Showing posts with label மருத்துவம். Show all posts
Showing posts with label மருத்துவம். Show all posts

Monday, August 26, 2013

ஆல் ஆண்ட்டீஸ் ! யுவர் அட்டென்ஷன் ப்ளீஸ்! 40 +

இது பெண்களை, "பிடித்த' நோய். ஆம்... பெண்ணாகப் பிறப்பதே, எலும்பு புரை வருவதற்கான முக்கிய காரணி. பெண்களில், மூன்றில் ஒருவரையும், ஆண்களில், ஐந்தில் ஒருவரையும் எலும்பு புரை தாக்கக் கூடும்'


* "ஆஸ்டியோபோரோசிஸ்' என்னும் எலும்பு புரை நோய் - மறைந்திருந்தே தாக்கும் மர்மம் என்ன?



வித்யாவுக்கு பன்னாட்டு நிறுவனத்தில், முக்கிய பொறுப்பில் வேலை; கை கொள்ளா சம்பளம்; பதவியுடன் வரும் அழகு, கம்பீரம், இத்யாதி இத்யாதி, கொஞ்ச நாளாக முதுகுவலி, இடுப்புவலி என்று அவதிப்பட்டுக் கொண்டிருக்கிறார். வேலை பளுவே காரணம் என்ற சுயமுடிவோடும், வலி மாத்திரைகளின் உதவியோடும், காலம் கடத்திக் கொண்டிருக்கிறார். ஒரு நாள் ஆபீஸ் கிளம்பும் அவசரம்; காலணி நாடாவை கட்ட குனிந்தவர் தான்... சுரீரென்ற வலி நடு முதுகில், முள்ளெலும்பு முறிவாம்.

மருத்துவர் சொன்ன காரணம், "ஆஸ்டியோபோரோசிஸ்' என்று அழைக்கப்படும் எலும்பு புரை நோய். "எனக்கா? 42 வயதிலா?' என, உடைந்து போனார் வித்யா. வாழ்க்கையை, வேலையை, முன்னுரிமைகளை மாற்றி அமைக்க வேண்டிய கட்டாயத்துக்கு தள்ளப்பட்டார். தலைகீழாக புரட்டிப் போட்டதை போன்றதொரு உணர்வு. வித்யாவுக்கு இது ஏன் வந்தது? எப்படி வந்தது? எலும்பு புரை என்றால் என்ன?

* எலும்பு புரை என்றால் என்ன?

எலும்புத் திசு அழித்தலுக்கும், உருவாக்கலுக்கும் இடையே, சமச்சீர்கேடு ஏற்படுவது தான், இந்த நோய் உருவாகுவதற்கு முதற் காரணம். இந்த சமச்சீர் கேட்டால், எலும்புத் தாது அடர்த்தி, மெது மெதுவாக குறைகிறது; எலும்பு வலுவிழக்கிறது. எலும்பு முறிவு ஏற்படுகிறது. எலும்பு புரை நோய் உண்டாகிறது. இந்த மாற்றங்கள் ஏற்படும் காலக்கட்டத்தில், நோய்க்கான அறிகுறிகள் பெரும்பாலும் இருக்காது. இதை, பரவலாக எலும்பு மெலிதல் அல்லது, "ஆஸ்டியோபீனியா' என்றும் கூறுவர்.

* எலும்பு புரையால் என்ன தான் பிரச்னை?
பிரச்னையே, இந்த நோய் நாம் முற்றிலும் எதிர்பாராத தருணத்தில், எலும்பு முறிவு போன்ற சிக்கல்களோடு, அழையா விருந்தாளியாக வருகை தருவது தான். சின்ன சின்ன முறிவுகள் கூட குணமடைய நாளாகலாம்; முழுவதுமாக குணம் அடையாமல் போகலாம். சில எலும்பு முறிவுகள், வாழ்நாள் முழுவதும், அடுத்த வரை சார்ந்து வாழ வேண்டிய நிலைமையை உருவாக்க வல்லது - வித்யாவுக்கு நேர்ந்த மாதிரி. அத்தகைய நிலை, மனச்சிதைவு போன்ற ஏனைய பிற பிரச்னைகளையும் உருவாக்கும்.

* யாருக்கு வரும்? எதனால் வரும்?
இது பெண்களை, "பிடித்த' நோய். ஆம்... பெண்ணாகப் பிறப்பதே, எலும்பு புரை வருவதற்கான முக்கிய காரணி. பெண்களில், மூன்றில் ஒருவரையும், ஆண்களில், ஐந்தில் ஒருவரையும் எலும்பு புரை தாக்கக் கூடும் என, புள்ளி விவரங்கள் கூறுகின்றன.
குறிப்பாக பெண்களுக்கு, மாதவிடாய் நின்றலுக்கு பின், நோய் வருவதற்கான ஆபத்தும் அதிகரிக்கிறது. ஆசிய மரபுவழி, குடும்ப வரலாறு, முதுமை, தைராய்டு பிரச்னை, அழற்சி எதிர்ப்பு, மருந்துகள் உட்கொள்ளுதல் ஆகியவை, ஏனைய காரணங்கள்.
மேற்கூறியவை எல்லாம், நம்மால் மாற்ற இயலாத, ஆபத்து காரணிகள். நம்மை அறியாமல், நாம் பின்பற்றும் பழக்க வழக்கங்களும், எலும்பு புரையை உருவாக்க வல்லவை; இதில் முக்கியமானது, உடற்பயிற்சி அற்ற, சூழலில் வாழ்தல் மற்றும் உப்பு, கோலா, காபி, மது போன்றவற்றை, அதிக அளவில் உட்கொள்ளுதல்.

* இதை எப்படி அறியலாம்?

இந்தியாவில், 2.6 கோடி மக்கள் எலும்பு புரை நோயால் பாதிக்கப்பட்டு இருக்கின்றனர். இதில், விழிப்புணர்வுடன் மருத்துவரை அணுகி, எலும்பு அழிவு நிலைமையில், அதை கண்டுகொண்டவர்கள் குறைவு தான். 40 வயதை நெருங்கும் பெண்கள், குறிப்பாக மேற்கூறிய ஆபத்து காரணிகள், உங்களுக்கு பொருந்தும் எனில், மருத்துவரை அணுகி, Dexa ஸ்கேன் எனப்படும், எலும்புத்திறம் பரிசோதனை செய்து கொள்ளலாம்.

அரசு மருத்துவக் கல்லூரிகளில், இதற்கான விழிப்புணர்ச்சி முகாம்களும், இலவச ஸ்கேன் வசதிகளும் செய்யப்பட்டுள்ளன. நீடித்து இருக்கும் வலி, குறிப்பாக கழுத்து, மணிக்கட்டு, முதுகுவலி என்றால், அலட்சியப்படுத்தாமல் உடனே மருத்துவரை அணுகி, பரிசோதனை செய்து கொள்ள வேண்டும்.
எலும்பு புரை என்னும் அரக்கனை, அவனது மறைவிடமான எலும்பு அழிதல் நிலைமையிலேயே கண்டுபிடித்து, அழிக்க வேண்டும். எலும்பு முறிவு, உயரக்குறைவு போன்றவை வருமாயின், நோய் உறுதித் தன்மையை அடைந்துவிட்டது என்று பொருள்.

* எப்படி தடுக்கலாம்? எவ்வாறு குணப்படுத்தலாம்?
ஆரோக்கியமான உணவு முறைகள், அளவான உடற்பயிற்சி கொண்டு, எலும்பு புரை உருவாவதை எளிதில் தடுக்கலாம். கால்சியம் கூடிய உணவு வகைகளை, (தயிர்,மோர், பால், tofu, கேழ்வரகு) அதிகமாக உண்ணவேண்டும். கால்சியத்தை உடலில் பிடித்து வைக்க வைட்டமின் "ஈ' சத்து தேவை. நம் உடல், இதை இளஞ்சூரிய வெப்பத்தில் மட்டுமே உற்பத்தி செய்யும். அதிகாலை மற்றும் மாலை நேரங்களில் நடைபயிற்சி, நடைபயணம் போன்றவற்றை மேற்கொள்ளலாம். கால்சியத்தை உடலில் இருந்து வெளியேற்ற ஆற்றல் கொண்ட உப்பு, கோலா, காபி, மது போன்றவற்றை அதிக அளவில் உட்கொள்வதை தவிர்க்கலாம்.

