Showing posts with label ஆன்மீகம். Show all posts
Showing posts with label ஆன்மீகம். Show all posts

Wednesday, August 10, 2011

ஆகஸ்ட் மாத ராசிபலன்கள் -பிரபல ஜோதிடர் கட்டுரை

ராசிபலன்! - 'ஜோதிடரத்னா' கே.பி.வித்யாதரன்




a


thanx -vikatan

Saturday, July 30, 2011

கண்ணன் ஏமாந்தான் இளம் கன்னிகையாலே.. (ஆன்மீகம்)

https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiwEBdYyJBnojIM5MS5DwwgNhkHmr3J6cjEkdvLR3X67t8OH6dFeD_r7kY999mxAn8HjLPzXnbd-BwkK79rwAGrUAJxBrKf8KbIj2_hksiijBtqoGnTzYqkgQdfLdNAmb7yHP5baMXy3XA/s1600/Lord_Krishna_1.jpgகண்ணன் நாமம் சொல்லும் கதைகள்!


ரு குடும்பத்தின் மிகப் பெரிய சொத்து எது தெரியுமா? காசு- பணமோ, வீடு- வாசலோ, நகை நட்டுகளோ, வண்டி- வாகனங்களோ... எதுவுமில்லை. மிகப் பெரிய சொத்து, குழந்தைகள்தான்; வாரிசுகள்தான்!


ஒரு குழந்தை இந்த உலகில் ஜனித்திருக்கிறது; அதாவது, தாய்க்குப் பிரசவ வலி அதிகமெடுத்து, ஆஸ்பத்திரியில் சேர்த்து, மருத்துவர்களின் உதவியுடன் குழந்தை பிறந்திருக்கிறது என்றால், உடனே அந்தக் குழந்தையின் தகப்பன் என்ன செய்வான்? நாமெல்லாம் என்ன செய்தோம்? விறுவிறுவென ஓடிப் போய், குழந்தையைப் பார்ப்போம்; பரவசமாவோம். 

ஊருக்கும் உறவுக்கும் போன் போட்டுத் தகவல்கள் சொல்வோம். எதிர்ப்படுகிற தெரிந்தவர் அறிந்தவர் அனைவருக்கும் இனிப்புகள் வழங்கி மகிழ்வோம். அது கல்கண்டாகவும் இருக்கலாம்; சாக்லெட்டாகவும் இருக்கலாம்; மைசூர்பாகும் தரலாம்! ஏனெனில், குழந்தை என்பது குதூகலம் சம்பந்தப்பட்டது; சந்தோஷத்துக்கு உரியது; இனிமையானதொரு உறவு!


ஆனால், குழந்தை பிறந்ததும், சுற்றியுள்ளவர்களுக்கும் சுற்றத்தாருக்கும் சின்ன கல்கண்டு கொடுத்துக்கூட மகிழ்ச்சியைப் பகிர்ந்துகொள்ளாதவர் யார் தெரியுமா? வசுதேவர்தான்! பாவம் அவர். சந்தோஷம் மொத்தத்தையும் உள்ளுக்குள்ளேயே புதைத்து வைத்துக்கொண்டார்.

http://1.bp.blogspot.com/_Mb0xoLXa_kU/TH1FmsEOr5I/AAAAAAAAAW8/DipS8nnBMSk/s1600/Krishna_family.jpg

அதுமட்டுமா? இன்னொரு விஷயம். ஸ்ரீராமருக்கும் ஸ்ரீகண்ணனுக்கும் உள்ள ஒற்றுமை மற்றும் வித்தியாசத்தையும் இங்கே பார்க்கவேண்டும். சூரிய வம்சத்தைச் சேர்ந்தவர் ஸ்ரீராமர்; ஒரு பகல் பொழுதில், அரண் மனையில், விளக்குகள் அணி திரண்டு ஒளியைத் தந்துகொண்டிருக்க... ஸ்ரீராமர் அவதரித்தார். இங்கே... சந்திர குலத்தைச் சேர்ந்தவர் ஸ்ரீகண்ண பிரான். இருள் கவிந்திருக்கும் இரவு வேளையில், இருட்டு சூழ்ந்திருக்கிற சிறைச்சாலையில் பிறந்தார் ஸ்ரீகண்ணன். 
சரி... இத்தனை இருட்டுக்கு நடுவில், குழந்தையை எப்படிப் பார்த்தா ராம் வசுதேவர்? கண்ணனின் 32 பற்களும், சந்திரனுக்கு நிகராக ஜொலித்தனவாம்! அந்த ஜொலிப்பின் வெளிச்சத்தில், குழந்தையின் திருமுகத்தைப் பார்த்து ரசித்தார் வசுதேவர்.

என்னடா இது... பிறந்ததுமே பல் முளைத்துவிட்டதா என்ன என்று வியக்கிறீர்கள்தானே? பற்கள் மட்டுமில்லை; நான்கு தோள்களும் சங்கு- சக்கரமும் திகழப் பிறந்தவன், அவன்! அதைப் பார்த்துப் பதறிவிட்டனர், வசுதேவரும் தேவகியும்! பின்னே... நான்கு தோள்கள்; நான்கு திருக்கரங்கள் எனக் குழந்தை பிறந்திருக் கிறான் என்கிற விஷயம் கம்சனுக்குத் தெரிந்தால், அலறிப் பதறிக்கொண்டு, குழந்தையை அழிக்க ஓடிவந்து விடுவானே எனப் பயந்தனர்.

பிறகு, அவர்களின் வேண்டுகோளின்படி, அந்தப் பராபரன், நம்மைப் போல இரண்டு தோள்களுடன், இரண்டு கைகளுடன் காட்சி தந்தான்.

http://img.dinamalar.com/data/images_news/tblanmegamnews_60067385436.jpg
இன்னொரு சுவாரஸ்யம்... குழந்தை பிறந்ததும், அந்த மகிழ்ச்சியை இனிப்பு வழங்கிக் கொண்டாடுவதுடன் மட்டுமின்றி, அந்தணர்களுக்குத் தானம் அளித்தும் குதூகலிப்பார்கள், அல்லவா?

தனக்கு ஸ்ரீகண்ணன் பிறந்ததும், 'ஆயிரமாயிரம் அந்தணர்களை அழைத்து, அவர்களுக்கு ஆயிரமாயிரம் பசுக்களையும், அவர்கள் அணிந்துகொள்வதற்கு ஆயிரமாயிரம் தங்கப் பூண்களையும் (தங்கப் பூணூல்), போர்த்திக்கொள்வதற்கு ஆயிரமாயிரம் ரத்தினக் கம்பளங் களையும், ஆயிரமாயிரம் தங்கத் தட்டுகளையும், அந்தத் தட்டுகளில் ஆயிரமாயிரம் பொற்காசுகளையும் வழங்கு கிறேன்’ என்றாராம் வசுதேவர்.


சுக்கிராச்சார்யருக்குக் குழப்பம். 'சிறைச்சாலைக்குள் இருக்கிற வசுதேவர், அத்தனை அந்தணர்களையும் எப்படி, எங்கே அழைப்பார்? அவர்களுக்கு வழங்குவதாகச் சொல்கிற பசுக்களை எங்கிருந்து பிடித்து வருவார்?’ என்று தவிப்பு!


ஆனால், வசுதேவர் என்ன சொன்னார் தெரியுமா? 'ஒன்றைக்கூட கொடுக்க முடியாதபடிக்கு, சிறையில் இருக்கிறேன்தான்! ஆனாலும் மனதார, வாயாரச் சொல்லி மகிழலாமே என்பதால்தான் இப்படிச் சொன்னேன்’ என்கிறார். 'சரி... ஒன்றோ இரண்டோ, ஒருவருக்கோ இரண்டு பேருக்கோ தருவதாகச் சொல்லிக் கொள்ளவேண்டியதுதானே?’ என்று கேட்டதற்கு, 'கொடுக்கவே முடியாது என்று இருக்கிற நிலையில், ஒன்று என்று சொன்னால் என்ன... ஆயிரம் என்று தாராளமாகத்தான் சொன்னால் என்ன?’ என்று சொல்லிப் பூரிக்கிறார் வசுதேவர்.
https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiBmewvM-saAmIIbF-j87E-0Uoj5jQ5M9hGV3zBG_9cc7w5EbpxeUOIA_soZyOUdFGdZAZCivX1W4KtzITARIN39kwtzpql-Ar8vA9qthBPVkgp60Q58MS2JCsywchiR6OzK10wOdkHcXY/s400/Krishna2.jpg

பகவானுக்கு உள்ள திருநாமங்களில் வாசுதேவன் எனும் நாமமும் ஒன்று. வாசுதேவன் என்றால்... எங்கும், எப்போதும் வசிக்கிறவன் என்று அர்த்தமாம்! ஆனால், இங்கே வசுதேவனின் மைந்தன் வாசுதேவன் என்பதாகச் சொல்லப்பட்டிருக்கிறது! அதுதான் வசுதேவருக்கு தரப்பட்டிருக்கிற மரியாதை. நந்தகோபனுக்கு மட்டும் என்ன குறைச்சல்? 

அவருக்கு தந்தைக்கு உரிய மரியாதையும் சந்தோஷமும் எப்படியெல்லாம் கிடைத்தது தெரியுமா?


குழந்தையில் அழகு, அழகில்லாதது என்கிற வித்தியாசங்கள் கிடையாது. குழந்தை என்றாலே அழகுதான்! அதிலும் குழந்தை கொழுகொழுவென்று இருந்தால், கொள்ளை அழகு. பகவான் ஸ்ரீகண்ணன் சிறுவயதில், குழந்தைப் பருவத்தில் எப்படி இருந்தான் தெரியுமா? இளங்களிறு போல இருந்தானாம்! அதாவது, குட்டி யானையைப் போல் மிடுக்குடன் திகழ்ந்தான். வெண்ணெய், பால், தயிர் என்று சாப்பிட்டுச் சாப்பிட்டு வளர்ந்தவன் அல்லவா, அவன்?!


இன்றைக்கு மருத்துவர்கள் சொல்கிற அட்வைஸ், 'ஒயிட்டா இருக்கிற உணவை கட் பண்ணுங்க’ என்பதுதான்! அதாவது பால், தயிர், வெண்ணெய், சாதம் போன்றவற்றைக் குறைத்துக் கொள்ளுங்கள் என்கின்றனர். நம்மில் பலரும், 'வெண்ணெய், தயிர், பால்’ என்றெல்லாம் ஒரு பேப்பரில் எழுதி, வீட்டில் வைத்திருந்தால்கூட, உபத்திரவம் வந்துவிடும் எனப் பயப்படுகின்றனர். 

ஆனால், பகவானுக்கு இந்தப் பிரிவினைகள் ஏதுமில்லை. குடித்ததே தயிர், கண்டதே பால், உண்டதே வெண்ணெய் என வளர்ந்தவன், கண்ணபிரான்! அவன், குட்டி யானையாக வலம் வரத்தான் செய்வான்.


குமரனாக நந்தகோபனிடமும், இளம் சிங்கமாக யசோதையிடமும் வளர்ந்தான் கண்ணன் என்கிறாள் 'மார்கழித் திங்கள்’ பாடிய ஸ்ரீஆண்டாள். அதாவது, நந்தகோபனைக் கண்டால் பவ்யமாக இருப்பான் கண்ணன். அதுவே, தாயார் யசோதையிடம் சண்டித்தனம் செய்து, ஏகத்துக்கும் சேட்டைகள் செய்வான் அவன்.


பிறந்ததுமே யமுனையைக் கடந்து, அக்கரைக்குக் கொண்டு செல்லப்பட்டான் அல்லவா, கண்ணன்? அப்படிக் கண்ணன் அங்கே போனதும் ஊரே கூடியதாம்; குதூகலித்ததாம். 'நான்தான் முதல்ல பாப்பேன்; நான்தான் முதல்ல பாப்பேன்’ என்று நந்தகோபன் வீட்டு வாசலில் பெரிய கூட்டமே நின்றது. இதைக் கண்டு கிடுகிடுத்துப் போனாளாம் யசோதை. 

'இங்கே பஞ்ச லட்சம் பெண்கள் இருக்கிறார்களே... அவர்கள் அனைவரும் குழந்தையைப் பார்க்க வேண்டும் என்கிறார்கள்; தூக்கிக் கொஞ்ச வேண்டும் என்கிறார்கள்; மடியில் கிடத்தி மகிழ வேண்டும் என்கிறார்கள். அத்தனை லட்சம் பெண்களும், குழந்தையை மடியில் கிடத்தி மகிழ்வதற்கு, என்ன செய்வது?’ என கைபிசைந்து தவித்தாள்.

கடைசியாக... வீட்டு வாசலில், 'முதலில் இவள், அடுத்தது அவள், மூன்றாவது இவள், நான்காவது, ஐந்தாவது...’ என்று மிகப் பெரிய பட்டியல் போட்டு, அதன்படி சட்சட்டென்று அவர்கள் குழந்தையை வாங்கி, மடியில் போட்டுக் கொஞ்சிவிட்டு, அடுத்தவரிடம் கொடுத்துவிட... அவர்கள் கொஞ்சிக் குதூகலித்து அடுத்தவரிடம் குழந்தையைத் தர... என்று அந்த ஊரே கொஞ்சி மகிழ்ந்ததாம்!


இவை அனைத்தையும் பார்க்கின்ற பேறு, பாக்கியம் எல்லாம் நந்தகோபனுக்குத்தான் கிடைத்தது. அதிலும் குறிப்பாக, மடியில் கண்ணனைக் கிடத்தி, அவனது கன்னத்தை வருடியபடியே பெண்ணொருத்தி, 'உங்க அப்பா யாருப்பா?’ என்று கேட்டாள்.

குழந்தைக்கு பேச்சு வருகிறதோ இல்லியோ, அப்படியே வராவிட்டால் கூட, அது ஏதோ சொல்ல... 'அட... குழந்தை அப்பான்னு கூப்பிடறதே... தாத்தாங்கறதே... அத்தையைக் கூப்பிடறது’ என்றெல்லாம் சொல்லிக் குதூகலிக்கிறவர்கள்தானே, நாம்?!

https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhJZIndPLnfk5WgBNxE4iw61NsVqDgZsyuZOdbMCmVVQh1ZjCfb8FCvawUD97gEWFdIMlgDKyTBt-8j0_81u9YAqaczJm-fKkUCRtJkGofL0xiKr-a2DYmQNCccXVQgJ1osuTOQ0mC7OQ8/s1600/Krishna.jpg
அந்தப் பெண்மணி கேட்டதும், வசுதேவர் என்று தந்தையின் பெயரைச் சொல்ல... கண்ணபிரான் சட்டென்று 'வ’ என்று சொல்லிவிட்டு உடனே நிறுத்திக்கொண்டார். 'இப்போதுதான் பிறந்திருக்கிறோம்; இன்னும் பாடசாலைக்கே போகவில்லை; பேச்சே வரவில்லை. அப்படியிருக்க... இதற்கு எப்படி பதில் சொல்வது!’ என்று யோசித்த கண்ணன், தாமரை இதழ்கள் போன்ற தன் விரலை மெள்ள நீட்டி, தன்னுடைய கடைக்கண்ணால், ஓரக்கண்ணால் நந்தகோபனைப் பார்க்க... 'அட... அப்பா யாருன்னு காட்டிருச்சே குழந்தை’ என்று ஒருத்தி சொல்ல... உடனே இன்னொருத்தி, 'குழந்தை அவங்க அப்பாவைப் போலவே, அவர் ஜாடையிலேயே இருக்கு’ என்று சொல்ல... களுக்கென்று சிரித்துக்கொண்டாராம் ஸ்ரீகிருஷ்ணர். 

