Showing posts with label அன்புமணி. Show all posts
Showing posts with label அன்புமணி. Show all posts

Tuesday, December 11, 2012

செருப்பு தூசி மாதிரி அந்தாளு - அன்புமணி அதிரடி பேட்டி

காதல் திருமணத்தை பா.ம.க. எதிர்க்கலை... எதிர்க்கலை... எதிர்க்கலை! அதைத் தெளிவாப் புரிஞ்சுக்கோங்க. காதல் திருமணங்களையோ, கலப்புத் திருமணங்களையோ நாங்க எதிர்க்கலைனு எழுதிக் கையெழுத்துப் போட்டுத் தரத் தயார். எங்களுக்கும் காதல் பிடிக்கும். எங்களை ஏதோ காதலுக்கு வில்லன் மாதிரியே எல்லோரும் சித்திரிச்சுட்டு இருக்காங்க. நானே பல காதல் திருமணங்களை நடத்திவெச்சவன்தான்!'' - தடதடக்கத் தொடங்கினார் அன்புமணி ராமதாஸ்.



  ''ஆக, தர்மபுரிக் கலவரத்தில் பா.ம.க-வுக்குச் சம்பந்தமே இல்லை என்கிறீர்களா?''



'' 'என் பொண்ணைக் கடத்திட்டுப் போய் வெச்சுக்கிட்டு அஞ்சு லட்ச ரூபாய் பணம் கேட்டு மிரட்டுறாங்க’னு பொண்ணைப் பெத்த எந்த அப்பனாவது உங்ககிட்ட வந்து கதறி இருக்காங்களா? என்கிட்ட கதறி இருக்காங்க. தர்மபுரிக் கலவரம் மட்டும்தானே உங்களுக்குத் தெரியும்... அதுக்கு முன்னாடி நடந்த ஒரு விஷயத்தை உங்களுக்கு நான் சொல்றேன்... தர்மபுரியைச் சேர்ந்த ஒரு முக்கியப் பிரமுகரோட பொண்ணு. ஸ்கூல் படிக்கிற வயசு. அவளை தலித் பையன் ஒருத்தன் காதலிச்சு இழுத்துட்டு ஓடிப் போயிட்டான். 



அஞ்சு கோடி ரூபாய் பேரம் பேசி, பணத்தை வாங்கிட்டு அந்தப் பொண்ணைத் திரும்பக் கொண்டுவந்து விட்டுட்டுப் போயிட்டான். அந்த மாவட்டத்துல காதலைப் பணம் பறிக்கிற ஒரு பிசினஸாவே பண்ணிட்டு இருக்காங்க. வசதியான வீட்டுப் பொண்ணுங்களாப் பார்த்து, காதல்ங்கிற பேர்ல மனசை மயக்கி, பெத்தவங்ககிட்ட பணம் பறிக்கிறதுதான் இவங்க வேலை.



நாய்க்கன்கொட்டாய் சம்பவத்துக்கு வன்னி யர்களோ, பா.ம.க-வினரோ காரணம் இல்லை. அந்தச் சம்பவத்தில், தி.மு.க., அ.தி.மு.க., ம.தி.மு.க., தே.மு.தி.க., கம்யூனிஸ்ட்டுனு அத்தனை கட்சி களைச் சேர்ந்தவங்களுக்கும் பங்கு இருக்கு. பெண்களைக் கேலி செய்வது சாதிப் பிரச்னை கிடையாது. அது சமூகப் பிரச்னை. நடந்த சம்பவத்தை நாங்க நியாயப்படுத்த விரும்பலை. நிச்சயம் கண்டிக்கிறோம். ஆனா, ஒட்டுமொத்த அசம்பாவிதத்துக்கும் நாங்கதான் காரணம்னு உருவாக்கப்பட்ட மாயத் தோற்றத்தை விலக்கச் செய்யும் பொறுப்பும் எங்களுக்குத்தான் உண்டு. இந்த விவகாரத்தை எங்களுக்கு எதிரா சிலர் தூண்டிவிடுறாங்க.''



''யார் அப்படித் தூண்டிவிடுறாங்கனு சொல்ல முடியுமா?''



