Monday, April 29, 2019

வேடிக்கை என் வாடிக்கை

1   

பிளஸ் 2 பொதுத்தேர்வில் 91.3 சதவீத தேர்ச்சி- திருப்பூர் மாவட்டம் முதலிடம் #  திருப்”பூரிப்பு?”



 திருப்பூரில் படிச்சா திருப்பம்?


பனியன் சிட்டி இனி கல்விப்பணியன் சிட்டி?

==
===============


குஜராத்தில் நிறுவப்பட்டு உள்ள, உலகின் உயரமான சர்தார் வல்லபாய் படேல் சிலையை காங்கிரஸ் தலைவர்கள் இதுவரை பார்வையிடாதது ஏன்? - மோடி  # பாஜக ஆட்சியில் அமைக்கப்பட்டதை காங்கிரஸ்காரங்க எப்படி பார்க்க மேலிடம் அனுமதிக்கும்?

==============

3   அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தை கட்சியாக பதிவு செய்ய 6 சதவீதம் வாக்குகள் தேவை. ஆனால் தேர்தலில் அது கிடைக்காது. ஒன்று அல்லது 2 சதவீத வாக்குகள் மட்டுமே கிடைக்கும்.
எனவே அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் கடைசி வரை குழுவாக மட்டும் செயல்படவே வாய்ப்பு உள்ளது=அமைச்சர் ஜெயக்குமார் #

20 ரூபா டோக்கன் கொடுத்து பதிவு பண்ணவும்  முடியாது , பாவம் , என்ன பண்ணப்போறாங்களோ?

================
கடனை செலுத்த முடியாத விவசாயிகளை சிறைக்கு அனுப்பமாட்டோம் - ராகுல் காந்தி - எங்கள் ஆட்சியில் விவசாயிகளுக்கு கடனே கொடுக்க மாட்டோம்னு சொல்லலை, நல்ல வேளை


==========

கள்ள ஓட்டு பதிவானதால் ‘சர்கார்’ பட பாணியில் ஓட்டுப்போட்ட வாக்காளர்கள் # மத்தியில் சர்கார்  மாறுமா? அதே சர்கார் மீண்டும் வருமா?


=================


6 சட்டமன்ற தேர்தல் எப்போது வந்தாலும் சந்திக்க தயார்!” நடிகர் ரஜினிகாந்த் உறுதி!  


மறுபடியும் முதல்ல இருந்தா? தலைவா


 ஓட்டுப்போடவா?


போர் வரும்போது பார்த்துக்கலாம்கறாரு , போர் எப்போ வந்தாலும் சந்திக்கத்தயார்ங்கறாரு , குழப்பமா இருக்கே?

 கமலிக்குக்கிடைத்த வரவேற்பு  தந்த தெம்போ?



================

7  'நீட்' தேர்வை முன்மொழிந்த, காங்., கட்சியின், தற்போதைய தலைவர் ராகுல், தமிழகத்துக்கு விதிவிலக்கு அளிக்கலாம் என, குறிப்பிடுகிறார். இது, வேடிக்கையாக உள்ளது.-செங்கோட்டையன்   # வேடிக்கை என் வாடிக்கை - ராகுல்

================

8   'நீட்' தேர்வு -இந்தியா முழுவதும், ஒரே சட்டம் தான் நிறைவேற்றப்பட்டு உள்ளது. உச்ச நீதிமன்ற தீர்ப்பும், அப்படித்தான் வழங்கப்பட்டுள்ளது.-செங்கோட்டையன் : # இது “நீட்:டான அறிக்கை


-==================]


9  தேர்தல் ஆணையம், அ.தி.மு.க., - பா.ஜ., அணியின், 'தேர்தல் ஏஜன்ட்' போல் செயல்படும் போக்கை, கைவிட வேண்டும்.-கே.பாலகிருஷ்ணன்  #   காங் கூட்டணீக்கட்சியா இருந்துட்டு “கை” விட வேண்டும்னு அபசகுனமா சொல்றாரே? ஜனங்க கைச்சின்னத்தை கை விட்றப்போறாங்க

=================

10    eதிர்க்கட்சி நிர்வாகிகள் வீடுகளில் மட்டும், சோதனை என்ற பெயரில், தேர்தல் ஆணையத்தால் நடவடிக்கை எடுக்கப்படுகிறது.-கே.பாலகிருஷ்ணன் $ ஆஃபீஸ் , கம்பெனிலயும் ரெய்டு வரனுமோ?