அங்கிருந்தவர்கள் அனைவரும், குழந்தையின் சிரிப்பைக் கண்டு பூரித்துப் போனார்களாம்! ஆக, அத்தனை சந்தோஷங்களையும் பெருமைகளையும் நந்தகோபனுக்குக் கொடுத்தாலும், வசுதேவரைப் போற்றத் தவறவில்லை ஸ்ரீகண்ணனின் அடியவர்கள். அதனால்தான் வசுதேவனின் மைந்தனுக்கு வாசுதேவன் என்கிற திருநாமமே அமைந்தது.


வாசுதேவன் என்று சொன்னால், அந்தக் கண்ணன் மகிழ்வான். குளிர்ந்த மனத்துடன், நாம் கேட்பவற்றையெல்லாம் வாரி வழங்குவான். 'உங்க அப்பா அவர்தானே...?’ என்று ஒருவர் சொல்லும்போது, மகனுக்கு பெருமிதம் பிடிபடாது என்பது அந்த பகவானுக்கும் பொருந்தும்.


வாசுதேவா, வாசுதேவா, வாசுதேவா... என்று நேரம் கிடைக்கும்போதெல்லாம் சொல்லிக்கொண்டிருங்கள். குழந்தைக் கண்ணன், குதூகலத்தில் மகிழட்டுமே!


நன்றி - விகடன்

Saturday, July 16, 2011

கண்ணனை நினைத்தால் சொன்னது பலிக்கும்......காலங்கள் தோறும் நினைப்பது நடக்கும்..(ஆன்மீகம்)

https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhpjZKyvlYdSSSIcWlLyx_oBIwpymh0eYSBqMAGzdj3_Zx9hmtrzoBoN_22WE_f_mM3s622uw2QHA-mtmvWI33tuv87PrVhdNa9mJlsW7_i0g9DCbVd_tbWJpZmwHpvFlUDs1KNil82-eyC/s1600/zzzzz.jpg 
கண்ணன் நாமம் சொல்லும் கதைகள்!


சுமார் பதினைந்து இருபது வருடங்களுக்கு முன்பெல்லாம், குழந்தைகள் 50, 60 மார்க்குகள் வாங்கினாலே ரொம்பவும் சந்தோஷப்படுவார்கள், பெற்றோர்கள். ''அடடா..! எம் புள்ள என்னமா மார்க் வாங்கி, பாஸாகியிருக்கான் பாருங்க!'' என்று பார்ப்போரிடமெல்லாம் சொல்லிச் சொல்லி பூரித்து, குழந்தையை நடுக்கூடத்தில் நிற்க வைத்து, திருஷ்டி சுற்றிப் போடுவார்கள்.

ஆனால், இன்றைய காலமே வேறு! '60 மார்க்கெல்லாம் ஒரு மார்க்கா’ என்று அந்தக் குழந்தையை அவர்களின் வீட்டாரே இளக்காரமாகப் பார்க்கின்றனர். ''இப்படியெல்லாம் மார்க் எடுத்தா, எப்படி டாக்டராகிறது, எப்படி இன்ஜினீயர் ஆகுறது?'' என்று அலுத்துக்கொள்கின்றனர். 
அட... 90 மார்க்கே அந்தக் குழந்தை வாங்கியிருந்தாலும், ''ஏன், என்னாச்சு? பத்து மார்க் எதுல போச்சு? எங்கே கோட்டைவிட்டே? சரியா படிக்கலியா?'' என்கிற கேள்விகள்தான் பெற்றோர்களிடம் இருந்து வருகின்றன. கால மாற்றங்கள், போட்டிகள் நிறைந்த வாழ்க்கை என்றாகிவிட்ட உலகம்தான் இன்றைய நிலை.
மனனம் செய்கிற திறனும், எதையும் சட்டென்று கிரகித்துக்கொள்கிற கூர்மையும் குழந்தைகளுக்கு இருந்தால், அவர்கள் எளிதில் அதிக மதிப்பெண்கள் வாங்கமுடியும். அப்படியான திறமையும் புத்திக்கூர்மையும் இருக்கவேண்டுமெனில், குழந்தைகளுக்குச் சின்ன வயதிலிருந்தே புராணங்களையும் இதிகாசங்களையும் எடுத்துரைக்கவேண்டும்; பகவத்கீதையையும் ராமாயணத்தையும் விவரிக்க வேண்டும். அந்தக் கடமை, ஒவ்வொரு பெற்றோருக்கும் உண்டு. ஆனால், செய்பவர்தான் மிகமிகக் குறைவு!

சரி... பகவத்கீதை படிப்பதற்கும், பரீட்சையில் அதிக மதிப்பெண் எடுப்பதற்கும் என்ன சம்பந்தம் என்று கேட்கிறீர்களா?


https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgKcd5N_2iydpcE98o7KEZxCl0Quvt8xEIxpUHGhuio4d9Xir4pZe7K4I8O2QrAVPFrIMGmFvc6sTEpBmfNcP6hHUEcXBkCk8hslNaFtF4uaOTOtdnojDMcWHBEHZN7YuOxSK7FCXTxQhE/s1600/playing-vina.jpg
நிலாவைக் காட்டிச் சோறூட்டுகிறபோது அல்லது டி.வி-யில் கார்ட்டூனைக் காட்டி இட்லியைப் புகட்டுகிறபோது, ''இதுதான் பகவானின் திருநாமம். இதையும் கடந்து கடவுளுக்கு ஏகப்பட்ட பெயர்கள் இருக்கின்றன. அதிலும் குறிப்பாக, பகவத்கீதையில் இரண்டெழுத்தில் உள்ள திருநாமம், மூன்றெழுத்தில் உள்ள திருநாமம், நான்கெழுத்து திருநாமம் என்று எத்தனை உள்ளன தெரியுமா? பகவத்கீதையில், பகவான் ஸ்ரீகிருஷ்ணர் குறித்து, ஒரே திருநாமம் இரண்டு முறை வந்திருக்கிறது; 

அந்தத் திருநாமம் இதுதான்...'' என்றெல்லாம் குழந்தைகளுக்கு ஆன்மிகத்தையும் கொஞ்சம் ஊட்டலாமே! அப்படி ஊட்டினால், அந்தக் குழந்தை, பக்தி மார்க்கத்தை அறிந்து, சாஸ்திர- சம்பிரதாயங்களைக் கடைப்பிடிக்கிற, எதிலும் ஓர் ஒழுங்கைக் கொண்டிருக்கிற அற்புதமான மனிதனாக வருவது உறுதி.

அதுமட்டுமா? பகவானின் திருநாமங்களையும், அந்தத் திருநாமங்களுக்கான காரணங்களையும், ஓரெழுத்து, ஈரெழுத்து, மூன்றெழுத்து... என இருக்கிற திருநாமங்களையும் அந்தக் குழந்தைகள் மிக அழகாக புத்தியில் ஏற்றிக்கொள்ளும். இப்படியாக... நாம் சொல்கிற விஷயங் களையெல்லாம் உள்வாங்கிக் கொள்கிற, கிரகித்துக்கொள்கிற திறனானது சிறு வயதிலேயே வந்துவிட்டால், எல்.கே.ஜி படிப்பதில் துவங்கி, 6-வது, 7-வது படிக்கும்போது அந்தத் திறன் இன்னும் அதிகமாகி, பள்ளியிறுதிப் படிப்பில் மிகத் தெளிவாக உள்வாங்கிக்கொண்டு, கல்லூரிப் படிப்பை மிகச் சுலபமாக எட்டுவார்கள். 

அப்போது, விரும்பிய படிப்பைக் கல்லூரியில் தொடர்வதற்கு அதிக மதிப்பெண்களை எடுக்கிற புத்திக்கூர்மையும், ஞாபக சக்தியும், மனனம் செய்து உள்ளே உருவேற்றிக் கொள்கிற சாதுர்யமும் மூளையின் எல்லா மூலைகளிலும் பரவி, வியாபித்திருக்கும். ஆகவே, வீட்டில் குழந்தைகளிடத்தில், புராண- இதிகாச- காப்பிய- காவியங்களை சொல்லிக் கொடுங்கள்; அறிவும் மேம்படும்; ஆன்மிகமும் தழைக்கும்!


https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEirODR_g94lSbIP0nmW562abtV0fkXwPyV0O96JGFTCOia3vLi1OKZ-XTEEjMNXL3MnBNKaVr62cEqjdxdukgFOjCl39IFj9o55KtL4cW9GcPN7aUJqFW1sasVhze3hj7hbHn5MOG6GPIs/s1600/1192radhakrishnab&w.jpg

பகவத்கீதையில் பகவான் ஸ்ரீகிருஷ்ணரின் ஒரே திருநாமம், இரண்டு முறை வந்திருக்கிறது என்று சொன்னேன். அந்தச் சிறப்புக்கு உரிய திருநாமம் என்ன தெரியுமா? வசுப்ரதஹா!

இந்தத் திருநாமத்தின் அருமை- பெருமையைப் பார்ப்பதற்கு முன்பு, பகவானின் திருமேனியை ஆழ்வார் எப்படி விவரிக்கிறார் என்பதைப் பார்ப்போம். இதுவும், இன்றைய குழந்தைகளுக்குப் புரியவைக்க வேண்டிய ஒன்றுதான்!

ஜோதிமயமானவன் ஸ்ரீகிருஷ்ணர் என்று பார்த்தோம், அல்லவா! பகவான் எனப்படுபவர் ஒளிமயமான, தேஜஸ் நிறைந்த, பரஞ்சோதி என்பதில் யாருக்குத்தான் சந்தேகம் வரும்?! சரி... அவருடைய திருமேனியை, பொன்னுக்கு நிகராக ஜ்வலிப்பதாகச் சொல்கிறார் ஆழ்வார். ஆனால், அத்துடன் நின்றுவிடவில்லை அவர். தகதகத்து மின்னுகிற பொன்னைச் சொல்லியும் மனதுள் நிறைவு தராததால், 'நன்பொன்’ என்று பாடுகிறார். 'மாசறு பொன்னே...’ என்கிறோமே, அப்படி நன்பொன் எனப் பாடுகிறார். அப்போதேனும் நிறைவுற்றாரா அவர்?!

'உரைத்த நன்பொன்’ என்கிறார். அதிலும் மனம் சமாதானமாகவில்லை அவருக்கு. பொன் என்று சொல்லியாயிற்று; நன்பொன் என்று சான்றிதழும் கொடுத்தாகிவிட்டது; 'உரைத்துப் பார்த்துதான் சொல்கிறேன்’ என்கிற உறுதியையும் தந்தாகிவிட்டது. 

இறுதியாக, 'சுட்டுரைத்த நன்பொன்’ என்று, தங்கத்தைச் சுட்டு, உரைத்துப் பார்த்து, நல்ல பொன் எனத் தெரிந்துகொண்டேன் என்று சொல்லிச் சிலாகிக்கிறார். அப்படியும், அவருக்குள் ஒரு சந்தேகம்...  'இது சரிதானா? பகவானின் திருமேனிக்கு இது சரிசமம்தானா?’ என்று உள்ளுக்குள்ளிருந்து கேள்வி வந்து உசுப்ப... சட்டென்று, 'சுட்டு உரைத்த நன் பொன் ஒவ்வாது’ என்று பாடிவிட்டார் ஆழ்வார். 'அடடா... பகவானே! உன்னுடைய ஜோதிமயமான திருமேனிக்கு, சுட்டுரைத்த நல்ல பொன்கூட இணையாகாது’ என்று பாடி முடித்து, வணங்குகிறார்.

இதுதான் தமிழின் அழகு; இதுதான், ஆழ்வார் பெருமக்களின் பூரணத்துவமான இறை பக்திக்குச் சான்று! தமிழையும் பக்தியையும் கலந்து, உள்ளிருந்து பாடல்களாகத் தந்திருக்காவிட்டால், நமக்கெல்லாம் நாலாயிரத் திவ்வியப் பிரபந்தமெல்லாம் கிடைத்திருக்குமா, சொல்லுங்கள்!

இப்படித்தான் பராசர பட்டர், ஸ்ரீரங்கத்து அரங்கநாதனின் முன்னே நின்றார். 'என்னையும் என்னுடைய அழகையும் பாடிவிடுவீரோ நீர்?’ என அரங்கன் கேட்க... 'முதலில், உம்முடைய ஆதிசேஷனைப்போல எனக்கு ஆயிரம் நாக்குகளைத் தாருங்கள், பார்க்கலாம்’ என்றாராம் பராசரர்.

https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiwEBdYyJBnojIM5MS5DwwgNhkHmr3J6cjEkdvLR3X67t8OH6dFeD_r7kY999mxAn8HjLPzXnbd-BwkK79rwAGrUAJxBrKf8KbIj2_hksiijBtqoGnTzYqkgQdfLdNAmb7yHP5baMXy3XA/s1600/Lord_Krishna_1.jpg

'அட... ஆயிரம் நாக்குகள் இருந்தால்தான் பாடுவீரோ?’ என்று சிரித்த அரங்கன், கருணையும் வாஞ்சையும் மேலிட... பராசரபட்டருக்கு, ஆயிரம் நாக்குகளை வழங்கினான்.

ஆனந்தத்தில் கைகள் குவித்து, சிரம் தாழ்த்தி நமஸ்கரித்தார் பராசரர். ''மன்னிக்கவும் ரங்கா! உன்னை என்னால் பாட முடியாது!'' என்று சொல்லிவிட்டு, அமைதியாகிவிட்டார். ஆச்சரியம் தாங்கவில்லை அரங்கனுக்கு!

பின்னே... பாடு என்று உத்தரவு போட்டாகிவிட்டது. பராசரர் கேட்டபடி, ஆயிரம் நாக்குகளையும் அவருக்கு வழங்கியாகிவிட்டது. அப்படியும் 'பாட முடியாது’ என்று மறுத்தால், அரங்கனுக்கு ஆச்சரியம் எழத்தானே செய்யும்?

''என்ன விளையாடுகிறாயா? ஆயிரம் நாக்குகள் கேட்டாய்; கொடுத்தேன். பிறகென்ன... பாடவேண்டியதுதானே? முடியாது என்கிறாயே!'' என்றான் அரங்கன்.

பராசர பட்டர், மீண்டும் கைகளைக் குவித்துக்கொண்டார்; மொத்த உடலையும் இன்னும் குறுக்கிக்கொண்டார்; முதுகை வளைத்து இன்னும் கூனாக்கிக்கொண்டு, ''அரங்கா... உன் ஒளி பொருந்திய அழகை என்னால் பாடமுடியாது என்று சொல்வதற்கே, எனக்கு ஆயிரம் நாக்குகள் தேவையாக இருக்கும்போது, பரஞ்சோதியாகத் திகழும் உன்னையும் உனது பேரழகையும் பாடுவதற்கு, எனக்கு இன்னும் எத்தனை எத்தனை நாக்குகள் தேவையோ?!'' என்று சொல்லிப் புகழ்ந்தாராம் பராசரர்.

http://www.dinamani.com/Images/article/2010/8/27/ve.jpg

என்னவொரு அற்புதமான உவமை, பாருங்கள்! பகவானின் பேரழகுத் திருமேனியை விவரிப்பதற்கு எப்படியெல்லாம் சிந்தித்து, அவனுடன் இரண்டறக் கலந்திருக்கின்றனர் அடியவர்கள்! அப்பேர்ப்பட்டவனது திருநாமத்தைச் சொல்வது, எத்தனை வல்லமையை நமக்கு வழங்கும் என யோசியுங்கள்.