''வன்னியர்களும் தலித் மக்களும் ஒண்ணு சேரக் கூடாது. அப்படிச் சேர்ந்துட்டா, திராவிடக் கட்சிகளுக்கு வேலை இல்லாமப் போயிடும். அதனால, இரண்டு சமுதாயத்துக்கும் இடையில் குழப்பத்தை உண்டாக்க, 'தமிழினத்தின் தலைவர்’ என்று தன்னைச் சொல்லிக்கொள்ளும் கருணாநிதி, எங்களுக்கு எதிராக திருமாவளவனைத் தூண்டிவிடுறார். திருமாவளவனும் அதைப் புரிந்துகொள்ளாமல் வாய்க்கு வந்ததை எல்லாம் பேசிட்டு இருக்கார். திருமாவளவனைத் தூண்டிவிட்டுக் குளிர் காய்ந்துகொண்டு இருப்பது கருணாநிதிதான்.''




'' 'வன்னியர் சமூகத்துப் பெண்களை வேறு சாதியைச் சேர்ந்தவர்கள் திருமணம் செய்தால், கையை வெட்டுங் கள்’னு பேசி பிரச்னையை ஆரம்பிச்சது பா.ம.க-வின் காடுவெட்டி குருதானே?''



''குரு சொன்னா, மக்கள் எல்லாரும் அப்படியே கேட்டுருவாங்களா? 'பா.ம.க-வுக்கு ஓட்டுப் போடுங்க’னு குரு சொல்லி, எல்லாரும் எங்களுக்கு ஓட்டுப் போட்டாங்களா? வீட்ல பள்ளிக்கூடம் படிக்கிற பொண்ணை எவனாவது காதல்ங்கிற பேர்ல இழுத்துட்டு ஓடினா, எப்படி வலிக்கும்? அந்த வலியும் வேதனையும் கொடுத்த ஆதங்கத்துலதான், குரு அப்படிப் பேசினார். அவரும் காதலை வெறுக்கலை. காதல்ங்கிற பேர்ல ஏமாத்துறவங்களைத்தான் திட்டினார். திரும்பவும் சொல்றேன்... நானோ, அய்யாவோ, குருவோ, காதலுக்கு எதிரானவங்க இல்லை. உண்மையான காதல்னா, உயிரைக் கொடுத்தாவது சேர்த்துவைக்கத் தயாரா இருக்கோம்.''



''எந்த நம்பிக்கையின் அடிப்படையில், 2016-ல் ஆட்சியைப் பிடிப்போம்னு சொல்றீங்க?''



''நான் கேட்கிற ஒரு கேள்விக்குப் பதில் சொல்லுங்க... ஒரு தமிழன் கர்நாடகாவிலேயோ, ஆந்திராவிலேயோ, கேரளாவிலேயோ போய் முதலமைச்சர் ஆக முடியுமா? 



 ஆனா, இங்கே பாருங்க... ஜெயலலிதா எந்த ஊர்னு நான் சொல்லித் தெரிய வேண்டியது இல்லை. விஜயகாந்த், தமிழர் கிடையாது... பூர்வீகம் ஆந்திரா. வைகோவோட பூர்வீகமும் தமிழ்நாடு கிடையாது. யாருக்கும் தெரியாத இன்னொரு தகவலும் சொல்றேன்... 'தமிழினத் தலைவர்’னு மூச்சுக்கு முன்னூறு தடவை சொல்லிட்டு இருக்கும் கருணாநிதியோட பூர்வீகமும் ஆந்திராதான். ஆனா, அவரு அதை ஏத்துக்க மாட்டார். கருணாநிதியோட பூர்வீகம் ஆந்திரா என்பதற்கான ஆதாரங்கள் சீக்கிரமே வெளிவரும். அதனால், தமிழ்நாட்டைத் தமிழர்கள் ஆள வாய்ப்புக் கொடுங்கள் என மக்களிடம் கேட்கப்போகிறோம். திராவிடம் அல்லாத கட்சிகளை ஒருங்கிணைத்து ஆட்சியைப் பிடிப்போம்.''





''திராவிடம் இல்லாத கட்சிகள்னா, தி.மு.க., அ.தி.மு.க, தே.மு.தி.க., ம.தி.மு.க. இல்லாம ஆட்சியைப் பிடிக்கும் அளவுக்கு வேறு யாருடன் கூட்டணி வைக்கப்போறீங்க?''



