Showing posts with label பதிவு. Show all posts
Showing posts with label பதிவு. Show all posts

Monday, October 29, 2012

அட்ராசக்க சி.பி எக்ஸ்க்ளூ “ஜிவ்” பேட்டி - பாகம் 19



ட்விட்டர் நண்பர் கலைவசந்த் கேள்விகள்....,


1.பார்க்க ஹேண்ட்சம்மா இருக்கீங்க.(தூ கண்ணு தெரியாத கபோதி போல) உங்களுக்கு சினிமா, டி.வில நடிக்க இதுவரை எந்த சான்சும் கிடைக்கலியா?!



காலம் போன காலத்துல இதெல்லாம் தேவையா?ன்னு எல்லாரும் கேட்கப்போறாங்க. யோவ். நான் குடும்பத்துப்பையன்யா, எனக்கு எதுக்கு சினிமா , டி வி எல்லாம், கடைசி வரைக்கும் கற்போட இருக்க ஆசைப்படறேன். ( அப்போ சினிமா , டி வி ல இருக்கற மத்தவங்க எல்லாம்?னு கேட்டு சர்ச்சை ஆக்க நினைக்காதிங்க யாரும் .. இது சும்மா ஜோக்;-)) )







2.  ட்விட், பிளக்குல கலக்குறீங்க. ஆனா, கார்க்கி, தோட்டா ராஜனைவிட உங்களுக்கு ஃபாலோயர்ஸ் குறைவா இருக்காங்க. இத பார்த்த உங்களுக்கு என்ன தோனும்?


அடடடா , இந்த கம்பேரிசனை தமிழன் விடவே மாட்டானா? சின்ன வயசுல இருந்து பக்கத்து வீட்டுப்பொண்ணை பாரு, எப்படி படிக்கறா? நீயும் தான் இருக்கியே? அப்டின்னு அப்பா திட்டுனதால ப வீ பொண்ணை பார்க்க ஆரம்பிச்சு அப்படியே   எல்லா பொண்ணுங்களையும் பார்க்க ஆரம்பிச்சதுதான் மிச்சம். அவங்கவங்க திறமைக்குத்தக்கபடி ஃபாலோயர்ஸ் இருக்கும்.


 தோட்டா நெம்பர் ஒன் ட்வீட்டர். என்னை விட பல மடங்கு திறமையானவர். கார்க்கி ட்வீட் உலகின் கிரேசி மோகன். அவங்க திறமை என்னை விட அதிகம், அப்போ ஃபாலோயர்ஸும் அதிகமா இருக்கறதுல என்ன அதிசயம்? வேணா அவங்க கிட்டே கொஞ்சம்  ஃபாலோயர்ஸ் கடன் கேட்டுப்பார்க்கிறேன் ;-))



3. பி.எஸ்,சிக்கு மேல படிக்கலைன்னு நீங்க எப்பவாவது வருத்தப்பட்டதுண்டா? (படிக்க வெச்சிருந்தா ஈரோடு மாவட்ட காலேஜ்லாம் வெளங்கியிருக்கும்.)



ஹிந்தில எம் ஏ முடிச்சிருக்கேன்,பிஜிடிசிஏ பண்ணி இருக்கேன் , அதை எல்லாம் புரொஃபைல்ல போட்டா படம் காட்டற மாதிரி ஆகிடும் .அதுவும் இல்லாம ஹோம் மினிஸ்டர் ஒரு டிகிரி ஹோல்டர் என்பதால் மேரேஜ் இன்விடேஷன்லயே ஒரு டிகிரி மட்டும் தான் போடனும்னு சீரியஸ் கட்டளை. தமிழன் அம்மா பேச்சை கேட்காம இருந்தாலும் பொண்டாட்டி பேச்சை கேட்டே ஆகவேண்டிய சூழலில் இருப்பதால் கி கி 




இனிய காலை வணக்கம்.
உடல் பலகீனமானவன் எப்படி பொறுமையாகப் பயிற்சி செய்து தன்னைப் பலப்படுத்திக் கொள்ள முடியுமோ,அதுபோல பலகீனமான எண்ணங்களை உடைய மனிதன் சரியான எண்ணங்களை வளர்த்துக்கொள்வதன் மூலம் தன் வாழ்விற்கு வலிமை ஊட்ட முடியும்.
இனிய காலை வணக்கம்.



4. நான் டிவிட்டர்ல கொஞ்ச நேரம் உக்காந்தாலே என் மனைவி என்னை கடிஞ்சுக்குறாங்க. நீங்க பிளாக், டிவிட்டர்ல பொழுதன்னைக்கும் இருக்குறதை பார்த்து உங்க மனைவி உங்க மேல கோபப்படுறது இல்லியா?


 அங்கே தான் நீங்க தப்பு பண்றீங்க , எங்க வீட்ல நெட் கனெக்‌ஷனே இல்லை, எல்லாம் ஆஃபீஸ் டைம்ல தான். சனி , ஞாயிறு லீவ்ல வீட்ல லேப்டாப்ல மற்ற 5 நாட்களுக்குத்தேவையான பதிவை டைப் பண்ணிக்குவேன். நோக்கியா 1100 ஃபோன் தான் ரொம்ப நாள் வெச்சிருந்தேன், இப்போ சமீபத்துலதான் மொபைல்ல கேலக்‌ஷி ஆண்ட்ராய்டு  ஃபோன் வாங்கி இருக்கேன். என் ஆஃபீஸ் பணி எப்பவும் ட்ராவலிங்க்லயே இருப்பேன் என்பதால் அந்த டைம்ல மொபைல் ட்வீட்ஸ்.. 

ஞாயிறு என்பது என்னைப்பொறுத்தவரை ஓய்வு நாள் அல்ல,மற்ற 6 நாட்களுக்கான பதிவுகளை தயார் செய்யும் நாள் 

வெள்ளி, சனி பார்த்த 4 படங்கள் விமர்சனம் ஞாயிறு டைப் பண்ணி திங்கள் டூ வியாழன் தினசரி 1 பதிவு


 நான் வீட்ல இருக்கும்போது டைப் பண்ண வேண்டி தேவை வந்தா நைஸா என் பாப்பாவை தூண்டி விட்டு 2 பேரையும் மாமியார்  வீட்டுக்கு பேக் பண்ணி அனுப்பிடுவேன்.1 கி மீ தூரம் தான் எங்க வீட்டுக்கும், அவங்க வீட்டுக்கும்.அடிக்கடி கோவிச்சுட்டு போக ஈசியா இருக்கும்னு அப்படி ஏற்பாடு, நாமளும் சள்ளை ( தொந்தரவு) விட்டுதுன்னு நிம்மதியா டைப்பலாம்



5. உங்களை ஃபாலோ பண்ற புது ட்விட்டரை கூட நீங்க ஃபால்லோ பண்றீங்க. எல்லா மென்ஷனுக்கும் பதில் சொல்றீங்க. இந்த நல்ல பண்பு உங்களுக்கு எப்படி வந்தது? (அப்போதானே கடலை போட முடியும்)


ட்விட்டருக்கு வந்த புதுசுல எனக்கு மென்ஷன் பார்க்கவோ, டி எம் பார்க்கவோ தெரியாது. அப்புறம் 6 மாசம் கழிச்சு பலர் ஏன் மென்ஷனுக்கு பதில் சொல்லலை? மனசுக்குள்ளே புரட்சித்தலைவின்னு நினைப்பா? ஏன்  யாரையும்  மதிப்பதே இல்லை?னு கேட்டாங்க.. நான் பதறிட்டேன்.

