Showing posts with label மணிரத்னம். Show all posts
Showing posts with label மணிரத்னம். Show all posts

Tuesday, September 11, 2012

மவுன ராகம் - சினிமா விமர்சனம்

http://img.filmlinks4u.net/2010/06/Mouna-Ragam-1986-Telugu-Movie-Watch-Online.jpg

சர்வதேச கமர்ஷியல் சினிமா, சென்சேஷனல் மேட்டர், இதிகாச உல்டா  எனும் நிர்ப்பந்தங்களுக்கு சிக்குவதற்குமுன்  மணிரத்னம் எடுத்த மணியான படம். பிரிந்து வாழும் தம்பதியர் பார்க்க வேண்டிய மென்மையான, மேன்மையான இசை பயணிக்கும் படம் என பல பிளஸ்கள் உண்டு. 


படத்தோட  முக்கியமான பிளஸ் -1.தனக்கு வரப்போகும் கணவர் மவுனராகம் மோகன் மாதிரி  ஜெண்டில்மேனா, அண்டர்ஸ்டேண்டிங்க் பர்சனா,மற்றவர் உணர்வுக்கு மதிப்புத்தருபவரா இருக்கனும்னு எல்லா பொண்ணுங்களையும் நினைக்க வைக்கும். 2. தனக்கு வந்து சேர்ந்த மனைவி நல்ல வேளை ரேவதி மாதிரி இல்லை என  கணவர்களை மகிழ வைக்கும் ( ஏன்னா தான் எத்தனை பேரை லவ் பண்ணி இருந்தாலும் தனக்கு வரப்போகும் மனைவி இதுக்கு முன் யாரையும் லவ் பண்ணி இருக்கக்கூடாது என்ற உயர்ந்த கொள்கையுடன் வாழ்பவர்கள் தான் ஆண்கள் ( பெரும்பாலும்)


படத்தோட கதை ஹீரோயின் பார்வையில் செல்லுது. ஹீரோயின் துடுக்கான, குறும்புத்தனம் மிக்க பெண். தன்னை பெண் பார்க்க மாப்ளை வீட்ல இருந்து வந்திருக்காங்கன்னு தெரிஞ்சும்  வேணும்னே வீட்டுக்கு லேட்டா வர்ற அளவு லொள் கேரக்டர். 

 மிக மென்மையான குணம் உள்ள ஹீரோ மேரேஜ்க்கு ஓக்கே சொல்றார்.ஹீரோயினுக்கு மேரேஜ்ல இஷ்டம் இல்லை. ஆனா நல்ல வரன் தட்டிப்போகக்கூடாதுங்கற கவலைல ஹீரோயின் அப்பா வாக்குவாதத்தில் ஹார்ட் அட்டாக்.. அவருக்காக ஹீரோயின் மேரேஜ்க்கு ஓக்கே சொல்ல மேரேஜ் நடக்குது.. 


 மேரேஜ் மட்டும் தான் நடக்குது. மத்த மேட்டர் எதுவும் நடக்கலை. ஹீரோயினுக்கு ஆல்ரெடி ஒரு லவ் மேட்டர் இருந்ததும், காதல் கை கூடாம போனதும் ஹீரோவுக்கு தெரிய வருது.ஹீரோயின் டைவர்ஸ் கேட்கறா. ஆனா சட்டம் மினிமம் 1 வருஷம் கழிச்சுத்தான் டைவர்ஸ்னு சொல்லுது.



http://i.ytimg.com/vi/ibiiglNYR44/0.jpg


 அந்த 1 வருஷத்துல என்ன நடக்குது? ஒரே வீட்டில் குடி இருந்தாலும் அவங்க லவ்விங்க் டுகெதரா அப்பப்ப இருந்தாலும் லிவ்விங்க் டுகெதரா இல்லை.. என்ன ஆகுது என்பதே க்ளைமாக்ஸ்.. 


படத்தோட முதல் ஹீரோ சந்தேகமே இல்லாம இளையராஜா தான்.. 5 சூப்பர்ஹிட் பாடல்கள்.. ஆல் மெலோடீஸ்.. அது போக பின்னணி இசைல புகுந்து விளையாடி இருக்கார்.. படத்தோட திரைக்கதையில் கேரக்டர்களின் நுட்பமான உணர்வுகளை வெளிப்படுத்துவதில் இசை பாதி வேலையை செஞ்சுடுது. 


படத்தின் 2 வது ஹீரோ திரைக்கதை மற்றும் இயக்கம். நேர்த்தியா திரைக்கதை எழுதி பள்ளிபாளையம் காவேரி ஆறு மாதிரி சலனம் இல்லாம அமைதியா பயணிக்கும் கதை.. மார்வலஸ் இயக்கம். 


3 வது ஹீரோ ஒளிப்பதிவாளர் பி சி ஸ்ரீராம். கேமரா ஆங்கிள் , லைட்டிங்க் எல்லாம் பர்ஃபெக்ட். மோகனை மிக அழகாக காட்டிய படம் மவுன ராகம் ( மிக கோரமாக காட்டியது உருவம் )


மதர்லேண்ட் பிக்சர்சின் ராசியான ஹீரோவாக அறியப்பட்ட மோகன் இதில் கண்ணியமான கணவராக  செமயா நடிச்சிருக்கார். இவர் பாடி லேங்குவேஜ், வாய்ஸ் மாடுலேஷன் ( சுரேந்தர் ) எல்லாம் கன கச்சிதம்


ஹீரோயின் ரேவதி துடுக்குத்தனம், அமைதி , அழிச்சியாட்டியம் , பக்குவம் என நவரசங்களையும் காட்டி அசத்தும் கேரக்டர்..  சின்ன சின்ன முக பாவனைகளில் சிக்சர் அடிக்கிறார்.. 


 மொத்தம் 146 நிமிடங்கள் ( கிட்டத்தட்ட  2 1/2 மணி நேரம்) ஓடும் படத்தில் 24 நிமிடங்களே வந்தாலும் கார்த்திக் இளமைத்துள்ளலுடன் நடிச்சிருக்கார். பின்னாளில் வந்த பல காதல் படங்களின் ஹீரோக்களுக்கு இந்த கேரக்டர் ஒரு முன்மாதிரியா இருந்தது என்றால் அது மிகை அல்ல..




http://upload.wikimedia.org/wikipedia/en/thumb/9/9e/Mouna_Raagam2.jpg/220px-Mouna_Raagam2.jpg
இயக்குநர்  பாராட்டு பெறும்  இடங்கள்



1. கார்த்திக் - ரேவதி காதல் எபிசோடில் டூயட் காட்சியே வைக்காதது... ஏன்னா கதை ஒரு தம்பதியை பற்றியது என்பதால் ஆடியன்சின் கவனம் திசை திரும்பி விடக்கூடாது என்பதில் கவனமா டூயட் சீனை சேர்க்காம விட்டிருக்கார்.. வெல்டன்.. 


