Showing posts with label மோடி. Show all posts
Showing posts with label மோடி. Show all posts

Wednesday, April 16, 2014

சேலத்தில் மோடியிடம் விஜயகாந்த் 7 அம்ச கோரிக்கை

  • சேலத்தில் நடந்த பிரச்சாரக் கூட்டத்தில் பாஜக பிரதமர் வேட்பாளர் மோடி, தேமுதிக தலைவர் விஜயகாந்த். | படம்: லக்‌ஷ்மி நாராயணன்

    சேலத்தில் நடந்த பிரச்சாரக் கூட்டத்தில் பாஜக பிரதமர் வேட்பாளர் மோடி, தேமுதிக தலைவர் விஜயகாந்த். | படம்: லக்‌ஷ்மி நாராயணன்
  • கிருஷ்ணகிரியில் தமது கூட்டணிக் கட்சியான பாமகவுக்கு ஆதரவாக பிரச்சாரத்தில் ஈடுபட்ட பாஜக பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடி. | படம்: என்.பாஸ்கரன்

    கிருஷ்ணகிரியில் தமது கூட்டணிக் கட்சியான பாமகவுக்கு ஆதரவாக பிரச்சாரத்தில் ஈடுபட்ட பாஜக பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடி. | படம்: என்.பாஸ்கரன்
தமிழக மீனவர்களின் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காண வேண்டும் என்பன உள்ளிட்ட 7 அம்ச கோரிக்கைகளை, பாஜக பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடியிடம் தேமுதிக தலைவர் விஜயகாந்த் முன்வைத்தார்.



தமிழகத்தில் பிரச்சாரம் மேற்கொண்டுள்ள பாஜக பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடி இன்று சேலத்தில் தேமுதிகவுக்கு வாக்கு சேகரித்தார். அப்போது, அவரிடம் விஜயகாந்த் ஒரு மனுவை அளித்தார். அதன் விவரம்:
'இந்திய நாட்டை வளர்ச்சிப் பாதையில் எடுத்துச் செல்லத் தேவையான நேர்மையும், தைரியமும், தேசப்பற்றும் கொண்ட தலைவர் நீங்கள். நமது தேசிய ஜனநாயகக் கூட்டணி, வரலாற்றுச் சிறப்பு மிக்க வெற்றிக் கூட்டணி. விரைவில் பிரதமராகப் போகும் உங்களுக்கு எனது வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.


தமிழகம் வரலாறு காணாத குடிநீர் மற்றும் மின்வெட்டுப் பிரச்சினையில் சிக்கித் தவிக்கிறது. தண்ணீர்ப் பிரச்சினையால் விவசாயம் நலிந்து விட்டது. மின்சாரப் பற்றாக்குறையால் பல சிறு, குறு தொழில் நிறுவனங்களும், தொழிற்சாலைகளும் முடங்கிவிட்டன. இதனால் லட்சக்கணக்கானவர்கள் வேலை இழந்ததால் அவர்கள் குடும்பங்கள் வறுமையில் வாடுகின்றன.



மேலும், பெரும்பாலான இளைஞர்கள், பெண்கள் சரியான வேலை வாய்ப்பு இல்லாமல் எதிர்காலத்தைப் பற்றிய நம்பிக்கை குறைந்து வாழ்கிறார்கள். அதிமுக, திமுக ஆட்சிகளில் கனிம வளங்கள் கொள்ளை அடிக்கப்படுகின்றன. இவர்களின் தவறான பொருளாதாரக் கொள்கை, தமிழ்நாட்டின் வளர்ச்சியைத் தடுத்து, தமிழ்நாட்டு மக்களின் வாழ்க்கைத் தரத்தை கொஞ்சம் கொஞ்சமாகக் குறைத்து விட்டது.


விலைவாசி உயர்வால் கஷ்டப்படும் ஏழைகளைக் கண்டுகொள்ளாத தமிழக அரசு, டாஸ்மாக் கடைகளைத் திறந்து, அவர்களை மேலும் பரம ஏழைகளாக மாற்றிவிட்டது.


விரைவில் தங்கள் தலைமையில் அமைய உள்ள மத்திய அரசு, தமிழகத்தில் உள்ள கீழ்க்கண்ட முக்கிய பிரச்சினைகளைத் தீர்க்க ஆவன செய்ய வேண்டும் என்று அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.


* குடிநீர்ப் பஞ்சத்தைப் போக்கும் வகையில் அனைத்து மக்களுக்கும் பாதுகாக்கப்பட்ட சுத்தமான குடிநீர் கிடைக்க வகை செய்யவேண்டும்.


* நதிகளை இணைத்து தேசிய மயமாக்கி, தமிழகத்தின் நீர் ஆதாரத்தை உயர்த்தி, விவசாயம் பெருகவும், விவசாயிகளின் வாழ்வாதாரம் உயரவும் செய்ய வேண்டும்.


* தடையில்லா மின்சாரம் கொண்டு வந்து, தொழில் உற்பத்தியைப் பெருக்கி, படித்த, மற்றும் படிக்காத இளைஞர்களுக்கும் வேலை வாய்ப்பை உருவாக்க வேண்டும்.


* கனிம வளங்களைப் பாதுகாக்க இன்னும் கடுமையான சட்டங்களைக் கொண்டு வர வேண்டும்.


* தமிழக மீனவர்களின் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காண வேண்டும்.


* அரசு மருத்துவமனைகளின் தரம் உயர்த்தி, எல்லோருக்கும், எல்லா இடத்திலும் தரமான மருத்துவம் கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும்.


* அரசுப் பள்ளி, கல்லூரிகளின் தரத்தை உயர்த்த வேண்டும்.


இவை மாநில நிர்வாகத்தின் கீழ் வந்தாலும், பிரச்சினைகளின் முக்கியத்துவத்தைக் கருதி, தனி கவனம் செலுத்தி போர்க்கால அடிப்படையில், மத்திய அரசு, மாநில அரசு, மற்றும் எதிர்க்கட்சிகள் கொண்ட கூட்டுக் குழுவை அமைத்து, தமிழக அரசின் திட்ட செயல்பாடுகளை கண்காணித்து வழி நடத்துதலை தங்கள் தலைமையில் அமையும் அரசு செய்யவேண்டும் என்று அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்' என்று அந்த மனுவில் விஜயகாந்த் கூறியுள்ளார்.


thanx - the hindu

  • பதிலுக்கு மோடி ஒரே ஒரு கோரிக்கையை விஜயகாந்த்திடம் வைத்தார். அது, படத்தில் வில்லன்களை அடிப்பதுபோல் நம் கட்ச்சியை எதிர்ப்பவர்களை அடிக்கக்கூடாது என்று!!
    15 minutes ago ·   (0) ·   (0) ·  reply (0)
    •  Liyakath Basha Electrical Maintenance at ADNOC from Abu Dhabi
      அப்படியா ? எல்லாம் கெடசிடும்னு சொல்லி இருப்பாங்களே. வைகோ, ராமதாசும் சந்தித்து ஈழம் வேணும்னு கோரிக்கை வைப்பங்கன்னும் நாங்க எதிர் பார்க்கிறோம். பெட்டியும் பதவியும் மட்டுமே கொள்கையா? இதில் பிஜேபி பரவாயில்லை நாசகர கொள்கை இருந்தாலும் அதை விடாது கடைபிடிகிறார்கள்.
      23 minutes ago ·   (2) ·   (0) ·  reply (0)
      •  Sundaram  from Hosur
        இப்படி பட்ட பொது நல நோக்கு எல்லா கட்சி தலைவர்களிடமும் மலரவேண்டும் .தேவையற்ற பிரச்சனைகளை எழுப்பாமல் மக்கள் நலன் சார்ந்த பிரச்சனைக்களை பலரும் அறிய செய்த உக்திக்காக கப்டன் அவர்கள் பாராட்டுக்கு உரியவர். இதனை தமிழ் மக்களும் மனதார வழி மொழிய கடமை பட்டுள்ளனர் .இது போன்ற பொது பிரச்னைகளை முன் நிறுத்துவதில் தேதிமுக இதற்களை முந்திகொள்ளவேண்டும் -.இது மாநிலம் சார்ந்த பிரச்சனைகளும் அடங்கும். பேதமின்றி முதல்வரையும் கண்டு முறை இடுவதும் அவசியமானதாகும் மாநில அரசின் அதரவு இன்றி எவரும் ஏதும் சாதிக்க இயலாது -சுந்தரம்
        26 minutes ago ·   (0) ·   (0) ·  reply (0)
        •  vimala  
          தேர்தல் கூட்டனிக்காக காங்கிரஸ் /தி மு க /பி ஜே பி என் எல்லாரிடமும் பேரம் பேசிக்கொண்டு /தேர்தல் செலவுககு பணம் உட்பட பேரம் பேசி கட்சியில் பாட்டாளி மக்கள் கட்சி /பி ஜே பி இடம் சரண் அடைந்த விஜயகாந்து கண்ணுக்கு மோடி நேர்மையும், தைரியமும், தேசப்பற்றும் கொண்ட தலைவர் ஆக தெரிகிறார்- கொடுமை யா ---பார்ப்போம்-அடுத்த தேர்தலில் என்ன பேச போகிறார் என ??விமலா வித்யா
          about an hour ago ·   (3) ·   (3) ·  reply (0)
          •  jayenness  
            சபாஷ் விஜய்காந்த்! அருமை. தனிமையில் நீங்கள் சதீசுக்கு மந்திரிப்பதவி கேட்டிருக்கலாம். ஆனால் பொதுவில் நாட்டுப்பிரச்னைக்காக வேன்டுகோள் விடுத்திருக்கிறிகர்கள்.நேற்றுவரை அம்மா கட்சிக்கு ஓட்டுப்போடலாம் என்றிருந்த்ஏன். உங்களின் இந்த ஒரு செயலுக்காகவே நான் உமது கட்சி/கூட்டணிக்கு ஓட்டுப்போடுவது என்று முடிவுசெய்துவிட்டேன்.
            about an hour ago ·   (13) ·   (0) ·  reply (0)
            Sakthivel  Up Voted
            •  tamil  from Doha
              மன்மோகன் சிங் அவர்களிடம் கொடுத்த கொற்கை மனுவை ஜெராக்ஸ் அடிச்சி வச்சாச்சு போலே

            Thursday, March 20, 2014

            மோடி பிரதமரானால்தான் இந்தியா வல்லரசாகும்: விஜயகாந்த் @ ஊட்டி

            தேமுதிக தலைவர் விஜயகாந்த் 
             
             
            நரேந்திர மோடி பிரதமரானால்தான் இந்தியா வல்லரசாகும் என்று தேமுதிக தலைவர் விஜயகாந்த் கூறினார். 



