Showing posts with label கடிதம். Show all posts
Showing posts with label கடிதம். Show all posts

Saturday, February 25, 2012

பொங்கி எழுந்த சாரு - என்னை எழுத வேண்டாம் என்று சொல்ல ஞாநி யார்? - காமெடி கும்மி

http://www.sahodari.org/images/With_Charu.jpgஎக்ஸைல் விமர்சனக் கூட்டத்தில் ஞாநி ஒரு வருஷ காலத்துக்கு இணையதளத்தில் என்னை எழுதாமல் இருக்கும்படி ஆலோசனை கூறினார். 


 சி.பி - அப்புறம் என்ன ? எழுதத்தானே கூடாதுன்னார்? சேட்டிங்க் கூடாதுன்னு சொல்லலையே?


 ஏதோ ஒரு நல்ல எண்ணத்தில்தான் அவர் அப்படிச் சொல்லி இருக்க வேண்டும்.  ஆனால் எனக்கு இணைய தளத்தை விட்டால் எழுதுவதற்கு இடம் ஏது?  எந்தப் பத்திரிகை என் எழுத்தை வெளியிடத் தயாராக உள்ளது?  ராஸ லீலா என்ற எனது 700 பக்கத் தமிழ் நாவலை நான் கலா கௌமுதி என்ற மலையாளப் பத்திரிகையில்தானே வாரா வாரம் எழுதினேன்?  அது மட்டும் அல்ல; கலா கௌமுதியில் வந்து கொண்டிருந்த போதே அது சாரு ஆன்லைன் இணைய தளத்திலும் தொடர்ந்து வந்து கொண்டிருந்தது. 



சி.பி - என்னண்ணே இப்படி சொல்லீட்டீங்க? திரைச்சித்ரா, விருந்து எல்லாம் எதுக்கு இருக்கு?

 

 காமரூப கதைகள் நாவலையும் சாருஆன்லைன் இணையதளத்தில்தான் எழுதினேன்.  மற்றபடி விகடன் இணையதளத்தில் ஓரிரு ஆண்டுகள் கோணல் பக்கங்கள் என்ற பிரசித்தி பெற்ற பத்தியை எழுதினேன்.  அது அப்படியே விகடன் இதழிலும் வரும் என்று எதிர்பார்த்தேன்.  எனக்கு அந்த வாய்ப்பு கிடைக்கவில்லை. 

சி.பி - ஒண்ணும் கவலைப்படாதீங்க, டாக்டர் விகடனை தொடர்ந்து நர்ஸ் விகடன், அல்லது கில்மா விகடன் வருதாம் அதுல சான்ஸ் உண்டு.. 
 


 பிறகு, குமுதத்தில் ஒன்பதே வாரங்கள் கோணல் பக்கங்கள் தொடர்ந்தது.  பிறகு அது வலுக்கட்டாயமாக நிறுத்தப்பட்டது.  உடனே விகடனில் வாய்ப்புக் கேட்டேன்.  வாய்ப்பு கிடைக்கவில்லை.  நான் 35 ஆண்டுகளாக எழுதி வருகிறேன்.  இதுவரை குமுதத்தில் 9 ஒன்பது வாரமும், விகடனில் 24 வாரமும் மட்டுமே (துக்ளக்கில் 6 மாதம் எழுதியது தனிக்கதை) எழுதுவதற்கு வாய்ப்புக் கிடைத்தது. இனிமேல் அந்த வாய்ப்பு கிடைக்கும் என்ற நம்பிக்கை எனக்கு இல்லை. அப்படியே கிடைத்தாலும், இப்பத்திரிகைகளில் எழுதும் உற்சாகத்தையும் மன எழுச்சியையும் நான் இழந்து விட்டேன். அதற்கு ஒரே காரணம்தான்.  இனிமேல் தமிழ்ப் பத்திரிகைகளில் எழுதுவதை விட ஆங்கிலப் பத்திரிகைகளில் எழுதுவதே எனக்கு நல்லது என்ற தீர்மானமான முடிவுக்கு வந்து விட்டேன்.   ரொம்ப காலத்துக்கு செவியில்லாதவர்களின் தேசத்தில் இசைக் கலைஞனாக வாழ முடியாது.  அலுப்பாக இருக்கிறது.


 சி.பி - ச்சீ ச்சீ இந்தப்பழம் புளிக்கும்???

ஆனால் நான் எழுதுவதற்குக் கிடைத்திருக்கும் ஒரே இடமான இணைய தளத்திலும் எழுதாதே என்று சொன்னால், ஒரு மனிதனைப் பார்த்து மூச்சு விடாதே என்று சொல்வதற்குச் சமம் என்று ஞாநி உணர்கிறாரா?


சி.பி - அவர் ஏதோ ஒரு  பேச்சுக்கு சொன்னதுக்கு ஏண்ணே இப்படி பொழியறீங்க?

 
ஞாநி எத்தனை ஆண்டுகள் விகடனில் எழுதி இருக்கிறார்?  30 ஆண்டுகளா, அதற்கும் மேலா?  அதிலும் ஒரு கட்டத்தில் விகடனில் ஒரே சமயத்தில் இரண்டு தொடர்கள்!  உலகத்திலேயே எந்த ஒரு பத்திரிகையாளருக்கும் இப்படிப்பட்ட லக்கி ப்ரைஸ் அடித்ததில்லை. 

 சி.பி - இல்லையே , ஹாய் மதன்  3 தொடர் ஒரே சமயத்தில் எழுதி இருக்காரே?


 ஆனானப்பட்ட சுஜாதா கூட ஒரே பத்திரிகையில் இரண்டு பத்திகள் எழுதியதில்லை.  ஒரு சுபதினத்தில் திடீரென்று ஞாநியின் இரண்டு கட்டுரைகளும் விகடனில் நிறுத்தப்பட்டன.  என்ன நடந்ததோ, கடவுளுக்கே வெளிச்சம்.  ஆனால் உடனே என்ன நடந்தது?  விகடனில் ஞாநியின் இரண்டு பத்திகளும் நிறுத்தப்பட்ட மக்யா நாளே குமுதத்தில் ஞாநியின் பத்தி தொடர்ந்தது.  ஞாநியிடம் என்ன அலாவுதீனின் அற்புத விளக்கு இருக்கிறதா என்று கூட ஆச்சரியப்பட்டேன்.  ஞாநி குமுதத்தில் எழுத ஆரம்பித்ததும் குமுதத்தின் விற்பனை அதிகரித்தது.


சி.பி - ஆமா, குமுதத்தின் சேல்ஸ் 3,75,887 ல இருந்து  3,75,898 ஆக உயர்ந்தது.. எக்ஸ்ட்ரா பிரதிகள் வாங்குனது ஞாநி சார் ஃபேமிலிதான் ஹி ஹி


  இது எல்லோருக்குமே தெரிந்த விஷயம்.  ஆனால் முன்னாள் ஆட்சியாளர்களின் குறுக்கீட்டால் ஞாநியின் தொடர் குமுதத்தில் நிறுத்தப்பட்டது.  இது குமுதம் என்ற இதழுக்கு நேர்ந்த அவமானம்.  இதுதான் குமுதத்துக்கும் விகடனுக்கும் உள்ள வித்தியாசம்.  விகடன் ஆசிரியர் யாரோ வரைந்த கருத்துப் படத்துக்காக சிறைக்கும் சென்று வந்தார்.

சி.பி - அண்ணே, அதுக்குப்பேரு கருத்துப்படம் இல்லீங்கோ, ஜோக்குங்கோ..  படுதலம் சுகுமாரன் எழுதுனது , அட்டைப்படத்துல வந்தது.. 

மேடைல உக்காந்திருக்கரவங்கள்\ல யார் எம் எல் ஏ, யார் எம் பி?

 திருடன் மாதிரி இருக்கறது எம் எல் ஏ, முக மூடிக்கொள்ளைக்காரன் மாதிரி இருக்கறது  எம் பி 

 ஜோக் வந்தப்ப எம் ஜி ஆர் சி எம்.. 



  ஆனால் குமுதமோ கருணாநிதிக்கு பயந்து கொண்டு ஞாநியின் தொடரை நிறுத்தியது.  அந்தச் சமயத்தில் குமுதத்தைக் கண்டித்து எழுதிய ஒரே எழுத்தாளன் நான் தான்.  இது ஞாநிக்கு ஞாபகம் இருக்கலாம்.  குமுதத்தில் தொடர் நிறுத்தப்பட்டதும் அதற்கு மக்யா நாளே ஞாநி கல்கியில் எழுதத் தொடங்கினார்.  அப்போதும் நான் ஞாநியிடம் என்ன அலாவுதீனின் அற்புத விளக்கு இருக்கிறதா என்றே ஆச்சரியப்பட்டேன்.


சி.பி - மக்கா நாளெல்லாம்  இல்ல அண்ணே, சும்மா ரீலா விடாதீங்க.. குமுதத்தில் தொடர் நிறுத்தப்பட்ட அடுத்த வாரம் கல்கியில் விளம்பரம் வந்து அதற்கு அடுத்த வாரம் தான் வந்தது.. இடைப்பட்ட நாட்கள் 14.



குமுதத்தில் என் தொடர் வந்த போது “சாண்டில்யனுக்குப் பிறகு குமுதத்தில் இப்படி ஒரு தொடர் வருவது இப்போதுதான்” என்று என்னிடம் சொன்னவர்கள் ஒருவர் இருவர் அல்ல… ஓராயிரம் பேர் சொன்னார்கள்.  ஆனால் தொடர் ஒன்பதே வாரத்தில் திடுதிப்பென்று நிறுத்தப்பட்டதும் எனக்கு எங்கேயும் வாய்ப்புக் கிடைக்கவில்லை.  ஞாநிக்கு இருக்கும் luxury எனக்கு இல்லை.  என்னுடைய ஒரே இயங்கு தளம் இணைய தளம்தான்.  கடந்த பத்தாண்டுகளாக நான் இணைய தளத்தில் மட்டுமே எழுதி வருகிறேன்.  (ஒரு பத்திரிகையில் நான் எழுதி வந்த சினிமா விமர்சனங்கள் மட்டுமே விதிவிலக்கு). 

 சி.பி - எது? காலச்சுவடு என்ற இலக்கிய இதழ் லைப்ரரில இருக்குமே அந்த புக் தானே?

 


 ”இதிலிருந்தும் நீ விலகி விடு” என்று 5 லட்சம் சர்க்குலேஷன் கொண்ட ஒரு பத்திரிகையில் முப்பது ஆண்டுகளாக எழுதி வந்த ஒருவர் – அதிலும் அதே பத்திரிகையில் இரண்டு பத்திகள் – சொன்னால் அதற்கு என்ன அர்த்தம்?  நான் மட்டும்தான் வாழ வேண்டும்; நீ செத்து ஒழி என்றுதானே அர்த்தம்?



சி.பி -  இதுக்கெல்லாம் நீங்க கவலைப்படலாமா? தமனா சொல்லி அனுஷ்கா விலகுவாரா? நீர் அடித்து நீர் விலகுமா? நீங்க எழுதுங்கண்ணே, உங்க சேவை நாட்டுக்கு தேவை..( எங்களுக்கும் பொழுது போகனும் ஹி ஹி )



 
”காமராஜர் அரங்கில் வாசகர் வட்ட நண்பர்கள் எக்ஸைல் பற்றிப் பேச நேரம் இல்லாமல் போய் விட்டது.  அவர்கள் பேச வேண்டும் என்பதற்காக மட்டுமே இந்தக் கூட்டம் நடத்தப்பட்டது” என்று நான் எழுதியிருந்தது பற்றி 19-2-2012 அன்று ஞாநி எனக்கு இவ்வாறு கடிதம் எழுதியிருந்தார்:


 சி.பி - அவர் எழுதுன லெட்டர்ஸ் படிக்கவெல்லாம் உங்களுக்கு நேரம் இருக்கா? அப்புறம் எப்போண்ணே சேட் பண்ணுவீங்க?



”அப்புறம் எதுக்காக என்னை கூப்பிடணும்? வந்து பேசினா போதும். உங்க மனசுல படறதைப் பேசலாம்னு எதுக்கு சொல்லி அழைக்கணும்? பேசினதுக்காக உங்க வாசகர்கள் எதுக்கு என்னை திட்டணும்? நான் பாட்டுக்கு என் வேலையைப் பாத்துகிட்டு இருந்தேன். தேவையா இது எனக்கு?”


ஞாநி


தப்புதான்.  இனிமேல் விஐபிகள் யாரையும் என் கூட்டத்துக்குப் பேச அழைப்பதில்லை என்று முடிவு செய்து விட்டேன். 


சி.பி - நீங்க கூட ஒரு வி ஐ பி தான்.. அப்போ நீங்களும் பேச மாட்டீங்களா?

 
 ஆனால் ஞாநி எக்ஸைல் பற்றிப் பேசுவார் என்றே நினைத்தோம்.  ஆனால் அவர் “நீ மூச்சு விடாதே, செத்து ஒழி” என்று பேசுவார் என்று எதிர்பார்க்காதது எங்களுடைய தவறுதான்.  அதற்காக நான் அவரிடம் மன்னிப்புக் கேட்டுக் கொள்கிறேன்.



சரி, விஷயத்துக்கு வருகிறேன்.  நான் கடந்த பத்து ஆண்டுகளாக இணைய தளத்தில் எழுதி வருவதால்தான் என்னால் ஒரு பரந்து பட்ட வாசகர் கூட்டத்தை உருவாக்க முடிந்தது.  ஒரு புத்தக வெளியீட்டை காமராஜர் அரங்கத்தில் நடத்துகிறேன் அல்லவா?  1800 பேர் கொண்ட அரங்கில் 1500 பேரை என் பெயரை மட்டுமே சொல்லி என்னால் கூட்ட முடிகிறது அல்லவா? 


சி.பி - இதெல்லாம் பெரிய சாதனையா அண்ணே? திருமயம்கற ஊர்ல தமிழச்சி தங்க பாண்டியன் மேடம் கூட்டிய இலக்கியக்கூட்டத்துக்கு 18, 300 பேர் வந்திருந்தாங்க.. அப்போ அவங்க பெரிய எழுத்தாளரா? 



