Showing posts with label மொக்கை. Show all posts
Showing posts with label மொக்கை. Show all posts

Friday, April 05, 2013

சேட்டை - சினிமா விமர்சனம்

 

ஹீரோ ஒரு பத்திரிக்கைல பணி ஆற்றுபவர். அவருக்கு எங்கிருந்தோ ஒரு கோடீஸ்வரக்காதலி வலியனா வந்து மாட்டுது. ( நமக்கு டொக்கு ஃபிகர் கூட மாட்றதில்லை) அந்த உத்தமக்காதலி அடிக்கடி ஹீரோவைத்தள்ளிட்டுப்போய் “ கண்ணா லட்டு தின்ன ஆசையா?ன்னு பூடகமா கேட்குது ( இதை விட ஓப்பனா யாரும் கேட்கவே முடியாது ) ஹீரோ கேரக்டர் கேனக்கிறுக்கு கேரக்டர் போல . அதெல்லாம் முடியாதுங்கறார். இது ஒரு டிராக்ல ஓடுது.

ஹீரோவை அதே லைன்ல அதாவது பிரஸ் ரிப்போர்ட்டர் ஃபிகர் தானா ஒன் சைடா லவ் பண்ணுது . அவரோட 2 சைடும் நல்லா இருந்தும் ஹீரோ கண்டுக்கலை. அவ்ளவ் உத்தமனா? அடேங்கப்பா . கேரக்டரை மெயிண்ட்டெயின் பண்றாங்களாம். எம் ஜி ஆர் கூட இவ்ளவ் கண்ணியம் காத்ததில்லை , அப்பப்ப ஹீரோயினைத்தடவிட்டு கடைசில தங்கச்சி மறந்துடும்பாரு  .

மேலே சொன்ன 2 லவ்வும் அப்பப்ப ஊறுகாய் மாதிரி , மெயின் கதை என்னான்னா ஒரு கடத்தல் கும்பல் வைரக்கற்கள் கொண்ட ஒரு பொம்மையைக்கை மாத்துது, அது தவறுதலா ஹீரோயின் கிட்டே மாட்டி ஹீரோ கிட்டே போய் அவரோட 2 நண்பர்கள் கிட்டே போய் ... என்ன தலை சுத்துதா? திரைக்கதையும் அப்டித்தான்... 






ஆர்யா தான் ஹீரோ. நிஜ வாழ்வில் நயன் தாராவும் த்ரிஷாவும் இவருக்காக அடிச்சுக்கிட்டதா காத்து வாக்கில் ஒரு செய்தி உண்டு . கதைல அதை அப்டியே நாசூக்கா சொல்லி இருக்காங்க.. புக் பண்ணூம்போதே இது ஒரு மொக்கைக்காமெடி ஃபிலிம் , ஆல்ரெடி ஹிந்தில ஹிட் ஆன  படத்தின் ரீ மேக் தான், நீங்க சும்மா வந்துட்டுப்போனா போதும்னு சொல்லி இருப்பாங்க போல , மனுஷர் அதிகமா அலட்டிக்கலை . வந்தவரை ஓக்கே 



ஹீரோயின் நெம்பர் ஒன் ஹன்சிகா .கொழுக் மொழுக் கன்னம் ( கன்னம் மட்டுமா ... ) ஹீரோவுக்கே படத்துல வேலை இல்லாதப்போ இவருக்கு மட்டும் என்ன கவர்மெண்ட் ஜாப்பா இருக்கப்போகுது , ஒரு டூயட் , 3 கட்டிப்பிடி சீன் அவ்ளவ் தான் .இவர் அப்பப்ப குஷ்பூ மாதிரி மேனரிசம் காட்டுவது , சிரிப்பது  எல்லாம் ஓவர் , ஒரு நாள் இல்லாட்டி ஒரு நாள் சுந்தர் சி வந்து டொக் டொக் -னு கதவை தட்டப்போறார் , கபர்தார் 


 ஹீரோயின் நெம்பர் 2 அஞ்சலி , இவர் கழுத்துக்குக்கீழே நமிதாவுக்கு சவால் விடும் அளவு வளர்ச்சி அடைவது கூடத்தேவலை, கழுத்துக்கு மேலே குறிப்பா கன்னங்கள் 2 ம் கேப்டன் கன்னத்துக்கே சவால் விடும்படி பீர் சாப்பிட்டு வீங்கிப்போய் கிடக்கு , பார்க்க சகிக்கலை . அஞ்சலி ரசிகர்கள் மன்னிக்க 


ஹன்சிகா , அஞ்சலி 2 பேர்ல யார் அதிக திறமையைக்காட்டி இருக்காங்கன்னு பார்த்தா சந்தேகமே இல்லாம ஹன்சிகாதான் . குறிப்பா அவர் பீச் ல குளிச்சுட்டு கும்மாளம் இடும்போது  ஆஹா! பிரமாதமா திறமை காட்டி இருக்கார். இதுக்கு ஏதாவது அவார்டு உண்டா ? தெரில 



 சந்தானம் படத்தின் முதுகெலும்பு . இவரோட பிளஸ் பாயிண்ட்டே அப்பப்ப டைமிங்கா கவுண்ட்டர் டயலாக் அடிப்பதுதான். அவரையும் வயித்தால போற பேஷண்ட் ஆக்கி வடிவேல் ரேஞ்சுக்கு இறக்கி விட்டுட்டா எப்டி? இயக்குநர் அங்கே தான் சந்தானத்தின் கேரக்டரைசேஷன் ல சறுக்கிட்டார்,. அதையும் மீறி சந்தானம் 6 இடத்துல கவுண்ட்டர் டயலாக் அடிச்சு  அது போக 19 மொக்கை ஜோக்ஸ் வழங்கி இருக்கார். 



பிரேம் ஜி.. சப்போர்ட்டிங்க் காமெடி . சொல்றேனேன்னு யாரும் தப்பா நினைக்காதீங்க , இவர் வரும் காட்சிகள் மகா எரிச்சல் . அவருக்கு தனி டூயட் வேற , க்ளோசப் ல அவர் வாயை ஏன் அப்டி காட்றாங்கன்னு தெரியல.. அவர் ஆளும் தலையும் .. முடியல (நடிகர்  செந்தில் கேரக்டர் மாதிரி ட்ரை பண்றாரோ? )

 நாசர் தான் வில்லன் . அங்கங்கே கிச்சு கிச்சு 


இசை தமன் . 2 பாட்டு தேறுது , பின்னணி இசை சுமார் . ஒளிப்பதிவும் சராசரி 





இயக்குநர் பாராட்டு பெறும் இடங்கள்



1. கொஞ்சம் கூட மனசாட்சியே இல்லாம இந்தப்படத்துக்கு யு சர்ட்டிஃபிகேட் வாங்குனது. சென்சாரே அப்டி கொடுத்தாக்கூட இவங்க ஏ தான் வேணும்னு கேட்டு வாங்கி இருக்கனும், அப்டி இருக்கு பல காட்சிகள்



2. ஹன்சிகா , அஞ்சலி என 2 முன்னணி ஹீரோயின்சை புக் பண்ணி  முடிஞ்சவரை அவங்க திறமையை வெளிக்கொணர பாடுபட்டது 



3. சி செண்ட்டர் ரசிகர்களை சிரிக்க வைக்கும் மொக்கைக்காமெடி டயலாக்ஸ் 


4. ஹீரோயின் ஹன்சிகா குட்டைப்பாவாடை அல்லது மிடி மாதிரி ஏதோ ஒரு கர்ச்சீப்பை அணிந்து வரும் காட்சிகளில் எல்லாம் கேமராமேன் கவுரவம் பார்க்காமல் தரையோடு தரையாக படுத்து ஜூம் செய்தது , குறிப்பா அந்த பீச் காட்சி.. 





இயக்குநரிடம் சில கேள்விகள்



1. ஹீரோயின் கோடீஸ்வரி. அவர் ம் என சொன்னா 100 கோடி கூட கிடைக்கும், ஆனா லூஸ் வில்லன் அவளைக்கடத்தி வெச்சுட்டு கேவலம்  1 3/4 கோடிக்காக வைரத்தை பேசிட்டு இருக்காரு . 


2. ஹீரோ ஹீரோயினை தடவறாரு , கிஸ் பண்றாரு மேட்டர் தவிர எல்லாமே பண்றாரு, ஆனா “ எனக்கு இவ செட் ஆக மாட்டா. சரி வராது என டயலாக் பேசி லவ்வையே கேவலப்படுத்தறாரு


3. ஆர்யா , அஞ்சலி 2 பேரும் வரும்போது சம்பந்தமே இல்லாம ஹன்சிகா முன்னால  “ ஆமா , நான் அவளை கிஸ் பண்ணேன்னு ஒப்புதல் வாக்கு மூலம் கொடுக்காரே? ஆர்யா, உங்களைக்கேட்டாங்களா முருகேசா? 


4. எம் ஜி ஆர் , சிவாஜி காலத்துல ஆள் மாறாட்ட,ம் நடந்தது ,  வைரம் ஆள் மாறி டெலிவரின்னு சொன்னா அதுல ஒரு நியாயம் இருந்துச்சு , டெக்னாலஜி வளர்ந்த இந்தக்காலத்துல யார் கிட்டே வைரம் தரனும்னு ஒரு ஃபோட்டோக்கூடவா இருக்காது . கன்ஃபர்மேஷன் ஃபோன்ல பண்ணிக்க மாட்டாங்களா? 



5. ஆர்யா , ஹன்சிகா கூட கில்மா பண்ண பிள்ளையார் சுழி போடும்போது ( பிள்ளையார் மன்னிக்க ) அஞ்சலி கிட்டே இருந்து ஃபோன். அவர் சக ஊழியை மட்டுமே , அர்ஜெண்ட் மேட்டர் வா அப்டினு சொன்னதும் இவர் ஏன் கிளம்பனும்? 5 நிமிஷம் தானே ஆகும் ,மேட்டரை முடிச்சுட்டு போய் இருக்கலாம். அந்த சீன்ல ஹன்சிகா சீறுவார்னு பார்த்தா கண்டுக்கவே இல்லை 


6. எதுக்கு அவசரமா வரச்சொன்னேன்னு கேட்டதுக்கு அஞ்சலி கூலா ஜஸ்ட் சரக்கு அடிக்க  அப்டிங்கறார். முடியல 


7. காதலி தன்னை விட வசதின்னு த்தெரிஞ்சு தானே ஹீரோ லவ்வறாரு . சரி வராதுன்னு சொல்றவர் ஹீரோயின் கொடுத்த காரை மட்டும் ஒனத்தியா வாங்கிக்கிட்டது எப்டி? 


8. நெம்பர் டூ போறது யதார்த்தம் தான், எல்லாரும் டெயிலி போறதுதான் , அதுக்காக காமெடிங்கற பேர்ல இப்டி இறங்கி வரனுமா? நாளைக்கே சரி வேணாம், அடுத்த வாரமே இந்தப்படத்தை டி வி ல போடறப்போ சாப்டுட்டே யாராவது படம் பார்த்தா குமட்டாதா? 



9. சந்தானம் கேரக்டர் நாய் நக்ஸ் ( நக்கி ) அப்டினு வெச்சது நாய் நக்ஸ் நக்கீரன் என்ற வலைப்பூ ஓனர் மனசுல வெச்சுத்தான். டைட்டில் கர்டுல அவருக்கு நன்றியே போடலையே? பத்திரிக்கைப்பேட்டில மட்டும் அதை ஒத்துக்கிட்டவர் டைட்டில்ல் ஏன் அங்கீகாரம் தர்லை ?


10. இந்தப்படத்தின் பின்னணி இசை பல இடங்களில் நாடக் எஃபக்ட் . 


11. எக்சாம் ஹால் ல ஃபோன் பேசலாமா? 






மனம் கவர்ந்த வசனங்கள்

1. மல்லிகா அபார்ட்மென்ட்ல பிராத்தல் நடக்குது சார்.


நாடு எங்கேய்யா போய்ட்டு இருக்கு? 


அங்கே தான் போய்ட்டு இருக்கு



2. வீட்டுக்குள்ளே குப்பைத்தொட்டி வெச்சுப்பார்த்திருக்கேன், ஆனா  ஒரு வீடே குப்பைத்தொட்டி ஆகி இப்போதான் பார்க்கறேன் 



3. பாதாளச்சாக்கடைக்கு கதவு , ஜன்னல் வெச்சது மாதிரி ஒரு வீடு ./


4. ட்ரிங்க் ட்ரிங்க் 


 என்ன சத்தம் அது? 


