ராசிபலன்! - 'ஜோதிடரத்னா' கே.பி.வித்யாதரன்
a
thanx -vikatan
கண்ணனூர் கண்ணபுரம் என்றெல்லாம் போற்றப்படும் திவ்ய தேசம் திருக்கண்ணபுரம். மூலவர் திருநாமம் ஸ்ரீநீலமேகப் பெருமாள்; கிழக்கே திருமுக மண்டலமாக நின்ற கோலத்தில் அருள்பாலிக்கிறார். இவர் பிரயோகச் சக்கரத்துடன் திகழ்வது விசேஷ அம்சம். தாயார் திருநாமம் ஸ்ரீகண்ணபுர நாயகி. உற்ஸவர் ஸ்ரீசௌரிராஜ பெரு மாளும் வரப்பிரசாதியே! அர்ச்சகர் ஒருவர், சோழ அரசனிடம்... பெருமாளுக்குக் கேசம் வளர்ந்ததை காட்டுவதாக வாக்களிக்க, பெரு மாளும் திருமுடியில் கேசத்துடன் திருக்காட்சி தந்ததால் ஸ்ரீசௌரிராஜன் என்ற திருப்பெயர் வந்ததாம். பஞ்ச கிருஷ்ண ஸ்தலங்களில் ஒன்றான இந்தத் தலத்தின் சிறப்பம்சம் என்ன தெரியுமா? ஏழு வகை புண்ணியங்களுடன் திகழ்கிறதாம்! அதாவது, ஸ்ரீகிருஷ்ணாரண்ய க்ஷேத்திரம், தண்டகவனம், காவிரி நதி, கடல், கண்ணபுர நகர், நித்திய புஷ்கரணி, உத்பலாவதக விமானம் ஆகிய ஏழு வகை புண்ணியங்கள் திருக்கண்ண புரத்துக்கு உண்டு. ஆக இந்தத் தலத்துக்கு வந்து தரிசித்து வழிபடுவது மிகவும் சிறப்பு. இன்னுமொரு சிறப்பம்சமும் உண்டு இந்த திவ்ய தேசத்துக்கு. அஷ்ட சுயம்பு திருத்தலங்களில் ஒவ்வொன்றிலும் எம்பெருமான், திருமந்திரத்தின் ஒவ்வொரு அட்சரமாக எழுந்தருளியிருக்கிறாராம். ஆனால் இந்தத் தலத்தில், எட்டெழுத்தின் முழு வடிவினராக எழுந்தருள்கிறாராம். இதை இறைவனே கூறியதாக விவரிக்கிறது தல புராணம். நாகப்பட்டினம்- நன்னிலம் சாலையில் உள்ள திருப் புகலூரிலிருந்து சுமார் 2 கி.மீ தொலைவில் உள்ளது திருக்கண்ணபுரம். குடும்பத்துடன் இந்தத் தலத்துக்குச் சென்று எட்டெழுத்துநாயகனை வழிபட்டு வாருங்கள்; உங்கள் கஷ்டமெல்லாம் பறந்துபோகும். |
12 ராசிகள்; 12 நாகர்கள்! ஸ்ரீசனீஸ்வரரின் அவதாரத் திருத்தலம்; ஸ்ரீசூரியனாரின் சாபம் போக்கிய தலம். ஆகவே இங்கே நவக்கிரகங் களுக்குச் சந்நிதி இல்லை. மாறாக, 12 ராசிகளுக்கு உரிய 12 நாகர்களும் உள்ளனர். இவர்களுக்கு தீபமேற்றி, அர்ச்சனை செய்து வழிபட்டால், ராகு - கேது முதலான சகல தோஷங்களும் விலகும்; திருமணம் முதலான அனைத்து வரங்களும் கிடைக்கும்!ரதசப்தமி விசேஷம்! சூரிய பகவானின் சாபம் போக்கிய இந்தத் திருத் தலத்தில், ரதசப்தமி விழா விமரிசையாகக் கொண்டாடப் படுகிறது. திருமலைத் திருப்பதி தலத்தில், சந்திர புஷ்கரணியிலும் திருமீயச்சூரில் சூரிய புஷ்கரணியிலும் ரதசப்தமி விழா அன்றைய நாளில் நடைபெறுமாம்! பஞ்ச மூர்த்தி புறப்பாடு, சிறப்பு வழிபாடு, சூரிய புஷ்கரணியில் தீர்த்தவாரி என அமர்க்களப்படுமாம் ஆலயம்! அப்போது, சூரிய புஷ்கரணித் தீர்த்தக்குளக்கரையில், கல் வைத்து, எருக்கம்பூ, இலை, பஞ்சகவ்யம், மங்கல அட்சதை ஆகியவை கொண்டு சங்கல்பம் செய்து, குளத்தில் நீராடி, ஸ்வாமி- அம்பாளை வணங்கினால், ஏழேழு ஜென்மத்தில் உண்டான அத்தனைப் பாவங்களும் நீங்கும் என்பது ஐதீகம்! |