            ஊட்டியில் இன்று தேசிய ஜனநாயக கூட்டணியை ஆதரித்து மேற்கொண்ட பிரச்சாரத்தில அவர் பேசியது: 


            "தமிழக மக்களுக்கு நரேந்திர மோடி நன்மை செய்வார் என்ற நம்பிக்கை இருக்கிறது. நம்பிக்கைதானே வாழ்க்கை. 


            ஊட்டியில் உள்ள படுகர் இன மக்கள் தங்களை பழங்குடியினர் பிரிவில் சேர்க்க வேண்டும் என்று கோருகிறார்கள். இதுவரை யாருமே அந்தக் கோரிக்கையை நிறைவேற்றவில்லை. 


            ஊட்டியில் ஏழை மக்கள் மிகுதியாக இருக்கிறார்கள். ஆனால், ஒரு அரசு பொறியியல் கல்லூரிகூட இல்லை. 


            நான் படத்தில்தான் நடிப்பேன். நேரில் நடிக்கத் தெரியாது. இனி, என் மகன் படத்தில் மட்டும்தான் நடிப்பேன் என்பதையும் தெரிவித்துக்கொள்கிறேன்.
            இந்தியா வல்லரசாக நரேந்திர மோடிதான் பிரதமராக வேண்டும். குஜராத்தில் மிகுந்த வளர்ச்சி ஏற்பட்டுள்ளதைக் கண்கூடாகப் பார்க்கிறேன். 


            டாஸ்மாக் விற்பனையில் மட்டுமே இலக்கு நிர்ணயிக்கும் ஜெயலலிதா அரசு, ஏழைகளின் வளர்ச்சிக்கு ஏதேனும் இலக்கை நிர்ணயித்திருக்கிறதா?
            ஊட்டியைப் பொருத்தவரை, தேயிலைத் தோட்டத் தொழிலாளர்களின் நலனுக்கு தமிழக அரசு ஏதாவது செய்திருக்கிறதா? 


            மினி பஸ்சில் எங்கு பார்த்தாலும் இரட்டை இலை சின்னம் இருக்கிறது. அதை வெறும் ஓவியம் என்கிறார்கள். இலவசங்களை விலையில்லா பொருள்கள் என்கிறார்கள். எங்கு பார்த்தாலும் மின் வெட்டு, தண்ணீர் பிரச்சினை. ஆனால், குடிநீரை விலைக்கு விற்கிறார்கள். இதுதான் ஆட்சியா? 


            விஜயகாந்த் கோபப்படுகிறார் என்கிறார்கள். கோபம் இருக்கும் இடத்தில்தான் குணம் இருக்கும் என்பது பழமொழி. 


            13 மாதங்களில் வாஜ்பாய் அரசைக் கவிழ்த்த ஜெயலலிதா, இப்போது யாருடைய ஆட்சியைக் கவிழ்க்க வாக்கு கேட்டு வருகிறார்கள். நான் 20 எம்.எல்.ஏ.க்களுடன் பிரதமரைப் பார்த்தேன். எந்தப் பிரச்சினையிலும் பிரதமரைப் பார்க்காத முதல்வர் ஜெயலலிதா, சாதாரண மக்களை எப்படிப் பார்ப்பார்? 


            திமுகவுக்கும், அதிமுகவுக்கும் மக்கள் வாக்களித்தால், அவர்கள் ஊழலுக்குத் துணைபோகிறார்கள் என்றுதான் அர்த்தம். 


            அம்மா உணவகம், அம்மா பார்மஸி, அம்மா குடிநீர்... இப்படி எல்லாவற்றுக்கும் அம்மா பெயர் வைக்கிறார்கள். மக்களைப் பாழ்படுத்தும் டாஸ்மாக் கடைகளுக்கு அம்மா மதுக்கடை என்று பெயர் வையுங்களேன். 


            நரேந்திர மோடி என்ன குஜராத்தில் கடையைத் திறந்து வைத்திருக்கிறார்களா? நான் ஷூட்டிங்குக்காக குஜராத் சென்றபோது, அகமதாபாத்தில் நேரில் பார்த்தேன். ஒரு மதுக்கடை கூட இல்லை. அதுதான் மோடி ஆட்சி. அந்த நல்ல ஆட்சி, இந்தியா முழுவதும் வேண்டும். அதற்கு மோடி பிரதமராக வேண்டும்.
            நம் கூட்டணிக்கு சண்டை சச்சரவுகள் வரக்கூடாது. எல்லாரும் ஒற்றுமையுடன் இந்தத் தேர்தலில் செயல்பட வேண்டும்" என்றார் விஜயகாந்த். 

            thanx - the hindu

            Sunday, October 06, 2013

            மோடி போஸ்டரில் ரஜினி ஏன்? - கமல் காரசாரமான பேட்டி @ த ஹிந்து தமிழ்

            திருச்சியில் நடைபெற்ற‌ நரேந்திர மோடியின் கூட்டத்தில் ரஜினியின் போஸ்டரை பயன்படுத்தினார்கள். அதற்கு ரஜினி எந்த விளக்கமும் அளிக்கவில்லை. அதேபோல என்னுடைய போஸ்டரை பயன்படுத்த அனுமதிக்க மாட்டேன் என்று நடிகர் கமல்ஹாசன் ஆவேசமாகக் கூறினார். 
             
             
             
            ஃபிக்கி அமைப்பின் சார்பாக ஆண்டு தோறும் நடத்தப்படும் 'ஊடகம் மற்றும் சினிமா குறித்த கருத்தரங்கம்' இந்த ஆண்டு அக்டோபர் 29 மற்றும் 30ம் தேதிகளில் பெங்களூரில் நடைபெற இருக்கிறது. இதனை அறிவிப்பதற்காக அந்த அமைப்பின் தலைவர் நடிகர் கமல்ஹாசன் சனிக்கிழமை பெங்களூர் வந்திருந்தார். கமலின் நண்பரும்,கன்னட நடிகருமான ரமேஷ் அரவிந்த் உடன் இருந்தார். அப்போது கமல்ஹாசன் செய்தியாளர்களிடம் பேசியதாவது: 



            பல்வேறு பிரச்சினைகளை கிளப்பிய 'விஸ்வரூபம்' திரைப்படத்தின் 2-ம் பாகம் தயாராகி விட்டது. நான் எந்த மதத்துக்கும், சாதிக்கும், கட்சிக்கும் எதிரி கிடையாது. அதனால் யாருடைய மனதையும் புண்படுத்தாமல், அனைவரும் ரசிக்கிற‌ வகையில் 'விஸ்வரூபம்-2' உருவாக்கப்பட்டு இருக்கிறது. 



            என்னுடைய‌ அபூர்வ சகோதரர்கள், தேவர் மகன், ஹே ராம், நாயகன் ஆகிய படங்களை புதுப்பித்து புதுபொலிவுடன் வெளியிட்டால் நன்றாக இருக்கும் என நினைக்கிறேன். 'விஸ்வரூபம், தலைவா' விவகாரம் விஸ்வரூபம் திரைப்படத்திற்கு சிக்கல் வந்த போது 'நாட்டை விட்டு வெளியேறுவேன்' என நான் கோபத்தில் கூறிய வார்த்தைகளை திரும்ப பெற்றுக் கொள்ள மாட்டேன். அது ஒரு பிள்ளை, தன் தாய் மீது வைத்திருக்கும் அதீத அன்பின் வெளிப்பாடு. 



            எனவே அந்த வார்த்தைகளை வேறு அர்த்தங்களில் புரிந்துகொள்வது அபத்தம். ஆனால் சிலர் வேண்டுமென்றே சர்ச்சையை கிளப்பி படத்தை வெளியிட்டு வருகிறார்கள். நான் ஒரு போதும் சந்தைக்கு மத்தியில் உட்கார்ந்து கொண்டு ஒப்பாரி வைப்பதில்லை. விஸ்வரூபம் படத்திற்கு ஏற்பட்ட சிக்கல் போல தலைவா படத்துக்கும் ஏற்பட்டது. அதுபற்றிய கேள்விகள் எல்லாம் துரத்துகிறது. அவற்றிற்கு நான் ஏன் கருத்து சொல்ல வேண்டும்? 