 ஏன்னா வீட்ல என்னை மதிக்காத என் சம்சாரத்தையே  ரொம்ப மதிக்கறவன் நான், ஃபாலோயர்சை மதிக்காம இருப்பேனா? அதனால மென்ஷன் பார்த்து பதில் சொல்ல பழகிட்டேன். ஆனா பெரும்பாலும் ஸ்மைலிதான் ;-)) 


 ஏன்னா நாம ஏதாவது காமெடியா சொல்லப்போய் அதை அண்ணன் மாயவரத்தான்  மாதிரி யாராவது ஸ்க்ரீன் ஷாட் எடுத்து நம்மை மாட்ட வெச்சுட்டா? 



6. ஈரோடுல இருக்குற எல்லா தியேட்டர் ஓனர் , மேனேஜர், அங்கு வேலை செய்யுறவங்களுக்கு உங்க முகம் நிச்சயம் பரிச்சயம் ஆகியிருக்கும். அடிக்கடி நீங்க தியேட்டர்ல படம் பார்க்க வரும்போது உங்களை அவங்க பார்க்கும்போது அவங்க ரியாக்‌ஷன் எப்படி இருக்கும்?


 படு கேவலமா பார்ப்பாங்க . எந்த குப்பை போட்டாலும் வந்துடறானே, நமக்கு வருமானமதானே அப்டினு நினைக்க மாட்டாங்க.. கன்செஷன் பாஸ் மாதிரி ஏதாவது கொடுப்பாங்கனு பார்த்தேன். ஒரு பய கண்டுக்கலை.. பைக் பாஸ் போடும்போது  ரகசியமா பாஸ் வாலா எச்சரிப்பாரு - சார், இந்த படம் மொக்கைதான் அப்டினு, நான் எதுவும் சொல்லாம தெரியும்னு மனசுக்குள்ளே நினைச்சுக்குவேன். அவன் அதை விட கேவலமா பார்ப்பான். அவ்வ்வ்வ் 




எவ்வளவுதான் தீய பழக்கங்கள் (பொதுவுக்கு தெரியாமல்)இருந்தாலும் நம்முடன் பழகும்போது ,மிகவும் நல்லவனாக நமக்கு ஆறுதலாக ,நல்ல மொட்டிவேட்டராக ,அனைத்துக்கும் மேலாக பண்பான சொற்கள் ,பணிவான செயல் என்று இருப்பவருடன்  நட்பாக இருப்பது சிறப்பா ??



7. நீங்க டைரக்டர் ஆனா ஓகே ஓகே எம்.ராஜேஷுக்கு போட்டியா வருவீங்க எனபது என் தனிப்பட்ட கருத்து. இதற்கு உங்கள் பதில் என்ன?


நல்ல வேளை அவர் ட்விட்டர்ல இல்லை, என் பிளாக்கும் படிப்பது இல்லை. இல்லைன்னா வாழ்க்கையே விரக்தி அடைஞ்சிருப்பார்.

 எனக்கு டைரக்‌ஷன் துறைல ஆர்வம் உண்டு, ஆனா அதில் அனுபவம் இல்லை. மணிரத்னம் மாதிரி அனுபவம் இல்லாம இறங்கும்  துணிச்சலோ, எண்ணமோ  இதுவரை இல்லை.. 

 சினிமா விமர்சனம் எழுதும்போது படத்தில் காணப்படும் குறைகளை  துல்லியமாக கணிப்பவர்கள் எல்லாம் நல்ல சினிமா எடுத்து விட முடியாது. படைப்பாளிக்கும் , விமர்சனம் செய்பவருக்கும் ஒரு கோடு உண்டு . ஒரு படைப்பாளி சுலபமாக விமர்சகர் ஆகி விட முடியும் , ஆனா ஒரு விமர்சகர் நல்ல படைப்பாளி ஆகி விட முடியாது, ரொம்ப கஷ்டம் 



8. அட்ரா சக்கல வெட்டாபீஸ் வெங்கிடுசாமில படங்கள் முன்னோட்டம் போடரீங்க.அத்தனை படத் தகவல் உங்களுக்கு எப்படி கிடைக்குது? (அதான் கடலை போட்டு அங்கங்க ஆள் வெச்சிருக்கானே)


இதை நக்கல் கேள்வியா எடுப்பதா? சீரியஸா எடுப்பதா? தெர்ல


 கூகுள் சர்ச்ல போய் பட டைட்டிலை டைப் பண்ணி க்ளிக் பண்ணா அந்தப்படத்தை பற்றி ஏதாவது நியூஸ் நாளிதழ் செய்தியா வந்திருக்கும். அதுல 4 செய்தியை படிச்சுப்பார்த்து அதுல ஒண்னை செலக்ட் பண்ணி கட் காப்பி பேஸ்ட் பண்ணிக்குவேன், நோகாம நோம்பி கும்பிடறதா பலர் சொன்னாலும் அதுக்கு நிறைய உழைப்பு தேவைப்படுது. 

  நான் சொந்தமா டைப் பண்ணி போடும் சாதா பதிவுக்கு ஒரு மணி நேரம், சினிமா விமர்சனத்துக்கு ஒன்றரை மணி நேரம் ஆகுதுன்னா  வெள்ளிக்கிழமை ராம சாமி வெட்டாஃபீஸ் வெங்கிடுசாமி போஸ்ட்க்கு 3 மணி நேரம் ஆகும், ஏன்னா மினிமம் 7 டூ 10 படங்கள் வாராவாரம்  ரிலீஸ் ஆகுது. 7 * 4 = 28 பதிவுகள் படிச்சு அதுல இருந்து 7 செலக்ட் பண்ணனும். அப்புறம் கிளாமரான ஸ்டில்ஸ் தேடனும் , உஷ் அப்பா எவ்ளவ் வேலை  




9. சின்மயி சர்ச்சை பற்றி எல்லா பதிவும் கட் காபி போஸ்ட்டா போடறீங்க.. உங்க நிலைப்பாடு என்ன? 

ராணி வார இதழில் சின்மயி வழக்கு பற்றிய ஆதியோடு அந்தமாய் உண்மை விளக்கும் தொடர் எழுத பேச்சு வார்த்தை நடந்து வருது 

தேவி வார இதழில் கண்டெண்ட்டை பார்த்து மிரண்ட்டுட்டாங்க. குமுதம் ரிப்போர்ட்டர்ல நோ ரிப்ளை. கடைசி முயற்சி ராணி


ஆல்ரெடி 7 அத்தியாயம் 7 வாரம் வரும் அளவு எழுதி ராணி வார இதழுக்கு அனுப்பியாச்சு, அங்கே போட்டதும் இங்கே போடுவேன்.இரு தரப்பிலும் கண்டிக்கப்படவேண்டிய தவறுகள் இருந்தாலும் தண்டிக்கப்படவேண்டிய தவறு யாருடையது என்பதை காலமும்,கோர்ட்டும் சொல்லும்

கோர்ட்டில் ஒரு கேஸ் கொடுத்த பிறகு அது பற்றி சம்பந்தப்படவர்கள் பொது வெளியில் விவாதிப்பது தவறு.பின்னடைவுதான்

சின்மயி வழக்கில் வாதாட சட்டம் படிச்ச வக்கீலை விட ட்விட்டரில் இருக்கும் ஒரு நபர் வாதிட்டால் பிரமாதமாக இருக்கும்


 சின்மயி தரப்பில் வாதாட மாயவரத்தான் ,ராஜன் தரப்பில் ஜாக்கி சேகர் வாதாடினா கோர்ட் களை கடடும்.்

கடைசில கோர்ட்ல ஜட்ஜ் ராஜன் கிட்டே “ உங்க ட்வீட்ஸ், பிளாக் எல்லாம் படிச்சிருக்கேனே? ஃபாலோயர்னு சொல்லிடனும், செம காமடியா இருக்கும்

அட அதுக்கு நாமே பெட்டர்போல?





