Showing posts with label tamilnadu. Show all posts
Showing posts with label tamilnadu. Show all posts

Wednesday, March 14, 2012

ஜெ-வின் ஆஸ்தான முன்னாள் ஜோதிடர் சசிகலா மீது பரபரப்பு குற்றச்சாட்டு

ஜெயலலிதாவின் ஆஸ்தான ஜோதிடர்களில் ஒருவராக இருந்தவர் என்று சொல்லப்பட்டவர் வெற்றிவேல்.

 சி.பி - ஆஹா VETRIVAEL கூட்டுத்தொகை 9 வருது.. அம்மாவோட செண்ட்டிமெண்ட்டே  செண்ட்டிமெண்ட் அவ்வ்வ்வ்

 இவர் கடந்த தி.மு.க. ஆட்சியிலேயே ராவணன் மீது ஒரு புகார் கொடுத்தார். அந்த வழக்கு இப்போது சி.பி.சி.ஐ.டி. விசாரணையில் இருக்கிறது. இதுகுறித்து, 20.2.2008 தேதியிட்ட ஜூ.வி. இதழில், 'கோடிகளுக்காக என்னைக் கடத்தினார்கள்! உயிர் பயத்தில் ஜெ. ஜோதிடர்!’ என்ற தலைப்பில் செய்தி வந்தது. அந்தப் புகார் என்ன ஆனது என்றே தெரியாத நிலையில், இப்போது வெளிச்சத்துக்கு வந்துள்ளார் வெற்றிவேல்.


 ''எனது புகார் மீதான வழக்கில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய வேண்டும்'' என்று தனது வழக்கறிஞர் குமாரதேவனுடன் கடந்த 12-ம் தேதி வந்து சென்னை போலீஸ் கமிஷனரிடம் வெற்றிவேல் மனு கொடுத்துள்ளார்.


வெற்றிவேலை சந்தித்துப் பேசியதில்


 ''எனக்கு சொந்த ஊர் திருப்பூர் மாவட்டம், ஊத்துக்குளி. 98-ம் வருஷம் பெரியம்மாகிட்ட (ஜெயலலிதா) அறிமுகம் ஆனேன். பெரியம்மா அப்போது வழக்கு விவகாரங்களுக்காக அலைஞ்சுட்டு இருந்த நேரம். நான் அவரோட அரசியல் எதிர்காலம், வழக்குகளின் நிலை சம்பந்தமாகத் தெளிவா கணிச்சுச் சொன்னேன். அதனால, அவங்களோட நம்பிக்கைக்கு உரிய ஆஸ்தான ஜோதிடர்களில் நான் முன்னணியில் இருந்தேன்.

சி.பி - அண்ணே, சாரி ஃபார் த குறுக்கீடு , அமைதிப்படை அமாவாசை மாதிரி ஒரு கேள்வி, யார் யாருக்கோ ஜாதகம் கணிச்ச நீங்க உங்க ஜாதகத்துல போலீஸ் கேஸ் வரும், சின்னம்மாவை பகைச்சுக்குவோம் அதெல்லாம் கணீக்கலையா? அப்படி இல்லைன்னா நீங்க என்ன ஜோசியர்? ஹி ஹி 




 பெரியம்மா, சின்னம்மா (சசிகலா) மற்றும் அவரோட குடும்பத்தினர் அத்தனை பேருக்கும் நான்தான் ஜோதிடம் பார்த்தேன். 2004-ம் வருஷம், சின்னம்மா என்கிட்ட, 'பெரியம்மாவுக்கு அடுத்து அ.தி.மு.க-வில் முதல்வர் ஆகும் யோகம் யாருக்கு இருக்கு?’னு கணிச்சுத் தரச் சொன்னாங்க. அதுக்காக அவங்க குடும்பத்துல இருக்கிற அத்தனை பேர் ஜாதகமும் கொடுத்தாங்க.
அத்தனை பேர் ஜாதகத்தையும் பார்த்த நான், 'உங்க குடும்பத்துல ஒருத்தருக்குக்கூட கட்சியில் பொதுச்செயலாளர் ஆகும் யோகமோ, தமிழகத்தின் முதல்வர் ஆகும் யோகமோ கிடையாது. இது மாற்ற முடியாத உண்மை’னு கணிச்சு சொன்னேன்.


 சி.பி - உடனே பெரியம்மா டென்சன் ஆகி “ முதல்ல எதுக்காக அத்தனை பேர் ஜாதகத்தையும் பார்த்தீங்க, என் கிட்டே அதுக்கு அனுமதி வாங்குனீங்களா?ன்னு கேட்கலை?” ஹி ஹி

 இந்த விஷயத்தை நான் பெரியம்மாகிட்டேயும் அப்படி​யே சொல்லிட்டேன். இதுதான் கார்டனுக்கும் எனக்கும் விரிசல் விழக் காரணமான சம்பவம். அன்றுமுதல், சின்னம்மா என்னை எதிரியா நினைச்சிட்டார். உண்மையைச் சொல்லப்போனால், சின்னம்மாவை என் அம்மா மாதிரி நினைச்சு இருந்தேன்.


சி.பி - அண்ணே, எகெயின்  ஒரு ஸ்மால் டவுட்டு, சின்னம்மாவை  உங்கம்மா மாதிரி நினைச்சா உங்கம்மாவை என்னவா நினைச்சீங்க? ஜெ அம்மாவை என்னவா நினைச்சீங்க?  உபயம் - வெற்றிக்கொடு கட்டு ஆர் பார்த்திபன் - வடிவேல் காமெடி


 எங்க அம்மா இறந்தப்​பகூட நான் அழுதது இல்லை. ஆனா, சின்னம்மா கஷ்டப்பட்டப்ப எல்லாம் அழுதேன். கிராமத்துல செம்மறி ஆடு மேய்ச்சுக்கிட்டு இருந்த என்னை கார்டனுக்குக் கூட்டிவந்து பெரிய ஆள் ஆக்கினதே சின்னம்மாதான். ஆனா, அவங்களே எனக்கு எதிரியா மாறிட்டாங்க.

சி.பி - நாடு ஏன் நாசமாப்போய்ட்டிருக்குன்னு இப்போ தெரியுது. செம்மறி ஆடு மேய்ச்சுட்டு இருந்தவங்க எல்லாம் அரசியல் ஆலோசகரா ஆனா நாடு எப்படிய்யா உருப்படும்?படிச்சவன் வேலை இல்லாம அலைஞ்சுட்டு இருக்கான்

அப்ப இருந்து என்னை விரட்ட ஆரம்பிச்சவங்க... இப்ப வரைக்கும் விடாம விரட்டிக்கிட்டு இருக்காங்க. உண்மையில் நான் சாதாரண ஆளுங்க. கார்டன்ல ஜோதிடத்தைத் தாண்டி எதையும் எப்பவும் பேசியது இல்லை. அரசியல்னா என்னன்னு எனக்கு எதுவுமே தெரியாது. நான் சொன்ன ஜோதிடக் கணிப்புகளை வைச்சு, சின்னம்மாவும் ராவணனும் என்னை அவங்களுக்குப் போட்டியா, எதிரியா நினைச்சுப் பழிவாங்க ஆரம்பிச்சிட்டாங்க.

சி.பி - நீங்க ஒரு தப்பு பண்ணீட்டிங்க, சசிகலாட்ட எதுவும் சொல்லாம ஆமாம் சாமி போட்டு நைசா ஜெ கிட்டே அவங்களை பற்றி போட்டுக்குடுத்திருக்கனும்.. 

2007-ம் வருஷம் ராவணன் என்கிட்ட என் சொத்து விவரங்களை கேட்டு, ஈரோட்டில் இருந்து கோவைக்கு கார்லயும் கோவையில் இருந்து சென்னைக்கு விமானத்துலயும் கடத்​திட்டுப் போனார்.

 சி.பி - ஆமா, ஈரோட்ல உங்களுக்கு என்ன வேலை? பர்சனல் மேட்டர்ஸா? ஹி ஹி

அங்கே தகாத வார்த் தைகளில் பேசி வெற்றுப் பேப்பர் களிலும் பத்திரங்களிலும் கையெழுத்து வாங்கினார். அதுதொடர்பா தேனாம்பேட்டை போலீஸில் புகார் கொடுத்து, பிறகு அந்த வழக்கு சி.பி.சி.ஐ.டி-க்கு மாற்றப்பட்டது. ஆனால், கடந்த தி.மு.க. ஆட்சியிலேயே அளவுக்கு அதிகமான செல்வாக்குடன் இருந்தார் ராவணன். அதனால், அந்த வழக்கில் ஒரு துரும்பைக்கூட போலீஸார் கிள்ளிப் போடலை.



