Showing posts with label மழலை. Show all posts
Showing posts with label மழலை. Show all posts

Thursday, November 03, 2011

சுட்டிப்பாப்பாவிடம் ஒரு மக்கு பிளாஸ்திரி அப்பா வாங்கிய பல்புகள்

 என் குட்டி தேவதையின் பெயர் அபிராமி ஸ்ரீ.. எட்டு வயது ஏஞ்சல்.. ஈரோடு இந்து கல்வி நிலையத்தில் 3ஆம் வகுப்பு படிக்கிறா.. அவ சில சமயம் டாடின்னு கூப்பிடுவா, பல சமயம் அப்பா, வெகு சில சமயங்களில் பெயர் சொல்லி.. கோபம் வரும் போது டேய் லூசு... எப்படி கூப்பிட்டாலும் இனிமைதான் எனக்கு..  மத்தவங்க கிட்டே பல்பு வாங்குனா அவமானமா இருக்கும்.. ஆனா நம்ம வாரிசு கிட்டே வாங்குன பல்பு ஜாலியா இருக்கு..

அவமானங்களையே கூச்சப்படாம பதிவு போடற நாம வெகுமானத்தை போடாம விடுவோமா?ஹா ஹா இதோ அணிவகுப்பு....





1. டாடி.. ராட்டன் தூரி சுத்தலாம், வா.


எனக்கு தலை சுத்தும், நீ போம்மா..

நீ சுத்த வேஸ்ட்ப்பா.....


--------------------------------------

2. டாடி.. இந்த ஹோம் ஒர்க்கை எப்படி பண்றது?ன்னு . எனக்கு சொல்லிக்குடுங்க...

அம்மா கிட்டே கேளுடா செல்லம்..

ஏம்ப்பா.? நீ மக்கா?

--------------------------------------

3. ஓடும் பஸ்ஸில்..

கண்டக்டர் வர்ற வரை நீ என் மடிலயே இரு.. ஒரு டிக்கெட் மிச்சம் பண்ணலாம்..

அப்போ. அம்மாவையும் மடிலயே உக்கார வைங்கப்பா. 2 டிக்கெட் மிச்சம் பண்ணலாம்..

-------------------------------------------

4. அப்பா. எடுபுடி ஆள்னா என்ன அர்த்தம்?

ஏன் கேட்கறே?

அப்பாவை ஏன் மேரேஜ் பண்ணிக்கிட்டே ?அப்டினு அம்மா கிட்டே  கேட்டப்ப நிறைய எடுபுடி வேலை செய்ய ஆள் தேவைபட்டுச்சுனு சொன்னாங்கப்பா.

--------------------------------------

5. அப்பா... நம்ம வீட்ல எல்லா வேலையும் செய்யறே.. ஆனா அம்மாவோட அம்மா வீட்டுக்கு வந்தா மட்டும் கால் மேல கால் போட்டுக்கிட்டு கெத்து காட்றியே ஏன்?


”  .............................................”


----------------------------------------------------------

6. அப்பா... ஆஃபீஸ்ல ஹவுஸ் ரெண்ட் அலவன்ஸ் எவ்ளவ் தர்றாங்க? (HRA)

ரூ 3000

ஆனா ஹவுஸ் ஓனர் கிட்டே ரூ 2000 தானே தர்றே? ஏன் ஏமாத்தறே? ஒண்ணா ஆஃபீஸ்ல ரூ 1000 ரிட்டர்ன் குடு, அல்லது ஹவுஸ் ஓனர் கிட்டே ரூ 3000 குடு.


--------------------------------------------------------

7. அப்பா... யு கே ஜி  பாடத்துல ஒரு டவுட்டு..

ஸாரிம்மா.. நான் எல்கேஜி , யு கே ஜி  எல்லாம் படிக்கல..

அப்போ என் கூட நீயும் ஸ்கூல்க்கு வாப்பா.

---------------------------------------------------------------

Modern Slides


8. டாடி.. டூர் போலாமா?

ஆஃபீஸ்ல லீவ் கிடைக்காதம்மா.

ஏம்ப்பா? உங்களுக்கு லீவ் லெட்டர் எழுத தெரியாதா?


-------------------------------------------------------

9. அப்பா, ஆஃபீஸ் மீட்டிங்க்னா என்ன?

எப்படி வேலை செய்யறது?ன்னு ஹிண்ட்ஸ் குடுப்பாங்க..


அப்போ உனக்கு சுய புத்தியே இல்லையா?