==============


 11 எதிர்க்கட்சித் தலைவர்கள், வேட்பாளர்கள் வீடுகளில் சோதனை நடத்துவதால், பொது மக்கள் மத்தியில், அ.தி.மு.க., - பா.ஜ., அணியின் மீது கோபாவேசம் அதிகரிக்குமே தவிர, அவர்களுக்கு பயன் தராது. -கே.பாலகிருஷ்ணன் # அவங்களூக்குதான் பயன் தராதில்ல,? அப்றம் ஏன் கவலைப்படறீங்க? லூஸ்ல விடுங்க 


===============

12  இந்த லோக்சபா தேர்தலில், இளைஞர்கள், முதியோர், முதல்முறையாக ஓட்டளிப்பவர்கள் உட்பட அனைவரும், ஆர்வமாக ஓட்டுச்சாவடிக்கு வந்து ஓட்டளிப்பது, மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.- நிர்மலா சீதாராமன் # பொதுவா வாக்கு பதிவு சதவீதம் அதிகரிச்சா ஆளுங்கட்சிக்கு எதிரான அலைனு சொல்வாங்க

================


13   எதிர்க்கட்சிகள் பெரிய கூட்டணி அமைத்தாலும், அவர்களுக்கு, மக்கள் ஆதரவு தரவில்லை. -நிர்மலா சீதாராமன்  # ஆதரவு தர்லைனு இப்பவே எப்படி சொல்ல முடியும்? ரிச்ல்ட் வந்தாதானே தெர்யும்?


===============


14 நிரந்தரமாக ஆட்சி அளிப்பவர்களையே, மக்கள் விரும்புகின்றனர்.-நிர்மலா சீதாராமன்  # அப்போ காங் டெம்ப்ரவரி கவர்ன்மெண்ட், [ பாஜக  பர்மனெண்ட்டா?


=================


15   நேருவில் துவங்கி, காங்கிரசில் நான்கு தலைமுறைகளாக இருந்த தலைவர்கள், வறுமையை ஒழிப்பதாக வாக்குறுதி அளித்தனர். ஆனால், அவையெல்லாம் பொய்யாகின  -நிதின் கட்கரி #   வறூமையை ஒழிச்சுட்டா அடுத்த தேர்தல்ல வறூமையை ஒழி[ப்போம்னு வாக்கு தர முடியாதே>


நீங்க ஆட்சிக்கு வந்த 5 வருஷத்துல் வறூமையை ஒழிச்சாச்சா?



===================

  16  இன்னும், 15 நாட்களில், உள்ளாட்சி தேர்தல் குறித்த அறிவிப்பு வரும்; இதே கூட்டணி தொடரும்.-பிரேமலதா: #  பிரேமலதா தான் தமிழக முதல்வரா?நான் கூட ஈபிஎஸ்னு நினைச்ட்டேன்


இதுக்கு எதுனா பரிகாரம் இருக்குங்களா?


 என்ன > மிரட்றாரு?


==================


17   தேர்தல் ஆணையம், மத்திய அரசுடன் கூட்டணி அமைத்து செயல்படுகிறது; இந்த நிலை மாற வேண்டும் -ஸ்டாலின்  # எப்படி” தேர்தல் ஆணையம்,  எதிர்க்கட்சியுடன் கூட்டணி அமைத்து செயல்படனுமா?



நீங்க ஆளுங்க்ட்சியா இருந்தப்போ என்ன செஞ்சீங்களோ  அதை இப்ப இவங்க  செய்யறாங்க


===================


18  உண்மையான அ.தி.மு.க., தொண்டர்கள் அனைவரும், எங்களிடமே உள்ளனர்  -சி.ஆர்.சரஸ்வதி: # சரஸ்வதி குடி இருகற இடத்துல செல்வ்ம் குடி இருக்காதாமே?ஆனா அமமுக ல பணம் வாரி இறைக்கறாங்களே?


இதையே தான்  ஜெ தீபா சொன்னாங்க , இப்போ அதிமுக கூட இணையலையா?


=====================


19   உ.பி., முதல்வர் யோகி ஆதித்யநாத், 72 மணி நேரம் பிரசாரம் செய்யக் கூடாது என, தேர்தல் ஆணையம் தடை விதித்து உள்ளது. ஆனால் அவர், தலித் மக்கள் வீடுகளில் உணவு வாங்கி சாப்பிடுகிறார். கோவில்களுக்கு சென்று மக்களை சந்திக்கிறார். ஆணையம் ஏன் கண்டு கொள்ளவில்லை?-மாயாவதி:  #  பிரச்சாரம்தானே பண்ணக்கூடாது? ஹவுஸ் அரெஸ்ட்ல இருக்கச்சொல்லலையே?


===================


20   காங்., பிடியில் இருந்து இந்த நாடு என்றைக்கு விடுதலை அடைகிறதோ, அன்றைக்கு, வறுமை தன்னால் ஒழிந்துவிடும்-  மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்: # கடந்த 5 வருசமா நடந்தது பாஜக ஆட்சி தானெ? வறுமை ஒழியலையே?


================