Tuesday, March 15, 2011

சி பி ஐ விசாரணை -கலைஞர் டி வி யை ஏழைகளுக்கு எழுதி வைப்பாரா கலைஞர்..?

http://truetamilans.files.wordpress.com/2007/05/thuglak-6.jpg 

1.காஞ்சிபுரம் காங்., எம்.பி., விஸ்வநாதன்: செங்கல்பட்டு வயலூர் கிராமம் அருகே பாலாற்றின் குறுக்கே தடுப்பணை கட்ட வேண்டும். அவ்வாறு கட்டினால், 10 ஆயிரம் எக்டேர் பரப்பளவு பாசன வசதி பெறுவதுடன், 10 லட்சம் விவசாயிகளும் பயன் அடைவர். இதற்கு, மத்திய அரசு நிதி ஒதுக்க வேண்டும்.

ஒதுக்குங்க ஒதுக்குங்க..சீக்கிரம்.. இன்னும் ஒரு மாசம் கூட இல்லை.. போவதற்கு முன் கடைசியா ஒரு ஊழல் பண்ணீட்டு போயிடறோம்...(முறைப்பொண்ணுக்கு வேற ஒரு மாப்பிள்ளை கூட கல்யாணம்னா கடைசி கடைசியா ஒரு ஞாபக முத்தம் தர்றதில்லையா? அது மாதிரி)

------------------------------------------------

2. மத்திய நிதி அமைச்சர் பிரணாப் முகர்ஜி: விவசாயத் துறைக்கு கடன் வழங்கும் நடவடிக்கைகள் பாராட்டத்தக்க அளவில் நடந்து வருகின்றன. நடப்பு நிதியாண்டில் விவசாயத் துறைக்கு, 3.75 லட்சம் கோடி ரூபாய் கடன் வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. ஆனால், டிசம்பர் மாதத்திலேயே மூன்று லட்சம் கோடி ரூபாய் கடன் வழங்கப்பட்டு விட்டது.

விவசாயக்கடன் குடுத்துட்டுத்தான் இருக்காங்க.. ஆனா விவசாயிங்க யாரும் வளர்ந்ததா தெரியல.. இந்த மீடியேட்டர்களும், அரசியல்வாதிகளும் தான் வளர்றாங்க...


----------------------------------------------

ViewMore FromTagsCommentsShareSendFavoriteTwitterFacebook
http://farm4.static.flickr.com/3185/2635671409_bed718aea5.jpg
3. தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி பிரவீன் குமார்: தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தைத் தவறாக பயன்படுத்தி, போலியாக ஊழியர்களின் பெயர்களைச் சேர்த்து, மக்களுக்கு பண வினியோகம் நடந்து வருவது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. கடலூர் மாவட்டம், புவனகிரி தாலுகாவில் உள்ள அகரம் ஆலம்பாடி ஊராட்சியில், இதுபோன்ற முறைகேடு நடந்துள்ளது.

உங்களை எல்லாம் நினைச்சா எனக்கு பாவமா இருக்கு.. பல பக்கம் நடக்குது.. ஒரு ஊர்ல கண்டுபிடிச்சதுக்கே இந்த அலப்பறையா..?வைரஸ் இல்லாத கணிப்பொறியா?மாணவர்கள் கட் அடிக்காத வகுப்பறையா?ஊழல் நடக்காத துறையா?


--------------------------------------
http://www.writermugil.com/wp-content/uploads/2009/05/mk-fasting1.jpg
4. இந்திய ரிசர்வ் வங்கி கவர்னர் சுப்பாராவ் பேட்டி: எந்த நாட்டையும் விட, மிக வேகமாக பொருளாதார பின்னடைவில் இருந்து நம் நாடு மீண்டது. அதுபோல், எந்த நாட்டையும் விட, மிக வேகமாக பணவீக்கம் நம்மைப் பற்றிக் கொண்டுள்ளது. பணவீக்கத்தை கட்டுப்படுத்த, வட்டி விகிதத்தை உயர்த்தித் தான் ஆக வேண்டும். பொருளாதார மீட்சியை தக்க வைக்க, வட்டி விகிதங்களை குறைவாக வைத்திருக்க வேண்டும். வளர்ச்சியுடனும், பணவீக்கத்துடனும் நாடு போராட வேண்டியுள்ளது.