2. கார்த்திக்கிடம் கோபத்தில் ரேவதி “ ஊரைக்கூட்டி மைக் போட்டு சொல்லு, அப்போ வேணா உன் காதலை ஏத்துக்கறேன்” என்றதும்  உடனே காலேஜ் பிரின்ஸ் ரூமில் இருந்து மைக்கில் கார்த்திக் காதலை அறிவிப்பது செம கலாட்டா சீன். ( இந்த சீன் பின் கோபுர வாசலிலே, இதயதாமரை உட்பட பல படங்களில் சுடப்பட்டது )



3. மோகன் தன் மாமனார் முன் கோபமாக இருப்பது போல் காட்டிக்கொள்வதும் அதற்கான காரணமாய் “ நாளைக்கு நீ டைவர்ஸ் வாங்கி ஊருக்கு போறப்ப உன் மேல எந்த குறையும் இல்லை, மாப்ளை மேல தான் குறை” என அவங்க மனசுல தோணட்டும்னு தான் என சொல்லும் டச்சிங்கான காட்சி..


4. க்ளைமேக்சில் தண்டவாளங்கள் இணைவதை தம்பதிகள் மனம் இணைவதாய் சிம்பாலிக்காக காட்டியது.. படம் முழுக்க ஆங்காங்கே மழை பெய்வதை , சாரலை சில்லிப்பாய் உணர வைத்த லாவகம்..



5. மழையில் ஹீரோயின் நனையும் பாடல் காட்சி வைத்தும் அதை கிளாமர்க்கு யூஸ் பண்ணாம அவர் சுட்டி என்பதை உணர்த்த மட்டுமே யூஸ் பண்ணிக்கிட்ட கண்ணியம் ( இதே போல் புன்னகை மன்னனில் கே பி  - வான் மேகம் பூப்பூவாய் தூவும் தேகம் என்ன ஆகும் )


6. ஹீரோ தான் மனைவிக்கு வாங்கி வந்த கொலுசு, அவள் கேட்ட விவாகரத்து பத்திரம் 2 டையும் அவள் முன் வைக்கும்போது வரும் இளையராஜாவின் பின்னணி இசை..


7. மனம் மாறிய ஹீரோயின் ஹீரோ வாங்கித்தந்த கொலுசை அணிந்து ஆவலுடன் அவனிடம் காட்ட வரும்போது அவன் நரசிம்மராவ் போல் முகத்தை வைத்துக்கொண்டு  எரிந்து விழுந்ததும் அவள் முகம் சுருங்குவது 



8. கார்த்திக் - ரேவதி காதல் காட்சிகளில் இளமை கொப்புளிக்கும் குறும்புக்காட்சிகள், குறிப்பா போலீஸில் செம அடி வாங்கியும் கார்த்திக் ரேவதியை பார்த்து கண் அடிக்கும் காட்சி;;



http://satyambloggers.files.wordpress.com/2010/03/2wp770j.jpg



 மனம் கவர்ந்த ஷார்ட் & ஸ்வீட் வசனங்கள்




1. வெள்ளிக்கிழமையும் அதுவுமா இப்படியா பொய் சொல்வாங்க?


வெள்ளிக்கிழமையும் அதுவுமா இப்படியா கேள்வி  கேட்பாங்க?



2. நான் உங்களுக்கு நல்ல மனைவியா இருப்பேன்னு எனக்குத்தோணலை.. நீங்க ஏதாவது சொல்ல விரும்பறீங்களா? 

 எனக்கு உன்னை பிடிச்சிருக்கு 



3. சின்னக்குழந்தை மாதிரி அடம் பிடிக்காதே.. 

 அய்யோ , என்னை சின்னக்குழந்தை மாதிரி நடத்தாதீங்க 



4. முதல் இரவில்


 ஏய்! ஏன் அழறே?

 நான் தூங்கனும்


 சரி தூங்கு.. அதை முதல்லியே சொல்லி இருக்கலாமே? 

 அதான் இப்போ சொல்றேனே?


5. மேரேஜ்க்கு முன்னால  எனக்கு 2 லவ் இருந்துச்சு 1. புக் 2 இசை



6. இது செங்கல்லாலும், மணலாலும் கட்டப்பட்ட வீடு , இதை வீடா மாத்த வேண்டியது உன் கைல இருக்கு 



7. ஹலோ! என்ன ? உங்க பி ஏ அரைகுறையா டிரஸ் பண்ணி இருக்காளா?


 வி கே ராமசாமி  - அவ டிரஸ்சே பண்ணலையே? 



8. ஒரு புருஷன் தன் மனைவிக்கு வாங்கித்தரும் முதல் பரிசை அவ  வாழ்நாள் பூராவும் மறக்க மாட்டா.. 


9. மனைவி கிட்டே கணவன் எப்படிப்பேசனும் தெரியுமா? வாய் கூசாம நீ தான் உலக அழகின்னு பொய் சொல்லனும் 


10. உனக்கு என்ன வேணும்?

 நான் எது கேட்டாலும் வாங்கித்தருவீங்களா? 


 ம்

 எனக்கு விவாக ரத்து வேணும்..





11. நான் தொடுவது உனக்கு பிடிக்கலை?

 ம்ஹூம், கம்பளிப்பூச்சி ஊர்ற மாதிரி இருக்கு 


12.  வேறுபாடுன்னு எதுவும் இல்லை. ஆனா பெரிசா ஈடுபாடு இல்லை.. அதுனாலதான் இந்த விவாகரத்து”


13. உங்களுக்கு என் மேல கொஞ்சம் கூட வருத்தமோ, கோபமோ இல்லையா?


 குட் நைட்




14. மேரேஜ்க்கு முன்னாலயே  அவனவன் சேர்ந்து வாழறான்.. மேரேஜ் ஆகியும் நீங்க ஒரே வீட்ல பிரிஞ்சு வாழறீங்க.. ஹூம்..



15. ஒரு புருஷன் காலைல எந்திரிச்சதும் ஏதாவது சண்டை போட்டா அது சகஜம், ஆனா படுக்கையே 2 பேருக்கும் தனித்தனியா இருந்தா அது சகஜம் இல்லை.



16. எதைக்கேட்டாலும் சம்பந்தம் இல்லைன்னு சொல்றீங்களே?உங்களுக்கும்
 எனக்குமாவது சம்பந்தம் இருக்கா?



தெரில.. தாலி கட்னா மட்டும்  போதுமா?னு நீ தானே சொன்னே?



17. நான் சொல்ல வேண்டியது எல்லாம் சொல்லிட்டேன், நீங்க சொல்ல வேண்டியது ஏதாவது இருக்கா?


 4 மணிக்கு ட்ரெயின், நான் 2 மணிக்கு கூட்டிட்டு  போக வர்றேன்


18.உங்களுக்கு பிடிச்சிருக்கு! ஒத்துக்கத் தான் மனசில்ல! ஆனா நான் ஒத்துக்கறேன்! வெட்கத்தை விட்டு ஒத்துக்கறேன்!"



19. கட்டுப்படச்சொல்லலை, கன்சிடர் பண்ணச்சொல்றேன்






சில சுவராஸ்ய தகவல்கள்


1. பனி விழும் இரவு பாடலில் நடனமாடுவது சிறுவயது ஜான்பாபுவும் அந்த மானாட மயிலாட நீபா அம்மா வாமன் மாலினியும் 

2.சோக மியூசிக்குக்கு ராஜா சார் யூஸ் பண்ற இந்த இன்ஸ்ட்ரூமென்ட்க்கு பேர் 'தில்ரூபா'ன்னு கேள்வி. 