முடிந்தால்... இதையும் உங்களின் குழந்தைகளுக்கு எடுத்துச் சொல்லுங்கள். ஏனெனில், பகவான் எப்போதுமே நம்மைவிட குழந்தைகளுக்கு இன்னும் நெருக்கமானவன்!

நன்றி - சக்தி விகடன்

Sunday, July 10, 2011

காஞ்சிபுரம் ஸ்ரீஆதிகேசவர் தரிசனம் ( ஆன்மீகம்)

http://dinamani.com/Images/article/2010/6/23/25vmani2.jpg

யாகம் காத்த எட்டு கரங்கள்!

காஞ்சி ஸ்ரீஆதிகேசவர் தரிசனம்
ட்டெழுத்து நாயகன், எட்டுத் திருக்கரங்களுடன் அருளாட்சி நடத்தும் அற்புதத் தலம், காஞ்சி- அஷ்டபுயகரம்; ஸ்ரீஆதிகேசவபெருமாள் குடியிருக்கும் திருக்கோயில்!

சென்னையிலிருந்து சுமார் 80 கி.மீ. தூரத்தில் உள்ளது காஞ்சிபுரம். இங்கே ஸ்ரீவரதராஜ பெருமாள் ஆலயத்தில் இருந்து சுமார் 2 கி.மீ. தூரம் மேற்கே பயணித்தால், அஷ்ட புயகரம் பெருமாள் ஆலயத்தை அடையலாம்.

வைணவ திவ்யதேசங்களில் ஒன்றான இந்தத் தலத்தை திருமங்கையாழ்வார், பேயாழ்வார், மணவாள மாமுனிகள் மற்றும் ஸ்வாமி தேசிகன் ஆகியோர் பாடிப் போற்றியுள்ளனர்.

சோழர் கால கட்டுமானத்துடன் திகழும் ஆலயத்தில், சக்ராக்ருதி விமானத்தின் கீழ், எட்டுத் திருக்கரங்களுடன்...  வலக்கரங்களில் முறையே சக்கரம், கத்தி, புஷ்பம், அம்பு ஆகியவையும், இடக்கரங்களில் சங்கம், வில், கேடயம், கதை ஆகியவையும் திகழ, அருள்கோலம் காட்டும் ஸ்ரீஆதி கேசவரைத் தரிசிக்கக் கண்கோடி வேண்டும்.
https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjZxZlGmmBUfnQ8Rphotuuz3ZUDZJqfDj1QcB0NRI4yfmesrrNuO3gZj7x5pgKWSYSMtCP-djPNSIlWwCu7Mr49Ck_EqFtqg_q3DJYksHMaoC0rQZqDuqyZwL4SeesZZKw8iZ7rC6vI68Ik/s400/g9.jpg

சரி, எட்டுத் திருக்கரங்களுடன் இவர் அவதரித்தது ஏன்? 'நாடிக் கண்டுகொண்டேன்’ என, தம்மைத் தேடி ஓடி வரும் பக்தர்களுக்கு அருள, வரம் வாரி வழங்க இரண்டு கரங்கள் போதாதென்று, எட்டுத் திருக்கரங்களுடன் அவதாரம் செய்துவிட்டாரோ?! வேறு ஏதேனும் புராண காரணங்கள் உண்டா?! ஒருமுறை, யாகம் ஒன்று நடத்தத் திட்டமிட்டான் நான்முகன். காஞ்சியில் வேள்வி நடத்தினால், அது அஸ்வமேத யாகத்துக்கு ஒப்பாகும். எனவே, புனிதமிகு காஞ்சி யில் யாக காரியங்களை ஆரம்பித்தான்.


http://img1.dinamalar.com/KovilImages/GalleryThumb/G_T9_1151.jpg

ஆனால், ஏற்கெனவே அவருடன் ஊடல் கொண்டிருந்த கலைவாணி, தன்னை அழைக்காமல் பிரம்மன் நிகழ்த்தும் யாகத்தை அழிக்க அரக்கர்களை ஏவினாள். பிரம்மன், பெருமாளைச் சரணடைந்தார். பெருமாளும் எட்டுத் திருக்கரங்களுடன் தோன்றி, அசுர வதம் நிகழ்த்தினார்; பிரம்மனின் யாகம் காக்கப்பட்டது. பிறகு, பிரம்மதேவன் பிரார்த்தித்துக் கொண்டதற்கு இணங்க, எட்டுக் கரத்தினராய் இங்கேயே கோயில் கொண்டாராம். 

அதுமட்டுமா? எதிர்த்து வந்த சரபேசனை பணியச் செய்து, பயம் நீக்கி, யாகசாலையின் வாயுமூலையை பாதுகாக்கப் பணித்ததும், கஜேந்திரனுக்கு திருவருள் புரிந்ததும் இங்குதான். இத்தல இறைவனை மங்களாசாசனம் செய்த பேயாழ்வார்...

தொட்ட படையெட்டும் தோலாத வென்றியான்
அட்ட புயகரத்தான் அஞ்ஞான்று - குட்டத்துக்
கோள்முதலை துஞ்சக் குறித் தெறித்த சக்கரத்தான்
தாள்முதலே நங்கட்குச் சார்வு 

- எனப் போற்றுகிறார்!

தாயாரின் திருநாமம் ஸ்ரீஅலர்மேலு மங்கை தாயார். ஸ்ரீஆண்டாள், கருடாழ் வார் ஆகியோரையும் இங்கே தரிசிக்க லாம். சனிக்கிழமைகளில் அஷ்டபுயகரத் தான் கோயிலுக்குச் சென்று வழிபட, நம் பிரச்னைகள் யாவும் தீரும் என்கிறார்கள்.

நாமும் ஒருமுறை, நகரேஷு காஞ்சி என்று புராணங்கள் போற்றிக் கொண்டாடும் காஞ்சிபுரத்துக்குச் சென்று, அஷ்டபுயகரத்தானை ஸ்ரீஆதிகேசவனை வழிபட்டு வருவோம். நம் இல்லத்தில் அஷ்ட ஐஸ்வரியங்களும் செழிக்கும்!


ண்ணனூர் கண்ணபுரம் என்றெல்லாம் போற்றப்படும் திவ்ய தேசம் திருக்கண்ணபுரம். மூலவர் திருநாமம் ஸ்ரீநீலமேகப் பெருமாள்; கிழக்கே திருமுக மண்டலமாக நின்ற கோலத்தில் அருள்பாலிக்கிறார். இவர் பிரயோகச் சக்கரத்துடன் திகழ்வது விசேஷ அம்சம். தாயார் திருநாமம் ஸ்ரீகண்ணபுர நாயகி.

உற்ஸவர் ஸ்ரீசௌரிராஜ பெரு மாளும் வரப்பிரசாதியே! அர்ச்சகர் ஒருவர், சோழ அரசனிடம்... பெருமாளுக்குக் கேசம் வளர்ந்ததை காட்டுவதாக வாக்களிக்க, பெரு மாளும் திருமுடியில் கேசத்துடன் திருக்காட்சி தந்ததால் ஸ்ரீசௌரிராஜன் என்ற திருப்பெயர் வந்ததாம்.

https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjYllt9rezOJ2xNXNXNp9uR68xPgqOlrt_B33WskQj5rCphi80plRz02gNhYRUE1C_3TJlbx-mUpzZYPYX3EddSiz5s5sOJu_iWqYTY5t_dfnCfac_xWUeUyvpUZkMY_NKESFzrb24yN0aE/s400/g7.jpg

பஞ்ச கிருஷ்ண ஸ்தலங்களில் ஒன்றான இந்தத் தலத்தின் சிறப்பம்சம் என்ன தெரியுமா? ஏழு வகை புண்ணியங்களுடன் திகழ்கிறதாம்!

  அதாவது, ஸ்ரீகிருஷ்ணாரண்ய க்ஷேத்திரம், தண்டகவனம், காவிரி நதி, கடல், கண்ணபுர நகர், நித்திய புஷ்கரணி, உத்பலாவதக விமானம் ஆகிய ஏழு வகை புண்ணியங்கள் திருக்கண்ண புரத்துக்கு உண்டு. ஆக இந்தத் தலத்துக்கு வந்து தரிசித்து வழிபடுவது மிகவும் சிறப்பு. இன்னுமொரு சிறப்பம்சமும் உண்டு இந்த திவ்ய தேசத்துக்கு. அஷ்ட சுயம்பு திருத்தலங்களில் ஒவ்வொன்றிலும் எம்பெருமான், திருமந்திரத்தின் ஒவ்வொரு அட்சரமாக எழுந்தருளியிருக்கிறாராம். ஆனால் இந்தத் தலத்தில், எட்டெழுத்தின் முழு வடிவினராக எழுந்தருள்கிறாராம். இதை இறைவனே கூறியதாக விவரிக்கிறது தல புராணம்.


நாகப்பட்டினம்- நன்னிலம் சாலையில் உள்ள திருப் புகலூரிலிருந்து சுமார் 2 கி.மீ தொலைவில் உள்ளது திருக்கண்ணபுரம். குடும்பத்துடன் இந்தத் தலத்துக்குச் சென்று எட்டெழுத்துநாயகனை வழிபட்டு வாருங்கள்; உங்கள் கஷ்டமெல்லாம் பறந்துபோகும்.

நன்றி - சக்தி விகடன்

Sunday, July 03, 2011

குப்தா ..குப்தா... ...சித்ர குப்தா..குப்தா . வரம் தா..வரம் தா ( ஆன்மீகம்)

சித்ரகுப்தனை பணிவோம்!
லக அமைதியும் மகிழ்ச்சியும் தொடர்வதற்குக்  கோயில்களும் வேள்விகளும் பேருதவி புரிகின்றன. அதில் கலந்துகொள்ளும் மக்களும் பயன்பெறுவர். தவறான சிந்தனை மற்றும் செயல்பாடுகளால் சிக்கித் தவிக்கும் மனிதர்களை அவற்றில் இருந்து விடுதலை பெற, இறைப் பணியில் ஈடுபடச் சொல்கின்றன, புராணங்கள்!

தீர்த்தாடனம் செய்து, கோயிலை வலம் வருவதுடன், இல்லறத்தில் இருந்தபடியே இறைவனை வழிபடும் முறைகளையும் அவை எடுத்துரைக்கின்றன. அன்றாடப் பிரச்னைகளில் இருந்து விடுபடுவதற்கு வழிபாடுகளே உதவும். வீட்டில் இருந்தபடியே, இறைவனுக்கு நம் விருப்பப்படி வழிபாடு செய்வதற்கான வழிமுறைகள் உள்ளன.

மனம், விரும்பிய இறைத் திருமேனியைக் கொண்டு வழிபட, ஈடுபாடு சிதறாமல் இருக்கும். மாற்றத்தை விரும்பும் இயல்பு கொண்ட மனம், மாறுபட்ட இறை உருவங்களுக்குத் தாவும். நாளடைவில், அதுவே இறைத் தத்துவத்தில் உறைந்து போவதற்கு உறுதுணை புரியும். மனதின் மாறுபட்ட இயல்புக்குத் தக்கபடி, மாறுபட்ட இறையுருவங்களின் வழிபாட்டினை எடுத்துரைக்கின்றன, புராணங்கள். 'இறைவன் ஒருவனே; ஆனால், உருவங்கள் பலப் பல’ என்பது மக்களின் மனநிலையில் இருந்து உருவான கோட்பாடு! குழந்தையில் விளையாட்டு, இளமையில் இன்பம், முதுமையில் ஆன்மிகம் என மனம் மாறுபட்டு, மகிழ்கிறது.

மனதின் விருப்பம், உருவமில்லாத இறைவனை உருவத்துடன் பார்க்கிறது. வில்லங்கத்தை அகற்ற ஸ்ரீவிக்னேஸ்வரர்; குடும்பத்தில் மகிழ்ச்சியை நிலை நிறுத்த சோமாஸ்கந்தர்; எதிரிகளை விரட்ட ஸ்ரீசுதர்சனர்; கல்வியை வழங்கி அறியாமையை அகற்ற ஸ்ரீகலைமகள்; செல்வத்தை அளித்து ஏழ்மையை விரட்ட அலைமகள்; எதிரிகளைத் துரத்த ஸ்ரீமகிஷாசுரமர்த்தினி... இப்படியாக, இன்னல்களை அகற்ற இறையுருவங்களை ஏற்கும்போது, நமது தேவைகள் எளிதாக நிறைவேறிவிடும்.

http://www.trisakthi.com/Issues/ARP%2016-30/Images/Chithragupthan4.jpg


வரவு- செலவுக் கணக்கை ஏட்டில் பதிந்து வைக்கிற முறை தொன்று தொட்டு வருகிற ஒன்று! அவருக்குக் கணகன், கணக்கன் என்று பெயர்கள். சம்ஸ்கிருதத்தில் 'காயஸ்தன்’ என்பர். கணக்கில் உள்ள  தவறு, அரசுக்குத் தெரிந்தால், தண்டனை உண்டு; நல்லவிதமாக இருந்தால் வெகுமதி நிச்சயம்!  
இயற்கையைச் சீரழிக்கும் செயல்கள் பாபம்; இயற்கையை அனுசரித்துப் போகிற செயல்கள் புண்ணியம். அதிகாரிகளின் கண்ணில்படாதவற்றுக்குக்கூட, இறைவனின் நீதிமன்றம் தண்டனை அளிக்கும். நிரபராதி தண்டிக்கப் படக்கூடாது, அபராதி தப்பிவிடக் கூடாது என்பதற்காகவே கடவுளின் நீதிமன்றத்தில் கணக்கன் இருக்கிறான். அவனுடைய பெயர், சித்ரகுப்தன். பாவ- புண்ணியங் களைப் பதிவு செய்து, நீதியரசனான எமனிடம் சமர்ப்பிப்பவன் இவன்தான்!

எமன், தர்மராஜன், மிருத்யு, அந்தகன், வைவஸ்வதன், காலன், ஸர்வபூதஷயன், ஒளதும்பரன், தத்னன், நீலன், பரமேஷ்டி, விருகோதரன், சித்திரன், சித்ரகுப்தன் ஆகிய 14 பேரும் நீதிமன்ற அதிகாரிகள். செயல் புலன்கள் ஐந்து, அறிவுப் புலன்கள் ஐந்து; மனம், புத்தி, சித்தம், அகங்காரம் நான்கு... ஆக, இந்தப் பதினான்கில் உருப்பெற்ற மனிதனுக்கு உகந்தவாறு 14 பேருடன் நிறைவுறுகிறது! 

