Showing posts with label ANUSHKA. Show all posts
Showing posts with label ANUSHKA. Show all posts

Monday, November 11, 2013

இரண்டாம் உலகம்

ஆர்யா, அனுஷ்கா நடிப்பில், செல்வராகவன் இயக்கியிருக்கும் படம் 'இரண்டாம் உலகம்'. ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைக்க, ராம்ஜி ஒளிப்பதிவு செய்ய, பி.வி.பி சினிமாஸ் பிரம்மாண்டமாக தயாரித்திருக்கிறது. நவ. 22ம் தேதி வெளியாகவிருப்பதால் 'இரண்டாம் உலகம்' படத்தின் இறுதிக்கட்ட வேலைகள் பரபரப்பாக நடந்து வருகிறது.


இந்நிலையில் படத்தை பற்றி 'இரண்டாம் உலகம்' குழுவினரிடம் விச்சரித்தோம். மது - ரம்யா ரெண்டு பேரும் இந்த பூமியில் அழகான காதலர்கள். அவர்கள் இருவரும் இன்னொரு உலகில் மருவன் - வர்ணா என்கிற பெயரில் இரண்டு பாத்திரங்களாக சந்திக்கிறார்கள். அவர்கள் எப்படி அந்த இரண்டு பாத்திரங்களாக சந்திக்கிறார்கள், அந்த உலகத்துக்கு எப்படி போனார்கள், அவர்களின் அனுபவம் எப்படி இருந்தது என்பதுதான் 'இரண்டாம் உலகம்' படத்தில் செல்வராகவன் சொல்லவரும் கதை.


தனுஷ், ஆண்ட்ரியா நடிப்பில் ஆரம்பிக்கப்பட்ட படம், பின்னர் கைவிடப்பட்டது. அதனைத் தொடர்ந்து தனுஷ் நடிக்க 'மயக்கம் என்ன' படத்தினை இயக்கினார் செல்வராகவன். அப்படத்தினைத் தொடர்ந்து செல்வராகவன் மீண்டும் கையில் எடுத்த கதைத்தான் 'இரண்டாம் உலகம்'.



இப்படத்தில் தனது வேடத்திற்காக உடலமைப்பை எல்லாம் மாற்றியிருக்கிறார் ஆர்யா. அத்துடன் முதன் முறையாக இசைக்கு ஹாரிஸ் ஜெயராஜுடன் கூட்டணி அமைத்து புதியதொரு டீமுடன் களம் இறங்குகிறார் செல்வராகவன். ஒளிப்பதிவிற்கு மட்டும் நெருங்கிய நண்பரான ராம்ஜியை ஒப்பந்தம் செய்தார். முதலில் ஹைதராபாத்தில் படப்பிடிப்பு தொடங்கியது. முதற்கட்ட படப்பிடிப்பு முடிந்தவுடன், படப்பிடிப்பு இடங்களைத் தேர்வு செய்ய செல்வராகவன் மற்றும் ராம்ஜி பயணம் செய்தார்கள். இதுவரை தமிழ் சினிமாவில் காட்டாத இடங்களைக் காட்ட வேண்டும் என்ற எண்ணத்துடன் ஜார்ஜியாவில் படப்பிடிப்பை நடத்தியுள்ளனர்.



இதுவரை இந்திய திரையுலகில் எந்தொரு படமும் அங்கு படப்பிடிப்பு நடத்தியதில்லை. ஸ்பாட்டுக்கு போய் சேரவே சில நாட்கள் ஆகும் என்பதால் படக்குழுவில் முக்கியமானவர்களை மட்டும் அழைத்துக்கொண்டு சென்றிருக்கிறார்கள். அங்கு சுமார் 45 நாட்கள் படப்பிடிப்பு நடைபெற்றுள்ளது. முக்கிய காட்சிகளை அங்கு படமாக்கிய பின் அதன் கிராபிக்ஸ் பணிகள் மும்பையில் நடந்துள்ளது.


ஜனவரி 2013ல் படத்தின் முதல் போஸ்டர் வெளியிடப்பட்டது அதனைத் தொடர்ந்து வெளியிடப்பட்ட படத்தின் டிரெய்லரை பார்த்த அனைவரையும் வியப்பில் ஆழ்த்தினார் செல்வராகவன். தெலுங்கில் நடைபெற்ற இசை வெளியீட்டு விழாவில், "அவதார் மாதிரியான படங்கள் இந்தியாவில் உருவாகும் காலம் வெகு தொலைவில் இல்லை. அதற்கான தொழில்நுட்பம் வளர்ந்துவிட்டது" என்று அவர் கூற இப்படத்துக்கான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.



இப்படத்தின் ஒரு பாடலை உஸ்பெகிஸ்தான் நாட்டில் படமாக்கலாம் என்று விசாவிற்கு அப்ளை செய்தார்கள். ஆனால் விசா குழப்பத்தில் திரும்பி விட்டார்கள். கடைசியில் அங்கு படமாக்க இருந்த காட்சிகள் அனைத்தையுமே சென்னையில் ECR பகுதியில் பிரம்மாண்ட செட் போட்டு படமாக்கி இருக்கிறார் செல்வராகவன்.



படத்தின் படப்பிடிப்பு அனைத்தையும் முடிப்பதற்குள் இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜ் இதர படங்களில் பிஸியாகி விட்டார். இதனால், பின்னணி இசையை மட்டும் அனிருத் அமைத்திருக்கிறார். பின்னணி இசைக்காக ஹங்கேரி நாட்டிற்கு சென்று அங்குள்ள இசை கலைஞர்களை பயன்படுத்திருக்கிறார் அனிருத்.



தற்போது படத்தின் அனைத்து பணிகளும் முடிந்தவுடன், சென்சார் அதிகாரிகள் படத்திற்கு 'யூ' சான்றிதழ் அளித்திருக்கிறார்கள்.இப்படம் தனக்கு மிகவும் பிடித்துப் போனதால் அதன் சிங்கப்பூர், மலேஷியா உரிமை வாங்கியிருக்கிறார் நடிகர் ஆர்யா.


thanx - the tamil hindu

இரண்டாம் உலகம் படத்தில் நடிகை அனுஷ்கா

Friday, July 05, 2013

சிங்கம் 2 - சினிமா விமர்சனம்

நாடு பூரா எல்லாருக்கும் தெரிஞ்ச ஒரு போலீஸ் ஆஃபீசர் எந்த மாறு வேஷமும் போடாம  ஒரு சாதாரண ஸ்கூல்ல  என்சிசி மாஸ்டரா ஒர்க் பண்றார். படத்தோட டைரக்டர் தவிர மத்த எல்லாருமே கேனயனுங்களா இருக்கறதால யாரும் அதை கண்டுக்கலை , சந்தேகப்படலை .ஹீரோவோட மாஸ்டர் பிளான் என்னான்னா ஆயுதக்கடத்தல் கும்பலைக்கண்டுபிடிச்சு அவங்களை அழிக்கறது .பொண்ணு பார்க்கப்போறப்போ பொண்ணோட தங்கச்சியை சைட் அடிக்கறதில்லையா? அந்த மாதிரி அவருக்கு மாட்டுனது போதை மருந்து கடத்தல் கூட்டம்.ஹீரோ அந்தக்கூட்டத்தை எப்படி பிடிக்கறார் என்பதே ரெண்டே முக்காஆஆஆல்  மணி நேரம் ஓடும் சிங்கம் 2 படத்தோட திரைக்கதை  .


சும்மா சொல்லக்கூடாது , சூர்யாவுக்கு  போலீஸ் யூனிஃபார்ம் ஒரு கம்பீரத்தைக்கொடுக்குது . காக்க காக்க லெவலுக்கு இல்லைன்னாலும் அவரோட கர்ஜனை , தோரணை எல்லாம் செம . போலீஸ் யூனிஃபார்மில் மிடுக்காக நடப்பதும் , பாடி லேங்குவேஜும்  சூப்பர் . ஆனா வசனம் பேசும்போது மட்டும் பல்லைக்கடிச்சுக்கிட்டு கஷ்டப்பட்டு பேசறார். டூயட் காட்சிகளில் விஜய்யை டச் பண்ணப்பார்க்கறார்.