அது கூட எப்படியோ போராடிக்கலாம்.. ஜாதி அரசியல்வாதிகளோடும், வியாதி அரசியல்வாதிகளோடும் போராட வேண்டி இருக்கே...?

----------------------------------------
5. பா.ஜ., மூத்த தலைவர் அத்வானி பேச்சு: மன்மோகன் சிங்கை நேர்மையற்றவர் என சொல்ல முடியாது. ஆனால், பிரதமர் அலுவலகம் நேர்மையின்றி இருக்கிறது. "ஸ்பெக்ட்ரம்' முறைகேடுக்கு, கூட்டணி அரசியலின் நிர்பந்தமே காரணம் என, மன்மோகன் சிங் கூறியுள்ளார். இதன்மூலம்,தன் அலுவலகத்தை பழியிலிருந்து காப்பாற்ற முயற்சிக்கிறார். கொள்ளை நடந்து கொண்டிருந்தபோது, அவரது அலுவலகம் கண்ணை மூடிக் கொண்டிருந்தது.

அநியாயம் எங்கே நடந்தாலும் நான் வேடிக்கை பார்த்துட்டு சும்மா இருக்கமாட்டேன்.. கண்ணை மூடிக்குவேன்...ஹி ஹி - பிரதமர் மனசுக்குள் நினைச்சது
https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEie_v9-nVyMs2fYySaTWRiA_u9LAkEuJauXLTPOPTvOI7NtMuhiBr5zj-iFp1UEDsU6gLp57fHfIH8eh1rgx5h1FhWwTIiH-8lU0bbQmkBIEH1nFqkH_5_oSyb0BjXz2Ae6uHDiERkWeCuE/s320/leena_manimekalai.jpg
-------------------------------------
6. மார்க்சிஸ்ட் பொதுச் செயலர் பிரகாஷ் கராத் பேச்சு: மூன்று சீட்டுகளுக்காக, அமைச்சர்களை ராஜினாமா நாடகம் நடத்த வைத்த கருணாநிதியின் நோக்கமெல்லாம், சி.பி.ஐ., தன் வீட்டுக் கதவை தட்டி விடக் கூடாது என்பது தான். எங்கள் கட்சி சார்பில், புத்ததேவ் பட்டாச்சார்யா, அச்சுதானந்தன், மாணிக் சர்க்கார் ஆகிய மூன்று முதல்வர்கள் இருக்கின்றனர். அவர்கள் மீது ஒரு ஊழல் குற்றச்சாட்டை உங்களால் சொல்ல முடியுமா? அவர்கள் சொத்துப் பட்டியல் வெளிப்படையானது. நாட்டிலேயே மிக மிக ஏழை முதல்வர்கள் இவர்கள் தான்.

எங்க தலைவர் கூட ஏழைதான்...ஒரே ஒரு வீடுதான் சொந்தமா இருந்தது.. அதையும் ஏழைக்கு எழுதி வெச்சுட்டார்.. ஆனா கலைஞர் டி வி யை எழுதி வைக்க சொல்லுங்க.. கடுப்பாகிடுவார்...

--------------------------------------------

http://inthiya.in/ta/wp-content/uploads/2011/02/karunanidhi-sonia-gandhi-manmohan-singh-.jpg
7. ஜனதா கட்சித் தலைவர் சுப்பிரமணியசாமி பேட்டி : "ஸ்பெக்ட்ரம்' ஊழல் குறித்து, தி.மு.க., - காங்கிரஸ் தலைவர்களிடமும் விசாரணை நடத்தப்படலாம். "ஸ்பெக்ட்ரம்' ஊழல் பிரச்னையில், என் மீது மான நஷ்ட வழக்கு தொடரப் போவதாக முதல்வர் கருணாநிதியும், அமைச்சர் துரைமுருகனும் கூறியிருந்தனர். இதுவரை வழக்கு தொடராமல் மவுனம் சாதிப்பது ஏன்?

மானம் இருக்கறவங்க தான் மான நஷ்ட வழக்கு தொடர முடியும்னு கழக வக்கீல்கள் யாராவது சொல்லி இருப்பாங்களோ..?