கடந்த தி.மு.க. ஆட்சியில் ராவணன் எனக்குக் கொடுத்த துன்பங்களுக்கு அளவே இல்லை. 2007-ம் ஆண்டு ஆகஸ்ட் 23-ம் தேதி என் அம்மாவின் நான்காம் ஆண்டு நினைவு நாளுக்காக வீட்டில் ஹோமம் வளர்த்துட்டு இருந்தேன். அப்போது ராவணனுக்கு நெருக்கமான வருமானவரித்துறை அதிகாரியை வைச்சு என் வீட்டில் ரெய்டு நடத்தினார். அதே வருஷம் திருப்பூர் செங்கப்பள்ளியில் ஒரு சொத்தை வாங்க, 1 கோடியே 1 லட்சம் ரூபாய் முன் பணத்தை செங்கப்பள்ளி தி.மு.க. ஒன்றியச் செயலாளராக இருந்த ராவணனின் நண்பர் சண்முகத்திடம் கொடுத்து, அவரது மனைவி ஈஸ்வரி பெயரில் ஒப்பந்தம் போட்டேன்.


ராவணன்கூட பிரச்னை ஏற்பட்ட பிறகு, அந்த இடத்தை அவங்க தரலை. கொடுத்த பணத்தைத் திருப்பிக் கேட்டா, 'ராவணன்கிட்ட போய் வாங்கிக்​கோ’னு மிரட்டுறாங்க. இதுசம்பந்தமா, கடந்த தி.மு.க. ஆட்சியில் முக்கியமான நான்கு அமைச்சர்களை நேரில் சந்தித்து உதவி செய்யும்​படி கேட்டேன். ஆனா, அமைச்சர்கிட்ட போன ரெண்டு மணி நேரத்துல எனக்கு போன் வரும். 'அமைச்சர்கிட்ட போனா உன் பணம் கிடைச் சிடுமா? டேய், நீ எங்க போனாலும் என்னை ஒண்ணும் செய்ய முடி யாது’னு ராவணனும் அவரோட ஆட்களும் மிரட்டுவாங்க.


சென்னை கிழக்குக் கடற்கரை சாலையில் எனக்கு இடம் இருந்துச்சு. 2009-ம் வருஷம் அந்த இடத்தை வைச்சு, ஒரு தேசிய வங்கியில் 35 லட்சம் ரூபாய் கடன் வாங்கினேன். அந்தக் கடனைக் கட்ட முடியாம வட்டியோடு சேர்த்து 65 லட்சம் ரூபாய் பாக்கி இருந்தது. ஆனா, எனக்கு எந்தத் தகவலும் தெரிவிக்​காமல் சுமார் மூணு கோடி ரூபாய் மதிப்புள்ள அந்தச் சொத்தை, ஒரு கோடி ரூபாய்க்கு வங்கி ஏலம் விட்டுருச்சு. இது எப்படி சாத்தியம்?


 சி.பி - ஆடு மேய்ச்சிட்டு இருந்தவருக்கு எப்படி இந்த மாதிரி கோடிக்கணக்குல சொத்து வந்துச்சு.. ஜாதகம் பார்க்க அம்புட்டு வருமா? நல்ல நேரம் சதீஷ்.. நோட் பண்ணப்பா..


 முதல் தவறு எனக்குத் தகவல் தெரிவிக்காமல் ஏலம்விட்டது. அடுத்தது, மூணு கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்தை ஒரு கோடிக்கு விற்று வங்கிக்கு நஷ்டம் ஏற்படுத்தியது. எனக்குத் தகவல் தெரிவிச்சதுக்கு ஆதாரம், அந்த சொத்தை யாருக்கு வித்தாங்க? அந்த ஏலத்தில் யார் எல்லாம் கலந்துக்கிட்டாங்க?ன்னு பல கேள்விகளைக் கேட்டு தகவல் அறியும் உரிமை சட்டத்தில் மனு போட்டேன். இப்ப வரை சரியான தகவல் கொடுக்கலை. இதன் பின்னணியிலும் ராவணன்தான் இருக்கார்.


சி.பி - அடடா.. ஒரு வங்கிக்கு நஷ்டம்னு சொன்னதும் அண்ணன் கண்ணு கலங்குதே.. நாட்டுப்பற்று!!!

இதுமாதிரி ஒண்ணு, ரெண்டு இல்லை. இப்படி சுமார் எட்டு கோடி ரூபாய் அளவுக்கு என் பணம், சொத்துகளை ராவணன் மோசடி செய்து இருக்கார். 2007-ம் ஆண்டு என்னைக் கடத்திட்டுப் போன சம்பவத்துக்குப் பிறகு ராவணனுக்குப் பயந்து, டெல்லிக்குப் போய் செட்டில் ஆகிட்டேன். அங்கேயும் ராவணன் என்னை விடலை. டெல்லியில் ஒரு அ.தி.மு.க. வக்கீல் என் மீது பொய்ப் புகார் கொடுத்து, ஒரு உதவி கமிஷனர்கிட்டேயே, 'சார், இது தமிழ்நாடு டெபுடி சி.எம். ராவணனின் ஆர்டர். உடனே அரெஸ்ட் பண்ணுங்க’னு டார்ச்சர் பண்ணினார். நான் அந்த போலீஸ் அதிகாரிகிட்ட, 'தமிழ்நாட்டுல டெபுடி சி.எம்-னு போஸ்ட்டிங்கே இல்லை’ன்னு ஆதாரபூர்வமாப் புரிய வைச்சுத்தான் தப்பிச்சேன்.
இப்ப ராவணன் மீது படிப்படியா நடவடிக்கைகள் எடுக்கப்பட்ட பின்னாலதான், சென்னை வந்து இருக்கேன். ஜோதிடர்களைக் கடவுளின் தூதர்கள்னு சொல்லுவாங்க. நான் கடவுள்கிட்ட கேட்டு, அங்க இருந்து எனக்கு என்ன தகவல் கிடைச்சதோ, அதைத்தான் ஜோதிடக் கணிப்புகளாகச் சொல்லிட்டு இருக்கேன்.

 சி.பி - அப்படியே கடவுளுக்கு ஒரு ஐ எஸ் டி கால் போட்டு உங்களுக்கு ஒரு விடிவு காலம் எப்போ வரும்னு கேட்டு சொல்லுங்கோ..

 2011-ம் வருஷத்துக்குப் பிறகு ராவணன் அரசியல்ல இருக்க மாட்டார். அவரோட அழிவுகாலம் தொடங்கிடும்னு நாலு வருஷத்துக்கு முன்னாடியே கட்சிக்காரங்க, என் நண்பர்கள், ராவணன் நண்பர்கள்னு சுமார் 100 பேர்கிட்ட சொல்லி இருக்கேன்.


 சி.பி - ஓஹோ, அந்த 100 பேர்ட்டயும் ஃபீஸ் வாங்கியாச்சா?

இப்பவும் சொல்றேன். ராவணனுக்கு அழிவு நிச்சயம். இத்தனை நாள் அவர் மீது கொடுக்கப் பட்ட புகார்களைவிட, ஆணித்தரமான ஆதாரங்கள் கொண்ட புகார்கள் நிறைய என்கிட்ட இருக்கு. ஒவ்வொரு புகாரா போலீஸில் கொடுத்து, ராவணன் அழியறதை என் கண்ணால பார்க்கப்போறேன். இது என் ஆசை எல்லாம் கிடையாது. இதுதான் ராவணனின் ஜாதகம்!'' - ஆவேசமாக முடிக்கிறார் ஜோதிடர் வெற்றிவேல்!


சி.பி - அட போங்கண்ணே, இப்படித்தான் குணச்சித்திர நடிகை சோனா கூட சொன்னாங்க. என் கிட்டே வீடியோ ஆதாரம் இருக்கு, எஸ் பி பி சரணை கூண்டில் ஏத்துவேன், சட்டத்தின் பிடியில் சிக்க வைப்பேன்னு சபதம் போட்டாங்க.. ஆனா அப்புறம் டகார்னு பல்டி அடிச்சு இப்போ சரண் ஹீரோவா நடிக்க சோனா கவுரவ கதாநாயகியா  “ ஓ பார்ட்டி நல்ல பார்ட்டிதான்” அப்படின்னு ஒரு படம் நடிக்கராங்களாம்.. அவ்வ்வ்வ்
வெற்றிவேல் பணம் கொடுத்ததாகக் கூறும் செங்கப்பள்ளியை சேர்ந்த தி.மு.க. பிரமுகர் சண்முகத்திடம் பேசினோம். ''வெற்றிவேலிடம் சொத்தை விற்க முன் பணம் வாங்கியது உண்மைதான். ஆனால், அதன் பிறகு சொத்தைக் கிரையம் செய்ய பலமுறை அழைத்தும் அவர் வரவில்லை. அவர் மீதான வருமான வரித்துறை நடவடிக்கைக்குப் பிறகு, அவர் வருமான வரித்துறைக்கு கட்ட வேண்டிய பாக்கித் தொகைக்காக இந்த நிலத்தையும் பணத்தையும் வழக்கில் சேர்த்து விட்டார்கள். ராவணன் என் நண்பர் இல்லை. அவரை நான் பார்த்ததுகூட கிடையாது...'' என்றார்.