உறுதி செய்யப்பட்ட எலும்பு புரை நோய்க்கு, நாளுக்கு ஒரு மாத்திரை, ஆண்டுக்கு ஒரே ஒரு ஊசி என்று பல விதமான சிகிச்சை முறைகள் உள்ளன. மருத்துவரை அணுகி, தங்கள் வாழ்க்கை முறைக்கு பொருந்தும் வழி முறையை தேர்ந்தெடுத்து கொள்ளலாம். எலும்பு புரையை பொறுத்தவரை, வரும் முன் காப்பதே சால சிறந்தது.

டாக்டர் உமா மகேஸ்வரி,





ஹரிணி, குரோம்பேட்டை, சென்னை: என் வயது 18, என் இடது பக்க மார்பு, அசையும்போது வலிக்கிறது. உருவாகும் வலி, நெஞ்சுக்கும், கைக்கும் பரவுகிறது. மூச்சு இழுத்து விடும்போதும் வலிக்கிறது. இதற்கு காரணம் என்ன?


 
இள வயதில் உங்களுக்கு ஏற்பட்டிருக்கும் இந்த வலிக்கு, தசையே காரணம். காய்ச்சல், இருமல், வேறு தொற்றுகள், ஆழ்ந்து மூச்சு விடும்போது, மார்பில் வலி ஆகியவை, நுரையீரல் மேல் புறத்தில் வீக்கம் இருப்பதற்கான அறிகுறிகளாக இருக்கலாம். இது தானாகவே சரியாகக் கூடியது. இரண்டு அல்லது மூன்று வாரங்களுக்கு வலி தொடர்ந்தால், மருத்துவரை அணுகவும்.


thanx-dinamalar

Saturday, August 18, 2012

பெண் நலம் - பிரசவத்தில்... பொய் வலின்னா என்ன?-மருத்துவம்

A to Z பெண் நலம்

பிரசவத்தில்... பொய் வலின்னா என்ன?

டாக்டர் கீதா அர்ஜூன்

சந்தியாவும் அவள் கணவர் சாரங்கனும் தங்கள் குழந்தையின் வருகையை ஆவலோடு எதிர் பார்த்துக்கொண்டிருந்தார்கள். அவர்களுடைய நீண்ட நாள் கனவு, நனவாகும் சமயம் இது. பிரசவகாலம் நெருங்கிக் கொண்டு இருந்தது. அப்போது அவளுக்குள் பரபரப்பும், படபடப்பும் கலவையாக எழுந்தன. பிரசவம் மற்றும் வேதனை போன்ற சொற்கள் அவளுக்கு கவலையை அளித்தன. பிரசவம் பற்றி அவள் கொஞ்சமாவது தெரிந்துகொண்டால்தான், தம் பயத்தை உதறித் தள்ள முடியும் என்று சந்தியாவுக்குத் தோன்றிற்று.


டாக்டரின் மேஜையை நெருங்கிய உடனேயே, டாக்டர் அவளை அமரச் சொல்லி சைகை செய்யும் முன்னாலேயே, ‘எனக்குக் குழப்பமாய் இருக்கு டாக்டர்!’ என்றாள் சந்தியா. ‘லேபர்-னா என்ன? அதுதான் பிரசவ வேதனையா?’


முதல்ல உட்காருங்க. குழப்பமோ, கவலையோ படாதீங்க. பிரசவத்தின் போது கருப்பை வாய் மெலிந்து விரிவடைகிறது. பத்து சென்டிமீட்டர் வரை முதல் ஸ்டேஜில் விரிவடையும். இரண்டாவது ஸ்டேஜில் குழந்தை பிறப்புப் பாதை வழியே வந்து விடும். அதைத் தொடர்ந்து பிளசன்டா அல்லது தொப்புள்கொடியுடன் சேர்ந்த பாகம் வெளிவருவது மூன்றாவது கட்டம். முதல் ஸ்டேஜ்ல தொடங்குகிற வலிதான் பிரசவ வேதனை."


எல்லாருக்குமே பிரசவ வேதனை, பிரசவமாகிற காலம் ஒரே மாதிரி இருக்குமா?


ஒவ்வொரு பிரசவமும் வித்தியாசமானதுதான். அது எத்தனை நேரம் நீடிக்கிறது, எப்படி முன்னேறுகிறது என்பது, பெண்ணுக்குப் பெண் மாறுபடும். ஆனால் உங்கள் மகப்பேறு மருத்துவருக்குத்தான் அது சரியாக முன்னேறுகிறதா என்று தெரியும். அப்படி முன்னேற்றம் நார்மலாக இல்லையென்றால், மருத்துவ உதவி அல்லது சிசேரியன் தேவைப்படுமா என்பதைத் தீர்மானிப்பார்."


பிரசவத்துக்குப் பத்து மாசம் என்கிறார்களே டாக்டர், அப்போ 300 நாட்கள் காத்திருக்கணுமா?


சாதாரணமாக மனித கர்ப்பம் 280 நாட்கள் அல்லது 40 வாரங்கள் நீடிக்கும். 37 வாரங்கள் முடிந்து விட்டாலே நீங்கள் பிரசவத்துக்குத் தயாராகிவிட்டீர்கள் என்று பொருள். பெரும்பாலான பெண்கள் எதிர்பார்த்த தேதிக்கு ஒரு வாரம் முன்னதாகவோ ஒரு வாரம் பின்னதாகவோ பிரசவிப்பார்கள்.


 ஒருவேளை 37 வாரங்கள் முடிவதற்கு முன்பாகவே பிரசவம் ஏற்படுவதற்கான அறிகுறிகள் தென்பட்டால், அதைக் குறைமாதப் பேறுபிரிமெச்சூர் பிரசவம்அல்லதுப்ரிடர்ம்’ (Pre-term) பிரசவம்என்று குறிப்பிடுவார்கள். 37ஆவது வாரம் முடிவதற்குள் உங்கள் பிரசவத்துக்கான அறிகுறிகள் தோன்றினால் உடனடியாக உங்கள் மருத்துவரை நீங்கள் பார்க்க வேண்டும்."


எது பிரசவ வலியைத் தோற்றுவிக்கிறது?

இதன் காரணம் யாருக்கும் தெரியாது! ஆனால் ஆக்ஸிடாசின், ப்ரோஸ்டாகிளாடின் போன்ற ஹார்மோன்கள்தாம் கருப்பைச் சுவரை மெலிதாக்குகிறது. குழந்தையின் ஹார்மோனும் இயங்குவதால், தாயின் ஹார்மோன்கள் உற்பத்தியாகி வலியை உண்டாக்குகிறது."


பொய் வலி எடுக்குமாமே, டாக்டர்?

சில வேளைகளில் எப்போது பிரசவ வேதனை தொடங்குகிறது என்று கண்டுபிடிப்பது சிரமம். உங்களை மருத்துவ மனையில் சேர்த்துக் கொள்வார்கள். ஆனால் அந்த வலி தொடரவில்லையானால், கருப்பை வாயில் விரிவடையவில்லை என்றால், வீட்டுக்கு அனுப்பிவிடுவார்கள்! இதுதான் பொய் வலி."

அப்படியானால் உண்மையான வலி?


கருப்பை சுருங்கி, அதன் வாய் மெலிதாகி விரிவடையும்போதுதான் உண்மையான வலி உண்டாகிறது. பெண்களின் உடலில் அதற்கான அறிகுறிகள் தாமாகவே தெரிய ஆரம்பிக்கும். பிறப்புறுப்பிலிருந்து சற்றே ரத்தம் கலந்த சளி வெளியாகும். இது வலி தோன்றுவதற்கு ஒரு நாளோ, ஒரு சில நாட்களோ முன்னால் நிகழும். வலி தொடங்கிவிட்டது என்பதை அறிய, இரண்டு அறிகுறிகள் தெரிய ஆரம்பிக்கும்.



தொடர்ந்து, இறுக்கமான பிடிப்பு போல் 30 செகண்டுகளுக்கு நீடித்து, கருப்பை வாய் மெலிதாகித் திறக்கும். அல்லது நீர்க்குடம் உடையும்.