''இவங்க கூட்டணியே எங்களுக்குத் தேவை இல்லைங்க. தமிழ்நாட்டு மக்கள் இருக்காங்க. அவங்க எங்களுக்கு ஓட்டுப் போடப்போறாங்க. தமிழனின் அடையாளத்தோடு இருக்கும் கட்சி களோடு, நாங்க கூட்டணிவைப்போம். அந்தக் கூட்டணிக்கு நாங்க தலைமை ஏற்போம். எங்களுக்கு அதற்கான எல்லாத் தகுதிகளும் இருக்கு.''



''நீங்கள் மதுவிலக்குப் பிரசாரம் செய்துவருகிறீர்கள். ஆனால், 'ராமதாஸும் அவரது மகன் அன்புமணியும் பெருங்குடிகாரர்கள்’ என்று வன்னியர் கூட்டமைப்பின் தலைவர் சி.என்.ராமமூர்த்தி பேசியிருக்கிறாரே?''



''அவர் யாருன்னே எனக்குத் தெரியாதுங்க. செருப்புல இருக்கிற தூசியைப் பத்தி எப்பவாச் சும் கவலைப்பட்டு இருக்கோமா? அப்படித்தான் இதுவும்.''



''பா.ம.க-வில் உங்களுக்கு முக்கியப் பொறுப்பை ராமதாஸ் கொடுத்துவிட்டார். ஆனா, தி.மு.க-வில் தலைவர் பதவிக்குப் போட்டி இருந்துட்டே இருக்கு. அந்தப் பதவிக்கு ஸ்டாலினா... அழகிரியா... யார் உங்க சாய்ஸ்?''



''அய்யாவையும் கருணாநிதியை யும் தயவுசெஞ்சு ஒப்பிடாதீங்க. எந்தப் பதவியிலும் இல்லாத ஒரே தலைவர் எங்க அய்யாதான். தி.மு.க-வில் அப்படியா சொல் லுங்க? அப்பா, பையன், பேரன், மகள்னு ஒட்டு மொத்தக் குடும்பத்தோட பிடியில்தானே அந்தக் கட்சி இருக்கு. அவங்க கட்சியைப் பத்திப் பேச எனக்கு உரிமை கிடையாது. யாருக்கு அவங்க கட்சிக்குள் அதிக செல்வாக்கு இருக்கோ, அவங்களுக்குப் பொறுப்பு கொடுக்கட்டும்!''



''சினிமாவைத் தொடர்ந்து எதிர்த்து வந்த நீங்கள், இப்போது அமைதியாகிவிட்டீர்களே?''  



''கட்-அவுட்டுக்கு பீர் அபிஷேகம், பால் அபிஷேகம் பண்றதைத்தான் நாங்க எதிர்க்கிறோம். மத்தபடி எந்தக் காலத்திலும் நாங்க சினிமாவுக்கு எதிரானவங்க கிடையாது. நானும் சரி... அய்யாவும் சரி... நிறையவே சினிமா பார்ப்போம். நல்ல படம்னு சொன்னாங்கன்னா, மனைவி, குழந்தைங்களோட தியேட்டருக்குப் போய்ப் படம் பார்ப்பேன். தீபாவளிக்குப் பிறகு 'துப்பாக்கி’, 'அம்மாவின் கைப்பேசி’, 'லைஃப் ஆஃப் பை’னு மூணு படங்கள் பார்த்துட்டோம்.''



''ஜெயலலிதா ஆட்சிபற்றி?''



''இருண்ட காலம்... இருண்ட ஆட்சி. மின்சாரம் மட்டும் அல்ல... நிர்வாகமும் சரியாக இல்லை. மக்களின் கோபத்துக்கு ஜெயலலிதா பதில் சொல்லியே ஆகணும். கருணாநிதிக்கு மாற்றாக இருக்கும்னு நினைச்சு, இந்தம்மாவுக்கு ஓட்டுப் போட்டாங்க. இப்போ தப்பு செஞ்சுட்டோம்னு நினைச்சு மக்கள் வருத்தத்துல இருக்காங்க.''



''தமிழகத்தில் எதிர்க் கட்சியின் செயல்பாடு?''