-----------------------------------------
8. சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி கபாடியா பேச்சு: சுப்ரீம் கோர்ட்டும், ஐகோர்ட்டும் சில கொள்கைகளின் அடிப்படையில் செயல்படுபவை. எனவே, வழக்குக்கு சம்பந்தப்படாத எதைப் பற்றியும் நீதிபதிகள் பேசக் கூடாது. சில நேரங்களில், வழக்கை விசாரிக்கும் போதும், தீர்ப்பு அளிக்கும் போதும் நீதிபதிகள் தங்கள் சொந்த கருத்துகளையும், விருப்பு, வெறுப்புகளையும் இந்த சமுதாயத்தின் மீது திணிக்கின்றனர். அப்படி செய்யக் கூடாது. நீதிபதிகள் தங்கள் கடமையை ஆற்றும்போது, சமுதாயத்துக்கு அறிவுரை வழங்கக் கூடாது.

அப்படியே அறிவுரை சொல்ற மாதிரி இருந்தா சாதாரண குடிமகனுக்கு சொல்லனும்.. அதை விட்டுட்டு பெரிய பெரிய தலைங்களுக்கு அட்வைஸ் பண்ணுனா எப்படி..? அவங்களுக்கு சொல் புத்தியும் கிடையாது.. சுய புத்தியும் கிடையாது...


---------------------------------------

டிஸ்கி 1 - தமிழச்சியோட ஸ்டில் எதுக்கு?ன்னு கேக்கறவங்களுக்கு, ஒரு தமிழன் தமிழச்சியோட ஸ்டில்லை போட்டாக்கூட குத்தமா?  ஹி ஹி 


டிஸ்கி 2- லீனா மணிமேகலைக்கும் அட்ரா சக்க இணைய தளத்துக்கும் எந்த சம்பந்தமும் இல்லை..எக்சாம்க்கு படிக்காம போற மக்கு ஸ்டூடண்ட் வெறும் பேப்பரை குடுத்தா கேவலம்னு சம்பந்தா சம்பந்தம் இல்லாம எதையாவது எழுதற மாதிரி.. இந்த ஸ்டில்ஸூம்.. ஹி ஹி

63 comments:

குரங்குபெடல் said...

Auto . . . Confirm . . . Hi ..

Thanks

சி.பி.செந்தில்குமார் said...

சொந்தமா வெச்சுக்கவா? நன்றி..ஹூம் அதையாவது வெச்சுக்கறேன்

உணவு உலகம் said...

வந்துட்டேன், வாசிச்சுட்டேன், ஓட்டு போட்டுட்டேன், வரேன்.

சி.பி.செந்தில்குமார் said...

நீங்க கருணோட க்ளோஸ் ஃபிரண்டா..?

உணவு உலகம் said...

உங்களுக்கும் தான் நண்பன்!

சி.பி.செந்தில்குமார் said...

hi hi ஹி ஹி ரைட்டு

உணவு உலகம் said...

ரொம்ப நன்றிங்க.

உணவு உலகம் said...

நண்பர் மதி சுதா இன்று தன பதிவில் தங்களை குறிப்பிட்டு எழுதியுள்ளார். நானும் அதில் உங்களை குறிப்பிட்டு பின்னூட்டம் போட்டுள்ளேன்.

ராஜி said...

நமீதா, சினேகா, சமீராரெட்டி, சுவாதி.., இப்ப புதுசா தமிழச்சி தங்கபாண்டியனா? ம் ஜமாயுங்க

சி.பி.செந்தில்குமார் said...

நடிகைகள் மீது மட்டும் தான் உங்களுக்கு நாட்டமா? மற்ற பெண்கள் ஸ்டில்லை போட்டால் உங்களுக்கு என்ன நட்டமா? அப்படின்னு யாரும் கேட்டறக்கூடாதே..ஹி ஹி இப்படிக்கு சமாளிஃபிகேஷன் சண்முகராஜ்

சி.பி.செந்தில்குமார் said...

>>FOOD said...

நண்பர் மதி சுதா இன்று தன பதிவில் தங்களை குறிப்பிட்டு எழுதியுள்ளார். நானும் அதில் உங்களை குறிப்பிட்டு பின்னூட்டம் போட்டுள்ளேன்.

இருங்க.. அந்தாள் பதிவுக்கு போய் மைனஸ் ஓட்டு போடறேன் ஹி ஹி

தமிழ் 007 said...

காதகாதனமாகதனாகமதானமடகதாமதன
கககனாகதானதகானதமகமடனதகமடதன
னகானாமனதகமதனகதனகதமனதகடமனதனபானரநாதஎதெமகதனகராதானகடனக்னமமககமதனாகதானதடகாதனாகதனாகட


புரிஞ்சதா?

