Showing posts with label நையாண்டி. Show all posts
Showing posts with label நையாண்டி. Show all posts

Monday, April 29, 2019

அரசியல் அனுபவம் கலைஞர் ஜெ கேப்டன், , நையாண்டி , செய்தி கமெண்ட்

1 வறுமை ஒழிக்கப்படும் என்று வாக்குறுதி கொடுத்த  இந்திரா,காந்தி , 20 அம்ச திட்டங்களை செயல்படுத்தினார். ஆனால், காங்., வறுமையை ஒழிக்கவே இல்லை.-நிதின் கட்கரி  # அரசியல் வாதிகள் ஆட்சிக்,கு வந்தால் வறுமையை ஒழிப்போம்னு சொல்றது அவங்களோட வறூமையை, ஜனங்களோடதுனு நினைச்சா அது நம்ம  அறியாமை

==================


2  கடந்த ஐந்து ஆண்டுகளில், மோடி, மக்களுக்காக ஒரு துரும்பைக் கூட கிள்ளிப் போடவில்லை. நாட்டின் பொருளாதாரம் வீழ்ச்சி அடைவதற்கு, அவர் காரணமாக இருந்துள்ளார்.-தமிழக காங்., தலைவர், கே.எஸ்.அழகிரி  # ஜிஎஸ்டி , பணமதிப்பிழப்பு ?


==================


3  . இதுவரை நடந்த தேர்தல்களில், எதிர்க்கட்சிகள் மீது, வருமான வரித் துறையை கட்டவிழ்த்து, ஏவியது கிடையாது. இந்தியாவில், இதுவே முதல் முறை.-துரைமுருகன்  # அந்த தைரியத்துலதான் பணப்பட்டுவாடா நடத்த முடிவு எடுத்தீங்களா?-


எதற்கும் ஒரு ஆரம்பம்   வேணுமில்ல/?


===================



4   : முதல்வர், இ.பி.எஸ்., தேர்தல் பிரசாரத்தில், நாகரிகமாக, அன்பாக, மக்களை கவரும் வகையில் பேசினார்.-ராஜேந்திர பாலாஜி # ஒரு சீப்பு வாழைப்பழத்துக்கு 2000 ரூபா தந்தது ஓவர் அன்புங்கோ


================


5  இந்தத் தேர்தல், கன்னியாகுமரி மாவட்டத்தை பொறுத்தவரை, தொகுதி முழுவதும், மவுனப் புரட்சி நடந்துள்ளது.-பொன்.ராதா  #  40% பேர் ஓட்டுப்போடலை, சைலண்ட் மோடுல செல்  ஃபோனை வெச்ட்டா அதுக்குப்பேரு மவுனப்புரட்சியா? 


===================



விழிப்புணர்வு பிரச்சாரங்கள் செய்தும் சென்னையில் வாக்குப்பதிவு குறைந்தது: கடைசி இடத்துக்கு சென்ற மயிலாப்பூர் பேரவைத் தொகுதி  # எழுதுனவன் ஏட்டைக்கெடுத்தான், படிச்சவன் பாட்டைக்கெடுத்தான்கற கதை தான் பாமரர்கள் தவறாம வாக்களிச்சடறாங்க, படிச்சவங்க தான் டி வி பாத்துட்டு வீட்லயே இருந்துடறாங்க 



================


‘ஹேக்கிங்’ தொழில்நுட்பத்தை பயன்படுத்துவதால் திணறும் சைபர் கிரைம்: போலீஸார் வங்கி கணக்கில் பணத்தை திருடும் மோசடி கும்பல் # ஜனங்க கிட்டே திருடுனா போலீஸ் கிட்டே புகார் தரலாம், போலீஸ் கிட்டேயே ஆட்டையைப்போட்டா யார் கிட்டே புகார் தர?


===================
8

தமிழகத்தில் நடந்து முடிந்த தேர்தலில் ஓட்டுக்கு பணம் கொடுப்பதை தடுப்பதே பெரும் சவாலாக இருந்தது: - தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹு # அதையும் மீறிப்பணப்பட்டுவாடா நடந்திருக்குன்னா அரசியல்வாதிங்க எவ்ளோ டேலண்ட்?



================

வாக்களித்த மக்களுக்கு பாஜக அரசு துரோகம் செய்துவிட்டது: பிரியங்கா காந்தி சாடல்  # வாக்குக்கு பணம் பட்டுவாடா பண்ணலையா?


=============


10  

வேகத்தடை’ மம்தா பானர்ஜி தூக்கமின்றி தவிக்கிறார்: மேற்குவங்க கூட்டத்தில் மோடி பேச்சு #   கமல் வீட்ல கரணட் கட் பண்ணி விட்ட மாதிரி மம்தா வீட்லயும் கரண்ட் கட் பண்ணி விட்டுட்டாங்களா? ஃபேன் இல்லாம எப்படி தூங்குவாரு?