 சி.பி - பார்க்காமயே நட்பா? விட்டா எனக்கு ராமர், ராவணன், ராமாயணம் எதுவுமே தெரியாது, கேள்விப்பட்டதே இல்லைன்னு சொல்லிடுவார் போல..
ராவணன் மீதான பிடி இறுகுவதற்கு வெற்றிவேல் புகார் கூடுதல் வலையாக மாறிக்கொண்டு இருக்கிறது!

Thursday, February 02, 2012

கேப்டன் ஆவேச பேச்சு யூடியூப் வீடியோ.,சன் நியூஸ் பேட்டி -. காமெடி கலாட்டா



1. அசந்து போகுமளவு அறிவிப்புகள் வெளியிடுவேன் - ஜெ # அசந்தா அடிக்கறது உங்க பாலிசி, அசராம (சரக்கு) அடிக்கறது எங்க பாலிஸி - கேப்டன்


-------------------------------------

2. மேடம்,எதுக்காக எங்க கேப்டனை வெளீல அனுபுனீங்க?

சட்டசபைல மப்புல எங்க கட்சி ஆளுங்களை ”ஓட்டிட்டு” இருந்தார், டிரங்க்கன் டிரைவிங்க்னு ரிஜக்டட்

-------------------------------------

3. சட்ட சபைல கை நீட்டி பேசுனது தப்பு இல்லையா?

கேப்டன் - கை நீட்டி லஞ்சம் வாங்கறதுதான் தப்பு

-------------------------------------

4. உங்களுடன் கூட்டணி வைத்தற்காக நான் வெட்கப்படுகிறேன் -ஜெ # ஓக்கே மேடம், அதை ஏன் இவ்ளவ் கோபமா சொல்றீங்க? சிரிச்சுக்கிட்டே சொல்லுங்க- கேப்டன்

---------------------------------

5. ஜெ - என்னை எதிர்க்க திராணி இருக்கா?

கேப்டன் - லூசாம்மா நீங்க? அது இருந்தா தனியா நின்னிருக்க மாட்டேனா?

----------------------------------

6. டியர்,உன்னுடன் காதல் கூட்டணி வெச்சதுக்காக நான் வெட்கப்படறேன்...

ஏன்? ம்க்கும், ஒரு கிஸ் கூட தர்லை.. வேஸ்ட்

--------------------------------

7. காதலி - உங்க கிட்டே திராணி இருக்கா?

காதலன் - இல்ல, வாரா வாரம் வாங்கற ராணி தான் இருக்கு

-------------------------------

8. ஜெ-எனக்கு முன்னால இது வரை கை நீட்டி யாரும் பேசுனதே இல்ல. 

கேப்டன் -அதுக்கு பதிலாத்தான் நாக்கை  மடக்கி உள்ளே வெச்சுக்கிட்டேனே மேடம்?

-------------------------------------

9.ஜெ- கேப்டன் கிட்டே வேற ஏதாவது கல்யாண மண்டபம் இருக்கா? இடிக்கனும்.. 

ஓ பி எஸ் - பிரேமலதா தான் இருக்காங்க, நைஸா இடிச்சுட்டு வரவா?

----------------------------

10. ஜெ-என் கட்சிக்காரங்களை திருப்திப்படுத்தத்தான் நான் உங்களோட கூட்டணி வெச்சேன்  

கேப்டன் - கலைஞரை கடுப்பேத்தனும்கறதுக்காகத்தான் நான் அப்டி. கூட்டணி வெச்சேன்

--------------------------------

http://moonramkonam.com/wp-content/uploads/2011/12/vijaykanth-manmohansingh-mullaiperiyar-dam.jpg

11. ஒரு CM முன்னால நாக்கை கடிச்சுக்கிட்டே பேசுனது முறையா?

கேப்டன் -வழக்கமா நான் ஊறுகாய்  கடிச்சுக்கிட்டுதான் பேசுவேன், ஆனா சட்டசபை என்பதால்.

----------------------------------

12. நிருபர் -சட்டசபைல கலக்கிட்டீங்க..

கேப்டன் - ச்சே, ச்சே வீட்லயே கலக்கி அடிச்சுட்டுதான் சட்டசபை போனேன்

---------------------------------

13. ஜெ- கேப்டன் பேசுன அருவெறுப்பான பேச்சுக்களை நான் பார்த்துட்டு தான் இருந்தேன் 

கேப்டன் - தீயனவற்றை பாராதே,கேளாதேன்னு பெரியவங்க சொன்னாங்களே?

----------------------------------

14. ஜெ- இனி கேப்டனுக்கு இறங்கு முகம் தான்


கேப்டன் - நல்ல வேளை குரங்கு முகம்னு சொல்லலை ஹி ஹி

----------------------------------

15. ஜெ- சங்கரன் கோயில்ல தனியா நிக்கறேன், உங்களால முடியுமா? 

கேப்டன் - அதெப்பிடி? நானும்வந்து அங்கே நின்னா ஜோடி ஆகிடுவோமே?தனியா நிக்கறது எப்டி?

----------------------------

http://3konam.files.wordpress.com/2011/03/vijayakanth-dmdk-jayalaitha-aiadmk-join-hands1.jpg?w=683&h=504

16. கேப்டன், எதுக்காக தல அஜித்தை பார்க்க வந்திருக்கீங்க?

நான் நடந்து கொண்ட விதம் சரி இல்லைன்னு ஜெ சொன்னாங்க , தல கிட்டே டிரெயினிங்க் எடுக்க

------------------------------

17. ஜெ -புள்ளி விவரம் சரியாய் தெரிஞ்சிட்டு தான் பேசணும்.

கேப்டன்: தமிழ் நாட்டில் மொத்தம் 2 கரும்புள்ளிகள் 1. கலைஞர் 2 ஜெ

---------------------------

18.ஜெ - கேப்டனைக்கூட மறுக்கா கவனிச்சுக்கலாம், என்னை சர்வாதிகாரின்னு சொன்ன ஸ்டாலினை முதல்ல உள்ளே தள்ளனும்

கமிஷனர் - மிட் நைட் 12 மணி OK?

---------------------------------

வெட்கப்பட்ட ஜெ, கோபப்பட்ட கேப்டன், பாவப்பட்ட மக்கள் - காமெடி கும்மி



 கேப்டன் மேல் ரொம்ப நாளாக வைக்கப்பட்ட குற்றச்சாட்டு ஒரு எதிர்க்கட்சி போல் அவர் நடக்கவில்லை, பம்முகிறார் என்பதே.. 6 மாசம் போகட்டும், அதுவரை பொறுமை என சால்ஜாப் சொல்லி வந்தார்.. நேற்றோடு அந்த விரதம் முடிந்தது போல..


சட்டசபையில், முதல்வர் ஜெயலலிதா மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் விஜயகாந்த் இடையே, நேற்று அனல் பறக்கும் வாக்குவாதம் நடந்தது. அ.தி.மு.க., உறுப்பினரை, கையை நீட்டி ஆவேசமாக விஜயகாந்த் பேசிய விதத்தை கண்டதும், ""எதிர்க்கட்சித் தலைவர், அருவருக்கத்தக்க வகையில், கீழ்த்தரமாக நடந்து கொண்டார். இவர்களுடன் சேர்ந்து, தேர்தலை சந்தித்ததற்காக வருத்தப்படுகிறேன்; வெட்கப்படுகிறேன். அ.தி.மு.க., வுடன் கூட்டணி வைக்காமல் இருந்திருந்தால், இவர்களுக்கு ஒரு இடம் கூட கிடைத்திருக்காது,'' என, முதல்வர் ஜெயலலிதா ஆவேசமாக பேசினார்.


சி.பி - 80 வயசான கவர்னரையே தப்பா பேசுனவர்தானே இவரு.. இவ்ளவ் ரோஷம் இருக்கறவரு ஏன் கூட்டணி வைக்கனும்? தில் இருந்தா சட்டசபையை கலைச்சிட்டு தனியா நின்னு ஜெயிச்சுட்டு அப்புறமா வீராப்பு பேச வேண்டியதுதானே?