நிரூபன் said...

என்ன நேற்று இராத்திரி தூக்கத்திலை ஏதாவது கனவு கண்டீர்களோ சகோ?
என்னது கலைஞர் டீவியை ஏழைகளுக்கு எழுதி வைப்பரா? நடக்கவே நடக்காது. அது வாரிசுத் தொலைக் காட்சியெல்லோ. கலைஞரின் வாரிகளில் யாராவது ஒருவர் பெயரில் தான் எழுதி வைப்பார் என நினைக்கிறேன்.

Thirumalai Kandasami said...

உடன்பிறப்பே,உமது எள்ளல் கண்டு எமது நெஞ்சம் கொதித்தாலும், தமிழும்,தமிழ் நாடும் உள்ளவரை இந்த தமிழனின் புகழ் பரவி இருக்கும் என்பதை மறவாதே.
(1 .76 லட்சம் கோடி ன சும்மாவா)),,

நாளைய இயக்குனர் விமர்சனம் எப்ப வரும்?

நிரூபன் said...

உங்களை எல்லாம் நினைச்சா எனக்கு பாவமா இருக்கு.. பல பக்கம் நடக்குது.. ஒரு ஊர்ல கண்டுபிடிச்சதுக்கே இந்த அலப்பறையா..?வைரஸ் இல்லாத கணிப்பொறியா?மாணவர்கள் கட் அடிக்காத வகுப்பறையா?ஊழல் நடக்காத துறையா?//

இந்த இடத்தில் உங்களின் நேர்மையையும், ஊடக சுதந்திரத்தையும் பாராட்டுகிறேன்.

சி.பி.செந்தில்குமார் said...

தமிழ் 007 said...

காதகாதனமாகதனாகமதானமடகதாமதன
கககனாகதானதகானதமகமடனதகமடதன
னகானாமனதகமதனகதனகதமனதகடமனதனபானரநாதஎதெமகதனகராதானகடனக்னமமககமதனாகதானதடகாதனாகதனாகட


புரிஞ்சதா?


உலகப்பட விழாவுல சப் டைட்டில் இல்லாம ஓடற அவார்டு படம் பார்த்த எஃப்ஃபக்ட்

சி.பி.செந்தில்குமார் said...

>>நிரூபன் said...

என்ன நேற்று இராத்திரி தூக்கத்திலை ஏதாவது கனவு கண்டீர்களோ சகோ?
என்னது கலைஞர் டீவியை ஏழைகளுக்கு எழுதி வைப்பரா? நடக்கவே நடக்காது. அது வாரிசுத் தொலைக் காட்சியெல்லோ. கலைஞரின் வாரிகளில் யாராவது ஒருவர் பெயரில் தான் எழுதி வைப்பார் என நினைக்கிறேன்.

ஹி ஹி சொல்ல முடியாது.. சி பி ஐ ரொம்ப நெருக்குனா அப்படி பண்ண வாய்ப்பு இருக்கு

சி.பி.செந்தில்குமார் said...

Thirumalai Kandasami said...

உடன்பிறப்பே,உமது எள்ளல் கண்டு எமது நெஞ்சம் கொதித்தாலும், தமிழும்,தமிழ் நாடும் உள்ளவரை இந்த தமிழனின் புகழ் பரவி இருக்கும் என்பதை மறவாதே.
(1 .76 லட்சம் கோடி ன சும்மாவா)),,

நாளைய இயக்குனர் விமர்சனம் எப்ப வரும்?

இன்று மாலை 4 மணீக்கு

நிரூபன் said...

எங்க தலைவர் கூட ஏழைதான்...ஒரே ஒரு வீடுதான் சொந்தமா இருந்தது.. அதையும் ஏழைக்கு எழுதி வெச்சுட்டார்.. ஆனா கலைஞர் டி வி யை எழுதி வைக்க சொல்லுங்க.. கடுப்பாகிடுவார்...
//

பின்ன கடுப்பாகாமல் என்ன பண்ணுவார்? அவரோடை வருமானமீட்டுற துறைகளிலை கலைஞர் டீவியும் ஒன்று தானே.

சி.பி.செந்தில்குமார் said...
This comment has been removed by the author.
நிரூபன் said...