            அரசியல் என்பது சிறந்த சமூகத்தை கட்டமைக்கும் உன்னதமான கருவி. என்னுடைய சினிமா வாழ்க்கையில் இதுவரை பேய் படங்கள் மட்டும்தான் எடுத்ததில்லை. மற்ற எல்லா வகையான படங்களும் எடுத்திருக்கிறேன். இனிமேலும் பேய் படம் எடுக்க மாட்டேன். அதைத் தானே அரசியலில் சிலர் செய்து கொண்டிருக்கிறார்கள். ராமானுஜரின் தம்பிதான் பெரியார் ரசிகர்களுக்கு எப்படி என்னையும் பிடிக்கும். ரஜினியையும் பிடிக்குமோ, அதே போல எனக்கு காந்தியையும் பிடிக்கும். பெரியாரையும் பிடிக்கும். மூட நம்பிக்கை எந்த மதத்தில் இருந்தாலும் கண்டிப்பேன். பகுத்தறிவையும்,முற்போக்கு சிந்தனைகளையும் எப்போம் போற்றுவேன். இன்னும் சொல்லப்போனால் பெரியார் செய்ததைத்தான் பல ஆண்டுகளுக்கு முன்பே ராமானுஜர் செய்தார். ஆதலால் பெரியாரை ராமானுஜரின் இளைய தம்பி என்பேன். 



            சேகுவேராவும் ஆயுதம் ஏந்தினார். பின்லேடனும் ஆயுதம் ஏந்தினார். அதனால் இருவரையும் போராளி என்று சொல்லிவிட முடியுமா? நான் அஹிம்சைவாதி. ஆதலால் காந்தியை நேசிக்கிறேன் மோடியை ஆதரிப்பீர்களா? நான் அரசியலுக்கு வர மாட்டேன். என்னுடைய அரசியல் என்பது வாக்களிக்கும் நேரத்தில் ஆள்காட்டி விரலில் மை இடுவதுதான். அந்த மையை என் கை முழுவதும் பூசி கறையாக்கிக் கொள்ள எனக்கு விருப்பம் இல்லை. 



            திருச்சியில் நடைபெற்ற‌ நரேந்திர மோடியின் கூட்டத்தில் பா.ஜ.க.வினர் ரஜினியின் போஸ்டரை பயன் படுத்தினார்கள். அதற்கு அவர் (ரஜினி) எந்த விளக்கமும் அளிக்கவில்லை. அதேபோல என்னுடைய போஸ்டரை பயன்படுத்த அனு மதிக்க மாட்டேன். ஏனென்றால் என்னுடைய ஆதரவு யாருக்கு என்பதை வாக்கு சாவடியில் மட்டுமே தெரிவிப்பேன் என்று கமல்ஹாசன் கூறினார். 
             
             
            நன்றி - த ஹிந்து  தமிழ்

            Thursday, September 26, 2013

            2014 INDIA PM நரேந்திர மோடி @ திருச்சி

            தமிழக மீனவர்கள் பிரச்சினை: மத்திய அரசு மீது மோடி தாக்கு



            மத்திய அரசின் பலவீனத்தின் காரணமாக, இலங்கை கடற்படையினரால் தமிழக மீனவர்கள் கைது செய்யப்படுவது தொடர்கதையாக நீடிப்பதாக, பாஜகவின் பிரதமர் வேட்பாளரும், குஜராத் முதல்வருமான நரேந்திர மோடி குற்றம்சாட்டினார்.


            திருச்சியில் இன்று நடந்த பாஜக மாநாட்டில் கலந்துகொண்டு அவர் பேசுகையில், குஜராத் மீனவர்கள் அவ்வப்போது பாகிஸ்தான் படையினரால் கைது செய்யப்பட்டு இன்னலுக்கு ஆளாகின்றனர். அதைப் போலவே, தமிழக மீனவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்து துன்புறுத்துவது தொடர்ந்து நடைபெற்று வருகிறது.


            இந்த இரு மாநில மீனவர்களும் தங்கள் வாழ்வாதாரத்துக்காக கடலில் மீன்பிடிக்கச் செல்கின்றனர். ஆனால், அவர்கள் அண்டை நாட்டுப் படையினரால் துன்புறுத்தப்படுகிறார்கள். இந்த அவல நிலைக்கு, மத்திய அரசின் பலவீனமே காரணம். நாட்டின் குடிமக்களுக்காக நடவடிக்கை எடுக்க வலுவற்ற மத்திய அரசை தமிழக மக்கள் தூக்கி எறிய வேண்டும்.


            கடந்த கால வரலாற்றில், காங்கிரஸ் ஆட்சி காலத்தில்தான் தமிழக மீனவர்கள் பெருமளவில் இலங்கைப் படையினரால் துன்பத்துக்கு ஆளாகியிருக்கிறார்கள்” என்றார் மோடி.




            பிரதமருக்குக் கண்டனம்...


            ஜம்முவில் இன்று காலை நிகழ்த்தப்பட்ட தீவிரவாதத் தாக்குதலைச் சுட்டிக்காட்டிய மோடி, "சொந்த நாட்டு மீனவர்களை அண்டைநாட்டுப் படையினர் தாக்கிக்கொண்டிருக்கிறார்கள். எல்லையில் தீவிரவாதிகளால் நம் படையினர் கொல்லப்படுகிறார்கள். அண்டை நாடுகளால், சொந்த நாட்டு மக்களுக்கு இவ்வாறாக மிகப் பெரிய அளவில் இன்னல்கள் ஏற்பட்டுக்கொண்டிருக்கிற வேளையில், அதே அண்டை நாட்டின் பிரதமருடன் வெளிநாட்டிலே உணவருந்திருக்கொண்டிருப்பது எந்த வகையில் நியாயம்?


            பிரதமர் மன்மோகன் சிங் எதற்கு முன்னுரிமை கொடுக்க விரும்புகிறார். இந்த நாட்டின் கெளரவத்துக்கா? பாதுகாப்புக்கா? அல்லது வேறு நிர்பந்தங்களுக்காக பாகிஸ்தான் பிரதமருடன் பேச்சு நடத்துவதற்கா? எதற்கு முன்னுரிமை கொடுக்க விரும்புகிறார்?" என்றவர், பாகிஸ்தான் பிரதமருடன் பேச்சு நடத்தக் கூடாது என வலியுறுத்தினார்.


            மேலும், "நாட்டில் பொதுமக்களுக்கு பாதுகாப்பு இல்லாத நிலையில், அந்த நாட்டின் அரசைத் தூக்கி எறிய வேண்டிய கடமை மக்களுக்கு இருக்கிறது" என்றார்.


            பொருளாதார வீழ்ச்சி...


            ரூபாய் மதிப்பு வீழ்ச்சியை மேற்கோள்காட்டி, நாட்டின் பொருளாதர நிலை குறித்துப் பேசியவர், "இந்த ஆட்சி தொடர்ந்து இன்னும் 5 ஆண்டுகளுக்கு இந்த ஆட்சி இருக்குமானால், இளைஞர்கள் வேலைவாய்ப்பற்று வீதியிலே இருக்க வேண்டிய நிலைக்குத் தள்ளப்படுவார்கள் என்று நம் நாட்டின் பொருளாதார நிபுணர்கள் சொல்கிறார்கள்.


            மத்திய அரசின் கொள்கை காரணமாக, தொழிலதிபர்கள், நிறுவனங்கள், இங்குள்ள பெல் நிறுவனம் என அனைத்துத் தரப்பும் பிரச்சினையில் இருக்கிறது. ஆனால், முதல் 50 இடங்களில் உள்ள பணக்காரர்களுக்கு மட்டுமே மத்திய அரசு சாதகமாக இருந்து வருகிறது. சிறுதொழில் செய்பவர்களுக்கு மிகுந்த பாதிப்பை உண்டாக்கும் நடவடிக்கையை மத்திய அரசு செய்து வருகிறது.


            ஆதார் அட்டை



            ஆதார் அட்டை விஷயத்தில் இந்த அரசு ஆனந்த கூத்தாடும் வேளையில், அந்த அட்டை கட்டாயம் இல்லை என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டதுடன், கடுமையாக விமர்சித்திருக்கிறது. ஆதார் அட்டைக்கு ஆன செலவையும், அதன் பின்னணியையும் பகிரங்கப்படுத்த வேண்டிய கடமை அரசுக்கு உள்ளது.
            ஆதார் அட்டை தொடர்பாக, உச்ச நீதிமன்றம் கேட்டுள்ள கேள்விகளை மூன்று ஆண்டுகளுக்கு முன்பே பிரதமரிடம் கேட்டிருக்கிறேன். ஆதார் அட்டை கொடுப்பதால், மாநிலத்தின் பாதுகாப்புக்கே பிரச்சினை என்று சொன்னேன். ஆனால், இப்போதுதான் உச்ச நீதிமன்றம் உத்தரவால் மத்திய அரசுக்கு புரிந்திருக்கிறது.



            அரசியல் ஆதாயத்துக்காகவும் நாடகத்துக்காகவும் ஆதார் அட்டை வடிவில் நாட்டின் பல கோடி ரூபாய் பணம் வீணடிக்கப்பட்டுள்ளது" என்றார் மோடி.


            மக்களைப் பிளவுபடுத்தும் காங்கிரஸ்



            காங்கிரஸ் பிரித்தாளும் சூழ்ச்சியைத் தீட்டி, அதைச் செயல்படுத்தி வருகிறது. அக்கட்சியிடம் மக்களைப் பிளவுபடுத்த வேண்டும் என்ற எண்ணம் இருக்கிறது.



            இந்த நாட்டில் உள்ள மக்கள் ஒருமைப்பாட்டுக்காக போராடிக்கொண்டிருக்கும் வேளையில், ஜம்மு காஷ்மீருக்கென தனிச் சட்டம் என்பது போன்ற மக்கள் விரோதச் செயல்களை காங்கிரஸ் செய்து வந்திருக்கிறது.



