Showing posts with label குங்குமம். Show all posts
Showing posts with label குங்குமம். Show all posts

Tuesday, April 03, 2012

குங்குமம் பத்திரிக்கையை கிண்டல் அடித்ததன் மூலம் சன் டி வி யை பகைத்துக்கொண்ட சாரு நிவேதிதா

 புலம்பல் திலகம் சாரு நிவேதிதா அவர்கள் எக்செல் நாவலில் எழுத்தாளர்களுக்கு மரியாதை கிடைக்கவில்லை என 30 பக்கங்கள் புலம்பியது அனைவருக்கும் ( அதாவது அந்த நாவலை வாசித்த  3800 பேருக்கும்) தெரிந்ததே.. அந்த நாவல் வெளியான சமயத்தில் குங்குமம் இதழுக்கு ஒரு பேட்டி கொடுத்திருந்தார்.. அந்த பேட்டிக்கு சன்மானமாக ரூ 500 அனுப்பி இருக்காங்க.. இப்போ அவர் வெப்சைட்ல வாசகர்கள் கலந்துரையாடலில் நைஸா அதை சொல்லி காட்டி இருக்கார்.. 


ஜோஸஃப் சுகானந்த்: நான் சில நாட்களாக தலயிடம் கேட்க வேண்டும் என்று நினைக்கிற ஒரு கேள்வி.   தல, நீங்கள் அன்று முதல் இன்று வரை தமிழகத்தில் எழுத்தாளர்களுக்கு சரியான மரியாதை கொடுக்கப்படவில்லை என்று கூறி வருகிறீர்கள். ஒரு விதத்தில் அது சரியானதாகத் தோன்றினாலும் இன்னொரு வகையில் பார்த்தால் இன்று இவ்விஷயத்தில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது என்று படுகிறது. இன்று உங்களுக்கு இரண்டாயிரம் பேர் கொண்ட வாசகர் வட்டம் உள்ளது. உங்களையும் உங்கள் எழுத்தையும் கொண்டாடுகிறோம். உங்கள் இணையதளத்தை லட்சக்கணக்கானவர்கள் படிக்கிறார்கள், கருத்து சொல்கிறார்கள். நீங்கள் மீடியாவில் அடிக்கடி தென்படுகிறீர்கள். உங்களை எல்லாருக்கும் தெரிந்திருக்கிறது. நீங்கள் உட்பட அனைத்து நல்ல எழுத்தாளர்களுக்கும் ஒரு fan following உருவாகியுள்ளது. இன்னும் ‘தமிழத்தில் எழுத்தாளனை யாரும் பெரிதாய் மதிபதில்லை’ என்ற கருத்தில் உறுதியாய் உள்ளீர்களா? இல்லை அதில் ஏதேனும் மாற்றம் உள்ளதா?   நீங்கள் பதில் கூறினால் மகிழ்வேன்.

 சி.பி - யாரும் குழம்ப வேணாம்.. ஜோசப் தலன்னு சொல்றது அண்ணன் சாருவைத்தான்..தறுதல என்பதை சுருக்கி தலன்னு கூப்பிடறார் போல.. ஒரிஜினல் தல அஜித் மன்னிக்க

ராஜ ராஜேந்திரன்: தமிழ்நாட்டில் மக்கள் தொகை ஏழு கோடி, அதில் தமிழர் மட்டுமே ஐந்து கோடி என்று வைப்போம், அதில் படிக்கத் தெரிந்தவர்கள் மூன்று கோடி, அதில் சாரு போன்ற இலக்கியவாதிகளை படிக்குமளவு தமிழ் கற்றவர்கள் குறைந்தது 20 சதவிகிதம் என்று வைத்தாலும் அறுபது லட்சம் பேர் வருகிறார்கள். இதை குடும்பத்திற்கு பத்து பேர் என்று பிரிப்போம், அப்படி பார்த்தால் ஆறுலட்சம் குடும்பம் வரும், இதில் புத்தகம் வாங்கி படிக்குமளவு சக்தி கொண்ட குடும்பங்கள் ஐம்பது சதவிகிதம் எனில் அது மூன்று லட்சம் குடும்பம் ! ஆக, ஒரு தரமான படைப்பு வந்தவுடன் மூன்று லட்சம் பிரதிகளாவது ஒரே வருடத்தில் விற்கவேண்டும். சரி, சாருவுடையது பின்நவீனத்துவமானது என்றால் ஒரு லட்சமாவது விற்க வேண்டும், எக்சைல் இதுவரை ஐந்தாயிரம் விற்றிருக்கும் (?) இப்போது சொல்லுங்கள், சாரு கோபப்பட வேண்டுமா, தேவையில்லையா ? (நான் சொன்னது தோராயக் கணக்கு, மிகவும் குறைவான சதவிகித கணக்கையே சொல்லியிருக்கிறேன், இதில் வெளிநாட்டுத் தமிழர்களை வேறு சேர்க்கவில்லை)

