Showing posts with label SANTHANAM. Show all posts
Showing posts with label SANTHANAM. Show all posts

Monday, January 14, 2013

கண்ணா லட்டு தின்ன ஆசையா? - சினிமா விமர்சனம்

http://upload.wikimedia.org/wikipedia/en/thumb/2/25/Kanna_Laddu_Thinna_Aasaiya.jpg/220px-Kanna_Laddu_Thinna_Aasaiya.jpg

திரைக்கதை மன்னன் கே பாக்யராஜ்-ன் இன்றுபோய் நாளை வா படத்தின் லேட்டஸ்ட் வெர்ஷன் தான் இந்தப்படம்.படத்துக்கு எதிர்பார்ப்பு எகிறக்காரணங்கள் 2.  முதல் காரணம் பவர் ஸ்டார். அடுத்தது இது சந்தானத்தின் சொந்தப்படம்.ஒரு காமெடி நடிகர் சொந்தப்படம் எடுத்து இந்த அளவு ஹிட் ஆனது இதுவே முதல் முறை என நினைக்கிறேன் ( தமிழில்) 


நண்பர்கள் 3 பேர் . அந்த தெருவில் புதுசா குடி வரும் ஒரு ஃபிகரை  லவ் பண்ணலாம்னு பிளான் பண்றாங்க.ஒருத்தர் அந்த வீட்டு வேலை எல்லாம் செஞ்சு இம்ப்ரஸ் பண்ணப்பார்க்கறார். ஒருவர் ஹீரோயின்  சித்தப்பாவிடம் பாட்டு கத்துக்கறேன் பேர்வழி என வீட்டுக்குள் புகுந்து அலப்பரை பண்றார். இன்னொருவர்  ஹீரோயினின் அப்பாவிடம் டான்ஸ் கத்துக்கறேன்னு ரீல் விட்டு உள்ளே புகுந்துடறார். இவங்க பண்ற காமெடி அலப்பறைகள் தான் படம் .


இந்தப்படத்தின் பெரிய ஹிட்டுக்கு முதல் க்ரெடிட் பவர் ஸ்டாருக்குத்தான். தியேட்டரில் இவர் வரும் காட்சிகள் எல்லாம் ஒரே ஆரவாரம், கைதட்டல் . இத்தனைக்கும் அவர் பெருசா எந்த எக்ஸ்பிரசனும் காட்டலை , பிரமாதமான நடிப்பு என்றெல்லாம் சொல்ல முடியாது . ஆனாலும் அவரை ரசிக்கிறார்கள் . பல காட்சிகளில் சந்தானத்தையே ஓவர் டேக்குகிறார். 


http://www.cinespot.net/gallery/d/978058-1/Kanna+Laddu+Thinna+Aasaiya+Movie+Photos+_9_.jpg



அடுத்து சந்தானம் . சொல்லவே வேணாம் , சொந்தப்படம் வேற . இவரை 2 விஷயங்களுக்காகப்பாராட்டலாம் . தன்  படம் என்பதால் ஜோடி தனக்கு செட் ஆகற மாதிரியோ , தனக்கு தனி டூயட்டோ வைக்கலை . சராசரி ஆள்ங்க அப்படித்தான் செய்வாங்க . இவர் கேரக்டர் அனலைஸ் பண்ணி சொந்த டயலாக்கை அளி விடுவது , டக் டக்னு கவுண்ட்டர் கமெண்ட் அடிப்பது அழகு. ஒரு கல் ஒரு கண்னாடியில் மொத்தம் 104 ஜோக்ஸ் இருந்தன. இதில்  112 ஜோக்ஸ் . அதில் சந்தானம் மட்டும் 86 ஜோக்ஸ் சொல்றார். வெல்டன் 


ஹீரோவாக  புதுமுகம் சேது . இவர் பெருசா எடுபடலை . கே பாக்யராஜ் மாதிரி அப்பாவி முகம் செட் ஆகலை . இன்னொன்னு காமிரா எப்பவும் சந்தானத்தையும் , பவரையும் கவர் பண்ணி இருப்பதால் இவர் அவுட் ஆஃப்  ஃபோகஸ் ஆகிறார். ஹீரோயின் யாருக்கு ஜோடி சேர்ந்தா என்ன ?  ஜாலியா சிரிச்சமா? வந்தமா?ன்னு இருக்கனும்னு ஒரு மெண்ட்டாலிட்டிக்கு ஆடியன்சை கொண்டு வந்தது இயக்குநர் சாமார்த்தியம் . 


ஹீரோயின்  புடிச்சிருக்கு பட ஹீரோயின்   விஷாகா . த்ரிஷா விளம்பரத்தில் டல் திவ்யா தூள் திவ்யாவாக ஆவாரே அந்த ஃபிகர் தான் என நினைக்கிறேன். உதடு ரொம்ப சின்னது , கண்ணும் . தனித்தனியா பார்த்தா அழகாக இருப்பவை மொத்தமா முகமா பார்க்கும்போது ஏதோ ஒரு வசீகரம் மிஸ்ஸிங்க் . டிரஸ்சிங்க் சென்ஸ் நல்லாருக்கு .  யு நெக் ஜாக்கெட்டுக்கும், வி நெக் ஜாக்கெட்டுக்கும்  இடையில் இஸ்பேட் ஃபிராண்ட் நெக் ஜாக்கெட் போட்டு கலக்குகிறார். தமிழ் சினிமா ஹீரோயின்கள் பேக் நெக் இஸ்பேட் மாடல் ஜாக்கெட் போட்டிருக்காங்க, ஆனா முன்னால் இப்படி அணிவது இதுவே முதல் முறை . ஸ்லீவ் மட்டும் ட்ரான்ஸ்பேரண்ட்  மாடல் வேற . இவர் வரும் எல்லா காட்சிகளிலும் காதுக்கு போடும் ஸ்டெட் ஒவ்வொரு முறையும் புதுப்புது மாடலில் போட்டு நதியாவுக்கு சவால் விடுகிறார். ( உயிரே உனக்காக படத்தில் நதியா போட்டு வந்த ஸ்டெட் மாடல்கள் மட்டும் 87 ) 


இவர் இடை அழகியாக வர நல்ல வாய்ப்பு இருக்கு. ஆனா தொப்பையை குறைக்கனும். நடிப்பு ஓரளவு வருது . முயற்சித்தால்  முன்னணி ஹீரோயின் ஆகலாம் . 



http://gallery.oneindia.in/ph-big/2012/12/kanna-laddu-thinna-aasaiya_135521984215.jpg


இயக்குநர் பாராட்டு பெறும் இடங்கள் 




1. டைட்டில் போடும்போதே கே பாக்யராஜ்க்கு க்ரெடிட் கொடுத்தது  நல்ல விஷயம் . 2 கோடி ரூபாய் நஷ்ட ஈடு கேட்டு அவர் கோர்ட்டுக்குப்போனபோது நைச்சியமாகப்பேசி 60 லட்சம் ரூபாய் கொடுத்து காம்ப்ரமைஸ் பண்ணீயதும் குட்.. 



2. அதான் ரீமேக் படமாச்சே என காட்சிக்கு காட்சி ஜெராக்ஸ் எடுக்காமல் கொஞ்சம் மெனக்கெட்டு சில கேரக்டர்களை மாற்றியது 



3.பவர் ஸ்டாரின் ரியல் லைஃபில் அவர் பண்ணும் அலப்பறைகள் , காசு கொடுத்து ஆள் கூட்டி வருதல் , பணம் செலவு பண்ணும் ஜாலித்தனம் எல்லாவற்றையும் சாமார்த்தியமாக படத்தில் சேர்த்து அதுக்கும் மக்களை கை தட்ட வைத்தது . 



4. ஒரிஜினல் படமான இன்றுபோய் நாளை வா படத்தில் ஹீரோயின் ராதிகா அதில் குணச்சித்திரமாக வந்து போவார் , இதில் கிளாமராய் , இன்னும் அழகாய் காட்டி இருப்பது பாராட்டக்கூடியது 


5. ஆசையே அலை போல ரீமிக்ஸ் பாட்டு , அடியே  என் அன்னக்கிளியே பாட்டு இரண்டும் ரசிக்க வைக்கும் மெட்டு  ( இசை - தமன் ) . பின்னணி இசையும் நல்லாருக்கு 


6. இந்தப்படத்தில் நடிக்க பவர் ஸ்டாரிடமே 10 லட்சம் ரூபாய் , புது முக ஹீரோ  சேதுவிடம் 3 லட்சம் கறந்ததாக ஒரு தகவல் . அது உண்மையாக இருந்தால்
 இது செம லாபம். படமும் ஹிட் . வசூலும் அள்ளிடும் . எல்லாம் லாபம்/. 



http://newtamillyrics.com/wp-content/uploads/2012/12/kanna_laddu_thinna_aasaiya_tamil_movie_song-lyrics-padal-varigal.jpg


 இயக்குநரிடம் சில கேள்விகள் 



1. அரங்கத்தில்  ஒரு இடத்தில் சந்தானம் பாட்டு பாடுகிறார்.  அப்போ ஆடியன்ஸ் எல்லாரும் 100% தங்கள் 2 கைகளையும் தலைக்கு மேல் உயர்த்தி கை தட்றாங்க . நிறைய படத்தில் இதே மாதிரி காட்சி வந்துட்டே இருக்கு. எப்போதும், எங்கேயும் தலைக்கு மேலே உயர்த்தி எல்லாம் கை தட்ட மாட்டாங்க.  உங்க கேமரா ஆங்கிள்க்கு வசதியா இருக்கட்டும், பிரம்மாண்டமா இருக்கனும்கறதுக்காக  இஷ்டப்படி எடுக்கறது தப்பு 




2. ஹீரோயின் யாரை லவ் பண்ணப்போறார் என்ற எதிர்பார்ப்பே வரவில்லை 



3. ஹீரோவிடம் ஹீரோயின் லவ் வருவதற்கான சிச்சுவேஷன் ஓக்கே , ஆனா அந்த சீனில் ஹீரோயின் முகத்தில் காதலையே காணோம் . ஹீரோ டக்னு பிடிச்சு முத்தம் தர்றாரே தவிர ,முகத்தில் ஒரு அபார சந்தோஷம் , காதல் பொங்கி வழிய வேணாமா? 