3.  கார்த்திக் மணிரத்னம் படத்துல மவுனராகம்,அக்னிநட்சத்திரம்,இப்ப ராவணன்னு எல்லாம் ரெண்டு ஹீரோ சப்ஜக்டாதான் நடிச்சிருக்கார்


4.மெளனராகம் பட்ஜெட்ல பெரிய செலவுன்னா, அது அந்த பத்மினி கார் வாடகை மட்டுந்தான் #மணி”ரத்னசுருக்க”பட்ஜெட் 




5. இந்தப்படத்துக்கு இன்ஸ்பிரேஷனே மகேந்திரனின் ‘நெஞ்சத்தைக் கிள்ளாதே’ தான்.


6. தேசிய விருது பெற்ற படம், ஃபிலிம்ஃபேர் அவார்டு ஃபார் பெஸ்ட் டைரக்‌ஷன் வாங்கின படம். ரிலீஸ் ஆன ஆண்டு 1986 ஆகஸ்ட் 15




 மென்மையான மயில் இறகு பாடல்கள் 


1. ஓஹோ! மேக பந்தலோ.. 2. நிலாவே வா  செல்லாதே வா" 3. பனிவிழும் இரவு நனைந்தது நிலவு 4. சின்னச் சின்ன வண்ணக் குயில் கொஞ்சிக் கொஞ்சிக் கூவுதம்மா" 5.  மன்றம் வந்த தென்றலுக்கு மஞ்சம் வர நெஞ்சம் இல்லையா? அன்பே! என் அன்பே!  இயக்குநரிடம் சில கேள்விகள் 1. பொதுவா ஆண் தன் காதலி இறந்துட்டா குறைந்த பட்சம் 2 வருஷமும், பெண் தன் காதலன் இறந்துட்டா குறைந்த பட்சம் 4  வருஷமும் மீளாத சோகத்தில் இருப்பாங்கன்னு மனவியல் நிபுணர்கள் சொல்றாங்க.. ( உண்மைக்காதலில்). ஆனா ரேவதி தன் லவ்வர் கார்த்திக் இறந்த சோகத்தை எல்லாம் காட்டிக்காம ஜாலியா  குறும்பு பண்ணிட்டு மழைல நனைஞ்சுட்டு இருக்காரே? முரணா இல்லை? 2. பெண் வீட்டில் முதல் இரவு நடக்குது, ஆனா மேட்டர் ஏதும் நடக்கலை. பெண் வீட்டில் சொந்தக்காரங்க அதாவது அம்மா, பெரியம்மா , அத்தை யாராவது பெண் கிட்டே கில்மா நடந்துச்சா? ஒண்ணும் பிரச்சனை இல்லையே?ன்னு கேட்பாங்க.. ஆனா ஹீரோயின் தரப்புல யாரும் அப்டி கேட்ட மாதிரி தெரியலை.. கேட்டிருந்தா அப்போவே அம்மாவுக்கு உண்மை நிலவரம் தெரிஞ்சிருக்குமே? டெல்லி வந்த பின் அந்த கேள்வியை கேட்கும் அம்மா ஏன் தன் வீட்ல கேட்கலை? 3. கார்த்திக்  ரேவதி படிக்கும் காலேஜ்ல ரேவதி அமர்ந்திருக்கும் க்ளாஸ் ரூம்லயே வந்து அப்பாவுக்கு ஆக்சிடெண்ட்னு சொல்றார். எந்த லேடீஸ் காலேஜ்ல அப்படி உள்ளே விடுவாங்க? பிரின்ஸ் ரூம்ல தகவல் சொல்லி காத்திருக்கனும், வாட்ச்மேன்  அல்லது பியூன் போய்  கூட்டிட்டு வருவான்.. இதானே வழக்கம்? 4. கார்த்திக்கை போலீஸ் தவறுதலா சுடுவது டிராமா மாதிரி இருக்கு. பல கார்களிடையே தடுமாறி வரும் கார்த்திக் ஏதோ ஒரு விபத்தில் இறப்பது போல் காட்டி இருந்தா ரொம்ப நல்லா இருந்திருக்கும் 5. மிக மென்மையானவரா காட்டப்படும் மோகன் கடைசி காட்சிகளில் எரிந்து எரிந்து விழுவது போல் காட்சிகள் எதுக்கு? மாமனார் இருக்கும்போது அவர் சொல்ற காரணம் ஓக்கே, தனிமையில் இருக்கும்போது  ஏன் எரிஞ்சு விழறார்? 6. பெண் பார்க்கும் படலம் நடக்கும்போது ரேவதி ரொம்ப யோக்கியர் மாதிரி நான் குறும்பு, சுட்டி உங்களுக்கு ஒத்து வராதுன்னு சொல்லி மேரேஜை வேணாம்னு சொல்ல ட்ரை பண்றவர் ஏன் தனக்கு ஒரு காதல் இருந்தது என்ற உண்மையை சொல்லலை? நான் ஆல்ரெடி ஒருத்தனை லவ்வி இருக்கேன் சாரி அப்டின்னா மாப்ளை துணடை காணோம் துணியை காணோம்னு ஓடி இருப்பானே? 7. அந்த இன்ஸ்பெக்டர் கேரக்டர் ஏன் ஹிப்பித்தலையோட வர்றார்? உங்க பட போலீஸ் எல்லாம் ஷார்ட் ஹேர் கட்ல தானே வருவாங்க? 8. காமெடிக்கும் உங்களுக்கும் காத தூரம் என்பது எல்லாருக்கும் தெரியும். ஏன் காமெடி டிராக்குக்கு தனி ஆள் போடக்கூடாது அந்த ஹிந்தி பேசும் ஆள் தமிழ் டியூஷனில் போடா டேய் என்பது மட்டுமே டோட்டல் படத்துல இருக்கும் ஒரே காமெடி. வி கே ராமசாமி கொஞ்சம் ட்ரை பண்ணி இருக்கார்.. இறுக்கமா போகும் திரைக்கதையில் காமெடி நல்லா டெவலப் பண்ணி இருந்தா இன்னும் நல்லா இருந்திருக்குமே? சி.பி கமெண்ட் - பிரமாதமான இந்தப்படத்தை நேத்து நைட் சன் டி வில பார்த்தேன். டோண்ட் மிஸ் இட்.. தமிழ் சினிமாவின் முக்கியமான படம். அனைவரும் பார்க்கலாம்..  டிஸ்கி - நேத்து படம் ஓடிட்டு இருக்கும்போது இந்தப்படம் பற்றிய தகவல்களை அள்ளி விட்ட மாமே, ஷேக் ,பிரதீஸ்,பறவை போன்ற ட்விட்டர்களுக்கு நன்றி.! மற்றும் கானா ப்ரபாவுக்கு ஸ்பெஷல் நன்றி!யூ டியூப் லிங்க் - புலவர் தருமி
அ இந்தப்படத்தின் அபாரமான பின்னணி இசை பற்றிய நுட்பங்கள்,  கலெக்‌ஷன் கேட்க - http://radiospathy.blogspot.in/2011/08/blog-post_09.html