நீதிமன்றம் 14 வழிகளில் பாவ- புண்ணியங்களைச் சேர்த்துவிடும். பாவம் செய்தவனைத் துயரத்தில் தள்ளுவதும் புண்ணியம் செய்தவனை கடவுளுடன் இணைப்பதும் நீதியரசனின் வேலை. 

https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgtLkseMR63vL84kY6pCSh26zuBYGUSe5Rj4SgJnVeuenMMyO6KNowC18ehh2EF-hmzM9K_DRyzxl8OgAClKSpwJnEyDfXkGqS-ELHRI-NaooIwTW9f-DnJgNdcI_KB-uadoPC3EaiJiBgy/s1600/chitragupta+temple.jpg

இவை அனைத்துக்குமான செயல்களுக்கு ஆணிவேர், சித்ரகுப்தனின் பதிவேடு!
சித்ரம் என்றால் மனிதன் செய்கிற பாவ- புண்ணியம்; குப்தன் என்றால், அதைப் பதிவேட்டில் பதிந்து, தண்டனை அல்லது பெருமை அளிக்கும் வரை காப்பவன் என விளக்கம் தருகிறது சப்த கல்பத்ருமம்.

தியானத்தில் ஆழ்ந்த பிரம்மனின் தேகத்தில் இருந்து தோன்றியவன் சித்ரகுப்தன். கைகளில் ஏடும் எழுதுகோலும் ஏந்தியிருப்பவன்; தர்மராஜனுக்கு உதவுவதற்காக, பிரம்மனால் கணக்கனாக நியமிக்கப்பட்டான் என்கிறது பத்ம புராணம். சித்திரை மாதம், சித்திரை நட்சத்திரத்துடன் இணைந்த பௌர்ணமியில் சித்ரகுப்தனை வழிபடும்படி பரிந்துரைக்கிறது புராணம். சஷ்டி விரதம்போல், சித்ரகுப்த விரதமும் உண்டு.

கற்றறிந்தவர்கள் வேத முறைப்படியும், பாமரர்கள் 14 பெயர்களைச் சொல்லியும் வழிபடலாம். கைகளில் ஏடும் எழுதுகோலும் இருக்கிற சித்ரகுப்த வடிவத்துக்கு, 16 வகை உபசாரங்கள் செய்து வழிபடுவது சிறப்பு. 14 அந்தணர்களை நீதி அதிகாரிகளாகப் பாவித்து, அவர்கள் மூலமாக சித்ரகுப்த வழிபாட்டைச் செய்து, பூஜையை நிறைவு செய்யவேண்டும். அத்துடன் அன்னதானம் செய்வதும் விசேஷம். 14 பெயர்களைச் சொல்லி, தண்டனிட்டு வணங்கவேண்டும்.

'தெரிந்தோ தெரியாமலோ தவறு கள் நிகழ்ந்திருக்கும். பதிவேட்டில் எழுதியுள்ள எனது தவறுகளை எமனிடம் சமர்ப்பித்துவிடாதீர்கள். தங்களது அருளால், துன்பத்தில் இருந்து விடுபடவேண்டும். தங்களிடம் கருணை மனுவைச் சமர்ப்பிக்கிறேன். அதனை நீதியரசன் ஏற்கும்படி செய்யுங்கள்’ என சித்ரகுப்தனைப் பிரார்த்திக்க வேண்டும். அவரது சிபாரிசு, நிச்சயம் உங்களைக் காப்பாற்றி விடும். ஆகவே, பாவத்திலிருந்து விடுபட, சித்ரகுப்த பூஜை செய்வது அவசியம் என்கிறது புராணம் (சித்ரகுப்த நமஸ்து ப்யம் நமஸ்தே கர்மரூபிணே...). 

செய்கிற தவறு மனதில் பதிவதுபோல், அவனது பதிவேட்டிலும் பதிந்துவிடும். அவனைப் பணிவதே விடுபடுவதற்கான வழி! எமன் முதலான 14 பெயர்களை உச்சரித்து, சித்ரா பௌர்ணமியின் போது வணங்கினால், நரகத்தின் வேதனையில் இருந்து மீளலாம். நவகோள்களில் கேதுவும் ஒருவன். அவனது பிரத்யதி தேவதையாக இருப்பவன் சித்ரகுப்தன். கேது, மோட்சத்தை அளிப்பவன் என்பதற்கு அவனுடன் இணைந்த சித்ரகுப்தனே சாட்சி! கேதுவை வணங்கியவரை துயரத்தில் இருந்து விடுவித்து, வீடுபேறு அளிக்கிறான் சித்ரகுப்தன்.  


ஸெளதாஸன் எனும் அரசன், நல்லவர்களைத் துன்புறுத்தி, துஷ்டர்களை ஆதரித்தான். மக்கள் வேதனையில் ஆழ்ந்தனர். அவனது செயல்கள், சித்ரகுப்தனின் பதிவேட்டில் எழுதப்பட்டன. பிறகு, அவன் இறந்ததும் யாதனா தேகத்துடன் எமனின் முன்னே நிறுத்தப்பட்டான். 

பதிவின்படி, நரகத்துக்கு அனுப்ப முயன்றார் எமன். அப்போது சித்ரகுப்தன், ''அரசன் தனது தவற்றை உணர்ந்து தங்களையும் என்னையும் வேண்டி சித்ரா பௌர்ணமியில் விரதம் இருந்தான். மனம் திருந்தி, மன்னிக்க வேண்டினான். எனவே, துயரத்திலிருந்து விடுவியுங்கள்'' என்றான். உடனே, அவனை விடுவித்தார் எமன் என்கிறது பவிஷ்ய புராணம். தவறை உணர்ந்தவனுக்கு மன்னிப்பு உண்டு என்கிறது தர்மசாஸ்திரம். ஆகவே, அன்றைய நாளில் ஏழைகளுக்கு ஏடு, எழுதுகோல் மற்றும் அன்னம் ஆகியவற்றை தானம் செய்தால், சித்ரகுப்தன் மகிழ்வான்.

http://santancreative.com/Portals/0/Gallery/Album/11/My-CHITRAGUPTA-paint.JPG

யமாயதர்மராஜாய மிருத்ய வேசாந்ததாயச
வைவஸ்வதாய காலாய ஸர்வபூதஷயாயச
ஒளதும் பராய தத்னாய நீலாய பரமேஷ்டினே
விருகோதராய சித்ரா சித்ரகுப்தாயவைநம: 
  - இந்தச் செய்யுளைச் சொல்லி வணங்கினால், பலன்கள் கிடைக்கும்.

இறையுருவத்தைக் கண்கள் பார்க்க வேண்டும்; நாவு அவனது பெயரையே உச்சரிக்க வேண்டும்; மனமானது, அவனையே நினைக்கவேண்டும்; கைகள், அர்ச்சிப்பதில் ஈடுபட வேண்டும்; செவிகள், அவனது புகழைக் கேட்க வேண்டும்; கால்கள், அவனுடைய  ஆலயத்துக்குச் செல்ல வேண்டும்; நாசி, அவனுக்கு அளிக்கப்படும் பூக்களின் நறுமணத்தை நுகரவேண்டும்; சிரம், அவனையே வணங்க வேண்டும்... இப்படியாக உடலுறுப்புகள் அனைத்தும் இறைவழிபாட்டில் ஈடுபடுவதே உத்தமம்! வீட்டில் வழிபடும்போது, இவை அனைத்தையும் திறம்படச் செய்யலாம்.

புராணங்களை இயற்றிய வேதவியாசர், மக்களைக் கரையேற்ற எளிய முறையில் வகுத்துத் தந்த வழிபாடுகள், இன்றைய சூழலுக்கும் உகந்ததாக அமைந்திருப்பதே அதன் சிறப்பு! அறம், பொருள், இன்பம், வீடு - ஆகியவற்றைப் பெற சித்ரகுப்த வழிபாடு உதவும் (தர்மார்த்தகாம...). சித்ரகுப்தனுக்கு உரிய நாளில், பெண்களும் வழிபடலாம்; 

அவர்களுக்கு உரிய பலனும் வந்துசேரும் என நாரத ஸம்ஹிதை தெரிவிக்கிறது. வேதங்களை அறியாதவர்கள் கூட எளிய முறையில் பூஜித்துப் பயன் பெறலாம். 'சித்ரகுப்தாய நம:’ என்று சொல்லி, அனைத்து உபசாரங்களையும் செய்து, அவனது திருநாமத்தை உச்சரித்து வணங்கினால் போதும்!

அன்றாடப் பணிகளுடன் இறை வழிபாட்டையும் செய்ய வேண்டும். காலையில் நீராடி, நெற்றிக்கு இட்டுக் கொண்டு, மனதாரப் பிரார்த்திக்க வேண்டும். முதலில் இவை நடைமுறைக்கு வந்தால்தான், புராணங்கள் சொல்கிற வழிபாடுகளைத் திறம்படச் செயல்படுத்த முடியும். கோயிலில் வழிபடுவது ஒருபுறம்இருப்பினும், வீட்டில் செய்யும் வழிபாடு களைச் செய்யும்போது, இன்னும் அமைதி யையும் சந்தோஷத்தையும் அடையலாம்! அதற்கு, நம் புராணங்கள் அளித்துள்ள வழிபாட்டு முறைகள், மிகச் சிறந்த வரப்பிரசாதம்!

thanx- sakthivikatan

http://www.punjabigraphics.com/wp-content/uploads/2011/01/bhagwan-chitragupta.jpg

Sunday, June 26, 2011

கோ தானம் எதற்காக?அரிசி மாவால் கோலமிடுவது புண்ணியமா? நவக்கிரகங்களை வழிபடுவது எப்படி? (ஆன்மீகம்)


கேள்வி-பதில் : சேஷாத்ரிநாத சாஸ்திரிகள்

1. கோ தானம் எதற்காக... அதன் மகிமைகள் என்ன?

பசு மாட்டில் 14 உலகங்களும் அடங்கியுள்ளன. பசுவை தானம் அளித்தால், அகில உலகையும் தானம் அளித்த பலன் உண்டு. வேள்விக்குத் தேவையான நெய், இறைவனின் அபிஷேகத்துக்கு உகந்த பால், தயிர், நெய், பஞ்சகவ்யம் ஆகியன பசுவிடம் இருந்து கிடைக்கின்றன. பால், தயிர், நெய், கோமியம், சாணி ஆகிய ஐந்தின் கலவை பஞ்சகவ்யம் ஆகும். பஞ்ச என்றால் ஐந்து; கவ்யம் என்றால் பசுவிடம் இருந்து வந்தது என்று பொருள். இது, நமது எலும்பு மற்றும் தொடு புலனோடு இணைந்த பாபத்தை அழிக்கவல்லது என்கிறது சாஸ்திரம் (யத்வகஸ்திகதம்பாபம...).

கோமூத்திரம் வெள்ளைப்பாண்டை அறவே அகற்றும்; பஞ்ச கவ்யகிருதம் மனநோயைக் குணப்படுத்தும் என்கிறது ஆயுர்வேதம். பசுவின் பால் முழு உணவு. உடல் மற்றும் உள்ளத்தைத் தூய்மையாக்குவதுடன், சுகாதாரத்தையும் பேணிக்காப்பது பசுவின் பால். நெய்யானது, ஜீரண சக்தியை வலுப்படுத்தி உடலுக்கு வலுவூட்டும். மருத்துவ குணமுடைய பொருள்களை மற்றவர்களுக்கு அளிப்பதால் உண்டாகும் பெருமை சொல்லில் அடங்காது. ஆறறிவு இல்லாதது, ஆறறிவு பெற்றவர்களை வாழ வைக்கிறது. பசுவின் பாலுக்கும் நெய்க்கும் ஈடான மற்றொரு பொருள் இல்லை. அதன் இழப்பை, தற்காலச் சூழலில் வாழும் ஆறறிவு பெற்றவர்களிடம் காணமுடிகிறது.



தாய்ப்பால் கிடைக்காத குழந்தைகளுக்குத் தாய்ப்பாலாகச் செயல்படுவது பசும்பால்தான். இயற்கையின் படைப்பை கடைச் சரக்காக மாற்றக்கூடாது என்பதால், தானமாக (இனாமாக) அளிக்கச் சொன்னது தர்மசாஸ்திரம். பால் கொடுப்பது பசு; பணம் பெறுவது மற்றொருவர் என்று இருக்கக்கூடாது என்பதால், பசுவை தானமாக அளிக்கப் பரிந்துரைத்தது தர்மசாஸ்திரம். வேள்விக்குத் தேவையான நெய்யை அளிப்பதால், வேள்வி அரசன் கண்ணன், பசுக்களைப் பாதுகாக்கும் கோபாலனாகத் தோன்றினான்.




2. அரிசி மாவால் கோலமிடுவது புண்ணியம் என்பார்கள். ஆனால், அந்த அரிசி மாவை தின்ன வரும் எறும்புகள், நம்மையும் அறியாமல் காலில் மிதிபட்டு இறந்தால், பாபம் சேராதா?

அனுதினமும் மருந்தடித்துக் கொசுக்களைக் கொன்று குவிக்கிறோம். அது பாபம் இல்லையா? அதேபோல், நடக்கும் போது நமது செருப்புகளுக்கு அடியில் அகப்பட்டு ஈ- எறும்பு போன்றவை மடிகின்றனவே?! வெண்டைக்காயை நறுக்கும் போது, சில நேரம் எதிர்பாராதவிதமாக உள்ளிருக்கும் புழுக்களும் அறுபட்டுவிடுமே! மாவரைக்கும்போதும், அம்மியில் அரைக்கும் வேளையிலும் மிகச்சிறிய உயிரினங்கள் குழவியில் அடிபட்டு மடிந்துபோகலாம்; வரட்டி, விறகுகளில் ஒளிந்திருக்கும் உயிரினங்கள், அடுப்பு நெருப்பில் மடிய நேரிடுகிறதே? தேனுக்காக தேனீக்களைத் தெரிந்தே அழிக்கிறோமே?! வரையறை இல்லாத அஹிம்சையை ஏற்றால், பல நன்மைகளை இழக்க நேரிடும். எறும்பு வராமல் இருக்க, தெரிந்தே நாம் எறும்புப் பொடியை உபயோகிப்போம்.



விஞ்ஞானக் கண்டுபிடிப்புகளோ, 'லக்ஷ்மண ரேகையை’ (சாக்பீஸ் கோடு போன்று) அறிமுகம் செய்து, எறும்புகளை அழிக்க வழி சொல்கிறது.



உங்கள் கவனத்துக்கு ஒரு விஷயம்... எறும்புக்கு உணவளிப்பதற்காக மாக்கோலம் போடுவதில்லை. தரையைச் சுத்தம் செய்து, கோலம் போட்டு, சுப காரியங்களை நிறைவேற்றும்படி பரிந்துரைக்கிறது தர்மசாஸ்திரம் (ரங்க வல்யாத்யலம் கிருதம்). கோலம் போட்டு அதில் விளக்கை வைப்போம். கோலத்தின் மீது கும்பம் வைப்பதும் உண்டு. கோலமிட்டு அதன்மீது தட்டு வைத்து, விருந்தினரின் கால்களை அலம்பிப் பணிவிடை செய்வோம். அக்னி குண்டத்துக்குக் கோலம் போட்டு அழகுபடுத்துவோம்.



மற்றபடி, எறும்புக்கு உணவளிக்கவே கோலம் பயன்படும் எனும் கூற்று, சாஸ்திரத்துக்குப் புறம்பானது. எறும்புகள் கோலத்தைத் தாறுமாறாக்கினால், வேறு கோலம் வரைந்து சரிசெய்ய வேண்டும். கோலத்தை அழிப்பது அபசாரம். ஈரம் காயும் வரை, நாமே கோலத்தை மிதித்து அழித்துவிடாமல் இருக்கக் கண்காணிப்போம் இல்லையா?!