சி.பி - ஒரு விஷயம் ஓப்பனா சொல்றேன்.. அது எல்லா எழுத்தாளர்களுக்கும் பொருந்தும்.. இங்கே லெண்டிங்க் லைப்ரரி இருக்கு.. ஒரே புக்கை பலர் பகிர்ந்துக்கற சிஸ்டம் இருக்கு.. சித்தோடு கே சதீஷ்குமார் நல்ல நேரம் பிளாக் ஓனர்க்கு கிஃப்ட்டா அந்த புக் வந்தது.. அவர் சித்தோட்ல இருக்கற 12 பேருக்கு அதை பகிர்ந்தார்.. நான் வாங்கி என் நண்பர்கள் 34 பேருக்கு ஷேர் பண்ணேன்.. இந்த மாதிரி படிக்கப்படறதுதான் அதிகம். ரூ 250 புக்குக்காக செலவு பண்ண தமிழன் யோசிப்பான்.. 


சாரு நிவேதிதாவின் பதில்:  ஜோஸஃப். என்னிடம் ஒரு பழக்கம் உள்ளது.  யாராவது என்னிடம் கேள்வி கேட்டால் பதில் சொல்ல ஆரம்பித்து விடுவேன்.  அப்படித்தான் உங்கள் கேள்வியையும் சாரு ஆன்லைனில் போட்டு நாலு பக்கம் பதில் எழுத ஆரம்பித்தேன்.  உடனே நான் எழுதிக் கொண்டிருக்கும் – இன்னும் ஒரு வாரத்தில் முடிக்கப்பட வேண்டிய ஆங்கில குறுநாவல் – gothic – ஞாபகம் வந்து உடனே பதில் சொல்வதை நிறுத்தி விட்டேன்.

சி.பி - அண்ணன் எழுதுன தமிழ் நாவல்ல 17 பக்கங்களுக்கு ஆங்கில கலப்பு இருந்தது.. அப்போ ஆங்கில நாவல்ல தமிழ் கலப்பு இருக்குமா? டவுட்டு..  டைட்டில் தான் சரி இல்லை GOMADHI THICK ,GOPAALAA THIN அப்படி ஏதாவது வெச்சிருக்கலாம்


 யாராவது ஒரு குப்பை படம் எடுத்தால் அந்தப் படத்தை 2000 பேரா பார்க்கிறார்கள்?  அந்தப் படத்தை எடுத்த  இயக்குனர் தெருமுனையில் வந்து நின்று கொண்டு துண்டா விரிக்கிறார்?  அடுத்த படத்துக்கு லொகேஷன் பார்க்க அமெரிக்கா பறந்து விடுகிறார் இல்லையா?  இங்கே நான் சிங்கப்பூர் சென்று வரவே ஐந்து வருடம் யோசித்துக் கொண்டிருக்கிறேனே, பணம் இல்லாமல்?


சி.பி - அண்ணே, சிங்கப்பூர் போய்ட்டா மட்டும் அமர காவியமா எழுதப்போறீங்க? எழுதற குப்பையை லோக்கல்ல இருந்தே எழுதுங்கண்ணே.. லோக்கல் நாவல்க்கு லோக்கல் லொக்கேஷன் போதாதா? ஹி ஹி 


 இங்கே என் கொல்லைப்புறத்தில் இருக்கும் சிங்கப்பூருக்கே ஐந்து வருட யோசனை என்றால், எப்போது நான் சிலே, க்யூபா, ஃப்ரான்ஸ் எல்லாம் போய் வருவது?  ராஜ ராஜேந்திரன் சரியாகப் பிடித்திருக்கிறார்.   என் புத்தகம் 50,000 பிரதி விற்றால் தான் இதெல்லாம் சாத்தியமாகும்.  ஆனால் இன்னும் எக்ஸைல் விற்பனை 5000 ஐக் கூட தாண்டவில்லை.