சட்டசபையில் நடந்த விவாதம்:

சந்திரகுமார் - தே.மு.தி.க: மின் கட்டணத்தை உயர்த்துவது தொடர்பாக, மின்சார ஒழுங்குமுறை ஆணையம், மக்களிடம் கருத்து கேட்கும் விதத்தை பார்க்கும் போது, ஏதோ சம்பிரதாயத்திற்கு நடப்பது போல் தெரிகிறது. மின் கட்டண உயர்வு ஏற்கனவே முடிவு செய்யப்பட்டுவிட்டதாகவும், பெயருக்குத் தான் கருத்து கேட்பு கூட்டம் நடப்பதாகவும் வெளியில் பேசிக் கொள்கின்றனர். சட்டசபை கூட்டத்தொடர் முடிந்ததும், மின் கட்டணத்தை நீங்கள் உயர்த்தப் போவதாக தகவல்கள் வருகின்றன.


சி.பி - பஸ் கட்டண உயர்வு வந்தப்பவே  மின் கட்டண உயர்வும் முடிவாகிடுச்சே..

முதல்வர் ஜெயலலிதா: அடிப்படை விவரம் இல்லாமல் உறுப்பினர் பேசுகிறார். மின் கட்டணத்தை நிர்ணயிப்பது அரசு கிடையாது. மின்சார ஒழுங்குமுறை ஆணையம் தான், மின் கட்டணத்தை நிர்ணயிக்கிறது. மக்களிடம் கருத்துக்களை கேட்டு, அதனடிப்படையில் புதிய மின் கட்டணத்தை மின்சார ஒழுங்கு முறை ஆணையம் நிர்ணயிக்கும். ஏற்கனவே உள்ள விதிமுறைகளின் அடிப்படையில் தான், எல்லாமே நடக்கின்றன. தான் தோன்றித்தனமாக கருத்துக்கேட்பு கூட்டம் நடக்கவில்லை. இதையெல்லாம் தெரியாமல் பேசுவது, உறுப்பினரின் அறியாமையைத் தான் காட்டுகிறது.

சி.பி  - அதானே,  தான் தோன்றித்தனமாக நாட்ல ஒருத்தர் மட்டும் தான் பேசனும், எல்லாரும் பேச ஆரம்பிச்சா அம்மாவுக்கு கோபம் வராதா?

பதில் சவால்: பால் விலை உயர்வு மற்றும் பஸ் கட்டணம் உயர்வு குறித்து, ஏற்கனவே பலமுறை விளக்கி விட்டோம். ஆனால், உள்ளாட்சித் தேர்தலுக்கு முன்பாக உயர்த்த வேண்டியது தானே என்று சவால் விடும் வகையில் உறுப்பினர் பேசுகிறார். வேறு வழியில்லாமல் தான், இந்த கட்டணங்களை உயர்த்த வேண்டிய நிலை ஏற்பட்டது என்று வருத்தப்பட்டு, நானே மக்களிடம் "டிவி' மூலமாக விளக்கினேன்.


சி.பி -ஏன்   வேற வழி இல்லை? பெரிய பெரிய தொழில் அதிபர்ங்க கிட்டே வரி போடலாம்.. சினிமா, சிகரெட், டாஸ்மாக் சரக்கு டபுள் மடங்கு ஏத்தலாம்.. அதை எல்லாம் விட்டுட்டு நடுத்தர மக்கள்ட்ட பிச்சை எடுக்கறீங்களே, வெட்கமா இல்ல?

திராணியிருக்கிறதா? இருப்பினும், உறுப்பினர் சவால் விட்டு பேசுகிறார். அவருக்கு, நான் பதில் சவால் விடுக்கிறேன். சங்கரன்கோவில் இடைத்தேர்தலில், நாங்கள் தனித்து வேட்பாளரை நிறுத்தப் போகிறோம். உங்கள் கட்சிக்கு திராணியிருந்தால், தனித்து வேட்பாளரை நிறுத்துங்கள். பஸ் கட்டணம், பால் விலையை உயர்த்திய பின் நடக்கும் சங்கரன்கோவில் தொகுதி இடைத்தேர்தலில், மகத்தான வெற்றியை நாங்கள் பெறுவோம். அதை நீங்கள் பார்க்கத்தான் போகிறீர்கள். உங்களால் முடியுமா என்பதை யோசித்துவிட்டுப் பேசுங்கள்.

சி.பி - சட்ட சபைல போய் மக்களுக்கு யூஸ் ஆகற மாதிரி ஏதாவது செய்வாங்க, பேசுவாங்கனு பார்த்தா இவங்க எல்லாம் அஞ்சாங்கிளாஸ் பசங்க மாதிரி  அடிச்சுக்கறாங்களே? 

விஜயகாந்த்: 2006ல் இருந்து, 2011 வரை பல இடைத்தேர்தல்கள் வந்தன. அந்த இடைத்தேர்தல்களில், ஒரு தேர்தலில் கூட அ.தி.மு.க., வெற்றி பெறவில்லை. இன்றைக்கு வந்து, நான் சங்கரன்கோவிலில் ஜெயிப்பேன், ஜெயிப்பேன் என்று சவால் விடுவது எப்படி என்று எங்களுக்குத் தெரியும். அப்போது நடந்த இடைத்தேர்தல்களில் அவர்கள் (தி.மு.க.,) எப்படி ஜெயித்தனர் என்பது, அவர்களுக்குத் தெரியும். இப்போது, நீங்கள் எப்படி ஜெயிக்கப் போகிறீர்கள் என்பதும் தெரியும். (இவ்வாறு விஜயகாந்த் பேசியதும், அமைச்சர்கள், அ.தி.மு.க., உறுப்பினர்கள் அனைவரும் எழுந்து நின்று கடும் எதிர்ப்பு தெரிவித்து, கூச்சல் போட்டனர். பதிலுக்கு, தே.மு.தி.க., உறுப்பினர்களும் எழுந்து நின்று சத்தம் போட்டனர். இதனால், சபை ஒரே அமளியாக காணப்பட்டது. தே.மு.தி.க., உறுப்பினர்கள், சபையின் முன்பகுதிக்கு வந்து, அ.தி.மு.க., உறுப்பினர்களை பார்த்து ஆவேசத்துடன் பேசினர்.)


சி.பி - இடைத்தேர்தல் என்றாலே ஆளுங்கட்சி தான் ஜெயிக்கும் என்பது வரலாறு கண்ட உண்மை.. இதை எல்லாம் ஒரு மேட்டரா ஜெ சொல்லக்கூடாது.. 





முதல்வர்: தேர்தல் அறிவிக்கப்படுவதற்கு முன்பாகவே, எதிர்க்கட்சித் தலைவர், தோல்வியை ஒப்புக்கொண்டு விட்டார்.

சி.பி - ஜெயிக்கப்போறது நீங்களா? அவரா? என்பது தெரில, ஆனா தோக்கப்போறது அப்பாவி ஜனங்க தான்.. நீங்க ஏதாவது நல்லது பண்ணுவீங்கங்கற நம்பிக்கைல  அவங்க பாவம் வரிசைல நின்னு ஓட்டு போடறாங்க..

விஜயகாந்த்: நாங்கள் தோல்வியை ஒப்புக்கொள்ளவில்லை. கேட்டதற்கு மட்டும் தான் பதில். சங்கரன்கோவிலை பற்றி பேசும் நீங்கள், பென்னாகரத்தில் ஏன் தோற்றீர்கள்; அதில், நாங்கள் தான் இரண்டாவது இடம். பென்னாகரத்தில் டெபாசிட் காலியானது ஏன்? மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரத்தின் மீது ஏற்கனவே குறை கூறிய நீங்கள், இப்போது அதைப்பற்றி வாய் திறக்காதது ஏன்?

சி.பி - சும்மாவே கேப்டன் ஆடுவாரு, இன்னைக்கு சரக்கு வேற அடிச்சுட்டு போய்ட்டார் போல.. அவ்வ்வ் 

சபையில் கொந்தளிப்பு: விஜயகாந்த்தின், இந்த தொடர் கேள்விகளால், சபையில் கடும் அமளி ஏற்பட்டது. இரு தரப்பினரும், மாறி, மாறி ஆவேசமாக பேச, சபை ஒரே கூச்சல், குழப்பமாக காணப்பட்டது. அப்போது, அ.தி. மு.க., உறுப்பினர் ஒருவர், விஜயகாந்த்தை பார்த்து சைகை செய்து ஏதோ பேச, விஜயகாந்த் கடும் ஆவேசத்துடன், பதிலுக்கு கையை நீட்டி கடுமையாக பேச, சபையில் திடீர் கொந்தளிப்பு ஏற்பட்டது.

சி.பி - கேப்டன் பிரபாகரன் படத்துல கோர்ட் சீன் தான் ஞாபகம் வருது.. நேத்து ஹாட் டாபிக் கேப்டன் தான், சமூக வலை தளங்களான ட்விட்டர்ல, ஃபேஸ் புக்ல கேப்டன் திடீர் ஹீரோ ஆகிட்டாரு.. 