 

 

Tuesday, August 30, 2011

மணிரத்னம் ஒரு சகாப்தமா? ஒரு அழகிய ஆராய்ச்சி - பாகம் 2

இந்தப்பதிவின் முதல் பாகத்தை படிக்காதவர்கள் http://adrasaka.blogspot.com/2011/07/blog-post_6519.html  


http://www.iaac.us/mic/mic_roja.jpg

 ரோஜா(1992 ) - இந்தப்படத்தில் இருந்துதான் மணிரத்னம் ஏ ஆர் ரஹ்மான்  கூட்டணிக்கு பிள்ளையார் சுழி போட்டார். சின்ன சின்ன ஆசை பாடல் சூப்பர் ஹிட். ஆடியோ கேசட்டில் ஏ சைடு, பி சைடு என திரும்பி திரும்பி ஒரே பாட்டை ரெக்கார்டு செய்யும் புதிய திருப்பு முனையை இப்பாட்டு உண்டாக்கியது. சத்யவான் சாவித்திரி கதைதான். தன் கணவனின் உயிரை காப்பாற்ற தீவிரவாதிகளிடம் போராடும் மனைவியின் கதை.. சொன்ன விதத்தில் ஜெயித்தார்.வைரமுத்து சின்ன சின்ன ஆசை பாடல்க்காக இயக்குநரிடம் மொத்தம் 260 ஆசைகள் எழுதிக்கொடுத்ததாகவும், அதில் இருந்து தேவையானதை அவர் தேர்வு செய்ததாகவும் குமுதம் பேட்டியில் கூறி இருந்தார்..

இந்தப்படத்தின் வெற்றி இந்திய அளவில் மணிரத்னத்துக்கு ஒரு அங்கீகாரம் பெற்றுத்தந்தது என்பதால் அவர் அடுத்தடுத்த படங்களில் அதே போல் தேசிய பிரச்சனையை கையில் எடுக்க வேண்டிய கட்டாயத்துக்கு ஆளானார்.. அதுவரை அவரது டேஸ்ட்க்கு படம் எடுத்தவர்  அதற்குப்பின் ஹிந்தியில் டப் பண்ண வேண்டுமே என்பதற்காக கதையில் ஆல் ஓவர் இந்தியா ரிலேட்டட் பிரச்சனை என்ன ?என்பதை கவனமாக கதையில் சேர்க்க வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டார்.. 

http://chennaionline.com/film/Preview/Aug09/Images/Roja-Movie-Stills01.jpg

சூப்பர்ஹிட் பாடல்கள் 1. சின்ன சின்ன ஆசை 2. ருக்குமணியே  ,ருக்குமணியே  அக்கம் பக்கம் என்ன சத்தம்?  3. காதல் ரோஜாவே எங்கே நீ எங்கே 4. புது வெள்ளை மழை இங்கு பொழிகின்றது

இந்தப்படம் ஈரோடு அபிராமியில் 62 நாட்கள் ஓடியது.

http://newtamilhits.com/movieimages/Thiruda-Thiruda_b.jpg
திருடா திருடா ( 1993) - படம் பூரா யாராவது ஓடிட்டே இருப்பாங்க.. ஒரு ட்ரக் நிறையா கோடிக்கணக்குல பணம்,அதை கடத்திடறாங்க. அதை கைப்பற்ற 2 கோஷ்டிகள், அவங்களை பிடிக்க சி பி ஐ , இதுக்கு நடுவே ஒரு காதல் என கதை போகும்..  படம் ஜாலியா போனாலும் ,தியேட்டர்ல சுமாராத்தான் போச்சு.. 

http://incap.files.wordpress.com/2009/06/541.jpg

க்ளைமாக்ஸ்ல ராசாத்தியை காமெடி பீஸ் ஆக்கிட்டு 2 ஹீரோக்களும் பணத்தை குறியா நினைக்கும் நினைப்பை ரசிகர்கள் ஏத்துக்கலை.. பாடல்கள் சூப்பர் ஹிட்ஸ்/..இந்தியாவின் அகேலா கிரேன் மூலம் எடுக்கப்பட்ட முதல் திரைப்படமாகும்.

https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgBBwoiDub5iCnrcdM_k74llZ9Jr6Germ3UhSwofSnAudsI9dO8fJLc0sdIIl-hN-b3CZZDgmc4Ab8lWpUU7I1iaIzgpX-gl8rZ8-mwK8rcfr6w36hMMAkoKs6IT2KHGIRCVOVi3d22pgo/s320/Thiruda+Thiruda.png

பாடலாசிரியர் - வைரமுத்து 1. கண்ணும் கண்ணும் - மனோ 2.கொஞ்சும் நிலவு - அனுபமா 3. வீரபாண்டிக் கோட்டையிலே- மனோ, கே.எஸ் சித்ரா 4. தீ தீ - கரோலீன் , 5. ராசாத்தி - சாகுல் ஹமீத்  , 6. புத்தம் புது பூமி- கே.எஸ் சித்ரா, மனோ

ஈரோடு அபிராமில இந்தப்படம் 38 நாட்கள் ஓடுச்சு.. 

http://www.musiqbuzz.com/tamil/movie/bombay/photos_gallery/bombay-photo-gallery-1266232253.jpg
பம்பாய் - (1995) - ரோஜா படத்துக்குப்பிறகு அதை விட அதிகமான ரீச் இந்த படத்துக்கு கிடைச்சதுக்கு முக்கிய காரணம்  பாபர்மசூதி இடிப்பு, இந்து முஸ்லீம் பிரச்சனையை சாமார்த்தியமா ஒரு காதல் கதையின் ஊடாக சொன்ன விதம் தான்.. 

பலரது மனம் கவர்ந்த சீன்கள்

1. கண்ணாளனே பாட்டின்போது அர்விந்தசாமி  ஒரு தூணில் காலை வைத்து உதைத்து தன் காதல் இயலாமையை வெளிப்படுத்தும் நுணுக்கமான சீன்.. அதே சீனில் அவரது தங்கை அவரை மிரட்டுவதும் அவள் கையை இவர் மடக்குவதும்.

2.  இந்து முஸ்லீம் கலவர சீனில் சிறுவர்கள் தங்கள் நெற்றியில் போட்ட பட்டையை அழித்துக்கொள்வது

3. உயிரே வந்து என்னோடு கலந்து விடு பாடல் காட்சியில் மிதக்கும் அழகுடன் மனீஷா ஸ்லோ மோஷனில் வருவதும், அவரது ஷால் கிளையில் மாட்டுவதும் , மதம் என்னும் ஷால்லை அவர் துறப்பதுமாக சிம்பாலிக் ஷாட்.

http://www.indianetzone.com/photos_gallery/5/bombay_10466.jpg

விருதுகள்

1.1996 அரசியல் திரைப்படக் குழுமம் (அமெரிக்கா)வென்ற விருது - சிறப்பு விருது- பம்பாய் - மணிரத்னம் 2.1996 தேசிய திரைப்படவிருது(இந்தியா)வென்ற விருது - சிறந்த தொகுப்பாளர்- சுரேஷ் எர்ஸ்வென்ற விருது - நார்கிஸ் டத் விருது- சிறந்த திரைப்படம் - பம்பாய் - மணிரத்னம்
1995 பில்ம்பேர் விருது (இந்தியா)வென்ற விருது - விமர்சகர்கள் விருது - பம்பாய் - மணிரத்னம் , வென்ற விருது - சிறந்த நடிப்பிற்காக - மனிஷா கொய்ராலா
 இத்திரைப்படம் வெளியிடப்பட்டபொழுது சிங்கப்பூர், பாகிஸ்தான் மற்றும் மலேசியா போன்ற நாடுகளில் தடை செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.பம்பாய் ஆரம்ப இசையானது ஆங்கிலத்திரைப்படமான லோஎட் ஒஃவ் வார் என்ற திரைப்படத்தில் உபயோகப் படுத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.