----------------------------------------------------

10. பிராக்ரஸ் கார்டுல ஏன் தமிழ்ல சைன் பண்றீங்க?

தமிழன் தமிழ்ல தான் கையெழுத்து போடனும்மா..


பொய்.இங்க்லீஷ் தெரியாதுதானே?


----------------------------------------------------

11. சைக்கோ -ங்கறதை தமிழ்ல எழுதறப்ப ஏன்  க்கோ என எழுதறே?

இங்கிலீஷ்ல சைக்கோ என்ற வார்த்தைல P  சைலண்ட், அப்போ அந்த லாஜிக் பிரகாரம் தமிழ்ல சை சைலண்ட்,,

-----------------------------

12. அப்பா, நீ ஏன் பியூட்டி பார்லர் போறதில்லைன்னு கண்டு பிடிச்சிட்டேன்..


ஏன்?

அது பியூட்டிங்களுக்கு மட்டும் தான்..

--------------------------------------------


13. பாப்பா - டாடி, கடவுள் ஒரு ஐ ஸ்பெஷலிஸ்ட்டா?

ஏன்?

தப்பு செஞ்சா உம்மாச்சி கண்ணை குத்தும்னு மிரட்றாங்களே?


----------------------------------------

14. ஆண்கள் எந்த வித முக மூடியும் இல்லாமல் (அணியாமல் )சந்தோஷமாக பொழுதை கழிப்பது தன் மழலையுடன் இருக்கும் தருணங்களே!

-------------------------------------

15.பெண்கள் எந்த வித முக மூடியும் இல்லாமல் சந்தோஷமாக பொழுதை கழிப்பது தன் அம்மா வீட்டில் இருக்கும் தருணங்களே!

--------------------------------------





Friday, January 28, 2011

சேட்டைக்காரன் VS சேஷ்டைக்காரி - பிரச்சனைகள்

 https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiU9PmehVV8qec1o5gRRaHzjt6rFy3O0W0_iiQuWIL1m_4Y8z8PlJJkSqmIDhdkJu37ggJsIx2MEbk_dtj4xAlvSH9OgFRkCE1eI-5fjQt5k5WVQc-aLPUmdYw9mgckUe28RMMPlApJ4F3c/s1600/smile.jpg
உலகத்துலயே ரொம்ப சந்தோஷமான விஷயம் குழந்தைகளோட டைம் பாஸ் பண்றதுதான். மத்தவங்களோட பழகறப்ப அவங்களுக்குத்தகுந்தபடி ஒரு முகமூடி போட்டுக்கற மாதிரி குழந்தைகளோட பழகறப்ப நாமும் ஒரு குழந்தை ஆகிடறோம்.ஆனா ஒரே ஒரு விஷயம் நாம் நம்ம புத்திசாலித்தனத்தையும்..,மேதாவிலாசத்தையும் ( நாமா கற்பனை பண்ணிக்கறது..) தூக்கி கடாசிட்டு நாமும் குழந்தையாவே ஆனாத்தான் அவங்களோட எஞ்சாய் பண்ண முடியும்.

1. அப்பா.. நாம 2 பேரும் ஒளிஞ்சு விளையாடலாமா?

ஓக்கே நீ முதல்ல போய் ஒளீஞ்சுக்கோ...
ஓகே ஜூட்டா...


ஜூட் டாடி..


ஆ.. கண்டு பிடிச்சுட்டேன்.. சத்தத்தை வெச்சே கண்டுபிடிச்சுட்டேன்...

போங்கப்பா.. என்னை ஏமாத்தீட்டே..

---------------------------------------------------------------------------

2.  அப்பா.. என்ன யோசிச்சுட்டு இருக்கே..?

ஜோக் எழுத KNOT யோசிக்கறேன்..

அதுக்கு ஏன் சோகமா ,சீரியஸா இருக்கே?சிரிச்சுட்டே யோசிச்சாத்தானே ஜோக் தோணும்..

---------------------------------------------------------------------

3.  எனக்கு ஒரு முத்தம் குடு...

சாரி டாடி.. அம்மாவுக்கு மட்டும்தான் தருவேன்...

சரி.. நான் இப்போ உனக்கு ஒரு முத்தம் தர்றேன்.. பிடிச்சிருக்கா?

ம்ஹூம்.. அம்மா குடுத்தாதான் பிடிக்கும்..

பிடிக்கலையா? அப்போ திருப்பி குடு..

ம்ச்

ஆ.. நல்லா ஏமாந்தியா? உன் கிட்டே முத்தம் வாங்கீட்டேனே?