4. ஓப்பனிங்க் ஷாங்க்  கண்ணா லட்டு தின்ன ஆசையா ஒரு கொண்டாட்டப்பாடல், செம ஸ்பீடா பட்டையைக்கிளப்பி இருக்க வேணாமா?  ரொம்ப மெதுவான இசை . சொய்ங்க் சொய்ங்க் ( கும்கி) மாதிரியோ ,ஜிங்கி ஜிங்கி ஜிமிக்கி பாட்டு ( மைனா) மாதிரியோ கொண்டாந்திருக்கலாம். மிஸ்டு 



5. இப்போ நான் சொல்லப்போவது சிலருக்கு சாதாரணமா இருக்கலாம். ஆனா ரொம்ப சென்சிட்டிவ் மேட்டர். சந்தானம்  என்னதான் காமெடி கிங்க்கா இருந்தாலும் , கவுண்டமணி மாதிரி தானே பண்றார் என்றாலும் அவர் தன்னை விட  சீனியர்களை , குறிப்பா பவர் ஸ்டாரை ரொம்ப நக்கல் அடிப்பது தப்பு . காமெடி என்றாலும்  அதுக்கும் ஒரு வரை முறை இருக்கு 


6. படத்தில் மொத்தம் 2 மணி நேரம் 20 நிடங்கள் காட்சிகள் வந்தாலும் மனதில் நிற்கும் காட்சிகள் எதுவுமே இல்லை. ஆனா கே பாக்யராஜ் படங்கள்ல பல காட்சிகள் நெஞ்சில் நிலைத்து நின்றது . லவ் செண்ட்டிமெண்ட் காட்சிகள் 2 வெச்சிருக்கலாம் 





7. சந்தானம் சாதகம் பழகும் காட்சிகளில் உன்னால் முடியும் தம்பி  கமலையும் , காதலை சொல்லும் இடத்தில் சத்யா கமல் என பல இடங்களில் கமலை கிண்டல் செய்வது செம ஜாலியாய் இருந்தாலும் அதை தவிர்த்திருக்கலாம். மற்றவர் சாயல் இல்லாமல் பல இடங்களில் சந்தானம் நல்லாத்தானே பண்றார்? அப்புறமும் எதுக்கு இன்னும் லொள்ளு சபா நக்கல் ?



 Vishakha Singh in Vikram Bhatt`s next film





எதிர்பார்க்கும் விகடன் மார்க் - 42


 எதிர்பார்க்கும் குமுதம் ரேட்டிங்க் -  ஓக்கே 


 ரேட்டிங்க்  6.5 / 10



 சி.பி கமெண்ட் - காமெடிப்பிரியர்கள் , பெண்கள் , ஆண்கள் எல்லாரும் குடும்பத்தோடு பார்க்கலாம். இன்று  போய் நாளை வா படத்தை அடிக்கடி டி வி யில் பார்த்தவர்கள் , பவர் ஸ்டாரை அதிக அறிமுகம் இல்லாதவர்கள் பெரிதாக ரசிக்க முடியாது .



உள்ளத்தை அள்ளித்தா விற்குப்பின் ஒரு முழுநீளகாமெடிப்படம் 100 நாள் படம் ஆகுது. தியேட்டர் ஓனர்ஸ் ரிப்போர்ட் # பவர் ஸ்டார் , சந்தானம் ராக்ஸ்

 ஈரோடு ராயலில் படம் பார்த்தேன் 


சி பி எஸ் சின் வீடியோ விமர்சனம் - கண்ணா லட்டு தின்ன ஆசையா? - 






டிஸ்கி - காமெடி டயலாக்ஸ் மொத்தம் 114 இருக்கு. டைப் பண்ணவே ஒண்ணே முக்கால் மணி நேரம் ஆகும், எனவே அது தனி போஸ்டா பின்னர் வரும் 


 சமர் - த்ரில்லர் வித் லவ் - சினிமா விமர்சனம் -


அலெக்ஸ்பாண்டியன் - சினிமா விமர்சனம் - http://www.adrasaka.com/2013/01/blog-post_3065.html




tollywood-actress-visakha-singh-hot-stills-and-photos_123actressphotosgallery.com_11.jpg (328×400)

Tuesday, January 08, 2013

கண்ணா! ஜெயிலில் களி தின்ன ஆசையா? கே பாக்யராஜ் கேள்வி, போலீசில் புகார்

http://upload.wikimedia.org/wikipedia/en/thumb/2/25/Kanna_Laddu_Thinna_Aasaiya.jpg/220px-Kanna_Laddu_Thinna_Aasaiya.jpg 
நடிகர் சந்தானம், இயக்குனர் ராம.நாராயணனுடன் இணைந்து தயாரிக்கும் படம் "கண்ணா லட்டு தின்ன ஆசையா". இதில் சந்தானம், பவர் ஸ்டார் சீனிவாசன் ஆகியோர் நடித்துள்ளனர். இந்தப் படம் கே.பாக்யராஜின் "இன்று போய் நாளை வா" படத்தின் ரீமேக் என்று கூறப்படுகிறது. இந்த நிலையில் கே.பாக்யராஜ் சென்னை நகர போலீஸ் கமிஷனருக்கு ஒரு புகார் மனு அனுப்பி உள்ளார். அதில் கூறியிருப்பதாவது:



1981ம் வருடம் என்னால் உருவாக்கப்பட்ட மூலக்கதை, திரைக்கதை, வசனம் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டு நான் நடித்து இயக்கிய படம் "இன்று போய் நாளை வா". மூன்று ஹீரோக்கள் ஒரு பெண்ணை காதலிக்க போட்டியிடும் கதை அம்சம் கொண்ட அந்தப் படம் பெரும் வெற்றி பெற்றது. இதன் நெகட்டிவ் உரிமை, திரையீடு உரிமையும் வேறு சிலரிடம் இருந்தாலும் இதன் கதை உரிமை என்னிடம் மட்டுமே உள்ளது. 




அதை நான் தமிழில் ரீமேக் செய்ய யாருக்கும் விற்கவில்லை. ஆனால் 99 வருட திரையீடு உரிமை பெற்றுள்ள ஓ.கே.பிலிம்ஸ் பி.வி.மணி கதை உரிமை தன்னிடம் உள்ளதாக கூறி தயாரிப்பாளர் புஷ்பா கந்தசாமிக்கு அதனை விற்றுள்ளார். இதனை புஷ்பா கந்தசாமி என்னிடம் சொன்னபோது நான் இந்தக் கதையை என் மகனை வைத்து மீண்டும் தயாரிக்கப்போகிறேன். அதனால் கதை உரிமையாக யாருக்கும் தர மாட்டேன் என்று கூறிவிட்டேன். ஆனால் அவர் கதை உரிமை என்னிடம் இருப்பது தெரிந்தும் ஓகே பிலிம்ஸ் மணியிடமிருந்து வாங்கி அதனை ராம.நாராயணனுக்கு விற்றுள்ளார். ராமநாராயணன் தற்போது எனது கதையை நடிகர் சந்தானத்தை வைத்து "கன்னா லட்டு தின்ன ஆசையா" என்ற படத்தை எடுத்து வருகிறார். 


http://gallery.oneindia.in/ph-big/2012/12/kanna-laddu-thinna-aasaiya_135521984215.jpg




கதை உரிமை என்னிடம் உள்ளது தெரிந்தும், ராமநாயராணன், புஷ்பாகந்தசாமி ஆகியோர் கூட்டு சதி செய்து எனது கதையை படம் எடுத்து வருகிறார்கள். கன்னா லட்டு தின்ன ஆசையா படத்தின் கதை. இன்று போய் நாளை வா கதைதான் என்று படத்தின் ஹீரோ சந்தானமும், இன்னொரு  நடிகரும் பேட்டியில் கூறி உள்ளனர். அதற்கான ஆதாரம் என்னிடம் உள்ளது. 