ஹீரோயின் ஹன்சிகா தான் .பல படங்களில்  கொழுக் மொழுக்  கொழுக்கட்டை மாதிரி அழகாக வந்தவர் இதில் சாதா கட்டை செண்பகமா வர்றார். இதுல இவர் ஸ்கூல் ஸ்டூடண்ட்டாம் . லட்சுமிமேணன்க்கு போட்டியா காட்டிக்கறாரோ என்னவோ? இவரோட காதல்ல ஆழம் இல்லாததால எடுபடலை 




 சைடு ஹீரோயின் அனுஷ்கா . செர்ரிப்பழ உதட்டழகி .நெய்யில் வறுத்த ப்ரெட் அழகுக்கன்ன அழகி . பட்டு சேலை கட்டி  மண மேடையில் அவர் அமர்ந்திருக்கும்போதுதான் நிறைய பேருக்கு கல்யாண ஆசையே வருது .ஆளை அசத்தும் அழகு . பாடல் காட்சிகளில் அவர் செய்யும் முக சேஷ்டைகள் அக்மார்க் அனுஷ்கா சேட்டைகள் 


வில்லனாக யாரோ ஒரு சிங்கள ஆள். ஆஜானுபாகமான தோற்றம். எள்ளலான நடிப்பு. தேறிடுவார். அது போக கண்ணே கனியமுதே , சங்கமம் பட் ஹீரோ ரகு(மான்) இன்னொரு வில்லன். ஓக்கே தான் நடிப்பு 


 படம் செம ஸ்பீடாக போகும்போது மீண்டும் ஆக்சிலேட்டரை ஒரு முறுக்கு முறுக்குவது போல் சந்தானம் காமெடி . களை கட்டுகிறது தியேட்டர். கல்லா கட்டுகிறது கவுண்ட்டர் .ஆனா இதுல சந்தானம் போர்ஷன் மட்டும் 2 வருஷம் முன்னாடி எடுத்திருப்பாங்க போல. சந்தானம் ஆள் ரொம்ப இளைச்சிருக்கார், பிரிண்ட்டும் பழசு மாதிரி இருக்கு 


 விவேக் போலீஸ் ஆஃபீசராக வந்து ஒரே  ஒரு இடத்தில் சிரிக்க வைக்கிறார். சந்தானப்புயல் முன் விவேக் காணாமல் போய் விடுவது பெரும் சோகம் . இந்த கேரக்டரில் விவேக் நடிக்காமலேயே இருந்திருக்கலாம் 


 

இயக்குநர் பாராட்டு பெறும் இடங்கள் 


1.பொதுவாக தமிழில் பாகம் 2 எடுபடாது. உதா - நாளைய மனிதன் ஹிட், அதிசய மனிதன் பிளாப் , பில்லா சூப்பர் ஹிட், பில்லா 2 சுமார் ஹிட் , அமைதிப்படை மெகா ஹிட் , நாகராஜ சோழன் எம் ஏ எம் எல் ஏ அட்டர் பிளாப். இந்த செண்ட்டிமெண்ட்டை உடைத்த காஞ்சனா ( முனி 2 ) வரிசையில் சிங்கம்2 வும் சேர்ந்தது , அதுக்கு பக்க பலமாக விறு விறுப்பான திரைக்கதை அமைத்தது 


2. பட்டப்பகலில் கஸ்டம்ஸ் ஆபீசரை கொலை செய்து விட்டு அவசர அவசரமாக தடயத்தை வில்லன்கள் மறைக்கும் காட்சி 


3. சந்தானம் ஒவ்வொரு முறையும் தான் மாட்டிக்கொள்ளும்போது எதிராளியின் காலில் விழுந்து பரம மண்டலத்தில் இருக்கும் எங்கள் பரம பிதாவே என கெஞ்சுவது  தியேட்டரில் செம சிரிப்பு . ஒரு சாதாரண காமெடியைக்கூட ஒரு நல்ல காமெடியன் நல்ல காமெடி ஆக்க முடியும் என்பதற்கு உதாரணம் . ஒருத்தர் வேட்டையை உருவதும் , ஒரு ரவுடி லேடி சேலை பாவாடையை இழுப்பதும் கொல் சிரிப்பு 


4. ஆபரேஷன் டி  என்பது இதுவரை தமிழ் சினிமாவில் யாரும் காட்டாதது . அதாவது எந்த அரசியல் குறுக்கீடும் இல்லாமல் கேள்வி கேட்க ஆளே இல்லாமல் போட்டுத்தள்ளுவது , கிட்டத்தட்ட என்கவு்ண்ட்டர் மாதிரி . இதுல நல்லா ஒர்க் அவுட் ஆகி இருக்கு  ( துப்பாக்கில இப்படி ஒரு சீன் வரும் )


 


5. டூயட் காட்சிகளில் அனுஷ்காவை துள்ளிக்குதிக்க வைத்து ஆடியன்சை துள்ளிக்குதியாட்டம் போட வைத்தது . மற்ற காட்சிகளில் அழகுப்பதுமையாய் , சேலையில் வரும் சோலையாய் தென்படும் அனுஷ்  டூயட்டில் மட்டும் இறங்கி ஆடி இருக்கார் , கிறங்க வைக்கும் அழகு  ( கா விட்டதால் அனுஷ்காவிடம் கா விட்டுட்டேன் என பொருள் இல்லை, சும்மா செல்லம் ) இந்தப்படத்துக்கு சாமார்த்தியமாய் சென்சாரிடம் யு சர்ட்டிஃபிகேட் ”வாங்கியதுக்கு”: ஸ்பெஷல் பாராட்டு

6. சிங்கம் டான்ஸ் பாட்டு செம. அனுஷ்காவுக்கு செம சீன்

7. விஸ்வரூபம் கமலை நையாண்டி செய்யும் யாரென்று  தெரிகிறதா சந்தானத்தின் ஃபைட் சீன் அதகளம் . தியேட்டரில் அப்ளாஸ் மழை ( வீட்டில் டி விடியில் பார்த்தால் இந்த சுவராஸ்யம் மிஸ் ஆகும் ) அதே போல் அவரது  ஓப்பனிங்க் காட்சியில் எந்திரன் ரஜினையையும் விட்டு வைக்கலை


8. கண்ணுக்குள்ளே கண்ணை வெச்சு பாட்டு ஹிட் ஆகும் . அந்தப்பாட்டுக்கு டான்ஸ் மூவ்மெண்ட்ஸும் ஓக்கே ரகம் 




 இயக்குநரிடம் சில கேள்விகள்  


1.  ஜஸ்ட்  15 வயசு ஆன ( !!!!????)  பத்தாங்கிளாஸ் படிக்கும் பிகரான ஹன்சிகா போலீஸ் ஆஃபீசரான 37 வயசு சூர்யாவை காதலிப்பது எல்லாம் ஓக்கே , அவர் தன் காதலை சூர்யாவிடம் சொல்லும்போது அவர் அப்பவே “ ஏம்மா , நான் ஆல் ரெடி ஒரு ஃபிகரை உஷார் பண்ணிட்டென்” அப்டினு சொன்னா அப்பவே மேட்டர் ஓவர் , அதை கடைசி  வரை சொல்லாம இதெல்லாம் சரிப்பட்டு வராது அப்டினு ஏன் பம்மறார்? சைடுல இதையும் ஓட்டிக்கலாம்னு நினைச்சுட்டாரா?


2. ஹன்சிகா காண்டாக்ட் லென்ஸ் போட்டிருக்கார். எக்சாம் கொஸ்டீன் பேப்பரை திருடும்போது  வெறும் 5 கிராம் ஏ 4 பேப்பர் அவர் நெத்தில பட்டு லென்ஸ் விழுமா ? அப்படி விழுந்தா உடனே அவருக்கு அது  தெரியாதா? ஏன் மாட்டிக்கறார்? 



3. அந்த சம்பவம் நடந்த அடுத்த நாள் ஹன்சிகா கண்ணாடி போட்டுட்டு வர்றார் . அவரை மாதிரி கண்ணாடி போட்ட ஃபிகருங்க 4 பேர் இருக்கும் போது ஹீரோ கரெக்டா எப்படி ஹன்சிகாவை சந்தேகப்பட்டு உண்மையை கண்டு பிடிக்கறார்? 


4. ஹன்சிகா போலீஸ்க்கு போன் பண்ணி ஸ்கூல்ல கலவரம் நடக்குதுன்னு சொல்றார். போலீஸ் வருது. அவர் தான் யார்னு யார் கிட்டேயும் சொல்லலை , போலீஸ் கிட்டேயும் சொல்லலை , எப்படி சந்தானம் , ஹீரோ 2 பேரும் ஹன்சிகா தான் ஃபோன் பண்ணினார்னு கண்டு பிடிக்கறாங்க? 


5. போலீஸ் ஆஃபீசரான ஒருவர் டியூட்டிக்காக  தற்காலிகமா வேலையை ரிசைன் பண்ணின மாதிரி நடிக்கறார் ஓக்கே , அதை தன் சொந்த அப்பா கிட்டேயே யாராவது சொல்லாம இருப்பாங்களா? சொந்த பொண்டாட்டி கிட்டே கூட அதை சொல்ல மாட்டேன்னு ஹீரோ பஞ்ச் பேசுவது ஓக்கே , பொண்டாட்டிங்கன்னா ஓட்டை வாய்ங்களாத்தான் இருக்கும் , ஆனா அப்பா கிட்டே ஏன் சொல்லலை? அதை சாக்கா வெச்சு வரும் செண்ட்டிமெண்ட் காட்சிகள் உஷ் அப்பா ... 


6.  சாதாரண ஏ சி யான ( அசிஸ்டெண்ட் கமிஷனர் ) ஹீரோ உள்ளே வரும்போது உள் துறை அமைச்சரே எந்திரிச்சு நின்னு மரியாதை தர்றாரே அவர் ரொம்ப சாதாரண துணை நடிகரோ? 




7. வில்லன்க லாட்ஜ்ல ரூமை  வெளிப்பக்கம் பூட்டிக்கிட்டு உள்ளே சீட்டாடிட்டு இருக்காங்க . செல் ஃபோனை வைப்ரேஷன் ஆர் சைலண்ட்ல மோடுல போடாம அப்படியா பெப்பரெப்பேன்னு ஹீரோ கிட்டே மாட்டிக்குவாங்க ?