சி.பி - அந்த புக் 3800 விற்றதே பெருசு.. அண்ணனுக்கு ஆசை ஜாஸ்தி.. தமிழ்நாட்டு லைப்ரரிக்கு எல்லாம் தானம் பண்ணிடுங்க. சும்மா வீட்ல ஸ்டாக் வெச்சு வாட் யூஸ்?



மேலும் ஜோஸஃப், நீங்கள் ரொம்ப வெகுளியாக இப்படி ஒரு கேள்வியைக் கேட்டாலும் உங்கள் மீது நான் கோபம் கொள்வதைத் தவிர எனக்கு வேறு வழியில்லை.  ஏனென்றால், உங்கள் கேள்விக்குப் பதிலையே எக்ஸைல் நாவலில் 30 பக்கம் எழுதி விட்டேன்.  அந்த நாவலைப் படித்தீர்களா இல்லையா?

சி.பி - நாங்க பிளாக் படிக்காமயே ஆஹா அபாரம், சூப்பர் தல பின்னீட்டிங்க அப்டினு கமெண்ட் போடற பரம்பரைல வந்தவங்க.. அந்த நாவலை ஒரு வரி விடாம ஃபுல்லா படிச்சவங்க  யாருமே இல்லையாம் , நான் அடிச்சு சொல்றேன் ஹி ஹி 

ஒரு மாணவன் 4 வருடம் எஞ்ஜினிரியரிங் முடித்து விட்டு ஒரு லட்சம் ரூபாய் சம்பளம் வாங்குகிறான்.  நான் 40 வருடமாக எழுதிக் கொண்டிருக்கிறேன்.  நேற்று ஒரு பத்திரிகையிலிருந்து நான் எழுதிய கட்டுரைக்கு சன்மானமாக 500 ரூ செக் வந்தது.  இப்போது இதை இங்கே எழுதி விட்டேனா?  இனிமேல், 50 வருடத்துக்கு என்னை அந்தப் பத்திரிகையிலிருந்து boycott செய்து விடுவார்கள்.


சி.பி -குங்குமம் புக்ல ஒரு பக்கக்கதைக்கு ரூ 200 சன்மானம் தர்றாங்க.. உங்க பேட்டி 3 பக்கம் வந்தது.. அதுல படங்கள் மட்டும் ஒன்றரை பக்கம் இருக்கும்.. அதனால பேட்டி குங்குமம் கணக்குக்கு ஒன்றரை பக்கம் தான்.. அவங்க ரூல்ஸ் அண்ட் ரெகுலேஷன்படி உங்களூக்கு ரூ 300 தான் தந்திருக்கனும்.. ஏதோ கவனக்குறைவால அல்லது ரவுண்ட் ஃபிகரா தரலாம்னு ரூ 500 தந்துட்டாங்க. இப்படி எல்லாம் குறை சொன்னா நெக்ஸ்ட் டைம் தர்ற சன்மானத்துல அந்த எக்ஸ்ட்ரா ரூ 200 ம் கட் பண்ணி அதாவது கழிச்சுத்தான் தருவாங்க.. பி கேர் ப்= ஃபுல் ஹி ஹி 


 எப்படி எனக்கு வேட்டு வைக்கிறீர்கள் என்று பார்த்துக் கொள்ளுங்கள்.  சில விஷயங்களை நான் வெளிப்படையாகப் பேசினாலே எனக்கு ஆபத்து.  நீங்கள் ஒரு ஆபத்தான கேள்வியைக் கேட்டு விட்டீர்கள்.   500 ரூ. செக்கை வைத்துக் கொண்டு நான் பிச்சைதான் எடுக்க வேண்டும் ஜோஸஃப்.  அதைத்தான் நான் தொடர்ந்து செய்து கொண்டிருக்கிறேன்.  பல உயிர் நண்பர்களும் என்னை இண்டர்நெட் பிச்சைக்காரன் என்று ஆதங்கத்துடன் எழுதி வருகிறார்கள்.

