Showing posts with label மோசடி. Show all posts
Showing posts with label மோசடி. Show all posts

Sunday, September 02, 2012

நீர் மின்சக்தி திட்ட ஒதுக்கீட்டில் முறைகேடு அம்பலம்!

நீர் மின்சக்தி திட்ட ஒதுக்கீட்டிலும் முறைகேடு அம்பலம்! 

Posted Date : 10:34 (01/09/2012)Last updated : 10:36 (01/09/2012)


 நிலக்கரி சுரங்க ஒதுக்கீட்டை தொடர்ந்து, நீர் மின்சக்தி திட்டங்களை  ஒதுக்கீடு செய்ததிலும் முறைகேடு நடைபெற்றிருப்பது, தலைமை கணக்கு தணிக்கையாளர்  (சி.ஏ.ஜி.)அறிக்கையில் அம்பலப்படுத்தப்பட்டுள்ளது.

நிலக்கரி சுரங்கங்களை ஏலம்விடாமல், நியமன முறையில் ஒதுக்கீடு செய்ததால்  அரசுக்கு ரூ.1.86 லட்சம் கோடி இழப்பு ஏற்பட்டதாக ஏற்கனவே தாக்கல் செய்யப்பட்ட  தலைமை கணக்கு தணிக்கையாளரின் அறிக்கையில் கூறப்பட்டிருந்தது. 


இந்த விவகாரத்தினால் ஏற்பட்ட அமளி ஓய்வதற்குள் மற்றொரு முறைகேட்டையும்  சி.ஏ.ஜி. அறிக்கை அம்பலப்படுத்தி உள்ளது.

மத்திய அரசுக்கு சொந்தமான பொதுத்துறை நிறுவனங்களில் நீர் மின்சக்தி ஆற்றல்  விரிவாக்கம் செய்வது தொடர்பான தலைமை கணக்கு தணிக்கையாளரின் அறிக்கை,  நாடாளுமன்றத்தில் நேற்று தாக்கல் செய்யப்பட்டது.

இந்த அறிக்கையில்,"மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனங்கள் 2007-12  காலக்கட்டத்தில் 11 ஆயிரத்து 813 மெகாவாட் மின்சாரத்துக்கு அதிகமாக கூடுதல்  மின்உற்பத்தி செய்ய வேண்டும் என்று முதலில் இலக்கு நிர்ணயிக்கப்பட்டிருந்தது.

ஆனால் நீர் மின் திட்டங்களை நிறைவேற்றுவதில் ஏற்பட்ட தவறான கணக்கீடு மற்றும்  தவறான திட்டமிடல் காரணமாக இலக்கினை அடைய முடியாமல் போய் விட்டது.

மாநில அரசுகளுடன் கலந்தாலோசனை செய்யாமல், பொதுத்துறை நிறுவனங்கள் தங்கள்  திட்டங்களை தீட்டி உள்ளனர். அதனால் திட்டமிட்டபடி உரிய பலனை அடைய  முடியவில்லை. இதனால் 11 ஆயிரத்து 813 மெகாவாட் நீர் மின்சக்தி உற்பத்தி செய்ய  வேண்டும் என்ற இலக்குக்கு பதிலாக 6 ஆயிரத்து 794 மெகாவாட் மின்சார உற்பத்தி  என்கிற அளவுக்கு இலக்கு குறைக்கப்பட்டுள்ளது.

முதலில் நிர்ணயித்ததைவிட 42 சதவீதம் குறைத்து, மாற்றியமைக்கப்பட்ட  இலக்கையாவது அடைய முடிந்ததால் என்றால் அதையும் சாதிக்க முடியவில்லை.

நீர் மின்சக்தி உற்பத்தி விரிவாக்கத்துக்கான சுற்றுச்சூழல் ஒப்புதலை அளிக்க, ஆய்வு  நடத்துவதற்கு தேசிய நீர்மின் கழகம் 49 மாதங்கள் எடுத்துக்கொண்டுள்ளது. இது  மட்டுமல்ல, ஆய்வு அறிக்கையை சுற்றுச்சூழல் அமைச்சகத்துக்கு அனுப்பி வைப்பதில்  மேலும் 11 மாதங்கள் தாமதம் ஏற்பட்டுள்ளது.

பிரதமர் அலுவலகத்தில் இருந்து குறித்த அறிவுரைகள் வந்த பின்னரும், அருணாச்சல  பிரதேசத்தில்,பிரம்மபுத்ரா படுகையில்,சியாங்க்,சுபான்சிரி பன்னோக்கு திட்டங்களை  சர்வே செய்து,ஆராய்ந்து அறிந்து,செயல்படுத்துவதற்கான சிறப்பு நோக்க அமைப்பினை   மத்திய மின்துறை அமைக்கவே இல்லை.

தேசிய நீர்மின் கழகம் முதலில் 6 திட்டங்களை செயல்படுத்த மத்திய அரசு ஒதுக்கீடு  செய்துள்ளது.அவற்றில் 2 திட்டங்களை குறைந்த எண்ணிக்கையிலான டெண்டர்களைப்  பெற்று,அருணாச்சல பிரதேசத்தில் தனியார் நிறுவனங்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.  இரண்டு திட்டங்களை தேசிய நீர்மின் கழகம் தனது சொந்த கூட்டு நிறுவனத்துக்கு  எடுத்துக்கொண்டுள்ளது.ஒரு திட்டம் தேசிய அனல்மின் கழகத்துக்கு தரப்பட்டுள்ளது.

அந்த வகையில், நீர் மின்சக்தி திட்டங்களை ஒதுக்கீடு செய்வதில்,ஒளிவுமறைவற்ற  தன்மை பின்பற்றப்பட வேண்டும்,போட்டியை ஏற்படுத்த வேண்டும் என்ற இந்திய அரசின்  நீர்மின் கொள்கைகள் கடைப்பிடிக்கப்படவில்லை.