இதன் 17 ஆம் பாகம் படிக்காதவர்கள் -http://www.adrasaka.com/2012/10/17.html


 இதன் 18 ஆம் பாகம் படிக்காதவர்கள் -http://www.adrasaka.com/2012/10/18.html

அனைவருக்கும் மனதை மயக்கும் மழை வணக்கம்,,,,



Monday, October 22, 2012

அட்ராசக்க சி.பி எக்ஸ்க்ளூ “ஜிவ்” பேட்டி - பாகம் 18


நண்பர்களுக்கு ஒரு முக்கிய அறிவிப்பு 


சைபர் க்ரைம் போலீஸில் புகார் செய்யப்பட்ட ஐவரில் ஒருவர் போலீஸ் ரிமாண்டில் இப்போது. எனவே டைம் லைனில் ஜாலி ட்வீட்ஸ் போடுபவர்கள் கவனம் 


பிரச்சனையின் தீவிரம் புரியாமல் யாரும் இந்த சென்சேஷனல் மேட்டர் பற்றி டைம் லைனில் விவாதிக்க வேண்டாம் # பொது நலன் கருதி

நம்ம "கேளுங்க" தளம் சார்பாக கடந்த வாரம் ஆரம்பித்த சூடான மெயில் காணலின் தொடர்ச்சியாக இந்தவாரம்..


சி.பி.இடம் இனி ராபிட் பயர் கேள்விகள் 

1. வலையுலகில் இந்த வலைபூக்கள் இருக்கக் கூடாது என்று நினைக்க வைத்த 2 தளங்கள்  ?
  • தமிழ்காமக்கதைகள்
  • பூனம்பாண்டே ஓப்பன் யுனிவர்சிட்டி
2. வலையுலகில் நமக்கு நேரடி போட்டி இவம் தாம்யா என்று உங்கள் மனதில் நினைத்த பதிவர்?
  • கேபிள் சங்கர்
  • ஜாக்கிசேகர்
  • உண்மைத்தமிழன்
  • சவுக்கு
3.  ஜாக்கி, கேபிள் இருவரும் தேர்தலில் நின்றால் உங்கள் ஓட்டு யாருக்கு?
  • கேபிளுக்கே என் ஓட்டு
  • ஏன்னா அவர் படம் ரிலீஸ் ஆகும் முன்னே ப்ரிவ்யூ ஷோ பார்த்து விமர்சனம் போட்டுடறாரு. அவரை ஜெயிக்க வெச்சு எம் எல் ஏ ஆக்கிட்டம்னா அவர் பாட்டுக்கு அவர் உண்டு ரேப், ஊழல் உண்டுன்னு இருப்பார்.
4. ரஜினி இந்த ஆங்கில பட ரீமேக்கில் நடித்தால் செமையாக இருக்கும் என்று நினைத்த 3 படங்கள்?
  • த டெர்மினேட்டர் 2 ஜட்ஜ்மெண்ட் டே
  • கமாண்டோ
  • செல்லுலார்
5. ஹாய் மதன், ஏன்? எதற்கு? எப்படி? சுஜாதா யார் பெஸ்ட்?
  • சந்தேகமே இல்லாம சுஜாதா தான் பெஸ்ட்
  • ஹாய் மதன் ஜஸ்ட் ஒரு ட்ரான்ஸ்லேட்டர் மட்டுமே
  • சுஜாதா அங்கங்கே தன் டச் சோட குடுப்பாரு
  • சுவராஸ்யம் ஜாஸ்தி  
6. ஒரு லாஜிக் மிஸ்டேக் இல்லாமல் நீங்க பார்த்த ஒரு படம்?

  •  மகேந்திரனின் உதிரிப்பூக்கள்
  • பாரதிராஜாவின் முதல் மரியாதை ( லாஜிக் மிஸ்டேக்ஸ் கம்மி )

7.  இதெல்லாம் புத்தகமாயா என்று விளாசி எறிந்த புத்தகம்?

  • சாரு நிவேதிதாவின் எக்சைல்
  • ஜீரோ டிகிரி

8. திரையில் நம்பர் வன் ஜோடி?

  • ஸ்ரீகாந்த்  சினேகா ( ஏப்ரல் மாதத்தில் )
9. ஆண், பெண் ஒரு வரியில் கதை ஒன்று சொல்லுங்க?
  • சாரி, பெண் என்றால் எனக்கு அலர்ஜி ஹி ஹி
10. இந்த கண்ணாடிய கழட்ட மாட்டிங்களா ஆபிசர்?

இதன் 17 ஆம் பாகம் படிக்காதவர்கள் -http://www.adrasaka.com/2012/10/17.html
  •  

Wednesday, October 17, 2012

அட்ராசக்க சி.பி எக்ஸ்க்ளூ “ஜிவ்” பேட்டி - பாகம் 17

பதிவர் சி.பியின் காமெடியும், பீலிங்க்ஸும்



இன்னைக்கு நம்ம "கேளுங்க" தளம் சார்பாக சூடான மெயில் காணல் ஒன்று உங்களுக்காக..   


1. பதிவுலகை பொறுத்த வரையில் கண்டிப்பாக உங்களுக்கொரு ஸ்டைல் உருவாகி விட்டது. ஆனாலும் இந்த பதிவர் போல நாமும் எழுதலாம் என்று முயற்சித்து தோற்று இருக்கலாம். அந்த பதிவர் யார்? (அதிகம் பேர் இருக்காங்க என்றெல்லாம் டகால்டி வேலை பண்ண கூடாது. குறிப்பாக ஒருவர், அல்லது டாப் டென்னில் முதல்வர்)
  •  பதிவுலகில் பலர் என்னைக்கவர்ந்தார்கள். அவர்கள் எழுத்து நடையை ரசித்ததுண்டு , குசும்பன், சேட்டைக்காரன், ராம்சாமி, பட்டா பட்டி  என நீளும் பட்டியல்கள், ஆனா யார் மாதிரியும் சாயல்ல எழுத நினைச்சதில்லை.  
  •  
  •  
  •  
  • அமரர் சுஜாதா எழுதிய காயத்ரி நாவல் ஸ்டைலில் நன் ஒரு சிறுகதை எழுத முயற்சித்தேன். ஒரு உண்மை சம்பவம், கோவை ப்ரீதி கொலை வழக்கு என்ற கதை நடுவரால் புஷ்பா தங்கதுரை சாயல் என சொல்லப்பட்டது  அவ்வ்வ்வ்வ்  


கோவை ப்ரீத்தியின் கொலை வழக்கு - KOVAI PREETHI MURDER CASE (சவால் சிறுகதைப்போட்டி )http://www.adrasaka.com/2011/10/kovai-preethi-murder-case.html