''எவ்வளவு பெரிய பொறுப்பு அது? எவ்வளவு பெரிய ஜாம்பவான்கள் எல்லாம் அந்தப் பதவியை அலங்கரிச்சு இருக்காங்க. இப்போ தமிழ்நாட்ல எவ்ளோ பிரச்னைகள் இருக்கு... அதைப் பத்தி சட்டமன்றத்திலும், மக்கள் மன்றத்திலும் குரல் கொடுக்க வேண்டிய எதிர்க் கட்சித் தலைவர் விஜயகாந்த், சொந்தக் கட்சிக்காரங்க ளையே அடிக்கிறதும்பத்திரி கைக்காரங்களைத் திட்டுற துமா இருக்கார். அநாகரிகத் தின் உச்சத்தில் செயல்படு றார். ஒரு தலைவன் எப்பவும் மத்தவங்களுக்கு எடுத்துக் காட்டா இருக்கணும். ஆனா, நிலவரம் அங்கே அப்படியா இருக்கு? விஜயகாந்தைப் பத்தி இன்னும் எவ்வளவோ பேசலாம். ஆனா, இப்போ அது வேணாம்!''


நன்றி - விகடன் 

Monday, March 12, 2012

அகில உலக ஆரியர் அன்புமணி ராமதாஸ் பேட்டி காமெடி கும்மி பை வம்புமணி


மக்கள் அழைத்தார்கள்... அதனால் வந்தேன்!”

சி.பி - ஹா ஹா , இப்போ மக்கள் போன்னு துரத்துனா போய்டுவீங்களா? அடங்கோ...

அதிரடியான பேச்சுக்களால் அரசியல் அரங்கத்தை அதிரவைக்கிறார் அன்புமணி ராமதாஸ். ''திராவிட இயக்கங்களால் தமிழ்நாட்டுக்கு ஒரு பிரயோஜனமும் இல்லை. கருணாநிதி, எம்.ஜி.ஆர்., ஜானகி, ஜெயலலிதா, வைகோ... இவர்கள் எவருமே தமிழர்களே இல்லை. தமிழர் தலைவர் ராமதாஸ் மட்டும்தான்'' என்பது இவரது புது குண்டு! 'புதிய அரசியல்... புதிய நம்பிக்கைஎன்பது இவரது புது முழக்கம். என்ன திட்டத்தில் இருக்கிறது பா..? மனம் திறக்கிறார் அன்புமணி ராமதாஸ்.  

சி.பி - ஆனா அதிமுக மடம், ஆகாட்டி திமுக மடம்னு 2 குட்டைலயும் மாறி மாறி விழுந்து சேறு பூசிக்கிட்டு இப்போ 2 பக்கமும் துரத்தி விட்டதும் பேச்சை பாரு.. ஹா ஹா 



1. ''அது என்ன 'புதிய அரசியல்... புதிய நம்பிக்கை’?''
''கிட்டத்தட்ட அரை நூற்றாண்டாக திராவிடக் கட்சிகள் தமிழகத்தைச் சீரழித்து வருகின்றன. இலவசக் கலாசாரம், சினிமா கலாசாரம், சாராயக் கலாசாரம். இவை மூன்றுதான் தமிழன் கண்ட பலன்கள். போதும்... திராவிடக் கட்சிகளால் மக்கள் அடைந்த பலன்கள் போதும். தமிழகத்தை ஆளும் எல்லாத் தகுதிகளும் பா..-வுக்கு இருக்கின்றன;


சி.பி - அண்ணே, உங்க பாயிண்ட்ஸ் எல்லாம் கரெக்ட் தான்.. ஆனா ஜாதிக்கட்சி இன்னும் ஆபத்தாச்சே.. அதிகாரம் கைல இல்லாதப்பவே உங்கப்பா படப்பெட்டியை தூக்கிட்டு ஓடறது, மரத்தை வெட்டி போடறதுன்னு வன்முறைல இறங்கறாரு.. சி எம் ஆகிட்டா  அவ்ளவ் தான்.. தமிழகம் 2 ஆகிடும்


 எங்களுக்கு வாய்ப்பு கொடுங்கள் என்று மக்களை நோக்கிப் போகிறோம். பா..-வின் இந்தப் புதிய பயணத்துக்குப் பெயர்தான் 'புதிய அரசியல்... புதிய நம்பிக்கை’. இனி, எங்கள் அரசியல் 'சயின்டிஃபிக் பேஸ்டுஅரசியலாக இருக்கும்; 'மைக்ரோ பிளானிங்அரசியலாக இருக்கும். நவீன யுகத்துக்கான அரசியலாக இருக்கும்!''