மத்திய மின்துறையின் சிறப்பு நோக்க அமைப்பிடமிருந்து தேசிய நீர்மின் கழகத்துக்கும்,  தனியார் நிறுவனங்களுக்கும்,கூட்டு நிறுவனங்களுக்கும்,தேசிய அனல்மின் கழகத்துக்கும்  ஜனவரி 1999-ம் ஆண்டு 5 நீர்மின் திட்டங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன.12 வருடங்கள்  கடந்த நிலையிலும்,அவை மின்உற்பத்தியைத் தொடங்கவில்லை.

சத்யம் ராமலிங்க ராஜுவின் மாய்டாஸ் நடத்துகிற எச்ஐவி நிறுவனத்துக்கு, ஏல ஆவண  விற்பனையை முடிவுக்கு கொண்டுவந்த பின்னரும் சலுகை காட்டப்பட்டுள்ளது.

நீர்மின் திட்டங்களை நிறைவேற்றுவதில் ஏற்பட்ட தாமதம்,திட்டச்செலவு அதிகரிக்க  காரணமாகி உள்ளது.

4 பொதுத்துறை நிறுவனங்களின் 16 நீர்மின் திட்டங்களை அமல்படுத்துவதற்கு  அனுமதிக்கப்பட்ட ரூ.30 ஆயிரத்து 5 கோடி என்ற அளவிலான திட்டச்செலவினம்  ரூ.44 ஆயிரத்து 712 கோடியாக அதிகரித்துள்ளது. முடிவு அடைந்துள்ள 7  திட்டங்களில்,திட்டச்செலவினம் 53 சதவீதத்தில் இருந்து 148 சதவீதம் வரை  அதிகரித்துள்ளது” என்று கூறப்பட்டுள்ளது. 
நன்றி - விகடன்

கும்பகோணம் -கோயில் சொத்துக்கள் கோடிக்கணக்கில் மோசடி

ஒப்பிலியப்பன் நகை அரோகரா!


காரணமானவர்களைக் காப்பாற்றுகிறார்களா?

பலே திருட்டு அம்பலம்


ஒரு கோயில் கொள்ளை மெதுவாக மறக்கப்பட்டது. இப்​போது மறைக்கப்படும் கொடுமை நடப்​பதாகச் செய்திகள் வருகின்றன!


108 வைணவத் திருத்தலங்களில் புகழ்பெற்றது கும்பகோணம் அருகே உள்ள ஒப்பிலியப்பன் கோயில். தொன்​மையான இந்தக் கோயில் நகைகளைப் பாதுகாக்க வேண்டிய அதிகாரிகளே, மோசடி செய்திருப்பதுதான் திடுக்.



கடந்த 2008-ம் ஆண்டு பெருமாள் மற்றும் தாயாருக்கு இருப்பதுபோலவே மார்க்கண்டேயருக்கும் தங்கக் கவசம் செய்ய முடிவெடுத்தார்கள். அதற்காக கோயில் இருப்பில் இருந்த நகைகளோடு பாரம்பரியம் மிக்க அரிய வகையான தங்க, வைர நகைகளையும் சேர்த்து உருக்கி தங்கக் கட்டிகளாக மாற்றியதாகக் கணக்குக் காட்டினார்கள். 


அதில் தில்லுமுல்லு நடந்திருப்​பதாக அப்போது புகார் கிளம்பியது. விவகாரத்தில் சம்பந்தப்பட்ட கோயில் செயல் அலுவலர் விஜயகுமார், நகைகள் சரிபார்ப்புப் பிரிவின் மயிலாடுதுறை துணை ஆணையர் இளம்பரிதி, திருப் பணிகள் பிரிவின் சென்னை இணை ஆணையர் திருமதி ஹரிப்பிரியா ஆகியோர் மீது இப்போது, துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்பட்டு இருக்கிறது.



எப்படி ஊழல் நடந்தது என்று அறநிலையத் துறை அதிகாரிகளிடம் பேசினோம். ''மார்க்கண்டேயருக்குத் தங்கக்கவசம் செய்ய அறங்காவலர் குழு முடிவு செய்ததும், அதற்காகக் கோயிலில் இருக்கும் தேவை இல்லாத நகைகளை பயன்படுத்திக்கொள்ளலாம் என்று திட்டமிட்டனர். அதில்தான் தங்கள் கைவரி சையைக் காட்டிவிட்டனர்.

 தேவைஇல்லாத நகைகளோடு பெருமாளின் நித்யபடிக்கு என்று வைத்திருந்த அரிய, பழைமையான நகைகளையும் அதில் சேர்த்துவிட்டனர். இரட்டைவடச் சங்கிலி, பொன்சங்கிலி, ஒற்றைவட வரிமணிமாலை, திருமாங்கல்யம் குண்டு, சரடு, பொன் அரசலங்கை, மாங்கா மாலை, காசுமாலை, செண்பகப் பூ மாலை, பொன்லட்சுமி டாலர் ஆகிய மிக முக்கியமான திருவாபரணங்கள் அதில் சேர்க்கப்பட்டு வீணடிக்கப்பட்டன.



அடுத்து, அழுக்கு அரக்கு நீக்கி சுத்தம் செய்வதில் பெரும் ஊழல் செய்திருக்கிறார்கள். அதாவது, மொத்தம் உள்ள 7,191 கிராம் பொன்னை அழுக்கு அரக்கு நீக்கிய பின் 6,191 கிராம்தான் இருந்ததாக ஆவணப்படுத்தி உள்ளார்கள். ஒரு கிலோ தங்கம் இழப்பாகக் காட்டி இருக்கிறார்கள். அடுத்து, நகைகளில் இருந்து எடுக்கப்பட்ட கற்களிலும் மோசடி செய்தனர். அந்த நகைகளில் இருந்து எடுக்கப்பட்ட முத்து, வைரம் போன்ற விலை மதிப்புள்ள 1,895 கற்களையும் தரவாரி​யாகப் பிரித்து வகைப்படுத்தாமல் மொத்தமாகப் பதிவு செய்திருக்கிறார்கள்.