 இது என்னுடைய 10 ஆண்டுகளின் உழைப்பு அன்றி வேறென்ன? கடந்த பத்தாண்டுகளில் தமிழில் இலக்கிய வாசிப்பு அதிகரித்து இருக்கிறது என்றால் அதற்கு என்னுடைய பங்களிப்பும் ஒரு முக்கியமான காரணம்.  இதற்காக நான் இரவு பகல் பாராமல் உழைத்திருக்கிறேன். இந்தக் கலாச்சார மாற்றத்துக்குக் காரணமான நிறுவனங்கள் என்று விகடன், உயிர்மை, கிழக்கு போன்றவற்றைச் சொல்லலாம்.

சி.பி - சரோஜா தேவியை விட்டுட்டீங்களே?

 



இணைய தளத்தில் இவ்வளவு தீவிரமாக நான் இயங்கி இருக்காவிட்டால் என்னுடைய வாசகர்கள் என்று அறியப்படும் ஒரு 20,000 பேர் இன்று நல்லபடியாக வீடு கட்டி, குழந்தை பெற்று தங்கள் சமூகத் தொண்டை ஆற்றியிருப்பார்கள்.   ஆனால் என்னுடைய எழுத்தைப் படித்துத் தொலைத்து விட்டதால் என்னவெல்லாம் ஆகி இருக்கிறது என்று பாருங்கள். 


 1990-ஆம் ஆண்டில் நான் மீட்சி என்ற பத்திரிகையில் “the joker was here” என்ற ஒரு சிறுகதையை எழுதியிருந்தேன்.  அந்தக் கதை வந்த சமயத்தில் அதைப் படித்துப் பாராட்டியவர்கள் என் நண்பர்களான எம்.டி.எம்., நாகார்ச்சுனன் மற்றும் மீட்சியின் ஆசிரியர் பிரம்மராஜன்.  (நான் அப்படிப் பாராட்டவே இல்லை என்று எம்டிஎம் இப்போது சொல்ல மாட்டார் என்று நம்புகிறேன்.  அப்படிச் சொன்னால் என்னுடைய பிழையான ஞாபக சக்திக்காக எம்டிஎம்மிடமும் மன்னிப்புக் கேட்டுக் கொள்ள வேண்டியதுதான். 


 சி.பி - மீட்சி பத்திரிக்கைல உங்க கதையை படிச்சு எல்லாரும் மிரட்சி ஆகி இருப்பாங்களே?

 


  ஆனால் இந்த மூவரைத் தவிர இந்தக் கதை பற்றி வேறு சத்தமே இல்லை.  யாருக்குமே கதை புரியவில்லை.  யாராலுமே இதை ஒரு கதை என்று ஒத்துக் கொள்ள முடியவில்லை. ”நம்ம புதுமைப் பித்தன்லாம் என்னமா எளுதியிருக்கார்… இவன் யாரு ஏதோ பைத்தியக்காரனைப் போல் உளறுகிறான்” என்றே அவர்கள் நினைத்தார்கள்.  காரணம், அவர்களுடைய வாசிப்பு நவீனத்துவத்தோடு நின்று போய் இருந்தது.  காஃப்கா, ஆல்பெர் கம்யு போன்றவர்களோடு அவர்கள் முடிந்து போய் இருந்தார்கள்.  அவர்களுக்கு William Burroughs, Donald Barthelme, Kurt Vonnegut, Georges Perec, Ronald Sukenik போன்றவர்களின் பெயர்கள் கூடத் தெரிந்திருக்கவில்லை. 


 மற்றபடி, 20 ஆண்டுகளுக்கு முன்னால் இப்போது இருப்பதைப் போல் ஒரு பரந்து பட்ட வாசகர் வட்டம் இருக்கவில்லை.  அப்போதெல்லாம் எழுத்தாளரே வாசகர்; வாசகரே எழுத்தாளர்.  அதன் காரணமாக, the joker was here என்பது போன்ற என்னுடைய கதைகள் யாருமே சீந்திவாரற்றுத்தான் கிடந்தன.  நான் மேலே குறிப்பிட்ட எம்டிஎம் கூட தனிப்பட்ட முறையில் என் சிறுகதைகளை சிலாகித்தாரே தவிர, அது பற்றியெல்லாம் அவர் ஒரு வரி கூட எழுதியதில்லை.  இப்போதுதான் அதற்கு எனக்குக் காரணம் புரிகிறது; அவருடைய பாராட்டு உள்ளத்தில் இருந்து வந்ததல்ல. 


 ஏதோ உபசார வார்த்தைகள் அவை.  அதை நான் தான் பாராட்டு என்று முட்டாள்தனமாக நினைத்துக் கொண்டு விட்டேன் போலும்.  ஏனென்றால், எம்டிஎம்  என்னதான் பின்நவீனத்துவ எழுத்தாளர்களைப் படித்தாலும் அவரால் புதுமைப்பித்தன் அண்ணாச்சி, வண்ணதாசன் அண்ணாச்சி, விக்ரமாதித்யன் அண்ணாச்சி ஆகியோரைத் தாண்டி அவரால் வர முடியவில்லை. 


 ஸாரி, வண்ணாதாசன் அண்ணாச்சியின் டாடியான தி.க.சி. அப்புச்சியைப் பற்றியும் எம்டிஎம்மின் கட்டுரைகள் வந்திருக்கலாம்.  படிக்கவில்லை.  (ஏற்கனவே உத்தமத் தமிழ் எழுத்தாளன், எஸ். ராமகிருஷ்ணன் போன்றவர்களைப் பகைத்துக் கொண்டிருக்கும் நான் இப்போது அவர்களையெல்லாம் விட அறிவில் சிறந்தவரான எம்டிஎம்மையும் பகைத்துக் கொள்கிறேன்.


  பகவதி… எனக்கு என்ன ஆகப் போகிறதோ…  அதிலும் உ.த.எ. தன்னுடன் சண்டை போடும் எதிரியின் பலத்தில் பாதியை வாங்கிக் கொள்ளும் சக்தி மிக்கவர்.  அவரையே நாக் அவுட்டில் வீழ்த்திக் காட்டியவர் எம்டிஎம்.  நானெல்லாம் எம்மாத்திரம்?  ஆஃப்டர் ஆல், என்னுடைய ப்ரூஃப் ரீடரையே சமாளிக்க முடியாத பலஹீனன்…


மீண்டும் இப்போது ஜோக்கருக்கு வருகிறேன்.  எழுதி 22 ஆண்டுகளாக யாராலும் பேசப்படாத அந்தக் கதையைப் பற்றி இப்போது என் வாசகர் ஒருவர் மாய்ந்து மாய்ந்து எழுதித் தள்ளுகிறார்.  நான் கால் நூற்றாண்டுக் காலம் முன்னோக்கிச் சிந்திக்கிறேன் என்பதற்கு இது ஒரு உதாரணம்.  நான் ஒரு கதை எழுதி விட்டு, அதை வாசிக்கக் கூடிய ஒருவன் அல்லது ஒருத்திக்காக 25 ஆண்டுகள் காத்திருக்க வேண்டும். 


 ஜோக்கரை எழுதிய போது, இப்போது இதை வரிந்து கட்டிக் கொண்டு விளக்கிக் கொண்டிருக்கும் “பிரியமுடன் துரோகி” என்ற இளைஞரின் வயது ஒன்றோ இரண்டோ இருக்கலாம். அல்லது, அப்போது அவர் பிறந்து கூட இல்லாமல் இருக்கலாம்.  ஆக, இன்று நான் எழுதுவது இன்னும் பிறக்காத தலைமுறைக்காகவா?  பெருமையாக இருக்கிறது எனக்கு.


ஞாநி சொன்னார்.  எக்ஸைல் நாவலை இன்னும் 30 ஆண்டுகள் கழித்து யாரும் பேச மாட்டார்கள் என்று.  அது என்ன ஜோதிடம்?  எதை வைத்து அப்படிச் சொல்கிறார் ஞாநி?  இதோ ஞாநி சொல்வது தவறு என்று நான் நிரூபித்து விட்டேன். 22 ஆண்டுகளுக்கு முன்பு நான் எழுதிய ஒரு சிறுகதையை – இதுவரை யாருமே வாயே திறக்காத ஒரு சிறுகதையைப் பற்றி – வாசகர் வட்டத்தில் சுமார் 30 பேர் விவாதிக்கிறார்கள். 


 விவாதத்தில் பொறி பறக்கிறது.  பிரியமுடன் துரோகிதான் இந்த விவாதத்தை ஆரம்பித்து வைத்தவர்.  ஆக, ஞாநி சொல்வது போல் இன்னும் 30 ஆண்டுகள் கழித்து எக்ஸைலை யாரும் மறக்க மாட்டார்கள்.  இன்னும் பல நூறு மடங்கு அதை விவாதிப்பார்கள்.  இப்போது ப. சிங்காரத்தின் புயலிலே ஒரு தோணியைப் போல் அந்த நாவல் கொண்டாடப்படும்.  20 ஆண்டுகளுக்கு முன் ஸீரோ டிகிரி வந்த போது மாலன் அதை ஒரு பத்திரிகையில் “பீ” என்று எழுதினார்.  சக எழுத்தாளர்கள் அத்தனை பேரும் திட்டித் தீர்த்தார்கள்.  எஸ். ராமகிருஷ்ணன் என்ன சொன்னார் தெரியுமா?


இதோ அந்த உரையாடல்:  ஃபில்ம் சேம்பர் வாசலில்.


“என்ன ராமகிருஷ்ணன், ஸீரோ டிகிரி படிச்சிங்களா?”


“ஓ… பார் மகளே பார் தானே படிச்சேன்…”


அதற்கு மேல் நான் அவரிடம் ஒரு வார்த்தை பேசவில்லை.


இந்திரா பார்த்தசாரதியைத் தவிர வேறு ஒருவர் கூட ஸீரோ டிகிரி பற்றி ஆதரவாக ஒரு வார்த்தை சொல்லவில்லை.  இப்போது அந்த நாவல் கலிஃபோர்னியா மாநிலப் பல்கலைக்கழகத்தில் modern asian classic ஆக பாடத் திட்டத்தில் சேர்க்கப்பட்டுள்ளது.  கோட்டயத்தில் உள்ள மகாத்மா காந்தி பல்கலைக்கழகத்தில் எட்டு ஆண்டுகளாக எம்.ஏ. மலையாளத்தில் பாடமாக உள்ளது.  இதேதான் எக்ஸைலுக்கும் நடக்கும் என்று ஞாநியிடம் நான் பணிவுடன் சொல்லிக் கொள்கிறேன்.


மேலும், ஞாநி சொன்னார்.  “சாருவுக்குப் பிடித்த உதாரணத்தையே சொல்கிறேன்.  ஒரு நாவலைப் படித்து முடிக்கும் போது ஒரு ஸம்போகத்தில் திளைத்தது போல் இருக்க வேண்டும்” என்று.  


.  ஞாநி சொல்வது நூற்றுக்கு நூறு சரி.  இதைத்தான் ரொலான் பார்த் pleasure of the text என்று சொல்கிறார்.  ஆனால் ஒரு பெண்ணைத் தொடும் போது ஆணுக்கு premature ejaculation ஆகி விட்டால் என்ன செய்வது?  சிலருக்கு எழுச்சியே ஏற்படுவதில்லை.  சிலருக்கு ஒன்றரை மணி நேரம் ஆனாலும் எழுச்சி அடங்காது.  இந்த இரண்டுமே erectile dysfunction தான்.  இரண்டாவதில் இன்பம் உத்தரவாதம்.  முதலாவதில் மன உளைச்சல் தான் உண்டாகும்.  பெண்ணை ஸ்பர்ஸிக்கும் போது எழுச்சியே ஆகவில்லையானால் எப்படி இன்பம் துய்ப்பது?


உலகத்திலேயே பேரழகியான ஒருத்தி இருந்தாள்.  அவளிடம் போய் விட்டு வந்த ஒருத்தன் “ம்ஹும்… வேஸ்ட்…” என்றான்.  என்ன பிரச்சினை என்றால், அவளை ஸம்போகிக்கும் போது அவன் தன் மனைவியை நினைத்துக் கொண்டு தொட்டிருக்கிறான்.  எப்படிக் கிடைக்கும் இன்பம்?


அடுத்து ஞாநி கேட்டார்.  செக்ஸை எழுத வேண்டாம் என்று நான் சொல்லவில்லை.  ஆனால் அதில் vision இருக்க வேண்டாமா?
சரி, நான் கேட்கிறேன்.  அந்த விஷன் உள்ள ஒரு சில தமிழ் நாவல்களை ஞாநியால் சொல்ல முடியுமா?  சமீபத்தில் ஜி. நாகராஜனின் நாளை மற்றொரு நாளே என்ற நாவலைப் படித்தேன்.  30 ஆண்டுகளுக்கு முன்பு எந்த உணர்வைக் கொடுத்ததோ அதே உணர்வைத்தான் இப்போதும் அது கொடுத்தது.  பார்த்திபனின் புதிய பாதையைப் போல்தான் இருந்தது அந்த நாவல். 


நாளை மற்றுமொரு நாளேயில் எல்லாமே அசட்டு உணர்வுகள்.   பாரதிராஜா படங்களில் பாடல் காட்சிகளில் நாம் பார்க்கும் பூக்களைப் போல் இருக்கிறார்கள் ஜி.நாகராஜனின் விபச்சாரிகள்.  கொடுமை.  கொடுமை.

 நான் பலமுறை சொல்லி இருக்கிறேன்.  படித்த அத்தனை பேரும் கொண்டாடிய, ”ப்ளாக் நம்பர் 27, திர்லோக்புரி” என்ற என்னுடைய கதையை இன்று ஜூனியர் விகடன் நிருபர் கூட எழுதி விட முடியும்.  ஆனால் என்னுடைய மிகச் சிறந்த கதைகளான ”கர்னாடக முரசுவும், நவீன தமிழ் இலக்கியத்தின் மீதான ஓர் பின்நவீனத்துவ ஆய்வும்”, the joker was here, நேநோ, ”பிணந்தின்னிகளும் நட்சத்திரங்களிடமிருந்து செய்தி கொண்டு வந்தவர்களும்” போன்ற சிறுகதைகளை தமிழில் என்னைத் தவிர வேறு யாருமே எழுதியிருக்க முடியாது.  உலக அளவிலும் இது போன்ற சிறுகதைகளை விரல் விட்டு எண்ணி விடலாம்


 சி.பி - மொத்தத்துல நீங்க ஒலக ஃபேமஸ் ரைட்டர்னு சொல்றீங்க? அதானே? அதே தான்.. 