 10 நிமிஷத்துக்கு முன்னே நீ காலிங்க் பெல் அடிச்சியே , அதுதான் , கொஞ்சம் லேட் பிக்கப் , ஹி ஹி 



5. வெங்கட் எனும் பேரை வெங்க்கின்னு கூப்பிடறதில்லை? அது மாதிரி நாய் நக்ஸ்ங்கற பேரை சுருக்கி நக்கி ஆக்கிட்டேன், எப்டி? 



6. டியர் , உங்களுக்காக புது சர்ட் வாங்கி வெச்சிருக்கேன் 


 எப்டியும் கழட்டத்தானே போறோம்? எதுக்கு இது? ( சுத்தம் ) 


7. டேய் , கிசு கிசு எழுதுற எனக்கே கூச்சமா இருக்கு, என்னடா பண்றே அவளை ?


8.  டேய் , உன் ஆளுக்கு தங்கச்சி இருக்கான்னு கேட்டு சொல்லுடா, கரெக்ட் பண்ணிடலாம் 


 ஒரிஜினல் இருக்கும்போது ஜெராக்ஸ்க்கு ஏன் ஆசைப்படறே? அவளையே எடுத்துக்கோ ( உலகத்துல எந்த உண்மைக்காதலனும் இப்டி உளற மாட்டான் )  


 என்னமோ காபித்தூள் எடுத்துக்கோங்கற மாதிரி அசால்ட்டா சொல்றானே? 



9. ஹாய் , மரத்தடி மாலாவா? 


 ஆமா, அன்னைக்கு ஷூட் எடுத்தீங்களே? வரவே  இல்லை?

 தொப்புளைக்காட்டி போஸ் குடுனு சொன்னேன்


 ஏண்டா , சமையல் குறிப்புக்கு எதுக்கு தொப்புளைக்காட்டனும்?

 இப்பவெல்லாம் யார்டா புக் படிக்கறாங்க ? சும்மா பார்க்கறதுக்குத்தானே? ( டைம் பாஸ் விகடனை நக்கலிங்க்? )


10.  ஒண்ணும் இல்லை, இங்க்லீஷ் பேப்பர் கிலோ 8 ரூபாய்க்கு விக்குதுங்கற திமிர்ல பேசறாங்க


11.  என்ன தமிழ் பேசறா? அவளை எல்லாம் தமிழ் கற்பழிப்பு வழக்குல உள்ளே போடனும் 



12. மாமி, என்னாதிது? வாழைப்பழத்தை ஆபரேஷன்  பண்ணிட்டு இருக்கேள்? ( டபுள் மீனிங்க் ) 



13.  தம்பி! என்ன பண்றேள்?

 சாப்டுண்டு இருக்கேன்

 அதான், சாப்பாட்டுக்கு என்ன பண்றேள்னு கேட்டேன்



14.  பக் வீட் ஆண்ட்டி - அவர் என்ன செஞ்சாலும் சூப்பரா இருக்கும் சேட்டா சேட்டாதான் 


இப்டியே போனா அங்கிளுக்கு டாட்டாதான் 




15. ஒட்டுத்துணில தெச்ச தலகாணி மாதிரி  உனக்கு ஒரு உடம்பு .அப்டி இருந்தும் ஜிம் பாடி மாதிரி எதுக்கு பில்டப்?



16.  மனோ பாலா - பரதம் கறது ஒரு கலை. அவங்க என்னதான் குச்சி வெச்சுக்குத்துனாலும் நீங்க நாட்டியத்துல கவனமா இருக்கனும் ( டபுள் மீனிங்க் )


17.  உன் கிட்டே 2 முக்கியமான விஷயம் பேசனும் 

 நானும் காலைல இருந்து  2 விஷயமாத்தான் போய்ட்டு இருக்கேன் 



18.  ஒரு பட்டாம்பூச்சியை ஒரு கரப்பான் பூச்சி  எப்டி கட்டிப்பிடிக்குது பாருங்க 


19.  டேய் , உனக்குக்கிடைச்சா எனக்கு கிடைச்ச மாதிரி டா


 என்னாது ?

சந்தோஷம் தான் . காதலின்னு பயந்துட்டியா?


20. முக்கியமான ஒரு வேலையை பாதிலயே விட்டுட்டு வந்திருக்கேன் ஹி ஹி 



21. ஒர்க்கிங்க் டைம்ல நான் தண்ணி அடிக்கறதில்லைங்க 


இப்போ நாம ஒர்க் பண்றோம்னு யார் சொன்னது? ரிலாக்ஸ் மேன் 



22.  நாசர் அடியாளிடம் - ஏண்டா , கல்யாண வீட்டுக்கா வந்திருக்கோம்? உக்காந்து சாப்டுட்டு இருக்கே? 



23.  என்னங்க ? போஸ்ட்ல என்ன? 


 முருகர் விபூதி தபால் ல வந்திருக்கு 


 அதை எடுத்துட்டு  ஏன் பாத்ரூம் போறீங்க ?

 குளிச்சுட்டு பூசிக்கத்தான் 


 நீங்க தான் ஆல்ரெடி குளிச்சுட்டீங்க்ளே? 


 சோப் போட மறந்துட்டேன் 


24.  லவ்ங்கறது கனவு மாதிரி, மேரேஜ்ங்கறது அலாரம் மாதிரி, அலாரம் அடிச்சதும்  கனவை கலைச்சிடனும்


25. என்னதான் டேஸ்ட்டா இருந்தாலும் பபிள்கம்மை ஒரு கட்டத்துல துப்பித்தான் ஆகனும், அது மாதிரி தான் பழைய லவ்வும் 



26. மனசுக்குப்பிடிச்சவங்க கிட்டே லவ்வைப்பிரப்போஸ் பண்றதை  விடப்பெரிய வேலை இந்த உலகத்துல எதுவும்  இல்லை # சேட்டை


27. இதை ஏன் என் கிட்டே முன்னாலயே சொல்லலை?

 நீங்க கேட்கவே இல்லையே?



28.  அது ஏன் சார் உங்க மண்டையை டேபிள் ஃபேன் மாதிரி ஸ்லோவா திருப்பறீங்க? 



29/ இவர் யாரு? பார்க்க பயங்கரமா இருக்காரே? 


 மூஞ்சி கழுவின பிறகு பாருங்க. இன்னும் பயங்கரமா இருப்பான் 


30. நீ நல்ல வழி ல   செலவு பண்ணு , இல்லை நாகர் கோயில் வழில செலவு பண்ணு  அதைப்பத்தி எனக்குக்கவலை இல்லை 


31. தப்பு பண்றவங்க எல்லாம் நம்ம பேப்பரைப்பார்த்து பயப்படனும்


 அப்போ நாம தான் முதல்ல பயப்படனும் 



32. மேரேஜ்க்கு முன்னால இதெல்லாம் தப்பு , நம்ம தமிழ்க்கலாச்சாரம் ஒத்துக்காது 


 ஹன்சிகா - இச் .. இப்போ?

 ஐ டோண்ட் நோ தமிழ் யா 



33.  நான் என்ன பிராண்ட் ஜட்டி போடனும்கறதைக்கூட உங்கப்பா தான் முடிவு பண்ணுவாரா? 



34. இந்த மாதிரி சோகக்கதைக்கு எல்லாம் நான் மயங்க மாட்டேன்

 சரி வேற ஒரு காமெடிக்கதை இருக்கு, சொல்லவா? 



35. முல்லைக்குத்தேர் கொடுத்தான் பாரி , உங்க வீட்ல நெம்பர் டூ போய்ட்டேன் சாரி 


 36 ஓடி வந்த வேகத்துக்கு களைப்பாற 2 பேரும் ஜூஸ் குடிக்கறிங்க போல ஓ இதான் முத்தமா? 


37 . திடீர்னு கண்ணாடில உன் ஃபேஸ்க்குப்பதிலா வேற ஒரு ஃபேஸ் இருந்தா உனக்கு எப்டி இருக்கும் ? 

 அடடே, அழகா இருக்கே அப்டினு 





எதிர்பார்க்கப்படும் ஆனந்த விகடன் மார்க் - 40 



 குமுதம் ரேங்க் - ஓக்கே 



 ரேட்டிங்க் 2 / 5 


சி பி கமெண்ட் - ரொம்ப மொக்கை கிடையாது. டைம் பாஸ் ஆகும். எவனாவது இளிச்சவாயன் ஓ சி ல கூட்டிட்டுப்போனா பார்க்கலாம், சொந்தக்காசை செலவு பண்ணிப்போற அளவு படம் ஒர்த் இல்லை .


 

Sunday, August 19, 2012

அதிசய உலகம் - மழலைக்கான படமா? மண்ணாங்கட்டி படமா? - சினிமா விமர்சனம்

http://images3.wikia.nocookie.net/__cb20120727045103/speedydeletion/images/1/19/Theatrical_poster_of_Adhisaya_Ulagam_3D.jpg


லிவிங்ஸ்டன் ஒரு சயிண்ட்டிஸ்ட். தன் மகன் வீட்லயே சின்னதா ஒரு ஆராய்ச்சிக்கூடம் அமைச்சு டைம் டிராவல் மிஷின் பற்றி ஆராய்ச்சி பண்ணிட்டு இருக்கார்.. அவர் கிட்டே ஒரு பேசும் நாய் இருக்கு. நாய் பேசுமா?ன்னு எல்லாம் கேட்கக்கூடாது. மேடை ஏறிட்டா கண்ட நாய்ங்க எல்லாம் பேசும்போது நன்றி உள்ள நாய் பேசுனா இன்னா தப்பு?


அவர் ஆராய்ச்சி நடத்தும்போது அவர் நண்பர் அவரை பார்க்க வர்றார். பாதிலயே விட்டுட்டுப்போறார். அப்போ அங்கே வரும் பேரக்குழந்தைங்க ஒரு பையன், ஒரு பொண்ணு 2 பேரும் தவறுதலா பல நூற்றாண்டுகள்  முன்னால சாரி பின்னால போயிடறாங்க.. டினோசர் காலம்..



விஞ்ஞானி லிவி குழந்தைகளை காணாம பதறி அவரும் அதே காலகட்டத்துக்கு வந்து அவங்களை பார்த்துடறார்.. ஆனா ரிட்டர்ன் போகனும்னா  டைம் மிஷின்க்கு கரண்ட் , அல்லது பேட்டரி வேணும்.. இப்போ இருக்கற காலத்துல கரண்ட் ஏது? பேட்டரி ஏது?


 அவங்க எப்படி தப்பிக்கறாங்க? இதான் கதை..



http://www.cinejosh.com/gallereys/movies/normal/adhisaya_ulagam_3d_movie_photos_1503120835/adhisaya_ulagam_3d_movie_photos_1503120835_016.jpg


 கேட்க நல்லா த்தான் இருக்கு.. ஆனா லோ பட்ஜெட் படம்கறதால கிராஃபிக்ஸ் சீன்ல குவாலிட்டு குடுக்க முடியல. ஆனா சாமான்ய ரசிகனுக்கு அது பற்றி அக்கறை தேவை இல்லை

 லிவிங்க்ஸ்டன் நல்ல தேர்வு.. அவர் ஃபிரெஞ்ச் தாடி வெச்சாலே சயிண்ட்டிஸ்ட் ஆகிட்ட மாதிரி ஒரு ஃபீலிங்க்.. ( அவருக்கு)மொத்தப்படமே 1 1/2 மணி நேரம் தான்... அதனால ஒண்ணும் சொல்லிக்கற அளவு இல்லை..


வாண்டுகள் 2ம் குறும்புகள், சண்டைகள் போடறது  நல்லாருக்கு. ஆனா எதுக்கெடுத்தாலும் அவங்க வாவ் என்ற ஆச்சரியச்சொல்லை உபயோகிக்கும்போது கடுப்படிக்கிறது..


http://moviegalleri.net/wp-content/gallery/adhisaya-ulagam-3d-movie-stills/adhisaya_ulagam_3d_movie_stills_9468.jpg



மனம் கவர்ந்த வசனங்கள்


1.  அப்பா, யாரோ ரேங்கோ பாஷையாம், உங்களை பார்க்க வந்திருக்கார்.

 ஹய்யோ, அது ரங்க பாஷ்யம்மா


2. இனி நம்ம காலத்துக்கு போக முடியாதே?