கூண்டோடு வெளியேற்றம்: இதையடுத்து, எதிர்க்கட்சித் தலைவர் மற்றும் அக்கட்சி உறுப்பினர்கள் அனைவரையும், சபையில் இருந்து வெளியேற்ற, சபாநாயகர் உத்தரவிட்டார். உடனே, சபைக் காவலர்கள் நுழைந்து, எதிர்க்கட்சித் தலைவர் விஜயகாந்த், எதிர்க்கட்சி துணைத் தலைவர் பண்ருட்டி ராமச்சந்திரன் உட்பட அக்கட்சி உறுப்பினர்கள் அனைவரையும் வெளியேற்றினர். வெளியேறும் போது, தே.மு. தி.க., உறுப்பினர்கள், ஆளுங்கட்சிக்கு எதிராக கோஷம் போட்டபடி சென்றனர். அதன்பின், அமைச்சர் விஸ்வநாதன் கூறும்போது, ""சட்டசபை மரபுக்கு மாறாக, சினிமா பாணியில் எதிர்க்கட்சித் தலைவர் நடந்து கொண்டார். தரக்குறைவான முறையில், அவரது செயல்கள் இருந்தன. அவர் மீது, சபாநாயகர் நடவடிக்கை எடுக்க வேண்டும்'' என்றார்.


சி.பி - என்னய்யா பேச்சு இது.. தமிழ் நாட்டின் சி எம் ஒரு சினிமா நடிகை ( முன்னாள்) எதிர்க்கட்சித்தலைவர் ஒரு சினிமா ஹீரோ.. பின்னே எந்த மாதிரி சபை நடவடிக்கைகள் இருக்கும்? சுதந்திரப்போராட்ட தியாகிகளா சட்ட சபைல இருக்காங்க?  

உரிமை மீறல் குழுவுக்கு...: அதன்பின், சபாநாயகர் கூறும்போது, ""எதிர்க்கட்சித் தலைவரும், அக்கட்சி உறுப்பினர்களும், சபைக்கு குந்தகம் ஏற்படுத்தும் வகையிலும், பிற வகைகளிலும் தரக்குறைவாக நடந்து கொண்டனர். எனவே, சபை விதி 226ன் கீழ், இந்த பிரச்னையை, உரிமை மீறல் குழுவுக்கு அனுப்புகிறேன்'' என்றார். மார்க்சிஸ்ட் சட்டசபை தலைவர் சவுந்தர்ராஜன் பேசும் போது, ""சபையில் இதுபோன்ற விவாதம் பல முறை நடந்திருக்கிறது. ஒவ்வொன்றையும், உரிமை மீறல் குழுவுக்கு அனுப்புவது சரியாக இருக்காது'' என்றார். அதற்கு, ""அவர்கள் (தே.மு. தி.க.,) நடந்து கொண்ட விதத்தை அனுமதிக்க முடியாது. தெருச்சண்டை போல் சண்டை போட்டனர்'' என, சபாநாயகர் கூறினார்.

சி.பி - சும்மா இருந்த சங்கை ஊதிக்கெடுத்த ஆண்ட்டி சாரி  ஆண்டி கதையா அவங்க பாட்டுக்கு சிவனேன்னு இருந்தாங்க.. தூண்டி விட்டது ஜெ தான்..

இதன்பின் முதல்வர் ஜெயலலிதா பேசியதாவது: இன்று, எதிர்க்கட்சித் தலைவர் நடந்து கொண்ட விதம், அவர் பேசிய அருவருக்கத்தக்க, கீழ்த்தரமான பேச்சுக்கள் இவற்றையெல்லாம், இங்கேயே அமர்ந்து நான் பார்த்துக் கொண்டிருந்தேன்; அனைவரும் பார்த்தனர். தே.மு.தி.க.,வினருக்கு தண்டனை அளிக்க வேண்டும் என்றால், அவர்களை இந்த கூட்டத்தொடர் முழுவதும் சஸ்பெண்ட் செய்திருக்க வேண்டும். ஆனால், அதைத் தவிர்த்து, குறைந்தபட்ச நடவடிக்கையாக, இந்த பிரச்னையை, உரிமை மீறல் குழுவுக்கு அனுப்புவதாக, சபாநாயகர் கூறியிருக்கிறார். சபாநாயகர் தன் முடிவை அறிவித்தபின், வேறு எந்த உறுப்பினரும், அதைப்பற்றி கேள்வி கேட்க விதிகளில் இடம் இல்லை. தகுதியில்லாதவர்களுக்கு பெரிய பதவி திடீரென்று வாய்த்துவிட்டால், அவர்கள் எப்படி நடந்து கொள்வர் என்பதற்கு எடுத்துக்காட்டாக, இன்று எதிர்க்கட்சித் தலைவரின் நடவடிக்கைகள் அமைந்திருந்தன. 


சி.பி - எம் ஜி ஆர் கூட இதே மாதிரி சொன்னார்..  ”தகுதியில்லாதவர்களுக்கு பெரிய பதவி திடீரென்று வாய்த்துவிட்டால், அவர்கள் எப்படி நடந்து கொள்வர்?”னு, அதை ஜெ கொஞ்சம் நினைச்சுப்பார்க்கனும்?

இந்த நேரத்தில், ஒன்றை சொல்கிறேன். கடந்த ஆட்சியில் நடந்த தவறுகளின் காரணமாக, நிர்வாக சீர்கேட்டின் காரணமாக, எங்கும் மலிந்திருந்த ஊழலின் காரணமாக, மக்கள் ஒரு ஆட்சி மாற்றத்தை விரும்பினர். அ.தி.மு.க.,விற்கு, கடந்த சட்டசபை தேர்தலில் கூட்டணி இருந்தாலும், இல்லாவிட்டாலும், இதே முடிவைத் தான் நாங்கள் பெற்றிருப்போம்.


சி.பி - அவ்வளவு நம்பிக்கை இருக்கா? உங்க கணக்கு தப்பு.. சோவின் ஆலோசனையின் பேரில் வேற வழி இல்லாம தான் நீங்க கூட்டணிக்கு ஒத்துக்கிட்டீங்க..  காரியம் ஆகற வரை காலை பிடி, காரியம் ஆன பிறகு கழுத்தைப்பிடிங்கற கதையா நீங்க இப்போ அவங்களை உதாசீனப்படுத்தறீங்க.. 


அ.தி.மு.க.,வை ஆட்சியில் அமர்த்துவது என, மக்கள் முடிவெடுத்து விட்டனர். அதன்படி தான், கடந்த தேர்தலில் முடிவுகள் அமைந்தன. தே.மு.தி.க.,வின் அதிஷ்டம், எங்களுடன் கூட்டணி சேர்ந்தனர். அவர்களுக்கு 41 இடங்கள் ஒதுக்கப்பட்டன. அதனால் தான், இத்தனை உறுப்பினர்கள், அக்கட்சிக்கு கிடைத்திருக்கின்றனர். இந்த கூட்டணியில், எனக்கு சிறிதும் விருப்பமில்லை என்பதை இந்நேரத்தில் பதிவு செய்ய விரும்புகிறேன். 


சி.பி - அவ்வளவு நல்லவரா இருந்தா இதே ஸ்டேட்மெண்ட்டை தேர்தல் பிரச்சாரத்தின்போதே சொல்லி இருக்கலாமே?  இது ஒரு விருப்பம் இல்லாத கூட்டணீன்னு?

என் கட்சியினரை திருப்தி செய்வதற்குத் தான், இந்தக் கூட்டணிக்கு நான் சம்மதித்தேன். இந்தக் கூட்டணி அமையாவிட்டாலும், அ.தி.மு.க.,விற்கு எந்த ஒரு பாதிப்பும் ஏற்பட்டிருக்காது. தே.மு. தி.க.,விற்கு கொடுத்த இடங்களிலும், அ.தி.மு.க., வெற்றி பெற்றிருக்கும். நிதர்சனமான இந்த உண்மையை, இந்நேரத்தில் அவர்களுக்கும் புரிய வைக்கிறேன்; அனைவருக்கும் புரிய வைக்கிறேன். அ.தி.மு.க.,வுடன் தே.மு.தி.க., சேர்ந்ததால் தான், அவர்களுக்கு அதிகமான உறுப்பினர்கள் கிடைத்து, எதிர்க்கட்சித் தலைவர் என்ற அந்தஸ்த்தும் கிடைத்தது. பிரதான எதிர்க்கட்சி என்ற அந்தஸ்த்தும், தகுதியும் கிடைத்தது. அ.தி.மு.க., வுடன் கூட்டணி சேராவிட்டால், கடந்த தேர்தலில் ஒரு இடம் கூட, தே.மு.தி.க.,விற்கு கிடைத்திருக்காது என்பது தான் உண்மை. தகுதியற்றவர்களுக்கு ஒரு பெரிய பதவி கிடைத்தால், அதில் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்பது கூட புரியாமல், மிகவும் அருவருக்கத்தக்க வகையில் நடந்து கொண்டிருப்பதை பார்க்கும் போது, இவர்களுடன் கூட்டணி சேர்ந்து அ.தி. மு.க., தேர்தலைச் சந்தித்ததே என்று நினைக்கும் போது நான் வருத்தப்படுகிறேன்; வெட்கப்படுகிறேன். எதிர்க்கட்சித் தலைவரும், அவருடைய கட்சி உறுப்பினர்களும் நடந்து கொண்ட விதத்தை பார்க்கும் போது, ஒன்று தான் சொல்லத் தோன்றுகிறது. அவர்களுக்கு வர வேண்டிய ஏற்றம்; வரக்கூடிய ஏற்றம் எங்களால் அவர்களுக்கு வந்து முடிந்து விட்டது. இனிமேல், அவர்களுக்கு இறங்கு முகம் தான். அதை சரித்திரம் சொல்லும். இவ்வாறு ஜெயலலிதா பேசினார்.