================

11  பண மதிப்பிழப்பு செய்யப்பட்டபோது, பாதிக்கப்பட்ட நீங்கள், இந்த தேர்தலில், சரியான பதில் அளிக்க வேண்டும்.-மம்தா பானர்ஜி:   # சாரதா சிட்பண்ட்ஸ் ல பணம் போட்டவங்க, பணம் இழந்தவங்க சரியான பதில் கொடுக்கனும்னு அவங்க பிரச்சாரம் பண்ணுவாங்களோ?


================

12  தேர்தல் ஆணையத்தின் பணிகள், ஓரளவு திருப்தி அளித்தன. மேலும் விமர்சனம் செய்ய விரும்பவில்லை-பொன்.ராதா  # அதென்ன ஆத்துல ஒரு கால் சேத்துல ஒரு கால், விமர்சனம் பண்ணா முழுசா பண்ணீடனும்

=============


13   இந்த லோக்சபா தேர்தலில், வெற்றி பெறுவோம் என்பதில் மிகுந்த நம்பிக்கையுடன், நாங்கள் உள்ளோம்-அஹமது படேல்:  # அவ்ளோ நம்பிக்கை இருந்தும் ராகுல் ஏன் அமேதி வைய நாடுனு 2 குதிரை,ல  சவாரி பண்றாரு?

=================


14  இந்தியாவை நாம் பாதுகாக்க வேண்டும் என்றால், மோடியை மீண்டும் பிரதமராக்க வேண்டும். பாகிஸ்தானுக்கும், பயங்கரவாதிகளுக்கும் தக்க பதிலடி கொடுக்க வேண்டும்-அமித் ஷா #இந்தியாவுக்கு என்ன செஞ்சோம்னு சொல்லி ஓட்டு கேளுங்க , சும்மா பாகிஸ்தான், செங்கிஸ்காண்ட்டு

===============


15  மத்திய அரசும், பிரதமர் மோடியும் யாருக்கும் தொந்தரவு கொடுப்பதில்லை.- அமைச்சர் ராஜ்நாத் சிங்  # எதிர்க்கட்சிகள் வீட்ல மட்டும் ரெய்டு விடறாரே? அது தொந்தரவு தானே?


=================


16  லோக்சபா தேர்தலின் போது, ம.தி.மு.க.,வை ஆதரித்து பிரசாரத்தில் ஈடுபட்டதற்காக, ஸ்டாலினுக்கு நன்றி. -வைகோ #  நீங்க 2 பேருமே ஒரே கூட்டணில எண்ட்ரி,  ஒரே கண்ட்ரி ,உங்களுக்குள்ள எதுக்கு நன்றி?

===========

17 வெற்றி வாய்ப்பு பிரகாசமாக உள்ளது என்பதே எங்களின் கணிப்பு-வைகோ  #  வாக்காளர்களுக்கு பணம் யாரு  அதிகம் கொடுத்தாங்களோ அவர்களுக்கே வெற்றி வாய்ப்பு பிரcashசமாக இருக்குமாமே?.

==================


18 மோடி மீண்டும் பிரதமரானால், ஜனநாயகம் அழிந்துவிடும்.-சித்தராமையா # காங் ஆட்சிக்கு வந்தால் பணநாயகம் தழைத்தோங்கும்?


==================


19  வாரணாசி தொகுதியில் மோடியை எதிர்த்து போட்டியிட தயார்: பிரியங்கா  #  ராகுல்க்கு ஒரு வையநாடு ம்ாதிரி மோடிக்கு  ஒரு ஆல்ட்டர்நேட் தொகுதி ரெடி பண்ணனும் போல 


==============


20  'கூட்டணி குறித்து பேசி, எங்கள் நேரத்தை காங்கிரஸ் வீணடித்து விட்டது' -, ஆம் ஆத்மி # விடாதீங்க, நீங்களும் எதுனா பேசி அவங்க நேரத்தை வீணடிங்க, தானிக்கு தீனி , இதுதான் லேட்டஸ்ட் பாணி


==================






வேடிக்கை என் வாடிக்கை

1   

பிளஸ் 2 பொதுத்தேர்வில் 91.3 சதவீத தேர்ச்சி- திருப்பூர் மாவட்டம் முதலிடம் #  திருப்”பூரிப்பு?”



 திருப்பூரில் படிச்சா திருப்பம்?


பனியன் சிட்டி இனி கல்விப்பணியன் சிட்டி?

==
===============


குஜராத்தில் நிறுவப்பட்டு உள்ள, உலகின் உயரமான சர்தார் வல்லபாய் படேல் சிலையை காங்கிரஸ் தலைவர்கள் இதுவரை பார்வையிடாதது ஏன்? - மோடி  # பாஜக ஆட்சியில் அமைக்கப்பட்டதை காங்கிரஸ்காரங்க எப்படி பார்க்க மேலிடம் அனுமதிக்கும்?