            இதேபோல், நதிநீர் பிரச்சினையைக் கொண்டு மாநிலங்களுக்கு இடையில் மோதல் போக்கை ஏற்படுத்தி வருகிறது. அதேபோல், மொழியின் பெயராலும், மதத்தின் பெயராலும், சாதியின் பெயராலும் இந்தப் பிரிவினை காங்கிரஸ், நாட்டு மக்களிடையே பிளவை ஏற்படுத்தியிருக்கிறது. இந்த மாதிரியான பிளவு மனப்பான்மை உள்ள காங்கிரஸ், நகர மக்களுக்கும் கிராம மக்களும் இடையே வேறுபாட்டை உண்டாக்கி இருக்கிறது" என்றார் மோடி.


            thanx - the hindu


            DINAMALAR  READERS  COMMENTS

            1. பாஜகவின் பிரதமர் வேட்பாளர் என்று அதிகார பூர்வமாக அறிவிக்க பட்ட பிறகு, மோடி இன்று முதல் முறையாக தமிழகத்தில் பிரசாரம் செய்ய வருகிறார்..... 1. இதுவரை 600 க்கும் மேற்பட்ட தமிழக மீனவர்கள், இலங்கை கடற்படையால் நடுகடலில் சுட்டு கொல்லப்பட்டுள்ளனர்.. தொடர்ந்து அவர்களை சிங்கள கடற்படை தாக்குவதும் , படகு மற்றும் மீன்களை பிடுங்கி அவர்களை சிறையில் அடைப்பது பற்றியும், பாஜக அரசு அமைந்தால், சிங்கள அரசின் மீது என்ன நடவடிக்கை எடுப்போம் என்று பேசுவாரா ??? 2. தமிழ் ஈழம் மக்கள் நிம்மதியாக வாழ வேண்டுமெனில் தமிழ் ஈழமே தீர்வு என்றும் அதற்கு அம்மக்களிடம் பொது வாக்கெடுப்பை நடத்த வேண்டும் என்று தமிழக அரசு, தமிழக சட்டமன்றத்தில் மசோதாவை முன்மொழிந்தது... இதை பற்றி பேசுவாரா ??? 3. மத்திய காங்கிரஸ் அரசால் தொடர்ந்து வஞ்சிகபட்டு , உரிமைகள் மறுக்கப்பட்டு , தேவைகள் அலைகழிக்க பட்டு, மாற்றான் தாய் மனபான்மையுடன் நடத்தப்படும் தமிழகத்தின் வாழ்வாதார பிரச்சனைகள் பற்றி பேசுவாரா ??? இன்று என்ன பேச போகிறார் மோடி ??? தமிழர்களின் நலன்களுக்கு எவ்வளவு முக்கியத்துவம் கொடுப்பார் ??? காங்கிரஸ் , பாஜக இரண்டும் வேறு வேறு என்று எப்படி தமிழர்களுக்கு உணர்த்த போகிறார் ??? தமிழக முதல்வரின் நிர்வாக திறனை பற்றி என்ன சொல்ல போகிறார் ??? நமது கேள்விக்கான விடையை எதிர் நோக்கி... காத்திருப்போம்...


            2. இந்தியாவில் உள்ள கட்சிகளில் ஜனநாயக முறையை ஓரளவுக்காவது பின்பற்றுவது BJP யும் கம்யூனிஸ்ட் கட்சிகளும் தான்.மற்றவை எல்லாம் மன்னராட்சி,பரம்பரை ஆட்சியாக மாறி விட்டன. கட்சியிலுள்ளவர்களும் கொத்தடிமைகளாக தான் செயல் பட்டு கொண்டிருக்கின்றனர்..இவர்கள் மாற வேண்டும் அல்லது நாம் மாற்ற வேண்டும்.நாம் என்ன செய்கிறோம்.நம் கட்சி தலைவர் சொல்லி விட்டால் கண்ணை மூடி கொண்டு ஓடுகிறோம். அவர் எதை செய்தாலும் ஆதரித்து சப்பை கட்டு கட்டுகிறோம். தவறு யார் செய்தாலும் தவறு தான் என்ன செய்வது,எல்லாம் ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள் என்று சமாதான படுத்தி கொள்வதிலும் பயனில்லை.இன்று BJP யும் MODI யும் நல்லது செய்வார்கள் என்று நம்புகிறோம்.அதற்கு காரணம் சென்ற முறை வாஜ்பாய் அவர்கள் தலைமையில் நடந்த ஆட்சி மற்றும் ஐந்து மாநிலங்களில் இப்பொழுது அவர்கள் தலைமையில் நடை பெறும் ஆட்சி.எனவே இப்பொழுது பிஜேபி யை ஆதரிப்போம்.


            //மதம்,மொழி,பாகுபாடின்றி மோடி செயல்பட்டால் //// < இந்த வரியே தவறு. என் இந்தக்கேள்வியை மற்ற கட்சிகளை பார்த்து கேட்கவில்லை? இட ஒதுக்கீட்டு கொள்கையில் காங்கிரஸ் முஸ்லிம்களுக்கு சாதகமாக ஆந்திராவில் செயல்பட்டபோது என்ன செய்து கொண்டிருந்தீர்கள்? சீக்கியர்களுக்கு எதிரான கலவரத்தின் போது கையாலாகாத காங்கிரஸ் பற்றி என்ன சொல்லுவீர்கள். காஸ்மீர் அகதிகளாக டெல்லியில் வாழும் காஷ்மீரி பண்டிட்களுக்கு எதுவுமே செய்யாத, செய்ய நினைக்காத கையாலாகாத காங்கிரஸ் பற்றி பேசுவீர்களா? இவ்வளவுக்கும் நேரு குடும்பமும் காஷ்மீரி பண்டிட் குடும்பம்தான்....


            இங்கே கருத்து சொல்லும் எல்லோருக்கும் America தமிழின் சார்பாக ஒரு வேண்டுகோள். மோடியுடன் கூட்டு வைக்க அம்மாவிடம் ஒரு விண்ணப்பம் செய்யவும். இதை Facebook அல்லது வேறு வழியில் ஒரு இயக்கமாக தொடங்கி 'ஜயா' விடம் சொல்லவும். நம்மால் நினைத்தால் முடியும். நாங்களும் எங்கள் தாய்நாட்டுக்கு திரும்பும் நேரம் வராதா என்ற எங்கள் கனவு நினைவாகும். இதை


            நேற்றிலிருந்து தமிழகத்தில் உள்ள லட்சக்கணக்கான பாரதிய ஜனதா/மோடி ஆதரவாளர்கள் அதிர்ப்தியில் உள்ளனர். அதற்கு காரணம் மோடிக்கு அட்வைஸ் கொடுத்த இல கணேசன் பற்றிய செய்தி. திமுவுடனும் கூட்டணிக்கு தயார் என்றால் பிஜேபிக்கு அழிவு காலம் தான். திமுகவுடன் பிஜேபி கூட்டணி என்று வந்துவிட்டால் பிஜேபியின் வாக்கு கண்டிப்பாக சரிவது நிச்சயம். மோடியால் திமுகவுக்கு சற்று வாக்குகள் கூடுமே தவிர, தற்போதுள்ள நிலையில் பிஜேபி கடும் நஷ்டத்தை சந்திக்கும். இல கணேசன் ராங் அட்வைஸ் கொடுக்க கூடாது. தற்போதுள்ள சூழ்நிலையில் மோடியா ஜெயாவா என்றால் திமுக மோடி அருகில் இருந்தால் மக்கள் ஜெயா பக்கம் தான் நிற்பார்கள்.


            6  திரு மோடி, அவர்களே... தமிழுக்கும் தமிழர்க்கும் நன்மை செய்பவர். பிறப்பால் தமிழனாக இல்லாவிட்டாலும் தமிழர்கள் அவனை தமிழனாகவே ஏற்றுக்கொள்வார்கள். இன்று உங்களை விட்டால் எங்களுக்கு ஆதரவில்லை. தமிழர்கள் இந்தியாவிற்கு நன்றியுடன் இருப்பதை உணர்ந்து எங்களது பிரச்சனைகளுக்கு தீர்வு கொணர்ந்தால் பாஜக தமிழகத்தில் நிலைபெருவதொடு இந்தியாவின் வருங்கால வளர்ச்சியை கருதி உங்களயே பிரதமராக்க என்றென்றும் பாடுபடுவோம். சொன்னதை செய்வான் தமிழன் நம்புங்கள்.


            கோயமுத்தூரு கிச்சு.....மோடிக்கு என்றுமே அதிமுக ஆதரவளிக்க தயாராய் உள்ளது. அது பிஜேபி எப்படி திமுகவிடம் நடந்து கொள்கிறது என்பதை பொறுத்து உள்ளது. தமிழகத்தில் உள்ள பெரும்பாலான பிஜேபி ஆதரவாளர்கள் முதலில் அம்மா சப்போர்ட்டர்கள் என்பதை நினைவில் வைத்துக்கொள்ளுங்கள். பிஜேபி எப்போது திமுக என்ற சாக்கடையில் சங்கமிக்கிறதோ அன்றே பிஜேபி ஆதரவாளர்கள் வாக்கு அம்மா கட்சிக்கு சென்றுவிடும். காரணம் திமுக மேல் அவ்வளவு வெறுப்பில் மக்கள் உள்ளனர். தொடர்ந்து 14 வருடமாக மத்திய மாநில அரசுகளில் பங்கேற்று திமுக சாதித்தது என்ன ??? அவுங்க சொத்து பட்டியல் ஏறி அடுத்தவன் குழிக்குள் போனது தான் மிச்சம். அரசியலில் யாராவது சந்நியாசி உண்டா....