8. காலியா இருக்கும் குஷன் சேர்ல வில்லன் ஈட்டியால லாங்க்ல இருந்து வீசறார் . அது சக்னு போய் செண்ட்டர்ல குத்தி நிக்குது . நீங்க வேணா செக் பண்ணிப்பாருங்க . காலியா இருக்கும் சேர் மேல 10 அடி தூரம் தள்ளி நின்னு ஈட்டி எறிஞ்சா அந்த சேர் கீழே விழும் . ஆனா அப்படி குத்தி நிக்காது. யாராவது சேரைப்பிடிச்சுக்கிட்டு நின்னாத்தான் அப்படி குத்தும் ( இதை செக் பண்றேன் பேர்வழின்னு எங்க வீட்ல இருந்த ஒரே ஒரு குஷன் சேர் கோவிந்தா )


9. பொண்ணு சமப்ந்தம் பேசும் இடத்தில் அனுஷ்கா & கோ ஏற்பாட்டின்படி அங்கே நடப்பதை அறிய செல்போனில் வீடியோ எடுத்து லைவ் ஷோ பார்க்கறாங்க . அந்த லேடி அப்படி பப்ளிக்கா ஃபோனை கைல பிடிச்சுட்டு நிக்குது. யாருமே அதை கவனிக்கலையா? ஹீரோ போலீஸ் ஆஃபீசர் வேற , அவருக்குமா தெரியலை  ?


10. ஆபரேஷன் டி கேன்சல் ஆகிடுச்சு , உள்துறை அமைச்சர் அந்த லெட்டர் உங்களுக்கு நாளை தான் கைல கிடைக்கும். அதுக்குள்ளே நைட்டே மேட்டரை முடிச்சுடுங்கனு சொல்றார். இந்த மாதிரி அதி முக்கிய அரசாங்க ஆணைகள்  தந்தி மூலமாகவோ , ஃபோன் கால்  மூலமாவோ பிறப்பிக்கப்படும் , எழுத்துப்பூர்வமான ஆணைகள் சு ம்மா ரெக்கார்டிங்க் பர்ப்பஸ்க்கு வேணும்னா வாங்கி வெச்சுக்கலாம். சி எம் ஃபோன் ல ஆபரேஷன் டி கேன்சல் பண்ணியாச்சா? என ஏன் கேட்கலை? 


11. படத்தோட ஓப்பனிங்க்ல வர்ற சாதா அடியாள் தான் மெயின் வில்லன் என்பதை ஆல்ரெடி குருதிப்புனல் , புலன் விசாரனை உட்பட பல படங்கள் ல பார்த்தாச்சே பாஸ் 


12.  ஹன்சிகா - அனுஷ்கா சக்களத்தி சண்டை ரொம்ப கேவலமா இருக்கு. அந்த சீனுக்கு வசனம்  எழுதுனவர் போரிங்க் பைப்ல தண்ணி பிடிக்கும் பொம்ப்ளைங்க ரேஞ்சுக்கு இறங்கி .. உஷ் அப்பா


 13 . ஒரு சர்வதேச  கடத்தல்காரனை லாக்கப்ல போட்ட ஹீரோ வெளில கிளம்பும்போது யாராவது வில்லனை மீட்க வரலாம்னு சந்தேகப்பட்டு  லாக்கப் சாவியை எடுத்துட்டுப்போறார். செம காமெடி . சாவியை எடுத்துட்டா அந்த ரூமை யாராலும் திறக்க முடியாதா? ஹய்யோ அய்யோ





மனம் கவர்ந்த வசனங்கள் 


1.   நான் எல்லாம் டேஞ்சரை டெபாசிட் பண்ணிட்டு அபாயத்தை வம்புக்கு இழுக்கறவன் # சந்தானம்


2. சூர்யா பஞ்ச் - நீ என் வீட்டுக்கு வந்தே.நான் தாங்கிட்டேன்.நான் உன் வீட்டுக்கு வந்தா நீ தாங்க மாட்டே # பக் சீட் பிகர் மேல வி பு சி



3.  தூரத்துல இருக்கற ஆளை 10 ஸெகண்ட்ஸ் ல போட்டுட்டேன்.பக்கத்துல இருக்கற உன்னைப்போட எவ்ளவ் நேரம் ஆகும் ? # நோ டபுள் மீனிங்.ஹீரோ டூ வில்லன் ்


4. வில்லன் ன் கேவலமான பஞ்ச் - நான் கெளுத்தி மீன் இல்ல.வலைல விழுந்தாலும் உலைல விழ மாட்டேன்


5.  தகுதி இல்லாதவன் தமிழ் வாத்தியார்.புத்தி இல்லாதவன் புவியியல் வாத்தியார் .அறிவே இல்லாதவன் அறிவியல் வாத்தியார் # சந்தானம்


6. சந்தானம் - உனக்கு நான் பேர் வாங்கித்தர்றேன்.நீ எனக்கு பீர் வாங்கித்தந்துடு.எப்டி டீலிங்?


7. சந்தானம் - டீச்சர் ஜாக்கெட்ல ஓஜோன்ல ஓட்டை விழுந்த மாதிரி ஏகப்பட்ட பொத்தல்கள் இருக்கே


8. சந்தானம் - அய்யய்யோ.பிரச்சனையை பேரம் பேசி வாங்கிட்டேன் போல


9. பேசாம அவங்க கிட்டே பாவ மன்னிப்பு கேட்டுடு.


 சந்தானம் - பாவ மன்னிப்பு ,பாசமலர் எல்லாம் கேட்க அவங்க என்ன டிவிடி கடை ஓனரா? 


10. இந்த வயசுல பிகர் வர்றதும் ,வயசானா சுகர் வர்றதும் வாழ்க்கைல சகஜம் # சி 2 சந்தானம்

 

11. சந்தானம் - ஸாரி மேடம்.உங்களுக்கு மேரேஜ் ஆகி 3 புருசனுங்க இருக்கற மேட்டரே எனக்கு இப்போ தான் தெரியும்


12. சந்தானம் - என்னய்யா? போலீஸ்னா எல்லாரும் வயித்தில சோத்தை கட்டிட்டே அலைவாங்ளோ? #தொப்பை


13. ஒருத்தரை நமக்குப்பிடிச்சுப்போச்சுன்னா அவங்க மேல நமக்கு இனம் புரியாத ஒரு அன்பு வரும்.அது காதல் இல்லை.இன்பேக்சுவேசன்


14.  சந்தானம் = சார்.பாயே மூடு,பீச்சே மூடுனு சொல்றீங்ளே.பாயை மூடிடலாம்.பீச்சை (BEACH) எப்டி மூடுவீக?


15.  நீங்க அம்மா , அப்பா பேச்சை கேட்பீங்களா 


 அவங்க பேச்சைக்கேட்காம? அவங்க எனக்கு தெய்வம் சார் ( சிவகுமாரை இம்ப்ரெஸ் பண்ண வைக்கப்பட்ட வசனம் போல ம்)


16.  என்னது? நாய் மோப்பம் பிடிக்குமா?


 பின்னே , உன்னை மாதிரி பீடி பிடிக்கும்னு நினைச்சியா?



17. ஏன் என்னைப்பார்த்து நாய் குரைக்குது?

 நாயாவது உன்னைப்பார்க்குதேன்னு சந்தோஷப்படு


18. ஆமா , நீ வேட்டி கட்டி இருக்கியே? ஜட்டி போட்டிருக்கியா? பார்த்துடா, நாய் கவ்விட்டுப்போய்டப்போகுது


19.  ப்ளூ கிராஸ் என்னைப்பிடிச்சுட்டுப்போனாலும் பரவாயில்லை ,  3 நாயையும் கல்லால அடிக்காம விட மாட்டேன்


 2 நாய் தானே இங்கே இருக்கு ?

 அந்த 3 வது நாய் நீ தாண்டா


 20.  மிஸ் ! எங்கே போய் இருந்தீங்க?

 சொல்ல மாட்டேன்


 நீ சொல்லலைன்னா 8 மணி நியூஸ்ல சொல்வாங்களா? அட சொல்லம்மா/








21.  செல் ஃபோன் கனெக்‌ஷனை கட் பண்ணுங்க , கம்யூனிகேஷனை கட் பண்ணாலே நாட்ல பாதிக்கலவரம் குறைஞ்சுடும்



22. இனிமே என் பொண்ணு காய்கறி வாங்கக்கூட சைரன் வெச்ச கார்ல தான் போவா


23. இவங்களை சமாளிக்க க்ளீன் போலீஸ் பத்தாது , கிரிமினல் போலீஸ் வேணும்  ( நாட்டுல 75 % அப்டித்தானுங்க்ணா)


24 விருந்தாளியையே இப்படி ப்வெளுக்கறாங்களே இந்தம்மா  இவங்க புருசனை எப்படி வெளுப்பாங்க


25. காதல்னா  என்ன? நெஞ்சுல வெச்சு நினைப்புல வாழனும்

26. அத்து மீறி மனசுல நுழைய நினைச்சா அது காதல் ஆகிடாது


27. தொகுதிப்பிரச்சனைக்காக என்னைக்காவது பி எம் கிட்டே பேசி இருப்பீங்களா? எம் பி சார். ஒரு பொறுக்கிக்காக இப்படி போன் போட்டு பேசறீங்க?