கதை என்னுடையது இல்லை என்றால் படத்தை போட்டுக் காட்ட சொன்னேன். அதையும் செய்யாமல் அவசர அவசரமாக திரையிட முயற்சித்து வருகிறார்கள். என் மகனின் எதிர்காலத்திற்காக நான் வைத்திருந்த கதையை இவர்கள் படம் எடுத்துவிட்டதால் எனது மகனின் எதிர்காலம் கேள்விக்குறியாகி உள்ளது. எனவே அவர்கள் மீது 2 கோடி ரூபாய் நஷ்டஈடு கேட்டு சிவில் வழக்கு தொடங்க உள்ளேன். எனவே போலி ஆவணங்கள் மூலம் எனது கதையை வைத்து எடுக்கப்பட்ட படத்தை நிறுத்தி வைத்து நீதி வழங்கும்படி கேட்டுக் கொள்கிறேன்.


 நன்றி - தினமலர் 


http://www.cinespot.net/gallery/d/978058-1/Kanna+Laddu+Thinna+Aasaiya+Movie+Photos+_9_.jpg

Thursday, December 13, 2012

கவுதம் அதிர்ச்சி! நெட்டில் வந்த முதல் 2 விமர்சனங்களும் நெகடிவ் ரிசல்ட்!

http://cinema.lankasri.com/photos/full/movies/nee_dhane_endhan_ponvasantham.jpg 

நீதானே என் பொன் வசந்தம் ஃபாரீனில் ரிலீஸ் ஆகி விட்டது. ட்விட்டர்  படம் பார்த்துட்டு நறுக் சுருக் விமர்சனத்தை ட்விட்டர் லாங்கரில் போட்டுட்டார்.



நீ தானே என் பொன் வசந்தம் = அரைத்த மாவு!

அய்யயோ! இத படிச்சா படம் பார்க்க சுவாரஸ்யம் இல்லாம போயிருமேனு நினைக்கிற அளவுக்கு படத்துல ஒரு சுவாரஸ்யமும் இல்ல!

கெளதம்மேனனுக்காகவும், இசைஞானிக்காகவும் பார்க்க தூண்டிய படம்! படத்தில் இவங்க ரெண்டு பேரும் இருக்காங்களான்னு டவுட் வருது படம் பார்க்கும் போது! படத்தில கதைனு ஒரு யழவும் இல்ல! காலங்காலமா காட்டுற ஈகோ புடிச்ச காதல் கதை! கெளதம் எதுக்கு இதே கருமாந்திரம் காதல் கதைக்குள்ளயே குதிரை ஓட்டுறாருனு தெரில! காக்கி சட்டை கதை தான் உங்களுக்கு கரீக்ட்! இன்னொரு விண்ணைத் தாண்டி வருவாயா மாதிரியான படம்! ஆனா கம்பேர் பண்ணுனா விதாவ பெட்டர்

படத்துல வழக்கம் போல ஆங்காங்கே பல இங்கிலீஸ் டயலாக்குகள் பேசுறாங்கே! ஏன் சந்தானமே இங்கிலீஸ்ல பேசி காமெடி(!) பண்றாருனா பார்த்துகங்களேன்

படத்துல பல இடங்களில் லிப் டூ லிப் கிஸ் காட்சி இருக்கு! ஆனா ஒரு கிஸ்ஸ கூட நேரடியா காட்டல!  இதுக்கு பாரதிராஜா மாதிரி பூவையும் பூவையும் ஒரச விட்டுருக்கலாம் கெளதம் சார்!

பாடல்கள பத்தி ஏற்கனவே பல விமர்சனம் பார்த்தாச்சு! அதனால அதிகம் சொல்ல போறதில்ல! எல்லாப் படத்துலயும் பாட்டு வரும் போது தான் வெளிய போய் தம் அடிப்பாங்கே! படத்துல பாட்டு தான் ஒரளவுக்கு நம்மள சாந்த படுத்துது!

அதுவும் படத்துல எந்த பாட்டுமே முழு பாட்டு இல்ல எல்லாமே பிட் சாங்ஸ்! பாடல்கள் ஸ்கீரின்லயாவது நல்லாருக்கும்னு பார்த்தா ம்ஹீம் அதே ஓகே ரகம் தான்! பேக் கிரவுண்ட் மியுசிக் சொல்றதுகில்ல! ஒகே ரகம் தான்! ஆனா பழைய ராஜா சார் எந்த சீனிலும் காண கிடைக்கல!

படத்துல சமந்தா ஒரு சீன்ல “ஒரு மயிறும் இல்ல”னு சொல்வாங்க! படம் முடிஞ்சு வர்றப்ப அந்த டயலாக் தோணுது நமக்கு! படத்துல……!
கெளதம் சார் , ராஜா சார்…. .. பெட்டர் லக் நெக்ஸ்ட் டைம்!


டிஸ்கி: படம் பார்க்கனும்னா காதலி இல்ல கேர்ள் பிரண்டோட போங்க! நிறைய சீன்ஸ் போரடிக்கும் அவங்க பக்கத்துல இருந்தா குஜாலா படம் பார்க்கலாம்(!)




Neethane En Ponvasantham Movie Review- Wasted Opportunity

Featured, Movies — By on December 12, 2012 11:14 pm

Produced by Photon Kathaas and RS Infotainment, directed by Gautham Vasudev Menon, Neethane En Ponvasantham is a love story (or as the director cleverly puts it across – moments from Varun-Nithya’s love story).



 With excellent acting, fantastic music, pleasing-on-the-eye cinematography, Neethane En Ponvasantham is a great case study of sum being lesser than the parts. The film starts off when Varun joins college and he meets Nithya in the college culturals. 



They share a history of love-hate relationship. First, they meet when they were kids and then when they were in school. Sparks fly when they meet duing college and they are together for the next four years. The film tries to capture some interesting moments in their lives. Unfortunately, only some of the moments are engaging.



I am not a great fan of GVM’s VTV. It was not bad cinema, it wasn’t a plot oriented film but a character oriented film. But when the director tries the same technique again in NEP, he falls flat. Despite excellent acting by Samantha and Jiiva, you really do not care as much for Varun and Nithya as you should have. 



Beyond a point their fights become irritating and you wonder why at all they should be together. The biggest drawback of NEP is the script focusses too much on the fights between Varun and Nithya and not so much on romantic moments. And you know the director has faltered when he packs off Nithya on a holiday to Edinburgh, and focuses on Varun and you immediately sit up with interest. The moment Nithya is back, the script sags again.



Just like in the Tamil film Khushi, a key scene happens on the rooftop just before the interval – the roof top acts as a character here (Varun-Nithya have had some real intimate moments in this rooftop), but the scene is absolutely ineffective due to the mishandling by the director. 



(The scene from Khushi in comparison is Citizen Kane – more on this a bit later). To give credit to the film, there are a few moments which are engaging. Nithya teaching Varun how to pronounce Edinburgh, the initial school scenes, the climax scene in the same rooftop, the family scenes which changes Varun from a boy to a man, and the first few moments in the college culturals are really entertaining. Incidentally, these are the portions when Varun and Nithya do not fight!



And GVM has done the biggest disservice to Ilayaraja by having improper situations for at least 3 songs. Mudhal Murai, Kaatrai konjam and Ennodu act as speed breakers. The songs are picturised with love and care but due to the situations in which they occur, you really do not get involved. 


But the balance 4 songs – Saindhu Saindhu, Sattru Munbu, Vaanam Mella and Pengal Endral – are good. Sattru Munbu is rivetting in its picturisation in the climax, and the way Samantha emotes here clearly lifts the film to a different level. (Thengi pona Ore nadhiyena indru naanada – you can see it in her eyes – frankly I did not think she could act this well).




Ah!the rooftop !!!
The climax is very good on its own, but when compared to the rest of the film, it is outstanding. And what works here are the moments where no one talks – and this is where Raja scores. What a BGM in the last few minutes. When you hear Raja’s BGM in the last few scenes, you immediately realize what is wrong with the film – through the film, some one or other keeps on talking, and there is just no scope for BGM. GVM – Is this how you write scenes? 



You should have learnt from a less sensitive director (perhaps more street smart) like S.J.Surya. Take the Khushi rooftop scene for example, Vijay and Jothika fight in the rooftop – they keep on arguing – the pitch of their tones keep on getting high – and then an airplane takes off nearby and interrupts their argument for a few moments – and it provides such a character to the scene.



And when Vijay says something he should not have said, the director immediately focuses on Jothika’s close up reaction. She is so hurt that Vijay immediately realizes the mistake he has done and his facial expression conveys that he is really sorry for what he had said. But she is now so hurt that she isn’t prepared to give him another chance – 


the director focuses on close ups and the music director gives a reasonable good BGM and then the scene becomes so very effective. GVM – You may well want to show that the rooftop is a character by opting for a long shot that covers the rooftop as well as Chennai skyline, but you can’t extend it to the whole scene. It reduces the experience to watching something like a stage play.


And you take a genius like Raja, who changed the way BGM was written in Indian Cinema, and offer him no scope at all? I mean, isn’t this suicide? Here is a composer, who had saved films like Idhayam before. And the moment you listen to the last couple of scenes, you know Raja could have saved NEP, if the director thought about BGM when conceiving shot composition. But the current product is even beyond the Maestro. Wasted Opportunity.