 அதில் விலை மதிப்புள்ள கற்கள் அனைத்தும் மாற்றப்பட்டு அதற்குப் பதிலாக போலியான தரம் குறைந்த கற்களை வைத்திருப்பதாக சந்தேகப்படுகிறோம். அடுத்து உருக்குவதற்​காக மும்பை எடுத்துச் சென்றதாக பதிவேட்டில் குறிப்பிடப்பட்டு இருப்பது 7,251 கிராம் பொன். ஆனால் எடுத்துச்சென்றதோ 7,295 கிராம். ஆக அதில் 44 கிராம் தங்கத்தை மோசடி செய்திருக்கிறார்கள்.



அதேபோன்று ஆணையருக்கு அனுப்பி வைத்த நகைகள் பட்டியலில் இல்லாத 13.300 கிராம் எடையுள்ள வைரக்கற்கள் பதித்த பதக்கத்தையும் எடுத்துச் சென்று உருக்கியதாகக் கணக்குக் காட்டி இருக்​கிறார்கள். அதற்கான அனுமதியைப் பின் தேதியிட்டு வாங்கி இருக்கிறார்கள். இவை எல்லாமே மயிலாடுதுறை நகைகள் சரிபார்ப்புத் துணை ஆணையர் இளம்பரிதிக்கும் சென்னை இணை ஆணையர் (திருப்பணி) ஹரிப்பிரியாவுக்கும் தெரிந்தே நடந்திருக்கிறது. அதனால் மூவர் மீதும் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது'' என்று விவரித்தார்கள் அறநிலையத் துறை அதிகாரிகள்.



செயல் அலுவலர் விஜயகுமார் மீது மொத்தம் 16 வகை குற்றச்சாட்டுகளும், துணை ஆணையர் இளம்பரிதி மீது 8 குற்றச்சாட்டுகளும், இணை ஆணையர் ஹரிப்பிரியா மீது 11 குற்றச்சாட்டுகளும், சென்னையில் உள்ள இந்து சமய அறநிலைய ஆட்சித் துறை அலுவலகம் பதிவு செய்துள்ளது. 2008-ல் நடந்த இந்த மோசடி குறித்து 2011 மே மாதம் தான் விஷயம் தெரிந்து விசாரணை நடைபெற்றது. விஜயகுமார் மாறுதல் செய்யப்பட்டு செந்தில்குமார் என்பவர் அதிகாரியாக வந்த பிறகுதான், இதைக் கண்டுபிடித்து உயர் அதிகாரிகளுக்குத் தெரிவித்து இருக்கிறார். அவர் சொல்லும் புகாரில் உண்மை இருக்கிறதா என்பதை ஜே.சி.கல்யாணி என்ற நகை சரிபார்ப்பு அதிகாரியை அனுப்பி உறுதிசெய்துகொண்ட பின்னர்தான் நடவடிக்கைகள் தொடங்கின.



இத்தகைய சூழ்நிலையில் நடவடிக்கை எடுக்கப்​பட்​டவர்களை மீண்டும் பணியில் சேர்ப்பதற்கான காரியத்தை சிலர் தொடங்கி இருக்கிறார்களாம். இது சம்பந்தமாக இந்து சமய அறநிலையத் துறைச் செயலாளர் ராஜாராமை சந்தித்து நாம் விளக்கம் கேட்​டோம். 'இதுபற்றி முழுமையாகத் தெரிந்தவர் இணை கமிஷனர் தனபால்தான். அவரிடம் கேளுங்கள்’ என்றார். தனபாலிடம் இதுதொடர்பாகக் கேட்டுக் காத் திருந்தோம். இரண்டு வாரங்களாக எந்தப் பதிலும் இல்லை.



கோடிக்கணக்கான மதிப்புள்ள கோயில் சொத்துக்கள் எத்தகைய அலட்சிய மனிதர்​களிடம் மாட்டிக்கொண்டு இருக்கிறது என் பதைப் பாருங்கள்!




நன்றி - ஜூ வி

Wednesday, August 29, 2012

ஈரோடு , சேலம் மாவட்ட மக்களே! உஷார் ! புதிய மோசடிகள் உலா

'ஈமு, நாட்டுக் கோழியைத் தொடர்ந்து அகர் மரம்



ஈமு கோழியை வைத்து ஏமாற்றப்பட்ட அதிர்வலையில் இருந்து மீள்வதற்குள், நாட்டுக் கோழி, ஆடு, கொப்பரைத் தேங்காய், டேட்டா என்ட்ரி என்று வரிசையாகப் புகார்கள் கிளம்பவே, கொங்கு மண்டலம் அதிர்ந்து கிடக்கிறது!



ஈரோடு நசியனூரைத் தலைமை இடமாகக்கொண்டு செயல்படும், நந்து கொப்பரா பவுல்ட்ரி கேட்டில் ஃபார்ம்ஸ் நிறுவனம் தங்களை ஏமாற்றிவிட்டதாக ஈரோடு, சேலம் மாவட்டப் பொருளாதார குற்றப்பிரிவு அலுவலகங்களில் புகார் கொடுத்தபடி உள்ளனர். இவர்கள் அனைவரும் கொப்பரைத் தேங்காய், நாட்டுக் கோழி, உயர்ரக ஆடு திட்டங்களில் முதலீடு செய்தவர்கள். புகார் கொடுத்தவர்கள் ஏமாந்த தொகை 100 கோடி ரூபாயைத் தாண்டிச் செல்கிறது. கம்பெனியின் எம்.டி. நந்தகுமாரும், அவருக்கு மூளையாகச் செயல்பட்ட ராஜ்குமாரும் தலைமறைவாகி விட்டனர்.




நாட்டுக் கோழித் திட்டத்தில் ஏமாந்த சேலம் இருப்பாலை பகுதியைச் சேர்ந்த தர்மராஜ், ''ஒன்றரை லட்சம் ரூபாய் வைப்பு நிதி செலுத்தினால், 300 நாட்டு கோழிக் குஞ்சுகளைத் தருவார்கள். அவர்களே பண்ணை அமைத்துக் கொடுத்து தீவனம், மருந்து, ஊசி எல்லாம் போடுவதாகவும் சொன்னார்கள். கோழிக் குஞ்சுகளைக் கவனமாக மூன்று மாதம் வளர்த்துக் கொடுத்தால், வாரம்தோறும் 2,500 ரூபாய் சம்பளம் கொடுப்பதாகச் சொன்னார்கள். கடன் வாங்கித்தான் ஒன்றரை லட்ச ரூபா கட்டினேன்.