==============

3   அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தை கட்சியாக பதிவு செய்ய 6 சதவீதம் வாக்குகள் தேவை. ஆனால் தேர்தலில் அது கிடைக்காது. ஒன்று அல்லது 2 சதவீத வாக்குகள் மட்டுமே கிடைக்கும்.
எனவே அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் கடைசி வரை குழுவாக மட்டும் செயல்படவே வாய்ப்பு உள்ளது=அமைச்சர் ஜெயக்குமார் #

20 ரூபா டோக்கன் கொடுத்து பதிவு பண்ணவும்  முடியாது , பாவம் , என்ன பண்ணப்போறாங்களோ?

================
கடனை செலுத்த முடியாத விவசாயிகளை சிறைக்கு அனுப்பமாட்டோம் - ராகுல் காந்தி - எங்கள் ஆட்சியில் விவசாயிகளுக்கு கடனே கொடுக்க மாட்டோம்னு சொல்லலை, நல்ல வேளை


==========

கள்ள ஓட்டு பதிவானதால் ‘சர்கார்’ பட பாணியில் ஓட்டுப்போட்ட வாக்காளர்கள் # மத்தியில் சர்கார்  மாறுமா? அதே சர்கார் மீண்டும் வருமா?


=================


6 சட்டமன்ற தேர்தல் எப்போது வந்தாலும் சந்திக்க தயார்!” நடிகர் ரஜினிகாந்த் உறுதி!  


மறுபடியும் முதல்ல இருந்தா? தலைவா


 ஓட்டுப்போடவா?


போர் வரும்போது பார்த்துக்கலாம்கறாரு , போர் எப்போ வந்தாலும் சந்திக்கத்தயார்ங்கறாரு , குழப்பமா இருக்கே?

 கமலிக்குக்கிடைத்த வரவேற்பு  தந்த தெம்போ?



================

7  'நீட்' தேர்வை முன்மொழிந்த, காங்., கட்சியின், தற்போதைய தலைவர் ராகுல், தமிழகத்துக்கு விதிவிலக்கு அளிக்கலாம் என, குறிப்பிடுகிறார். இது, வேடிக்கையாக உள்ளது.-செங்கோட்டையன்   # வேடிக்கை என் வாடிக்கை - ராகுல்

================

8   'நீட்' தேர்வு -இந்தியா முழுவதும், ஒரே சட்டம் தான் நிறைவேற்றப்பட்டு உள்ளது. உச்ச நீதிமன்ற தீர்ப்பும், அப்படித்தான் வழங்கப்பட்டுள்ளது.-செங்கோட்டையன் : # இது “நீட்:டான அறிக்கை


-==================]


9  தேர்தல் ஆணையம், அ.தி.மு.க., - பா.ஜ., அணியின், 'தேர்தல் ஏஜன்ட்' போல் செயல்படும் போக்கை, கைவிட வேண்டும்.-கே.பாலகிருஷ்ணன்  #   காங் கூட்டணீக்கட்சியா இருந்துட்டு “கை” விட வேண்டும்னு அபசகுனமா சொல்றாரே? ஜனங்க கைச்சின்னத்தை கை விட்றப்போறாங்க

=================

10    eதிர்க்கட்சி நிர்வாகிகள் வீடுகளில் மட்டும், சோதனை என்ற பெயரில், தேர்தல் ஆணையத்தால் நடவடிக்கை எடுக்கப்படுகிறது.-கே.பாலகிருஷ்ணன் $ ஆஃபீஸ் , கம்பெனிலயும் ரெய்டு வரனுமோ?


==============


 11 எதிர்க்கட்சித் தலைவர்கள், வேட்பாளர்கள் வீடுகளில் சோதனை நடத்துவதால், பொது மக்கள் மத்தியில், அ.தி.மு.க., - பா.ஜ., அணியின் மீது கோபாவேசம் அதிகரிக்குமே தவிர, அவர்களுக்கு பயன் தராது. -கே.பாலகிருஷ்ணன் # அவங்களூக்குதான் பயன் தராதில்ல,? அப்றம் ஏன் கவலைப்படறீங்க? லூஸ்ல விடுங்க 


===============

12  இந்த லோக்சபா தேர்தலில், இளைஞர்கள், முதியோர், முதல்முறையாக ஓட்டளிப்பவர்கள் உட்பட அனைவரும், ஆர்வமாக ஓட்டுச்சாவடிக்கு வந்து ஓட்டளிப்பது, மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.- நிர்மலா சீதாராமன் # பொதுவா வாக்கு பதிவு சதவீதம் அதிகரிச்சா ஆளுங்கட்சிக்கு எதிரான அலைனு சொல்வாங்க

================


13   எதிர்க்கட்சிகள் பெரிய கூட்டணி அமைத்தாலும், அவர்களுக்கு, மக்கள் ஆதரவு தரவில்லை. -நிர்மலா சீதாராமன்  # ஆதரவு தர்லைனு இப்பவே எப்படி சொல்ல முடியும்? ரிச்ல்ட் வந்தாதானே தெர்யும்?