மானம் இருக்கறவங்க தான் மான நஷ்ட வழக்கு தொடர முடியும்னு கழக வக்கீல்கள் யாராவது சொல்லி இருப்பாங்களோ..?//

ஆட்டமென்று வந்திட்டா ஆடியே தான் ஆக வேணும். அதிலை என்ன மானம் இருக்கு. மானத்தை எல்லாம் எப்பவோ துறந்தவங்க தானே நம்ம அரசியல் வாதிகள். இதெல்லாம் அவங்களுக்கு தூசு மாதிரி.

ராஜி said...

சி.பி.செந்தில்குமார் said
நடிகைகள் மீதுதான் உங்களுக்கு நாட்டமா? னு யாரும் கேட்ககூடாதுல்ல.
ஃஃஃஃஃஃ
இதப்பாருடா, ஜொள்றதுல கூட verity பார்ப்பேன் னு நிரூபிக்கிறாராம் இந்த மனுசன்

நிரூபன் said...

லீனா மணிமேகலைக்கும் அட்ரா சக்க இணைய தளத்துக்கும் எந்த சம்பந்தமும் இல்லை..எக்சாம்க்கு படிக்காம போற மக்கு ஸ்டூடண்ட் வெறும் பேப்பரை குடுத்தா கேவலம்னு சம்பந்தா சம்பந்தம் இல்லாம எதையாவது எழுதற மாதிரி.. இந்த ஸ்டில்ஸூம்.. ஹி ஹி//

வெகு விரைவில் லீனா மணிமேகலையின் கவிதைகளை அலசி ஆராய்ந்து,அவருடன் ஒரு உரையாடல் பதிவு போடலாம் என நினைத்துள்ளேன். உங்கள் அனைவருக்கும் ஒரு விருந்து விரைவில் காத்திருக்கிறது.

சி.பி.செந்தில்குமார் said...

நிரூபன் said...


இந்த இடத்தில் உங்களின் நேர்மையையும், ஊடக சுதந்திரத்தையும் பாராட்டுகிறேன்.

hi hi ஹி ஹி சின்ன வயசுல இருந்தே நான் ஹமாம் சோப் தான்.. அதான் நேர்மை

சி.பி.செந்தில்குமார் said...

>>வெகு விரைவில் லீனா மணிமேகலையின் கவிதைகளை அலசி ஆராய்ந்து,அவருடன் ஒரு உரையாடல் பதிவு போடலாம் என நினைத்துள்ளேன். உங்கள் அனைவருக்கும் ஒரு விருந்து விரைவில் காத்திருக்கிறது.

விருந்து பத்திரிக்கை தடை செய்யப்பட்டு விட்டது.. அதனால் உங்கள் விருந்துக்கு காத்திருக்கிறோம்

சக்தி கல்வி மையம் said...

நான் வந்துட்டேன்..

சி.பி.செந்தில்குமார் said...

வேடந்தாங்கல் - கருன் said...

நான் வந்துட்டேன்..

2 நாளா உங்களைக்காணாம பல ஃபிகர்கள் துடித்துப்போய்ட்டாங்க.. அண்ணன் எங்கே யார் கூட போனீங்க?

சக்தி கல்வி மையம் said...

வேடந்தாங்கல் - கருன் said...

நான் வந்துட்டேன்..

2 நாளா உங்களைக்காணாம பல ஃபிகர்கள் துடித்துப்போய்ட்டாங்க.. அண்ணன் எங்கே யார் கூட போனீங்க? /////

ஃபிகர்கள் துடித்துப்போய்ட்டாங்க..யாரு தம்பி அது ?

சி.பி.செந்தில்குமார் said...

hi hi ஹி ஹி உங்களுக்கு தெரியாதா?

சக்தி கல்வி மையம் said...

என்னுடைய மாமியார் வீடு நெல்லூர் அங்க ஒர் Functionக்கு போயிருந்தேன்.

அங்க ஒர் தெலுங்கு சினிமா பார்த்தேன்.. விமர்சனம் எழுதினா Hits கிடைக்குமா?

சி.பி.செந்தில்குமார் said...

வேடந்தாங்கல் - கருன் said...

என்னுடைய மாமியார் வீடு நெல்லூர் அங்க ஒர் Functionக்கு போயிருந்தேன்.

அங்க ஒர் தெலுங்கு சினிமா பார்த்தேன்.. விமர்சனம் எழுதினா Hits கிடைக்குமா?