 ------------------------------------------------------------------------------

4. அப்பா.. கதை சொல்லுப்பா..

அம்மா கிட்டே போய் கேளு.. நான் பத்திரிக்கைக்கு கதை எழுத யோசிச்சிட்டு இருக்கேன்..

என்னப்பா... முகமே தெரியாத யாருக்காகவோ கதை எழுதறே.. உன் கூடவே இருக்கற எனக்கு கதை சொல்ல மாட்டேங்கறியே.. ( பளார்.. வேதம் புதிது-ல சத்யராஜ்க்கு கிடைச்ச மாதிரி..)

http://www2.hiren.info/desktopwallpapers/thumb/child-playing-with-bubbles.jpg

5. ஸ்கூல்ல என்ன என்ன குறும்பு பண்ணுனே..இன்னைக்கு?

எதுவும் செய்யலை டாடி..

பொய் சொல்லாதே.. GOD CAMERA வெச்சு பார்த்துட்டேன்..

அதென்ன காட் கேமரா..?

யார் யார் என்னென்ன தப்பு பண்றாங்க?ன்னு காட் கேமரால தெரிஞ்சிடும்..

அப்படியா? ஹைய்யா.. அப்பா.. கேமராவை ஆன் பண்ணுங்க.. நீ இங்க ஆஃபீஸ்ல என்ன என்ன தப்பு பண்ணுனீஙகன்னு பார்க்கலாம்.

------------------------------------------------------------

6.  அப்பா.. உங்க மேரேஜ் ஆல்பத்துல என்னை மட்டும் காணோமே...?

அது வந்து... நீ தூங்கப்போயிட்டே..

சும்மா பொய் சொல்லாதீங்கப்பா..உங்க கல்யாணத்துக்கு அப்புறமாதான் நான் பொறந்தேனாம்.. அம்மா சொன்னாங்களே..

http://media.nowpublic.net/images//80/6/80610c54ed55ef5382d93acd7e980860.jpgஅட..

7. அப்பா.. எனக்கு டிஃபனுக்கு போட்டாச்சா?

இரு.. ஃபர்ஸ்ட் எனக்கு போட்டுக்கறேன்..  ( சுயநலம்)

அப்பா.. இவ்வளவு சாப்பாடு போட்டுக்கறியே.. இத்தனை எதுக்கு?

நான் பெரிய ஆள் இல்லையா? அதிகம் பசிக்கும்..

அப்போ அம்மாவும் பெரியவங்கதானே.. அவங்க டிஃபன் பாக்ஸ் சின்னதா இருக்கு.. உங்களுது மட்டும் பெரிசா  இருக்கே..?

--------------------------------------------------------------

8. அப்பா.. காசு எவ்வளவு வெச்சிருக்கே..?

எதுக்கு கேக்கறே..?

ஸ்கூல்ல சர்க்கஸ் கூட்டிட்டு போறாங்க.. பணம் 60 ரூபா வேணும்..

அடேங்கப்பா.. 60 ரூபாயா? பேசாம நான் உன்னை காலைல சர்க்கஸ் கூடாரத்துக்கு வாக்கிங்க் போறப்ப கூட்டீட்டு போறேன்.. சிங்கம், யானை,ஒட்டகம்  இதெல்லாம் காட்டறேன்..ஃபிரீயாவே பார்த்துக்கோ..

போங்கப்பா.. ஜோக் எழுதறப்ப 10 ஜோக் சேர்த்து எழுதி சம்பாதிப்பா....

------------------------------------------------------------------------------

9. அப்பா.. நானும் ஜோக் எழுதறேன்...

எப்படி? எழுது பார்ப்போம்...

இதோ உங்க ஜோக்கை பார்த்து எழுதறேன்...

இது செல்லாது.. சொந்தமா யோசிச்சு எழுதனும்..

நீங்க கூட டைரியை பார்த்துத்தானே எழுதறீங்க...?

அது.. நான் ஏற்கனவே யோசிச்சு எழுதுன ஹின்ட்ஸ்..அதை வெச்சு டெவலப் பண்ணி எழுதறேன்..

அப்பா சொத்து பிள்ளைங்களுக்குத்தானே.. அப்போ உங்க ஜோக்கும் எனக்குத்தானே சொந்தம்?

-------------------------------------------------------------

10.  ஆஃபீஸ்க்கு லேட் ஆகிடுச்சு.. கிளம்பறேன்..

அப்பா.. இன்னைக்கு எனக்கு ஸ்கூல் லீவ்.. என் கூட கொஞ்ச நேரம் விளையாடிட்டுப்போப்பா..