சி.பி -  மைக்ரோ பிளானிங்அரசியல்னா யார் கண்ணுக்கும் தெரியாத அலவு நுணுக்கமா ஊழல் பண்றதா?சயின்டிஃபிக் பேஸ்டுஅரசியல்னா உங்களை எதிர்க்கறவங்க முகத்துல ஆசிட் ஊற்றுவதா?



2. ''நவீன யுகத்துக்கான அரசியல் என்கிறீர்கள்... ஆனால், உங்களுடைய சாதிய அரசியல் சரிதானா?''

''சாதி வேண்டாம் என்றுதான் நாங்களும் நினைக்கிறோம். சாதியை ஒழிக்க வேண்டும் என்பதுதான் பா..-வின் இலக்கு. ஆனால், சாதி இல்லை என்று யாராவது மறுக்க முடியுமா? இந்தியாவில் பல்லாயிரம் ஆண்டுகளாக மக்கள் சாதிரீதி யாகத்தான் அடிமைப்படுத்தப்பட்டனர். அதனால், சீர்திருத்தத்தை அங்கே இருந்துதான் தொடங்க வேண்டும்.''
''இடையில் கொஞ்ச நாட்கள் பா..-வைச் சாதி அடையாளத்துக்கு அப்பாற்பட்ட கட்சியாக்குவது தொடர்பாகப் பேசினீர்கள். ஆனால், இப்போது கட்சியில் மீண்டும் வன்னியர் முழக்கம் ஓங்கி ஒலிக்கிறது. பா... குழப்பத்தில் இருக்கிறதா?''
''அப்படி எல்லாம் இல்லை. அடிப் படையில் அடித்தட்டு மக்களுக்கான கட்சி பா... தமிழகத்திலேயே அதிகக் குடிசை கள் உள்ள மாவட்டம் விழுப்புரம் மாவட் டம். தமிழகத்தில் மனித வளக் குறியீட்டில் கடைசி ஐந்து இடங்களில் இருக்கும் மாவட்டங்கள் விழுப்புரம், கடலூர், திருவண்ணாமலை, தருமபுரி, வேலூர். கல்வி வளர்ச்சியில், உள்கட்டமைப்பில்... எல்லாவற்றிலும் வட தமிழகம் பின்தங்கி இருக்கிறது. யார் இங்கு பெரும்பான்மை மக்கள்? வன்னியர்கள். அவர்களுக்காகப் போராடுவது சாதி அரசியல் ஆகாது. அதைச் சமூக நீதி அரசியல் என்றே கொள்ள வேண்டும்!''



சி.பி - ஆல் ஓவர் தமிழ்நாடு உங்க செல்வாக்கு 4 தொகுதில மட்டும் தான்.. அதனால அடக்கி வாசிங்க..  

3. ''பிற கட்சிகளை நீங்கள் குறை கூறுகிறீர்கள். ஆனால், உங்கள் கட்சியும் அதே வாரிசு அரசியல் பாதையில்தானே பயணிக்கிறது?''
''என் அப்பா கஷ்டப்பட்டவர். கடுமையான வறுமையில் வளர்ந்தவர். ஆடு, மாடு மேய்த்து, சாணி பொறுக்கி, மூட்டை தூக்கி... இப்படி எல்லாம் கஷ்டப்பட்டுதான் டாக்டருக்குப் படித்தார். ஆனால், நான் அப்படி எல்லாம் இல்லை. ஏற்காட்டில், ஆங்கிலோ இந்தியன் ஸ்கூலில் படித்தேன். அப்போது என் கனவு பைலட் ஆவது. நான் டாக்டர் ஆனதுகூட அப்பாவுடைய விருப்பம்தான். அப்போது எல்லாம் சாதி, சமுதாயம், கஷ்ட - நஷ்டம் எதுவுமே எனக்குத் தெரியாது.ஸ்கூலிலும் ஹாஸ்டலிலும் ஆங்கிலத்தில் பேசிப் பழகிய எனக்கு, வீட்டுக்கு வரும்போது தமிழ் வார்த்தைகளே புதிதாக இருக்கும். படிப்பு முடிந்ததும்
ஒன்றரை வருஷம் நல்லாழம் கிராமத்தில் பணியாற்றினேன். அப்போதுதான் மக்கள் எவ்வளவு கஷ்டப்படுகிறார்கள் என்று தெரிந்தது. சாதியப் பாகுபாடுகள் புரிய ஆரம்பித்தன. மக்களுக்கு ஏதாவது செய்ய வேண்டும் என்று நினைத்தேன். குழந்தைகள் பிறந்ததும் அவர்கள் படிப்புக்காக திண்டிவனத்தில் இருந்து சென்னை வந்தேன். கட்டுமானத் தொழிலில் இறங்கினேன். மக்களுக்கு ஏதாவது செய்ய வேண்டும் என்பது மட்டும் ஓடிக் கொண்டே இருந்தது. என்னைப் பொறுத்த அளவில் 'பசுமைத் தாயகம்அதற்குப் போதுமான தாக இருந்தது. ஆனால், லட்சோப லட்ச மக்களும் பல்லாயிரக்கணக்கான தொண்டர்களும் நான் பொறுப்புக்கு வர வேண்டும் என்று அழைத்தபோது... என்னால் தவிர்க்க முடியாமல் போய்விட்டது!''