2. மகா மெகா மொக்கை படங்களை வான்டாடாக போய் பார்கின்றீர்கள். அதன் மீது ஏன்னா தலிவா ஈர்ப்பு உனக்கு?
  • ஒரு மொக்கை இன்னொரு மொக்கையை ரசிப்பதில் ஆச்சரியம் என்ன?  நல்ல தரமான படத்தை விமர்சனம் பண்றது ஈசி, ஆனா மொக்கை படத்தை தான் ஜாலியா கலாய்க்க முடியும்.. அதான் மொக்கையா தேடி தேடிப்போறேன்
3. நடுநிலை விமர்சனம் தவிர்த்து இப்போது பலர்  தங்கள் தங்கள் பார்வையில் விமர்சனம் எழுதி கொண்டு இருக்கிறார்கள்.. நீங்க இப்போ சொல்லுங்க பதிவுலகில் அதிக நடுநிலையாக விமர்சனம் செய்யும் விமர்சகர் யாரு என்று நினைக்கிறீங்க? (அதிகம் பேர் இருக்காங்க என்றெல்லாம் டகால்டி வேலை பண்ண கூடாது. குறிப்பாக ஒருவர், அல்லது டாப் டென்னில் முதல்வர்)
  • அதீஷா
  • உண்மைத்தமிழன் 
  • உண்மைத்தமிழன் சிறுபட்ஜெட் படங்களுக்கு அதிக சபோர்ட் பண்ணுவார், அதீஷா ஜனரஞ்சக படங்களூக்கு அதிக முக்கியத்துவம் தருவார்)
4. உங்களோடு நண்பர்களாக பழகியவர்கள் உங்களைதாக்கிய (வார்த்தைகள் அல்லது ஏதோ) சம்பவங்கள் பதிவுலகில் உண்டா? (நோட் - நண்பர்கள்)
  • ராஜன் லீக்ஸ் 
  • கழுகு சவுந்தர்
  • விக்கி உலகம் வெங்கட்
  • சிரிப்புப்போலீஸ் ரமேஷ்
5. கடைசியாக உங்களை பற்றிய முக்கிய 3 தகவல்கள் அல்லது சந்தர்ப்பங்கள்? (நீங்க பதிவுலகில் பகிர்ந்து கொள்ளாததாக இருத்தல் வேண்டும்)
  • நான் ஞாயிறுகளில் எப்போதும் டி வி யே கதின்னு வீட்டுக்குள்ளேயே இருப்பேன் ( வெளீல போனா செலவு வைக்க சம்சாரம் ரெடியா இருப்பதால் )
  • வெள்ளிக்கிழமை ஆஃபீஸ்க்கு ரெகுலரா கட் அடிக்க என்ன என்னமோ தகிடு தித்தம் எல்லாம் பண்ண வேண்டி இருக்கு.. ஒரு கதை எழுதக்கூட அத்தனை க்ரியேட்டிவிட்டி தேவைப்படறதில்லை

Monday, October 01, 2012

அட்ராசக்க சி.பி எக்ஸ்க்ளூ “ஜிவ்” பேட்டி - பாகம் 16

மனைவி கமலா அம்மையார் ,
மகன்கள் ராம்குமார் - பிரபு ,
மகள்கள் சாந்தி - தேன்மொழி
ஆகியோருடன் நடிகர் திலகம் !
 விவசாயி டாட் காம் விவாஜி இணையத்துக்கு அளித்த பேட்டியில் இருந்து


1: பத்திரிக்கை துணுக்குகளால் பிரபலமான நீங்கள், பதிவுலகத்துக்கு வந்ததால் அடைந்த பலன்கள் என்னென்ன?



பத்திரிக்கைகளால் 8 லட்சம் மக்களுக்கு அறிமுகம் ஆனாலும் பிளாக்கில் சினிமா விமர்சனம் மூலம் பல இயக்குநர்கள், பட தயாரிப்பாளர்கள் அறிமுகம், நட்பு , விரோதம் எல்லாம் கிடைத்தது.. இது எனக்கு பிற்கால திரை உலக வாழ்வுக்கு பயன் அளிக்கும் என நினைக்கிறேன் .அது போக வெளி நாட்டு வாசகர்கள் பலர் அவ்வப்போது அலைபேசியில் தொடர்பு கொண்டு நிரை குறைகளை சொல்வார்கள். அது மனதுக்கு மகிழ்ச்சி


===00oo00===
2: பத்திரிக்கைகளில் எழுதும்பொழுது, பணம் மற்றும் அது சென்று சேரும் மக்களின் எண்ணிக்கையும் அதிகம், பதிவில் பணம் ஈட்டுதலும் குறைவு, வாசிப்பவர்களின் எண்ணிக்கையும் குறைவு. இதை  நீங்கள் எப்படி பார்க்கிறீர்கள்? அதாவது வித்தியாசம்.


உண்மைதான்.. பதிவில் அதிக பட்சம் 1000 பேர் மட்டுமே ரெகுலரா படிக்கறாங்க. சினிமா விமர்சனம் என்றால் மட்டும் அதை 12,000 பேர் படிக்கறாங்க.. பத்திரிக்கை என்றால் மினிமம் 5 லட்சம் பேர் படிப்பாங்க.. பண ஈட்டுதல் பிளாக்கில் குறைவுதான். ஆனாலும் இது மியூச்சுவல் ஃபண்ட் போல இன்சூரன்ஸ் போல நீண்ட கால வைப்புத்திட்டம் போல பிற்காலத்தில் உபயோகம் ஆகும் என நினைக்கிறேன்.. .


 ===00oo00===
3: பத்திரிக்கைகளுக்கு எழுதுகையில் சச்சரவுகள் குறைவாக இருக்கும். பதிவுகளில் அது அதிகம். பதிவுலக சச்சரவுகளில் சந்திக்கும் பொழுது, பத்திரிக்கைக்கே எழுதியிருக்கலாம் எனத் தோன்றியது உண்டா? பதிவுலம் விட்டுச் சென்றுவிடலாம் என்றும் எண்ணியது உண்டா? உண்டெனில்,. விவரிக்கவும்.


பல சமயம் தனி மனித தாக்குதலுக்கு உண்டானபோது மனம் வருத்தப்பட்டது உண்டு, ஆனால் பதிவு உலகத்தை விட்டு போக வேண்டும் என நினைத்ததில்லை.. சவாலாக எடுத்து சாதிக்க நினைக்கிறேன். உதாரணமாக நான் வந்த புதிதில் ஹிட்ஸுக்காக சி பி எழுதுகிறார் என தாக்கி பதிவு போட்டவர் சில மாதங்கள் கழித்து தன் பிளாக்கில் கட்டுரை எழுதவும், தன் தள விளம்பரத்தை தன் தளத்தில் போடவும் கேட்டுக்கொண்டார். இதில் எனக்கு பெரும் மகிழ்ச்சி



===00oo00===


4 : பத்திரிக்கைகளில் நல்ல படைப்புகளுக்கு மட்டுமே முன்னுரிமை அளித்து படைப்புகள் வெளியிடப்படும். அந்த நேரத்தில அவர்கள் புறந்தள்ளிய படைப்புகளை பதிவுகளில் வெளியிட்டுள்ளீர்களா? அப்படி வெளியிட்ட படைப்புகள் பதிவுகில் பாராட்டப்படும்பொழுது எப்படி உணர்ந்தீர்கள்?