இரண்டில் ஒன்று நிகழ்ந்தாலும், உடனே மருத்துவரை அணுகவும்; அல்லது மருத்துவருக்குச் சொல்லவும். வலி தொடங்கிவிட்டது என்பதை உணர்ந்தால், டாக்டர் சொல்லும் வரை, எந்த உணவும் உண்ண வேண்டாம். நீரும் அருந்தாதீர்கள்."


அப்புறம்?

தொடக்ககால பிரசவ வலியில் கருப்பைவாய் மூன்று சென்டிமீட்டர் வரை விரிவடையும். மூன்றிலிருந்து நான்கு சென்டி மீட்டர் வரை விரிவடையும்போது தான் நிஜமான வலி தொடங்குகிறது. அது அடிக்கடியும், இறுக்கமாகவும் இருக்கும். வேகமாகவும் இருக்கும். சராசரி பெண்களுக்கு ஒரு மணி நேரத்துக்கு ஒரு சென்டி மீட்டர் வீதம் விரிவடையும். வலி அதிகமாக இருக்கையில், முன்னரே பிரசவ அனுபவம் இருந்தால் இது இன்னும் வேகமாக இருக்கும். கருப்பை வாய் முழுவதுமாக விரிவடைந்தவுடன், நீங்கள் குழந்தையைப் பிறப்புப்பாதையில் தள்ளிவிட உங்களை முக்கச் சொல்வார்கள். குழந்தை வெளியே வந்தபின், பிளசன் டாவும் வந்துவிடும்."



சிக்கல்கள் ஏதேனும் இருக்குமா, டாக்டர்?


உங்கள் பிரசவம் நார்மலாக இருக்க, உங்கள் மகப்பேறு மருத்துவரின் அனுபவம், திறமை மற்றும் கவனமான கண்காணிப்பு ஆகியவை இருக்க வேண்டும். உங்கள் இயக்கம், கருப்பைச் சுருக்கம், குழந்தையின் இதயத் துடிப்பின் எண்ணிக்கை பிரசவத்தின்போது கவனிக்கப்படும். அப்போதுதான் பிரசவத்தில் சிக்கல் ஏதும் இருந்தால், உடனே தகுந்த நடவடிக்கை எடுக்க முடியும்.‘


(பருவம் தொடரும் )
எழுத்தாக்கம் : சாருகேசி

நன்றி - கல்கி, அமிர்தம் சூர்யா, கதிர்பாரதி, புலவர் தருமி

Sunday, June 10, 2012

டெங்கு காய்ச்சலில் இருந்து தப்பிக்க 10 வழிகள்

டெங்கு தடுக்க... தகர்க்க... தப்பிக்க 10 வழிகள்

மிழகத்தின் தென் மாவட்டங்கள் முழுவதும் இப்போது டெங்கு அனல். இப்போது கொங்கு மண்டத்திலும் அது கால் பதித்துவிட்டது. காய்ச்சலால் பாதிக்கப்படுவோர், பலியாவோர் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே இருக்கிறது. டெங்கு காய்ச்சலின் பாய்ச்சலில் இருந்து நம்மைத் தற்காத்துக்கொள்வது எப்படி?


 புதுச்சேரி பிம்ஸ் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் பேராசிரியர் டாக்டர் நாகராஜனிடம் விரிவாகப் பேசினோம்.


''டெங்கு என்றால் என்ன? அது எப்படிப் பரவுகிறது?'' 


''டெங்கு என்பது ஒரு வகையான வைரஸ் கிருமி. 'ஏடிஸ் எஜிப்டி’ (Aedes aegypti) என்ற பிரிவைச் சேர்ந்த டெங்கு தொற்று உள்ள பெண் கொசுவால் இது பரவுகிறது. டெங்குவால் பாதிக்கப்பட்ட ஒருவரைக் கடித்த கொசு, பாதிப்பு இல்லாத மற்றொருவரைக் கடிக்கும்போது, அவருக்கும் டெங்கு பரவும். மற்றபடி தண்ணீர், காற்று, எச்சில், இருமல், தும்மல் மற்றும் தொடுதல் மூலம் இந்தக் கிருமி பரவுவது இல்லை. அதாவது மனிதனிடம் இருந்து மனிதனுக்கு இது நேரடியாகப் பரவுவது இல்லை.''


''நெல்லை மாவட்டத்தில் மட்டும் அதிக அளவில் டெங்கு பரவக் காரணம் என்ன?'' 



''சமீபத்தில் நெல்லை மாவட்டத்தில் பெய்த பரவலான கோடை மழைதான் டெங்கு காய்ச்சல் பரவக் காரணம். டெங்கு காய்ச்சல் வழக்கமாக மழைக் காலத்தில்தான் ஏற்படும். டெங்குவைப் பரப்பும் 'ஏடிஸ் எஜிப்டி’ கொசு முட்டை 300 நாட்கள் வரை அழியாமல் இருக்கும். திடீரென்று மழை பெய்யும்போது, டயர், தேங்காய் சிரட்டை போன்றவற்றில் நல்ல நீர் நிரம்பும். அப்போது இந்த முட்டைகள் அதில் செழித்து வளரும். இங்கு பெய்த கோடை மழை அதற்குச் சரியான வாய்ப்பாகிவிட்டது.''



''டெங்கு காய்ச்சலின் அறிகுறிகள் என்ன?'' 


''காய்ச்சல் 104 டிகிரி பாரன்ஹீட் வரை இருக்கும். இதனுடன் சோர்வு, தீவிரமானத் தலைவலி, உடல் வலி, கண் வலி, தசைகள் மற்றும் மூட்டு வலி, வாந்தி, உடலில் அரிப்பு, எலும்பு உடைவது போன்று வலி ஆகியவை இந்த நோயின் அறிகுறிகள்.''


''இந்த அறிகுறிகள் இல்லாமலும் ஒருவருக்கு டெங்கு இருக்குமா?'' 


''ஆம், கொசு கடித்து நோய்க் கிருமி மனித உடலுக்குள் சென்று, மூன்று நாட்கள் முதல் ஏழு நாட்கள் வரை பல்கிப் பெருகும். அதனால், இந்தக் காலகட்டத்துக்குப் பிறகும்கூட டெங்கு காய்ச்சலுக்கான அறிகுறி வெளிப்படும் வாய்ப்பு உண்டு.''


''டெங்கு காய்ச்சலைக் கவனிக்காமல்விட்டால் என்ன ஆகும்?'' 



''டெங்கு காய்ச்சலை ஏழு நாள் காய்ச்சல் என்று கூறுவார்கள். நோய் பாதிப்பு ஏற்பட்டு ஏழு நாட்களில் சரியாகிவிடும். சிலருக்கு மட்டும் டெங்கு வைரஸ் மிக மோசமான பாதிப்பை ஏற்படுத்தலாம். டெங்கு வைரஸ் ரத்தத்தில் உள்ள ரத்தத் தட்டு அணுக்களை அழித்துவிடும். இந்தத் தட்டு அணுக்கள்தான் ரத்தம் உறைவதற்கு மிக முக்கியமான காரணம். ரத்தத் தட்டுக்கள் எண்ணிக்கை குறையும்போது, அது நுரையீரல், வயிறு போன்ற உறுப்புகளிலும் பல் ஈறு, சிறுநீர்ப் பாதையிலும் ரத்தக் கசிவை ஏற்படுத்தக்கூடும். உரிய மருத்துவச் சிகிச்சை கிடைக்கவில்லை எனில் உயிர் இழப்புகூட நேரிடலாம்.''


''டெங்கு காய்ச்சல் வராமல் தடுக்க தடுப்பு ஊசி, மருந்து ஏதேனும் உள்ளதா?'' 


''தடுப்பு ஊசி, மருந்து எதுவும் இது வரை கண்டுபிடிக்கப்படவில்லை. ஆரம்ப நிலையிலேயே கண்டறிந்து, சிகிச்சை எடுப்பதன் மூலம் மட்டுமே உயிர் இழப்பைத் தடுக்க முடியும்.''



''டெங்கு காய்ச்சலில் பாதிக்கப்பட்டவர்களுக்கு என்ன சிகிச்சை அளிக்கப்படும்?'' 