 ஐ ஜாலி.. ஸ்கூல்க்கு போக வேண்டியதில்லை, ஹோம் ஒர்க் செய்ய வேண்டியதில்லை..




3.இப்போ என்ன புரிஞ்சுதுன்னு நீ சிரிக்கறே?



http://www.retham.com/plogger-1.0RC1/plog-content/images/movie-stills/adhisaya-ulagam-3d/adhisaya-ulagam-3d12.jpg



இயக்குநரிடம் சில கேள்விகள்


1. ஒரு கேனத்தனமான வசனம் பாருங்க -


“ நீ ஏன் ஃபோனை எடுக்கலை?


குளிச்சிட்டு இருந்தேன்

 ஓஹோ! அப்போ குளிக்கறப்போக்கூட ஃபோனை பக்கத்துல வெச்சுட்டு குளிப்பியா?அதனால தான் எடுக்கலையா?



 குளிக்கறப்போ ஃபோன் வந்தா எப்படி எடுக்க முடியும்? ஈரம் ஆகிடாதா? 



2. லிவிங்க்ஸ்டன் அவர் நண்பர் வந்தார்னு பாதிலயே ஆராய்ச்சியை அப்படியே விட்டுட்டு வெளீல போறப்போ நாய் கிட்டே “ யாரும் உள்ளே வராம பார்த்துக்கோ”ங்கறார்.. அதுக்கு கதவை பூட்டிட்டே போகலாமே?


3. லிவியின் பேரப்பசங்க அந்த சர்க்கிள்க்குள்ளே நின்னு சண்டை போட்டுட்டு இருக்காங்க.. அதை ஸ்கேனிங்க்ல காட்டறப்போ 2 பேரும் சும்மா எதிர் எதிரே நிக்கற மாதிரி காட்டுது.. அதுவும் அட்டென்ஷன் பொஷிஷனில். மறுபடி அவங்களை காட்டும்போது அவங்க தொடர்ந்து சண்டை போட்டுட்டு இருக்காங்க..



4. கண்னாடியை அந்த ஆதிவாசி மனுஷன் பார்த்து மிரள்ற மாதிரி சீன் நம்ப முடியல. ஆல்ரெடி அவன் தண்ணீர்ல, குளம் குட்டை, ஆறு, கிணறுன்னு தன் முகத்தை பார்த்திருப்பானே?


5. டைம் மிஷினோட ரூல்ஸ் பிரகாரம் கடந்த காலத்துக்குள்ளே போனா எந்த பாதிப்பும் ஏற்படுத்தக்கூடாதுன்னு ரூல்ஸ் இருக்கும்போது அந்த ஆதி வாசியை எப்படி இங்கே நிகழ்காலத்துக்கு கூட்டிட்டு வர முடியும்?


6. டைம் மிஷின் ரொம்ப லைட்டான பொருளை டெலி போர்ட்டிங்க் மெத்தட்ல  கடந்த காலத்துக்கு பாஸ் பண்ண முடியலைன்னு காட்டறாங்க. அதே போல் ரொம்ப வெயிட்டான பொருளுக்கும் அதே ரூல்ஸ் பொருந்தும்தானே? எப்படி டினோசர் நிகழ்காலத்துக்கு வருது?


7. அந்த பேரக்குழந்தைங்க 5 நிமிஷத்துக்கு ஒரு தடவை வாவ் சூப்பர் தாத்தா என்று சொல்வதாக ஒரு டயலாக் வருவது செம கடுப்பு.. 



http://www.tamilstar.com/photo-galleries/tamil-cinema-adhisaya-ulagam-3d-movie-stills/images/tamil-cinema-adhisaya-ulagam-3d-movie-stills05.jpg



 கவுண்டமணி இயக்குநரிடம் கேட்கும் கேள்வி


 தம்பி , இங்கே வா.. உன் கிட்டே புரொடியூசர் என்ன சொன்னாரு?



 சயின்ஸ் ஃபிக்‌ஷன் படம் எடுக்கச்சொன்னாரு


 எவ்ளவ் ரூபா  குடுத்தாரு?


50 லட்சம் கொடுத்தாரு..


 எடுத்தியா?


 எடுத்தேண்ணே..


 எங்கே அந்தப்படம்?

 இதாண்ணே அது..


 கடுப்பைக்கிளப்பாத. ஓடிப்போயிடு .. ராஸ்கல்.


சி.பி கமெண்ட் - கொஞ்சம் கூட பொறுப்பே இல்லாம சின்ன சின்ன பொம்மைகளை வெச்சு படு மோசமான படமாக்கம் இது.. ஆரும் போயிடாதிங்க.. மீறிப்போனா... அப்புறம். அப்பளம் தான் ..  ஈரோடு தேவி அபிராமில படம் பார்த்தேன்

Friday, August 17, 2012

பாண்டி ஒலிப்பெருக்கி நிலையம் - சினிமா விமர்சனம்

http://www.mystills.net/wp-content/uploads/2012/07/pandi-oli-perukki-nilayam-movie-audio-launch1-15.jpg

பூ மகள் ஊர்வலம், பாண்டி, மாயாண்டி குடும்பத்தார், முத்துக்கு முத்தாக, கோரிப்பாளையம் என்று வரிசையா இயக்குநர் ராசு மதுரவனுக்கு ஏறுமுகம்.. குறிப்பா  இவர் படங்கள் பழைய விசு படங்கள் லெவல்ல இருக்கறதா நல்லா பேரு வாங்கிட்டாரு.. இந்தப்படம் எப்படின்னு பார்ப்போம்.. 


மாயாண்டி குடும்பத்தார்  ஹீரோ மாதிரி இந்தப்பட ஹீரோவும் மைக் செட் காரர். இப்பவெல்லாம் கிராமத்துப்படம்னா  மைக் செட் தான் ஃபேஷன் போல.. ஹீரோயின் சுனைனா . சின்னத்தம்பி குஷ்பூ மாதிரி இவருக்கு 4 கேனை கம் ரவுடி அண்ணன்க.. ஊர்ல யாராவது சுனைனாவை சும்மா பார்த்தா போதும்.. சைட் அடிச்சா போதும் உடனே பப்ளிக் டாய்லெட்டை 4 நாட்கள் வாஷ் பண்ணனும்.. இதான் கேவலமான தண்டனை../


ஹீரோவுக்கும் ஹீரோயினுக்கும் 3 முறை சந்திப்பு நடக்குது.. அந்த சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த சம்பவங்கள்


http://birlaa.com/pics/wp-content/uploads/2012/07/sunaina-homely-saree.jpeg


1.ஹீரோ எதுக்கோ டாஸ் போடறாரு.. அது 2 கிமீ தூரத்துல ஸ்கூட்டில போய்ட்டு இருக்கற ஹீரோயின் டி சர்ட்டுக்குள்ளே விழுந்துடுது ( 34 வது படம் இப்படி விழுவது)


2. ரோட்ல பஸ்டாப்ல நிக்கற குழந்தைக்கு புட்டிப்பால்ல பால் குடுக்கும்போது அந்த ஃபீடிங்க் ரப்பர் ஸ்லிப் ஆகி ஹீரோயின் கொண்டைல போய் நச்சுன்னு ஃபிட் ஆகிக்குது.. ( நல்ல வேளை.. )


3. சாவிக்கொத்தை கைல வெச்சு விளையாட்டா சுத்திட்டு இருக்காரு.. அது மிஸ் ஆகி மிஸ்சோட ஜீன்ஸ் பேண்ட் சைடு பாக்கெட்ல போய்  லாக் ஆகிக்குது ( பூட்டு - சாவி டைரக்‌ஷன் டச்சாம் )ர்


 இந்த 3 கேவலமான சந்திப்பில் நடந்த வாக்குவாதத்தில் ஹீரோயினுக்கு லவ் வந்துடுது..  எல்லாரும் நல்லா நோட் பண்ணிக்குங்க.. இந்த மாதிரி நிஜ வாழ்வில நாம செஞ்சா செருப்படி தான் கிடைக்கும்  அதுவும் ஹை ஹீல்ஸ் செப்பல் அடி.. 


2 பேரும் ஊர்ல எல்லாரும் பார்க்கற மாதிரி லவ்வறாங்க.. அண்ணன்க வில்லனா வருவானுங்கன்னு பார்த்தா அவங்க விக்ரமன் பட ஹீரோ மாதிரி அம்புட்டு நல்லவரா இருக்காங்க. லவ்க்கு ஓக்கே... ஹீரோயினுக்கு 2 லூஸ் முறை மாமனுங்க இருக்காங்க.  அவனுங்களும் எங்கிருந்தாலும் வாழ்கனு சொல்லிடறாங்க.. 


 அப்புறம் யார் தான்யா வில்லன்? எப்படித்தான் கதையை நகர்த்த? 17 அசிஸ்டெண்ட் டைரக்டர்சையும்  ரூம் போட்டு யோசிக்க சொல்றாரு.. ஆ!!!! ஐடியா.. ஆரம்பத்துல அண்ணன்களால அவமானப்படுத்தப்பட்டு  டாய்லெட் க்ளீன் பண்றானே அவனை வில்லனா போட்டு  ஹீரோயினை கொலை பண்ணிடறாங்க.  படத்துல கதையையே கொலை பண்ற ஆட்களால ஹீரோயினை கொலை பண்ண முடியாதா?



https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhmGgo_Dkae8TZyTjn5La3zUaAGDVFoKA5gnanEFr4ZEMYeG8nSsxZvLBJiXu8pLVdRkKwNZSCHK9r8fW5xL4zzlo2UKj0VnFOgC9-4VKqdvUFCkjMINR3Xdjk3PKlwI_I3KaReBzZ8ptMa/s1600/Sunaina-CloseUp.jpg


 ஹீரோ தலைல நங்க்னு ஒரு அடி.. ஆள் ஆல்ரெடி கேனம் மாதிரி இருந்த ஹீரோ நிஜமாலுமே கேனம் ஆகிடறாரு.. பூந்தோட்டக்காவல் காரன் , செந்தூரப்பூவே விஜய்காந்த் ரேஞ்சுக்கு ஹீரோவை காட்ட நினைச்சிருக்காரு இயக்குநர் .

 உஷ் .. அப்பா முடியல.. படம் போடும்போது 49 பேர் இருந்தாங்க.. முடியும்போது 28 பேர்தான் இருக்காங்க.. பாதிலயே வெளிநடப்பு போல,


 ஹீரோ யாரோ ஒரு தயாரிப்பாளர் பையன் போல. தாடி வெச்ச கேடி போல் எண்ணெயே பார்க்காத தலையுடன் படு கேவலமா இருக்கார்.. நோ கமெண்ட்ஸ்..

 அடுத்து சுனைனா.. இவர் ஒரு உதட்டழகி.. மாநிற மேனி. தாவணியில் அழகாக வலம் வந்தால் அழகா இருப்பார்.. கேரக்டரைசேஷன் எடுபடலை.. 

தம்பி ராமையா குணச்சித்திர நடிப்பு ஓக்கே . கருணாஸ், வையாபுரி மொக்கைகள் முடியல.. புரோட்டா புகழ் சூரி பன்ற 2 மொக்கை காமெடி கொஞ்சமே கொஞ்சம் ரசிக்க வைக்குது..






இயக்குநர் பாராட்டு பெறும் இடங்கள்

1. படம் எப்படியும் போணி ஆகாதுன்னு தெரிஞ்சுக்கிட்டு சுனைனாவை வெச்சு ஆத்துல ஒரு குளியல் சீனை எடுத்து அதை  மாலை மலர், மாலை முரசு மாதிரி பத்திரிக்கைக்களுக்கு குடுத்து கிளாமர் இருக்குன்னு ஒரு தோற்றத்தை
 ஏற்படுத்துனது ( ஆனா எதிர்பார்த்த அளவுக்கு இல்லை.. )


2. படத்தை போட்டுப்பார்த்துட்டு உங்களுக்கே சந்தேகம் வந்து அவசர அவசரமா  படத்துக்கு சம்பந்தமே இல்லன்னாலும் பரவாயில்லைனு தம்பி ராமையாவுக்கு ஒரு கிளைக்கதை ரெடி பண்ணி அவர் மகன் லவ்வரோட ஓடிப்போற மாதிரியும், அதை ஹீரோ தடுத்து நல்ல புத்தி சொல்லி கூட்ட்டிட்டு வர்ற மாதிரியும் எடுத்து அதை படத்தோட படாத பாடு பட்டு சிங்க் பண்ணது..