பத்திரிக்கைகளால் நிராகரிக்கப்பட்ட படைப்புகள் பெரும்பாலும் சரக்கு கம்மியா இருக்கும்.. நம்மை விட ஒரு எடிட்டருக்கு  மக்களின்.. வாசகர்களின் பல்ஸ் நல்லா தெரியும்.. ஏன்னா எழுதுறவங்க ளுக்கு தன் படைப்பு எல்லாமே  பிரமாதம் என்ரே தோன்றும். எடிட்டர் தான் சுப்பீரியர். ஆனா எல்லா பத்திரிக்கை எடிட்டர்களும் ஒரே மாதிரி இல்லை. அவங்கவங்க டேஸ்ட்க்கு தக்க படி நம் படைப்பை பிரிச்சு அனுப்பனும். இதுக்கு அர்த்தம் அவங்க டேஸ்ட்க்கு தக்கபடி எழுதனும் என்று அர்த்தம் அல்ல. முதல்ல  படைப்பை எழுதிட்டு இது எந்த புக்குக்கு மேட்ச் ஆகும் என தேர்வு செய்து அனுப்பனும்..

 பத்திரிக்கையால் நிராகரிக்கப்பட்ட ஒரு படைப்பு பதிவில் நான் போட்டது - கற்புக்கரசி காஞ்சனாவுடன் ஒரு பேட்டி ( நடிகை குஷ்புவை கிண்டல் பண்ணீய நகைச்சுவை ) இது பிளாக்கில் போடப்பட்ட போது பலர் அதை ரசிக்கவில்லை







5) என் அனுபவத்தில், பதிவுலகத்திற்கு வந்தவர்கள் மூன்று  அல்லது நான்கு ஆண்டுகள் பரபரப்பாக இயங்கிவிட்டு, பிறகு பதிவுகளை (அதுவும் சொற்பமாக) படிக்க ஆரம்பித்துவிடுவார்கள். இதிலிருந்து நீங்கள் மீள முடியும் என நம்புகிறீர்கள்? வாழ்நாள் முடியும் வரையில் பதிவிடுவேன் என நீங்கள் நம்புகிறீர்களா?

    (வெகு சொற்பமான மக்களே இன்னும் 2003/4'ல் இருந்து பதிவிடுகிறார்கள்)

ஆசை 60 நாள் , மோகம் 30 நாள் என்பது எல்லாத்துக்கும் பொருந்தும். லவ் பண்றவரை உயிரையே குடுக்கறேம்பான். அதே பெண்ணை மேரேஜ் பண்ணிக்கிட்டா  அதிக பட்சம் 3 வருஷம் தான்.. சலிப்பு வந்துடும், சண்டை ஆரம்பிக்கும்.. சில விதி விலக்குகள் இருக்கலாம். பெரும்பான்மை அப்படித்தான்.

சினி ஃபீல்டுல கே பாக்யராஜ், டி ராஜேந்தர் நல்ல உதாரணம். 2 பேரும் டாப்ல இருந்தாங்க.. இப்போ இல்லை.எல்லாம் ஒரு சீசன் தான்./. சரக்கு குறைஞ்சுடும், அல்லது நீர்த்துடும்

Every Hero Becomes bore at a Time

இதையும் மீறி  ஆர்வமுடன், வெறியுடன் எழுதுறவங்க இருக்காங்க,  என்னை பொறுத்தவரை  பதிவுலகத்தை  என்னை ஏற்றி விடும் ஏணியாக, லட்சியக்கடலை அடைய உபயோகப்படுத்தும் பரிசலாக  நினைக்கிறேன்.

என் லட்சியம் மீடியாவில் பணி புரிவது. பேக் டூ த ஸ்க்ரீன். அதனால அந்த இடத்துக்கு போய்ட்டா பதிவு இரண்டாம் பட்சம் ஆகி விடலாம்.



Shruti Hassan was tagged in Kites Entertainment's photo.



===00oo00===
6) பதிவுகளில் எழுத இலக்கிய ஆர்வம் வேண்டுமென நினைக்கிறீர்களா? அல்லது நாளேடுகள், வாரயிதழ்கள் மட்டும் படித்தால் போதும் என்று நினைக்கிறீர்களா?

பதிவுகளில் எழுத இலக்கிய ஆர்வம் வேணும்னு சொல்லலை, இருந்தா நல்லா இருக்கும்னு சொல்றேன் ( நன்றி - தசாவதாரம் கமல்).

பொதுவா அனுபவப் பகிர்வுகள் தான் இப்போ அதிகம் விரும்பப்படுது. பயணக்கட்டுரைகள், காலேஜ், ஸ்கூல் ஃபிளாஸ்பேக் அனுபவங்கள், இந்த மாதிரி.. இதுக்கு இலக்கிய வாசிப்பு தேவை இல்லை.. டைரி எழுதற மாதிரி நடந்ததை அப்படியே எழுத வேண்டியதுதான்.

சிறு கதை எழுதும்போது தான் சுவராஸ்யமான நடைக்காக மற்ற படைப்புகள் படிச்சா யூஸ் ஆகும்.. நடைல ஒரு ஸ்பீடு கொண்டு வர இலக்கிய வாசிப்பு தேவை.. என் சிபாரிசு . சுஜாதா , கு அழகிரி சாமி கதைகள்

இதெல்லாம் போக பரப்பரப்பான நியூஸ் அப்டேட்டிங்க் பண்ணலாம். ஆனா அது காலத்துக்கும் நிலைத்திருக்காது,. அப்போதைக்கு  படிப்பாங்க.. அவ்ளவ் தான்

===00oo00===


7) ஆரம்பத்தில் பத்திரிக்கைகள் பதிவுகளை வெகுவாக மட்டம் தட்டியே வந்தன.  சில எழுத்தாளர்களும் பதிவுகளை குற்றம் கூறினர். இப்பொழுது அது சற்றே மாறியுள்ளது. அடுத்து என்ன நடக்கும் என்று நீங்கள் நினைக்கிறீர்கள். பதிவுகள் கண்டிப்பாக மாற்று ஊடகமாக மாறிவிடுமா?


முன்னணி வார இதழ்கள் 4 இருக்குன்னா அதுல இருக்கற , அதுல எழுதறவங்க சராசரியா மொத்தமே 40 பேருதான் திருப்பி திருப்பி எழுதிட்டு வர்றாங்க.. காலப்போக்கில் அது போர் அடிச்சுடுச்சு.. வெரைட்டி ரைட்டிங்க் தர முடியல.. பதிவுகள் பார்த்தீங்கன்னா  ஏகப்பட்ட பேர் பட்டாசை கிளப்பறாங்க..

சூடான இடுகைகளில் வராத, சினிமா விமர்சனம் எழுதாத அதிகம் பேரால் படிக்காத பல மண்ணுக்குள் வைரங்கள் பதிவுலகில் நடமாடிட்டு இருக்காங்க..  என்னை கேட்டா வலை உலகுக்கென ஒரு வார இதழ் நடத்துனா பட்டாசா இருக்கும்.. அப்படி ஒரு முயற்சியை யாராவது எடுத்தா எந்த வித சன்மானமும் எதிர்பார்க்காம  நான் அதில் பணி புரிய தயாரா இருக்கேன். என் வேலை அதில் திற்மைசாலிகளை அடையாளங்காட்டுவதாக இருக்கும்..

எதிர் காலத்துல பத்திரிக்கை உலகுக்கு வலை உலகம் டஃப் ஃபைட் கொடுக்கும் என நம்பலாம். உதாரணமா இப்போ சினிமா விமர்சனங்கள்  வார இதழ்களில் வருவதை விட 4 மடங்கு கலக்கலா பலர் எழுதறாங்க..