 சொன்னபடியே 300 நாட்டுக் கோழிக் குஞ்சுகளைக் கொடுத்தவங்க, மூன்று வாரங்கள் சம்பளமும் கொடுத்தாங்க. அதுக்குப் பிறகு வரலை. என்னை மாதிரி எங்க ஊரில் மட்டும் பணத்தைக் கட்டி நான்கு பண்ணைகள் போட்டிருக்காங்க. எங்களைப் பார்த்து 20-க்கும் மேற்பட்டவங்க வைப்புத் தொகை கட்டி ரெண்டு மாசமாகுது. அவங்களுக்குக் கோழிக் குஞ்சுகளும் தரலை. ஓமலூர் சுற்றுவட்டாரத்தில் மட்டும் 250-க்கும் மேற்பட்டவங்க ஏமாந்து இருக்காங்க'' என்றார் கவலையுடன். 




சேலம் நரசோதிப்பட்டியைச் சேர்ந்த ராணி, கொப்பரைத் தேங்காய் ஸ்கீமில் பணம் கட்டி ஏமாந்துள்ளார். ''எங்க வீட்டுக்காரர் மூட்டை தூக்கும் தொழிலாளி. நானும் ஏதாவது தொழில் செஞ்சா குடும்பக் கஷ்டம் தீரும்னுதான் இந்த ஸ்கீம்ல சேர்ந்தேன். ஒரு லட்சம் வைப்பு நிதியாகக் கொடுத்தால், வாரா வாரம் வெள்ளிக்கிழமை 4,000 கொப்பரைத் தேங்காய் போடுவாங்க. அதை உறிச்சு, தேங்காயை உடைச்சுக் காயவைச்சுக் கொடுத்தால், வாரத்துக்கு 3,500 ரூபாய் சம்பளம் கொடுப்பதாச் சொன்னாங்க. அதனால், வட்டிக்குக் கடன் வாங்கிப் பணத்தைக் கட்டினோம். ரெண்டு வாரம் தேங்காய் போட்டாங்க. அதுக்குப் பிறகு வரலை. கம்பெனியில் போய் பார்த்தால், பூட்டிக்கிடக்குது'' என்று கண்ணீர் சிந்தினார்.



சேலம் மாவட்டப் பொருளாதாரக் குற்றப் பிரிவுத் துணைக் கண்காணிப்பாளர் கணேசனிடம் பேசியபோது. ''இவர்கள் சேலம், ஈரோடு, நாமக்கல், கரூர் ஆகிய மாவட்டங்களிலும் கைவரிசையைக் காட்டி இருக்கிறார்கள். ஈரோட்டில்தான் நிறைய பேர் ஏமாந்து இருக்கிறார்கள். அத்தனை புகார்களையும் உயர் அதிகாரிகளுக்கு அனுப்பி இருக்கிறோம். விரைவில் அதிரடிகள் அரங்கேறும்'' என்றார்.



ஈரோடு சென்னிமலை தற்சார்பு விவசாயிகள் சங்கத் தலைவர் பொன்னையன், '''பண்ணைக் கோழி வளர்வதற்கு மூன்று மாதங்கள் வரை ஆகும். இந்த மூன்று மாதங்களுக்கும் நிறுவனங்கள் சொல்லும் கணக்குப்படி, செட் அமைத்துக் கொடுத்து தீவனம் தந்து, பராமரிப்புத் தொகையையும் கொடுப்பதாக இருந்தால், அந்த நிறுவனத்துக்கு ஒரு பண்ணைக்கு 30 ஆயிரம் ரூபாய் வரை நஷ்டம் ஏற்படும். பண்ணை முறையில் வளர்க்கப்படும் நாட்டுக் கோழிகளுக்கு பெரிய சந்தையும் கிடையாது. கோழி மற்றும் ஆடு பற்றி நம் மக்களுக்கு நன்றாகவே தெரியும். இருந்தும் தங்களுடைய பேராசை காரணமாக ஏமாறுகிறார்கள்.



ஒவ்வொரு நிறுவனமும் தாங்கள் அரசு பதிவு பெற்ற நிறுவனம் என்றும் ஐ.எஸ்.ஓ. தரச் சான்று பெற்றவர்கள் என்றும் கொட்டை எழுத்துகளில் விளம்பரம் செய்கின்றனர். இதை ஏன் கால்நடைத் துறையோ மாவட்ட நிர்வாகமோ கவனிப்பது இல்லை? புகார் வந்தால் நடவடிக்கை எடுப்போம் என்பது தும்பைவிட்டு வாலைப் பிடிக்கும் கதை. இதுபோன்ற மோசடிகளைத் தடுக்க கடுமையான சட்டங்களை அரசு கொண்டுவர வேண்டும்'' என்றார்


.

கால்நடைத் துறை அமைச்சர் சின்னையாவிடம் பேசினோம். ''தனியார் நாட்டுக் கோழிப் பண்ணைகளுக்கு அரசு அங்கீகாரம் எதுவும் வழங்க வில்லை. அரசு அங்கீகாரத்துடன் செயல்படுகிறோம் என்று தனியார் ஒப்பந்தப் பண்ணைகள் கூறினால், காவல்துறை மூலம் நடவடிக்கை எடுக்கப்படும்'' என்றார்.