3. சிங்கம் புலி, புரோட்டா சூரி இவங்க 2 பேரையும் புக் பண்ணுனது.. ஓரளாவாவது படத்தை பார்க்க முடியுதுன்னா  அது இவங்க 2 பேர் காமெடியால தான்.


.4. ஹீரோயின் எடுத்துக்குடுத்த ஜீன்ஸ் பேண்ட்டில் ஃபேஷன் கிழிசல்களை பார்த்து ஓட்டை பேண்ட்டை ஏமாத்திக்குடுத்துட்டே என சண்டை போடும் காட்சிகள் ஆல்ரெடி பல படங்களில் பார்த்திருந்தாலும் ஓரளவு சிரிப்பு வருது


5. ஆத்துல குளிக்க வந்த அக்கா மகளை பார்த்தேன், அழகான நிலவை மெலோடி சாங்க் என 2 பாட்டுக்கள் செம ஹிட் ரகம்



http://1.bp.blogspot.com/-WjruIfxCu5c/T_sUCqP7ruI/AAAAAAAAL-Q/icNceZFPOk0/s1600/Sunaina+hot+in+green+bra,+Sunaina+without+saree,+Sunaina+in+bra.jpg

இயக்குநரிடம் சில கேள்விகள்


1. எங்க ஊர்ல எல்லாம் பேட்டா செருப்பு கம்பெனி புரொடக்‌ஷன் அதிகமா பண்ண வேண்டி இருந்தா சப் காண்ட்ராக்டர்ஸ் கிட்டே செப்பல் மேனுஃபேக்சர்க்கு ஆர்டர் குடுத்து   அவங்க கிட்டே செப்பல் வாங்கி 10 ரூபா கூலி குடுத்து அதை பேட்டான்னு பேர் போட்டு 399 ரூபாக்கு விற்பாங்க.. அந்த மாதிரி யாரோ ஒரு உதவி இயக்குநரை இயக்கச்சொல்லி உங்க பேரை போட்டுக்கிட்டீங்களா?


2. உங்களுக்குன்னு ஒரு பேரு, மதிப்பு, மரியாதை இருக்கு.. அதை ஏன் கெடுத்துக்கறீங்க?நாளை நல்ல படமே எடுத்தாலும் நம்பகத்தன்மை வருமா? அடுத்த படத்துக்கு ஓப்பனிங்க்குக்கு என்ன பண்ணப்போறீங்க?


3.  காமெடி ஸ்க்ரிப்ட் எழுத ஆளே சிக்கலையா? முல்லா கதைகள், பீர்பால் கதைகள் எல்லாம் படிச்சுட்டு அரதப்பழசான  மொக்கைகளை வெச்சு காமெடிங்கற பேர்ல ஏன் இப்படி கொலையா கொல்றீங்க?


4. கருணாஸ் உயரமே  5 அடி 2 அங்குலம் தான்.. அவர் உயரம் குள்ளமா இருக்கறவரை கிண்டல் பண்ணி காமெடி பண்றாரு.. சகிக்கலை.. உடல் ஊனமுற்றவர்கள் சாரி. மாற்றூத்திறனாளிகளை நக்கல் அடிக்கும் காமெடியை நிறுத்துங்க.. முதல்ல.. 


5. கேட்டுக்கோடி உருமி மேளம் பாட்டை ரீமிக்ஸ் பண்ணுனது மகா கோரம்.. முடியலை.. அதைக்கூட மன்னிச்சுடலாம்.. அந்த பாட்டை ஃபாரீன்;ல போய் எடுத்திருக்கீங்க.. ஃபாரீன்கேர்ள்ஸ் நடனத்தோட.. ஷூட்டிங்க் பார்த்த ஃபாரீன்காரங்க தலைதலையா அடிச்சு இருப்பாங்க.. ( அவங்க தலைல தான் )


6. இது சும்மா காமெடிக்காக -ஓப்பனிங்க் ஸாங்க்ல பல்லவி முதல் லைன் - 6 மாசம் முன்னாடி பார்த்த சரோஜா, நீ அப்படியே இருக்கியேடி அழகு சரோஜா ..அப்படின்னு லைன்ஸ் போட்டுட்டு சரணத்துல பத்தாம் வகுப்பு ஒண்ணா படிச்சப்போ பார்த்த சரோஜான்னு வருதே.. எப்படி?

http://www.abimani.com/wp-content/gallery/pandi-oli-perukki-nilayam-movie-hot-stills/pandi-oli-perukki-nilayam-movie-hot-stills-1.jpg

மனம் கவர்ந்த வசனங்கள்


1.   கடுகு 100 குடுங்க..

 ஓக்கே

 நோ இப்படி இல்லை.. கவுண்ட்டிங்க்ல 100 வேணும்./

 அடேய்

 எது வாங்குனாலும் எண்ணிப்பார்த்து வாங்குன்னு முதலாளி சொல்லி இருக்காரு



2. சாம்பார்ல உப்பு இருக்கா?ன்னு பாரு


 பார்த்துட்டேன், இல்லை முதலாளி..


 கொஞ்சம் உப்பு எடுத்து போடு



 போட்டாச்சு முதலாளி..

 இப்போ இருக்கா?ன்னு பாரு..

 இப்பவும் இல்லை முதலாளி..


இதே மாதிரி6 டைம் போட்ட பின்

 அடேய் இங்கே வெச்சிருந்த 5 கிலோ உப்பு எங்கேடா?


----.....

 உனக்கு மண்டை இருக்கே? அதுல மூளை இருக்கா?



3. உலகத்துல சல்லடை போட்டு தேடுனாலும் உன்னை மாதிரி முட்டாள் கிடைக்க மாட்டான்.. ஒரு வகைல எனக்கு என்ன சந்தோஷம்னா என்னை எதிர்த்து ஒரு நாளும் நீ கடை போட மாட்டே..


4. காசு வாங்கனும்கறதுக்காக பொய்யா அழுவாதே./.


 ம்க்கும், அவன் கிட்டே காசை கொடுத்துட்டா அப்புறம் நீ அழுவியே?



5. நீ லூஸ்னு அவன் சொல்றான்.. அது உண்மையா?


 அவன் என்ன சொல்றது? நான் சொல்றேன்.. நல்லா கேட்டுக்குங்க. நான் லூஸ் தான்..



 6. மிஸ்.. 2 பேர்ல யார் போடறதுன்னு நீங்க தான் முடிவு பண்ணனும்..


என்னது?

 ஐ மீன்.. மைக் செட் போடறதுல யார்னு நீங்க தான் முடிவு பண்ணனும்.. டாஸ் போட்டோம். அது உங்க டி சர்ட்ல விழுந்துடுச்சு

 யோவ், இது என்ன உண்டியலா? சரி இந்தா..

 அடடா.. பூவா? தலையா? பார்க்காமயே குடுத்துட்டீங்க?






7. அவ பொண்ணுதான் சிவப்பு.. ஆனா அவங்கண்ணன்க அடிச்சாக்கா ரத்தச்சிவப்பு


8. ஜெயிலரை விட ஜெயிலுக்குள்ளே அதிக நாள் இருந்தவன் அவ மாமன்


9. ஏங்க ஏங்க.. நில்லுங்க.. இவ்ளவ் வேகமா போனா எப்படிங்க பால் குடிக்க முடியும்?


 வாட்?



குழந்தை பால் குடிக்கறப்போ ரப்பர் உங்க தலைல விழுந்துடுச்சு./. அதை எடுக்கலாம்னு பார்த்தா இவ்ளவ் வேக,மா போனா எப்படிங்க?


10. அளவா இருந்தாலும் நம்மளை மாதி மைக் செட் ஆளுங்களை   இழவு வீடுதான் வாழ வைக்கும்


http://www.movieballet.com/wp-content/uploads/2012/03/sunaina-10.jpg



11. எப்போ பார்த்தாலும் பழைய வண்டிக்கே ஆசைப்படறியே, ஏன் ? ( டபுள் மீனிங்க் )


எத்தனை புது வண்டி வந்தாலும் புல்லட் மாதிரி வருமா? நீ வேணா பாரு.. இந்த குஜராத் காரிய ஐ மீன் குஜராத் வண்டியை நான் சொந்தமாக்கப்போறேன்


12. ஒரே வாய்ல 20 இட்லி சாப்பிடுவேன்.. பந்தயமா?

 ம் .. பெட்..

 நல்லா பார்த்துக்க . இந்த ஒரு இட்லி சாப்பிட்ட இதே வாயால ஒவ்வொண்ணா மீதி 19 இட்லியையும் சாப்பிடறேன்


13. ஹலோ மிஸ்.. நில்லுங்க.. நான் தொறக்கனும்

 என் கிட்டே என்ன திரக்கப்போறீங்க?


 என் சாவி உங்க இடுப்புல மாட்டிக்கிச்சு



14. சாணியை தொட்டு புரோட்டா சாப்பிடறேன் .. பந்தயமா?

 ம்


 இடது கையால சாணியை தொட்டுக்கறேன். வலது கையால  புரோட்டா சாப்பிடறேன், எப்படி?


15. ஹீரோயின் - உனக்கும் எனக்கும் மேரேஜ் ஆகாம இருக்கலாம்,. ஆனா எனக்கும் உனக்கும் மேரேஜ் ஆகிடுச்சு ( யாருக்காவது புரிஞ்சுதா/? )




16.  யோவ்,. இன்னும் 2 நாள்.. ரெண்டே நாள்ல உன்னை கதற கதற..


 அய்யய்யோ..


 காதலிக்க வைக்கறேனு சொல்ல வந்தேன்யா.. ஏன் பதர்றே?



17. யோவ், என்னய்யா,வாய்ல வாய் வெச்சு  தண்ணியை எடுப்பேன்னு பார்த்தா?

 எனக்கு நீச்சல் தெரியாது.. நீ சொல்ற மாதிரி செய்ய நீ என்ன பம்ப் செட்டா?


18. அறிவே இல்லாத உனக்கு ஏழாம் அறிவு கெட்டப்பா?



19. சிங்கம்புலி - வில்லன் ஆட்கள் உதைக்க பறந்து வந்து ஒரு கில்மா லேடியின் கன்னத்தில் பட்டு



 ஃபிளையிங்க் கிஸ் கேள்விப்பட்டிருக்கேன். இப்போதான் முத முறையா குடுக்கறேன், ஆஹா!



20. டேய், வீரப்பா, நம்பியார், அசோகன், எல்லா வில்லன்களும் அந்த வீட்ல தான் இருக்காங்க


https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhVP4z_kJ9lVpIVfjaLowNsN8TD8kFLkvTyIPTisz5JBmZoU9UhUmeVF61P_ei3k8X01D4gRmyYAWu2zuXnEV-N0tGbnQagLzzHkmRQLA3SwI2DIx50C20hXCZZPWsJPInYDYiXK8a1mouc/s1600/Sunaina-hot-cleavage.jpg



21.  முடி இருந்தா உறவு நீடிக்கும் மேடம்..



 யோவ்.. அப்போ ஏன் இந்தியா பாகிஸ்தான் பிரச்சனை, இலங்கைப்பிரச்சனை வருது? லாரி நிறைய முடி லோடு ஏத்தி அனுப்பி உறவை நீடிக்க வைக்கலாமே?


22. இங்கே எல்லா விதமான பிரியாணியும் கிடைக்கும்.. நிற்பன, நடப்பன, பறப்பன, ஊர்வன


 அப்போ ஏரோபிளான் பிரியாணி குடு , அதும் பறக்கறதுதானே?


23. கருணாஸ் - நான் பண்ணுனது சரியா?

 நீ அந்தப்பொண்ணு கிட்டே செஞ்சதுல குழந்தை மட்டும் தான் பிறக்காது , மத்ததெல்லாம் ம் ம் ஆகி இருக்கும்



24. அடுத்தவங்களூக்காக எப்போ நீ கவலைப்படறியோ அப்பவே நீ பெரிய ஆள் ஆகிட்டே..




சி.பி கமெண்ட் - டி வி ல போட்டாக்கூட பார்த்துடாதீங்க.. மரண மொக்கை.. ஈரோடு ஆனூர் தியேட்டர்ல பால்கனி வழக்கமா 50 ரூபா தான். ஆனா இன்னைக்கு 70 ரூபாயாம்.. பழிக்குப்பழி  தியேட்டரை விட்டு வெளீல வர்றப்போ 50 பேரை வீட்டுக்கு திருப்பி அனுப்பிட்டுதான் வர்றேன்.ஒரு நல்ல படத்தை போய்ப்பாருங்கன்னு சொல்ற  உரிமை இருக்கும்போது ஒரு குப்பைப்படத்தை பார்த்து அவங்க காசு வேஸ்ட் ஆகக்கூடாதுன்னு நினைக்கறதும் ஒரு சமூக சேவை தான்.