பாடல்கள்

பாடலாசிரியர் - வைரமுத்து 1. அந்த அரபிக்கடலோரம் - ஏ.ஆர். ரஹ்மான் 2. பூவுக்கு என்ன- நோல், அனுபமா , 3. உயிரே உயிரே- ஹரிகரன், கே.எஸ் சித்ரா, 4. குச்சி குச்சி - ஹரிகரன், சுவர்ணலதா, 5. கண்ணாளனே - கே.எஸ் சித்ரா 6. பம்பாய் ஆரம்ப இசை- ஏ.ஆர். ரஹ்மான்

ஈரோடு அபிராமியில் 60 நாட்கள் ஓடி தேவி அபிராமியில் பின் 100 நாட்கள் வரை ஓடியது.. 

http://i1.peperonity.info/c/DDD547/598626/ssc3/home/009/arhits/tamil_iruvar.jpg_320_320_0_9223372036854775000_0_1_0.jpg
இருவர் ( 1997) - மணிரத்னம் இயக்கிய படங்களில் இது ஒரு மைல் கல் என சொல்லலாம்.. படம் எதிர்பார்த்த வெற்றியைப்பெறாததற்கு  காரணம் கடைசியில் சொல்றேன்..

எம் ஜி ஆர் , கலைஞர் இருவருக்கும் இடையே நிகழ்ந்த இது வரை வெளியில் வராத சில உண்மைகள் பிரமாதமாக சொல்லப்பட்டிருக்கும் படம் இது..

பிரகாஷ்ராஜ் கலைஞராகவும், மோகன்லால் எம்ஜிஆராகவும் போட்டி போட்டு நடிக்க ஜெவாக ஆணவம், அகங்காரம் பிடித்த அழகு எனும் செருக்கால் ஆடவனை பொம்மை போல் நடத்திய  ஜெவாக ஐஸ்வர்யா ராய் நடித்தார்.. பொதுவாக ஐஸூக்கு நடிப்பு சுமாராகத்தான் வரும், அவரது நடிப்புப்பற்றாக்குறையை அவரது அழகு சரிப்படுத்தி விடும்..ஆனால் அவர் இந்தப்படத்தில் வி என் ஜானகி கேரக்டரில் அமைதிப்பதுமையாகவும், ஜெ வாக அலட்டல் ராணியாகவும்  மாறுபட்ட நடிப்பை வழங்கி இருப்பார்..

http://www.cinemaal.com/uploads/thumbs/1974806151mooshoo.gif

மிக நுணுக்கமான காட்சிகள்

1. எம் ஜி ஆர் வெளியே கிளம்பிம்போது வேண்டும் என்றே ஜெ அவரை கூட்டத்துக்கு தாமதமாக போக சொல்வது. கலைஞர் பேசிக்கொண்டிருக்கும்போது தாமதமாக வரும் எம்ஜிஆர்க்கு மக்கள் மத்தியில் அமோக வரவேற்பு கிடைப்பதை கலைஞர் சங்கடத்துடன் பார்ப்பது..

2. தனிமையான தருணத்தில் எம்ஜிஆரை வேண்டும் என்றே ஜெ அலைக்கழிப்பது. தன்னை கெஞ்சும் நிலைக்கு கொண்டு வருவது...

3. எம் ஜி ஆர் கலைஞரை கட்டி அணைக்கும் காட்சியில்  எம் ஜி ஆரின் முகத்தை க்ளோசப்பில்  காட்டி அவர் வில்லத்தனமாய் உதட்டை மடித்து  சிரிப்பதை காட்டுவது..

https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiyc2r6ktghFPZAS0aBr4vat328d88ornpA0mMmdA_ALwVgC27iMDYC7TKdU0CoiLHm0A1LV7bIfdDi14QWrrSfpy3cFKwkKp7ozr9fbZ2GsS6SEfSruexSfS42r9pSa4wWD44naTHZFvMA/s1600/iruvar002.jpg

கதை - திரைப்பட நடிகராக வேண்டுமென்ற கனவுகளோடு வாழ்பவர் ஆனந்தன் (மோகன்லால்) இவருடைய கனவுகளை நிறைவேற்றும் வகையில் இவருடைய நண்பராகத் திகழ்கின்றார் கவிஞரான தமிழ்ச்செல்வம் (பிரகாஷ் ராஜ்). இருவரும் சமுதாயத்தில் மாற்றங்கள் ஏற்பட தங்களின் பழக்கப்பட்ட ஊடகங்களான கவிதை ஆற்றலின் மூலமும், நடிப்பாற்றலின் மூலமும் தெரிவித்து மக்களின் மனங்களைக் கவருகின்றனர்.எழுத்தாளரான தமிழ்ச்செல்வன் அரசியலில் தன்னை ஈடிபடுத்திக்கொள்கின்றாரிவரத் தொடர்ந்து நடிகர் ஆனந்தனும் தமிழ்ச்செல்வன் உள்ள கட்சியில் சேர்ந்துகொள்கின்றார்.


இவர்கள் கட்சித் தலைவராகவிருந்த வேலுத்தம்பி (நாசர்) மரணத்திற்குப் பின்னர் இருவரிடையே பதவி ஆசை குடிகொள்ளத்தொடங்கியது.முதல்வராக தேர்ந்தெடுக்கப்பட்ட தமிழ்ச்செல்வனின் கட்சியில் உள்ளவர்களின் சொத்துக்களின் விபரங்களை மக்களுக்குத் தெரிவிக்கவேண்டுமென்று ஆனந்தன் எடுத்துரைக்கும்பொழுதிலிருந்து தமிழ்ச்செல்வனும், ஆன்ந்தும் பகைவர்களாகின்றனர்.

இதன்பின்னர் மத்திய அரசுடன் கூட்டு சேர்ந்து தனக்கென புதிய கட்சியொன்றினை ஆரம்பிக்கின்றார் ஆனந்தன். அவர் தனது கட்சி சார்பான கருத்துக்களை தனக்குச் சாதகமான ஊடகமான திரைப்படங்கள் மூலம் மக்களுக்கு விளம்பரம் செய்கின்றார். மக்கள் அவர் திரைப்படங்கள் மீதும் அவர் மீதும் கொண்டிருந்த பற்றுதல்கள் காரணமாக தேர்தலில் வெற்றிபெற்று முதல்வர் பதவியை ஏற்கின்றார்.