 

Wednesday, February 22, 2012

ஓ பக்கங்கள் ஞானியை, கலாய்த்த ஓஹோ பக்கங்கள் விஞ்ஞாநி சாருவை கலாய்க்கும் அஞ்ஞானி குமாரு

http://charuonline.com/blog/wp-content/uploads/sujatha-300x236.jpg 

ஞாநிக்கு பதில் எழுதுவதாகச் சொன்னீர்களே?  ஏன் இன்னும் எழுதவில்லை?” என்று கேட்டு பல கடிதங்கள் வந்துள்ளன.  ஊர் ரெண்டு பட்டா… என்ற பழமொழி தான் ஞாபகம் வந்தது.  ஞாநி பத்து நிமிஷத்தில் குற்றச்சாட்டுகளை அடுக்கி விட்டுப் போய் விட்டார்.  அதற்கு பதில் எழுதப் புகுந்தால் நான்கு ஐந்து மணி நேரம் ஆகும் போல் இருக்கிறது.  ”சாருவுக்கும் எனக்கும் ஒரே வயது” என்றார் ஞாநி.  அது மட்டும் அல்ல; அதை நிறுவுவதற்காக ”சாருவுக்கும் பைபாஸ் ஸர்ஜரி நடந்துள்ளது; எனக்கும் ஆஞ்ஜியோ நடந்துள்ளது; இதோ இந்த வாரம் இன்னொரு ஸர்ஜரி நடக்க உள்ளது” என்று பல உதாரணங்களையும் அடுக்கினார்.   இந்த ஒரு வசைக்கு பதில் சொல்லவே பத்து பக்கங்கள் எழுத வேண்டும் போல் இருக்கிறது.    ஸர்ட்டிஃபிகேட் பிரகாரம் அவருக்கும் எனக்கும் ஒரே வயதுதான்.  ஆனால்?  இந்த ஆனாலுக்குத்தான் பத்து பக்கங்கள் எழுத வேண்டும்.


சி.பி - சாருவுக்கு மனசுக்குள்ள இன்னும் சின்னப்பாப்பான்னே நினப்பு..  டீச்சர், இவன் என்னை கிள்ளிட்டான்.. அவன் என்னை அடிச்சுட்டான்.. 

சீனி கம் படம் பார்த்திருக்கிறீர்களா? 


சி.பி - இல்லண்ணே, சீன் படமா? அது?



 அதில் அமிதாப் பச்சன் 64 வயது இளைஞனாக வருவார்.  ஆம்; இளைஞன்.  தபுவுக்கு 34 வயது.  இரண்டு பேருக்கும் காதல்.  அமிதாப் லண்டனில் வசிப்பவர்.    தபுவின் அப்பாவிடம் தங்கள் காதலைச் சொல்லி சம்மதம் கேட்கலாம் என்ற எண்ணத்தில் இந்தியா வருகிறார்.  தபுவின் அப்பா ஓம் பிரகாஷுக்கு அமிதாபை விட 6 வயது கம்மி.  ஆனால் அமிதாபைப் பார்த்ததும் அவர் 90 வயதான இரண்டு கிழவர்கள் சந்தித்துக் கொண்டதைப் போல் பேசுவார்.  என்ன ஜி, வாக்கிங் எல்லாம் போகிறீர்களா?  வயசாகிப் போச்சு… நம்ம வயசுல வாக்கிங் போயே ஆகணும்… இல்லேன்னா கொலஸ்ட்ரால், ஷுகர், ஹார்ட் ப்ராப்ளம்…  இப்போவே பாருங்க… உங்க கிட்ட பேசும் போதே மூச்சு இரைக்குது…  நீங்க என்ன விட 6 வயசு மூத்தவர்னு நீனா (தபு) சொன்னா…  ரொம்ப ஜாக்கிரதையா இருக்கோணும்…  இல்லேன்னா அவ்ளோதான்…  சரி, என்ன குடிக்கிறீங்க… டீ தானே?  சீனி கம்?  நான்லாம் சீனியே போட்டுக்கிறது இல்லே…  நேத்து தான் ஆஞ்ஜியோ டெஸ்ட் பண்ணினேன்…  ஒரே ஒரு இடத்துல ப்ளாக் இருக்கு… ஓவர் கொலஸ்ட்ரால்…  நீங்களும் அப்பொப்போ டெஸ்ட் பண்ணிடுங்க…  வாரீஹளா.. நாளைக்கு ஃபுல் பாடி செக்கப்புக்கு அழைச்சுக்கிட்டுப் போறேன்…?


 சி.பி - ஆஹா, படம் செமயான தீம் போல... பார்த்துடவேண்டியதுதான்..


தபுவைப் பெண் கேட்க வந்த அமிதாபுக்கு எப்படி இருந்திருக்கும் என்று யோசித்துப் பாருங்கள்…


சி.பி - எக்சைல் நாவலை படிச்ச மாதிரி சப்புன்னு இருந்திருக்கும்.. ஹி ஹி 

  ஓம் பிரகாஷ் ஒரு சராசரி இந்தியனின் பிரதிநிதி.  ஞாநி தன் வயதையும் என் வயதையும் ஒப்பிட்டு மூச்சு வாங்க மூச்சு வாங்கப் பேசிய போது எனக்கு அச்சு அசல் ஓம் பிரகாஷ் கேரக்டரைப் பார்ப்பது போலவே இருந்தது.  சான்ஸே இல்லை.  என்ன ஒற்றுமை!!!



சி.பி -  உங்க 2 பேருக்கும் ஒரே குறைங்கற ஆதங்கத்துல தெரியாம சொல்லிட்டார்.. விடுங்க்ணா.. கூல்


என்னுடைய நண்பர்கள் அத்தனை பேரும் 30 வயதைத் தாண்டாதவர்கள். 


சி.பி - அண்ணன் கொள்கை எனக்கு பிடிச்சிருக்கு.. தாத்தா ஆனாலும் அண்ணனோட சிநேகம் எல்லாம் யூத்துங்க கூடத்தான்.. ஹி ஹி 



 ஒரு நண்பனோடு பெங்களூர் ஹிண்ட் பப்பில் இரவு 12 மணி வரை குடித்து விட்டு, அறைக்கு வந்து அங்கேயும் குடித்து விட்டு காலை நான்கு மணி அளவில் படுத்தேன். 


சி.பி - கேப்டனையே மிஞ்சிடுவீங்க போல, உங்களுக்கு அரசியல்லயும் நல்ல எதிர்காலம் இருக்குங்க்ணா.. ஏன்னா குடியும் ,கூத்தியும் வெச்சிருக்கிறவங்க தான் அரசியல்ல ஷைன் பண்றாங்க.. 

https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjf_XPAyv6WfA1kK9tYrOQVVCanCajiO06CIa_dH0SO0vpgsw3fzVud-11Y0ncbKZqhFFIlsVB40or0S3lUyNh4QTSiU11SGTxdWl1XVEFbKAsNelH1j2rxwW7DrbbX-mhmxdf81nktTv-M/s320/charu+zero3.JPG



 காலையில் ஏழு மணிக்கு எழுந்து எக்ஸைல் நாவலை கர்ம சிரத்தையாக எழுதிக் கொண்டிருந்தேன். 

சி.பி - காலங்காத்தால ஒரு வேலை இல்லாம ஒரு மொக்கை நாவல் எழுதும் ஹோமோ மன்னவனே.. என்ன நாவல்? அது என்ன நாவல்? ஓஹோஹோ.. 



  நண்பன் 12 மணிக்கு எழுந்து வாந்தி எடுத்தான். 

சி.பி - சரக்கு அடிச்சா வாந்திதான் எடுப்பான், பின்னே வாய்ல இருந்து லிங்கமா எடுப்பான்? அவன் என்ன நித்யானந்தாவா?



 நண்பனுக்கு வயது 28.  இதையும் எக்ஸைலில் எழுதி இருக்கிறேன்.  வாசகர் வட்டக் கூட்டங்களில் நான் நண்பர்களுடன் காலை நான்கு மணி வரை நடனம் ஆடுவது சர்வ சகஜம். 


 சி.பி - உங்களைப்போன்ற நல்ல மனிதர்கள் தான் எதிர்கால இந்தியாவை வழி நடத்தி செல்ல வேண்டும்.. உங்களின் 2 லட்சம் ரசிகர்களுக்கு என் வாழ்த்துகள்

 இதை விடுங்கள்.  பைபாஸ் ஸர்ஜரி என்னிடமிருந்து பணத்தைப் பிடுங்குவதற்காக அந்த மருத்துவமனை செய்த காரியம்.  வெறும் மருந்து மூலமாகவே குறைக்கக் கூடியதாகவே இருந்தது என்று அதற்குப் பின் பல மருத்துவர்கள் அபிப்பிராயப் பட்டனர். 



சி.பி - லேட் பிக்கப் லத்திகாண்ணே நீங்க.. நித்யானந்தாவை பற்றி   ஆஹா ஓஹோ பேஷ் பேஷ்னு சொன்னது இதே வாய் தான்.. அப்புறம் அபாயம் போகாதேன்னு லேட்டா சொல்லுச்சு.. ஏண்ணே.. இப்படி?

 தவிர, இதுவரை நான் அந்த வலி, இந்த வலி, ஜூரம் என்றெல்லாம் படுத்ததே இல்லை. 


 சி.பி - ஓஹோ , வலி வந்தா உக்காந்துக்குவீங்களா? சிட்டிங்க் ரைட்டர் கம் சீட்டிங்க் ரைட்டர்?


 கடந்த பத்து ஆண்டுகளில் ஒரே ஒரு முறைதான் படுத்திருக்கிறேன். 


 சி.பி - ஹி ஹி ஹி ஹி நாங்க நம்ப மாட்டோம்..

 நான் யாருக்கு ஃபோன் செய்தாலும் அவருக்கு உடல்நலம் இல்லை என்கிறார்கள்.  கடந்த பத்து ஆண்டுகளில் நான் ஒரே ஒருமுறை தான் சொல்லி இருக்கிறேன்.  இது என் நண்பர்களுக்குத் தெரியும்.  என்னிடம் பணம் இல்லை.  ஆனால் இந்த ஆரோக்கியத்தை வழங்கிய இறைவனுக்கு நன்றி.



சி.பி - ஹூம், ஆண்டவனை நினைச்சாத்தான் எனக்கு பாவமா இருக்கு, அவரும் தான் பாவம் எத்தனை பாவிங்களை கவனிப்பாரு?

ஆனால் இந்த ஆரோக்கியத்தைப் பேணுவது எப்படி என்று நாளொரு தினமும் எழுதிக் கொண்டு வருகிறேன்.  எக்ஸைல் நாவலில் பல பக்கங்களில் இந்த விபரம் உண்டு.  இதை சிரத்தையாகப் பின்பற்றினால் நீங்களும் 90 வயதில் துள்ளிக் குதிக்கலாம்.  நம் சித்தர்கள் சொல்லிக் கொடுத்த அற்புதம் இது.


சி.பி - அட.. ஆமாம்.. நீங்க கூட சித்தர்கள் ராஜ்ஜியம் பிளாக்ல நிறைய  படிச்சேன்னு ரீல் விட்டீங்களே..?


என் உடம்பு ஒன்றும் இரும்பால் செய்தது அல்ல.  ஆனால் நான் பின்பற்றும் சில வழிமுறைகளால் அப்படி இரும்பாக்கி வைத்திருக்கிறேன். 


சி.பி - இரும்படிக்கற இடத்துல ஈக்கு என்ன வேலை?உங்க உடம்பு இரும்புன்னா ஏண்ணே ஹாஸ்பிடல் எல்லாம் போறீங்க? ஹி ஹி  மெக்கானிக் ஷாப்ல போய் சர்வீஸ்க்கு விடலாமே?




 தினமும் காலையில் நாகேஸ்வர ராவ் பூங்காவில் 5 கி.மீ. தூரத்தை 35 இலிருந்து 40 நிமிட நேரத்தில் நடந்து முடிக்கிறேன்.  நான் குடி கூட இல்லாமல் வாழ்ந்து விடுவேன்.  ஆனால் காஃபிக்கு அப்படி ஒரு அடிமை. 


சி.பி - காஃபிக்கு நான் அடிமை.. கிடச்ச சூஃபிக்கு நான் அடிமை.. 



 காலையில் எழுந்ததும் ஃபில்டர் காப்பி குடித்தே ஆக வேண்டும். 

சி.பி - அண்ணே, நீங்க எந்தக்காலத்துல காலைல எந்திரிச்சிருக்கீங்க? மட்டையாகி விடிகாலைலதான் தூங்குவேன், மதியம் 12 மணீக்குதான் எந்திரிப்பேன்னு நீங்கதானே சொன்னீங்க?



 ஆனால் மூன்று ஆண்டுகளாக காலை காப்பியை விட்டு விட்டேன்.  அர்க் தான் குடிக்கிறேன்.  அர்க் என்பது பசு மாட்டின் மூத்திரத்தை distill செய்தது. 

சி.பி - இலக்கிய உலகின் ராஜாஜியே!! நீர் வாழி!

 https://www.nhm.in/img/978-81-8493-204-1_b.jpg

 தண்ணீர் கலக்காமல் குடித்தால் நாக்கு வெந்து விடும்.  நாற்றத்தில் குமட்டல் வந்து விடும்.  நாலரை மணிக்குக் குடிப்பேன்.  ஏழரைக்கு எழுந்து வரும் அவந்திகாவுக்கு அப்போதும் அறையில் பரவி இருக்கும் மூத்திர நாற்றம் குமட்டல் வருகிறது என்று சொன்னதால், எக்ஸாஸ்ட் ஃபேனைப் போட்டு விட்டுக் குடிக்கிறேன்.  அவந்திகாவிடமிருந்து பாராட்டு பெறுவது ரொம்பக் கஷ்டம்.  அதுவும் நான் என்றால் ரொம்ப ரொம்பக் கஷ்டம்.  அப்படிப்பட்ட அவளே ஒருநாள் நான் இரவில் அர்க் குடிப்பதைப் பார்த்து விட்டு “உன்னைப் போல் சகிப்புத் தன்மை கொண்டவர்களைப் பார்ப்பது கடினம்” என்றாள். 