சி.பி - அண்ணன் கட்சி உறுப்பினர்களைத்தான் மக்கள்னு சொல்றார் போல.. ஹி ஹி 
4. ''அப்படியென்றால், மக்கள் அழைத்ததால்தான் அரசியலுக்கு வந்தீர்களா?''


சி.பி - ஆமா, அவங்க மானமுள்ள கட்சிக்காரங்க, மக்கள் போ அப்டினு டெபாசிட்டை பிடுங்கி துரத்தி விட்டுட்டா சத்தம் போடாம வந்துடுவாங்க.. 

''ஆமாம். அதை இன்றைக்கு நினைத்தாலும் என் கண்கள் கலங்கும். ஒருநாள் மனைவியுடன் காரில் சென்றேன். வழியில் காரை நிறுத்தி என் காருக்கு முத்தமிட்டு, பாசத்தை வெளிக்காட்டினார்கள் மக்கள். என் மனைவியிடம்
கேட்டேன், 'இவர்களுக்கு நான் என்ன செய்யப்போகிறேன்?’ '' (கண் கலங்குகிறார்).

சி.பி - என்னது? காருக்கு முத்தம் இட்டாங்களா? நல்லா விசாரிங்க.. கார் அவங்களுதா இருக்கும்னு நினைக்கறேன்.. அடமானத்துக்கு வந்ததை உங்கப்பா ஆட்டையை போட்டுட்டாரோ என்னவோ?
5. ''உங்கள் தந்தை, 'என் குடும்பத்தினர் அரசியலுக்கு வந்தால், என்னைச் சவுக்கால் அடியுங்கள்என்று அறிவித்தவர். அப்படிப்பட்டவர் உங்களுடைய அரசியல் பிரவேசத்துக்கு எப்படிச் சம்மதித்தார்?''


சி.பி - ஒரு வேளை அன்புமணி தத்துப்பிள்ளையோ என்னவோ?ஏன் சொல்றேன்னா எங்கண்ணன் ராம்தாஸ் அய்யா மானஸ்தர்.. ஒரு வார்த்தை ஒரு சொல் ஒரு நாக்கு அவருக்கு.. கலைஞர் மோசம்னு ஒரு தடவை சொல்லிட்டா மறுபடி அந்த பக்கமே போக மாட்டார். ஜெவை திட்டுனார்னா போயஸ் பக்கமே தல வெச்சு படுக்க மாட்டார்.. 
''ஒரு ரகசியம் சொல்லவா? நாளைக்கு நான் மந்திரி பதவி ஏற்கிறேன் என்றால், இன்றைக்கு இரவுதான் அப்பா சம்மதிக்கிறார். அதுவும் எப்படி? கட்சியின் அத்தனை தலைவர்களும் ஒருமித்த குரலில் 'தம்பியைப் பதவியில் அமர்த்துங்கள்என்று அப்பாவிடம் வலியுறுத்தியபோது.

https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEg8el8_QO5KvcX_krHs8Rg7G9_SFx7BLRkRRQ198pXmOLmSygEr2K_DcsvfZaosDm_csuANZcnwaO7wNe6XxCyeADC4MscEtedZYLxfzcERTdCHNB1ZRiXKzLf6hWdfIDpBOQ7SAC9iAp39/s1600/resize_20111011204443.jpg