சி.பி - என்னப்பா இது?ஒரு இண்டர்நேசனல் எழுத்தாளரைப்போய் இப்படி சொல்லீட்டீங்களே. 


  50000 பிரதிகள் எல்லாம் விற்க வேண்டாம்; 40 புத்தகங்கள் எழுதி இருக்கிறேன்.  ஒவ்வொன்றும் 5000 விற்றால் போதுமே?  விற்பதில்லையே?  கட்டுரைகளாவது போகட்டும், நாவலாவது 50,000 பிரதிகள் விற்றால்தான் ஒரு எழுத்தாளன் கௌரவத்தோடு வாழ முடியும்.  ஆனால் உலகில் எல்லா நாடுகளிலும் நாவல்கள் 50,000 பிரதிகள் விற்பதில்லை.  அப்படியும் எழுத்தாளர்கள் கௌரவமாக வாழ்வது எப்படி என்றால், intelligentia-வின் ஆதரவு.


சி.பி -  எழுத்தாளர்கள் கௌரவமாக வாழ்வது எப்படி என்றால் அவங்க எழுத்து கண்ணீயமா, பெண்ணியமா இருக்கனும்னே.. கண்ட படி கெட்ட வார்த்தைல பலரை திட்டக்கூடாது..


 உதாரணமாக, எழுத்தாளர்களை பல்கலைக்கழகங்கள் creative writing துறையில் பேராசிரியர்களாக நியமித்து ஒரு லட்சம் ரூபாய் சம்பளம் கொடுக்கிறது.  இதுதான் உலகம் பூராவும் இருக்கும் நடைமுறை.  ஆனால் இங்கே பல்கலைக்கழகத்தில் போய் விரிவுரை ஆற்றினால் ஒரு பூங்கொத்தைக் கொடுத்து அனுப்புகிறார்கள்.  இண்டெலிஜென்ஷியா என்றால் பத்திரிகைகளும்தான்.  தமிழில் கட்டுரைக்கு சன்மானம் 500 ரூ.  இல்லாவிட்டால் அதிகபட்சம் 1000 ரூ.

சி.பி - அதுவும் ஜனரஞ்சகப்பத்திரிக்கைகளீல் தான். காலச்சுவடு, கணையாளி, அமிர்தா, உயிர் எழுத்து போன்ற இலக்கியப்பத்திரிக்கைகள்னா சன்மானம், காம்ப்ளிமெண்ட்ரி காப்பி கூட நோ தான் 




ஆனால் என்னுடைய எஞ்ஜினியர் நண்பர் ஒருநாள் என்னோடு பீட்ஸா சாப்பிட்டு விட்டு 500 ரூ. பில்லை வாங்கி பாக்கெட்டில் வைத்துக் கொண்டார்.


சி.பி - பில்லை வாங்கி பாக்கெட்ல வெச்சுட்டு நைஸா போய்ட்டாரா? பில் பே பண்ணலையா>?

 கம்பெனி reimburse செய்து விடுமாம்.  இதேபோல் மருத்துவ செலவுக்கும், பெட்ரோல் செலவுக்கும் கம்பெனியே கொடுத்து விடும்.  அவ்வளவு ஏன், காண்டம் செலவுக்குக் கூட கம்பெனிதான் பணம் கொடுக்கிறது.

 சி.பி - அவ்ளவ் பணக்கஷ்டத்துலயும் அண்ணனோட இஷ்ட தெய்வம் பற்றித்தான் பேசறாரு.. அண்ணனை கண்டம் துண்டமா வெட்டுனாக்கூட காண்டம்க்கு எதும் ஆகாம பார்த்துக்குவார் போல. அண்ணன் வாழ்வில் சுந்தர காண்டம் மலர வாழ்த்துகள்