நன்றி -  madabout moviez, ட்விட்டர் திருட்டுக்குமரன்




இயக்குநர் பேட்டி படிக்க

http://www.adrasaka.com/2012/12/blog-post_7091.html



கும்கி - சினிமா விமர்சனம்

 
http://www.adrasaka.com/2012/12/blog-post_14.html

Monday, August 06, 2012

சந்தானத்தின் கவுண்ட்டர் பஞ்ச் காமெடி வசனங்கள் @ மிரட்டல்

http://newindianexpress.com/incoming/article582880.ece/ALTERNATES/w460/Mirattal-P-E.jpg


1. டேய், நாயே,  நீயே ஜெயில்ல இருந்துதானே வந்திருக்கே? என்னமோ ஜெர்மன்ல இருந்து வந்தா மாதிரி ஃபிலிம் காட்றே?


---------------


2.  ஹீரோ - ஐ ஆம் பப்லு


 நீ என்ன பராக் ஒபாமாவா?



----------------


3. சட்டையை கழட்டு.. ..

 --------

ஏய்.. நீ பொம்பளை.. உன்னை சொல்லலை.. நல்ல வேளை.. 




--------------------


4.  என்னடா சிரிப்பு.. ? 


 அண்ணா, கொட்டாவி விட்டேனுங்க./.



---------------


5. சாகடிக்கறவனுக்கு சாகற தைரியம் வேணும்னு சொல்லித்தரலை?




------------------


6. நீ ஏன் ரிசைன் பண்ணாம வந்துட்டே?

 இது என்ன கவர்மெண்ட் வேலையா? ரிசைன் பண்ண?



---------------------


7. அந்த தாதா அவரோட தங்கச்சிக்கு ஒருத்தன் விபூதி வெச்சு விட்டான்னு அவன் விரலையே வெட்டிட்டாராம்.. 


அய்யயோ.. அப்போ குங்குமம் வெச்சு விட்டா குடும்பத்தோட கொளுத்திடுவாரா?



----------------------


8. ஏன் எல்லாரும் அந்த கிழவன் கைல கிஸ் பண்றாங்க?

 நீ வேணா அவர் லிப்ல கிஸ் பண்ணீக்கோ, யார் வேணாம்னா?



------------------


9. இவன் ஆள் அசைய முடியாது, பேச முடியாது எல்லாம் ஓக்கே, சலங்கை ஒலி கமல் மாதிரி அபினயத்துல போட்டுக்குடுத்துட்டா?



-------------------


10. முன்னால எல்லாம் ஆள் செத்தா தந்தி அனுப்புவாங்க, ஆனா இப்போ.. 


 செத்தவனே போய் தகவல் சொல்லிடறானா?



------------------------



http://gallery.tamilkey.com/wp-content/themes/transcript_new/timthumb.php?src=http://gallery.tamilkey.com/wp-content/uploads/2012/07/Mirattal-Tamil-Movie-Latest-Stills-9.jpg&q=90&w=629&zc=1


11. இந்த மிஷின் ஈசியா ஒரே டைம்ல லட்ச ரூபாயை எண்ணும்.. 


 கள்ள நோட்டை கண்டு பிடிக்குமா?

 அது என்ன சி பிசி ஐடி ஆபீசரா?



-------------------------------


12.  இந்த இடத்துக்கு யாரும் வர மாட்டாங்க, வடை சுட்டுப்போட்டாக்கூட காக்கா வராது. 

 ஏன்?

 அப்டி காக்கா வந்தா அதை சுட்டு இவனுங்க சாப்டுறுவாங்களே?


----------------------


13.  சார், உங்களுக்கு என்ன வேணும்?


 3 பொண்ணுங்க, ஒரு ஆண்ட்டி./. \




------------------------


14. நம்ம கடை பேரை எதுக்கு பலூன்ல எழுதி மேலே பறக்க விட்டிருக்கே?


 பின்னே? பாறாங்கல்ல எழுதியா பறக்க விட முடியும்?



-----------------


15. இவன் பலூன் மேட்டரை வெச்சு பல்சர் பைக்கே வாங்கிடுவான் போல இருக்கே?



-----------------------


16. எனக்கு வரப்போற மனைவி கேத்ரீனா கைஃப் மாதிரி இருக்கனும்.. 


 என்னது? கேத்ரீனா கைஃப்பா? 

 பின்னே? பி வி சி பைப்பா?



--------------------------


17. கட்டுனா கைஃப் மாதிரி பொண்ணைத்தான் கட்டனும், நமக்குன்னு ஒயிஃப் வந்து மாட்டி இருக்கு பாரு நைஃப் ( KNIFE) மாதிரி



-------------------------


18. நீ தாதாவோட தங்கச்சியை பார்க்கறது அவனுக்கு தெரிஞ்சுது அவன் உன் தலையை வெட்டிடுவான்


 நிஜமாவா? 

 பின்னே பொய்யாவா? அவன் அவளோட தங்கச்சியோட உன்னைப்பார்த்தா எதை வெட்டுவான்னு சொல்லவே முடியாது



-------------------------


19.  ஆஹா, வாட் எ பாடி?

 ஏன்? இதுக்கு முன்னால பொம்பளை பாடியை ( பிரா) பார்த்ததே இல்லையா?



-------------------


20. அவ ஃபிஃப்டி கே ஜி தாஜ்மகால் மாதிரியே இருக்கா. 

 அவ அண்ணனை நீ பார்க்கலையே? திருமலை நாயக்கர் மகால் மாதிரியே இருப்பாங்க.. 



------------


http://img.bharatmovies.com/4204/mirattal-1.jpg


21. நான் மட்டும் உன் கூட சினிமாவுக்கு வர்ற மேட்டர் தெரிஞ்சுது? அவ்ளவ் தான் ஆ,மா, இவ்லவ் சீரியஸா நான் புலம்பிட்டு இருக்கேன், நீ என்ன பண்றே? 

 பார்த்தா தெரியலை? பாப்கார்ன் சாப்பிடறேன்



---------------


22. பின்னால உக்காந்திருக்கறவன் என்னை பார்த்து கேஸ் அப்டிங்கறான்.. கேஸ்னா என்ன அர்த்தம்?

 ஹி ஹி பிராஸ்டிடியூட்னு.. 


-----------------


23. வெறும் 1500 ரூபா தான் கைல இருக்கு.. 

 நான் வேணா என் பொண்டாட்டி கொலுசை அடமானம் வெச்சு  பணம் கொண்டாரவா?

 தொலைச்சுடுவேன்\


 இருக்கறதே 1500 ரூபா தான், அதையும் தொலைச்சுட்டா அப்புறம் செலவுக்கு என்ன செய்வே?



-----------------------



24.  ஆமா, நீ என்ன லவ்வர் கூடவா பேசறே? இப்படி குசுகுசுன்னு ஏன் பேசறே?



--------------------


25. அட, செம ஐடியாவா இருக்கே? எல்லா இங்கலீஷ் டி விடியையும் சுட்டுட்டியா?



-------------------


26.  என் தங்கச்சி பத்தி உனக்குத்தெரியாது


 எல்லாம் ஐ நோ. பாசமலர் 50%, தங்கைக்கோர் கீதம் 50 %




-----------------------


27. .........................


 கரெக்ட் சார்


 நான் எதுவும் சொல்லவே இல்லையே?


 நீங்க எது சொன்னாலும் கரெக்ட் தான் சார்.. 


-----------------------


28.  எங்கே இங்க்லீஷ்ல பேசு பார்ப்போம் 

 ஹலோ./. 




-------------------------


29.பொண்ணுங்களுக்கு கெட்டிக்காரங்களை  பார்த்ததும் பிடிக்கும்.


------------------------------


30. வாப்பா, உக்காரு

 பரவாயில்ல



அப்போ நான் நின்னுக்கிடவா?


அவ்வ்வ்வ்வ்




------------------
http://www.kerals.com/kerala/wp-content/uploads/2012/07/Deeksha-Seth.jpg


31. உங்கப்பா குடிப்பாரா? 

 ஆஃப்  சைஸ் பாட்டில் அளவுக்கு இருந்துட்டு  ஃபுல் சைஸ் அளவுக்கு குடிப்பாரு. 




-------------------------


32.  தீபி.. 

 என் சாவுக்கு ஊதப்போறே பீ பீ



-----------------------


33.  சும்மா சீன் போடாம ஏதாவது  ஐடியா குடு



 ஐடியா வராததால தான் சீன் போடறேன்



-----------------


34. வில்லன் -  என் கொள்கை ஒண்ணே ஒண்ணுதான்.. சாவடி! முடியலைன்னா சாவு



---------------------


35.  உங்களுக்கு பி பி இருக்கு.. 


உன் கூட சேர்ந்ததால வந்துடுச்சு



------------------


36. உன் நடு விரலை பிடிச்சு கெஞ்சிக்கேட்டுக்கறேன்.. என்னை விட்டுடு


-----------------------


37. உன் கிட்டேதான் ஃபோன் இருக்கே? ஏன் அதுல இருந்து பண்ணலை?


 எனக்கு ஃபேமிலியும் இருக்கே? வில்லன் கண்டு பிடிச்சா என்னை மேஞ்சுடுவானே?