கொஞ்சுகிறார்; கெஞ்சுகிறார் க்ஷேத்திர புராணேஸ்வரர்! கோயில் பிராகாரத்தில் உள்ளது, ஸ்ரீக்ஷேத்திர புராணேஸ் வரரின் திருவுருவம். காண்பதற்கு அரிதான விக்கிரகத் திருமேனி இது. சூரியனாருக்குக் கடும் கோபத்துடன் சாபம் கொடுக்க உமையவள் முனைந்தாள், அல்லவா?! அப்போது அவளைச் சாந்தப்படுத்துகிறார் பரமேஸ் வரன். இங்கே... ஒரு பக்கம் பார்த்தால் தேவியின் முகம் உக்கிரமாகவும் இன்னொரு பக்கத்தில் இருந்து பார்த்தால், தேவி புன்னகைத்தபடியும் இருப்பதைத் தரிசிக்கலாம்! இந்தத் தம்பதியை மனதார வணங்கினால், திருமணத் தடை அகலும்; பிள்ளை வரம் பெறலாம்; பிரிந்த தம்பதியும் விரைவில் இணைவர்! தூது செல்லும் ஸ்ரீதுர்கையின் கிளி! இங்கே... எட்டுத் திருக்கரங்களுடன் திகழும் ஸ்ரீதுர்கை ரொம்பவே விசேஷம். அவளது கையில் ஸ்ரீசுகப் பிரம்ம ரிஷியே, கிளியாக அமர்ந்தி ருப்பதாகச் சொல்கிறது, ஸ்தல புராணம். இந்தத் தலத்துக்கு வந்து வேண்டுதல் வைப்பவர் அனைவரது பிரார்த்தனையையும் ஸ்ரீதுர்கையின் கையில் உள்ள கிளி, கொடிமரம் அல்லது விமானத்தில் இருந்தபடி, ஸ்ரீலலிதாம்பிகையிடம் சொல்லுமாம்! 'அவங்களை நீதாம்மா பாத்துக் கணும்’ என்று நமக்காகச் சிபாரிசு செய்யும் அந்தக் கிளி! எனவே, ஸ்ரீதுர்கையிடம் தங்களது குறைகளையும் பிரார்த்தனை யையும் சொல்லிச் செல்கின்றனர், பக்தர்கள்! |
பிரண்டை சாத நைவேத்தியமும் அப்பேர்ப்பட்ட எமதருமனே நீண்ட ஆயுளுடன் இருப்பதற்காக, இங்கே இந்தத் தலத்துக்கு வந்து, ஈசனை வழிபட்டான். அதுவும் எப்படி? எமலோகத்தின் தலவிருட்சமான பிரண்டையைக் கொண்டு (வஜ்ரவல்லிச் செடி) அன்னத்தில் கலந்து நைவேத்தியம் செய்து, சங்கு மற்றும் புஷ்பத்தால் அர்ச்சனை செய்து, வழிபட்டு வரம் பெற்றான். இன்றைக்கும், உச்சிக்காலத்தில் ஸ்வாமிக்கு பிரண்டை சாதம் நைவேத்தியம் படைக்கப்படுகிறது. இந்த நைவேத்தியம் செய்து, பிரசாதத்தை வாங்கி உட்கொண்டால், அத்தனை தடைகளும் அகலும்; ஆயுள் கூடும் என்பது ஐதீகம்! அதுமட்டுமா? இந்தத் தலத்தில் ஆயுக்ஷ் ஹோமம், சஷ்டியப்த பூர்த்தி, சதாபிஷேகம் செய்வது மிகவும் புண்ணியம் சேர்க்கும்; ஆயுளுடனும் ஆரோக்கியத்துடன் நீண்டகாலம் வாழலாம் என்கின்றனர், பக்தர்கள்!சஷ்டியப்த பூர்த்தி சதாபிஷேகமும்! அகத்தியர் அருளிய ஸ்ரீநவரத்ன மாலை! ஸ்ரீஅகத்தியர், தன் மனைவி லோபமுத்திரையுடன் இங்கு வந்து, ஸ்ரீலலிதாம்பிகையின் கழுத்தில் அணிந்திருந்த நவரத்தின மாலையைக் கண்டு சிலிர்த்து, ஒரு ரத்தினத்துக்கு ஒரு பாமாலை என்று நவரத்தின மாலையையும் தேவியின் மகிமையையும் போற்றும் வகையில் பாடியதுதான் ஸ்ரீநவரத்ன மாலை ஸ்தோத்திரம்! இதனைப் பாடி, ஸ்ரீலலிதாம்பிகையை வணங்கினால், உள்ளம் குளிர்ந்து அருளையும் பொருளையும் அள்ளித் தருவாளாம் தேவி!'எனக்குக் கொலுசு வேணும்!’ பக்தையின் கனவில் அம்பிகையே வந்து,''எனக்குக் கொலுசு போடு; நீ நல்லா இருப்பே!'' என்று கேட்டாளாம். அதன்படி அம்பிகைக்கு கொலுசு அணிவிக்க... அந்தப் பக்தையின் துன்பம் அனைத்தும் தொலைந்து போனதாகச் சொல்வர்! மனதில் ஸ்ரீலலிதாம்பிகையை வணங்கி, காரியம் நிறைவேறப் பிரார்த்தனை செய்பவர்கள், நேர்த்திக்கடனாக ஸ்ரீலலிதாவுக்கு கொலுசு (முக்கால் இன்ச் அளவு துவாரம் கொண்ட, பதினொன்றரை இன்ச் கொலுசுதான், ஸ்ரீலலிதாம்பிகையின் சரியான அளவு என்கின்றனர்) அணிவித்து மகிழ்கின்றனர். அதுமட்டுமின்றி, வளையல், ஒட்டியாணம், திருமாங்கல்யம், தோடு - ஜிமிக்கி-'மாட்டல்’ என்று அணிவிக்கிற பக்தர்களும் உண்டு!நன்றி -சக்தி விகடன் |
வே லைக்குப் போகிறவர்களானாலும் சரி, இல்லத்தரசிகளானாலும் சரி... காலையில் கண் விழித்த உடனேயே, 'சாப்பிடுவதற்கும், கையில் எடுத்துச் செல்வ...