இதன் பின்னர் தன் அதிகாரத்தினைப்பயன்படுத்தி தமிழ்ச்செல்வனை சிறையில் அடைக்கவும் செய்கின்றார்.இறுதியில் அவர் இறக்கும் சமயம் அவரின் பூதவுடலைப் பார்க்க வரும் தமிழ்ச்செல்வன் தன் நண்பனின் உடலைக்கூடப் பார்க்கமுடியாது போகவே மனம் நொந்து தன் நண்பனைத் தன் கவியினால் அரவணைத்துக்கொள்கின்றார்.

விருதுகள்

1998 தேசிய திரைப்பட விருது (இந்தியா), வென்ற விருது - வெண் தாமரை விருது - சிறந்த துணை நடிகர் - பிரகாஷ் ராஜ் , வென்ற விருது - வெண் தாமரை விருது - சிறந்த ஒளிப்பதிவு - சந்தோஷ் சிவன்

சூப்பர்ஹிட் பாடல்கள் 1. ஆயிரத்தில் நான் ஒருவன் ,நீங்கள் ஆணையிட்டால் படைத்தலைவன் , 2. நறுமுகையே, நறுமுகையே நீ ஒரு நாழிகை நில்லாய்.. 3. ஹலோ மிஸ்டர் எதிர்க்கட்சி! கேள்விக்குப்பதிலும் என்னாச்சு? 4. கண்ணைக்கட்டிக்கொள்ளாதே, கண்டதை எல்லாம் நம்பாதே தோழா! 5.  பூ கொடியின் புன்னகை அலை நதியின் புன்னகை 6. வெண்ணிலா

இந்தப்படம் தமிழில் ஹிட் ஆகாததற்கு முக்கிய காரணம் ஒரு கடவுளாக நினைக்கப்பட்ட எம் ஜி ஆர் -ன் மைனஸ் பாயிண்ட்ஸை மக்கள் ஏற்றுக்கொள்ள அல்லது நம்பத்தயார் இல்லை என்பதே!

 - தொடரும்

Wednesday, July 27, 2011

மணிரத்னம் ஒரு சகாப்தமா? ஒரு அழகிய ஆராய்ச்சி

http://shotpix.com/images/16161806371053495878.png 

தமிழ் சினிமாவை அடுத்த தளத்துக்கும், புதிய ரசனைக்கும் கொண்டு சென்றது பாலச்சந்தர், பாரதிராஜா,மகேந்திரன் என்றால் முதன்முறையாக இந்தியாவை , பாலிவுட்டை தமிழ்நாட்டின் பக்கம் திரும்பி பார்க்க வைத்தது, உலகளாவிய சந்தையை கொண்டு வந்தது மணிரத்னம் என்றால் அது மிகை இல்லை.. 


எந்த ஒரு இயக்குநரிடமும் அசிஸ்டெண்ட்டாக ஒர்க் பண்ணாமல் டைரக்ட்டாக ஃபீல்டில் இறங்கி டைரக்ட் பண்ணி ஹிட் கொடுத்த முதல் டைரக்டர் என்ற பெருமையையும், தமிழ் சினிமா வசனங்களின் பிடியில் கிடந்த போது காட்சிகளுக்கு முக்கியத்துவம் தந்து விசுவல் டேஸ்ட்டை புதிய பாணியில் தந்த அளவில் இவர் முக்கியத்துவம் பெறுகிறார்.  

இவரது எல்லா படங்களிலும் மழை,குதிரை கண்டிப்பாக இடம் பெற்று விடும். இவர் படங்களில் வசனங்கள் சி செண்ட்டர் ரசிகர்களுக்குப்புரிவதில்லை என்ற குறையும் உண்டு. ஒளிப்பதிவில் இவர் தனி கவனம் கொள்வார்.

ஜூன் 2, 1956 இல் பிறந்த இவர் இந்திய அளவில் அறியப்படும் தமிழ் இயக்குனர்களுள் ஒருவர். காதல், தீவிரவாதம் ஆகியவற்றை நகர் வாழ் நடுத்தர மக்களை பின்னணியாக கொண்டு சொல்வது இவருடைய பாணி. ஏ. ஆர். ரகுமானை திரையிசைக்கு அறிமுகம் செய்தவரும் இவரே.

ஜம்னாலால் பஜாஜ் மேலாண்மை பள்ளியில் படித்துவிட்டு, சென்னையில் உள்ள டி.வி.எஸ் நிறுவனத்தில் பணியாற்றியவர். யாரிடமும் உதவி இயக்குநராக பணி செய்யாமல், தன் முதல் படமாகிய "பல்லவி அனுபல்லவி" படத்தினை இயக்கினார். சென்னையில், மனைவி சுஹாசினி மற்றும் மகன் நந்தனுடன் வாழ்கின்றார் மணிரத்னம்.

இவருடைய படங்கள் சுருக்கமான வசனங்களுக்கும் நேர்த்தியான தொழில்நுட்பத்திற்கும் பெயர் பெற்றவை. இவர் எடுத்த திரைப்படங்கள் அனைத்தும இளையராஜா மற்றும் ஏ. ஆர். ரஹ்மான் இருவரின் இசையமைப்பில் வெளியாகியுள்ளன. இவரது முதல் திரைப்படமான பல்லவி அனுபல்லவி முதல் தளபதி வரை இளையராஜா இசையிலும், ரோஜா முதல் இன்று வரை ஏ. ஆர். ரஹ்மான் இசையிலும் வெளியாகியுள்ளன.

https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiSFIR-oU-3iXDT99ri5VO_VjNTh3TombkMRMqd4PqeCmBkJfz849u5bV6l9e-ksXc9ALeVDFyTdchhdKNelk6b4N4FI21q3Mmt637Df0fIxyKrMYQCOTYzLeH0ljAVlRCYLnee9hl6HyI/s1600/PALLAVI+ANUPALLAVI2.jpg

1.  (கன்னடம்)- பல்லவி அனுபல்லவி (1983) -பிரபல இயக்குனரான மணிரத்தினத்தின் இயக்கத்தில் வெளிவந்த கன்னட மொழி திரைப்படமாகும். மணிரத்தினம் இயக்கிய முதல் திரைப்படம் இதுவாகும். இத்திரைப்படத்தில் பிரபல இந்தி திரைப்பட கதாநாயகன் அனில் கபூர் கதாநாயகனாகவும், நடிகை லட்சுமி கதாநாயகியாவும் நடித்துள்ளார்கள். இப்படத்தின் ஒளிப்பதிவாளர் பாலு மகேந்திரா ஆவார் மற்றும் இளையராஜா இப்படத்திற்கு இசை அமைத்துள்ளார்.இப்படத்தின் சிறந்த திரைக்கதைக்காக மணிரத்தினம் கர்நாடக அரசின் மாநில விருதைப் பெற்றார். இப்படம் தமிழில் பிரியா ஓ பிரியா என்று மொழி மாற்றம் செய்து வெளியிடப்பட்டது.

 2. 1984 - உணரு (மலையாளம்) -இந்தப்படம் மணிரத்னம் பாணி எல்லாம் இல்லாமல் அந்த கால கட்ட மலையாளப்பட பாணியில் எடுக்கப்பட்டது.