 ஆனந்த விகடன் எதிர்பார்ப்பு மார்க் - 38


 குமுதம் ரேங்க் - சுமார்

http://moviegalleri.net/wp-content/gallery/pandi-oli-perukki-nilayam-movie-stills/pandi_oli_perukki_nilayam_movie_stills_sabarish_sunaina_2279e53.jpg


 டிஸ்கி -

1. EK THA TIGER - ரொமான்ட்டிக் ஆக்‌ஷன் - பாலிவுட் சினிமா விமர்சனம் 

 

2. நான் - NON-STOP க்ரைம் த்ரில்லர் - சினிமா விமர்சனம் 

http://www.adrasaka.com/2012/

08/non-stop.html

 

3. அட்டகத்தி - சினிமா விமர்சனம் 

http://www.adrasaka.com/2012/

08/blog-post_15.html
--

 

 http://tamilogallery.com/albums/Sunaina/Sunaina_Hot_Photos4.jpg

Thursday, August 02, 2012

மதுபானக்கடை - சினிமா விமர்சனம்

https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhv9OUgDYnhJAT9mlfZ9F8XV2CSmK41mmQnL8yqzmrUftZldYIfKdmZ-7X1mmqyoaqDgxtuJsGfS6NsXHeh5G5rnZu0SJcgXW0itZDadclxGdeJwjuY6XWoZvocI3G11z1fOCsgfDjo-JjF/s1600/Madhubaanakadai.jpgஈரோடு மாவட்டம் பெருந்துறை அருகே உள்ள  பெத்தாம்பாளையம் தான் கதைக்களன்.. ஈரோடு கமலக்கண்ணன் தான் இயக்குநர்.. முழு படமும் ஒரே ஒரு டாஸ்மாக்கில் நடக்கும் சம்பவக்கோர்வைகள் தான் .. வித்தியாசமான முயற்சிதான்.. ஆனாலும் இன்னும் மெனெக்கெட்டிருக்கலாம்.. பெண்கள் பார்க்கவே முடியாது என்பது பெரும் குறை. அதை இயக்குநரும் உணர்ந்தே இருக்கிறார்.. 

 படத்தை பத்தி பார்க்கறதுக்கு முன்னே  தமிழ் இலக்கியத்துல கேரக்டர்ஸ்  புத்தகம் பற்றி பார்ப்போம்.. ஆரம்பத்துல நாவல் தான் தமிழனை இலக்கிய உலகில்  புக வெச்சுது.. ( பிரதாப முதலியார் சரித்திரம்) அப்புறம் சிறுகதை.. பயணக்கட்டுரை.. கவிதை என அதன் எல்லைகள் விரிஞ்சுக்கிட்டே போனாலும் கேரக்டரஸ்க்கு மக்கள் ஆதரவு கம்மிதான்.. அமரர் சாவி எழுதுன கேரக்டர்ஸ் தொடர்  சுவராஸ்யமா இருந்தாலும் அது புத்தகமா வந்தும் கூட பெரிய வரவேற்பு பெறலை.. 



http://static.ibnlive.in.com/ibnlive/pix/sitepix/05_2012/2805-mbk-p-l.jpg



1. டாஸ்மாக் பார் ஓனர் - கள்ளச்சாராயம், போலி மது இவற்றை அப்பப்ப கலந்து கட்டி சேல்ஸ் பண்றவர்.. எந்த பிரச்சனையும் வராம பாரை நடத்தனுமேன்னு எச்சரிக்கை உணர்வோட எல்லார் கிட்டேயும் கண்டிஷனா நடப்பவர்


2. பார்ல வேலை செய்யும் சப்ளையர் நெம்பர் 1... இவன் எப்போ பாரு செல்ஃபோனும் கையுமா பேசிட்டே இருப்பான்.. யார் கிட்டே?டாஸ்மாக் பார் ஓனர் பொண்ணு கிட்டே.. செம கடலை... பாலைவனத்துல இளநீர் குடிச்ச மாதிரி ஒரே  சரக்கும் சலம்பலுமா போகும் திரைக்கதையில் இவர் போர்ஷன் தான் கொஞ்சம் ஆறுதல்.. 

3. பார்ல வேலை செய்யும் சப்ளையர் நெம்பர் 2.. ஓனர் பொண்ணு கிட்டே காதல் வெச்சுக்கிட்டா அபாயம்னு எச்சரிப்பவன். அதுக்காக கைகலப்பு வரை போனாலும் சக பணியாளருக்கு ஓனரால் ஆபத்து எனும்போது கை கொடுத்து கை தட்டலை அள்ளிக்கொள்ளூபவர்


4.ஓனர் பொண்ணு.. மாநிறத்து மல்கோவா மா.. ஊர்ல எத்தனையோ பசங்க இருந்தும் போயும் போயும் தாடியும் , அழுக்கும் உள்ள ஆ:ளை லவ் பண்ணுவது முரண்பாடு என்றாலும் காதலே  முரண் உள்ள இரு துருவங்களிடையே தோன்றவும் வாய்ப்பு உள்ளதுதானே.. இவர் ஹீரோவுடன் நெருக்கமாக உரசும் கட்டங்கள் , லிப் கிஸ் என செம கிளு கிளு.. வரம்பு மீறாமல்.. 


5. எங்க ஊரு பாட்டுக்காரன் மாதிரி.. ஓ சி சரக்கு வாங்க பாட்டு பாடி கஸ்டமர்ஸை கரெக்ட் பண்ணி கவர் பண்றவர்,, இவர் மாதிரி கேரக்டர் ஊருக்கு 2 பேராவது இருப்பாங்க.. 


6. போலீஸ், பார் ஓனர் உட்பட அனைவரும் பார்த்து மிரளும்  பெட்டிஷன் மணி.. குடிச்சே சலமபல் பண்ணும் ஆள்.. ஆன்னா ஊன்னா எல்லார் கால்லயும் விழும் ஆள்.. தன் அப்பாவிடம் இவர் சரக்கடித்து புலம்பும் காட்சிகள் இன்னும் கண்ணுக்குள் நிக்குது


7. காதல் தோல்வியால் முதன் முதலாக சரக்கு அடிக்க வரும் இளைஞன் பெண்களை பற்றி கோபமாக பேசும் காட்சிகள் தியேட்டரில் விசில் பறக்கிறது.. எல்லாரும் பயந்து நடுங்கும் அறுவை பெட்டிஷன் மணியே இவனை பார்த்து பயந்து போவது காமெடி. 


8. இங்கிலீஷ்ல “ சார்.. பஸ்ஸை மிஸ் பண்ணிட்டேன் 35 ரூபா வேணும் என கவுரவ பிச்சை எடுத்து அதில் சரக்கு அடிக்கும் கேரக்டர்.. 


9. ராமன் - அனுமார் வேஷம் போட்டு பிச்சை எடுக்கும் நபர்கள் அங்கே வந்து சரக்கு அடிப்பதும் பேசும்  வாழ்க்கைத்தத்துவங்கள்.. 


10. மகிழ்ச்சியைக்கொண்டாட அல்லது சோகத்தை மறைக்க குடிப்பவர் மத்தியில் செய்யும் வேலையில் வரும் நாற்றத்தை மறைக்க, மறக்க குடிக்கும் சாக்கடைத்தொழிலாளர்கள்.. அவர்கள் பேசும் வசனத்தில் பொறி பறக்கிறது.. அபாரம்.,. 

11. திருநங்கைகள்


12. பார் வாசலில் பெட்டிக்கடை வைத்திருப்பவர்


13. இந்த கேவலமான பிழைப்பான டாஸ்மாக் பாரில் கூட வந்து கேவலமாக பிச்சை எடுக்கும் ஐ மீன் லஞ்சம் வாங்கும் போலீஸ் கான்ஸ்டபிள்.. 



http://tamil.cinesnacks.net/photos/movies/Madhubaanakadai/madhubaanakadai-movie-stills-002.jpg


மேலே சொன்ன கேரக்டர்கள் போக சின்ன சின்ன கேரக்டர்களும் உண்டு.. எல்லாரும் வாழ்க்கையில் நாம் தினம் சந்திக்கும் நபர்களே.. 


நடிப்புல முதல் இடம் பார்  ஓனர்க்கு.. அடுத்து அந்த ஹீரோயினுக்கு.. செம அழகு.,. கிராமத்துக்குயில்.. மேக்கப்பே இல்லாத அழகு முகம்,.,. அல்லது மேக்கப் போட்டிருப்பதே தெரியாத இயற்கை முகம்.. 


பெட்டிஷன் மணிக்கு க்ளோசப் காட்சிகள் அதிகம்.. தவிர்த்திருக்கலாம்.. குமட்டுது.. பாட்டுப்பாடும் கேரக்டர் கலக்கி விட்டார் மனிதர்

 4 பாடல்களில் 2 பாடல்கள் சூப்பர் ஹிட்..

1. மஞ்சள் நிற போதையிலே கட்டெறும்பு போகையிலே என்னுடைய தேவதை செம கலக்கு கலக்குது.. 

2. கள்ளம் இல்லாத 

3. சமரசம் உலாவும் இடம்


பாடல்களில் டச்சிங்க் வரிகள்-


குடித்து குடலழுகி ரெண்டு நாளில்
செத்துப் போவாய் என்று சொன்ன மருத்துவன்
நேற்றே இறந்து போனான்
சாவுக்கு பயமில்லை, சாத்திரங்கள் ஏதுமில்லை
இன்றிருப்போர் நாளையில்லை என்றே குடிக்கிறோம்


“கள்ளுக் குளம் வெட்டி ராமன் குளிச்சதும்
ஆதிக் குடியில தான்.
அப்பனும் மவனும் கோயிலில் சாமியும் சேர்ந்து குடிச்சோமடா
ஒழுக்கங்கெட்டவன்னு நம்மாளச் சொன்னது மேட்டுக் குடிகளடா
 http://moviegalleri.net/wp-content/gallery/madhubaanakadai-shooting-spot-stills/madhubaanakadai_movie_shooting_spot_stills_2234.jpg



 மனம் கவர்ந்த வசனங்கள்

1.  போய்யா..  தகராறு பண்ணாம கிளம்பு.. 



உள்ளிருப்புப்போராட்டம் நடத்தப்படும்


2. டைம் ஆச்சு.. கடை சாத்தனும், கிள்மபலை?

ஏன்? அவன் மட்டும் இருக்கான்?

 அவன் ஒரு லூசுப்பையன்.. நீயுமா? கிளம்புடா.


3. டெயிலி இப்டி கழநீர்த்தண்ணி டீ வாங்கிட்டு வற்றியே, ஒரு நாளாவது ஹார்லிக்ஸ் வாங்கிட்டு வந்தா என்ன? 


நாளைக்கு சாகப்போற. உனக்கு  ஹார்லிக்ஸ் கேட்குதா?



4. ஹீரோயின் - யார் நீ?

 உன்னை வெச்சு குடும்பம் நடத்தப்போறவன்


 அதை நீ முடிவு பண்ண வேணாம். பண்னவும் கூடாது, எங்கப்பா....


5. இன்னுமா கடை திறக்கலை?


ஆறு மணி ஆக வேணாமா? 


 ஈசியா சொல்லிட்டே. நாங்க எல்லாம் குடிச்சு பழக்கப்பட்ட ஆள்ங்க, டைம்க்கு குடிச்சே ஆகனும்..



6. குடிகாரன்னா உனக்கு எளக்காரமா? 5 ஆந்தேதி வர வேண்டிய சம்பளம்  7 தேதி ஆகியும் வர்லைன்னா விதிர் விதிர்த்துப்போகமாட்டே?10 மணிக்கு ஏன் சரியா டாஸ்மாக் திறக்கலைன்னு கேட்க எங்களுக்கும் உரிமை உண்டு.. 



7. ஸ்கூல் வாத்தியார் - ஏண்டா.. குடிக்கறதே  தப்பு... அதிலும் நான் குடிக்கற அதே டாஸ்மாக்ல தான் நீங்களும் குடிக்க வரனுமா?