சி.பி - அடங்கப்பா சாமி.. இது உலக மகா நடிப்புடா.. வெட்கம் இல்லாம பதவிக்காக அதுவும் பையன் எம் பி ஆகனும்கறதுக்காக நாய் மாதிரி அலைஞ்சது எல்லாம்  எங்களுக்குத்தெரியாமயா இருக்கு?
இந்தியாவிலேயே 'எனக்கு எந்தப் பதவியும் வேண்டாம்என்று சொல்லிவிட்டு, அரசியலுக்கு வந்த ஒரே தலைவர் அப்பா.


சி.பி - அவ்ளவ் யோக்கியமா இருக்கறவர் ஏன் உங்களை களம் இறக்கனும்? ஊர்ல அநாதைகளுக்கா பஞ்சம்? ஒரு தலித் இளைஞரை களம் இறக்கி இருக்கலாமே? நான் என்ன சொல்றேன்னா அட்டூழியம் பண்ணுங்க, அராஜகம் பண்ணுங்க தப்பில்லை, ஏன்னா எல்லாரும் அதைத்தான் பண்றாங்க, ஆனா வெளீல நான் நெம்ப நெம்ப நல்லவன், உலகமகா யோக்கியன்னு சொல்லிட்டு அராஜகம் பண்ணாதீங்க..


 தான் முதல்வர், பிள்ளைகள் துணை முதல்வர், மத்திய அமைச்சர், நாடாளுமன்ற உறுப்பினர் என்று குடும்பத்தையே பதவியில் அமர்த்தியவர் அல்ல அவர். இந்த வாக்குறுதியையும் அவர் காப்பாற்றி இருப்பார். கட்சியினரின் வற்புறுத்தலால்தான் மீறினார்.''


சி.பி - அண்ணன் கட்சிக்காக உயிரையே கொடுப்பாரு.. ஆனா பாருங்க யாராவது அவரை எதிர்த்து பேசுனா கட்சியை விட்டுத்தூக்கிடுவாரு.. 
6. ''மது, புகைப் பழக்கத்துக்குத் தடை, டிஸ்கொதே, பப் ஆகியவற்றுக்குக் கட்டுப்பாடு, பிடிக்காத திரைப்படங்கள் ஓடும் திரையரங்குகள் மீது தாக்குதல்... இவை எல்லாம் தமிழகத்தின் 'கலாசாரக் காவலர்களாக உங்களைக் காட்டிக்கொள்ளும் முயற்சியா?''
''அறிவுரை சொன்னால், கேட்கிற நிலையில் இன்றைய தலைமுறை இல்லை. உலகிலேயே நடிகனுக்குப் பால் அபிஷேகமும் பீர் அபிஷேகமும் நடத்தும் ரசிகர் கூட்டம் இங்குதான் இருக்கிறது. நாட்டிலேயே புற்றுநோயாளிகள் அதிகம் உள்ள மாநிலங்களில், தமிழகம் முன்னணியில் இருக்கிறது. உலக சுகாதார மையம் சொல்கிறது, 'அடுத்த 10 ஆண்டுகளில் தமிழகத்தில் மது அருந்தாத இளைஞர்களே இருக்க மாட்டார்கள்என்று. அந்த நிலைக்குத் தமிழகம் சென்றுவிட நாங்கள் அனு மதிக்க மாட்டோம்.''

சி.பி - பா ம கவுக்கு கொள்கைன்னு 1 இருந்தா அது இது மட்டும்தான்,, இதை வரவேற்கிறோம்.. 
7. ''உங்களுக்குப் புகை, மதுப் பழக்கம் உண்டா?''
''ம்ஹூம்... தொட்டதே இல்லை.''

சி.பி - ஆமா, அண்ணனுக்கு மதுப்பழக்கம் இல்லை.. ஆனா .. ஹி ஹி 

8. ''தமிழர் என்ற சொல்லுக்கு, பா... புதிய வரையறை வகுக்கிறதா?''
''ஆமாம். தமிழ் பேசுவதாலேயே வந்தேறிகளை எப்படித் தமிழர்கள் என்று ஏற்றுக்கொள்ள முடியும்?