செங்கோவி, உண்மைத்தமிழன்,கேபிள் சங்கர், ஜாக்கி சேகர் , அதிஷா , லக்கிலுக் யுவகிருஷ்ணா,கார்க்கி, ராஜன் என இவங்க விமர்சனம் எல்லாம் படிக்கும்போது அவங்க எங்கேயோ போய்ட்டாங்க எனவும் வார இதழ் விமர்சகர்கள் கடந்து வர வேண்டிய தூரம் நிறைய இருக்குன்னும் தோணுது
===00oo00===
8, ட்விட்டர், ஃபேஸ் புக், பதிவுகள் - பாவிக்க, பாராட்ட, திட்டு வாங்க, எவை எவை சுலபமாக இருக்கிறது.


ட்விட்டர்  பதிவு போட்டதும் மார்க்கெட்டிங்க் யூஸ் ஆகுது.. அப்பப்ப நம்ம படைப்பின்  ரிசல்ட் தெரிஞ்சுடுது..

 ஃபேஸ் புக் பற்றி எனக்கு அதிகம் பரிச்சயம் இல்லை.. ஃபோட்டோ ஷேரிங்க் , க்டலை தான் அங்கே அதிகம்னு சொல்லிக்கறாங்க..  திட்டு வாங்க, அடிச்சுக்க சண்டை போட வேடிக்கை பார்க்க பதிவு தான் பெஸ்ட்..

ஆனா ஜாலியான சண்டைகள் இப்போ காணோம். பயங்கர வெட்டுக்குத்து தான் நடக்குது.. இப்போ புதுசா இந்து முஸ்லீம் பிரச்சனை, ஈழத்தமிழர் பிரச்சனைனு போய்ட்டு இருக்கு.. :((
==00oo00===
9) பதிவுகள் மூலம் ஒத்த அலைவரிசை கொண்டோரை அடையாளம் காண்பது எளிது. இதனால காதலிக்க ஏதுவான ஊடகமா இருக்கிறது. இதைப்பற்றி உங்கள் கருத்து என்ன?

ம் ம் அங்கங்கே அதுவும் நடந்துட்டுதான் இருக்கு.. நான் பத்திரிக்கைத்துறையில் இருந்தப்போ மு முருகேஷ் - அ வெண்ணிலா காதல் பெரிய அளவில் பேசப்பட்டுது.. அதே போல் வலை உலகில் காதல் வளரலாம்.. அங்கங்கே கள்ளக்காதலும்
==00oo00===
10) "சமூக வலைதளங்களால் பதிவுகள் அழியும் காலம் வெகு தொலைவில் இல்லை" - இதற்கு  உங்களது கருத்து?

பதிவுகள் முற்றிலும் அழியாது. ஆனா பாதிப்பு இருக்கு என்பது உண்மைதான். ஒரு வேளை பதிவு எழுதுவது குறைந்து போகலாம்.





 டிஸ்கி -1 கேள்வி கேட்கறவங்க பின்னூட்டத்துலயும் கேட்கலாம்,ஆனாநான் பதிலை பின்னூட்டத்துல சொல்ல மாட்டேன் ( அப்புறம் எப்படிபதிவு தேத்த?)
[email protected]  இந்த மெயில்லயுமகேட்கலாம்..முதல் 3 பாகங்கள் தக்‌ஷினாமூர்த்தி வலைப்பதிவிலும், 4 ம் பாகம் தமிழ் வாசி தளத்திலும் வந்தவை   



 
டிஸ்கி 2 - மெயில் அனுப்ப முடியாதவங்க செல் ஃபோன்ல எஸ் எம் எஸ் அனுப்பியோ, கால் பண்ணியோ கேட்கலாம்..( நைட் 8 டூ 9)  அதுக்காக மிஸ்டு கால் விடக்கூடாது ஹி ஹி - 9842713441 ( வெள்ளிக்கிழமை மட்டும் கால் பண்ணாதிங்க  கோயில்லயோ, தியேட்டர்லயோ இருப்பேன்  :)   



 
டிஸ்கி 3  -  இதன் முதல் பாகம் படிக்காதவங்களுக்காக- http://adrasaka.blogspot.com/2012/01/1_31.html    



 
டிஸ்கி 4 -  இதன் 2ம் பாகம் படிக்காதவங்களுக்காக http://adrasaka.blogspot.in/2012/02/2.html    


 
டிஸ்கி 5 - இதன் 3 ம் பாகம் படிக்காதவங்களூக்காக -http://www.adrasaka.com/2012/02/3_29.html  

 டிஸ்கி 6 -  இதன் 4 ம் பாகம் படிக்காதவங்களூக்காக http://www.adrasaka.com/2012/04/4.html  


 டிஸ்கி 7 - இதன்  5 ம் பாகம் படிக்காதவங்களூக்காக  -http://www.adrasaka.com/2012/04/5.html  


 டிஸ்கி 8.  இதன்  6 ம் பாகம் படிக்காதவங்களூக்காக http://www.adrasaka.com/2012/04/6.html



 டிஸ்கி 9.  இதன்  7 ம் பாகம் படிக்காதவங்களூக்காகhttp://www.adrasaka.com/2012/04/7.html  



டிஸ்கி 11 - இதன் 9 ம் பாகம் படிக்காதவ்ர்களூக்காக  -  http://www.adrasaka.com/2012/05/9.html  


 டிஸ்கி 12 - இதன் 10 ஆம் பாகம் படிக்காதவர்கள் -http://www.adrasaka.com/2012/06/10_44.html



 டிஸ்கி 13.  இதன் 11 ஆம் பாகம் படிக்காதவர்கள்-http://www.adrasaka.com/2012/06/11.html


 டிஸ்கி 14 -இதன் 12 ஆம் பாகம் படிக்காதவர்கள்http://www.adrasaka.com/2012/06/12.html



 டிஸ்கி -  15 -இதன் 13 ஆம் பாகம் படிக்காதவர்கள்http://www.adrasaka.com/2012/07/13.html



டிஸ்கி 16 -இதன் 14 ஆம் பாகம் படிக்காதவர்கள்http://www.adrasaka.com/2012/07/14.html
 diski 17 -



இதன் 15 ஆம் பாகம் படிக்காதவர்கள் -http://www.adrasaka.com/2012/07/15.html


thanx to -http://vivasaayi.blogspot.in/2012/09/24365-1.html

குட்டிஸ் இன் பர்த்டே பார்ட்டி..!
நன்றி -கட்டதுர

Tuesday, January 11, 2011

திரும்பிப்பார்க்கிறேன் (தொடர்பதிவு)

http://farm3.static.flickr.com/2395/2323943729_a075be5afc.jpg 
2010 ஜூலை 17-ம் தேதி அன்றுதான் பதிவுலகில் காலடி எடுத்து வைத்தேன்.
ஏ டூ இஜட் நல்ல நேரம் சதீஷ்தான் பார்த்துக்கொண்டார்.டைப்பிங்க் மட்டும்
என் வேலை.அவருக்கும், இந்த தொடர் பதிவுக்கு என்னை அழைத்த சவுந்தருக்கும் நன்றி கூறி இந்தக்கட்டுரையை தொடர்கிறேன்.