28. அமலாபால் நடிச்ச படம் மைனா , ஐ ஆம் கமிங்க் ஃப்ரம் சைனா , என்னை விட்டுடு நைனா # சந்தானம்





















படம் பார்க்கும்போது ட்விட்டரில் போட்ட ட்வீட்ஸ் 


1. அய்யய்யோ அனுஷ்கா அழுகுதே.இப்போவே பஸ் ஏறி அனுஷ்காவுக்கு ஆறுதல் சொல்லனும்



2. அழகு ரதி அனுஷ்கா முன்னால பப்ளிமாஷ் பப்ஸ் ஹன்சிகா எடுபடல


3. ஹீரோ சார் ஹரி சார் அது ஏன் சார் வசனம் பேசும்போது பல்லைக்கடிச்சுக்கிட்டே பேசறார் சார்?

4.   சிவப்புக்கலர் ஜாக்கெட் ,மஞ்சள் கலர் பட்டு சேலை அனுஷ்கா திருவாரூர் தேர் தேவதை

5. 50 கிமீ வேகத்துல போகும் ப்ஸ்ஸை ஹீரோ ஓடியே துரத்தி ஏறிட்டாரு # சிங்கம் சிங்கம் துரை துரை  சிங்கம் டொய்ங் டொய்ங் டொய்ங் டொய்டட டொய்டங்

6. ஹீரோவோட அப்பா மேரேஜ்க்கு ஓக்கே சொல்றது 6 வது ரீல் ல.அதை ஹீரோயின் தன் அப்பா கிட்டேதகவல் சொல்றது 12 வது ரீல் ல # 6 மனமே 6


7. அனுஷ்காவுக்கு உதடு் மட்டும் இவ்ளோவ் சின்னதா இருக்கே?்



8. டூயட் சீனில் அனுஷ்காவின் முக சேஷ்டைகள் கலக்கல் # அனுஷ் பழம்


9. ஸார்.ஹன்சிகா சார்.பாத்ரூம்ல குளிக்குது ஸார். # சொந்த வீட்ல பாத்ரூம்ல தாழ் போட்டுட்டு குளிக்கும்போது எதுக்கு டர்க்கி டவல்? எப்டி  நம்ம லாஜிக் கொஸ்டீன்? 


10 சந்தானம் - அனுஷ்கா டூயட் கலக்கல் # சூர்யா பாவம் 


11. ஹன்சிகா டென் த் படிக்கற ஸ்டூடண்ட்டாம்.அய்யோ ராமா


12. ஒத்தை ஆள் 10 பேரை அடிச்சா என்ன அர்த்தம்?


 சி பி = 10 பேரும் சொத்தைப்பசங்கனு அர்த்தம் பாஸ் 


13. 120 கிமீ வேகத்துல 4,ஜீப் ஹீரோவைத்துரத்துது.பிடிக்க முடியல.செம ஓட்டம்.கின்னஸ் ரெக்கார்ட்


14. சாமி விக்ரமை மறைமுகமாத்தாக்கறாரு சூர்யா.என்ன தகராறோ?


15. ஓப்பனிங் சீன் அஞ்சலிக்கு குத்தாட்டம்


ஆனந்த விகடன்  எதிர்பார்ப்பு மார்க் =41

 குமுதம் எதிர்பார்ப்பு ரேங்க் - ஓக்கே

ரேட்டிங் = 3 / 5


சி பி கமெண்ட் - ஈரோடு சீனிவாசா வில் படம் பார்த்தேன். காலை 7 மணி ஷோ , என்னை மாதிரியே வெட்டியா ஊர்ல பல பேர் இருக்காங்க போல , பல்லு கூட துலக்காம வந்துட்டாங்க   சிங்கம் 2 - மாமூல் ஆக்சன் ஹரி பிரான்ட் மசாலா - தலைவா வரும் வரை தாங்கும். படம் ஸ்பீடாத்தான் போகுது , ஆனா காது வலிக்குது. அஞ்சலி ஒரு பாட்டுக்கு ஓப்பனிங்க்ல ஓபனா ஒரு குத்தாட்டம் போடுது, அதனால போகனும்னா யாரும் லேட்டா போகாதீங்க

 


Friday, September 28, 2012

தாண்டவம் - சினிமா விமர்சனம்

http://www.mirchigossips.co.in/wp-content/uploads/2012/09/Thaandavam.pngஹீரோ ஒரு ஐ பி எஸ் ஆஃபீசர்.இந்தியாவில் உள்ள டாப் 5 ரா  டிவிஷன் ஆஃபீசர்ஸ்ல அவரும் ஒருத்தர். தீவிரவாதி, உளவாளிகளை பிடிக்கும் ஒரு பிராஜக்ட் அவருக்கு கொடுக்கப்பட்டிருக்கு. அதுக்குள்ளே அவங்க ஊர்ல இருந்து அழைப்பு. இன்னும் 2 நாள்ல உனக்கு மேரேஜ் , கிளம்பி வா அப்டின்னு.. 


 ஹீரோவுக்கு மேரேஜ் பண்ணிக்கப் பிடிக்கலை. டும் டும் டும் பட மாதவன் மாதிரி மேரேஜை நிறுத்த பிளான் எல்லாம் போடறாரு, ஆனா எல்லாம் பொண்ணை நேர்ல பார்க்கும் வரை தான். மேரேஜ் ஆகிடுது. ஃபர்ஸ்ட் நைட்ல மாப்ளை என்ன நினைக்கறாரோ, அதையே பொண்ணும் சொல்லுது. அதாவது நம்ம 2 பேருக்கும் பழக்கமே இல்லை, கொஞ்ச நாள் போகட்டும். பரஸ்பரம் புரிதலுக்குப்பின் தான் கில்மா.. 

 மவுன ராகம் கணக்கா 2 பேரும்  தொட்டுத்தொடாத பாரம்பரியமா, பட்டா போட்டும்  விவசாயம் பண்ணாத விளை நிலமா  காலத்தை ஓட்டறாங்க.


 திடீர்னு ஹீரோ தன் பிராஜக்ட் சம்பந்தமா லண்டன் போக வேண்டிய சூழல், .வழக்கம் போல வில்லனுக்கும் ஹீரோவுக்கும் நடக்கும் மோதலில் ஹீரோயின் அவுட், ஹீரோவுக்கு கண்கள் 2ம் அவுட். 


http://www.gulte.com/content/2012/09/news/Anushka-Siva-Thandavam-Hot-Photos-1885.jpg


அந்த 5 வில்லன்களையும்  கண் தெரியாத ஹீரோ எப்படி பழி வாங்கறார் என்ற அரைச்ச மாவையே பிரம்மாண்டமா, ஃபாரீன் லொக்கேஷன்ல கிளு கிளு ஃபிகர்கள் சூழ சொல்லி இருக்காங்க.. 


ஹீரோ விக்ரம் காசில ஆல்ரெடி செஞ்ச கேரக்டர் தான் . அதுல செஞ்ச பர்ஃபார்மென்ஸ்ல பாதி கூட இதுல இல்லை.. ஆனா பல இடங்கள்ல இவர் பாடி லேங்குவேஜ் பட்டாசு.. ஆனா எப்போ பாரு செகண்ட் ஷோ பார்த்து தூக்கம் கெட்டவன் கண் போல, மப்புலயே இருக்கும் மாடசாமி  அவர் முகம் சொக்கா போட்டா சோனியா அகர்வால் மாதிரி டல் அடிக்குது.. 


 மனைவியாக ஆறடி உயர ஆப்பிள் , கொழுக் மொழுக் மார்பிள் ( மொசைக் தரைல போடும் கல்),பர்சனாலிட்டி  பஞ்சாப் பர்பி அனுஷ்கா .இவர் வரும் காட்சிகளில் கைதட்டல் , விசில் அடடா.. தமிழர்கள் நல்ல ஃபிகர் இல்லாம எவ்வளவு காய்ஞ்சு போய் இருக்காங்கன்னு காட்டுது..  ரொம்ப அமைதியான நடிப்பு.. பெட்ரூம் ல புருஷன் கிட்டே கண்ணால சைகையாலயே வா-ன்னு கூப்பிடும்போது பக்கத்து சீட்ல ஒரு ஆள் எந்திரிச்சுட்டான்./.  ஹா ஹா .. ஆனா அவர் முகம் ஏன் ஆயில் வடிஞ்ச மாதிரி பல சீன் இருக்கு?  ஷைனிங்க்கா காட்டனும்னு ஏதாவது ஆலிவ் ஆயில் பூசிட்டாங்க போல..  சிவப்புக்கலர் பட்டு சேலைல அவர் மணக்கோலத்துல வர்ற சீன் அடடா இன்னும் நெஞ்சுக்குள்ளே நிக்குது.. 



http://moviegalleri.net/wp-content/gallery/amy-jackson-hot-in-saree-photos/actress_amy_jackson_hot_in_saree_photos_thandavam_audio_release_969dc80.jpg


அடுத்து எமி  ஜாக்சன் ஸ்லீவ்லெஸ் டாப்ஸ், டைட் லெக்கின்ஸ் ,ஜீரோ சைஸ் இடை அழகி, உச்சத்தை தொட 2 அங்குலம் மட்டுமே மிச்சம் உள்ள அபாயகரமான லோ லோ லோ ஹிப் ஜீன்ஸில் அவர் வரும் காட்சிகள்  அடடா.. ஆனாலும்  பெரும்பாலான பி சி செண்ட்டர் ரசிகர்களுக்கு இவர் பிடித்துப்போவது சிரமமே.. ஷி ஈஸ் ஒன்லி ஃபார் ஏ செண்ட்டர் ஃபேன்ஸ்.. 