சி.பி - சரித்திரம் சொல்லுதோ இல்லையோ உங்களூக்கு இனி தரித்திரம்தான்

"அவங்களும் 10 மாசம்தான்... நாங்களும் 10 மாசம்தான்... எங்களுக்கு என்ன பிரச்னை வந்தாலும் சந்திக்க தயாராக இருக்கிறோம்,'' என, விஜயகாந்த் ஆவேசமாக கருத்து தெரிவித்தார்.


சி.பி - ஆஹா , கேப்டன் தத்துவமா பொழிய ஆரம்பிச்சுட்டாரெ? 


சட்டசபையில் முதல்வர் ஜெயலலிதாவுடன் காரசாரமான விவாதத்திற்கு பின் வெளியேற்றப்பட்ட எதிர்கட்சித் தலைவர் விஜயகாந்த் பேட்டி: ஊர்கூடி தேர் இழுத்தது போல் நாங்கள் ஒன்று சேர்ந்ததால்தான் அ.தி.மு.க., ஆட்சி அமைந்தது என, எங்கள் எம்.எல்.ஏ., சந்திரகுமார் சட்டசபையில் தெரிவித்தபோது, "எங்களால் தான் நீங்கள் ஜெயித்தீர்கள்' என, அமைச்சர்கள் ஓ.பன்னீர்செல்வமும், செங்கோட்டையனும் தெரிவித்தனர். "சங்கரன் கோவில் தொகுதியில் தனித்து போட்டியிடுவீர்களா?' என்று முதல்வர் ஜெயலலிதா சவால் விடுத்தார். இதற்கு நான் பதிலளிக்க முயன்றபோது, எதிர்கட்சித் தலைவரான என்னை பேச அனுமதிக்கவில்லை. ஆளுங்கட்சி எம்.எல்.ஏ. ஒருவர் விரல் நீட்டி மிரட்டுகிறார். அதைப் பார்த்துக் கொண்டு சும்மா இருக்க முடியுமா? 


 சி.பி - அவங்க விரல் நீட்டி மிரட்னாங்கன்னா நீங்களூம் அப்படி செஞ்சா அவங்களுக்கும், உங்களூக்கும் என்ன வித்தியாசம்? நல்ல தலைவர் என்பவர் உணர்ச்சிகளை கட்டுப்படுத்தவும், தன் தொண்டர்களை மட்டுப்படுத்தவும் தெரிஞ்சிருக்கனும்..

அவங்களும் 10 மாசம்தான்... நாங்களும் 10 மாசம்தான்... எங்களுக்கு என்ன பிரச்னை வந்தாலும் சந்திக்க தயாராக இருக்கிறோம். ஆட்சியை கலைத்துவிட்டு கவர்னர் ஆட்சியை கொண்டுவந்த பிறகு, சங்கரன் கோவில் தேர்தலை நடத்திக் காட்டட்டும். அப்ப சவாலை சந்திப்போம். யாருக்கு திராணி இருக்குன்னு அன்னைக்கு பார்ப்போம்.

மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரம் மூலம் முறைகேடு செய்ய முடியும். அதன் மூலம்தான் தி.மு.க., ஜெயித்தது என முன்பு சொன்னார்கள். இப்போது அதே இயந்திரத்தைத்தான் இவர்களும் பயன்படுத்துகின்றனர். அப்போது தவறு செய்திருந்தால், இப்போது செய்ய முடியாதா? கடந்த ஐந்து வருடத்தில் நடந்த இடைத்தேர்தல்களில் அ.தி.மு.க., ஜெயித்திருக்கிறதா? பென்னாகரத்தில் டெபாசிட் பறிபோனது. பர்கூரில் தேர்தலில் நின்று தோற்றுப் போனவர் தானே முதல்வர் ஜெயலலிதா. இவ்வாறு விஜயகாந்த் தெரிவித்தார்.

சி.பி - அவரும் தோற்றவர்தான்.. நீங்களும் தோற்றவர் தான்.. இனிமே ஜெயிக்கப்போறது யார்?னு காலம் தான் தீர்மானிக்கும்.. 

 மக்கள் கருத்து 

1. வசந்தி - ராஜன் மக்களின் எண்ணங்களை அருமையாக பிரதிபலித்துள்ளார். ஆளும் வர்க்கம் இது போன்று இணைய தளங்களை பார்த்து அவ்வப்போது மக்களின் மன நிலையை புரிந்து கொள்ள வேண்டும்.

வீடியோ காட்சிகளை பார்க்கும் போது, விஜய காந்தின் முகபாவனைகளை சரியில்லை. இருந்தாலும், ஆளுங்கட்சி விலை வாசி பற்றி பேசும்போது ஏன் மிரட்டி அதை பேச விடாமல் தடுக்க வேண்டும்?

தகுதி பற்றி பேசும் அம்மா எந்த ஒரு தகுதியும் இல்லாத ஒருவரை நிதி அமைச்சர் ஆக்கி உள்ளாரே, அது சரியா? ஜெய்லலிதா திருந்தவில்லை என்றால் கோர்ட் திருந்த வைக்கும் (சமச்சீர் கல்வி, சாலைப்பணியாளர் வேலை, தலைமைச்செயலக கட்டிடம்...), இல்லை மக்கள் 2014 ல் திருந்த வைப்பார்கள். கடவுள் அதற்கு முன் பெங்களூர் கோர்ட் வழியாக திருந்த வைக்கலாம்

2.  மகிழ்நன் -தகுதியில்லாதவர்களுக்கு பெரிய பதவி திடீரென்று வாய்த்துவிட்டால், அவர்கள் எப்படி நடந்து கொள்வார்கள் என்பதற்கு எடுத்துக்காட்டாக இன்று எதிர்க்கட்சித் தலைவரின் நடவடிக்கைகள் அமைந்திருந்தன.

விஜயகாந்தை குறித்து...ஜெயா...மம்மி..

சரிங்க மம்மி,,,

நீங்க என்ன தகுதியில பதவிக்கு வந்தீங்க...மக்களுக்கு தொண்டு செய்தா? மத்தவங்களை பேசும்போது கவனமா பேசுங்க...சுயவிளக்கம் கொடுப்பது போலவே இருக்கு

3. யுவா - ரெண்டு பேரும் எப்படின்னு அவங்கவங்களுக்கு தெரியும். மக்களுக்கும் நல்லாவே தெரியும். எதைத் தின்றால் பித்தம் தெளியும்னு இருந்த நிலையில் இவங்களை ஜெயிக்க வைத்ததன் பலன் தான் இது. ஆமாம்பா, ஒரு ச.ம.உ. நாட்டுநடப்பு பத்திக் கேள்வி கேட்டால் என்ன எகத்தாளமா பதில் சொல்றது? கேட்ட கேள்விக்குச் சரியான பதில் மட்டும் அளித்துவிட்டு விட வேண்டியது தானே? அப்புறம் என்ன அப்பென்டிக்ஸ் மாதிரி தகுதி பத்தி கருத்து? என்னவோ இவுகளுக்கு ரொம்பத் தகுதி இருக்கிற மாதிரி. நீங்க எப்படி அரசியலரங்கில் நுழைந்தீர்கள் என்று நல்லாவே தெரியும்.