அரிசி மாவால் கோலமிடுதல் என்பது, எறும்புகளுக்கு உணவளிக்கும் எண்ணத்தில் எழவில்லை. அரிசியில் விச்வே தேவர்கள் குடியிருக்கிறார்கள். கோலத்தில் நிரம்பியிருக்கும் அவர்களது சாந்நித்தியம், செய்யும் சடங்கின் நிறைவுக்குத் துணை புரியும் (தண்டுலா:வைச்வதேவத்யா:). ஆக, கோலத்தில் எறும்புகள் வராமல் பார்த்துக்கொண்டு, அதில் சடங்குகளை நிறைவேற்ற வேண்டும். கோலத்தைக் காலால் மிதிக்கக்கூடாது. அதில் கவனம் வேண்டும். சடங்கு முடியும் வரை கோலம் இருக்க வேண்டும். கஷ்டப்பட்டுக் கோலம் போட்டுத்தான் எறும்புகளுக்கு உணவளித்து மகிழவேண்டும் என்பதில்லை; அரிசியை ஒரு மூலையில் கொட்டி வைத்தால் போதும்; எறும்புகள் எடுத்துக்கொள்ளும்; கால்களில் மிதிபட்டு மடியாமலும் இருக்கும்.




3. எங்கள் மகன், மகள் இருவருமே கலப்புத் திருமணம் செய்துகொண்டவர்கள். எங்கள் அந்திம காலத்துக்குப் பிறகு, எங்களுக்கு இவர்கள் கர்ம காரியங்கள் செய்யலாமா? கூடாது எனில், வேறு யார் மூலம் செய்யலாம்?



பண்பு, சம்பிரதாயம், மரபு ஆகியவற்றை ஒதுக்கி, தன்னிச்சையாகக் கலப்புத் திருமணத்தைச் சந்தித்த பிறகு, மீண்டும் சம்பிரதாயத்தை எட்டிப் பார்ப்பது சரியல்ல. தற்காலச் சூழலில், விருப்பப்படி திருமணம் செய்யலாம் என்று வந்த பிறகு, பழைய சடங்குகளை நிறைவேற்ற நினைப்பது பொருளற்றது. கலப்புத் திருமணத்தை ஏற்காதவர்களுக்கு, மரபுப்படி செயல்படுவது சிறப்பான விஷயம். அதன் சட்டதிட்டங்கள் அப்படித்தான் வகுக்கப்பட்டிருக்கின்றன. கூழுக்கும் ஆசை, மீசைக்கும் ஆசை என்றிருக்கக்கூடாது. மரபை மீறியவனுக்கு அந்தச் சட்டதிட்டங்கள் பொருந்தாது; விருப்பப்படி செயல்படலாம்.



தங்கள் பங்காளிகளில் எவரேனும் முன்வந்தால், அவர்கள் உங்களுக்கானதை நிறைவேற்றலாம். அவர்கள் மரபோடு இணைந் தவராக இருக்கவேண்டும். நாம் விருப்பப்படி செயல்படுவோம்; தர்ம சாஸ்திரம் அதை ஏற்கவேண்டும் என நினைக்கக்கூடாது. வரம்பு மீறிய செயலுக்கு என்றைக்கும் தகுதி இழப்பு உண்டு. கலப்பு மணத்தில் மற்றொருவரின் மரபுப்படி செயல்படலாம். கலப்பில் இரண்டுக்கும் சம அந்தஸ்துதான். ஆகையால், ஒன்று இல்லையெனில் மற்றொன்றைப் பின்பற்றலாம்!


4. நவக்கிரகங்களை எந்தெந்த திசையை நோக்கிப் பிரதிஷ்டை செய்ய வேண்டும்?



சூரியன் கிழக்கு முகமாக இருக்கலாம். சந்திரன்- மேற்கு; செவ்வாய்- தெற்கு; புதன்- வடக்கு; குரு- வடக்கு; சுக்கிரன்- கிழக்கு; சனி- மேற்கு; ராகு- தெற்கு; கேது- தெற்கு... இந்த முறையில் பிரதிஷ்டை செய்யவேண்டும் என பரிந்துரைக்கிறது, ஸம்ஸ்கார ரத்னமாலை எனும் நூல். அத்துடன், மற்ற எல்லா கிரகங்களையும் சூரியனை நோக்கி பிரதிஷ்டை செய்வதும் சிறப்பு என்றும் சொல்கிறது.



விண்வெளியில் இருக்கும் கிரக வரிசைப்படியும் பிரதிஷ்டை செய்யலாம். கோள வடிவில்... சந்திரன், புதன், சுக்கிரன், சூரியன், செவ்வாய், குரு, சனி என்கிற ஏழு கிரகங்கள் வரிசையாக இருக்கும். இவற்றுடன் சேர்த்து ராகு- கேதுவையும் பிரதிஷ்டை செய்யலாம். கிரகங்கள் காலத்துடன் இணைந்திருக்கும்; காலம், எப்போதும் நம்முடன் இணைந்திருக்கும். ஒவ்வொரு சுப காரியத்திலும் கிரக வழிபாடும் இணைந்திருப்பதால், நவக்கிரகங்களுக்கென தனி வழிபாட்டு முறை தலை தூக்காத காலம் இருந்தது. தினமும் நீராடியதும், கை நிறைய தண்ணீரை அள்ளி 3 முறை கிரகங்களுக்குத் தர்ப்பணம் செய்யும் நடைமுறையை, வேத காலத்திலி ருந்தே வேதம் ஓதுபவர்கள் கடைப்பிடிப்பது உண்டு.



பிற்காலத்தில் வந்த சிந்தனையாளர்கள், நவக்கிரகங் களை ஆலயப் பிரவேசம் செய்வித்து, பிரதிஷ்டை செய்யும் முறையையும் பரிந்துரைத்தனர். இன்றும் பல கோயில்களில் நவக்கிரக சந்நிதி இருக்காது. ஆலயத்தில் உறைந்திருக்கும் (மூலவர்) திருவுருத்திலேயே நவக்கிரக சாந்நித்தியம் இருப்பதாகச் சொல்வார்கள். இந்தக் கோயில் ராகு ஸ்தலம், இது கேது ஸ்தலம் என்று சுட்டிக் காட்டுவதும் உண்டு. தற்போது பக்தர்களின் விருப்பம், பொருளாதாரம் ஆகியவற்றை முன் வைத்து, மற்ற மூர்த்தங்களுடன் சேர்த்து, நவக்கிரகங்களும் கோயிலில் இடம் பெற்றுள்ளனர்.



முன்பு கோயிலைத் தேடிச் சென்று பக்தன் வழிபடுவான். இப்போதெல்லாம் பக்தனுக்கு வசதியான இடங்களில் கோயில் வந்துவிடுகிறது. தனித்தன்மை மாறி, வியாபார ஸ்தலமாகக் காட்சியளிக்கும் கோயில்களும் உண்டு. இந்த மாதிரியான சிக்கலைத் தவிர்க்க, நவக்கிரகங்களை பிரதிஷ்டை செய்ய முனையவில்லை முன்னோர்கள்.



எதிலுமே ஒரு புதுமை- ஒரு வித்தியாசம் இருந்தால், மக்களுக்கு ஈடுபாடு ஏற்படும். அதை அறிந்த அறிஞர்கள், புதுமையாகத் தோற்றுவித்ததே நவக்கிரக பிரதிஷ்டை. அதன் பிறகு, குறிப்பிட்ட திசைகள்வாரியாக அவர்களை பிரதிஷ்டை செய்யும் முறை பிரபலமானது.



5. வடநாட்டில், பெரியவர்களை வணங்கும்போது தலையில் முக்காடு போட்டுக் கொண்டிருக்கிறார்களே, ஏன்? அதேபோல், நம் கோயில்களில் நைவேத்தியம் செய்த பிறகே ஆரத்தி காட்டுகிறோம்; ஆனால், அங்கெல்லாம் ஆரத்திக்குப் பிறகே நைவேத் தியம் சமர்ப்பிக்கிறார்கள். ஏன் அப்படி?


தேசத்துக்கு தேசம் நடைமுறையில் மாறுபாடு தென்படும். இதை தேசசாரம்... அதாவது, நாட்டு நடப்பு அல்லது சம்பிரதாயம் என்பார்கள். சாஸ்திர சட்டதிட்டங்களுக்குக் குந்தகம் விளைவிக் காதவற்றை சம்பிரதாயம் என்று ஏற்று, நடைமுறைப்படுத்துவார்கள்.



திருமணத்தில், மாப்பிள்ளை அழைப்பு- ஜானுவாசம் என்றொரு சம்பிரதாயம் உண்டு. அதேநேரம், மணப்பெண் அழைப்பு எனும் சம்பிரதாயமும் கடைப்பிடிக்கப்படும். மாமன் மகள்- அத்தை மகன் இவர்களின் திருமணம் நடந்தேறும்; முறைப்பெண் என்று அதைக் கடைப்பிடிப்பார்கள். தலையில் முக்காடு இடுவது, வடநாட்டு சம்பிரதாயம். பிற பெண்களைக் கூர்ந்து கவனிக்கக் கூடாது. அதற்கு உகந்த வகையில் முக்காடு பயன்படும். ஸ்ரீராமனுடன் வனவாசம் செல்லும்போது, முக்காடு போட்டுக் கொண்டிருந்தாள் சீதை. 'மக்கள் உன் முகத்தைப் பார்க்க விரும்புகிறார்கள். அதை நிறைவேற்ற வேண்டும்; முக்காடை அகற்றி, முகத்தைக் காட்டு’ என சீதைக்கு ஸ்ரீராமன் கட்டளையிட்டதாகத் தகவல் உண்டு.



சம்பிரதாயம் என்றால், எல்லோரும் கடைப் பிடிக்க வேண்டிய ஒன்று அல்ல. நைவேத்தியத் துக்குப் பிறகு ஆரத்தியும், ஆரத்திக்குப் பிறகு நைவேத்தியமும் சம்பிரதாயத்தில் விளைந்தது. கோயிலுக்கு பெரிய மனிதர்கள் விஜயம் செய்யும்போதெல்லாம் ஆரத்தி எடுக்கும் சம்பிரதாயம் தமிழ்நாட்டில் உண்டு. எனவே, சம்பிரதாயங்கள் குறித்த ஆராய்ச்சியைக் கைவிட்டு, வழிபாட்டில் கவனம் செலுத்துவதே நல்லது!


- பதில்கள் தொடரும்

நன்றி - சக்தி விகடன்

Sunday, June 19, 2011

கண்ணன் ஏமாந்தான்.... இளம் கன்னிகளாலே.....(ஆன்மீகம்)

http://guppic.com/uploads/2009/Oct/1256621501-1_406443875l.jpg 
கண்ணன் நாமம் சொல்லும் கதைகள்!

'பகவானுக்கு ஆயிரம் திருநாமங்கள் உண்டு. அப்படியெனில் அந்த ஆயிரம் திருநாமங்களையும் சொன்னால்தான், பாபம் தீருமா?’ என்று கேட்கின்றனர் பக்தர்கள். 'தேவையில்லை. கேசவா எனும் திருநாமத்தை ஒருமுறை, ஒரேயரு முறை சொன்னாலே, நம் அத்தனைப் பாபங்களும் விலகிவிடும்’ என்கிறது கீதை.

அதற்காக ஒரேயரு திருநாமத்தை மட்டும், ஒரேயரு முறை சொன்னாலே போதுமானது என்று தப்பாக அர்த்தம் கற்பித்துக் கொண்டு, செயல்படக்கூடாது. 'கேசவா’ எனும் திருநாமத்தை மனதார ஒருமுறை சொன்னாலே, நாம் சேர்த்து வைத்திருக்கிற பாபங்கள் அனைத்தும் தொலைந்து விடும் என்றால், அவனுடைய நாமங்கள் அனைத்தையும் சொல்லி வந்தால்... அதுவும் அனுதினமும் சொல்லி வந்தால்... பகவான் நமக்கு எவ்வளவு பலன்களைத் தருவார், எத்தனை புண்ணியங்கள் நம்மை வந்தடையும் என்று யோசிக்க வேண்டும்; பகவானின் திவ்விய நாமங்களைச் சொல்லத் துவங்கினால், நாமும் நம்மைச் சேர்ந்தவர்களும் வளமுடன் வாழ்வோம்!

'அது சரி... பகவானின் திருநாமத்தைச் சொன்னால், நம் ஊழிக்காலம் முதல் இன்று வரையிலான சகல பாபங்களும் தொலையும் என்கிறீர்கள். சுமார் ஆயிரம் வருடப் பாபம் என்றால், ஆயிரம் வருடங்கள் திருநாமத்தைச் சொல்ல வேண்டாமோ? அப்படிச் சொல்வதற்கு, ஆயிரம் வருடங்கள் நாம் உயிருடன் இருப்பது எவ்விதம்?’ என்றும் கேட்கலாம், 
சிலர்.
மிகப் பெரிய மலைப் பாறை. அங்கே, மிகச் சிறிய குகை ஒன்று. அந்தக் குகைக்குள் இதுவரை எவரும் சென்றதில்லை. குகையின் கதவை இதுவரை எவரும் திறக்கவும் இல்லை. ஒரு தீப்பந்தத்தை எடுத்துக்கொண்டு, குகையின் கதவைத் திறந்து, உள்ளே நுழைந்ததும் என்னாகும்? பல்லாயிரக் கணக்கான வருடங்களாக அந்த குகைக்குள்ளேயே இருந்த இருட்டானது, சட்டென்று விலகிவிடும். 

http://farm1.static.flickr.com/133/352867983_87f8c184b6.jpg
அங்கே நம் கையில் உள்ள தீப்பந்தமானது, குகையின் இண்டு இடுக்குகளிலும் வெளிச்சப் பாய் விரித்திருக்கும். 'அதெப்படி... ஆயிரக்கணக்கான வருடங்களாக இருந்த இருட்டை விரட்டுவதற்கு, ஆயிரம் தீப்பந்தங்கள் தேவை இல்லையா? அல்லது, அந்த இருளை அகற்றுவதற்கு ஆயிரம் வருடங்களேனும் வேண்டாமா?’ என்று கேட்பது புத்திசாலித்தனம் இல்லைதானே?

எத்தனை வருடங்களாக இருந்தால் என்ன... அந்த குகையின் கும்மிருட்டை விலக்குவதற்கு, ஒரு சின்ன தீப்பந்தமே போதுமானது. அதேபோல், நம் அத்தனைப் பிறவிகளின் பாபங்களும், அன்றைய பாபங்களும், ஏன்... இனி வரப் போகிற பாபங்களும்கூட, கண்ணனின் திவ்விய திருநாமம் ஒன்றைச் சொல்ல, பறந்தோடிவிடும். லட்சம் தீப்பந்தங்களுக்கு இணையானவன், பகவான் ஸ்ரீகிருஷ்ணன். எனவே, நம் பாபங்களை ஒரு நொடியில் பொசுக்கிவிடுவான், அவன்!