-----------------------


38.  ஆமா, நீ இப்போ ஃபேஸ் வாஷ் பண்ணுனியா?

 ம்ஹூம், பயத்துல வேர்த்திருக்கு



------------------------


39. சாந்தி முகூர்த்தத்துக்குத்தானே பூ பழம் , ஊது பத்தி எல்லாம் கொண்டு போவாங்க.?


 ஹூம் , பாடைக்கும் அதே தான்



--------------------


40.  உன் பேரு ஜேம்ஸ் கேமரூனா? ஏன் அந்த பேரு வெச்சாங்க?


 என் மம்மி  ஜுராசிக் பார்க் படம் பார்க்கறப்போ நான் பொறந்தேனாம்.


 அநேகமா ஏதாவது டிஸ்கவரி சேனல் பார்க்கறப்போ  பொறந்திருப்பேனு நினைக்கிறேன்



------------------------------


http://moviegalleri.net/wp-content/gallery/sharmila-mandre-cute-stills-in-churidar/mirattal_actress_sharmila_mandre_cute_in_churidar_stills_9826.jpg


41. காட்டிக்கொடுக்கறதுலயும் , கூட்டிக்கொடுக்கறதுலயும் நான் எக்ஸ்பர்ட்..


நாட்டுக்கு ரொம்ப தேவையான ஆள் தான் நீ


-----------------


42. நான் ஆல்ரெடி மேரீடு, என்ன விட்டுடு


ரெண்டாந்தடவை பண்ணி இருந்தா?

 நீ வந்து மொய் வைக்கப்போறியா?




---------------------------------


43. யார், இந்த பொண்ணு, செக் பண்ணாத சிலிண்டர் மாதிரி இருக்கு?



----------------


44. குழந்தை பொய் சொல்லாதுன்னு சொல்வாங்க, அந்தப்பொய்யே குழந்தையா பிறந்திருக்கே?



-------------------


45. இதென்ன? பிளாக் மார்க்கா?


 இல்லை, லக் மார்க்


------------------------------


46.  மாப்ளை நல்லா ஜோக் அடிக்கறார் இல்லை?

 ஓஹோ, சிரிச்சே ஆகனுமா?



----------------------

47. அது எப்படி ஒருத்தனை கெடுக்கனும்னா கேரியர்ல  சோறு கட்டிட்டு கிளம்பிடறீங்க?


-------------------

 48.  எல்லாரும் எஞ்சாய் பண்ணுங்க, என் தங்கச்சிக்கு வருஷம் ஒரு நாள் தானே பிறந்த நாள் வருது?

 மத்தவங்களுக்கு மட்டும் மாசாமாசம் வருதா?



-----------------------


49. அவன் ஒரு துரு பிடிச்ச பொடி டப்பா போல..

 ஓஹோ போற வர்றப்ப எல்லாம் தும்மிட்டே போவானா?



-------------------


50. வாங்க வாங்க.. எ;ல்லாரும் ஒரே குட்டைல ஊறுன மட்டைங்க தானே?

 உங்களுக்கு எப்டி தெரியும்? நீங்களும் அதே குட்டைல ஊறிட்டு இருந்தீங்களா?



---------------------------


http://moviegalleri.net/wp-content/gallery/sharmila-mandre-cute-stills-in-churidar/mirattal_actress_sharmila_mandre_cute_in_churidar_stills_1321.jpg


51. என்ன மோந்து பார்க்கறே? ராவா குடிக்கலாமா?ன்னு பிளானிங்கா?
.


நோ நோ ஒரிஜினல் சரக்கா?ன்னு செக்கிங்க்




------------------------


52. டம்மி பீஸ் இவன், 2 ரவுண்ட் தாண்ட மாட்டான்னு சொன்னாங்க. இப்படி அடிக்கறானே?


 என் கண்ட்ரோல்க்கு இண்ட்டர்வல் விட்டிருக்கேன்


--------------------------


53. உஷ்!! சத்தம் போடாம குடிங்க... 


டேய், நான் என்ன ஃபர்ஸ்ட் நைட்லயா குடிக்கறேன்?  -


---------------------

54.  யார்றா இவன்? கருணைக்கிழங்குக்கு தாடி வெச்சவனாட்டம்?



--------------


55. அவனை காமெடி பண்ண சொன்னீங்களா?


 ம்ஹூம்

 டான்ஸ் ஆடச்சொன்னீங்களா?

 ம்ஹூம், சகிக்காது



----------------------------


56.  அண்ணனுக்கு ஆப்பு ரெடியா? சாரி, சூப்பு ரெடியா?



-----------------


57. இந்த கரித்துண்டை அமெரிக்கா எடுத்துட்டு போ.. அங்கே போனதும், தமிழ் நாட்ல எல்லா பொண்ணுங்களுக்கும் மாப்ளை இருக்காங்க , சோ நோ படி  கம் டூ இந்தியான்னு எழுதி வைக்கறே.



----------------------------------



டிஸ்கி - மிரட்டல் - சினிமா விமர்சனம்-http://www.adrasaka.com/2012/08/blog-post_6815.html

Thursday, August 02, 2012

மிரட்டல் - சினிமா விமர்சனம்

https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgvoG87S93G-4-RJhKwIa0IlAsb6AKsCmxb4dFJbSWJDAkrkXQApptGRBu6OZDpZtcpzy8q9l-vcQj4VusNhbUPFTdxyDgrCAQpO5q9AuuJHkeqsJoNGhfuaMiC4Oe6MaTrnKK3Hhk2H6JM/s640/Mirattal+Movie+First+Look+Posters+Wallpapers.jpg 

 ஒரே ஒரு ஊர்ல 2 கேவலமான தாதாங்க.. கஜினி வில்லன் ஒரு தாதா, கல்யாண் ஜூவல்லர்ஸ் புரட்சிப்போராட்டம் பிரபு.இன்னொரு தாதா .. வில்லனோட பையனை இவரு க்ளோஸ் பண்ணிடறாரு.. பழிக்குப்பழியா அப்பவே வில்லன் பிரபுவை போட்டிருந்தா மேட்டர் ஓவர்..  ஆனா படம் 2 ரீல் தானே வரும்? 14 ரீல் கொண்டார்றது எப்படி?


 அதனால அந்த வில்லன் சொல்றாரு.. பிரபு சீக்கிரமா சாகக்கூடாது.. அனுராதா அனுராதாவா சாரி அணு அணுவா துடிச்சு சாகனும்.. பிரபு தங்கையை கொலை பண்ணனும்னு சொல்றாரு.. 


 பிரபுவோட தங்கச்சி சிவனேன்னு லண்டன்ல படிச்சுட்டு இருக்கு,.. மண்டைல மசாலா இல்லாத கேனயன் கூட சொல்வான்.. பாப்பா அங்கே இருந்தாத்தான் பாதுகாப்புன்னு.. ஆனா அண்ணன் பிரபு லண்டன்ல இருந்தா பாதுகாப்புஇல்லை, நம்ம கூடவே இருக்கட்டும்னு இங்கே கூட்டிட்டு வந்துடறாரு.. 


  பிரபு கிட்டே அடியாளா  நம்ம ஹீரோ வினய் சேர்றாரு.. சின்னத்தம்பில குஷ்பூவை பிரபு கூட்டிட்டு போய் ஊரெல்லாம் சுத்திக்காட்டுன மாதிரி இவரும் அங்கே இங்கே கூட்டிட்டு போறாரு.. 2 பேருக்கும் லவ் ஆகிடுது.. அலை பாயுதே ஸ்டைல்ல மேரேஜும் பண்ணிக்கறாங்க.. ஆனா பிரபுக்கு அது தெரியாது.. 


ஒரே பங்களாவுக்குள்ளேயே மீதி கதை எப்படி நகருது? அந்த வில்லன் என்ன தான் செஞ்சான்? சந்தானம் மொக்கை எப்படி எல்லாம் போடறாரு.. இதான் மிச்ச மீதிக்கதை.. 



http://masscinema.in/wp-content/gallery/mirattal-movie-stills/mirattal-movie-stills-7.jpg

 படத்தோட முதல் ஹீரொ அஸ் யூசுவல் சந்தானம் தான்.. இவர் பேரே ஸாரி.. அதனால சாரி.. சொல்றதுக்கு ஏதும் இல்லை.. படத்துல மொத்தம் மொக்கை ஜோக்ஸ் 64 வருது.. 48 இவர் சொல்றாரு.. 13 இடத்துல தான்  ஆடியன்ஸ் சிரிக்கறாங்க.. மீதி ஜோக்குக்கு எல்லாம் இதெல்லாம் ஒரு ஜோக்கா அப்டினு நினைச்சு சிரிக்கறாங்க.. படம் பூரா பம்மிக்கிட்டே இருக்கும் சந்தானம் ஒரு சீனில் சரக்கு அடிச்சுட்டு சலம்பல் பண்ணும் சீன் கலக்கல் ரகம் .. 