''டெங்கு காய்ச்சலுக்கு எனத் தனி சிகிச்சை எதுவும் இல்லை. ஆனால், இது குணமாக்கக்கூடிய காய்ச்சலே. ஒருவருக்கு ரத்தத்தில் ரத்தத் தட்டுக்களின் எண்ணிக்கை தோராயமாக ஒன்றரை லட்சம் இருக்க வேண்டும். ஆனால், டெங்கு வைரஸ் கிருமியால் பாதிக்கப்பட்டவருக்கு அது வெறும் ஆயிரமாகக்கூடக் குறைந்துவிடலாம். எனவே, தேவைப்பட்டால், ரத்தத் தட்டு எண்ணிக்கையைப் பொருத்து ரத்தம் செலுத்துதல் அல்லது ரத்தத் தட்டு அணுக்கள் செலுத்துதல் போன்ற சிகிச்சைகளை மேற்கொள்வார்கள். ஒரே விஷயம்... காலத்தைக் கடத்தாமல் சிகிச்சை அளித்துவிட வேண்டும்.''


''டெங்கு காய்ச்சல் ஒருவருக்கு ஏற்பட்டால் என்ன செய்ய வேண்டும்?'' 



''உடனடியாக அருகில் உள்ள மருத்துவமனைக்குச் சென்று ரத்தப் பரிசோதனை செய்யவேண்டும். டெங்கு பாதிப்பு உள்ளதா என்பதைக் கண்டறிய டெங்கு ஐ.ஜி.எம். எலிசா, பி.சி.ஆர். ஆகியப் பரிசோதனைகள் செய்யப்படும். பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டால் மருத்துவர்கள் கூறும் வழிமுறைகளைத் தவறாமல் பின்பற்ற வேண்டும். வீட்டிலேயே நன்றாக ஓய்வெடுக்கலாம். உடலில் நீர்ச் சத்து குறையும் என்பதால், அதிக அளவில் நீர்ச் சத்து உணவுகளை எடுத்துக்கொள்ள வேண்டும். ஒருவேளை வாந்தி, வயிற்றுப்போக்கு ஏற்பட்டு நிலைமை மோசமாகத் தொடங்கினால், உடனடியாக மருத்துவமனையில் அனுமதியாகி சிகிச்சைப் பெற வேண்டும்.''



''டெங்கு காய்ச்சல் எவ்வளவு நாட்கள் வரை நீடிக்கும்?'' 


''ஏழு நாட்களில் சரியாகிவிடும். உடல் வலி, சோர்வு போன்ற இதன் பாதிப்புகளில் இருந்து இரண்டு வாரங்களில் வெளிவரலாம்.''


''டெங்கு காய்ச்சலைத் தவிர்க்க என்ன செய்ய வேண்டும்?'' 


''டெங்குவைத் தவிர்க்கக் கொசு ஒழிப்பு ஒன்றே வழி. டெங்குவைப் பரப்பும் 'ஏடிஸ் எஜிப்டி’ கொசு நன்னீரில் முட்டை இடும் என்பதால், கொசு வளர வாய்ப்பு இல்லாதவாறு சுகாதாரமாகச் சுற்றுச்சூழலைப் பராமரிக்க வேண்டும்.


வீட்டுக்குள் கொசு வர முடியாதபடி ஜன்னல்களில் கொசு வலை பொருத்தலாம். வாசலில் நீண்ட திரைச்சீலைகளைப் பயன்படுத்தலாம். கொசுவத்தி, கொசு விரட்டி, ஸ்பிரே போன்றவையும் பயன் கொடுக்கும்.


  வீட்டுச் சுவர்கள் மீது 'டி.டி.டி.’ மருந்தைத் தெளித்தால் கொசுக்கள் ஒழியும். வீட்டைச் சுற்றியும், தெருவோரச் சாக்கடையிலும் 'டெல்டாமெத்திரின்’ மருந்தைத் தெளிப்பது பலன் கொடுக்கும். ஜன நெருக்கடி மிகுந்த குடியிருப்புகளில், 1000 கன அடி இடத்திற்கு 4 அவுன்ஸ் 'கிரிசாலை’ப் புகையை செலுத்துவதும் கொசுக்களை விரட்ட உதவும்.


இவை எல்லாவற்றுடன், சுற்றுப்புறச் சுத்தம் முக்கியம்!''



டெங்கு காய்ச்சல் தடுக்க...
வீட்டைச் சுற்றிலும் தண்ணீர் தேங்கவிடாதீர்கள். தெருவில் தண்ணீர் தேங்கியிருந்தால் சுகாதார ஊழியர்கள் வந்து அகற்றுவதற்குக் காத்திருக்காமல், நீங்களே தண்ணீரை அகற்றுங்கள்.


கை, கால் முழுக்க மறைக்கும் பருத்தி ஆடைகளை அணியலாம். கொசு எதிர்ப்புக் களிம்பைப் பூசிக்கொள்ளுங்கள்.


குடிநீரைக் காய்ச்சி வடிகட்டிக் குடியுங்கள்.


காய்ச்சல் வந்தால் உடனே செய்ய வேண்டியது... 


டெங்கு அறிகுறி தெரிந்தால், சிறிதும் தாமதம் இன்றி உடனடியாக மருத்துவரை அணுகி, ரத்தப் பரிசோதனை செய்து கொள்ளுங்கள்.


டெங்கு காய்ச்சல் உடலில் நீர்ச் சத்தைக் குறைத்துவிடும். உடலின் நீர் இழப்பைத் தடுக்க இளநீர், கஞ்சி, உப்பு-சர்க்கரைக் கரைசல் போன்ற நீராகாரமாக அதிகம் எடுத்துக்கொள்ள வேண்டும்.


எப்படிப் பரவாது... 


ஒருவரை ஒருவர் தொடுவதால் டெங்கு பரவாது. தும்மல், இருமல் மூலமும் இது பரவாது.

 நன்றி - டாக்டர் விகடன்


Sunday, July 31, 2011

டென்ஷன் பார்ட்டிங்க எல்லாம் வரிசையா வாங்கப்பா...நர்ஸ் நளினா சொல்றதை கேளுங்கப்பா

http://thavorngrandplaza.com/phuket-travel/wp-content/uploads/2010/05/tb_Clinics_450x300.jpg

உளைச்சலைப் போக்க உணவே மருந்து!

 ஆரோக்கியப் பக்கம்!
ன வலிமையை தீர்மானிப்பதில் முக்கிய பங்கு வகிப்பதே நாம் அன்றாடம் உட்கொள்ளும் உணவில்தான் இருக்கிறது. உடலையும், மனதையும் உற்சாகமாக இயங்க வைக்க, ஆரோக்கியமான சரிவிகித உணவை  கடைப்பிடித்தாலே போதும், மனஅழுத்தத்தை முற்றிலும் குறைக்கலாம்.  நாம் தினமும் கடைப்பிடிக்க வேண்டிய உணவுப் பழக்கங்கள் குறித்து மதுரை அப்போலோ ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையின் உணவியல் நிபுணர் வி.சுகன்யா இங்கே விரிவாக சொல்கிறார்.


'எடுத்த காரியத்தை முடிக்கவேண்டும் என்ற தூண்டுதல் தேவைதான். ஆனால், அதுவே அளவுக்கு அதிகமாகும்போதுதான் மன அழுத்தம் என்கிற 'ஸ்ட்ரெஸ்’ நம்மை இறுக்கிப் பிடிக்கத் தொடங்குகிறது. உதாரணத்திற்கு... இன்றைக்கு நாம் 10 வேலைகளை முடித்திருக்கிறோம் என்றால், நாளைக்கு அதை 12 அல்லது 13 என்பதுபோல் அதிகரித்துக் கொள்ளலாம்.  அதுவே, ஒரே நாளில் 20 வேலைகள் என இலக்கு நிர்ணயிப்பது மன அழுத்தத்தை ஏற்படுத்தும்.


நார்ச்சத்து, கார்போஹைட்ரேட், வைட்டமின்கள் போன்ற பல்வேறு அடிப்படை சத்துக்களைக் கொண்டதுதான் ஆரோக்கியமான உணவு.  இவை சாப்பிடும் உணவில் இருக்கும்படி பார்த்துக் கொள்ள வேண்டியது அவசியம்.