இந்தச் சிக்கல்கள் போதாது என்று இப்போது, 'அகர் மரம் வளர்ப்போம்... அரசனாய் வாழ்வோம்!’ என்ற புதிய திட்டம் கொங்கு மண்டலத்தில் பரபரக்கிறது. 'ஒரு லட்ச ரூபாய் செலுத்தினால் 200 மரக்கன்றுகளும், ஆறு வருடங்களுக்கு வருட போனஸ் 10 ஆயிரம் ரூபாயும், 6-வது வருட இறுதியில் 10 லட்ச ரூபாயும் கொடுப்போம்’ என்று தூண்டில் போடுகிறார்கள். 'மச்சி இந்த ஸ்கீம் நம்பிக்கையாத் தெரியுதே... பணம் கட்டலாமா?’ என்று ஏமாறத் தயாராகிறது இன்னொரு குரூப்!

நன்றி - ஜு வி

BSNL நிறுவனத்தின் கணிணி மோசடி , பொது மக்கள் அதிர்ச்சி

http://chennai.bsnl.co.in/News/netone221108.jpgபி.எஸ்.என்.எல். நடத்திய கம்ப்யூட்டர் சீட்டிங்!''



மாட்டிக்கொண்ட திண்டுக்கல் மக்கள்



'ஒன்பதாயிரம் ரூபாய் பணம் செலுத்தினால் இன்டர்நெட் இணைப்புடன் கம்ப்யூட்டர் தருவதாக விளம்பரம் செய்தனர். அதை நம்பிப் பணம் செலுத்திய எங்களுக்குப் பட்டை நாமம் சாத்திவிட்டனர்’ என்று, வாயிலும் வயிற் றிலும் அடித்துக்கொள்கின்றனர், திண்டுக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த மலைக் கிராம மக்கள். அவர்களை ஏமாற்றியது ஏதோ ஒரு தனியார் நிறுவனம் அல்ல... பொதுத்துறை நிறுவனமான பி.எஸ்.என்.எல். என்பதுதான் அதிர்ச்சி!



பாதிக்கப்பட்டவர்களில் ஒருவரான வல்லரசு விடம் பேசினோம். இவர், கொடைக்கானலில் இருந்து 40 கி.மீ. தூரத்தில் உள்ள மண்ணவனூரில் செல்போன் சர்வீஸ் சென்டர் நடத்தி வருகிறார். ''நான் செய்யும் தொழிலுக்கு கம்ப்யூட்டருடன் நெட் கனெக்ஷன் இருந்தால்தான் தொழில் போட்டியைச் சமாளிக்க முடியும். அதனால், கம்ப்யூட்டர் வாங்க ஆசைப்பட்டேன்.

 அப்போது, கொடைக்கானல் டெலிபோன் ஆபீஸில் (பி.எஸ்.என்.எல். அலுவலகம்) 'ஒன்பதாயிரம் ரூபாய் செலுத்தினால், கம்ப்யூட்டருடன் நெட் கனெக்ஷன் கொடுக்கப்படும். இந்தச் சேவையை பி.எஸ்.என்.எல். மற்றும் அமரன் அசோசியேட் நிறுவனம் இணைந்து தருகிறது. தேவைக்கு பி.எஸ்.என்.எல். அலுவலகத்தில் இருக்கும் அமரன் அசோசியேட் நிறுவனத்தாரைத் தொடர்பு கொள்ளவும்’ என்று விளம்பரம் செய்து இருந்தனர்.




குறைந்த பணத்தில் கம்ப்யூட்டரும் நெட் இணைப்பும் கிடைக்கிறது என்ற ஆசையில் என்னைப் போல பலர் பணம் கட்டினோம். வில்போன் இணைப்புக்கு 500 ரூபாய் தனியாகக் கட்ட வேண்டும் என்று சொன்னார்கள். அதையும் கட்டினோம். மூன்று நாட்களில் போன் இணைப்பு வந்தது. இரண்டு நாட்கள் கழித்து போனில் பேசிய அமரன் நிறுவனத்தைச் சேர்ந்த ராஜேஷ் என்பவர், 'ஒரு வாரத்தில் உங்கள் வீடு தேடி கம்ப்யூட்டர், மோடம் வந்து சேரும்’ என்றார். ஒரு வாரம் கழித்தும் யாரும் வரவில்லை. மலைப் பகுதி என்பதால் தாமதம் ஆகலாம் என்று எதிர்பார்த்துக் கொண்டே இருந்தேன். அடுத்த ஒரு வாரத்துக்குப் பிறகும் வராததால், அமரன் அசோசியேட் நிறுவனத்தாரின் மொபைல் நம்பர்களில் தொடர்புகொண்டேன். அனைவரது போன்களும் சுவிட்ச்ஆஃப் செய்யப்பட்டு இருந்தன.

http://chennai.bsnl.co.in/News/Instn_En.jpg


அப்போது. வில்போன் நம்பரில் பேசிய தேவி என்பவர் 'அமரன் அசோசியேட் மதுரைக் கிளையில் இருந்து பேசுகிறோம். நிர்வாகம் மாறிவிட்டது. நாங்கள்தான் உங்களுக்கு கம்ப்யூட்டர் கொடுக்கப்போகிறோம். இரண்டு நாட்களில் உங்களைச் சந்திக்கிறோம்’ என்றார். அவரும் பேசியதோடு சரி... ஆறு மாதங்களாகியும் கம்ப்யூட்டர் வரவில்லை.



'உங்களை நம்பித்தானே பணம் கட்டினோம்’ என்று கொடைக்கானல் பி.எஸ்.என்.எல். அலுவலகத்தில் கேட்டோம். 'எங்களுக்கு எதுவும் தெரியாது. வத்தலக்குண்டு டி.இ-யை சந்தியுங்கள்’ என்றனர். அவரைச் சந்தித்துக் கேட்டால், 'இது மத்திய அரசின் திட் டம். எங்களுக்கு எதுவும் தெரியாது. உங்களைப்போல நூற்றுக்கணக்கானோர் எங்களிடம் வந்து பணம் கேட் கிறார்கள். உங்கள் புகாரைக் கொடுங்கள். நாங்கள் சென்னை அலுவலகத்துக்கு அனுப்புகிறோம்’ என்று பொறுப்பே இல்லாமல் பதில் சொன்னார்.



