல புது தமிழ்ப்படம் எதுவும் ரிலீஸ் பண்ண மாட்டாங்க..அந்த கேப்ல இந்த மதிரி சீன் படத்துக்கு மவுசுதான்.டம்மிக்கட்சியான பா .ம. க எலக்‌ஷன் டைம்ல மட்டும் செல்வாக்கோட வலம் வர்ற மாதிரி இது.

இப்போ நமக்கு(!?) முன்னால இருக்கற 2 சாய்ஸ்.. மல்லிகா ஷெராவத் நடித்த மல்லிகா காமினி,கீர்த்தி சாவ்லா நடித்த மாய வலை படமும். சமுதாய சீர்திருத்தவாதிகளிடம் விசாரித்தபோது மல்லிகா காமினி படம் டைட்டில் புதுசு படம் பழசு கதை ஆச்சு.அது ஏற்கனவே ஹிந்தியில் வந்து சக்கை போடு போட்ட மர்டர் படம்தானாம்.

ஏற்கனவே கடலை போட்ட சூப்பர் ஃபிகரிடம் மீண்டும் கடலை போடுவதை விட இதுவரை கடலை போடாத மொக்கை ஃபிகரிடம் கடலை போடுவதே சாலச்சிறந்தது என்ற தமிழனின் கொள்கைப்படி கீர்த்தி சாவ்லா படத்துக்கே போலாம் என்று உறுதியான முடிவு எடுத்தேன்..

கொமராபாளையம் சரஸ்வதி தியேட்டர்... ஆஹா மங்களகரமான தியேட்டர்.சாமி படத்தை சாமி பெயர் உள்ள தியேட்டரிலேயே போட்டிருக்காங்க என மெச்சிக்கொண்டே தியேட்டருக்குள் போனேன்.

மொத்தமே ஒன்றரை மணி நேரப்படம்தான். ஆங்கிலப்படத்திலிருந்து சுடறவங்க எல்லாருமே பெரும்பாலும் ஆங்கிலப்படத்துக்கு நிகரா 8 ரீல்லயே படத்தை முடிச்சிடறாங்க..
http://www.nakkheeran.in/UltimateEditorInclude/UserFiles/nakkheeran/2009/september/20.09.09/actress.jpg
படம் ஆரம்பிச்சு 24 நிமிஷம் ஹீரோயின் கீர்த்தி சாவ்லா ஸ்விம்மிங்க் பூல்-ல குளிக்கறாங்க குளிக்கறாங்க ,குளிச்சிட்டே இருக்காங்க...பாவம் ரொம்ப நாளா குளிக்கல போல. சிங்கிள் பீஸ் நீச்சல் டிரஸ்ல அவங்க குளிக்கறதை கேமராமேன் அவரால எவ்வளவு முடியுமோ அவ்வளவு கோணங்கள்ல க்ளோஷப்ஷாட், லாங்க் ஷாட் எல்லாம் வெச்சு எடு எடுன்னு எடுத்து தள்ளிட்டாரு.

அவருக்கு ஒரு ஃபோன் வருது..லவ்வர் போல. ஏதோ சொல்றான்.என்ன சொல்றான் அப்படிங்கறது சஸ்பென்ஸ்..( சீன் படத்துல சஸ்பென்ஸ் என்ன வேண்டிக்கிடக்கு?)படத்துல அஜால் குஜால் சீன் இருக்குமா இருக்காதாங்கற சஸ்பென்ஸையே நம்மளால தாங்க முடியல...இதுல டைரக்டர் வேற...கொல்றாரு.

ஹீரோயினிடம் ஹீரோ ஃபோன்ல பேசறப்போ ஹீரோயினின் ஃபோன் நெம்பரை எதுக்கோ சொல்றான்..வில்லன் அந்த நெம்பரை நோட் பண்ணி ஹீரோயினுக்கு ஃபோன் பண்றான்.. மேடம் ,கூரியர் ஆஃபீஸ்ல இருந்து பண்றேன்.உங்களுக்கு ஒரு பார்சல் வந்திருக்கு..உங்க வீட்டு லேண்ட் மார்க் சொல்லுங்க . உடனே பிளம் கேக்கு மாதிரி உடம்பும்,பேக்கு மாதிரி மூளையும் உள்ள ஹீரோயின்  (கேக்கு - பேக்கு பாருங்க வார்த்தை ஜாலத்தை - நானும் கவிஞன் தான் ) அட்ரஸை சொல்றா.
http://www.viduppu.com/photos/full/actresses/others/keerthi_chawla002.jpg
காலிங்க் பெல் அடிக்குது..வில்லன் மாஸ்க் போட்டு வெளில நிக்கறான், நம்ம ஹீரோயின் ஹீரோ தான் அவன் -னு தப்பா நினைக்கறா. என்ன தான் முகத்தை மூடி இருந்தாலும் ஆள் உயரம் ,பாடி ஷேப் தெரியாதா?என்ன கொடுமை சார் இது?வில்லன் ஹீரோயின் கூட கொஞ்சறான், குலாவறான் பாவம் அதுவரை ஹீரோயினுக்கு விபரமே தெரியல..