தொடர்ச்சியான வேலையால்,  பெரும்பாலானோர், காலை உணவை தியாகம் செய்துவிடுவதுண்டு. இது தவறு! இரவு உணவுக்கும் காலை உணவுக்கும்,  உள்ள இடைவெளி அதிகம். காலை உணவை தவிர்க்கும்போது உடலில் போதிய சக்தி இல்லாமல் போய்விடும். இதனால், சிறிய மன அழுத்தம் ஏற்பட்டாலும், அது அதிகமாகி விடும்.  தலைவலி, தலைசுற்றல், கவனக் குறைவு போன்ற கூடுதல் பிரச்னைகள் தலைதூக்கும்.'' என்றவர், மன அழுத்தம் குறைவதற்கு எந்த மாதிரியான உணவுகளை எடுத்துக் கொள்ள வேண்டும் என்பதையும் விளக்கினார்.

http://www.odt.co.nz/files/story/2009/11/youth_health_clinic_nurse_kate_balfour_takes_the_b_1449208845.JPG

'மன அழுத்தத்தைக் குறைப்பதில், நார்ச்சத்து நிறைந்த தானியங்களுக்கு முக்கிய பங்கு உண்டு. அவை 'செரடோனின்’ என்கிற ஹார்மோனை சுரக்க வைக்கிறது. இது மூளையை அமைதியாக வைத்திருக்க உதவும். ஆரஞ்சுப் பழத்தில் விட்டமின் சி அதிகமாக இருப்பதால், அது நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதோடு, மன அழுத்தத்தையும் குறைக்க உதவும். பசலைக் கீரை மன உளைச்சலை குறைக்கச் செய்யும். மேலும், மீன் உணவில் அதிகமாக இருக்கும் ஒமேகா-3 என்கிற கொழுப்புச் சத்தும் மனஅழுத்தத்தைக் குறைப்பதில் முக்கிய பங்கு வகிக்கிறது.

காபியை தவிர்ப்பதாலும், டென்ஷன், ஸ்ட்ரெஸிலிருந்து பெருமளவு விடுபடலாம். மன அழுத்தம் இருப்பவர்கள், காபிக்குப் பதிலாக பால் சேர்க்காத பிளாக் டீ ஒரு நாளைக்கு இருமுறை அளவோடு எடுத்துக் கொள்ளலாம். தினசரி உணவில் கேரட், வெள்ளரி போன்ற பச்சைக் காய்கறிகள், பழ வகைகளை சேர்த்து சாலட்டாக சாப்பிடவேண்டும். எண்ணெய், நெய், டால்டா, தேங்காயின் அளவைக் குறைத்துக் கொள்ளவேண்டும். 

மன அழுத்தம் இருப்பவர்கள், பாதாம், பிஸ்தா போன்ற நட்ஸ் வகைகளை வாரத்துக்கு மூன்று முறை 15 கிராம் உட்கொண்டால் நல்ல பலன் கிடைக்கும். ஆனால், ரத்தத்தில் சர்க்கரை,  கொலஸ்ட்ரால் அளவு அதிகமாக இருந்தால், இவற்றை குறைவாக எடுத்துக் கொள்ளவேண்டும். பெரும்பாலும் எண்ணெய் வகைகள் மற்றும் இனிப்பு வகைகளைத் தவிர்ப்பது நல்லது.

உடலில் தண்ணீர் அளவு குறைந்தாலும், போதிய தூக்கமின்மையாலும் மன அழுத்தம் ஏற்படக்கூடும். தினசரி குறைந்தது இரண்டரை லிட்டர் முதல் 3 லிட்டர் வரை தண்ணீர் கட்டாயம் குடிக்க வேண்டும். டென்ஷன் இருக்கும்போது தண்ணீர் குடித்தால் நல்லபலன் கிடைக்கும். ஏழு மணிநேர தூக்கம் மிக அவசியம். தவிர்க்கமுடியாமல், இரவு விழிக்க வேண்டி இருந்தால், மறுநாள் சீக்கிரமாகத் தூங்கிவிடுவது நல்லது.
மன அழுத்தத்துக்கு செலவே இல்லாத மருத்துவம் நடைப்பயிற்சிதான். தினசரி குறைந்தது அரை மணி நேரம் மிதமான வேகத்தில் தொடர்ந்து நடப்பது உடலுக்கும் உள்ளத்துக்கும் நல்லது.

http://www.spraguephoto.com/stock-photos/9935-Nursing-students-in-class,-Nursing-school-at-Muttuchira,-Kerala,-India.%7C9186.jpg
சிகரெட், மதுப் பழக்கம்,  மன அழுத்தத்தைக் குறைப்பதற்குப் பதிலாக அதிகரித்து விடும்,  ஜாக்கிரதை! தொடர் மன அழுத்தம் இருந்தால் நீரிழிவு, இதய நோய், ரத்த அழுத்தம் போன்ற நோய்கள் தாக்கும் அபாயம் இருக்கிறது.’ என்றார் சுகன்யா அக்கறையுடன்


நன்றி - டாக்டர் விகடன்


டிஸ்கி - ஈரோட்டில் புத்தகத்திருவிழா நடக்கிறது.. ட்விட்டர் நாயகர்கள் கம் ஈரோடு, கோவை,திருப்பூர் ட்விட்டர்ஸ் கம் பதிவர்கள் சிலர் ஈரோடு வர்றாங்க.. ஜஸ்ட் எ ஃபார்மல் மீட் .. வர்றவங்க எல்லாம் வாங்க.. இதுவரை வர்றதா சொன்னவங்க

1. அவினாசி ராஜன் லீக்ஸ் ( ஆல் இன் ஆல் அழகு ராஜாக்கடை )

2. திருப்பூர்  கே பி கிருஷ்ணகுமார் ( பரிசல்காரன் )

3. கோபி செல்வா ( கோமாளி செல்வா)

4. ஷர்புதீன் ( ரசிகன்)

5. கே தீபக் குமார்

Sunday, May 29, 2011

டியர்.. ஆயில் (OIL) உள்ளவரை உன்னை மறக்க மாட்டேன்.....

http://www.chennaivision.com/userfiles/monica.jpg

''ஆயுளைப் பாதிக்கலாமா ஆயில்?''

'என்னை இந்த அளவுக்கு குண்டாக்கியது எண்ணெய்தான்!’ - பருமனான நண்பர் ஒருவர் சமீபத்தில் சிலேடையாகச் சொன்னது இது.

நவீன நாகரிக உலகில் பல பிரச்னைகளுக்கு நாம் பயன்படுத்தும் அளவுக்கு அதிகமான சமையல் எண்ணெய்தான் காரணம் என்கிறது சமீபத்திய மருத்துவ ஆராய்ச்சி. எண்ணெய், வயிற்றை மட்டும் அல்ல, வருமானத்தையும் பதம் பார்க்கும் ஒன்றாக மாறிவிட்டது.
பர்ஸை பாதிக்காத அளவுக்கு சிக்கனமாகவும், வயிற்றைப் பாதிக்காத அளவுக்கு பக்குவமாகவும் ஆயிலைப் பயன்படுத்தும் விதம் பற்றி இங்கே விளக்குகிறார் சென்னை விஜயா மருத்துவமனையின் உணவு ஆலோசகர் பி.கிருஷ்ணமூர்த்தி.

''சமையலில் எண்ணெய் சேர்ப்பது சுவைக்காக மட்டுமே என நம்மில் பலரும் நினைக்கிறோம். அது தப்பு. பொதுவாக ஒரு மனிதன் உடல் நலனுடன் இருக்க வேண்டும் என்றால் மாவுச் சத்து, புரதம், கொழுப்பு, விட்டமின் மற்றும் தாது உப்புகள் தேவை. இந்த ஐந்தும் அளவோடு இருந்தால் வளமோடு வாழலாம்.