ஒரிஜினல் ஹீரோ வினய்.. அண்ணன் முதல்ல நல்ல பல் டாக்டர்ட்ட போய் பல்லை க்ளீன் பண்ணனும்.. எல்லா பல்லும் காரை.. பான் பராக் பாலுன்னு நினைப்பு.. அதுல க்ளோசப் ஷாட் வேற உவ்வே,, இவர் வசனம் பேசும் ஸ்டைலை மாத்திக்கிட்டா நல்லாருக்கும்.. உன்னாலே உன்னாலே படத்துல இருந்த துள்ளல் இதுல மைனஸ்.. 


 ஹீரோயின் யாரோ ஷ்ர்மிளாவாம்.. மொக்கை ஃபிகர்.. இந்தபடத்தை முதல் ஷோ பார்த்த தமிழ்நாடு பூரா இருக்கும்  மூணு லட்சத்து இருபத்து மூவாயிரத்து நானூற்றி முப்பத்தி ஆறு  (3,23,436 )  ஆடியன்ஸ் கிட்டே கருத்து கேட்டாலும் சிங்கிள் மேனுக்கு கூட இது பிடிக்காத  பார்ட்டி.. படு மொக்கை பர்சனாலிட்டி.. இந்த லட்சணத்துல  இவர் லோ ஹிப் ல  வேற வந்து கடுப்பை ஏத்துறார்.. அதுல தொப்புள்ல தொங்கட்டான் வேற.. 


கேப்டன் பிரபாகரன்ல பட்டாசை கிளப்புன மன்சூர் அலிகான் இதுல டம்மி பீசா காமெடியனா கேவலப்படுத்தி இருக்காங்க.. தங்க பாலு, ஓ பி எஸ், பவர் ஸ்டார் ரேஞ்சுக்கு  இருக்கு இவர் நடிப்பு.. 

ஆர் பாண்டிய ராஜன் 3 ஜோக் சொல்றார்.. ஒரே ஒரு காமெடி பண்றார்.. அவ்ளவ் தான்.. ஹீரோவுக்கு அப்பா.. 

 ஜெயா டி வி பாஸ்கி ( ஆனந்த விகடன் ஜோக் ரைட்டர்)  7 சீன்ல வர்றார்.. சொல்லிக்கொள்ளும்படி ஏதும் இல்லை.. 


கஞ்சா கறுப்பு காமெடிங்கற பேர்ல எப்பவும் போல் மொக்கை போடறார்.. 

http://moviegalleri.net/wp-content/gallery/sharmila-mandre-stills-in-mirattal/mirattal_heroine_sharmila_mandre_new_photos_stills_2277.jpg


 இயக்குநர் பாராட்டு பெறும் இடங்கள்



1. போஸ்டர்ல, டி வி விளம்பரத்துல எல்லாம் ஓக்கே ஓக்கே லெவல்க்கு இந்த படத்தோட ,மார்க்கெட்டிங்கை ஏத்தி விட்டது.. 



2. சந்தானம் காமெடியை நம்பி படத்தோட திரைக்கதையை அவரை சுத்தி நகர்ற மாதிரி அமைச்சது.. 


3. லண்டன் லொக்கேஷன் செலக்‌ஷன், ஒளிப்பதிவு..


 இயக்குநரிடம் சில கேள்விகள், லாஜிக் மிஸ்டேக்ஸ்


1. கோடிக்கணக்குல சம்பாதிக்கும் தாதா வின் தங்கை ஒரு சினிமா தியேட்டர்ல தனியா போய் டிக்கெட் எடுக்க தெரியாதா? ஹீரோ கிட்டே போய் இந்த தியேட்டர்ல டிக்கெட் எடுத்துக்கொடு.. ரொம்ப ரேர்.. டிக்கெட் கிடைக்கறதுன்னு கெஞ்சுது.. ஓனருக்கு கிடைக்காத டிக்கெட் அவங்க கிட்டே வேலை செய்யறவனுக்கு கிடைக்குமா? 100 ரூப்பா டிக்கட்டுக்கு 200 ரூபாவை அள்ளி விட்டா டிக்கெட் தேடி வருது.. அது கூட அந்த டிக்கெட்டுக்கு தெரியாதா?



2. சாதாரண ஒரு தாதாவோட தங்கயை கொலை பண்ண  என்னமோ கவர்னர், ஜனாதிபதியை கொலை பண்ணப்போறது மாதிரி அந்த வில்லனின் கூலிப்படை ஆள்  டெல்ஸ்கோப் கன், ரைபிளோட சுத்துவதும் ஆதவன் படத்துல சூர்யா பண்ற மாதிரி சேஷ்டைகள் எல்லாம் செஞ்சு ஒண்ணும் பலிக்காம போவதும் நம்பவே முடியலை.. 


3.  லண்டன்ல இருக்கும் தங்கயை இங்கே வர வெச்சு , பின் அமெரிக்கால இருக்கற மாப்ளையையும் இங்கே வர வெச்சு 2 பேரையும் லண்டன் அனுப்ப திட்டம் போடும் லூஸ் பிரபு ஸ்ட்ரைட்டா லண்டன்ல இருந்து அமெரிக்கா அனுப்பி இருந்தா வேலை முடிஞ்சுதே?


4. கூலி ஆள் ரூம்ல யார் கிட்டேயோ ஃபோன்ல பேசறதை பார்த்த ரூம் மேட் “ யார் கிட்டே ஃபோன்ல பேசறெ?ன்ன்னு ஒரே ஒரு கேள்வி தான் கேட்டான்.. அதுக்குப்போய் அவனை கொலை பண்றதெல்லாம் ஓவர்/./ அவனுக்கு குடுத்த வேலை பிரபு தங்கையை கொலை பண்ண சொல்லி.. அதை விட்டுட்டு எவனை எவனையோ கொன்னுட்டு இருக்கான்..?


5.  ஒரு சீன்ல ஹீரோ ஹீரோயின் பைக்ல வந்து அநாமத்தா பைக்கை நடு ரோட்ல விட்டுட்டு லாரி பிடிச்சு போறாரு.. அவங்களை துரத்திட்டு வரும் கூலி ஆள் அவர் பைக் ரிப்பேர் ஆகி அதை விட்டுட்டு  லாரியை துரத்தி ஓடறார்.. ஹீரோ விட்டுட்டுப்போன பைக் சாவியோட அநாமத்தா அப்படியே நிக்குது.. அந்த கபோதிக்கு அது கூடவா தெரியாது? பைக்ல துரத்தாம  ஓடியே துரத்த ட்ரை  பண்றாரே, மனசுக்குள்ளே விஜய்னு நினப்பா?


6. வில்லன் குரூப் ஹீரோயினை அடைச்சு வெச்சுடுது.. செல் ஃபோன்  இருக்கா?ன்னு செக் பண்ண மாட்டாங்களா?  அதான் போகட்டும்.. ஒவ்வொரு ஏரியாவா மெயின் சுவிட்சை ஆஃப் பண்ணி  ஏரியா வை கண்டு பிடிக்கற ஐடியா இப்போ தான் தடையறத்தாக்க படத்துலயே வந்துச்சே


 http://images.behindwoods.com/photo-galleries-q1-09/tamil-photo-gallery/mirattal-02/wmarks/mirattal-0217.jpg




சி.பி கமெண்ட் - ஃபேமிலியோட பார்க்கற மாதிரி டீசண்ட்டா தான் படம் இருக்கு, ஆனா ஓவர் மொக்கை.. சிரிக்கலாம், ஆனா சிந்திக்கக்கூடாது..  சந்தானத்தின் மொக்கை காமெடி மெலோ டிராமாவுக்காக பார்க்க நினைப்பவர்கள் பார்க்கலாம்..


எதிர்பார்க்கப்படும் ஆனந்த .விகடன் மார்க் - 40


  எதிர்பார்க்கப்படும் குமுதம் ரேங்க் - சுமார்



டைம்ஸ் ஆஃப் இண்டியா - 2  / 5


டெக்கான் கிரானிக்கல் - 5 / 10



 ஈரோடு அபிராமியில் ப்டம் பார்த்தேன்.



 டிஸ்கி - 1 டிஸ்கி - மதுபானக்கடை - சினிமா விமர்சனம் http://www.adrasaka.com/2012/08/blog-post_5452.html

JISM 2 - பாலிவுட் சினிமா விமர்சனம் 34 +-http://www.adrasaka.com/2012/08/jism-2-34.html

 

TOTAL RECALL - சயின்ஸ் ஃபிக்‌ஷன் ஆக்‌ஷன் - ஹாலிவுட் சினிமா விமர்சனம் http://www.adrasaka.com/2012/08/total-recall.html

 

 

 

 

 






சந்தனத்தின் மொக்கை காமெடி வசனங்கள் தனிப்பதிவாய் விரைவில்



http://masscinema.in/wp-content/gallery/mirattal-movie-stills/mirattal-movie-stills-36.jpg


Saturday, June 23, 2012

சந்தானம் கலக்கிய சகுனி காமெடி டிராக் வசனங்கள்

http://tamilmaxs.in/wp-content/gallery/saguni-movie-gallery-and-wallpapers/saguni_-movie_-gallery_-and_-wallpapers-3.jpg

1.  எங்கே போகனும்?

 ஒவ்வொரு ஒயின்ஷாப் ஒயின்ஷாப்பா போ.. 

 ஹூம், காலைலயேவா?