3.1985 - இதய கோவில் -மதர்லேண்ட் பிக்சார்ஸ்சின் கோவைத்தம்பியின் உதய கீதம் வெள்ளி விழா கண்ட நேரம்,பெரும் எதிர்பார்ப்புகளுடன் வந்த இதய கோவில் தோல்வியைத்தழுவினாலும் பி செண்ட்டர்களில் 40 நாட்கள் ஓடின, பாடல்கள் சூப்பர் ஹிட்

1.கூட்டத்திலே கோவில் புறா - எஸ்.பி பாலசுப்பிரமணியம்
2. நான் பாடும் மொஉன ராகம் - எஸ்.பி பாலசுப்பிரமணியம்
3.இதயம் ஒரு கோவில் (Male) - எஸ்.பி பாலசுப்பிரமணியம்
4.இதயம் ஒரு கோவில் - இளையராஜா, எஸ்.ஞானகி
5.பாட்டு தலைவன் - எஸ்.பி பாலசுப்பிரமணியம்
6.யார் வீட்டு ரோஜா - எஸ்.பி பாலசுப்பிரமணியம்
7.வானுயர்ந்த - எஸ்.பி பாலசுப்பிரமணியம்
8.ஊரோரமா ஆத்துப்பக்கம் தென்னந்தோப்பு - இளையராஜா

 4. 1985 - பகல் நிலவு - சத்யராஜின் மார்க்கெட்டை ஒரு புரட்டு புரட்டிய படம்.. இதில் அவரது வித்தியாசமான நடிப்பு பரவலாக பேசப்பட்டது.வில்லன்கள் என்றால் பக்கம் பக்கம் வசனம் பேசியே பார்த்தகண்களுக்கு புதுமையான அனுபவமாக இது அமைந்தது.. விமர்சன ரீதியில் பெரும் பாராட்டைப்பெற்றாலும் வசூல் பிரமாதம் என சொல்ல முடியாது.


http://123tamilforum.com/imgcache/11/67532.jpg

5.1986 - மௌன ராகம் - கார்த்திக்கிற்கு வாழ்வில் மறக்க முடியாத படம். அவர் வரும் காட்சிகள் குறைவு என்றாலும் சுறு சுறு , துறு துறு நடிப்புக்கு பாடமாக இருந்தது.. படத்தின் கதைச்சுருக்கம்

பெற்றோர்களின் வற்புறுத்தலுக்கு ஏற்ப சந்திரகுமாரை (மோகன்) மணந்து கொள்ளும் திவ்யா (ரேவதி) தனது காதலனை இழந்த பழைய நினைவுகளை மறக்க முடியாது தனது கணவரின் கைகளில் இருந்து விலகிச்செல்ல விவாகரத்துக் கேட்கின்றார்.அவரின் விருப்பத்திற்கேற்றாற் போல விவாகரத்துப் பெற்றுத் தருகின்றார் சந்திரகுமார்.நீதிமன்றத்தின் தீர்ப்பின் பேரில் ஒரு ஆண்டு காலத்தில் ஒன்றாக வாழ்கின்றனர்.இக்கால கட்டத்தில் இருவருக்கும் ஏற்படும் காதல் இருவரையும் ஒன்று சேர்க்கின்றது.

மன்றம் வந்த தென்றலுக்கு மஞ்சம் வர நெஞ்சம் இல்லையா? பாடல் உட்பட எல்லா பாடல்களும் சூப்பர் ஹிட்..  இது ஈரோடு பிரபா தியேட்டரில் 40 நாட்கள் ஓடின

6.1987 - நாயகன்  - தமிழ் சினிமாவின் போக்கு,கமலின் வாழ்க்கை,மணிரத்னத்தின் மார்க்கெட் வால்யூ எல்லாவற்றையும் ஒரு புரட்டு புரட்டிய படம்.மேலும் இத்திரைப்படம் டைம் வார இதழின் உலகின் நூறு சிறந்த திரைப்படங்களிள் ஒன்றாகத் தேர்ந்தெடுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.இத்திரைப்படத்தில் சிறந்த நடிகருக்கான 1988 ஆம் ஆண்டில் வழங்கப்பட்ட தேசிய விருதினை கமலஹாசன் பெற்றுக்கொண்டார்.

 "நீங்க நல்லவரா கெட்டவரா" என்று மகளின் கேள்விக்கு  கமலின் பதிலான “தெரியல” எனும் வார்த்தையும் சூழ்நிலைக்கேற்ற வசனமாக அமைந்தது.நாலு பேருக்கு நல்லதுனா எதுவும் தப்பில்ல எனும் பதில் செம ஹிட் ஆனது.. 

பாடல்கள் செம ஹிட் . நிலா அது வானத்து மேலே, நீ ஒரு காதல் சங்கீதம்.. தென்பாண்டி சீமையிலே ..லோட்டஸ் விருது- சிறந்த நடிகர் - கமலஹாசன்வென்ற விருது - சில்வர் லோட்டஸ் விருது- சிறந்த ஒளிப்பதிவு- பி.சி. ஸ்ரீராம்வென்ற விருது - சில்வர் லோட்டஸ் விருது- சிறந்த கலை இயக்கம் - தோட்டா தரணி

இந்தப்படம் ஆஸ்கார் விருதுக்கு சிபாரிசு செய்யப்பட்டது என விளம்பரம் செய்யப்பட்டது. ஆனால் காட் ஃபாதர் படத்தின் ரீ மேக் என்பதால் நோ சான்ஸ்.. இது ஈரோடு ஆனூர் தியேட்டரில் 90 நாட்கள் ஓடின. 

http://lh4.ggpht.com/_lMxNrZCbDdY/TFoI6MERK0I/AAAAAAAADC4/UKwnZdD03tw/agninatchathiram.jpg

7. 1988 - அக்னி நட்சத்திரம் - படம் பார்த்த ஆடியன்ஸ் தியேட்டர் விட்டு வெளியே போகும்போதே பாதிப்பேர் அடுத்த ஷோவுக்கு ரிப்பீட் ஆடியன்ஸாக லைனில் நின்றார்களாம். அந்த அளவு இது மெகா ஹிட் .கதை சிங்கிள் லைனில் வைத்துக்கொண்டு ட்ரீட்மெண்ட்டில் புகுந்து விளையாடிய படம். பிரபுவும், கார்த்திக்கும் சந்திக்கும் ஒவ்வொரு சீனும் பொறி பறக்கும்.. அப்போ ஒரு பேக் கிரவுண்ட் மியூசிக் வரும்.. கலக்கல் ரகம்.. மணிரத்னம் படத்தில் முதல் வசூல் மழை பொழிந்த படம் இது தான்.. 

அமலாவின் இடையை இந்த அளவு அழகியல் நேர்த்தியோடு இதற்கு முன் யாரும் காட்டியதே இல்லை.. நிரோஷா என்ற சுமார் ஃபிகரைக்கூட குளத்தில் குளிக்க விட்டு இளமை பொங்க படம் ஆக்கினார்.. பிரபுவும் சரி,கார்த்திக்கும் சரி இது போல் ஒரு வெற்றியை இதற்குப்பின் பெறவே இல்லை.படத்தில் ஃபேமஸான வசனம். 