இதில் கொழுப்பு சத்துதான் ஆயில். தோலின் பளபளப்பு, நோய் எதிர்ப்பு சக்திக்கு எண்ணெய் தேவைப்படுகிறது. ஒரு நாளைக்கு, ஒரு மனிதனுக்குத் தேவையான மொத்த கலோரியில், சுமார் 25-35 சதவிகிதம் ஆயில் மூலம் கிடைத்தால் போதும். இதுவே சர்க்கரை நோயாளிகள் என்றால் 25-30 சதவிகிதமும், இதய நோயாளிகள் என்றால் 25 சதவிகிதமும் இருந்தால் போதும்.
சுமார் 20-25 ஆண்டுகளுக்கு முன்பு நம்மவர்களிடையே உடல் உழைப்பு அதிகமாக இருந்தது. குடும்பப் பெண்கள் சமையல் தொடங்கி துணி துவைப்பது வரை பெரும்பாலான பணிகளை உடலை வளைத்து நெளித்து செய்தார்கள். இன்றைக்கு எல்லாம் இயந்திரமயமாகி விட்டது. உடல் உழைப்பு என்பது மருந்துக்குக் கூட இல்லை. உடல் உழைப்பு அதிகமாக இருந்த காலத்தில்கூட  மக்கள் எண்ணெய் பதார்த்தங்களை அளவோடுதான் சாப்பிட்டார்கள்.

அந்த காலத்தில் விருந்து என்றால் மூன்று மாதத்துக்கு ஒரு முறையோ அல்லது ஆறு மாதத்துக்கு ஒரு முறையோ இருக்கும். ஓட்டல்களில் சாப்பிடுவது என்பது அரிதாக இருக்கும். இப்போதோ மாதத்துக்கு குறைந்தது 5-6 விழாக்களில் பங்கேற்று வயிறு முட்ட சாப்பிடுகிறார்கள். அத்தனையும் ஆயில் பதார்த்தமாகவே இருக்கிறது.
நம்மவர்களின் தினசரி உணவுப் பட்டியலில் அதிக ஆயில் இருக்கும் பதார்த்தங்களான பஜ்ஜி, போண்டா, ஃபிரைட் ரைஸ், சில்லி சிக்கன், பர்க்கர் போன்றவற்றில் ஏதாவது ஒன்று நிச்சயம் இடம் பிடித்துவிடுகிறது. பலரும் காலை 11 மணி வாக்கில் அல்லது மாலை 4 மணி வாக்கில் டீ, காபி உடன் பஜ்ஜி அல்லது போண்டாவை சாப்பிடுவதை பழக்கமாக வைத்திருக்கிறார்கள். அவர்கள் வயிற்றை கெடுத்துக் கொள்வதோடு உடலில் தீமை செய்யும் கொலஸ்ட்ராலையும் ஏற்றிக் கொள்கிறார்கள். 
அந்த காலத்தில் உடலுக்கு தீமை செய்யாத நல்லெண்ணெய் மற்றும் கடலை எண்ணெய்யை நம்மவர்கள் அளவோடு உணவில் சேர்த்துக் கொண்டார்கள். ஏதாவது விருந்து விஷேசம் என்றால் மட்டுமே நெய்யை உணவில் சேர்த்துக் கொண்டார்கள். இன்றைக்கு விலைவாசி உச்சத்தில் இருப்பதால் வீட்டு பட்ஜெட்டை குறைக்க பாமாயில் போன்ற உடலுக்கு அதிக தீங்கு விளைவிக்கும் எண்ணெய்களை அதிகமாக பயன்படுத்த தொடங்கி இருக்கிறோம்.

ஒரு பக்கம் எண்ணெய் செலவை மிச்சப்படுத்துகிறோம் என்று செயல்பட்டு, மறுபுறம் அதற்கும் சேர்த்து மருத்துவத்துக்கு செலவழித்து வருகிறோம். இந்த விஷயத்தில் நம் மக்களிடம் இன்னும் அதிக விழிப்புணர்வு வர வேண்டும்!'' என்றவர் சற்று நிறுத்தி, அதிக ஆயில் எப்படி பிரச்னையாக மாறுகிறது என்பதையும் விளக்கினார்.நாம் சாப்பிடும் ஆயில் அளவு தேவைக்கு அதிகமாகும்போது கொலஸ்ட்ரால் என்கிற கெட்ட கொழுப்பாக மாறி ரத்தத்தில் சேர்கிறது.

இது, ரத்தக் குழாயில் உறையும் அபாயம் இருக்கிறது. இதனால், ரத்த ஓட்டம் தடைபடும். அப்படி நடக்கும்போதுதான் மாரடைப்பு போன்ற சம்பவங்கள் ஏற்படுகின்றன.
 http://www.koodal.com/cinema/gallery/events/2011/423/vambu-and-bhadra-movie-press-meet-stills_1_165234123.jpg
தற்போது கணவன், மனைவி, இரு குழந்தைகள் உள்ள நான்கு பேர் கொண்ட குடும்பத்தினர் மாதத்துக்கு மூன்று லிட்டர் ஆயிலை பயன்படுத்துகிறார்கள். இதை பாதிக்குப் பாதியாக ஒன்றரை லிட்டராக குறைப்பது உடல் நலனுக்கும் அவர்கள் பட்ஜெட்டுக்கும் நல்லது. பொதுவாக வயது வந்த பெரியவர்களுக்கு ஒரு மாதத்துக்கு வீட்டில் 400-500 மில்லியும். 14 வயதான சிறுவர்களுக்கு சுமார் 300 மில்லி சமையல் எண்ணெய்யும் செலவழித்தால் போதும். மேலும் உடல் பருமன் உள்ளவர்கள், முகப் பரு உள்ளவர்கள் ஆயிலைக் குறைப்பது அவசியம்.

சாலையோர கடைகளில் விற்கப்படும் வடை, சமோசா, பஜ்ஜி போன்றவை ஆரோக்கியம் குறைந்த கசடு எண்ணெய்யில் பொறிக்கப்படுவதால், அவற்றை தினசரி மற்றும் அடிக்கடி சாப்பிடுவதை தவிர்ப்பது நல்லது.

குறைவான விலையில் கிடைக்கிறதே என்று, இவற்றை உண்பதால்தான் பெரிய அளவில் மருத்துவ செலவுக்கு ஆளாக வேண்டிய இக்கட்டு உருவாகிறது!'' -அக்கறையோடு சொல்கிறார் டாக்டர்  கிருஷ்ணமூர்த்தி.

நன்றி - டாக்டர் விகடன்

Friday, May 27, 2011

ஹை ஹீல்ஸ் அணியும் பெண்களே உஷார்.. செப்பல் வாங்கும் முன் கவனிக்க உபயோக டிப்ஸ்

7.jpg (625×893)


அன்ன நடை... சின்ன இடை... என பெண்களின் ஆரம்பகால நடை அழகு எல்லாம் நடையைக் கட்டிவிட்டது. செருப்புக்கு கீழே ஸ்டூல் வைத்த மாதிரி ஹை ஹீல்ஸ் அணிந்துகொண்டு 'பூனை வாக்’ போவதுதான் இப்போதைய ஃபேஷன்!

''பூனை வாக் பார்ப்பதற்கு அழகாகத்தான் இருக்கும். ஆனால், ஹை ஹீல்ஸ் காலணிகளால் ஏற்படும் பாதிப்பு களையும் மனதில் கொள்ள வேண்டும்!'' என்கிறார் சென்னையைச் சேர்ந்த எலும்பு, மூட்டு அறுவை சிகிச்சை மற்றும் பாத சிகிச்சை நிபுணரான டாக்டர் ராஜா!

'அழகு என்றால், கூடவே ஆபத்தும் இருக்கத்தானே செய்யும். அதை எல்லாம் நாங்க ஒரு கை பார்த்துடுவோம்ல' என்று இளமைத் துள்ளலில் இந்த எச்சரிக்கையை அலட்சிய மாகக் கடக்க வேண்டாம். டாக்டர் விரிவாகப் பேசுவதைக் கேட்டுவிட்டு, ஹை ஹீல்ஸுக்குள் காலைச் செருகுங்கள் பார்க்கலாம்!

''ஃபேஷன், பர்சனாலிட்டி வசதிக்காகத்தான் பெண்கள் ஹீல்ஸ் அணிகிறார்கள். ஆனால், அது அவர்களுக்கு வசதியாகவும், ஆபத்து இல்லாமலும் இருக்க வேண்டியது முக்கியம் அல்லவா! பொதுவாக, ஒன்றரை இன்ச் அளவுக்குக் கீழ் உள்ள ஹீல்ஸைப் பயன்படுத்தலாம். இதனால் பாதிப்புகள் இருக்காது. அதற்கு மேல் அணியும்போதுதான், உடல் அவதிகள் வரிசை கட்டும்.