3 முறை முதல்வர் ஆனதும் எந்தத் தகுதியின் அடிப்படை? முதல்ல உங்க கட்சி ச.ம.உ. வேட்பாளர்களைத் தேர்ந்தெடுக்கும் போது என்ன தகுதி பார்க்கறீங்க? கேட்டா சசி மேல பழியைப் போட்டுட்டு உத்தமி வேஷம் கட்டுவீங்க? அப்படி சசி தான் எல்லாத்துக்கும் காரணம்னா, முந்தா நாள் தான் தெரிஞ்சதா? உங்க நாடகம் எல்லாம் நல்லாவே நடத்துங்க. முடிவு நெருங்குகிறது. ஆக மொத்தம் மக்கள் நாசமாகிக் கொண்டு இருக்கிறார்கள். ஒரு ஆக்கப்பூர்வமான செயல்பாடாவது (மாநில (அ) மக்கள் வளர்ச்சிக்கு) கொண்டு வந்திருக்கிறீர்களா இந்த 9 மாத காலத்தில்? கேட்டா கடந்த ஆட்சியின் ஊழலால் அரசு நிர்வாகம் சீர்கெட்டு இருக்கிறதுன்னு சத்தாய்ப்பீங்க? எப்படி ஒரு 5 வருஷம் ஆகுமா அதைச் சரிப்படுத்த? இதுல இந்த சசி, "கரன்"களின் பிரச்சினை வேறு. அதைச் சீர்படுத்துவதுதானே இப்போது தலையாய கடமை உங்களுக்கு? 96-ஆம் வருஷம் நீங்க போட்ட ரூட்ல தானே இப்போ "கரன்"களும் கன்டெய்னரில் பணத்தையும், பத்திரங்களையும் ஏற்றி அனுப்பிக்கிட்டு இருக்காங்க?


4. சந்த்ரு -விஜயகாந்தை விட மோசமாக பேசியுள்ளர் ஜெயா. அடுத்தவரை மதிக்கும் பண்பு இவரிடம் எப்போதும் இருந்ததில்லை.


5. அகிலன் -"தகுதி இல்லாதவர்களுக்கு பெரிய பதவி கிடைத்தால் எப்படி நடந்துகொள்வார்கள் என்பதை இவ்வளவு கீழ்த்தரமாக எதிர்க்கட்சியினர் நடந்துகொண்டதை வைத்து தெரிந்துகொள்ளலாம்," என்று விஜயகாந்தை ஆவேசமாக சாடினார். இதையெல்லம் சொல்ல்வதர்கு தகுதி உள்ளத என யோசித்து பேசியிருக்கலாமே எதிர் கட்சி என்றாலெதி கேள்வி கேட்கதான செய்வாங்க அது எதிர் கட்சி வரிசையில் உக்காந்திருந்தாதானே தெரியும் கொட நாட்டில போய் கொட்டிகிட்டா எப்டிப்ப தெரியும் மக்களே இவர்களை சட்ட பேரவயில் சட்டம் பேசத்தானே அனுப்பினோம்
சண்ட போடவா அனுப்பினோம் யார் வந்தாலும் இதை மட்டும்தான் உருப்படியா செய்றாங்க சட்ட மன்ற உறுப்பினர்களே நீங்கள் ஒன்றை மட்டும் நன்றாக தெரிந்து கொள்ளுங்கள் உங்களின் வெற்றிக்கு காரணம் நீங்கள் இருவருமே அல்லடா ஆளுங்கட்சி காரர்களே நான்றாக தெரிந்து கொள்ளுங்கள் உங்கள் வெற்றிக்கும் காரணம் தி மு க தானே தவிர உங்களின் மகதன சேவையை கண்டு யாரும் வாகாளிக்க வில்லை தி மு க வின் மேல் உள்ள வெறுப்பால் மற்று கட்சிக்கு வாக்களிக்க வேண்டும் என்றே உங்களுக்கு வாக்களித்தார்கள் தயவு செய்து நீங்கள் மார்தட்டி கொள்ளாதீர்கள் மக்கள் உங்களை முட்டாள்கள் என்று நினைத்துவிடுவார்கள் தோழர் சந்திர மோகனுக்கு ஏன் நன்றி அவர் சரியாக தானே கேட்டிருக்கிறார் எப்பா மாமன்ற உறுப்பினர்களே கேள்ளவி கேட்ட பதில் சொல்ல கத்துகிட்டு சட்டபேரவைக்கு வாங்க தோழர்களே நீங்க வெட்க படாதீங்க உங்களுக்கேள்ளலாம் வாக்களித்தொமே என்று நாங்கள் வெட்க படுகிறோம்

Monday, January 09, 2012

கோர்ட் கேஸ் , ஜெயில்-ல் நக்கீரன் கோபால் ? - காமெடி கும்மி கலாட்டா

https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhHSb3n_MMlxvf3H4Vevh-NS8TOrDl8KGbjoTT6DpWIlAVgoS1NsH-pymX_XjM3uwNOI_H9sTHvtwLVBRiNEf6Xn6sIN_GYNuGnYpZKN23veNlau2ZotMqoR4A_BNx-JthL4s_Mc3NQjDBD/s1600/1.jpg

1.மன்னா! மகாராணி மாட்டுக்கறி சாப்பிட்டதை  சஞ்சிகைகள் படம் பிடித்து விட்டன, இப்போ என்ன செய்வது? 

சஞ்சிகையை எரித்து விடு, பிரச்சனையை திசை திருப்பி விடு

----------------------------------

2. மிஸ்டர் கோபால்,உங்களுக்கு வேலூர் பிடிக்குமா? பாளையங்கோட்டை பிடிக்குமா?

மொதல்ல போலீஸ்தான் பிடிக்கும் போல

----------------------------------

3. உங்க பத்திரிக்கையை இன்சூர் பண்ணி இருக்கீங்களா? 

அது ஆல்ரெடி பண்ணிட்டேன், என்னைத்தான் இன்னும் பண்னலை, பண்ணனும்

--------------------------------

4. எடிட்டர் - எதையும் பாசிட்டிவ்வா எடுத்துக்கனும். 


அதுக்காக சேல்ஸ் அதிகரிக்க வழிவகை செய்த முதல்வருக்கு நன்றி-னு போஸ்டர் அடிக்கனுமா?

-------------------------------------

5. ஜட்ஜ் - எதுக்காக எடிட்டரை தாக்குனீங்க? 

கைதி- தலையங்கத்துல அவரு எங்க தலைவரை தாக்குனாரு, பதிலுக்கு அவர் தலை, அங்கத்தை நாங்க தாக்குனோம்

------------------------------

http://www.nakkheeran.in/UltimateEditorInclude/UserFiles/nakkheeran/2009/dece09/13.10.09/yutham1.jpg

6. ஜட்ஜ் - வழக்கை நல்லா விசாரிச்சுட்டேன், சம்பந்தப்பட்ட எடிட்டர்  தன் ஆயுள் முழுவதும் இனி சைவம் மட்டுமே சாப்பிடனும் 

கைதி - இதுக்கு ஆயுள் தண்டனை பெஸ்ட்

--------------------------------------

7. சார்,உங்க புக் பார்த்தேன், நியூஸ் எல்லாம் மட்டனா இருந்துச்சு, உங்க ரசனை ரொம்ப மட்டமா இருந்துச்சு

----------------------------------

8. சிங்கப்பூர்,மலேசியா புகழ் கோபால் பல்பொடிக்கு தடை, கம்ப்யூட்டர் கோர்ஸில் கோபால் லேங்குவேஜ் நீக்கப்பட்டது - ஜெ அதிரடி அறிவிப்பு@இமேஜினேஷன்

-----------------------------------

9. முதல்வர் ஜெயலலிதா சமையலில் ஈடுபடுவதே இல்லை- பொன்னையன் # சட்டசபைக்குப்போகச்சொன்னா அண்ணன் சமையல் அறைல போய் உக்காந்து சாப்பிட்டு இருக்காரு

--------------------------------------
10. ஜெ - நான் வெஜ்னு சொன்னதை அவர் தப்பா புரிஞ்சுக்கிட்டார்..

கோபால் - ஜெ நான்வெஜ்-னு நான் சொல்லவே இல்லை ஜெ நான் -வெஜ் அப்டினுதான் சொன்னேன்

-----------------------------

http://4.bp.blogspot.com/-S7lWYkJLaRU/Tc6HUM5r0II/AAAAAAAAAvA/G2lKaEE6d7Q/s1600/2132_1.jpg

11. பீஃப் எனக்குப்பிடிக்காதுன்னு சொன்னா அவங்க பக்கா  சைவமா இருக்கனும்னு அவசியம் இல்ல, பி எஃப் எனக்குப்பிடிக்காதுன்னா அவங்க பக்கா அசைவமா இருக்கனும்னு அவசியம் இல்ல # கில்மா கண்டு பிடிப்[பு

----------------------------------------

12. நீங்க மட்டன் சாப்பிட்டதை பார்த்த சாட்சிகள் 4 பேர் இருக்காங்க...

  ஓஹோ, அதை பார்க்காத சாட்சிகள் 4 கோடி பேர் இருக்காங்க ,4 பெருசா? 4 கோடி பெரிசா?

-----------------------------------

13. உங்க மேல சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்போறோம்

கோபால்- அப்போ இதுவரை எடுத்தது? 