===============


14 நிரந்தரமாக ஆட்சி அளிப்பவர்களையே, மக்கள் விரும்புகின்றனர்.-நிர்மலா சீதாராமன்  # அப்போ காங் டெம்ப்ரவரி கவர்ன்மெண்ட், [ பாஜக  பர்மனெண்ட்டா?


=================


15   நேருவில் துவங்கி, காங்கிரசில் நான்கு தலைமுறைகளாக இருந்த தலைவர்கள், வறுமையை ஒழிப்பதாக வாக்குறுதி அளித்தனர். ஆனால், அவையெல்லாம் பொய்யாகின  -நிதின் கட்கரி #   வறூமையை ஒழிச்சுட்டா அடுத்த தேர்தல்ல வறூமையை ஒழி[ப்போம்னு வாக்கு தர முடியாதே>


நீங்க ஆட்சிக்கு வந்த 5 வருஷத்துல் வறூமையை ஒழிச்சாச்சா?



===================

  16  இன்னும், 15 நாட்களில், உள்ளாட்சி தேர்தல் குறித்த அறிவிப்பு வரும்; இதே கூட்டணி தொடரும்.-பிரேமலதா: #  பிரேமலதா தான் தமிழக முதல்வரா?நான் கூட ஈபிஎஸ்னு நினைச்ட்டேன்


இதுக்கு எதுனா பரிகாரம் இருக்குங்களா?


 என்ன > மிரட்றாரு?


==================


17   தேர்தல் ஆணையம், மத்திய அரசுடன் கூட்டணி அமைத்து செயல்படுகிறது; இந்த நிலை மாற வேண்டும் -ஸ்டாலின்  # எப்படி” தேர்தல் ஆணையம்,  எதிர்க்கட்சியுடன் கூட்டணி அமைத்து செயல்படனுமா?



நீங்க ஆளுங்க்ட்சியா இருந்தப்போ என்ன செஞ்சீங்களோ  அதை இப்ப இவங்க  செய்யறாங்க


===================


18  உண்மையான அ.தி.மு.க., தொண்டர்கள் அனைவரும், எங்களிடமே உள்ளனர்  -சி.ஆர்.சரஸ்வதி: # சரஸ்வதி குடி இருகற இடத்துல செல்வ்ம் குடி இருக்காதாமே?ஆனா அமமுக ல பணம் வாரி இறைக்கறாங்களே?


இதையே தான்  ஜெ தீபா சொன்னாங்க , இப்போ அதிமுக கூட இணையலையா?


=====================


19   உ.பி., முதல்வர் யோகி ஆதித்யநாத், 72 மணி நேரம் பிரசாரம் செய்யக் கூடாது என, தேர்தல் ஆணையம் தடை விதித்து உள்ளது. ஆனால் அவர், தலித் மக்கள் வீடுகளில் உணவு வாங்கி சாப்பிடுகிறார். கோவில்களுக்கு சென்று மக்களை சந்திக்கிறார். ஆணையம் ஏன் கண்டு கொள்ளவில்லை?-மாயாவதி:  #  பிரச்சாரம்தானே பண்ணக்கூடாது? ஹவுஸ் அரெஸ்ட்ல இருக்கச்சொல்லலையே?


===================


20   காங்., பிடியில் இருந்து இந்த நாடு என்றைக்கு விடுதலை அடைகிறதோ, அன்றைக்கு, வறுமை தன்னால் ஒழிந்துவிடும்-  மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்: # கடந்த 5 வருசமா நடந்தது பாஜக ஆட்சி தானெ? வறுமை ஒழியலையே?


================

Monday, April 15, 2019

தங்கைக்கோர் கீதம் பாடறப்போ ராகம் தாளம் பல்லவி பாடறாரே?

சென்னை - சேலம் எட்டு வழி சாலை வழக்கில், தீர்ப்பு வந்துள்ளது. :  விவசாயிகள் நலனை காக்கும் வகையில், அந்த முடிவு இருக்கும்-ஜெயகுமார்  # 8 வழி சாலையே விவசாயிகளின் ஜாதகத்தில் அஷ்டமத்துல சனிதானே?


================

2  : சென்னை - சேலம் எட்டு வழி சாலை வழக்கில், தீர்ப்பு வந்துள்ளது. தீர்ப்பு நகல் கிடைத்த பின், அரசு உரிய முடிவு எடுக்கும்.-ஜெயகுமார்  # நகல் கிடைத்த பின் அரசின் அசல் முகம் தெரிய வரும்?

==============\\

3 விவசாயிகள் நலனை காக்கும் வகையில், அந்த முடிவு இருக்கும்-ஜெயகுமார்

முதல்வர் கூட ஒரு விவசாயிதான், அவரோட நலனைக்காக்கும் விதமா இருக்குமோ?