2. முதல்ல  ஒரு ஆஃப் சொல்லு.. 


 எனக்கு அந்த  பழக்கமே இல்லையே?


 ஹலோ, நான் ஆஃப் சொல்லச்சொன்னது எனக்கு... 



3. அண்ணே,, கோவிச்சுக்காதீங்க.. இதுவரை 2000 லிட்டர் சாராயம் குடிச்சிருப்பீங்க.. எப்போதான் என் வேலையை முடிச்சுத்தருவீங்க..?


4. கமல் சார்.. உங்க தம்பிங்க யாரு?

 ம்.. சாருஹாசன், சந்திர ஹாசன்


5. என்னடா.. ஹீரோ வந்து இவ்ளவ் நேரம் ஆகியும் லவ் போர்ஷன் ஓப்பன் ஆகலையேன்னு பார்த்தேன்..


6.. ஆமா, உனக்குதான் தெலுங்கே தெரியாதே.. எப்படி அவ சொன்னதுக்கு அர்த்தம் தெரிஞ்சது?


 அதுக்கு லேங்குவேஜ் தெரியனும்னு அவசியம் இல்லை, பாடி லேங்குவேஜ் சொல்லிடுமே?


7. மேடம், நீங்க கூட அடுத்தவன் ஒயிஃப் தான்.. விசாரணைங்கற பேர்ல இவ்ளவ் பக்கமா நிக்கறீங்க.. நான் ஏதாவது தப்பு செஞ்சேனா?


8. எங்க ஆச்சி எப்படி மீன் குழம்பு வைப்பாங்க தெரியுமா?

 கதைக்குள்ள கதையா? உஷ் அப்பா.. முடியல...... 


9. கடைசில அவ என்ன சொன்னா தெரியுமா? “ எல்லா பொண்ணுங்களுக்கும் உன்னை பிடிக்கும்.. அப்டினு,,,

 இது அவங்களா சொன்னதா? நீயா சும்மா பிட்டு சேர்த்துக்கிட்டியா?என் கிட்டேயே பில்டப்பா?


10.  ராஜேஷ்குமார் நாவல்ல கூட 2 வது பக்கத்துலயே ஹீரோயின் அறிமுகப்படுத்திடுவாரு.. நீ ஏண்டா இன்னும் டிலே பண்ணிட்டு இருக்கே?



https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEguXUn6fC-3XVfS2PxqOZqDdrxdthe_62t0H3g98PmGTDA2A_sWtyh4HIB9EwB6i7odxIxRLx5gjvpGkLyMesllXoKy728nSKNt_jdQyK7-26q5-4w8kgDCHsSom9PuuM5Og91zjQ1H4DTC/s1600/Anushka_Hot_Saree_05.jpg


11. சின்னப்பையனா இருக்க சொல்ல,  சொல்லப்பட்ட கதைல தேவதை 3 கோடாலியை தனித்தனியா கொடுத்தப்போ வேணாம்னு சொன்ன விறகு வெட்டி மாதிரி அனுஷ்கா,  ஆண்ட்ரியா அப்டினு எல்லா ஃபிகர்சையும் மிஸ் பண்ணிட்டே போறியே.. எனி மெகா பிளான்..?


12.  டேய்.. அய்யய்யோ உன் ஆள் யார்னு சீக்கிரம் சொல்லித்தொலைடா.. என் ஆளா இருந்துடப்போகுது.. அதோ அதுவா?

 ச்சே ச்சே. அதை எல்லாம் மனுஷன் பார்ப்பானா?

 டேய்.. அது என் ஆளு.. 


13.கடசில  நீ சொன்ன பொண்ணு உன் சொந்த அத்தை பொண்ணுதானா?அதுக்கா இந்த பில்டப் கொடுத்தே.. 


14. லவ் பண்ற எல்லாரும் தாஜ்மகாலையே கிஃப்டா தர்றீங்களே.. ஒரு வள்ளுவர் கோட்டம், வண்டலூர் ஜூ இப்படி வித்தியாசமா ஏதாவது தரலாமே?


15. நல்ல வேளை.. உன் மாமியாருக்கு தாஜ்மகால் பொம்மை கொடுத்தே.. அல்வாவும் ,மல்லிகைப்பூவும் தர்லை.. 

 தந்திருந்தா?


 மாமியார் மாசம் ஆகி இருப்பாங்க .. போடாங்..... 



16. .கார் ஓட்டப்போறீயா? உன் ஆளை ஓட்டப்போறியா?



17. என்னை லவ் பண்றியா?ன்னு கேட்டதுக்கு அவ எதுவும் சொல்லலை.. சொல்லி இருந்தா ஆத்துல மீன் பிடிச்சிருப்பேன்.. 

 ம் சொல்லி இருந்தா மீனையாடா பிடிச்சிருப்பே..?


18.. அட போப்பா.. உனக்கு ஆண்ட்ரியா, அனுஷ்கா அப்டி ஏதேதோ பொண்ணுங்க செட் ஆகுது. ஆனா சொந்த அத்தை பொண்ணு செட் ஆக மாட்டெங்குதே?


இந்த அத்தை பொண்ணுங்களே இப்படித்தான் மச்சான் அதுப்பு காட்டுவாளுங்க ( அதுப்பு = அல்டாப்பு )


19. அவளுங்க எல்லாம் பசிக்கு சாப்பிடற ஆள்ங்க இல்லை, பந்தாவுக்கு சாப்பிடறவங்க.. நாம தான் இன்னும் பழசை எல்லாம் மறக்காம சாப்பிட்டுட்டு இருக்கோம்.. அவங்க பர்கர், பீட்சா அப்டினு அசத்திட்டு இருக்காங்க.. 


20.  அறிவு இருக்கறவன் அப்படி எல்லாம் செய்ய மாட்டான். ஆல் அறியாத வயசு.. நம்புப்பா..


https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgmdidLJxx6_WcVIXMBAprin-Qx8qxNF2K7QbtR-Ji59MGYynCagvob8ZEvEzH7tnZcte7IJLrfdQbsETfzO-oiE8JQ-VHc__gWLEW9M-1hIxDec8we4_e_xNw5hDs4QmUDNMahuM-SAik/s1600/andriya+%252812%2529.jpg



21. பீச்சில் - குடைக்குள்ளே குடித்தனம் நடத்திட்டு இருக்கற அண்ணே.. டைம் சொல்லுங்க.. 


 என்ன இவ்ளவ் லேட் பண்றாரு.. ஜஸ்ட் டைம் தானே கேட்டோம்?

 அட இருப்பா.. அவர் முதல்ல தன் கை எங்கே இருக்குன்னு தேடி எடுக்கனும் இல்லை.. அதுக்குள்ளே அவசரப்பட்டா எப்படி?



22.  அது ஏன் எல்லாரும் யூரின் போக கரண்ட் கம்பத்துக்கு வந்துடறீங்க.. ?

பல்லவர் காலத்துல இருந்தே அது பழக்கம் ஆகிடுச்சு.. 

 சோழர் காலத்துல அது இல்லையே? ( ஆயிரத்தில் ஒருவன் )


23.  டேய்,.. அங்கே என்ன எழுதி  வெச்சிருக்கு?

 பொறுக்கி நாய்கள் இங்கே யூரின் போகக்கூடாதுன்னு எழுதி  வெச்சிருக்கு சார்.இது கூட படிக்கத்தெரியலயே.. போலீஸா எப்படி காலம் தள்ளறீங்க?. 

டேய்..  அப்புறம் என்ன இதுக்கோசரம் யூரின் போனிங்க.?


 பொறுக்கி நாய்கள் இங்கே யூரின் போகக்கூடாதுன்னு தானே  எழுதி  வெச்சிருக்கு ? நாங்க  தான் கவுரவமான ஆள்ங்க ஆச்சே?



24. அட.. நீயும், நானும் இங்கே ஒண்ணா ஒண்ணுக்குப்போனதால ஒண்ணுக்குள்ளே ஒண்ணு ஆகிட்டோமா?


25. டேய்.. ஒண்ணு சொல்றேன்.. உலகத்துலயே மூத்திரக்கேஸ்ல முன் ஜாமீன் கேட்டது நீ ஒருத்தன் தாண்டா..


26. கெட்ட நேரம் வந்தா ராஜா கூட தெருவுக்கு வந்தே தான் ஆகனும் ( என் காதுக்கு ஆ ராசாவுக்கு-ன்னு கேட்குது)


27. சேஞ்ச் இல்லை சேஞ்ச் இல்லைன்னு நான் தான் ஆரம்பத்துல இருந்து சொல்லிட்டே இருந்தேனே?

\
 டேய்.. உதை வாங்குவே.. சேஞ்ச் இல்லைங்கறது வேற, காசு இல்லைங்கறது வேற.. இரண்டையும் போட்டு குழப்பிக்கக்கூடாது.. 



28.  பிரச்சாரத்தை கோயில்ல இருந்து ஆரம்பின்னு சொன்னாங்க.. பசியைப்போக்கற இடம்தானே கோயில்.. அதுதான் இங்கே வந்தேன்.. 


29. உன்னை எங்கேயோ பார்த்திருக்கேனே?