 சம்பளப் பணம் தனி.  அதை இதில் சேர்க்கக் கூடாது.  ஆனால் எழுத்தாளனின் சம்பளம் 500 ரூ.  உணவு கிடைக்காத தெருநாய்கள் காய்ந்து போன மனித மலத்தைச் சாப்பிடுவதை என் கண் கொண்டு பார்த்திருக்கிறேன்.  தமிழ் எழுத்தாளனின் நிலைக்கும் அந்த நாயின் நிலைக்கும் அதிக வித்தியாசம் இல்லை.  இப்படி சீரழியா விட்டால் சினிமாக்காரர்களுக்கு கால் கழுவி விட்டு லட்சம் லட்சமாக சம்பாதிக்கலாம்.  நான் அப்படிப்பட்ட ஆள் இல்லை.  60 வயது வரை விட்டுக் கொடுக்காத சுய கௌரவத்தை இனிமேலும் விட்டுக் கொடுக்க மாட்டேன்.

சி.பி - ஆமாண்ணே.. உங்க சுய கவுரவத்தை யுத்தம் செய் படத்துல மிஸ்கின் கூட வெச்சிருந்த ஃபிரண்ட்ஷிப்ல பார்த்தோம்..  ஒரே ஒரு சீன் வெறும் கையை காட்டிட்டு போனதுக்கே சம்பளம் ஒரு லட்சம் தந்தாங்கன்னு ஜிங்க் ஜக் அடிச்சீங்களே.. உங்க கிட்ட இருக்கற எல்லா திறமையையும் காட்டி பல லட்சம் சம்பாதிக்கலாமெ சினி ஃபீல்டுல ஏன் மிஸ் பண்றீங்க? 

மேற்கண்ட காரணங்களினால்தான், நான் தமிழில் எழுதுவதை நிறுத்தி விட்டேன் என்று ஒரு ஆங்கிலப் பேட்டியில் குறிப்பிட்டேன்.  இதைத் தவிர வேறு எந்தக் காரணமும் இல்லை.  என்னுடைய 2000 வாசகர்களை அப்படிச் சொல்லவில்லை.  அந்த 2000 பேரும் என் குடும்ப உறுப்பினர்களைப் போல.  நீங்களும் அதில் ஒருவர் என்பதையும் நான் அறிவேன்.  இந்த 2000 பேரில் 20 பேர் தான் என்னை போஷிக்கிறார்கள்.  சட்டை வாங்கிக் கொடுக்கிறார்கள்; மோதிரம் போடுகிறார்கள்; ரெமி மார்ட்டின் வாங்கிக் கொடுக்கிறார்கள்.

சி.பி - அட.. இப்படி ஒரு ரூட் இருக்கா? ஓ சில கேட்க கூச்சமா இருக்காதா? அது சரி. நாம தான் எப்பவும் சரக்கு அடிச்சுட்டு மப்புலயோ கிடக்கறமே.. எதுக்கு நமக்கு கூச்ச நாச்சம் எல்லாம்?




 அப்படிப்பட்ட நண்பர் ஒருவர் நேற்று என்னிடம் “உங்களுக்குக் க்யூபாவுக்கு ஒரு டிக்கட் வாங்கிக் கொடுக்கிறேன்; போய் வாருங்கள்” என்று சொல்லி இருக்கிறார்.  கச்சி ஏகாம்பரன் என் குரலை செவி மடுத்து விட்டான் என்று நினைத்துக் கொண்டேன்.

சி.பி - கியூபாக்கு டிக்கெட் எடுத்தவர் கூட ஒரு டிக்கெட்டையும் அனுப்பி இருந்தா அண்ணன் ஒரு வேளை போய் இருப்பார்.. 

Tuesday, January 24, 2012

என் மனைவி கோயில் சிலை மாதிரி . அழகு - சிறுகதை

Illusion picture 
                                                         
ரத்னா புடவை கடையே செல்வாவுக்காக காத்திருந்தது. செல்வா வந்தபின்தான் கடையை திறக்கனும்னு முதலாளி சொல்லிட்டார். செல்வா அந்த கடையின் சேல்ஸ்மேன்.


ஒரு சேல்ஸ்மேனுக்காகவா கடை திறப்பதில் தாமதம் பண்றார் முதலாளி. . ஆனாலும்,  முதலாளி செல்வாவுக்கு ரொம்பதான் இடம் குடுக்குறார். ன்னு மற்ற சேல்ஸ்மேன்கள் முணுமுணுக்க தொடங்கிய சமயத்தில் அவசர அவசரமாக கடைக்குள் நுழைந்தான் செல்வா.