மேனேஜர் அடிப்பாரு... நான் போறேன்.

என்ன்னப்பா.. இவ்வளவு பெரிய ஆளா இருக்கே..நீயும் திருப்பி அடி..


டிஸ்கி 1 - இந்தப்பதிவுக்கு நான் முதல்ல வெச்ச டைட்டில் குழல் இனிது.. யாழ் இனிது என்பர்......(பேபி ஸ்பெஷல்) என்பதுதான். மறுபடி யோசிச்சு பார்த்தா அதுல கிளாமரும் இல்ல.. கிக்கும் இல்ல. ஏற்கனவே என் பிளாக் காத்து வாங்கிட்டு இருக்கு ..அதனால சும்மா அட்ராக்‌ஷனுக்காக இப்படி டைட்டில் வெச்சேன்.. சேட்டை அண்ணன்கிட்டே அனுமதி வாங்கிட்டுத்தான்..

டிஸ்கி 2 - பொதுவா யாரையாவது தாக்கி போடற பதிவுக்குத்தான் வரவேற்பு  அதிகமா இருக்கு.. ஆனா என் கூட யாரும் வமபு சண்டைக்கே வரமாட்டேன்கறாங்க.அது ஏன்னு தெரியல..(நாம டம்மி பீஸ்ங்கற ரகசியம் எல்லாருக்கும் தெரிஞ்சுடுச்சு போல.)

டிஸ்கி 3  இதுல சேட்டைக்காரன் நான் தான், சேஷ்டைக்காரி  என் 7 வயசு பொண்ணு அபிராமி ஸ்ரீ

Wednesday, January 19, 2011

Saturday, September 25, 2010

என்னாது இது,சின்னப்பிள்ளத்தனமா..?

பசங்க படத்துக்கு விருது கிடைத்தது சந்தோஷமாக இருந்தது.இந்த சமயத்தில் இயக்குநர் மணிரத்னம் இயக்கிய அஞ்சலி ஞாபகம் வருகிறது.சின்னக்குழந்தைகளின் சந்தோஷங்களை துல்லியமாக பதிவு செய்த வகையில் பிரமாதமான படைப்பு அது.க்ளைமாக்சில் ஏந்திரி அஞ்சலி ஏந்திரி என்ற வசனம் இன்னும் என் காதுகளில் ஒலித்துக்கொண்டே இருக்கிறது.

குழந்தைப்பேறு இல்லாதவர்கள் பெறத்துடிப்பதும்,கோயில் கோயிலாக அலைவதும் நடக்கும் அதே நேரத்தில் குழந்தை பாக்கியம் கிடைக்கப்பெற்றவர்கள் மழலை இன்பத்தை பெறுகிறார்களா என்றால் இல்லை என்றே சொல்ல வேண்டும்.

லைப்ரரியில் நான் படித்த சில மேட்டர்களை உங்களுடன் பகிர்கிறேன்.



1.குழந்தையின் சிரிப்பில் பூலோகம் அழகு பெறுகிறது.

2.குழந்தைகள் இல்லையென்றால், உலகம் துன்பம் நிறைந்ததாகும்.
 வயோதிகர்கள் இல்லையென்றால், உலகம் மனித இயல்பற்றதாகும்.

3.குழந்தைகளைத் திருத்த நல்ல வழி - அவர்களைப் பாராட்டுவதுதான்.

4.குழந்தையைக் கொஞ்சும்போது தெய்வத்திடம் பேசுவதுபோல இருக்கிறது.

5.குழந்தையைத் தூக்கி வைத்துக்கொள்ள கை நோகிறது.
 அதை கீழே இறக்கினால் மனம் நோகிறது.

6.இயற்கை அளிக்கும் எல்லாவற்றிலும் குழந்தையைப் பார்க்கிலும் சிறந்த இன்பம் வேறில்லை.

7.குழந்தைகளை ஆர்வமுடன் அணையுங்கள்; இதய நோய் குறையும்.

8.குழந்தையைக் கொஞ்ச நேரமின்றிச் சம்பாதிப்பவன் இறைவனின் அருகில் போக முடியாது.

9.நீங்கள் கொடுக்கும் வெகுமதிகளைவிட, உங்களுடன் சேர்ந்து இருப்பதைத்தான் உங்களுடைய குழந்தைகள் விரும்புகின்றன.

10.பல குழந்தைகள் பல கவலைகள். ஒரு குழந்தையும் இல்லாவிட்டால் ஒரு இன்பமும் இல்லை