3 வது நாயகியாக தை ஸ்பெசலிஸ்ட் ரம்பாவுக்குப்போட்டியாக வாழைத்தண்டு தொடை அழகி லட்சுமிராய்.  அவருக்கு அதிக வாய்ப்பில்லை.. 


 நாசர் கொலை கேசை விசாரிக்கும் போலீஸ் ஆஃபீசர். வந்த வரை ஓக்கே .சந்தானம் படத்தின் முதல் பாதியில்  சகுனியில் வந்தது போலவே ஆட்டோ டிரைவராக சாரி டாக்ஸி டிரைவராக வருகிறார். வரும் காட்சிகள் எல்லாம் கலகலப்புதான்.. 


 அது போக பெரிய நட்சத்திரப்பட்டாளமே இருக்கு.. 


http://cdn2.supergoodmovies.com/FilesFive/thandavam-audio-launch-stills-dbd23425.jpg


 இயக்குநர் பாராட்டு பெறும் இடங்கள்



1. லட்டு மாதிரி 3 ஹீரோயின்ஸை புக் பண்ணி 3 பேரையும் கிளாமர் காட்ட வெச்சது , அது போக படத்துல  3 ஃபாரீன் ஃபிகருங்க  எல்லாமே வெல்வெட் அழகிங்க.. 


2. படம் போட்ட 36 வது நிமிஷத்துல எதிர்பாராதவிதமா ஒரு நீச்சல் குள டாப் ஆஃப் சீன் இருக்கு, 2 செகண்ட்ல அது ஓடிடும்.. யாரோ ஒரு புது ஃபிகர் போல.. அடுத்த  6 வது நிமிஷத்துல அதாவது  படம் போட்ட 42 வது நிமிஷத்துல எமி ஜாக்சன் ஸ்லோ மோஷன்ல  ஓடி வரும் சீன் இருக்கு டோண்ட் மிஸ் இட்.. 



3. ஆல்ரெடி ஹிட் அடித்த  யாரடி மோகினி'அனிச்சம் பூவழகி , உயிரின் உயிரே, இந்த 3 பாடல்களும் படமாக்கப்பட்ட விதமும் , லொக்கேஷன்களும் அழகு..


4. அனுஷ்காவுக்கு தங்கச்சியா ஒரு 75 மர்க் ஃபிகர் வருது. 6 சீன் வந்தாலும் அசத்தல்.. அதே போல் அனுஷ்கா கட்டி இருக்கும்  சிவப்புக்கலர்  பட்டுப்புடவை டிசைன் கலக்கல். படத்தில் அனைத்து பெண் கேரக்டர்களுக்கான ஆடை வடிவமைப்பு அழகு/
http://www.gulte.com/content/2012/06/photos/actress/Lakshmi%20Rai%20Hot%20Stills/normal/Lakshmi%20Rai%20Hot%20Stills_54.jpg

இயக்குநரிடம் சில கேள்விகள்



1.  படத்தோட பெரும்பாலான ஷுட்டிங்க் நடப்பது லண்டனில். அதனால பல வசனங்கள் கேரக்டர்ஸ் ஆங்கிலத்தில் பேசறாங்க, அதுக்கு மொழி பெயர்ப்பா திரைல தமிழ் ல எழுத்துகள் ஓடுது, ஓக்கே.. அதை ஒரு டைம் மானிட்டர் பண்ண மாட்டீங்களா? ஏகப்பட்ட ஸ்பெல்லிங்க் மிஸ்டேக்ஸ்
உதா - வெறும் = வெரும்  , பேஷண்ட்டோட = பேஷ்ன் ட்  -ஓட 


2. கொலையாளியை பார்த்த ஒரே சாட்சி சந்தானம் தான்.  அது வீடியோவில் பதிவாகி இருக்கு. ஆனா நாசர் அவர் கிட்டே கொலையாளி ஆள் எப்படி இருப்பான்னு முதல் கொலை நடந்தப்ப நடந்த விசாரணைல கேட்கவே இல்லை.. 


3. ஹீரோ முதல் கொலை பண்றப்ப எதேச்சையா சந்தானம் டாக்ஸில போறார், ஓக்கே.. ஆனா 2 வது டைம் அதே மாதிரி அவர் வர்றப்ப ஏன் அதே டாக்சில போகனும்? அவனே சாட்சி ஆகிடுவான்னு தெரியாதா? 


4. ஹீரோ வில்லனை கொலை பண்ணி மாடில இருந்து கீழே தள்ளி விபத்து மாதிரி செட் பண்றாரு. போஸ்ட் மார்ட்டம் ரிப்போர்ட்ல  ஆள் செத்த டைம்க்கும், டெட் பாடி கைல இருந்த வாட்ச் நின்னு போன டைம்க்கும் வித்தியாசம் வருது, அது கொலைன்னு கண்டு பிடிக்கறாங்க.. ஆனா ஹீரோ ஆல்ரெடி போலீஸ் ஆக இருந்தவர், அவருக்கு இந்த மேட்டர் தெரியாதா? வில்லனை கொலை பண்ணி ஏன் கீழே தள்ளனும்? அவனை குற்றுயிரும், கொலைஉயிருமா பண்ணி உயிரோட மாடில இருந்து தூக்கிப்போட்டாத்தானே அது ஒரு பர்ஃபக்ட் விபத்தா காட்ட முடியும்?


5. விழி ஒளி இழந்தவரா வர்ற ஹீரோ எமி ஜாக்சனை முகத்தை தடவிப்பார்த்து “ நீ ரொம்ப அழகா இருக்கே” அப்டிங்கறார்.. பிரெயில் முறைல லெட்டர்ஸ்க்குத்தான் அப்டி படிக்க சொல்லிக்கொடுத்தாங்க.. தடவிப்பார்த்தா அழகா இருக்கறது தெரியுமா? ( நல்ல வேளை , இந்த சீன்ல கமல் நடிச்சிருந்தா  முகத்தை தடவி இருக்க மாட்டார்.. )



6. டெல்லில டாக்டரா இருக்கும் அனுஷ்கா  தன் கணவர் ஐ பி எஸ் ஆஃபீசர் என்பதே தெரியாமல் சாதா எஸ் ஐ என நினைப்பதா காட்டறது நம்பவே முடியல.. இந்தக்காலத்துல படிக்காத பொண்ணுங்க கூட மாப்ளையை பற்றி நல்லா விசாரிக்கறாங்க.. 


7. அதே போல் கிராமப்பொண்ணா இருந்தா ஓக்கே, ஹீரோ , ஹீரோயின் 2 பேரும் டெல்லில பெரிய போஸ்ட்ல இருக்காங்க.. மேரேஜ் முடிஞ்சும் கில்மா எல்லாம் பண்ணாம  என்னமோ லவ்வர்ஸ் மாதிரி காட்டி இருப்பதும், அப்பப்ப ஜஸ்ட் புன்னகை மட்டும் பண்ணிக்கறதும் பார்க்க கவிதையான காட்சியா இருந்தாலும் நடைமுறை சாத்தியம் ரொம்ப கம்மி.. 


http://hotactress-photos.com/wp-content/uploads/2012/09/Anushka-Photos-In-Saree-In-Thandavam-Movie-2.jpg


8. ஹீரோ ஹீரோயின் ஒரே வீட்டில் இருந்தும் எந்த ரொமான்ஸும் பண்ணாமல் இருப்பதும், பார்வையால் காதலை பரிமாறிக்கொள்வதும் இந்த காட்சிகளில் எல்லாம் மவுன ராகம் பி ஜி எம் சாயல் 


9.முக்கியமான டெரரிஸ்ட்டை  ஹீரோ பிடிச்சுடறார், அவனுக்கு கை விலங்கு போடாம அம்போன்னு விட்டுட்டு அசால்ட்டா அவனை தப்பிக்க விடுவது நம்ப முடியாத சீன் 


10. ஹீரோ போடும் கூலிங்க் கிளாஸ் மாடல் அரதப்பழசு, ஆல்ரெடி வயோதிகத்தோற்றம் தரும் விக்ரமின் முகத்தை அதீத வயோதிகம் தருது. அவருக்கு  மெல்லிய  ஃபிரேம் வைத்த கூலிங்க் கிளாஸ் போட்டு விட்டிருக்கலாம்.. 



11. ஹீரோ ஒரு சீனில் நிராயுதபாணியாய் நிக்கறார், அப்போ லண்டன் போலீஸ் 6 பேர் ரிவால்வரோட சூழ்ந்துக்கறாங்க, அப்போ ஹீரோ 2 பேர்ட்ட இருந்து கன்னை பிடுங்கி மீதி ஆட்களை சுட்டுடற சீன் செம காமெடி.. 



12. கிராமப்புறங்கள்ல மேரேஜ்க்கு முன்னாடி அதாவது கன்னிப்பெண்கள் தங்கக்கொலுசு போடக்கூடாதுன்னு ஐதீகம் இருக்கு. ஆனா அனுஷ்கா தங்கக்கொலுசு போட்டுட்டு கிராமத்துல உலா வர்றார்..  


13. சார்லி சாப்ளின் நடிச்ச சிட்டி லைட்ஸ் படத்தை சுட்டு நிலவே முகம் காட்டு எடுத்தாங்க.. அதே காதலை கஜினி  ஃபார்முலாவுல கொஞ்சம் போர்க்களம்  படம் மாதிரி எடுத்திருக்கீங்க.. அவ்ளவ் தான்.. சொல்லிக்கற அளவு பெரிய வித்தியாசம் ஏதும் இல்லை..