சி.பி - உங்க நாவலை எல்லாம் ரெகுலரா படிக்கற உங்க வாசகர்கள் தான் சகிப்புத்தன்மை உள்ளவங்கன்னு நினைக்கறேன்.. 



 அர்க் குடித்த அன்று காக்டெய்ல் சாப்பிடுவதில்லை.  சாப்பிட்டால் அர்க் வேலை செய்யாது.

 சி.பி - ஓஹோ.. அர்க் ஜெர்க் ஆகிடுமா?

அது மட்டும் அல்ல; அர்க் குடித்தால் அதற்குப் பிறகு ஒரு மணி நேரத்துக்குத் தண்ணீர் கூட குடிக்கக் கூடாது.  அர்க் குடித்து விட்டு, நடக்கப் போய் விட்டால் அப்போது ஒரு தாகம் எடுக்கும் பாருங்கள்… கொடுமை.  எதற்கு இவ்வளவு பாடு?  உடம்பு இரும்பைப் போல் இருக்க வேண்டும்.  நோய் நொடி வரக் கூடாது.
இந்த அர்க் என்பது நான் செய்து வரும் ஹட யோகப் பயிற்சி முறைகளில் ஒன்றே ஒன்றுதான்.  இது போல் நூறு விஷயங்கள் இருக்கின்றன.

 சி.பி - நீங்க சொன்ன ஒரு மேட்டரே  வாசம் தூக்குது.. இதுல இன்னும் 100? அவ்வ்வ்



 இன்னொரு உதாரணம், பால் கலந்த எதையும் சாப்பிடுவதில்லை.   தேநீர் என்றால், ஊட்டியிலிருந்து வரவழைத்த white tea.  இது தேயிலைச் செடியின் மொக்குகளிலிருந்து தயாரிக்கப்படுவது.  இல்லை; சரியாகச் சொன்னால், ஒரு தேயிலைச் செடி வளர்ந்து முதல் மொக்கு விடும் நிலையிலேயே எடுத்து விடுவார்கள். 

 சி.பி - அண்ணன் தேயிலைல கூட ஃபிரெஸ் தான் கேட்பாரு போல..

  இப்படி எந்தக் காரியத்திலும் ஒரு ஹட யோகியாகவே வாழ வேண்டும்.  இதனால்தான் சில சாமியார்கள் ‘அந்த’ விஷயத்தில் பெரும் கில்லாடிகளாக இருக்கிறார்கள்.  ஸர்ட்டிஃபிகேட் வயது எனக்கு 59-ஆக இருக்கலாம். 


 சி.பி - நீங்க அம்பத்தி ஒன்பதா?ஹி ஹி

 ஆனால் 25 வயது இளைஞன் கூட என்னோடு எந்த விஷயத்திலும் போட்டி போட முடியாது.  எந்த விஷயத்திலும் என்பதை அழுத்தியே சொல்கிறேன். 


சி.பி - நீங்க, வெண்ணிற ஆடை மூர்த்தி, எஸ் ஜே சூர்யா எல்லாம் சாதாரணமா பேசுனாலே டபுள் மீனிங் தான்னு எங்களுக்குத்தெரியாதா? இடம் சுட்டி பொருள் விளக்கனுமா?

https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgO44puUY5_K2cQ-taCFAqTtzG984L5yakjlb0gdu-2DT_dW9VQiye_bCEXXLvTeSStIpnwcGfeJdckoPjVE5-FySCGa_lbOWeVb2Jg0rsTW687ycd_VdM_7Y96RVtGhk7idz1dU9l4UXk/s220/charu-blog-pic.tif
 nivedhidhaa chaterjii
 உங்கள் வயது எழுபதா?  நான் சொல்லும் டிப்ஸைக் குறித்துக் கொள்ளுங்கள்.  ஆறே மாதத்தில் 25 வயது இளைஞனாகி விடலாம்.  காலையில் இஞ்சி; மதியம் சுக்கு; இரவில் கடுக்காய்.  எப்படிச் சாப்பிட வேண்டும்?  கொஞ்சம் மரியாதையோடு கேட்டால்தான் சொல்லுவேன்.


கூட்டத்தை மதியம் இரண்டு மணிக்கு வைத்திருப்பதையும் விமர்சித்தார் ஞாநி.  எல்லோரும் உறங்கும் நேரத்தில் வைத்து விட்டதாகச் சொன்னார்.  மைக் முன்னால் பேசிக் கொண்டிருந்தவர் என் பக்கம் திரும்பி “நீங்களும் உறங்கும் நேரம் தானே இது?” என்று கேட்டார்.  நானும் தலையை ஆட்டி வைத்தேன்.  வேறு என்ன செய்வது?  நான் பகல் நேரத்தில் தூங்கியதே இல்லை.  இரவில் வெகு நேரம் கண் விழிப்பதும் இல்லை.  நாவல் எழுதிக் கொண்டிருந்தால் இந்த விதி பொருந்தாது.  இரவு பகல் எல்லா நேரமும் எழுத்துதான்.  இல்லாவிட்டால் எக்ஸைல் போன்ற ஒரு நாவலை ஐந்தாறு மாதத்தில் எழுதி முடிக்க முடியுமா?
மேலும், நான் எக்ஸைல் பற்றிப் பேசாமல் சக எழுத்தாளர்களைத் திட்டினேன் என்றார். 


 சி.பி - அது பொய்.. முதல்ல சுய புராணம், அப்புறமா தான் திட்டல் புராணம்.. நீங்க நெம்ப நெம்ப நல்லவர்ங்க்ணே

 இரண்டு மணி கூட்டத்துக்கு அவர் வரும் போது சுமார் நான்கு மணி இருக்கும்.  அதில் தவறு இல்லை.  கூட்டம் முடிவதற்குள் வந்து விட்டால் போதும்.  முன்னாலேயே வந்து உட்கார்ந்து இருக்க வேண்டும் என்ற எந்த அவசியமும் என் கூட்டத்தில் இல்லை.  அப்படிப்பட்ட சர்வாதிகாரப் போக்குகள் என் வாசகர் வட்டத்தில் கிடையாது.  ஆனால் இரண்டு மணியிலிருந்து ஒவ்வொரு நண்பரும் பேசிய பின் நானும் பேசினேன்.  அதைக் கேட்காமல் ஞாநி  எப்படிக் கருத்து சொல்ல முடியும்?  ஆனாலும் நான் எக்ஸைல் பற்றிப் பேசவில்லை.

சி.பி - நீங்க என்னைக்கு சப்ஜெக்ட் சம்பந்தமா பேசி இருக்கீங்க? 

  ஆனால் நான் ஏன் பேச வேண்டும் என்று கேட்கிறேன்.    காமராஜர் அரங்கில் வாசகர் வட்ட நண்பர்கள் எக்ஸைல் பற்றிப் பேச நேரம் இல்லாமல் போய் விட்டது.  அவர்கள் பேச வேண்டும் என்பதற்காக மட்டுமே இந்தக் கூட்டம் நடத்தப்பட்டது.


சரி, விஷயத்துக்கு வருகிறேன்.  

சி.பி - அப்பா சாமி, முடியல.. அண்ணன் மெயின் மேட்டர்க்கு வர ரொம்ப நேரம் எடுத்துக்கறாரு.. 


ஒரு பத்திரிகையில் கட்டுரை வந்து விட்டது என்பதற்காக இறைவனுக்கு நன்றி சொல்ல வேண்டுமா? டூ மச் என்றார் நண்பர் ஒருவர்.  ”ஒரு” பத்திரிகையில் இல்லை என்பதுதான் விஷயம்.  சென்னை, கல்கத்தா, மும்பை, தில்லி மட்டும் அல்ல; லண்டன் வாசகர்களுக்கும் சுவாரசியமாக இருக்கும்படி எழுத வேண்டும்.  இது எப்படி என்றால், தமிழ் சினிமாவில் யாருமே வட இந்தியா பக்கம் செல்ல முடியவில்லை.  நடிகைகள் மட்டுமே விதி விலக்கு.  ரஜினி, கமல், இளையராஜா யாராலும் முடியவில்லை.  சிவாஜியால் கூட முடியவில்லை.  முதல் முதலாக அதை உடைத்தவர்கள் மணி ரத்னமும் ஏ.ஆர். ரஹ்மானும்.  பிறகு ரஹ்மான் இந்திய எல்லையையும் தாண்டி ஹாலிவுட் சென்றார்; வென்றார்.  நான் ஏஷியன் ஏஜ் லண்டன் எடிஷனில் எழுதுவது ரஹ்மான் ஹாலிவுட் படத்துக்கு இசை அமைப்பதற்கு ஒப்பாகும்.  அதனால்தான் இறைவனுக்கு நன்றி சொன்னேன். 

 சி.பி - ஏஷியன் ஏஜ் லண்டன் பற்றி மக்கள்க்கு தெரிய வந்த ஒரே ஒரு பயன் தான் இந்த கட்டுரைல..

http://gracehopper.org.in/2011/files/2011/09/Srinivasan_Charu-185x300.jpg
 charu srinivasan
 அது சரி, ரஹ்மான் இறைவனுக்கு நன்றி சொன்னால் இனிக்கிறது; நான் சொன்னால் மட்டும் கசக்கிறதா?  இதில் அடங்கியுள்ள மர்மம் என்ன?  சொல்ல முடியும்…  சாதி, மதம் பேசுகிறேன் என்பார்கள் …


சி.பி - அண்ணே, இறைவனுக்கு நன்றி சொல்ல ஓரளவுக்காவது நல்லவரா இருக்கனும்ணே.. 


Love, in pixels -ஐ எழுதும் போது அது லண்டன் எடிஷனுக்கும் போகிறது என்று எனக்கு உறைக்கவில்லை.  பிறகுதான் ஞாபகம் வந்ததும் கலவரம் ஆகி விட்டது.  எனக்கு ஆங்கிலத்தில் எழுதும் columnists யாரையும் பிடிப்பதில்லை; வினோத் மேஹ்தாவும், குஷ்வந்த் சிங்கும் மட்டுமே விதி விலக்கு.  அவர்களை நான் தாண்ட வேண்டும்.  அதனால்தான் லோக்கல் இலக்கிய பாலிடிக்ஸ் வேண்டாம் என்று ஒதுங்கி இருக்கிறேன்.  இறைவனின் அருளால் வினோத் மேஹ்தாவையும் சர்தாரையும் தாண்டிச் செல்வேன்.  வாசகர் வட்ட நண்பர்களின் அன்பு ஒன்று போதும்.  நேற்று போரூரிலிருந்து விரால் மீன் வாங்கிக் கொண்டு வந்து கொடுத்தார் கணேஷ் அன்பு.  அவருடைய அன்பை நான் என்னவென்று சொல்வது?  இங்கே மைலாப்பூர், ஆர்.ஏ.புரம் ஏரியாவில் விரால் மீனே கிடைப்பதில்லை என்று ஒருநாள் சொல்லிக் கொண்டிருந்தேன்.  அதனால்தான் போரூரிலிருந்து விரால்மீனைக் கொண்டு வந்து விட்டார்.  கணேஷ் அன்புவைப் போல் சுமார் 50 பேர் இருக்கிறார்கள்.  அவர்களின் அன்பும் இறைவனின் அருளும் என் நோக்கங்களை நிறைவேற்றுவதற்காக சக்தியை எனக்குக் கொடுக்கும்…


சி.பி - இதன் மூலம் அண்ணன் தெரிவிப்பது வாசகர்கள் எது கொடுத்தாலும் அண்ணன் ஓ சி யில் வாங்கிக்க தயரா இருக்கார் என்பதே.. ஹி ஹி 


Wednesday, February 08, 2012

ரஜினியை கலாய்த்த சாரு நிவேதிதா,சாருவை கலாய்த்த ரஜினி ரசிகன்

http://www.tamilcnn.com/upload-files/feb_2012/hot/kochadaiyaan.jpg

சாரு -எஸ். ராமகிருஷ்ணனுக்கு நடந்த பாராட்டு விழாவில் ரஜினிகாந்த் கலந்து கொண்டது பற்றி நான் விமர்சித்துப் பேசியதைப் பலரும் பலவாறு புரிந்து கொண்டுள்ளனர்.  அது பற்றிய என் விளக்கமும், ரஜினியிடம் நான் கேட்ட சில கேள்விகளும் இங்கே:


சி.பி - என்னது? உங்களை தப்பா புரிஞ்சுக்கிட்டாங்களா? பேடு பாய்ஸ்.. சரியா புரிய வெச்சிடலாம் 

1.இலக்கிய விழாவில் சினிமா கலைஞர்கள் கலந்து கொள்ளக் கூடாது என்று நான் சொல்லவில்லை.  அப்படிச் சொல்வதற்கு நான் யார்?  இது ஒரு ஜனநாயக நாடு.  எந்த விழாவிலும் யார் வேண்டுமானாலும் கலந்து கொள்ளலாம்.  ஆனால் அப்படிக் கலந்து கொள்ளும் போது என்னென்ன நடைமுறைகள் பின்பற்றப்பட வேண்டும்?  துக்ளக் ஆண்டு விழாவில் ரஜினி கலந்து கொள்கிறார்.  எப்படி?  பார்வையாளர்களில் ஒருவராக.  ஆனால் எஸ்.ரா. விழாவில் ரஜினி கலந்து கொண்டது எப்படி?  அது பற்றியே என்னுடைய கேள்விகள்.



சி.பி - விழாவில்  கலந்து கொள்வது எல்லாம் அவங்கவங்க விருப்பம்.. அதுல எல்லாம் நொட்டு சொல்லிட்டு இருந்தா எப்படி?