வழிகின்ற வியர்வையை துடைத்தபடியே முதலாளி அறைக்குள் சென்ற செல்வா, சார் இன்னிக்கு என் மனைவிக்கு பிறந்த நாள். அதனால கோவிலுக்கு போயிட்டு வர கொஞ்சம் லேட்டாகிடுச்சு. மன்னிச்சுக்கோங்க சார் என்றான்.

 சரி சரி போய், வேலையை பாரு. குடோனுக்கு போய் நல்ல சேலையா பார்த்து செலக்ட் பண்ணி, அதை பொம்மைகளுக்கு கட்டின பிறகுதான் கடையை திறக்கனும். ம் ம் சீக்கிரம் போய் வேலைகளை பாரு. சாய்ந்தரம் வீட்டுக்கு போகும்போது என்னை பார்த்துட்டு போ.


சரி சார் என்று சொல்லி அறையை விட்டு வந்து குடோனுக்கு போய் இருப்பதிலேயே நல்ல புடவையாய் தேர்ந்தெடுத்து வேகவேகமாக பொம்மைகளுக்கு கட்ட ஆரம்பித்தான்.

மத்த கவுண்டர்களைவிட இவன் கவுண்டர்லேயே பெண்கள் சேலையை எடுக்க போட்டியிட்டனர். அண்ணா இந்த சேலையை எப்படி கட்டுறதுன்னு கொஞ்சம் கட்டி காட்டுகங்கண்ணா, தம்பி இந்த முந்தானையை எப்படி சொருகனும்ன்னு கொஞ்சம் செஞ்சு காட்டேன்.  சார், இந்த சேலை சாயம் போகுமான்னு ஆளாளுக்கு கேட்கும் கேள்விகளுக்கு சளைக்காமல் பதில் சொல்லி அவர்கள் கேட்கும் புடவையை எடுத்து தந்து வியாபாரத்தை கவனித்தான்.

மணி எட்டடித்ததும் எல்லாரும் துணிகளை ஒழுங்காக அடுக்கி வைத்துவிட்டு, வீட்டிற்கு செல்ல துவங்கினார்கள். ரவியும், செல்வாவும் பேசிக்கொண்டெ முதலாளி அறை நோக்கி செல்ல துவங்கினர்.

டேய் ரவி! எதுக்குடா என்னை முதலாளி வீட்டுக்கு போகும்போது பார்த்துட்டு போக சொன்னார்.

ம்ம்ம் துரை சொல்லாம கொள்ளாம லேட்டா வந்தீங்களே, அதுக்கு பாராட்டு பத்திரம் வசிக்கத்தான் வர சொல்லியிருக்க போறாரு. உன் சீட்டை டர்ருன்னு கிழிக்கத்தான்

அப்பிடியா ரவி! எனக்கு பயமாயிருக்குடா. நீயும் கூட வாடா,

டேய் செல்வா உன்கூட வந்தா என் சீட்டும் கிழியும். நீ போ. முதலாளி ரொம்ப திட்டினால் நீ பட்டுன்னு கால்ல விழுந்துடு என்ன? நான் வரட்டா நாளைக்கு பார்க்கலாம்.

சரிடா என்று உதடு உச்சரித்தாலும் ஊரில் இருக்கும் கடவுளையெல்லாம் வேண்டிக்கொண்டு முதலாளி அறைக்குள் நுழைந்தான் செல்வா.

சார், வீட்டுக்கு போகும்போது பார்த்துட்டு போக சொன்னீங்க. இன்னிக்கு மனைவிக்கு பொறந்த நாள் என்பதால்தான் லேட்டாகிட்டுது. இனி இதுமாதிரி லேட்டா வர மாட்டேன் சார், மன்னிச்சுடுங்க சார்.