என்ன படம்? ஹீரோ யாரு> ஹீரோயின் யாரு?

சக்தி கல்வி மையம் said...

படம் பேரு பிரமகாவாலி... நடிகர் சாய்குமார் மகன் ஆதி தான் Hero...கதாநாயகி இஷாசாவ்லா..
பாட்டேல்லாம் செமை Hit...

!♥!தோழி பிரஷா( Tholi Pirasha)!♥! said...

அரசியல் படிச்சிட்டு வந்த தான் கொமண்ட் போடனும்.. இப்போ வோட்டு குத்திட்டு போகின்றேன் பாய்.

சி.பி.செந்தில்குமார் said...

வேடந்தாங்கல் - கருன் said...

படம் பேரு பிரமகாவாலி... நடிகர் சாய்குமார் மகன் ஆதி தான் Hero...கதாநாயகி இஷாசாவ்லா..
பாட்டேல்லாம் செமை Hit...

போட்டுத்தாக்குங்க.. 1000 ஹிட்ஸ் கன்ஃபர்ம்

சி.பி.செந்தில்குமார் said...

தோழி பிரஷா said...

அரசியல் படிச்சிட்டு வந்த தான் கொமண்ட் போடனும்.. இப்போ வோட்டு குத்திட்டு போகின்றேன் பாய்.

பாய் என்றால் ஆங்கில மொழி பெயர்ப்பில் பையன் என அர்த்தம் வருது.. ரொம்ப தாங்க்ஸ்

Unknown said...

ஓட்டுப் போட்டாச்சு.. கிளம்பறேன்.. :-)

சக்தி கல்வி மையம் said...

சி.பி.செந்தில்குமார் said...

வேடந்தாங்கல் - கருன் said...

படம் பேரு பிரமகாவாலி... நடிகர் சாய்குமார் மகன் ஆதி தான் Hero...கதாநாயகி இஷாசாவ்லா..
பாட்டேல்லாம் செமை Hit...

போட்டுத்தாக்குங்க.. 1000 ஹிட்ஸ் கன்ஃபர்ம்
////டியூஷன் எடுங்க... எனக்கு எழுதவராதே...

செங்கோவி said...

அண்ணன் டேஸ்ட்டே தனி தான்!

சி.பி.செந்தில்குமார் said...

ஹா ஹா.. நான் என்னமோ யுனிவர்சிட்டில போய் படிச்சு வந்த மாதிரி சொல்றீங்க.. சும்மா எழுதுங்க..வந்துடும்

சி.பி.செந்தில்குமார் said...

Delete
Blogger பதிவுலகில் பாபு said...

ஓட்டுப் போட்டாச்சு.. கிளம்பறேன்.. :-)

இந்த மேட்டர்ல நான் சேட்டை அண்ணன் கட்சி.. கமெண்ட் ஒன்லி ஐ வாண்ட்

சி.பி.செந்தில்குமார் said...

Delete
Blogger செங்கோவி said...

அண்ணன் டேஸ்ட்டே தனி தான்!

குசும்பு ஜாஸ்தியாகிடுச்சு.. இருடி வர்றேன்

'பரிவை' சே.குமார் said...

Pottuththakku... annaaaaaa.... kilampittingala...?

ராஜி said...

முறைப்பொண்ணுக்கு வேற ஒரு மாப்பிள்ளை கூட கல்யாணம்னா கடைசி கடைசியா ஒரு ஞாபக முத்தம் தர்றதில்லையா? அது மாதிரி
>>>>>>>>>>>>>
இது மாதிரியெல்லாம் சிந்திக்க சிபி சாரை விட்டா இந்த பதிவுலகத்துல வேற யார் இருக்கா சொல்லுங்க

erodethangadurai said...

தமிழச்சி போட்டோ போட்ட தமிழன் வாழ்க ...! ( எந்த தொகுதி கொடுத்தாங்க செந்தில் ..? ) வாழ்த்துக்கள்..!

http://erodethangadurai.blogspot.com/

காங்கேயம் P.நந்தகுமார் said...

மார்ச் 19 ந்தேதி தி.மு.க வின் தேர்தல் அறிக்கை. அதுக்கப்புறம் நீங்களே இந்த மாதிரி காமெடி பண்ண மாட்டீங்க!

kobikashok said...