14. ஹீரோ விழி ஒளி இழந்தவர் என்றாலும் அவர்  நார்மலா நாம செய்யும் பல வேலைகள் செய்யறார் என்பது வரை சரி. ஆனால் சேசிங்க், மர்டர், ஃபைட் எல்லாம் ஓவர்..   எக்கோ லொக்கேஷன் பயிற்சி பெற்றவர்னு காட்டறாங்க, ஆனாலும் இந்த அளவு எல்லாம் சாகசம் பண்ண முடியுமா?ன்னு தெரியல

http://www.searchmysite.in/wp-content/gallery/anushka-stills-in-siva-thandavam/anushka-stills-in-siva-thandavam-14.jpg 
மனம் கவர்ந்த வசனங்கள்


1. அழகுப்போட்டில ஜெயிக்க அழகும் ,இளமையும் மட்டும் போதாது.திருட்டுத்தனமும் வேணும்.சமூக அக்கறை உள்ளவர் மாதிரி நடிக்கனும்



2. கொலை நடந்த அன்னைக்கு ராத்திரி என்ன செஞ்சுட்டு இருந்தே? 


குளிருக்கு என்ன சரக்கு அடிக்கலாம்னு யோசிச்சிட்டு இருந்தேன் 



3. போன தடவை நடந்த விசாரணைலயும் நீ இதே பதில் தான் சொன்னே



 . சந்தானம் - நீங்களும் இதே ?தானே கேட்டீங்க?நீங்க கேள்வியை மாத்துனா நானும்  பதிலை மாத்திசொல்வேன் 




4. நீங்க நம்பியார்னு நினைச்சு நாகேஷை விசாரிச்சுட்டு இருக்கீங்க சார் 




5. ஷாஜகான் மும்தாஜை எவ்ளவ் லவ் பண்ணார்னு எல்லாருக்கும் தெரியும்.ஒரே ஒருத்தரைத்தவிர '- அது மும்தாஜ் 



6. கொலை நடந்ததை வர்ணி 



 சந்தானம் - சார், திஸ் ஈஸ் டெட் பாடி கம்மிங்க் ஃப்ரம் மொட்டை மாடி .. கம்மிங்க் கம்மிங்க். தட்ஸ் ஆல் யுவர் ஆனர்.. 




7. நீ எந்த டைரக்‌ஷன்ல வந்திருக்கேன்னு பாரு.. 


 நான் இந்த டைரக்‌ஷன்ல தான் வந்திருக்கேன், நீ தான் மணி ரத்னம்  டைரக்‌ஷன்ல வந்திருக்கே. 


8. சந்தேகம் வர்லைன்னா கேஸே  நிக்காது, சந்தேகம் வந்தாத்தான் கேசையே ஆரம்பிப்போம்

https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjqL50LHcCKiiN3nNOIEPiPNk5R7hf2unUX09Dtqm_ZmcCOk-iZ2490wqpkOZ-Vm_pYtb3uMrhgpmL08vSSSwxqsPZPdCshYZUxwJkZia9X94KQujIBqL2hmYCQSlvItq-ti8xnVJwoDPVG/s1600/anushka1036.jpg



9. அர்த்த ஜாமத்துல நீ என்ன பண்ணிட்டு இருந்தே? 


 எறும்புக்கு எத்தனை பல்லுன்னு எண்ணிட்டு இருந்தேன்


10. சார், நீங்களும் எல்லா போலீஸ் மாதிரிதானா? ஒரிஜினல் கொலையாளி கிடைக்கும் வரை என்னை பிடிச்சு டைம் பாஸ் பண்ணிட்டு இருப்பீங்களா? 



11.  சார், இவனை 4 தட்டு தட்டுனா உண்மை எல்லாம் வெளில வந்துடும்


 4 இல்லை, 40 தட்டு தட்டுனாலும் உண்மை வராது.. 

 என்ன சார். நீங்களே ஏத்தி விடறீங்க? அவங்களே 4 தானே சொன்னாங்க.. ?



12. என்னை மாப்ளைன்னு இனிமே கூப்பிடாதீங்க


 சரி மாப்ளை



13. நீங்க மாப்ளை வீடா? பொண்ணு வீடா? 


 மாப்ளை வீடு


 நீங்க மாப்ளைக்கு என்ன வேணும்? 


மாப்ளைக்கு கல்யாணம் வேண்டாம்


 அப்போ.. 

 நான் தான் மாப்ளை



14. நீங்க புக்ஸ் படிப்பீங்களா? 

 தூக்கம் வர்லைன்னா படிப்பேன் 



15. ரோட்டை கிராஸ் பண்ணவே அவனுக்கு 4 பேர் உதவி தேவை ,


 ஆளை கொலை பண்ண யாரும் அவனுக்கு தேவைபடலை


 ( இந்த இடத்துல வசனம் ரோட்டை கிராஸ் பண்ணத்தான் அவனுக்கு 4 பேர் உதவி தேவை ,ஆளை குளோஸ் பண்ண யாரோட உதவியும் தேவை இல்லை) இப்படி இருந்திருக்கலாம், எதுகை மோனை )



16. சோன்பப்டி விக்கற பொண்ணு மாதிரி இருந்துட்டு சொர்ணாக்கா மாதிரி பேசறியேம்மா.. 



17. நீங்க எங்கே போகனும்?


 உனக்குப்பிடிச்ச இடத்துக்கு 


http://tamil.cinesnacks.net/photos/actress/Lakshmi-Rai/lakshmi-rai-hot-027.jpg







ஆனந்த விகடன் எதிர்பார்ப்பு மார்க் - 42



 குமுதம் எந்திர்பார்ப்பு ரேங்க் - ஓக்கே 



 சி,.பி கமெண்ட் - ஆஹா ஓஹோ என சொல்லும்படி படம் செம கலக்கல் எல்லாம் கிடையாது , அதே நேரம் படம் மோசமும் இல்லை. டைம் பாஸ்.. பார்க்கலாம். ஜாலியா டைம் பாஸ் ஆகும். யு படம் தான் லேடீஸும் பார்க்கலாம்.. ஈரோடு அபிராமியில் படம் பார்த்தேன்



https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjZquebJQ2wuVh9B7UOxMwpy7qmSUoVU-ANrmn9wLp3wWc3MRj1sRlAtXwLWAfbVaWclMIXf-zfp43PGEvPvgJOqtBVXm6HcbFP0dOh1zAa5PNfbLC3G3rOi50V55ucQ-512c0NPE6vEVen/s1600/laxmi-rai-hot-navel-(5).jpga


டிஸ்கி 1 -தம்னா தெலுங்கு சினிமா -ரிபெல் -
http://www.adrasaka.com/2012/09/rebel.html




diSki-உலகத் தமிழ் வானொலி வரலாற்றில் முதன் முறையாக முற்று முழுதாக FULL HD SOUND QUALITY இல் உங்கள் புரட்சி.எப்.எம் 
கேட்டுப் பாருங்க - இந்த வித்தியாசத்தை உணருவீங்க! 

Thursday, September 27, 2012

தாண்டவம்




Image'தாண்டவம்' விக்ரமின் முன்மாதிரி பார்வையற்ற டேனியல் கிஷ்-ன் சிறப்பு பேட்டி ! விக்ரம் நடிக்கும் புதிய படம் தாண்டவம். இதில் விக்ரம் பார்வையற்றவராக நடிக்கிறார். இதற்கு அவர் ரோல் மாடலாக கொண்டிருப்பவர் டேனியல் கிஷ். அமெரிக்காவின் கலிபோர்னியா மாநிலத்தைச் சேர்ந்த டேனியல் பார்வையற்றவர். ஆனால் தனக்கு பார்வையில்லையே என்று ஒதுங்கி இருந்து விடாமல் வாயால் ஒலி எழுப்பி அதன் எதிரொலியை கேட்டு அருகில் உள்ள பொருட்களை அறிந்து கொள்ளும் திறனை அனுபவத்தில் கற்றுக் கொண்டவர். 


அதாவது காதால் பார்க்கும் திறனை வளர்த்துக் கொண்டவர். இப்போது அவர் ஒரு அமைப்பை ஏற்படுத்தி அதன் மூலம் தான் பெற்ற திறனை உலகில் உள்ள ஆயிரக்கணக்கான பார்வையற்றவர்களுக்கு கற்றுக் கொடுத்து வருகிறார். அவர் தாண்டவம் படத்தின் புரமோஷனுக்காக சென்னை வந்திருந்தார். அப்போது அவர் அளித்த சிறப்பு பேட்டி :

* பிறப்பிலிருந்தே உங்களுக்கு பார்வையில்லையா? இடையில் ஏற்பட்ட விபத்தால் பார்வை பறிபோனதா?

பிறந்த 7 வது மாதத்திலேயே ஒரு கண் பார்வை போய்விட்டது. 15வது மாதத்தில் அடுத்த கண்ணின் பார்வை போனது. ரெட்டினோக்ளோபியா என்ற மூளை நரம்பு கோளாறினால் இது ஏற்பட்டது.

* உங்கள் பார்வை இழப்பு பெற்றவர்களை எப்படி பாதித்தது?