அட மன்னிப்புலாம் எதுக்கு செல்வா. பத்து நிமிஷம் லேட்டா கடை திறந்ததுனால ஒண்ணும் குடி முழுகிடாது. நீ பொம்மைகளுக்கு சேலை கட்டிவிடும் அழகை பார்க்குறதுக்காகவே பொண்ணுங்கள்லாம் நம்ம கடைக்கு வராங்க.   சாயம் போன புடவைக்கூட நீ பொம்மைகளுக்கு கட்டினால் அந்த புடவைக்கு அழகு கூடி அது போல புடவைதான் வேணும்ன்னு அடம்புடிச்சு பொண்ணுங்க வாங்கிக்கிட்டு போறாங்க.

உண்மையை சொல்லப்போனால், நீ வந்தப்பின்  புடவை விக்குறது அதிகம்தான். அதனால, இன்னிக்கு உன் பொண்டாட்டிக்கு பொறந்த நாள்ன்னு சொன்னியே இந்தா இந்த புடவை கொண்டு போய் உன் பொண்டாட்டிக்கு கட்டிவிடு அதுக்காகத்தான் உன்னை வர சொன்னேன் போய் பொண்டாட்டி கூட ஜாலியா இரு.

அட வெட்கப்படாதே செல்வா, வெறுங்கையோட போகாதே இந்தா இந்த ரூபாயில கொஞ்சம் ஸ்வீட்டும், நிறைய பூவும் வாங்கிக்கிட்டு போ பொண்டாட்டி சந்தோஷப்படுவா. கூச்சப்படாதேடா  நீ என் மகன் போல எனக்கூறி ஐநூறு ரூபாய் தாளை திணித்தார்.

சரிங்க சார் என்று கூச்சப்பட்டவாறே வாங்கிகொண்டு சைக்கிளை மிதிக்க ஆரம்பித்தான். ஸ்வீட் ஸ்டாலை கண்டதும் முதலாளி சொன்னது நினைவுக்கு வர, அவளுக்கு ரசகுல்லான்னா ரொம்ப பிடிக்கும் என்பது நினைவுக்கு வர, ஒரு கிலோ ரசகுல்லா வாங்கி கொண்டான். 

நடைப்பாதை கடையில் வழக்கமாக பூ விக்கும் பாட்டியிடம் அவளுக்கு முல்லைன்னா ரொம்ப பிடிக்கும் என்பது நினைவுக்கு வர பத்து முழம் மல்லி குடு பாட்டின்னு கேட்கும்போது என்ன  வழக்கத்தைவிட அதிகமா பூ வாங்குறே,  இன்னிக்கு என்னடா விசேஷம்ன்னு கேட்ட பாட்டிக்கு,  இன்னிக்கு என் பொண்டாட்டிக்கு பொறந்த நாள் பாட்டி. 

பார்த்துடா பத்து முழம் மல்லிப்பூ வாங்கிட்டு போறே, நாளைக்கு நீ வேலைக்கு போகனும் பொங்கல் நெருங்குறதால உடம்பு டயர்டாகி லீவு போட்டே முதலாளி வேலையை விட்டே தூக்கிடுவார். ச்சீ போ பாட்டின்னு சொல்லி ”மல்லிகை இந்த மன்னன் மயங்கும் பொன்னான மலரல்லவா”ன்னு ஹம்மிங்க் செய்தவாறே, கதவை திறந்து வீட்டுக்குள் சென்றான்.

நிர்மலா, இன்னிக்கு நான் உன் பொறந்த நாள்ன்னு கோயிலுக்கு போயிட்டு வேலைக்கு போக லேட்டாகிட்டுது. கடை திறக்காமல்ன்னு ஆரம்பிச்சு மூச்சு விடாமல் காலையில் ஆரம்பித்து பூக்கார பாட்டியின் கிண்டல் வரை எல்லாவற்றையும் சொல்லி முடித்தவாறே.. முதலாளி தந்த சேலை நீ ரொம்ப நாள் ஆசையா கேட்டியே அந்த கலர் அந்த டிசைன். கடையில இருக்குற பொம்மைக்குலாம் நான் புடவை கட்றேன் என் ஆசை பொண்டாட்டி உனக்கு நானே இன்னிக்கு புடவை கட்டிவிடப்போறேன் என்றவாறே..,மளமளவென புடவைக்கு மடிப்பு எடுத்து அமரர் ஆன  மனைவியின் சிலைக்கு சேலை கட்ட ஆரம்பித்தான் செல்வா...,