திராவிடர்கள் என்றால் யார்? திராவிடக் கட்சிகள், மலையாளிகள், கன்னடர்கள், தெலுங்கர்கள், தமிழர்கள் எல்லோரும் திராவிடர்கள் என்று சொல்கின்றன. அப்படி என்றால், ஆந்திரத்திலோ, கர்நாடகத்திலோ, கேரளத்திலோ, திராவிட என்ற பெயரில் ஒரு கட்சியாவது இருக்க வேண்டுமே... இருக்கிறதா? கிடையாது. ஆந்திரத்தில் ரெட்டி, நாயுடு தவிர வேறு இனத்தவர்கள் முதல்வர் நாற்காலியில் அமர முடியவில்லை. கேரளத்தில் நாயர், மேனன் தவிர வேறு இனத்தவர்கள் முதல்வர் நாற்காலியில் அமர முடியவில்லை. கர்நாடகத்தில் லிங்காயத்துகள், ஒகேலிக்கர்கள் தவிர வேறு இனத்தவர்கள் முதல்வர் நாற்காலியில் அமர முடியவில்லை. தமிழகத் தில் மட்டும்தான் இந்த அக்கிரமம். காரணம், இங்கு திராவிடர்கள் என்ற பெயரில் ஆட்சி யில் ஒட்டிக்கொள்பவர்கள் எவரும் தமிழர் கள் இல்லை என்பதுதான்.''


சி.பி - தமிழனை 2 வகையா பிரிக்கலாம் 1. யார் என்ன சொன்னாலும் அதை நம்பிடறவன் 2. காலச்சுழற்சியில் அரசியல்வியாதிகள் செய்யும் ஊழலை, அக்கிரமங்களை மறந்துடறவன்
9. ''அடுத்தடுத்த தேர்தல் தோல்விகள் மூலம் என்ன கற்றுக்கொண்டு இருக்கிறீர்கள்?''

சி.பி - யாரைப்பார்த்து என்ன வார்த்தை சொல்லீட்டீங்க, எல்லா எலெக்‌ஷன்லயும் அவங்க டெபாசிட் வாங்கியாச்சு.. 



''திராவிடக் கட்சிகளுடன் கூட்டணி அமைத்தது தவறு. இனி ஒருபோதும் அந்தத் தவறைச் செய்ய மாட்டோம்.''


சி.பி - இது எப்படி இருக்குன்னா ஒரு பணக்காரப்பெண்ணை கல்யாணம் பண்ணீக்கிட்டு எல்லா சொத்துக்களையும் அனுபவிச்சுட்டு அந்த பொண்ணுக்கு ஏதாவது உடம்பு சரி இல்லாம போனதும் நைஸா ஓடி போற மாதிரி இருக்கு.. 
10. ''இதை உறுதியாக எடுத்துக்கொள்ளலாமா?''
''சத்தியமாக!''

சி.பி - சின்ன வயசுல நாங்களும் இப்படித்தாண்ணே.. எதுக்கெடுத்தாலும் சத்தியம் பண்ணுவோம், அப்போ மனசுக்குள்ளே அ அப்படின்னு நினைச்சுக்குவோம் .. அதாவது அசத்தியமா ஹி ஹி . நீங்க வேணா பாருங்க உங்கப்பா கலைஞர் கால்லயோ ஜெ கால்லயோ போய் விழுந்து நாங்கள் இணைவது காலத்தின் கட்டாயம், அரசியலில் நிரந்தர எதிரியும் இல்லை, நிரந்தர நண்பனும் இல்லை அப்டின்னு வெட்கமில்லாம சொல்லிட்டு நரி மாதிரி நயவஞ்சக சிரிப்போட பேப்பர்ல நியூசா வருவார் பாருங்க.. அப்படி ஒரு சம்பவம் நடக்கலைன்னா நான் கில்மா படம் பார்க்கறதையே விட்டுடறேன். இது நயன் தாராவோட உண்மைக்காதல் மீது சத்தியம் ஹி ஹி 


டிஸ்கி - கேள்விகள் பச்சை நிறத்தில் இருப்பது எதேச்சையானது, பச்சோந்தி கட்சி என்று எங்களை கிண்டல் பண்றாங்க என யாராவது குதித்தால் அதற்கு நிர்வாகம் பருப்பல்ல.. அடச்சே பொறுப்பல்ல..