அழைப்பிதழிலேயே தகராறு.  ரஜினி படத்தைப் பெரிதாகப் போட்டு, எஸ்.ரா. படத்தைச் சிறிதாகப் போட்டிருந்தார்கள்.  இப்படிச் செய்வது எழுத்தாளனை செருப்பால் அடிப்பதற்குச் சமம் என்று எழுதியிருந்தார் ஞாநி.  நடந்து முடிந்த பாராட்டு விழா எஸ்.ரா.வுக்கா? ரஜினிக்கா?


சி.பி - யாருக்கு மக்கள் செல்வாக்கு அதிகம் இருக்கோ அவங்க ஃபோட்டோவை, பேரை பெருசா போஸ்டர்ல போட்டா இன்னா தப்பு?போஸ்டரை பார்க்கற ஜனங்களுக்கு ரஜினி வர்றது தெரிஞ்சா போதும், விழாவுக்கு வந்து பார்த்து எழுத்தாளரை தெரிஞ்சுட்டுப்போறாங்க.. 

தமிழ் சினிமாவில் எனக்குப் பிடித்த பெயர் ரஜினி.  அடியேனுக்கும் அவருக்கும் ஓரிரு ஒற்றுமைகள் உண்டு. 

சி.பி - பாவம், ரஜினி , ஆளாளுக்கு அவரை ஒப்புமைப்படுத்தறாங்க அவ்வ்வ் இன்னும் கொஞ்ச நாள் போனா வி சாரதி டேச்சு ஆனந்த விகடன்ல எழுதுன கடி ஜோக் போல ஆகிடும்

நானும் ரஜினியும் ஒரே இலைல தான் சாப்பிட்டோம்

அடடே.. அவ்ளவ் நெருக்கமா?

ச்சே. ச்சே.. அவரும் வாழை இலைல தான் சாப்பிட்டார், நானும் வாழை இலைல தான் சாப்பிட்டேன்.

என்னைப் போலவே அவரும் வெள்ளந்தியான மனிதர்.  மஹா அவ்தார் பாபாவைத் தொழுபவர்.  மற்றும் இமயமலைப் பயணம்.  அவரிடம் நான் வியந்து பாராட்டும் பண்பு அவரது எளிமை. மற்றும் போலித்தனமோ பாசாங்கோ இல்லாத தன்மை.  பத்திரிகை நிருபர் வருகிறார் என்றதும் லேண்ட்மார்க்கில் granta தொகுப்புகளை வாங்கி மேஜையின் மீது வைத்து விட்டு பத்திரிகையாளரிடம் பேச்சுக்குப் பேச்சு “க்ராண்டாவெல்லாம் படிக்கிறோம்… இந்தத் தமிழ்நாட்டு மக்களுக்கு எதுவும் புரியவில்லையே” என்றெல்லாம் பாசாங்கு செய்ய மாட்டார் ரஜினி. 

சி.பி - சாரு ரஜினியை பாராட்ற ,மாதிரி ஏதோ ஒரு எழுத்தாளரை தாக்கறாரு.. இதான்யா தமிழன் பண்பாடு.. அடுத்தவனை தாக்காம ,மாற்றான் தோட்டத்து மல்லிகையை  நோக்காம தமிழனால இருந்துட முடியாதே?


அவர் நடிப்பது திரையில் மட்டுமே.  ரஜினியின் நடிப்பும் எனக்குப் பிடிக்கும்.  அபூர்வ ராகங்களிலிருந்து பதினாறு வயதினிலே, தளபதி வரை பல படங்களில் அவரது நடிப்பை நான் ரசித்திருக்கிறேன்.


பொதுவாழ்விலும் தன் சொந்த வாழ்விலும் அற இயல்பை (ethics) வெளிப்படுத்தும் ரஜினி எஸ்.ரா. விழாவில் தனக்கு நடந்த ஜால்ரா புகழ்ச்சியைத் தட்டிக் கேட்டிருக்க வேண்டாமா? ”இது எனக்கு நடக்கும் பாராட்டு விழாவா? எஸ்.ரா.வுக்கு நடக்கும் பாராட்டு விழாவா?” என்று கேட்டிருக்க வேண்டாமா?  எஸ்.ரா.வுக்கு நடக்கும் பாராட்டு விழாவில் என் புகைப்படத்தை ஏன் பெரிதாகப் போட்டீர்கள் என்று கண்டித்திருக்க வேண்டாமா?  அழைப்பிதழில் என் படமே வந்திருக்கக் கூடாது என்று சொல்லியிருக்க வேண்டாமா?


சி.பி - சரி ஒரு வாதத்துக்காக கேட்கறேன், உங்க புத்தக வெளீயீட்டு விழாவுல ரஜினி பேச ஒத்துக்கறார், இப்போ சொன்ன அதே கண்டிஷன்ஸை நீங்க ரஜினிக்குப்போடுவீங்களா? அல்லது அவர் வந்தாலே போதும்னு நினைப்பீங்களா? விழாவுக்கு அவரைப்போல் வி ஐ பிங்களை அழைப்பதன் நோக்கம் மக்கள் கவனத்தை தன் பக்கம் இழுக்கத்தானே, அதுல என்ன தப்பு இருக்கு?


https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEg8AAvKaSncrIfslOXuIwYPRzkZBTDEhMKZfAHMsdr0VZu42BwcZrmZHNm5bBA71b-pBuku7saQZd5V-5VEjw-8ke-8a4LRoTWB52T_pA0AztD55Qw2N19n1P1LVvZW_Ox4_YggWTmvayg/s1600/Balu-mahendra-010808.jpg
எஸ்.ரா.வுக்கு நடந்த பாராட்டு விழாவில் எஸ்.ரா.தானே கடைசியில் பேச வேண்டும்?  அதுதானே நடைமுறை?  அதை விட்டு விட்டு ரஜினியைக் கடைசியில் பேச அழைத்தது ஏன்? 

சி.பி - சார்.. உலக நடப்பு தெரியாம, தமிழனை பற்றி சரியா புரியாம பேசக்கூடாது.. ரஜினி பேசிட்டா எல்லாரும் கிளம்பிடுவாங்க.. கூட்டமே  இல்லாத கடைல யாருக்காக டீ ஆத்துவீங்க? 




சாருவும் சினிமா கலைஞர்களை விழாவுக்கு அழைக்கிறார் என்று கூறுபவர்களையும் ரஜினிக்குப் பாராட்டு விழா நடத்தியவர்களையும் கேட்கிறேன்.  இன்னொரு முறை காமராஜர் அரங்கில் கூட்டம் நடத்தி, அதில் ரஜினிக்குப் பிறகு எஸ்.ரா.வைப் பேச அழைக்க முடியுமா?  உங்களிடம் அந்தத் துணிச்சல் இருக்கிறதா?  இதை ஒரு சவாலாக உங்கள் முன் வைக்கிறேன். கருணாநிதியைப் போல் வார்த்தைகளில் பதில் சொல்லி விளையாடாமல் செய்து காட்டுங்கள்.  அல்லது, ரஜினியை ஏன் கடைசியாகப் பேச அழைத்தீர்கள் என்று நேரடியாக பதில் சொல்லுங்கள்.  ஏன் என்றால், எஸ்.ரா.வுக்கு முன்னால் ரஜினியைப் பேச அழைத்தால் அரங்கம் காலியாகி விடும்.  அந்தக் கூட்டம் எஸ்.ரா.வுக்காக வந்தது அல்ல; ரஜினிக்காக வந்தது.


சி.பி - அட, நீங்களும் அதுதான் சொல்றீங்களா?  சரி.. அதுல என்ன தப்பு  இருக்கு? 

இதையும் ரஜினி மேடையில் கண்டித்திருக்க வேண்டும்.  கண்டிக்கவில்லையானாலும் குறிப்பிட்டிருக்க வேண்டும்.  எஸ்.ரா.வுக்கு நடக்கும் பாராட்டு விழாவில் எஸ்.ரா.தான் கடைசியில் பேச வேண்டும் என்று அவர் சொல்லி இருக்க வேண்டும்.   ஏன் அவர் இதைச் சொல்லவில்லை?  துக்ளக் விழாவில் ரஜினியா கடைசியில் பேசுகிறார்?  அங்கே அவர் வெறுமனே பார்வையாளராக முதல் வரிசையில் அமர்ந்திருப்பார்.  அப்படியானால் இலக்கியம் என்றால் அவ்வளவு மட்டமாகப் போய் விட்டதா?  எல்லோரையும் புத்தகம் படிக்கச் சொல்லி அறிவுரை சொன்ன ரஜினியே இலக்கியவாதிகளை அவமதிப்பது போல் நடந்து கொள்ளலாமா?



சி.பி - இந்த மாதிரி வம்புகள் வரும்னு தான் அஜித் மாதிரி சிலர் பொது நிகழ்ச்சிகளுக்கு வர்றதையே அவாய்டு பண்றாங்க போல.. எது செஞ்சாலும் அதுல ஒரு குத்தம் கண்டு பிடிச்சுட்டு.. 


தன் பேச்சில் தாமஸ் ஆல்வா எடிஸன் பைபிள் படித்தது பற்றிக் குறிப்பிட்டார் ரஜினி.  அவர் பைபிள் படித்ததில் ஆச்சரியம் என்ன?  அவர் பகவத் கீதை படித்திருந்தால்தானே ஆச்சரியம்?  மேலும், படிப்பு என்பது ஆன்மீகப் புத்தகங்களைப் படிப்பதா?  ஊருக்கு ஒன்பது பொறியியல் கல்லூரிகள் உள்ளன.  அங்கே பயிலும் மாணவர்களும் படித்துக் கொண்டுதானே இருக்கிறார்கள்?  அதுவும் இலக்கியமும் ஒன்றா? தமிழர்கள் பல துறைகளில் படிப்பாளிகளாக இருந்தாலும் இலக்கிய வாசிப்பு அவர்களிடம் அறவே இல்லை என்பதுதானே நூறு வருடங்களாக இங்கே இருக்கும் நிலைமை?


சி.பி - இலக்கிய வாசிப்பு தமிழனிடம் குறைஞ்சிருக்குன்னு சொல்லுங்க, அறவே இல்லைன்னு சொல்லாதீங்க.. வருடா வருடம் புத்தகத்திருவிழாவில் புக்ஸ் விக்குதே?


புத்தக விழாக்களில் மக்கள் கை நிறைய புத்தகங்களை வாங்கிக் கொண்டு போகிறார்கள்.  ஆனால் அதெல்லாம் சமையல், ஆன்மீகம், டிக்‌ஷனரி, பாடப் புத்தகங்கள் போன்றவையாக இருக்கின்றனவே?  மற்ற மாநிலங்களில் இப்படியா நடக்கிறது?  சரி, உங்களிடம் ஒரே ஒரு கேள்வி கேட்கிறேன்.  கன்னடத்துக்கு மட்டும் எப்படி எட்டு பாரதீய ஞான பீடப் பரிசும் தமிழுக்கு இரண்டும் கிடைத்தது?  தமிழர்கள் இலக்கியம் படிப்பதில்லை; தமிழர்களுக்கு சினிமா தான் எல்லாம் என்பதைத்தானே இது காட்டுகிறது?  இப்படிப்பட்ட நிலையில் நீங்களும் ஆன்மீகம் படிப்பதுதான் படிப்பு என்றே புரிந்து கொண்டு எப்படி ஒரு இலக்கிய விழாவில் பேசுகிறீர்கள்?

 சி.பி - ரஜினி ஒண்ணும் ஆன்மீகம் மட்டும் படிங்கன்னு மேடைல சொல்லலையே? அவருக்குத்தெரிஞ்சதை அவர் சொன்னார்.. அதுல என்ன தப்பு? நீங்க எழுதுன ஃபேன்சி பனியன் நாவல்ல கில்மா எதுக்கு? தவிர்க்கவும்னா நீங்க கேப்பீங்களா? அவங்கவங்க எதுல டேலண்ட்டோ அதுல பேச்சு, பழக்க வழக்கம் வெளிப்படறது  சகஜம் தானே?

http://www.kollytalk.com/wp-content/gallery/rajini-at-s-ramakrishnan-felicitated-event/rajini-at-s-ramakrishnan-felicitated-event-27.jpg

மதிப்புக்குரிய ரஜினியிடம் இன்னொரு கேள்வி:  இயல் விருதை சர்வதேச விருது என்கிறார்களே, இதைப் பற்றி விசாரித்து அறிந்தீர்களா?  கனடாவில் உள்ள ஒரு தமிழ் அமைப்பு தமிழ் எழுத்தாளருக்கு ஒரு விருது கொடுத்தால் அதற்குப் பெயர் சர்வதேச விருதா?  இப்படி ஒரு எழுத்தாளரிடம் ஏமாந்து போனதால் தான் உங்களை வெள்ளந்தியான மனிதர் என்கிறேன்.  இப்போதாவது அந்த விருதைப் பற்றித் தெரிந்து கொள்ளுங்கள்.  ஒரு உதாரணம் சொல்கிறேன்.  மெல்பேர்ன் நகரில் (ஆஸ்திரேலியா) உள்ள தமிழர்கள் ஒரு ரெக்ரியேஷன் கிளப் வைத்திருக்கிறார்கள் என்று வைத்துக் கொள்வோம். அவர்கள் என்னுடைய நண்பர்கள்.  என்னை அங்கே அழைத்து ஒரு பொங்கல் தினத்தில் முயல் படம் ஸாரி கங்காரு படம் போட்ட ஒரு மெமண்டோவைக் கொடுக்கிறார்கள் என்று வைத்துக் கொள்வோம்.  உடனே நான் சர்வதேச விருது கொடுத்து விட்டதாக சொல்லிக் கொள்ளலாமா?  சமீபத்தில் கூட சிங்கப்பூரில் வசிக்கும் என் நண்பர் ஒருவர் முஸ்தஃபா கடையிலிருந்து எனக்கு ஒரு சிங்கப்பூர் பனியன் கொண்டு வந்து கொடுத்தார்.  உடனே நான் சர்வதேச பனியன் கிடைத்து விட்டது என்று சொல்லி ஒரு விழா வைத்தால் அதற்கு நீங்கள் வருவீர்களா?