மதுரையில் தெற்கு ஆவணி மூல வீதியில் இயங்கிய அமரன் அசோசியேட் அலுவலகத்தைக் கண்டுபிடித் தோம். 'இங்கு ஆபீஸ் இருந்தது உண்மைதான். அதைக் காலிசெய்து ஆறு மாசமாச்சு’ என அருகில் உள்ளவர்கள் சொன்னார்கள். வேறு வழி இல்லாமல் முதல்வர் முதல் பிரதமர் வரை அனைவருக்கும் புகார் அனுப்பிவிட்டுக் காத்திருக் கிறோம். எந்த நடவடிக்கையும் இல்லை'' என வருத்தத்தைக் கொட்டினார்.



பி.எஸ்.என்.எல். தொழிற்சங்க பிரதிநிதிகளிடம் பேசினோம். ''ஆறு வருடங்களுக்கு முன் தனியார் ஒத்துழைப்புடன் அந்தத் திட்டத்தை அறிமுகப் படுத்தினர். தொழில்நுட்பக் குறைபாடுகளால் அந்தத் திட்டம் வெற்றி பெறவில்லை. அந்தத் திட்டத்தில் பணம் கட்டிப் பலரும் ஏமாந்தனர். இந்தத் திட்டத்தில் அதிக அளவுக்கு மோசடி வடகிழக்கு மாநிலங்களில்தான் நடந்துள்ளது. தமிழகத்தில் திண்டுக்கல், கிருஷ்ணகிரி, தர்மபுரி மாவட்டங்களில் இந்த மோசடி அதிகம் நடந்துள்ளது. அரசியல்வாதிகளுக்கு வேண்டப்பட்டவர்கள் ஏதாவது ஒரு திட்டத்தைப் போட்டு இப்படி மோசடிக்கு வழிவகுக்கிறார்கள். அலுவலர்களான எங்களால் இதைத் தடுக்கவோ, பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவவோ முடியவில்லை. ஏன், ஒழுங்கான பதிலைக்கூட சொல்ல முடியவில்லை'' என்று வருத்தப்பட்டனர்.



வத்தலக்குண்டு டி.இ.விசாலாட்சியிடம் பேசினோம். ''இந்தத் திட்டம் மத்திய அரசின் திட்டம். பாதிக்கப்பட்டவர்களின் புகார் குறித்து சென்னைக்குத் தகவல் கொடுத்துள்ளோம். அமரன் அசோசியேட் நிறுவனத்தார் சிலருக்கு செக் கொடுத்தும், அது பணம் இல்லாமல் திரும்ப வந்துள்ளதால், பாதிக்கப்பட்டவர்கள் பி.எஸ்.என்.எல். மீதும் வழக்கு தொடுத்துள்ளனர்'' என்றார்.

http://telecomtalk.info/wp-content/uploads/2010/06/BSNL-Ties-Up-With-Indian-Railways-to-Promote-3G-Services.jpg



இதுகுறித்து தொலைத் தொடர்புத் துறை ஊழல் தடுப்புப் பிரிவு தலைமை பொது மேலாளர் ஜெயராமனிடம் பேசினோம் ''இப்படி ஒரு மோசடி நீங்கள் சொல்லித்தான் என் கவனத்துக்கு வந்துள்ளது. பாதிக்கப்பட்டவர்கள் என்னிடம் புகார் செய்தால், உரிய நடவடிக்கை எடுக்கப்படும்'' என்றார்.



இதுவரை அரசு நிர்வாகம் மீது நம்பிக்கையுடன் இருந்தவர்கள் இப்போதுதான் போலீஸில் புகார் கொடுக்க தயாராக இருக்கிறார்கள். இனியாவது இவர்களுக்கு விடியட்டும்!


நன்றி - ஜூ வி




http://chennai.bsnl.co.in/homeimgs/megastu_100908.jpg

Wednesday, August 22, 2012

ஈரோடு , திருப்பூர் - பிளாட் முதலீடு மோசடி, உஷார்!

https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgErvq9vwBJBSEu1riHUdCLb2C2ArtAf2aKq-H3Vj1_G-Qx9zjpUUrkZglWlM8oY1A0Ph8rl4RACAu5ZBYYZaUoxA-gCoNUApk8NyTRMt2MPLHvxbw_ByOhfFeKvj8DI1tCqEBNYvJA59o/s1600/Rmwc13.JPG

5 வட்டிக்கு ஆசைப்பட்டு..!

தென் மாவட்டத்தில் பிளாட் மோசடி
முக் குளறுபடிகள் இன்னமும் முடிவுக்கு வராத நிலையில், அடுத்த மோசடி அம்பல​மாகி சந்தி சிரிக்கிறது. 'ஐந்து லட்சம் ரூபாயை பிளாட்டில் முதலீடு செய்தால், மாதம்தோறும் ஐந்து சதவிகிதம் வட்டி’ என்று கோடிக்கணக்கான பணத்தை ஏப்பம் விட்டு இருக்கிறார்கள்! 


சாத்தூர் அருகே வெங்கடாசலபுரத்தைச் சேர்ந்த ராஜா,  தீப்பெட்டித் தொழிற்சாலையில் மேஸ்திரியாக இருந்தவர். சில ஆண்டுகளுக்கு முன், மருது என்பவருடன் சேர்ந்து, 'ஆர்.எம்.வெல்த் கிரியேஷன்ஸ் இந்தியா’ என்ற நிறுவனத்தைத் தொடங்கினார். சில பெரிய நிறு வனங்களுக்கு ஏஜென்ட் போல தன்னைக் காட்டிக்​கொண்டவர், ஒவ்வொரு பிரிமியம் தொகைக்கும் 5 சதவிகிதம் கமிஷன் தருவதாகச் சொன்னார்கள்.


'பிரிமியம் தொகைக்கே கமிஷனா?’ என்று வாய் பிளந்த பலரும் வரிசை கட்டி நின்று அவர்​களிடம் இன்சூரன்ஸ் பாலிசி போட்டனர். இந்த நேரத்தில், சாத்தூர் அருகே எட்டூர்வட்டத்தில் 102 ஏக்கர் பரப்பளவில் கோல்டன் சிட்டி என்ற பெயரில் பிளாட் போட்டனர். 