==============


4    : தமிழிசைக்கு வேறு தொகுதி கிடைக்கவில்லையா? - ஸ்டாலின்  # அதானே? க்ரெக்டா தங்கைக்கோர் கீதம் பாடறப்போ  ராகம் தாளம் பல்லவி பாடறாரே?


===============

ஸ்டெர்லைட் உள்ளிட்ட பல பிரச்னைகள் உள்ள துாத்துக்குடியில், தோற்பதற்காகவே, அவர் நிறுத்தப்பட்டதாக தெரிகிறது. தமிழிசைக்கு எதிராக, பா.ஜ., சதி செய்துள்ளது-ஸ்டாலின் # எங்களுக்கென்னவோ உங்க தங்கைக்கு எதிரா நீங்க சதி செய்யறிங்களோனு தோணுது


=================

6  நாங்கள், ஜெயலலிதாவின் ஆன்மாவிற்கு பயந்து, மக்களுக்கு நல்ல திட்டங்களை செயல்படுத்தி வருகிறோம்-ஓபிஎஸ்

சிவாஜி , கமல் ரேஞ்சுக்கு பின்னிப்பெடல் எடுக்கறாரே?


அப்போ மக்கள் கேள்வி கேட்பாங்க அப்டிங்கற பயம் எல்லாம் இல்ல?


=================


7    பா.ஜ., மதவாத கட்சி என்றால்,  ஸ்டாலின், 'ஹிந்துக்களுக்கு நாங்கள் எதிரி இல்லை' என்கிறார்.-தினகரன் # தேர்தல் முடியும் வரை இந்துக்களுக்கு எதிரி இல்லை என திருத்தி வாசிக்கவும்


=============


8  எங்கள் குடும்பத்திலும், கோவிலுக்கு செல்கின்றனர்' என, பா.,ஜ.,வினர் போல் பேசுகிறார் ஸ்டாலின்,. இதன் மூலம், தி.மு.க., கூட்டணி, மதசார்பற்ற கூட்டணி இல்லை; அது, பா.ஜ.,வின், அடுத்த பிரிவு எனத் தெரிகிறது= தினகரன்  # தூத்துக்குடில போட்டி இடற கனிமொழி தூத்ஹ்டுக்குடில பிரச்சாரத்தை ஆரம்பிக்காம அருகில் இருக்கும் திருச்செந்தூர் முருகனை வழிபட்டு பிரச்சாரத்தை ஆரம்பிக்கலையா?


=============


9  நேற்று வரை, ஆட்சி மீது புகார் கூறி வந்த, பா.ம.க., - தே.மு.தி.க., போன்ற கட்சிகள், மக்களை மறந்து, பதவிக்காக, அ.தி.மு.க.,-வுடன், கூட்டணி அமைத்திருக்கின்றன.- செ.கு.தமிழரசன் # அப்போ அவங்க ஜெயிச்சிடுவாங்கனு ஒத்துக்கறீங்களா?


===============


10   குத்துச் சண்டையில், ஒரு போட்டியாளரின் கை, கால்களை கட்டி போட்டுவிட்டு, மற்றொரு போட்டியாளர் வெற்றி பெற்றதாகக் கூறுவதை எப்படி ஏற்க முடியாதோ, அதேபோல் தான், எங்கள் வீட்டில், வருமான வரித்துறை சோதனை நடத்திவிட்டு, தேர்தல் பணிகளை அடியோடு முடக்கிவிட்டு, எங்களை வீழ்த்தி விட்டோம் எனக் கூறுவது, நியாயமாக இருக்காது  -துரைமுருகன் # அப்போ ரெய்டில் கைப்பற்றப்பட்ட பணம் உங்களுதுதான்னு ஒத்துக்கறீங்களா?


============:
11  . பூஜ்ஜியத்திற்கு உள்ளே ஒரு ராஜ்ஜியம் என, ஸ்டாலின் வாழ்ந்து வருகிறார். வெளியே வந்து பார்த்தால், பா.ஜ., சதம் அடித்திருப்பது, அவருக்குத் தெரியும்.-பொன்.ராதா  # 100 தொகுதிதான் பாஜக வுக்கு கிடைக்கும்னு அர்த்தமா?


==============



12  'லாலுவுக்கு, 27 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. 'ஆனால், லாலு சிறையில் இருந்தது, 24 மாதம் தான். எனவே, 'ஜாமின்' வழங்க முடியாது-நீதிபதிகள்  # அப்போ இன்னும் 3 மாசம் கழிச்சு 27 மாசம் ஆனதும் ஜாமீன் விடுவாங்களா? தேர்தலே முடிஞ்சிடுமே? எப்படி பிரச்சாரம் பண்ணுவாரு?