 இருக்காது சார்... நான் ஆட்டோ ஸ்டேண்ட்ல தான் எப்பவும் இருப்பேன்... அங்கே வேணா பார்த்திருப்பீங்க..


என்னது? ஆட்டோ ஸ்டேண்ட்டா?

 பின்னே கொசுவர்த்தி  ஸ்டேண்ட்டா? எதுக்கு இவ்ளவ் ஜெர்க்?


30. கட்சில தன்னைத்தவிர யாரும் சம்பாதிக்கக்கூடாதுன்னு நினைக்கற தலைவர்கள்ல நீங்களும் ஒருத்தர் தலைவரே..


ரொம்ப ஓவரா பேசறே.. வாக்கிங்க் போக முடியாது பார்த்துக்கோ..



https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgDltRsPcyyALY-XPDSPN5eiFQkX9oSfUOgBk-0NV6yy99DRxVVmLVDLc3-ZY0bGoZ9h4-5JsG1-NVWYUYWnc-E6cEUZBySctzDw9u7jnsFHtWGiQsmsV03EeqYUWtQGEMcXplWMECd_Ota/s1600/Actress+Roja+hot+in+silk+saree+latest+stills+%252812%2529.jpg


31. ரமணிட்ட நான் வேணா வந்து பேசிப்பார்க்கவா?


அவர் என்ன பேச ஆள் இல்லாம உக்காந்து இருக்காரா?


32. அக்கா.. உங்க ஃபேஸ் பவர் ஃபுல் ஃபேஸ்க்கா.. 

 அவன் பாட்டுக்கு நம்மளை போட்டுக்குடுத்துட்டே இருக்கான்..  என்னடா வேடிக்கை பார்த்துட்டு இருக்கீங்க?


33. விரலை வெட்டுனாத்தாண்டா நீ அடங்குவே,, 

 என்னமோ பர்த் டே கேக்கை வெட்டற மாதிரி சர்வ சாதாரணமா சொல்றீயே.. 


34. உன் பிரச்சனையே டிப்பர் லாரி அளவு இருக்கு.. நீ ஏன் ஊர்ப்பிரச்சனைக்கெல்லாம் போறே. ? போய் பொழப்பை பாரு.. 



35. பிரச்சனையை அவுக்கறதுல ஒரு சுவராஸ்யம்னா அவிழ்க்க முடியா முடிச்சை போடறதுல தனிசுவராஸ்யம்.. 


36. அடப்பாவிகளா? இப்படி அநியாயம் பண்றதுக்குப்பேருதான் பாலிடிக்ஸா? அதான் எங்க தலைவர் ரஜினி அரசியலுக்கு வர பயப்படறாரா?


37.  யார்யா இந்த பிச்சைக்காரன்?


 யோவ்.. அவர் சாமியார்யா


38. மனசு சரி இல்லைன்னா எல்லாரும் டாஸ்மாக் , அல்லது சாமியார் இருக்கற ஆசிரமம் தேடிப்போவாங்க.. என் கிட்டே  காசு இல்லை, அதனால இங்கே வந்தேன்.. 


39.  என்ன சாமி நீங்க.. நீங்க சொல்றது சரியா போய் ரீச் ஆகலையே?உங்க உபதேசத்தை இந்த கூட்டத்துல எத்த்னை பேரு கேட்பாங்க?

 100ல 2 பேர் கேட்டாக்கூட போதுமே?

 அதுதான் தப்பு .. நீங்க 100 பேருக்கு சொன்னா  அது 1000 பேருக்கு போய் சேரனும்.. அதுதான் மார்க்கெட்டிங்க்.. 


40. அம்மா.. எனக்கு டிரைவர் வேலை வேணும்,.. டிரைவர் தேவைன்னு பேப்பர்ல விளம்பரம் பார்த்தேன்.. 

 இதுக்கு முன்னால எங்கே கார் ஓட்டிட்டு இருந்தே?


 ரோட்ல..

 என்னது?


http://gallery.southdreamz.com/cache/actress/pranitha/exclusive-masala-stills/indian-glamour-actress-praneetha-hot-spicy-stills-13_720_southdreamz.jpg

  41.. உனக்கு வாய் ஜாஸ்தி மாதிரி தெரியுதே?

 என்னை மாதிரி ஆளை வெச்சாத்தான் உங்க பொண்ணுக்கு சேஃப்டி.. இல்லைன்னா வர்றவன் உங்க பொண்ணை ஓட்டிட்டு போயிடுவான்.. நான் காரை மட்டும் தான் ஓட்டுவேன்





42. சாமியாரை யார் கிட்டேயும் பேச வேண்டாம்னு சொன்னியே அந்த ஐட்யா உனக்கு எப்படி வந்துச்சு?


 இந்த பொண்ணுங்க எல்லாம் நாம போய் போய் பேசறப்போ கண்டுக்கவே மாட்டாளுக.. அப்போதான் எனக்கு இந்த ஐடியா உதயம் ஆச்சு.. 


43.. சாமி.. நான் சொல்றதை கேளுங்க.. ஒரு நாளுக்கு யாராவது ஒருத்தர் கூட மட்டும் பேசுங்க..  அப்போ எல்லாரும் நீங்க என்ன சொன்னீங்கன்னு தெரிஞ்சுக்க ஆவலா இருப்பாங்க


44. அரசியல் ஒரு வியாபாரம் தான்..கோடி கோடியா நாங்க இங்கே கொட்டித்தான் இந்த இடத்துக்கு  வந்திருக்கோம்.. போட்ட காசை எடுக்க வேணாமா?


45.  இந்த சி எம் ப்ளெஸ்க்கு நான் ரிப்பன் கட் பண்ணி வர்லை.. பல தலைகளை கட் பண்ணி வந்திருக்கேன்.. 


46.  அறிவுக்கும் அரசியலுக்கும் என்ன சம்பந்தம்?


47.  ஹாய்.. மச்சி.. என்ன ? ஜாலியா டீ சாப்பிடறே போல.. 

 அடேய்.. டீ சாப்பிடறதுல என்னடா ஜாலி.. ?


48.  நான் கண் அசைச்சா என்ன அர்த்தம்? காலை அசைச்சா என்ன அர்த்தம்? இன்னும் எதை எதை அசைச்சா என்ன அர்த்தம்னு டியூஷன் சொல்லித்தர்றேன்


49.  குடிக்கறதுக்கு உனக்கு ஒரு காரணம் வேணும்.. அவ்ளவ் தானே?


50. ஜெயில்ல இருக்கற என்னை ஜாமீன்ல எடுக்கவா வந்தே?

 பின்னே? ஜாக்கெட் பிட் எடுக்கவா வருவாங்க?



http://www.chitramala.in/photogallery/d/555740-1/praneetha-hot-stills.jpg


51. அய்யய்யோ.. தலைவர் ஜெயிலுக்குள்ளே வரப்போறாரா?

 பார்த்தியா? எப்படி ஃபீல் ஆகறான்னு..

 பொறு .. என்ன சொல்றான்கறதை கவனி.. 

 அவர் வெளியே இருந்தா எந்த தொந்தரவும் இல்லை.. உள்ளே வந்தா கண்டதை எழுதி படி படின்னு உயிரை வாங்குவார்.. 


52.  மத்தவங்க எப்படியோ அரசியல்ல இருக்கறவங்க ஆல் கரண்ட் மேட்டர் அத்துபடியா இருக்கனும்.. நீ என்னடான்னா கம்ப்யூட்டர் தெரியாது. அது தெரியாதுன்னு கதை சொல்லிட்டு இருக்கே.. 



53.கட்சியோட  மேல்மட்டக்குழுவே இவ்லவ் கேவலமா இருக்கே? கீழ்மட்டக்குழு எப்படி இருக்குமோ?


54. இந்த தேர்தல்ல பணமும், பிணமும் தான் வெற்றியை நிர்ணயம் செய்யும்.. 



55. நீங்க ஒருத்தருக்கு குழி பறிச்சா  உங்க பின்னால ஒருத்தன் உங்களுக்கு குழி பறிச்சுட்டு இருப்பான்கறதை மறந்துடாதீங்க..


56. மக்களை முட்டாள்னு தயவு செஞ்சு நினைக்காதிங்க.  நீங்க தான் முட்டாள் ஆவீங்க.. அவங்களூக்கு யாரை எப்போ எங்கே உக்கார வைக்கனும்னு நல்லாத்தெரியும்.. 


57.. என்னய்யா சிரிப்பு இது? கைக்குழந்தை கக்கா போன மாதிரி?



 58. என் குடும்பத்தை தப்பா பேசுனாக்கூட பொறுத்துக்குவேன், ஆனா குடிகாரங்களைத்தப்பா பேசுனா மன்னிக்கவே மாட்டேன்



https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjkU6OKI8G9h9qqNufSoOjicslPvSfeDYJxvpu-znDE9j61l825m7mL_EcuDAmyoXjBsRcFJka_LG82vGoIZ_hhnxWrbNaawvNPDDjy2CTewXIrQRTPntCoKxb3YwiK35pY2Rbf1PB9yVA/s640/1.jpga



டிஸ்கி - சகுனி திரை விமர்சனம் -http://www.adrasaka.com/2012/06/blog-post_477.html