எப்புடி உங்களால மட்டும் இப்படி சாதிக்கமுடியுது நண்பரே

Unknown said...

மச்சி ஒரே பிஸ் பிஸ் அப்புறமா வரேன் ஹி ஹி!

Anonymous said...

எழுதினது எட்டு
அத்தனையும் good
அத்தனையும் 'குட்டு'

MANO நாஞ்சில் மனோ said...

//ஒதுக்குங்க ஒதுக்குங்க..சீக்கிரம்.. இன்னும் ஒரு மாசம் கூட இல்லை.. போவதற்கு முன் கடைசியா ஒரு ஊழல் பண்ணீட்டு போயிடறோம்...(முறைப்பொண்ணுக்கு வேற ஒரு மாப்பிள்ளை கூட கல்யாணம்னா கடைசி கடைசியா ஒரு ஞாபக முத்தம் தர்றதில்லையா? அது மாதிரி)//

ஆரம்பமே அதகளமா.......?

MANO நாஞ்சில் மனோ said...

//உங்களை எல்லாம் நினைச்சா எனக்கு பாவமா இருக்கு.. பல பக்கம் நடக்குது.. ஒரு ஊர்ல கண்டுபிடிச்சதுக்கே இந்த அலப்பறையா..?வைரஸ் இல்லாத கணிப்பொறியா?மாணவர்கள் கட் அடிக்காத வகுப்பறையா?ஊழல் நடக்காத துறையா?//

இவனுங்க காமெடி பீசுங்க.....

வைகை said...

எங்க தலைவர் கூட ஏழைதான்...ஒரே ஒரு வீடுதான் சொந்தமா இருந்தது.. அதையும் ஏழைக்கு எழுதி வெச்சுட்டார்.. ஆனா கலைஞர் டி வி யை எழுதி வைக்க சொல்லுங்க.. கடுப்பாகிடுவார்...//

என்ன பாஸ்? நேத்துல இருந்து கலைஞர் டிவி மேலே குறியா இருக்கீங்க?

MANO நாஞ்சில் மனோ said...

//அநியாயம் எங்கே நடந்தாலும் நான் வேடிக்கை பார்த்துட்டு சும்மா இருக்கமாட்டேன்.. கண்ணை மூடிக்குவேன்...ஹி ஹி - பிரதமர் மனசுக்குள் நினைச்சது//

ஹா ஹா ஹா ஹா காத்து வேறே கேக்காது....என்னத்தை சொல்ல....

Sathish said...

போட்டமில்ல ஒட்டு

MANO நாஞ்சில் மனோ said...

//மானம் இருக்கறவங்க தான் மான நஷ்ட வழக்கு தொடர முடியும்னு கழக வக்கீல்கள் யாராவது சொல்லி இருப்பாங்களோ..? //

ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா அசத்தல் மக்கா....

MANO நாஞ்சில் மனோ said...

//எங்க தலைவர் கூட ஏழைதான்...ஒரே ஒரு வீடுதான் சொந்தமா இருந்தது.. அதையும் ஏழைக்கு எழுதி வெச்சுட்டார்.. ஆனா கலைஞர் டி வி யை எழுதி வைக்க சொல்லுங்க.. கடுப்பாகிடுவார்...//

க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்.....

பொன் மாலை பொழுது said...

// -கலைஞர் டி வி யை ஏழைகளுக்கு எழுதி வைப்பாரா கலைஞர்..?//

அது என்ன பிள்ளை இல்லாத வீட்டு சொத்தா ஏழைகளுக்கு எழுதிவைக்க?
ரொம்பத்தான் ஆசை உங்களுக்கு.

ரஹீம் கஸ்ஸாலி said...

ரொம்ப லேட்டா வந்துட்டேன் போல...

Anonymous said...

சூப்பர் குருமா

Anonymous said...

ஆட்டோ வருதாம் வாசல்லியே நில்லுங்க

போளூர் தயாநிதி said...

போட்டமில்ல ஒட்டு

பாலா said...

சூப்பர்...

பன்னிக்குட்டி ராம்சாமி said...

இதுதான் லீனா மணீமேகலையா...? ஹி...ஹி....!

பன்னிக்குட்டி ராம்சாமி said...

அதான் ஆளுக்கொரு எலவச டீவி கொடுத்திருக்காங்களே... இப்போ டேசனும் கேட்டா எப்படி..?