==================


13  ஊழல் செய்வதற்காகவே ஆட்சிக்கு வரத் துடிக்கிறது காங்கிரஸ்: மோடி # ஆட்சி செய்வது என்றாலே ஊழல் செய்வது என்றுதான் அர்த்தம்கறாரா?


=================


14  ரூ. 38 ஆயிரம் கட்டண பாக்கி வருண் மீது பி.எஸ்.என்.எல்., புகார் # வரும் வரும்  வெய்ட் பண்ணுங்க - வருண்


================



15  துரைமுருகன் மகன் மீது வழக்கு: எந்நேரமும் கைதாக வாய்ப்பு  $ ப  சிதம்பரத்துக்கு அடுத்து குடும்பத்தோட ஜெயிலுக்குப்போன அரசியல்வாதில இவர் பேரும் வருமோ?


==================

16   தி.மு.க., ஹிந்து விரோதக் கட்சி' என, சிலர் கூறுகின்றனர். -ஸ்டாலின்  #எப்பவும் எதிரினு சொல்லிட முடியாது  , தேர்தல் வரும்போது நண்பர்கள்தான் , அவங்க ஓட்டு வேணுமில்ல?


============


 17  ஹிந்து மதம், பா.ஜ.,வுக்கு மட்டும் சொந்தமானதல்ல. ஹிந்துக்களைப் பாதுகாப்பதாகக் கூறி, பா.ஜ.,வினர் நாடகமாடுகின்றனர். எந்தவொரு ஜாதி, மதத்திற்கும், தி.மு.க., எதிரானதல்ல. -ஸ்டாலின் #  அப்போ கலைஞர் டிவி ;ல  இந்துப்பண்டிகைகளுக்கு விடுமுறை தின சிறப்புத்திரைப்படம் போடுவது ஏன்? இந்துப்பண்டிகைகளுக்கு மட்டும் வாழ்த்துக்கூறாதது ஏன்?

==================


18  சமுதாய நலனை பேணிக் காக்கும் கடமை கொண்ட இயக்கம். மதசார்பற்ற அரசு மத்தியில் உருவாக வேண்டும். அதேநேரம், எல்லா மதத்தினரையும் அரவணைத்துச் செல்ல வேண்டும் என்பதே, எங்கள் எண்ணம்.-ஸ்டாலின்   # நிச்சயம், அப்போத்தானே எல்லா மத ஓட்டுகளும் கிடைக்கும்?


=====================


19  கர்நாடகாவில், காங்., வேட்பாளருக்கு ஆதரவாக பிரசாரம் செய்தபோது, நடிகை குஷ்புவை, கூட்டத்தில் இருந்த இளைஞன் சில்மிஷம் செய்தான். ஆவேசமடைந்த குஷ்பு, அந்த இளைஞன் கன்னத்தில் ஓங்கி அறைந்தார் # கன்னத்துல வை அப்டினு அந்த  இளைஞர் பாடி இருப்பாரோ? அதான் பளார்னு வெச்ட்டார்


================


20  மோடியின் புஜபல பராக்கிரமம் என்ன என்பது இந்த தேர்தலில் முழுவதுமாக தெரிந்து விடும்-ராகுல் # நடப்பது தேர்தலா? குஸ்திப்போட்டியா?


=================

Sunday, April 14, 2019

திட்டத்திட்ட திண்டுக்கல்

: சென்னை - சேலம், எட்டு வழிச்சாலை தொடர்பான, உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து, மத்திய, மாநில அரசுகள், மேல்முறையீடு செய்யக் கூடாது. விவசாயிகளின் உரிமைகளை பாதுகாப்பதற்காக, உச்ச நீதிமன்றத்தில், என் சார்பில், 'கேவியட்' மனு தாக்கல் செய்யப்படும் -அன்புமணி  # நம்ம கூட்டணிக்கட்சி தானே? நேருக்கு நேரா சொல்லலாமே?


=============


2   என் கொள்ளு தாத்தா நேரு, பாட்டி இந்திரா, பெரியப்பா ராஜிவ் ஆகியோர், இதற்கு முன், பிரதமர்களாக பதவி வகித்துள்ளனர். அவர்களை விட, தற்போதைய பிரதமர் மோடி தான், சர்வதேச அளவில், நம் நாட்டுக்கு அதிக பெருமை சேர்த்துள்ளார் - *பா.ஜ., - எம்.பி., வருண்:   # ஜால்ரா சத்தம் ஜாஸ்தியா இருக்கே?



==================


3    தமிழகத்தில், அ.தி.மு.க.,வை மிரட்டி, பா.ஜ. கூட்டணி அமைத்துள்ளது -இ.கம்யூ., தேசிய செயலர் சுதாகர் ரெட்டி: # மிரட்டலான படம்னு திகில் , பேய்ப்படங்களுக்கு விளம்பரம் தர்றது மாதிரி இது ஒரு அரசியல் மிரட்டல் கூட்டணிங்கறீங்களா?