            பாரதத்தின் நம்பிக்கை நட்சத்திரம் மோடி அவர்களே வருக வருக. கூட்டணி ஆட்சி அமைத்து வரலாறு காணாத வகையில் கூட்டுக்கொள்ளை அடித்த நிலையை தாங்கள் மாற்ற வேண்டும். இந்திய இறையான்மை கேலி கூத்து ஆக்கப்பட்டு இருப்பதை மாற்ற வேண்டும். ஓட்டுக்காக சிறுபான்மை சிறுபான்மை என்று சொல்லியே, சிறு பான்மை பெரும்பான்மை இரண்டையும் ஒரு சேர உருக்குலைத்த செயலை மாற்றி ஆக வேண்டும். இந்தியா நம் தாய் நாடு என்ற உணர்வே இல்லாத சில ஜென்மங்களை திருத்த வேண்டும். மொத்தத்தில் இன்று முதல் புதிய பாரதம் உதயமாக தங்கள் வருகை சிறப்பாக அமையட்டும். வாழ்க பாரதம்.


            ஓட்டுக்காக சிறுபான்மை மக்களுக்கு எல்லாத்தையும் இந்த அரசு அள்ளி கொடுத்துவிட்ட மாதிரி எழுதி இருக்கிறார்.அரசு வேலை வாய்ப்பில் சிறுபான்மையினர் பாதிக்கு மேல் இருப்பார்களா? அல்லது நிறைய சலுகைகள் வழங்கப்பட்டு எல்லா சிறுபான்மயினரும் வசதி வாய்ப்போடு இருக்கிறார்களா? எந்த அர்த்தத்தில் சிறுபான்மையினரை வம்புக்கு இழுக்குறீர்கள். உண்மை நிலை என்னவென்றால் அரசு அமைத்த சச்சார் கமிட்டியின் அறிக்கைபடி பின்தங்கிய வகுப்பாரை விட சிறுபான்மையினர்தான் பொருளாதாரத்தில் பின் தங்கி உள்ளார்கள் என்று கூறுகிறது.குதிரை கீழே தள்ளியதும் இல்லாமல் குழியும் பறித்த கதையாக உள்ளது உங்கள் அறிக்கை..


            10  மோடியை பற்றி தெரியாதவர்களுக்கு அல்லது தெரிந்து கொள்ள விரும்புபவர்களுக்கு ........... எதுவெல்லாம் சாத்தியமோ அதுவெல்லாம் சாத்தியமல்ல என்று தொடர்ந்து இந்தியர்களாகிய நாம் நம்பவைக்கப்பட்டு வருகிறோம். அந்தப் பட்டியல் மிக நீளமானது. குடி தண்ணீர்ப் பிரச்னையைத் தீர்க்க முடியுமா? முடியவே முடியாது நாளுக்கு நாள் மக்கள் தொகை பெருகிக்கொண்டே இருக்கிறதே அதை எப்படித் தீர்க்கமுடியும்? எல்லோருக்கும் 24 மணிநேரமும் தடையில்லா மின்சாரம் கிடைக்குமா? அது எப்படி முடியும்? 


            மின்சாரம் என்ன மரத்திலா விளைகிறது? விவசாயிகள் வாழ்வில் முன்னேற்றம் ஏற்படுமா? சாத்தியமே இல்லை. நதிகளை இணைக்க முடியுமா? நதிகளையாவது, இணைக்கிறதாவது? ஐ.ஏ.ஏஸ், ஐ.பி.எஸ் அதிகாரிகள், குக்கிராமங்களுக்குச் சென்று மக்கள் பிரச்னைகளைத் தீர்ப்பதைப் பார்க்க முடியுமா? அதெல்லாம் நடக்காது. ஏழைப்பாழைகளின் தனிப்பட்ட பிரச்னைகளைத் தீர்க்க முதலமைச்சர் வருவாரா? வாய்ப்பே இல்லை. அரசு அதிகாரிகளிடமிருந்து நமது மின்னஞ்சலுக்குப் பதில் கிடைக்குமா? அதுவும் ஒரே நாளில்? கனவிலும் சாத்தியமில்லை. ஆனால், மேற்குறிப்பிட்ட அனைத்துக் கேள்விகளுக்கும் சாதகமான விடையை நம்மோடு வாழ்ந்துகொண்டிருக்கும் ஓர் இந்தியர் கொடுத்துக்கொண்டிருக்கிறார்.



             ஆறு கோடி மக்களைக் கொண்ட குஜராத் மாநிலத்தை, இந்தியாவின் மாதிரி மாநிலமாக உலகத் தளத்தில் உயர்த்தியுள்ளார். அதுவும் வெறும் 10 ஆண்டுகால ஆட்சியில். புதுப்புது முயற்சிகள் மூலம் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு அம்மாநிலத்தை எல்லாத் துறைகளிலும் முன்னணி மாநிலமாக மாற்றியுள்ளார். நரேந்திர மோடிதான், அந்த சக இந்தியர். மக்களைக் கொண்டே, அவர்களுக்குத் தேவையான முன்னேற்றத்தை அடையச் செய்யும் நரேந்திர மோடி அரசின் சூத்திரங்களை நாம் விரிவாக ஆராயவேண்டியிருக்கிறது. அவை, நமது நம்பிக்கைகளை மீட்டெடுக்க உதவுவதோடு, இந்தியா வளர்ச்சி அடைந்த நாடாக உலகில் ஜொலிப்பது சாத்தியம்தான் என நம்மை நம்ப வைக்கிறது.



             இந்தியாவால் வளர்ச்சி அடைந்த நாடாக முடியுமா, ஏன் இத்தனை வளங்கள் இருந்தும் நாம் தேங்கிக் கிடக்கிறோம், ஊழலில் திளைத்துக்கொண்டிருக்கிறோம், ஏன் நம் மக்கள் ஏழைமையில் உழன்றுகொண்டிருக்கிறார்கள் என்ற வருத்தத்தில் நாம் ஒவ்வொருவரும் இருக்கிறோம்...சரியான தலைவர், தொலைநோக்குள்ள திட்டங்கள், செயல்படுத்தியே தீரவேண்டும் என்கிற வெறி, இவை போதும். ஏனெனில் இவற்றை மட்டும் வைத்துக்கொண்டுதான் நரேந்திர மோடி என்ற சரியான தலைவர், குஜராத்தில் இவற்றைச் செய்துகாட்டியுள்ளார்.



             நரேந்திர மோடி சொல்வதைப் போல், நமது கனவுகள் நம்மைத் தூங்கவிடாமல் செய்யட்டும். வாருங்கள், குஜராத்தில் கடந்த பத்தாண்டுகளில் என்ன நடந்திருக்கிறது என்பதை ஒரு பார்வை பார்ப்போம். குஜராத்தில் 24 மணி நேரமும் தடையில்லாத மின்சாரம் கிடைக்கிறது. இது பத்திரிக்கையில் பணம் கொடுத்துப் போடப்பட்ட விளம்பரம் அல்ல. அரசியல்வாதிகளின் பிதற்றலும் அல்ல. கடந்த பல ஆண்டுகளாகவே குஜராத் மாநிலத்தில் அனைத்து மக்களுக்கும் 24 மணி நேரமும் தடையில்லாத மின்சாரம் வழங்கப்பட்டு வருகிறது.



             அதுவும் மும்முனை மின் இணைப்பு. 2011-ம் ஆண்டுக் கணக்குப்படி குஜராத்தில் மொத்தம் 18,066 கிராமங்கள் உள்ளன. இதில் 18,031 கிராமங்களுக்கு 2006-ம் ஆண்டே மின்சாரம் போய்ச் சேர்ந்துவிட்டது. அதோடு, அவற்றைச் சார்ந்த சுமார் 9,700 குக்கிராமங்களும் மின்சார ஒளியைப் பெற்றுவிட்டன. மீதமுள்ள 35 கிராமங்களுக்கு மட்டும்மின் இணைப்பு வழங்கப்படவில்லை. ஒருவேளை இந்தக் கிராமங்கள் அடர்ந்த காட்டுப் பகுதிகளுக்குள் இருக்கலாம் அல்லது எளிதில் மின் இணைப்பு வழங்க முடியாத பகுதியில் இருக்கலாம்....இது மட்டுமல்ல, அங்கு டிவி, ஃபிரிட்ஜ் போன்றவற்றை வாங்கும்போது யாரும் ஸ்டெபிலைசர்களை வாங்குவதில்லை.




             யூ.பி.எஸ், இன்வெர்ட்டர்கள் போன்றவற்றுக்கு குஜராத்தில் வேலையே இல்லை. இந்தியாவில் உள்ள மற்ற மாநிலங்களில் விவசாயம் செய்ய முடியாமல் பிற தொழிலுக்கு விவசாயிகள் மாறிக்கொண்டுவரும் சூழ்நிலையில் குஜராத்தில் மட்டும் ஆண்டுக்கு ஆண்டு விவசாயத்தின் பரப்பு அதிகமாகிக்கொண்டே போகிறது. இதற்கு முக்கியக் காரணம் அம்மாநில விவசாயிகளுக்குக் கிடைக்கும் தடையில்லாத, தரமான மின்சாரம்....இதே அரசு அதிகாரிகளும் ஊழியர்களும் பல்வேறு முதலமைச்சர்களின்கீழ் வேலை செய்துள்ளனர். ஆனால் கடந்த 10 ஆண்டுகளாக மட்டும் எப்படி அவர்களால் திட்டங்களைத் திட்டமிட்ட சமயத்திலோ அல்லது முன்னதாகவோ முடிக்க முடி கிறது?