ஒரு பிளாட்டுக்கு 4 லட்சம் முதல் 10 லட்சம் வரை என்று விலை வைத்தனர். எந்த பிளாட்டில்... எவ்வளவு முதலீடு செய்கிறோமோ, அந்தத் தொகைக்கு ஐந்து சதவிகிதம் மாதம் தோறும் வட்டி என்றும், வட்டி வேண்டாம் என்றால் கிரையம் செய்து தரப்படும் என்றும் கவர்ச்சிகரமாக விளம் பரப்படுத்தினர்.


 உடனே, 'எனக்கு ஒண்ணு... எங்க அப்பாவுக்கு ஒண்ணு’ என்று கூட்டம் மொய்த்தது.


அதோடு ஐந்து பேரை இந்தத் திட்டத்தில் சேர்த் து விட்டால், ஓர் ஆளுக்கு 500 ரூபாய் கமிஷன் என்று, செயின் லிங்க் சிஸ்டத்தையும் அறிமுகம் செய்து இருக்கின்றனர். டீம் லீடர்களுக்கு கார், டூர் என்று ஏகப்பட்ட வசதிகளை அள்ளித்தரவே, மளமள​​வென்று ஆட்களைச் சேர்ந்தனர். இப்போது சாயம் வெளுத்துப்போகவே, கிட் டத்தட்ட 4,000 முதலீட்டாளர்கள் ஏமாந்து நிற்கிறார்கள்.



முதலீட்டாளர்கள் சார்பில் நம்மிடம் பேசிய வக்கீல் அழகர்சாமி, ''விருதுநகர், சிவகாசி, கோவில்பட்டி போன்ற இடங்களில் வட்டித் தொகைக்கு ஆசைப்பட்டு பாமர மக்கள் முதல் அரசு ஊழியர்கள் வரை பலரும் லட்சக்கணக்கில் முதலீடு செய்து ஏமாந்துள்ளனர். புதிதாகச் சேரும் வாடிக்கையாளர்களை டூர் அழைத்துச் சென்று நன்றாகக் கவனித்துள்ளனர்.



 குற்றாலத்தில் நடந்த மீட்டிங்கில், 'நாளைய தமிழகமே...’ என்று வரவேற்பு ஃப்ளெக்ஸ் அடித்து ராஜாவை பூப்பல்லக்கில் அழைத்துவந்து, பொதுமக்களை மயக்கியுள்ளனர். பிப்ரவரி மாதம் வட்டி தருவதில் சுணக்கம் ஏற்பட்டது. அதனால் சில மாதங்களுக்கு முன், எட்டூர் அருகே உள்ள ஆர்.எம்.டபிள்யு.சி. நிறுவனத்துக்குச் சென்ற முதலீட்டாளர்கள் ரகளை செய்தனர். அப்போது, போலீஸ் முன்னிலையில் பேசிய நிறுவனத்தின் சேர்மன் ராஜாவும் எம்.டி. மருதுவும், கொஞ்ச நாட்களில் பணத்தைத் திருப்பித் தருகிறோம், என்று உறுதி அளித்தனர். 



ஆனால் அதன் பிறகு, தலைமறைவாகி ​விட்டனர். இப்போது அவர்கள் திருப்பூர், ஈரோடு, போன்ற இடங்களில், 'எஸ்.எம்.’ என்ற பெயரில் புதிய நிறுவனம் தொடங்கும் முயற்சியில் இருப்பதாகக் கேள்விப்படுகிறோம். என் மூலமாகவே இதுவரை 300 பேர் போலீஸில் புகார் செய்துள்ளனர். இவர்கள் ஏமாந்து இருப்பது மட்டுமே 20 கோடி ரூபாய். ஆனால், மொத்தமாகப் பார்த்தால் எவ்​வளவு கோடியோ? உடனே, அவர்களைக் கண்டுபிடித்து பணத்தை மீட்கவேண்டும்'' என்றார்.


முத்துலிங்காபுரம் பஞ்சாயத்துத் தலைவர் பெருமாள்​சாமி, ''இந்தத் திட்டம் பற்றிக் கேள்விப்பட்டதும், 'எப்படி சாத்தியம்?’ என்று ராஜாவிடம் கேட்டேன். 'குறைந்த விலைக்கு நிலத்தை வாங்கி கூடுதல் விலைக்குத்தான் விற்கிறோம். மேலும், பணத்தைப் பங்குச் சந்தையில் போட்டு லாபம் பார்க்கிறோம். அந்த லாபத்தில் இருந்துதான் மாதம்தோறும் வட்டி தருகிறோம்’ என்று நம்பிக்கையுடன் சொன்னார்.




 நானும் அதைநம்பி, எனக்குத் தெரிந்தவர்களை பணம் கட்டச் சொன்னேன். பஞ்சாயத்துத் தலைவர் என்பதால் என்னை நம்பி 800 பேருக்கும் மேல் இந்தத் திட்டத்தில் சேர்ந்தனர். எங்கள் பகுதியில் மட்டும் 5 கோடி ரூபாய்க்கு மேல் பணத்தை மோசடி செய்து விட்டனர். இப்போது எல்லோரும், பணம் கேட்டு எனக்கு நெருக்கடி கொடுக்கின்றனர்...'' என்றார் ஆதங்கத்துடன்.



ராஜா, மருது ஆகியோரைச் சந்தித்து விளக்கம் கேட்க முயன்றோம். நிறுவனங்கள் மூடப்பட்டு ​விட்டன. இரண்டு மாதங்களுக்கு முன்னரே வீட்​டையும் காலி செய்து விட்டார்களாம். அதனால், அவர்கள் சார்பில் பேசவும் யாரும் முன்வரவில்லை.