சி.பி - மேடை நாகரிகம் கருதி ஏதோ பேசிட்டார்.. அதுல போய் குறை சொல்றீங்களே? சக எழுத்தாளர் மேல அப்படி என்ன வயிற்றெரிச்சல் உங்களுக்கு? 


நோபல் பரிசு, மேன் புக்கர் பரிசு போன்ற விருதுகளைத்தான் நாம் சர்வதேச விருதுகள் என்று சொல்ல முடியும்.  உதாரணமாக, புக்கர் பரிசு எப்படிக் கொடுக்கப்படுகிறது என்றால், உலகில் உள்ள எல்லா மொழிகளிலும் வெளியாகியுள்ள பல்வேறு எழுத்தாளர்களின் நாவல்களையும் பரிசீலித்து அவற்றில் சிறப்பானவற்றை long list செய்கிறார்கள்; பிறகு அதிலிருந்து ஒரு short list வருகிறது.  பிறகு அந்த குறும்பட்டியலிலிருந்துதான் ஒரே ஒரு நாவல் தேர்ந்தெடுக்கப் படுகிறது.  இதேபோல்தான் ஏஷியன் மேன் புக்கர் விருதும்.  ஆசியாவிலிருந்து வெளிவந்த நாவல்களிலிருந்து  (ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டவை) ஒரு நாவல் தேர்ந்தெடுக்கப்படுகிறது.  முதலில் long list… பிறகு short list.  கடைசியில் ஒரே ஒரு நாவல்.  அதற்குப் பெயர் கூட சர்வதேச விருது அல்ல; Asian Man Booker…  அது ஒரு ஆசிய விருது.  அவ்வளவுதான்.  எனவே இயல் விருது என்பது நம்முடைய கலைமாமணி விருதுக்கு சமமான ஒரு விருது என்பதே உண்மை.


சி.பி- குஷ்பூ கூட கலைமாமணி தான், போற போக்கை பார்த்தா அங்காடித்தெரு அஞ்சலி,ஆடுகளம் டாப்ஸினு ஆளாளுக்கு கலைமாமணி விருது வாங்கிடுவாங்க போல 

இதைவிட கொடுமையான விஷயம் என்னவென்றால், ”ரஜினி மிகப் பெரிய எழுத்தாளர்” என்று ராமகிருஷ்ணன் சொன்னதுதான்.  இதையாவது நீங்கள் கண்டித்திருக்க வேண்டாமா?  கண்டித்திருந்தால் உங்கள் மதிப்பு கூடுமே ஒழிய குறைந்திருக்காதே?  அரசியலில் இப்படிப்பட்ட வீண் முகஸ்துதிகளை நீங்களே விரும்பியதில்லையே?  அப்படியிருக்க, உங்களை ஒரு ஒருவர் “மிகப் பெரிய எழுத்தாளர்” என்று சொன்னபோது உங்களுக்குக் கூச்சமாக இல்லையா?  நல்லவேளை, நீங்கள் பதிலுக்கு எஸ். ராமகிருஷ்ணனை “மிகப் பெரிய நடிகர்” என்று புகழவில்லை.  அப்படிப் புகழ்ந்திருந்தால் அது புகழ்ச்சிக்குப் பதிலாக வேறு விதமாக அர்த்தமாகி இருக்கும்…


பாவம், தமிழ் எழுத்தாளர்கள் இந்த அளவுக்குத் தரம் தாழ்ந்து போக வேண்டியதில்லை.

சி.பி - உங்களைக்கூட நிறைய பேரு நல்ல கண்ணியமான எழுத்தாளர்னு சொல்றாங்க.. அதை யாராவது தட்டிக்கேட்டாங்களா? சார்.. மேடைல கொஞ்சம் உயர்வு நவிற்சியா ஏதாவது சொல்றதுதான்.. அதை எல்லாம் லைட்டா எடுத்துக்கனும். மோர் சாப்பிடுங்க லைஃப் நல்லாருக்கும்..வயிறு எரியாது

Friday, January 20, 2012

விஜய் ரசிகரே விஜயை கலாய்த்ததால் கோடம்பாக்கம் அதிர்ச்சி, அம்பலம் ஆனது கடிதம் ஜாலி கலாட்டா

http://tube.tamilcloud.com/wp-content/uploads/2011/11/3.jpg

 ட்விட்டர் நண்பர் கட்டதுரை காமெடி கலக்கல் மன்னன்.. அவர் நம்ம நண்பர் மாயவரத்தான் அவர்களின் கட்டுரை.காம்ல காமெடியா நண்பன் விமர்சனத்தை எள்ளல் பாணில எழுதுனாரு.. அது செம ஹிட் ஆகி  ரெக்கார்டு பிரேக் பண்ணிடுச்சு.. அட்ரா சக்க இணய தளத்தோட  முக்கியமான , முக்காதமான கொள்கை (!!) என்னான்னா சொந்தமா ஒரு ஹிட் போஸ்ட் போட ட்ரை பண்ணனும்.. அது முடியாத பட்சத்துல ஆல்ரெடி ஹிட் ஆன போஸ்ட்டை ரீ மிக்ஸ் பண்ணி போடனும்.. ஹி ஹி ஹி

அன்புத் தலைவா விஜய். உன் அப்பாவி ரசிகன் எழுதிக் கொள்(ல்)வது.

கடுப்பைக் காட்டுறதுக்கு முன்னாடி, உனக்கு பொங்கல் வாழ்த்தை சொல்லிடுறேன்!

சி.பி - வீழ்த்துவதற்கு முன் வாழ்த்தா? அவ்வ்வ் நடக்கட்டும்.. 

முதல்ல யாரைக் கேட்டு இந்த படத்திலே நடிக்க நீ ஒத்துக்கிட்டே? நீ ரீமேக்ல மட்டும்தான் நடிப்பேன்னு உலகத்துக்கே தெரியும். ஆனா  இப்புடி செத்தவன் வாயில வெத்தலையை வெச்ச மாதிரியான ஒரு கேரக்டர்லே உன்னை பார்க்க முடியாம பாப்கார்னை வாய்ல திணிச்சுகிட்டு நான் குலுங்கிக் குலுங்கி அழுதது எனக்கு மட்டும் தான் தெரியும் தலைவா!


சி.பி - ஆமா எங்கண்ணன் கொள்கையே யார் மேக்காக இருந்தாலும் அது ரீ மேக்காக இருக்கனும்


கதை – அந்த கருமத்தை நான் என் வாய்ல வேற சொல்லணுமா?


சி.பி - சும்மா கை சிக்னல்லயே சொல்லுங்கண்ணே, 2 லைன் கதைக்கு எதுக்கு வீர உரை?

புள்ளைங்க விருப்பப் படுறதை படிக்க வைங்க – இதான் ஒன் லைனர், முழுக் கதை எல்லாமே!
தலைவா, உனக்கு படிப்பு வராம உங்க அப்பா நடிக்க வைச்சாரு. உனக்கு நடிப்பாவது வரணும்னு நாங்களும்,15 வருஷமா உன் மொக்கை படத்தை எல்லாம் ஹிட்டு படமாக்கினோம்.  இப்ப வந்து விருப்பப்பட்டதை படின்னு அட்வைஸ் பண்ணினா நாங்க எங்க போறது?  முதியோர் கல்வியிலே ஏது தலைவா விருப்பப் பாடம்?!


சி.பி - அவர் படிக்கலைன்னு யார்யா சொன்னது? வாரா வாரம் குமுதம் விகடன் எல்லாம் படிக்கறவராம்.. 

காட்டு காட்டுன்னு காட்டுவியே, இதுல ஒரு தடவை கூட பஞ்ச் டயலாக்கை நீ காட்டவே இல்லியே. நீ ஏன் தலைவா, இப்படி ஒரு படத்தை ஒத்துகிட்ட?


சி.பி - ஷங்கர் புக் பண்றப்பவே வாயை திறக்கவே கூடாதுன்னு கண்டிஷன் போட்டுட்டுதான் அட்வான்ஸே குடுத்தாராம்..

சீனுக்கு சீன், கேமரா ஆங்கிள் கூட துளிக்கூட மாத்தாம எடுக்க ஷங்கர் எதுக்கு தலைவா? டெய்லி 200 ரூவா பேட்டா வாங்குற அசோசியேட்டு டைரக்டர் கூட இதை எடுக்கலாமே!? இதெல்லாம் தெரிஞ்சிருந்தும் நீ எதுக்கு தலைவா ஒத்துக்கிட்ட?


சி.பி - சத்யன் மேடைல பேசி ஒரு காமெடி பண்றாரே.. அந்த ஒரு சீன் புதுசுங்கோவ்.. 

வழக்கமா ரோலிங் ஷட்டரை பொளந்துக் கிட்டு வர நீ,சைலண்டா ஒரு கோல்ஃப் விளையாடுறவன் பையை முதுகிலே சொமந்து கிட்டு வர! அதிலேயே என் மனசு நொறுங்கி போய்டுது.


தலைவா, அது மட்டும் இல்லாம, உன்னை ராகிங் பண்ணறதுக்காக,  உன் ஜீன்ஸ்குள்ளேயே ஒருத்தன் தண்ணியை ஊத்துறான்.  ஏர்லே டைவ் அடிச்சு அவன் குரல் வளையைக் கடிச்சுத் துப்பாம, ரூமுக்குள்ள போய், கரண்டு ஷாக் குடுக்குற! உன் கண் பார்வையிலேயே ஆயிரம் மெகா வாட் ரெடி பண்ணி க்ரிட்ல குடுக்கலாம். அதை விட்டுட்டு நீ என்னடான்னா குண்டு பல்பைப் புடுங்கி எதிரிக்கு ஷாக் குடுக்குறே. எதிரிக்கு மட்டுமா, எங்க எல்லாத்துக்கும் தான்! அந்த சீனிலேயும் தியேட்டரே குலுங்கிக் குலுங்கிச் சிரிக்குது. ஆனா உன் உண்மை ரசிகன் வயிரு எரியுது. நீ எதுக்கு தலைவா இதுக்கு ஒத்துகிட்ட?


சி.பி - உங்களுக்கென்னா ஈஸியா கேட்டுப்புட்டீங்க.. 5 ஃபெயிலியர் தொடர்ந்து குடுத்தாச்சு.. ஒரு ஹிட் அவசியம் தேவை.. வேற வழி இல்லை.. 

http://www.envazhi.com/wp-content/uploads/2011/01/shankar-new.jpg

ஹிந்தியில சூப்பர் ஹிட்டுன்னு ஃபர்ஸ்ட் கிளாஸ் டிக்கட் எடுத்தவங்க எல்லாம் பேசிக்கிறாங்க. அமிர்கான் அதுல இன்னும் சூப்பரா நடிச்சுருப்பாருன்னும் பேசிக்கிறாங்க. அதெல்லாம் 30 ரூவா டிக்கட் எடுத்து வந்து ஸ்கிரினுக்கு பக்கத்துல பாக்குற எனக்குத் தெரியாது தலைவா.


சி.பி - ஹிந்தி அளவுக்கு இது ஹிட் ஆகலைன்னாலும் இது ஒரு ஹிட் படம் தான் 

நீ ’நடிக்கற’துனால எவ்வளவு பிரச்னை பாத்தியா? பேரே தெரியாத இன்னொருத்தனைப் பாத்து உன்னை கம்பேர் பண்றாங்க. என்னைக்காச்சும் பேரரசு இப்படி ஒரு கெட்ட பேரை உனக்கு உண்டு பண்ணிருப்பாரா. யோசி தலைவா. நீ எதுக்கு தலைவா இதுக்கு ஒத்துகிட்ட?


சி.பி - பேரரசா? அவர் இப்போ பரத் , அர்ஜூன் அப்டி இறங்கி ரொம்ப வருஷம் ஆகுது..ஊரரசா இருந்தவரு மனைவிக்கு அல்வா குடுத்த பாவத்துக்கு ஊசிப்போன அரசு ஆகிட்டார்..





விண்வெளியில பென்சிலிலா எழுதலாமே, எதுக்கு இவ்வளவு செலவு பண்ணி பேனா கண்டுபுடிக்கணும்னு நீ கேட்கும் போது, தியேட்டரே கைதட்டுது. ஆனா பக்கத்து சீட்டுக்காரனுங்க, ’இந்தப் படத்தை டப்பிங் பண்ணி உட்டுருக்கலாமே.. எதுக்கு இம்புட்டு செலவு பண்ணி ரீமேக் பண்ணிருக்கானுங்க’ன்னு கேட்குறாங்க. விவ(கா)ரமான பயலுங்க போல! நீ எதுக்கு தலைவா இதுக்கு ஒத்துகிட்ட?


சி.பி -  அண்ணன் நடிக்கறது 90% ரீ மேக் தான்.. எல்லாத்தையும் டப் பண்ணி இருக்கலாம்னு  கேட்டுட்டா அப்போ பாவம் அவர் என்னதான் செய்வாரு.. சும்மா ஜுவ்வல்லரி விளம்பரமே நடிச்சுட்டு இருக்க வேண்டியதுதான்.. 


ஸ்க்ரின்ல வந்து போற எல்லா பயமக்களுக்கும் நல்லது பண்றியே.உன்னையே நம்பி இருக்குற, என்னைய மாதிரியான ‘சுறா’ ரசிகன் நிலைமையை நினைச்சுப் பாத்தியா? ஹிந்தியில கரினா கபூர் ஜீரொ சைஸ்ல இருந்தாங்கங்குறனால, பத்து நாள் டயரியால அடிபட்ட மாதிரி இருக்குற இலியானவை புடிச்சு போட்டிருக்காங்க. ஹன்சிகா மாதிரி பல்கியான ஃபிகரோட உன்னைப் பாத்துபுட்டு, இந்த மாதிரி பாக்க வயித்தெறிச்சலா இருக்கு தலைவா. நீ எதுக்கு தலைவா இதுக்கு ஒத்துகிட்ட?



சி.பி - அண்ணன் சைக்காலஜியே தெரில.. வேட்டைக்காரன்ல அனுஷ்காவை ஹீரோயினா போட்டதுல எல்லாரும் அனுஷ்கா பற்றியே பேசுனாங்களாம்.. அதனால யாரும் தன்னை டாமினேட்டோ, டைகர் மேட்டோ , ரோஸி மேட்டோ ( டாமி, டைகர், ரோஸி - ஆல் டாக் நேம்ஸ் ) பண்ணிடக்கூடாதுன்னு அடக்கி வாசிக்கற நடிகையை ஜோடி ஆக்கிட்டாரு போல.. 