8. சார், நான் தெரியாமத்தான் கேட்கறேன்.. பாடம் நடத்தற நீங்க சரக்கு அடிச்சுட்டு போய் பாடம் நடத்தும்போது பாடம் படிக்கும் அவங்க சரக்கு அடிச்சுட்டு க்ளாஸ் போனா என்ன தப்பு?


9. நீ வேணா பாரு  மண்ணோட மண் ஆகப்போறே.. 

 நீ மட்டும் என்ன இளையராஜாவா ஆகப்போறே?



10. அக்டோபர் 1 - நல்ல வேளை நீ இன்னைக்கு பொறந்தே.. நாளை பிறந்திருந்தா கடை லீவ்.. 



http://mimg.sulekha.com/tamil/madhubaanakadai/stills/madhubaanakadai-tamil-movie-pictures-015.jpg


11 ஹாய்.. நான் எம் ஏ  டிபார்ட்மெண்ட்.. நீங்க?

 நான் கெமிக்கல் டிபார்ட்மெண்ட்.. 


 எல்லாரும் குடிகார டிபார்ட்மெண்ட்.. தானே.. 


12. சார்.. குடிகாரர்களை பற்றி குறைச்சு எடை போட்டுடாதீங்க.. எது ஒரிஜினல்? எது போலி ( டூப்ளிகெட்)? ன்னு இப்ப இருக்கற குடிகாரங்க எல்லாம் ஈசியா கண்டு பிடிச்சுடறாங்க.. 


13. ஒரு குவாட்டர் பாட்டில் ஒரிஜினல் விலை 10 ரூபா தான்.. ஆனா நீங்க 80 ரூபாவுக்கு விக்கறீங்க.. பிராண்ட் நேம் சொல்லி வாங்குன காலம் எல்லாம் போச்சு.. 80 ரூபா சரக்கு.. 100 ரூபா சரக்குன்னு விக்கறீங்க.. கம்ப்பெனி நேமே சொல்றதில்லை



14.  குடிகாரங்க எல்லாரும் குழந்தை மாதிரிடா.. 



15. ஹீரோயின் - என்னை வாயாடிப்பொண்ணுன்னு தெரியாம பழகிட்டே.. 

 வாயாடியா ? பார்த்தா அப்டி  தெரியலையே?  ( பார்த்தா எப்டி தம்பி தெரியும்? கொஞ்சம் பேச்சுக்குடுத்து பாரு )



16. நீ என்ன வெள்ளைகாரனுக்கா பிறந்தே? தமிழ்ல பேசுடா.. இங்க்லீஷ்ல சைலண்ட்டா கெட்டவார்த்தை பேசுனா  நீ பெரிய ஆளா? 


17.  பொண்ணுங்களையே நம்பக்கூடாது,.,. இளிச்சு இளிச்சு பேசுவாளுங்க, உருகி உருகி காதலிப்பாளுங்க, கடைசில் கழட்டி விட்டுருவாளுங்க


18. இறந்து விடு என்று சொல்.. மீண்டும் பிறந்து வருவேன், ஆனால் மறந்து விடு என்று சொல்லாதே இறந்து விடுவேன்.. 


19. ஆஞ்சநேயா! ஒரே ஒரு வரம் வேணும்

 ஆஞ்சநேயர் வேடம் பூண்டவர் - யா

கண்ட கண்ட கருமாந்திரம்  புடிச்ச நாய்ங்களூக்கு எல்லம் நல்ல ஃபிகர் செட் ஆகுது.. வாழ்க்கைல இப்படி சும்மா கட்டிப்பிடிக்கவாவது ஒரு பொண்ணு வேணும்// 



20. கஞ்சிக்கே வழி இல்லாதப்ப குவாட்டர் குடுக்குமாம்.. அதான் கடவுள்



http://www.kollytalk.com/wp-content/gallery/madhubaanakadai-movie-stills/madhubaanakadai-movie-stills-15.jpg


21. நயன் தாராவையும், கேத்ரினா கைஃபையும் மிக்சில போட்டு அரைச்ச மாதிரி ஒரு ஷேப் ,கலர்.. அந்த ஃபிகரு



22. நாங்க எல்லாம் வேலைக்குப்போனாத்தான் சோறு, இல்லைன்னா குடும்பமே பட்டினிதான்


23. யோவ் ஆஞ்ச நேயா! உன் வாலை சுருட்டிக்கிட்டு உக்காருய்யா 


நாசமா நீ போ!


24. உன்னைப்பற்றி எனக்குத்தெரியாதா? சந்தேகப்படறதுக்குன்னே பிறந்திருக்கும் ஆள் ஆச்சே நீ ( ராமர் வேஷம் பூண்டவர் )


25. நீங்க எல்லாம் சரக்கு அடிக்கறதை வீடியோ எடுத்து யூ டியூப்ல போட்டு உங்கப்பாவை பார்க்க வைக்கனும்.. அப்போதாண்டா புத்தி வரும்.. 



26. குடிப்பது தனி மனித உரிமை அல்ல .. அது  ஒரு சமூகம்.. அசைச்சுக்க முடியாது


27. ஆலயமணி அடிச்சா சத்தம், ஆல்ஹஹால் மணி குடிச்சா யுத்தம்


28. நாம தள்லாடி நிக்கறவரை இந்த கவர்மெண்ட் ஸ்டடியா நிக்கும்.. நாம ஸ்டடியா நிக்க ஆரம்பிச்சுட்டா இந்த கவர்மெண்ட் தள்ளாடிடும்


29. டாஸ்மாக் வருமானம் தான் இந்த அரசுக்கு பெரிய ஆதாயம், அது மட்டும் இல்லைன்னா ஆட்டம் கண்டுடும்.. 


30. போலீஸ் மாமாவை - குடுத்து வெச்ச ஆள் மாதிரி கேட்கறான் பாரு.. கந்து வட்டியா வாங்கறே? எச்ச சோத்துக்கு பிச்சைஎடுக்கும் நாயே.. ( தியேட்டரில் அப்ளாஸ்)


31.  போலீஸ் - எப்படி போகுது வியாபாரம்?

வர்றவனுங்க எல்லாம் புடுங்கறதுலயே இருக்கானுங்க கடன்காரப்பசங்க



32. சாராயம்கறது எங்க குல சாமி.. ஆனா அதை விட்டு விலக வெச்சுட்டீங்க.. இந்த சரக்குக்கு எங்களை பழக வெச்சுட்டீங்க.. நீங்க எல்லாம் சந்தோஷத்தை கொண்டாட, துக்கத்தை மறக்க குடிக்கறீங்க.. ஆனா நாங்க வேலைக்காக குடிக்கறோம்.. அந்த நாற்றத்தை சகிச்சுக்க குடிக்கறோம்


http://haihoi.com/Channels/cine_gallery/madhubaanakadai_movie_shooting_spot_stills_0311_S_144.jpg


  இயக்குநர் பாராட்டு பெறும் இடங்கள்


1. ஒரு சீனில் கூட மது குடிப்பது தவறு குடிக்காதிங்க என்ற பிரச்சார நெடி இல்லை. ஆனா குடிக்காத ஒரு ஆள் இந்தபப்டத்தை பார்த்தா  குடி மேல வெறுப்பு வர்ற மாதிரி எடுத்து இருக்காரு.. இன்னொரு விஷயம் இவரோட நோக்கம் டாஸ்மாக் சம்பவங்களை பதிவு செய்வதே


2.  டிஜிட்டல் படமாக எடுக்கப்பட்ட மும்பை எக்ஸ்பிரஸ் படத்தை விட இந்தப்படத்தில் மேக்கிங்க், அவுட் புட் நல்லாருக்கு.. கேனான்  செவன் டி யில் எடுக்கபப்ட்ட படமாம்.. சபாஷ்


3. படத்தில் வாய்ப்பு இருந்தும் டூயட்டை சேர்த்தாது, காதல் காட்சிகளை தேவை இன்றி புகுத்தாது.. ஹீரோயின் வருவதே 4 காட்சிகள் தான் 16 நிமிடங்கள் தான்


4. அனைவர் நடிப்பும் கலக்கல்.. இயற்கையாக இருக்கு.. குறிப்பா அந்த பொண்ணு, பாட்டுக்காரர், பெட்டிஷன் மணி


5. இசை.. பாடல்கள் படத்துக்கு பெரிய பிளஸ்.. 


6. டைட்டில் போடும்போதே இப்படத்தில் கதை என்று ஒன்று இருந்தால் கண்டுபிடித்து சொல்லுங்கள் என்று நக்கல் அடித்தது


7. டாஸ்மாக்கில் வேலை செய்தாலும் ஹீரோவும் , நண்பரும் குடிப்பது போல் காட்சிகள் வைக்காதது ( மேலே உள்ல ஸ்டில்லில் அப்படி ஒரு காட்சி இருந்தாலும் படத்தில் அது இல்லை )


http://123tamilforum.com/imgcache2/2012/01/MadhubaanakadaiTamilMovieStills2300x233-1.jpg



 இயக்குநரிடம் சில கேள்விகள்


1. பார் ஓனருக்கு தன் மகளை  ஒரு சப்ளையர் லவ் பண்றது தெரிஞ்சுடுது..  அவர் சத்தம் இல்லாம அவனை தனியா ஒரு இடத்துக்கு வர வெச்சு அடியாளுங்க மூலமா போட்டுத்தள்ளாம  டாஸ்மாக் பார்லயே அதை செய்ய நினைப்பது எப்படி?அடிக்கடி டாஸ்மாக்ல யாராவது தகறாரு பண்றப்போ “ எந்த பிரச்சனையா இருந்தாலும் வெளீல போய் அடிச்சுக்குங்க. கடையை மூட விட்டுடாதீங்க என எச்சரிக்கையாக இருப்பவர் தன் சொந்தப்பிரச்சனை வரும்போது அதே எச்சரிக்கயை ஏன் ஃபாலோ பண்ணலை?


2. பிளான் பண்ணி கொலை பண்றது வேற கேட்டகிரி.. தன் பொண்ணை வேலைக்காரன் லவ்வறான்னு தெரிஞ்ச உடனே கோபத்துல அப்பவே போடுவாங்களா? ஆற அமர யோசிச்சு அவ்ளவ் டைம் எடுத்துக்குவாங்களா?


3. பொதுவா குடும்பப்பொண்ணுங்க டாஸ்மாக் பக்கமே வர மாட்டாங்க.. ஏதாவது வேணும்னா ஃபோன்ல சொன்னா வேலை முடிஞ்சது..  ஆனா பார் ஓனர் தன் மக பாருக்கு வர்றதை எப்படி அலோ பண்றாரு?


 எதிர்பார்க்கப்படும் ஆனந்த விகடன் மார்க் - 41


 எதிர்பார்க்கப்படும் குமுதம் ரேங்க் - ஓக்கே 


சி.பி, கமெண்ட் - சரக்கு அடிக்கும்சங்கர லிங்கங்கள் பார்க்கலாம்..


ஈரோடு ஸ்ரீ லட்சுமியில் படம் பார்த்தேன்


டிஸ்கி - மிரட்டல் - சந்தானம் காமெடிக்காக - விமர்சனம் http://www.adrasaka.com/2012/08/blog-post_6815.html

JISM 2 - பாலிவுட் சினிமா விமர்சனம் 34 +-http://www.adrasaka.com/2012/08/jism-2-34.html

 

 

 

TOTAL RECALL - சயின்ஸ் ஃபிக்‌ஷன் ஆக்‌ஷன் - ஹாலிவுட் சினிமா விமர்சனம்

http://www.adrasaka.com/2012/08/total-recall.html

 





http://www.cineulagam.com/photos/full/movies/madhupana_kadai_001.jpg

மிரட்டல் - சினிமா விமர்சனம்

https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgvoG87S93G-4-RJhKwIa0IlAsb6AKsCmxb4dFJbSWJDAkrkXQApptGRBu6OZDpZtcpzy8q9l-vcQj4VusNhbUPFTdxyDgrCAQpO5q9AuuJHkeqsJoNGhfuaMiC4Oe6MaTrnKK3Hhk2H6JM/s640/Mirattal+Movie+First+Look+Posters+Wallpapers.jpg 

 ஒரே ஒரு ஊர்ல 2 கேவலமான தாதாங்க.. கஜினி வில்லன் ஒரு தாதா, கல்யாண் ஜூவல்லர்ஸ் புரட்சிப்போராட்டம் பிரபு.இன்னொரு தாதா .. வில்லனோட பையனை இவரு க்ளோஸ் பண்ணிடறாரு.. பழிக்குப்பழியா அப்பவே வில்லன் பிரபுவை போட்டிருந்தா மேட்டர் ஓவர்..  ஆனா படம் 2 ரீல் தானே வரும்? 14 ரீல் கொண்டார்றது எப்படி?