             எப்படி அவர்களால் லஞ்சம் வாங்காமல் பணியாற்ற முடிகிறது? எப்படி அவர்களால் கடினமான பணிகளைக்கூட எளிதாக முடிக்க முடிகிறது? எப்படி அவர்களுக்கு, திடீரென்று குஜராத்தை முன்னேற்றியே தீரவேண்டும் என்கிற உறுதி வந்துள்ளது? எப்படிப் புதிய புதிய முயற்சிகளைச் செய்துபார்க்க முடிகிறது? ரிஸ்க் எடுக்கும் தைரியம் எப்படி வந்துள்ளது? எப்படி அவர்களுக்குள், முன்னேறிய நாடுகளுடன் போட்டி போடும் திறன் வந்தது? எப்படி அவர்களுக்கு, அரசு வேலையிலும் சாதிக்க முடியும் என்ற நம்பிக்கை வந்தது? அனைத்துக் கேள்விகளுக்கும் ஒரே பதில், நரேந்திர மோடி என்பவரின் தன்னிகரற்ற தலைமை என்பதுதான். நரேந்திர மோடி குஜராத்தை ஒரு வெற்றிகரமான கார்ப்பரேட் கம்பெனிபோல் நடத்துகிறார் என்று கேள்விப்பட்டிருப்பீர்கள். 



            இது அவரது நுணுக்கமான, திடமான திட்டமிடலைக் குறிப்பிடுவதாகக் கருதலாம்....பொதுவாக எந்தத் திட்டத்தைப் பற்றிப் பேசினாலும், எல்லாருமே, ‘இது நரேந்திர மோடியின் கனவுத் திட்டம். இத்திட்டத்தின் முன்னேற்றத்தை அவர் நேரடியாகக் கண்காணிக்கிறார். இத்திட்டத்தைக் குறிப்பிட்ட தேதிக்குள் முடித்தாகவேண்டும். அதற்குத் தேவைப்படும் எந்த உதவிகளையும் மோடி செய்வார்’ என்பதாகும். ..........இது ஒரு சிறிய தொகுப்பு தான்...இதே போன்று தான் குஜராத்தின் முன்னேற்றத்திற்கான ஒவ்வொரு திட்டமும் செயல் படுத்தப்படுகிறது...


            THANX - DINAMALAR

            Thursday, December 20, 2012

            குஜராத்தில் மோடி கலக்கினார் , தமிழ் நாட்டில் ஜெ கலங்க வைத்தார்

            http://lalitkumar.in/blog/wp-content/uploads/2011/09/narendra_modi.jpgகுஜராத்தில் பா.ஜ. முன்னிலை; 3 வது முறையாக மீண்டும் ஆட்சியமைக்கிறார் மோடி
            Posted Date : 07:33 (20/12/2012)Last updated : 12:33 (20/12/2012)
            அகமதாபாத்: குஜராத் சட்டசபை தேர்தலில் பா.ஜனதா அதிக இடங்களில் முன்னிலையில் உள்ள நிலையில், இமச்சல் பிரதேசத்தில் காங்கிரஸ் கட்சி முன்னிலையில் உள்ளதால், ஆளும் பா.ஜனதா  ஆட்சியை இழக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.



            குஜராத் மற்றும் இமாசலப் பிரதேசத்தில் நடைபெற்ற சட்டசபை தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை இன்று காலை 8 மணிக்கு தொடங்கியது. 

            குஜராத் முன்னணி நிலவரம் 


            பா.ஜ. க  - 115 ( 5 வெற்றி + 110 முன்னிலை)

            காங்கிரஸ்  - 62 ( 3 வெற்றி + 59 முன்னிலை )

            மற்றவை - 6    ( 3  வெற்றி + 3 முன்னிலை )


            குஜராத்தில் மொத்தமுள்ள 182 தொகுதிகளிலும் வாக்கு எண்ணிக்கை துவங்கியதில் இருந்தே பாஜக முன்னிலை பெற்றுள்ளது.


            இதன் மூலம் மோடி தலைமையிலான பாஜக அரசு குஜராத்தில் மீண்டும் ஆட்சியைக் கைப்பற்றுவது உறுதியாகிவிட்டது.


            மோடி வெற்றி 


            மேலும் மணி நகர் தொகுதியில் போட்டியிட்ட நரேந்திர மோடிகு 34,000 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.


            இமாச்சல் முன்னணி நிலவரம்:


            காங்கிரஸ்   - 39  ( 13  வெற்றி +  26 முன்னிலை )

            பா.ஜ.க.  - 24      (  7 வெற்றி + 17 முன்னிலை )

            மற்றவை -  6   ( 1 வெற்றி + 5 முன்னிலை )




            இமாச்சல் சட்டப்பேரவைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி அதிக இடங்களில் முன்னிலையில் உள்ளதால் அக்க்ட்சி ஆட்சியை பிடிக்கிறது.  ஆளும் பா.ஜ. க பின்னடைவை சந்தித்துள்ளது.


            முடிவு குறித்து பேசிய முதல்வர் பி.கே. துமல், மக்களின் முடிவை வரவேற்கிறோம். சட்டமன்றத் தேர்தலில் யாரை ஆட்சியில் அமர வைக்க வேண்டும் என்று மக்கள் விரும்புகிறார்களோ அதை நாங்களும் வரவேற்கிறோம்' என்று தெரிவித்தார்.
            சிம்லா: இமாச்சல் பிரதேசத்தில் நடைபெற்ற சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் கட்சி  அதிக இடங்களில் முன்னிலையில் உள்ள நிலையில்,அக்கட்சி பா.ஜனதாவிடமிருந்து  ஆட்சியை கைப்பற்றி உள்ளது. 

            இமாச்சல பிரதேசம் மாநிலத்தில் பிரேம்குமார் துமல் தலைமையில் பா.ஜனதா ஆட்சியின்  பதவிக்காலம் முடிவடைந்த நிலையில்,கடந்த நவம்பர் மாதம் 4 ஆம் தேதி சட்ட்சபை  தேர்தல் நடந்தது.

            மொத்தம் உள்ள 68 தொகுதிகளிலும் சராசரியாக 74.6 சதவீத வாக்குகள் பதிவாகி  இருந்தது.இந்நிலையில் இன்று காலை 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கை தொடங்கியது. முதலில்  பா.ஜனதா கட்சி அதிக இடங்களில் முன்னிலை பெற்ற போதிலும்,பின்னர் பா.ஜ.க.  வேட்பாளர்களை பின்னுக்குத் தள்ளிவிட்டு, காங்கிரஸ் வேட்பாளர்கள் முன்னிலை  பெற்றனர்.

            இமாச்சல பிரதேசத்தில் தனித்து ஆட்சி அமைக்க வேண்டுமானால் 35 தொகுதிகளில்  வெற்றி பெற வேண்டும்.பகல் 12  மணி அளவில் காங்கிரஸ் கட்சி தனித்து ஆட்சி  அமைக்கும் அளவுக்கு மெஜாரிட்டி பலத்துடன் முன்னிலை பெற்றது.68 தொகுதிகளில், காங்கிரஸ் கட்சி 13 வெற்றி பெற்றும், 26 தொகுதிகளில்  முன்னிலை பெற்றும் காணப்பட்டது.இதனால் இமாச்சல பிரதேசத்தில் காங்கிரஸ் ஆட்சி  அமைக்கிறது.

            பா.ஜனதா 7 இடங்களில் வெற்றி பெற்றும், 17 இடங்களில் முன்னிலை பெற்றும்,  மற்ற கட்சிகள் 1 இடத்தில் வெற்றி பெற்றும், 5 இடங்களில் முன்னிலை பெற்றும்  காணப்பட்டன.


            திடீர் சாலை மறியலுக்கு தடை; குண்டர் சட்டத்திலும் திருத்தம்! 
            Posted Date : 07:42 (20/12/2012)Last updated : 07:42 (20/12/2012)
            சென்னை: பொது அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் வகையில் முதல் முறை குற்றம் செய்பவர்கள் மீதும் குண்டர் சட்டம் பாயும் என்றும், 30 நாளுக்கு முன்பே அனுமதி பெறாமல் நடத்தப்படும் சாலை மறியல் தடை செய்யப்படும் என்றும் ஜெயலலிதா அறிவித்துள்ளார்.  

            சென்னையில் 3 நாள் நடந்த கலெக்டர் மற்றும் போலீஸ் அதிகாரிகள் மாநாட்டை நேற்று முடித்து வைத்து பேசிய முதல்வர் ஜெயலலிதா,இந்த அறிவிப்புகளை வெளியிட்டார்.

            அவர் பேசுகையில்,"குண்டர் சட்டத்தில் திருத்தம் மேற்கொள்ளப்படும்.குற்றங்களைச் செய்வதையே வழக்கமாகக் கொண்டிருப்பவர்கள், பொது அமைதியைக் குலைக்கும் வகையில் ஏதேனும் ஒரு குற்றச் செயலை முதல் முறையாகச் செய்தாலே அவர்கள் குண்டர் சட்டத்ததின் கீழ் கைது செய்யப்படுவர்.

            மேலும், சைபர் குற்றங்களைப் புரிவோரும் குண்டர் சட்டத்தின் கீழ் கொண்டு வரப்படுவர்.குண்டர் சட்டங்களுக்கான ஆவணங்களை தயாரிப்பதற்கென வழங்கப்படும் தொகையும் ரூ.3 ஆயிரத்தில் இருந்து ரூ.8 ஆயிரமாக அதிகரிக்கப்படும்.

            சாலை மறியலுக்கு 30 நாளுக்கு முன்பே அனுமதி பெற வேண்டும்.அப்படி பெறாமல் நடத்தப்படும் மறியல் தடை செய்யப்படும்" என்றார்.


            புதிய திட்டங்கள் 
            மேலும் ஒவ்வொரு மாவட்டத்துக்கும் பல்வேறு புதிய திட்டங்களையும் அவர் வெளியிட்டார்.

            டெல்டா மாவட்டமான திருவாரூர் மாவட்டத்தில் நிலத்தடி நீரை பாதுகாக்கும் வகையில் ரூ.20 கோடியில் 4 ஆயிரம் இடங்களில் நிலத்தடி நீர் செறிவு துளைகள் அமைக்கப்படும். மேலும், முத்துப்பேட்டை சூழலியல் சுற்றுலா மையமாக மேம்படுத்தப்படும்.