நான் பிளஸ் டூ படிக்கும்போது ,ஸ்கூல் கணக்கு மாஸ்டர் எதற்கோ ,”
“ஊர்ப்பெயரை ஏம்ப்பா கெடுக்கறே..” என திட்டி விட்டார்.அப்போது
ஆவேசத்துடன் ஊர்ப்பெயரை காப்பாற்றுவேன் என சினிமா ஹீரோ
மாதிரி சபதம் எடுத்து பத்திரிக்கைகளுக்கு எழுத ஆரம்பித்தேன்.

முதலில் கவிதைகள்,சிறுகதைகள்தான் எழுதினேன்.சென்னிமலை சி பி
செந்தில்குமார் என்ற பெயரை அச்சில் பார்க்கும்போது மனதுக்குள்
பெருமையாக இருக்கும்.பதிவுலகுக்கும்,பத்திரிக்கை உலகுக்கும்
அடிப்படையில் உள்ள முக்கியமான வேற்றுமை என்ன?

நாம் அனுப்பும் படைப்புகள் எடிட் செய்யப்பட்டு தேர்வு செய்யப்படுபவை
மட்டுமே பிரசுரம் ஆகும்.10 கவிதை அனுப்புனா 1 செலக்ட் ஆகும்.
வாரா வாரம் புக் வந்ததும் படைப்பு வந்திருக்கா?ன்னு ஆவலா
புக் பார்ப்போம்..இந்த சஸ்பென்ஸ் எல்லாம் பிளாக் -கில் இல்லை.

நானே ராஜா நானே மந்திரி கான்செப்ட்தான்,நாம என்ன நினைக்கிறோமோ
அதுதான் எழுத்து,நாம என்ன எழுதறோமோ அதுதான் படைப்பு.பத்திரிக்கை
உலகில் உள்ள படைப்பாளிகளை விட பதிவுலகில் உள்ள படைப்பாளிகளின்
எண்ணிக்கை அதிகமாக இருக்க இதுதான் காரணம்.

பத்திரிக்கைகளில் வந்த ஒரு கவிதையை படித்து விட்டு எங்க ஊர்க்காரர்
நல்லா ஜோக்கா இருக்குப்பா என்றார் ஊர்க்காரர்.. கவிதையே சிரிப்பா இருந்தா
ஜோக் எழுதுனா எப்படி இருக்கும்? என்று நினைத்து ஜோக் எழுத ஆரம்பித்தேன்.

மள மளவென ஜோக் எழுத ஆரம்பித்து கடந்த 18 வருடங்களில் நான் எழுதி
பிரசுரம் ஆனவை 9867 ஜோக்ஸ், 64 கவிதைகள், 8 சிறுகதைகள்,19 ஒரு பக்க
கதைகள்,87 சினிமா விமர்சனங்கள்,145 கட்டுரைகள்.
http://images.rottentomatoes.com/images/spotlights/2008/rtuk_feature_baillie_walsh_03.jpg
பதிவுலகில் என் பிளாக்கிற்கு ரெகுலராக கமெண்ட் போட்டு என்னை ஊக்குவித்தது ரமேஷ் ரொம்ப நல்லவன் சத்தியமா.என் மனதைக்கவர்ந்த எழுத்துக்கள் பன்னிக்குட்டிராம்சாமி,பட்டாபட்டி,சேட்டைக்காரன்,குசும்பன்.காரணம் அடிப்படையில் இவர்களும் காமெடியில் கலக்கலான படைப்புகளை தந்ததுதான்.

போட்டியும் ,பொறமையும் எல்லா படைப்பாளிகளுக்கும் வரும்.எனக்கும்
சிலரைக்கண்டு பொறாமை வரும்.பொறாமையின் விகிதம் அதிகம் ஆகும்போதெல்லாம் நான் ஹாஸ்பிடல்,சுடுகாடு,அநாதை இல்லங்கள் சென்று வாழ்க்கையின் நிலை இல்லாமை தத்துவத்தை எனக்கு நானே உணர்த்திக்கொண்டு என்னை நானே புதுப்பித்துக்கொள்வேன்.

பதிவுலகில் பழக்கம் ஆனவர்களை எல்லாம் நேரில் சந்திக்க வேண்டும் என்ற ஆவல் எழுந்துள்ளது காலம் அனைவரையும் சந்திக்க வைக்கும் என எதிர்பார்க்கிறேன். சவுந்தர் தமிழ்மணம் டாப் 20 இல் 10 வது இடம் பெற்றதும்.அதற்கு நன்றி சொல்லி ஒரு பதிவு போடலையா?என சவுந்தரிடம் கேட்டேன்.இதுக்கெல்லாமா பதிவு போடுவாங்க? என அவர் என்னையே திருப்பிக்கேட்டு சிரித்தார். நான் முதல் வாரம் தமிழ்மணம்
தர வரிசையில் 13வது இடம் பிடித்த போது செய்த அலப்பரைகளை நினைத்துப்பார்த்தேன். இதுல ரமேஷ் வேற  உசுப்பேத்தி தூண்டி விட்டாரு.

நாம் சந்திக்கும் ஒவ்வொரு மனிதர்களிடமும் கற்றுக்கொள்ள ஏதாவது இருக்கும் என்ற அறிஞர்கள் சொன்னது போல் நானும் பதிவுலகில் ஒவ்வொருவரிடமும் இருந்து ஏதாவது கற்றுக்கொண்டுதான் இருக்கிறேன்.

கலியுகம் தினேஷின் நண்பர் எழுதிய மைனா படத்தின் பாட்டு ஒன்றின் ரீமிக்ஸ் என் மனதைக்கவ்ர அதை இசை அமைப்பாளரும், தேநீர் விடுதி படத்தின் இயக்குநரும் ஆன எஸ் எஸ் குமரன் அவர்களிடம் அறிமுகப்படுத்தி வைத்தேன்.திரை உலகில், பத்திரிக்கை உலகில் உள்ள என் பழக்கம், நட்பு இவற்றை பயன்படுத்தி பதிவுலகில் உள்ள திறமைசாலிகளை ,நல்ல படைப்பாளிகளை ஊக்குவிக்கும் எண்ணம் உள்ளது. 

வழக்கம் போல் பதிவு நீளம் ஆகி விட்டதால் இத்துடன் முடித்துக்கொள்கிறேன்
தேவைப்பட்டால் இதன் அடுத்த பாகத்தை மீண்டும் எழுதுவேன்.இந்த தொடர்
பதிவுக்கு நான் அழைப்பது என் ஆதர்ச எழுத்தாளர்களான
பன்னிக்குட்டி ராம்சாமி,பட்டாபட்டி,சேட்டைக்காரன், ஆகியோரை.
குசும்பன் எனக்கு பழக்கம் இல்லை.எனவே அவரைத்தவிர மற்ற 3 பேரையும்
அழைக்கிறேன்.

Monday, January 10, 2011

கைவசம் சரக்கில்லாதபோது பதிவு போடுவது எப்படி?

http://www.freefoto.com/images/11/12/11_12_9---Compact-Disc_web.jpg?&k=Compact+Disc 
டிஸ்கி

டிஸ்கி 1 - பதிவை விட டிஸ்கி ரொம்ப நல்லாருக்குன்னு ஏகோபித்த ஆதரவு கிடைச்சிருக்கு. சரி சரி ரெண்டே ரெண்டு பேர் அப்படி சொன்னாங்க,1.கோமாளி செல்வா 2.விக்கி உலகம்காத்து வாங்கிட்டிருக்கற.படத்தோட பேப்பர் விளம்பரத்துல மக்களின் ஏகோபித்தஆதரவு பெற்ற அப்படின்னு விளம்பரம் போடறது இல்லையா?அந்த மாதிரி....(டேய் ,மரமண்டை..பதிவு நல்லாலைன்னு இதை விட நாசூக்கா எப்படி சொல்ல முடியும்?)