 அதனால அந்த வில்லன் சொல்றாரு.. பிரபு சீக்கிரமா சாகக்கூடாது.. அனுராதா அனுராதாவா சாரி அணு அணுவா துடிச்சு சாகனும்.. பிரபு தங்கையை கொலை பண்ணனும்னு சொல்றாரு.. 


 பிரபுவோட தங்கச்சி சிவனேன்னு லண்டன்ல படிச்சுட்டு இருக்கு,.. மண்டைல மசாலா இல்லாத கேனயன் கூட சொல்வான்.. பாப்பா அங்கே இருந்தாத்தான் பாதுகாப்புன்னு.. ஆனா அண்ணன் பிரபு லண்டன்ல இருந்தா பாதுகாப்புஇல்லை, நம்ம கூடவே இருக்கட்டும்னு இங்கே கூட்டிட்டு வந்துடறாரு.. 


  பிரபு கிட்டே அடியாளா  நம்ம ஹீரோ வினய் சேர்றாரு.. சின்னத்தம்பில குஷ்பூவை பிரபு கூட்டிட்டு போய் ஊரெல்லாம் சுத்திக்காட்டுன மாதிரி இவரும் அங்கே இங்கே கூட்டிட்டு போறாரு.. 2 பேருக்கும் லவ் ஆகிடுது.. அலை பாயுதே ஸ்டைல்ல மேரேஜும் பண்ணிக்கறாங்க.. ஆனா பிரபுக்கு அது தெரியாது.. 


ஒரே பங்களாவுக்குள்ளேயே மீதி கதை எப்படி நகருது? அந்த வில்லன் என்ன தான் செஞ்சான்? சந்தானம் மொக்கை எப்படி எல்லாம் போடறாரு.. இதான் மிச்ச மீதிக்கதை.. 



http://masscinema.in/wp-content/gallery/mirattal-movie-stills/mirattal-movie-stills-7.jpg

 படத்தோட முதல் ஹீரொ அஸ் யூசுவல் சந்தானம் தான்.. இவர் பேரே ஸாரி.. அதனால சாரி.. சொல்றதுக்கு ஏதும் இல்லை.. படத்துல மொத்தம் மொக்கை ஜோக்ஸ் 64 வருது.. 48 இவர் சொல்றாரு.. 13 இடத்துல தான்  ஆடியன்ஸ் சிரிக்கறாங்க.. மீதி ஜோக்குக்கு எல்லாம் இதெல்லாம் ஒரு ஜோக்கா அப்டினு நினைச்சு சிரிக்கறாங்க.. படம் பூரா பம்மிக்கிட்டே இருக்கும் சந்தானம் ஒரு சீனில் சரக்கு அடிச்சுட்டு சலம்பல் பண்ணும் சீன் கலக்கல் ரகம் .. 


ஒரிஜினல் ஹீரோ வினய்.. அண்ணன் முதல்ல நல்ல பல் டாக்டர்ட்ட போய் பல்லை க்ளீன் பண்ணனும்.. எல்லா பல்லும் காரை.. பான் பராக் பாலுன்னு நினைப்பு.. அதுல க்ளோசப் ஷாட் வேற உவ்வே,, இவர் வசனம் பேசும் ஸ்டைலை மாத்திக்கிட்டா நல்லாருக்கும்.. உன்னாலே உன்னாலே படத்துல இருந்த துள்ளல் இதுல மைனஸ்.. 


 ஹீரோயின் யாரோ ஷ்ர்மிளாவாம்.. மொக்கை ஃபிகர்.. இந்தபடத்தை முதல் ஷோ பார்த்த தமிழ்நாடு பூரா இருக்கும்  மூணு லட்சத்து இருபத்து மூவாயிரத்து நானூற்றி முப்பத்தி ஆறு  (3,23,436 )  ஆடியன்ஸ் கிட்டே கருத்து கேட்டாலும் சிங்கிள் மேனுக்கு கூட இது பிடிக்காத  பார்ட்டி.. படு மொக்கை பர்சனாலிட்டி.. இந்த லட்சணத்துல  இவர் லோ ஹிப் ல  வேற வந்து கடுப்பை ஏத்துறார்.. அதுல தொப்புள்ல தொங்கட்டான் வேற.. 


கேப்டன் பிரபாகரன்ல பட்டாசை கிளப்புன மன்சூர் அலிகான் இதுல டம்மி பீசா காமெடியனா கேவலப்படுத்தி இருக்காங்க.. தங்க பாலு, ஓ பி எஸ், பவர் ஸ்டார் ரேஞ்சுக்கு  இருக்கு இவர் நடிப்பு.. 

ஆர் பாண்டிய ராஜன் 3 ஜோக் சொல்றார்.. ஒரே ஒரு காமெடி பண்றார்.. அவ்ளவ் தான்.. ஹீரோவுக்கு அப்பா.. 

 ஜெயா டி வி பாஸ்கி ( ஆனந்த விகடன் ஜோக் ரைட்டர்)  7 சீன்ல வர்றார்.. சொல்லிக்கொள்ளும்படி ஏதும் இல்லை.. 


கஞ்சா கறுப்பு காமெடிங்கற பேர்ல எப்பவும் போல் மொக்கை போடறார்.. 

http://moviegalleri.net/wp-content/gallery/sharmila-mandre-stills-in-mirattal/mirattal_heroine_sharmila_mandre_new_photos_stills_2277.jpg


 இயக்குநர் பாராட்டு பெறும் இடங்கள்



1. போஸ்டர்ல, டி வி விளம்பரத்துல எல்லாம் ஓக்கே ஓக்கே லெவல்க்கு இந்த படத்தோட ,மார்க்கெட்டிங்கை ஏத்தி விட்டது.. 



2. சந்தானம் காமெடியை நம்பி படத்தோட திரைக்கதையை அவரை சுத்தி நகர்ற மாதிரி அமைச்சது.. 


3. லண்டன் லொக்கேஷன் செலக்‌ஷன், ஒளிப்பதிவு..


 இயக்குநரிடம் சில கேள்விகள், லாஜிக் மிஸ்டேக்ஸ்


1. கோடிக்கணக்குல சம்பாதிக்கும் தாதா வின் தங்கை ஒரு சினிமா தியேட்டர்ல தனியா போய் டிக்கெட் எடுக்க தெரியாதா? ஹீரோ கிட்டே போய் இந்த தியேட்டர்ல டிக்கெட் எடுத்துக்கொடு.. ரொம்ப ரேர்.. டிக்கெட் கிடைக்கறதுன்னு கெஞ்சுது.. ஓனருக்கு கிடைக்காத டிக்கெட் அவங்க கிட்டே வேலை செய்யறவனுக்கு கிடைக்குமா? 100 ரூப்பா டிக்கட்டுக்கு 200 ரூபாவை அள்ளி விட்டா டிக்கெட் தேடி வருது.. அது கூட அந்த டிக்கெட்டுக்கு தெரியாதா?



2. சாதாரண ஒரு தாதாவோட தங்கயை கொலை பண்ண  என்னமோ கவர்னர், ஜனாதிபதியை கொலை பண்ணப்போறது மாதிரி அந்த வில்லனின் கூலிப்படை ஆள்  டெல்ஸ்கோப் கன், ரைபிளோட சுத்துவதும் ஆதவன் படத்துல சூர்யா பண்ற மாதிரி சேஷ்டைகள் எல்லாம் செஞ்சு ஒண்ணும் பலிக்காம போவதும் நம்பவே முடியலை.. 


3.  லண்டன்ல இருக்கும் தங்கயை இங்கே வர வெச்சு , பின் அமெரிக்கால இருக்கற மாப்ளையையும் இங்கே வர வெச்சு 2 பேரையும் லண்டன் அனுப்ப திட்டம் போடும் லூஸ் பிரபு ஸ்ட்ரைட்டா லண்டன்ல இருந்து அமெரிக்கா அனுப்பி இருந்தா வேலை முடிஞ்சுதே?


4. கூலி ஆள் ரூம்ல யார் கிட்டேயோ ஃபோன்ல பேசறதை பார்த்த ரூம் மேட் “ யார் கிட்டே ஃபோன்ல பேசறெ?ன்ன்னு ஒரே ஒரு கேள்வி தான் கேட்டான்.. அதுக்குப்போய் அவனை கொலை பண்றதெல்லாம் ஓவர்/./ அவனுக்கு குடுத்த வேலை பிரபு தங்கையை கொலை பண்ண சொல்லி.. அதை விட்டுட்டு எவனை எவனையோ கொன்னுட்டு இருக்கான்..?


5.  ஒரு சீன்ல ஹீரோ ஹீரோயின் பைக்ல வந்து அநாமத்தா பைக்கை நடு ரோட்ல விட்டுட்டு லாரி பிடிச்சு போறாரு.. அவங்களை துரத்திட்டு வரும் கூலி ஆள் அவர் பைக் ரிப்பேர் ஆகி அதை விட்டுட்டு  லாரியை துரத்தி ஓடறார்.. ஹீரோ விட்டுட்டுப்போன பைக் சாவியோட அநாமத்தா அப்படியே நிக்குது.. அந்த கபோதிக்கு அது கூடவா தெரியாது? பைக்ல துரத்தாம  ஓடியே துரத்த ட்ரை  பண்றாரே, மனசுக்குள்ளே விஜய்னு நினப்பா?


6. வில்லன் குரூப் ஹீரோயினை அடைச்சு வெச்சுடுது.. செல் ஃபோன்  இருக்கா?ன்னு செக் பண்ண மாட்டாங்களா?  அதான் போகட்டும்.. ஒவ்வொரு ஏரியாவா மெயின் சுவிட்சை ஆஃப் பண்ணி  ஏரியா வை கண்டு பிடிக்கற ஐடியா இப்போ தான் தடையறத்தாக்க படத்துலயே வந்துச்சே


 http://images.behindwoods.com/photo-galleries-q1-09/tamil-photo-gallery/mirattal-02/wmarks/mirattal-0217.jpg




சி.பி கமெண்ட் - ஃபேமிலியோட பார்க்கற மாதிரி டீசண்ட்டா தான் படம் இருக்கு, ஆனா ஓவர் மொக்கை.. சிரிக்கலாம், ஆனா சிந்திக்கக்கூடாது..  சந்தானத்தின் மொக்கை காமெடி மெலோ டிராமாவுக்காக பார்க்க நினைப்பவர்கள் பார்க்கலாம்..


எதிர்பார்க்கப்படும் ஆனந்த .விகடன் மார்க் - 40


  எதிர்பார்க்கப்படும் குமுதம் ரேங்க் - சுமார்



டைம்ஸ் ஆஃப் இண்டியா - 2  / 5


டெக்கான் கிரானிக்கல் - 5 / 10



 ஈரோடு அபிராமியில் ப்டம் பார்த்தேன்.



 டிஸ்கி - 1 டிஸ்கி - மதுபானக்கடை - சினிமா விமர்சனம் http://www.adrasaka.com/2012/08/blog-post_5452.html

JISM 2 - பாலிவுட் சினிமா விமர்சனம் 34 +-http://www.adrasaka.com/2012/08/jism-2-34.html

 

TOTAL RECALL - சயின்ஸ் ஃபிக்‌ஷன் ஆக்‌ஷன் - ஹாலிவுட் சினிமா விமர்சனம் http://www.adrasaka.com/2012/08/total-recall.html

 

 

 

 

 






சந்தனத்தின் மொக்கை காமெடி வசனங்கள் தனிப்பதிவாய் விரைவில்



http://masscinema.in/wp-content/gallery/mirattal-movie-stills/mirattal-movie-stills-36.jpg


Tuesday, July 17, 2012

அட்ராசக்க சி.பி எக்ஸ்க்ளூ “ஜிவ்” பேட்டி - பாகம் 15

ட்விட்டர் நண்பர் அனுப்பிய மடல் - அண்ணே எனது கேள்விகள் (மெயில் அனுப்ப வழி இல்லை, அதான் இங்கே, கேள்விகளை எடுத்து கிட்டு இங்கே இருந்து அழிச்சிடுங்க) [Kannamoochi (Vijay) in Twitter]


இதுக்கெல்லாம் ... டக்கு டக்கு ன்னு ஒன்னு ரெண்டு வார்த்தைல பதில் சொல்லணும் ....