            இலவச கறவை மாடுகள் வழங்கும் திட்டத்தில் பயன் பெறுவோருக்கு அதன் பராமரிப்புகள் குறித்து இப்போது ஒரு நாள் மட்டுமே பயிற்சி  அளிக்கப்படுகிறது. இனி, மூன்று நாட்கள் பயிற்சி கொடுக்கப்படும். கரூர் அரசு மருத்துவமனையானது, மருத்துவக் கல்லூரி மருத்துவமனையாகவும், ராமநாதபுரம் மாவட்டத் தலைமை மருத்துவமனை, மருத்துவக் கல்லூரி மருத்துவமனையாகவும் தரம் உயர்த்தப்படும்.

            உதகையில் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையும், ராமநாதபுரம் மாவட்டம் ஏர்வாடியில் மனநல மருத்துவமனையும் ஏற்படுத்தப்படும்.

            பெரம்பலூர் மற்றும் திருவண்ணாமலை மாவட்டங்களில் தனியாக நெடுஞ்சாலைகள் கோட்டம் உருவாக்கப்படும். கரூர் மாவட்டத்தில் சாயக்கழிவு பிரிவுகளை உள்ளடக்கிய பூங்காக்களை அமைப்பதற்கு கடன் மற்றும் மானிய உதவிகள் வழங்கப்படும். குளங்களை ஆழப்படுத்தும் பணிகள் தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின் கீழ், ஒரு மீட்டர் வரை மேற்கொள்ளப்பட்டன.

            அவற்றை மேலும் ஆழப்படுத்தும் பணிகள் தமிழக அரசின் வேளாண் பொறியியல் துறை மூலம் செயல்படுத்தப்படும்.

            விருதுநகர் மாவட்டம் சிவகாசி, தருமபுரி மாவட்ட கிரிமங்கலம், தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி அமைக்கப்படும். ராமநாதபுரம் மாவட்டம் கடலாடி, முதுகுளத்தூர், திருவாடானை ஆகிய இடங்களில் இருபாலர் கல்லூரிகள் தொடங்கப்படும். அங்கு சூரிய மின்சக்தி பூங்காவும், மிகப்பெரிய மின் உற்பத்தித் திட்டமும், மீன்களைப் பதப்படுத்தும் பூங்காக்களும் அமைக்கப்படும்.

            தருமபுரிக்கு கூடுதல் கவனம்: இனக் கலவரங்களால் பாதிக்கப்படும் தருமபுரி மாவட்டத்துக்கு கூடுதல் கவனம் செலுத்தப்பட்டுள்ளது. அந்த மாவட்டத்தில் நக்சல் பாதிப்புகள் அதிகமுள்ள 32 கிராமங்களில் மேம்பாட்டுப் பணிகளை மேற்கொள்வதற்கான நிதி ரூ.7 கோடியில் இருந்து ரூ.20 கோடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது.

            மாவட்ட ஆட்சியர்கள் மாதமொரு முறை ஆய்வுக் கூட்டம் நடத்த வேண்டும்: திட்டங்கள் செயல்படுத்துவதைக் கண்காணிக்க மாதத்துக்கு ஒருமுறையாவது மூத்த அதிகாரிகள் கள ஆய்வை மேற்கொள்ள வேண்டும்.

            மாதத்துக்கு ஒருமுறை மாவட்ட ஆட்சியர் தலைமையில் நடக்கும் ஆய்வுக் கூட்டம் இப்போது ஏறத்தாழ நடைபெறுவதே இல்லை என்ற நிலை உள்ளது. இதை மாற்றி ஒவ்வொரு மாதமும் துறைத் தலைவர்கள் அடங்கிய ஆய்வுக் கூட்டத்தை மாவட்ட ஆட்சியர்கள் நடத்த வேண்டும்.

            அனைத்துச் சிறைச்சாலைகளிலும் விடியோ கான்ஃபரன்ஸ் வசதி

            தமிழகத்தில் உள்ள அனைத்துச் சிறைச்சாலைகளிலும் விடியோ கான்பரன்ஸ் வசதி ஏற்படுத்தப்படும்.

            விடியோ கான்பரன்ஸ் வசதியை புதிதாக 60 இடங்களில் ஏற்படுத்துவதோடு, ஏற்கெனவே 11 இடங்களில் உள்ள அமைப்புகளும் புதுப்பிக்கப்படும்.

            புழல் சிறையில் ரூ.3 கோடியில் சூரிய மின்சக்தி அமைப்பு அமைக்கப்படும். அதேபோல், புழல், வேலூர், கடலூர், சேலம் ஆகிய மத்திய சிறைகளில் ரூ.25 லட்சத்தில் பைகளை சோதனையிடும் ஸ்கேனர்கள் பொருத்தப்படும் என்றார்.
            நன்றி - விகடன் 