ஆரம்பத்தில் அவர்கள் ரொம்பவே அப்செட் ஆனார்கள். இது எல்லா பெற்றோருக்கும் உருவாகும் கவலைதான். ஆனால் அவர்கள் சோர்ந்துவிடவில்லை. தன் குழந்தை இந்த உலகத்தில் மற்ற குழந்தைகளைப்போலவே வாழ வேண்டும் என்று விரும்பினார்கள். அதற்கேற்ப என்னை தயார் படுத்தினார்கள். பள்ளிக்கு, விளையாட்டு மைதானத்திற்கு என்னை தைரியமாக தனியே அனுப்பினார்கள். நானும் சுயமாக நடக்க பழகிக் கொண்டேன்.
* எக்கோ லொக்கேஷன் திறனை எப்படி வளர்த்துக் கொண்டீர்கள்?

அதற்கும் என் பெற்றோர்தான் காரணம். ஆரம்பத்தில் வீட்டிற்குள் நான் புழங்கும்போது அவர்கள் ஒரு குச்சியால் சுவற்றிலோ அல்லது தரையிலோ ஒலி எழுப்புவார்கள். அந்த சத்தத்தை வைத்து நான் அவர்களிடமிருந்து எவ்வளவு தூரத்தில் இருக்கிறேன் என்பதையும். அதன் எதிரொலியை வைத்து பக்கத்தில் என்ன இருக்கிறது என்பதையும் கற்றுக் கொண்டேன். அருகில் சுவர் இருந்தால் எதிரொலி ஒரு விதமாகவும் வெட்ட வெளியில் இருந்தால் இன்னொரு விதமாகவும் இருக்கும். இதை அடிப்படையாக வைத்து சிறியதாக நானே ஒலி எழுப்பி அதன் மூலம் அருகில் இருப்பதை உணர ஆரம்பித்தேன். அதன் முழு வடிவம்தான் காதால் பார்க்கும் கலை.

* இதை மற்றவர்களுக்கு கற்றுக் கொடுக்கும் யோசனை எப்படி வந்தது?

உலகத்திலேயே எனக்கு பிடித்தது கற்றுக் கொடுத்தல்தான். கற்றுக் கொடுத்தல் தொழில் அல்ல அது ஒரு மனிதன் இன்னொரு மனிதனுக்கு செய்தே ஆக வேண்டிய கடமை. நம் முன்னோர்கள் நமக்கு கற்றுத் தரவில்லை என்றால் நாம் இப்போதும் காட்டுமிராண்டிகளாகத்தானே இருப்போம். எனவே நான் கற்ற இந்த திறனை என்னைப்போன்ற பார்வையற்றவர்கள் கற்றுக் கொள்ள வேண்டும் என்று நினைத்தேன். ஆரம்பத்தில் உள்ளூரில் உள்ள சிறுவர்களுக்கு கற்றுக் கொடுத்தேன். அது படிப்படியாக விரிந்து இப்போது எனது அமைப்பு உலகில் 23 நாடுகளில் இருக்கிறது. இந்தியாவிலும் இருக்கிறது. அங்கெல்லாம் நான் சென்று கற்றுக் கொடுத்து வருகிறேன்.

* உங்கள் திறனால் அருகில் உள்ள பொருட்களை அறிந்து கொள்வதைப்போல அருகில் உள்ள மனிதர்களின் குணங்களை அறிந்து கொள்ள முடியுமா?

(சிரிக்கிறார்). மனிதர்களை அறியமுடியும். குணங்களை அறிய முடியாது. ஆனால் சில நிமிடங்கள் பேசினால் அறிந்து கொள்வேன்.

* தாண்டவம் படம் பற்றி சொல்லுங்களேன்?


இந்தியாவில் உள்ள எனது நண்பர் ஒருவர் மூலம் இந்தப் படத்தின் இயக்குனர் விஜய் என்னை அணுகினார். தான் இயக்கும் படத்தில் எக்கோ லொக்கேஷன் திறன் உள்ள ஒரு கேரக்டர் வருகிறது என்றும் அதற்கு தங்கள் அனுபவம் தேவை என்று சொன்னார். நேரில் வரச்சொன்னேன். எனது வீட்டுக்கு வந்தார் சில நாட்கள் தங்கியிருந்தார் எனது அன்றாட நடவடிக்கைகளை படம் பிடித்தார். அதை அவர் தன் படத்தில் பயன்படுத்திக் கொண்டிருப்பார் என்று நம்புகிறேன்.

* நீங்களும் படத்தில் நடித்திருக்கிறீர்களாமே?


எனக்கு நடிக்கத் தெரியாது. சில செய்தி படங்களிலும், ஆவணப் படங்களிலும் நான் நானாகவே தோன்றி பேசியிருக்கிறேன். இந்தப் படத்திலும் நான் நானாகவே வருகிறேன். நடிக்கவில்லை.

* விக்ரம் பற்றி உங்கள் கருத்து?


இந்த நாட்டில் அவர் பெரிய நடிகர் என்றும் அவருக்கு லட்சக்கணக்கில் ரசிகர்கள் இருக்கிறார்கள் என்றும் சொன்னார்கள். ஆனால் அது பற்றி எனக்குத் தெரியாது. அவர் எனக்கு ஒரு மாணவர் மாதிரி. இத்தனை பலம் வாய்ந்த ஒருவர் என்னிடம் ஒரு மாணவன் போல இருந்து கற்றுக் கொண்டதை நினைத்து ஆச்சர்யமாக இருக்கிறது. அவர் ரொம்ப ஸ்வீட் பெர்சன்.

* விக்ரம் உங்களை ரோல்மாடல் என்கிறார். உங்களின் ரோல் மாடல் யார்?

என் பெற்றோர்கள்தான். அவர்கள் மட்டும் என்னை முறையாக வளர்க்காமல் இருந்திருந்தால் நான் இந்த நிலையை அடைந்திருக்க முடியாது. எனக்கு 18 வயதாகும்போது. "டேனியல் இனி நீ தனி ஆள். இந்த நாட்டுக்கு நீ வரி செலுத்த வேண்டிய நேரம் வந்துவிட்டது. கஷ்டப்பட்டு உழைத்து முன்னுக்கு வா. யாருடைய தயவையும் எதிர்பார்க்காதே. சம்பாதித்து அரசாங்கத்துக்கு முறையாக வரி கட்டு. அடுத்து உன் தேவைகளை பார்த்துக் கொள். கொஞ்சம் சேர்த்து வை. அது நாங்கள் முதியோர் ஆனபின் எங்களை நீ கவனித்துக் கொள்வதற்காக" என்று சொன்னார்கள். அவர்கள் சொன்னதை இன்று வரை செய்து வருகிறேன். உலகத்திலேயே எனக்கு பிடிக்காத விஷயம் அனுதாபம் கொள்வது. ஒரு குறைபாடுடைய மனிதனை பார்த்து அனுதாபப்படுவது அவனை கொச்சைப் படுத்துவதற்கு சமம் என்று நினைக்கிறேன். அவனுக்கு வழியை மட்டும் காட்டுங்கள் நடந்து செல்வது அவன் பொறுப்பு.

* சினிமா பற்றி என்ன நினைக்கிறீர்கள்?

"சினிமா பற்றி அதிகம் தெரியாது. நல்ல விஷயங்கள் எந்த வடிவத்தில் மக்களுக்குச் சென்றாலும் அது எனக்கு பிடிக்கும். அந்த வகையில் எக்கோலொக்கேஷன் சினிமா வடிவில் மக்களுக்கு போய்ச் சேர்ந்தால் சினிமாவும் எனக்கு பிடிக்கும்."


நன்றி : தினமலர்









Uyirin Uyire song from Thaandavam 

 

தாண்டவம்' படத்தில் இடம்பெறும் 'உயிரின் உயிரே' பாடல் முழுமையாக....




 தாண்டவம்' படத்தில் இடம்பெறும் 'அனிச்சம் பூவழகி' பாடல் முழுமையாக...

 

 

 

 தாண்டவம்' படத்தில் இடம்பெறும் 'யாரடி மோகினி' பாடல் 

 

 

 

விக்ரம் பேட்டி - பிரஸ் மீட்

Sunday, March 11, 2012

அழகிய அனுஷ்கா, திகு திகு த்ரிஷா யார் டாப்? - ஆர்யா ஓப்பன் டாக். பேட்டி

http://sareesmania.files.wordpress.com/2011/02/anushka-dancing-green-saree1.jpg
''சார்... வீட்டுக்கு வர்றீங் களா... பிரியாணி சாப்பிடலாம்! ஸ்டிரைக்  நடக்கிறதால வீட்லயே இருக்கேன். 'புள்ளை நல்லா சாப்பிடட்டும்னு பிரியாணி பண்ணி ஊட்டி விட்டுட்டே இருக்காங்க. எக்குத்தப்பா வெயிட் போட்டுட்டுப் போய் நிக்கப்போறேன்... செல்வா சார் அடிச்சுத்துரத்தப்போறார்!''- வசீகரமாகச் சிரிக்கிறார் கோலிவுட்டின் 'மோஸ்ட் வான்டட் பேச்சுலர்ஆர்யா!


 1. ''யாருமே எதிர்பார்க்காம திடீர்னு செல்வராகவனின் 'இரண்டாம் உலகம்படத்துல நடிக்கிறீங்க. அங்கே உங்க ஜாலி கேலி சேட்டைகள்லாம் செல்லாதே...''

 சி.பி - ச்சே, ச்சே அப்படி எல்லாம் இல்லை.. டைரக்டர்க்கு தனி கேபின் , ஹீரோவுக்கு தனி கேபின் , மாத்தி மாத்தி சேட்டை பண்ணிக்கலாம் ஹி ஹி 

''உண்மைதான் சார். ஆனா, ஒவ்வொரு நடிகனும் அவர்கிட்ட நிச்சயம் ஒரு படமா வது நடிக்கணும்.