===================


4   பா.ஜ., இருக்கும் அணிக்கு, த.மா.கா., தலைவர் வாசன் சென்றது, வேதனைக்குரியது. இதை, எந்தவொரு உண்மையான காங்கிரஸ்காரனும், ஏற்றுக் கொள்ள மாட்டான்.=கார்த்தி சிதம்பரம்   # ஜனங்க  ஏத்துக்கிட்டாப்போதாதா?
============

 5  த.மா.கா.,வுக்கு, சைக்கிள் சின்னம் கிடைத்ததில், எனக்கும் பங்கு உண்டு. சைக்கிள் சின்னம், கவுரவமானது. அந்தச் சின்னம் இப்போது, அவர்களுக்குக் கிடைக்காததில் மகிழ்ச்சி -கார்த்தி சிதம்பரம் - என்ன ஒரு நல்ல எண்ணம், அடுத்தவனுக்கு ஒரு கஷ்டம்னா நமக்கு சந்தோஷம்



===============


6    சேலம் எட்டு வழிச்சாலை திட்டத்திற்கு, உயர் நீதிமன்றம் தடை விதித்துள்ளது, பின்னடைவு கிடையாது. இது சம்பந்தமாக, அரசு மேல்முறையீடு செய்யும் -  ராஜேந்திர பாலாஜி # மேல்முறையீட்டிலும் அந்த திட்டத்துக்கு பால் ஊத்திட்டாங்கன்னா? என்ன ப்ன்றது? பால்வளத்துறை அமைச்சரே?


===============

7    தொழில் துறை வளர்ச்சிக்கு, சாலை வசதி மிகவும் அவசியம். அடுத்தக்கட்டமாக, கூட்டணிக் கட்சி தலைவர்களை அழைத்துப் பேசி, யாரும் பாதிக்காத அளவுக்கு, முதல்வர் முடிவெடுப்பார்   -ராஜேந்திர பாலாஜி   # விவச்சாயிகள் பாதிக்காதவாறு சொல்றீங்களா? கூட்டணிக்கட்சிகளை கவனிக்கறதுல பாதிப்பு இல்லாம செட்டில்மெண்ட்டா?


==============


அரசியல் களம் எனக்குப் புதிது. முதலில் நான், கள நிலவரத்தைப் புரிந்து கொள்ள வேண்டும். அடுத்த முறை நான், வேட்பாளராகக் களமிறங்க வேண்டும் என்றால், இம்முறை நான், மக்களைச் சந்தித்து, அவர்களைப் பற்றித் தெரிந்து கொள்ள வேண்டும்; என்னையும், மக்கள் புரிந்து கொள்ள வேண்டும். ஆகவே, தலைவர் முடிவு எடுப்பதற்கு முன், இம்முறை நான் போட்டியிடவில்லை என்ற என் நிலைப்பாட்டை, அவரிடம் தெரிவித்து விட்டேன்  -    ஸ்ரீபிரியா # அப்போ சட்டமன்றத்தேர்தல்ல நிச்சயம் சீட் கேட்பாருன்னு இப்பவே துண்டு போட்டுட்டாரு


==============


 தி.மு.க., வெளியிட்டுள்ள தேர்தல் அறிக்கை, ஹீரோ. காங்., தேர்தல் அறிக்கை, சூப்பர் ஹீரோ.-   ஸ்டாலின் # அப்போ காங்கிரசை விட திமுக ஒரு மாற்று கம்மினு ஒத்துக்கறாரா?


===============



10   பா.ஜ., வெளியிட்டுள்ள தேர்தல் அறிக்கையில், மக்களுக்கு பயன்படும் எந்தத் திட்டங்களும் இல்லை. மோடி வெளியிட்டுள்ள தேர்தல் அறிக்கை, ஜீரோ. இந்தத் தேர்தலில், மத்திய, மாநில அரசுகளை, வீட்டுக்கு அனுப்ப வேண்டும். -ஸ்டாலின்


கணக்குல ரொம்ப முக்கியமான எண்  ஜீரோ தான்னு அவங்க வாதிடுவாங்களா?


=================

11   துரைமுருகன்: என் வீட்டில் நடத்தப்பட்ட, வருமான வரி சோதனையின் போது, என் மகன் கதிர்ஆனந்தை கழிப்பறைக்கு செல்லவோ, காபி குடிக்கவோ அதிகாரிகள் அனுமதிக்காமல் அலைக்கழித்தனர்.- துரைமுருகன்:# துரை முருகனை CRYமுருகன் ஆக்கீட்டாங்க போல


ஆளுங்கட்சியின் மிரட்டலுக்கு அஞ்ச மாட்டோம்னு வீரவ்சனம் எல்லாம் பேசுனிங்க?4 மணி நேரம் காபி குடிக்காம கூட இருக்க முடியல, நீங்க எல்லாம் எப்படி மக்கள் நலனுக்காக உண்ணாவிரதம் இருக்கப்போறீங்க?