15 நிமிஷம் கழிச்சு வில்லன்தான் என்பதை எப்படியோ ஹீரோயின் கண்டு பிடிச்சுடறா.. உடனே ஓடறா ஓடறா ஓடிட்டே இருக்கா.. அந்த பங்களா ஃபுல்லா சுத்தி சுத்தி வர்றா.. நம்புனா நம்புங்க ,இந்த சேசிங்க் சீன் மட்டும் 40 நிமிஷம்.

அப்புறம் ஹீரோ வர்றார்.. ஃபைட் பண்றார். ஹீரோ ஜெயிக்கிறார். படம் முடிஞ்சுது. என்ன இப்படி பொசுக்குன்னு படத்தை முடிச்சுட்டாங்களே.. ஏதாவது பிட்டு போடுவாங்களா அப்படிங்கற நப்பாசைல சிலர் தியேட்டரை விட்டு கிளம்பவே இல்லை.

அப்புறம் மனசை தேத்திக்கிட்டு குனிஞ்ச தலை நிமிராம தியேட்டரை விட்டு வெளில எல்லாரும் கிளம்புனாங்க..அது ஏன் குனிஞ்ச தலை? யாராவது தெரிஞ்சவங்க பார்த்தா கேவலமா போயிடுமே...

வழக்கமா ஏதாவது வித்தியாசமா விமர்சனத்துல காண்பிக்கனும்னு நான் வசனத்தை கொஞ்சம் போடுவேன், ஞாபகம் இருக்கற வரை .அந்த மாதிரி போட வழியே இல்லை. படத்துல வசனமே மொத்தம் 7 வரிகள் தான்.

படத்துல பாரட்ட வேண்டிய அம்சம் ரெண்டே ரெண்டுதான். ஒண்ணு ஹீரோயின் கீர்த்தி சாவ்லாவின் அழகு.. ரெண்டு ஒளிப்பதிவு.. ராவணன் படத்துல ஐஸ்வர்யா ராய் குளிக்கறதை அழகா காட்டுன மாதிரி இதுல கீர்த்தி குளிக்கறதை ரசனையோட காட்டி இருக்காங்க...

படத்துல மொத்தம் 3 கேரக்டர்கள்தான். ஹீரோ, ஹீரோயின், வில்லன். ஹீரோயினுக்கு ரூ 5 லட்சம் சம்பளம் குடுத்திருப்பாங்க.ஹீரோவுக்கு நோ சம்பளம். வில்லன் கிட்டே இருந்து ரூ 2 லட்சம் வாங்கி இருப்பாங்க.. இந்த மாதிரி ஹீரோயினை ரேப் பண்ற வேலை இருந்தா வில்லன் கிட்டே காசு வாங்கிக்கறது கோடம்பாக்கத்தின் லேட்டஸ்ட் லோ பட்ஜெட் ஃபார்முலா..

சீன் இல்லாத சீன் படத்துக்கு விமர்சனம் எழுதி சமுதாயத்துக்கு ஒரு விழிப்புணர்வை ஏற்படுத்துனதுக்காக  சிறந்த சமூக விழிப்புணர்வுக்காவலன் அப்படின்னு யாராவது பட்டம் குடுத்தா அதை கூச்சமே இல்லாம வாங்கிக்க தயாரா இருக்கேன்.  ( யாரப்பா அது கல்லை எடுக்கறது.. பேச்சு பேச்சாத்தான் இருக்கனும்.. வேணும்னா மைனஸ் ஓட்டு போட்டுக்குங்க.. அதை விட்டுட்டு அடிக்கற வேலை எல்லாம் வேணாம்.அப்புறம் அழுதுடுவேன்..அவ் அவ்)

டிஸ்கி 1 - சீன் படத்துக்கு விமர்சனம் எழுதி சமுதாயத்தை ஏன் கெடுக்கறே? அப்படின்னு சிலர் கேக்கறாங்க. நல்லா நோட் பண்ணிப்பாருங்க.. எழுதறது சீன் படமா இருந்தாலும் அதுல ஆபாச எழுத்து இருக்காது, சும்மா நக்கல் அடிச்சிருப்பேன் அவ்வளவுதான்.இதனால எத்தனை பேருக்கு பணம் மிச்சம் ஆகுது அதை நினைச்சுப்பாருங்க.

டிஸ்கி 2 - கடந்த 3 நாளா நல்ல கட்டுரைகளா போட்டியே .. ஏன் இப்போ இப்படி?அப்படின்னு கேக்கறவங்களுக்கு ..நான் கமல் ஃபார்முலாவை ஃபாலோ பண்றேன்.. அவர் மகாநதி மாதிரி நல்ல படம் குடுப்பாரு.. அது அவர் எதிர்பார்த்த வெற்றியை குடுக்காத பட்சத்துல கோபமா சிங்கார வேலன்,மவராசன் மாதிரி மசாலாக்குப்பை எடுத்து கோபத்தை காண்பிப்பாரு.