சி.பி - நல்லவேளை, நடிகையை பற்றி சொல்லலை, அப்புறம் சோனியா அகர்வால்,ஆண்ட்ரியா எல்லாரும் சண்டைக்கு வந்திருப்பாங்க 

 பெரிய ஸ்கோப் கொடுப்பார். கொஞ்சம் எக்ஸ்ட்ராவாக்கூட நடிக் கலாம். எல்லாத்தையும் அவர் பார்த்துக்குவார்.

சி.பி - அதுதாங்க , கம்ப்ளைண்ட்டே, எல்லாத்தையும் அவரே பார்த்துக்கறாராம், வேற யாருக்கும் சான்ஸ் தர மாட்டேங்கறாராம்.. 




 'இரண்டாம் உலகம்தான் என் படங்களில் ரொம்பப் பெரிசு ஆர்யா. என் கனவுப் படம் இதுதான்னு சொன்னார். அப்படி அவர் நினைக்கிற படத்தில் நான் இருக்கேன்கிறது என் அதிர்ஷ்டம். சமத்தா நடிச்சு அவர்கிட்ட நல்ல பேர் வாங்க ணும்னு முயற்சி பண்ணிக்கிட்டே இருக் கேன்.

சி.பி - ஆயிரத்தில் ஒருவன் வந்தப்பவும் இப்படித்தான் சொன்னாரு.. பொதுவா எல்லா டைரக்டர்களும் அவங்கவங்க பட ரிலீஸ் அப்போ இந்தப்படம் தான் மெகா பட்ஜெட், இதுவரை யாருமே தொடாத கதைம்பாங்க , ஆனா ரிலீஸ் ஆனாத்தான் தெரியும்.

அவர்கிட்ட திட்டு வாங்காம நடிச் சாலே பெரிய விஷயம்னு தோணுது.சும்மா விளையாட்டுப் பையனாவே திரிஞ்சாலும் சரி வராது. அதான் அப்பப்போ இப்படிப் பட்ட கிரியேட்டர்களிடம் நம்மளைக் கொடுத்து பாலீஷ் பண்ணிக்கிட்டு இருக்கேன்!''


http://trisha.indiancelebs.co.in/wp-content/uploads/l-600-400-feeacd83-65cc-4924-bdb9-6472b9409d30.jpeg

2. ''அனுஷ்காதான் ஜோடியாமே. சாக்குபோக்கு சொல்லாம ஷூட்டிங்குக்கு ஆஜர் ஆகிடுவீங்களே...''

''அடப் போங்க சார். அனுஷ்கா ரொம்ப ஃப்ரெண்ட்லி. எந்தப் படத்தில் நடிக்கும்போதும் 'ஒரு ஹீரோயின் இந்தப் படத்துல நடிக்கிறாங்கங்கிற ஃபீல் இருந்துட்டே இருக்கும். ஆனா, ஷூட்டிங் ஸ்பாட்ல அனுஷ்கா வர்றதும் தெரியாது... போறதும் தெரியாது.  



 சி.பி - அவ்ளவ் கமுக்கமான ஆளா? பார்த்தா ஓப்பன் டைப் மாதிரிதானே தெரியுது?




நல்ல தமிழ் வார்த்தைகளா பேசுறாங்க. 'நான் கடவுள் என் கேரக்டர் ரொம்பப் பிடிச்சிருந்துச்சாம். ஒரு படமா 'மதராஸபட்டினம்அவங்களுக்குப் பிடிச்சிருக்கு. 'பாஸ் என்கிற பாஸ்கரன்பார்த்துட்டு சிரிச்சுட்டே இருந்தாங்களாம். ஒரு அழகான பொண்ணு... நமக்குப் பிடிச்ச பொண்ணு... நல்ல விஷயங் களா சொல்லி நம்மைப் பாராட்டும்போது அதைக் கேட்கிறதே சுகமா இருக்குங்க. கேமரா முன்னாடி நடிக்க வந்துட்டா செம டஃப் கொடுக்குறாங்க. செல்வா சார், அனுஷ்கா ரெண்டு பேரையும் சமாளிச்சு நடிக்கிறது பெரிய சாதனைங்க!''


 சி.பி - அப்போ இந்த பேட்டிக்கு டைட்டிலா ஆர்யாவால் அனுஷ்காவை சமாளீக்க முடியவில்லை, திணறல்னு வெச்சுடலாமா? ஹி ஹி 


http://www.extramirchi.com/wp-content/uploads/2009/03/trisha_arya_sarvam-5.jpg
3. ''லிங்குசாமி தயாரிப்பில் இருந்து விலகிட்டீங்க, நீங்கள் தயாரிச்ச 'படித்துறைபடத்தை வெளியிட நீங்களே தயங்குறீங்கனு... திடீர்னு ஆர்யாவைச் சுத்தி ஏன் இத்தனை சர்ச்சைகள்?''

''லிங்குசாமி சாருக்கும் எனக்கும் எந்தப் பிரச்னையும் இல்லை. 'நானே உனக்கேத்த மாதிரி 'நச்னு ஒரு கேரக்டர் வாங்கித் தர்றேன்னு அவரே சொல்லிட்டார். இனிமே, அவரே எனக்கு டைரக்டர் ஏற்பாடு செய்துதருவார். என்னைப் பத்தி அவருக்கு நல்லாத் தெரியும். அவரோட பெஸ்ட் 'நண்பேன்டாநான். அப்புறம் 'படித்துறைபடத்துல இன்னும் கொஞ்சம் புரொடக் ஷன் வேலை பாக்கியிருக்கு. வேற வேலை கள்ல சிக்கிட்டதால அதுல கவனம் செலுத்த முடியலை. படத்தை ரிலீஸ் பண்ணாம இருக்கணும்னுலாம் நான் நினைக்கலை. நிச்சயம் 'படித்துறைவெளிவரும்!''


சி.பி - ஆஹா டைட்டிலே கவிதையா இருக்கே? ஆர்ட் ஃபிலிமா இருந்து வழுக்கி விடாம இருந்தா சரிதான் /

4. ''சேனல்ல சூர்யா குரோர்பதி பண்றார். விக்ரமும் வரப்போறதா சொல்றாங்க. உங்களுக்கு அந்த மாதிரி வாய்ப்பு கிடைச்சா பண்ணுவீங்களா?''

''நிச்சயமா! எனக்கு அதுக்கான எல்லாத் திறமையும் இருக்குங்க. சமீபத்தில் ஃபிலிம் ஃபேர் நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கி னேன். நான் நடிக்கிறதைவிட அது நல்லாவே இருந்ததுனு எல்லாரும் பாராட் டினாங்க. எனக்கு எல்லாமே சேலஞ்ச் தான். ஷாரூக் கான் பண்றார். நான் பண்ண முடியாதா? சான்ஸ் கிடைச்சா பட்டையைக் கிளப்பிடலாம் சார்!''

5. ''ஸ்டார் கிரிக்கெட்ல என்னதான் தகராறு?''

''பெங்களூரு டீம் நல்ல பலமான டீம். எங்களைத் தூக்கியே ஆகணும்னு முடிவு பண்ணிட்டு வந்தாங்க.  நாங்க நிதானமா, பொறுமையா, சாமர்த்தியமா விளையாடி னோம். அவங்க எப்பவும் ஒரு பதற்றத் தோடவே விளையாடினாங்க. அதுதான் அவங்க காலை வாரிடுச்சு. 'இவ்வளவு பலமான டீமா இருந்தும் தோத்துட் டோமேனு அவங்களுக்கு ஆதங்கம். அது வருத்தமா வெளிப்பட்டு இருந்தா பரவா யில்லை. ஆத்திரமா மாறிடுச்சு. இதுக்கு மேல அதைப் பத்திப் பேச வேண்டாமே...


http://www.dailomo.net/wp-content/gallery/stunning-trisha-in-silk-saree/trisha-too-hot-in-silk-saree-stunning-pic-5.jpg
6. '' 'அடுத்த வருஷம் கல்யாணம் பண்ணிக்கப்போறேன்னு உங்க நெருங்கிய தோழி த்ரிஷா சொல்லி யிருக்காங்கபோல... பையன் யார்?''


''அட... நீங்க வேற சார்... த்ரிஷா சொல்றதை எல்லாம் சீரியஸா எடுத்துக்கிட்டு. அவளுக்கு இப்போதைக்கு கல்யாணமா? சான்ஸே இல்லை! இன்னைக்குச் சொன்னதை நாளைக்குக் கேட்டா இல்லேம்பா! அவளை யாரும் கன்ட்ரோல் பண்ண முடியாது. அவளுக்கு என்ன தோணுதோ அதைத்தான் பண்ணுவா. கல்யாணம் பண்றதா இருந்தா என் கிட்ட சொல்லியிருப்பா. நான் விசாரிக்கிறேன்!''

சி.பி - த்ரிஷாவை யாராலும் கண்ட்ரோல் பண்ண முடியாது , என்னை தவிர - ஆர்யா பர பர பேட்டி - எப்படி டைட்டில் ? 

http://1.bp.blogspot.com/_k936YJKWxuM/SnxtdFxV-bI/AAAAAAAAHLY/IUobjI_phas/s1600/ank2.jpg