போலீஸ் -சுளுக்கு

-----------------------------------------

14. நான் சைவம் மட்டும் தான் சாப்பிடுவேன், எனக்கே ஓட்டு போடுங்க ... நான்  எதுவுமே சாப்பிட மாட்டேன்,எனக்கே ஓட்டு போடுங்க # 2016 எலக்‌ஷன்

-------------------------------------

15.மாட்டுக்கறி பிரச்சனையில் சிக்கியதால் இனி ஜெ கோமாதா என அழைக்கப்படுவாரா?

-----------------------------------

16. நக்கீரன் கோபால் மீது நெல்லை தொழிலதிபர் தீடீர் மோசடி வழக்கு #  ம்ஹூம்,இது எடுபடலை, யாராவது ஒரு லேடி என் கையைப்பிடிச்சு இழுத்துட்டார்னா OK

----------------------------------------------

17.பார்ப்பதற்கே பயங்கரவாதி தோற்றம் தரும் மீசையுடன் இருந்ததால்தான் நக்கீரன் கோபால் கைது செய்யப்பட்டார், மற்றபடி பழி வாங்கும் எண்ணம்  அரசுக்கு இல்லை - ஜெ அதிரடி அறிவிப்பு

---------------------------------------

18. நக்கீரன் கோபால் மீது ஆறு பிரிவுகளில் வழக்கு# அட போங்கம்மா, உங்க ராசி நெம்பரை மறந்துட்டீங்களே? இன்னும் 3 சேர்க்கவும்

--------------------------------

டிஸ்கி -

PLAYERS - அபிஷேக் -பிபாஸாபாஷா பாலிவுட் ஆக்‌ஷன் - சினிமா விமர்சனம்

 

விநாயகா - HITCH பட தழுவலா?-சினிமா விமர்சனம்

 

குங்குமம் வலைப்பேச்சு வாழ்த்துகள்

 



Saturday, January 07, 2012

நக்கீரன் - ஜெ மோதல் -நடந்தது என்ன? தமிழ்நாடே பரபரப்பு

முதல்வர் ஜெ., குறித்து அவதூறாக செய்தி வெளியிட்டமைக்கு கண்டனம் தெரிவித்து தமிழகம் முழுவதும் நக்கீரன் இதழை தீ வைத்து அ.தி.மு.க.,வினர் கொளுத்தினர் . சென்னையில் உள்ள நக்கீரன் அலுவலகம் மீது அ.தி.மு.க., தொண்டர்கள் கல் மற்றும் உருட்டுக்கட்டையால் வீசி அங்கிருந்த பொருட்களை அடித்து நொறுக்கினர். இதனையடுத்து அங்கு பரபரப்பும், பதட்டமும் ஏற்பட்டுள்ளது.


சி.பி - வீரப்பன் மேட்டருக்குப்பிறகு நக்கீரன்  சர்க்குலேஷன் இறங்கிடுச்சேன்னு கவலைல இருந்தாரு. இதை வெச்சே 6 மாசம் ஓட்டிடுவாருன்னு நினைக்கறேன்..


நக்கீரன் இதழில் சசிகலாவுடனான பிரச்னையில் ஜெ., இப்போது எவ்வாறு நடந்து கொள்கிறார், அவர் என்ன சொல்லியிருக்கிறார் என்று அட்டைப்படத்தில் ஜெ., சசிகலா படத்துடன் செய்தி வெளியானது. இதில் கடுமையான வார்த்தைகள் உபயோகித்ததாக அ.தி.மு.க,வினர் இன்று ஆவேசமுற்றனர். மாநிலம் முழுவதும் மதுரை, ஈரோடு, கரூர், நாமக்கல், அரியலூர், ராசிபுரம், விருதுநகர் மாவட்டம் சாத்தூர், சிவகாசி, வால்பாறை, திருநெல்வேலி, உள்ளிட்ட பகுதிகளில் இந்த கட்சியின் எம்.எல்.ஏ., மற்றும் கவுன்சிலர்கள் இந்த பத்திரிகையை தீ வைத்து எரித்தனர். சில கடைகளில் அ.தி.மு.க,வினர் புகுந்து புத்தகங்களை அள்ளி சென்றனர்.


சி.பி - இவங்க ரகளை செஞ்சாக்கூட கண்ணியமா செஞ்சிருக்காங்க, சினிமால வர்ற மாதிரி கடை எல்லாம் உடைக்கலை, காசு கொடுத்துத்தான் புக் வாங்கி எரிச்சிருக்காங்க, அந்த வகைல பாராட்டலாம்.. இந்த மேட்டர் இப்படி ஆகும்னு தெரிஞ்சிருந்தா கோபால் நக்கீரன் காப்பியை டபுள் ஆக்கி இருப்பாரு.




இதற்கிடையில் இன்று காலையில் சென்னை ராயப்பேட்டை ஜானிஜான்கான் தெருவில் அமைந்திருக்கும் நக்கீரன் அலுவலகம் முன்பாக அ.தி.மு.க.,வின் பல்வேறு பிரிவினர் கூடினர். நக்கீரனுக்கு எதிராக கோஷங்கள் எழுப்பினர். தொடர்ந்து அங்கும் இதழ்களை தீ வைத்து கொளுத்தினர். பின்னர் கல் மற்றும் கம்புகளால் வீசி தாக்குதல் நடத்தப்பட்டது. இதில் அலுவலக கண்ணாடி , அருகில் நிறுத்தப்பட்டிருந்த கார் சேதமடைந்தன. தொடர்ந்து போலீசார் வந்தும் தொண்டர்கள் கடும் ஆவேசமாக இருப்பதை காண முடிந்தது.


சி.பி - பத்திரிக்கை சுதந்திரம் இருக்க வேண்டியதுதான், ஆனா நடந்த மேட்டர் ஜாதி வெறியை தூண்டுவதாகவும், தனி நபர் தாக்குதலாகவும் அமைஞ்சிருக்கு.கோபால் அண்ணனுக்கு களி கன்ஃபர்ம்.. .

இது குறித்து நக்கீரன் கோபால் கூறுகையில்: ஆளும் அரசின் அராஜகம் அத்துமீறி போயிருக்கிறது. போலீசாருக்கு பல முறை தொடர்பு கொண்டும் பாதுகாப்புக்கு யாரும் வரவில்லை. காலதாமதமாக வந்த போலீஸ்காரர்கள் முன்னிலையிலேயே தாக்குதல் நடந்தது என்றார்.



சி.பி - அண்ணே, காமெடி பண்ணாதிங்க, நீங்க தாக்குனது சி எம்மை, போலீஸ் எப்படி உங்களுக்கு சப்போர்ட்டா வரும்னு எதிர்பார்க்கறீங்க? எதுக்கும் கொஞ்ச நாள் காட்டுக்குள்ள ஒளிஞ்சுக்குங்க..

கருணாநிதி கண்டனம் : இந்த சம்பவம் குறித்து தி.மு.க., தலைவர் கருணாநிதி கண்டனம் தெரிவித்துள்ளார். இவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்: ஜனநாயக நாட்டில் இது போன்று பத்திரிகை அலுவலகத்தை தாக்குவது ஏற்புடையது அல்ல. ஒரு தலைவர் குறித்து அவதூறாக செய்தி வெளியானால் கோர்ட்டில் முறையிட்டு வழக்கு தொடர வாய்ப்பு இருக்கிறது. ஆனால் இதனை விட்டு இவ்வாறு வன்முறை செயல்கள் ஏவி விடப்படுவது ஜனநாயகத்தில் ஏற்புடையது அல்ல. இவ்வாறு கருணாநிதி கூறியுள்ளார்.


சி.பி - தினகரன் பத்திரிக்கைல அழகிரி ஸ்டாலின் கருத்துக்கணிப்பு வந்தப்ப ஆஃபீஸ் எரிக்கப்பட்டதே அப்போ என்னங்கய்யா சொன்னீங்க?ரிவைண்ட் ப்ளீஸ்


நக்கீரன் மீது அவதூறு வழக்கு : நக்கீரன் செய்தி தொடர்பாக இந்த பத்திரிகை மீது சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்கப்படும் அ.தி.மு.க., ஒருங்கிணைப்பு செயலர் பொன்னையன் கூறியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்: முதல்வர் ஜெ., மீது களங்கம் ஏற்படுத்தும் விதமாக செய்தி பிரசுரிக்கப்பட்டுள்ளது. இந்த செய்தி குறித்து அவதூறு வழக்கு பதிவு செய்யவும், சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்கவும் கட்சி முடிவு செய்திருப்பதாக கூறப்பட்டுள்ளது.

சி.பி -ஜாதி வெறியை தூண்டுகிறார் என்று கூட கேஸ் போடலாம்..அந்த அளவு கேஸ்ல ஒர்த் இருக்கு... 


நக்கீரனில் வந்த செய்தி...