சி.பி - டக் டக் ( duck)னா வாத்து மாதிரி பதில் சொல்லனுமா?



1. ஆஸ்கர் அவார்ட், பிலிம்பேர் அவார்ட், விஜய் அவார்ட் போல நீங்கள் கொடுத்தால் என்ன பெயர் வைப்பீர்கள்?




வழக்கமா எனக்கு வாங்கித்தான் பழக்கம் , கொடுத்து பழக்கம் இல்லை.. இருந்தாலும் நீங்க கேட்டதுக்காக சொல்றேன் - அட்ராசக்க அட்ராக்‌ஷன் அவார்ட்ஸ்


2. உங்கள் முதல் திரைப்படத்தின் தலைப்பு என்று எதவாது யோசித்து வைத்துளீர்களா?


கதை, திரைக்கதை தயார்- கோவை ப்ரீத்தி கொலை வழக்கு - உண்மை சம்பவம்- அமரர் சுஜாதாவின் காயத்ரி நாவல் போல் சாயல் இருக்கும், ஆனால் 100% கோவையில் நடந்த உண்மைச் சம்பவம்.. சிறுகதையாக ஆல்ரெடி எழுதி இருக்கேன் http://www.adrasaka.com/2011/10/kovai-preethi-murder-case.html



3. ஈரோட்டில் உங்களுக்கு பிடித்த தியேட்டர்?


ஆனூர் தான். ஏன்னா ஏ சி போடும் ஒரே தியேட்டர் ஈரோட்ல அதுதான். அபிராமி முதல்ல சூப்பரா இருந்துச்சு. இப்போ நிர்வாகம் சரி இல்லை, ஏ சி போடுவதே இல்லை, அதே போல் ஃபேனை அடிக்கடி ஆஃப் பணிடுவாங்க. கேண்ட்டீனில் கொள்ளை லாபம் அடிக்கறாங்க 



நம்மூரு பேருந்து பயணத்தை கிண்டல் அடிப்பவர்கள் .... பாகிஸ்தான் நாட்டின் பாலைவனத்தில் பயணிகள் படும் கஷ்டத்தை பார்க்கும் போது .... நம்மூரு தேவலை என்று சொல்லாவிட்டால் ..... அவர்களை இந்த லாரியில் ஏற்றி அனுப்புவோமே.....


நண்பர்கள் அனைவருக்கும் இனிய காலை வணக்கம்....
நம்மூரு பேருந்து பயணத்தை கிண்டல் அடிப்பவர்கள் .... பாகிஸ்தான் நாட்டின் பாலைவனத்தில் பயணிகள் படும் கஷ்டத்தை பார்க்கும் போது .... நம்மூரு தேவலை என்று சொல்லாவிட்டால் ..... அவர்களை இந்த லாரியில்  ஏற்றி அனுப்புவோமே.....


நண்பர்கள் அனைவருக்கும் இனிய காலை வணக்கம்....


4. தாங்கள் தியேட்டரில் பார்த்த முதல் திரைப்படம்?


எனக்கு சரியா நினைவில்லை, எங்கப்பா கிட்டே கேட்டபோது ஏதோ ஒரு எம் ஜி ஆர் படத்துக்குத்தான் கூட்டிட்டுப்போனதா சொன்னார்.. அநேகமா அது மலைக்கள்ளன் அல்லது மதுரை வீரன் என நினைவு. அப்புறம் வயசுக்கு வந்த பின் பார்த்த முதல் கில்மா படம் சென்னிமலை அண்ணமார் - பவுர்ணமி ராத்திரியில் ரதி தேவி ( அப்போ பகல்ல மூதேவியா?).. இந்தப்படத்துல இருந்துதான் கேரளா பெண்கள் குளீப்பதில் எவ்வளவு ஆர்வம் மிக்கவர்களாக இருக்காங்க என்ற ஜெனரல் நாலெட்ஜை அறிந்தேன், படத்துல செம சீன் இருந்துது






5. பிடித்த விளையாட்டு?



செஸ் தான். பாரதியார் யுனிவர்சிட்டி செஸ் சாம்ப்பியனாக 3 வருடங்கள் இருந்தேன்.. ஈரோடு சிக்கய்ய நாயக்கர் காலேஜ்க்கு போகும்போது என் கால்கள் முதலில் செல்வது விளையாட்டு மைதானம்.. அங்கே எப்பவும் ரெடியா 3 குரூப் செஸ் ஆடிக்கிட்டே இருப்பாங்க.. அங்கே போனா டைம் பாஸ் ஆவதே தெரியாது.. 12 பேர் சேர்ந்து ஆளாளுக்கு ஐடியா குடுப்பாங்க.. நான் ஒருத்தனே 12 பேர் ஐடியாவுக்கும்  யோசிக்கனும்././ நல்லா டெவலப் பண்ணி இருந்திருக்கலாம்.. எனக்கு செஸ் கேம் யோசிச்சு யோசிச்சு தலை ஹீட் ஆச்சு// அதனால அதை விட்டுட்டேன்././  இப்போ செஸ்க்கு பதிலா அதே அலைவரிசையில் உள்ள இன்னொரு விளையாட்டு அதுவும் இண்டோர் கேம் தான்.. ஐ மீன் கேரம்


6. நீங்கள் நன்றாக சமைக்க கூடிய உணவு?



தக்காளி சாதம், ஆனியன் தோசை .( வெங்காயத்தை முதல்லியே தாளிச்சு வெச்சுக்குவேன் ) சமையல்ல நான் ஸ்பெஷலிஸ்ட்.. அதே போல் ஒரு உணவை அல்லது சாம்பாரை ருசித்துப்பார்க்காமல் வாசம் நுகர்ந்தே அதுல உப்பு , உரைப்பு எல்லாம் சரியா இருக்கா? என்பதை உணர்வதில் திறமை  உண்டு.. எந்த ஹோட்டலுக்குப்போனாலும் உணவில் நிறை இருந்தால் அதை அனைவர் முன்னிலையில் மாஸ்டரை புகழ்ந்தும், குறை இருந்தால் அவரிடம் தனிமையில் அழைத்தும் சொல்வேன்..



7. வைரமுத்து / கண்ணதாசன் - உங்கள் சாய்ஸ் ?


நம்ம காலகட்டத்துக்கு வைரமுத்து ஒரு லெஜண்ட் என்றாலும் கண்ணதாசன் சாதனைகளை மறந்துவிடக்கூடாது.. எதுக்கு பிரிக்கனும்? நான் எல்லாரையும் ரசிப்பேன்.. எம் ஜி ஆர், சிவாஜி, ரஜினி, கமல், அஜித், விஜய் என திறமை எங்கிருந்தாலும் அங்கே ரசிப்பு உண்டு.. வைரமுத்து பாட்டில் என்னை கவர்ந்தது - கண்ணுக்கு மை அழகு , கண்ணதாசன் - பார்த்தேன், சிரித்தேன், பக்கத்தில் அழைத்தேன்



8. நீங்கள் எதனை கண்டு அதிகம் பயப்படுவீர்கள்?


சாலை விபத்துக்கள் தான்.. ஏன்னா மனிதனின்  எதிர்பாராத மரணத்துக்கு சாலை விபத்துக்கள் தான் காரணம். நோய் மூலம் வரும் மரணத்துக்கு மனிதன் பொறுப்பாகிறான்.. குடி, புகை, பெண்கள் சகவாசம் என அவனும் அதற்கான காரணி ஆகிறான், தற்கொலை , கொலைக்கும் மனிதன் ஏதோ ஒரு வகையில் பொறுப்பாகிறான்.. வயோதிகத்தின் காரணமாக மரணம் வந்தால் நோ பிராப்ளம்.. அது இயற்கையின் நியதி.. 
 ஆனால் இந்த தவறுமே செய்யாமல் மற்றவர்கள் அஜாக்கிரதையால் விபத்து நிகழும்போது சம்பந்தமே இல்லாமல் நடக்கும் மரணங்கள் என்னை பாதிக்கின்றன, பயம் கொள்ளச்செய்கின்றன..


9. அரசியலில் நுழையும் எண்ணம்?

 சுத்தமா கிடையாது, இந்த விஷயத்தில் நான் துக்ளக் சோ போல் இருக்க ஆசைப்படறேன்.. மக்களுக்கு அரசியல்வாதிகளின் கறுப்புப்பக்கத்தை அவ்வப்போது அறிமுகம் செய்து வெச்சா போதும்.. ஆனா அவரைப்போல் பி ஜேபி , அதிமுக அனுதாபி அல்ல.




10. தாங்கள் மிகவும் எதிர்ப்பார்த்து ஏமாந்த திரைப்படம்?


ஆபாவானனின் மூங்கில் கோட்டை - வரும் வரும்னாங்க. வராமயே போயிடுச்சு.. ஊமை விழிகள் மெகா ஹிட்டின்  2ம் பாகமாக வந்திருக்க வேண்டியது, ஏதோ சில காரணங்களால் வராம போயிடுச்சு. மற்றபடி எந்த படத்தையும் அதிகமா எதிர்பார்ப்பதில்லை.. ஏன்னா தமிழ் சினிமாவில் அதிக எதிர்பார்ப்புக்குள்ளான படங்கள் தோல்வியைத்தான் தழுவுகின்றன.. 



 டிஸ்கி -1 கேள்வி கேட்கறவங்க பின்னூட்டத்துலயும் கேட்கலாம்,ஆனாநான் பதிலை பின்னூட்டத்துல சொல்ல மாட்டேன் ( அப்புறம் எப்படிபதிவு தேத்த?)
[email protected]  இந்த மெயில்லயுமகேட்கலாம்..முதல் 3 பாகங்கள் தக்‌ஷினாமூர்த்தி வலைப்பதிவிலும், 4 ம் பாகம் தமிழ் வாசி தளத்திலும் வந்தவை   
டிஸ்கி 2 - மெயில் அனுப்ப முடியாதவங்க செல் ஃபோன்ல எஸ் எம் எஸ் அனுப்பியோ, கால் பண்ணியோ கேட்கலாம்..( நைட் 8 டூ 9)  அதுக்காக மிஸ்டு கால் விடக்கூடாது ஹி ஹி - 9842713441 ( வெள்ளிக்கிழமை மட்டும் கால் பண்ணாதிங்க  கோயில்லயோ, தியேட்டர்லயோ இருப்பேன்  :)   
டிஸ்கி 3  -  இதன் முதல் பாகம் படிக்காதவங்களுக்காக- http://adrasaka.blogspot.com/2012/01/1_31.html    
டிஸ்கி 4 -  இதன் 2ம் பாகம் படிக்காதவங்களுக்காக http://adrasaka.blogspot.in/2012/02/2.html    
டிஸ்கி 5 - இதன் 3 ம் பாகம் படிக்காதவங்களூக்காக -http://www.adrasaka.com/2012/02/3_29.html  
 டிஸ்கி 6 -  இதன் 4 ம் பாகம் படிக்காதவங்களூக்காக http://www.adrasaka.com/2012/04/4.html   டிஸ்கி 7 - இதன்  5 ம் பாகம் படிக்காதவங்களூக்காக  -http://www.adrasaka.com/2012/04/5.html   டிஸ்கி 8.  இதன்  6 ம் பாகம் படிக்காதவங்களூக்காக http://www.adrasaka.com/2012/04/6.html   டிஸ்கி 9.  இதன்  7 ம் பாகம் படிக்காதவங்களூக்காகhttp://www.adrasaka.com/2012/04/7.html  
டிஸ்கி 11 - இதன் 9 ம் பாகம் படிக்காதவ்ர்களூக்காக  -  http://www.adrasaka.com/2012/05/9.html   டிஸ்கி 12 - இதன் 10 ஆம் பாகம் படிக்காதவர்கள் -http://www.adrasaka.com/2012/06/10_44.html   டிஸ்கி 13.  இதன் 11 ஆம் பாகம் படிக்காதவர்கள்-http://www.adrasaka.com/2012/06/11.html   டிஸ்கி 14 -இதன் 12 ஆம் பாகம் படிக்காதவர்கள்http://www.adrasaka.com/2012/06/12.html   டிஸ்கி -  15 -இதன் 13 ஆம் பாகம் படிக்காதவர்கள்http://www.adrasaka.com/2012/07/13.html டிஸ்கி 16 -இதன் 14 ஆம் பாகம் படிக்காதவர்கள்http://www.adrasaka.com/2012/07/14.html
ஒளியிலே தெரிவது..........? தேவதையா?????