கேசவா எனும் திருநாமத்தைப் போலவே, 'ஹரி’ எனும் திருநாமமும் உசத்தியானதுதான்! பிரம்ம முகூர்த்தத்தில் எழுந்திருக்கச் சொல்கின்றனர், ஆச்சார்யர்கள். இன்றைய காலத்தில், நமக்கெல்லாம் பிரம்ம முகூர்த்தம் என்பதே காலை ஏழு, ஏழரை என்றாகிவிட்டது. பிரம்ம முகூர்த்த வேளை என்று சொல்லப்படும், நாலு நாலரை மணிக்கு எழுந்திருங்கள். 'ஹரி ஹரி ஹரி ஹரி ஹரி ஹரி ஹரி...’ என்று பகவானின் திவ்விய நாமத்தை ஏழு முறை உச்சரியுங்கள்; மனதாரச் சொல்லுங்கள். நம் ஏழேழு ஜென்மத்துப் பாபங்களும் நம்மை விட்டு நீங்கி விடும் என்பது உறுதி. ஹரி என்றாலே பாபங்களை அபகரிப்பவன் என்று அர்த்தம்.

ஒரேயரு விஷயம்... பகவானுக்காக அவனது திருநாமத்தை நீங்கள் சொல்லவில்லை. உங்களுக்காக, உங்களின் நலனுக்காகத்தான் அவனது திருநாமத்தைச் சொல்கிறீர்கள். ஆகவே, அவனுடைய திருநாமத்தை, அனுதினமும் சொல்லவேண்டும்; 

https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgKcd5N_2iydpcE98o7KEZxCl0Quvt8xEIxpUHGhuio4d9Xir4pZe7K4I8O2QrAVPFrIMGmFvc6sTEpBmfNcP6hHUEcXBkCk8hslNaFtF4uaOTOtdnojDMcWHBEHZN7YuOxSK7FCXTxQhE/s1600/playing-vina.jpg

சொல்லிக் கொண்டே இருக்கவேண்டும் என்று நீங்கள் மனதார ஆசைப்பட வேண்டும். ஒரு பொருளை அடைவதற்கு ஆசைப்படுகிறோம். இத்தனைக்கும் அந்தப் பொருள், மிகமிகச் சாதாரணமானதாக இருக்கலாம்; கீழே விழுந்தால், சுக்குநூறாக உடையக்கூடிய தன்மை கொண்டதாகவும் இருக்கலாம். ஆக, நிலையற்ற ஒரு பொருளை அடைவதற்கு, எவ்வளவு ஆசைப்படுகிறோம்! 

அந்த ஆசையை, பகவானின்மீது வையுங்கள்; அவனை நினைப்பதில் விருப்பமாக ஈடுபடுங்கள்; அவனுடைய திருநாமத்தைச் சொல்வதில் கிடைக்கிற ஆத்மதிருப்தியை நேசியுங்கள். பகவானின் திருநாமத்தை ஆசையுடனும் பிரியத்துடனும், அன்புடனும் நேசத்துடனும் நீங்கள் சொல்லச் சொல்ல, அவனது பரிபூரணமான ஆசீர்வாதம் உங்களையும் உங்களின் சந்ததியையும் வந்து அடையும் என்பதில் மாற்றமில்லை!  

முக்கியமாக ஒன்று... 'பகவானின் திருநாமத்தை 21 நாட்கள் சொல்லி வந்தால், செல்வம் சேரும்; 14 நாட்கள் உச்சரித்து வந்தால், கல்யாணம் கைகூடும்’ என்கிற கொடுக்கல்- வாங்கல் வியாபாரமாக, பக்தியையும் பிரார்த்தனையும் ஆக்கிவிடாதீர்கள். எந்த எதிர்பார்ப்புமின்றி, ஸ்ரீகிருஷ்ணரின் திருநாமங்களைச் சொல்வதில், ஆழ்ந்த ஈடுபாடு காட்டி னால், உங்களுக்கு என்னவெல்லாம் தேவையோ, அவை அனைத்தையும் தருவான், ஸ்ரீகண்ணபிரான்!

கற்பக விருட்சம், காமதேனு பற்றிக் கேள்விப்பட்டிருப்பீர்கள். நீங்கள் எதைக் கேட்டாலும், அவை கொடுக்கத் தயாராக இருக்கும். ஆனால், 'என் தோட்டத்துக்கு வந்துவிடு’ என்று சொன்னால், கற்பக விருட்சமும் வராது; காமதேனுவும் சம்மதிக்காது. இந்த ஆசையால் துன்பப்பட்டவர்களின் கதைகளை, புராணத்தில் அறிந்திருக்கிறோம். 


http://www.dinamani.com/Images/article/2010/8/27/ve.jpg
ஆனால், ஸ்ரீகிருஷ்ணர்தான் கற்பக விருட்சம்; அவர்தான் காமதேனு என்பதை நாம் உணருவதே இல்லை. அப்படிக் கற்பக விருட்சமாகவும் காமதேனுவாகவும் திகழ்கிற ஸ்ரீகிருஷ்ணரிடம், 'என் செல்லக் கண்ணா, நீ என் வீட்டுக்கு வந்துவிடேன்’ என்று அழைத்துப் பாருங்களேன்... மிகச் சந்தோஷமாக உங்கள் வீட்டுக்கு  ஓடி வந்துவிடுவான்! அது மட்டுமா? கேட்டதை, கேட்டதும் கொடுக்கிற கண்ணபிரான், அவனையே நமக்குத் தருவதற்குச் சித்தமாக இருக்கிறான் என்பதை மறந்துவிடாதீர்கள்.


மீன் பிடிக்கும் தொழிலாளி ஒருவன், ஒரு முறை கடலுக்குச் சென்று மீன் பிடித்து வந்தான். அவன் பிடித்த மீனின் வயிற்றுக்குள் விலை மதிப்பற்ற ரத்தினக் கல் இருந்தது. அவனுக்கு மீனின் அருமையும் ருசியும் தெரியும்; ஆனால் ரத்தினக் கல் பற்றித் தெரியவில்லை. அதை வெறும் கல் என்றே நினைத்தான், அவன்.

எதற்கும் இருக்கட்டும் என்று, அந்த ஊரில் இருந்த நகை வியாபாரியிடம் சென்று அந்தக் கல்லைக் காட்டினான். வியாபாரி, அது ரத்தினக் கல் என்பதையும், இந்த விஷயம் மீனவனுக்குத் தெரியவில்லை என்பதையும் தெரிந்துகொண்டான். 'இந்தக் கல்லோட விலை 20 ரூபாப்பா’ என்று சொல்லி, அந்தப் பணத்தைக் கொடுத்து, கல்லை வாங்கிக் கொண்டான். அந்தக் கல்லை அப்படித் திருப்பினால் நீல நிறமாகவும், இப்படித் திருப்பினால் பச்சை நிறமாகவும், இந்தப் பக்கம் திருப்பினால் சிவப்பு வண்ணத்திலும், அந்தப் பக்கமாகத் திருப்பிப் பார்த்தால் வேறொரு நிறத்திலுமாகத் தெரிய... குதூகலத்தில் திக்குமுக்காடிய வியாபாரி, விறுவிறுவென அரண்மனைக்குச் சென்று, மன்னனிடம் ரத்தினக் கல்லின் மகிமையைச் சொல்லி, அதன் விசேஷங்களை எடுத்துரைத்து, 'அதன் விலை ஒரு கோடி ரூபாய்’ என்றான். 

உடனே மன்னனும் ஒரு கோடி ரூபாய் கொடுத்து, அந்த ரத்தினக் கல்லை வாங்கிக்கொண்டான். அதை ஆபரணமாக்கி, ராணியின் கழுத்தில் போட்டான். ஆக... மீனவன், வியாபாரி, மன்னன்... இவர்களில் நீங்கள் யாராக இருக்கப் போகிறீர்கள்?

அதாவது, அந்த மீனவனைப் போல, ரத்தினத்துக்கு இணையான பகவானின் சகஸ்ரநாமங்களை அறியாமலே இருந்துவிடப் போகிறீர்களா? அல்லது, 'நோயிலிருந்து விடுதலை வேணும்; கல்யாணம் சீக்கிரமே நடக்கணும்’ என்றெல்லாம் கணக்குப் போட்டு, அந்த ரத்தினத்தை அந்த வியாபாரி ஒரு கோடி ரூபாய்க்கு விற்றதுபோல, செயல்படப் போகிறீர்களா? அல்லது, அந்த ரத்தினத்தை ஆபரணமாக்கித் தன் மனைவி கழுத்தில் போட்டு அழகு பார்த்த ராஜாவைப்போல, 'எனக்கு எதுவுமே தேவையில்லை. அனுதினமும் பகவானின் திவ்விய நாமத்தைச் சொல்வதே ஆனந்தம்; நிறைவு’ என்று வாழப் போகிறீர்களா?


அதாவது, நீங்கள்... மீனவனா? நகை வியாபாரியா? மன்னனா? இதை உணர்ந்து தெளிந்து நடப்பதில்தான், வாழ்வின் மொத்த இன்பமும் இருக்கிறது.
கோயிலில், நமது பெயர், நட்சத்திரம், கோத்திரமெல்லாம் சொல்லி, அர்ச்சனை செய்து வழிபடுகிறோம். எதற்கு இது? அவசியமே இல்லை. 'நான் இன்னார்... என் பெயர் இது... கோத்திரம் இதுவே’ என்று நீங்கள் யாரிடம் அறிமுகப்படுத்திக் கொள்கிறீர்கள்?


https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhuIhmZn8dmfSJC1HQmU5Ox05sgDhCLg6E2kAm6hwnSuL0rsWlaljjswUWtltBuZE9-CDO7QorJ1oLTvXNbXStP3ZyAevKEBumOiYG7w4aeXosPmeem97H3yEm4n0eFob8GKCyxBOj4Pa2Q/s1600/krishna_lotusfeet.jpg
விடிந்ததும் எழுந்து, பேப்பர் படித்துக் கொண்டிருக்கிற அப்பாவிடம், 'ஹலோ... என் பேரு கிருஷ்ணன்; எனக்கு இத்தனை வயசு; என் கோத்திரம் இதுதான்!’ என்று தினமும் சொல்லிக்கொண்டா இருக்கிறோம்? ஒருவேளை மூப்பு காரணமாக, பிணி காரணமாக, மறதி காரணமாக, அப்பாவிடமே நம்மை அறிமுகப்படுத்திக் கொள்கிற சூழலும்கூட ஒரு கட்டத்தில் ஏற்படலாம். ஆனால், நம் அப்பனுக்கெல்லாம் அப்பனாக, உலகத்துக்கே தந்தையாக, கடவுளாகத் திகழ்கிற பகவானிடம் நம்மை அறிமுகப்படுத்திக்கொள்ள வேண்டிய அவசியமே இல்லை. ஏனெனில், அவனுக்குப் பிணியும் இல்லை; மூப்பும் இல்லை; மறதியும் கிடையாது!

எனவே, பகவானின் நாமங்களை, ஒரு கடமையாக, ஒரு தவமாக, சந்தோஷமாக, ஆழ்ந்த ஈடுபாட்டுடன் சொல்லி வாருங்கள். யார் கண்டது... உங்கள் வீடு தேடி அந்தக் கண்ணனே வந்தாலும் ஆச்சரியப்படுவதற்கு இல்லை!

நன்றி - சக்தி விகடன்

Sunday, June 12, 2011

சூரிய பகவான் செய்த பாவங்கள் + சாப விமோசனம் பெற்ற கதை ( ஆன்மீகம்)

http://www.mazhalaigal.com/images/issues/mgl0809/im0809-63_satyabhama.jpgஎட்டு தேவதைகள் பாடிய ஸ்ரீலலிதா சகஹ்ரநாமம்!

லலிதாம்பிகையே சரணம்!

ருப்பதிலேயே மிகப்பெரிய பாவம், இறைவனைத் தரிசிப்பதற்கு ஆசைப்படும் ஒருவருக்கு, முட்டுக்கட்டை போடுவதுதான்! ஒருவரது அங்கக் குறைபாட்டினைச் சுட்டிக்காட்டி ஏளனம் செய்வதும் மகாபாவம். சூரிய பகவான் இந்த இரண்டு பாவங்களையும் செய்தார்!


சூரியனின் ரதத்தினைச் செலுத்துகிற அருணன் அங்க ஹீனம் கொண்டவன்; அவனுக்கு திருக்கயிலாயத்துக்குச் சென்று சிவனாரைத் தரிசிக்கவேண்டும் என விருப்பம். சூரியனிடம் அனுமதி கேட்டதற்கு, மறுத்ததுடன் உடற் குறையைச் சொல்லி ஏளனம் செய்தான். சிவபக்தியில் திளைத்திருந்த அருணன், மோகினிப் பெண்ணாக உருவெடுத்தான்;

 திருக்கயிலாயம் புறப்பட்டான்; மோகினியின் அழகில் மயங்கினான் இந்திரன். இதில் உருவானவன்தான் வாலி. ஆயிற்று. சிவதரிசனம் கிடைத்த மகிழ்ச்சியில்திரும்பி வந்த அருணன், சூரியனாரிடம் விஷயத்தைச் சொன்னான். 'மோகினிப் பெண்ணாகவா? உருவம் மாறிச் சென்றாயா? எங்கே மாறிக்காட்டு’ என்றார். அருணன், மோகினியாக மாறினான். அவளது அழகில் சூரியனும் மயங்கினான். விளைவு... சுக்ரீவன் பிறந்தான்.


தனது பக்தனைத் தடுத்து, அவனது ஊனத்தைக் கிண்டல் செய்ததைச் சும்மா விடுவாரா, சிவனார்? சூரியனைச் சபித்தார். இருளடைந்து போனார் சூரியனார். 'ஏழு மாதங்கள், மேகமண்டலத்தில் எங்களை யானை மீது வைத்து பூஜித்து வா. அப்போதுதான் உனது சாபம் தீரும்’ என அருளினார்

. இதையடுத்து சூரியனார், மேகமண்டலத்தில் யானை மீது, சிவ-பார்வதியை வைத்து பூஜை செய்யத் துவங்கினார். ஆனால், ஏழு மாதங்கள் நிறைவுறுவதற்கு முன்பே, சிவனாரிடம் சென்று, 'என்ன இது... இன்னும் சாப விமோசனம் தரவில்லையே?’ எனக் கேட்க... வெகுண்டாள் ஸ்ரீபார்வதி. 'உரிய காலம் வரும்வரை பொறுக்க மாட்டாயா?’ என்று கடும் உக்கிரத்துடன் சூரியனாருக்குச் சாபம் கொடுக்க எழுந்தாள். பதறிப்போன சிவனார்,

 'ஏற்கெனவே கொடுத்த சாபத்தால் இருளில் மூழ்கினான் சூரியன். இன்னொரு சாபம் கொடுத்தால், இந்த உலகம் இருளில் விழிபிதுங்கித் தவிக்கும். வேண்டாம் தேவி, சாந்தமாக இரு!’ என்று உமையவளை அமைதிப்படுத்தினார். பிறகு உரிய காலம் வந்ததும், சூரியனாருக்குச் சாப விமோசனம் அளித்தார். அவரின் திருமுகமும் இந்த உலகமும் பழையபடி இருளில் இருந்து வெளிச்சத்துக்கு வந்தது!


சூரியனாருக்கு அருளிய ஈசன், ஸ்ரீமேகநாதர் எனும் திருநாமத்துடன், கஜபிருஷ்ட விமானத்தின் கருவறை யில், அனைவருக்கும் அருள்புரிந்து வருகிறார். அந்தத் திருத்தலம், திருமீயச்சூர். இங்கே, ரதசப்தமி விழா விமரிசையாகக் கொண்டாடப்படுகிறது.