அம்பது பேரு உன்னைச் சுத்தி நின்னாலும் கரண்டு கம்பத்தைப் புடுங்கி அம்பது செகண்டுலே எல்லாரையும் சாய்ச்சுப் புடுவியே தலைவா, இதுல வரவன் போறவன்கிட்ட எல்லாம் அறை வாங்குறியே தலைவா. இந்த கண்ராவிய பார்க்கவா நான் காசு குடுத்து உன்னைப் பார்க்க வந்தேன். நீ எதுக்கு தலைவா இதுக்கு ஒத்துகிட்ட?


சி.பி - புக் பண்றப்ப ஷங்கர் சாமார்த்தியமா உங்களுக்குன்னு தனியா 8 அறை உண்டுன்னாராம்.. அண்ணன் ரூம்னு தப்பா நினைச்சு அக்ரீமெண்ட்ல சைன் பண்ணிட்டாராம்.. 


நீ ஸ்பெல்லிங்க மாத்தி சத்யன் அதை ஸ்டேஜ்ஜிலே படிச்சு எல்லாரும் கைதட்டி சிரிக்குறாங்க. அந்த மொக்கையைப் பாக்க சகிக்காம சீட்டுக்கு கீழே படுத்துகிட்டு நான் அழுதேன் தலைவா.  நான் என்னவோ வயிறு குலுங்கி சிரிக்கிறதா எல்லா பயலும் நினைச்சுக்கிட்டு குமுறி குமுறிச் சிரிக்கிறானுங்க தலைவா. உன் உயிர் ரசிகனுக்கு இந்த அவமானம் தேவையா? நீ எதுக்கு தலைவா இதுக்கு ஒத்துகிட்ட?


சி.பி - சத்யன் ரோல் இப்படி ஹிட் ஆகும்னு தெரிஞ்சிருந்தா அந்த ரோல்லயும் அவரே நடிச்சு காமெடி பண்ணி இருப்பாரு அடடா ஜஸ்ட் மிஸ்னு இப்போ புலம்பறாராம்.. 

http://img.bollywoodsargam.com/albumsbolly/Ileana_Hot_Saree_Fashion/Ileana_Hot_Saree_Fashion_BollywoodSargam_laughing_479522.jpg

இண்டர்வெல் ப்ளாக்ல , பஞ்சவன் பாரி வேந்தன் (உன் பேருதான் தலைவா) ஃபோட்டோ பக்கத்துல சூர்யா போட்டோவைப் பாத்து பதறிப் போய் ஜீவாவும், ஸ்ரீகாந்தும் நீ காணம போய்ட்டியோன்னு திகைச்சுப் போய் நிக்குறாங்க. அதைப் பாத்துபுட்டு இண்டர்வெல்லுக்கு அப்புறம் நீ வரமாட்டியோன்னு நினைச்சு உன் ரசிகர்கள் பாதிப் பேரு தியேட்டரை விட்டு வெளியே போய்ட்டாங்க தலைவா. இந்த மாதிரி அப்பாவி ரசிகன் வாயில மண்ணை அள்ளிப் போட்டியே. நீ எதுக்கு தலைவா இதுக்கு ஒத்துகிட்ட?


சி.பி - படத்துல தான் பன்ச் இல்ல, கேரக்டர் நேம்லயாவது பஞ்ச் இருக்கட்டும்னு தான் அப்படி வெச்சாங்களாம். ( பஞ்ச் அவன் பாரி = பஞ்சவன் பாரி)

பொதுவா கனவு சீன் ஃபாரின் பாட்டுலே எல்லாம் தனியா நீ மட்டும் போய் மலை பக்கம் ஆடிக்கிட்டு இருப்பியே தலைவா. இதுலே கும்பல் கும்பலா வந்து உன் ஆட்டத்த காலி பண்ணி புட்டாய்ங்களே தலைவா. உன் குத்தாட்டத்த பாத்து ரசிகனானவன் வாயிலேயே குத்தி பழிவாங்கிட்டியே தலைவா. நீ எதுக்கு தலைவா இதுக்கு ஒத்துகிட்ட?


சி.பி - நல்ல வேளை டான்ஸ் சீன்ல கிராஃபிக்ஸ் இருக்குன்னு ஒரு பயலும் கண்டு பிடிக்கலை.. 

நீ ஸ்கிரின்ல வந்த உடனே கை தட்டின உன் உயிர் ரசிகன் நாலு பேர்ல நானும் ஒருத்தன். இது உன் படம் இல்லைன்னு ஒரு வார்த்தை சொல்லிருந்தா, டிக்கட்டு காசுல மானங்கெட்ட மானிட்டர ஒரு குவார்ட்டர் குடிச்சுப்புட்டு, குப்புறப் படுத்து தூங்கிருப்பேனே தலைவா! நீ எதுக்கு தலைவா இதுக்கு ஒத்துகிட்ட?


சி.பி - டைட்டில்லயே ஷங்கரின் நண்பன்னு தானே போஸ்டர் இருக்கு.. ? நீங்க கவனிக்கலை.. அதுக்கு அவர் எப்படி பருப்பு ஆக முடியும் ? சாரி பொறுப்பு ஆக முடியும்?


க்ளைமாக்ஸ்ல நீ குறுந்தாடி வச்சுகிட்டு வரப்பவே நீ தான் அந்த கொசகசா பஸபுகழ் விஞ்ஞானின்னு தியேட்டரில டயர்டாயி தூங்குற குழந்தைப்புள்ள கூட சொல்லிப்புடும். (இந்த விஞ்ஞானி பேரை சரியா சொல்றவனுக்கு ஏதாவது பரிசு குடு தலைவா!) சரி..படம் ஃபுல்லா அரை வாங்கியிருக்கியேங்கிற கடுப்புல உட்காந்த உன் ரசிகனை , க்ளைமாக்ஸ்லயும் மிதி வாங்கி  சின்னா பின்னமாக்கிட்டியே தலைவா. நீ எதுக்கு தலைவா இதுக்கு ஒத்துகிட்ட?


சி.பி - வழக்கமா அண்ணன் படம் தான் சின்னா பின்னமாகும், இதுல ஒரு மாறுதலுக்கு அண்ணன் அப்படி ஆகி படத்தை காப்பாத்திட்டார். 
நீ விஞ்ஞானியா நடிக்குற துணிச்சல் உனக்கு இருக்கலாம் தலைவா. ஆனா 30 ரூவா குடுத்து முன்னாடி சீட்ல உட்காந்து பாக்குற என்ன மாதிரி ரசிகர்களுக்கு அந்த தைரியம் எல்லாம் இல்லை தலைவா! நீ எதுக்கு தலைவா இதுக்கு ஒத்துகிட்ட?

சி.பி - அந்த துணிச்சல் இல்லாட்டி என்ன? இலியானாவுக்கும், குரூப் டேன்சர்களுக்கும் துணியே இல்ல, ரொம்ப கம்மிதான்.. அதை ரசிக்கறது.. 



எல்லாரும் முழு டவுசரைக் கழட்டிட்டு அடிக்கடி கால்ல உழுரானுங்க. நல்லவேளை, இலியானாவுக்கு அப்படி ஒரு சீன் வெக்கலை! நான் வீட்டுக்கு வந்து பேண்ட் கழட்டும் போது படம் நியாபகத்துக்கு வந்து தொலைக்குது. இது உண்மையிலேயே டைரக்டருக்கு வெற்றிதான் தலைவா. ஆனா உன் படத்துக்குப் போயிட்டு வந்தா மந்திரிச்சு உட்டா மாதிரி படம் முழுக்க வரும் உன் மூஞ்சி தானே தலைவா நாலு நாளைக்கு நியாபகத்து வந்து பயமுறுத்திட்டே இருக்கணும். நீ எதுக்கு தலைவா இதுக்கு ஒத்துகிட்ட?


சி.பி - ஆனாலும் அண்ணன் மாஸ் தான்.. ஆனானப்பட்ட ஷங்கர் படமா இருந்தாலும் அண்ணன் கடைசி வரை அவர் பேண்ட்டை கழட்டவே இல்லை பார்த்தீங்களா?  அங்கே தான்  நிக்கறான் சந்திரன்..

குருவி படத்த பாத்து சட்டைய கிழிச்சுட்டு ஓடின பயமக்கள் எல்லா கைதட்டி படத்த ரசிக்குதுங்க. குருவி படத்தையும் ஹிட்டாக்கின என்ன மாதிரி ரசிகர்கள் மூட் அவுட்டு ஆய்டுவாங்கன்னு புரிஞ்சிக்க தவறிட்டியே தலைவா! நீ எதுக்கு தலைவா இதுக்கு ஒத்துகிட்ட?


சி.பி - குருவி ஹிட்டா? 2012ல உலகம் அழிஞ்சுடும்யா//

இதே ரேஞ்சிலே இன்னொரு படம் நீ குடுத்தா நாங்க எல்லாம் ‘தல’ ரசிகரா மாறிடுவோம். அப்புறம் ‘ஆல் ஈஸ் வெல்’ அப்படீன்னு நீ சொல்ல முடியாது. புரியுதா தலைவா?!

 சி.பி - ஆல் ஈஸ் ஹெல் ( ALL IS HELL )

(ஹிந்தி படம் பார்க்காதவர்களுக்கு இந்தப் படம் ஒரு பொங்கல் விருந்து என்பதில் சந்தேகமே இல்லை. பொதுவான விஜய் ரசிகர்களின் உள்ளக்கிடங்கை தான் இங்கே எழுதியிருக்கிறேன். யார் மனதையும் புண்படுத்துவதற்காக இல்லை!)

சி.பி - ஆமா, இந்த விஷயத்துல நாங்க எல்லாருமே நக்கீரன் கோபால் மாதிரி... முடிஞ்ச வரை துவைச்சு காயப்போடுவோம்.. கடைசில பிரச்சனைன்னு வந்தா மன்னிப்பு கேட்போம்.. ஏன்னா எங்க ஊர்ல 5 ரூபாவுக்கு 12  மன்னிப்பு..  

original post link -

Saturday, November 26, 2011

சன் பிக்சர்ஸாரின் ஆதிக்கம்- தியேட்டர்கள் கிடைக்காத அவலம் - இயக்குநர் காட்டம் !!பரபரப்புக்கடிதம்!!

http://www.musictub.com/Picture/Tamil_MusicTamil_Movie_SongsPaalai_(2011)cover.jpg

விஜய்-ன் காவலன் ரிலீஸின் போதே சன் பிக்சர்ஸாரின் மீது இந்த குற்றச்சாட்டு எழுந்தது.. அதாவது தமிழ்நாட்டின் பெரிய , செண்ட்டரான திரை அரங்குகளை ஆக்ரமித்து விடுகிறார்கள் . என்பதே அது.. இதனால் லோ பட்ஜெட் படங்களை திரை இட தியேட்டர்கள் கிடைப்பதில்லை.. தங்கள் கை வசம் மாஸ் மீடியா இருப்பதால் பெரும்பாலான படங்களை இவர்கள் வாங்கி நல்லா மார்க்கெட் பண்ணி தேத்தி விடுகிறார்கள்.. இதனால் வெளீயாகும் படங்கள் சன் பிக்சர்ஸாரின் தயாரிப்பாகவோ ,அல்லது அவர்கள் வாங்கும் படமாகவோ இருக்க வேண்டும் என்பது எழுதப்படாத விதி..

கலைஞர் ஆட்சியில் அது ஓக்கே, இப்போ ஆட்சி மாறிய பின்னரும் அது தொடர்வது ஏன்?ஏன் ஜெ வால் அவர்களை கண்ட்ரோல் செய்ய முடியவில்லை?என்பதே நம் மனதில் எழும் கேள்விகள்.. அதை ஊர்ஜிதப்படுத்துவது போல் பாலை இயக்குநர் காட்டமாக ஒரு கடிதம் மீடியாக்களில் வெளீயிட்டும் , ஃபேஸ் புக்கில் அதை பகிர்ந்தும் வந்திருக்கிறார்.. அந்த கடிதம்

 http://tamil.oneindia.in/img/2011/05/05-shammu-palai300.jpg

நிற்க ஒரு அடி மண் கேட்கிறோம்
பாலை திரைப்பட இயக்குநர் ம.செந்தமிழன் உருக்கமிகு கடிதம்!

முகம் தெரியாத உறவுகளுக்கு வணக்கம்.

பாலைஎன்ற திரைப்படத்தை எழுதி இயக்கியவன் நான். என் பெயர் ம.செந்தமிழன்.

பாலைபடத்தில் அதன் நாயகி காயாம்பூ பேசும் வசனங்களில் எனக்கு நெருக்கமானது, ‘பிழைப்போமா அழிவோமா தெரியாதுவாழ்ந்தோம் எனப் பதிவு செய்ய விரும்புகிறோம்என்பது.

பாலைகுழுவினர் உங்களிடம் கூற விரும்புவதும் ஏறத்தாழ இதுவே.

பாலை படம் தமிழினத்தில் பதிவாகுமா அழிந்து போகுமா தெரியாதுஇப்படி ஒரு படம் எடுத்தோம் எனப் பதிவு செய்ய விரும்புகிறோம்

சில நாட்களுக்கு முன் பாலையின் முன்னோட்டக் காட்சியைப் பார்த்த இயக்குனர் பாலுமகேந்திரா, “பாலை உலகத் திரைப்பட வரலாற்றில் குறிக்கத்தக்க இந்தியப் படமாக இருக்கும். இது ஒரு தமிழ்ப் படம் என்பதில் எனக்குத் தனிப்பட்ட கர்வம் உண்டு. எனது 45 ஆண்டுகால சினிமா வாழ்க்கையில் எந்தப் படத்தைப் பார்த்தும் இந்தப் படத்தை நான் இயக்கவில்லையேஎன ஆதங்கப்பட்டதில்லை. பாலை படம் என்னை அப்படி ஏங்கச் செய்கிறது’” என்று கடிதம் எழுதிக் கொடுத்தார்.