Wednesday, January 12, 2011

கிளு கிளுப்பான எஸ் எம் எஸ் ஜோக்ஸ் 19 +

Amy-Jackson-latest-photos-stills-pictures-08.jpg (575×840)


.

ன்பு எனும் குவாட்டர் வாங்கி.. பண்பு எனும் வாட்டர் கலக்கி,பாசம் எனும் ஊறுகாய்
தொட்டு,ஃபிரண்ட்ஷிப் எனும் கட்டிங்க் அடிப்போம் ,வா குவாட்டர் கட்டிங்க்.

-----------------------------------------------------------------------------
. 
ஒரு சிங்கத்தை கொல்வது எப்படி?

1. டிராவிட் மெத்தேட் - அந்த சிங்கத்தை டிராவிட்டுக்கு பவுலிங்க்
போடச்சொல்லனும், 200 பால்-ல (BALL) ஒரே ஒரு ரன் எடுக்கனும்.

2. ராமராஜன் மெத்தேட் - 5 கிலோ பவுடரை சிங்கத்தோட முகத்துல அப்பி
ஓவர் வெயிட்டால அதை காலி பண்ணிடலாம்.

3. கேப்டன் மெத்தேட் -அந்த சிங்கத்துக்கு முன்னால அரை மணி  நேரம்
 இங்கிலீஷ்ல பேசணும்.

4. டி .ஆர் மெத்தேட். - அவரோட முகத்தை பாக்க வைக்கனும்.

5.இளைய தளபதி மெத்தேட் - காவலன் ட்ரைலரை பார்க்க வைக்கனும்

-----------------------------------------------------------------------------------

...காதல் என்பது முதன்முதலாக சீனாவுலதான் பிறந்தது. எப்படின்னு தெரியுமா?

MADE IN CHINA IS NO GUARANTY ...NO WARANTY

---------------------------------------------------------------------------------
.
ர்ல அவனவன் டிரெயின் டிக்கெட் ,பஸ் டிக்கெட் ஃப்ளைட் டிக்கெட்,சினிமா டிக்கெட் ஏன் லாட்டரி டிக்கெட் கூட வாங்கி சந்தோசமா இருக்கான் ...

ஒரே ஒரு ஹால் டிக்கெட் வாங்கிட்டு நான் படுற அவஸ்தை இருக்கே..அய்யய்யோ..


-------------------------------------------------------------------------
.
ன்னை நேசிக்கிற பெண்ணை கைவிடாதே....உன்னை கைவிட நினைக்கும் பெண்ணை கை வைக்காமல் விடாதே..

இப்படிக்கு ...குவார்ட்டர் அடி..மேட்டரை முடி சங்கம்


-------------------------------------------------------------------------

பெண்கள் அருகில் இருந்தால் ஹோட்டல் பில் ..பெண்கள் தொலைவில் இருந்தால் ஃபோன் பில் ..பெண்கள் நம்மை விட்டு விலகி போய் விட்டால் டாஸ்மாக் பார் பில்....

--------------------------------------------------------------------------

.நிருபர்;மேடம் அரை நிர்வானமாக ஒரு படத்தில் நடிக்க மறுத்தீங்களாமே ஏன்..?

நடிகை;எதையுமே அரை குறையாக செய்வது எனக்கு பிடிக்காது...--

-------------------------------------------------------------------------------

நிருபர்;மேடம் ஸ்ரீ தேவி மூக்குல ஆபரேசன் பண்ணிகிட்டது மாதிரி நீங்க உங்க செஸ்ட்ல ஆபரேசன் பண்ணிகிட்டீங்களாமே ,உண்மையா?

நடிகை;சின்ன விஷயத்தை ஏன் பெருசு பண்றீங்க...!!

-----------------------------------------------------------------------

டிஸ்கி;

ன்று இளைஞர் தினத்தை முன்னிட்டு நடிகை கீர்த்தி சாவ்லா நடித்த லேட்டஸ்ட் பிட்டுப் படமாகிய ஸ்வேதா (மாயவலை)விமர்சனம் போடலாம் என்று இருந்தேன்...விவேகானந்தர் ஆத்மாவும், பெண்ணியவாதிகளின் உரிமைகுரல் ஸ்பீக்கர் பதிவர்களும் கும்மி விடுவார்கள் என்பதால் அதை நாளை காலை 7.30 மணி வரை தள்ளி வைக்கிறேன் என்பதை வருத்தத்தோடு தெரிவித்துக்கொள்கிறேன்..அதுவரை பிட்டுப்பட ரசிகர்கள் நகத்தை கடித்துக்கொண்டு டென்சனுடன் காத்திருக்கவும்...