 அதுமட்டுமா? சித்திரை மாதம் 21-ஆம் தேதி முதல் 27-ஆம் தேதி வரை, ஸ்வாமியின் மீது தனது கதிர்களால், பூஜிக்கிறார் சூரிய பகவான்!

திருவாரூர் மாவட்டத்தில் உள்ள திருமீயச்சூர் தலத் துக்கு, ஏகப்பட்ட சிறப்புகள் உண்டு. ஸ்ரீசனீஸ்வரர், எமதருமர், அருணன், கருடன், வாலி, சுக்ரீவன் ஆகிய ஆறு பேரின் அவதாரத் தலம் இது!

திருமீயச்சூர் தலத்துக்கு, ஆந்திரம், கர்நாடகம், கேரளம் என எங்கிருந்தெல்லாமோ ஏராளமான அன்பர்கள், தினந்தோறும் வந்தபடி இருக்கின்றனர்; சிலிர்ப்பும் பக்தியும் பொங்க, தரிசித்துச் செல்கின்றனர்.  காரணம்... இந்தத் தலத்தின் நாயகி, ஸ்ரீலலிதாம்பாள்!

இந்த உலகின் எல்லா இடங்களில் இருந்தும், ஸ்ரீலலிதா சகஸ்ரநாமம் பாராயணம் செய்து, அவளை அனுதினமும் மனமுருகிப் பிரார்த்திப்பவர்களின் எண்ணிக்கை கணக்கில் அடங்காதது! அதனைப் பாராயணம் செய்தாலே, மன பாரமெல்லாம் போய்விடும் எனச் சொல்வார்கள், பக்தர்கள்! அப்பேர்ப்பட்ட, சக்தியும் சாந்நித்யமும் கொண்ட ஸ்ரீலலிதா சகஸ்ரநாமம் உருவான திருத்தலம், திருமீயச்சூர்!

பண்டாசுரன் எனும் அரக்கனால், துன்பங்களுக்கு ஆளான தேவர்கள், ஈசனின் திருவடியைச் சரணடைந்து கதறினர். அரக்கனை அழிக்க, ஸ்ரீபார்வதியை ஸ்ரீலலிதையாக அவதரிக்கச் செய்தார், சிவனார். கடும் உக்கிரத்துடன் தோன்றிய ஸ்ரீலலிதை, சகஸ்ர கோடி வருடங்கள், அரக்கனுடன் யுத்தம் செய்தாள்; இறுதியில் அவனை அழித்தொழித்தாள்.

 ஆனாலும் அவளது உக்கிரம் தணியவில்லை. 'இந்தக் கோபம், பூமிக்கும் மக்களுக்கும் நல்லதல்ல’ என்பதால், 'ஸ்ரீபுரத்தில் தவம் செய்தால், உனது உக்கிரம் தணியும்’ என அருளினார் சிவபெருமான். இதையடுத்து ஸ்ரீலலிதை ஸ்ரீபுரத்துக்கு வந்தாள்; அங்கே கடும் தவம் புரிந்தாள். அவளுக்குள்ளிருந்து 'வாக் தேவதைகள்’ எட்டுப்பேர் வெளிவந்தனர். ஸ்ரீலலிதையைச் சுற்றி வட்டமாக நின்றனர். ஸ்ரீலலிதையின் கூந்தல், கண்கள், கன்னம், நெற்றி, திருப்பாதம் என அவளது அழகை வியந்து, பாடினர்.


'அடடா... இத்தனை அழகா எனது கண்கள்? பிறகு ஏன் இவ்வளவு கொடூரமாகப் பார்க்கவேண்டும்?! என் கன்னமும் நெற்றியும் அழகு பொருந்தியிருக்கிறதா? அப்புறம் எதற்காக, முகத்தை உக்கிரமாக வைத்திருக்கவேண்டும்?! நெடுநெடுவென, கரிய நிறத்தில் வளர்ந்திருக்கிறதாமே கூந்தல்?! அந்தக் கூந்தலை தலைவிரி கோலமாகவா வைத் திருப்பது?!’ என யோசித்தாள்

. எட்டுத் தேவதைகளும் அந்தஸ்தோத்திரத்தைப் பாடப்பாட... அவளது உக்கிரம் காணாமல் போனது; அவளுக்குள் சாந்தமும் கருணையும் பொங்கிப் பிரவாகித்தன! அதே தலத்தில் இருந்தபடி, அன்பர்களுக்கு அருட்கடாட்சத்தை அள்ளித்தர திருவுளம் கொண்டாள்.

இதோ... இன்றளவும், உலகின் எந்த மூலையில் இருந்து கொண்டு, ஸ்ரீலலிதா சகஸ்ரநாமத்தை எவர் பாடினாலும், அவர்களது சகல தோஷங்களையும் போக்கி; சகல ஐஸ்வரியங் களைத் தந்து மகிழ்கிறாள்; மகிழ்விக்கிறாள்! இங்கே, ஸ்ரீசதா சிவலிங்க பீடத்தில், ஸ்ரீசக்ரத்தில் நின்றபடி, அகில உலகத்தையும் ஆட்சி செய்கிறாள், ஸ்ரீலலிதாம்பிகை!

வருடம் முழுவதும், இங்கே தேர்க்கூட்டம்; திருவிழாக் கூட்டம்தான்! ஸ்ரீலலிதாம்பிகைக்கு அன்னப்பாவாடை சார்த்தும் வைபவம், வருடத்தில் மூன்று முறை நடை பெறுகிறது. நவராத்திரியில்..

. விஜயதசமியிலும், மாசி மாதத்தின் அஷ்டமி நாளிலும், வைகாசி - பௌர்ணமியின் போதும் அன்னப்பாவாடை சார்த்தும் வைபவத்தைக் காண, வெளிமாநிலங்களில் இருந்தும் பக்தர்கள் திரண்டு வருகின்றனர்.

 சர்க்கரைப் பொங்கல், புளியோதரை, வெண் பொங்கல், பட்சணங்கள், பழ வகைகள் என வைத்து, நெய்யை ஊற்றிக் குளம் போலாக்கிவிடுவார்கள்

. அம்பிகையின் சந்நிதிக்கு முன்னேயுள்ள அர்த்த மண்டபத்தில் இதனை வைத்திருக்க... குளம் போல் ததும்பியிருக்கும் நெய்யில், அம்பிகையின் திருவுருவம் பிரதிபலிக்கும் அழகே அழகு!


இந்த ஆலயம், வேளாக்குறிச்சி ஆதீன மடத்தின் நிர்வாகத்துக்கு உட்பட்டது. காஞ்சி மகான், இந்த வழியே வரும் போது, ஸ்ரீலலிதாம்பிகையைத் தரிசிக்காமல் செல்லமாட்டாராம்! ஒருமுறை, பெரியவா இந்தத் தலத்துக்கு வந்தபோது, பக்தர் கூட்டத்தில்,  மகானைத் தரிசித்த பரவசம்!


அவர்களை ஆசீர்வதித்த மகா பெரியவா, ''இது சாதாரண தலமல்ல; மிக உன்னதமான புண்ணிய க்ஷேத்திரம். பூர்வ ஜென்மத்தில் புண்ணியம் செய்திருந்தால்தான், இங்கு வரமுடியும்; அப்படி வந்து தரிசித்தீர்கள் என்றால், ஏழேழு ஜென்மத்துக்கும் உங்களைக் காப்பாள், ஸ்ரீலலிதாம்பிகை!'' என அருளினாராம்!
http://static.webdunia.com/mwdimages/thumbnail/image/nnozizi//mywebdunia/UserData/DataB/bakthi/images/restricted/07-04-2009/suryanar_1.jpg

மாதா ஜெயஓம்...
ஸ்ரீலலிதாம்பிகையே சரணம்!





12 ராசிகள்; 12 நாகர்கள்!   
ஸ்ரீசனீஸ்வரரின் அவதாரத் திருத்தலம்; ஸ்ரீசூரியனாரின் சாபம் போக்கிய தலம். ஆகவே இங்கே நவக்கிரகங் களுக்குச் சந்நிதி இல்லை. மாறாக, 12 ராசிகளுக்கு உரிய 12 நாகர்களும் உள்ளனர். இவர்களுக்கு தீபமேற்றி, அர்ச்சனை செய்து வழிபட்டால், ராகு - கேது முதலான சகல தோஷங்களும் விலகும்; திருமணம் முதலான அனைத்து வரங்களும் கிடைக்கும்!


ரதசப்தமி விசேஷம்!   

சூரிய பகவானின் சாபம் போக்கிய இந்தத் திருத் தலத்தில், ரதசப்தமி விழா விமரிசையாகக் கொண்டாடப் படுகிறது. திருமலைத் திருப்பதி தலத்தில், சந்திர புஷ்கரணியிலும் திருமீயச்சூரில் சூரிய புஷ்கரணியிலும் ரதசப்தமி விழா அன்றைய நாளில் நடைபெறுமாம்! பஞ்ச மூர்த்தி புறப்பாடு, சிறப்பு வழிபாடு, சூரிய புஷ்கரணியில் தீர்த்தவாரி என அமர்க்களப்படுமாம் ஆலயம்! அப்போது, சூரிய புஷ்கரணித் தீர்த்தக்குளக்கரையில், கல் வைத்து, எருக்கம்பூ, இலை, பஞ்சகவ்யம், மங்கல அட்சதை ஆகியவை கொண்டு சங்கல்பம் செய்து, குளத்தில் நீராடி, ஸ்வாமி- அம்பாளை வணங்கினால், ஏழேழு ஜென்மத்தில் உண்டான அத்தனைப் பாவங்களும் நீங்கும் என்பது ஐதீகம்!
கொஞ்சுகிறார்; கெஞ்சுகிறார்
க்ஷேத்திர புராணேஸ்வரர்! 


கோயில் பிராகாரத்தில் உள்ளது, ஸ்ரீக்ஷேத்திர புராணேஸ் வரரின் திருவுருவம். காண்பதற்கு அரிதான விக்கிரகத் திருமேனி இது. சூரியனாருக்குக் கடும் கோபத்துடன் சாபம் கொடுக்க உமையவள் முனைந்தாள், அல்லவா?! அப்போது அவளைச் சாந்தப்படுத்துகிறார் பரமேஸ் வரன். இங்கே... ஒரு பக்கம் பார்த்தால் தேவியின் முகம் உக்கிரமாகவும் இன்னொரு பக்கத்தில் இருந்து பார்த்தால், தேவி புன்னகைத்தபடியும் இருப்பதைத் தரிசிக்கலாம்! இந்தத் தம்பதியை மனதார வணங்கினால், திருமணத் தடை அகலும்; பிள்ளை வரம் பெறலாம்; பிரிந்த தம்பதியும் விரைவில் இணைவர்!

தூது செல்லும் ஸ்ரீதுர்கையின் கிளி! 

இங்கே... எட்டுத் திருக்கரங்களுடன் திகழும் ஸ்ரீதுர்கை ரொம்பவே விசேஷம். அவளது கையில் ஸ்ரீசுகப் பிரம்ம ரிஷியே, கிளியாக அமர்ந்தி ருப்பதாகச் சொல்கிறது, ஸ்தல புராணம். இந்தத் தலத்துக்கு வந்து வேண்டுதல் வைப்பவர் அனைவரது பிரார்த்தனையையும் ஸ்ரீதுர்கையின் கையில் உள்ள கிளி, கொடிமரம் அல்லது விமானத்தில் இருந்தபடி, ஸ்ரீலலிதாம்பிகையிடம் சொல்லுமாம்! 'அவங்களை நீதாம்மா பாத்துக் கணும்’ என்று நமக்காகச் சிபாரிசு செய்யும் அந்தக் கிளி! எனவே, ஸ்ரீதுர்கையிடம் தங்களது குறைகளையும் பிரார்த்தனை யையும் சொல்லிச் செல்கின்றனர், பக்தர்கள்!
பிரண்டை சாத நைவேத்தியமும்

சஷ்டியப்த பூர்த்தி  சதாபிஷேகமும்! 

அப்பேர்ப்பட்ட எமதருமனே நீண்ட ஆயுளுடன் இருப்பதற்காக, இங்கே இந்தத் தலத்துக்கு வந்து, ஈசனை வழிபட்டான். அதுவும் எப்படி? எமலோகத்தின் தலவிருட்சமான பிரண்டையைக் கொண்டு (வஜ்ரவல்லிச் செடி) அன்னத்தில் கலந்து நைவேத்தியம் செய்து, சங்கு மற்றும் புஷ்பத்தால் அர்ச்சனை செய்து, வழிபட்டு வரம் பெற்றான். இன்றைக்கும், உச்சிக்காலத்தில் ஸ்வாமிக்கு பிரண்டை சாதம் நைவேத்தியம் படைக்கப்படுகிறது. இந்த நைவேத்தியம் செய்து, பிரசாதத்தை வாங்கி உட்கொண்டால், அத்தனை தடைகளும் அகலும்; ஆயுள் கூடும் என்பது ஐதீகம்! அதுமட்டுமா? இந்தத் தலத்தில் ஆயுக்ஷ் ஹோமம், சஷ்டியப்த பூர்த்தி, சதாபிஷேகம் செய்வது மிகவும் புண்ணியம் சேர்க்கும்; ஆயுளுடனும் ஆரோக்கியத்துடன் நீண்டகாலம் வாழலாம் என்கின்றனர், பக்தர்கள்!


அகத்தியர் அருளிய ஸ்ரீநவரத்ன மாலை! 

ஸ்ரீஅகத்தியர், தன் மனைவி லோபமுத்திரையுடன் இங்கு வந்து, ஸ்ரீலலிதாம்பிகையின் கழுத்தில் அணிந்திருந்த நவரத்தின மாலையைக் கண்டு சிலிர்த்து, ஒரு ரத்தினத்துக்கு ஒரு பாமாலை என்று நவரத்தின மாலையையும் தேவியின் மகிமையையும் போற்றும் வகையில் பாடியதுதான் ஸ்ரீநவரத்ன மாலை ஸ்தோத்திரம்! இதனைப் பாடி, ஸ்ரீலலிதாம்பிகையை வணங்கினால், உள்ளம் குளிர்ந்து அருளையும் பொருளையும் அள்ளித் தருவாளாம் தேவி!


'எனக்குக் கொலுசு வேணும்!’ 

பக்தையின் கனவில் அம்பிகையே வந்து,''எனக்குக் கொலுசு போடு; நீ நல்லா இருப்பே!'' என்று கேட்டாளாம். அதன்படி அம்பிகைக்கு கொலுசு அணிவிக்க... அந்தப் பக்தையின் துன்பம் அனைத்தும் தொலைந்து போனதாகச் சொல்வர்! மனதில் ஸ்ரீலலிதாம்பிகையை வணங்கி, காரியம் நிறைவேறப் பிரார்த்தனை செய்பவர்கள், நேர்த்திக்கடனாக ஸ்ரீலலிதாவுக்கு கொலுசு (முக்கால் இன்ச் அளவு துவாரம் கொண்ட, பதினொன்றரை இன்ச் கொலுசுதான், ஸ்ரீலலிதாம்பிகையின் சரியான அளவு என்கின்றனர்) அணிவித்து மகிழ்கின்றனர். அதுமட்டுமின்றி, வளையல், ஒட்டியாணம், திருமாங்கல்யம், தோடு - ஜிமிக்கி-'மாட்டல்’ என்று அணிவிக்கிற பக்தர்களும் உண்டு!