=================


12  கடந்த, 2011ல், அ.தி.மு.க.,வுடன் கூட்டணி வைத்தது தான் தவறு. அன்று வைக்காமல் இருந்தால், விஜயகாந்த் தான் இன்று முதல்வராக இருந்திருப்பார் -பி ரேமலதா: #  இன்னும் 2 வருசம் கழிச்சு 2019 ல் கூட்டணி வைத்தது தவறு , தனியாக நின்றிருந்தால் விகாந்த் தான் பிரதமர் ஆகி இருப்பார்னு சொல்வாரோ?


====================


13 வேட்பாளர்களுக்கு ஆரத்தி எடுப்பதை, தேர்தல் ஆணையம் தடுக்க வேண்டும்- தமிழக, காங்., தலைவர், கே.எஸ்.அழகிரி:  #ஆமாங்க , ஆரத்தி எடுத்தா காணிக்கை போடனும், தண்டச்செலவு


==================


14    தி.மு.க., கூட்டணியில், பா.ம.க., சேரவில்லை என்ற கோபத்தில், தேர்தல் பிரசாரத்தில் என்னை, திட்டித் தீர்க்கிறார், ஸ்டாலின்.-ராமதாஸ் # திட்டத்திட்ட திண்டுக்கல்னு போய்க்கிட்டே இருங்க



================


15  தி.மு.க.,வில் இருந்து, எம்.ஜி.ஆர்., எப்போது வெளியே போனாரோ, அப்போதே, தி.மு.க., அழிந்துவிட்டது-ராமதாஸ்  # அப்போ நாம ஏன் அழிந்து போன கட்சியோட கூட்டணி வெச்சோம்?


================


16  இன்று, அ.தி.மு.க., பெரிய கட்சியாக வளர்ந்து இருப்பதற்கும், தி.மு.க.,வினர் தான் காரணம்-ராமதாஸ்   # அப்போ நீங்க அதிமுக கூட கூட்டணி வெச்சதுக்கும் திமுக தான் காரணம்? அப்போ நன்றி சொல்லிடுங்க


================


17  ஜெயலலிதா மரணம் குறித்து, ஆறுமுகசாமி விசாரணை ஆணையத்தை திசை திருப்பவே, கருணாநிதியின் மரணம் குறித்து, முதல்வர், இ.பி.எஸ்., விமர்சிக்கிறார். இது, கண்டனத்திற்குரியது. முதல்வர் தகுதிக்கு, இது பண்பல்ல. அரசியல் தலைவர்களின் விமர்சனங்கள், தற்போது தரம் தாழ்ந்து விட்டன. தரமற்ற அரசியல்வாதிகளை, பொதுமக்கள் தேர்ந்தெடுப்பதே இதற்குக் காரணம்.-திருநாவுக்கரசர் : #  ஈபிஎஸ் சை முதல்வராக பொதுமக்களா தேர்ந்தெடுத்தாங்க?


==============


18 கறுப்பு பணம் இருந்தால் தான், இலவசமாக கல்வி வழங்க முடியும். என்னிடம், கறுப்பு பணம் கிடையாது. -தம்பிதுரை # அப்போ உங்க கூட்டணி ல இருக்கற ஏ சி சண்முகம் இலவசககல்வி தர்றாரே? அவர் கிட்டே கறுப்புப்பணம் இருக்குங்கறீங்களா?


================


19 45 கல்லுாரிகள் எனக்கு இருப்பதாக, பொய் பிரசாரம் செய்யும் ஸ்டாலின் மீது, விரைவில் நீதிமன்றத்தில், வழக்கு தொடரப்படும். என் மீது கூறி வரும் குற்றச்சாட்டுகளை ஸ்டாலின் நிரூபித்தால், அரசியலை விட்டு விலகத் தயார். அப்படி நிரூபிக்காவிட்டால், அவர் அரசியலை விட்டு விலகத் தயாரா?-தம்பிதுரை # இன்னும் ஒரு தடவை கூட முதல்வரா ஆகலை, அதுக்குள்ளே அரசியலை விட்டு விலகச்சொன்னா எப்படி?-ஸ்டாலின் மைண்ட் வாய்ஸ்



================


20  ஆட்சியை மீண்டும் பிடிக்கும் கட்சி, எவ்வளவு பொறுப்போடு ஒரு தேர்தல் அறிக்கையை கொடுக்க முடியுமோ, அந்த வகையில், சிறப்பான தேர்தல் அறிக்கையை, பா.ஜ., கொடுத்துள்ளது. பா.ஜ., தேர்தல் அறிக்கையை ஸ்டாலின், 'பூஜ்ஜியம்' எனக் கூறியதன் அர்த்தம் புரியவில்லை.-பொன்.ராதா # பூஜயம்னா சுழி. பாஜக வுக்கு அதிர்ஷ்டச்சுழினு சொல்றாரு போல 


===================