            மக்கள் கருத்து 

            1. உடன்பிறப்பே, ஒரு மதவாத கட்சி குஜராத்தில் ஐந்தாவது முறையாக தொடர்ந்து வெற்றி பெற்றதில் எனக்கு சொல்லொண்ணா மகிழ்ச்சி .... திரு. மோடி என் நெடுங்கால நண்பர் ... அவர் தொடர்ந்து மூன்றாவது முறை வெற்றி பெற்றது கேட்டு இதயம் இனிக்கிறது ... கண்கள் பனிக்கிறது .... இப்படி நடக்கபோவதை நான் கடந்த சில நாட்களுக்கு முன்பு நடந்த திமுக செயற்குழு கூட்டத்திலேயே கணித்து கூறினேன் ... நேற்று இரவே நான் நண்பர் மோடியிடம் தொலைபேசியில் என் வாழ்த்துக்களை முன்னதாகவே தெரிவித்துவிட்டேன் .... அவரும் நன்றி தெரிவித்தார் ... எங்கள் இளமைக்கால நினைவுகளை பகிர்ந்து கொண்டோம் .... மோடியின் அப்பாவும் நானும் "காந்தியின் உப்பு சத்தியாக்ரகம்" தண்டியில் நடந்தபோது சந்தித்து அளவலாவியதை நினைவு கூர்ந்தார் .
            .. வழியில் ஒரு உடுப்பி ஓட்டலில் 2 இட்லி 1 மசால் வடை நான் மோடியின் அப்பாவுக்கு கடனாக வாங்கி கொடுத்ததையும் அதை ஒரு இத்தாலிய வெள்ளை காகம் பறித்து சென்றதையும் அன்னாருக்கு நான் நினைவுபடுத்தினேன் ... இன்னும் சொல்லப்போனால் 2014 தேர்தலில் அவர் தான் பிஜேபியின் பிரதமர் வேட்ப்பாளராக நிற்க வேண்டும் என்ற என் அவாவை அவரிடம் தெரிவித்தேன் ..... அவர் மிகவும் சந்தோஷப்பட்டார் .... மேற்படி சம்பவங்கள் மோடி என் நீண்ட நாள் நண்பர் என்ற முறையில் நடைபெற்றனவே அன்றி நாம் ஒரு போதும் மதவாத கட்சிகளுடன் கூட்டணி வைக்க அல்ல என்பதை தம்பிக்கு இக்கடிதம் மூலம் நான் தெரிவித்து கொள்கிறேன். -
            எஸ். மணி - ஸ்ரீபெரும்புதூர் ,இந்தியா
            2.  முதலில் கீழ் கண்ட புள்ளிவிவரங்களை காணுங்கள், பிறகு குஜராத்தில் மோடியின் வெற்றி எப்படிபட்டது என்பதை அறிந்து கொள்ளலாம். (1) எல்லா அரசுக்கும் உரிய ANTI -INCUMBENT எதிர்ப்பு வாக்குகளை மீறி மூன்றாவது முறையாக மோடி வெற்றி கோடி நாட்டியது. தொடர்ந்து மூன்று முறையும் 1995 இல் இருந்து பிஜேபி ஆட்சிசெய்து வருவதும் சாதாரண விஷயம் இல்லை. ஜோதி பாசு தான் இதற்கு முன் தொடர்ந்து ஜெயித்து வந்தார். அதனை பாராட்டியே ஆகா வேண்டும் (2) இது நம்ம ரத்த காட்டேரிக்கு. தேர்தல் நிலவரங்களை கவனிக்கும் போது (குறிப்பாக TIMES NOW TV LIVE COVERAGE ) பெரு வாரியான முஸ்லிம்கள் மோடிக்கு (பிஜேபி) வாக்களித்திருக்கிறார்கள். முஸ்லிம்கள் அதிகமாக குடியிருக்கும் இடங்களிலும் கோத்ரா கலவரம் நடந்த இடத்திலும் பிஜேபி வென்றுள்ளது. மேலும் காங்கிரசின் ஆதிவாசிகள் வாக்குகளை இந்த முறை மோடி சுரண்டிவிட்டார். 
            இதன் மூலம் என்ன தெரிகிறதென்றால் முஸ்லிம்களும் ஆதிவாசிகளும் வளர்ச்சிக்கு வோட்டளித்து மதவெறி, சாதிவெறிக்கு முற்றுபுள்ளி வைத்துள்ளார்கள். (3) 2007 தேர்தலை விட இந்த தேர்தலில் பிஜேபி யின் வாக்கு சதவிகிதம் 1.5% அதிகம். காங்கிரசுக்கும் பிஜேபிகும் வித்யாசம் 13%. பிஜேபி யின் வாக்கு சதவிகிதம் மட்டும் 50% மேல். இது ஒரு மிக பெரிய வெற்றி. ஏனென்றால் கேசு பாய் படேலும் பிஜேபி யின் வாக்குகளை சற்று ருசித்தார். (4) காங்கிரஸ் தன்னுடைய புராதன ஸ்ட்ராங் ஹோல்டான மத்திய குஜராத்தை தற்போது பிஜேபி இடம் இழந்துள்ளது. 
            ஆனந்த ரீஜனில் சங்கர் சிங் வகேலா போட்டி இடுவதால் சற்று அந்த ரீஜனில் தலை தூக்கியுள்ளது. (5) பிஜேபி தன்னுடைய ஸ்ட்ராங் ஹோல்டான நகரங்களை மீண்டும் தக்க வைத்துள்ளது. தெற்கு குஜராத்தில் இருந்து வடக்கு குஜராத் வரையிலான எல்லா நகரங்களையும் அது தக்க வைத்துள்ளது. எண்ணிக்கையில் காங்கிரஸ் சற்று முன்னேறினாலும் உண்மையில் இது வெற்றி இல்லை. 
            3.பல மாநில முதல்வர்கள் செய்ய முடியாத சாதனையை மோடி அவர்கள் செய்துள்ளார். மூன்றாவது முறை அவர் வெற்றி பெறுவது இந்தியாவில் முதல் முறை நடக்கும் நிகழ்வு அல்ல. ஆனால்,அவரது வெற்றியை குறைத்து மதிப்பிடும் முயற்சியை இப்போதே பல ஊடகங்கள் துவங்கி விட்டன. கிட்டத்தட்ட மூன்றில் இரண்டு என்ற அளவில் வெற்றி பெறுகிறார். 
            ஆனாலும், அவர் தோல்வி அடைந்தது போலவே இப்போது பேசக் கிளம்பி விட்டனர். மத்திய அரசு தனக்குத் தேவையான குறைந்த பட்சப் பெரும்பான்மை இல்லாமல், சில பல கட்சிகளை வெளிநடப்பு செய்ய வைத்து, மசோதாக்களை நிறைவேற்றுகிறார்கள். அப்படிப்பட்ட மத்திய அரசின் அல்லக்கை ஊடகங்கள் பா.ஜ.க.வின் வெற்றியை தோல்வியாக சித்தரிக்க முயல்வது கண்டிக்கத் தக்கது. வெற்றி எப்போதும் வெற்றிதான். அதில் மோடிக்கு மட்டும் தனி அளவுகோலா? ஹிமாச்சலில் பா.ஜ.க. தோல்வி வருத்தம் அளிக்கிறது. அங்கு, முதல்வராக வர இருப்பவர் மீது பல ஊழல் புகார்கள். நிலக்கரி ஊழலில் அவர் பெயர் அடிபடுகிறது. ஆகவே, முதல்வராக வர தகுதியானவர். 
            4. இது Brand அம்பாசிடர் " மோடி " என்ற பெயருக்கு கிடைத்த தனிப்பட்ட வெற்றி... இங்கே மோடி தான் வெற்றி பெற வேண்டும்.. அதுதான் நடந்திருக்கிறது.. நன்றி... ஆனால் பிஜேபி க்கு எந்தவித லாபமும் தனிப்பட்ட முறையில் இல்லை ( மோடியின் லாபம் BJP இன் லாபம் குஜராத்தில் மட்டுமே ), BJP யின் செல்வாக்கு எந்த விதத்திலும் உயரவில்லை என்பதும் ஹிமாச்சல் முடிவுகளில் இருந்து தெரிகிறது, காங்கிரஸ் ஜெயிப்பது நல்லதில்லை என்பது எனது எண்ணம். அதே சமயத்தில்... 
            பிரதமர் வேட்பாளராக மோடியை " Project " செய்தால் ஓரளவுக்கு பயன்தரலாம்... ஆனால் பெருமளவு பயன்தருமா என்று தெரியவில்லை.. எனினும்.. இப்போதே.. இந்த வெற்றியின் சூடோடு சூடாக.. இவரை அறிவித்தால் ஓரளவுக்கு... வாக்குகளை கவரமுடியும்..காங்கின் இலவச மாய வலையிலிருந்து ஓரளவுக்காவது மீட்க முடியும். இல்லை என்றால் பழைய குடுடி கதவை திறடி என்ற கதையாக.. மாநில கட்சிகளின் கலவையாக.. காங்கிரஸ் கட்சியே மீண்டும் அரியணை ஏறும்.. தம்பி ராகுல் தலைமையில்... அன்னை சோனியாவின் ஆசியோடும். அன்னம் ப சி இன் ஆலோசனையோடும்... ஆட்சியில் அமர்ந்து.. நாடு உருப்படாமல் போகும். 
            5. இந்த இரு மாநிலங்களின் தேர்தல் ஒரு விசயத்தை உறுதிபடுத்துகிறது, மக்கள் 2ஜி ஊழலை திமுகவின் ஊழலாக பார்க்கிறார்கள். அதனால் தான் தமிழகத்தில் திமுக காங்கிரஸ் தோல்வியும் ஹிமாசப் பிரதேச மக்கள் காங்கிரஸ் கட்சிக்கு ஆட்சியும் குஜராத்தில் காங்கிரஸ் கட்சிக்கு கடந்த தேர்தலை விட இந்த தேர்தலில் அதிக வாக்குகளும் அதிக சீட்டும் கொடுத்துள்ளனர். இத்தனை ஊழலுக்கு மத்தியிலும் காங்கிரஸ் கட்சியின் வாக்கு கூடுகிறது என்றால் அது ஆச்சரியமான விசயமே வரும் பாராளுமன்ற தேர்தலிலும் இந்த நிலை தொடரும் என்றே நினைக்கிறேன்..
            . தமிழகத்தை பொருத்த வரையில் திமுக காங்கிரஸ் தேமுதிக கூட்டனி மிக வலுவான கூட்டனி. அதிமுக கூட்டனி இல்லாமல் தனித்து நின்றால் நிச்சயம் தோல்வி வரும். அதனால் அதிமுக பிஜேபியோடு கூட்டனி வைத்து தேர்தலில் நின்றால் அது வலுவான கூட்டனியாக இருக்கும். பாராளுமன்ற தேர்தலை பொருத்தவரையில் தமிழக மக்கள் தேசிய கட்சிகளுக்கு தான் முக்கியத்துவம் கொடுப்பார்கள், மாநில கட்சிகளுக்கு அல்ல. தமிழகத்தில் அம்மாவின் ஆட்சி எனக்கு பிடித்துள்ளது, சென்ற ஆட்சியை விட நிச்சயம் அம்மாவின் ஆட்சி நன்றாகவே உள்ளது.... 
            இரண்டு விசயம் தான் உறுத்தலாக உள்ளது. விடுதலை புலி ஆதரவாளர்களின் செயல்பாடுகளை தடுக்காமல் இருப்பது மற்றும் கூடங்குளம் ஆர்ப்பாட்டகாரர்கள் மீது நடவடிக்கை எடுக்காமல் இருப்பது. திரு. நரேந்திர மோடி அவர்களின் சிறந்த ஆட்சிக்கு கிடைத்த வெற்றி இது, என் மனமார்ந்த வாழ்த்துகள்... 
            6. குஜராத் தேர்தலை பொறுத்தவரை காங்கிரஸ் அந்த மாநிலத்தேர்தலை காங்கிரஸ் பிஜேபி கட்சிகளுக்கிடையேயான தேர்தலாகவோ அல்லது குஜராத் மக்களுக்கு நன்மை அதிகமாக யார் செய்வது என்றோ அணுகவில்லை. காங்கிரஸ் கட்சியில் இருந்து யார் அதிகம் மோடி என்ற தனி மனிதரைத்தூற்ற முடியும் என்று பட்டி மன்றம் தான் நடத்தியது. இதற்கு ராகுல் காந்தி சிறப்பு தலைவராக சொக்கவைக்கும் சோனியாவால் நிர்ணயிக்கப்பட்டார். தேர்தல் முடிவுகளின்படி பிஜேபிக்கு வெற்றியா அல்லது திரு. நரேந்திர மோடிக்கு வெற்றியா என்பதைவிட சோனியா மற்றும் ராகுல் கம்பெனிக்கு வெட்கக்கேடான தோல்வி என்பதை ஒப்புக்கொள்ளத்தான் வேண்டும். 
             தேர்தல் நேரத்தில் மானிய விலை சிலிண்டர்கள் எண்ணிக்கை அதிகரிப்பு அறிவிப்பு, (ஓட்டுக்காக) பணம் நேரடியாக வங்கியில் டெபாசிட் ஆகியவை எதுவும் எடுபடவில்லை. யாருய்யா அங்கே, நான் தினமலரு அன்வர் பாய் கூட போன்ல பேசிகிட்டு இருக்கும்போது குறுக்கால, நரேந்திர மோடி எனது ஐம்பதாண்டு கால நண்பர் வெற்றி பெறுவார் என்பதில் ஐயமே இல்லை, என் கண்களில் ஆனந்தக்கண்ணீர் வாருதுன்னு கோபாலபுரத்துலேந்து பேசறது.? 
            நன்றி - விகடன் , தினமலர்


            Gujarat voted for development and Narendra Modi's leadership: Nitin Gadkari



            New DelhiBJP president Nitin Gadkari today thanked the people of Gujarat for voting the party back to power.

            He said it was a vote for "development and Mr Modi's leadership."

            "The Congress tried to play the communal card but failed. Gujarat will continue to flourish under the leadership of Narendra Modi. I thank the people who have voted for BJP again. I also congratulate the party workers," the BJP president said

            "People have voted for the BJP for the fifth time and Narendra bhai's leadership for a 3rd time," he added.

            Narendra Modi will be Chief Minister of Gujarat for a third straight term. Projections based on leads at 01.30 pm show Mr Modi likely to end the day at 123 seats, six  more than last time and enough to make his party state that his "vibrant Gujarat" plank worked despite the Congress' best effort to discredit him.
             
             
            THANX - NDTV