டிஸ்கி 2 - பதிவின் டைட்டிலில் 18+ அப்படின்னு போடறதுல 2 டேஞ்சர் இருக்கு.
ரொம்ப நல்லவங்க (?!) யாரும் பிளாக் பக்கம் வர்றதில்லை.அப்புறம் வர்றவங்க
அவங்க எதிர்பார்க்கற மேட்டர்(!!!)இல்லைன்னதும் ஏமாற்றம் அடைஞ்சு திட்டறாங்க. ஏ படத்துக்கு போய்ட்டு அதுல சீன் எதுவும் இல்லைன்னா சரி சரி அடுத்த டைம் பார்த்துக்கலாம்னு சமாதானம் அடையறதில்லையா..அப்படி ஒரு பக்குவத்துக்குநாம வந்துடனும்.

டிஸ்கி 3 - பொண்ணு பாக்கப்போறப்ப பொண்ணை விட பொண்ணோட தங்கச்சியோ, பொண்ணோட தோழியோ,(சில சமயம் பொண்ணோட அம்மாவோ)செமயா இருக்கும், அதை மனசுக்குள்ளயே வெச்சுக்கனும்,வெளில சொல்லக்கூடாது..அந்த மாதிரிதான்.. பதிவுங்கறது பொண்ணு மாதிரி..டிஸ்கி கொழுந்தியா மாதிரி (கண்டு பிடிச்சுட்டாருய்யா துரை)

டிஸ்கி 4 - போணி ஆகாத தமிழ்ப்படத்துல கதைக்கு சம்பந்தமே இல்லாம ஒரு
குத்தாட்ட பாட்டு வரும்.அது படத்துக்கு எக்ஸ்ட்ரா பூஸ்ட்..அந்த மாதிரிதான் பிளாக்ல போடற இமேஜ் (ஃபோட்டோ).சும்மா கிளாமருக்கு...ஆனா கமெண்ட் போடறவங்க 24 பேரா (PARAGRAPH)எழுதி இருப்பதைக்கண்டுக்காம ஸ்டில் சூப்பர்,ஃபோட்டோ அருமைன்னு கமெண்ட் போட்டு வெறுப்பேத்தறாங்க..

டிஸ்கி 5 - எப்படி கமெண்ட் போடறதுன்னு நானே சொல்லித்தர்றேன்.
ஆஹா பதிவு அருமை,இந்த மாதிரி மேட்டர் நான் எங்கேயும் படிச்சதே இல்லை.. எப்படி உங்களுக்கு மட்டும் இந்த மாதிரி எல்லாம் தோணுது..இப்படி டெம்ப்ளேட் கமெண்ட்டாபோடனும்..(ஹி ஹி ஹி )
http://upload.wikimedia.org/wikipedia/commons/0/04/Key_to_the_City_of_London,_Charles_Lindbergh.JPG
டிஸ்கி 6 - சினிமா விமர்சனம் போடறதை சிலர் நக்கல் அடிக்கறாங்க. அது எவ்வளவு பெரிய தியாகம்னு உங்களுக்கு தெரியுமா?ரெண்டரை மனி நேரம் ஒரு மொக்கைப்படத்தை பொறுமையா உக்காந்து பாக்கனும்.அதுக்கு ஒரு மணி நேரம் விமர்சனம் மாங்கு மாங்குன்னு எழுதனும்,அப்புறம் நல்ல ஸ்டில்லா தேடனும்.விமர்சனம் போட்ட பிறகு அந்தப்பட உதவி
இயக்குநர்களிடம் இருந்தோ,சினி ஃபீல்டு சம்பந்தப்பட்ட நபர்களிடம் இருந்து வரும் திட்டுக்களை எல்லாம் வாங்கனும்..நான் எவ்வளவு பெரிய தியாகி?ன்னு இப்பவாவது புரிஞ்சுக்குங்க..

டிஸ்கி7-அவ்வளவுகஷ்டப்பட்டுஏன்அந்ததியாகத்தைசெய்யனும்?அதுலயும்ஒருசுயநலம் இருக்கு.கவிதை,ஜோக்,சிறுகதை போன்ற படைப்பிலக்கியங்கள்
40% ஆதரவும் (ஹிட்ஸ்),அரசியல் சமூக விழிப்புணர்வு பதிவுகளுக்கு 60% ஆதரவும், வம்பு சண்டைக்குப்போய் அடுத்தவங்களை தாக்கி போடற பதிவுகளுக்கு 75% ஆதரவும் கிடைக்கறப்ப சினிமா சம்பந்தப்பட்ட பதிவுகளுக்குத்தான் 100% ஆதரவு கிடைக்குது,வாழ்க தமிழனின் ரசனை.

டிஸ்கி 8 - இந்த லட்சணத்துல ஹிட்ஸுக்கு நான் அலைகிறேனா?அப்படின்னு
ஏன் பதிவு போட்டேன்னா அன்னைக்கு நிஜமாவே என் கைவசம சரக்கில்லை.
சரி ,இதை வெச்சு அன்னைக்த்த (என்ன மோசமான ஒரு  சொல்லாடல்?)பொழுதை ஓட்டிடலாம்னுதான்.

டிஸ்கி 9 -என் மேல சொல்லப்படற சில குற்றச்சாட்டுக்கள் என்னன்னா நான்
சில சமயம் மத்தவங்க பிளாக்ல கமெண்ட்ஸ் போடறப்ப இங்கிலீஷ்ல போடறேன்.அது ஏன்னா நான் காலைல,நைட்ல மட்டும்தான் வீட்ல இருந்து நெட் யூஸ் பண்றேன், பகல் டைம்ல ஃபீல்டுல இருக்கறப்ப (ஆன் டியூட்டி) நெட் செண்ட்டர்ல இருந்துதான் கமெண்ட் போடறேன்,தமிழ் ஃபாண்ட் இருக்காது...

டிஸ்கி 10 - என் பிளாக்ல கமெண்ட்ஸ் போடறவங்க அதுக்கான பதில்
கமெண்ட்ஸை மறுபடி அன்னைக்கு நைட்டோ அடுத்த நாள் காலைலயோ
வந்து பாத்துக்குங்க..(ரிப்பீட் ஆடியன்ஸை வரவழைக்க இப்படி ஒரு ஐடியாவா?)

டிஸ்கிக்கே ஒரு டிஸ்கி - இன்னைக்கு ஏன் எந்த மேட்டரும் இல்லாம ,வெறும்
டிஸ்கியாவே போட்டு கொல்றேன்னு பாக்கறீங்களா? ஹி ஹி இன்னைக்கும்
கைவ்சம சரக்கில்லை. DISC + KEY = DISKY (ஃபோட்டோவுக்கு விளக்கம்)

நேத்து நெட் பக்கமே வராதவங்களுக்கும், எப்போ பாரு மொக்கை பதிவாவே போடறியே, உருப்படியா என்னைக்காவது எழுதி இருக்கியா? என திட்டுபவர்களும் படிக்க

பெண்மையை கேவலப்படுத்தும் BSNL-ன் அத்து மீறிய விளம்பரம்