ஹை ஹீல்ஸின் பாதிப்பு, நம் நடையின் இயல்பான சாயலையே மாற்றிவிடும். நார்மலாக பெண்களின் இடை, 'எஸ்' வடிவ வளைவுடன்
இருக்கும். ஆனால், தொடர்ந்து ஹீல்ஸ் அணிபவர்களுக்கு அந்த வளைவின் அழகு மாறும். இடுப்புத் தசைகள் இறுகுவதுடன், கால் முட்டி முன்பக்கமாக வளைந்து காணப்படும்!'' என்று புறத்தோற்ற மாறுதல்களை விளக்கியவர், உள் பாதிப்புகளைத் தொடர்ந்தார்.

''நம் பாதம்... முன்பகுதியான 'ஃபோர் புட்’, நடுப்பகுதியான 'மிட் ஃபுட்’ மற்றும் பின் பகுதியான 'ஹைண்ட் ஃபுட்’ என மூன்று பகுதிகள் ஒருங்கிணைந்தது. காலணி அணியும்போது முன் பகுதி நன்றாகஅசைக்கக்கூடிய வகையிலும், நடுப்பகுதி நல்ல சப்போர்ட்டுடனும், பின் பகுதி வசதியாகவும் காலணிக்குள் பொருந்த வேண்டும். முக்கியமாகப் பாதத்தின் ஆர்ச் பகுதியை நன்றாகப் பிடித்துக் கொள்ளும்படி இருக்க வேண்டும். அப்போதுதான் உடம்பின் எடையை பாதம் பேலன்ஸ்டாக தாங்க வசதியாக இருக்கும்.
ஆனால், ஹை ஹீல்ஸ் அணியும்போது மொத்த உடல் எடையில் 75 சதவிகிதம் முன் பாதத்தில் இறங்கிவிடும். அதனால் முன் பாதத்தில் ஆணிக்கால், காய்ப்பு போன்ற பாதிப்புகள் ஏற்படலாம். மேலும், குதிகால் பாதிப்புடன் ஆடுதசை பகுதியும் இறுக்கமாகலாம்.
தொடர்ந்து ஹை ஹீல்ஸ் பயன்படுத்தும்போது, முழங்கால் மூட்டின் உள் பகுதியான 'மீடியல் கம்பார்ட்மென்ட்’-ல் தேய்மானம் ஏற்படும். ஒரு கட்டத்தில், முழங்கால் மூட்டில் தேய்மானம் அதிகமாவதுடன், முதுகுப் பகுதியிலும் எலும்பு தேய வாய்ப்புகள் அதிகம். அதன் விளைவுகள்... உடல் இயக்கத்தையே சிரமப்படுத்தும்.

மொத்தத்தில் பார்ட்டி, ஃபங்ஷன் என்று ஓரிரு மணி நேரம் வரை ஹீல்ஸ் அணியலாம். தவறு இல்லை. டெய்லி யூஸ் என்றால், பத்து மில்லி மீட்டர் உயரம் கொண்ட ஃப்ளாட் செப்பல்களே பெஸ்ட்!'' - தீர்க்கமாகச் சொல்கிறார் டாக்டர் ராஜா.

'காலுக்குப் பத்தாத செருப்பை கழட்டி எறி!’

- பாட்டிகள் அடிக்கடி சொல்லும் இந்தப் பழமொழியுடன் முடிக்கலாம்தானே இந்தக் கட்டுரையை!



 காலணிகள் வாங்கும்போது, மாலை நேரத்தில் வாங்குவதுதான் நல்லது. இது என்ன புதுக்கதை என்கிறீர்களா? காரணம் இருக்கிறது. காலையில் இருந்து வேலை, விளையாட்டு என்று ஓடிக்கொண்டே இருக்கும் நமக்கு, மாலையில் பாதத்தின் சுற்றளவு ஒரு இன்ச் வரைகூட கூடியிருக்கும். எனவேதான் இந்தப் பரிந்துரை.

 ஷூக்களை டிரயல் பார்க்கும்போது, அவற்றின் முன் பகுதியில் நம் கை கட்டைவிரல் அகலத்துக்கு இடைவெளி இருக்கிறதா... கால் விரல்களை நன்றாக அசைக்க முடிகிறதா... ஷூவின் பின்பக்கம் பாதத்தினை அழுத்தாமல், அதேசமயம் அணைத்தவாறு இருக்கிறதா என்றெல்லாம் சரிபார்க்க வேண்டும்.
 சாக்ஸ் வாங்குவதிலும் கவனம் தேவை. நம் நாட்டின் வெப்பநிலைக்கு காட்டன் சாக்ஸ் அணிவதுதான் நல்லது. லெதர், ரப்பர், பிளாஸ்டிக் சாக்ஸ்களுக்கு வியர்வையை உறிஞ்சும் தன்மை இருக்காது. விளையாட்டு துறையில் இருப்பவர்கள் 'திக் சாக்ஸ்’ அணியலாம். சரியான உடல்வாகு உள்ளவர்கள் 'தின் சாக்ஸ்’ அணியலாம்.

 நீரிழிவு நோயாளிகளுக்கு ஆடுசதை வரை அழுத்தும் 'சீம் சாக்ஸ்’ ரத்த ஓட்டத்தை பாதிக்கும் என்பதால், கணுக்காலுடன் முடியும் 'சீம்லெஸ் காட்டன் சாக்ஸ்’ தேர்ந்தெடுக்கலாம். ஸ்போர்ட்ஸ் நபர்கள் கட்டாயமாக 'சீம் சாக்ஸ்’ அணிய வேண்டும்.

 ஹை(யோ) ஹீல்ஸ்! 

தங்களின் ஹை ஹீல்ஸ் அனுபவங்களை பகிர்ந்து கொள்கிறார்கள் இவர்கள்...
சிந்து (மாடல்) : 

''ஒரு பார்ட்டிக்காக மூன்றரை இன்ச் பாயின்ட்டட் ஹீல்ஸ் போட்டுட்டுப் போனேன். காலையில இருந்து சாயங்காலம் வரை ஒருவித அசௌகரியத்தோடயே இருந்தேன். வீட்டுக்கு வந்தா, கால் வலி உயிர் போயிடுச்சு. வெதுவெதுப்பான நீர்ல ஒத்தடம் கொடுத்தாங்க அம்மா. மறுநாள் டாக்டர்கிட்ட போயும், ஒருவாரம் கழிச்சுதான்தான் சரியாச்சு வலியும் வீக்கமும். அன்னியோட ஹீல்ஸுக்கு சொல்லிட்டேன் பெரிய 'பை'!''

அருட்செல்வி 

(தொகுப்பாளினி, மக்கள் தொலைக்காட்சி): 

''நான் மீடியம் ஹைட் ஹீல்ஸ் போடுவேன். என் ஃப்ரெண்ட் ஒருத்தி ஹை ஹீல்ஸோட பஸ்ல ஏறி தடுக்கி விழுந்து அடி, அவமானப்பட்டதை பார்த்ததில் இருந்து ஹீல்ஸை சுத்தமா விட்டுட்டேன்.''

நிவேதா சீனிவாசன் 

(மருத்துவக் கல்லூரி மாணவி, சென்னை): 

''நான் ரெகுலராவே ஹீல்ஸ் யூஸ் பண்ணினேன். ஆரம்பத்துல ஒண்ணும் தெரியலை. போகப் போக கால் வலி, மூட்டு வலி, முதுகு வலி பிரச்னைகள் படுத்துச்சு. ஆனாலும், என்னால ஹீல்ஸ் க்ரஷ்-ஐ விட முடியலை. அவுட்டிங்-க்கு மட்டும் போடறது, ஃபங்ஷனுக்கு மட்டும் போடறதுனு இப்போ கொஞ்சம் கொஞ்சமா ஹீல்ஸ் பழக்கத்தை கஷ்டப்பட்டு குறைச்சுட்டு இருக்கேன்!''


நன்றி - விகடன்

Monday, April 25, 2011

”ஃபுல்” கட்டு கட்ற ஆளுங்க எல்லாம் வரிசைல வாங்கப்பா....