1.நான் ஒரு நல்ல அப்பாவாக இல்லாம போய் இருக்க்கலாம், ஆனா உனக்கு நல்ல கனவனா இருந்திருக்கேன்

2. நீங்க நல்லா அப்பாவாத்தான் நடந்துக்க முடியல, அட்லீஸ்ட் எங்கம்மாவுக்கு நல்ல புருஷனாவாவது நடந்தீங்களா?

இந்தப்படம் ஈரோடு ஆனூர் தியேட்டரில் 100 நாட்கள் ஓடியது




8. 1989 - கீதாஞ்சலி (தெலுங்கு) -இதயத்தை திருடாதே (தமிழ்) -

ஒரு காதல் கதை இந்த ஓட்டம் ஓடும் என யாரும் நினைத்திருக்க மாட்டார்கள். நாகார்ஜூன் -கிரிஜா நடிப்பில் வெளிவந்த படம்,படம் முழுக்க செம ஜாலியாக போகும். ஓடிப்போலாமா என்ற வசனம் செம ஹிட்.. அந்த கால கட்டத்தில் எல்லா இளைஞர்களும் ஃபிகர்களைப்பார்த்து கிண்டலாக அப்படி கேட்க தொடங்கினர். 

ஓ பிரியா பிரியா,காட்டுக்குள்ளே, உட்பட 7 சூப்பர் ஹிட் பாடல்கள்.ஒளிப்பதிவு கண்களில் ஒத்திக்கொள்ளும்படி இருந்தது.ஈரோடு தேவி அபிராமியில் 120 நாட்கள் ஓடியது..

9. 1990 - அஞ்சலி - குழந்தைகளை மையமாக வைத்து எடுக்கப்படும் படங்கள் எல்லா வயது ரசிகர்களும் பார்க்கும் வண்ணம் எடுக்க முடியும் என்று சர்வசாதாரணமாக  நிரூபித்தார்.

சில்வர் லோட்டஸ் விருது- சிறந்த குழந்தை நட்சத்திரம்- ஷாமிலி, தருண்- சில்வர் லோட்டஸ் விருது- சிறந்த ஒலிப்பதிவு- பாண்டு ரங்கன் சில்வர் லோட்டஸ் விருது- சிறந்த வட்டாரத் திரைப்படம் 

- அஞ்சலி - மணிரத்னம் என 3 விருதுகள்.சூப்பர் ஹிட் பாடல்கள் பை இளையராஜா 1.வானம் நமக்கு  2. மொட்ட மாடி 3. இரவு நிலவு- எஸ்.ஜானகி  4. அஞ்சலி அஞ்சலி  5. சம்திங் சம்திங் 6. ராத்திரி நேரத்தில்- எஸ்.பி. பாலசுப்பிரமணியம்  7. வேகம் வேகம்- உஷா உதுப்

இதில் வேகம் வேகம் பாடல் மட்டும் ஈ டி பட இன்ஸ்பிரேஷன் என சொல்லப்பட்டது.. க்ளைமாக்சில் பேபி ஷாம்லியின் நடிப்பு கிளாஸிக். ரகுவரன்,ரேவதியின் நடிப்பில் இந்தப்படம் ஒரு மைல்கல்.

இரு குழந்தைகளுக்குத் தாயானவர் தனது மூன்றாம் குழந்தை மனநோயால் பாதிப்படைந்த குழந்தை என்பதனை அறியாமல் இருக்கின்றார். மூன்றாவதாக குழந்தை பிறக்கவுமில்லை என்ற கணவனின் கூற்றை ஏற்ற தாய் பின்னைய காலங்களில் அக்குழந்தையினைப் பற்றிய தகவல்களைப் பெறுகின்றார். தங்களுடனேயே அக்குழந்தையினை வளரவேண்டுமென்று அவர்கள் வாழும் இடத்திற்கே அழைத்தும் செல்கின்றனர். அங்கு வளரும் அச்சிறிய குழந்தையும் அவளின் சகோதரர்களால் ஆதரவு வழங்கப்படாமல் பின்னர் அவர்களின் அரவணைப்பைப் பெறுகின்றது.க்ளைமாக்சில் நெகடிவ் முடிவு..ஈரோடு அபிராமி தியேட்டரில் 60 நாட்கள் ஓடியது

http://www.envazhi.com/wp-content/uploads/2009/12/thalapathi_5.jpg

10. தளபதி - 1991 கமல் நடிப்பில் நாயகன் உருவான போதே ரஜினியை வைத்தும் எடுப்பார் என பலத்த எதிர்பார்ப்பு ஏற்பட்டது.இந்தப்படம் தான் தமிழ் சினிமாவில் மிக அதிக எதிர்பார்ப்பில் உருவான படம் ( இப்போ எந்திரன்). இந்தப்படம் ரிலீசின் போது ஈரோடு அபிராமி தியேட்டரில் பால்கனி டிக்கெட் விலை ரூ 6 .ஆனால் பிளாக்கில் ரூ 90க்கு விற்கப்பட்டது.. கிட்டத்தட்ட 15 மடங்கு.. இது பர பரப்பாக பேசப்பட்டது..

இந்தப்படத்தில் இருந்துதான் மணி பாரத இதிகாசங்களில் இருந்து கதைக்கரு எடுக்க ஆரம்பித்தார்.. மகாபாரதக்கதையில் வரும் துரியோதணன்-கர்ணன் நட்பு தான் அடிப்படை.. அதற்கு மாடர்ன் கலர் கொடுத்தார்..

சூப்பர் ஹிட் பாடல்கள் ஆடியோ சேல்சில் பின்னி எடுத்தது.

1.யமுனை ஆற்றிலே - எஸ்.பி பாலசுப்பிரமணியம், ஸ்வர்ணலதா

2. சுந்தரி கண்ணால் - எஸ்.பி பாலசுப்பிரமணியம், எஸ். ஜானகி


3. புத்தம் புது பூ - யேசுதாஸ், எஸ். ஜானகிசின்னத் தாயவள் - எஸ். ஜானகி

4. மார்கழிதான் - எஸ்.பி பாலசுப்பிரமணியம், ஸ்வர்ணலதா, குழு


5. ராக்கம்மா கையத்தட்டு -எஸ்.பி பாலசுப்பிரமணியம், ஸ்வர்ணலதா

6.காட்டுக்குயிலு - எஸ்.பி பாலசுப்பிரமணியம், யேசுதாஸ்

பட ரிலீசுக்கு முன்பிருந்த ஆர்வம் படரிலீசுக்குப்பின் வரவில்லை. ஓவர் வன்முறை முக்கிய காரணம். இந்தப்படத்தில் 2 பாடல் காட்சி தவிர படம் முழுக்க ரஜினி சிரிக்காமல் இறுக்கமான முகத்துடனே வருவார்.. ரஜினிக்கு முக்கியமான படம்.அர்விந்த்சாமி இதில் தான் அறிமுகம். கலெக்டராக வருவார் .



தொடரும்


நன்றி - விக்கி பீடியா ஃபார் புள்ளி விபரங்கள்