நன்றி -சக்தி விகடன்

Sunday, June 05, 2011

குழலூதும் கண்ணனுக்கு குயில் பாடும் பாட்டு கேக்குதா? ( ஆன்மீகம்)

http://adrishta.com/wp-content/uploads/2011/02/krish111.jpg 
 
கண்ணன் நாமம் சொல்லும் கதைகள்


'குழந்தையும் தெய்வமும் குணத்தால் ஒன்று!’ என்பார்கள். ஆனால், அந்தக் குழந்தைகள் வளர்ந்து, பெரியவர் களாகும்போது, அதே குணங்கள் இருக்கிறதா என்று கேட்டால், இல்லை என்றுதான் பதில் சொல்ல முடியும்!

நமக்கெல்லாம் ஆத்மா என்பது இருக்கிறது. ஆனாலும், சரீர சம்பந்தத் துடன் உயிர் வாழ்கிறோம். அந்தச் சரீரத்தின் தேவைகளுக்குத் தக்கபடி, நம்முடைய குணங்களும் மாறிக் கொண்டே இருக்கின்றன. அதாவது, சுபாவங்கள் இன்னதுதான் என்று ஒன்றை மட்டும் சொல்லமுடியாமல், சட்சட்டென்று மாறிக்கொண்டே இருக்கின்றன. ஏனெனில், சரீரமானது, சுக-துக்கங்களுடன் தொடர்பு கொண்டது; நன்மை- தீமைகளுடன் பிணைந்திருப்பது.

ஆனால், நம்மைப் போலவே, சரீரத்தால் அவதாரம் எடுத்தவர்தான் பகவான் ஸ்ரீகிருஷ்ணர். ஆனால், அவருடைய எந்தக் குணங்களும், எப்போதும் மாறாமல் அப்படியே இருந்தன. சொரூபம் என்பதும், சுபாவம் என்பதும் ஸ்ரீகிருஷ்ணருக்கு மாறவே மாறாத ஒன்று. ஏனெனில், அவர்... பரமாத்மா!
 
இன்னும் ஆழ்ந்து பார்த்தால், மூன்று சத்தியங்களை சரீரமாகக் கொண்டவர் பகவான் ஸ்ரீகிருஷ்ணர் என்கிறது வேதம். சத்திய விரதம், சத்திய பரம், த்ரிசத்தியம் ஆகிய மூன்று சத்தியங்களுடன் அவதரித்தவர் ஸ்ரீகிருஷ்ணர். அதாவது, பரமபதத்தில் நிலையாகக் காட்சி தருகிற அதே ஸ்ரீமந் நாராயணன்தான், சாட்சாத் ஸ்ரீகிருஷ்ண பரமாத்மாவாக அவதரித்தார். 'அங்கு வைத்தாற்போன்றே...’ எனும் வாக்கியத்துக்கு ஏற்ப, அதே குணங்களுடனும் சுபாவங்களுடனும் தோன்றினார் ஸ்ரீகிருஷ்ணர். 

ஜோதிர்மயமாகவும் அவதரித்தார். நித்திய சூரிகள் தீப- தூப ஆராதனை செய்து பரம்பொருளை வழிபடும் வேளையில், அந்தப் புகை பரவி, அந்தப் பகுதியையே மறைக்க... சந்திர- சூரியர்களை தன்னுடைய கண்களாகக் கொண்ட பரம்பொருள், அப்போது தனது கிருஷ்ணாவதாரத்தை நடத்துவதற்காகப் புறப்பட்டுச் சென்றார்.
 https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjKWjFAXUvXaEWkq0QcXw0Vzez8ho9Wp5F3jELvUtuICyXWfEh7cToy1V_lfdJ24bdRWf_B_w8f9o7z3QZ4HWEpeDqJ6QA2p5kiadw2UisDakmUmcADcOnUn8k7t84nWwUp4RwEf0zlqYg/s1600/krishna1baby.jpg
ஆகவே, தன் நிலையில் இருந்து பரம்பொருள் என்றைக்கும் நழுவவே மாட்டார் என்பதை அறிந்து உணர்வது அவசியம்.

வாழ்க்கையில், எவருக்குத்தான் ஆசை இல்லை?! நல்லவை அனைத்தும் நமக்குக் கிடைக்க வேண்டும் என்றும், கெட்டவை எதுவும் நம்மை அண்டக்கூடாது என்றும் வேண்டுவதே நம் அனைவரின் பிரார்த்தனை! நம்முடைய ஆசைகள்தானே, பகவானிடம் பிரார்த்தனையாக வெளிப்படுகின்றன.

அதாவது, நல்லவை என நாம் நினைக்கிற விஷயங்கள், நமக்குக் கிடைக்கவேண்டும்; துன்பம் விளைவிக்கக் கூடியதாக நாம் நினைத்துப் பதறுகிற விஷயங்கள், நம்மை விட்டு விலகிவிடவேண்டும் என்று ஆசைப்படுகிறோம். ஆனால் என்ன... ஒருவருக்கு இருக்கிற ஆசை வேறொருவருக்கு இருக்காது.

அதாவது, நீங்கள் விரும்புகிற விஷயத்தை இன்னொருவர் விரும்பமாட்டார்; வேறு ஏதேனும் ஒன்றை நாடுபவராக இருக்கலாம். அதேமாதிரி, நீங்கள் வேண்டாம் என்று புறக்கணிக்கிற விஷயத்தை அவரும் புறக்கணிப்பார் என்று சொல்வதற்கில்லை. இன்னும் சொல்லப்போனால், நீங்கள் கெட்டது என்று நினைத்து நடுங்குகிற ஒரு விஷயம், அவருக்குச் சாதாரணமாகப் படலாம். மாறாக, 'இந்த விஷயம் மட்டும் என்னை நெருங்கவே கூடாது ஸ்வாமி!’ என்று வேறு ஏதேனும் ஒன்றைக் கெட்டதாக நினைத்து, பிரார்த்திப்பார்.
 https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhNtPk-PrcQzT44G8LwI1Lb0G7VWJ08gHEUc0LjluQRxJuLefdsWHMZjoN1oNBfrc6a_2614KZeK4Bo1ZRl2Ha9U93zbhFbS21i3C047aLJh9XQjW6Ci5Dqag2mU-SRV8goX9Njeqma_mk/s320/BARATAM.jpg
அவ்வளவு ஏன்... நாமேகூட, சின்ன வயதில் நல்லதையும் கெட்டதையும் பட்டியல் போட்டு வைத்திருப்போம். பிறகு இளைஞனாகும் தருணத்தில், நமது 'தேவைப் பட்டியலில்’ வேறு சில விஷயங்கள் இடம்பெற்றுவிடும்; 'தேவையற்றவை’ என வேறு வேறு விஷயங்களைக் குறித்து வைத்திருப்போம். வயதுக்குத் தக்கபடி ஆசைகள் மாறிக்கொண்டே இருக்கும்!

ஆனால், இந்தப் பூவுலகில், எவருக்கும் மாறவே மாறாத ஓர் ஆசை உண்டெனில், அது பகவானின் திருவடித் தாமரையை நாடுவதுதான்! இறுதிக் காலத்தில், அவனைச் சரணடைந்து, அவனது திருவடிகளைப் பற்றிக்கொள்ள வேண்டும் என்பதே, மனிதர்களாகிய நம்முடைய ஆசையும் பிரார்த்தனையும்! மகாபாரதத்திலும் ஸ்ரீபகவத் கீதையிலும் இதை வெகு அற்புதமாக உணர்த்தியிருக்கின்றனர், ஆச்சார்ய பெருமக்கள்.

நாம் ஆசைப்பட்ட பொருள் கிடைக்கவேண்டும் எனில், அதற்கு நம்முடைய உழைப்பும் இருக்க வேண்டும் அல்லவா?! எதுவுமே சும்மா நம் மடியில் வந்து விழுந்து விடுமா, என்ன? நாம் மெனக்கெட வேண்டும் என்பது ரொம்பவே முக்கியம்.

சரி... பகவானின் திருவடியில் சரணடைவதற்கு நாம் என்ன செய்யவேண்டும்?
கைங்கர்யம்... கைங்கர்யம்... கைங்கர்யம்! கிட்டத்தட்ட ஸ்வாமிக்கு தாசனாக வேண்டும். அதாவது, அவனுக்கு அடிமையாக வேண்டும். ஏனெனில், அவன்... ஆண்டான்; ஆண்டவன். நாம் எல்லோருமே அவனுக்கு அடிமைகள்!
 http://elayarajaartgallery.com/images/oilpainting/imb3.jpg

'என்னது இது... அடிமைத்தனத்தைக் களைய வேண்டும் என்றுதானே எல்லோரும் சொல்வார்கள்! இதென்ன குழப்பம்?’ என்று தவிக்காதீர்கள். 'சுதந்திர இந்தியா என்று சொல்லும்போதே, எவ்வளவு சுகமாக இருக்கிறது. அப்படியிருக்க... ஆண்டான்- அடிமை இப்போது அவசியம்தானா?’ என்று கலங்கிவிடாதீர்கள்.  

என்னதான் நாம் இப்போது சுதந்திர தேசத்தில் வாழ்ந்தாலும் சில நியமங்களுக்கு உட்பட்டு, சட்டதிட்ட வரையறைகளுக்குக் கட்டுப்பட்டுத்தானே நடக்கிறோம்?! அதேபோல், பூவுலகில் சில நியமங்கள் உள்ளன; சில விதிகள் இருக்கின்றன. இங்கே, இந்த உலகை ஆட்சி செய்கிற மிகப் பெரிய அதிகாரம் பரம்பொருளிடம் இருக்கிறது. அவனே ஆண்டான். அப்பேர்ப்பட்ட ஆண்டவனிடம் நாம் அடிமையாக, தாசனாக இருப்பதில் தவறே இல்லை. சொல்லப்போனால், இறைவனுக்குத் தாசனாக இருப்பதைவிட, வேறென்ன பெருமை இருக்கிறது, சொல்லுங்கள்!

முக்கியமாக, இங்கே இன்னொரு விஷயத்தையும் நீங்கள் புரிந்துகொள்ள வேண் டும். வார்த்தைக்குத்தான் அவன் ஆண்டான்; நாம் அடிமை - தாசன். ஆனால், அவனுக்கு நாம் தாசனாகிவிட்டால், உடனே அந்தப் பரம்பொருள், நமக்குத் தாசனாகிவிடுவான். அவனது குணம் அப்படி; சுபாவம் அப்படி! இதை எந்த நாளும், எவருக்காகவும் மாற்றிக்கொள்ளவே இல்லை, பகவான்!

மகாபாரதத்தில், பகவான் ஸ்ரீகிருஷ்ணருக்குத் தாசனாக இருந்தான் அர்ஜுனன். ஆனால், மெள்ள மெள்ள அவனுக்கு தாசனாகிப் போனான், ஸ்ரீகிருஷ்ணன். அர்ஜுனன் ஜம்மென்று அமர்ந்துகொள்ள, அவனது தேரை ஓட்டியது கிருஷ்ண பரமாத்மாதானே?! தான் பரம்பொருள், இதோ... இந்த அர்ஜுனன் ஜீவாத்மா என்றெல்லாம் நினைக்காமல், அர்ஜுனக் கூட்டத்துக்காகத் தூதுபோன கண்ணனின் கதையை அறிவோம், இல்லையா?

பகவானுக்கு நாம் தாசனாகிவிட்டால், அவன் நமக்குத் தாசனாகிவிடுவான் என்பது, இப்போது புரிகிறதா? ஆக, பகவானின் திருவடிக் கமலத்தைச் சரணடைவதற்கு, அவனுக்குத் தாசனாக இருந்து கைங்கர்யம் செய்ய வேண்டும். என்ன கைங்கர்யம்..? எப்படிச் செய்யவேண்டும்?

எமலோகம். பூமியில் வாழ்ந்த ஒருவன், இறந்ததும் அங்கே வந்தான். அப்போது, எமதருமன் அவன் அருகில் வந்து, ஆதுரத்துடன் அவனுடைய தோளைத்தொட்டான். நடுநடுங்கிப் போனான் வந்தவன். ஆனால், எந்த முரட்டுத்தனமும் எமதருமனிடம் இல்லை; அந்த மானிடனின் தோளை மிருதுவாகத்தான் பற்றிக்கொண்டான். அதில் தனது வலுவையெல்லாம் எமதருமன் காட்டவில்லை. முகத்திலும் எந்தக் குரூரமோ ஆவேசமோ இல்லை. மாறாக, எமதருமனின் கண்களிலும் முகத்திலும் மெல்லிய சோகம்தான் படர்ந்திருந்தது.
 http://mykathiravan.com/Annmeegam/krishna.gif
அந்தச் சோகம் அவனுடைய குரலிலும் எதிரொலித்தது. வந்தவனின் தோளைப் பற்றிக்கொண்டு, மிகுந்த கனிவான, கருணை அடர்ந்திருந்த குரலில், ''எத்தனை வருடங் களாகப் பூமியில் இருந்தாய் நீ? இருபது வருடம் இருந்திருப்பாயா? முப்பது வருடங்கள் வாழ்ந்திருப்பாயா? அறுபது எழுபது வருடங்கள் வரை பூவுலகில் இருந்தவனா நீ?

சரி, இத்தனை வருடங்களாக பூமியில் இருந்திருக்கிறாயே? ஒரு முறை, ஒரேயரு முறை 'கேசவா’ என்று ஏன் உச்சரிக்கவில்லை? உன் நாக்கு 'கேசவா’ என்று உச்சரிக்க ஏன் மறுத்தது? கேசவனைப் பற்றிய சிந்தனை உனது புத்திக்குள் எட்டவே இல்லையா? உன் மனதில் ஒருமுறைகூட, கேசவனின் திருநாமத்தைச் சொல்லவேண்டும் என்று தோன்றியதே கிடையாதா?

என்னுடைய ஊரான எமலோகத்துக்கு ஒருவன் வருகிறான் என்றால், சந்தோஷப்பட மாட்டேன், நான்! 'அடடா... என்ன கொடுமை இது!’ என்று வருந்தத்தான் செய்வேன். வாழ்வில், ஒருமுறையேனும் கேசவனின் திருநாமத்தைச் சொல்லியிருந்தால், இப்போது நீ இங்கே வந்திருக்கவேண்டிய அவசியமே நேர்ந்திருக்காது.

தண்டனை பெறுவதைவிட, தண்டனை கொடுப்பதுதான் ரொம்பவே கஷ்டமான காரியம். கேசவ நாமத்தைச் சொல்லாததால், இப்போது உனக்கும் கஷ்டம்; உனக்குத் தண்டனை கொடுக்க வேண்டுமே என்பதால், எனக்கும் கஷ்டம்!'' என்று கனிவுடன் சொன்னாராம் எமதருமன்.

'கேசவன்’ எனும் திருநாமத்தின் வலிமையைப் புரிந்து கொண்டீர்களா? அந்தத் திருநாமத்தைச் சொல்வதால் கிடைக்கிற மோட்ச பலனை அறிந்துகொண்டீர்களா?

எங்கே... சொல்லுங்கள், கேசவா... கேசவா... கேசவா!

thanx - sakthi vikatan