''வயிற்றுக்கு கட்டுப்பாடு... வைத்தியத்துக்கு தடா!''


வீட்டு பட்ஜெட்டில் மாதம்தோறும் மருத்துவச் செலவுக்கே பெரிய அளவில் நிதி ஒதுக்கவேண்டி இருக்கிறது. இந்த நேரத்தில், ''ரத்த அழுத்தம், நீரிழிவு, ஆஸ்துமா, கொலஸ்ட்ரால் என பல்வேறு நோய்களையும் நமது உணவுக் கட்டுப்பாட்டாலேயே தீர்க்க முடியும்!'' என்கிறார் 'அனாடமிக் தெரபி’ என்கிற 'செவி வழி தொடு சிகிச்சை முறை’யை பரப்பிவரும் கோவையைச் சேர்ந்த பாஸ்கர்.


''உலகில் உள்ள அனைத்து நோய்களுக்கும் முக்கியக் காரணம் ரத்தம் சுத்தமாக இல்லாததுதான். ரத்தத்தைச் சுத்திகரித்தால் அனைத்து நோய்களையும் குணப்படுத்தலாம்.

மனித உடலில் சுத்தமான ரத்தத்தை உருவாக்க உணவு, குடிநீர், மூச்சுக் காற்று, தூக்கம், உடல் உழைப்பு ஆகிய ஐந்தையும் ஒழுங்குபடுத்த வேண்டும். தமிழர்களுக்கு எப்படி சாப்பிட வேண்டும் என்பதே தெரியவில்லை. உணவை அள்ளிப்போட்டு வயிற்றின் உள்ளே தள்ளுவதற்குத்தான் வாய் இருக்கிறது என்று பலரும் நினைக்கிறார்கள்.

 இது தவறு. சாப்பிடும் உணவு ஜீரணமாவதற்கான வேலை வாயிலேயே ஆரம்பித்துவிடுகிறது. எக்காரணம் கொண்டும் பசித்தால் மட்டும்தான் சாப்பிட வேண்டும். உணவில் இனிப்பு, கசப்பு, துவர்ப்பு, புளிப்பு, உப்பு, காரம் என ஆறு சுவைகள் இடம் பெறுவது அவசியம். அப்போதுதான் ரத்தத்தில் அனைத்து சத்துகளும் இருக்கும்.

 மேலும், பற்களால் நன்கு கடித்தும் மென்றும் கூழாக்கி, நாக்கால் சுவையை ருசித்த பின்னரே உணவை விழுங்கவேண்டும். அப்போதுதான் உமிழ் நீருடன் சேர்ந்து நாம் சாப்பிடும் சாப்பாட்டில் உள்ள சர்க்கரை நல்ல சர்க்கரையாக மாறும். மனிதன் வாயின் இரு பக்கங்களிலும் மூன்று ஜோடி உமிழ்நீர் சுரப்பிகள் இருக்கிறன.

 இதில் புரோட்டீன், தாது உப்புக்கள் மற்றும் அமைலேஸ் என்கிற என்ஸைம் போன்றவை இருக்கின்றன. இந்த என்ஸைம் நாம் சாப்பிடும் உணவு வேகமாக ஜீரணமாக உதவுகிறது. வாயிலேயே உணவு நன்றாக மெல்லப்படுவதால், இரைப்பையில் ஜீரணத்துக்காக எடுத்துக்கொள்ளும் சிரமம் குறைக்கப்படுகிறது. இவ்வாறு மென்று சாப்பிடும்போது ஆரம்பத்தில் சில தினங்களுக்கு தாடை வலிக்கும். ஆனால், போகப்போக பழகிவிடும்.


அடுத்து சாப்பிடுவதற்கு அரை மணி நேரம் முன்னும் பின்பும் கண்டிப்பாகத் தண்ணீர் குடிக்கக் கூடாது. சாப்பிடும்போதும் தண்ணீர் குடிக்கக் கூடாது. சாப்பாட்டு வேளையில் மனித வயிற்றில் உணவு ஜீரணமாவதற்கான திரவம் சுரந்திருக்கும்.

 அந்த நேரத்தில் தண்ணீர் குடித்தால், அந்த திரவத்தின் தீவிரம் குறைந்து உணவு சரியாக ஜீரணமாகாது. குளித்த பின் சுமார் 45 நிமிடம் கழித்துதான் சாப்பிட வேண்டும். சாப்பிட்ட பிறகு  இரண்டரை மணி நேரத்துக்குள் குளிக்கக் கூடாது!'' - நம்மில் எத்தனை பேர் இதனை கடைபிடிக்கிறோம் என்பது தெரியவில்லை. பாஸ்கர் சொல்வதை மேற்கொண்டும் கேளுங்கள்..

.

''டிவி. பார்த்தபடி, புத்தகம் படித்தபடி, பேசியபடி சாப்பிடக் கூடாது. நாம் எதைச் செய்கிறோமோ அதற்கு ஏற்றபடிதான் என்ஸைம் சுரக்கும். ஜீரணமாவதற்கான என்ஸைம் சுரக்காது. ஒருவர் எத்தனை இட்லி சாப்பிடலாம்? எத்தனை சப்பாத்தி சாப்பிடலாம் என்பதை வரையறுக்க முடியாது.

 இந்த உணவு பலகாரத்தின் அளவு ஒவ்வொரு வீட்டிலும் வெவ்வேறாக இருக்கும். ஒரு வீட்டில் செய்யப்படும் சப்பாத்தியின் அளவு இன்னொரு வீட்டில் செய்யப்படும் மூன்று சப்பாத்திகளுக்கு இணையாக இருக்கும். இதனால், சரியான சாப்பாடு அளவை குறிப்பிடுவது கடினம்.

 சரியான உணவு என்பது முதல் ஏப்பம் வந்தவுடன் நிறுத்திக் கொள்வதுதான். அளவுக்கு மீறினால் அமிர்தமே விஷம் என்கிறபோது, உணவு மட்டும் விதிவிலக்கா என்ன? 

காலை தொங்கப் போட்டபடி நாற்£லியில் உட்கார்ந்து சாப்பிடுவது நல்லது அல்ல. மேலும், சிலர் கண் மூடி திறக்கும் முன் சாப்பிட்டு முடித்திருப்பார்கள். சிலர், சாப்பிட முக்கால் மணி நேரம் எடுத்துக்கொள்வார்கள். இரண்டும் தவறு. குறைந்தபட்சம் 5 நிமிடம், அதிகபட்சம் 15 நிமிடம்தான் சாப்பிட வேண்டும்!'' என்றவர் கூடுதலாகக் கொடுத்த டிப்ஸ்... 

''தாகம் எடுத்தால்தான் தண்ணீர் குடிக்க வேண்டும். சிறு நீர் கழித்தால் உடனே தண்ணீர் குடிக்கவேண்டும். தேநீர், காபியை தவிர்த்து எலுமிச்சை, இளநீர், பழ ரசங்களை குடிக்கவேண்டும். குறைந்தது ஆறு மணி நேர உறக்கம் அவசியம். தூங்கும் போது ஜன்னல்களைத் திறந்து வையுங்கள்.

 சாப்பாட்டில் இருக்கிற கார்ப்போஹைட்ரேட் என்கிற மாவு சத்துதான் சர்க்கரையாக மாறுகிறது. வெள்ளை சர்க்கரை என்கிற சீனியை பயன்படுத்துவதை நிறுத்தினாலே பாதி நோய் குணமாகிவிடும். அதை விஷம் என்றுதான் சொல்லவேண்டும். இனிப்பு தேவை என்கிறபோது தேன், வெல்லம், கருப்பட்டி போன்றவற்றைப் பயன்படுத்திக் கொள்ளலாம்.

 நான் சொல்வது ஒன்றும் புதிய விஷயங்கள் அல்ல. அன்றே நம் முன்னோர்கள், 'நொறுங்கத் தின்றால் நூறு வயது வாழலாம்’ என்று சொல்லி இருக்கிறார்கள்.இனியாவது செலவு மற்றும் மருந்து இல்லாத, அனாடமிக் தெரபி முறைப்படி சாப்பிட்டு நலமோடு வாழ முயற்சி செய்யுங்கள்!''

நன்றி டாக்டர் விகடன்