சத்தியமாக இவ்வார்த்தைகளுக்கான தகுதி எனக்கில்லை. இவை ஒரு மூத்த படைப்பாளியின் உணர்ச்சிவய வார்த்தைகள்.

முன்னோட்டக் காட்சி பார்த்த கார்ட்டூனிஸ்ட் பாலா முதல் மென்பொருள் இளம் பொறியாளர் விர்ஜினியா ஜோசபின் வரை பாலையை மனமார வாழ்த்துகிறார்கள்.

இவர்கள் அனைவரின் வேண்டுகோளும் மக்களை நோக்கி இருக்கிறது. அவசியம் பாலை படத்தைப் பாருங்கள்என்கிறார்கள் இவர்கள்.

எனக்கும் என் குழுவினருக்குமான வேண்டுகோள் மக்களை நோக்கி இல்லை. அதற்கான சூழலும் எழவில்லை. எங்கள் வேண்டுகோள் திரையுலகை நோக்கி இருக்கிறது.

தமிழகத்தின் சரி பாதி பகுதிகளில் பாலையைத் திரையிட ஒரு திரை அரங்கு கூட கிடைக்கவில்லை. இதற்கான காரணங்கள் நிறைய. அவற்றை நான் அடுக்க விரும்பவும் இல்லை; இப்போது அதற்கான அவகாசமும் இல்லை.

ஓர் உண்மையை உரத்துச் சொல்ல விரும்புகிறேன்.

அதிகாரமும் பெரும் பணமும் இருந்தால் குப்பைகளுக்கும் திரையரங்குகள் திறக்கும். இல்லையென்றால், இயக்குனர், தயாரிப்பாளர் முகங்களில் குப்பை வீசப்படும்

இன்றைக்குத் தமிழகத்தில் உள்ள ஆயிரத்து இருநூறு திரையரங்குகளில் சரி பாதியை மிகச் சில படங்கள் ஆக்கிரமித்துக் கொண்டுள்ளன. இவை ஓடும் திரையரங்குகளுக்குச் சென்று பாருங்கள். மக்கள் கூட்டம் அலைமோதுகிறதா அல்லது இவை வெறுமனே பணபலத்தாலும் அதிகார பலத்தாலும் ஆக்கிரமிக்கப் பட்டுள்ளனவா என்பதை நீங்களே உணரலாம்.

ஒவ்வொரு அரங்கத்துக்கும் இலட்சக்கணக்கில் பணம் கொடுக்கப்பட்டு, அவ்வரங்குகளில் வேறு படங்கள் வராமல் பாதுகாக்கப்படுகின்றன.

திரைப்படங்களால் நிரம்ப வேண்டிய அவ்வரங்குகள் மிகச் சில முதலைகளின் கழிவுகளால் நாற்றமெடுத்துக் கிடக்கின்றன.

தமிழகத்தில் DAM-999 என்ற படத்துக்குக் கிடைத்த திரையரங்குகளில் 25% கூட பாலைக்குக் கிடைக்கவில்லை! முல்லைப் பெரியாறு அணையின் உரிமையை மலையாளிகளுக்குப் பிடுங்கித் தரும் படமாக இருந்தாலும் பரவாயில்லை; தமிழரின் வரலாற்றைப் பதிவு செய்யும் படத்துக்கு அரங்கு இல்லை. அழுவதைத் தவிர வேறு என்ன வழி?

இப்போது DAM-999 படம் தடை செய்யப்பட்டுவிட்டது. ஆனாலும் அந்தத் திரை அரங்குகளில் மிகச் சில கூட பாலைக்குக் கிடைக்கவில்லை. அவ்வரங்கங்கள், வேறு ஒரு Warner Brothers தயாரிப்புப் படத்துக்காகக் காத்திருக்கின்றன. ஜாக்கிசானின் 1911 படத்துக்குக் கிடைத்த அரங்குகளின் எச்சில் துளி கூட எங்களுக்குக் கிடைக்கவில்லை.

கிடைத்த அரங்குகளில் பாலை இன்று (25/11/11) வெளியாகிறது. எமக்கு அரங்கு கொடுத்த அரங்க உரிமையாளர்கள், மேலாளர்கள், விநியோகஸ்தர்கள் மற்றும் இப்பணியில் தம்மை அளவுக்கு மீறி ஈடுபடுத்திக் கொண்டதால் மிக மோசமான உடல் உபாதையில் சிக்கித் தவிக்கும் என் இனிய நண்பர் செங்கோட்டை திரைப்பட இயக்குனர் சசிகுமார் உள்ளிட்ட அனைவருக்கும் எமது மனமுருகிய நன்றிகள்!

இக்கடிதத்தை எழுதுவதால் என்ன பலன் என எனக்குப் புரியவில்லை.

ஆனால், நான் ஒரு போதும் நம்பிக்கையை விடுவதில்லை. இயற்கையின் பேராற்றலை வேண்டுகிறேன். அப்பேராற்றலின் அங்கங்களாகவும் படைப்புகளாகவும் விளங்கும் மக்களை நம்புகிறேன்.

நாங்கள் பந்தயத்தில் பரிசு கேட்கவில்லை
நிற்க ஒரு அடி மண் கேட்கிறோம்!

பாலை குழுவுக்காக,

ம.செந்தமிழன்


------------------------------------------------------------




-------------------------------------------------------------




https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEh3q1ONHvokhIe9TCdTEXGWNMyerF4YC-XiJGHhzjp2uK0vU_Mq0vjX1HKaYjCxC-bQQIFoPfebRzhtxhSqZXwKSRtPa8wTqHStzIYQ8iyRNnaEJ3aWQmo1HuZjdaY2TK95m6OuzQEVdEA5/s1600/paalai_movie_stills.jpg
பாலை திரைப்படத்தை பார்த்த பிரபலங்களின் கருத்துத் தொகுப்பு!
-------------------------------------------------------------------------------------------------------------------------


 
2300 ஆண்டுகளுக்கு முற்பட்ட தமிழ் மக்களின் வாழ்வியலையும் வரலாற்றையும் பிரதிபலிக்கும் "பாலை" திரைப்படம் நாளை (நவம்பர் 25) தமிழகமெங்கும் வெளியாகிறது. ஆய்வாளரும், தமிழ் உணர்வாளருமான திரு. ம.செந்தமிழன் இயக்கிய இத்திரைப்படத்தின் சிறப்புக் காட்சியைக் கண்ட பிரபலங்கள் பலரது கருத்துகளும் தொகுக்கப்பட்டு வாசகர்களுக்காக அவை வழங்கப்படுகின்றன.

இயக்குநர் தங்கர் பச்சான்

 ‘
இப்படியொரு படத்தை தந்ததற்காக இயக்குநரையும், படக்குழுவினரையும் மனதார பாராட்டுகிறேன். இக்கதையின் கருவை அவர்கள் தேர்ந்தெடுத்த விதமே படத்தின் சிறப்பு. பெருமளவிலான பிரம்மாண்ட வரலாற்றுப் படங்களுக்கு சவால் விடும் படம் இது. இப்படத்திற்கு மிகப்பெரும் அங்கீகாரத்தை தமிழ் மக்கள் வழங்குவார்கள்

 இயக்குநர் வெ.சேகர்

 ‘
இந்தப் படத்தில் ஆயிரம் செய்திகள் சொல்லியிருக்கிறார்கள். பெரிய பொருட்செலவிலான பிரம்மாண்டமான படங்களுக்கு நிகராக எளிமையான இத்திரைப்படம் தமிழர்களை நெஞ்சு நிமிர்த்த வைக்கும்

 உணர்ச்சிக் கவிஞர் காசி ஆனந்தன்

 ‘
வழமையான திரைப்படங்கள் நகர்ந்த வழியிலிருந்து செந்தமிழன் விலகியிருக்கிறார். ஒவ்வொரு நொடியும் எதிர்பார்ப்போடு கூடிய, ஒரு திரைப்படம் உருவாக்கப் பட்டிருக்கிறது. ஐவகை நிலப்பிரிவு காலத்தில் வாழ்ந்த பழந்தமிழ்க் குடிகளின் வாழ்க்கை கொண்டு, நிகழ்கால தமிழர்களுக்கு பாடம் சொல்லப்பட்டிருக்கிறது. மிக சிறப்பான ஒளிப்பதிவு படத்திற்கு உயிர் ஊட்டியிருக்கிறது. முதல் முயற்சியிலேயே இயக்குநர் ம.செந்தமிழன் முதிர்ச்சி அடைந்திருக்கிறார்

 கவிஞர் தமிழச்சி தங்கபாண்டியன்

 ‘
ஒவ்வொரு பிரேமிலும் நான் கண்ட முழுமையான தமிழ்ப்படம் இது. நாம் வாழும் இந்த மண் பல போராட்டங்களால் நம் முன்னோர்களால் மீட்கப்பட்ட மண் என்று இப்படம் உணர்த்துகின்றது. இன்றைய காலகட்டத்தில் இது முக்கியமான செய்தியும் கூட

 ஓவியர் புகழேந்தி

மிகவும் சிறப்பான தயாரிப்பு இது. வழக்கமான சினிமாப் படமாக இல்லாமல் வரலாற்று சினிமாவாக இப்படம் நிமிர்ந்து நிற்கும். சங்க இலக்கியத்திலிருந்து எடுத்தாளப்பட்ட இப்படத்தின் மூலம்
, ஈழத்தின் இன்றைய அரசியல் நிலைமையோடு சரிவரப் பொறுந்துகிறது. நம் இன அடையாளத்தைத் தக்க வைக்க இது போன்ற படங்கள் தேவை.

 குமுதம் கார்டூனிஸ்ட் பாலா

இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த தமிழர்களின் வரலாற்றின் ஊடாக, ஈழத்தில் அழிக்கப்பட்ட ஒரு இனத்தின் கதையைப் பேசுகிறது இப்படம். நம்பவே முடியாத கிராபிக்ஸ் சாகச கதாநாயகக் காட்சிகளைப் பார்த்துக் காசைக் கரியாக்குபவர்கள் ஒருமுறை பாலைபடத்தைப் பார்க்க வேண்டும். புதிய அனுபவமாக இருக்கும்

தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி பொதுச் செயலாளர் கி.வெங்கட்ராமன்

எளிய வழியில் திரை ஊடகத்தின் வழியறிந்து சொல்லப்பட்டிருக்கிற செறிவான கதை. இசை, ஒளிப்பதிவு மிகைப்படாத நடிப்பு ஒரு உயர்தளத்தில் படத்தை வைத்து எண்ண வைக்கிறது.

 விடுதலைச் சிறுத்தைகள் செய்தித் தொடர்பாளர் வன்னியரசு

 
இந்தப் படத்தை விடுதலை சிறுத்தைகள் தலைவர் தொல். திருமாவளவன் அவர்கள் பார்க்க விரும்பினார். ஆனால், மக்களைவையில் பங்குபெற வேண்டியிருப்பதால், அவரால் இயலவில்லை. படம் குறித்து நான் அவரிடம் கைபேசியில் தெரிவித்த போது, அப்பொழுதே படக்குழுவினரைப் பாராட்ட வேண்டுமென கூறினார் திருமா. இன்றைய தமிழ்ச் சூழலுக்கு தேவையான ஒரு படத்தை ம.செந்தமிழன் கொடுத்திருப்பதாகவும் அவர் சொன்னார்

மே பதினேழு இயக்க ஒருங்கிணைப்பாளர் திருமுருகன்

 
சங்க காலம் இப்படத்தில் அழகுற காட்சிப்படுத்தப்பட்டிருக்கிறது. மாற்று அரசியலும், மக்கள் கலையும், மாற்று திரைப்படமும் வெற்றி பெருதல் வேண்டும். நம் தோழர்களின் இம் முயற்சியை வெற்றியடையச் செய்வோம். இதுவே இந்தத் தலைமுறைத் தமிழர்களின் இயக்கம். மாற்றத்தை சாத்தியப்படுத்துவோம்

ஊடகங்கள்

புதிய தலைமுறை
வரலாற்றுத் திரைப்படமாக எடுக்கும் வழக்கம் ஹாலிவுட்டில் அதிகம். பாலை திரைப்படக் குழுவினர் முதல் முறையாக தமிழில் இம்முயற்சியை மேற்கொண்டுள்ளனர்.


சன் தொலைக்காட்சி 
சமீப காலமாக பல வரலாற்றுத் திரைப்படங்கள் வருகின்றன. ஆனால், அவற்றை எல்லாம் விஞ்சும் விதமாக 2300 ஆண்டுகளுக்கு முந்தைய காலத்தைக் காட்டுகிறது பாலை.

குமுதம்
பாலை திரைப்பட இயக்குநர் செந்தமிழன் பேசுவதைக் கேட்கும் போது, தமிழ் சினிமா ஆரோக்கியமான பாதையில் நடைபோடுகிறது என்ற நம்பிக்கை பிற்கிறது.

The Hindhu
Extensive reasearch on Sangam period literature, of life and time around 2,300 years ago, enabled director M.Senthamizhan to write Paalai



http://reviews.in.88db.com/images/paalai-movie/paalai-movie-stills-pics-photos-gallery-7.JPG


டிஸ்கி -  எனவே நல்ல சினிமா ரசிகர்கள் , ஆரோக்யமான திரைப்படம் வரவேண்டும் , திறமைசாலிகளை ஊக்குவிக்கவேண்டும் என நினைக்கும் நல்ல உள்ளங்கள் பாலை படம் பார்க்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.. நண்பர்களூக்கும் பகிரலாம் ஈரோட்டில் இந்தப்படம் ரிலீஸ் ஆகவில்லை.....கொங்கு மண்டலத்தில் திருப்பூரில் மட்டும் 2 தியேட்டர்களில் ரிலீஸ் ஆகி உள்ளது.. மெத்தப்படித்தவர்கள் மிக்க  கோவையில் கூட இந்தப்படம் ரிலீஸ் ஆகாதது வருத்தம் தர வைக்கும் ஆச்சரியம்

டிஸ்கி பார்ட் 2 -

மயக்கம் என்ன - சினிமா விமர்சனம்

 

மயக்கம் என்ன - செல்வா குடுத்த அல்வா - காமெடி கும்மி கலாட்டா