இந்த மோசடியை விசாரித்துவரும் பொருளாதாரக் குற்றப் பிரிவு இன்ஸ்பெக்டர் பாலாஜியிடம் பேசினோம். ''கோவையில் பாசி நிறுவனம் ஏமாற்றியதுபோல் தென் மாவட்​டத்தில் ஆர்.எம்.டபிள்யு.சி. நிறு​வனத்​திடம் பலர் ஏமாந்துள்ளனர். 


 இது தொடர்பாக நிறைய புகார்கள் வந்துள்ளன. சேர்மனாக ராஜாவும், எம்.டி-யாக மருதுவும் இருந்துள்ளனர். இயக்குனர்களாக மூன்று பேர் இருந்திருக்கிறார்கள். அந்த இயக்குனர்களை நம்பித்தான் பலர் முதலீடு செய்துள்ளனர். அந்த இயக்குனர்களும், தாங்கள் ஏமாற்றப்பட்டு விட் டதாகப் புகார் செய்துள்ளனர். இதுதொடர்பாக விசாரணை நடந்து வருகிறது. ராஜா, மருது இருவர் மீதும் வழக்குப் பதிவு செய்து தேடிவருகிறோம். அவர்​களுக்​குச் சொந்தமான சொத்துக்களைக் கைப் பற்றி, முதலீட்​டாளர்களின் பணத்தைத் திருப்பிக் கொடுப்பதற்கான நடவடிக்கையை எடுப்போம்...'' என்றார்.


டெயில் பீஸ்: சாத்தூர் வெங்கடாசல​புரத்தைச் சேர்ந்தவர் கல்யாணராஜ். ஓய்வு பெற்ற ஆசிரியரான இவருக்கு ஊருக்குள் நல்ல மரியாதை. அதனால் இவரை இந்த நிறுவனத்தில் இயக்குனராக நியமித்து இருக்​கிறார்கள். இவரை நம்பி பலரும் லட்சக் கணக்கில் முதலீடு செய்தனர். 



பந்தல்குடி அருகே ஒரு நிலத்தைக் காட்டி பணத்தை வசூல் செய்த விவகாரத்தில் நிர்வாகத்துடன் பிரச்னை வரவே, கல்யாணராஜை இயக்குனர் பதவியில் இருந்து கழற்றி விட்டனர். உடனே, போலீஸில் புகார் செய்தார். இதையடுத்து, கடந்த 17-ம் தேதி ஒரு கும்பல் இவரது வீட்டுக்கு வந்து மிரட்டி இருக்கிறது. அதனால், மனஉளைச்சல்களுக்கு ஆளான கல்யாணராஜ், அன்று இரவே தோட்டத்தில், பன்றியைக் கொல்ல வைத்திருந்த விஷ மாத்திரைகளை சாப்பிட்டு தற்கொலை செய்துகொண்டார். இந்த விவகாரம், ஏரியாவில் மேலும் கொதிப்பைக் அதிகரித்துள்ளது.

நன்றி - ஜூ வி

மோசடி செய்த நிறுவனத்தின் வெப் சைட்டில் வெளி வந்த விளம்பரம்



GREAT OPPURTUNITY FOR MLM LEADERS AND NETWORKERS. RMWC

Contact Name  : subbu 09790407098   
Email ID          : [email protected]
Website: www.rmwcindia.com 


IT’S DEFINITE- 

A DAY GETS DAWN.... 

ONLY YOU CAN...



Welcome to RMWC

            Our organization has been started with appropriate recognition under the Indian Company Act, 1956. Through this business opportunity, we aspire to provide housing plots to the members of our RMWC family. Also we seek to provide Safety Policy Schemes to our members and their family. Our ultimate maxim is to create financial freedom to everyone, who adhere the business opportunity through our organization.

 


PRODUCTS

1) REAL ESTATE


2) INSURANCE








3) HOME APPLIANCE
















 OUR FUTURE VISION






Plan – I Products
Rs: 12,000(Minimum) (for one 1 id, you can get Home Appliances products worth Rs.12,000 
Or 
Plan – II Insurance Products
Insurance Products from Reliance or Bajaj worth Rs.12,000
                                                Or 
Plan-III Lands
If your investment is Rs: 50,000 to 1,00,00,000 You will get number of ids worth Rs. 12,000  you can calculate  from that amount as divided by 12,000 (ex. amount Rs. 50000/12 = 4 ids)

INCOME RETURNS

1) Rs. 500/Monthly for one id

2) Binary Income Rs. 1000 for one pair match (1:1)

3) Matrix Income in Auto filling system

4) AWARDS & REWARDS

 

1) Rs. 500/Monthly for one id, Payment will be credited to your bank account

2) Binary Income Rs. 1000 for one pair match (1:1)

 

"Successful Auto Filling System, 

1st time in World"


3) Matrix Income in Auto filling system

1level- 5Members Rs. 500 Rs. 2500
 
2level-  25Members  Rs. 400 Rs. 10,000
 
3level- 125Members  Rs. 200 Rs. 25,000
 
4level- 625Members  Rs. 200 Rs. 1,25,000
 
5level- 3125Members  Rs. 200 Rs. 6,25,000
 
6level- 15625Members  Rs. 200 Rs. 31,25,000
 
TOTAL 19530Members Rs. 1700 Rs. 39,12,500






4) AWARDS & REWARDS







GREAT OPPURTUNITY FOR MLM LEADERS AND NETWORKERS. GET BRANDED PRODUCTS ON ENTRY AT MRP LIKE OTHER SHOPS. 

RMWC INDIA(P)LTD 

SAFE & SECURE PLANS

An ISO 9001:2008 Company, 

Company Having 13,000 CRORE ASSETS

For the First Time in India, our RMWC (RM WEALTH CREATION INDIA PVT.LTD) organization introduces a innovative business plan "AUTO FILLING SYSTEM'. By joining in this AUTO FILLING SYSTEM, EVERYONE who joins RMWC gets confirmed income (Minimum Guarantee). As per the Income Chart (given below), you will get income through AUTO FILLING SYSTEM / INCOME SHARING PLAN when members join under you. 

Contact Name  : subbu 09790407098    

Email ID          : [email protected]

Website: www.rmwcindia.com